பாரம்பரிய கர்நாடக இசையைப் புரிந்து கொண்டு மகிழ்வது எப்படி?
கர்நாடக இசையில் ஈர்ப்புத் தன்மை, தாளகதி, ஆன்மிக மற்றும் வாழ்வியல் பற்றிச் சொல்லும் சுவாரசியங்கள், இசை ரசிகர்களை ஒரு உன்னத உலகத்திற்கு அழைத்துச் செல்லும். ஆனால், அந்த கருநாடக இசையில் நுணுக்கங்கள், அழகுகள், மற்றும் அதன் ஆழங்கள் பற்றி தெரிந்து கொண்டால் அது மேலும் ஒரு உயரத்திற்கு அழைத்துச் செல்லும்.
இந்தப் பயிற்சி முகாம் கர்னாடக இசையைக் கற்றுத்தரப் போவதில்லை. ஆனால், அதை நீங்கள் அழகாக ரசிக்கலாம் என்று சொல்லித்தரப் போகிறது. கருனாடக இசை உலகப் பயணத்தை மேலும் பயன் உள்ளதாக ஆக்கும்.
கர்நாடக இசையின் அடிப்படை, கச்சேரியின் வழிமுறைகள், வாய்ப்பாட்டு மற்றும் வாத்தியங்கள் பற்றிய குறிப்புகள், வயலின், மிருதங்கம் போன்ற பக்கவாத்தியங்கள் பற்றிய அறிமுகம், பல்வேறு இசை வடிவங்கள் பற்றிய விளக்கங்கள், ராகம், தாளம், பற்றிய அடிப்படை விஷயங்கள் மற்றும் பல்வேறு இராகங்களை அடையாளம் காண பயன்படும் வழிமுறைகள் ஆகியவை அறிமுகம் செய்கிறார்கள்.
துவக்க கருத்தரங்கு, ஒலிநாடாக்கள் மூலம் இசையின் நிதர்சன உண்மைகளை அறிமுகப்படுத்துதல், விளக்க உரையோடு கூடிய செயல்முறை விளக்கங்கள், நேர்முக உரையாடல்கள், கலந்துரையாடல்கள், கேள்வி – பதில், பவர்பாயின்ட் கோப்புகள், இப்படி எத்தனையோ வழிமுறைகளில் அதிரடியாகக் கற்றுக் கொள்ளலாம்.
இசை பயிலும் இளம் தலைமுறையும் இசை ரசிகர்களும் கற்றுக்கொள்ள மயிலாப்பூரில் பயிற்சி முகாம் நடத்துகிறார் டாக்டர் ராதா பாஸ்கர் (எம்.ஏ., பிஎச்.டி (இசை), ஜர்னலிசம் டிப்ளொமா.
ஜூன் 22 முதல் ஜூன் 26, 2009 வரை
இடம்: பாரதிய வித்யா பவன்
நேரம்: மாலை 6:15 மணி முதல் 8:15 மணி வரை
கட்டணம்: ரூ. 500/-
முன்பதிவு செய்ய கடைசி நாள்: ஜூன் 10
பணம் / காசோலை அனுப்ப வேண்டிய முகவரி:
சமுத்ரா,
புதிய எண் 26, இராம தெரு
நுங்கம்பாக்கம், சென்னை – 34
நான் சென்ற கருத்தரங்கில் சொல்லிக் கொடுக்கப்பட்டவை:
- கீர்த்தனாவுக்கும், கிருதிக்கும் என்ன வித்தியாசம்? (பெண்கள் பெயர் அல்ல) எதை பஜனையாகப் பாடலாம்; எதுப் பாடுவது சுலபமானது; மும்மூர்த்திகள் எதை இயற்றினார்கள்?
- பல்லவி, அனுபல்லவி, சரணம்: எத்தனை சரணம் வரும்? (அந்தக் கால எமெஸ்விக்கு மூன்று, இளையராஜா கலத்தில் ரெண்டு என்று சொல்லக்கூடாது)
- சம்ஷ்டி சரணம் என்றால் என்ன?
- தியாகராஜர், சாமா சாஸ்திரி, ஊத்துக்காடு, ஸ்வாதித் திருநாள் போன்றவர்களின் முத்திரை என்ன? (‘முத்திரை இப்போது குத்திடு தப்பாது’ பாட ஆரம்பிக்க வேண்டாம்; அந்தக் காலத்திலேயே பாடலைத் திருடி பெயர் மாற்றி சொந்தப் பதிவாக்கும் வழக்கம் இருந்திருக்கும்!?)
- கானங்களை கிரமமாகப் பாட வேண்டிய சாஸ்திரம்.
- சிட்டேஸ்வரம்: Interview with Kousalya Sivakumar :: சமஸ்கிருதத்தில் முதுநிலை பட்டதாரியான கெளசல்யா சிவகுமார் – ஆன்மீக இசைபேரூரை: “‘கமலாம்பாள் நவாவர்ண கீர்த்திகள்’ என்பதில் வேதாந்த தத்துவங்கள் நிறைய கொண்டவை. பல ஆழ்ந்த தத்துவங்கள் அடங்கியது. சாதாரணமாக எல்லோராலும் எடுத்து அதை சொல்ல முடியாது. சமஸ்கிருதத்தில் ‘புஷ்யம்’ என்று சொல்வார்கள். அதாவது மறைமுக அர்த்தங்கள் எல்லாம் நிறைய அதில் உள்ளது. இப்படிப்பட்டவையை என்னை பிரித்து விளக்கமாக சொல்ல சொன்னார்.”
- ஸ்வர சாகித்ய உருப்படி: இளையராஜாவின் இசைக்குழப்பங்கள்-Ilayaraja’s Musical Confusions-Rajalakshmi « meetchi quarterly: “How to Name It இல் உள்ள ஒன்பது சாஹித்யங்களும் (Compositions) சாஸ்திரீய கர்நாடக ராகங்களை சாஸ்திரீய மேற்கத்திய இசை வடிவங்களில் வெளிப்படுத்துகின்றன.”
- மத்தியமகலா சாஹித்யம்: Lyrics or sahitya has always been the effective means to communicate man
- சொல்கட்டு சுவரம்: 6IndianMusic : Solkattu
- சொற்கட்டு சாகித்யம்: Amazon.com: Solkattu Manual: An Introduction to the Rhythmic Language of South Indian Music: David P. Nelson: Books
- ஸ்வர அக்ஷரம்: ‘ஏபிசி நீ வாசி’ இல்லையாம்.
- யதி: கவிதைக்குயில் ராகினியின் இசைப்பயணம் :: தாளத்தின் 10 உயிர் நிலைகள். | யதி
- யமகம்: கிருதியை அலங்கரிக்கும் அணிகள் (யமகம் – ஒரு சொல்லோ சொற்றொடரோ நான்கு அடிகளிலும் எதுகையாக வெவ்வேறு பொருளில் வருவது)
- மணிப்பிரவாள க்ருதி: Muthuswamy Dikshitar
- சங்கதி: இசையும் இறைவனும் – பறவையின் தடங்கள் :: நாகூர் ரூமி
- ஆவர்த்தனம் தனி
சென்னை இராஜாங்கம்: V
அவ்வப்போது அமெரிக்காவில் விழும் ஒரு இன்ச் snow, ஒன்றரை மில்லிமீட்டர் பனியை, வீட்டு வாயிலில் இருந்து தெருவுக்குத் தள்ளிவிடுவதற்கே கண்களாலும் மூக்காலும் அழுபவன் நான். மிக மிக எளிமையாக வாசலைத் தெளித்துக் கோலம் போடுவது போன்ற கைங்கர்யம் அது.
குட்டி எவரெஸ்ட் மாதிரி இருக்கும் மணற்குவியலை, தலைக்கு மேல் இருக்கும் குப்பை வண்டியில் shovel செய்தவரைப் பார்த்தவுடன் மனம் நாணிக் கோணியது. சர்வ சாதாரணமாக, பகல் 41 டிகிரி வெயிலில் தூக்கிப் போட்டார். நீல்மெட்டல் சென்னையை சுத்தமாக மாற்றியுள்ளது.
முப்பது வருடம் முன்பு ரூபவாஹினிக்காக இலங்கை ஆண்டெனாக்கள் மொட்டை மாடிகளை நிறைத்திருக்கும். காக்கைகளும் அவற்றை ஆசையாகத் திருப்பி வைக்கும். ராஜபக்ஸே தமிழ்த் தொலைக்காட்சியை நிறுத்தி விட்டாரா என்று நாராயணனை விட்டு விசாரிக்க சொல்லவேண்டும். இன்றைய மாடிகள் முழுக்க சாடிலைட் டிஷ் ஆக்கிரமிப்பு. காக்கைகளும் காணாமல் போய்விட்டது. வேடந்தாங்கலிலாவது இருக்கிறதா என்று ப்ளாஸ்டிக் பைகளில் சோறு கட்டி சென்று பார்த்துவர வேண்டும்.
ஆட்டோக்காரர்கள் மெமரி கார்ட் கொண்டு பாட்டு போடுகிறார்கள். ஆயிரம் ரூபாய் கொடுத்தால் கிளம்பிய இடத்தில் இருந்து சேரும் இடத்திற்கே கேட்கும் அலறலுடன் கூடிய எம்பி3 ஒலி. வேண்டிய பாடல்களை ஐபாட் shuffle ஆக மாற்றும் வசதி. பண்பலை என்னாச்சு என்னும் கேள்விக்கு ‘போயே போச்சு‘ங்கிறார்.
‘ஏன்’?
கேள்விக்கு பத்ரி மொட்டை மாடியில் பதில் சொன்னார்.
மோகம் முப்பது தபா; ஆசை அறுபது ராவு என்பது போல் சிட்டி சென்டரும், எக்ஸ்டென்ஷன்களில் உலவும் ஸ்பென்சரும் பல்கிப் பெருத்தபின் சென்னை யுவன்களுக்கும் காரிகைகளுக்கும் மால் அலுத்துப் போய்விட்டது. அல்லது ஜாகையை மாற்றிக் கொண்டுவிட்டார்கள்.
இன்றளவிலும் ‘சூடிதாரில் நான் வருவேன். சல்வார் கமீஸை நான் மறவேன்’ என்று மதுரை சோமுவாகிறார்கள். லுங்கியைப் போன்ற வண்ணமயமான காற்றோட்டமான ஸ்கர்ட், அதிர்ச்சி மதிப்பீடாக தாவணி, நாகரிகமும் குறையாமல் கற்பும் காக்கும் முக்கால் பேன்ட் எதுவும் காணோம். அதெல்லாம் வந்தால் ‘ராம சேனா’வும் பாரதிய ஜனதாவும் வந்துவிடும் என்னும் பயமோ!
‘கடந்த 48 மணி நேரமாக பெண்களுடன் கலந்துரையாடி, பின்தொடர்ந்து “What women wantனு புரிந்து கொள்வதிலேயே நேரம் போவதாக’ சலித்துக்கொண்டவரிடம்தான் விசாரிக்கவேண்டும்.
பின்னூட்டமொன்றை இடுக
Posted in Tamil Blog
குறிச்சொல்லிடப்பட்டது Antenna, Cell, Chennai, Citicenter, City Centre, Cleanup, Commentary, cricket, Dish, Drive, Environment, FM, IPL, Live, madras, Malls, Move, MP3, Music, Radios, Removal, Satellite, Spencers, Sun, Tamil nada, Television, TN, Trash, TV, Waste