Tag Archives: கர்நாடகம்

கனகதாசரின் வேண்டுதல் – சரணாகதியின் ஆத்மா

ಪಲ್ಲವಿ (Pallavi)

ತೊರೆದು ಜೀವಿಸಬಹುದೇ ಹರಿ ನಿನ್ನ ಚರಣಗಳ

ಬರಿದೆ ಮಾತೇಕಿನ್ನು ಅರಿತು ಪೇಳುವೆನಯ್ಯ

ಚರಣ 1 (Charanam 1)

ತಾಯಿ ತಂದೆಯ ಬಿಟ್ಟು ತಪವಮಾಡಲುಬಹುದು

ದಾಯಾದಿ ಬಂಧುಗಳ ಬಿಡಲುಬಹುದು

ರಾಯ ತಾ ಮುನಿದರೆ ರಾಜ್ಯವನೆ ಬಿಡಬಹುದು

ಕಾಯಜಾಪಿತ ನಿನ್ನಡಿಯ ಬಿಡಲಾಗದು

ಚರಣ 2 (Charanam 2)

ಒಡಲು ಹಸಿಯಲು ಅನ್ನವಿಲ್ಲದೆಲೆ ಇರಬಹುದು

ಪಡೆದ ಕ್ಷೇತ್ರವಬಿಟ್ಟು ಹೊರಡಬಹುದು

ಮಡದಿ ಮಕ್ಕಳ ಕಡೆಗೆ ತೊಲಗಿಸಿಯೇ ಬಿಡಬಹುದು

ಕಡಲೊಡೆಯ ನಿನ್ನಡಿಯ ಘಳಿಗೆ ಬಿಡಲಾಗದು

ಚರಣ 3 (Charanam 3)

ಪ್ರಾಣವನು ಪರರು ಬೇಡಿದರೆತ್ತಿ ಕೊಡಬಹುದು

ಮಾನದಲಿ ಮನವ ತಗ್ಗಿಸಲುಬಹುದು

ಪ್ರಾಣನಾಯಕನಾದ ಆದಿ ಕೇಶವರಾಯ

ಜಾಣ ಶ್ರೀಕೃಷ್ಣ ನಿನ್ನಡಿಯ ಬಿಡಲಾಗದು

Tamil Transliteration & Meaning (தமிழ் உச்சரிப்பு மற்றும் விளக்கம்)

பல்லவி (Pallavi)

பாடல்:

தொரெது ஜீவிஸபஹுதே ஹரி நின்ன சரணகள

பரிதெ மாதேகின்னு அரிது பேளுவெனய்ய

அர்த்தம்:

ஹரியே! உந்தன் திருவடிகளைத் துறந்து (விட்டு) என்னால் உயிர்வாழ முடியுமா? வீண் வார்த்தைகள் எதற்கு? உண்மையை முழுமையாக உணர்ந்தே நான் இதைச் சொல்கிறேன் ஐயா.

சரணம் 1 (Charanam 1)

பாடல்:

தாயி தந்தெய பிட்டு தபவ மாடலுபஹுது

தாயாதி பந்துகள பிடலுபஹுது

ராய தா முனிதரெ ராஜ்யவனெ பிடபஹுது

காயஜபித நின்னடிய பிதலாகது

அர்த்தம்:

தவம் செய்வதற்காக பெற்ற தாய் தந்தையரைக் கூட விட்டுப் பிரிந்து செல்லலாம். பங்காளிகள் மற்றும் உறவினர்களை விட்டுவிடலாம். அரசன் கோபப்பட்டால் இந்த நாட்டையே விட்டுச் சென்றுவிடலாம். ஆனால் மன்மதனின் தந்தையே (திருமால்), உன் திருவடிகளை என்னால் ஒருபோதும் விடமுடியாது.

சரணம் 2 (Charanam 2)

பாடல்:

ஒடலு ஹஸியலு அன்னவில்லதெலெ இரபஹுது

படெத க்ஷேத்ரவ பிட்டு ஹொரடலுபஹுது

மடதி மக்கள கடெகெ தொலகிஸியே பிடபஹுது

கடலொடெய நின்னடிய களிகெ பிதலாகது

அர்த்தம்:

உடல் பசியால் வாடும்போது உணவின்றி கூட இருந்துவிடலாம். நான் கஷ்டப்பட்டு ஈட்டிய நிலத்தை / வீட்டை விட்டுவிட்டு வெளியேறலாம். மனைவி குழந்தைகளைக் கூட விலக்கி தள்ளி வைத்துவிடலாம். ஆனால் கடலின் நாதனே (பாற்கடல் வாசனே)! உன் திருவடிகளை ஒரு கணம் கூட என்னால் விட முடியாது.

சரணம் 3 (Charanam 3)

பாடல்:

ப்ராணவனு பரரு பேடிதரெத்தி கொடபஹுது

மானதலி மனவ தக்கிஸலுபஹுது

ப்ராணநாயகனாத ஆதிகேசவராய

ஜாண ஸ்ரீகிருஷ்ண நின்னடிய பிதலாகது

அர்த்தம்:

என் உயிரைப் பிறர் கேட்டால் அதை அப்படியே எடுத்துக் கொடுத்துவிடலாம். என் மானத்திற்காக மனதை அடக்கிப் பணிந்து போகலாம். என் உயிரின் நாயகனான ஆதி கேசவராயனே! அறிவுக்களஞ்சியமான ஸ்ரீ கிருஷ்ணனே, உன் திருவடிகளை என்னால் ஒருபோதும் விட முடியாது!

தி டிஸைப்பிள் / டிஸ்சிப்பிள்

சென்ற வருடம் வந்த படங்களுக்கான, பல சிறந்தத் திரைப்பட பட்டியல்களில் முக்கிய இடத்தை இந்தப் படம் பிடித்திருக்கிறது.

தலைப்பு யேசுநாதரின் அணுக்க சீடர்களை நினைவுறுத்தும். நெட்ஃப்ளிக்சில் ஆறு மாதம் முன்பு வந்த போதே பார்த்திருந்தேன். கிறிஸ்துமஸை ஒட்டி குடும்பத்தினருடன் மீண்டும் பார்த்தேன்.

வருடத்திற்கு ஒரு முறையாவது இந்த மாதிரி பெரிய கட்டுரை எழுத நேரம் கிடைக்கிறது. இந்த வருடம் இந்த சினிமாவிற்கான விமர்சனம் + அறிமுகம்:

இது எதற்காக இந்த வடிவம்:

  1. மத நூல்கள், சாம வேதம், ஹிந்துஸ்தானி இசையை ஒருங்கிணைப்பது
  2. படத்தில் வரும் கிசுகிசுக்களுக்கு உருவம் தருவது
  3. கலை, தாகம், தேடல் என்பதற்கு வரி வடிவம் கொடுப்பது
  4. சமகாலப் படங்களை ஒப்பிடுவது
  5. சங்கீதமும் சமயமும் ஒன்றா என ஆராய்வது
  6. படத்தில் வரும் மேற்கோள்களை அப்படி மொழியாக்கம் செய்வது
  7. வட இந்திய இசைக்கு சற்றே அறிமுகம் தருவது
  8. படத்திற்கு விமர்சனம் என்பது இந்த தொகையறாக்களை ஒருங்கிணைக்கும் சபை

நீங்கள் ‘கல்லி பாய்’ பார்த்திருப்பீர்கள். அது மசாலா சினிமா. ஹீரோ கீழே விழுவான்; ஃபீனிக்ஸ் பறவை என எழுந்திருப்பான். அது சீடரின் வெற்றியை பிரும்மாண்டமாக்கி, சாகசத்தை நிஜம் போல் காட்டும்.

டிஸ்சிப்பிள் மாதிரி படங்கள் நிஜம்.

படத்தின் இன்னொரு பாதி குருநாதர். அதற்கு “டெட் பொயட்ஸ் சொஸைட்டி” மாதிரி மசாலா காவியங்கள் பார்த்திருப்பீர்கள். ஆசான் வழிநடத்துவார். நெறிப்படுத்துவார். அதுவும் நிஜத்தில் கப்ஸா.

வெறுமனே, இது உண்மை; அது பொய் என போட்டு உடைக்காமல் உணர்த்தும் படம் எதுவுமே சிறந்த படம்.

விரிவான விமர்சத்திற்கு #சொல்வனம் / #solvanam வாருங்கள்.

வாசித்து உற்சாகமூட்டிய மீனாக்ஷி பால்கணேஷ்-க்கு நன்றிகள்.

Carnatic Music Appreciation for Classical lovers

பாரம்பரிய கர்நாடக இசையைப் புரிந்து கொண்டு மகிழ்வது எப்படி?

Bharathiya-vidya-bhawan-karthik-fine-arts-classical-music-Singers-Carnatic-Classicalகர்நாடக இசையில் ஈர்ப்புத் தன்மை, தாளகதி, ஆன்மிக மற்றும் வாழ்வியல் பற்றிச் சொல்லும் சுவாரசியங்கள், இசை ரசிகர்களை ஒரு உன்னத உலகத்திற்கு அழைத்துச் செல்லும். ஆனால், அந்த கருநாடக இசையில் நுணுக்கங்கள், அழகுகள், மற்றும் அதன் ஆழங்கள் பற்றி தெரிந்து கொண்டால் அது மேலும் ஒரு உயரத்திற்கு அழைத்துச் செல்லும்.

இந்தப் பயிற்சி முகாம் கர்னாடக இசையைக் கற்றுத்தரப் போவதில்லை. ஆனால், அதை நீங்கள் அழகாக ரசிக்கலாம் என்று சொல்லித்தரப் போகிறது. கருனாடக இசை உலகப் பயணத்தை மேலும் பயன் உள்ளதாக ஆக்கும்.

கர்நாடக இசையின் அடிப்படை, கச்சேரியின் வழிமுறைகள், வாய்ப்பாட்டு மற்றும் வாத்தியங்கள் பற்றிய குறிப்புகள், வயலின், Bharathiya-vidya-bhawan-karthik-fine-arts-classical-musicமிருதங்கம் போன்ற பக்கவாத்தியங்கள் பற்றிய அறிமுகம், பல்வேறு இசை வடிவங்கள் பற்றிய விளக்கங்கள், ராகம், தாளம், பற்றிய அடிப்படை விஷயங்கள் மற்றும் பல்வேறு இராகங்களை அடையாளம் காண பயன்படும் வழிமுறைகள் ஆகியவை அறிமுகம் செய்கிறார்கள்.

துவக்க கருத்தரங்கு, ஒலிநாடாக்கள் மூலம் இசையின் நிதர்சன உண்மைகளை அறிமுகப்படுத்துதல், விளக்க உரையோடு கூடிய செயல்முறை விளக்கங்கள், நேர்முக உரையாடல்கள், Bharathiya-vidya-bhawan-karthik-fine-arts-classical-music-Singers-Carnatic-Classical-Veenaகலந்துரையாடல்கள், கேள்வி – பதில், பவர்பாயின்ட் கோப்புகள், இப்படி எத்தனையோ வழிமுறைகளில் அதிரடியாகக் கற்றுக் கொள்ளலாம்.

இசை பயிலும் இளம் தலைமுறையும் இசை ரசிகர்களும் கற்றுக்கொள்ள மயிலாப்பூரில் பயிற்சி முகாம் நடத்துகிறார் டாக்டர் ராதா பாஸ்கர் (எம்.ஏ., பிஎச்.டி (இசை), ஜர்னலிசம் டிப்ளொமா.

ஜூன் 22 முதல் ஜூன் 26, 2009 வரை
இடம்: பாரதிய வித்யா பவன்
நேரம்: மாலை 6:15 மணி முதல் 8:15 மணி வரை
கட்டணம்: ரூ. 500/-
முன்பதிவு செய்ய கடைசி நாள்: ஜூன் 10
பணம் / காசோலை அனுப்ப வேண்டிய முகவரி:
சமுத்ரா,
புதிய எண் 26, இராம தெரு
நுங்கம்பாக்கம், சென்னை – 34

நான் சென்ற கருத்தரங்கில் சொல்லிக் கொடுக்கப்பட்டவை:

  1. கீர்த்தனாவுக்கும், கிருதிக்கும் என்ன வித்தியாசம்? (பெண்கள் பெயர் அல்ல) எதை பஜனையாகப் பாடலாம்; எதுப் பாடுவது சுலபமானது; மும்மூர்த்திகள் எதை இயற்றினார்கள்?
  2. பல்லவி, அனுபல்லவி, சரணம்: எத்தனை சரணம் வரும்? (அந்தக் கால எமெஸ்விக்கு மூன்று, இளையராஜா கலத்தில் ரெண்டு என்று சொல்லக்கூடாது)
  3. சம்ஷ்டி சரணம் என்றால் என்ன?
  4. தியாகராஜர், சாமா சாஸ்திரி, ஊத்துக்காடு, ஸ்வாதித் திருநாள் போன்றவர்களின் முத்திரை என்ன? (முத்திரை இப்போது குத்திடு தப்பாது’ பாட ஆரம்பிக்க வேண்டாம்; அந்தக் காலத்திலேயே பாடலைத் திருடி பெயர் மாற்றி சொந்தப் பதிவாக்கும் வழக்கம் இருந்திருக்கும்!?)
  5. கானங்களை கிரமமாகப் பாட வேண்டிய சாஸ்திரம்.
  6. சிட்டேஸ்வரம்: Interview with Kousalya Sivakumar :: சமஸ்கிருதத்தில் முதுநிலை பட்டதாரியான கெளசல்யா சிவகுமார் – ஆன்மீக இசைபேரூரை: “‘கமலாம்பாள் நவாவர்ண கீர்த்திகள்’ என்பதில் வேதாந்த தத்துவங்கள் நிறைய கொண்டவை. பல ஆழ்ந்த தத்துவங்கள் அடங்கியது. சாதாரணமாக எல்லோராலும் எடுத்து அதை சொல்ல முடியாது. சமஸ்கிருதத்தில் ‘புஷ்யம்’ என்று சொல்வார்கள். அதாவது மறைமுக அர்த்தங்கள் எல்லாம் நிறைய அதில் உள்ளது. இப்படிப்பட்டவையை என்னை பிரித்து விளக்கமாக சொல்ல சொன்னார்.”
  7. ஸ்வர சாகித்ய உருப்படி: இளையராஜாவின் இசைக்குழப்பங்கள்-Ilayaraja’s Musical Confusions-Rajalakshmi « meetchi quarterly: “How to Name It இல் உள்ள ஒன்பது சாஹித்யங்களும் (Compositions) சாஸ்திரீய கர்நாடக ராகங்களை சாஸ்திரீய மேற்கத்திய இசை வடிவங்களில் வெளிப்படுத்துகின்றன.”
  8. மத்தியமகலா சாஹித்யம்: Lyrics or sahitya has always been the effective means to communicate man
  9. சொல்கட்டு சுவரம்: 6IndianMusic : Solkattu
  10. சொற்கட்டு சாகித்யம்: Amazon.com: Solkattu Manual: An Introduction to the Rhythmic Language of South Indian Music: David P. Nelson: Books
  11. ஸ்வர அக்ஷரம்: ‘ஏபிசி நீ வாசி’ இல்லையாம்.
  12. யதி: கவிதைக்குயில் ராகினியின் இசைப்பயணம் :: தாளத்தின் 10 உயிர் நிலைகள். | யதி
  13. யமகம்: கிருதியை அலங்கரிக்கும் அணிகள் (யமகம் – ஒரு சொல்லோ சொற்றொடரோ நான்கு அடிகளிலும் எதுகையாக வெவ்வேறு பொருளில் வருவது)
  14. மணிப்பிரவாள க்ருதி: Muthuswamy Dikshitar
  15. சங்கதி: இசையும் இறைவனும் – பறவையின் தடங்கள் :: நாகூர் ரூமி
  16. ஆவர்த்தனம் தனி