Tag Archives: OIG

வெப்-உலகம்: நேர்காணல் – எஸ். ராமகிருஷ்ணன்

சந்திப்பு : ஆர். முத்துக்குமார்

கேள்வி : `விஷ்ணுபுரம்’ நாவல் குறித்த உங்கள் `contention’ என்ன?

எஸ். ரா : முதலில் அந்தத் தீமில் எனக்கு ஈடுபாடு இல்லை. காலம் என்பது சில பல வஸ்துக்களால் தீர்மானிக்கப்படுவதில்லை. ஒவ்வொரு காலமும் ஒரு `மனவளர்ச்சி’ கொண்டது. குறிப்பிட்ட பிரத்யேகமான பய உணர்ச்சி கொண்டது. ஒரு ஆதிகுடி குகைவாசிக்கு பகல் / இரவு என்பது தெரியாது. அவனுக்கு பொருள் தோன்றுகிறது / மறைகிறது அவ்வளவே. ஆனால் பகல் / இரவின் விளைவுதான் தோன்றுதல் மறைதல் என்பது எப்படி எழுதப்படுவது?

ஒரு கட்டத்தை எழுத்தில் நாவலாகக் கொண்டுவரும் போது அதன் `மனம்’ எப்படி புரியப்படவேண்டும் என்பதில்தான் பிரச்னை இருக்கிறது. இயற்கை மதங்கள் பல்வேறு பயங்களால் உருவானதே. தற்போது இருக்கும் மதங்கள் அதைப் `பயன்பாடா’ மாற்றிக் கொண்டது. இப்ப-நம்ம பாரம்பரியத்துல ஏகப்பட்ட பக்தி இலக்கியம்-பாசுரம், எல்லாம் இருக்கின்றன. ஆனால் நாயன்மார்களுக்கோ-ஆழ்வாக்ளுக்கோ அது ஒரு மார்க்கம், ஞான மார்க்கம், அல்லது ஏதோ ஒன்றை அடைவதற்கான ஒரு கருவி. ஆனால் நமக்கு அது இன்று ஒரு கவிதை மட்டுமே. திருப்பாவை பாடல்கள் இன்னிக்கு நாம கேட்டா அதன் கவிதைத் தன்மையை மட்டும்தான் எடுத்துக்குறோம் அவங்களோட வாழ்வியலுக்குள்ள நாம் போகமுடியாது.

`விஷ்ணுபுரம்’ நாவல் பழைய தத்துவம் / இலக்கியம் / வாழ்வு போன்றவைகளை நவீன காலக்கட்டப் பார்வையில் அணுகுகிறது. மேலும் பல இடங்கள் `சினிமாட்டிக்கா’ இருக்கு, இப்ப நாம யானைய பார்த்திருக்கோம், அதுக்கு மதம் பிடிக்கும்னு கேள்விப்பட்டுருக்கோம், தமிழ் இலக்கியத்துல உதயணன் கதையில் தான் யானை ஊரையே துவம்சம் செய்யும்னு கேள்விப்பட்டிருக்கோம், இவர் கதைல ஒரு யானை ஒரு ஊரையே காலி செய்கிறது. இது, சினிமாடிக் தனமாகும். நமக்கும் யானைக்குமான உறவுகள் அப்படி இல்லையே. மேலும் அவரால் `பவுத்தம்’ சம்பந்தப்பட்ட தீவிரத் தேட்டத்தை வைக்க முடியவில்லை. பவுத்த நபர்கள் வருகிறார்கள். பவுத்த தர்க்கம் இருக்கிறது. ஆனால் பவுத்த சாரம் இல்லை.

கேள்வி : அந்த நாவலின் முடிவில் வரும் `பிரளயம்’ என்ற `Apocalypse’ ஏற்புடையதா?

எஸ். ரா : மார்க்வெஸின் `நூறாண்டு காலத் தனிமை’ நாவலில் வரும் Apocalypse’ ஞாபகம் என்பதன் நாட்டியமாக இருக்கிறது. அந்தப்பகுதி நாவலையே வேறுவிதமாக வாசிக்க வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது. ஜெயமோகனின் நாவலில் அது ஒரு `condition’ என்பதாக வருகிறது. மேலும் நம் தத்துவ புராண மரபு பிறப்பு / இறப்பு , படைப்பு / அழிவு என்பதை தொடர்ச்சியானதாக சர்க்குலராகப் பார்க்கிறது. பிரம்மாவிற்கும் சிவனுக்கும் இதுதான் வேலை. இவர் கதையில் இது ஒரு `வீழ்ச்சி’ என்பதாக முன்வைக்கப்படுகிறது. `வீழ்ச்சி’ என்பது கிறித்தவ மத விவகாரம்.

கேள்வி : ஏன் இதுலயும் பிரளயத்துலேந்து `நீலி’ புறப்படுகிறாளே?

எஸ். ரா : கொஞ்சம் Tribes மரபு, கொஞ்சம் – ரிலிஜன் – மரபு இது எல்லாத்தையும் அப்படிஅப்படியே அடுத்தடுத்து வைக்கிறார். ஆனா `நீலி’ என்பது அவரது Nostalgia சம்பந்தப்பட்ட விஷயம். அவருக்கு `உக்கிரமான பெண்’ என்பது ஏதோ ஒரு விதத்தில் தேவைப்படுகிறது. அவருக்கு `உக்கிரம்’ மேல் ஒரு obsession இருக்கு.

கேள்வி : `விஷ்ணுபுரம்’ நாவலை ஒரு அழகியல் வேலைப்பாடாக ஏற்கிறீர்களா?

எஸ். ரா : நாவல் என்ற மிகப்பெரிய வகையினத்தில் `விஷ்ணுபுரம்’ நிச்சயமாக ஒரு முக்கியமான வேலைப்பாடுதான். ஆனால் ஒரு மரபார்ந்த மனம்தான் அதில் ஆப்ரேட் ஆகிறது. ஆனால் நடை மரபு ரீதியானதாக இல்லை.

கேள்வி : ஜெயமோகனின் `பின்தொடரும் நிழலின் குரல்’ நாவலின் கம்யூனிச எதிர்ப்பு களம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

எஸ். ரா : நமக்கு அறிமுகப்படுத்தப்பட்ட `கம்யூனிசம்’ வைத்துதான் நாம் அதை அறிந்து கொண்டுள்ளோம் :

மேலும் படிக்க —> வெப்-உலகம்

பாட்டாவின் நதி – ஜெயமோகன்

ஜெய மோகன் மருதையப்பாட்டா என்றதும், அவர் கணையாழியில் எழுதிய கவிதை நினைவுக்கு வந்தது.

வெளியான இதழ்: மே, 1987

இந்த வழியாகத்தான்
எங்கள் பழைய நதி ஓடியதாம்
முன்பு
ரொம்ப காலத்துக்கு முன்பு.

பெரிய நதி அது.
எங்கள் தாத்தா அதில்தான்
குளிப்பாராம்
அவரோடு பெரிய யானையும்.

அப்புறம் எப்படியோ
நதி நின்று போச்சாம்.
அந்த இடமெல்லாம் மணலாச்சு.
மணல் மேலே
எங்கப்பா வீடுகட்டிக் குடிவந்தார்.
இப்பக்கூட
எங்க கொல்லைப்புறத்தைத்
தோண்டி பார்த்தால்
மீன் முட்கள்
கிடைக்கின்றன.

எங்கள் பெரிய நதியோட
நினைவாகத்தான்
நாங்கள்
சனிக்கிழமைதோறும்
குளிக்கறதில்லை.

Party with Superstar Rajinikanth: 80s Actor, Actress Alumini Meet

Image Dump: Cleaning up the Jazzy stuff

Cause: PREPARING FOR THE CLOSING OF YAHOO! 360°

Action:

Wanted Thangaraj: Movie Promo Still

திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்த கதை: India Films to Indie Movies – Meme

திரைப்படத்தின் புகைப்படம்

வாண்டட் தங்கராஜ்: தமிழ் சினிமா - குழந்தைகள் ஆண்டு - இயக்குநர் ஹரிஹரன்

வாண்டட் தங்கராஜ்: தமிழ் சினிமா – குழந்தைகள் ஆண்டு – இயக்குநர் ஹரிஹரன்

Anandha Vikadan Jokes: 1945 Cartoon Fun

ஆனந்த விகடன் நகைச்சுவை - ஜோக்ஸ்: 1945

ஆனந்த விகடன் நகைச்சுவை - ஜோக்ஸ்: 1945

டிராம் காலம்: அந்தக் கால புடைவை விகடன்: நகைச்சுவை

ஸ்லம்டாக் ஷாரூக்

ஸ்வீட் ஷா(ரூ)க்! சுஜாதா (கற்றதும் பெற்றதும்: ஆனந்த விகடன்)

1லிருந்து 100 வரை எத்தனை முறை 9 வரும்?

எஸ்ஆர்கே-யின் கேபிசி-யில் அமிதாபுடன் ஒப்பிடுவதிலிருந்து தப்பிக்க முயற்சிக்கிறார் ஷாரூக்கான். ‘பவுஜ்’ என்ற தொலைக்காட்சித் தொடரில் முதலில் தலையைக் காட்டி, சினிமாவுக்குப்போய் வென்று முழுவட்டமாக மறுபடி தொலைக்காட்சிக்கு ஒரு சூப்பர் ஸ்டாராக வந்திருக்கிறார். அடிக்கடி கட்டிக்கொள்கிறார்; கண்ணடிக்கிறார்; உம்மா கொடுக்கிறார்; ஜோக் அடிக்கிறார்.

அது சிலருக்கு உவப்பதில்லை. குறிப்பாக, சென்ற வாரம் ஒரு பள்ளி ஆசிரியை ஆள் காட்டி விரல் காட்டி அதட்டியே சொல்லிவிட்டார், ‘என்னைக் கட்டிக் கொண்டால் அடிப்பேன்’ என்று. ஆனால், ஷாரூக் அசரவில்லை. ஆசிரியையின் அம்மாவைக் போய்க் கட்டிக்கொண்டு, செக்கை அவரிடம் கொடுத்தார்.

ஷாரூக் செய்த சில காரியங்கள் இன்ப அதிர்ச்சிகளை ஏற்படுத்தியிருக்கும். ஒண்ணேகால் லட்சம் வரை ஜெயித்து விட்டு, ஒரு தப்பான பதிலால் இருபதாயிரத்துக்குச் சரிந்து விட்டவருக்கு ஆறுதலாகத் தன் கைக் கடிகாரத்தைக் கழற்றிக் கொடுத்தார்.

‘‘உனக்குக் கல்யாணமானாலும் பரவாயில்லை; உன்னைக் கல்யாணம் செய்துகொள்ள விரும்பு கிறேன்’’ என்று சொன்ன இளம் பெண்ணிடம், ‘‘என் மனைவியிடம் கேட்டேன். யாராவது என் கஷ்டத்தைப் பகிர்ந்து கொண்டால் சரி என்றாள்’’ என்றார்.

வெல்டன் ஷாரூக்!

(‘கோன் பனேகா குரோர்பதியில் கேட்ட கேள்விக்கு விடை 20)

மலையாளம், மலையாளி – ஓர் எச்சரிக்கை: சக்கரியா

நன்றி: பத்தி: அரபிக் கடலோரம் – காலச்சுவடு :: தமிழில்: சுகுமாரன் [இதழ் 98 – பிப்ரவரி 2008]

மலையாள மொழி இன்று அடைந்திருக்கும் நிலைமை விநோதமானது. மலையாளம் என்பது என்ன? மூன்றேகால் கோடி எண்ணிக்கையுள்ள கேரளயர்கள் அன்றாடம் பேசுகிற மொழி. எழுதுகிற மொழி. நிச்சயமாகக் கேரளத்திலுள்ள பெரும்பான்மை மக்களின் பேச்சு மொழியும் எழுத்து மொழியும் மலையாளம் மட்டுமே. உடனடியாக அப்படி இல்லாமல் போய்விடுமென்றும் தோன்றவில்லை.

:::

சட்டபூர்வமான ஆட்சிமொழி மலையாளம். ஆனால், அரசாங்கப் பணிகளில் பெரும்பான்மையும் நடப்பது ஆங்கிலத்தில்தான். எழுத்தறிவு இல்லாத குடிமகனுக்கு நியாயம் கிடைக்க வேண்டிய நீதிமன்ற மொழியும் ஆங்கிலந்தான்.

அதே சமயம்

  • நாளிதழ்கள்,
  • தொலைக்காட்சிகள் பயன்படுத்தும் மொழி மலையாளம் மட்டுமே.
  • சட்டமன்ற விவாதங்களின் மொழி மலையாளம்.
  • மதப் புரோகிதர்களும் சாதியமைப்புகளும் மக்களுடன் பேசுவது மலையாளத்தில்தான். சமஸ்கிருதத்திலோ அரபியிலோ லத்தீனிலோ அல்ல.
  • சினிமாவின் மொழியும் சினிமாப் பாட்டுகளின் மொழியும் மலையாளமே.
  • நாடகங்கள் மலையாளம்.
  • கதையும் கவிதையும் நாவலும் மலையாளம்.
  • அரசியல் சொற்பொழிவுகள் மலையாளம்.

ஆனால், பாலவாடி முதல் மலையாளியின் முதல் மொழியாகக் கருதப்படுவது ஆங்கிலமே. மலையாளம் வெறும் ‘செக்கண்ட் லாங்வேஜ்’. இந்த விசித்திரமான இரட்டை முகம் எப்படி உருவானது?

‘பயன்பாடு’ என்ற ஒற்றை வார்த்தையே இதற்குப் பதில். மலையாள மொழி மூலம் பயனடைபவர்களுக்கும் பயனடையாதவர்களுக்குமான வேறுபாடு இங்கே தெளிவாகிறது. ‘பயன்’ என்பது என்ன பொருளைத் தருகிறது என்பது எல்லாருக்கும் தெரியும். நமது வாழ்க்கையை எந்த வகையிலாவது மேம்படுத்துகிற ஒன்று. வாழ்க்கையைப் பராமரிக்க உதவும் ஒன்று. வாழ்க்கையில் நம்பக்கூடிய ஒன்று. இவைதாம் அந்தப் பயன்கள்.

சராசரி மலையாளியைப் பொறுத்தவரை அன்றாட வாழ்க்கையில் கருத்துப் பரிமாற்றத்துக்கான கருவி மலையாளம் மட்டுமே. வீட்டில், வழியில், கடையில், அலுவலகத்தில் எங்கும். அல்லது செய்திகள் வாசிக்க, தொலைக்காட்சி பார்க்க, புரோகிதனின் சொற்களைக் கேட்க எல்லாவற்றுக்கும். பத்திரிகை வாசிக்கும்போதும் தொலைக்காட்சி பார்க்கும்போதும் அவன் அரசியல் கட்சிகள், எழுத்தாளர்கள் போன்ற கருத்துத் தொடர்பாளர்களின் சொற்களையும் மறைமுகமாகக் கேட்கிறான். தொலைக்காட்சிகளில் வரும் கலை நிகழ்ச்சிகளும் சினிமாவும் அவனை மலையாளம் வழியாகவே உல்லாசப்படுத்துகின்றன.

பத்திரிகைகள், தொலைக்காட்சி, இலக்கியம், அரசியல், மதச் சொற்பொழிவுகள், சினிமா இவற்றைவிட்டால் வேறு என்ன? அவன் இவற்றுக்கு ஒரு சந்தை மட்டுமே.

அவன் மூலம் இவர்களெல்லாம் வாழ்கிறார்கள். அவர்கள் அவனிடம் மலையாளத்தில் அரசியலை விற்கிறார்கள்; மதத்தை விற்கிறார்கள்; இலக்கியத்தை விற்கிறார்கள்; பத்திரிகையை விற்கிறார்கள்; தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை விற்கிறார்கள். அவன் கொடுக்கும் சந்தாக்கள், காணிக்கைகள், நன்கொடைகள், விலைகள் ஆகியவற்றால் அவர்கள் கேரளத்தில் வலிமையானவர்களாகவும் செல்வந்தர்களாகவும் செல்வாக்குள்ளவர்களாகவும் மாறுகிறார்கள். வேறு வார்த்தைகளில் சொல்வதானால் அவர்கள் அதிகார வர்க்கமாகிறார்கள். சராசரி மலையாளி அதிகாரம் செய்யப்படுபவனாகிறான்.

அரசியல் கட்சிகளும் மதங்களும் ஊடகங்களும் அறிவுஜீவிகளும் அடங்கிய இந்த ஆளும் வர்க்கம் சுதந்திரத்துக்குப் பின் வந்த அரை நூற்றாண்டு கால ஆட்சியில் சராசரி மலையாளியை இந்தியா முழுவதும் அல்லது உலகம் முழுவதும் அப்பத்துக்காக அலையும் ஒரு அகதியாக்கிவிட்டிருக்கிறது. காங்கிரஸ், கம்யூனிஸ்ட், பிற கட்சிகளின் பங்களிப்பு இதுதான். மதத் தலைவர்கள், சாதியமைப்புகள், அறிவுஜீவிகள், பத்திரிகைகள், தொலைக்காட்சி அலைவரிசைகள் எல்லாவற்றின் பங்களிப்பும் இதுதான். அவர்கள் உண்டு கொழுத்தார்கள்.

:::

மலையாளிக்குக் கேரளத்தில் தன்னுடைய பிள்ளைகளின் எதிர்காலம் இருண்டது, மலையாளத்தால் தன்னுடைய பிள்ளைகளுக்குப் பயனில்லை என்பது புரிந்துவிட்டது. அவர்களுக்கு ஒரு வேலையோ வருமான மார்க்கமோ கிடைக்க வேண்டுமானால் அவர்கள் கேரளத்தை விட்டு வெளியேற வேண்டுமென்பதும் புரிந்துவிட்டது. அதற்கு மலையாளம் பிரயோஜனமில்லை என்பதும் புரிந்துவிட்டது. மலையாளம் மூலம் பயனடைந்தவர்கள் வரிசையில் தனக்கும் தன்னுடைய பிள்ளை களுக்கும் இடமில்லை என்பதும் புரிந்துவிட்டது. அப்படியாகத்தான் மலையாளம் செகண்ட் லாங்வேஜாகவும் ஆங்கிலம் முதல் மொழியாகவும் மாறியது.

பெரும்பான்மை மக்களுக்குச் சோறுபோடும் மொழியாக இல்லாமற்போயிருக்கிறது என்பதுதான் இன்று மலையாள மொழியின் அவலம். அது சோறுபோடுவது அரசியல் கட்சிகளுக்கும் பத்திரிகை, தொலைக்காட்சிகளுக்கும் மதத் தலைவர்களுக்கும் சினிமாக்காரர்களுக்கும் அறிவுஜீவிகளுக்கும் மட்டுமே. (இதில் அப்பாவி மலையாள ஆசிரியர்களும் உண்டு). மலையாளம் அவர்களுடைய மொத்தக் குத்தகையாகிவிட்டது. அதனால்தான் நான் பல சந்தர்ப்பங்களிலும் குறிப்பிட்டுக்கொண்டிருக்கிறேன்: ‘மலையாளம் உண்மையைப் பேசத் தெரியாத ஒரு மொழியாக மாறியிருக்கிறது. அதைக் குத்தகையாகக் கொண்டிருப்பவர்கள் எவரும் பொதுவாக உண்மை பேசுபவர்களுமல்ல.’

தமிழின் நிலைமை பற்றி எனக்குத் தெரியாது. அண்டை வீட்டு நிலைமையைத் தமிழ் ஓர் எச்சரிக்கையாக எடுத்துக்கொள்ள வேண்டுமா என்றும் எனக்குத் தெரியாது.

நடிகர் நம்பியாரா இப்படி செய்தார்? – வதந்தி

முன்னுமொரு காலத்தில் நடிகை சரோஜா தேவி அளித்த பேட்டியில் படித்தது:

“இயக்குநர் ‘கட்’ என்ற பின்பும் நம்பியார் நிறுத்தவில்லை.

முதல் முறை ‘என்ன சார்! நிஜத்திலும் வில்லன் ஆயிடுவீங்க போல?’ என்றேன். சுதாரித்து சுயநிலைக்கு வந்தவர், அடுத்த அடுத்த டேக்கில் மேலும் எல்லைமீறினார்.

கோபம் வந்து எல்லோர் முன்பும் பொரிந்து தள்ளினேன். மன்னிப்பு கேட்ட பின்தான் விட்டேன். அதற்குப் பரிகாரமாகத்தான் அவர் மாலை போட்டு விரதம் செய்கிறார்.”

பைண்ட் செய்யப்பட்ட தொடர்கதையில் பிட் நியூஸாக படித்தது மட்டுமே தங்கிப்போக; எந்தப் படத்தில், எப்போது, எந்தப் பத்திரிகையில் வந்தது என்பது எல்லாம் மறந்துவிட்டது.

இப்பொழுது போல் கத்திரித்து ஒட்டுவதும் அன்றைய வண்ணத்திரை காலத்தில் எனக்கு இல்லாததால் அச்சு ஆதாரம் தற்போது இல்லை.

Twitter 2000

ட்விட்ட ஆரம்பித்து இரண்டாயிரம் தாண்டியாகிவிட்டடது. 101 பக்கங்களில் இருந்து இப்பொழுது பிடித்து இருப்பவை.

சில வரைமுறை:

  • அவ்வப்பொழுது பத்து பத்தாக தொகுக்கலாம்.
  • சுட்டி கொடுத்து பொருள் விளக்கினால் தவிர்த்து விடேன்?
  • சொந்தக் கதையாக இருக்கட்டுமே!
  • மொழி மாற்றாதே.
  1. School vacation week for my daughter. Looks like when I am working from home, I am more sincere to my job. Twittering is part of sincerity.
  2. Finding Nemo moment – Kids love their moms more than their dads. Can it be generalized to Indian parents or applicable only to curt dads?
  3. Longggg time user of http://kinja.com/ Kinja. Fading away soon. RIP.
  4. Kendall square is my favorite Train station in Boston, Why? Thats where junta gets off the train and I can start to breathe.
  5. once I mixed up Hooters, crabs and lotz of beer. After that incident filled nite, I never mixed all 3 again.
  6. Sifting thru Junk mail and finding an Inbox mail is nirvana.
  7. It is pretty difficult for the hair cutter, if you lot of spots to cover.
  8. Add one more Gray Hairs – Mailing lists
  9. கூட்டம் வரும் முன்னே; அரசியல் வரும் பின்னே?! http://twitter.com/lazygeek… இது லேஸிகீக்கின் அனுபவம்
  10. Watched ‘Muni’ yesterday. Not bad at all. Genuinely brought smiles and family entertainer