Tag Archives: 10

அரசகட்டளையாக பார்த்து வைக்க வேண்டிய பத்து படங்கள் என்ன?

தமிழில் ஒவ்வொரு காலகட்டத்திலும் கட்டாயம் பார்க்க வேண்டிய திரைப்படங்கள் உண்டு.

எழுதப்படாத விதியாக அறிவிக்கப்படாத அரசாணையாக, “அரங்கிற்கு சென்று விட்டீர்களா?” என விசாரிப்பதற்கான முகாந்திரம் கொண்ட பட்டியல் இது.

இந்தப் பட்டியலில் நுழையத்தான் #PS1 எடுத்திருக்கிறார் மணி ரத்தினம். – இது ஐந்தாவது காரணம்.

எனக்கு இவ்வாறு புகட்டப்பட்ட இந்தப் பட்டியலைப் பார்ப்பதற்கு முன் உங்களுக்கு இந்த மாதிரி விதிக்கப்பட்ட இராசநீதி என்ன படங்கள்?

(பட்டியல் எந்த வரிசையிலும் இல்லை)

  1. ஔவையார் / சந்திரலேகா
  2. சம்சாரம் அது மின்சாரம்
  3. கல்யாணப் பரிசு
  4. சிவகவி
  5. சிந்து பைரவி
  6. மனோகரா
  7. உருவங்கள் மாறலாம் / சரணம் ஐயப்பா
  8. திருவிளையாடல் / ஆதிபராசக்தி
  9. திரிசூலம் / ஊட்டி வரை உறவு
  10. பொன்னியின் செல்வன் 1

அவ்வையார் – சாமி படம் என்பதால் ஒரு சாராரும் இலக்கியப் பெருமை என்பதால் தமிழ்ப் பற்றாளர்களும் உதாரண பெண்டிர் என்பதற்காக மற்றொரு குழுவும் அதை குழந்தைகளுக்கு காண்பித்தார்கள். அந்த மாதிரி கட்டாயக் கருத்துத் திணிப்பு என்பதால் சேர்த்துக் கொண்டேன்

திருவிளையாடல் – குறை என்றில்லை. இந்தப் படம் குடும்பத்தோடு பார்க்க வேண்டிய படம். இந்தப் படம் உம்மாச்சி படம். இந்தப் படம் எளிமையாக (புராணங்களை) தத்துவங்களைச் சொல்கிறது. இது போன்ற வலுக்கட்டாயங்கள் கலந்த உத்தமத்தோங்களை விதந்தோந்து பீடத்தில் அமர்த்தி விட்டதால் விமர்சிக்கவும் மேற்

உங்களுக்கு வலிந்து திணிக்கப்பட்ட சினிமாக்களை, ஆறாவடு ஆக மனதில் தோன்றிய படங்களைப் பகிருங்கள்.

Best Allegory Novels in Tamil

இந்தக் கேள்வி என்னுடைய வலைப்பதிவு ஒன்றுக்கு பின்னூட்டமாக வந்திருந்தது:

“i’ve been reading tamil fiction for a couple of years now and your blog has been useful for book recommendations;
can u please make a list of allegorical novels in tamil”

நான் ஏழெட்டு வருடமாக என் வலைப்பதிவில் தொடர்ச்சியாக எழுதவில்லை என்பது முதல் அதிர்ச்சி. என்னிடம் வந்து கேட்கிறார் என்பது “இன்னும் கூகுள், கோரா போன்ற தேடுபொறிகளும் கேள்வி – விடை வலையகங்களும் வயதிற்கு வரவில்லை,” என்பதை உணர்த்திய முதிர்ச்சி.

எந்தக் கேள்வி கேட்டாலும் அதற்கு பதில் வைத்திருப்பது ஒரு கன்சல்டண்ட் மனோபாவம். தனக்குத் தெரிந்ததை வைத்துக் கொண்டு தெரியாதவற்றை உணர வைப்பது இலக்கியவாதி மனோபாவம். இரண்டும் அமையைப் பெற்றவன் நான். சந்தர்ப்பத்தை நழுவ விடவில்லை.

கூகிள் மூலமாக “தமிழில் அலிகரி கதைகள்” எனத் தேடும்போது என் பதிவு முதல் பத்தில் வந்து நின்றிருக்கும். ஆனால், நான் எழுதும் மேட்டருக்கும் வைக்கும் தலைப்புக்கும் உள்ளடக்கத்திற்கும் எந்த சம்பந்தமும் இருந்திருக்காது. எம்.ஃபில். மாணவர் குழம்பியிருப்பார். பி.எச்டி. ஆய்வுக்கு எதை எடுப்பது, ஆராய்ச்சிக்கு எப்படி முட்டுக் கொடுப்பது என்று பிரமித்திருப்பார்.

எனவே, அதை முகாந்திரமாக வைத்து #சொல்வனம் தளத்தில் கேள்விக்கு விடையளித்திருக்கிறேன்.

இவற்றை அதிகதைகள் என்று சொல்லலாம். எழுத்தில் சொல்லப்பட்டதற்கு மீறி இன்னும் பலவற்றை உணர்த்துவதால்…

இந்தப் படைப்புகள் நம் எல்லோருக்கும் பழகிய “ஆக்கம்” என்னும் வடிவத்திற்குள் அடங்காதவை. இதற்கு நெடிய பாரம்பரியம் உண்டு. புத்தர், ஈசாப், மஹாபாரதம், அக்பர்-பீர்பால், வேதாளக் கதைகள், பாட்டி சொன்ன கதைகள் என நிறைய முன்னோடிகள் உண்டு. இந்தக் கால ஆளூமைகள் என்றால் இத்தாலோ கால்வினோ, ஃபோர்ஹே, காஃப்கா, மிரோஜெக் என அடுக்கிப் போகலாம்.

“நவீனத் தமிழலக்கிய அறிமுகம்” நூலில் ஜெயமோகன் எழுதிய “இலக்கியச் சூழலின் போலி பாவனைகள்” என்பதையும் படித்து விடுங்கள்!

Idly Vadai 9 Year Greetings

இட்லி வடை ஆரம்பித்து பத்தாவது ஆண்டு துவங்கப் போகிறது.

பத்தாண்டுகளாக தமிழ்ப்பதிவுகள் எப்படி இருக்கிறது என்று ரிப்போர்ட் கார்ட் போடலாம். பேருந்து விபத்தில் சென்னை நகரத்தின் பள்ளி சிறுவர்கள் இறப்பது போல் அது அடிக்கடி நடப்பது.

பத்தாண்டுகளில் இட்லி வடை எழுதியதில் பெஸ்ட் எது என்று பார்க்கலாம். டெண்டுல்கர் சதம் அடிப்பது போல் ஆயிரக்கணக்கான பதிவுகளில் நூறு திக்கி திணறி தேறலாம்.

சமகால ஜாம்பவான்களான பேயோன், மனுஷ்யபுத்திரன் போன்ற புனைப்பெயர்களோடு ஒப்பிட்டு அலசலாம். கோகுலாஷ்டமிக்கு கிருஷ்ணர் வேடம் அணிவது பொருத்தம் என்பது போல் இட்லி வடையில் அசுரர்களுக்கு இடம் இல்லை.

அப்படியானால் என்ன செய்யலாம்?

நீங்களும் இட்லி வடையாக ஒன்பது யோசனைகள் கொடுக்கலாம்:

1. தற்பெருமை, சுய அங்கீகாரத்தின் வெளிப்பாடாக அகங்காரம், தவறு செய்தாலும் மன்னிப்பு கேட்காத தன்மை, காதல் மன்னர்களின் வசீகரம் என்று அரசியல்வாதிக்கும் வலைப்பதிவருக்கும் உள்ள ஒற்றுமைகள் நிறைய. ஆனால், அரசியலில் வாக்கு கேட்டு வெற்றி பெற்றால்தான் மதிப்பு. வலையில் எழுதினாலே குவியும் வாக்கு.

2. இட்லி-வடை என்பது வாரிசு அரசியல் மாதிரி. முன்னுமொரு மூதாதையர் காலத்தில் இருந்து தியாகி பென்சன் பெற தகுதி பெற்றவர். நேற்றைய பினாமி பாலிடிக்சில் மில்லியனரானது போல் புதிதாக முளைத்தவர் இந்த பூமியில் காலூன்றுவது எப்படி? திண்ணை, சொல்வனம், உயிரோசை எதையும் விட வேண்டாம். ட்விட்டர், பேஸ்புக், பிண்டெரஸ்ட் எங்கும் தோன்றவும்.

3. எனக்கு ரொம்ப பிடித்தமான வினா: ‘எல்லோரும் இப்படி செஞ்சா என்ன ஆகும்?’ – அஞ்சு பைசா அன்னியன் ஆகட்டும்; எனக்கு காரியம் ஆனால் போதும் என்று கூடங்குளத்தை மூடச்சொல்லும் உதயகுமார் ஆகட்டும். உலகில் உள்ள அனைவரும் எனக்கு மட்டும் இது நடந்தால் போதும் என்று நம்பும் மனநிலையை உடைக்கலாம்.

4. எனக்கு நிரலி எழுதத் தெரியும். ஆனால், கணினி ப்ரொகிராமிங் குறித்து எழுதியது ரொம்பக் குறைவு. மொத்தம் ஏழெட்டு பதிவுகளில் இரண்டாயிரம் வார்த்தைகளை தாண்டாது. இந்த மாதிரி நம் துறை சார்ந்து எழுதலாம்.

5. சுவைக்காக தண்ணியடிப்பது ஒரு ரகம். பழக்கத்திற்காக சரக்கடிப்பது ஒரு ரகம். தூக்கத்திற்காக குவார்ட்டர் அடிப்பது இன்னொரு ரகம். எப்பொழுதாவது கம்பெனிக்காக குடிப்பது என் ரகம். நீங்கள் பதிவதில் எந்த ரகம்?

6. சண்டைக் காட்சிகளில் வாத்தியார் மூன்று அடி வாங்கிய பிறகுதான் நிமிர்ந்து திரும்பக் கொடுப்பார். பாவப்பட்ட ஹீரோவிற்கு மவுசு அதிகம். சிண்ட்ரெல்லாவிற்குத்தான் அனுதாப அலை அடிக்கும். எனவே, அவ்வப்போது உங்களை மனிதராக காட்டிக் கொள்ளுங்கள். அடக்கம் அமரருள் உய்க்கும்

7. ஒரே விஷயத்தையே கட்டி அழாதீர்கள். சங்க இலக்கியமாக இருக்கட்டும்; அரசியல் குழாயடிகளாக இருக்கட்டும். கொஞ்சம் உலகம்; நிறைய உள்நாடு; அப்படியே உங்களால் மட்டுமே எழுதக்கூடிய தனியாள் அனுபவங்கள். எல்லாம் கலந்து கட்டி அவியல் மணக்கட்டும்.

8. நாய் என்றால் கரண்ட் கம்பம் பார்த்து ஒன்றுக்கிருக்கும். வலைப்பதிவர் என்றால் மூக்கை நுழைத்து சண்டை போடுவார்.

9. என் மூளை ஔவையார் மூளை. இடது சாரியாக எல்லாவற்றையும் ஒன்று, இரண்டு, மூன்று என பட்டியல் போட்டு அழகு பார்க்கும். ஆனால், இலக்கியவாதிகளுக்கு வலப்பக்க மூளை புனைந்து கவி பாடும். வைரமுத்துவாக இரண்டையும் நன்றாக குழைத்து கருப்பு மை போட்டு வாழ்க! வளர்க!!

Most Competitive Cities in India: Top places to live, earn and have a Metro lifestyle

10 Reasons why Koodankulam Nuclear Power Plant is opposed

கூடங்குளம் அணுமின் நிலையம் குறித்து இணையத்தில் தேடினால், ‘Whats the worst that could happen’ என்று விளக்கும் பதிவுகள் முதலில் தென்படுகின்றன. அவற்றில் இருந்து என் புரிதல்:

1. கேரளாவிற்கு அருகில் இருக்கிறது. முல்லைப் பெரியாறு போல் பிரச்சினைக்காரர்களை பக்கத்தில் வைத்துக் கொள்ளும் இடம் தோதுப்படாது.

2. ராஜீவ் காலத்திலேயே கையெழுத்திட்டதால், தற்போதைய எம்.பி.க்களுக்கு கையூட்டு கிட்டவில்லை.

3. இலங்கையில் விடுதலைப்புலிகள் போன்ற தீவிரவாத சக்திகள் அடக்கப்பட்டுவிட்டாலும், பாகிஸ்தானில் இருந்து முஜாஹிதீன் யாராவது கள்ளத் தோணியில் வெடிகுண்டு போடுவார்கள்.

4. இந்த மாதிரி பயங்கரவாதக் குழுக்களும், அவர்களிடமிருந்து நாட்டை பாதுகாக்க இராணுவமும், ராணுவத்திடமிருந்து மக்களை பாதுகாக்க காவல் படையும் குவிவதால், நிலநடுக்கம் ஏற்படலாம்.

5. முன்னாடி லெமூரியா கண்டம் இருந்ததே இன்னும் ருசுப்படவில்லை. இந்த லட்சணத்தில் குமரிக் கண்டமும் திராவிடர்களுக்கு இல்லாமல் சுனாமிக்கு இழக்கலாமா!

6. தூத்துகுடி மறைமாவட்ட ஆயர் இவான் அம்புரோஸ் அவர்களுக்கும், போராட்டக்குழுவுக்கு தலைமையேற்றுள்ள உதயகுமார் அவர்களுக்கும் முறையே 54 கோடி ரூபாயும், உதயகுமார் அவர்களுக்கு 1.5 கோடி ரூபாயும் வந்தது வெறும் முன்பணம் மட்டுமே. முழுப்பணம் இன்னும் பட்டுவாடா ஆகவில்லை.

7. இப்போதாவது தினசரி 550 ரூபாய் கிடைக்கிறது. மின் உற்பத்தி துவங்கி விட்டால், இந்த வருவாயும் நின்றுவிடும். தேர்தலும் இல்லாத தரிசு காலத்தில், கூட்டத்தில் நிற்போரின் தினப்படியை கொடுக்கவிடாமல், வாயில் அடிப்பது நன்றாக இல்லை.

8. உலகமே இன்னும் கொஞ்ச நாளில் இருளில் மூழ்கிவிடும். அப்போது தமிழ்நாட்டில் அதிர்ச்சி ஏற்படாமல் இருக்க, இப்போதில் இருந்தே பழக்கப்படுத்தும், சூரிய ஒளியை மட்டும் நம்பி வாழவைக்கும் திட்டம்.

9. வைகோ போன்ற பேச்சாளர்களுக்கு பேச, உணர்ச்சி உரை ஆற்ற ஒரு விஷயம் குறைந்து போகும் அபாயம்.

10. நெய்வேலியில் இன்னும் கரி இருக்கிறதே! ஆயிரம் கைகள் மறைத்தாலும் ஆதவன் இருக்கிறதே!! இலையில் இருந்து எண்ணெய் கொடுக்க ராமர் பிள்ளை கண்ட அறிவியல் தமிழ்நாட்டில் அணுசக்தி எதற்கு!!!

நெருப்பிலாமல் புகையுமா?

செய்தி: Blaze destroys Khalsa Mahal; 1 fireman dead

The fire broke out in the offices of Commissioner and Director of Industries and Commerce and Director of Social Welfare. (தொழில் வணிக வரி அலுவலகம்)

Believing that the fire was fully doused, a team led by Divisional Fire Officer, Central Chennai, Priya Ravichandran, entered the building around 1:30 am and suddenly the roof caved in. K.Anbazhagan (55), leading fireman at Teynampet station, died on the spot.

சென்னை எழிலகத்தில் தீ: வணிகவரி- சமூகநலத்துறை ஆவணங்கள் சாம்பல்; சதியா ?

இந்த அலுவலகத்தில் இருந்த முக்கிய ஆவணங்கள் அனைத்தும் எரிந்து சாம்பலாயின. பொங்கல் திருநாளை முன்னிட்டு அரசு அலுவலகத்திற்கு தொடர் விடுமுறை என்பதால் சென்னையில் உள்ள அனைத்து தலைமை அலுவலகங்களும் வெறிச்சோடி காணப்பட்டன.


ஏன்? சில துப்பறியும் எண்ணங்கள்

1. அமைச்சர் எத்தனை அமைச்சரடி: சமூக நலத்துறை அமைச்சராக பதவி வகித்த செல்வி ராமஜெயத்தை அமைச்சர் பதவியிலிருந்து முதல்வர் ஜெயலலிதா நீக்கம் செய்தார். புதிய சமூச நலத்துறை அமைச்சராக வளர்மதியையும் நியமித்துள்ளார். சென்ற வருடம் – திமுக: சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன்.

2. ஆட்சியர் ஊழல்: Directorates of Social Welfare, and Industries and Commerceஇல் இருந்து எத்தனை ஆணையர்கள் (தற்போதைய இயக்குநர் ஜோதி நிர்மலா) சம்பந்தப் பட்டிருக்கிறார்கள் என்பதைக் கண்டுபிடிப்பவருக்கு ‘பரத் – சுசிலா விருது’ வழங்கப் போவதாக அறிவிப்பு.

3. தயார் நிலை: பொங்கல் நேரத்தில் தீயணைப்பு வீரர்கள் சொந்த ஊருக்கு செல்கிறார்களா அல்லது சென்னையிலேயே இருக்கிறார்களா என்று சோதனை செய்தார்கள்

4. ஸ்மோக் அலாரம் வணிகம் / தீயோலம் வர்த்தகம்: புகை எழுந்தாலே சத்தம் எழுப்பும் கருவிகளை விற்பவர்களின் சதிச்செயல் இது.

5. புதிய கட்டிடம் எழுப்ப திட்டம்: இருக்கும் எழிலகத்தை இடிக்கச் சொன்னால், புராதனம், கலாச்சாரம், பாரம்பரியம், வரலாற்றுச் சின்னம் என்றெல்லாம் புயல் கிளப்புவார்கள். மதராஸ் மியூசிங்ஸ், தியடோர் பாஸ்கரன், இல கணேசன் எல்லோரும் எழுதத் தொடங்குவார்கள். இப்படி இடித்தால் மல்டிப்ளெக்ஸ் மாடி அமைக்கலாம்.

6. அப்பாவி அன்பழகன் கொலை: நாலு குழந்தைகளுக்கு அப்பாவான நடுத்தர வர்க்கத்தை நடுத் தெருவிற்கு கொண்டு வந்தால் எப்படி சர்வைவ் ஆவார்கள் என்று வேடிக்கை பார்க்கும் ரியாலிடி டிவியின் சூழ்ச்சி. 😦

லாஸ் வேகாஸ் குறிப்புகள்

தமிழ்நாட்டில் தினமும் ஒரு பழைய கேசினோ (தியேட்டர்) இடிக்கப்பட்டு, அந்த இடத்தில் புதிய ஷாப்பிங் மால் உருவாகிறது. லாஸ் வேகாசில் வருடந்தோறும் ஒரு பழைய கேசினோ (சூதாட்ட மையம் + விடுதி) இடிக்கப்பட்டு, அங்கே ஒரு புதிய ரிசார்ட் (கடை, கண்ணி, சூதாட்டம், கேளிக்கை, விடுதி) அமைக்கப்படுகிறது.

இந்த தடவை பெங்களூரை பார்த்தபோது மலைப்பு ஏற்பட்டது. வெளிச்சுற்றுச்சாலை, வொயிட்ஃபீல்ட் நகர மையம், விமான நிலையம் என பல மாற்றங்கள். ஆனால், வேகாசில் ஐந்தாண்டு முன்பு வந்ததற்கும், தற்போதைய நிலைக்கும் பெரிய அளவில் மாறுதல் இல்லை. அதே புகழ் பெற்ற கேசினோக்கள். இப்பொழுது இன்னும் பெரிய பார்க்கிங் கட்டிடங்கள். அலிபாபா போன்ற பெயர் மாற்றங்கள்.

வேகாசுக்கும் திருப்பதி திருமலைக்கும் சில ஒற்றுமைகள் இருக்கின்றன. இரண்டும் இடமுமே கம்யூனிஸ்ட்களுக்கு ஒத்துக்காது என்பது தவிர…

திருமலை திருப்பதி

லாஸ் வேகாஸ்

1. அங்கே எல்லாவிடத்திலும் பெருமாளும் தாயாரும் போட்டோவிலாவது காட்சி கொடுப்பர். இங்கே ஸ்லாட் மெஷின்கள்.
2. உறங்கா நகரம். 24 மணி நேரம்; ஏழு நாள்; 365 நாள்; கிறிஸ்துமசுக்குக் கூட விடுமுறை இல்லை.
3. அசல் மொட்டை. ஒட்ட சுரண்டும் மொட்டை.
4. ஏகாந்த சேவை ரொம்பவே பிரபலமானது. சயனிக்கும் நேரத்திற்கான revue காட்சிகளுக்குப் புகழ்பெற்றது.
5. நித்ய அன்னதானம். வித விதமான 150 உணவுவகைகளைக் கொண்ட பஃபேக்கள் பிரசித்தம்.
6. உண்டியலில் சில்லறை கொட்டும் சத்தமும், காணிக்கை காசுகளை எண்ணும் ஒலியும் பிரகாரங்களில் ரீங்கரிக்கும். எங்கு திரும்பினாலும் ஸ்லாட் மெஷின்களின் ஓசை.
7. குபேரனுக்குக் கொடுத்த கடனை இன்னும் வெங்கடாசலபதி அடைக்காததாக கேள்வி. கடனில்தான் அமெரிக்காவே ஓடுகிறது; லாஸ் வேகாஸ் எம்மாத்திரம்?
8. பல மணி நேரம் காத்திருந்தால்தான் இலவச தரிசனம் கிடைக்கும். பல மணி நேரம் சூது விளையாடினால்தான் இலவச மது கிடைக்கும்.
9. கடவுளிடம் சொன்னது வெளியில் வராது. வாட் ஹாப்பன்ஸ் இன் வேகஸ், ஸ்டேஸ் ஹியர்.

சஹாரா மூடப்பட்டுவிட்டது. கொஞ்ச காலம் முன்பு வந்தபோது தங்கியிருக்கிறேன். முயல் குட்டி போடுவது போல் சர்க்யூ டீ சொலே, நிகழ்ச்சிகளை பெருக்கியிருக்கிறார்கள். ஒவ்வொரு கேசினோவிற்கும் ஒரு சர்க்யு டி சொலில் நிகழ்வு. “ஓ”வின் தண்ணீர் அரங்கை, பலர் பல விதமாக பிரதிபலித்து, தங்கள் தியேட்டரிலும் அரங்கேற்றுகிறார்கள். ஆனால், ஆங்கில விமர்சனத்தைப் படித்துவிட்டு, காப்பியடிக்கும் சாரு நிவேதிதாவாக அவை எல்லாம் நிறையவே பிசிறு தட்டுகின்றன.

குடித்து விட்டு வண்டி ஓட்டுவதாலோ… ஊருக்குப் புதிதாய் லட்சக்கணக்கானோர் சாலைகளை நிறைத்திருப்பதாலோ… தினமும் ஆறேழு விபத்துகளாவது கண்ணில் படுகிறது. இருபது கார்களாவது பலத்த சேதத்தில் காணப்படுகிறது. இந்த ஊருக்கா, இன்பச் சுற்றுலா வந்தோம் என்று மரண பயம் கிலியூட்டுகிறது.

மக்கள் வாழ்வை கண்டு போபோ-வாக பச்சாதபம் ஏற்படாமல் இல்லை. கிறிஸிதுமஸ் அன்று காபி கலந்து கொடுக்கும் ஸ்டார்பக்ஸ் ஊழியரிடம் பூர்ஷ்வா பொஹீமியனாக வருத்தம் ஏற்படுகிறது. ‘நீ 99% சதவீதம்தானே? ஆக்குபை வால் ஸ்ட்ரீட்டில் கலந்து கொண்டாயா? இன்று விடுமுறை தினமல்லவா? பண்டிகை கொண்டாட்டத்தில் நீ ஈடுபடவில்லையா? ஸ்க்ரூஜ் போன்ற முதலாளியா? அவரை சார்லஸ் டிக்கன்ஸ் படிக்க சொல்லவா?’ என்று தத்துவ விசாரத்தில் ஈடுபட மனம் விரைந்தாலும், காபிக்கு, கொழுப்பு நீக்கிய பால் கலக்க சொல்கிறேன்.

நாற்பத்தைந்தாயிரம் டாலருக்கு ஓவியம். எண்பதாயிரத்தி முன்னூறு ரூபாய்க்கு சர்க்கஸ் கோமாளி சிற்பம். பெரும் சூதாடிகளுக்கு மட்டும் திறக்கும் கேசினோ கதவு. எங்கிருந்து நோட்டு அடிக்கிறார்கள் என்று தெரியவில்லை. ஆனால், கிருஷ்ணரையோ சகுனியையோ மட்டும் மாமாவாய்க் கொண்டிருந்தால், நிச்சயம் எனக்காக ஆடும் படி அழைத்துச் சென்றிருப்பேன்.

It happens only in India: பத்து அதிசயங்கள்

இந்தியாவில் மட்டுமே இது சாத்தியம். நம்பமுடியவில்லை  பத்து வினோத நகைச்சுவை நேரங்கள் + கதாமாந்தர்களின் தொகுப்பு:

  1. மொத்த வருவாயில் இருபது சதவீதத்துக்கு மேல் இவர்கள் கபளீகரம் செய்கிறார்கள். ஜாம் ஜாம் ரிடயர்மெண்ட்; அந்த ஓய்வில் கை நிறைய பென்ஷன். ஆனால், வேலை நேரத்தில் கை அசைக்கக் கூட லஞ்சம் கோருவார்கள்: அரசு ஊழியர் / ஐ ஏ எஸ் ஆபீசர்
  2. சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு சிறப்பிதழ் கொண்டு வருவார்கள்; நேற்று பிறந்த பாரதியாருக்கு ‘நீயா/நானா’ டைட்டில் சாங்கில் கூட சான்ஸ் கிடைக்காது. : மீடியா / தொலைக்காட்சி ஊடகங்கள்.
  3. ஊழலுக்கு எதிராக ‘இந்தியன்’, ‘ரமணா’க்கள் வெள்ளி விழா கொண்டாடுவோம். அன்னா ஹஜாரே வைபவம் அனுசரிப்போம். ஆனால், அவசரத்திற்கு கொள்ளிக்கட்டையைக் கொண்டு தலையை சொறிகிறோம்: லஞ்சம் / கையூட்டு.
  4. ருபாயா சயீத் கடத்தப்பட்டால் அரசாங்கம் பதை பதைக்கிறது. உடனடியாக, மண்டல் கமிஷன் நாயகர் விபி சிங் செயலில் இறங்குகிறார். மந்திரி மகளை விடுவிக்க பணமும், பொருளும், தீவிரவாதிகளும் தரப்படுகிறது: வாரிசு /அதிகார வர்க்கம்.
  5. மஞ்சள், துளசி, மூலிகை காலங்காலமாக இருக்கும்; இருந்தாலும் நச்சுப் பொருள் கொண்ட ஜான்சன் & ஜான்சன் கொண்டு பிஞ்சுகளைக் குளிப்பாட்டுகிறோம். சந்திராயன் கொண்டு கண்டுபிடித்தாலும் கிணற்றிலிட்ட விளக்காக சந்தைப்படுத்த மாட்டோம்: நய்பால்த்தனம் / கலாம் அடக்கம்.
  6. நூறாண்டுகளுக்கு ஒரு முறை லிங்கனும் கென்னடியும் கொல்லப்பட்டால் அமெரிக்கா; பத்தாண்டுக்கு ஒரு முறை லால் பகதூர் சாஸ்திரி, இந்திரா, ராஜீவ் கொய்யப்பட்டால் இந்தியா: உளவுத்துறை / தேசிய பாதுகாப்பு.
  7. ஓ பன்னீர்செல்வம் முதலமைச்சராக இருப்பார்; சசிகலா & கோ கவனிக்கப்படுவார். அது ஜெயலலிதாவின் தியாகமாக கருதப்படவில்லை. ஆனால், இத்தாலியின் போஃபர்ஸ் சோனியா இன்றும் செம்மல்: தலையாட்டி பொம்மை / அனுதாப அலை.
  8. சிவில் போர் நடக்கிறது; பிரச்சினை சுமூகமாகிறது. ஆக்குபை வால் ஸ்ட்ரீட் பிரகடனமாகிறது; 99% குரல் ஒலிக்கிறது. தலித், முஸ்லீம், சிறுபான்மை உரிமை நசுக்கப்பட்டது; மாயாவதி, திருமா, கருணாநிதி பில் கேட்ஸ் ஆகிறார்: சாதி / இனம் / மதம் / குலம்.
  9. அமெரிக்க அதிபர் ஆக வேண்டுமானால், இவாஞ்சலிக்க கிறித்துவராக இருக்க வேண்டும்; கருத்தடையை ஆதரிக்கக் கூடாது; அறிவியலை நம்பக் கூடாது; இந்தியாவில் கடவுளையும் நவக்கிரகங்களையும் நம்பிக் கொண்டே டெஸ்ட் ட்யூப் பேபி முதல் இதயமாற்று வரை முன்னோடி மருத்துவ முறை சாத்தியம்: பரிசோதனை எலி / பகுத்தற்வு பாசறை.
  10. சொல்லி அலுத்து விட்டது. வருடம் மாறலாம்; காலம் செல்லலாம்; பாகிஸ்தான் கூட பாய் பாய் ஆகிவிடலாம். பஞ்சாப் போச்சு; காஷ்மீர் வந்தது! டும்!! டும்!!! : தீவிரவாதம் / பயங்கரவாதம்.

நானும் ராம் கோபால் வர்மாவும்

நீங்களும் இவ்வாறு ஒப்பிட: Twitterize Yourself: How To Create A Visualization Of Your Twitter Profile [INFOGRAPHIC] – AllTwitter

உங்களுடன் ஒப்பிட சிலர்:

  1. ஏ ஆர் ரெஹ்மான்
  2. சுருதி ஹாஸன்
  3. பிரிட்டிஷ் நந்தி
  4. பர்க்கா தத்
  5. கரன் ஜோஹர்
  6. ஷாரூக் கான்
  7. சசி தரூர்
  8. சேகர் கபூர்
  9. சுசித்ரா
  10. சச்சின் டெண்டுல்கர்

மகள்

உலகத்தரமும் இந்திய மசாலாவும்

தீபாவளிக்கு வெடி வெடிப்பது போல்… கிறிஸ்துமசுக்கு பரிசு பரிமாற்றம் போல்… ரஜினி சினிமாவை முதல் நாள் பார்ப்பது போல்… சனிக்கிழமைதோறும் கிளாசிக் திரைப்படம் போடுவது வழக்கம். மகளுக்கு உலக சினிமா பரிச்சயத்தை விட, தமிழ் கலாச்சாரத்தை திரைப்படம் மூலமாகவே சொல்லிவிடுவது என சபதம்.

‘அன்பே சிவம்’ ஓடுகிறது. குலத்தில் கல்லெறிகிறார். பாலா வருகிறார். மகள் உடனே கேட்கிறாள்: ‘இவளை கல்யாணம் செய்து கொள்ளத்தான் மாதவன் செல்கிறாரா?’

தமிழ் சினிமா இவ்வளவு எளிமையான புரிதலுடன் இயங்குகிறது என்பதை அறிந்து கொண்ட மகிழ்ச்சி அதிர்ச்சியா? அல்லது தென்னகத்தின் ஆஸ்கார் நாயகன் ஆக்கமே ஸ்டீரியோடைப் வார்ப்புருவில் அடைபட்டதை தெரிவித்த வருத்தமா?

“பேசாமல் படம் பாரு”


வீட்டிலிருந்தே வேலை

பி.பி.எஸ். நிகழ்ச்சியின் முன்னோட்டம் டிவியில் ஓடுகிறது. எனக்குப் பிடித்த ஃப்ரன்ட்லைன். அவளுக்குப் பிடிக்காத போஸ்ட் மார்ட்டம்.

டாக்டர் பற்றாக்குறை அறிந்த தகவல். Forensic pathologist கிடைக்காமல் இருப்பது புதிய தகவல்.

‘கம்ப்யூட்டரைக் கட்டிக் கொண்டு மாரடிப்பதற்கு பதில் இந்த மாதிரி தொழில் மாத்திக்க ஏதாவது கத்துக்கலாம். புதுசாகத் தெரிஞ்சுக்கற ஆர்வமும் இருக்கும்; நிலையான சம்பாத்தியமும் வரும்போலத் தோணுது.”

“என்ன வேணா செய் அப்பா… Snow Dayன்னு சொல்லிட்டு, வீட்டுக்கு மட்டும் பொணத்த எடுத்துண்டு வந்துடாதே!”


முந்தைய பதிவு: அமெரிக்காவில் தமிழ் வாத்தியாரும் தேஸி மாணவரும்