Tag Archives: ப்ளாகர்

Idly Vadai 9 Year Greetings

இட்லி வடை ஆரம்பித்து பத்தாவது ஆண்டு துவங்கப் போகிறது.

பத்தாண்டுகளாக தமிழ்ப்பதிவுகள் எப்படி இருக்கிறது என்று ரிப்போர்ட் கார்ட் போடலாம். பேருந்து விபத்தில் சென்னை நகரத்தின் பள்ளி சிறுவர்கள் இறப்பது போல் அது அடிக்கடி நடப்பது.

பத்தாண்டுகளில் இட்லி வடை எழுதியதில் பெஸ்ட் எது என்று பார்க்கலாம். டெண்டுல்கர் சதம் அடிப்பது போல் ஆயிரக்கணக்கான பதிவுகளில் நூறு திக்கி திணறி தேறலாம்.

சமகால ஜாம்பவான்களான பேயோன், மனுஷ்யபுத்திரன் போன்ற புனைப்பெயர்களோடு ஒப்பிட்டு அலசலாம். கோகுலாஷ்டமிக்கு கிருஷ்ணர் வேடம் அணிவது பொருத்தம் என்பது போல் இட்லி வடையில் அசுரர்களுக்கு இடம் இல்லை.

அப்படியானால் என்ன செய்யலாம்?

நீங்களும் இட்லி வடையாக ஒன்பது யோசனைகள் கொடுக்கலாம்:

1. தற்பெருமை, சுய அங்கீகாரத்தின் வெளிப்பாடாக அகங்காரம், தவறு செய்தாலும் மன்னிப்பு கேட்காத தன்மை, காதல் மன்னர்களின் வசீகரம் என்று அரசியல்வாதிக்கும் வலைப்பதிவருக்கும் உள்ள ஒற்றுமைகள் நிறைய. ஆனால், அரசியலில் வாக்கு கேட்டு வெற்றி பெற்றால்தான் மதிப்பு. வலையில் எழுதினாலே குவியும் வாக்கு.

2. இட்லி-வடை என்பது வாரிசு அரசியல் மாதிரி. முன்னுமொரு மூதாதையர் காலத்தில் இருந்து தியாகி பென்சன் பெற தகுதி பெற்றவர். நேற்றைய பினாமி பாலிடிக்சில் மில்லியனரானது போல் புதிதாக முளைத்தவர் இந்த பூமியில் காலூன்றுவது எப்படி? திண்ணை, சொல்வனம், உயிரோசை எதையும் விட வேண்டாம். ட்விட்டர், பேஸ்புக், பிண்டெரஸ்ட் எங்கும் தோன்றவும்.

3. எனக்கு ரொம்ப பிடித்தமான வினா: ‘எல்லோரும் இப்படி செஞ்சா என்ன ஆகும்?’ – அஞ்சு பைசா அன்னியன் ஆகட்டும்; எனக்கு காரியம் ஆனால் போதும் என்று கூடங்குளத்தை மூடச்சொல்லும் உதயகுமார் ஆகட்டும். உலகில் உள்ள அனைவரும் எனக்கு மட்டும் இது நடந்தால் போதும் என்று நம்பும் மனநிலையை உடைக்கலாம்.

4. எனக்கு நிரலி எழுதத் தெரியும். ஆனால், கணினி ப்ரொகிராமிங் குறித்து எழுதியது ரொம்பக் குறைவு. மொத்தம் ஏழெட்டு பதிவுகளில் இரண்டாயிரம் வார்த்தைகளை தாண்டாது. இந்த மாதிரி நம் துறை சார்ந்து எழுதலாம்.

5. சுவைக்காக தண்ணியடிப்பது ஒரு ரகம். பழக்கத்திற்காக சரக்கடிப்பது ஒரு ரகம். தூக்கத்திற்காக குவார்ட்டர் அடிப்பது இன்னொரு ரகம். எப்பொழுதாவது கம்பெனிக்காக குடிப்பது என் ரகம். நீங்கள் பதிவதில் எந்த ரகம்?

6. சண்டைக் காட்சிகளில் வாத்தியார் மூன்று அடி வாங்கிய பிறகுதான் நிமிர்ந்து திரும்பக் கொடுப்பார். பாவப்பட்ட ஹீரோவிற்கு மவுசு அதிகம். சிண்ட்ரெல்லாவிற்குத்தான் அனுதாப அலை அடிக்கும். எனவே, அவ்வப்போது உங்களை மனிதராக காட்டிக் கொள்ளுங்கள். அடக்கம் அமரருள் உய்க்கும்

7. ஒரே விஷயத்தையே கட்டி அழாதீர்கள். சங்க இலக்கியமாக இருக்கட்டும்; அரசியல் குழாயடிகளாக இருக்கட்டும். கொஞ்சம் உலகம்; நிறைய உள்நாடு; அப்படியே உங்களால் மட்டுமே எழுதக்கூடிய தனியாள் அனுபவங்கள். எல்லாம் கலந்து கட்டி அவியல் மணக்கட்டும்.

8. நாய் என்றால் கரண்ட் கம்பம் பார்த்து ஒன்றுக்கிருக்கும். வலைப்பதிவர் என்றால் மூக்கை நுழைத்து சண்டை போடுவார்.

9. என் மூளை ஔவையார் மூளை. இடது சாரியாக எல்லாவற்றையும் ஒன்று, இரண்டு, மூன்று என பட்டியல் போட்டு அழகு பார்க்கும். ஆனால், இலக்கியவாதிகளுக்கு வலப்பக்க மூளை புனைந்து கவி பாடும். வைரமுத்துவாக இரண்டையும் நன்றாக குழைத்து கருப்பு மை போட்டு வாழ்க! வளர்க!!

‘ட்விட்டரும் ஃபேஸ்புக்கும் பயன்படுத்தாதே!’

Harry Lewis: “Blown to Bits: Your Life, Liberty, and Happiness After the Digital Explosion.”

Almost everything we now do on a regular basis, from sending emails, taking photographs, writing text messages, calling on our cell phones, downloading music, typing on our computers, and using our credit and ATM cards, all of it generates information. And every single day the endless information generated by our ever-expanding digital footprints is recorded, tracked, searched through, sold, analyzed, and saved forever.

Some might call this hyper-networked digital explosion and its potential for collaboration and innovation a kind of utopia. But others warn that it also raises important concerns about privacy, identity, freedom of expression, accountability, and the future of democracy.

1. செல்பேசியை அணைத்து விட்டாலும் ஒட்டு கேட்கலாம்.

அந்தக் காலத்தில் வீட்டுக்குள் புகுந்து, வேவு பார்க்கும் கருவியை நிறுவினார்கள். ஆனால், இன்றோ, மிகவும் சுளுவாக சாஃப்ட்வேரை உங்களின் செல்பேசிக்கு அனுப்பி விடுகிறார்கள்.

அதன் பிறகு உங்களின் ஒவ்வொரு பேச்சையும் ஒட்டுக் கேட்கலாம்.

இந்த தொழில்நுட்பத்தைக் கொண்டு மாஃபியா தலைவர்களின் குற்றத்தை நிரூபித்து இருக்கிறார்கள்.

எஸ்.வி சேகருக்கு குளிராடி போட்டது நதியா காலம். எஃப்.பி.ஐ. செல்பேசி மூலம் உங்களைப் பார்ப்பது இந்தக்காலம்!

~oOo~

2. தான்யா ரைடரின் சம்பவம்:

மனைவியைக் காணவில்லை என்று கணவன் போலீசை நாடுகிறார். காவல்துறையோ, ‘உங்கள் மனைவி சுதந்திரத்தை நாடி, பிறிதொரு துணையைத் தேடி சென்றிருக்கலாம். எனவே, அவரைத் தேட மாட்டோம். தேடவும் கூடாது!’ என்று மறுத்து திருப்பியனுப்பி விடுகிறது.

ஒரு வாரம் கழிகிறது.

ஒரு வேளை கணவனே, தன் மனைவியைத் தீர்த்துக் கட்டியிருப்பாரோ என்று காவலர்களுக்கு சந்தேகம் வருகிறது. அதனால் அவரை குற்றஞ்சாட்டுவதற்காக தான்யாவைத் தேடத் துவங்கினார்கள்.

கார் விபத்தில் சிக்கிய தான்யா குற்றுயிரும் குலையுயிருமாக ஒரு வாரப் பட்டினியில் சேதமடைந்த காரில் மயக்க நிலையில் கண்டுபிடிக்கப் பட்டார்.

பெண் சுதந்திரம் வேண்டுந்தான்! குடும்ப வன்முறையிலிருந்து தப்பிக்க வேண்டுந்தான்!!

அதற்காக, கணவன் புகார் தந்தால் எஃப்.ஐ.ஆர். போட மறுக்கலாமா?

~oOo~

3. நீங்கள் நல்ல தந்தையா? பொறுப்பான தாய்?

இது விவாகரத்து கேஸ்.

கடுமையாக உழைக்கும் மனைவி சொல்கிறாள், ‘நான் என் குழந்தையை மிக சிறப்பாக கவனித்துக் கொள்வேன்’.

கணவனின் வக்கீல் தன் பக்க சாட்சியாக சுங்கச்சாவடிகளில் கட்டும் வரி ரசீதுகளை கொண்டு வரலாம். முன்னாளில் நீங்கள் எப்பொழுது அலுவலில் இருந்து வீட்டுக்கு வந்தீர்கள், எத்தனை நேரம் குழந்தையோடு செலவழித்தீர்கள் என்றெல்லாம் கண்டுபிடிக்க இயலாது.

ஆனால், இன்றோ, நாற்சக்கர சாலைகளில் இருக்கும் toll boothகளைக் கொண்டு ஒன்பது மணிக்கு வீட்டுக்கு வருவதை சொல்லி, மகளை தன்னிடம் ஒப்படைக்குமாறு வாதிட்டு வென்றும் விடலாம்.

சௌகரியமாக இருக்கிறது என்பதற்காக EZ-Pass போட்டு வைக்கிறோம். அதைக் கொண்டு, எங்கே, எப்போது, எத்தனை மணி நேரம் செலவழிக்கிறோம் என்பதை நாம் விரும்பாமலே உலகுக்கு சொல்கிறோம்.

~oOo~

4. வாடிக்கையாளர் அட்டை

ஷாப்-ரைட் ஆரம்பித்து சிவியெஸ் வரை எல்லோரும் தங்களின் நுகர்வோருக்கு ‘தள்ளுபடிக்கான அடையாள அட்டை’ தருகிறார்கள்.

என்ன சரக்கு அடிப்பீர்கள், அந்த சரக்கு அடித்தால் என்ன நோய் வருகிறது, நோய் வந்தால் என்ன வாங்குவீர்கள் என்றெல்லாம் இதன் மூலம் அறிய முடியும்.

~oOo~

5. விமான நிலையத்தில் CLEAR முறை

ஒசாமா பின் லாடனின் வேலையை அமெரிக்கா எளிதாக்கி இருக்கிறது. தீவிரவாதி விமானத்திற்குள் நுழைய வேண்டுமா?

வெறும் 80 டாலர் போதும் ஜென்டில்மேன்.

உங்களுக்கு சோதனையில் இருந்து விலக்குத் தரப்படும். பாதுகாப்பாக நீங்கள் ‘பாதுகாப்பு சோதனை’யை தவிர்க்கலாம்.

ஆல் க்ளியர்!

~oOo~

6. கூகிள் சக்தி

உடம்பு சரியில்லை என்றால் என்ன செய்கிறீர்கள்?

“மூக்கொழுகல் AND காதடைப்பு” என்று கூகிள் செய்வோம். உங்களை மாதிரியே பக்கத்து தெரு பங்கஜம், அதே பேட்டையில் வசிக்கும் பேட்ரிக் என்று பன்மடங்காக ஒரே மாதிரியான தேடல் வர ஆரம்பிக்கிறது.

மருத்துவமனைக்கு செல்வதற்கு முன், அரசாங்கத்திற்கு தகவல் போவதற்கு முன், இன்டெலிஜென்ஸ் அறிந்துகொள்வதற்கு முன் கூகிளுக்கு ‘இந்த நோய், இப்படிப்பட்ட இடத்தில்’ பரவ ஆரம்பித்துள்ளது.

நோய் சரியாகாத படசத்தில் ஓரிரண்டு நாள் கழித்துதான் டாக்டரை நாடுவோம். ஆனால், எல்லா தகவலையும் அதற்கு பல மணி நேரம் முன்பே கூகிள் கணித்துவிடுகிறது.

இன்ஃபோர்மேசன் இஸ் பவர்!