Tag Archives: Jokes

மயில்சாமி – அஞ்சலி

முதன் முதலாக அந்த கேசட்டை கேட்டபோது “இப்படித்தானே நகைச்சுவை இருக்க வேண்டும்! சுருளிராஜனும் தேங்காய் சீனிவாசனும் உசிலை மணியும் பக்கோடா காதரும் ஏன் இப்படி பாடாய் படுத்துகிறார்கள்?” எனத் தோன்றியது.

அது “சிரிப்போ சிரிப்பு”

மயில்சாமி என்னும் மிமிக்ரி கலைஞரும் லட்சுமணன் என்பவரும் இணைந்து அன்றைய பிரபலங்களை கிண்டல் அடித்து இருப்பார்கள்.

ஆளுங்கட்சி எம்.ஜி.ஆர். எதிர்க்கட்சி கருணாநிதி. ஆன்மீகச் செம்மல் கிருபானந்த வாரியார். சூப்பர் ஸ்டார் ரஜினி – எல்லோரையும் வைத்து ரசனையாக செய்திருப்பார்.

அதில் கடி ஜோக் ஒரு வகை – அது (சுருதி) லட்சுமணன் வகை – அந்த வகை இன்றும், என்றும், எங்கும், எப்பொழுதும் கடிக்கலாம். அவற்றுக்கு ரொம்ப யோசிக்க வேண்டாம். ஆனந்த விகடனில் வெ. சீதாராமன் நகைச்சுவை மாதிரி. கொஞ்சம் பழைய நினைப்பு + நிறைய கேலி + நிச்சயம் உல்டா. ஜாலியாக இருக்கும். மனதில் நிலைக்காது. மறந்து விடும்.

ஆனால், குரல் மாற்றிப் பேசும் மைல்சாமி குரல் – அந்தந்த கதாபாத்திரமாகவே மாறிவிடும். புரட்சித் தலைவர் என்றால் அவரின் பாணி. கலைஞர் என்றால் சொற்சிலம்பம், நெடுங்கவிதை புராணம். ரஜினிக்கேற்ற டயலாக், டி ராஜேந்தருக்கு ஏற்ற எதுகை மோனை வசனம்.

குறிப்பாக, ‘நிலா அது வானத்து மேல’ பாட்டிற்கு வாரியார் சொல்லும் சொற்பொழிவு. அது எனக்கு எந்தப் பாடலை வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் உயர்த்தி வைக்கலாம்; எந்தக் கருத்தையும் நைச்சியமாக விமர்சனமாக உள்ளே வைக்கலாம்; எந்தக் குப்பை சரக்கையும் நம் வசதிக்கேற்ப மாற்றலாம் – என்னும் நுட்பத்தை செய்முறையாக முதன் முறையாக விளக்குவார் மயில்சாமி.

ஸ்டாண்ட்-அப் என்கிறோம்; பகிடி என்கிறோம்; கலாய்த்தல் என்கிறோம்; டிஜே ஒருங்கிணைப்பு; விஜே வர்ணனை; சந்தானம், சிவ கார்த்திகேயன், மா.க.பா, ரோபோ சங்கர் எல்லோருக்கும் முன்னோடி.

ராஹுல் காந்தியை தங்கபாலு அவர்கள் மொழிபெயர்த்ததற்கு முன்னோடியாக இயக்குநர் விசுவும் கிஷ்மு அவர்களும் ஒரு நிகழ்ச்சியில் அன்றே செய்திருப்பார்கள். அதன் தொடர்ச்சியாக கொஞ்சம் காலம் கழித்து ஈழத்து தமிழை மொழிபெயர்ப்பவராக திரைப்படம் ஒன்றில் மயில்சாமியைப் பார்த்தேன்.

அந்த ஒலிப்பேழையை மீண்டும் மீண்டும் கேட்க வைத்தது அவர்(களின்) சாதனை. அதை சாடர்டே நைட் லைவ் போல் ஒரு இயக்கமாக மாற்றியது தற்செயல் பிறவிப்பயன். எங்காவது பாக்கியராஜையோ சந்திரசேகரையோ ஜனகராஜையோ கேட்டால் மயில்சாமி நினைவில் வருவது மெய்க்கீர்த்தி!

Oscars: Academy awards 2013

“‘Zero Dark Thirty’ is an example of a woman’s innate ability to never let anything go.”

இந்த வருட ஆஸ்கார் விருதுகளில் எந்த ஆச்சரியமும் இல்லை. ‘அய்யோ பாவம்’ அனுதாப அலையில் பென் அஃப்லெக்கின் ’ஆர்கோ’ வென்றது. ஜாம்பவான்கள் நிறைந்த துணை நடிகர் பகுதியில் ’ஜாங்கோ அன்செயிண்ட்’ கிறிஸ் வால்ஸ் வென்றார். ‘தி ஹங்கர் கேம்ஸ்’ ஓடுவதற்காக ஜெனிஃபர் லாரென்ஸ்; கதாபாத்திரமாகவே வாழ்வதற்காக டேனியல் டே லூயிஸ்…

இயக்குநரில் மீண்டும் யார் வெல்வார் என்பதில் ’லைஃப் ஆஃப் பை’ ஆங் லீ வென்றது மட்டும் விதிவிலக்கு.

‘நான் முடி வெட்டிக் கொண்டேனாக்கும்’; ‘நான் இருபது கிலோ எடையை குறைத்தேனாக்கும்’; ‘நான் சரிகமபதநிச பாடக் கற்றுக் கொண்டேனாக்கும்’; ‘நான் அழகை கம்மியாக்கி உங்களுக்காக வாழ்ந்தேனாக்கும்’ என்று IIPM அரிந்தம் சவித்ரி போல் சந்தைப்படுத்தியே வென்ற ஆன் ஹாத்வே ஆட்டத்தில் சேர்த்தியில்லை.

விருது வென்றவர்களில் அதிர்ச்சி கலந்த ஆச்சரியம் இருக்காது என்பதால், விழாவைத் தொகுத்தவரை அதிர்ச்சிகள் தர வைத்தார்கள்.

முன்னாள் தொகுப்பாளர்களான ஸ்டீவ் மார்ட்டின் போன்றோர் படு சைவம். தாத்தா/பாட்டியினரை ஆஸ்கார் பார்க்க வரவழைப்பார். ஆனால், பழங்கால தலைமுறையினரால் எதையுமே வாங்க வக்கில்லை. அவர்கள் வேஸ்ட்.

நடுவாந்தரமாக பில்லி கிறிஸ்டலும் ஜான் ஸ்டூவர்ட்டும் தொகுத்து வழங்கலாம். அந்தத் தலைமுறையினர் ஸாம்சங் கேலக்சி எஸ்4 எல்லாம் வாங்குவதில்லை.

குழந்தைகளுக்கான ‘ஹாப்’, ’ஆல்வின் அண்ட் தி சிப்மன்க்ஸ்’ போன்ற படங்களிலும் டிஸ்னியின் இனிப்பான சினிமாக்களிலும் அணிலும் கரடியும் மழலை பேசும். அதே போன்ற பொம்மைக் கரடியை டோப் அடிக்க வைத்தால் எப்படி இருக்கும்? பெரியவர்களின் வசை மொழியும் அலுப்பும் நிறைந்த வாழ்க்கையை சிறுபிள்ளைத்தனமாகவே இருக்கும் பொம்மைக் கரடிக்கு கொடுத்தால் எப்படி இருக்கும்? அதுதான் Ted.

அந்த ‘டெட்’ படத்தை இயக்கி, கரடி பொம்மைக்கு குரல் கொடுத்தவர்தான் இந்த வருட அகாதெமி விருது தொகுப்பாளர்.

பெண்களைக் கிண்டலடிப்பதும், விடலைத்தனமாக ஜொள்ளு விடுவதும், பேசப்பெறாத விவகாரங்களை முகத்திலறைவதும் திரைப்படத்திற்கு பொருந்தும்; ஸ்டாண்ட அப் காமெடியில் பொருந்தும். சுய எள்ளலும் புனிதங்களே அற்ற தன்மையும் பதின்ம வயதினருக்கு எப்பொழுதும் பொருந்தும். எனவே, யூத்திற்கு சேத் மெக்ஃபார்லேன் நகைச்சுவை பிடித்திருக்கும்.

பரிந்துரைப் பட்டியலில் இடம்பிடித்திருந்த பாம்பே ஜெயஸ்ரீ பாடாததை விட இது ஒன்றும் பெரிய குறை அல்ல.

Indian Cartoonist’s Arrest & Free Speech Debate: Recent picks from Newspapers

Cartoons by Aseem Trivedi

A cartoon depicting Sansad Bhavan, the Indian parliament building in New Delhi, as a toilet. By Aseem Trivedi, from cartoonsagainstcorruption.blogspot.co.uk

A depiction of Ajmal Kasab urinating on the Indian constitution. Kasab was the only member of the Pakistani terrorist group that attaced Mumbai in 2008 to be captured. He is currently in Indian custody, sentenced to death. By Aseem Trivedi, from cartoonsagainstcorruption.blogspot.co.uk

Cartoon depicting the Indian parliament building, which contains the Rajya Sabha (upper house) and Lok Sabha (lower house). By Aseem Trivedi, from cartoonsagainstcorruption.blogspot.co.uk

The cartoon, by Aseem Trivedi, that provoked complaints to the police. From cartoonsagainstcorruption.blogspot.co.uk


Asian Age: Here and Now by Sudhir Tailang


Cartoonist Manjul: Column – Irregular at DNA: Daily News and Analysis


Tamil Newspaper Dinamani (Indian Express group): Adade Mathi


The Hindu: Keshav


Ajit Ninan at TOI: Times of India


Hindustan Times: Shreyas Navare


The Indian Express (original – Delhi): Business As Usual by Unny


Satish Acharya: Mid-Day


Mir Suhail Qadiri: Kashmir Reader


Tehelka

Think. And Be Damned

Drawing a dangerous line

‘The arrest of the cartoonist in Bengal, the Internet control laws — this is all part of a shutdown of democratic freedoms we take for granted,’ says Sudhir Tailang

Free Speech or hate speech?: By Mahmood Mamdani

I empathise with those baffled by the rapidly spiralling controversy around the series of cartoons depicting Prophet Muhammad. The cartoons were first published in the Danish paper, Jyllands-Posten, nearly five months ago, in September. The initial protest was limited to Denmark’s Muslim minority but was brushed off by both government and civil society. This is when some of the ultra-conservative Danish imams took up the matter and set off for Saudi Arabia and Egypt with a dossier containing the inflammatory cartoons. Last week came the diplomatic explosion: Saudi Arabia recalled its ambassador in Denmark and Libya shut its embassy. Then followed the boycott of Danish goods, demonstrations, strikes, flag burning, and now fires set to embassies in Damascus and Beirut.

மதன் ஜோக்ஸ் – ரெட்டை வால் ரங்குடு, முன் ஜாக்கிரதை முத்தண்ணா, சிரிப்புத் திருடன் சிங்காரவேலு

எண்பதுகளில் செல்லுபடியானது அரசியல் அளவில் இன்றும் ஏகத்திற்கு பொருத்தமாக இருக்கிறது.

எல்லாமே எப்பொழுது வேண்டுமானாலும் சிரிக்க, சிந்திக்க வைப்பவை.

ஜெயமோகனை சந்தித்த கதை

beto_frota-cashews-Colors-nose-cool-flickr-photos-imagesஇதற்குப் பெயர் சீமான் ஜோக்காம்.

எழுத்தாளர் ஜெயமோகனை சந்தித்த குறிப்புகளை இயக்குநர் சீமானின் நகைச்சுவையைக் கொண்டு துவங்க வேண்டாம்தான். இருந்தாலும் எங்கேயாவது ஆரம்பிக்க வேண்டுமே!

இன்னொன்றும் இருக்கிறது. ஜெமோ சொன்னதில், என் மனதில் என்ன ஏறி நிலைத்து நிற்கிறது என்பதை இதை வைத்துப் புரிந்து கொள்ளலாம். அல்லது இப்படியும் வைத்துக் கொள்ளலாம். ஜெமோவிற்கு ஆளை எடைபோட்டு எவருக்கு என்ன கொடுக்க வேண்டும் என்பதும் தெரியும் எனலாம்.

ஏதோ ஒன்று… சங்கதிக்குப் போயிடலாம்.

இது இஞ்சினீயரிங் முடித்துவிட்டு மணிரத்னத்திற்கு அசிஸ்டென்ட் டைரக்டராக போக விரும்பியவனின் கதை. விதி விளையாட, இராம நாராயணனின் உதவி இயக்குநராகிறான்.

பாம்பு சேஸ்.

Sylvan_Flickr-Snakes-Green-Rama-Narayanan-Moviesஜிகுஜிகுவென்ற பச்சை சட்டைக்காரனை பாம்பு துரத்தோ துரத்தென்று ஓட்டுகிறது. புல் தடுக்கி சகதியில் விழுந்து விடுகிறான். இது திரைக்கதையில் இல்லை. அம்மன் கோவில் வரை சென்றடைய வேண்டும்.

சட்டை மாற்ற அனுப்பி வைக்கிறார் நெறியாளுநர்.

பார்த்தால், இன்னொரு பச்சை சட்டையைக் காணோம். க்ரூப் டான்சுக்கு வாங்கிய மஞ்சள் இராமராஜன் மட்டுமே நிறைய இருக்கிறது. காஸ்ட்யூம்காரருக்கு இயக்குநர் டெக்னிக் தெரியும். பச்சைக்கு பதிலாக மஞ்சள் போட்டு அனுப்பிவிடுகிறார்.

நம்ம அசிஸ்டென்ட் மணிக்கு இராவணன் ஆக வேண்டியவர். விடுவாரா! கண்ணில் விளக்கெண்ணெய் விட்டு கன்டினியூட்டி பார்ப்பவர். ‘சுரேகா! சுலேகா!! ஷிமோகா!!!’ என்று கத்தி முறையிடுகிறார்.

இராமநாராயணன் அவரை ஆற்றுப்படுத்தி, கடகடவென்று காட்சியை சுட்டு முடிக்கிறார்.

“என்னங்க இது… இப்படி பண்ணிட்டீங்க? ஆரம்பத்துல துரத்தறப்ப பச்சை கலரு. இப்போ மஞ்சள். சனங்க லாஜிக்கா கேள்வி கேப்பாங்களே! திரும்ப இன்னொரு நாள் ஷூட்டிங் செஞ்சரணும்”

“அதெல்லாம் டப்பிங்கில பார்த்துப்பேன்”. இது இயக்குநர் சொன்னதாக சீமான் சகபாடிகளிடம் சொல்வது.

வெறுத்துப் போன அசிஸ்டென்ட் தன் வேலையைத் துறந்து இமயமலைக்கு செல்லும் வழியில் அக்ஷர்தாமில் ஐமேக்ஸ் பார்த்துவிட்டு, பட ரிலீஸன்று சென்னை திரும்பி விடுகிறார்.

அந்தக் காட்சியில் டைரக்டர் எப்படி சமாளித்தார் என்னும் ஆவல். பார்க்கிறார். அந்த சேஸிங் சீனும் வருகிறது.

பச்சை சட்டை. துரத்தல்.

“டேய்… நீ சட்டை மாத்தினேனா எனக்குத் தெரியாதுன்னு நெனக்கிறியா!? பச்சசட்டக்காரந்தானே நீயு!” பாம்பு பேசிவிட்டது. மஞ்சள் சட்டை துரத்தல் தொடர்கிறது.

இதுதான் சீமானின் ராமநாராயணன் ஜோக் என்று ஜெயமோகனால் சொல்லப்பட்டதின் பாபாக்கம்.

கொடூர மொக்கை

Irrestible-billboard-Ads-Banners-Posters-Glade-detergent-scent-Catchyநன்றி: குங்குமம்

ஒருத்தருக்கு பெரிய வயறு.

அதுக்காக டாக்டர்கிட்ட போறாரு.

டாக்டர் அவரை சொட்டுநீலம் குடிக்கச் சொல்றாரு.

ஏன்? ஏன்? ஏன்?

ஏன்னா சொட்டு நீலம் குடிச்சா, பல் எல்லாம் நீலமா மாறும். அதாவது ப்ளூடூத்!

ப்ளூடூத்ங்கறது ‘வயர்’லெஸ் ஆச்சே!

Anandha Vikadan Jokes: 1945 Cartoon Fun

ஆனந்த விகடன் நகைச்சுவை - ஜோக்ஸ்: 1945

ஆனந்த விகடன் நகைச்சுவை - ஜோக்ஸ்: 1945

டிராம் காலம்: அந்தக் கால புடைவை விகடன்: நகைச்சுவை

ரெட்டை வால் ரெங்குடு: மதன்: ஆனந்த விகடன்

rettai-vaal-rengudu-madan-ananda-vikadan-jokes

டிராம் காலம்: அந்தக் கால புடைவை விகடன்: நகைச்சுவை

classics-vikadan-av-jokes-old-bus-seat-kids-children

குங்குமம் பிட்ஸ்

1. ‘காஞ்சிவரம்‘ படத்தில் கம்யூனிஸ்ட்களை கொச்சைப்படுத்தியுள்ளதாக குமுறுகிறார்கள் தோழர்கள். நெசவாளர்களின் வாழ்க்கையை பேசும் இந்தப் படத்தில் கம்யூனிஸ்டாக வரும் பிரகாஷ்ராஜூம், அவரது தோழர்களும் சுயநலமிகளாக சித்தரிக்கப்பட்டுள்ளனராம். ‘திரையிடட்டும், ஒரு கை பார்க்கிறோம்’ என்று காத்திருக்கிறார்கள் காம்ரேட்டுகள்.

2. டிக்சனரி

  • டவரு – வளர்ந்து கெட்டவன்
  • புளிப்பு மிட்டாய் – சீரியசாக லவ்வும் அப்பாவி
  • கலக்கல் கலா – ஓவர் மேக்கப் பார்ட்டி
  • அபி – உம்மணாமூஞ்சி
  • கபாலிகான் – ஓவர் சீன் போடுறவன்
  • அஞ்சு பிளேடு – அறுவை பார்ட்டி

3. கே: ஏன் நடக்கமுடியாத கன்னுக்குட்டியை தலைவர்கிட்ட கொண்டு வந்துருக்கீங்க?

ப: அரசியல்ல ‘எதுவும் நடக்கலாம்’னு ஒரு நம்பிக்கைதான்!


4. கே: என்னது? உன் பையனை நடுத்தெருவில் நிக்க வைக்கறதுக்கு ஒரு லட்ச ரூபா லஞ்சம் கொடுத்தியா?

ப: ஆமா! டிராபிக் போலீஸ் வேலை ஆச்சே!


5. கே: எதுக்கு அவரோட வாட்சைத் திருடினே?

ப: அவரோட டயம் நல்லா இருக்குனு கேள்விப்பட்டேன்!


முழுவதும் வாசிக்க: குங்குமம்தினகரன்