இது “Birdman” திரைக்கதை எழுதிய நிக்கொலஸ் Nicolas Giacobone-இன் சமீபத்திய ஆக்கம்.
அதில பட இயக்குநரால் கதாசிரியர் கடத்தப்பட்டு மூலையிடத்தில் அடைக்கப்படுகிறார். படத்தை எழுதி முடித்தால் மட்டுமே விடுதலை கிடைக்கும். அதில் இருந்து குட்டி நறுக்கு கீழே:
திரைக்கதையை எழுதி முடிக்கும்போது, ‘இது பரவாயில்லையே… சுலபமாகத்தானே இருக்கு’னு நினைத்தாலோ, திரைக்கதை எழுதுவதற்கெல்லாம் எந்த சிதம்பர ரகசியமும் கிடையாதுனு சொன்னாலோ, அந்தக் கதை மயிருக்குத்தான் சமானம். நீங்கள் அல்லாட வேண்டும். சுவற்றில் மண்டையை முட்டிக் கொள்ள வேண்டும். இதெல்லாம் எந்த எழவுக்கும் பிரயோஜனம் இல்லையோ என்று நெருநெருக்க வேண்டும். உங்கள் முகத்தை கண்ணாடியில் பார்த்து அந்த முகத்தின் மூடத்தனத்தை உணரவேண்டும்; ஏனென்றால் எல்லோருக்கும் முழுமூட முகங்களே உள்ளன – அவ்வளவு ஏன் மூடத்தனமான கண்களைக் கொண்டுள்ளோம். வாரத்திலொரு முறையாவது பைத்தியம் போல் விழுந்து விழுந்து சிரிக்க வேண்டும். நீங்கள் அழவேண்டும். எழுதியதைப் படித்தவுடன் அழவேண்டும் – காட்சிகள் சோகமாக இருப்பதால் அல்ல; அவை படுமோசமாக இருப்பதால். மணிக்கணக்கில், நாள்கணக்கில், மற்ற தொழில்கள் செய்வதை கற்பனை செய்து பார்க்கவேண்டும். மணிக்கணக்காக பெருஞ்சாமங்கள் செலவழித்து தகுதியான சால்ஜாப்புகளை பொய்யாகவேனும் தோற்றுவித்து தோல்விகளை நியாயப்படுத்திக் கொள்ள வேண்டும்.
அனேக படத்தின் துவக்கத்திலும் பேசுவார். “என் இனிய தமிழ் மக்களே…”
தன்னுடைய உதவியாளர்களை உருவாக்கி, குறிப்பிடத்தக்க இயக்குனர்களாக ஆக்கியது முக்கிய சாதனை. பாசறை, பட்டறை என துணை இயக்குநர்கள் தங்களை பாரதிராஜா கேம்ப் என அழைத்துக் கொண்டனர்.
நாயகன் சம்பந்தப்பட்ட படங்களே எங்கும் நிறைந்திருந்தபோது, பெண்களை முக்கியப்படுத்தும் ஆக்கங்களைத் தொடர்ந்து வழங்கியவர்.
ர வரிசை பெயர்களை தன் கதாநாயகிகளுக்குத் தொடர்ந்து வழங்கி வந்தவர்.
இவரை காப்பியடிக்கும் எண்ணத்துடன் ஸ்டெல்லா மேரீஸ் வாசலிலும் இராணி மேரி கல்லூரி வாயிலிலும் தங்களின் ஹீரோயினுக்காக தவமிருந்தவர்கள் எக்கச்சக்கம்.
மணி கௌல், ரிஷிகேஷ் முகர்ஜி, அடூர் கோபாலகிருஷ்ணன், குரு தத், மிருனாள் சென், ஷியாம் பெனகல் போல் இல்லாவிட்டாலும் நம்ம ஊர் நாயகர்
ஒளிப்பதிவாளர்கள் – நிவாஸ், பி கண்ணன்
படத்தொகுப்பாளர்கள் – பாஸ்கரன், டி திருநாவுக்கரசு, சண்டி, வி இராஜகோபால், பி மோகன் ராஜ்
எழுத்தாளர்கள் – மணிவண்ணன், ரங்கராஜன், சந்திரபோஸ், கலைமணி, பஞ்சு அருணாச்சலம், ஆர் செல்வராஜ், கே சோமசுந்தரேஷ்வர், கே கண்ணன், சுஜாதா ரங்கராஜன், எம் ரத்தினகுமார், சீமான்
அரசியல், மகன், போன்ற திசைதிருப்பல்களும் இடையூறுகளும் இல்லாவிட்டாலும், அமிதாப் போல் நல்ல நடிகராகவும் கிடைத்திருப்பார்.
பாலு மகேந்திரா குறித்து சுஜாதா எழுதியது ஆழமாகப் பதிந்திருப்பதற்கு காரணம், அதில் இருக்கும் ஹீரோயினும் என்னுடைய ஆதர்சம் என்பதால் கூட இருக்கலாம். அதை விட வம்பு என்பதால் இருக்கலாம் என்பதை ஒப்புக் கொள்ள என்னுடைய சுய பிம்பம் மறுக்கிறது.
உதவி இயக்குநர்கள், நண்பர் குழாம், வாத்தியார் சுஜாதா என ஜமாபந்தியான கூட்டம். பாலு மகேந்திரா நடு நாயகமாக வீற்றிருக்கிறார். சுவாரசியமான அரட்டை. திடீரென்று ஹோட்டல் அறை படாரென்று திறக்கப்படுகிறது. மெல்லிய தட்டல் இல்லை; ‘உள்ளே வரலாமா’ அனுமதி கோரல் இல்லை. உள்ளே நுழைந்தவர் எவரையும் கவனிக்கவில்லை. நேரடியாக பாலுமகேந்திராவின் மடியில் சென்று அமர்கிறார். எல்லோருக்கும் சங்கடம். பேச்சு அமைதியாகிறது.
பாலுவும் “நான் இதோ வந்திடறேன். நீ உன் அறைக்குப் போ…” எனக் கெஞ்சுகிறார். அமர்ந்தவரோ அதை பொருட்படுத்தாமல், பாலு மகேந்திராவின் தாடையைக் கொஞ்சுகிறார். காதைக் கிள்ளுகிறார். கன்னத்தில் உரசுகிறார். ஒவ்வொருவராக இருக்கையை விட்டு நெளிந்து கொண்டே விலகத் துவங்குகிறார்கள். இப்பொழுது அலட்டலாக பாலு, “இப்போ இங்கே உனக்கென்ன வேலை? எங்களோட பேசணும்னா அந்தச் சேரை இழுத்துப் போட்டு உட்கார். இங்கிய விட்டு எந்திரி!” என்கிறார். அவளோ கண்டு கொள்ளவேயில்லை.
தர்மசங்கடத்தில் சுஜாதா விடை பெறாமல் வந்ததற்கான காரணம் நடிகை ஷோபா. அஞ்சலி.
மௌனிகாவும் என் மனைவி தான். இந்த இடத்தில் மௌனியைப் பற்றியும், எனக்கும் அவளுக்குமான உறவு பற்றியும் நான் கொஞ்சம் விரிவாகப் பேசவேண்டியிருக்கிறது. மௌனிக்கும் எனக்குமான உறவு ஒரு நடிகைக்கும், டைரக்டருக்குமான படுக்கையறை சம்பந்தப்பட்ட உறவு என்றுதான் பலர் நினைப்பார்கள். ஆனால், உண்மை அதுவல்ல!
ஏறக் குறைய இருபது வருஷங்களுக்கு முன் ஆரம்பித்த உறவு அது. இனியும் எதையும் நான் மறைப்பதற்கில்லை. ரொம்பவும் உடைந்துபோன ஒரு தருணத்தில், நான் உங்ககூடவே இருந்திரட்டுமா? என்று கண்கலங்கி நின்ற, அந்த சின்னப் பெண்ணுக்குப் புரியும்படி புத்திமதி சொல்லி, அந்த உறவை நான் முளையிலேயே கிள்ளிப் போட்டிருக்க வேண்டும். ஏனோ, அதை நான் செய்யவில்லை.
எனது ஷோபா பற்றிய ஒரேயொரு பதிவை மட்டும் உங்களோடு பகிர்ந்துகொண்டு நிறுத்திக் கொள்கிறேன். ஒரு மழைக் காலைப் பொழுது. குளித்துப், பூஜை முடித்து, அவளுக்குப் பிடித்தமான காட்டன் புடவையும், காலணா சைஸ் பொட்டும், ஈரத் தலையுமாக வந்து உட்கார்ந்தவளைப் பத்திரிகை நிருபர் ஒருவர் பேட்டி கண்டுகொண்டிருந்தார்.
அவர்கள் பேசுவது காதில் விழாத தொலைவில் உட்கார்ந்து நான் எதோ படித்துக்கொண்டிருந்தேன். அன்றைய பேட்டி அடுத்த வாரமே பிரசுரமாகியிருந்தது.
அதில் ஒரு கேள்வி: மற்றவர்கள் ஒளிப்பதிவில் படு சுமாராகத் தெரியும் நீங்கள் பாலு சார் ஒளிப்பதிவில் பேரழகியாகத் தோன்றுகிறீர்களே… எப்படி இது…?
ஷோபா சொல்லியிருந்த பதில்: “மற்றவர்கள் என்னை காமிரா, லைட்ஸ், மற்றும் ஃபிலிம் கொண்டு ஒளிப்பதிவு செய்கிறார்கள். எங்க அங்கிள் என்னைக் காமிரா, லைட்ஸ், மற்றும் ஃபிலிம் இந்த மூன்றோடும் நிறையப் பாசத்தையும் குழைத்து ஒளிப்பதிவு செய்கிறார். அவர் ஒளிப்பதிவில் நான் பேரழகியாக ஜொலிப்பதற்கு இதுதான் காரணம்.”
எடக்குமுடக்கான கேள்வி ஒன்றிற்கு ஷோபா சொல்லியிருந்த ஸ்பொன்டேனியசான பதிலில் தென்பட்ட அவரது அறிவுக் கூர்மை என்னைப் பிரமிப்பில் ஆழ்த்தியது.அதே போழ்தில், அவர்மீது நான் வைத்திருந்த அளவுகடந்த பாசத்தைப் பகிரங்கமாக மரியாதைப்படுத்துவதில் அவருக்கிருந்த ஆர்வம் என்னை நெக்கி நெகிழ வைத்தது.
என்ன செய்வதெனப் புரியாமல் தவித்தேன். ‘அம்மா இங்க வாங்க…’ என அழைத்தேன். அகிலாம்மாவும் டைரக்டரும் அவர்களுக்குள் பெரிதாகப் பேசிக்கொள்வது இல்லை அப்போது. ‘ந்தா போதும் போதும் உங்க சண்டை… புருஷனும் பொண்டாட்டியும் மொதல்ல நல்லா லவ் பண்ணுங்க…’ என்றதும் டைரக்டர் சிரித்துவிட்டார்.
நாலைந்து நாட்களுக்குப் பிறகு, டிஸ்சார்ஜ் செய்துவிட்டனர். சார் நார்மலாக இருந்தார். சரியாக 10-வது நாள் அதிகாலை 4 மணி… ஏனோ தூங்கப் பிடிக்காமல் அவஸ்தையான ஒரு மனநிலையில் அமர்ந்திருந்தபோது, அகிலாம்மாவிடம் இருந்து போன். பதறியபடி எடுத்தேன்… ‘உடனே ஆஸ்பத்திரிக்கு வாப்பா’ என்றார். வண்டி எதுவும் கிடைக்காமல், ஜெமினி மேம்பாலம் வரை ஓடி, கிடைத்த ஆட்டோ ஒன்றில் தொற்றிப் போய்ச் சேர்ந்தேன்.
அவள் பெயர் செல்வராணி என்று நினைக்கிறேன். ஒரு முப்பது முப்பத்தைந்து வயது இருக்கும். காதலன் வெளிநாட்டுக்கு அகதியாக போனவன். விசா கிடைக்கவில்லை. வருடக்கணக்காயிற்று. நாடு திரும்பமுடியாது. அவன் கடிதங்கள் வீட்டில் குவிந்துகிடக்கின்றன. தனிமையும் வயதும் பிரிவையும் தாண்டி தாபத்தை தூண்டுகிறது. காமத்துப்பாலில் பிரிவித்துயரால் வருகின்ற அத்தனை உடல் உபாதைகளும் செல்வராணிக்கு ஏற்படுகிறது. கட்டுப்படுத்த முடியவில்லை.
1970களில் வெளியான மலையாளப் படமான ” நெல்லு”வில் முதன் முதலில் ஒளிப்பதிவாளராக வாய்ப்புக் கிடைத்தது. அந்தப் படம் அவருக்குக் கேரள அரசின் சிறந்த ஒளிப்பதிவாளர் என்ற விருதை பெற்றுத்தந்தது.
பின்னர் பல மலையாளப் படங்களில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிய பாலு மகேந்திராவுக்கு, கன்னடப் படமான “கோகிலா”வின் மூலம் தேசிய விருதும் கிடைத்தது.
தமிழ்த் திரையுலகுக்கும் ஜே.மகேந்திரனின் “முள்ளும் மலரும்” படம் மூலம் அறிமுகமாகிய பாலு மகேந்திரா, 1979ல், தனது இயக்கத்தில் ” அழியாத கோலங்கள்” படத்தைத் தந்தார்.
பின்னர் தெலுங்கு திரைப்படங்களிலும் பணியாற்றிய பாலு மகேந்திரா, தமிழ்த் திரையுலகில், ‘மூடுபனி’, ‘மூன்றாம் பிறை’ ‘ நீங்கள் கேட்டவை’, ‘ரெட்டைவால் குருவி’, ‘வீடு’ ‘ மறுபடியும்’ , ‘சதி லீலாவதி’ போன்ற படங்களைத் தந்தார்.
அவரது படமான ‘மூன்றாம் பிறை’ சிறந்த ஒளிப்பதிவாளர் என்ற தேசிய விருதையும் அவருக்குப் பெற்றுத்தந்தது. மேலும் அந்தப் படம் ஹிந்தியிலும் ‘சத்மா’ என்ற பெயரில் மறு ஆக்கம் செய்யப்பட்டது.
Cofee with Anu at Star Vijay TV – Balu Mahendra part 1
Cofee with Anu at Star Vijay TV – Balu Mahendra part 2
Cofee with Anu at Star Vijay TV – Balu Mahendra part 3
Cofee with Anu at Star Vijay TV – Balu Mahendra part 4
Cofee with Anu at Star Vijay TV – Balu Mahendra part 5
Director Balu mahendra talking about Tamiliam Subas`s short film Vanni Mouse on Makkal TV “Ten Minute Stories”
Balu Mahendra – An Era: STAR Vijay
Balu Mahendra – The Legendary Era Of Indian Film: Puthu Yugam TV
Balu Mahendra about Vaali -Vaali Birthday Special
New Year Special : Thalaimuraigal with Director Balu Mahendra
Director Balu Mahendira Special In Rewind Ep-64 Dt 06-10-13
Thalaimuraigal Tamil Movie Press Meet | Balu Mahendra
இயக்குனர் பாலு மகேந்திரா – நினைவுக் கூட்டம் நாள்: 23-02-2013, ஞாயிறு
இடம்: கோல்டன் ஜூப்ளி ஆடிட்டோரியம், சென்னை பல்கலைக் கழக மெரினா வளாகம், வள்ளுவர் சிலை எதிரில், எழிலகம் அருகில்.
நேரம்: மாலை 5.30 மணிக்கு.
நினைவை பகிர்பவர்கள்:
கவிஞர் & ஆவணப்பட இயக்குனர் ரவி சுப்பிரமணியம்
ஆவணப்பட இயக்குனர் அம்ஷன் குமார்
எழுத்தாளர் சந்திரா
எழுத்தாளர் தமயந்தி
தயாரிப்பாளர் UTV தனஞ்செயன்
பத்திரிகையாளர் ஞாநி
எழுத்தாளர் பவா செல்லத்துரை
எழுத்தாளர் மாலன்
ஒவியார் ட்ராட்ஸ்கி மருது
எழுத்தாளர் சா. கந்தசாமி
இயக்குனர் தாமிரா
எழுத்தாளர் & நடிகர் வ.ஐ.ச. ஜெயபாலன்
நடிகை ரோகினி
எழுத்தாளர் பிரபஞ்சன்
நடிகர் நாசர்
எழுத்தாளர் கவுதம சித்தார்த்தன்
ஒளிப்பதிவாளர் (திரைப்படக் கல்லூரி) ஜி.பி. கிருஷ்ணா
பத்திரிகையாளர் அசோகன் அந்திமழை
ஒளிப்பதிவாளர் சி.ஜெ. ராஜ்குமார்
ஒளிப்பதிவாளர் வைட் ஆங்கில் ரவிசங்கர்
எழுத்தாளர் கே.வி.ஷைலஜா
இயக்குனர் வஸந்த்
கல்வியாளர் எஸ்.கே.பி கருணா
கலரிஸ்ட் சிவராமன் (பிரசாத் லேப்)
எடிட்டர் லெனின்
ஒளிப்பதிவாளர் தேனீ ஈஸ்வர்
இயக்குனர் வெற்றிமாறன்
பாடலாசிரியர் ந. முத்துக்குமார்
ஒருங்கிணைப்பு: கன்னடத் துறை, சென்னைப் பல்கலைக் கழகம் & தமிழ் ஸ்டுடியோ & வம்சி புக்ஸ்
1. தமிழ் வணிகசினிமா பற்றிய ஒரு இளக்காரமான பார்வை பொதுவாக அறிவுஜீவிகளிடம் உள்ளது. என்னிடமும் இருந்தது. ஆனால் உலகமெங்கும் உள்ள வட்டாரசினிமாக்களை ஹாலிவுட் சினிமா முற்றாக அழித்து அம்மக்கள் தங்களுக்குள் பேசிக்கொள்ளும் வெகுஜன ஊடகமாக சினிமா அமையாமல் ஆக்கிவிட்டிருக்கிறது. அந்த அபாயத்தை சமாளித்து இங்கே தமிழ் வணிகச்சினிமா வெற்றிகரமாக இருப்பதே ஒரு பண்பாட்டுச்சாதனை. அது,தொடர்ச்சியான ஃபீட் பேக் மெக்கானிசம் மூலம் உருவாக்கப்பட்டது. ஆகவே தமிழ்ச்சமூகத்தின் சராசரியால் உருவாக்கப்பட்டது அதன் தரம்.
2 இக்காரணத்தால் தமிழில் சராசரிக்கு மேலான ஒரு தளத்தில் படங்கள் வரமுடியவில்லை. அப்படி ஒரு படத்தை உருவாக்கும் முயற்சிகள் பல நடக்கின்றன. அதன்விளைவாக உருவான ஒன்றே குறும்பட இயக்கம். அதற்குப் பொருளியல் சுமை இல்லை என்பதனால் அது சுதந்திரமாக இயங்க முடியும் என்ற நிலை இருந்தது. ஆனால் நடைமுறையில் அது வெற்றியா என்ற தயக்கம் இருக்கிறது. ஆரம்பத்தில் குறும்படங்கள் மீது இருந்த எதிர்பார்ப்பு இல்லை இப்போது.
3 . காரணங்கள் இரண்டு. இந்தப் படங்களிலேயே அவை தெரிகின்றன. ஒன்று இலக்கியவாசிப்போ, அறிமுகமோ இல்லாதவர்களால் இப்படங்கள் எடுக்கப்படுகின்றன. ஆகவே கதைக்கருவிலும் வாழ்க்கை அவதானிப்புகளிலும் ஒரு முதிர்ச்சி இல்லை மிகச் சாதாரணமான கதைகளைச் சாதாரணமாக எடுக்கிறாகள். இந்தக்குறும்படங்களின் கதைகளைக் குமுதம் கூட வெளியிடுமா என்பது சந்தேகமே. பெரும் சிறுகதைச்சாதனைகள் நிகழ்ந்த ஒரு மொழியில் இத்தகைய படங்கள் வருவதை நாம் ஒரு சரிவு என்றே நினைக்கவேண்டும். இரண்டாவதாக இப்படங்கள் குறைந்த நேர அளவுள்ள, சிறிய சட்டகம் கொண்ட படங்கள். இதற்கான ஒரு திரைமொழி , திரைக்கதை வடிவம் உருவாக்கப்படவேண்டும். ஆனால் பெரிய படங்களின் அதே திரைமொழி, அதே திரைக்கதை உத்தியில் இவை எடுக்கப்படும்போது பார்வையனுபவம் சிறப்பாக அமைவதில்லை.
ஏறத்தாழ முப்பது பேர் பார்வையாளர்கள். மூன்று நபர்கள் கொண்ட ஜூரி.
தமிழ் வணிக சினிமாவை நிராகரித்துப் பேச முடியாது. தமிழ்ப்படங்கள் என்பது ஒரு பண்பாட்டு உரையாடல். அவை சராசரி மனிதர்களுடன் பேசக்கூடியவை. ஆவரேஜ் ஆளுக்காகத்தான் படமெடுக்க முடியும். எதிர்காலத்தில் கலைப்படங்கள் காலூன்றலாம். ஆனால், இன்றைக்கு அந்த நிலை கிடையாது.
பகுதி ஒன்று
* உணவு: பெரிய சாப்பாட்டு மேஜை. அயிரம் பேர் உண்ணக் கூடிய விருந்து போன்ற அயிட்டங்கள் காட்டப்பட வேண்டும். பார்வையாளனுக்கு பசியாக இருக்கலாம். கல்யாண சாப்பாடு தேவையிருக்கலாம். அதைத் தீர்க்க வேண்டும்.
* ஆடை, அணிகலன்: நாயகி தன்னுடைய டிரெஸரைத் திறந்து நூற்றுக்கணக்கான புடைவையை அலசுவாள். அவற்றில் இருந்து ஒன்றைத் தேர்ந்தெடுப்பாள். சினிமா பார்ப்பவனுக்கு அத்தனை புடவை எடுத்து தர முடியாது. பார்ப்பவளுக்கு இந்த மாதிரி சாய்ஸ் இருப்பது போல் கற்பனை தருவதற்கு சரோஜாதேவியும் ஜெயலலிதாவும் இவ்வ்வாறு செலக்சன் செய்ய வேண்டும்.
* இடம், லொக்கேஷன்: ஒவ்வொரு ஊரில் ஒவ்வொரு கலாச்சாரம். அனைத்து ஊர்களிலும் பிடிக்குமாறு புரியுமாறு எடுக்க வேண்டிய தேவை இருக்கிறது. சென்னையில், சின்னாளப்பட்டியில், சிகாகோவில், ஸ்கார்பரோவில் என்று எல்லா இடத்திற்கான சராசரி விருப்பங்களை உள்ளடக்கி எடுக்கிறார்கள்.
* ரிலாக்ஸேஷன்: இரண்டே கால் மணி நேரம் படம் ஓட வேண்டும். சினிமாவிற்கு கிளம்புவதற்கு பெரிய விஷயம். அந்தளவு சிரமப்பட்டு வருபவர்கள், டக்கென்று எண்பது மணித்துளிகளில் முடித்து அனுப்ப முடியாது.
* வணிக சினிமா: காதல் இல்லாத தமிழ் சினிமா எடுபடாது; எடுக்கணும்னு அவசியம் இல்ல. தமிழகச் சூழலில் காதல் செய்யும் வாய்ப்பு இல்லாததால் ஈடேற்றம் செய்வதற்கு இளமையும் காதலும் சினிமாவில் நிறைவேற்றுகிறது.
பகுதி இரண்டு
* சிறு பத்திரிகைக்காரன்: நா பார்த்தசாரதி, அகிலன், கல்கி எல்லாம் வணிக எழுத்தாளர்கள். அவர்கள் மட்டுமே புகழ் பெற்று விளங்கிய காலம் உண்டு. இன்று வெகுசன இலக்கியம் அல்லாதவர்கள்தான் புகழ் பெற்றவர்களாக இருக்கிறார்கள். நான் சிறுபத்திரிகைக்காரன். இன்று மைய எழுத்தாக விளங்குகிறேன். அது போல் குறும்படக்காரர்களும் மெயின் நீரோட்டத்தை நிர்ணயிப்பவர்களாக ஆகலாம்.
* இலக்கிய வாசிப்பு: கதைகளை தேர்தெடுக்கும்போது எண்ணங்களை மையமாக வைக்காமல், சிறப்பான சிறுகதைகளை எடுத்துக் கொள்ளலாம்.
கலியுகம் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் முதலில் பேசிய கவிஞர் அறிவுமதி, மனுஷ்யபுத்திரன் குங்குமத்தில் வழக்கு எண் படத்தை துவைத்து காயப்போட்டுவிட்டதாக குறைபட்டுக் கொண்டார். இதுபோல் மனுஷ் போன்ற இலக்கியவாதிகளே செய்தால், அடுத்து வரும் தயாரிப்பாளர்களும் வர மாட்டார்கள்.. இது தமிழ்ச் சினிமா துறையின் வளர்ச்சியையே பாதிக்கும். அது மிக அருமையான படம் என்று சொன்னார்.
படம் முழுக்க புடைவை மட்டுமே கட்டி வரும் ஜெயப்பிரதாவில் ஆரம்பிக்கலாம். வெற்றியடைந்த ஒவ்வொரு மனிதனுக்குப் பின்னாலும் ஒருத்தி இருப்பாள். ஜெயலலிதா பின்னால் கூட சசிகலா இருக்கிறார். ராசாவிற்கு பின் கனிமொழி. ஜயப்பிரதா பிறிதொருவருடன் சென்று விட்டதால் – கமல், (படத்தில் நடன மேதை பாலு) வாழ்வில் தோல்வி அடைகிறார்.
எண்பதுகளை பிரதிபலிக்கும் படம். இன்றும் சுப்பிரமணியபுரத்தைக் கொஞ்சுகிறோம். இந்தப் படம் 83ல் வந்ததால், அந்த ஆண்டு தோட்டா தரணி சாமான் செட் கலாச்சாரங்களை முகர வைக்கிறது.
இயக்குநர் விஸ்வநாத்தின் சிப்பிக்குள் முத்து, சங்கராபரணம் போன்ற பிற படங்களை மீண்டும் பார்த்தால் கவரலாம். ஆனால், இதில் சின்ன விஷயங்களில் நகாசு செய்திருக்கிறார். விமர்சனங்களைப் படபடப்பாக நகம் வெட்டியுடன் பார்க்கும் ஷைலஜா, பாலுவின் எழுத்தைப் பார்த்தவுடன் கடிக்க ஆரம்பிப்பது அந்த மாதிரி ஒரு ரகம். மாதவியின் புருஷன் (பாஸ்கர் – லஷ்மியின் முதல் கணவர்?) காபி கொடுக்கும்போது தர்மசங்கடமாய் நிலம் பார்க்கும் தருணம் இன்னொரு சாம்பிள். சரத்பாபுவின் பாடல்வரி, கமலின் இசை + நடன கோர்ப்பு, ஜெயப்பிரதாவின் ஒருங்கிணைப்பு என சொல்ல நினைக்கும்போது கையை வாய்க்கு கொண்டுபோகும் தற்செயலாக மற்றொரு இயல்புத்தனம்.
கதாநாயகியைப் பற்றி எழுதாவிட்டால் அடுக்காது. (ஏற்கனவே எழுதிட்டேனோ?) தெலுங்குப் படங்களில் ஹீரோயின்களை எப்பொழுதுமே அழகாக்கி இருக்கிறார்கள். காதில் ஜிமிக்கி, மைக்கேல் ஃபெல்ப்ஸ் தங்கம் வெல்ல நீஞ்சுவது போல் அகல விரியும் ஐடெக்ஸ் மை போட்ட இமை, கேசவர்த்தினி கூந்தல், அந்தக் கறுப்பை நிறைத்து டிவியில் இருந்தும் வாசம் வரவைக்கும் மல்லிகைப்பூ, காதின் முன் எட்டிப் பார்க்கும் இரண்டே இரண்டு சுருள்முடி, தரையைப் பெருக்குமோ என வியக்க வைக்கும் ஆளுமை தரும் டிசைனர் சாரியை மிஞ்சும் பாந்தம் – அமர் சிங் சும்மாவா கவுந்தார் என்று ஆச்சரியப்பட வைக்காத நிவாஸின் கேமிரா.
டப்பிங் மாந்தர்களின் பெயர்களைப் போடாதது பெருங்குறை. மூன்றாம் கட்ட நடிகர் எல்லோருக்கும் மைக் மோகனின் பினாமி சுரேந்தர் குரல் கொடுத்திருக்கிறார். ஜெயப்பிரதாவிற்கு? ஸ்ரீதேவி மாதிரி படுது.
தமிழ்ப்படம் என உணரவைக்கும் பஞ்சு அருணாச்சலம் வசனங்கள்.
‘ஆலோசனைய வச்சுகிட்டு என்ன செய்யறது? அத அப்படியே செயல்படுத்த வாய்ப்பு வேணும்!’
‘நாட்டியம் கத்துக்கவே இவனுக்கு நேரம் சரியாப் போயிடும். நாம இங்கே சமையற்கட்டிலயும், கல்யாண சமையல்லயும் எண்ணெய்ப் புகையிலயும் நம்ம காலம் முடிஞ்சுடும். இன்னொரு ஜென்மம் எடுத்து, அவன் நாட்டியத்துல கரை கண்டு, அவன் ஆடுவான்… நாம பார்க்கலாம்.’
இவர்களெல்லாம் உபதெய்வங்கள். இன்னும் மூணு பேர் இருக்கிறார்கள். அவர்கள் மும்மூர்த்திகள்.
1. இளையராஜா
கண்ணை மூடிக் கொண்டு ஒரு தடவை படம் பாருங்களேன்.
2. கமலஹாசன்
நண்பனைப் பாடி அழைக்கிறார். உக்கிரமாக நடனம் ஆடுகிறார். நாயகன் மாதிரி அழத் தெரியாமல் அழாமல், கே விச்வநாத் சொன்ன பேச்சைக் கேட்டு அடக்கி வாசித்திருக்கிறார்.
3. எஸ் பி ஷைலஜா
அண்ணன் பாடினாலும், இவங்கதானே sole வில்லி?
ஆனாக்க… எல்லாத்துக்கும் கில்லாடி திரைக்கதையாளர் விஸ்வநாத். ஒவ்வொரு சீனும் உங்களுக்கு நினைவிருக்கும்.
இது ரகு (சரத்பாபு) & பாலு (கமல்) நட்புக்கான கற்பைப் பற்றிய படமா?
When Harry met Sallyஆக ஆணுக்கும் பெண்ணுக்கும் ஆன உறவை ஆராய்கிற படமா?
கணவனை இழந்த தாய்க்கும் பதின்ம வயதுக் குழப்பத்தில் இருக்கும் மகளுக்கும் இடையேயான சிக்கல்களைப் பேசுகிற படமா?
அம்மாவை அண்ணியிடமும் காதலியிடமும் சிஷ்யையிடமும் தேடுபவனைப் பற்றிய படமா?
இறுதிப்போட்டி மட்டும் பார்த்தேன். வருங்காலத்தின் முக்கிய இயக்குநராகக் கூடிய ஆறு பேரின் படங்களில் இரண்டுதான் தேறும்.
ஷங்கர், பிரதாப் போத்தனை வழிமொழிந்து மதனும் ‘ஆடு புலி ஆட்டம்‘, ‘நீர்‘ எல்லாம் நன்றாக இருக்கிறது என்றார்கள். Either they have lost their taste buds or their compensation makes them talk like desis behaving at NRI clients.
கே எஸ் கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் தேங்கார் ஸ்ரீனிவாசன் நாயகனாக வரும் எழுபதுகளை நினைவூட்டியது ‘ஆடு புலி ஆட்டம்‘. இந்த மாதிரி கொடுமை இயக்குநர் நாளை வரப்போகிறார் என்பதே பத்து பியர் அருந்த வைக்கும்.
தெருவெங்கும் கோவிந்தா போட்டு உருள்வது போல் கையில் இலங்கை குண்டுவெடிப்பு அனுதாப உண்டியல் குலுக்கியது ‘நீர்‘. அண்ணனுக்கும் தம்பிக்கும் இருக்கும் சகோதர பாசத்தை பாசமல்ர் பீம்சிங் பாதம் தொட்டு ரீமேக் செய்திருந்தார்.
‘மிட்டாய் வீடு’ தேவலாம். சரியான சிக் ஃப்ளிக். ஜூனியர் பாலச்சந்தர் மாதிரி மனதைத் தொட்டார். விஜய் பட டைரக்டராவது லட்சியமாகக் கொண்டவர் போல… நடுநடுவே சூப்பர் ஸ்டார் படம் வேறு போடுகிறார்.
முதல் வார விமர்சனங்களை சுரேஷ் கண்ணன்ஒரு கை பார்த்துவிட்டார்.
இந்த வாரம் கச்சத்தீவு கண்ணீர் என்றால், சென்ற வாரம் பார்வையற்றோர் வைத்து சென்டிமென்ட்.
எல்லாப் படங்களையும் ஏற்கனவே பார்த்த மாதிரி வேறு இருந்து தொலைக்கிறது. ‘துரு‘ மிக நன்றாக இருந்தது என்றார்கள். பார்க்க வேண்டும்.
நளன் & பாலாஜி தேவலாம். பின்னவர் ‘மொழி’ மாதிரி பிரகாஷ்ராஜ் காவியங்களும் முன்னவர் கிரேசி மோகன் துணையுடனும் உலா வரவும், மற்றவர்கள் எல்லாம் ‘சென்னை சில்க்’சுக்கும் சந்தூர்க்கும் விளம்பரம் இயக்கப் போகவும் அனுப்பிவைத்து எம்மை இரட்சிக்க எல்லாம் வல்ல கலைஞரிடம் விண்ணப்பிக்கிறேன்.
எழுத்தாளர் ஜெயமோகனை சந்தித்த குறிப்புகளை இயக்குநர் சீமானின் நகைச்சுவையைக் கொண்டு துவங்க வேண்டாம்தான். இருந்தாலும் எங்கேயாவது ஆரம்பிக்க வேண்டுமே!
இன்னொன்றும் இருக்கிறது. ஜெமோ சொன்னதில், என் மனதில் என்ன ஏறி நிலைத்து நிற்கிறது என்பதை இதை வைத்துப் புரிந்து கொள்ளலாம். அல்லது இப்படியும் வைத்துக் கொள்ளலாம். ஜெமோவிற்கு ஆளை எடைபோட்டு எவருக்கு என்ன கொடுக்க வேண்டும் என்பதும் தெரியும் எனலாம்.
ஏதோ ஒன்று… சங்கதிக்குப் போயிடலாம்.
இது இஞ்சினீயரிங் முடித்துவிட்டு மணிரத்னத்திற்கு அசிஸ்டென்ட் டைரக்டராக போக விரும்பியவனின் கதை. விதி விளையாட, இராம நாராயணனின் உதவி இயக்குநராகிறான்.
பாம்பு சேஸ்.
ஜிகுஜிகுவென்ற பச்சை சட்டைக்காரனை பாம்பு துரத்தோ துரத்தென்று ஓட்டுகிறது. புல் தடுக்கி சகதியில் விழுந்து விடுகிறான். இது திரைக்கதையில் இல்லை. அம்மன் கோவில் வரை சென்றடைய வேண்டும்.
சட்டை மாற்ற அனுப்பி வைக்கிறார் நெறியாளுநர்.
பார்த்தால், இன்னொரு பச்சை சட்டையைக் காணோம். க்ரூப் டான்சுக்கு வாங்கிய மஞ்சள் இராமராஜன் மட்டுமே நிறைய இருக்கிறது. காஸ்ட்யூம்காரருக்கு இயக்குநர் டெக்னிக் தெரியும். பச்சைக்கு பதிலாக மஞ்சள் போட்டு அனுப்பிவிடுகிறார்.
நம்ம அசிஸ்டென்ட் மணிக்கு இராவணன் ஆக வேண்டியவர். விடுவாரா! கண்ணில் விளக்கெண்ணெய் விட்டு கன்டினியூட்டி பார்ப்பவர். ‘சுரேகா! சுலேகா!! ஷிமோகா!!!’ என்று கத்தி முறையிடுகிறார்.
இராமநாராயணன் அவரை ஆற்றுப்படுத்தி, கடகடவென்று காட்சியை சுட்டு முடிக்கிறார்.
“என்னங்க இது… இப்படி பண்ணிட்டீங்க? ஆரம்பத்துல துரத்தறப்ப பச்சை கலரு. இப்போ மஞ்சள். சனங்க லாஜிக்கா கேள்வி கேப்பாங்களே! திரும்ப இன்னொரு நாள் ஷூட்டிங் செஞ்சரணும்”
“அதெல்லாம் டப்பிங்கில பார்த்துப்பேன்”. இது இயக்குநர் சொன்னதாக சீமான் சகபாடிகளிடம் சொல்வது.
வெறுத்துப் போன அசிஸ்டென்ட் தன் வேலையைத் துறந்து இமயமலைக்கு செல்லும் வழியில் அக்ஷர்தாமில் ஐமேக்ஸ் பார்த்துவிட்டு, பட ரிலீஸன்று சென்னை திரும்பி விடுகிறார்.
அந்தக் காட்சியில் டைரக்டர் எப்படி சமாளித்தார் என்னும் ஆவல். பார்க்கிறார். அந்த சேஸிங் சீனும் வருகிறது.
பச்சை சட்டை. துரத்தல்.
“டேய்… நீ சட்டை மாத்தினேனா எனக்குத் தெரியாதுன்னு நெனக்கிறியா!? பச்சசட்டக்காரந்தானே நீயு!” பாம்பு பேசிவிட்டது. மஞ்சள் சட்டை துரத்தல் தொடர்கிறது.
இதுதான் சீமானின் ராமநாராயணன் ஜோக் என்று ஜெயமோகனால் சொல்லப்பட்டதின் பாபாக்கம்.
“Corporations have neither bodies to be punished, nor souls to be condemned, they therefore do as they like”
– Edward, First Baron Thurlow1731-1806
நர்மதாவுக்கு மேதா பட்கர் கிடைத்த மாதிரி நைசீரியாவின் ஒகொனி பழங்குடியினருக்கு இராணுவ அரசு இழைக்கும் அராஜகங்களைத் தட்டி கேட்கிறார் கென்.
நைஜீரியாவின் எண்ணெய் பிரச்சினைகளை சுட்டிக் காட்டி கென் சாரோ விவா பத்திரிகையில் எழுதுகிறார்.
ஒகோனி பூர்வகுடியினருக்கும் நில உரிமைதாரர்களுக்கும் போதிய நஷ்ட ஈடு கிடைக்காமை: சொந்த வீட்டை விட்டு துரத்தப்படுதல்
உடலுக்கு தீங்கு விளைவிக்கும் நச்சுப் பொருள்களை கையாளும் வேலை: மாசு கலந்த பணியினால் இளவயது மரணங்கள்.
எண்ணெய்க் கசிவுகள்
விலை உயர்ந்த பெட்ரோலையும் டீசலையும் மட்டும் எடுத்துக் கொண்டு இயற்கை வாயுவை அப்படியே காற்றில் கலப்பது
சுற்றுச்சூழல் நாசம்: மீன் இறப்பு; கடல்வாழ் உயிரினங்களுக்கு குந்தகம்
Wiwa v Shell: the day of truth? | Kevin Smith | Comment is free | guardian.co.uk: “When oil is extracted, there is often a certain amount of natural gas as well. Instead of pumping this gas back underground or using it to meet the energy needs of local communities, it is cheaper to simply burn off this gas. Although Shell has repeatedly said that it intends to stop burning off gas, the flares are toxic and harmful, which is why they are strictly regulated in countries such as the US or the UK. Such flaring is only cheap when environmental and human costs are not taken into consideration.
According to a recent report by an energy journalist, the amount of gas that is being wastefully flared by oil companies in the Niger Delta is equivalent to one third of the North Sea’s annual gas production. Gas flaring has technically been illegal in Nigeria since 1984, but oil companies including Shell continue this polluting practice with impunity.
The cases aim to hold Shell accountable for human rights violations in Nigeria, including
complicity in summary execution,
crimes against humanity,
torture,
arbitrary arrest and
detention as well as
for requesting, financing and assisting the Nigerian military – which used deadly force to repress opposition to Shell.”
பெட்ரோல் நிலங்களை குத்தகை எடுத்திருக்கும் ஷெல் நிறுவனத்திற்கு இவ்விதமான அம்பலப்படுத்தல்கள் ரசிக்கவில்லை.
இவற்றைக் குறித்து குரல் கொடுக்கும் சரோ விவா மீது பொய்வழக்கு தொடுக்கிறது மிலிடரி ராஜாங்கம்.
இராணுவ அடக்குமுறையில் ஒகோனியர் கொல்லப்படுகிறார்கள்; இவ்வாறான தீர்த்துக்கட்டல்களுக்கு ஷெல் பெட்ரோலியம் காசு தந்து குஷியாக வைத்துக் கொள்கிறது.
ஓகோனிஒயர் குறித்து உலக நாளேடுகளுக்கு செய்தி வழங்கிய கென் சாரொ விவாவிற்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது.
அவரது தூக்கு தண்டனையை ரத்து செய்வதற்கு பர்த்தியாக, போராட்டங்களைக் கைவிடுமாறு ஷெல் கார்பரேஷன் பேரம் பேசுகிறது.
ஷெல் ஆயில் நிறுவனத்தின் கட்டளைக்கு அடிபணியாததால், மூன்று நாள் பட்டினி போட்டு, முடிவில் கென்னும் அவரின் எட்டு சகாக்களும் இராணுவ அரசினால் கொல்லப்படுகிறார்கள்.
Port Harcourt, the oil capital of Africa is a crowded cityplagued by crime where most people live on mud streets without electricity, running water or sewer. Despite producing 2.26 million barrels of oil a day, 60 percent of Nigerians live below the poverty line.
சிகரெட் பிடித்து புற்றுநோய் வந்தவருக்கே பில்லியன் டாலர் அள்ளித் தரும் நாட்டில் 15.5 மில்லியன் மிகவும் குறைந்த தொகை. ஆனால், மேற்கத்திய நிறுவனம் ஆப்பிரிக்க நாட்டில் இழைத்த அநீதிக்கு, அமெரிக்க நீதிமன்றங்களில் வளர்ந்த நாட்டின் தீர்ப்புகள் கொடுக்கலாம் என்பதற்கு முதல் உதாரணமாக இருப்பதால் முக்கியத்துவம் பெறுகிறது.
Shell settlement with Ogoni people stops short of full justice | John Vidal | Environment | guardian.co.uk: “There are thousands more Ogoni who will now want to bring their case to the west to see justice done, as well as other Niger Delta tribes like the Ijaw, the Igbo, the Ibibio and the Itsekiri who also want justice. There have been more than 500 pollution cases against Shell in Nigeria, but few reach court and the company has been able to use the appeal system to delay those that do for many years.
Now the lesson is that justice and reparation can be obtained abroad. A Dutch court will soon hear a case brought against Shell by other Niger Delta villagers following a major oil spill years ago. Meanwhile, in Ecuador, Chevron is about to hear its fate in a massive pollution case that has been going on for nearly 10 years. It’s quite possible the company will be fined more than $4bn.”
போபால் கசிவை எடுத்துக் கொள்வோம். இன்னும் அந்த நிறுவனம் ஜோராக உலக நாடுகளில் செயல்பட்டு வருகிறது. இந்தியாவிலோ, உயிரின் மதிப்பு சில்லறை செல்லாக்காசு. எட்டணாக்களை விட்டெறிந்து விட்டு புதிய பேட்டரி தயாரிக்கப் போய் விட்டார்கள். ஆனால், இந்த ஷெல் நிறுவன நஷ்ட ஈடு, இந்த மாதிரி சரிக்கட்டல் செய்த பழம் பெருச்சாளிகள் வயிற்றில் புளி பேஸ்ட்டை கரைக்க வைத்திருக்கிறது.
பழைய கேஸை தூசு தட்டி எடுக்கலாம். எத்தனை பேருக்கு கண்ணு கப்ஸா ஆனது; எவ்வளவு பேருக்கு காலு போச்சு; எம்புட்டு குழந்தைகள் குறைபாடுகளோடு வாழ்க்கையை தொலைத்து நிற்கின்றன என்று கணக்கு போட்டு, அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு போடலாம். இதுவரை ‘நிற்காமல் ஓடுவதற்காக புகழ்பெற்ற மின்கலம்’ போன்ற சொற்றொடர்கள் காணாமல் போய் டௌ கார்ப்போரேஷன் மேல் குற்றப்பத்திரிகையை மக்கள் உயிரை மதிக்கும் நீதிபதிகளிடம் முன் வைக்கலாம்.
அந்த விதத்தில் ஷெல் வழக்கு முக்கிய மைல்கல்.
நிறுவனங்களை சட்டையைப் பிடித்து கேள்வி கேட்பது நல்ல விஷயம். ஆனால், சிலியின் பினாச்சே, இலங்கையின் ராஜபக்சே ஆகியோருக்கு தர்மதேவதையின் கடைக்கண் பார்வை கிடைக்க இன்னும் எத்தனை காலம் எடுக்குமோ?
இந்த மாதிரி தலைவர்களைக் கூட விட்டுவிடலாம். இராஜீவ் காந்தி மாதிரி எப்படியாவது வன்மம் தீர்க்கப்பட்டு, ஹிட்லர் மாதிரி சுட்டுக் கொண்டு, மிலோபதான் மாதிரி அனுபவித்து நியாயம் எட்டியாவது பார்க்கலாம்.
ஆனால், இருபதாண்டு முன்பு ஷெல் பங்குதாரராக இருந்து கொண்டு கோடி டாலரை ஊக்கத்தொகையாக பெற்ற CEO யார்? அவருக்கு எடுபிடியாக இருந்து கொண்டு முடிவுகளை சிரமேற்கொண்டு நிறைவேற்றிய தலைவர்கள் எவர்? ஷேர் ஏற்வதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டிருந்த போர்ட் ஆஃப் டைரக்டர்ஸ் பரம சௌக்கியமாக கோல்ஃப் விளையாடிக்கொண்டு, சூதாடி காலத்தைக் கழிப்பதை விட்டு விட்டார்களே!
இந்த மாதிரி தொண்டரடி ஆபீசர்களை பொது மேடையில் அரங்கேற்றி, பேஸ்புக் பக்கத்தை அலங்கரித்து, ட்விட்டரில் புரட்சி ஏற்படுத்தும் வரை இரானும் ட்விட்டரும், ஒபாமாவும் இணையமும் என்று அமெரிக்கா குண்டுச்சட்டியில் வலை மேயும்.
India’s maiden small rocket mission fails to place two satellites in proper orbit
Safety of the India’s human spac… twitter.com/i/web/status/1…1 day ago
How Pop Culture Explains The World
Lucy Blakiston · Pocket Collections
Breaking down the complexities of society w… twitter.com/i/web/status/1…1 day ago
How This Economic Moment Rewrites the Rules
Jobs aplenty. Sizzling demand. If the United States is headed into a r… twitter.com/i/web/status/1…1 day ago
BOOKS AND CULTURE
Larkin in America
What interest does a poet devoted to England hold for readers in the United St… twitter.com/i/web/status/1…2 days ago
Sensitivity Readers Are the New Literary Gatekeepers -
Overzealous gatekeeping on race and gender is killing books… twitter.com/i/web/status/1…2 days ago
What We Gain from a Good Bookstore -
It’s a place whose real boundaries and character are much more than its physi… twitter.com/i/web/status/1…2 days ago
YouTuber turned Hollywood showrunner Issa Rae, “Rap Sh!t” is about striving, struggling Miami hip-hoppers. HBOMax s… twitter.com/i/web/status/1…2 days ago
Ode to VR & People Who Live in It
Joe Hunting’s HBOMax documentary “We Met in Virtual Reality” traces lives of fel… twitter.com/i/web/status/1…2 days ago
A Stranger Filmed Her on the Train. TikTok Users Decided She Had Monkeypox.
With little government guidance on a f… twitter.com/i/web/status/1…3 days ago
Technology and Humanity: Making Healthy Music -
BY SCOTT SCHOLZ
New Music and popularity: is it the mastering
Why… twitter.com/i/web/status/1…3 days ago
Mahesh Narayanan interview: ‘Writing is the most painful, challenging and fun part of filmmaking’
The Malayalam wr… twitter.com/i/web/status/1…3 days ago
The walled garden is the worst form of irritation in Tamil magazines: cannot copy with right click and they think t… twitter.com/i/web/status/1…4 days ago
A ‘Reversible’ Form of Death? Scientists Revive Cells in Dead Pigs’ Organs.
Researchers who previously revived so… twitter.com/i/web/status/1…6 days ago
Book versus Movie series:
Rajendra Yadav’s prose comes alive in Basu Chatterjee’s ‘Sara Akash’
In ‘Ice Candy Man’… twitter.com/i/web/status/1…6 days ago
* Accept that some days you’re the pigeon, and some days you’re the statue.
* Solitude is independence
* Call no man happy until he is dead - Oedipus
* It is what you read when you don't have to that determines what you will be when you can't help it. - Oscar Wilde
* The difference between literature and journalism is that journalism is unreadable and literature is not read. - Oscar Wilde