இந்தியாவில்தான் நாடி ஜோசியம், ஜாதகம், பரிகாரம், கைரேகை, கிளி சீட்டெடுத்தல் என்று நினைத்திருந்தேன். அமெரிக்காவும் அதே கதிதான் என்பது ஜார்ஜ் டபிள்யூ புஷ் (பெரியண்ணன்) நீதிபதிகள் என்னும் கிளிகளின் சீட்டுக்களில் ஜெயித்தபோது தெரிந்தது. அதன் பின் நேற்றைய தேர்தலில் யேசு கிறிஸ்துவின் உதவியுடன் டெட் குரூஸ் (ஜோ. டி. குரூஸ் மாதிரியே பெயர் கொண்டிருப்பவர்) ஜெயிப்பது வரை உறுதியாகிக் கொண்டே இருக்கிறது.
அதன் தொடர்ச்சியாக அறிவியல்தனமான இரு புத்தகங்கள்:
Medical Medium: Secrets Behind Chronic and Mystery Illness and How to Finally Heal by Anthony William
அறிவியல் என்றால் கவனிப்பது, கவனித்ததை அளவெடுப்பது, அளவுகளைப் பரிசோதிப்பது, பரிசோதனையை மீண்டும் மீண்டும் செய்து பார்ப்பதன் அடிப்படையில் இறுதி முடிவை நிரூபிப்பது என்பார்கள். அந்தோணி வில்லியம் அந்த வகையைச் சேர்ந்தவர் அல்லர்.
கியானு ரீவ்ஸ் நடித்து ‘கான்ஸ்டாண்டின்’ என்று ஒரு பேய் + சாமியார் + கிறித்துவ பூதம் படம் வரும். அதில் வருவது மாதிரி நான்கு வயதில் அவருக்கு முன் அரூப உருவங்கள் தோன்றி அவருக்கு ஞானப்பால் கொடுத்திருக்கிறது. நான்கு வயதிலேயே நேராகச் சென்றார். பாட்டியின் மார்பில் கை வைக்கிறார். ‘பிஞ்சிலேயேப் பழுத்திடுச்சு’ என்போமே… அது போல். அப்பொழுதே கையடித்து சொல்லி இருக்கிறார்: “நுரையீரல் புற்றுநோய்” (தமிழில் சொல்லவில்லை; லங் கேன்சர் என்று ஆங்கிலத்தில் மழலையாகச் சொன்னதை கற்பூரம்… சாரி… மெழுகுவர்த்தி அடித்து சத்தியம் செய்கிறார்).
அடுத்த நாள் காலையே மருத்துவமனைக்கு பாட்டியை அழைத்துச் செல்கிறார்கள். சரியான கருநாக்கு. அப்படியே பலித்துவிட்டது.
நீங்கள் வில்லியமை நினைத்தவுடன் தரிசிக்க முடியாது. அதற்கு பெரிய க்யூ நிற்கிறது. லாட்டரியில்தான் நோயாளிகளைத் தேர்ந்தெடுக்கிறார். அவர் தேர்ந்தெடுத்தாலே உங்களின் பிணி பரிபூரண குணமடையும். அறுவை சிகிச்சையின்றி மருந்தின்றி மாத்திரையின்றி குமுதம் பிரார்த்தனை கிளப் இல்லாமல் நலமடைவீர்கள்.
இவருக்கு வரும் வாடிக்கையாளர்களில் பெரும்பாலானோர் பெண்கள் என்று சொல்லவும் வேண்டுமோ! நீங்கள் விசுவாசியா?
Cure: A Journey into the Science of Mind Over Body by Jo Marchant
எஸ்.வி. சேகரின் ‘காட்டுல மழை’யில் சில புகழ்பெற்ற கடிஜோக்குகள் உண்டு. கீழ்கண்ட சம்பவத்தைப் படித்தால் வடிவேலு, விவேக் கூட நினைவிற்கு வரலாம்.
”முதல் நாள் கொதிக்கும் தண்ணீரில் கால் வைத்தேன். என்னால் அதைத் தாங்கவே முடியவில்லை.
அடுத்த நாள் என்னுடைய பிடித்தமான விளையாட்டை ஐ-பேட் எடுத்து விளையாடிக் கொண்டே, அதே கொதிக்கும் வென்னீரில் காலை வைத்தேன். என்ன ஆச்சரியம்… சூடே தெரியவில்லை!”
காதலன் காதலியிடம் மயங்குகிறான். சிலர் ஃபேஸ்புக்கில் விழுகிறார். சிலர் ஆசானிடம் அடிமையாகிறார்கள். மனவசியம் எனலாம். தொழுகையில் லயிக்கலாம்.
எல்லாம் நம் சிந்தையில்தானே இருக்கிறது. பூதம் இருக்கிறது என நினைத்தால் அது நம்மை விழுங்கும். பூச்சிதான் இருக்கு, என்று நினைத்து எல்லாப் பிரச்சினைகளையும் நசுக்கு என்கிறார்.
’ஏமாறாதே… ஏமாற்றாதே’ என்று வாத்தியார் பாடியிருக்கலாம். கடைபிடிக்கவில்லையே!
ஹரூகி முரகாமி எழுதிய சிறுகதை தொகுப்பை வாசித்தேன். ஜப்பானில் நடந்த நிலநடுக்கத்திற்கு பின் நிகழ்ந்த சம்பவ மாந்தர்களை அறிமுகம் செய்கிறது. கூடவே கொஞ்சமாய் தொட்டுக்க பயங்கரவாத செயலான நச்சுப்புகை கொலைகளையும் வைத்துக் கொள்கிறது.
திருமணமான பிறகு நிலவும் வெறுமை; பதின்ம வயது வெறுமை; எல்லா கதைகளிலும் ‘எதற்காக ஓடுகிறோம்? என்ன வாழ்க்கை இது? என்னத்த செஞ்சு… என்னத்த பண்ணி…’ என்று திடீரென்று விட்டேத்தியானவர்களின் நிலையை விவரிக்கிறது. ஏன் அவர்கள் இப்படி ஆகிப் போனார்கள் என்பதை கொஞ்சம் தொட்டுக் காட்டி, வாசகனுக்கே பாக்கியை விட்டுவிடுகிறார்.
அமைதியான ஆரம்பம்; நேர்க்கோட்டில் கதை பயணித்தாலும், எல்லாவற்றையும் விளம்பாத விவரிப்பு. சூட்சுமமாக முடிக்க வேண்டும் என்பதற்காக வலிந்து திணிக்காத முடிவுகள்.
ராமர் கோவில் என்பதற்கு பிரச்சினை என்று அர்த்தம். கோவில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்னும் பழமொழிக்கேற்ப, அமெரிக்காவில் ஒவ்வொரு நகரத்திலும் ஹிந்து மந்திர் இருக்கிறது. அங்கே நடக்கும் சண்டையில், பிரிந்து போய் இரண்டாவது கோவிலும் நிச்சயமாக இருக்கும்.
கத்ரு, வினதை கதை ஆகட்டும்; காந்தாரி x குந்தி ஆகட்டும். புராண காலத்தில் இருந்து போட்டிக்கு பிள்ளை பெறுவது இந்தியர் வழக்கம். வாஷிங்டன் டிசி நகரத்தில் ஒரே தெருவில் இரு ஆலயங்கள். சிகாகோவில் பத்து மைல் வட்டத்துக்குள் இரு ஆலயங்கள்.
அரோரா ஆலயம் திருப்பதி போல் என்றால் பக்கத்து ஊரான லெமாண்ட் ஆலயம் கொஞ்சம் வடக்கிந்திய பாணியில் ஹரே ராம் ஹரே கிருஷ்ணா கலந்த பத்ராசலம் இராமர்.
இந்த நிலையில் திடீரென்று வடக்கு வழக்கத்திற்கு நாக் அவுட் கிடைத்திருக்கிறது.
போட்டி கோவிலிலேயே போட்டி. பலிபீடத்திற்கு யார் பலி என்றெல்லாம் தமிழ்ப் பேப்பர் தலைப்பு கொடுத்திருக்கும். ஆனால் அமெரிக்காவில் ஆங்கில நாளிதழ் மட்டுமே இதை கவனித்திருக்கிறது.
உள்ளூர்காரர்கள்தான் உள்விஷயங்களை சொல்ல வேண்டும்.
துவக்க காலத்தில் கோவிலை அமைத்தவர்களின் கருத்தை கவனத்தில் கொள்ள வேண்டுமா? தென்னிந்திய ஆகமவிதிப்படி மொழுமொழு சிலைகள் மூலஸ்தானத்தை ஆக்கிரமிக்கலாமா? தெலுங்கு வண்ணமான கருப்பு அல்லாத வெள்ளை வெளேர் சிலைகள் நீக்குவது தர்மமா என்றெல்லாம் கோர்ட்டில் வாதாடி இருப்பார்கள் என்று நம்புகிறேன்.
தூரத்தில் விமானம் தெரிந்தது. அதில் அப்பா வருவார். தூங்குவதற்கு முன் கட்டியணைத்துப் போர்த்திவிட்டு ‘குட் நைட்’ சொல்வார். நாளைக்கு சனிக்கிழமை. வந்துவிடுவார்.
“இருக்கட்டும். உங்கப்பாவை அமெரிக்க ஜனாதிபதி ஆக்கட்டுமா? டைம்ஸ் பத்திரிகையின் ஆண்டுநாயகர் ஆக்கட்டுமா? முதலாவதாக ஆனால் உலக வெம்மையினால் பனிக்கட்டி உருகி, பூமிச்சூட்டினால் சுனாமி கொணர்ந்த கோபன்ஹேகான் நாயகர் என்று புராணம் பாடலாம். இரண்டாமவர் ஆனால், பணமுதலைகளுக்கு டாலர் மாலை தொடுக்கும் கஜேந்திர யானை என்று வரலாறு போடலாம்.”
“இது இட்லி-வடையில் வரும் முனி கடிதம் போல் விஷயக்கோர்வை ஆகிறது. எனக்குப் புரிகிற மாதிரி சொல்லு.”
“ரொம்ப சிம்பிள். கூடிய சீக்கிரமே ஹைதியில் பூகம்பம் வரப்போகிறது. அதற்கு முன் கடவுளுக்கு பலிகடா தேவை. உங்கப்பன் மேல் பழியைப் போடலாம் என்று யோசிக்கிறோம். போதிய பஞ்சப்படியும் பதவியும் கொடுத்து விடுவோம். ரெடியா?”
விக்கிக் குறிப்பு: The Wiyot tribe of California say that the condor recreated mankind after Above Old Man wiped humanity out with a flood.[49] However, other tribes, like California’s Mono, viewed the condor as a destroyer, not a creator. They say that Condor seized humans, cut off their heads, and drained their blood so that it would flood Ground Squirrel‘s home. Condor then seized Ground Squirrel after he fled, but Ground Squirrel managed to cut off Condor’s head when Condor paused to take a drink of the blood.
Today: On December 16, 1773, after officials in Boston refused to return three shiploads of taxed tea to Britain, a group of colonists boarded the ships and destroyed the tea by throwing it into Boston Harbor.
Live a good life. If there are gods and they are just, they will not care how devout you have been, but will welcome you based on the virtues you have lived by. If there are gods, but unjust, then you should not want to worship them. If there are no gods, then you will be gone, but will have lived a noble life that will live on in the memories of your loved ones.
– Marcus Aurelius, philosopher and writer (121-180)
Aurelius wrote his Meditations in Greek as a source for his own guidance and self-improvement. He had been a priest at the sacrificial altars of Roman service and was an eager patriot. He had a logical mind and his notes were representative of Stoic philosophy and spirituality.
A cucumber is bitter. Throw it away. There are briers in the road. Turn aside from them. This is enough. Do not add, “And why were such things made in the world?”
Soon you’ll be ashes or bones. A mere name at most–and even that is just a sound, an echo. The things we want in life are empty, stale, trivial.
Never regard something as doing you good if it makes you betray a trust or lose your sense of shame or makes you show hatred, suspicion, ill-will or hypocrisy or a desire for things best done behind closed doors.
Words that everyone once used are now obsolete, and so are the men whose names were once on everyone’s lips: Camillus, Caeso, Volesus, Dentatus, and to a lesser degree Scipio and Cato, and yes, even Augustus, Hadrian, and Antoninus are less spoken of now than they were in their own days. For all things fade away, become the stuff of legend, and are soon buried in oblivion. Mind you, this is true only for those who blazed once like bright stars in the firmament, but for the rest, as soon as a few clods of earth cover their corpses, they are ‘out of sight, out of mind.’ In the end, what would you gain from everlasting remembrance? Absolutely nothing. So what is left worth living for? This alone: justice in thought, goodness in action, speech that cannot deceive, and a disposition glad of whatever comes, welcoming it as necessary, as familiar, as flowing from the same source and fountain as yourself.
It is like the officer who engaged a comic actor dismissing him from the stage. “But I have not played my five acts, only three.” “True, but in life three acts can be the whole play.”
How much more grievous are the consequences of anger than the causes of it.
As a horse when he has run, a dog when he has caught the game, a bee when it has made the honey, so a man when he has done a good act does not call out for others to come and see, but he goes on to another act, as a vine goes on to produce again the grapes in season. Must a man then be one of these, who in a manner acts thus without observing it? Yes. What more dost thou want when thou hast done a man a service? Art thou not content that thou hast done something conformable to thy nature, and dost thou seek to be paid for it, just as if the eye demanded a recompense for seeing, or the feet should demand a recompense for walking?
I used to think it was awful that life was so unfair. Then I thought, wouldn’t it be much worse if life were fair, and all the terrible things that happen to us come because we actually deserve them? So, now I take great comfort in the general hostility and unfairness of the universe.
Take away your opinion, and there is taken away the complaint, […] Take away the complaint, […] and the hurt is gone
Let opinion be taken away, and no man will think himself wronged. If no man shall think himself wronged, then is there no more any such thing as wrong.
Meditations, an online version from Project Gutenberg (text is from The Golden Book of Marcus Aurelius, translated by Meric Casaubon, published 1906-1908.)
On December 16, 1773, after officials in Boston refused to return three shiploads of taxed tea to Britain, a group of colonists boarded the ships and destroyed the tea by throwing it into Boston Harbor.
தற்சமயம் அமெரிக்காவில் புகழ்பெற்ற Phillip Garrido குறித்த செய்தி: Questions arise over how kidnapper went undetected – Yahoo! News: “For 18 years, Phillip Garrido managed to elude detection as he pulled off what authorities are calling an unfathomable crime, kidnapping and raping 11-year-old Jaycee Dugard, keeping her as his secret captive for nearly two decades and fathering two of her children.”
பள்ளிக்கு செல்லும் பேருந்து. அதைப் பிடிக்க தன் வளர்ப்பு தந்தையோடு நடந்து செல்கிறாள் 11 வயதுச் சிறுமி. அப்பொழுது அரக்கபரக்க வரும் கார், அவளைக் கடத்தி சென்றுவிடுகிறது.
பதினெட்டு வருடமாக காணாமல் போனவர்கள் பட்டியலில் இருக்கிறாள். போன வாரம் கண்டெடுத்திருக்கிறார்கள். பதினோரு வயதில் இருந்து பாலியல் அடிமை போல் இருந்தவளுக்கு இரு பெண் குழந்தைகள். 13… வெறும் பதின்மூன்று வயதிலேயே முதல் குழந்தையைப் பெற்றுப் போட்டிருக்கிறாள்.
மூத்த மகளுக்கு 15 வயசு. இரண்டாமவளுக்கு 11. அம்மாவாது பதினொன்று வயது வரை சுதந்திரமாக இருந்தாள். இவர்களோ, பிறந்த நாளில் இருந்து முடக்கம். இருவரும் வெளியுலகை பார்த்ததில்லை. அவர்களும் செக்சுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கலாம்.
இந்தச் சிறுமிகள் பள்ளிக்கு சென்றதில்லை. தடுப்பூசி எதுவும் கிடைக்கவில்லை. நோய்வாய்ப்பட்டால், மருத்துவரிடம் கூட சென்றது கிடையாது.
அமெரிக்காவில் இப்படி நடக்கும் என்று என்னைப் போல் பலரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். ‘அச்சமுண்டு அச்சமுண்டு‘ வெளியான சமயம் இந்த செய்தி வெளியாகியுள்ளது.
நல்ல வேளை.
‘கமல்ஹாசன் – ஒரு தீர்க்கதரிசி‘ போன்று அருண் வைத்தியநாதன் குறித்த அஞ்சல் எதுவும் வந்துசேரவில்லை. வாயில் லிங்கம் எடுப்பது போன்ற இந்த மாதிரி மாயாஜாலங்கள் எல்லாமே ஹம்பக் என்பது என்னுடைய ஆழமான நம்பிக்கை.
அப்படியே தொடர்பான சமீபத்திய இரு பதிவுகளும், அதில் பொருத்தமான மேற்கோள்களும்:
மாந்திரீகம், மேஜிக், மாயாஜாலம் – மூடநம்பிக்கை x கலாச்சாரம்
1. சாரு நிவேதிதா ஆன்லைன் – கடவுளைக் கண்டேன் :: பரமஹம்ஸ நித்யானந்தர் – யோகம் நிரோதம்: “ஒரே சமயத்தில் இரண்டு பேருக்கு ஒரே நபரின் பௌதிகத் தோற்றம் காட்சியளித்தால் அது எப்படி மாயத்தோற்றமாக இருக்க முடியும்? இந்தச் சம்பவத்துக்குப் பிறகும் எனக்கு ஒரு அதிசயம் நடந்தது.”
2. ஜெயமோகன் :: jeyamohan.in » ஆன்மீகம், போலி ஆன்மீகம், மதம்: “இந்த புராணங்கள் தத்துவ விளக்கத்துக்கான கருவிகளாக அமைந்தன. ஏனென்றால் தத்துவ விளக்கத்துக்கு எப்போதுமே படிமங்கள் தேவை. அப்படிமங்களை நம் புராணங்கள் தொடர்ச்ச்சியாக வழங்கின. ஆகவே பின்னர் புராணங்கள் ஒரு தனிமொழியாக [Meta Language] மாறின. அதில் நம் தத்துவம் விரிவாக பேசப்பட்டது. இது புராணங்களின் தத்துவ முகமாக இன்று நீடிக்கிறது.
புராணங்கள் மிக மேலோட்டமாக , வெறும் அற்புதக் கதைகளாக மட்டுமே வாசிக்கபப்டும் புரிந்துகொள்ளப்படும் சூழல் உருவாகியது.
இக்கடிதம் இந்த எளிய புராணமனநிலையில் நின்று எழுதப்பட்டிருக்கிறது. இந்த மனநிலை இன்று இந்துக்களிடம் மிகப்பரவலாக உள்ளது. இதைப் பயன்படுத்திக் கொள்ளும் மனிதர்களே இன்று நாம் தொலைக்காட்சிகளில் மேடைகளில் மிக அதிகமாக கண்டுகொண்டிருப்பவர்கள். சொல்லப்போனால் நாம் இந்து மதம் சார்ந்தவர்களாக காண்பவார்கள் அனைவருமே இப்படித்தான் இன்று இருக்கிறார்கள். அவர்கள் தங்களை அற்புத மனிதர்களாக காட்டிக்கொள்கிறார்கள். அருள்வாக்கு சொல்கிறார்கள். ஆசி அளிக்கிறார்கள். நோய் குணமாக்குகிறர்கள். நீர் மேல் நடக்கிறார்கள். நெருப்பில் நீந்துகிறாரர்கள்.”
இப்பொழுதாவது செய்தியில் நிறைய அடிபடுகிறார்களா? தடுப்பது குறித்து விவாதம் எழும்புகிறதா?
அமெரிக்காவில் இன பேதத்திற்கும் இதற்கும் ஏதாவது சம்பந்தம் உண்டா? ஹார்வார்ட் பேராசிரியர் கேட்ஸ் வழக்கில் வெள்ளையன், கறுப்பினம் என்றார்களே… அந்த மாதிரி பிலிப் காரிடோ மட்டும் கருப்பனாக இருந்தால், சீக்கிரமே ஆராயப்பட்டிருப்பாரா? அல்லது குறைந்தபட்சம் கடுங்காவலிலேயே வைக்கப்பட்டிருப்பாரா?
மேற்கத்திய உலகுகளில் எப்பொழுதாவது நடக்கும் ஒன்றிரண்டு சம்பவம் பெரிதாக்கப்படுகிறதா? எத்தனை குற்றம் அம்பலமேறுகிறது? எவ்வளவு சதவிகிதம் சந்தேகத்திற்கு இடமின்றி முற்றுப்பெற்று நீதி கிடைக்கிறது?
அதெல்லாம் சரி… ஆரம்பத்தில் கடவுள் குறித்து ஏன் இவ்வளவு பில்ட்டப்பு?
பாலியல் குற்றவாளி – Sex Offender
சிறுவன்களையோ சிறுமிகளையோ வன்புணர்பவர்
அவ்வாறு வன்முறைக்குள்ளாக்கியதை நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டு ஒப்புக் கொண்டவர்.
குழந்தைகளிடம் செக்ஸ் வைத்த குற்றங்கள் நிரூபிக்கப்பட்டு சிறை சென்றவர்.
சிறார்களிடம் உறவு வைத்துக் கொள்வதை வீடியோ, புகைப்படம் எடுத்து உலவ விடுபவர்.
மேற்சொன்னதை பல தடவை பல்வேறு குழந்தைகளிடம் விதம் விதமாக தொடர்ந்து செய்து வருபவர்.
ரேப், பொது இடத்தில் ஆடையின்றித் திரிவது, பலர் பார்க்குமாறு மலஜலம் கழிப்பது போன்ற சிறு குற்றங்களும் இதில் அடக்கம்.
மதநம்பிக்கை & கடவுள் மீது பழிபோடும் பக்த சுபாவம்
அந்தக் காலத்தில் வள்ளியும் தெய்வானையும் கந்தசாமிக்கு துணையிருந்தார்கள். தெய்வானையை மணந்த பிறகு, வள்ளியை, யானைகளைக் கொண்டு பயமுறுத்தி இழுத்துக் கொண்டு வந்திருக்கிறார் முருகன். எம்பெருமான் தண்டபாணியைக் கூட பாலியல் பலாத்கார லிஸ்டில் திருத்தணிகை காவல்நிலையம் விசாரிக்க வேண்டும். ஆனால், போலீஸ் ஸ்டேசனிலேயே இந்த மாதிரி ரேப் நடந்தேறுவது சினிமாவில் அடிக்கடி பார்க்கும் நிஜம்.
ஃபிலிப்பும் இதையேதான் தன் நம்பிக்கையாக சாட்சியம் சொல்கிறார். கடவுள் அவர் காதில் வந்து ஓதியிருக்கிறார். இளம்வயதில் பெண்ணின் அடக்குமுறையால் பாதிக்கப்படும் ‘சிவப்பு ரோஜாக்களி‘ல் இந்தப் பொண்ணுங்களே இப்படித்தான். குத்துங்க எசமான் குத்துங்கஎன்பதாக எழும் குரோதம், தனக்கு பலம் கிடைத்தபின், அந்த அதிகாரத்தை பிரயோகிக்க, அடக்கியாள கீழ்ப்படிந்த சிறுவயது சிறுமியை நாடுகிறது. அதற்கு அல்லாவும் துணையாகிறார். பிலிப்புக்கு ஜீஸஸ்.
‘மாயாவி‘ திரைப்படத்தில் சூர்யாவால் சிறைவைக்கப்படும் ஜோதிகா, திருடன் மேலே காதல்வயப்படும் ஸ்டாக்ஹோம் தாக்கீட்டின்படி 11 வயதில் கவரப்பட்ட Dugardம் இப்பொழுது தன்னை டென்ட் கொட்டகையில் அடைத்து வைத்தவன் மீது பாசமோ, பரிதாபமோ கொண்டிருக்கிறார்.
‘நான் மிகவும் முக்கியமானவன்’ என்று எனக்கு கூட வலையில் இயங்குவதால் பொய்யாகத் தோன்றும். வாழ்க்கையில் மிட்-லைஃப் போராட்டத்தில், நாய்க்குணம் எட்டிப்பார்க்கும் நாற்பது வயதில் இந்த மாதிரி திரிபுணர்ச்சிகள் சாதாரணம். மாயத்தோற்றங்களை இறையாணையாகக் கனவு கொண்டு, செயலாக்கலில் ஈடுபடுவது அபாயம்.
தனிநபர் சுதந்திரம் & குற்றவாளிக்கு மறுவாழ்வு: புனர்வாழ்வும் புணர்வாழ்வும்
பாலியல் வக்கிரம் பிடித்தவன் என்பதை பிலிப் காரிட் ஏற்கனவே ஒப்புக் கொண்டிருக்கிறான். மூன்று தமிழ் சினிமாக்களை எடுத்துக் கொள்ளலாம்.
1. மகாநதி: சிறைவாசம் குறைப்பு: ஆயுள் தண்டனையாக ஐம்பதாண்டு காலம் கடுஞ்சிறையில் இருந்திருக்க வேண்டியவன். பரோல் என்பது குற்றத்தை ஒப்புக் கொண்டு மன்னிப்பு கேட்டல். அவ்வாறு மனந்திருந்திய செய்கைக்காக, கடவுள் நல்வழி காட்டினார் என்னும் ஒப்புதலுக்காக பத்தாண்டுகளிலேயே விடுவிக்கப்படுகிறான். வெளியே வந்ததும், யேசுவின் சொற்படி வேட்டை தொடர்கிறது.
2. வேட்டையாடு விளையாடு: – Garrido came under suspicion in the unsolved murders of several prostitutes in the 1990s, raising the prospect he was a serial killer as well. Several of the women’s bodies — the exact number is not known — were dumped near an industrial park where Garrido worked during the 1990s. Police executed a search warrant at his home in the investigation.
3. நந்தா: இந்த மாதிரி ஆளுங்களையெல்லாம் வெளியில் விடுவதில் தப்பேயில்லை. சுதந்திரம் அவசியம். சிறையை விட்டு அனுப்புமுன் சுன்னியை மட்டும் வெட்டி விடுதல் எல்லோருக்கும் நலம்.”
உங்கள் ஊரில் பாலியல் வக்கிரம் பிடித்தவர் இருக்கிறாரா?
3. Just another week of rapes | Life and style | The Guardian: “Nearly 50,000 rapes and attempted rapes take place in the UK every year, but only a few are covered by the media. Julie Bindel gives a snapshot of which cases are reported – and how”
பரோல் கொடுத்த மகராசர் இனிமேலாவது தாராளப் பிரபுவாக இல்லாம, தன்னுடைய குடும்பத்த ஒரு தடவ நெனச்சுண்டு ரிலீஸ் செய்வாரா?
கோடவுனிலிருந்து விடுதலை கிடைச்சாச்சு… ஆனா, புத்தகம் போடு, சுயசரிதை சொல்லு, ஓப்ராவில் வா என்று துரத்தும் மீடியாவிலிருந்து அவளுக்கு எப்போ விடுதலை?
அன்னிக்குக் குற்றவாளிங்கள ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பிச்சாங்க.. அந்த மாதிரி புத்தம் புது பூமிய உருவாக்கி, அங்கே இந்த மாதிரி பன்னாடைங்கள பதுக்கி வைக்கலாமே!
நான் அமெரிக்கா கிளம்புவதற்கு இரண்டு நாள் முன்பு ஏர் ஃபிரான்ஸ் விமானம் நடுவானில் காணாமல் போனது. என்னை வழியனுப்ப, சொல்லிக் கொள்ள, ஆசீர்வதிக்க வந்த அனைவருமே, ஏனோ இந்த செய்தியை எனக்கு சொன்னார்கள்.
எங்கள் வீட்டிலும் தி ஹிந்து வாங்குகிறார்கள் என்பதை அறிந்திருந்தும் இந்த நிகழ்வை சுட்டிக் காட்டிப் பேச்சைத் துவக்கினார்கள்.
நானும் அவர்களுக்கு அமெரிக்க மாமா கதையை அலுக்காமல் சொல்லி ஆறுதல் அளித்தேன்.
ஹைவேயில் வேகமாகப் போகிறோம். சடாரென்று கொஞ்ச தூரத்தில் போலீஸ் கார் தென்படுகிறது. ஒன்றும் தெரியாத பூனைக்குட்டி போல் இரண்டு அப்பாவி கார்களுக்கு நடுவில் சொருகிக் கொண்டு, பம்மி, பாவனையாகக் கடக்கிறோம்.
அடுத்த பத்து, இருபது மைல்களுக்கு கவலை வேண்டாம். உடனடியாக இன்னொரு காவல்துறை வண்டி இருக்காது. திருப்பத்திற்கொரு போக்குவரத்து காவலர் இருக்கமாட்டார் என்பது விதி அல்ல; சம்சயம்.
அதே போல் காலாண்டுக்கு ஒரு விமான விபரீதம்தான் நிகழும் என்பது ஒருவிதமான மனப்பிராந்தி ப்ராபபிளிடி.
ஆனால் விதி வலியது.
இப்படி நினைத்து வேகமூட்டும்போது, கையுங்களவுமாகப் பிடிக்கப்பட்டு $300 தண்டம் அழுததுண்டு.
சாமான் வாங்கிவர சந்தைக்கு செல்லும் வேலைக்காரர் அரக்க பரக்க ஓடி வருகிறார்.
‘பெண்ணைக் கண்டேன்… பேயைக் கண்டேன்’
‘ஒழுங்கா சொல்லுடா!’
‘நீ சாவப் போறேன்னு மரணதேவதை சொல்லிடுச்சு. நான் ஓடி ஒளியணும்.’
அந்தக்காலத்தின் அதிகாரபூர்வ நடராஜா சர்வீசுக்கு பதிலாக, தன் குதிரையைக் கொடுத்து வேலைக்காரரை எழுபத்தைந்து மைல் தள்ளியிருக்கும் சமரா நகருக்கு துரிதகரமாக அனுப்பி வைக்கிறார் வியாபாரி.
அப்படியே சந்தைக்கும் சென்று காலதூதரை கண்டுபிடித்து ‘ஏன் சின்னப் பையனை பயமுறுத்தினாய்?’ என்று குறுக்கு விசாரணையும் நடக்கிறது.
‘இன்னிக்கு ராத்திரி அவனை சமராவில் நான் கொல்லணும். இன்னும் இங்கேயே இருந்தா எப்படி! அதனால்தான் போக வைத்தேன்…’ என்கிறது எமன்.
சின்ன வயதில் இந்த மாதிரி கதையொன்றை இந்து மதக் குறியீடுகளைக் கொண்டு கேட்ட ஞாபகம்…
சட்டென்று நினைவுக்கு வரவில்லை.
‘நாளை வருவேன்’ என்று விநாயகரிடம் சனி ஏமாந்ததும், ‘என்றும் பதினாறு’ மார்க்கண்டேயர்களும் தவிர இப்படி துரத்தி செலுத்தப்பட்டவர் எவரேனும் இருக்கிறாரா?
ரொம்ப நாளாக கூடவே ஓடுபவர். அன்றும் ஜிம்மில் பைக்கிங் செய்து கொண்டிருந்தார். நான் ஐந்து நிமிடம் ஓடுவதும் நான்கு நிமிடம் நடப்பதுமாக மூச்சு வாங்கிக் கொண்டிருந்தேன். காதில் தற்போதைய ஹிந்தி ரெஹ்மான் ஒலியை மீறி தடால் சப்தம் கேட்டது.
பக்கத்தில் சாதாரணமாக உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தவர், கீழே விழுந்திருந்தார். 911 அழைத்தார்கள். அங்கே இருந்த எவருக்கும் முதலுதவி தெரியவில்லை.
ஆம்புலன்ஸ் வருவதற்குள்ளேயே உயிர் பிரிந்து விட்டது. வயது 44.
அவர் என்னைப் போல் திடீரென்று ஓட வருபவர் அல்ல. பல வருடங்களாக தினசரி வருபவராம்.
மரணம் கண் முன்னே நிகழ்வதை கையாலாகாமல் பார்ப்பது இரண்டாவது தடவை. முதல் தடவை திருச்சானூர் கோவில் வாசற்படியில் அப்பா வழுக்கியபோது பதைபதைத்ததும் ஓடிப்போய் என்னென்னவோ செய்து பார்த்ததும்; சிரார்த்தம் நம்பிக்கையில்லாமல் போடாமல் இருப்பதும்; ‘நான் கூடப் போறேனில்ல! ஒண்ணுத்துக்கும் கவலை வேண்டாம்’ என்று வாக்குறுதி சுக்கலானதும்; வாழ்க்கை மாயை போன்ற அநித்தியங்கள் தோன்றியதும்; செய்த பாவக்கணக்கின் பட்டியலும்; சில இளையராஜா சோகப்பாடல்களும்; கடவுள் நம்பிக்கையும்; கடவுள் வெறுப்பும்; இலட்சிய வேட்கை கொழுந்துவிட்டெறிவதற்கான தாகசாந்தியும்; எதற்காக சின்னச் சின்ன விசயங்களுக்கு எல்லாம் உணர்ச்சிவசப்பட்டு வைகிறோம் என எல்லாம் ஒட்டுமொத்தமாய் வந்து போனது.
1.2-Million-Year-Old Obsidian Axe Factory Found In Ethiopia
unknown species of human apparently mastered obsidian… twitter.com/i/web/status/1…1 day ago
For years, Beijing has thrown its wealth and weight across the globe. But its experience in the Solomon Islands cal… twitter.com/i/web/status/1…2 days ago
China’s Mad Dash Into a Strategic Island Nation Breeds Resentment
For years, Beijing has thrown its wealth and wei… twitter.com/i/web/status/1…2 days ago
Top FBI Official Charged in Money Laundering
Deripaska, an aluminum magnate with ties to President Putin of Russia… twitter.com/i/web/status/1…3 days ago
ஆனந்த சாகரஸ்தவம்
(இன்பமாகடல்) விளக்கவுரையுடன்
தமிழாக்கம் : கோவை கு. நடேச கவுண்டர்
inpamAkaTal (AnantacAkasrastavam… twitter.com/i/web/status/1…3 days ago
Clothes for People Who Love Books
Rachel Comey’s collaboration with The New York Review of Books is the latest fli… twitter.com/i/web/status/1…3 days ago
The Dawn of Everything challenges a mainstream telling of prehistory - David Graeber vs Yuval Harari: Exploding the… twitter.com/i/web/status/1…4 days ago
I, Libertine - a literary hoax novel that began as a practical joke by late-night radio raconteur Jean Shepherd who… twitter.com/i/web/status/1…4 days ago
Winter 2023 issue offers solutions to America's housing crisis, asks if affirmative action’s days are finally numbe… twitter.com/i/web/status/1…5 days ago
India’s Love Story With DDLJ Movie Still on the Big Screen After 27 Years
Well past the film’s intermission, the c… twitter.com/i/web/status/1…5 days ago
It reminds us of the impermanence that underlies these individual possessions of ours, these bodies, these selves,… twitter.com/i/web/status/1…5 days ago
In Conversation
Tao Lin & Anna Dorn
‘Do you ever prefer speaking to written communication?’
The authors discuss na… twitter.com/i/web/status/1…5 days ago
The Stars Are Blind | Anna Dorn
Anna Dorn on the need for astrology
The same way law encouraged me to be petty an… twitter.com/i/web/status/1…5 days ago
Conversation
Pico Iyer & Caryl Phillips
‘The immigrant’s dream – that he or she can make a better life for the chil… twitter.com/i/web/status/1…5 days ago
The Right Not to Be Fun at Work
In a win for workplace dignity, a French high court recently decreed that business… twitter.com/i/web/status/1…5 days ago
* Accept that some days you’re the pigeon, and some days you’re the statue.
* Solitude is independence
* Call no man happy until he is dead - Oedipus
* It is what you read when you don't have to that determines what you will be when you can't help it. - Oscar Wilde
* The difference between literature and journalism is that journalism is unreadable and literature is not read. - Oscar Wilde