Category Archives: Cinema

Naan Kadavul – Lyrics

bala-arya-jeyamohan-cinema-films-reviews-naan-kadavul-stills-030ஒரு காற்றில் அலையும் சிறகு
எந்த நேரம் ஓய்வு தேடும் ?

கண்ணில்லாது காணும் கனவு
எதை தேடி எங்கு போகும் ?

எங்கெங்கும் இன்பம் இருந்தும்
உன் பங்கு போனதெங்கே ?

இது ஏனென்று பதில் யார் சொல்லுவார்
ஒரு காற்றில் அலையும் சிறகு..

யார்க்கும் போலொரு அன்னை தந்தை
உன‌க்கும் இருந்த‌து உண்டு
யார்க்கும் போலொரு தேகம் தாகம்
உனக்கும் வளர்ந்தது இங்கு
யார்க்கும் போலே விழிகள் இருந்தும்
உலகமோ இருளில் !

ஒளியைப் போலே ஓர் துணை
வந்து சென்ற‌ துன்பம் யார்க்கும் உண்டோ ?
ஒரு காற்றில் அலையும் சிறகு..

வீதி என்றொரு வீடும் உண்டு
உனக்கது சொந்தமென்று
வானம் என்றொரு கூரை உண்டு
விழிகளும் அறியாது

வேலியில்லா சோலைக்காக‌
வந்ததொரு காவல்
க‌ண்க‌ள் கொண்ட தெய்வ‌மும்
காவ‌லையும் கொண்டு சென்ற‌தேனோ ?
ஒரு காற்றில் அலையும் சிறகு..
bala-arya-movies-cinema-films-reviews-naan-kadavul-stills-003
நன்றி: Song of the Day: kaNNil paarvai from naan kadavuL: “‘கண்ணில் பார்வை’ ஷ்ரேயா கோஷல் பாடிய பாடல்.”

oOo

கண்ணில் பார்வை போன போதும்
கண்ணில் ஈரம் ததும்பும் ததும்பும்
கண்ணில்லாத பேரைக் கண்டால்
கனாக்கள் ஒதுங்கும் ஒதுங்கும்
கனவில் கூட இன்பம்
வராமல் இந்த ஜென்மம் !
ஓ தெய்வமே ! இது சம்மதமோ ?
bala-arya-movies-cinema-pooja-reviews-naan-kadavul-stills-028
முந்தைய பதிவு: எழுத்தாளர் ஜெயமோகன்: நான் கடவுள்

மேலும்: Amma Un Pillai naan – Nan Kadavul பாடல் : இசை « Karthik’s Perception
bala-arya-movies-cool-films-reviews-naan-kadavul-stills-005

எழுத்தாளர் ஜெயமோகன்: நான் கடவுள்: பாலா

நான் கடவுள் குறித்து அவரின் பதிவுகளில் எழுத்தாளர் ஜெயமோகன் எழுதியவை:

காசியில்: கனவின் கதை: “மணிகர்ணிகா கட்டத்துக்கு”

”சார் பெரிய ரைட்டர்!”

ஆனந்த விகடன் பேட்டி 2007

சினிமாவுக்குப் போன இலக்கியவாதி? திரையும் சமரசமும் – ஒரு கடிதம்

படப்பிடிப்பு: தேனியில்…

‘நான் [கிட்டத்தட்ட] கடவுள்’

இசை வெளியீடு: சென்னையில்…

நான் கடவுள், கடிதங்கள்

பதில்: இருகேள்விகள்

நாவல் :ஏழாம் உலகம் :கடிதங்கள்

பயணக்குறிப்பு: இந்தியப் பயணம் 17 – வாரணாசி

மற்ற தமிழ்ப்பட வேலை: கதாநாயகன் தேர்வு

கிசுகிசு – எதிர்வினை: ஜூவியின் பதினாறாம் பக்கம்.

முந்தைய பதிவு:
1. “பிச்சைப் பாத்திரம்”

2. வசனகர்த்தா ஜெயமோகன் பேட்டி

3. Om Siva Om – Vijay Prakash: நான் கடவுள் – இளையராஜா

4. Naan Kadavul – Music

5. நான் கடவுள் – அஹம்ப்ரம்மாஸ்மி

வசனகர்த்தா ஜெயமோகன் பேட்டி: பாலாவின் ‘நான் கடவுள்’

  • மலையாள வசனங்களை நண்பர் ஷாஜி எழுதினார்
  • ‘ருத்ரன் மிகவும் தனிமையில் இருந்தான். அப்பொழுது கடவுள் கூட அவனிடம் இல்லை. இறைவன் இல்லாதத் தனிமை என்னும் எக்ஸ்பிரெஷனை பாலா விஷுவலாக எடுத்திருக்கிறார்.’
  • அஹம் ப்ரும்மாஸ்மி என்பது பிருகதாரண்ய உபநிடதத்தில் இருந்து எடுக்கப்பட்டது. அதனைப் பிற்காலத்தில் ஆதிசங்கரர் விரித்துரைத்தார்.
  • “நான் முழுமையான வணிகப்படத்திற்கு வசனம் எழுதும் மனநிலையில் இல்லை.”
  • “ஏழாம் உலகம் கொஞ்சம் மைல்டாக சொல்லும் விஷயங்கள் இந்தப் படத்தில் இன்னும் தீவிரமாக காட்சியாக்கப்பட்டிருக்கிறது.”

முழு வீடியோ :: Dialogue Writer Jayamohan On Naan Kadavul

naan-kadavul-bala-arya-pooja-ilaiya-raja-aham-brahmasmi

பிற செவ்வி:

  1. நான் கடவுள் குறித்து நடிகை பூஜா
  2. நடிகர் ஆர்யாவின் நேர்காணல்
  3. கலை இயக்குநர் கிருஷ்ணமூர்த்தி :: Nan Kadavul

முந்தைய இடுகை:

1. Om Siva Om – Vijay Prakash: பாடல் வரிகள் & இளையராஜா

2. Naan Kadavul – Music

நான் கடவுள் – அஹம்ப்ரம்மாஸ்மி

11. ட்விட்டரில் வந்த சுறுக் + நறுக் கருத்துக் கோர்வை

10. Movie Reviews in English: Naan Kadawul Cinema Viewers Takeaways

9. சுடச்சுட விமர்சனங்கள், பார்வைகள்ஸ்பாய்லர்கள் இருக்கலாம்

8. ‘Nenu Devudni’ – அஜீத் & பாலா சண்டை; வதந்தி, கிசுகிசு

7. கதை: சென்சார் விமர்சனம்முன்னோட்டம், விமர்சனம், தணிக்கை குழு கருத்து

6. Naan Kadavul – Music: விமர்சனம், மதிப்பீடு, பேட்டி

5. வசனகர்த்தா ஜெயமோகன் பேட்டிவீடியோ

4. நான் கடவுள் குறித்து அவரின் பதிவுகளில் எழுத்தாளர் ஜெயமோகன்வலைப்பதிவு, அனுபவக் குறிப்பு

3. Om Siva Om – Vijay Prakash: பாடல் வரிகள் & இளையராஜா: அர்த்தம், ருத்ரம்

2. “பிச்சைப் பாத்திரம்” – நான் கடவுள்: பாடல் வரிகள்

1. ஒரு காற்றில் அலையும் சிறகு & கண்ணில் பார்வை போன போதும்Lyrics


naan-kadavul-bala-cinema-posters

மும்பை தாக்குதல்: இரு பதிவுகள்

பாம்பே தீவிரவாதி

பாம்பே தீவிரவாதி

பதிவு ஒன்று: உள்ளூர் வார இதழில் அகஸ்மாத்தாக மும்பை குண்டுவெடிப்பு ஆரம்பம் ஆன அன்று வெளியான பாஸ்டன் ஃபீனிக்சில் வெளியாகிய சீதா நாரயணின் கட்டுரை:

The Phoenix > Features > Terror masala: “Bollywood’s colorful, multi-genre musicals serve up their most interesting character yet: the singing, dancing terrorist.”

As such, writers have recently begun to experiment with realism, to introduce region and dialect into the story, to present more nuanced explanations of characters’ motives, and to dare to depict social problems like political corruption, drug trafficking, gang violence, poverty, and, yes, terrorism. These are depressing problems, so what better way to present them than with a dash of Bollywood élan? Which brings us to an unusual movie protagonist: the singing, romancing, family-loving, dancing, emotionally open . . . terrorist.


பதிவு இரண்டு: என்ன நடக்கும் என்பதை சொல்லும் ப்ளாகேஸ்வரியின் இடுகை.

Blogeswari: நாளை?: ராம் கோபால் வர்மா எப்படி திரையாக்குவார் என்பதையும் மகேஷ் பட் கதை எவ்வாறு இருக்கும் என்று சொல்லியிருக்கிறது.

அவரின் முந்தைய அனுபவங்கள்: Blogeswari: நேற்று…. & மீடியாவிற்கு ஒரு வேண்டுகோள்

இளையராஜா பாடி இசையமைத்ததில் பிடித்தவை

ட்விட்டரில் ரோசா சொன்னதில் இருந்து:

1. உனக்கெனத்தானே இன்னேரமா
2. மெட்டி ஒலி காற்றோடு
3. தென்றல் வந்து தீண்டும் போது
4. எங்கே செல்லும் இந்த பாதை
5. தாழம்பூ தலையோடு (படம்:ஆல்பம்)

ட்விட்டரில் உ.வெங்காயம் சொன்னதில் இருந்து:

6. நிலா அது வானத்து மேல
7. காட்டுவழி போற புள்ள
8. ஜனனி, ஜனனி
9. சாமக்கேழி ஏ கூவுதம்மா
10. தரிசனம் கிடைக்காதா

ட்விட்டரில் ரோசா சொன்னதில் இருந்து:

11. உதய கீதம் பாடுவேன்
12. நான் தேடும் செவ்வந்தி பூ
13. உன் குத்தமா என் குத்தமா
14. நம்ம காட்டுல
15. பறவையே எங்கு இருக்கிறாய்.

16. ஒரு ஜீவன்
17. அறியாத வயசு
18. நிலா அது வானத்து மேலே (ரிப்பீட்டு)
19. நல்லதோர் வீணை
20. சந்தரரும் சூரியரும்

21. காதலென்பது பொதுவுடம
22. குண்டுமணி குலுங்குதடி
23. தோள்மேல தோள்மேல
24. பூ மாலையே
25. இந்தப் பூங்காற்று தாலாட்ட

26. ஒரு மஞ்சக் குருவி
27. அம்மன் கொயில் கிழக்காலே
28. என்ன பாட்டு பாட
29. கண்ணியிலே சிக்காதடி
30 கண்ணம்மா காதலெனும்

31. எங்கஊரூ பாட்டுகாரன்
32. காடெல்லாம் பிச்சிப்பூ
33. கண்மலர்களின் அழைப்பிதழ்
34. பொன்னோவியம் கண்டேனம்மா..
35. நில்..நில்..நில்.. பதில் சொல்..சொல்..சொல்.. எனை வாட்டாதே!

36. போடய்யா ஒரு கடிதாசு
37. வீட்டுக்கு வீடு வாசப்படி
38. ஆத்தாடி பாவாடை காத்தாட
39. நின்னை சரணடைந்தேன்
40. உன் குத்தமா என் குத்தமா

ட்விட்டரில் உ.வெங்காயம் சொன்னதில் இருந்து:

41. எடுத்து நான் விடவா (எஸ்.பி.பியுடன்)
42 தென்னமரத்துல தென்றலடிக்குது
43. தரிசனம் கிடைக்காதா (ரிப்பீட்டு)
44. ஆறு அது ஆழமில்ல
45. சந்தத்தில் பாடாத கவிதை

ட்விட்டரில் ரோசா சொன்னதில் இருந்து:

46. ஊரோரமா ஆத்துப்பக்கம்
47. காதல் ஓவியம்
48. அடி ஆத்தாடி
49. நேத்து ஒருத்தர ஒருத்தர பாத்தோம்
50. அந்த நிலாவத்தான்

ட்விட்டரில் உ.வெங்காயம் சொன்னதில் இருந்து:

51. செவ்வரளி தோட்டத்துல
52. புன்னகையில் மின்சாரம்
53. வெளக்கு வச்ச நேரத்துல
54. நான் தேடும் செவ்வந்திப்பூவிது (ரிப்பீட்டு)
55. தாஸ் தாஸ் சின்னப்ப

ட்விட்டரில் ரோசா சொன்னதில் இருந்து:

56. வாட வாட்டுது (சக்களத்தி)
57. சிறு பொன்மணி
58. துள்ளி எழுந்தது காற்று
59. சொர்கமே என்றாலும்
60. யாரோ யாரோ (உல்லாசம்)

61. ரசிகனே என் அருகில் வா
62. வீட்டுக்கு ஒரு மகனை
63. மலரே பேசு
64. திண்டாடுதே ரெண்டு கிளியே
65. வீணைக்கு வீணை

66. சோளம் விதைக்கையிலே
67. அம்மா எனும் வார்த்தைதான்
68. மருதாணி அரைச்சேனே
69. ஆலமரத்துக் குயிலே
70. தோட்டம் கொண்ட ராசாவே

71. தாலாட்டு மாறிப்போனதோ
72. ஒரு கணம் ஒரு யுகமாக
73. ஏப்ரல் மேயில
74. எம்பாட்டு எம்பாட்டு.(பூமணி)
75. தென்பாண்டி சீமையிலே

76. மைனா மைனா மாமன் புடிச்ச
77. இந்த மான் உன் சொந்த
78. சின்னமணிக்காக சேத்துவச்சேன் பாரு
79. அரிதாரத்தை பூசிக்
80.அப்பனென்றும் அம்மையென்றும் (குணா)

81. மச்சி மன்னாரு
82. திண்டாடுதே (ஆனந்தகும்மி)
83. கலயா நிஜமா (கூலி#1)
84. காதல் கசக்குதையா
85.உன்னோட உலகம் வேறு

86. என்ன பாடுவது .. பாட்டெல்லாம் எனக்கு படத்தெரியாது
87. காட்டு வழி கால் நடையா போற..(அது ஒரு கனா காலம்)
88. என்ன மறந்தாலும் (காதல் சாதி )
89. பாட்டாலே புத்தி சொன்னார்
90. தேவதை படத்தில் கவிதா கி.மூர்த்தியுடன் பாடியது

91. தென்ன மரத்துல தென்றல் அடிக்குது
92. காதல் கசக்குதய்யா
93. இந்திரன் வந்ததும்
94. கத கேளு (மை.ம.கா.ரா)

95.காட்டு வழி போற(ம.மம்ப)
96. கத போலத் தோணும், இது கதையும் இல்ல
97. சோழர் குல குந்தவை போல் – உடன்பிறப்பு
98. பாளையம் பண்ணப்புர சின்னத்தாயி பெத்த மகன் எரிய வராண்டா… ஓரம்போ, ஓரம்போ
99. கண்ணே என் கார்முகிலே

101. பொன்ன போல ஆத்தா என்னை பெத்து பொட்டா
102. ராஜா..ராஜாதி
103. எங்க ஊரு காதலை பத்தி – புதுப்பாட்டு
104. உள்ளங்கள் இன்பத்தில் ஆடட்டும் – கவரிமான்
105. அய்யா வூடு தொறந்துதான் கிடக்கு

106. மரத்த வச்சவன்
107. ஊரு உறங்கும் நேரத்தில் (கண்ணா உனை தேடுகிறேன்)
108. அந்த காண்டாமணி
109. வழி விடு வழி விடு என் தேவி வருகிறாள்


கொசுறு:

icarusprakash

  1. தாலாட்டு மாறிப்போனதே – உன்னை நான் சந்தித்தேன்
  2. ஒரு கணம் ஒரு யுகமாக – நாடோடித் தென்றல்
  3. உள்ளங்கள் இன்பத்தில் ஆடட்டும் – கவரிமான்
  4. சிறு பொன்மணி – கல்லுக்குள் ஈரம்
  5. கண்ணே என் கார்முகிலே -வா :: தங்கமான ராசா.
  6. மெட்டி மெட்டி இராகம் எங்கேயோ – மெட்டி
  7. துப்பாக்கி கையிலெடுத்து, ரெண்டு தோட்டாவு பையிலெடுத்து
  8. பொன்னோவியம், சங்கீதமாம் எங்கெங்கும் – கழுகு

kabishraj

  1. திண்டாடுதே ரெண்டு கிளியே – ஆனந்தக் கும்மி
  2. வீணைக்கு வீணை – வீரத்தாலாட்டு
  3. அம்மா என்னும் வார்த்தைதான் – தாலாட்டு கேட்குதம்மா
  4. மருதாணி அரச்சேனே – ராஜா கைய வச்சா
  5. வாடி என் கப்பக்கிழங்கே

Aravindank

  1. பொன்ன போல ஆத்தா என்னை பெத்து பொட்டா.. :: தேடி வந்த ராசா

nchokkan

  1. கத போலத் தோணும், இது கதையும் இல்ல … (வீரத் தாலாட்டு)
  2. ‘இந்திரன் வந்ததும் சந்திரன் வந்ததும் இந்த சினிமாதான்’

வாரணம் ஆயிரம்: ச்சும்மா அதிருதுல்ல! (இரண்டாம் பாகம்)

முந்தைய விமர்சனத் தொகுப்பு

கோவில் மடப்பள்ளியின் அருகே கை கழுவ குழாய் போட்டிருப்பார்கள். பிரசாதம் வாங்கி சாப்பிட்ட பிற்பாடு அங்கு கை நனைத்துக் கொள்வது தாத்பர்யம். அந்தக் குழாய் மித்தத்திலேயே பக்தகோடிகளின் குழந்தைகள் வாந்திபேதி முதல் நான்கு மாதம் முன்பு அனுமனுக்கு சாத்திய வெண்ணெய் முதற்கொண்டு எல்லாமும் மிதக்கும். கற்பூர வாசமும் கமழ, திருவாதிரைக் களியும் கிடைக்க, விறுவிறு துளசியும் கிடைக்கும் சன்னிதானத்தில் இறை மணத்திற்கு குறைவே கிடையாது.

வாரணம் ஆயிரமும் மணக்கிறது.

கற்பூர அரூபமாக தந்தையின் பேரன் பாசம். திருவாதிரைக் களி தரும் அசட்டு தித்திப்புடன் குளிர் தென்றலாகிய பக்கத்து வீட்டு சினேகிதி கம் மனைவியின் பாசம். புதினா போன்ற காரசார சுவையும் இல்லாமல் கருவேப்பிலை போல் லோக்கல் சரக்காகவும் இறங்காத இதமான துளசியாக காதலி. மசாலா அதிகமாகி கடமுடா செய்த குழந்தைத்தனமாக புது தில்லி பயணங்கள்.

திரைப்படமோ, எழுத்தோ, ஓவியமோ! எப்பொழுது நிறைவுறுகிறது?

எனக்கு வீட்டுப்பாடம் செய்கின்ற மகள் அதை முடித்துவிட்டால், இந்தப் பதிவின் இறுதி வாக்கியமும் எழுதப்பட்டிருக்கும். நடிகருக்கு அடுத்த படம் வரை. இயக்குநருக்கு தயாரிப்பாளரின் நிதிநிலை.

வாரணமாயிரத்தில் கவுதமிற்கு நிறைய பட்ஜெட் இருந்திருக்க வேண்டும். இழைப்பதற்கு பதில் இறைத்திருக்கிறார்.

கதாபாத்திரங்கள் எவ்வாறு பார்வையாளனுக்குள் உருவாகிறது?

சம்பவங்களால் நிறைந்தது வாழ்க்கை. திரைப்படம் முடிந்தவுடன் எந்த காட்சிகள் தங்கிப் போகின்றன? பேரனுக்கு கதை சொல்ல முடியாத தாத்தா தெரிகிறார்.

சிம்ரனிடம் வலியுறுத்தப்பட்ட ‘கிருஷ்ணனுக்கு உங்களைப் பிடிச்சிருக்காம்’ நிற்கிறதா?

Movies enact rituals; we know the form; watch 4 variations. Gr8 is the one with free will; சப் குச் சலேகா. but, don’t say that is realistic. – ஸ்னாப்ஜட்ஜ்

திரைப்படங்களில் எனக்குப் பிடித்ததாக மூன்று குணாதிசயங்களை சொல்லலாம்:

  1. அமைதியாக, ஆர்பாட்டமில்லாத மென் நகர்வு
  2. நளினமான நடை, கீறல் விழாத வசனம்
  3. குழப்பமான சங்கதி; ஏன் பிடித்திருக்கிறது என்பதை விளக்க முடியாத விவரிப்பு.

ஓக்லஹோமா குண்டுவெடிப்பு மிகச் சரியான அதிர்ச்சியை (#3) கொடுக்கிறது.

கல்லூரி சகாவிற்கு தினசரி காலை எட்டு மணிக்கு சந்திப்பு உண்டு. உலக வர்த்தக மையத்தின் எண்பதாவது மாடி அலுவலில் போய் உட்காராவிட்டால் சிரச்சேதம் செய்துவிடுவார்கள் என்பான். விதிக்கப்பட்ட 9/11 அன்று மட்டும் வாசற்படித் தடுக்கி விழுந்து விடுகிறான். சிராய்த்த இடத்தில் பேன்ட்டை அவிழ்த்து பேண்ட் – எயிட் போட்டு முதலுதவி முடித்து, மீட்டிங்கைத் தவறவிட்டு போய் சேர்ந்தால், மீட்டீங்கில் இருந்தவர்கள் போய் சேர்ந்திருக்கிறார்கள்.

அன்று மட்டும்! நம்பமுடியவில்லை. நிஜ வாழ்க்கை. விதி?

நளினமான நடை, கீறல் விழாத வசனம் நிறையவே உண்டு. ஆங்காங்கே ஆங்கிலம் கலந்த பி சென்டர், சி சென்டர் என்று பிரித்தாளாத சூழ்ச்சி.

இறுக்கமான உள்பொதிந்த திரைக்கதையாகிய #1 மட்டும் மொத்தமாக சறுக்கி சிவாஜியின் சத்தத்தோடு தமிழ்ப்படமாக அரங்கேறுகிறது. அஞ்சல ஆட்டமாகட்டும்; வெறுமனே காதலர் ஆகி உல்லாசபுரியில் சல்லாசம் ஆகட்டும்; இராணுவ வீரனாக வெற்றி வாகை குவிப்பது ஆகட்டும்; வாசனைக்கு மசாலா அல்ல -> மசாலாவிற்கு நடுவில் பருக்கைகளாக சம்பவங்கள்.

டிஸ்னிவோர்ல்டில் மட்டுமே சாத்தியமாகும் இவ்வாறான கனவுலக நிகழ்வுகள் திரையில் அரங்கேற்றுவது ஸ்லம்டாக் மில்லியனராகும் இந்திய சினிமாவில் மட்டுமே சாத்தியம். எனவே விட்டுவிடுவோம்.

பராக் ஒபாமாவின் தாரக மந்திரம் போல் அப்பா கிருஷ்ணன் நம்பிக்கையாக காலந்தள்ளுகிறார். பில் க்ளின்டன் போல் சகலமும் தெரிந்த அப்பாவின் நிழலில் ஹில்லரியாக மகன் சூர்யா. சூர்யா உணர்ச்சிவசப்படுபவன். அப்பா பற்றற்ற ஞானியாக முன்னேறி செல்பவர். பையனோ கவிஞனை ஒத்த மனநிலையில் துடிப்பானவன்; செயல் வீரன். தந்தை அரசு உத்தியோகமாக காலத்தை ஓட்டுபவர். பிள்ளை ஜார்ஜ் புஷ்ஷின் அமெரிக்காவாக கடன் வாங்கி, முதுவலி அஜீத்தாக ஸ்போர்ட்ஸ் கார் ஓட்டுபவன்.

ஸ்டாக்ஹோம் சின்ட்ரோம் தெரிந்திருக்கும். கூண்டுக்குள் அடைத்த கிரிமினலையே காதலிக்க ஆரம்பிப்பது. அமெரிக்கா வந்த தொணதொணப்பு சூர்யாவின் தொண்ணூறு நாள் சிறையில் மேக்னா மாட்டிக் கொள்ள காதல் ஆரம்பிக்கிறது.

இதன் உல்டா ‘ரிவர்ஸ் ஸ்டாக்ஹோம் சின்ட்ரோம்’. சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருப்பவர் மேல் சிறைக் காவலாளிக்கு அனுதாபக் காதல் தோன்றுவது. இது ப்ரியாவின் நிலை. போதை, குறிக்கோளின்மை என்று இலக்கற்ற வலைப்பதிவனாய் வீடெனும் சிறையில் தனியனாய் ஆன சூர்யாவை பக்கத்து வீட்டு ப்ரியா பச்சாதாப காதல் கொள்கிறார்.

  • மக்கள் மாறுகிறார்களா? இல்லை.
  • உலகம் மாறி விடுமா? ஆம்.

கல்லூரியில் சூர்யாவை சேர்த்துவிட்டு பிரியாவிடை கோரும் தந்தை கிருஷ்ணனுக்கும் போர்முனைக்கு செல்லும் சூர்யாவிற்கு வாழ்த்து சொல்லி அனுப்பும் தாத்தா கிருஷ்ணனுக்கும் வித்தியாசம் உண்டா? கிடையாது. இதெல்லாம் எப்போது உணர முடிகிறது?

கௌதம் மேனன் என்னும் கிருஷ்ணன் → சூர்யா எனப்படும் ‘வாரணமாயிர’த்தை ் → கல்லூரியாகிய திரையரங்கில் விட்டிருக்கிறார். அது எப்படி வளர்கிறது என்பது ‘வாரணம் ஆயிரம்’ கையில் கிடையாது. உலகம் என்னும் உங்களின் அனுபவப் பருக்கையில்தான் எங்கோ ஒட்டியிருக்க வேண்டும்.

‘ஒழுங்காப் படிச்சுடுவான்’ என்னும் நம்பிக்கை, ‘சரியா செஞ்சுடுவான்’ என்று இராணுவத்திலும் தொடர்கிறது. பையன் சூர்யாவும் அதே நம்பிக்கையில்தான் ‘அன்பு வெல்லும்’ என்று மேக்னாவை துரத்தினான். ‘நான் என்னை மீட்டெடுப்பேன்’ என்று மாற்றிக் கொள்ளும் முயற்சியாக ப்ரியாவை கரம்பிடிக்கிறான்.

‘இதைத்தான் செய்யவேண்டும்’ என்பது போன தலைமுறை உபதேசம். ‘மனதிற்கு விருப்பமான லட்சியத்தை எவருக்கும் உபத்திரவமில்லாமல் எப்படியாகினும் செய்து காட்டு’ என்பது இந்தக்கால தாரக மந்திரம்.

மேலும் சில பார்வைகளின் நறுக்குகள்

நடிகர் நம்பியாரா இப்படி செய்தார்? – வதந்தி

முன்னுமொரு காலத்தில் நடிகை சரோஜா தேவி அளித்த பேட்டியில் படித்தது:

“இயக்குநர் ‘கட்’ என்ற பின்பும் நம்பியார் நிறுத்தவில்லை.

முதல் முறை ‘என்ன சார்! நிஜத்திலும் வில்லன் ஆயிடுவீங்க போல?’ என்றேன். சுதாரித்து சுயநிலைக்கு வந்தவர், அடுத்த அடுத்த டேக்கில் மேலும் எல்லைமீறினார்.

கோபம் வந்து எல்லோர் முன்பும் பொரிந்து தள்ளினேன். மன்னிப்பு கேட்ட பின்தான் விட்டேன். அதற்குப் பரிகாரமாகத்தான் அவர் மாலை போட்டு விரதம் செய்கிறார்.”

பைண்ட் செய்யப்பட்ட தொடர்கதையில் பிட் நியூஸாக படித்தது மட்டுமே தங்கிப்போக; எந்தப் படத்தில், எப்போது, எந்தப் பத்திரிகையில் வந்தது என்பது எல்லாம் மறந்துவிட்டது.

இப்பொழுது போல் கத்திரித்து ஒட்டுவதும் அன்றைய வண்ணத்திரை காலத்தில் எனக்கு இல்லாததால் அச்சு ஆதாரம் தற்போது இல்லை.

வாரணம் ஆயிரம்: எதிர்பார்ப்பும் மசாலாவும்

படம் பார்த்த கதை

  • நாலைந்து பேர்தான் இருப்பார்கள் என்று எதிர்பார்த்தேன்; கிட்டத்தட்ட 150 பேராவது வந்திருந்தார்கள். (பாஸ்டன் பக்கத்தில் மட்டும் மொத்தம் பத்து காட்சிகள்)
  • இணையமில்லாத பாலாஜியாக போதை சூர்யா துடித்து முடிந்த திரையரங்கு நிசப்தத்தில், பின் இருக்கை சிறுமி கேட்ட கேள்வி: “What happened to him ma? Why is he acting up like that?’
  • முஸாஃபிர்இல் சமீராவை பார்த்தவுடனேயே பூமிகா மாதிரி பொறுமை, நதியாவின் ஆளுமை, பானுப்ரியாவின் அழகு எல்லாம் சேர்ந்திருக்கும் இவரை தமிழுக்கு அழைக்க வேண்டாமோ என்று பொருமியது.
  • மூகாம்பிகா, மெக்கானிகல், மியூசிக் என்று ‘மின்னலே – 2’வாக இல்லாமல் இருந்தாலும், இடைச்செருகலாய் ஆங்காங்கே ஆசுவாசப்படுத்தியதாக வந்த விமர்சனங்கள் குழப்பியிருந்தது.

படம் எப்படி?

பார்வையாளர் வட்டம் யார்:

  1. நாற்பதைத் தாண்டி ‘நான் சின்னப் பையனாக இருந்தப்ப…’ என்று தொடங்குபவர்கள்.
  2. ‘நமக்குக் கிடைக்கும் நல்ல கணவன், கடைத்தேறும் காலம் வரை மெல்லிய மனங்கவர் காதலனாக இருப்பான்’ என்பதை நம்பும் மணமாகாத பெண்கள்.
  3. காக்க காக்க’வின் மிடுக்கையும் ‘மாயாவி‘யின் துடுக்கையும் ‘பேரழகன்‘ அமரிக்கையும் கொண்டாடும் நடிகர் சூர்யாவின் ரசிகர்கள்.
  4. ‘Chick flick பார்க்கணும்; ஆனா, தமிழில் இருக்கணும்’ என்றெண்ணும் ஆங்கிலேயர்கள்.
  5. ‘எனக்கு கமல் படம் பிடிக்கும்; ஆனா, அம்மா மட்டுமே ஆக்கிரமிக்கும் தசாவதார அதிமுக மாதிரி இல்லாமல், கலைஞர் குடும்ப அங்கத்தினர் போல் பலர் நிறைந்த திமுக வேண்டும்’ என்று ஆசைப்படும் சினிமா ரசிகர்கள்.

கதை:

என் மகள் எனக்கு நேற்று சொல்லியது: He meets this friend first. She dies. He marries another girl later. Now, his father dies.

அப்புறம்?

  • மிகக் குறைவான எதிர்பார்ப்புகளுடன் செல்ல வேண்டும்.
  • நான் சிறுவனாக இருந்தபோது என் பெற்றோர் ‘திரிசூலம்‘ இழுத்து சென்றார்கள். ‘இமயம்‘ போன்ற ‘எத்தனையோ தாங்கிட்டோம்! இதையும் பார்த்துட மாட்டோமா?’ என்பதை தவிடுபொடியாக்கிய சிவாஜி சாரின் நடிப்பு அங்கே எனக்கு கிடைத்தது. உங்களுக்கு இது இன்றைய சிவாஜியாகிய சூர்யாவின் நடிப்புக்கு திலகமாகவும், அடுத்த தலைமுறைக்கு மொக்கை அழுகையாகவும் தோன்றும்.

மொத்தத்தில்?

  • சிக்கன் பிரியாணியில் லெக் பீஸ் கிடைக்கவில்லை. ஆனால், தொட்டுக்க சிக்கன் விங்ஸ் இருப்பதால் நெஞ்சில் பறக்கிறது.

வீடியோ பேட்டி


பதிவுகளும் பதில்களும்

சரித்திரம்

இதுவரை வந்த இவரின் எந்த படமும் சோடை போகவில்லை, ஏமாற்றியதில்லை. வாரணம் ஆயிரமும், ஏமாற்றவில்லை.

ஆனா என்ன ஒரே வித்யாசம்னா, கௌதம் மேனனின், மற்ற படங்களெல்லாம், டிவிடி வாங்கி வச்சுக்கிட்டு, மூணு நாலு மாசத்துக்கு ஒரு தரம், திரும்ப பாத்தாலும் போரடிக்காத வகையைச் சேர்ந்தவை. வாரணத்தை, அப்படியெல்லாம் திரும்ப திரும்ப பாக்கமுடியாது.

சர்வேசன்

லா அன்ட் ஆர்டர் பார்ப்பவருக்கு வேட்டையாடு விளையாடு அரிச்சுவடி என்றால் ப.கி.மு.ச.த்திலும் ஜெனிஃபர் ஆனிஸ்டனே வியாபித்திருந்தார். ‘மின்னலே‘வில் 80 ஹாக்கி அணியாக தங்கம் வென்று ‘காக்க காக்க’வில் 83 கிரிக்கெட் கபில் தேவாக இருந்த கவுதம், முந்தைய இரண்டில் மேட்ச் ஃபிக்சிங் கபில் தேவாக சறுக்கியதை, வாரணமாயிரத்தில் மீட்டெடுத்திருக்கிறார்.


கல்யாணம் செய்தால் திரையில் காட்டித்தான் ஆக வேண்டுமா?

ஒரு சந்தேகம்.

சூர்யா BE முடிக்கும் போது 22 வயசு.

அப்றொம், பிசினஸ் பண்ணி, வீடு கட்டி முடிக்க ஒரு ரெண்டு வருஷம் -> 24 வயசு.

அப்றொம் US visa + US visit ஒரு ஒரு வருஷம்? -> 25 வயசு.

அதுக்கு அப்றொம், போதை, டில்லி பயணம் ஒரு வருஷம்னு வெச்சிக்கலாம். -> 26 வயசு.

Armyல major ஆகறதுக்கு ஒரு 5 வருஷம்? (எனக்கு தெரில) -> 31 வயசு.

அதுக்கு அப்றொம், கல்யாணம் பண்ணி குழந்தை பொறந்து, குழந்தைக்கு 3 வயசு ஆகற மாதிரி காட்றாங்க. சோ இன்னொரு 4 வருஷம் அதுக்கு. ஆக க்ளைமேக்ஸ் அப்போ சூர்யாக்கு 35 வயசு ஆகுது.

குத்து ரம்யா ஒரு சீன்ல சூர்யாவ பாத்து, “உனக்கு 17 வயசு எனக்கு 15 வயசு, அப்போவே உன்ன எனக்கு புடிச்சுது” அப்டீன்னு சொல்றா. சோ படம் முடியும் போது குத்து ரம்யாக்கு 33 வயசு.

வெற ஒரு சீன்ல, குத்து ரம்யாவும், சூர்யாவோட தங்கையும் ஒரே க்லாஸ்னு சொல்றாங்க. ஆக தங்கைக்கும் படம் முடியும் போது 33 வயசு. ஆனா கல்யாணமே நடக்கல? தங்கைக்கு என்ன ப்ரச்சனனு எங்கயாச்சும் சொன்னாக்களா? நான் மிஸ் பண்ணிடேனா?

Truth

ஃபிகர் ஃப்ரீயா இருக்கா என்பதை எவ்வளவு டீசண்ட்டா கேட்கிறார்? தங்கைக்கு கல்யாணமாகவில்லை என்றும் சொல்லவில்லை.


ஆவக்கா பிரியாணி

வேல பாக்கிற கம்பெனி பசங்க எல்லாமா சேந்து வாரணம் ஆயிரம் படம் போறதுக்கு முடிவு பண்ணி இண்டெர்னெட்ல டிக்கெட் புக் பண்ண முடிவு பண்ணிருக்காங்க, அதுல இருந்த ஒரு தெலுகுப்பையன் அந்த குரூப்புக்கு எங்க நமக்கும் வாரணம் ஆயிரம் புக் பண்ணிருவாங்களோன்னு பயந்து எனக்கு ஒரு ஆவக்கா பிரியாணி புக் பண்ணிருங்கன்னு ஒரு முன்னெச்சரிக்கை மெயில் அனுப்பிருக்காரு, அந்த மெயில் லிஸ்ட்ல இருந்த தமிழ்ப்பையன் ஒருத்தரு எனக்கு ஒரு சிக்கன் பிரியாணி ஒன்னு அப்படின்னு ரிப்ளை பண்ணிட்டாரு,ஆவக்கா பிரியாணி ஒரு தெலுங்கு படம்னு தெரியாம.

குடுகுடுப்பை

🙂 😀 😛


Is it an adaptation?

The film was believed to be based on the Best Foreign Film Oscar Winner, ‘Character‘ Directed by Mike van Diem, The Netherlands.

Mohana Krishna

இந்தப் படத்தின் கதையைப் படித்தால் அப்படித் தெரியவில்லை!


மெதுவடை

அப்பா சூர்யா பரிதாபமாக இருக்கிறார்.

கோவி. கண்ணன்

ரஜினி ‘பாபா’ மாதிரி இருக்கார்னு சொல்லாமல் செய்துவிட்டாரே?!


அப்பன் பூஜையில் நுழைந்த கரடி மகன்

இந்தியத் திரைப்படம் ஒன்றுக்கு அடிப்படைக் கட்டமைப்பை ஏற்படுத்தும் கதை என்ற ஒன்று இல்லாததால் திருவிழாவில் தொலைந்த குழந்தை மாதிரி படம் எங்கெங்கோ அலைபாய்கிறது.
:::
தசாவதாரத்தை மிஞ்சிய தொழில்நுட்ப சாத்தியங்கள் சில இரட்டை வேடம் என்பதால் இப்படத்தில் சாத்தியப்பட்டிருக்கிறது. துரதிருஷ்டவசமாக சராசரி சினிமா ரசிகன் அவற்றையெல்லாம் கண்டுகொள்ளப் போவதில்லை.

லக்கிலுக்

Bug testing என்பது கிடைக்கவே முடியாத தவறும் கண்டுபிடிக்குமாறு அமைய வேண்டும். அது போல் ‘நல்லா நடிச்சிருக்கான்யா!’, அருமையான மேக்கப், என்ன மாதிரி கேமிரா என்றெல்லாம் வெளிப்படையாக ஜிகினா ஒட்டாமல்; அதே சமயம் ‘வெள்ளித்திரைபிரகாஷ்ராஜ் சொல்வது போல் தலை வாழை இலையில் பொரியல், வடை, அப்பளம், லட்டு, காரக்குழம்பு என்று ரகரகமாகவும் கொட்டியிருக்கிறார் கவுதம்.


ஆறும் அது ஆழமில்ல

காதலனின் ஒப்புதலைப் பெற டெல்லி வரை வந்திருந்தவளை பிடித்திருக்கின்றது பிடிக்கவில்லை என்று ஒரு முடிவாக சொல்லாத முன் தொட முயற்சிக்கும் சூர்யாவிடம் அவர் காட்டும் கோபமும் கேள்விகளும் அற்புதம். எனக்கும் உன்னோட தோள்ல சாய்ந்துக்கனும் உன்னை கிஸ் பண்ணனும்னு ஆசைதான் ஆனால் என்னை பிடிச்சிருக்கா இல்லையா என்றதையே சொல்லாமல் தொட பார்க்கிற நீ என்ன மாதிரியான மனுஷன் என்கிற அவருடைய கேள்வி ஏனோ என்னை மிகவும் இம்சித்தது.

ஸ்ரீநிவாசன் அ. பால் ஜோசப்


தனயனைக் காத்த தந்தை

மகனின் வாழ்க்கை வழியாக தந்தையின் வாழ்க்கையை சொல்லும் விதம் புதிது. ஒரு இளைஞன் சமுதாயத்தில் நல்ல நிலைக்கு வர வேண்டுமானால் அவனுக்கு அவன் தந்தையிடம் இருந்து கிடைக்கும் ஆலோசனைகளும், வழிகாட்டுதல்களும், சுதந்திரமும் முக்கியம்.

வீரசுந்தர்


சிறுவர்களுக்கான திரைப்படம் அல்ல

படம் நகர நகர நம்மோடு கதைச் சொல்லியும் கூட வந்து நம்மை அவர்களோடு இணைத்துக் கொண்டு படத்தை மெல்ல நகர்த்தும் திறனை கவுதமிடம் யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். ஏனென்றால் நம் தமிழ் இரசிகர்கள் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம், விரைவு, ஒரு நகைச்சுவை தடம் என்று எல்லாமும் கலந்த மசாலாவையே சுவைத்து பழகிவிட்டார்கள். அதுவே தமிழ் இரசிகர்களின் எதிர்பார்ப்பு என்று தெரிந்தும் கூட இப்படிப்பட்ட சிகிச்சையை தைரியமாகத் தந்த இயக்குனருக்கு ஒரு சபாஷ் சொல்லாமல் இருக்க முடியவில்லை.

படத்தைப் பற்றி ஒரு வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால் ‘கவிதை’. ஏனெனில் சிலருக்கு படம் புரியாமலுமிருக்கலாம். குழந்தைகள் நீதிக் கதையின் முடிவில் அப்ப ‘கதை என்ன சொல்ல வருது’ என்று கேட்பது போல் படத்தைப் பார்த்து முடித்த பிறகு என்ன சொல்ல முயற்சியிருக்காங்க என்று கேட்பவர்களுக்குச் சொல்ல எந்த நீதியும் இல்லை.

ஜெஸிலா


வாழ்க்கை என்ன? வாழ்ந்து பார்க்கலாம் அப்பாவும், வாழ்ந்து காட்டலாம் மகனும்

பதின்ம சூர்யா, கல்லூரி சூர்யா, காதல் சூர்யா, பொறுப்பான சூர்யா, தடுமாறும் சூர்யா, அலையும் சூர்யா, திரும்பும் சூர்யா, உழைக்கும் சூர்யா, சாகச சூர்யா, குடும்ப சூர்யா,அப்பா சூர்யா,சந்தோஷமாய் மரணிக்கும் சூர்யா. ஒவ்வொரு காட்சியிலும் புதிய சூர்யாவை பார்க்க முடிகிறது.
:::
சுயசரிதை படங்கள் கசாமுசா வென இருப்பது தான் எனக்குப் பிடித்திருக்கிறது. நேர்கோட்டில் எவரின் வாழ்வும் இல்லை.

அய்யனார்


🙂

நான்: படம் ஆரம்பித்ததுமே அப்பா சூர்யா சிரித்த முகமாகவே சாகிறார்! ஏன்?

சூர்யா: மீதி படம் பாக்க போகும் உங்களை நினைச்சா பாவமா இருக்கு என்று! நினைச்சு பார்த்து இருப்பார்!

குசும்பன்


மிகை நாடும் கலை குறித்த மாற்றுப் பார்வை

தவமாய்த்தவமிருந்து, ஆட்டோகிராப் போன்ற சேரன் படங்களை உயர் மத்தியதர வர்க்கக் குடும்பத்திற்குப் பொருத்தி மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்ப உதவியுடன் உருவாக்கப்பட்டுள்ள படம். ஆனால் தவமாய்த்தவமிருந்து, ஒன்பது ரூபாய் நோட்டில் இருக்கும் ஒரிஜினாலிட்டியும் பார்வையாளனின் மீதான தாக்கமும் வாரணத்திற்குக் கிடையாது. மணிரத்னம், ஷங்கர், மேனன் போன்ற வலதுசாரிச் சினிமா இயக்குனர்களின் படங்களிலிருந்து கேமிரா, இசை, அழகியல் போன்ற சமாச்சாரங்களைக் கழற்றிவிட்டுப் பார்த்தால் அடிப்படை அறிவும் தர்க்கமும் கூட இல்லாது அம்மணமாய் நிற்பது தெரியும்

சுகுணாதிவாகர்


படத்தில் எனக்கு மிகவும் பிடித்த பாடல்

அவ என்ன என்ன தேடி வந்த அஞ்சல…
அவ நெரத்த பார்த்து செவக்கும் செவக்கும் வெத்தல..
அவ அழக சொல்ல வார்த்த கூட பத்தல..
அட இப்போ இப்போ எனக்கு வேணும் அஞ்சல..
அவ இல்ல இல்ல நெருப்பு தானே நெஞ்சில..

வொண்ணுக்குள்ள ஒண்ணா
என் நெஞ்சிக்குள்ள நின்னா..
கொஞ்சம் கொஞ்சமாக
உயிர் பிச்சி பிச்சித் திண்ணா..
அவ ஒத்த வார்த்த சொன்னா..
அது மின்னும் மின்னும் பொன்னா..
உன் எண்ணம் சொல்லி என்னா..
அவ மக்கி போனா.. மண்ணா

அடங்கா குதிரையைப் போல அட அலஞ்சவன் நானே..
ஒரு பூவப்போல பூவப்போல மாத்திவிட்டாளே..
படுத்தா தூக்கமும் இல்ல..என் கனவுல தொல்ல..
அந்த சோழிப்போல சோழிப்போல புன்னகையால…

எதுவோ எங்கள சேர்க்க,
இருக்கு கயித்தில..தோக்க,
ஓ.கண்ணாம்மூச்சி ஆட்டம் ஒண்ணு ஆடிபார்த்தோமே!!

துணியால் கண்ணையும் கட்டி,
கைய காற்றில நீட்டி,
இன்னும் தேடறன். அவள..
தனியா.. எங்கே போனாளோ!!
தனியா.. எங்கே போனாளோ!!
தனியா.. எங்கே போனாளோ!!

வாழ்க்க ராட்டிணம் தான் டா,தினம் சுத்துது ஜோரா,
அது மேல கீழ மேல கீழ காட்டுது, தோடா!!
மொத நாள் உச்சத்திலிருந்தேன், நான் பொத்துனு விழுந்தேன்..
ஒரு மீனப்போல மீனப்போல தரையில நெளிஞ்சேன்…
யாரோ கூடவே வருவார் யாரோ பாதியில் போவார்,
அது யாருயென்ன ஒண்ணும் நம்ம கையில் இல்லையே!!
வெளிச்சம் தந்தவ ஒருத்தி அவளை இருட்டல நிறுத்தி
ஜோரா பயணத்த கிளப்பி,
தனியா.. எங்கே போனாளோ!!
தனியா.. எங்கே போனாளோ!!
தனியா.. எங்கே போனாளோ!!


நான் படம் பார்க்க போகலாமா?

நீண்ட நாவலைப் படிப்பது போல சில சமயங்களில் சுவாரஸ்யமகாவும் சில சமயங்களில் அயர்ச்சியூட்டுவதாகவும் சில சமயங்களில் போதை தருவதாகவும் சில சமயங்களில் வடுவேற்படுத்துவதாகவும், சில சமயங்களில் மென்முறுவல் பூக்க வைப்பதாகவும் இருந்த போதிலும் படிக்காமல் கீழே வைக்க முடியாத அளவுக்கு ஒன்றிப்போக முடிவதாக இருப்பது படத்தின் சிறப்பு.

ஆசிப் மீரான்


உள்ளங்கவர் கதாநாயகி

குத்துரம்யா கொஞ்சம் பப்ளியாய் இப்ப அழகாகவே இருக்கிறார். பெங்களூர் பக்கத்தில் ரம்யாவை ‘கிழவி’ என்று சொல்வார்கள் என்றாலும் – பள்ளிக் கூட மாணவி உடையிலும் அருமையாக இருக்கிறார்.

எல்லாவற்றிற்கும் மேல், கேம்பிற்கு வரும் பொழுது புடவையில் ம்ம்ம் பிரம்மாதம்.

ஆனால் எனக்கு சமீரா ரெட்டியைப் பிடித்துப் போனது, அதற்கு மிகமுக்கிய காரணம் அந்தக் காதலாய்த் தான் இருக்க வேண்டும். RECயில் படித்த அமேரிக்காவில் MS Computers படிக்கும் பிகர் அப்படித்தான் இருக்கும்.

அந்தப் பொண்ணு பேசுற மாதிரி, அந்தப் பொண்ணு நடக்குற மாதிரி தான் இருக்கும். கௌதம் அதை உணர்ந்து செய்திருக்கிறார்.

அந்தப் பெண் சுகி(சுடிதாரில்)யில் வரும் எல்லா சமயங்களிலும் ஷால் அணிந்திருப்பதை கவனித்தீர்களா?

டிரெயினில் சூர்யா அவளிடம் சேட்டை செய்யும் பொழுது சமீராவின் ரியாக்‌ஷன் மனதைக் கவர்வதாக இருந்தது. இந்தப் பொண்ணும் கொஞ்சம் பப்ளியாய், சிரிக்கும் பொழுது அவள் முகமே சிரிக்கிறது.

மோகன்தாஸ்

காளியைக் கண்டு குளிர்வாய் மனமே

செய்தி: Supermodel poses as goddess Kali, sparks a row

விழியம்: Video: Inside Goddess Heidi Klum's Halloween Party! at The Insider

புகைப்படங்கள்: Heidi Klum’s Halloween Costume Kicks Ass