Tag Archives: Web

தமிழ் விக்கிப்பீடியாவும் இயல் விருதும்: கேள்விகளும் சச்சரவுகளும்

E_Mayooranadhan_I_Mayuranathan

இயல் விருது அறிவிப்பு

கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் வருடா வருடம் வழங்கும் வாழ்நாள் சாதனையாளர் விருது (இயல் விருது) இம்முறை தமிழ் விக்கிப்பீடியா என்னும் இணையத்தளக் கலைக்களஞ்சிய கூட்டாக்கத் திட்டத்தை தொடங்கி வெற்றிகரமாக இயக்கிவரும் திரு இ.மயூரநாதன் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. இது தமிழ் இலக்கியத் தோட்டத்தின் 17வது இயல் விருது ஆகும்.

இலங்கையில் வண்ணார்பண்ணை என்னுமிடத்தில் பிறந்த திரு மயூரநாதன் . கட்டடக்கலையில் முதுநிலை பட்டம் பெற்றபின்னர் கொழும்பில் 17 ஆண்டுகள் பணியாற்றினார். 1993-ல் துபாய்க்குப் புலம்பெயர்ந்தவர் தமிழ் அறிவியல் துறையில் கட்டுரைகள் எழுத ஆரம்பித்தார். 2001ம் ஆண்டு ஆங்கிலத்தில் விக்கிப்பீடியா ஆரம்பிக்கப்பட்டபோது, அதன் பின்னணியில் உள்ள தொழில்நுட்பம் கொடுக்கும் ஆற்றலையும், அறிவு உருவாக்கத்தில் அதன் மகத்தான பங்களிப்பையும் உணர்ந்து தமிழ் விக்கிப்பீடியாவை 2003ம் ஆண்டிலேயே தொடங்கினார். முதல் 12 மாதங்கள் தனியாளாக அதன் அடிப்படை வசதிகளைச் செய்து வலுவான தளமாக அமைப்பதற்கு உழைத்தார். பின்னர் சிறிது சிறிதாக இணையத்தளத்தை விரிவாக்கி திறமையான பங்களிப்பாளர்களை இணைத்து மிகச் சிறப்பாக இயங்கும் ஒரு கூட்டுக்குழுமமாக அதை நிறுவினார்.

தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களித்திருப்பவர்கள் ஏறத்தாழ நூறு பேர்தான் எனினும், இன்று 88,000 பேருக்கும் அதிகமானவர்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளனர். கலைக்களஞ்சியத்தில் ஏற்றப்பட்ட கட்டுரைகளின் எண்ணிக்கை 83,000. இதில் 80 வீதம் கட்டுரைகளை ஒதுக்கிவிட்டாலும்கூட 16,600 தரமான கட்டுரைகள் என்பது 24 தொகுதிகள் அடங்கிய அச்சுக் கலைக்களஞ்சியத்திற்கு சமமானது. இம்மாபெரும் படைப்பில் மயூரநாதன் மட்டுமே முதல் கட்டுரையிலிருந்து இன்றுவரை 4200-க்கும் மேற்பட்ட தரமான கட்டுரைகளைத் தொடங்கி உருவாக்கியுள்ளார். இவற்றை அச்சிட்டால், குறைந்தது 500 பக்கங்கள் கொண்ட எட்டு நூல்களாக அமையும்.

இன்று தமிழ் விக்கிப்பீடியா மாதந்தோறும் 3.5 மில்லியன் பார்வையாளர்களை எட்டும் பிரபல தளமாகவுள்ளது. உலகப் பன்மொழி திட்டத்தில் இன்று 291 மொழிகளில் விக்கிப்பீடியாக்கள் இயங்குகின்றன. இதில் தமிழ் மொழியின் இடம் 61. இந்திய மொழிகளில் உள்ள விக்கிப்பீடியாவை அலசியதில், எண்ணிக்கை அடிப்படையில் தமிழ் இரண்டாவதாக வந்தாலும், தரத்தின் அடிப்படையில் பல வகைளில் தமிழ் விக்கிப்பீடியா முதலாவதாக நிற்கின்றது

Wiki_Tamil_Wikipedia_India_Languuages_Charts_Quality_Content_Stats_Statistics_users_updated

சிஜு ஆலெக்ஸ் Shiju Alex 2010 இல் செய்த தர ஒப்பீடு

1. Analysis of the Indic Language Wikipedia Statistical Report 2012 | Indian Wikimedia Stories

2. Wiki turns 15, free libraries a bonanza – Times of India

Page_View_Wikipedia_Tamil_India_Languages_Wkik_Users_Bengali_Hindi_readers_updated

 

கூகுளும் விக்கியும் மொழியாக்கமும்

 

Soda_Bottle_Bala_Jeyaraman-Google_translation_project_-_Tamil_Wikipedia.pdf

நன்றி: 1. A Review on Google Translation project in Tamil Wikipedia – A-Review-on-Google-Translation-project-in-Tamil.pdf

2. Google_translation_project_-_Tamil_Wikipedia.pdf

3. Google Translate Blog: Translating Wikipedia

 

தமிழ்விக்கியில் தரப்பட்டுள்ள புள்ளிவிவரம்

நன்றி: தமிழ் விக்கிப்பீடியா குறித்த தரவுகள்

  • பக்கங்கள்= 2,43,640
  • கட்டுரைகள்= 84,002
  • கோப்புகள்= 9,251
  • தொகுப்புகள்= 20,92,989
  • பயனர்கள் = 94,626
  • சிறப்பு பங்களிப்பாளர்கள்= 304
  • தானியங்கிகள் = 181
  • நிருவாகிகள் = 37
  • அதிகாரிகள் = 4

 

தமிழ் விக்கிப்பிடியா தொடர்பாக எப்போதும் இருக்கும் கேள்விகள்

  1. உங்களைப் பற்றி விக்கிப்பிடியாவில் நீங்கள் தகவல் சேர்த்ததுண்டா?
  2.  உங்களையும் உங்கள் நிறுவனத்தையும் (நீங்கள் எழுதிய புத்தகம், விற்கும் பொருள் போன்றவை) தவிர வேறு எதாவது விக்கிப்பிடியாவில் எழுதியதுண்டா?
  3. ஸ, ஹ, ஜ, ஷ,  ஸ்ரீ, க்ஷ போன்ற எழுத்துக்களை நீக்கி கர்ண கடூரமாக்கும் முறை பற்றி உங்கள் எண்ணம் என்ன? (தொடர்புள்ள இடுகை: விக்கிப்பீடியா:கிரந்த எழுத்துப் பயன்பாடு) – கவனிக்க… எனக்கு பஜ்ஜி சொஜ்ஜி பிடிக்கும்
  4. 85 பேர் சேர்ந்து 78.7% பக்கங்களைத் தொகுக்கும் முயற்சியில் அந்தக் கூட்டமைப்பிற்குத்தானே விருது போக வேண்டும்?
  5. பலரும் வலைப்பதிவு, ட்விட்டர் ஓடை, ஃபேஸ்புக் பக்கம், புத்தக வெளியீடு, அச்சு நூல், ஊடக வேலை என்று பிழைப்பையோ பெருமையோ நாடும்போது, எது தன்னலமற்ற விக்கிப்பிடியாவை நாட வைக்கிறது?
  6. பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் விக்கிப்பிடியாவை குறிப்புதவிக்கு பயன்படுத்தக்கூடாது என்பதை சொல்லியே வளர்க்கிறார்கள். இவ்விதச் சூழலில் விக்கிப்பிடியாவின் பயன்பாட்டையும் மதிப்பையும் எப்படி தக்க வைப்பது?
  7. நீங்கள் எழுதிய ஒன்றை இன்னொருவர் உடனடியாக மாற்றுவார்; உங்களின் ஆக்கத்தை மற்றொருவர் அழிப்பார்; பஞ்சாயத்தில் வரும் தீர்ப்பே இறுதி முடிவு என்னும் சூழலில் தொடர்ந்து இயங்குவதற்கான உந்துசக்தி எங்கிருந்து வருகிறது?
  8. லாபநோக்கற்ற அமைப்புகள் தொடர்ந்து நீடித்திருப்பது ஆச்சரியகரமானது. நன்கொடைகள் மூலமாகவே காலாகாலத்திற்கும் தமிழ் விக்கிப்பீடியா இயங்குமா?
  9. தமிழ் வாசிக்கத் தெரியாத (ஆனால், கேட்க/பார்க்க மட்டுமே தெரிந்த) தலைமுறை இப்போது உருவாகி இருக்கிறது. இந்த நிலையில் தமிழ் விக்கியின் வருங்கால முக்கியத்துவம் எப்படி இருக்கும்?
  10. விக்கிப்பிடியாவின் நம்பகத்தன்மையை எவ்வாறு நம்புவது? காந்திக்கு இரு பக்கம் என்று நிரூபிப்பதற்காக, மஹாத்மாவின் மீது வீசப்படும் சேறுகளுக்கு இடம் தந்து நடுநிலை வகிப்பதாலா? அல்லது மதவெறியைத் தூண்டும் அமைப்பிற்கும் பக்கம் ஒதுக்கி அவர்களின் தூஷணை வெளிப்பாட்டிற்கு தளம் அமைத்து இயங்குவதாலா?

சில சுவாரசியங்கள்

  1. டிசம்பர் 2003ல் முதன் முதலாக துவங்கியவுடன் எழுதப்பட்ட பக்கங்கள்:
    1. 1 2 தமிழ்த் திரைப்பட நடிகைகளின் பட்டியல் ,
    2. 2 2 தமிழ்த் திரைப்பட நடிகர்களின் பட்டியல் ,
    3. 3 1 இந்து சமயம்
  2. பத்து பக்கங்களுக்குள் கை வைத்தவர்களின் எண்ணிக்கை: 11,381 (80% பேர் சேர்ந்து இரண்டு சதவிகிதத்திற்கும் கீழான பக்கங்களில் கை வைத்திருக்கிறார்கள்)
  3. டாப் 10 விக்கிப்பிடியர்களை இங்கேக் காணலாம்.
  4. ஆங்கில் விக்கியில் கீழ்க்கண்ட பக்கங்கள் மிக அதிகமாக மறுபடியும் மறுபடியும் திருத்தி சண்டைக்குள்ளாகி எடிட் செய்யப்பட்டிருக்கிறது:
    1. Sri Lankan Tamil people
    2. Sri Lankan Tamil nationalism
    3. Liberation Tigers of Tamil Eelam
    4. List of top Tamil-language films
    5. Chennai Super Kings
  5. இன்றைய தேதியில் 61ஆம் இடத்தில் தமிழ் இருக்கிறது:
    1. 61 Tamil தமிழ் ta 84,002 243,640 2,092,989 37 94,626 304 9,251 31
    2. Language Language (local) Wiki Articles Total Edits Admins Users Active Users Images Depth
  6. ஆங்கிலத்தில் இருந்து ஸ்பானிஷ் மொழிக்கு விக்கி ஆக்கங்களை உருவாக்கியதைக் குறித்த விழியத்தை இங்கே பார்க்கலாம் (தொடர்புள்ள பதிவு: Duolingo creator: ‘I wanted to create a way to learn languages for free’ | Education | The Guardian)
  7. இன்றைய நிலையில் தலை பத்து விக்கி மொழிகள்:
    1. வரிசை மொழி மொத்த விக்கியில் இந்த மொழியின் பங்கு
      1 ஆங்கிலம் 55.5%
      2 ருஷியன் 5.9%
      3 ஜெர்மன் 5.8%
      4 ஜப்பானிய 5.0%
      5 ஸ்பானிஷ் 4.6%
      6 ஃபிரென்ச் 4.0%
      7 சீனம் 2.8%
      8 போர்த்துஇசியம் 2.5%
      9 இத்தாலிய 1.9%
      10 போலிஷ் 1.7%
  8. பயன்பாட்டின் (உபயோகிப்போரின் எண்ணிக்கைப்படி)
    1. வரிசை மொழி வலைவழியே பார்வையிடுவோர் தொகை     மொத்த வருகையாளர்களின் இந்த மொழியின் பங்கு
      1 English 872,950,266 25.9%
      2 Chinese 704,484,396 20.9%
      3 Spanish 256,787,878   7.6%
      4 Arabic 168,176,008   5.0%
      5 Portuguese 131,903,391   3.9%
      6 Japanese 114,963,827   3.4%
      7 Russian 103,147,691   3.1%
      8 Malay 98,915,747   2.9%
      9 French 97,180,032   2.9%
      10 German 83,738,911   2.5%
  9. விக்கி திட்டங்கள்
    1. திட்டம் உரல்
      விக்கிப்பீடியா http://ta.wikipedia.org/
      விக்‌ஷனரி http://ta.wiktionary.org/
      விக்கி புத்தகங்கள் http://ta.wikibooks.org/
      விக்கி மூலம் http://ta.wikisource.org/
      மேற்கோள் விக்கிப்பிடியா http://ta.wikiquote.org/
      செய்திகள் வாசிப்பது விக்கி http://ta.wikinews.org/
  10. மேலும் புள்ளிவிவரங்கள்
    1. ata Languages Regions Participation Usage Content
      Month Code
      ⇒ Project
      Main Page
      Language
      ⇒ Wikipedia article
        Speakers in millions
      (log scale) (?)

        Editors per million
      speakers (5+ edits)
      Prim.+Sec.
      Speakers
      M=millions
      k=thousands
      Editors (5+)
      per million
      speakers
      Views
      per hour
      Article
      count
    2. Dec Summary Tables Charts ta Tamil AS
      66 M 2 2,668 83,971

எதிர்காலத்தில் என்ன நடக்கும்? – ப்ரூஸ் ஸ்டெர்லிங் பேட்டி

சொல்வனத்தில் இந்தப் பேட்டியின் மேம்பட்ட வடிவம் வெளியாகி இருக்கிறது. மொழிபெயர்ப்பின் முதல் டிராஃப்ட் இங்கே:

கோரி டாக்டொரொவ்: தொழில்நுட்பத்தினால் உலகம் மெருகேறியுள்ளதாக உணர்கிறீர்களா?

புரூஸ் ஸ்டெர்லிங்: நம்மைப் போல் மனிதர் அல்லாத எந்த ஜீவனிடமும் இந்தக் கேள்வியை கேட்டால், அதன் கோணத்தில் பார்த்தால், சர்வ நிச்சயமாய் ’முன்னேறவில்லை’ என்பதுதான் பதில். நிறமிழந்த முயல்களும் மரபணு ஒட்டு போட்ட புகையிலைச் செடிகளும் ‘ஆமாம்’ வாக்கு போடலாம். தொழில்நுட்பம் என்னும் வார்த்தையை புழங்க ஆரம்பித்த கிரேக்கர்கள் காலம் துவங்கி வாழ்ந்து வரும் பவளப் பாறைகளிடமோ கற்பகத்தரு மரங்களையோ கேளுங்கள். நிறைய சோகக் கதைகளை கேட்பீர்கள்.

மாத்யூ பாட்டில்ஸ்: நாளைக்கு என்ன நடக்கும் என்று எண்ணுவதே மனிதனின் நித்திய கலக்கம். வருங்காலம் இப்படி சொக்குப்பிடி போட்டு வைத்திருப்பதில் பிரத்தியேகமாக எதாவது உண்டா?

புரூஸ் ஸ்டெர்லிங்: நம்மைப் போன்ற புதிய தலைமுறையிnar, சரித்திர காலத்தில் இருந்து வரும் ஜோசியர் கையில் எதிர்கால ஆருடங்களை ஒப்படைக்க மாட்டோம். சமீபகாலமாக, வருங்கால ஆருடம் என்று பார்த்தால் நிறைய விஷயம் இருக்கிறது. முதலாவதாக, “வளர்ச்சி” என்றால் என்ன என்றே இப்பொழுது தெரியவில்லை. நம் பழமைவாதிகள் எல்லோரும் புரட்சியாளராகி விட்டார்கள். முற்போக்காளர்கள் எல்லோரும் பழமைவாதிகளாகி விட்டார்கள்.

நம்முடைய எல்லா வகையான சமூகப் போக்கு குறித்தும் அனைவரின் பழக்கவழக்கங்கள் குறித்தும் சேதி சேகரிக்க விரும்புகிறோம். முன்னெப்போதும் இருந்ததை விட அதி பிரும்மாண்டமாக, ஒவ்வொருத்தருடைய அந்தரங்க வாழ்க்கையையும் சமூகச்சங்கிலித் தொடர்புகளையும் கோர்த்து விஷயங்களை பெரிய அளவில் சேமிக்கிறோம். புதுக்கருக்கு இன்னும் போகாமல் இருப்பதால் இப்பொழுது இதில் நிறைய ஆர்வம்; இதெல்லாம் பயனுள்ளதாக மாற்றும்வரை இதில் நமக்கு ஆச்சரியம் இருக்கும்.

ஜியுஸெப்பி கிரானியெரி: உங்களுடைய ‘காதல் விநோதாமானது’ புத்தகத்தில் காவின்ஸ் சொல்வார்: ‘நான் கணினி கிறுக்கன் போல் ஆடை அணிவதில் கவனம் செலுத்தாதவனாக இருக்கலாம்; ஆனால், என்னால் மக்களின் போக்குகளை கணிக்க முடியும்.’ உங்களால் அடுத்த ஐந்தாண்டுகளில் கவனிக்கப்பட வேண்டிய ஐந்து போக்குகளை பொறுக்க முடியுமா?

புரூஸ்: உங்களுடைய கற்பனையை எப்படியாவது குதிரையாக்கினால்தான் என்னுடைய வருங்கால போக்குகளை பொறுக்கமுடியும்.

எதிர்கால கணிப்புகளிலேயே மிக மிக முக்கியானதென்றால், அது வானிலை மாற்றம். மனிதருக்கு அதைப் பார்ப்பதற்கே வெறுப்பாக இருக்கிறது. குற்றவுணர்ச்சியால் குமைகிறார்கள்; அல்லது தோள் குலுக்கி கண்டுங்காணாமல் ஒதுக்குகிறார்கள். ஆனால், நாளைய தேதியில் பெரிய வித்தியாசத்தை, வேறு எந்த சமகால நிகழ்வை விட வெகு ஆழமான பாதிப்பை உருவாக்குவதென்றால், அது இதுதான்.

தனிப்பட்ட முறையில் பார்த்தால், எனக்கு பல விஷயங்களில் நாட்டம் உண்டு. அமெரிக்காவில் தோன்றாத ஆனால் உலகத்தின் பிற நாடுகளின் புகழ் பெற்ற இசை பிடிக்கும். அருகிப் போன ஊடக சாதனங்களை நோட்டமிடுவேன். எண்வய மிடையத்தில் தோன்றும் புதுப் புது கணிமொழிகள் கற்பேன். ஊட்டம் சேர்த்த எதார்த்தம் கொண்டு இயங்கும் கணிப்பொறிகளை விரும்புகிறேன். இணையத்தின் பொருளாக ஒவ்வொரு பொருளிலும் நீக்கமற இணையம் நிறைந்திருக்கும் சாத்தியத்தினை ஆராய்கிறேன்.

உலகத்தில் இதெல்லாம் முக்கியமான போக்குகள் அல்ல. ஆனால், எனக்கு முக்கியமாகப் படுபவை. புரிந்து கொண்டு, ஆழமாகப் படித்து அறிந்து கொள்ள விரும்புபவை. இவை எல்லாமே என்னுடைய வலைப்பதிவில் முக்கியமானதாகவும் அடிக்கடி எழுதப்படுவதாகவும் இருக்கிறது.

இந்த உலகம் முழுக்க பல்வேறு போக்குகாளால் ஆனவை. ஆயிரக்கணக்கில் புத்தம்புது பாதைகள் இருக்கின்றன. ஆனால், ஒன்றே ஒன்றை எடுத்து அதனுள் சென்றால்தான், அந்த நுட்பத்தின் சூட்சுமத்தை நம்மால் பயன்படுத்திக்க முடியும்.

உதாரணத்திற்கு புகை பிடித்தால் உடல்நலம் கெடலாம் என்பதை எடுத்துக்கலாம். அனைவரும் அதை சொல்கிறார்கள். இவ்வளவு ஏன்… அந்த சிகரெட் பாக்கெட்டிலேயே புற்றுநோய் படம் எல்லாம் போட்டிருக்கு. எனவே, விளைவுகளில் எந்த ரகசியமும் இல்லை. ஆனால், முழிப்பு வருகிற வரைக்கும் விடப்போவதில்லை. நமக்குனு வந்துச்சுனாத்தான் வெளங்கும். இது ஒரு பாதிப்பு. அது நம்மைத் தாக்கி உணரவைக்கிற வரைக்கும் தெரியப் போவதில்லை. இப்படித்தான் ஒவ்வொரு ‘போக்கு’ம். நமக்கு அந்தப் போக்கின் விளைவுகள் சொந்தமாவதற்கு நாம் அது கூட உறவாடணும்.

கோரி டாக்டொரொவ்: கணினியில் உருவாக்கும் ஓவியத்திற்கும் பேப்பரில் வரைவதற்கும் நடுவே உள்ளே பிரிவினை என்றாவது இல்லாமல் ஆகுமா? அல்லது ஏற்கனவே மின்னணுவியல் கலைக்கும் துணியில் தீட்டும் கலைக்குமான வித்தியாசங்கள் நீங்கிவிட்டதா?

புரூஸ்: இந்த பாகுபாடு எல்லாம் பாம்பு இரப்பை மாதிரி. மோனே, வான் கோ மாதிரி புகழ்பெற்ற ஓவியர்களின் வேலையை வாங்குவதற்கு ஏலப் போட்டி எதை வைத்து நடக்கிறது? அந்த ஓவியத்தின் கணினி பிரதியை வைத்துதானே.

மின்னணுவியல் கலைகளில் ஒரு வகையை மட்டும் சர்வ நிச்சயமாய் “மின்னணுவியல்” என்று பொதுமைப்படுத்தலாம் — அந்த கலை வடிவத்தில் கம்பிகள் காணக் கிடைக்கும்; மின்சக்தி பாயும்; நிஜமாகவே ஷாக் அடிக்கலாம். அந்த மாதிரி கலைப் படைப்பு நீடித்த தாக்கத்தை உண்டாக்காது.

ஆனால், எப்பொழுது இது துவங்குகிறது? எங்கே முடிகிறது? இந்த அனுபவத்தை சொல்லால் அளந்து விடுவது மிகவும் சிரமமான காரியம். விழியங்கள் எப்பொழுது கலை உன்னதத்தைத் தொடுகிறது? படம் பார்த்த பின்பு அந்த படத்தின் பாதிப்பு எப்பொழுது தீர்ந்து போகிறது?

ஐ-போனில் கிடைத்த அனுபவத்தையும் கம்பிப் பின்னல்களின் நடுவே குவிந்து கிடக்கும் கம்ப்யூட்டர் கலைத் தோற்றங்களையும் கணிமொழியில் நிரலியாளர் நிகழ்த்திய அற்புத சாத்தியங்களையும் எப்படி அந்த விஷயங்களின் நுட்பங்களை தோற்றமும் மறைவும் என்று அறுதியிட்டு பகிர முடியும்?

முன்பு நாடகம் இருந்தது. அது மட்டுமே கலை. இப்பொழுது சினிமாவும் அதற்கு நிகரான கலை. நாளைக்கு மின்னணுவியலில் உருவானவை மட்டுமே கலாவடிவமாகுமா என்பதை மேடையில் கூத்து கட்டின காலத்தில் திரைப்படம் கலையாக ஆகுமா என்று வினவுவதற்கு ஒப்பிடலாம்.

எனக்கு அப்படி மின்கல கலைக் காலத்தை கற்பனை செய்ய இயலுகிறது. ஆனால், நிஜத்தில் நிகழுமா என்றால் மாட்டேன் என்று மனசு சொல்கிறது. ரத்தமும் சதையுமான வடிவத்தை விட்டு விலகும் சமுதாயம் எனக்கு அன்னியமாகப் படுகிறது.

பால் டி ஃபிலிப்போ: எண்பதுகளிலே நீங்கள் அறிவியல் புனைவுகளை எழுத ஆரம்பித்ததற்கு பதிலாக, இன்றைக்கு நீங்கள் அறிபுனை எழுத்தாளராக எழுதத் துவங்கினால், என்ன உத்தியை உபயோகிப்பீர்கள்? புதிய அறிபுனை எழுத்தாளர்களுக்கு தங்கள் பெயரை பரவலாக்க, புகழ்பெற எந்த வியூகம் சரியானது? சுருக்கமாக சொன்னால், 2013ன் நிதர்சனங்கள் என்ன?

புரூஸ்: இது கொஞ்சம் கஷ்டமான கேள்வி. ஒரு விஷயத்தை மட்டும் சிருஷ்டிகர்த்தாவாக பிடித்துக் கொண்டு காலந்தள்ளுவதென்பது இப்பொழுது இயலாதது. இன்றைக்கு அறிபுனை படைப்பாளியாக கலக்க வேண்டுமானால் உங்களுக்கு வலைப்பதிய தெரிய வேண்டும்; கருத்தரங்குகளில் பேச வேண்டும்; காமிக்ஸ் உலகிலும் வளைய வர வேண்டும்; கொஞ்சம் தொலைக்காட்சி; கொஞ்சம் சினிமா…

அறிபுனை எழுத்தாளராக இருந்து கொண்டு புத்தகங்கள் போட்டு, பத்திரிகைகளில் மட்டும் எழுதிக் கொண்டிருந்ததெல்லாம் இறந்த காலமாகிப் போயாச்சு.

எழுத்தாளராவதற்கான முதல் அடி என்பது உங்களுக்கு என்ன வாசிக்க பிடித்திருக்கிறதோ, அதைப் பற்றி எழுதுவது. அதற்கு அடுத்ததாக, நீங்கள் எழுதுவதை எவர் கவனமூன்றி வாசிக்கிறார்கள் என்று அறிந்து கொள்ளுங்கள். அவர்கள் ஏன் நீங்கள் எழுதுவதை விரும்புகிறார்கள் என்று புரிந்து கொள்ளுங்கள்.

உங்களுடைய அதிமுக்கியமான, மிகப் பெரிய அலைகளை உருவாக்கக்கூடிய படைப்புகளுக்கு, எந்த வெளியீட்டாள்ரும் பணம் தரவோ, எவரும் புத்தகமாக வெளியிடவோ வராவிட்டால் ஆச்சரியமே பட வேண்டாம்.

டெட் ஸ்ட்ரிஃபாஸ்: உங்களுடைய எழுத்து நடையையோ, கதைகளின் கருவையோ, தற்கால கணினி உலகிற்காக மாற்றிக் கொண்டீர்களா? வைய விரிவு வலை காலத்தின் புத்தகத் தயாரிப்பும் விநியோகமும் வாசகரோடு தொடர்பு கொள்ளும் முறையும் மாறினதால் எழுத்தாளருக்கு என்ன பின்விளைவுகள் ஏற்பட்டுள்ளன?

புரூஸ்: இந்தப் பிரச்சினையால், எண்பதுகளில் இருந்தே என்னுடைய எழுத்துலகம் மிகவும் சிரமதசையில் இருக்கிறது. இணையத்திற்காக நிறைய எழுதுகிறேன்; அதற்கும் என்னுடைய புத்தகங்களுக்கும் சம்பந்தமேயில்லை. இந்த கஷ்டத்தின் பின்விளைவுகளை சொல்வது சிரமம். ஆனால், அனுமானித்து வைக்கிறேன்.

என்னுடைய நடை கெட்டுப் போயிருக்கிறது. என்னால் எப்படி எல்லாம் பலவிதமாக வெளிப்படுத்திக் கொள்ள முடியும் என்று நான் முழுக்க முழுக்க முனைப்பு எடுத்து பயிலவே இயலவில்லை. ஆனால், அதுவே என்னை விழிப்பாகவும் நெகிழ்வாகவும் வைத்திருந்திருக்கிறது. இதற்கு, தற்கால இசைக் கலைஞரிடம் உள்ள டிஜிட்டல் இசையின் பாதிப்பை ஒப்பிடலாம். நிறைய புதுமையான சத்தங்களை உண்டாக்குகிறார்கள். அவற்றை அவசரமாக உருவாக்குகிறார்கள். ஆனால், அதனால் மட்டும் இசையில் லயிக்க முடிவதில்லை.

என்னுடைய எழுத்தின் மூலம் உலகத்தின் மூலை முடுக்கில் உள்ள அனைவரிடமும் பேச முடிகிறது என்று உணர்ந்தபோது மிகவும் கடமை கொண்ட படைப்பை கொடுக்க முடிந்தது. ஆனால், உலகளாவிய பார்வையினால், தேசிய பதிப்பாளரின் சட்டதிட்டங்களுக்கு அப்பால் என் எழுத்து என்னைக் கொண்டு போய்விட்டது. உலக மக்களுக்காக சர்வதேச சந்தையில் புத்தகம் போடும் பதிப்பாளர்கள் கிடைக்காத காரணத்தால் நூல் எழுதி வெளியிடும் ஆர்வம் குறைந்து போனது.

நடுவண் குடிமக்களுக்காக மட்டுமே அச்சடிக்கும் புத்தக வெளியீட்டாளர்கள் என்னை மறைத்து ஒதுக்குகிறார்கள். ஆங்கிலத்தில் எழுதும் எந்த மேற்கத்திய படைப்பாளிக்கு இந்த மாதிரி புறந்தள்ளல் சகஜமானது. உலகமயமாக்கலின் பொதுப் பிரச்சினை இது.

டெட் ஸ்ட்ரிஃபாஸ், ஜான் சண்ட்மான்: பெருங்கதைகளின் அந்திமக் காலம் நெருங்கி விட்டதாகவும், இனி வரும் காலம் சின்னச் சின்ன கதைகளிலும் குட்டிக் கதைகளை கோர்த்ததாகவும் விளங்கும் என்று சிலர் சொல்கிறார்களே. அதைப் பற்றிய தங்கள் கருத்து என்ன?

புரூஸ்: கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். 2062ல் எவராவது ‘2012ஆம் ஆண்டின் மிகச் சிறந்த ட்வீட்கள்’ என்னும் நூலை வாங்கிப் படிப்பாரா? ‘தலை சிறந்த லைக் பட்டியல்’ என்று கற்பனை செய்ய முடியுமா? நான் வலையில் பதிபவன். கலைத்துப் போட்டு தொகுக்கும் விவரணை எனக்கு பிடிக்கும்தான். வலைப்பதிவு என்பது குறைந்த காலத்தில் கெட்டுப் போகும் பதார்த்தம் போன்றது. நீங்கள் வடிவேலுவின் அவ்வ்வ்வ் காமெடியை ரசிக்கலாம்; பகிரலாம்.

டெட் ஸ்ட்ரிஃபாஸ்: நல்ல அறிபுனை எழுத்தாளர்களைப் போல் நீங்களும் புதிய சொல்லாட்சிகளை ஆங்கிலத்தில் உலவ விட்டிருக்கிறீர்கள். தெரிந்த வார்த்தைகளை வித்தியாசமாகக் கலைத்துப் போட்டு புதிய மொழியை உருவாக்குவது எழுத்தை உயிர்ப்போடு வைத்திருந்தாலும், தேவைதானா?

புரூஸ்: சமூக மாற்றம் மொழியில் உள்ள போதாமையை உணர்த்துகிறது. அதனால், நான் மொழியை அடுத்த கட்டத்திற்கு தள்ளுவதாக தோன்றுகிறது. உதாரணமாக, ’பொருட்களின் இணையம்’ என்னும் உபயோகத்தை எடுத்துக்கலாம். ’பொருள்’ என்றால் எதைக் குறிக்கிறது? எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். உங்களின் கார், ஃப்ரிட்ஜ், செல்பேசி… இப்படி… எந்தப் பொருளாக வேண்டுமானாலும் இணையத்தின் முழு சாத்தியத்தை உள்ளடக்கி இருக்கலாம்.

அடுத்ததாக ‘ஸ்பைம்’ – விண்வெளிகளில் கால வர்த்த பரிமானங்களை அளப்பதற்கான எளிய சொல். மறு சுழற்சி, முப்பரிமாண உருவாக்கம், பொய்த் தோற்றங்களுக்கான மெய்நிகர் என்றெல்லாம் விலாவாரியாக விளக்குவதற்கு பதிலாக ஸ்பைம் என்று சொல்லிப் போய்விடலாம். வேணுங்கிறவங்களுக்கு இருக்கு.

ஒரு பிரச்சினை இருக்கு; அதைக் குறித்து பேசணும்; பொது வெளியில் பரவலாக விவாதிக்கணும்; அதைக் குறித்து முன் கதை சுருக்கம் எல்லாம் சொல்லாமல் சுலபமாக எல்லோரையும் சென்றடைய வார்த்தை உபயோகங்களை உருவாக்குவதில் என்ன கொறஞ்சு போச்சு? ஆங்கிலத்தில் கொச்சை மொழியில் ஆயிரக்கணக்கான புது கிளைமொழிகள் உருவாகிக் கொண்டே இருக்கிறது.

‘பக்கிஜங்க்’ என்று நான் புது வார்த்தை உருவாக்குவதால் ஆங்கிலம் அழிந்துவிடப் போவதில்லை. மறு சுழற்சிக்கு உள்ளாக்க முடியாத கரிம நுண்குழாய்கள் குப்பை போடுகின்றன என்பதற்கு வட்டார வழக்கு உருவாக்குகிறேன்.

‘குப்பைவெளி’ (junkspace) என்றும் உருவருபெருவுரு (blobject) என்றும் கவித்துவமாக நான் பேசுவதாக சிலர் நினைக்கிறார்கள். அது நான் இல்லை. இந்த சொல்லாட்சிகளை கண்டுபிடித்து புழக்கத்தில் விட்டது மட்டுமே நான். அதனால் என்ன போச்சு? நான் அறிபுனை எழுத்தாளன். புது வார்த்தைகளை பயன்படுத்துவதற்காக நான் கைதாகப் போவதில்லை.

மாத்யூ பேட்டில்ஸ்: நாம் எதிர்பாரா வகையில் எது நம் காலங்கடந்து நிற்கும்?

புரூஸ்: பெரும்பாலும், பழங்கால சமாச்சாரங்கள்தான் நம் காலங்கடந்து தாக்குப் பிடிக்கிறது. பிரமிடுகளை எடுத்துக் கொள்ளலாம். மனிதனின் மற்ற எல்லா விஷயங்களை விட நீண்டகாலமாக இருக்கிறது. நாம் சேமிக்கும் இணையக் கோப்புகளை விட பேப்பர் நிலைத்து நீடிக்கும் என்று சொன்னால் அதிர்ச்சியாகத்தான் இருக்கும். ஆனால், வன்தட்டுகள் எளிதில் அழியக் கூடியவை; பிட்டு பிட்டாக பிட்டுகள் உதிர்ந்து போகும்.

மற்ற நாகரிகத்தைப் போல் நாமும் இருந்தால், நம்முடைய குப்பை கூளங்களில்தான் சிறப்பான துப்புகளை விட்டுச் செல்வோம். குப்பை நம்மிடம் நிறையவே இருக்கிறது. பிரமிடு கோபுரம் மாதிரி நிலம் நிரப்பி, குப்பை மலை கொண்டிருக்கிறோம்.

ரிச்சர்ட் நாஷ்: நீங்க முன்பொரு முறை பேசும்பொழுது ’என்னிடம் வருங்காலத்தைப் பற்றி அறுதியிட்டு சொல்ல வேண்டுமென்று கேட்டுக் கொண்டால், நமக்கு வயதாவது மட்டுமே’ என்று குறிப்பிட்டீர்கள். அனைவரின் ஆயுளும் அதிகரித்து வரும் இந்தச் சூழலில் என்ன மாற்றங்கள் நிகழும் என்று சொல்வீர்கள்?

புரூஸ்: இன்றைய முதியோர் பாதுகாப்பங்களில் நம்முடைய வருங்காலத்தை உணரலாம். ஐரோப்பாவில் மூத்த நகரமாக ஜெனீவாவை சொல்கிறார்கள். அதிக அளவில் வயதானோர் வாழ்வதால் அந்த அடைமொழி கிடைத்திருக்கிறது.

ஒவ்வொரு நிறுத்தத்திலும் நின்று நிதானித்து, தடுமாறி ஏறி இறங்கும் முதியோர் நிறைந்த பயணங்களினால் பேருந்துகள் தாமதமாக ஓடுகின்றன. தாத்தா, பாட்டி நிறைந்த காபி கடைகளில் அவசரம் இல்லை; சத்தம் இல்லை.

குழந்தைகளோ அவர்கள்பாட்டுக்கு தங்கள் வயதொத்தவர்களுடன் தனியாக சேர்ந்து அவர்கள் இடங்களில் சுற்றுகிறார்கள். ஜெனீவா கிழவிகளானால் நிறைந்த இடமாக இருக்கிறது. மருத்துவ முன்னேற்றத்தினால் ஆயுள் எதிர்பார்ப்பு அதிகரிக்க, அதிகரிக்க, ஆண் – பெண் பால் சமநிலை சரிகிறது.

இது ஒன்றும் ஆச்சரியமான மாற்றம் அல்ல. ஆனால், மாஸ்கோவுடன் ஒப்பிட்டு பார்ப்போம். அங்கே ஆயுள் எதிர்பார்ப்பு ஜெனீவா போல் நீண்ட நாள் அல்ல. இரைச்சலும் கவர்ச்சியும் கூச்சலும் நிறைந்திருக்கும் மாஸ்கோவில் வாழ்வதும் கடினமே.

ரிச்சர்ட் நாஷ்: ஆயுள் எதிர்பார்ப்பு எல்லோருக்கும் கூடி வரும் காலகட்டத்தில் கலாச்சார மாற்றங்களாக என்ன நடக்கும்? ஒரு பக்கமோ அபரிமிதமான வளம்; இன்னொரு பக்கத்திலோ கடுமையான கருவுறுதிறன் பஞ்சம். வயதாகிப் போன முதியோரும் இந்த செழுமை ஏற்றத்தாழ்வும் எவ்வாறு ஒன்றை ஒன்று தொடுகிறது?

புரூஸ்: கருவளம் கம்மியாவதெல்லாம் கொஞ்ச காலம்தான் நடக்கும். அதற்கப்புறம் எந்த குழுவோட கருத்தரிக்கும் திறன் கம்மியாச்சோ, அவங்கள இன்னொரு குழு ரொப்பிரும். இன்னொரு வார்த்தையில் சொல்லணும்னா, பணக்காரங்களுக்கு குழந்தை பிறக்கவில்லையென்றால், புது பணக்கார வர்க்கம் முளைச்சுரும்.

ஆயுசு ஜாஸ்தியாகிக் கொண்டே போனால், முதியவர்களின் மக்கள்தொகை அதிகரிக்கும்; அதனால், இளசுகளின் குறைவான மக்கள்பேறு விகிதத்திற்கும், கிழவர்களின் எண்ணிக்கைக்கும் சமனாகிப் போச்சு என்று சிலர் வாதிடுகிறார்கள். அந்த மாதிரி கணக்கு என்னிக்குமே வேலை செய்ததில்லை.

இப்பொழுது நிறைய பேர் நிறைய ஆயுட்காலம் வரை வாழ்கிறார்கள். அது கொஞ்சம் எளிது. ஆனால், எல்லாவிதமான மனிதர்களும் நிறைய ஆயுள் வாழவில்லை. அதை சாத்தியமாக்க ரொம்பக் குறைவான முயற்சியே செய்திருக்கிறோம். நான் முடியாதுனு சொல்லவரல. இந்த மாதிரி நோய்வாய்ப்பட்டவர், மூன்றாம் உலகத்தவர்னு எல்லோருடைய வயதும் நீடித்து இருக்கக்கூடியதைப் பற்றி நிறைய அறிபுனை கதை கூட நான் எழுதியிருக்கிறேன். ஆனால், நிஜத்தில் பார்த்தால், ஒண்ணும் நடக்கல.

சோதனை எலியின் ஆயுளைக் கூட ஐந்து அல்லது பத்து மடங்கு அதிகரிக்க முடியல. இரண்டு வருஷம் வாழுகிற எலி, இன்னொரு வருஷம் கூடுதலாக வாழுது. அதை பத்து வருஷமா மாற்ற இன்னும் இயலவில்லை. அப்படி செய்ய முடிஞ்சா என்னோட கருத்து உடனடியாக மாறும்; கூடவே நிறைய கவலையும் வரும்; அரசியலில், சட்டத்தில், பொருளாதாரத்தில், அறத்தில், சமூகத்தில் என்று எல்லா துறைகளிலும் திரும்பிச் செல்ல முடியாத மாற்றங்களுக்கு உட்படுவோம்.

மரியான் டி பியர்ஸ்: நெடுங்காலம் வாழ்வதைப் பற்றி பேசும் இந்த சமயத்தில் மனித குலத்தை காப்பாற்றும் குணாதிசயமாக எதை சொல்வீர்கள்? வருங்காலத்தில் உங்களுக்கு எந்த விஷயம் பெருத்த நம்பிக்கையைத் தருகிறது?

புரூஸ்: என்ன நடக்குதுனே தெரியாமல் பொதுஜனங்கள் இருப்பதுதான் எனக்கு பெருத்த நிம்மதியைத் தருகிறது. கணிக்கவே முடியாத தகவல்களுக்குள் தடுக்கி விழுவதுதான் காலங்காலமாக நடந்து வருகிறது. புதுசு புதுசா தப்பு செய்யும்போதுதான் நாம குண்டுசட்டிய விட்டு வெளியே வருகிறோம். அகிலத்தில் பல ஆச்சரியங்கள் நமக்காக காத்திருக்கின்றன.

நம்மைக் காப்பாற்றி வருவது தூரதிருஷ்டி பார்வை அல்ல… சூது வாதில்லாத தன்மைதான்.

நீல்ஸ் கில்மேன்: உலக இலக்கியங்களில் இருந்து வருங்காலமறியும் தரிசனமும் ஞானதிருஷ்டியும் கொண்ட பார்வை தந்ததில் முக்கியமானது எவை என்று பட்டியலிடுங்களேன்?

புரூஸ்: நிச்சயமாய் வன்னேவார் புஷ் எழுதிய ‘நாம் யோசிக்கும்படி’ (As We May Think) சொல்வேன். ஆனால், அது தற்கால அறிவியல் குறித்த கட்டுரை. அதனால், ‘இலக்கியம்’ என்று ஒத்துக் கொள்ள மாட்டார்கள். எனினும், அசாத்தியமானது.

‘வீரமிக்க புது உலக’த்தில் (Brave New World) ஆல்டஸ் ஹக்ஸ்லி நிறைய கணிப்புகளை சரியாக சொல்லி இருந்தார். அவை நம்மை பயமுறுத்தா விட்டாலும், ஹக்ஸ்லியை அச்சுறுத்தியது.

ஜூல்ஸ் வெர்னின் முதல் நாவலான ’இருபதாம் நூற்றாண்டின் பாரிஸு’ம் அநாயசமாக ஆருடம் கணித்திருந்தது. ஆனால், வெர்னால் அதை அச்சுப் புத்தகமாக்க முடியவில்லை. அதனால் அநாயசமாகவில்லை.

பின்வருவதை முன்பே சொன்னதில் ஆல்பர்ட் ரொபிதாவின் கேலி சித்திரங்களும் சாதனை படைத்தவை.

ஜியூலியானா க்வாஜரோனி: ஊட்டம் சேர்த்த எதார்த்தம் கொண்டு இயங்கும் பொறிகள், நம் வருங்கால தொழில்நுட்பத்திற்கும் இணையத்திற்கும் புனைவுகளுக்கும் எவ்வளவு முக்கியம்?

புரூஸ்: நான் ’மிகைப்படுத்திய எதார்த்த’த்தின் மிகப் பெரிய விசிறி. இந்தத் துறை பலவிதங்களில் பிளவுபடப் போகிறது. விதவிதமான மென்பொருள்களும், கருவிகளும், பிரத்தியேகமான வழிகளும் இந்தத் துறையில் வரும். சிலது பெரிய அளவில் புகழடையும்; சில காணாமல் போகும்.

கணினித்துறை ’ஊட்டம் சேர்த்த எதார்த்தம்’ மூலமாக மீமெய்யியல் லட்சியங்களைத் தொடுகிறது. எது நிஜம்? நிதர்சனத்திற்கு நான் என்ன செய்ய முடியும்? கணினித் துறையினால் யதார்த்தத்திற்கு எந்த ஆபத்துமில்லை.

“விழியத் துண்டுகளை எவ்வாறு கைபேசியில் ஒட்டி வெட்டலாம்?” போன்ற எளிமையான கேள்விகளின் பதிலிலேயே சுவாரசியமான எதார்த்தங்கள் ஒட்டியிருக்கும்.

டிஜிட்டல் கொலையாளிகள்: 66A – ITAct

இன்றைய தேதியில் கசாப்களை விட இணையத்தில் கொலை செய்பவர்கள்தான் அதிகம்.

சின்மயிக்கு @ போட்டு ராகிங் செய்பவர்கள், கார்த்தி சிதம்பரத்தை கிண்டல் அடித்து வெறுப்பேற்றுபவர்கள், பெங்களூர் பிகாரி வன்முறை, ரோஜா செல்வமணி கருத்து காவலர்கள், பால் தாக்கரே என்று யாரை விமர்சித்தாலும் காவல்துறையும் சட்டம்+ஒழுங்கும் துள்ளி எழுகிறதே… ஏன்?

இந்த மாதிரி கோபக்கார புரபசர்களுக்கும் பகிடி புரொகிராமர்களுக்கும் யார் முன்னோடி?

கென்னடியை சுட்டது யார் என்று தெரியும். ஆனால், எதற்காக என்பது அமெரிக்கர்களுக்கு புரியாத புதிர். மூன்று திரைப்படங்கள், பதினேழு புத்தகங்களாவது ஜே.எஃப்.கே. கொலைவழக்கு குறித்து அலசி ஆராய்ந்திருக்கிறது. இதெல்லாம் நடந்து முடிந்த மே 2005, நாஷ்வில் நகரத்தில் இருந்து விக்கிப்பீடியாவில் ஒருவன் எழுதுகிறான்:

1960களில் அட்டர்னி ஜெனரலாக இருந்த கென்னடியின் உதவியளாராக ஜான் செய்காந்தளர் பணியாற்றினார். ஜான் எஃப் கென்னடியும் அவரின் சகோதரர் பாபி கென்னடியும் கொலை செய்யப்பட்டதில் அவருக்கு நேரடி தொடர்பு இருந்ததாக அவர் மேல் சில காலம் சந்தேகம் இருந்தது. ஆனால், அவை நிரூபிக்கப்படவில்லை. 1971ல் ஜான் செய்காந்தார் சோவியத் ருசியாவிற்கு இடம் மாறினார். 1984ல் மீண்டும் அமெரிக்கா திரும்பினார்.

உண்மையில் ஜான் செய்காந்தளர் மார்ட்டின் லூதர் கிங்குடன் போராடியவர். கென்னடிக்காக ஊழியம் செய்தவர். கருப்பின போராட்டத்தில் பங்கு பெற்றவர்.

அவரிடம் இந்த விஷயம் பற்றி விசாரித்தபோது, “என்னப் பற்றி எதற்கு தவறாக எழுதணும்? அதில் எள்ளளவு மட்டுமே உண்மை இருக்கிறது. அவருடைய செயலாளராக இருந்திருக்கிறேன். கென்னடியின் இறுதி ஊர்வலத்தில் அவரை தூக்கும் பாக்கியம் பெற்றிருக்கிறேன். இந்த எழுபத்தெட்டு வயதில் விக்கிப்பிடியாவைக் கற்றுக் கொண்டு, இந்த அவதூறை நீக்குவது எப்படி?” என்று சோர்வும் வருத்தமும் சேறடித்தவர் எவர் என்று கூட தெரியாத அச்சமும் கலந்து பேசியிருக்கிறார்.

கென்னடி குறித்த விக்கி பக்கத்தில் இந்த வடிகட்டின பொய் நூற்றி முப்பத்திரண்டு நாள்கள் நிலைத்து லட்சக்கணக்கானோர் பார்வைக்கு சென்றுள்ளது. வழக்கம் போல் இதை ஆதாரமாகக் கொண்டு ஆன்ஸ்வர்ஸ்.காம், கூகில், ரெபரன்ஸ்.கொம் போன்ற கல்லூரி மாணவர்களும் பள்ளிச் சிறுவர்களும் பயன்படுத்தும் தளங்களும் ததாஸ்து சொல்லி திக்கெட்டும் தகவலைப் பரப்பி இருக்கிறது.

நீங்கள் சுடப்பட்டால் உங்களுக்கே தெரியாது. உங்களின் கேரக்டர் கொலையுண்டதை ஊரார் அறிந்திருப்பார்கள். நம் குணச்சித்திரம் சின்னாபின்னமானது நோர்வே முதல் நமீபியா வரை பரவியிருக்க நமக்கு ரொம்பவே பொறுமையாக அறிவிக்கப்படும். அதுவும் நாமே கண்டுபிடித்தால் மட்டுமே சாத்தியம்.

இந்த மாதிரி இழுக்குகளில் இருந்து சாமானியர்களைக் காப்பாற்றவே சட்டமும் ஒழுங்கும் செகஷன் அறுப்பத்தி ஆறு ஏ-வை உண்டாக்கி இருக்கிறது.

ஆனால், 66ஏ நியாயமாக உபயோகமாகிறதா என்றால், இந்தியாவின் எல்லா சட்டமீறல்கள் போலவே அதுவும் மக்களுக்கு பிரயோசனமின்றி போகும் உபத்திரவ பட்டியலில் +1

Why blogs should not be just Email Subscription Letters?

Bloggers-Tamil-Blogs-Rayar-kaapi-klub-Nesamudan-Venkatesh‘நேசமுடன்’ வெங்கடேஷ் மீன்டும் மின்னஞ்சல் மூலம் தன் எண்ணங்களைப் பகிர அரம்பித்திருக்கிறார்: நேசமுடன் – மடல் இதழ்

தொடர்பான பதிவுகள், விளக்கங்கள்:

1. நேசமுடன் » கொஞ்சம் விளக்கம்; கொஞ்சம் அறிமுகம் ~ மடல் இதழ்

2. IdlyVadai – இட்லிவடை: மீண்டும் நேசமுடன் மடல் இதழ்

பத்து போட்டுவிடலாமா?

அ) மின்னஞ்சல் எல்லாம் செம பழைய நாகரிகம். (ஓல்ட் ஃபேஷண்ட்) சொல்லப் போனால் சொந்த விஷயமற்றதை மின்மடலில் வாராவரம் அனுப்புவது நாகரிகமற்றது. (ஃபேசன்லெஸ்)

ஆ) ‘மின்னஞ்சல் மூலம் பெற’ என்னும் வசதியை வோர்ட்ப்ரெஸ் பதிவில் இணைப்பது வெகு சுலபம். ஜெயமோகன்.இன் கூட இதை செய்திருக்கிறது. விரும்புபவர்கள், இவ்வாறு செய்து கொள்ளலாம் என்று ஒற்றை மடலை (ஒரேயொரு தடவை) அறிவிப்பாக அனுப்பலாம். அப்படி ஒரு ப்ளகின் இங்கே: Subscribe2 Plugin. கூகிள் ஃபீட்ரன்னர் கூட இருக்கிறது. அதை விட்டுட்டு…

இ) என் மனைவிக்கு கூட இந்த மடல் வருகிறது. அவர் வெகு அமரிக்கையாக ‘எரிதம்‘ என்று ஒதுக்கிவிடுகிறார். நாள்டைவில் இவ்வாறு பலரும் ஸ்பாம் என்று குறியிடுவதன் மூலம், வெங்கடேஷ் ஐடி, தானியங்கியாக அனைவருக்குமே ‘எரிதம்’ என்று குறியிடப்பெற்று ஒதுக்கப்பட்டுவிடும். அவசர, ஆத்திரத்திற்கு கூட தொடர்பு கொள்ள முடியாமல் போய்விடும்.

nesamudan_books-kizhakkuஈ) இந்த மாதிரி கேட்காமல் கொடுக்கப்படும் எதற்குமே மதிப்பில்லை. மேலும், இந்தப் பதிவெல்லாம் நேசமுடன் வலையக சேமிப்பில் கிடைக்கவும் செய்கிறது. அப்படியிருக்க, ஏன் தனி மடலில் படிக்க வேண்டும்?

உ) ஆர்.எஸ்.எஸ் செய்தியோடை நன்றாக வளர்ந்து வயசுக்கு வந்துவிட்ட காலத்தில், இந்த மாதிரி அரதப் பழசான நுட்பம் தேவைதானா?

ஊ) இந்த மின்னஞ்சலைக் கைவிடக் கூடாது என்றால் அதற்கும் உபாயம் இருக்கிறது. ஆரம்பத் தொனியிலேயே அன்னியோன்யம் கொஞ்ச வேண்டும். வேறெங்கும் (குறிப்பாக அவரின் நேசமுடன் வலையகத்தில்) கிடைக்காத சரக்காக இருக்க வேண்டும். ஹரிகிருஷ்ணன் கடிதம் போட்டதைத் தொட்டு; மாலனின் புதிய பத்திரிகையில் வந்த பின் குறிப்புகளின் சுவையான விரிவாக்கம்… இப்படி

எ) அவருக்கு பிறர் அனுப்புமகின்ற பதில்கள், இணையத்தளத்தில் மட்டும்தான் கிடைக்கிறது. அதுவும் ஏன் பார்சல் செய்யப்படுவதில்லை?

ஏ) மின்னஞ்சல் என்றால் சட்டுபுட்டென்று சங்கதிக்கு வர வேண்டும். மூன்று பத்திக் கட்டுரைகளை ஆசுவாசமாக வாசிக்க இயலாது. கடைசியாக எண்ணியதில் ஜிமெயிலில் மட்டும் என்னிடம் இப்படிப்பட்ட படிக்க வேண்டிய மடல்கள்: 3425.

Nesamudan-Venkateshஐ) ஒரு வேளை இது கடித இலக்கியம். நமக்குத்தான் மேட்டர் புரியவில்லையா? (தொடர்புள்ள பதிவு: கடித இலக்கியம் :: கடிதச் சேகரம்: “கல்யாண்ஜி”

ஒ) நேசமுடன் வரும் வெங்கடேஷின் மடல் இன்பாக்சில் வந்தவுடன் துள்ளியெழும் ஆர்வமும், அலுவல் சந்திப்புக்கு செல்லும் ஐந்து நிமிடத்திற்குள் மேலோட்டமாகவாவது படிக்கும் உணர்வும், அதற்கு இரண்டு வரி பதிலனுப்பும் உத்வேகமும் தொடரவேண்டும் என்னும் எண்ணத்தில் மட்டுமே இந்த 10 போடப்பட்டுள்ளது.

இவ்வளவு செல்லமாக மிரட்டிவிட்டு, டிஸ்க்ளெய்மர் இல்லாவிட்டால் எப்படி: பதிவின் உள்ளடக்கத்தைப் பற்றி பேசு என்றால், பதிவு எப்படி வருது என்று டெல்வரி மெகானிசத்தைப் பற்றி மட்டும் அங்கலாய்க்கிறானே இவன்! (மனசாட்சி)

Top 3, 10, 20 in உரையாடல் போட்டிக்கான கதைகள்: Quick Reviews

‘உரையாடல் சமூக கலை இலக்கிய அமைப்பின்’ சார்பாக அறிவிக்கப்பட்டிருந்த சிறுகதைப் போட்டி முடிவுகள் வெளியாகி விட்டன.

போட்டி குறித்த பதிவுகள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன: Snap Judgement: Uraiyadal: Jyovram Sundar & Paithiyakkaaran Short Story Contests: Tamil Bloggers Fiction Competition Results

இனி வென்றதிலும் கலந்து கொண்டதிலும் நான் படித்த சில கதைகளும் கருத்துகளும்:

  • யோசிப்பவர்: பிரசன்னம்: கதை பிடித்திருக்கிறது; தலை பத்தில் இடம்பெற வேண்டும் என்று சொல்லுமளவு பிடித்திருக்கிறது. அறிவியல் இருந்தது. மாயாஜாலம் இருந்தாலும் நம்பக்கூடிய, அசர வைக்கும் முடிவு.
  • அம்மாவுக்குப் புரியாது – RV « கூட்டாஞ்சோறு: ஆர்.வி. நிறைய வாசிப்பவர். அவ்வளவு பரந்த வாசிப்பு, நல்ல சிறுகதையைத் தரும் என்பதற்கு உத்தரவாதம் ஏதுமில்லை என்பதற்கு இந்தக் கதை ஒர் உதாரணம். (உரிமைதுறப்பு: நானும் நிறைய இலக்கியம் படிப்பவன்; சிறுகதை எழுத வரவில்லை 😦 முடிவை மட்டும் நம்பும் புனைவு. தட்டையான விவரிப்பு. சுவாரசியமான வாசிப்பு என்பதாலும் இதை விட மோசமான கதைகள் கூட தலை 20ல் இடம் பிடித்திருப்ப்பதாலும், 250க்குள் பெஸ்ட் ஆக இருந்திருக்கும்!?
  • கவிதா | Kavitha: அப்பா வருவாரா?: வலையில் எழுதுபவர்களில் பெண் பதிவர்கள் வெகு குறைவு. எனவே, இட ஒதுக்கீடு என்னும் எண்ணத்தில் இந்தக் கதை தெர்ந்தெடுக்கப்படலாம். பெண் எழுத்தாளர்களை ஊக்குவிக்க வேண்டும் என்பது தவிர இந்த ஆக்கத்தில் கரு கிடையாது; முடிச்சு கிடையாது; ரொம்ப மேலோட்டமான விவரிப்பு. கிழக்கு பதிப்பகம் புத்தகம் போட்டு, இணைய அறிமுகம் இல்லாதவர் இந்த மாதிரி கதைகள்தான் இணையத்தில் வலம் வருகிறது என்று எண்ண நினைத்தால், அது மிகப் பெரிய துரதிர்ஷ்டம். நான் ஆதவன்’ மறுமொழி அவசியம் வாசிக்க வேண்டும்.
  • நல்ல கதை என்பது பாஸ்டன் நகரத்து Deciduous மரம் போன்ற தன்மையுடையது. படிக்கும் போது பூப் பூக்கும் வசந்த காலம். முடிவு நெருங்க நெருங்க வண்ணம் மாறி மாறிக் காட்சியளிக்கும் இலையுதிர் காலம். பனிக்காலமாக கதை முடிந்த பிறகும், அந்த மரமாகிய புனைவு மனதில் நிற்க வேண்டும். வேறெங்கோ பச்சை பாசியைப் பார்க்கும் போதோ, சூரியோதய ஆரஞ்சை கவனித்தாலோ, அந்த மரம் உதிக்கும். கதையும் அது மாதிரி நிறம் பலகாட்டி நிலைத்து நிற்க வேண்டும்.

  • சேரல்: கருப்பு வெள்ளை: நீர் வழிப்படூஉம் புணை: எழுத்து என்றால் அப்படியே உள்ளே இழுக்கணும். இந்தக் கதை கொக்கி போட்டு கதையினுள் மூழ்க வைக்கிறது. தலை மூன்றில் இடம்பிடிக்கத்தக்க ஆக்கம். தெரிந்த பின்னணியைக் கூட வித்தியாசமான சித்தரிப்புகளும் விலாவாரியான விவரணைகளும் கொண்டு படம்பிடிக்கிறார். மேற்கோள் காட்ட தூண்டும் நடை:
  • வேட்டியைத் தூக்கிக் கட்டி இருந்ததில் கால்களிரண்டும், எலும்பும் தோலுமாகச் சப்பிப்போட்டது போல் தெரிந்தன.

  • நந்தவேரன் :: அவளாக இருந்திருக்கலாம் « Associated Directors of Tamil Movies: சும்மா துள்ளிக் கொண்டு போகிறது. நெஞ்சை லபக்கும் ஒயில் ஓட்டம். இராஜேஷ் குமாரும் பட்டுக்கோட்டை பிரபாகரும் கலந்தாலோசித்து எழுதிய கதையின் முடிவை சுஜாதா கொடுத்தால் எப்படி இருக்கும். தலை பத்து நம்ம சாய்ஸ்.
  • பட்டாம்பூச்சி விற்பவன் » Rejovasan » பெண்கள் இல்லாத ஊரின் கதை …: தலைப்பில் கதை சொல்லக் கூடாது என்பது எல்.கே.ஜி பாடம். அதுவும் இந்த , ¹ ‘??’ அடுக்கு கேள்விகளினால் தொக்கி நிற்கும் வினா, ² Ellipsis ‘…’, ³ ‘ஏதோ ஒரு உணர்வு’ போன்ற ஃபீலிங்ஸ் சிதறல், ஆகியவை தவிர்த்து, விரிவாக்கவேண்டும் என்பது அரிச்சுவடி. புதியவர்களுக்கான இட ஒதுக்கீடாக இந்த மாதிரி சின்ன விஷயங்களை விட்டுவிடலாம். மிக நல்ல முஸ்தீபு. அதை விட சிறப்பான premise. ஆனால், சொல்வதற்கு தடுமாறுகிறார். வார்த்தை தேர்வுக்கு அகராதியைத் துணைக்கழைக்கலாம்; அல்லது வாசிப்பை விரிவாக்கலாம். மிக மிக அருமையான முயற்சி. முயற்சி மட்டுமே.

பார்ப்பதற்கு பளபளவென்றிருக்கும் பழுதாகிப்போன பார்க்கர் பேனாவை விட, படபடவென் எழுதும் பால்பாயின்ட் பேனாவே மேல். திறமை இருக்கிறது. ஆசை இருக்கிறது. அவசரமும் நிறையவே இருக்கிறது. உழைக்கத் தெம்பில்லை. உங்களுக்கு இராமநாதன் கிருஷ்ணன் தெரிந்திருக்கும். அமிர்தராஜ் சகோதரர்கள் கூட அறிந்திருப்பீர்கள். திறமை என்பது கஷ்டப்படுவதாலும், வாய்ப்பு கிடைப்பதாலும் மட்டும் எட்டப்படுவதில்லை.

  • ஸ்ரீதர் நாராயணன் :: ஒருபக்கம்: காதோரமாய்: எனக்கு நரசிம்ம ராவைத் தெரியும் என்று பீற்றிக் கொள்வது மாதிரி, நான் orupakkam அறிவேன் என்று சொல்லிக் கொள்ள ஆசைப்பட வைக்குமாறு கதைகள் எழுதுபவர். ‘என்னமா எழுதறாரு?!’ என்னும் மலைப்பிலேயே ஒட்டக்கூத்தராய், என் கதைகளை ட்ராஃப்டிலேயே வைத்திருக்க வைப்பவர். இது தலை மூன்றில் இடம்பிடிக்கத்தக்க கரு + விவரிப்பு + முடிவு.
  • வெட்டிப் பயல்: வாழையடி வாழை: சென்ற ஆசிரியரின் இடுகை போலவே எதிர்பார்ப்புடன் எதிர்கொண்ட கதை. வெட்டி பாலாஜியின் குட்டிப் பாப்பா இதை விட சிறந்த ஆக்கம். விவாதப் பொருள் தரும் அழுத்தம், புதுமையான தற்காலச் சூழல் போன்றவற்றில் மேலும் சிறப்பானதால், அதுதான் தலை பத்தில் இடம்பிடிக்கும் என்று கணித்திருந்தேன். ஜெயகாந்தன் காலத்து சித்திரத்தை, இந்த இணையக் காலத்தில் எவரும் இவ்வளவு நேர்த்தியாய் தரவில்லை என்றாலும், ஃப்ரெஷ்னெஸ் லேது.
  • இரா வசந்தகுமார் :: என் பயணத்தின் பிம்பங்கள்…!: மனையியல்.: வெளியானவுடன் வாசித்தது. அப்போதைக்கு இதுதான் #1. இப்போதைய வாசிப்பிலும் தலை மூன்றில் ஒன்று. மிக கச்சிதமாக, சொல்ல வந்ததை ஆயிரம் வார்த்தைக்குள் முழுமையாக கொடுப்பது லேசுப்பட்ட காரியம் இல்லை. வெகு நேர்த்தியாக செய்திருக்கிறார்.
  • நுனிப்புல்: அவள் பத்தினி ஆனாள்- ராமச்சந்திரன் உஷா: நான் ரா.கா.கி., தமிழோவியம் எழுத ஆரம்பித்தபோது இவரும் திண்ணை, கல்கி என்று சூறாவளியாக நுழைந்ததால், ‘என்னோடு எழுத வந்தவர்’ என்று சொல்லிக் கொள்ளப் பிரியப்படுபவர். ஆனால், நான் இன்னும் ஆங்காங்கே எழுதிக்கொண்டிருக்க, இவரோ அமெரிக்காவின் ஆக்ரோஷத்தோடு புதிய எல்லைகளைத் தொட்டு, பன்னாட்டு இதயங்களைத் தொட்டு, பல எல்லைக்கோடுகளைத் தாண்டி எங்கும் ஆக்கிரமிக்கும் ஆற்றலுடையவர் என்பதற்கான ஒரு பதம், இந்த ஆக்கம். தலை மூன்று இடம்பிடிக்க வேண்டும்.
  • மைய விலக்கு « இன்று – Today :: சத்யராஜ்குமார்: பரிந்துரை முன்பே எழுதியாச்சு
  • அகநாழிகை: தற்செயலாய் பறிக்கப்பட்ட ஒரு மலர் – அகநாழிகை வாசுதேவன் : நான் கூட எதையாவது கிறுக்கியிருந்தால், பேரை வைத்து மிரட்டியே தலை இருபதிற்குள் இடம்பிடித்திருக்கலாம் என்னும் நப்பாசையைத் தூண்டிய புனைவு. அச்சுப் புத்தகத்தில் இடம்பெறும் அருமையான வாய்ப்பை கோட்டை விட்டுட்டோம் என்னும் வருத்தம் மட்டுமே இந்தப் புனைவைப் படித்தவுடன் மேலோங்கியது.
  • ட்விட்டரில் சொன்னது: Tht piece lacked freshness, was more adjective oriented, pretentious & preachy.

  • இவள் என்பது பெயர்ச்சொல்: வழியனுப்பிய ரயில் – உமாசக்தி: வாசித்து ரொம்ப நாளாகி விட்டது. தேர்வாகும் என்று சத்தியமாக எதிர்பார்க்கவில்லை. ஓரளவு நல்ல கதை. ஆனாலும், முழுமை உணர்வு கிட்டவில்லை. ரொம்ப அவசரப்படுத்தும் அவஸ்தை. இன்னும் கொஞ்சமாவது காரண காரியங்களின் அஸ்திவாரம் இல்லாததால் ஆட்டம் கண்ட கதை.
  • தமிழன் – காதல் கறுப்பி...: மலைகளில் காணாமல்போன தேவதைகள்…: இது மெஜிக்கல் ரியலிஸம் என்பதை விட உள்மன கிடக்கையை எழுத்தில் கொணரும் முயற்சி. வித்தியாசமான பெயர்கள், அதிகம் அறிந்திராத தலம் போன்றவற்றிற்காக தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கலாம். மற்றபடிக்கு ‘பாய்ஸ்’ படத்தில் ஃபேண்டசி கதைகளை அவிழ்த்துவிடும் குண்டுப் பையனிடம் ஜொள்ளொழுக கேட்பதையொத்த அனுபவம்.
  • நீரோடையில் தக்கை…: வள்ளியம்மையின் பழுப்பு கண்கள் – புபட்டியன்: பதின்ம வயதினரின் பருவக் கோளாறையும் ஃபேன்டசியையும் செல்வராகவனின் ‘ஆயிரத்தில் ஒருவன்’ முன்னோட்டத்தையும் பார்த்து சூடு போட்டுக் கொண்ட கதை.
  • நந்தாவிளக்கு: நான் அல்லது நான் – நந்தா குமாரன்: அசத்தலான ஆரம்பம். அடைப்புக்குறி ஆரம்பத்தில் கடுப்பேற்றினாலும், போகப் போக சுவாரசியத்தைக் கூட்டியது. ஆனால், தமிழ்ப்படத்தில் இரு வேடம் தரிப்பது போல் இரண்டு ‘நான்’களுக்கும் போதிய கதாபாத்திர வடிவமைப்பு இல்லாமை அலுக்க வைக்கிறது. முடிவில் கொஞ்சம் தட்டி கொட்டி மேலும் உருப்படியாக கொணர்ந்திருக்கலாம். என்னுடைய தலை இருபதில் நிச்சயம் இடம் உண்டு.
  • வெண்ணிலா பக்கங்கள்: நீரும் நெருப்பும்: பிடித்திருந்தது. ஏற்கனவே இது போன்று பல ஆக்கங்கள் வாசித்திருந்தாலும், போட்டிக்கு வந்ததில் இது போல் ஒன்று தேர்ந்தெடுக்கப்படுவது வெகு பொருத்தம். தலை பத்து.
  • GURU: காத்திருத்தல் – சரவணன்.P: எளிமையான வடிவம்; உள்ளடக்கம். அதைக் கொணர்ந்த விதம் சிறப்பு. நடுவர்கள் தீர்ப்பளித்திருக்காவிட்டால் தவறவிட்டிருப்பேன். தலை பத்து.
  • கிணற்றில் மிதக்கும் நிலவின் சடலம் – நிலா ரசிகன் :: சிறுகதைகள் & பாடல்கள: நிறைய கதை இருப்பதால் நிறைந்த உணர்வைக் கொணர முடியாது. வாய் முழுக்க தண்ணீரை வைத்துக் கொண்டு பேச முடியுமா? ‘அச்சமில்லை… அச்சமில்லை’ ஆரம்பித்து பார்த்த ஆதிகால ஆதிச்சநல்லூர் கருவின் அத்தியாய சுருக்கங்கள்.
  • எண்ணச் சிதறல்கள்: அம்மாவின் மோதிரம் – எம் ரிஷான் ஷெரீப் : பிடித்திருந்தது. வித்தியாசமான பொறுமையான நடை. தலை பத்து.

என்னைக் கவர்ந்த தலை 10 தமிழ் சிறுபத்திரிகைகள்

முந்தைய பதிவு: தமிழ் சிறுபத்திரிகைகள்

  • காலச்சுவடுஉலக்த் தமிழ் இதழ் பதிப்பாளர் – ஆசிரியர்: எஸ். ஆர். சுந்தரம் (கண்ணன்) / பொறுப்பாசிரியர்: தேவிபாரதி
  • உன்னதம் நவீன இலக்கியத்தின் பன்முக ஆளுமை: ஆசிரியர், வெளியிடுபவர்: கௌதம சித்தார்த்தன்
  • உயிர்மை: ஆசிரியர்: மனுஷ்ய புத்திரன்
  • வார்த்தை தெளிவுபெற அறிந்திட : ஆசிரியர்: பி. ச. குப்புசாமி / இணையாசிரியர்: பி. கே. சிவகுமார்
  • எதுவரை? – மரணத்திலிருந்து வாழ்விற்கு: நிர்வாக ஆசிரியர்: எம். பௌஸர்
  • புதுவிசை கலாச்சாரக் காலாண்டிதழ்: ஆசிரியர்: சம்பு / சிறப்பாசிரியர்: ஆதவன் தீட்சண்யா : (Pudhuvisai | Art | Culture | Short Story | poem)
  • உயிர் எழுத்து படைப்பிலக்கியத்தின் குரல்: ஆசிரியர்: சுதீர் செந்தில் / நிர்வாக ஆசிரியர்: சிபிச்செல்வன்
  • யுகமாயினி முரண்பாடுகள் மத்தியில் ஒருத்துவம்; கலகத்தில் மலரும் சுதந்திரம் :: Yuga Maayini
  • கவிதாசரண் இதழாய் ஒரு எழுத்தியக்கம்: (Kavithaasaran’s Web Page | Literature | Magazine | Tamil | Poems | Articles: Kavitha Charan
  • தமிழினிகலை இதழ் : ஆசிரியர்: நா விஸ்வநாதன்

மற்றவை: இந்திய இதழ்கள் – விக்கிப்பீடியா

தமிழ் சிறுபத்திரிகைகள்

முதலில் ஜெயமோகனின் பரிந்துரை: Jayamohan » பண்பாட்டை பேசுதல்…

என்னைக் கவர்ந்த தலை 10 தமிழ் சிறுபத்திரிகைகள்

அடுத்து அவர் சொன்ன சஞ்சிகைகள் மற்றும் விட்டுவிட்ட சிறுபத்திரிகைகளில் இணையத்தில் காசு கொடுத்தோ/கொடுக்காமலோ கிடைப்பதின் பட்டியல் போட்டுவிடுவோம்:

1. Kaalachuvadu :: காலச்சுவடு

2. Uyirmai :: உயிர்மை

3. Amrudha :: அம்ருதா

4. வார்த்தை :: Vaarthai

5. Thamizini :: தமிழினி

6. பத்திரிகைத் தொகுப்பு :: கீற்று

7. Thendral :: தென்றல் (அமெரிக்கா – கலிஃபோர்னியா & நியூ ஜெர்சி)

8. குமுதம் தீராநதி :: Theeranadhi

9. உயிர்நிழல் :: Uyirnizhal tamil exile magazine

10. வடக்கு வாசல் :: vadakku vaasal

11. வல்லினம் – கலை, இலக்கிய இதழ் | Vallinam – Magazine For Arts

12. ஈஷா – காட்டுப்பூ :: Isha Foundation – Isha Kaattu Poo Magazine

13. புதுவிசை :: Pudhuvisai | Art | Culture | Short Story | poem

14. சில சஞ்சிகைகள்; சில குறிப்புக்கள் | டிசே தமிழன்: இரண்டு சஞ்சிகைகள் | DISPASSIONATED DJ

  • அற்றம்: பெண் ஆசிரியர்கள் (கஜானி குமார், கெளசல்யா, தான்யா, பிரதீபா.தி)
  • மற்றது: ஆசிரியர் – கற்சுறா & ஜெபா
  • கைநாட்டு
  • பறை (முழக்கம் வெளியீடு – பாமரன், தேவகாந்தன், த.சிவதாசன்)
  • தமிழர் தகவல் மாத இதழ்: பத்மநாப ஜயர்
  • அறிதுயில்: ஆசிரியர்: கற்சுறா, மஞ்சலுணா கோமதி, எஸ்.வி.ர·பேல்

15. காலம் – கனடா : ஆசிரியர்: செல்வம் குழு: டேனியல் ஜீவா, மெலிஞ்சிமுத்தன், ந.முரளிதரன்: காலம் – 2009: சில எண்ணங்கள்

16. யுகமாயினி :: Yugamaayini

இன்னும் இருக்கும். சொன்னால் சேர்த்து விடுகிறேன்.

ஜெயமோகனின் முந்தைய இடுகைகள்:

அ) Jayamogan » உயிர் எழுத்து மாத இதழ்: “பல கோணக்களில் படித்து விவாதிக்க வேண்டிய முக்கியமான சிற்றிதழ்.”

ஆ) Jeyamogan அ.மார்க்ஸின் திரிபுகளும் தீராநதியும்

இ) Jeyamohan.com » மாற்றுவெளி: “சென்னைப்பல்கலை முனைவர் பட்ட ஆய்வு மாணவர்களின் முயற்சி”

ஈ) Jayamohan.com » ரசனை இதழ்: “நான்குவருடங்களுக்கு முன்பு முத்தையா ஆரம்பித்த இதழான ‘ரசனை’ என்னுடைய நோக்கில் மிக முக்கியமான ஓரு தமிழ் பிரசுரம்.”

உ) Jayamogan.com » தமிழினி ஜூன் 2008 இதழில் கண்மணி குணசேகரனின் நூல்வெளியீட்டுவிழா: “உயிர்மை, காலச்சுவடு, உயிர் எழுத்து, தீராநதி, வார்த்தை, தமிழினி என எந்த இதழும் இதில் ஏதேனும் பிரச்சினை இருப்பதாக காணவில்லை. இந்தியாவின் எந்த மூலையில் எது நடந்தாலும் குரல்கொடுக்கும் இச்சிற்றிதழ்களுக்கு இந்த விஷயம் பற்றி சொல்ல ஒன்றுமில்லை”

ஊ) Tamil Ini magazine » தமிழினி ஐந்தாமிதழ் | Thamizh Ini 2nd Issue » தமிழினி இரண்டாமிதழ் | Thamilini » தமிழினி மாத இதழ்

எ) Uyirmai Magazine by Manushya Puthiran » உயிர்மை இந்த இதழில்…

ஏ) Vaarthai little mag » வார்த்தை

ஐ) ஜூனியர் விகடன் » Junior Vikadan » ஜூவியின் பதினாறாம் பக்கம்

ஒ) Backgrounders on Sol Puthithu Tamil Journal » சொல்புதிது பற்றி…

ஓ) Kaala Chuvadu » காலச்சுவடு நூறாவது இதழ் | Kaalasuvadu » காலச்சுவடுக்கு தடை | On Kanimozhi Karunanidhi » கனிமொழி வணக்கம்

ஔ) Satire » சிற்றிதழ்கள்- ஓர் ஆய்வறிக்கை

ஃ) Jayamohan.com » இந்திய இலக்கியம் ஒரு விவாதம்

கொசுறு:

1. ஜயமோகன் » இதழ்களும் மதிப்பீடுகளும் – ஒரு கடிதம்: “நீங்கள் ஆனந்தவிகடன் குமுதம் போன்ற பெரிய பத்திரிகைகளில் எழுதியிருக்கிறீர்கள். அவை இப்போது நீங்கள் சொல்லும் ethics கொண்டவையா என்ன?”

2. ஜெயமோஹன் » திரையும் சமரசமும்- ஒரு கடிதம்

3. ஜயமோஹன் » சிலகேள்விகள்

பரிந்துரை: இரண்டு இணையத்து சிறுகதைகள்

சமீபத்தில் இரு நல்ல புனைவு வாசிக்க கிடைத்தது. அவை:

1. சத்யராஜ்குமார் :: மைய விலக்கு « இன்று – Today

2. ரா. கிரிதரன் :: வார்த்தைகளின் விளிம்பில்: தேவதைகள் காணாமல் போயின – சிறுகதை

அவற்றை முடித்து விட்டு இந்தப் பதிவைப் படிப்பது கதைகளுக்கு நீங்கள் செய்யும் ஷேமம்.


மேற்கோள் மூலை

ச.ரா.குமார் கதையில் இருந்து கவர்ந்த இரு இடங்கள்:

அ) இன்பாக்சில் நிஷா அனுப்பிய மின்னஞ்சல். ரொம்பவும் கோபமாகி விட்டால் நிஷா இமெயிலில்தான் பேசுவாள். பத்து கிலோ பைட்களுக்கு திரையில் தெரிந்தது அவள் கோபம்.

ஆ) ‘நீயும், நிஷாவும் ஏன் இப்படி கஷ்டப்படணும்? பார்த்துக்க ஆயிரம் பேர் இருக்காங்க. இங்கே நிறைய சொகுசு இருக்கு. ஆனா லைஃப் இல்லை. நாலு சுவத்துக்குள்ள நாம நாலு பேருமே முகத்தைப் பார்த்துக்கிட்டு… மெட்ராசுக்குப் போயிரலாம்டா.’


ரா.கி.யில் கவர்ந்தவற்றிற்கு சாம்பிள்:

அ) ஜீரணமாகாத உணவை தள்ள முயற்சிப்பதுபோன்ற கடலின் முயற்சி ஒவ்வொறு முறையும் அலையென தோற்கும் காட்சி வியப்பானதே. எதைஎதையோ விழுங்குவதும், பின்னர் எதுவுமே தெரியாதுபோல் கிடப்பதும் இதற்கு வாடிக்கையாகிவிட்டது.

ஆ) ஜப்பான் நாட்டவர்களின் முகவடிவம், எங்கு ஆரம்பித்தாலும் கூர்மையான தாடையிலேயே விழும்.


ஆறு வித்தியாசங்கள்

இரு கதைகளுமே அதிர்ச்சி அல்லது வித்தியாசமான முடிவில் நம்பிக்கை கொண்டவை. இரு கதைகளுக்குமே அது தேவையில்லை என்பது வேறு விஷயம்.

ஒன்று போட்டிக்காக எழுதப்பட்டது. மற்றொன்று அந்தவித நிர்ப்பந்தங்களுக்குட்பட்டு உருவாகாவிட்டாலும், போட்டியில் கலந்துகொள்வதற்கான முஸ்தீபுகளும் முகாந்திரங்களும் நிறைந்தது.

வார்த்தைகளின் விளிம்பில் நிற்பவரிடம் கதை ஜாஸ்தி. இன்று – டுடேவிடம் மூக்கு மேல் வரவைக்கும் விவாதப்புள்ளிகள் ஜாஸ்தி.


விமர்சனம்

சத்யராஜ் கதையில் விமர்சிக்க விஷயம் ஏதுமில்லை. பட்டிமன்றம் மாதிரி இன்னும் கொஞ்சம் எண்ணவோட்டமோ, உரையாடல் மன்றமோ கட்டி, மெரீனா பீச் மணல் அளவு வியாபிக்க கூடிய சமாச்சாரத்தை சுண்டல் மாதிரி பொட்டலம் கட்டி இருக்கிறார்.

குறைந்த பட்சம் அந்த மின்னஞ்சலையாவது அனுபந்தம் ஆக்கி இருக்கலாம் என்னும் ஏக்கம் இருக்கிறது.

oOo

காதலியின் நினைவுகள் என்று இன்னொரு கதை எவராவது எழுதினால் அலுவலை நோக்கி(யே) வடக்கிருக்கலாம் என்று எண்ணுமளவு அலுத்துப் போன டாபிக்கில் பூந்து விளையாடியிருக்கிறார் கிரி. சம்பிரதாயமான ஆரம்பம்.

இத்தினியூண்டு கதையில் உலாவும் அத்தனை பாத்திரங்களுக்கும் மனதில் நிற்கும் அறிமுகங்கள். தண்ணீரில் மிதக்கும் ப்ளாஸ்டிக் ஆக, கவிஞர்களே உவமைகளுக்கு பஞ்சம் பாடும் இந்தக் காலத்தில் சக்கையான தக்கை கொண்ட மிதவையான உறுத்தாத பயன்பாடு அமர்க்களம்.

அப்படியே, ‘நான் அந்தக் காலத்தில் லால் கிலாவில் இப்படித்தான்…’ என்று காதலி காலடி தேட வைப்பதே கதையின் வெற்றி.

இருவருக்கும் என் நன்றி.

நான் வாழ வைப்பேன்

சென்னை ராஜாங்கம்

துக்ளக் சோவிற்கு மிகவும் பிடித்தமான மயிலை ஸ்ரீனிவாசர் கோவிலுக்கு பெருமாள் அழைத்திருந்தார். பிரும்மோத்ஸவ அழைப்பிதழும் கொடுத்தார். புழு, பூச்சிக்கும் அடைக்கலம் உண்டென்பதை, நரசிம்மர் மேல் கரப்பான் பூச்சி(கள்?) ஊர்வதை வைத்து உணர்த்தினார்.

முன்னுமொரு காலத்தில் ஏர் இந்தியாவில் பயணம் சென்றபோது நட்ட நடுவில் ஒரேயொரு வெள்ளித்திரை. அதில் ஒரேயொரு படம். அந்தப் படத்தில் டயான் லேன் (Diane Lane) முயங்குவதைப் பார்த்து, பக்கத்து இருக்கை பாப்பா ‘அங்கிளும் ஆன்ட்டியும் ஏன் அம்மணத்தோண்டியா சண்ட போடறாங்க?’ என்று கேட்க வைத்தார்கள்.

தோஹாவில் இருந்து கிளம்பிய கத்தார் விமானத்தில் வந்த ‘வாரணமாயிரம்’ மகா சைவம். ‘அஞ்சல… அஞ்சல’ பாட்டுக்கு கூட கத்திரி. ஒழுக்கசீலராக்குவதில் வளைகுடாவை விஞ்ச இன்னொரு குடா இருக்கிறதா என்ன?

நியு யார்க்கில் இருந்து கிளம்பிய விமானம் ஏ1 தரம். ஆயிரம் படங்கள்; ஆயிரத்தொரு விளையாட்டுகள்; ஆயிரத்திரண்டு பொழுதுபோக்கு வைத்து அசத்தி இருந்தது கத்தார் வான்வழி. அதில் ‘லாடம்’ படத்தின் ஆங்கிலப் பதிப்பான ‘Lucky Number Slevin’ கொஞ்சமும், நடுத்தர வர்க்க நடு வயது இந்தியரின் வாழ்க்கைக்கு பொருத்தமான ‘Revolutionary Road’ கொஞ்சமும், ‘Seven Pounds’ முழுதுமாக தரிசனம் கிடைத்தது.

வந்த சூட்டோடு வலையுலக முன்னாள் பதிவர் சிலரோடு சந்திப்பும் இனிதே நடந்தேறியது. பிரபாகரன் எங்கே இருக்கிறார், தமிழக முக, சாரு, ஜெயமோகன் என்று மைய நீரோட்டத்தை விட்டு விலகாத உரையாடல்.

தானி ஓட்டுநர்களுடன் பேச்சுத் தொடுத்ததில் ஜெயலலிதாவின் அலம்பலை நாடி பிடித்து வைத்திருக்கிறார்கள். ‘தனி ஈழ அறைகூவல் எல்லாம் டுபாக்கூர்’ என்றார். ‘அவங்க நாடு; அவங்க பிரச்னை’ என்றார்.

இன்னொருவர் ‘பிரபாகரனும் ராஜபக்சேவும் டீலு போட்டாங்க. பிரபாகரன எங்காவது கண்காணாத ஊருக்கு அனுப்பிவைச்சுட்டு, அவன சுட்டுட்டதா கத கட்டிவிட்டுட்டு, நம்ம மக்கள சாவடிக்கிறான் சிங்களக்காரன்’ என்று முடித்தார்.

சென்னையில் ஒரு பேனர் கண்ணில் படவில்லை. சுவரொட்டியும் காணக் கிடைக்கவில்லை. தோரணம், வண்ணவரைபடம் எல்லாமே மாயம். அந்தக் காலத்தில்… ஹ்ம்ம்ம்…

குருவாரம். ஷீர்டி சாய்பாபா சின்னத்தில் தேர்தலில் நின்றால் நிச்சயம் வெற்றி. ஆனால், இந்தியா என்ன ஐரோப்பாவிலா இருக்கிறது? தமிழக பொதுசனம் ஆன்மிகத்தையும் அரசியலையும் என்றும் கலந்து பார்த்து வாக்களிப்பதில்லையே!

இந்தியா இறங்கியவுடன் ப்ளாக்பெரி உயிர் கிடைத்தது. கையளவு அமெரிக்க செல்பேசியில் சகலமும் உடனடியாக தெரிகிறது. அமெரிக்காவில் கூட தொழில்நுட்பம் இம்புட்டு முன்னேறி இருக்குமா? இந்த தடவை இந்தியா வந்தாலும் கூட இணைபிரியாத இணையம்.