Tag Archives: Security

கணினி வேலைக்கான நேர்காணல் கேள்விகளும் அனுபவங்களும்

இந்தியாவில் இருந்து வருபவர்கள் சொல்லும் கதைகள் சினிமாப் படங்கள் போல் நம்ப முடியாத காட்சிகள் கொண்டிருக்கின்றன.

இவர் டெல்லி பட்னியில் வேலை பார்த்தவர். வழக்கம்போல் நேர்காணல் எடுக்க சென்றிருக்கிறார். எட்டு விரல்களில் மோதிரம். கழுத்தில் காசு மாலை போல் தங்கச் சங்கிலி. கேட்ட கேள்விகளுக்கு போட்டிருக்கும் இரத்தினாபரங்கள் மாதிரி இல்லாமல் ஒற்றை வார்த்தை பதில்.

“மூன்று எண்களைக் கொடுத்து, அதற்குள் பெரிய எண்ணை கண்டுபிடிக்கச் சொல்லும் நிரலி எழுது.”

“எதற்குங்க எழுதணும்? பார்த்தாலே எது பெருசுனு தெரிஞ்சுடாதா…”

“உங்களுக்கு பிடித்தமான கணினி மொழி எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். சி++, ஜாவாஸ்க்ரிப்ட்… நீங்கள் எப்படி எழுதுவீர்கள்?”

“அதான் சொன்னேன் இல்ல… சின்னக் கணக்கு கூட தெரியாமலா, கோடிங் செய்வாங்க?”

வார்த்தைகள் ஆக்ரோஷமாக வந்து, இண்டர்வ்யூவிற்கு வந்த ஆபரணதாரி கையை ஓங்கி விட்டார். அலறிக் கொண்டு ’ஆதிமூலமே என்னைக் காப்பாற்று’ என்று மனிதவளத்திடம் சரணாகதி அடைகிறார் கதைசொல்லி. அவர்களும் தங்களின் வாயிற்காப்போனை அழைத்து, வில்லனை விரட்டி விடுகிறார்கள்.

சில மணி நேரம் கழிகிறது. ஜிப்ஸியில் பதினான்கு பேரை அடைக்க முடியுமா? அடியாட்களுடன் வந்த ஆபரணதாரி, இப்பொழுது சோடா பாட்டில் வீசுகிறார். பட்னி சிப்பந்திகள் எல்லோரும் கொல்லைப்புறம் வழியாக பத்திரமாக அனுப்பிவைக்கப் படுகிறார்கள். அதிகாரபூர்வமாக மூன்று நாள் ஓய்வு விடுமுறை எடுத்துக் கொள்ளுமாறு பட்னி பணிக்கிறது.

வாரயிறுதி முடிந்து வந்து பார்த்தால், புதிதாக ஐந்து பேர் வேலையில் இணைந்திருக்கிறார்கள். கஃபேடேரியா பக்கத்தில் உள்ள முக்கு கலந்தாய்வு அறையை அவர்களின் அலுவலகமாக மாற்றி இருக்கிறார்கள். ஆபரணதாரியும் அவனுடன் சோடா பாட்டில் வீசிய பதினால்வரில் நால்வர் மட்டும் அவன் உடன் வேலைவாய்ப்பு பெற்றிருக்கின்றனர்.

விக்கித்துப் போனவனைத் தட்டிக் கொடுத்து மனிதவளம் சொல்கிறது: “இனிமேல் நீ எசகு பிசகாக கேள்வி கேட்டாலும் பிரச்சினையில்லை. நம்ம கிட்டயும் ஆள் இருக்காங்க. கவலைப்படாம இண்டர்வ்யூ செய்!”

VVIP Security for ex-Ministers in India: Z+ Protection costs

நன்றி: ஹிந்துஸ்தான் டைம்ஸ் :: இ-பேப்பர்

HT-Security-Police-Expenses-BJP-ex-ministers-congress-govt-expenditure

132 Ways to Bring a Bomb to America

Bomb-America-USA-Taliban-Pakistan-Terrorists-NYT-Times-Attacks-Game-Theory

Source: Op-Ed Contributor – A Threat in Every Port – NYTimes.com: There are a dizzying number of paths that terrorists could use to transport a weapon to an American target city, but game theory can provide clues for protection.

நான் வாழ வைப்பேன்

அமெரிக்காவில் விமானத்தை விட்டு தள்ளப்பட்ட முஸ்லீம் குடும்பம்

செய்தி: 'Safest' seat remarks get Muslim family kicked off plane – CNN.com

  • அவர்கள் குடும்பம் கொஞ்சம் பெரியது. எட்டு உறவினர்களும் நண்பரொருவரும் சேர்ந்து சென்றார்கள்.
  • எல்லோரும் சேர்ந்து உட்கார விரும்பினார்கள். விமானத்தின் வால் பாகத்தில் அமர விரும்பவில்லை.
  • முஸ்லீமாக இருப்பதினால் பயணம் தடைப்பட்டது கூட பிரச்சினையில்லை என்கிறார் இர்ஃபான். ஆனால், தடையாகிய பயணத்தை, வேறு வழியில் பிறிதொரு நேரத்தில் தொடர்வதிலும் ஏர் – ட்ரான் இவர்களைப் படுத்தியெடுத்து வருகிறது.
  • இவர்களை இறக்கியனுப்பிய பிறகு, சக விமானப்பயணிகள் அனைவரும் மறுபடியும் பாதுகாப்பு சோதனைக்கு உள்ளான கொடுமை தனிக்கதை.

அமெரிக்க அரசுத்துறைச் செயலாக ஹில்லாரி நியமிக்கப்பட்டார்

அமெரிக்காவின் அதிபராக தேர்தெடுக்கப்பட்டுள்ள பராக் ஒபாமா அவர்கள் தேசிய பாதுகாப்புக்கு பொறுப்பேற்கவுள்ள தனது குழுவை அறிவித்துள்ளார்.

ஜனநாயகக் கட்சியின் சார்பில் அதிபர் பதவிக்கு யார் போட்டியிடுவது என்பதை தீர்மானிக்க நடைபெற்ற தேர்தலில், தம்மை எதிர்த்து போட்டியிட்ட ஹில்லரி கிளிண்டனை அரசுத்துறைச் செயலராக அவர் நியமித்துள்ளார்.

செனட்டர் ஹில்லரி கிளிண்டன் பெரும் ஆளுமை கொண்டவர் என்று ஒபாமா கூறியுள்ளார்.

தற்போது இராணுவ அமைச்சராக உள்ள ராபர்ட் கேட்ஸ் அவர்களை தொடர்ந்து பணியில் இருக்குமாறு ஒபாமா வேண்டியுள்ளார்.

நாட்டில் நிலவிவரும் நிதி நெருக்கடி போலவே, நாட்டின் பாதுகாப்பு தொடர்பான சவால்களும் பெருமளவில் இருக்கின்றன என்று ஷிகாகோவில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் பராக் ஒபாமா தெரிவித்துள்ளார்.

அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் அதிபராக பதவியேற்கவுள்ள ஒபாமா அவர்கள், தற்போது அரிசோனா மாகாணத்தின் ஆளுநராக இருக்கும் ஜேனட் நேபோலிட்டானோ அவர்களை உள்நாட்டு பாதுகாப்புதுறை செயலராகவும், நேட்டோவின் ஓய்வு பெற்ற தலைமை தளபதியான ஜேம்ஸ் ஜோன்ஸ் அவர்களை தேசிய பாதுகாப்பு ஆலோசகராகவும் நியமித்துள்ளார்.

அவரது நீண்ட கால ஆலோசகரான சூசன் ரைஸ், ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்காவின் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.

நன்றி: பிபிசி

டைனோ: எல்லோரும் துப்பாக்கி சுட கற்றிருக்கணும்

டைனோ Says:
நவம்பர் 29, 2008 at 2:04 பிற்பகல்

அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரம் பெருகி விட்டது, துப்பாக்கி வைத்திருப்பனெல்லாம் கன்சர்வேட்டிவ் என்று கட்டியம் கூறி வெறுப்பை உமிழ்பவர்கள் இதையும் படிக்கவேண்டும்! NRAவின் பக்கத்து நியாயங்கள் அவர்களின் வாழ்க்கையை வாழ்ந்து பார்த்தால்தான் தெரியும். Right to self-defense!

அனைவருக்கு துப்பாக்கியும் தோட்டாவும் கொடுப்பதால் கிடைக்கும் நன்மை பயக்கும் திட்ட வரைவுகள்:

  1. மீசை இருந்தால் ஆம்பளை என்பது பழமொழி. துப்பாக்கி வைத்திருப்பவர் வீரர். அத்துமீறி உள்ளே வருபவர்களை துப்பாக்கியை வைத்து சுட குறி பார்ப்பதற்குள், அவர்கள் உங்களிடமிருந்து ஆயுதத்தைப் பறிப்பார்கள். ‘ஏழைகளுக்கும் தோட்டா‘ என்று இந்தத் திட்டத்திற்கு நாமகரணமிடலாம்.
  2. பாஸ்டன் பக்கம் மாதத்திற்கு இரண்டு குழந்தை (சமீபத்திய இறப்பில் பத்து மாசம் ஒன்றும் மூன்று வயது சிறுவனும்) இறக்கிறார்கள். இந்த மாதிரி துப்பாக்கி வைத்திருப்பவர்களின் வீட்டில், விளையாட்டாக எடுத்து சுட்டுப் பார்த்து ‘மக்கள் தொகையை மட்டுப்படுத்தல் திட்டம்‘ வெற்றிகரமாக என்.ஆர்.ஏ வினால் நடத்தப்படுகிறது.
  3. வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் என்பதாக காய்கறி கத்தியைக் கூட ஸ்திரமாக பிடிக்கத் தெரியாதவர்கள் கையில் துப்பாக்கியை திணித்து, ‘புல்லாங்குழல் அடுப்பூதும் திட்டம்‘ என நடுநடுங்க வைக்கலாம்.
  4. வீழ்ந்து கிடக்கும் நிதிநிலையை நிலைநிறுத்த, துப்பாக்கி விற்பனையை அதிகரித்து, அதனால் புல்லட் ப்ரூஃப் மேலணி மேனியாவை முடுக்கி, தொடர்ச்சியாக தோட்ட புகமுடியா கார்கள் என்று ‘சந்தைப்படுத்தி சதை துப்பும் திட்டம்’ வரவைக்கும்.
  5. பள்ளிகளில் கடந்த மாதம் எந்தவித தாக்குதலும் நடைபெறவில்லை. (Timeline: US shooting sprees – History of school shootings). இது அமெரிக்க கலாச்சாரத்திற்கு மிகப் பெரிய இழுக்கு. இதைப் போக்க ‘வாசகசாலை சிறார்களை சகட்டுமேனிக்கு சுட்டுத் தள்ளும் திட்டம்‘ அறிமுகம்.
  6. நத்தார் தினம் நெருங்குகிறது. விரும்பிய டிஃபனி பரிசையும் லெக்சஸையும் கொடுக்க முடியாத வறியவர்கள் (பார்க்க #1 ‘ஏழைகளுக்கும் தோட்டா’) கையில் துப்பாக்கியை கொடுத்து அங்காடிகளையும் கடைகளையும் பாதுகாப்பற்றதாக ஆக்கி, பனி விழாத புவிவெப்ப சூழலின் இறுக்கத்தைக் குறைத்து ‘சடலம் விழும் காலம்’ வருகிறது.
  7. மான்களும் மூஸ்களும் இன்னும் கொஞ்ச காலமே காடுகளில் காணக்கிடைக்கும். அதற்குள் பாக்கி இருக்கும் ஒன்றிரண்டையும் ஒழித்துவிட ‘சாரா பேலின் சகாயம்’ உதயம்.
  8. தீவிரவாதி கையில் மட்டும் ஏகே-47 இருக்கிறதே? சஞ்சய் தத் ஆசைப்பட்டதும் இதுதானே! உங்களிடமும் வெடிகுண்டும், ஏவுகணைகளும் கிடைத்தால் ‘பக்கத்து விட்டு பரமசிவத்துடன் பஞ்சாயத்துக்கு செல்லேல்’ என சடக்கென்று பாயும்.

அனானிகள் போலி முகம் கொண்டு அடுத்தவரைத் திட்டுவது போல் அசட்டு தைரியம் கொடுக்க துப்பாக்கி உதவுகிறது.

அடுத்த அதிபருக்கு Action Plan – பத்மா அர்விந்த்

பத்மா அர்விந்த் கருத்துகளின் தொடர்ச்சி…

5. அடுத்த அதிபருக்கு நீங்கதான் தொழில்நுட்ப ஆலோசகர். என்ன அட்வைஸ் கொடுப்பீங்க?

சில துறைகள் பற்றி மட்டும் இங்கே:

இமிக்ரேஷன்:

வேண்டும் என்கிறபோது இம்க்ரேஷன் துறை கண்டும் காணாமல் இருக்கிறது. சட்டவிரோதமாக வரும் நிறைய ஹிஸ்பானியர்கள், ஆசியர்கள் கட்டிட தொழில், சுற்றுப்புற சுத்தம் செய்யும் தொழிலில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். இதில் சட்டத்திற்கு விரோதமாக வரும் மக்களின் தேவை மட்டும் இல்லாமல் மிக குறைந்த ஊதியம் கொடுத்து எந்த வித பாதுகாப்பும் தர வேண்டாமல் இலாபம் ஈட்டும் அமெரிக்கர்களின் பேராசையும் அடங்கும்.

அட்லாண்டாவில் ஒலிம்பிக்ஸ் போது கட்டிடடம் கட்ட வந்த பல மெக்சிகோகாரர்களின் குழந்தைகள் பள்ளியில் படிக்கும் போதே ஆளான கேலியும் கிண்டலும் துன்பங்களும் நிறைய குழுக்களை ஆரம்பிக்க காரணமாகின. இவற்றல் உயிரிழந்த குழந்தைகள் நிறைய பேர். இப்போது திடீரென சட்டவிரோதமாக வந்த மக்கள் வெளியேற வேண்டும் என்று சொல்வது எப்படி நியாயமாகும்?

அதற்கு மாறாக தேவைப்பட்டு மக்களை சட்டவிரோதமாக்க கடத்தப்படுவை கண்டும் காணாமல் இருக்காமல், சட்ட பூர்வமாக தற்காலிக விசா தந்து, அவர்களுக்கும் நியாய ஊதியம் கிடைக்க வழி செய்ய வேண்டும். இவர்கள் சட்ட விரோதமாக வந்தாலும் அவர்களுக்கு குழந்தை பிறந்தால் அதன் முழு பாதுகாப்பையும் ஏற்றுக்கொள்ளும் அரசு, அதற்காக ஆகும் செலவு பற்றி யோசிப்பதற்கு முன், இவர்கள் சட்டவிரோதமாக இங்கே கடத்தப்பட்டு வருவதே தங்கள் பேராசைதான் காரணம் என்பதை உணர வேண்டும். அவர்களை பணிக்கு அமர்த்தும் நிறுவனங்கள் இதற்கு பொறுப்பேற்க வேண்டும். இதனால் பல சட்ட விரோத நடவடிக்கைகள் குறையும். அது வருங்காலத்தில் சேமிப்பிற்கு வழி வகுக்கும்.

போக்குவரத்துத் துறை:

மத நிறுவனங்களின் தலையீடு அமெரிக்க தலைவர்களின் கொள்கை சார்பினை நியாயப்படுத்துவதால், 1990களின் ஆரம்பத்தில் இருந்தது போல் அல்லாமல் இப்போதெல்லாம் ஆராய்ச்சிகள் சார்புடையதாகிக்கொண்டு வருவதாக எனக்கு தோன்றுகிரது. அறிவியலாகட்டும், தொழில் நுட்பமாகட்டும் தனித்து சுதந்திரமாக இயங்க வேண்டியது கட்டாயமாகும்.

புதிய போர் தளவாடங்களை வடிவமைக்க ஆகும் செலவில், சில அடிப்படை பிரச்சினைகளை தீர்வாக நிதி ஒதுக்கலாம்.

இன்னும் கொஞ்ச நாளில் அமெரிக்கா முதியவர்கள் அதிகமாக இருக்கும் நாடாக போகிறது. இதில் பலருக்கு வருமானம் என்பது பென்ஷன், சோசிஷியல் செக்யூரிட்டி ஆகியவை மட்டுமே என்னும் போது காரும், பெட்ரோலும், அதற்கான காப்பீடும் ஒரு பாரமாகிப்போகும். உடல்நலம் தொய்வடையும் தருணம், கார் ஓட்டுவதுகூட முடியாததாகும். இதற்கெல்லாம் பொது போக்குவரத்தை வடிவமைக்க வேண்டியது மிக அவசியமாகும். மக்களின் டோல் வரியை உபயோகித்து இன்னும் அதிக சாலைகள் வடிவமைப்பதை போலவே, பேருந்துகள் போன்றவற்றில் கவனம் செலுத்த ஆ ரம்பிக்கலாம்.

Foster Care:

மருத்துவக் காரணங்கள், இல்லை பதின்ம வயது பெண்கள், போதைப் பழக்கம், அல்லது மதுவிற்கு அடிமையானவர்கள் நிரந்த குடும்பசூழலை கொடுக்க முடியாதவர்கள் கருவைக் கலைக்க விரும்பினால் அது சரியே. இதில் அரசு தலையிட்டு குழந்தை வளர்ப்பை தான் எடுத்துக் கொண்டு கோடிக்கணக்கில் செலவு செய்வது அனாவசியம்.

சின்ன குற்றங்களுக்காக dyfs தலையிட்டு குழந்தைகள் பொருப்பை எடுத்துக் கொண்டு பிறகு foster care இல் ஒப்படைக்கிறது. இதற்காக ஒரு குழந்தைக்கு மாதம் $800 தருவதால் சில பெற்றோர்கள் அந்த பொறுப்பை ஒரு வேலையாக எடுத்துச் செய்கிறார்கள்.

அதன் பிறகு அவர்கள் தனியே வாழவோ அல்லது தத்து எடுத்துக் கொள்லவோ தயார் செய்யப்படுகிறார்கள். குழந்தைகள் மீண்டும் பெற்ரோரிடம் செல்ல வேண்டுமானால், மன நல மருத்துவர்கள், 6 பேர் கொண்ட ஒரு குழு ஒருமனதாக முடிவெடுக்க வேண்டும். இதைப் பயன் படுத்தி மன நல ஆலோசனையை நேரம் இல்லாமை போன்ற காரணங்களுக்காக தட்டிக் கழிப்பது அது மீண்டும் நீதி மன்றத்தீற்கு வருவது போன்ற செயல்பாடுகள் அதிகம் செல்வாவதோடு, குழந்தைகள் நலத்தையும் பாதிக்கிறது. இதை தடுக்கவும் சீக்கிரமே அவர்கள் ரெச்பைட் (respite) பாதுகாக்கப்படவும் கிளிண்டன் அரசு தீர்மானங்கள் எடுத்தது.

அபார்ஷன் சட்டரீதியாக இல்லாத மாநிலங்களில் இந்த ஆதரவற்ற குழந்தைகள் காக்கும் பொறுப்பு ஒரு சோஷியல் பணியாளருக்கு 200 வரை போக, நிறைய கவனக்குறைவுகள் உண்டாகின்றன. அரசாங்கம் பொறுப்பேற்காமல், பெற்றோர் அதிக பொறுப்புடன் இருக்கவும், குறைந்த பட்சம் 6 மாத காலத்துள் அந்த குழந்தைகளை வளர்க்கும் பொறுப்பையும் அல்லது அதற்கான செலவை தண்டனையாக கட்டவும் செய்ய வேண்டும்.

உள்நாட்டு பாதுகாப்பு:

பறவைக்காய்ச்சல் மற்றும் உயிரியல் தீவிரவாதம், வேதியியல் ரேடிய கதிர் தீவிர வாதம் என்று எல்லாத்துறைகளிலும் அனாவசியமாக செலவழிக்கப்படும் நிதியை அங்கிருந்து பொது நலத்திட்டத்திற்கு மாற்ற செய்வேன். FEMA போன்ற நிறுவனங்கள் அவசரக்காலம் மட்டும் அல்லாமல் பொதுவாகவே மக்களின் விழிப்புணர்ச்சியை தூண்டு வண்ணம் செயல் படலாம்.இது குறித்து

உடல்நலத்துறை:

காப்பீடுகள், அதன் காரணமாக மிக அதிகமான மருத்துவ செலவுகள் என்ற சுழற்சி இங்கே மருத்துவ கவனிப்பை சாதாரண மக்களுக்கும், நடுத்தர மக்களுக்கும் மிகவும்கடினமாக மாற்றி இருக்கின்றன. ஒவ்வொருவரும் சிகிச்சை முடிந்து தேர்ச்சிபெறஆகும் காலத்தை காப்பீடுகள் தீர்மானிப்பதை நிறுத்த வேண்டும். இப்போது மன நலத்திற்கும், வன்புணர்ச்சிக்கான கவுன்சிலிங்கிற்கும் 10 sitting , 15 sitting என்பதையெல்லாம் காப்பீடுகளே தீர்மானிக்கின்றன. இதுவும் தீவிரம், நோயாளியின் தனித்துவம் பொறுத்து மாறும்.

மருத்துவ சிகிச்சைக்காக வரும் போது விசா பற்றிய கேள்விகள் கூடாது என்றாலும், அதிகரித்துவரும் மருத்துவ செலவுகள் மற்றவர்களின் காப்பீடு கட்டணத்தை உயர்த்துகின்றன. இதை தீர்க்க முறைக்கப்பட்ட charity care நிதியை உடனடியாக அதிகரிக்க செய்வேன். மேலும் நோய் வந்தபின் அதை சரிபார்ப்பதைவிட interventionஇல் அதிக கவனம் செலுத்த சொல்வேன்.

முதுமை இல்லங்களில் ஆள்பற்றாக்குறையை சரி செய்ய வேண்டியதும் அதற்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரிப்பதும் முக்கியம். பரிந்துரை செய்யப்பட்ட மருந்துகள், உணவு துறையின் கட்டுப்பாட்டில் வரும் சில மருந்துகள் பற்றி இன்னமும் யோசனைகள் எழுத ஆரம்பித்தால் இப்போதைக்கு முடியாது என்பதால் இத்துடன் நிறுத்திக்கொள்கிறேன்.

போரில் இருந்து வரும் வீரர்கள், வியட்னாம் வீரார்கள் இவர்களின் மன அழுத்தம் அதிகரித்து மன நோய் பெருகிவரும் இந்நேரம், மன நலனில் அதிக கவனம் செலுத்த வேண்டியதும் முக்கியம்.

முக்கியமாக, மது அருந்தும் சட்ட வயது வரம்பை 18 ஆக குறைக்க வரும் மசோதாவை இப்போதைக்கு எதிர்க்கிறேன்.