Tag Archives: Maithreyan

எண்ணுதற்கு யாவர் வல்லார்? – கிரயம்

சொல்வனம் தளத்தின் சிறப்பு இந்த மாதிரி விநோதமான கதைகளைத் தமிழில் அறிமுகம் செய்வது; வெறுமனே ஆங்கிலத்தில் இருக்கிறது என்று மட்டும் சுட்டாமல், வாசிக்கக் கூடிய தமிழில் உருவாக்கம் செய்வது!

தந்திரக் கை – கசந்த இனிப்பைச் சொல்லும் கதை. குறுவிசனம்.

ஒன்றை இழந்தால் மட்டுமே இன்னொன்றைப் பெற முடியுமா? இதை மேற்குலகில் Faustian offer என்கிறார்கள்.

இளம் பெண் சமீபத்தில் தனது கணவனையும் மகளையும் திடீரென்று சோகமான விபத்தில் இழக்கிறார். துக்கமும், வாழ்க்கையும் இறப்பும் அவை குறித்த நினைவுகளுமாய் கதை எழுகிறது. என்ன பேரம் போட்டார்கள்? எவற்றை விலை பேசினார்கள்? நினைத்தது நின்றதா?

கதையை எழுதியவர் சொல்லியது:

“பால்ய கால நினைவுகளில் இருந்து இந்தக் கதை உருவானது. அப்பொழுதுதான், அந்தத் தாறுமாறான விளம்பரத்தை அதைவிட தாறுமாறான இடத்தில் தற்செயலாக பார்த்தேன். மூளையில் ஏற்பட்ட வீக்கத்திற்காக என் ஒன்றுவிட்ட அக்கா, அறுவை சிகிச்சைக்குள்ளாக இருந்த சமயம் அது. அந்த சமயத்தில் கடுமையான, நிலையான கலக்கத்தில் இருந்தேன். அப்பொழுது பயத்தால் முடங்கி, செய்வதறியாது அவளின் கணவனை, தினசரி இரண்டு தடவை அழைத்து அவளின் நிலையைப் பற்றி கேட்பேன். அறுவை சிகிச்சை முடிந்து, குணமாகி அவள் சகஜநிலையான பிறகு, இதை எழுதத் துவங்கினேன். ”

solvanam வாருங்கள். வாசியுங்கள். உங்கள் கருத்தைப் பகிருங்கள்.

மைத்ரேயன்: ‘நீயும் நானும் வேறல்ல?’

Inequality kills by Peter Wilby :: Politicians take heed: social injustice is, literally, deadly – New Statesman: The WHO report (Closing the Gap in a Generation)

“We traditionally assume that health improvement is delivered by medical advances, better hospitals, more doctors and more spending on health services. Most political argument is about how to achieve these ends, with the role of preventative health – improved lifestyles – now adding a further dimension.

The WHO report is saying something quite different: health is political in the broadest sense because it is influenced by the distribution of power, income, goods and services.

Here are some more facts. US blacks are rich by world standards but, in a highly unequal country, most are very poor by local standards. People from Tunisia, Jamaica, Panama, Libya, Lebanon and Cuba all have higher life expectancies than the US black population.

If black mortality rates were the same as those for US whites 886,202 deaths would have been averted between 1991 and 2000. Over the same period, 176,633 lives were saved by medical advances.”

அசமத்துவம் என்பதை ஒரு தத்துவ, அரசியல், பொருளாதார, அற, பண்பாட்டு ஆய்வுக் கூறாக எடுத்துப் பார்த்து அதோடு சண்டை போடவும், அதே நேரம் அழிக்க முடியாத ஒரு நிரந்தர அம்சமாக, இயற்கையின் தவிர்க்கவியலாத விதியாக அதைப் பார்க்கத் தேவை என்ன என்பதை நிறுவவும் பெருமுயற்சி தேவை என்பது எனக்குத் தெரியும்.

அதைச் செய்யத் தேவையான ஆசை மட்டுமே எனக்கு இருக்கிறது. திறமை இருக்கலாம். முயற்சி இல்லை. அதனால் அரைகுறையாக இதை உங்களிடம் தள்ளுகிறேன்.

Inequality என்கிற இந்த சொற்பிரயோகத்துடன் எனக்கு நிறைய ஜகடா உண்டு. தன்னளவிலேயே தன்னை மோசமாகக் காட்டும் சில சொற்களில் இதுவும் ஒன்று.

ஆங்கிலம் புரிந்த எந்த நாட்டிலும் அனேகமாக எல்லா மனிதரிடமும் இந்தச் சொல்லுக்கு ஒரு இழிவான பார்வைதான் கிட்டும். ஏதோ எல்லா மனிதருக்கும் தாம் மிக நல்லவர் என்று ஒரு எண்ணம்.

நடத்தையிலும், நம்பிக்கையிலும் எத்தனை அசமத்துவத்தை தினமும் அவர்கள் நிறுவிக் கொண்டிருந்தாலும், கருத்தளவில் அசமத்துவத்தைக் கறாராகவும், முழுமூச்சோடும் தாம் எதிர்ப்பவராகவும், சமத்துவத்தை அடைவதுதான் தம், மேலும் மொத்த மனித குலத்தின் குறிக்கோள் எனவும் அபத்தமாக நம்பாத மனிதரை நான் இன்னும் பார்க்கவே இல்லை.

அப்படி யாராவது என் கண்ணில் பட்டிருந்தால், அவரை நான் ஒரு அபத்த மனிதராகவோ, அல்லது கிறுக்கராகவோ, அல்லது அதிகார வெறியராகவோ – அதாவது நார்மல்சி என்பதில் இருந்து விலகிய ஒரு அதீத கோணல் மனிதராகவே நானும் பார்த்திருப்பேன்.

அவர் ஒருவரே முழு எதார்த்த வாதி என்று அவரைப் பார்க்க இத்தனை வருடம் கழித்துச் சமீப வருடங்களில்தான் எனக்கு சாத்தியமாகி இருக்கிறது. உங்களுக்கு நான் சொல்வது புரியும் என்று கூட எனக்குத் தோன்றவில்லை.

ஏன் சமத்துவம் என்பது ஒரு மாரீச மான் மட்டுமல்ல, அதை அடைந்தால் மனித குலம் அந்த மான் ஒரு பேரரக்கன் என்பதை அறியும் என்பதையும் பேசலாம்.

இப்போதைக்கு சில அறிவிப்புகளை மட்டும் தருகிறேன்.

அசமத்துவம் என்பதை எடுக்க முடியாது, அழிக்க முடியாது, அது இருப்பதுதான் மனித படைப்பு சக்திக்கே உந்து சக்தி என்று கருதுபவன் நான். அதற்காக நான் விமானத்தில் போக வேண்டும் வேறு மக்கள் தெருவில் குப்பை அள்ள வேண்டும் என்று நான் சொல்கிறேன் என்று என் மீது ஈட்டி வீச யாரும் தயாராக வேண்டாம்.

ஒரு அளவுக்கு மேல் inequality அசமத்துவம் என்பதைக் குறைக்க முடியாது.

ஸ்காண்டிநேவிய நாடுகளில் சாதாரணமாக 1:4 என்ற விகிதத்தில் அசமத்துவம் இருப்பதாகச் சொல்வார்கள். இதையும் குறைக்க முடியலாம்.

எல்லா மனிதருக்கும் ஒரே சம்பளம் என்றும் அனைவருக்கும் ஒரே தொகைதான் வருடத்துக்கு என்று ஆக்கினாலும் அசமத்துவத்தைக் குறைக்க முடியாது. அப்படிக் குறைத்தால் வேலை செய்ய வருபவர்கள் மிகக் குறைவாகவும், வந்தாலும் துலக்கமாகச் செய்பவர்கள் குறைவாகவும், துலக்கமாகச் செய்தாலும் புது உத்திகள், முன்னேற்றத்துக்கான கண்டு பிடிப்புகள் ஆகியனவற்றிற்காக தம் அனைத்தையும் கொடுப்பவர்கள் மிகக் குறைவாகவும் ஆவர் என்பது என் ஒரு ஊகம்.

எதிர்மறையாக எல்லாரும் அசாதாரண ஊக்கத்துடன் சமூகம் முன்னேற என்று உழைக்கத் துவங்கினால் எனக்கு அதில் எந்த எதிர்ப்பும் இல்லை.

இது வெறும் உழைப்பு அதற்கான ஊதியம் என்ற ஒரு குறுகிய தளத்தை மட்டும் கருதிப் பேசியது. இதைப் பெருக்கினால் ஏதேதோ விளைவுகள் நம் கண்ணுக்குப் புலப்படும்.

வாக்களித்த வைபவம் – மைத்ரேயன்

இவரின் முந்தைய பதிவு: ஒபாமா ஜனாதிபதியானால் என்ன செய்வார்?

இங்கே வாக்களித்து விட்டேன்.

நானும் இன்று வாக்குச் சாவடிக்குப் போனேன். சிறிது மழையில் வீடுகளெல்லாம் நனைந்திருந்தன. நல்ல குளிர். காலை 7.45க்குப் போனால் எப்படி இருக்கும்?

வழக்கமாக வீடுகளெல்லாம் கோடை முடிவதற்குள் வெளிப்பக்கம் அடிக்க வேண்டிய (தேவையாய் இருந்தால்) பெயிண்ட் எல்லாம் அடித்து, கூரைகளை எல்லாம் புதிதாக்கி 90 சதவீதம் வீடுகள் புதுப்பிக்கப் படும் ஒரு பகுதியில் இருக்கிறேன். இந்த வருடம், சென்ற வருடம் போலவே, மக்களின் நிதி நிலை சரியில்லை என்பது தெரிய வர ஆரம்பித்திருக்கிறது. ஒரு தெளிவான வேறுபாடும் புலப்படுகிறது.

காலை இளம் வெயிலில் அந்த ஈரப் பிசுபிசுப்பு உள்ள மெலிய குளிர் காற்றில் நடக்கையில் பல வீடுகள் தம் பொலிவிழந்து காணப்பட்டது புலப்பட்டதில் சிறிது யோசித்ததில் அவை அனேகமாக வயதான மனிதர்கள் வாழும் வீடுகள் என்பது புலப்பட்டது. ஓய்வு ஊதியம், சேமிப்பில் காலம் தள்ளும் மனிதருக்கு வயதானவருக்கு இந்த வருடங்கள் நல்ல வருடங்களே அல்ல.

ஓரளவு பார்க்கப் புதிதாகவும் நல்ல பராமரிப்பிலும் இருந்த வீடுகள் தெருவில் எவை என்றால் புதிதாய்க் குடி வந்தவர்கள், இளம் குழந்தைகள் உள்ளவர்கள், இருவரும் வேலைக்குப் போகும் மனிதர் உள்ள வீடுகள் இப்படி. இன்னும் வேலை பார்க்கும் குடும்பங்களால் இந்தக் கஷ்ட காலத்திலும் அதிகம் பிரச்சினை இல்லாமல் காலம் தள்ள முடிகிறது போலும்.

கூட என் மகள் வந்தாள். கல்லூரியில் இருந்து நேற்று இரவே வந்து விட்டாள்.

ப்ரைமரியில் முதல் தடவையாக வாக்களித்தாள். அவளுடைய மொத்த ஹாஸ்டலும் ஒபாமா என்று தெரிவித்தாள். சிலர் பழமைப் பார்வை உள்ளவர்கள்- மகெய்ன் ஆதரவாளர்கள் உண்டு, ஆனால் ஒபாமாவுக்கு உள்ள பெரும்பான்மை ஆதரவால் மௌனம் காக்கிறார்களாம்.

அவளுக்கு இந்தத் தேர்தலில் வாக்களிப்பதில் மிக மகிழ்ச்சி, பெருமை. அவளை விட வாக்குப் போட உரிமை பெற பல ஆண்டுகள் இன்னும் இருக்கும் மகனுக்கு ஒரே துடிப்பு, தானும் வருவேன் என்று. அம்மாவோடு போ என்று சொல்லி, பள்ளிக்கு அனுப்பி
வைத்தேன்.

பெயரைக்கேட்டு சிறிது திக்குமுக்காடினார் வாக்காளர் உதவியாளர். வயதானவர். ஒரு பென்சில் டிக் போட்டு விட்டு அடுத்த மேஜையில் வாக்குச் சீட்டு கொடுத்தவரிடம் அனுப்பினார்.

சீட்டு கையில். பெண் ஒரு பூத் போன்ற இடத்தில் எல்லாவற்றிலும் வாக்கு போட்டாள். நான் ஒரு மேஜையில் அமர்ந்து கவனமாகக் குறித்தேன். இருவரும் ஓட்டுப் போட அந்த எந்திரத்துக்கு அருகில் போகையில் ஒரு போலிஸ்காரர், மேஜையில் அமர்ந்து பெயர், முகவரி கேட்டார். சொன்னதற்கு அவரும் ஒரு டிக் போட்டுக் கொண்டார் (நோட்டுப் புத்தகத்தில்).

Optical scanner எந்திரத்தருகே இருந்த பெண்மணி என் மகளிடம் இதுதான் முதல் தடவையா பெண்ணே என்றார். இல்லை, ப்ரைமரியில் வாக்களித்தேன் என்றாள்.

வாக்காளருக்கு உதவி செய்பவர்கள் சார்பின்றி இயங்க வேண்டும் என்று ஒரு விதி உண்டு. என்றாலும் மகளுடைய உற்சாகத்தைப் பார்த்து அவ்ருக்கும் உற்சாகம்.

Exciting isn’t it? என்றார்.

ஏன் அப்படிச் சொல்கிறார் என்று எங்கள் மூவருக்கும் தெரியும். சிரித்து விட்டுத் தலை அசைத்தோம். அந்த எந்திரத்துக்குப் போவதற்குள், ஒரு சர்ச்சுடைய பெரிய சமுகக் கூட்ட அறையான அந்த பெரிய கூடத்தில் நாங்கள் பல கருப்பர்களைக் கடந்தோம். அவர்களில் சிலர் வாக்காளர், சிலர் உதவியாளர். நாங்கள் ஒருவரை ஒருவர் பார்த்துப் புன்னகைத்துக்
கொண்டோம்.

சொல்லாமல் சொல்வது ஊக்குவிப்பது பாராட்டுவது வாழ்த்துவது எல்லாம் அந்தச் சிறு சிரிப்புகளில் பரிமாறப்பட்டன. அதே பரிமாறல் இந்த நடுவயதைத் தாண்டிய வெள்ளைப் பெண்மணியுடனும் நடந்தது.

வெளியே வந்தோம். சரித்திரம் நிகழ்ந்தது, அதில் நாம் ஒரு சிறு பங்கு வகித்தோம் என்று எங்களுக்குத் தெரிந்திருந்த ஒரு அதிசய நேரம் அது.

ஜெர்மனியின் உள்ளொன்றும் புறமொன்றும்: மைத்ரேயன் / Sign & sight

ஜெர்மானியர் ஒபாமா எழுச்சி பற்றி ஒரே குதூகலம் அடைகிறதைப் போல ஒரு போலித்தனத்தை நான் பார்த்ததே இல்லை என்கிறார் ஒரு துருக்கிய ஜெர்மன் பிரஜை.

இத்தனை பத்தாண்டுகளில் ஒரு நகரத்தின் மேயர் பதவி கூட ஒரு துருக்கிய ஜெர்மன் குடி புகுந்தவருக்கோ வாரிசுகளுக்கோ கிட்டியதில்லை. ஒரு கட்சியில் ஒரு முக்கியப் பதவி கூட துருக்கிய ஜெர்மனியருக்குக் கிடைத்ததில்லை. இவர்கள் ஏதோ அமெரிக்காவில் ஒரு கருப்பர் மேலே எழுந்ததற்கு அவருடைய வெற்றிக்கு ஆதரவு தெரிவிக்கிறார்களாம்!

நல்ல கண்டனம்தானே? அவர் இதே சொற்களில் அதைச் சொல்லவில்லை. அவர் ஜெர்மன் மொழியில் சொன்னதன் ஆங்கில மொழிப்யெர்ப்பை நான் தமிழுக்கு ஒரு சுருக்கமாகக் கொடுத்தேன். மீதத்தைக் கீழே பாருங்கள். அது சும்மா தூண்டில் பத்தி. வேறு சில ருசிகரமான கதுப்புகளும் இங்கு உண்டு. படியுங்கள்.

மைத்ரேயன்

தொடர்புள்ள வலைப்பதிவு: The Contentious Centrist: “Why are Germans so nuts about Obama?”

Frankfurter Rundschau :: “Mely Kiyak finds the frenzied enthusiasm for Barack Obama deeply hypocritical in a country where he wouldn’t stand a chance of becoming Bundeskanzler.

‘If participation means that immigrants should be politically integrated, then this country should be ashamed of the state of its political hierarchies. Because politicians of Turkish origin are making a huge effort and are spending a considerable part of their energy in fighting their way up electoral lists within their own parties. Not even half a percent of German-Turks have their own mandate. And with citizenship conditions growing more difficult by the year, they have to hear that they must speak primarily to German voters. Has anyone ever heard of a Turkish mayor? Why don’t we have a single minister-president with an immigration background. Why not in federal states like North Rhine-Westphalia, Baden-Würtemberg or Bavaria which have the largest immigrant populations?'”

மைத்ரேயன்: பரக் ஒபாமாவா? ஜான் மெகயினா?

மைத்ரேயனின் கருத்துகள்…

பராக்கின் ரசிகன் அல்ல நான்.

ஹார்வர்டில் ஒரு சட்டம் பயின்று அதில் உயர் ராங்கில் தேறிய ஒரு வலுவான சிந்தனையாளர். அவர் தான் போதித்த கல்லூரியில் (பல்கலையில்) இதர சட்டப் பேராசிரியர்களிடம் இருந்து தனித்து நின்று மாணவர்களின் கவனத்தை ஈர்த்த ஒரு பேராசிரியர்.

ஜனநாயக் கட்சி பெரும் திமிங்கிலங்கள் உலவும் ஒரு கட்சி. எந்தப் பெரும் நிதியாளரும், பணமுதலையும் தனக்கு உதவாதபோது, பல இளைஞர்களை மட்டும் வைத்துக் கொண்டு ஹிலரியின் + பில் கிளிண்டனின் 20 ஆண்டு அரசியல் முதலீட்டில் அவர்கள் சேமித்து வைத்த பெரும் நிதிக் குவியல் அது கொணரும் ஏராளமான ஊடக பலம் எல்லாவற்றையும் தன் பேச்சு வன்மையாலும், மக்களை அது சென்று சேரும் தன்மையைப் புத்திசாலித்தனமாக நிர்வாகம் செய்ததாலும் வென்று வந்தவர்.

மகெய்னுக்கு இதே செயலைச் செய்ய கிட்டத்தட்ட முப்பதாண்டுகள் ஆயிருக்கின்றன.

பராக் கிட்டத்தட்ட தாம் எந்தக் கொள்கைகளை முதலில் முன்வைத்தாரோ அவற்றில் இருந்து பெரிதும் பின் வாங்காமல் இந்த உள்கட்சித் தேர்தலை வென்றிருக்கிறார்.

மகெய்ன் கடந்த 30 வருடங்களில் அடித்துள்ள அந்தர்பல்டிகள் நிறைய நிறைய. பெரும் பண முதலைகளின் பின்னணியும், கிருஸ்தவ சர்ச்சுகளின் பலமும், அமெரிக்க ஊடகங்களின் இயல்பான வலது சாரிச் சாயப் பார்வையும் அவருக்கு ஒரு வலு உள்ளதான பிம்பத்தைக் கொணர்கின்றன.

உண்மையில் மகெய்னுக்கு அமெரிக்கப் பொருளாதாரம் பற்றி ஏதும் உருப்படியாகத் தெரிந்திருக்காது என்பது என் கணிப்பு. பராக்கிடம் நிறைய சிறந்த நடுவயது executive talent அதுவும் குறிப்பாக financial sector இல் இருந்து சேர்ந்திருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டேன்.

ஒரு ஜனாதிபதி அமெரிக்காவில் அவரே எல்லாவற்றையும் சிந்தித்துத் தெரிந்து கொள்ளத் தேவை இல்லை என்பதை புஷ் 8 ஆண்டுகளில் திறம்பட நிரூபித்திருக்கிறார். ஒரு நாளைக்கு பல பிலியன் டாலர்கள் வாண வேடிக்கை விட்டுக் கொண்டு 8 வருடம் அமெரிக்கப் பொருளாதாரம் ரத்தம் கக்கிக் கொண்டு இருக்கிறது.

இது ஒன்றே போதும் அமெரிக்கப் பொருளாதாரத்தைக் கதிகலங்க அடிக்க.

பல ட்ரிலியன் டாலர் போர ஒன்றை அமெரிக்கா தொடர்ந்து நடத்தினால் அதன் பொருளாதாரம் க்ஷீணித்துப் போவதில் அதிசயம் இல்லை.

போர்த்தளவாடங்களை உற்பத்தி செய்யும் தொழிலதிபர்களிடம் இருந்து பெறும் லாபம் எல்லாம் அமெரிக்காவில் தானே முதலீடு செய்யப்படும் என்று யாராவது கோணலாக ஒரு வாதம் செய்யாமல் இருப்பார்கள் என்று நினைக்கிறேன்.

இன்னும் 8 ஆண்டுகள் ரிபப்ளிகன் கட்சி பதவியில் இருந்தால் அமெரிக்கப் பொருளாதாரம் காலாவதி ஆகி விடும். அதற்காக டெமக்ராடிக் கட்சி ஏதோ உன்னத புருடர்களால் ஆனது என்று நான் வாதிடவில்லை.

இருக்கும் பிசாசுகளில் எது நல்ல குழந்தை என்று கேட்டதற்கு, அப்பன் சொன்னானாம், அதோ கூரை மேல் ஏறி நின்று தீப்பந்ததால் வீட்டுக்கு நெருப்பு வைக்க முயல்கிறதே அவன் தான் இருப்பதற்குள் நல்லவன் என்று.

அந்த நிலைதான் அமெரிக்கப் பிரஜைகளுக்கு. ஆனால் வினையை எத்தனை நாடுகளில் விதைத்தார்கள். அதெல்லாம் திரும்பி வருகிறது.

என்ன பிரச்சினை என்றால் தனி மனித அமெரிக்கர்கள் நிறைய நன்மை செய்ய முயன்றிருக்கிறார்கள் அதெல்லாம் எப்படித் திரும்பி வந்து உதவும் என்று எனக்குப் புரியவில்லை.

ஒரு அமெரிக்க ஜனாதிபதிக்கு எல்லாம் தெரிந்திருக்க வேண்டும் என்பதில்லை என்று நீங்களே சொல்லி மெக்கென் இடம் இருக்கும் மைனஸ்களை நீங்களே இல்லாமல் செய்துவிட்டீர்கள்.

புஷ் பொருளாதாரத்தில் ஈராக் யுத்தத்தினால் அமெரிக்காவுக்கு பொருளாதார லாபம் ஏதுமில்லாதது போல் நீங்கள் போட்ட கணக்கு ஒப்புக்கொள்ள முடியாதது. புஷ் ஏதோ வெறி பிடித்து சண்டை ஆரம்பித்து நடத்தியது போன்ற பிம்பம் சரியானதில்லை. யுத்தம் ஒன்றும் நஷ்டகணக்கு அல்ல.

உங்கள் இரண்டு வாதங்களையும் நான் முன்னமே எதிர்பார்த்து அந்த இரு வரிகளையும் எழுதினேன்.

அமெரிக்க அதிபர்களுக்கு அனைத்தும் தெரிந்திருக்க வேண்டாம் என்பது ரானால்ட் ரேகன் காலத்தில் உறுதிப்பட்டுப் போயிற்று.

எல்லாம் தெரிந்த கிளிண்டனால் வலது சாரி செனட், காங்கிரஸ் ஆதிக்கத்தில் ஏதும் உருப்படியாக மக்களுக்குச் செய்ய முடியாமல் பொருளாதாரத்தை ஓரளவு பெரும் பண முதலைகளின் கைப்பிடியில் இருந்து மீட்டு மத்திய தர மக்களுக்கு ஓரளவு நன்மை தரும் நடவடிக்கைகளை எடுத்து விட்டுப் போனதாகப் பல பொருளாதார நிபுணர்கள் கருதுகிறார்கள்.

இவற்றை நான் அவ்வளவு நம்புவதில்லை.

அமெரிக்கப் பொருளாதாரத்தில் புகையும், ஆடிகளும் அதிகம். அமெரிக்கச் சட்டங்களுக்கு அப்பால்பட்ட சானல் தீவுகள் போன்ற இடங்களில் அமெரிக்கப் பண முதலைகள் சேர்த்து வைத்திருக்கும் நிதியின் அளவு ஒரு வேளை அமெரிக்காவின் வருட மொத்த வருமானம் அளவு கூட இருக்கும் என்று ஊகம் .

இதைப் பற்றி மதர் ஜோன்ஸ் என்ற ஒரு சிறப்பான அரை இடது, தொழிலாளர் சார்பு ஆனால் நல்ல ஆய்வு சார்ந்த பத்திரிகை மரபைக் கடைப்பிடிக்கும் பத்திரிகை ஒரு நீண்ட கட்டுரையை இரண்டு வருடம் முன்பு பிரசுரித்தது என்று நினைவு. அதை அந்தப் பத்திரிகையின் வலைப் பக்கத்தில் போய் ஆவணங்களில் தேடினால் கிடைக்க வாய்ப்பு அதிகம். நான் இந்தப் பத்திரிகையின் நாணயத்தையும், நா நயத்தையும் நம்புபவன்.

இப்படித் தனிநபர் ஜனாதிபதி ஒன்றும் பொருளாதாரத்தில் பிரமாதமாகக் கிழித்து விட முடியாது என்ற கருத்தை கருத்தியலில் (ideology) அமைப்பியல் பார்வை என்று சொல்வார்கள். நான் அமைப்பியலுக்கும், தனிநபர் வாதத்துக்கும் இடையில் இருப்பவன்.

தனிநபர் ஏதோ உலகத்தையே புரட்டி விட முடியும் என்ற கருத்து ஓரளவு இளம்பிள்ளைக் கருத்து. அந்த வயதில் தாம் அசாதாரண சக்தி உள்ளவர்கள் என்ற நம்பிக்கை இல்லாவிடில் என்ன பிரயோசனம்? இளைஞர் வளர அந்த நம்பிக்கை அவசியம்.

நடுவயது வரும்போது அமைப்புகளின் இயல்பு புரிந்து தனிநபர் சாகச விழைவுக்கும், அமைப்பின் எளிதில் நகராத் தன்மைக்கும் இடையில் எப்படி ஊடாடி காரியங்களைச் சாதிப்பது என்பது ஓரளவு தெரிந்து கொள்ளலாம்.

இதில் ஓரளவு ஹிலரி வெற்றி பெற்றிருந்தார் சமீபத்து ஏழு எட்டு ஆண்டுகளில். அவரது இந்த அனுபவ முதிர்ச்சி இப்போது வீணாகப் போகிறது என்பதில் எனக்கு வருத்தமே.

ஆனால் மகெய்ன் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக செனட்டில் இருந்து சாதித்தவை மிகக் குறைவு. அவர் தன் வியத்நாம் போர்க்கைதி பிம்பத்தை வைத்துக் கொண்டு இத்தனை நாள் காலம் ஓட்டி இருக்கிறார். ரிபப்ளிகன் நிர்வாகங்கள் அவருடைய காலத்தில் கிட்டத்தட்ட 2/3 பகுதி இருந்ததால் அவருடைய தொகுதிக்கு செலவழிக்க நிறைய பணம் நிர்வாகத்திடம் இருந்து வாங்கி இருக்க வாய்ப்பு இருக்கிறது. இதனால் அந்தப் பகுதி பெரும்தனக்காரர்களிடம் இருந்து அவருக்கு நிதி வசதி கிட்டி இருக்கவும்
வாய்ப்புண்டு.

ஆனால் நிர்வாகத் திறமை என்று பார்த்தால் ஓபாமாவுக்கும் இவருக்கும் எந்த பெருத்த வேறுபாடும் இல்லை. இருவரும் அமெரிக்க அரசியலில் மிகவும் பெருமையாகக் கருதப்படும் executive experience அதாவது மேலாட்சியாளராக இருந்து நிர்வாகம் செய்து வெற்றி பெறுவது என்ற அம்சத்தில் முழு சூனியம். இருவருக்கும் அது கிடையாது.

[ இந்த அனுபவம் என்பதே ஒரு விதமான மாயை என்பதை நாம் இப்போது கருத வேண்டாம். அதற்குள் நுழைந்தால் நான் மிகவும் cynical ஆக இதை அணுகுகிறேன் என்று எல்லாரும் திட்டுவார்கள் என்று ஊகம் உண்டு.]

ஒபாமாவுக்கு எல்லாம் தெரிந்திருக்க வேண்டாம், ஏனெனில் புஷ்ஷே – அவர் நிர்வாகியாக இருந்து எதையும் பிரமாதமாகச் சாதித்ததில்லை. டெக்சாசில் தான் ஏதோ பெருத்த முன்னேற்றங்கள் கொண்டு வந்ததாக அவர் தம்பட்டமடித்தது எல்லாம் ஊடகங்களின் ஒத்துழைப்போடு அவர் நடத்திய மாயை என்று விமர்சகர்கள் புள்ளி விவரங்களை வைத்து பின்னால் நிரூபித்த கட்டுரைகள் பல பார்த்திருக்கிறேன்.

அவருக்குப் பின்னே ஊடகங்களும், கிருஸ்தவப் பேரியக்கங்களும், க்ளிண்டனின் உருப்படா பாலுறவுக் கேளிக்கைகளால் அன்னியப்பட்ட ஒரு பெரும் நடு அமெரிக்க மக்கள் திரளும் இருந்தன. அப்போதும் கூட தில்லு முல்லு செய்யாமல் அவரால் ஜெயிக்க முடியவில்லை.

இப்படிக் கத்தி முனையில் இருந்த ஒரு நாட்டை அனேகமாக ரிபப்ளிகன் கட்சியின் மீது வெறுப்பே வருமளவுக்குத் தள்ளி இருக்கும் பெருமை புஷ் அண்ட் மூத்த ‘தலைவர்களின்’ ஊழல் ராஜ்யம்.

ஊழல் மக்களுக்கு உதவாது என்பதை நான் உங்களுக்கு எடுத்துச் சொல்லத் தேவை இல்லை என்று நினைக்கிறேன். கடந்த பத்தாண்டுகளில் அமெரிக்க அரசு infrastructural investment இல் ஏராளமாகப் பின் தங்கி இருக்கிறது என்பது எத்தனை ஆயிரம் பாலங்கள் இடியும் அபாயத்தில் இருக்கின்றன, அவற்றைப் பற்றிப் புஷ் அரசு கவலையே படவில்லை என்று மத்திய அரசின் ஹைவேஸ் டிபார்ட்மெண்டின் உள்ளாய்வு அறிக்கையே சமீபத்தில் குறை சொன்னதாக ஒரு அறிக்கை படித்தேன்.

மேலும் புஷ் அண்ட் கோ கொள்ளை அடித்தது மக்களுக்கு எப்படியாவது வந்து சேர்ந்து விடும் என்று நீங்கள் நம்புகிறீர்களானால் அதை நான் எப்படி எடுத்துக் கொள்வது என்றே தெரியவில்லை.

  • சாதாரண தொழிலுற்பத்தியால் ஏராளமான தொழிலாளருக்கு வேலை கிட்டும்,
  • உள்நாட்டில் நுகர்பொருட்கள் நிறைய மக்களுக்குக் கிட்டும்,
  • சுழற்சியில் பணமும், லாபமும், முதலீடும் நாட்டுக்குள்ளேயே தங்கும்.
  • மக்களிடம் வேலைத் திறன்,
  • தொழில் நுட்ப அறிவு,
  • ஊக்கம், வாழ்வில் பிடிப்பு,
  • பண்பாட்டில் நம்பிக்கை, மேலெழுந்து வர உழைக்கும் ஆர்வம், தவிர
  • நல்ல வாழ்க்கை வாழ்வதில் கிட்டும் ஒருவித விகாசம் எல்லாம் இருக்கும்.

ராணுவத் தளவாடத் துறையின் பொருட்கள் மக்களால் நுகரப்பட முடியாதவை. அவை சுழற்சி இல்லாதவை. வெறுமே பல இடங்களில் சேமித்து வைக்கப்பட்டு துருவேறிக் கொண்டிருக்கும். இவற்றில் பயன்பாட்டுப் பயிற்சியும் பெறும் மனிதர்கள் சாதாரண வாழ்வுக்கு அந்தத் திறமைகளை மாற்றித் தர சில பத்தாண்டுகள் பிடிக்கும். ராணுவ வீரர்கள் பெருமளவு பாசறைகளில் வாழ்வதால் இந்தத் திறன் எளிதில் மக்களிடம் கை மாற்றித் தரப்படுவதில்லை.

தவிர ராணுவத் தளவாடங்கள் சாதாரண நுகர் பொருட்களைப்போல மலிவு விலைக்குக் கொடுப்பதற்காகத் தயாரிக்கப் படுவதில்லை. அவை நுகர்வாரிடம் விற்கப் படுவது உயர் விலைகளுக்கு, அந்த உயர் விலையை அரசிடம் பெறுவதற்காக நிறைய லஞ்சமும் ஊழல் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு அது அரசை மேலும் மேலும் உளுத்துப் போகச் செய்கிறது, மக்களின் வரிப்பணம் நல்ல ஆக்க பூர்வமான வேலைகளுக்குப் பயன்படாமல் கோடவுனில் தூங்கப்போகும் பொருட்களுக்குச் செலவிடப்பட்டு மக்களின் தேவைகள் பின்னே ஒத்திப் போடப்ப்டுகின்றன.

இதுவும் சுழற்சியில் மக்களின் முதலீட்டு வளர்ச்சியை முடக்குவதே.

இதைக் கொஞ்சம் தீவிரமாக யோசித்தீர்களானால் ஏன் ராணுவச் செலவு அதிகமாக உள்ள நாடுகள் உருப்படாமல் போகின்றன என்பது புரிய வரும்.

ஆக ஒபாமா இளைஞர் ஆனாலும் அறிவு தீர்க்கம் உள்ளவர் என்பதை மனதில் வைத்து, எப்படி ஹிலரியைப் போன்ற் ஒரு வலுவான் எதிராளியை அவர் தோற்கடித்தார் என்பதையும் கருதுங்கள்.

அந்தத் தேர்தல் ஏதோ வெறும் பிரச்சாரத்தால் வெல்லப் படக் கூடியதல்ல. சில ஆயிரம் குழுக்களை நாடு முழுதும் அமைத்து அவற்றை நடத்தி கோணல் ஏதும் இல்லாமல் சமாளித்து இரண்டு வருடம் போல இந்தப் போட்டி நடக்கிறது. கடுமையான உழைப்பு தேவை இதற்கு. அதுவும் அடிமட்டத்தில் இருந்து ஒருவர் எழுந்து வர இந்த உழைப்பு ஏராளமாகத் தேவை.

ஹிலரிக்கு எல்லாம் அனேகமாக ஏற்கனவே வேண்டுகிற இடத்தில் இருந்தன.

மகெய்னுக்கும் பல வருடங்களாக அதிபர் தேர்தலில் போட்டி இட்டுத் தோற்றுத் தோற்று கற்ற பாடங்கள் நிறைய, அமைப்பும் இடத்தில் இருந்தது. எதிர்க்க வலுவான ஆட்கள் யாரும் இல்லாததாலும் அவர் ஓரளவு சுலபமாகவே இந்தப் போட்டியில் வென்றிருக்கிறார். அவரும் பல பத்து வருட நிதி சேமிப்பில் மேலே மிதந்து வந்து வென்றிருக்கிறார்.

மகெய்னுடைய தத்துவமோ, பொருளாதாரக் கொள்கைகளோ புஷ்ஷின் கொள்கைகள், தத்துவம் ஆகியவற்றில் இருந்து அதிகம் மாறக் கூடியவை அல்ல, ஏனெனில் அவருக்குப் பின் நிற்கும் பண பலம் அப்படி ஒரு பெரும் விலகலை அனுமதிக்காது.

ஒபாமாவுக்கு இந்த வகை கட்டுப்பாடுகள் குறைவு. அதுவும் 8 வருடமாக அதிகாரத்தில் இல்லாத ஜனநாயகக் கட்சியில் இருந்து வெளி வருவதால் பணமுதலைகளின் influence அவர் மேல் குறைவு. இல்லை என்று சொல்லவில்லை. குறைவு என்றுதான் சொல்கிறேன்.

மேலும் அவருடைய rhetoric, policy declaration எல்லாம்

  • நடுத்தர மக்களுக்கு நன்மை செய்யும் பொருளாதாரம்,
  • தொழில் உற்பத்தியை நாட்டில் வளர்க்க முயற்சி செய்தல்,
  • ராணுவச் செலவை மட்டுமல்ல, அன்னிய மண்ணில் போய் அட்டகாசம் செய்யும் கருத்தையே ஓரம் கட்டுதல்

என்று பெரிதும் வியர்த்தமான அரசுச் செலவுகளைக் குறைக்க எடுக்கும் நடவடிக்கைகளோடு ஆக்க பூர்வமான செலவுகளை முயலப் போவதாகவும் சுட்டுகின்றன.

இவை ஏதும் பொருளாதாரத்தில் தற்குறியாக இருந்தால் புரியாமல் செய்யவோ அல்லது பேசவோ முடிந்திருக்காது.

என் வாதம் உள்ளீட்டு வலுவோடுதான் முன்வைக்கப் பட்டிருக்கிறது. ஒரு பத்துபக்கம் எழுத விருப்பம் இல்லாமல் கோடி மட்டும் காட்டி விட்டேன். அதை நீங்கள் உள் நுழைந்து உள் தர்க்கம் எப்படி ஓடும் என்று பார்த்துப் புரிந்து கொண்டால் நல்லது.

Maithreyan: Milking the Holy Cows

எழுத்து: மைத்ரேயன்

The sense of the sacred என்பதுதான் நவீனப் பார்வையில் the sense of Sublime என உருமாறி விட்டது என்று எனக்குத் தோன்றுகிறது. பின்னது அழகியல் பார்வையில் உச்ச நிலை சாதனையாகக் காட்டப்படுவது. அனேகமாக கவிதையில் காணப்பட வேண்டும் எனக் கருதப்படுவது.

நவீனத்துவம் என்பது

  • ஏதோ அறிவியல் பூர்வமானது/ சார்ந்தது,
  • பொறியியலும்,தொழில்முறை உற்பத்தியும் சேர்ந்து கொடுத்த பயன்பொருட்களின் ஏராளத்தால்
  • மனிதரின் வாழ்வில் நேர அவகாசத்தைக் கொடுத்து
  • அனைத்து மனிதரையும் சிந்தனையில் இறங்கவாய்ப்பு கொடுத்து
  • பெருவாரியான மக்களை உடலுழைப்பில் இருந்து மெல்ல விலக்கி
  • நுகர்வாராகவும், படைப்பாளராகவும் மாற்ற வழி செய்வது

என்றெல்லாம் ஒரு புறம் ஒரு பார்வை இருந்தாலும், அடிப்படையில் இந்த கருத்தியல் உருவாக ஒரு காரணம் romanticism. இது குறித்து ஐசேயா பெர்லின் (Isaiah Berlin) ஒரு சிறு ஆனால் பளீரென்ற கட்டுரை எழுதி உள்ளார்.

அதற்கு முன் என் வாதத்தைச் சொல்லி விடுகிறேன்.

Sacred என்பதை நாம் புனிதம் என்று தமிழில் சொல்கிறோம் என்பது என் புரிதல்.

புனிதத்தை உடைத்து – அதாவது கேள்விகளுக்கும், சாமானியரின் உணர்தல், அணுகுதலுக்கு அப்பாற்பட்ட தொலைவில் நிற்கும் தன்மையை உடைத்து, அதை எவரும் அணுகும் படிச் செய்வதே நவீனத்துவத்தின் முதன் முயற்சி.

இதில் பல கூறுகள் உண்டு. ஒரு கூறு புனிதம் என்பதே பொய்மை என்று நிறுவுவது. இது ஃப்ரெஞ்சு தடாலடி சிந்தனை.

இன்னொன்று புனிதம் மேலாட்சியாளரின் கட்டுப்பாட்டில் சாமானியரிடம் இருந்து விலக்கி வைக்கப் பட்டிருக்கிறது. இது ஒரு கயமைச் செயல். இதை உடைத்து புனிதத்தை சாமானியரிடம் திருப்பிக் கொடுக்க வேண்டும். இதை பூடகமாக்கப் பட்ட நிலையில் இருந்து வெளியே இழுத்து சாமானியருக்கு விளங்கும் வகையில் கொடுக்க இலக்கியமும் உணர்ச்சிகளால் ஆன தர்க்கமும்தான் உதவும். இதற்குக் கவித்துவம் உறுதுணை என்று ஒரு வாதம்.

இதுதான் romanticism. இதில் ஜெர்மானியச் சிந்தனை மேல் தூக்கி நிற்கும். இந்த வழிமுறையை அடுத்த கட்டத்துக்கு நகர்த்திய ‘பெருமை’ திருவாளர் மார்க்ஸைச் சேரும்.

ஹேகல் முந்தைய கட்டத்தில் சில மாறுதல்களை மட்டும் செய்து அதன் உள் ஒழுங்கைக் குலைக்காமல் வைத்திருந்தார்.

எதையும் அழிக்கும் நல்ல மனம் கொண்ட மார்க்ஸால் அந்த ஒழுங்கை ஏற்க முடியவில்லை. தன் சுயவாழ்வின் squalor எல்லா சிந்தனையிலும் இருக்க வேண்டும் என்பது அப்பெருமானாரின் துணிபு போலும்.

மூன்றாவது கூறு இன்றைய எவாங்கலியக் கூறு. இதைக் கால்வினிசம் என்று ஆங்கிலத்தில் கூறுவர். அல்லது வேபர் சொல்வது போல நவீன முதலாளியம் என்றும் சொல்லலாம். இங்கு புனிதம் தகர்க்கப்படுகிறது, ஆனால் அழிக்கப் படுவதில்லை.

  • அன்றாட புல்லரிப்புகள்,
  • செயல் நேர்த்தி உள்ள புதுப் புது நுகர் பொருட்கள்,
  • தொடர்ந்த தொழில்முறை முன்னேற்றம்,
  • நுட்பச் சிக்கலின் பரிணாமம்

ஆகியன இதன் உட்கூறுகள்.

கால்வினியம் உழைப்பை – அனேகமாக சாதுரிய உழைப்பை, லாகவ உழைப்பை முதன்மைப்ப்டுத்தி, மொண்ணை உழைப்பைக் கீழிறக்குகிறது. This does not rule out the divine as well. But simply reverses the logic and contends that the state of one’s blessing (wealth that is) is a clear indicator of the divine intent and pleasure.

அதாவது the divine ஐ அடைய நாம் பெரும்பாடு படத்தேவை இல்லை. உலகப் பொருட்கள் மீது வெறுப்பு எல்லாம் கொண்டு துறவற மனத்தோடு இருக்கத் தேவை இல்லை. மோனத்தவம் எல்லாம் செய்ய வேண்டாம். உலகப் பொருட்கள் மீது குவி கவனத்தோடு செயல்பட்டு நம் சாதாரண வாழ்வை மேலும் மேலும் மேம்படுத்த உழைத்தால் போதும்.

அதில் வளப்பம் கிட்டினால் அதுவே the divine has blessed us என அர்த்தம் என்று சொர்க்கத்தைப் பூலோகத்திற்கு இறக்கி சொர்க்கத்தையும் கடவுளையும் புனிதத்தையும் ஜனநாயகப் படுத்தியது இந்த சிந்தனை. இதனுடைய ஒரு இழிந்த உருவில் இந்த சிந்தனையில் the cute is the sublime, and therefore the sacred.

இந்த இழிவைத்தான் Andy Warhol ஒரே நேரம் கிண்டலும் செய்தார், வணங்கவும் செய்தார். அது ஒரு சிரிப்பை உள்ளடக்கிய வணக்கம். மத்திய காலத்துடைய வழிபாட்டு முறை போல, பயம் கலந்த வணக்கம் அல்ல.

இனி பெர்லினின் சில பத்திகள்.

….[in] Fichte’s word, ‘Frei sein ist nichts-frei werden ist der Himmel’ (To be free is nothing- to become free is very heaven’). Failure is nobler than success. Self-immolation for a cause is the thing, not the validity of the cause itself, for it is the sacrifice undertaken for its sake that sanctifies the cause, not some intrinsic property of it.

[இப்படி ஒரு மனப்பாங்குதான் தமிழ்க் கவிஞர் நகுலனை ஆட்டிப் படைத்தது என்பது என்
கருத்து. சுசீலா என்ற பெண் இலக்கே அல்ல, சுசீலா மீதான உளைச்சல்தான் ஈர்ப்பே. ]

These are the symptoms of the romantic attitude. Hence the worship of the artist, whether in sound, or word, or colour, or the highest manifestation of the ever active spirit, and the popular image of the artist in his garret, wild eyed, wild-haired, poor, solitary, mocked-art; but independent, free, spiritually superior to his philistine tormentors.

[இது தருமு சிவராமை அப்படியே வருணிக்கவில்லை?  அவருடைய சீடர்கள் அல்லது புரவலர்களின் அணுகலும் இதில் வருகிறது. ஆனால் தருமு சிவராமு கிட்டத்தில் போனால் அப்படி ஒன்றும் ரொமாண்டிக் சிந்தனை உள்ளவராகத் தெரிய வரமாட்டார்.]

This attitude has a darker side too: worship not merely of the painter or the composer or the poet, but of that more sinister artist whose materials are men- the destroyer of old societies, and the creator of new ones- no matter at what human cost; the superhuman leader who tortures and destroys in order to build on new foundations- Napoleon in his most revolutionary aspect. It is this embodiment of the romantic ideal that took more and more hysterical forms and in its extreme ended in violent irrationalism and Fascism.

Yet this same outlook also bred respect for Individuality, for the creative impulse, for the unique, the independent, for freedom to live and act in the light of personal, undictated beliefs and principles, of undistorted emotional needs, for the value of private life, of personal relationships, of the individual conscience, of human rights.

The positive and negative heritage of romanticism – on the one hand contempt for opprotunism, regard for indivdual variety, scepticism of oppressive general formulae and final solutions and on the other hand prostration before superior beings and the exaltation of arbitrary power, passion and cruelty – these tendencies, at once reflected and promoted by romantic doctrines, have done more to mould both the events of our century and the concepts in terms of which they are viewed and explained than is commonly recognised in most histories of our time.