Tag Archives: Blogs

தமிழ்ச் சிறுகதைகள்: ஆகஸ்ட் 2009

இந்த மாதம் படித்த கதைகளில் என் மனதை அசைத்துப் பார்த்து, கவனத்தை ஈர்த்து, உங்களுக்கும் குறிப்பிடத்தக்கவையாக இருந்த சில:

1. ஹரன்பிரசன்னா :: சொல்வனம் » அலை

நாவல்களிலே ஃப்ளாஷ்பேக் என்னும் வஸ்து சிரமமானது. சிறுகதையிலேயே நிகழ்த்தி காட்டுகிறார். சில வார்த்தைகள் கதையில் வரும்போது, அப்படியே நெகிழச் செய்து விடும். இங்கே ‘கந்தரப்பம்’. அப்படியே என்னை எங்கோ கொண்டு போய் விட்டது.

வம்பு கேள்வி: அதெல்லாம் சரி… ஹரன் பிரசன்னா ஏன் பைத்தியக்காரன் நடத்திய ‘உரையாடல்‘ போட்டியில் பங்குபெறவில்லை?

2. வ. ஸ்ரீநிவாசன் ::சொல்வனம் » உயிரிழை

முதல் வரியில் கதை முடிஞ்சுடணும் என்னும் கோட்பாட்டை பின்பற்றுகிறார். அந்த ஆரம்பத்தை வாசித்தவுடன் மேஜிகல் நியலிசமோ, குறியீட்டு இம்சையோ என்னும் பயத்தை அறவே போக்கியும் விடுகிறார்.

வம்பு கேள்வி: கதை கூட புரிஞ்சுக்கலாங்க. அது என்னங்க! அப்ஸ்ட்ராக்டா தோட்டா வட்டம் போட்ட படம்?

3. கர்ட் வானகட் :: சொல்வனம் » ஹாரிசன் பெர்ஜரான்மொழிபெயர்ப்பு :: விஷ்வநாத் சங்கர்

இம்சை இல்லாத மொழிபெயர்ப்பு. கதை ரொம்ப கவலைப்படுகிறது. கனவு லோகத்தில் சஞ்சரிக்கிறது. வெகு தீவிரமாக பிரசாரிக்கிறது.

வம்பு கேள்வி: கர்ட் வானகட் இப்ப இருந்தா ஒபாமாவின் உடல்நலத் திட்டமான சம்ச்சீர் ‘சேமநலக் காப்பீடு’ குறித்து என்னங்க சொல்லியிருப்பார்? அதற்கும் கத விட்டிருப்பாரோ!

4. கிச்சாமி | சத்யராஜ்குமார்.காம்

அமெரிக்க வாழ்க்கையை இவ்வளவு வெளிப்படையாக எழுதினால் தாங்காது சாமீ. ஆனாலும், நம்ம இணைய வாசகர்கள், கதையை கதையாகப் பார்க்காமல், ‘நீங்களா?’, ‘அப்படி சட்டம் கிடையாதே?’, ‘என் மனைவி அவ்வாறு இல்லையாக்கும்‘ என்று மறுமொழிவது தனிக் கதை.

வம்பு கேள்வி: கதைக்கு கீழே கருத்து சொல்ல முடியாம, வலைப்பதிவிலே தனியா இன்னொரு இடத்திலே பதில்பொட்டிய வச்சிருக்கீங்களே! ஏனுங்க?

5. நாகார்ஜுனன் :: திணை இசை சமிக்ஞை: 108

ஒரு கதை. அதை எப்படியெல்லாம் சொல்லலாம்? நாகார்சுனன் மறுமொழியில் இருந்து: தமிழ் எழுத்தாளர்கள் ஒரே ஸ்டைலில் பல கதைகளை எழுதியதை, எழுதுவதை (இதற்கு ஒரே major விதிவிலக்கு புதுமைப்பித்தன்) வாசிக்கிற, எழுதப்போவதையெல்லாம் வாசிக்கப்போகிற நமக்கு ஒரே கதையை பல ஸ்டைலில் எழுதினால் ஏன் வாசிக்க முடியாது..

வம்பு கேள்வி: உங்களுக்கு கதைக்கான கரு பஞ்சமா சார்? வேணும்னா நான் ரெண்டு knot சொல்லட்டுமாங்க!

6. முரளிகண்ணன் :: நீரோடை: துண்டு சிகரெட்

வெட்டிப்பயல் மாதிரி சொல்ணுமின்னா, இவரோட எழுத்து ‘சும்மா நல்லா இருக்கு நல்லா இருக்குனு சொல்லி போர் அடிச்சி போச்சி...’

வம்பு கேள்வி: உங்களுக்கு மெய்யாலுமே கற்பனை ஜாஸ்தியா? அல்லது நாட்குறிப்பை அப்படியே எழுத சங்கோசமா?

7. சித்ரன் :: நீரோட்டம் « புள்ளி

சமீபத்திய ‘கல்கி’ பத்திரிகையில் வெளியான கதை. சோடை போகுமா? நல்ல வேளையாக இந்த மாதம் கதை எழுதியிருக்கிறார். இவரெல்லாம் நம்ம லிஸ்டில் இருப்பது லிஸ்ட்டுக்கு பெருமைங்க.

வம்பு கேள்வி: அந்தக் கடைசி திருப்பம்தான் இதனுடைய மிகப் பெரிய உச்சம் என்றாலும், அப்படிப்பட்ட இறுதிவரி திகில் இல்லாவிட்டால், இந்தக் கதையை எப்படி முடித்திருப்பிர்கள்?

8. ஆல்பர்ட்டோ மொராவியா :: பறவையின் தடங்கள் » Blog Archive » உத்தரவிடு பணிகிறேன்மொழிபெயர்ப்பு :: நாகூர் ரூமி

மொழியாக்கம் என்பதெல்லாம் சொன்னால்தான் தெரியும். அப்படியொரு அசல் படைப்புக்கு நிகரான மொழி லாவகம். இன்னொரு முறை ஆசுவாசப் படுத்திக் கொண்டு வாசித்தால் உள்ளே பொதிந்திருக்கும் மற்ற விஷயங்கள் புலப்படும்.

வம்பு கேள்வி: கப்பலுக்கு போன மச்சான்‘ மாதிரி அடுத்த நாவல் எப்பங்க?

9. ரா. கிரிதரன் :: வார்த்தைகளின் விளிம்பில்: மெளன கோபுரம்

பறவைகள் விமானத்தில் மோதுவதால் அறுநூறு மில்லியன் டாலர் சேதம் ஆகின்றன. வானூர்தியில் வந்து விழும் பறவைக் கூட்டத்தின் மேல் 583 விபத்துகளின் பழியைப் போட முடியும். செத்த கணக்கு சேர்க்கவில்லை. இப்படியெல்லாம் புள்ளி விவரம் அடுக்குபவரை நேர்த்தியாக எதிர்கொள்ள உதவுவது புனைவுலகம். வாழ்வை சொல்லி, அதன் நியாயங்களை சரித்திர பூர்வமாக, கலாச்சார ரீதியாக புரிய வைக்கும் முயற்சிதான் இலக்கியம். இந்தக் கதை அந்த ரகம்.

வம்பு கேள்வி: உங்களுக்கு கதை எழுதுவது தவிர வேற எதாவது வேல உண்டுங்களா?

10. ரா. கிரிதரன் :: வார்த்தைகளின் விளிம்பில்: நண்டு சொன்ன `பெரியவங்க` கதை

வித்தியாசமான, அநாயசமான ஆரம்பம். கதை சொல்லி முடிக்கும் அவசரத்தில் நண்டு இருப்பதால், ஆசிரியரைப் பழிக்க வேண்டாம்.

வம்பு கேள்வி: நண்டு சொன்ன நாவலின் சுருக்கம் என்பதுதானே உண்மை?


தொகையறா

அந்தக் கால கவிதைகளில் தொகை (எட்டுத்தொகை போன்ற) நூல்களில் இருப்பதுதான் புகழ்பெற்று கோலோச்சுக்கிறது. அதே போல், இந்தக் கால சிறுகதைகளுக்கும் அறிமுகம் வேண்டுபவர், ‘நெஞ்சில் நிறைந்தவை‘ (சிவசங்கரி வானதி பதிப்பகம்), ‘முத்துக்கள் பத்து‘ (அம்ருதா பதிப்பகம்), ஐம்பதாண்டு கால தமிழ்ச் சிறுகதைகள் (சா. கந்தசாமி கவிதா பப்ளிகேஷன்ஸ்), ‘எனக்குப் பிடித்த கதைகள்‘ (பாவண்ணன்) போன்ற தொகுப்புகளையும் எஸ் ராமகிருஷ்ணன், சுஜாதா, ஜெயமோகன், க.நா.சு. இரா முருகன், போன்றவர்களின் பரிந்துரைப் பட்டியலையும் நாடுகிறார்கள்.

இவர்கள் எல்லோருமே சொல்லி வைத்தது போல் தற்கால இணைய எழுத்துகளை, வலையில் மட்டும் புழங்கும் தமிழ்ச் சிறுகதைகளை முற்றாக புறக்கணித்துவிடுகிறார்கள். இதற்கு நிவர்த்தியாக, தமிழ் வலையகங்களில் (சொல்வனம், திண்ணை, உயிரோசை, நிலாச்சாரல், தமிழோவியம், தமிழ்ப்பதிவுகள், இன்ன பிற) கிடைப்பதில் குறிப்பிடத்தக்க ஆக்கங்களை ஒரு இடத்தில் சுட்டி கொடுத்து தொகுத்தால் செமையாக இருக்கும்.

இணையத்தில் தடுக்கி விழுபவர்களுக்கும் பயனாக இருக்கும். இணையமே கதியாக கட்டுரைகளையும் ட்விட்டுகளையும் மட்டுமே வாசிக்கும் என் போன்றோருக்கும் உருப்படியான விஷயமாக இருக்கும்.

எழுத்தாளர் பெயரோ, எழுதியவரின் மூலமோ கூட தெரியாமல் போகலாம். ஆனால், நாளைய பின்னும் ‘முக்கியமான புனைவு’ என்று தேடினால் எளிதில் மாட்டும்.

Why blogs should not be just Email Subscription Letters?

Bloggers-Tamil-Blogs-Rayar-kaapi-klub-Nesamudan-Venkatesh‘நேசமுடன்’ வெங்கடேஷ் மீன்டும் மின்னஞ்சல் மூலம் தன் எண்ணங்களைப் பகிர அரம்பித்திருக்கிறார்: நேசமுடன் – மடல் இதழ்

தொடர்பான பதிவுகள், விளக்கங்கள்:

1. நேசமுடன் » கொஞ்சம் விளக்கம்; கொஞ்சம் அறிமுகம் ~ மடல் இதழ்

2. IdlyVadai – இட்லிவடை: மீண்டும் நேசமுடன் மடல் இதழ்

பத்து போட்டுவிடலாமா?

அ) மின்னஞ்சல் எல்லாம் செம பழைய நாகரிகம். (ஓல்ட் ஃபேஷண்ட்) சொல்லப் போனால் சொந்த விஷயமற்றதை மின்மடலில் வாராவரம் அனுப்புவது நாகரிகமற்றது. (ஃபேசன்லெஸ்)

ஆ) ‘மின்னஞ்சல் மூலம் பெற’ என்னும் வசதியை வோர்ட்ப்ரெஸ் பதிவில் இணைப்பது வெகு சுலபம். ஜெயமோகன்.இன் கூட இதை செய்திருக்கிறது. விரும்புபவர்கள், இவ்வாறு செய்து கொள்ளலாம் என்று ஒற்றை மடலை (ஒரேயொரு தடவை) அறிவிப்பாக அனுப்பலாம். அப்படி ஒரு ப்ளகின் இங்கே: Subscribe2 Plugin. கூகிள் ஃபீட்ரன்னர் கூட இருக்கிறது. அதை விட்டுட்டு…

இ) என் மனைவிக்கு கூட இந்த மடல் வருகிறது. அவர் வெகு அமரிக்கையாக ‘எரிதம்‘ என்று ஒதுக்கிவிடுகிறார். நாள்டைவில் இவ்வாறு பலரும் ஸ்பாம் என்று குறியிடுவதன் மூலம், வெங்கடேஷ் ஐடி, தானியங்கியாக அனைவருக்குமே ‘எரிதம்’ என்று குறியிடப்பெற்று ஒதுக்கப்பட்டுவிடும். அவசர, ஆத்திரத்திற்கு கூட தொடர்பு கொள்ள முடியாமல் போய்விடும்.

nesamudan_books-kizhakkuஈ) இந்த மாதிரி கேட்காமல் கொடுக்கப்படும் எதற்குமே மதிப்பில்லை. மேலும், இந்தப் பதிவெல்லாம் நேசமுடன் வலையக சேமிப்பில் கிடைக்கவும் செய்கிறது. அப்படியிருக்க, ஏன் தனி மடலில் படிக்க வேண்டும்?

உ) ஆர்.எஸ்.எஸ் செய்தியோடை நன்றாக வளர்ந்து வயசுக்கு வந்துவிட்ட காலத்தில், இந்த மாதிரி அரதப் பழசான நுட்பம் தேவைதானா?

ஊ) இந்த மின்னஞ்சலைக் கைவிடக் கூடாது என்றால் அதற்கும் உபாயம் இருக்கிறது. ஆரம்பத் தொனியிலேயே அன்னியோன்யம் கொஞ்ச வேண்டும். வேறெங்கும் (குறிப்பாக அவரின் நேசமுடன் வலையகத்தில்) கிடைக்காத சரக்காக இருக்க வேண்டும். ஹரிகிருஷ்ணன் கடிதம் போட்டதைத் தொட்டு; மாலனின் புதிய பத்திரிகையில் வந்த பின் குறிப்புகளின் சுவையான விரிவாக்கம்… இப்படி

எ) அவருக்கு பிறர் அனுப்புமகின்ற பதில்கள், இணையத்தளத்தில் மட்டும்தான் கிடைக்கிறது. அதுவும் ஏன் பார்சல் செய்யப்படுவதில்லை?

ஏ) மின்னஞ்சல் என்றால் சட்டுபுட்டென்று சங்கதிக்கு வர வேண்டும். மூன்று பத்திக் கட்டுரைகளை ஆசுவாசமாக வாசிக்க இயலாது. கடைசியாக எண்ணியதில் ஜிமெயிலில் மட்டும் என்னிடம் இப்படிப்பட்ட படிக்க வேண்டிய மடல்கள்: 3425.

Nesamudan-Venkateshஐ) ஒரு வேளை இது கடித இலக்கியம். நமக்குத்தான் மேட்டர் புரியவில்லையா? (தொடர்புள்ள பதிவு: கடித இலக்கியம் :: கடிதச் சேகரம்: “கல்யாண்ஜி”

ஒ) நேசமுடன் வரும் வெங்கடேஷின் மடல் இன்பாக்சில் வந்தவுடன் துள்ளியெழும் ஆர்வமும், அலுவல் சந்திப்புக்கு செல்லும் ஐந்து நிமிடத்திற்குள் மேலோட்டமாகவாவது படிக்கும் உணர்வும், அதற்கு இரண்டு வரி பதிலனுப்பும் உத்வேகமும் தொடரவேண்டும் என்னும் எண்ணத்தில் மட்டுமே இந்த 10 போடப்பட்டுள்ளது.

இவ்வளவு செல்லமாக மிரட்டிவிட்டு, டிஸ்க்ளெய்மர் இல்லாவிட்டால் எப்படி: பதிவின் உள்ளடக்கத்தைப் பற்றி பேசு என்றால், பதிவு எப்படி வருது என்று டெல்வரி மெகானிசத்தைப் பற்றி மட்டும் அங்கலாய்க்கிறானே இவன்! (மனசாட்சி)

Tamilmanam

‘தமிழ்மணம்’ காசி உரையாடல்

1. இணையத்தில் தமிழ் உள்ளடக்கங்கள் தேவையான அளவுக்கு உள்ளன என்று எண்ணுகிறீர்களா?

எதைத் தேடினாலும் கிடைக்கிறது. எப்படித் தேட வேண்டும்

  • (ஒருங்குறி எழுத்துக்களை அடிப்பது,
  • தூய தமிழ்ப்பதங்கள் x ஒத்த தமிங்கிலம்,
  • ஆங்கிலத்தில் தட்டச்சினால் தமிழில் வரும் முடிவுகள்)

போன்றவற்றில் சிக்கல் இருந்தாலும், தமிழிணையத்தில் இல்லாத தலைப்பு என்பது அரிதாகவே அமைகிறது.

கணினியும் இணையமும் கிடைக்க வசதியுள்ள தமிழர் இன்னும் இவற்றில் அதிகமாகத் தமிழில் புழங்கவேண்டுமானால் என்னவெல்லாம்
செய்யவேண்டும்?

கணினிக் கிடைக்கப் பெற்றவர்களை

  1. அயலகத் தமிழர்,
  2. தமிழ்நாட்டினர்

என்று இரண்டாகப் பிரிக்கலாம். முந்தையவருக்கு இணைய நேரம் அதிகம்.

தமிழகத்தில் இருந்து உபயோகிப்போருக்கு தொலைக்காட்சி, பத்திரிகை தாண்டி கேளிக்கைக்கு செலவிட இணைய நேரம் குறைச்சல்.

இவர்களை மூன்று குழுக்களாக வைத்துக் கொள்ளலாம்.

  1. ஓய்வுபெற்றவர்களுக்கான குழுமங்கள் (mello.in போல்) பிரபலமாக வேண்டும்.
  2. நடுத்தரவயதினர் தட்டுத் தடுமாறி வெப்2.0 நுட்பங்களைப் பிடித்து, வலைப்பதிவு குழாம்களுக்குள் வெற்றிகரமாக நுழைந்து விடுகிறார்கள்.
  3. இளசுகளுக்கு ட்விட்டர், ஃபேஸ்புக் போன்றவற்றில் அறிமுகம் அதிகம். இவர்கள் வலைப்பதிவுகளுக்குள் இருக்கும் பெருசுகளின் உட்குழுக்கள் பக்கம் தலைவைத்தும் படுப்பதில்லை.

Digital divide போக்க ஊர்ப்புற கிராமங்களுக்கு குறைந்த விலை கணினியும் வலையும் எளிதில் சாத்தியப்ப்பட வேண்டும். நாட்டாமை குடும்பம் தவிர கடைநிலை குடும்பங்களுக்கும் அது, செல்பேசி போல் சென்றடைய வேண்டும். அதில் தமிழ் இடைமுகம், தட்டச்சு போன்ற சமாச்சாரங்கள் தொடக்கம் முதலே அறிமுகமாக வேண்டும். அது மட்டுமே முக்கியம்.

2. தகவல்-நுட்பப் புரட்சியின் முழுப் பயனையும் தமிழர் சமூகம் அனுபவிக்கிறதா? உ.ம். ஊடாடுதல் (மின்னஞ்சல், குறுஞ்செய்தி, மின்னரட்டை போன்றவை தமிழ் மூலமாக); மின்வணிகம் (வங்கி, இணையக்கடை, கட்டணம் செலுத்தல் போன்றவை தமிழில்); அரசாளுமை (வரிவிதிப்பு, அரசாணை, அரசின் அங்கங்களிடம் தமிழில் சேவை பெறுதல்) இதழ்கள் (செய்தி,இலக்கியம் வாசித்தல், வலைப்பதிவு, குறும்பதிவு, போன்ற வெப் 2.0 ஊடகங்கள் தமிழில்).

நான் அஸ்காவும் க்ரௌனிங் க்ளோரியும் வாங்கிய அண்ணாச்சி கடையில் துண்டு சீட்டில் ரசீது கொடுத்தல் வழக்கம். (வணிகம்)

மின் கட்டணத்திற்கு ஆங்கிலம் உபயோகித்த சென்னை வாசம். (அரசாளுமை)

பள்ளியில் ஊடாடியதெல்லாம் கிரிக்கெட்டின் மிட் ஆன், சில்லி பாயின்ட்ஸ்; கல்லூரியில் அரட்டை அடித்தால் க்ரூப் டிஸ்கசனுக்கு உதவும் ஆங்கிலம்.

நல்ல கேள்வி. தவறான ஆளிடம் கேட்கப்பட்டுவிட்டது.

3. தன்னார்வலர்களின் பங்களிப்பும் விக்கிப்பீடியா போன்ற குழுக்களின் பங்களிப்பும் இணையத்தில், கணினியில், தமிழின் பயன்பாடு அதிகரிக்க எந்த அளவுக்கு உதவியுள்ளன? உங்கள் பார்வையில் முக்கியமானவை, மேலும் முன்னெடுத்துச் செல்லவேண்டியவை என எவற்றைக்குறிப்பிடுவீர்கள்?

விஜய்காந்த்துக்கு தொலைபேசி இருக்கலாம். லியாகத் அலி கானிடம் கேட்டாவது என்னுடைய கீழ்க்கண்ட கேள்விகளுக்கு பதில் தந்திருப்பார்.

தமிழகத்தில் எத்தனை பல்கலைக்கழகங்கள் இருக்கு? இந்தியாவின் செம்மொழிக்கு எத்தனை நகரங்களில் துறை இருக்கு? உலகம் முழுக்க எவ்வளவு கல்லூரிகளில் தமிழ் கற்பிக்கப்படுகிறது? என்றெல்லாம் புள்ளிவிவரம் அடுக்கியிருப்பார்.

அவர்களில் பயிலும் எம்.ஃபில்களும் முதுகலைகளும் முனைவர் பட்டதாரிகளும் தங்கள் ஆய்வை இணையத்தி(லும்) வெளியாகும் peer reviewed journalஇல் சமர்ப்பித்து (பின்னூட்டங்களுக்கும்) பதிலளித்தால் மட்டும் டிகிரி கிடைக்க வைக்கலாம்.

காப்பியடித்து டாக்டரேட் வாங்கும் கனவான்களும், காசு கொடுத்து கரெக்ட் செய்யும் பேராசிரியர்களுக்கு கொடுக்கும் சம்பளத்திற்கு வேலை வாங்க முடியும்.

இந்தியாவில் எங்கு சென்றாலும் மாடு இருக்கும்; அடி பம்பு காற்று வாங்கும்; கணேசர்ருள்பாலிப்பார் என்பதெல்லாம் so 1950கள். செல்பேசிகள் நீக்கமற இரண்டு கைகளிலும் குடியிருக்கும் ஒளிர்காலம் இது. எளிய முறையில், செல்பேசியில் தமிழ் கொண்டு புழங்குவது எங்ஙனம்?

பேசுவதை தானியங்கியாக தமிழில் தட்டச்சி (முடிந்தால் ஆங்கில மொழிபெயர்ப்பும்) மைக்ரோசாஃப்ட் வோர்ட் கோப்பாக சேமிப்பது; ‘தேங்கா மண்டி ராசேந்திரனை வீட்டில கூப்புடு’ என்றால் உடனடியாக அழைப்பது; ‘ப்ரெசில் மிளகா நேத்து என்ன விலை’ என்று கேட்டால் விடை கொடுப்பது — சாத்தியம் ஏராளம்.

4. நாளையே அரசின் தகவல்-நுட்பத்துறைக்கு உங்களைத் தலைமையேற்கச் சொன்னால் மேற்சொன்னவகையிலான தமிழ்ப் பயன்பாட்டு விரிவாக்கத்துக்கான செயல்களாக எவற்றை உடனடியாக மேற்கொள்வீர்கள்?

அ) தமிழக கிராமங்களில் நூலகத்தில் இலவச கணினி மையமும், இணைய வசதியும் கிடைக்க செய்வது. அங்கு வருவோருக்கான தேவைகளை அறிந்து பூர்த்து செய்ய, சிறப்பு பயிற்சி அளிப்பது.

ஆ) ஆங்கில நிரலி ஏதாவது போட்டால் கண்டுபிடிக்கும் ‘கிருமி’ கொண்ட, தமிழில் மட்டும் ஊடாடும் வசதி கொண்ட செல்பேசிக்கு வரிவிலக்கு தருவது.

இ) சிறப்பான முறையில், திறமூல மென்பொருளாக தமிழ் OCR செய்பவருக்கு உரிய மானியத் தொகை தரப்படும் என்னும் தண்டோரா.

5. தமிழ் வலைப்பதிவுகளை பற்றிய உங்கள் பொதுவான கருத்து என்ன? புதிதாக வலைப்பதிக்க வருவோருக்கான யோசனைகளாக எவற்றைக் கூறுவீர்கள்?

தமிழ்ப்பதிவுகள் ஜோராக இருக்கின்றன. எதிர்பார்த்த விதத்தில், அபரிமிதமான வளர்ச்சி அடைந்திருக்கிறது. குறிப்பிட்ட வகையினரே (கல்லூரி முடித்து முப்ப்பத்தைந்து வயதுக்குள்ளான கணினி வல்லுநர்) பெரும்பாலும் நிறைந்திருப்பது காலப்போகில் சமனாகும்.

புதிய பதிவர்களுக்கு சில துப்புகள்:

அ) தமிழ்மணம், தமிலீஷ், திரட்டி, ப்ளாகுட், தமிழ்வெளி போன்ற எந்தத் திரட்டியும் விட வேண்டாம். எல்லாவற்றிலும் இணைந்துவிடுங்கள்.

ஆ) திண்ணை, தமிழோவியம், நிலாச்சாரல், அந்திமழை, சொல்வனம், தமிழ் ஹிந்து, கீற்று, என எல்லா இணைய சஞ்சிகைக்கும் உங்கள் ஆக்கங்களை அனுப்புங்கள். ஒவ்வொன்றுக்கும் எல்லாவற்றையும் அனுப்பாமல், ஒருவருக்கு அனுப்பியதையே இன்னொருத்தருக்கும் மீண்டும் பார்சல் செய்யாமல், அனுப்பிப் பாருங்கள். அவர்கள் அங்கீகரித்தால், உங்கள் எழுத்துக்கு பலம் கூடும்.

இ) குறிச்சொல் (லேபிள் அல்லது tag) நிறைய கொடுங்கள். ஓரிரண்டு பகுப்பு (category) வைத்துக் கொள்ளுங்கள். கவர்ச்சியான தலைப்பை விட பொருத்தமான தலைப்பாக வைக்கவும். தடித்த எழுத்துக்களை ஆங்காங்கே பயன்படுத்தவும். சம்பந்தமுள்ள புகைப்படம் ஒன்றாவது இடம்பெறுமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.

கடைசியாக, அவியல், குவியல், மிக்சர் என்று எல்லாவற்றையும் கலந்து கட்டி அடிக்காமல், ஒரு விஷயத்தைக் குறித்து மட்டும் ஒரு பதிவு இடவும். கூகிளுக்கு அதுதான் பிடிக்கும். நான்கு மேட்டரை ஒன்றாக குவிக்காமல், one thing at a time என்று எழுதுவது நிறைய பதிவுகளை, எண்ணிக்கையையும் தரும்.

கட்டாங்கடைசியாக, உங்கள் பதிவு ஒவ்வொன்றிலும், நீங்களே self referenceஆக சுட்டி தரவேண்டும்:

1. பதிவர் டிப்ஸ்

2. புதிதாய் பதிபவர்களுக்கு வழிகாட்டிகள்

6. தமிழ்மணம் வரும் ஆகஸ்ட் 23ஆம் நாள் தன் சேவையின் ஐந்து ஆண்டுகளை நிறைவுசெய்கிறது. இந்த 5 ஆண்டுகளில் தமிழ்மணத்தின் சேவையைப் பற்றிய உங்கள் கருத்துகள் என்ன? வரும் ஆண்டுகளில் தமிழ்மணம் செய்யவேண்டியவை எவை?

ட்விட்டரைக் குறித்து நக்கலடிப்பவர்கள், குறை சொல்லுபவர்கள் எல்லோருமே, ட்விட்டருக்குள் இருந்துகொண்டேதான் அதை செய்து வந்திருக்கிறார்கள். தமிழ்மணமும் அதே போல் அதனை விமர்சித்தவர்களையும், சேறு அப்பினவர்களையும், DDoS செய்தவர்களையும் வைத்துக் கொண்டே இயங்கி வந்திருக்கிறது; இயங்குகிறது; இயங்கும்!

ஈழப்பிரச்சினை குறித்த தகவல்களையும் கட்டுரைகளையும் முன்னிறுத்தியது வேறு எந்த தமிழ் ஊடகமும் செய்யாத விஷயம். அதற்காக சிறப்பு நன்றிகள்.

ஆலோசனை சொல்வது எளிது என்பதை அறிவேன். எனவே, இன்று போல் என்றும் தமிழ்மணம் தொடர்ந்தாலே போதுமானது என்றாலும்…

1) சூடான இடுகைகள் இல்லாத தமிழ்மணம், பாடல் இல்லாத படம் போல் சோபிக்கவில்லை. பாட்டு ஹிட்டானால்தான், படம் ஜெயிக்கும் என்றில்லைதான். இருந்தாலும், ஆடலுடன் பாடலைக் கேட்டு ரசிப்பதிலேதான் சுகம். அதிகம் சுட்டப்பட்ட பதிவுகள் மீண்டும் வேண்டும்.

2) அகரவரிசைப்படி அழைக்கும் வகுப்பு போல், நேரப்படி காட்டும் முறை மாற்றியமைக்க வேண்டும். வாசகர் பரிந்துரை பெரிதாக்கப்பட்டு, முகப்பில் இன்னும் பிரதானமாக்கலாம். அந்தக்கால ‘பூங்கா’ போல் தமிழ்மண ஆசிரியர் குழுவினரின் ‘பெட்டக’த் தெரிவுகளும் முன்வைக்கலாம்.

3) சாரு, எஸ் ராமகிருஷ்ணன், பா ராகவன், ஜெயமோகன் என்று பெரிய எழுத்தாளர் கும்பலே இருக்கிறது. இந்த மாதிரி செய்தியோடை வழங்குபவர்களை தமிழ்மணத்தின் ஓரத்திலாவது தொடுப்பு காட்டுவது, காலத்தின் கட்டாயம்.

4) விளம்பரம். என் பதிவுக்கு நான் காசு தந்து 24 மணி நேரம் முகப்பில் வைத்திருக்க தயார் என்றால், அதற்கு திரட்டி இடம் கொடுக்கலாம். புத்தக விளம்பரங்களுக்கு காலச்சுவடு முதல் வார்த்தை போன்ற பத்திரிகைகள் வரை 50% தள்ளுபடி தரும். அந்த மாதிரி, விளம்பரப் பதிவுகளுக்கு ஆடித் தள்ளுபடி கொடுக்கலாம்.

5) ‘அண்மையில் இணைக்கப்பட்ட பதிவுகள்’, ‘நீங்கள் உறங்கியபோது எழுதப்பட்ட பதிவுகள்’, ‘நேற்று சூடான இடுகைகள்’ என்றெல்லாம் கலந்துகட்டி ஆங்காங்கே தூவப்பட்டோ, தனியாக tabஇடப் பட்டோ வந்தால் சுவாரசியம் அதிகரிக்கும். இப்பொழுது செத்தவன் கையில் வெத்தலை பாக்காக, ரொம்ப சைவமாக இருக்கிறது.

இளையராஜா போல் ‘உலகம் இப்போ எங்கோ போவுது; எனக்கு இந்த சொந்த நாடு போதும்!’ என்றில்லாமல், திக்கெட்டும் சென்று பன்மொழிகளிலும் கால் பதித்து, மேன்மேலும் உயரும். அடிச்சு தூள் கெளப்புங்க!

Real issues vs Personal nuisances

நண்பரிடமிருந்து வந்த மடல்:

ஏதாவது மக்கள் சம்பந்தப்பட்டதாக, அசல் தூலப் பிரச்சினைகளாக யோசிப்போமே?

இன்று நார்வேயில் பெரும் பனிப் பாளங்களின் அடியில் கட்டப்பட்ட ஒரு புதைகுழிப் பெட்டகத்தில் உலகத் தாவரங்களின் வித்துகளைச் சேமித்து வைத்திருப்பதைத் தொலைக் காட்சியில் காட்டினார்கள்.

‘Doomsday’ seed vault opens in Norway – CNN.com:
“# Ultimate safety net for the world’s seed collections has opened in Norway
# The vault received inaugural shipments of 100 million seeds
# Norwegian govt. built vault in glacial mountain between Norway and North Pole”

  • இத்தனை குளிரில் விதைகள் பல வருடம் வைக்கப்பட்டால் அவை உயிருள்ளவை என்றால் பின்னால் எப்படி மறுபடி உயிர்க்கும்?
  • இந்த வகை விதைப் பாதுகாப்பு முயற்சிகள் இந்தியாவில் உண்டா?
  • எங்கு, யார் கையில் உள்ளன அவை?

2. கள்ள நோட்டுகள் ஏராளமாக இந்தியாவில் புழங்குவதாகச் செய்திகள் வருகின்றன.

  • இவற்றால் இந்தியப் பொருளாதாரத்துக்கு என்ன ஆகும்?
  • இவை எந்த வகை மனிதரிடம் அதிகம் புழ்ங்குகின்றன?
  • அந்த வகை மனிதர் கையில் பொருளாதாரக் கட்டுப்பாடு போய்ச் சேர்ந்தால் நாடு என்ன ஆகும்?

Fake currency notes can destabilise our economy: “There was a small news item a few days ago about ink used in printing currency missing in transit. According to the report, a consignment of OVI intaglio ink was sent from the Swiss SICPA unit in Sikkim to the Reserve Bank Note Mudra unit in Mysore and about 5 kg ink was found to be missing on arrival.

Official estimates put the number of FICN in circulation at 61,000 million pieces of different denominations worth Rs 1,69,000 crore till the year 2000. In comparison, the actual seizures amounted to Rs 5.57 crore in 2002, Rs 5.29 crore in 2003 and Rs 6.81 crore in 2004.”

3. துவக்கப் பள்ளி:

  • நாட்டில் எத்தனை துவக்கப் பள்ளிகள் உண்டு?
  • அவற்றில் எத்தனை மிலியன் குழந்தைகள் படிக்கிறார்கள்?
  • ஒவ்வொரு குடும்பமும் தாம் வாங்கும் புத்தகங்களை என்ன செய்கின்றன?
  • அவை கைமாற்றிக் கொடுக்கப்பட்டு மறு உபயோகிப்புக்கு வருகின்றனவா?
  • எத்தனை ஆசிரியர்கள் வருடா வருடம் தயாராகிறார்கள்?
  • அவர்களுக்குக் கொடுக்கப் படும் ஊதியத்தால் அரசுடைய நிதித் திட்டத்துக்கு எத்தனை பளு?

இப்படி எதார்த்தமான விஷயங்களைப் பற்றி அதிகமாகவும், பண்பாட்டு அவலங்களைப் பற்றிக் குறைவாகவும் யோசித்தால் பதிவின் தாக்கம் அதிகமாக இருக்கும்.

இறுதியில் மனிதரின் தன்னியல்பு என்பது தலை தூக்கவே செய்கிறது.

A for Apple – Tag version for Twitter IDs

சென்ற வருடத்தில் A for Apple tagஐ ரவி உபயத்தில் போட்டிருந்தேன். அவ்வாறே ட்விட்டர்.காம் பயனர் பெயர்களில், எவர் பெயர் என்னுடைய பட்டியலில் வந்து நிற்கிறது என்னும் கேள்விக்கான விடை:

செய்முறை:
1. ஃபயர் ஃபாக்ஸ் திறக்கவும்
2. http://twitter.com/ தட்டச்சவும்
3. ‘ஏ’ விசையைத் தட்டியவுடன் எந்த முகவர் ஐடி வந்து நிற்கிறது?

A for anathai
B for bseshadri
C for cvalex
D for dynobuoy
E for elavasam

F for twitter.com favorites
G for gchandra
H for hemanth
I for ivansivan
J for joe_milton

K for ksrk
L for lazygeek
M for msathia
N for narain
O for ommachi

P for peyarili
Q for யாருமில்லை
R for ravidreams
S for srikan2
T for TamilDiaspora

U for யாருமில்லை
V for valarmathi2008
W for writerpara
X for யாருமில்லை
Y for yathirigan

Z for யாருமில்லை

தொடர்புள்ள பட்டியல் பதிவுகள்:

1. Top Tamil Twitter users (by status update numbers) « 10 Hot

2. Top 16 Tamil Twitter Users (by influence) « Snap Judgment

ஜெயமோகனின் தொராண்டோ வருகை

எழுதியவர்: வெங்கட் (24 Oct 2001)

எழுத்தாளர் ஜெயமோகன் சற்றேறக்குறைய மூன்று வாரங்களை கனடாவில் கழித்துவிட்டு இல்லம் திரும்பியிருக்கிறார். இந்தப் பயணம் அவருக்கு நல்ல அனுபவங்களைத் தந்திருக்கும் என நம்புகின்றேன். அவரது அமெரிக்கப் பயணம் மாடிமோதும் விமானங்கள், மடித்த அஞ்சல்களில் வரும் வியாதிகள் இன்னபிற எதிர்பாராத காரணங்களால் நிகழாமற் போயிற்று. அமெரிக்காவின் இழப்பு; கனடாவின் இலாபம். அவர் நிறைய நாட்களை எங்களுடன் செலவிட்டுச் செல்லமுடிந்தது.

  • எழுத்தாளர் முத்துலிங்கம்
  • மகாலிங்கம்
  • காலம் செல்வம்

இன்னும்பிற ஈழத்து நண்பர்கள் அவரது பயணத்தை ஒருங்கமைத்திருந்தார்கள். கடந்த 21ம் தேதி ஜெயமோகன் வாசகர்களைச் சந்தித்தார்; மழை ஞாயிறு. சந்திப்பு என்னுடை இல்லத்திலிருந்து நடை தொலைவில்தான் (நல்லதாகப் போயிற்று, ஒண்டாரியோவின் கடுமையான வாகன ஓட்டுநர் அனுமதி விதிகளினால் நான் நாள்வரை காரிருந்தும் “கால்நடைதான்”).

காலை 10 மணி முதல் புத்தகக் கண்காட்சியும் விற்பனையும் காலம் செல்வத்தால் “வாழும் தமிழ்” சார்பாக நிர்வகிக்கப்பட்டது. நம்பமுடியவில்லை; கண்காட்சியில் குறுந்தொகை முதல் நேற்று வந்த புளியமரத்தின் கதை மறுபதிப்பு வரை – கிட்டத்தட்ட 700 – 800 புத்தகங்கள்..

அடியேனுக்கு ஆ.மாதவனின் கிருஷ்ணப் பருந்து போன்ற அருகிவரும் புத்தகங்கள் சில கிட்டின. இன்னும் சொல்புதிது, எக்ஸில், சதங்கை போன்ற எண்ணிலா சிற்றிதழ்கள். நண்பகலில் ஜெயமோகன் வாசக நண்பர்களுடன் விருந்துண்டார். (அடியேன், கரகரத்த தொண்டையுடன் குடைகீழ் இல்லம் வந்து மிளகு ரசம்-சாதம்).

பிற்பகலில் சந்திப்பு களை கட்டியது. ஜெயமோகனைப் பற்றி சம்பிரதாயமான அறிமுகம் எழுத்தாளர் மகாலிங்கம் அவர்களால் (அந்த அறிமுகத்தின் தேவையின்மை விரைவிலேயே தெரியவந்தது). ஜெயமோகன் விமர்சன மரபும் – தொடர்பும் எனும் தலைப்பில் உரையாற்றினார். தமிழ் விமர்சன மரபை மூன்று பெரும் வகைகளாகப் பகுத்து விரித்துரைத்தார்.

  1. மரபுவழி விமர்சனம் (Geneological criticism – உ-ம் தளையசிங்கம்),
  2. எதிர்வினை விமர்சனம் (Dialectical Criticism, உ-ம் கா.நா.சு / கைலாசபதி)
  3. குழப்பநிலை விமர்சனம் (Chaotic criticism, உ.ம் ஜெயமோகன்).

இறுதியில் ஒரு வாசகன் இவையெல்லாம் கடந்து தன் சுய அனுபவத்தினால் மதிப்பீடு செயதலே எல்லாவற்றிலும் காட்டிலும் சிறந்தது என்பதற்கான விளக்கங்கள். ஜெயமோகன் ஒரு நல்ல ஆசிரியர் என்றுதான் கூறவேண்டும். மிகவும் தெளிவான ஆற்றொழுக்கு உரை.

தொடர்ந்து கேள்வி-பதில் என்று அறிவிக்கப்பட வாசகர்கள் மத்தியில் மௌனம். மெதுவாக ஒரு முதிர்ந்த வாசகர் தன்னை இலக்கிய ஆர்வலனில்லை என்று அறிமுகப்படுத்திக் கொண்டு ஜெயமோகனை ஏன் தமிழ்நாட்டுப் பல்கலைகள் ஆசிரியராகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை என வினவினார். மடை திறந்தது; தொடர்ந்து சரமாரியாகக் கேள்விகள்.

அவரது விமர்சனக் கோட்பாடுகள் தொடங்கி, படைப்புகள் குறிந்தவை – மிகவும் வலுவான கேள்விகள்; உறுத்தாத குரல்களில்.

அப்பொழுதான் வாசகர்களின் வீச்சை நான் அறியத்தொடங்கினேன். கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் போனதே தெரியவில்லை. அரசியல், தனிநபர் குறித்த கேள்விகள் எவையும் கேட்கப்படவில்லை – முற்றிலும் கலை, இலக்கியம் சார்ந்தனவையே.

“இலக்கியம் சலனத்தைத்தான் உண்டுபண்ணுகின்றது – அது முன்னோக்கிச் செல்வதில்லை”

எனும் அவரது கருதுகோளையும், “மொழி மனிதனின் கருவி” என்ற என்னுடைய புரிதலின் மீதானதுமான கருத்துப் பறிமாறல்களில் அடியேனும். இரண்டு விடயங்களிலும் நாங்கள் ஒருமிக்கப்போவதில்லை என்று ஒருமித்து உணர்ந்துகொள்ள அவற்றிலிருந்து எளிதாக விலகவும் முடிந்தது.

(மொழி – கருவி பற்றி அவர் முன்வைத்த கருத்து தற்கால மொழியியல் கோட்பாடுகளைச் சார்ந்தது என்றும்; அவரது ஆழ்மனத்தில் அதில் குறையிருப்பதாகப் படுவதாகவும் சொன்னார்)

நான் தமிழகத்தில் எந்த இலக்கியக் கூட்டங்களுக்கும் அதிகம் போனதில்லை. (அதிக பட்சம் ஆறு அல்லது ஏழு பேருக்குமேல் தாண்டாதவைதான் என்னுடைய அனுபவங்கள்). எனினும் சிற்றிதழ்களில் படிக்கும் இலக்கியக்கூட்டம் பற்றிய விபரங்களிலிருந்து இது முற்றிலும் மாறுபட்டது.

அதிசயமான உண்மை; ஒரு வடதுருவ மூலையில், மழை வலுத்த ஒரு ஞாயிறு மதியத்தில் ஒரு தீவிர எழுத்தாளர்/விமர்சகருடன் மதிய உணவு அருந்தவும், தொடர்ந்து அவரது உரையைக் கேட்டு விவாதிக்கவும் பதினைந்து கனேடிய டாலர்கள் கட்டணத்தில் அறுபது பேர்கள். – வாழும் தமிழென்னும் நம்பிக்கை என்னுள் இலையுதிர் காலத்தில் துளிர்க்கிறது.

இக்கூட்டத்திற்கு முதல் வாரம் அடியேன், ஜெயமோகனை திரு. முத்துலிங்கம் அவர்களது இல்லத்தில் சந்திக்க முடிந்தது. ஒரு முறையான நேர்காணலாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அது – திசை திரும்பிய கருத்துச் சிதறல்களாக முடிந்தது.

சென்ற புதனன்று இரவு திரும்பவும் ஜெயமோகனைச் சந்திக்க முடிந்தது – இம்முறை என்னுடைய இல்லத்தில். என்னுடைய எல்லா கேள்விகளுக்கும் கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் பொறுமையாக பதிலிறுத்தார். (நான் எப்பொழுது நான்கு ஒலிநாடாக்களை அச்சிலேற்ற முடியும் என்று தெரியவில்லை).

அவருடைய பல பதில்களும் கருத்துக்களும் இன்றைய “பாஷன்”-சார்ந்த இலக்கியவாதிகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. இறுக்கம் அதிகமில்லாத அவரது நட்பு –

  • இலக்கியம்,
  • மரபு,
  • இவடிவம்,
  • காவியம்,
  • புனைகதைகள் விடுத்த இலக்கியங்கள்,
  • அறிவியல் புனைவுகள்

போன்று இன்றைய இலக்கியவாதிகளால் மறுக்கப்படும் அல்லது ஒதுக்கப்படும் பல விடயங்களைப் பற்றி எளிதாகக் கேள்விகள் கேட்கமுடிந்தது.

எந்த ஒரு போக்கினாலும் பாதிக்கப்படாமல் தன்னுடைய ஆளுமையை முற்றாகத் தனித்துவப்படுத்திச் செதுக்கிக் கொண்டுள்ளார் ஜெயமோகன்.

கிட்டத்தட்ட இரவு பதினொன்றரைக்கு – வற்றல் குழம்பு, சகிதமாக ஒரு நல்ல கும்பகோணம் சமையலை அவருக்கு அளித்து இல்லத்தையும் அவரது துணைவியாரையும் (எங்க ஊர்தாங்க – பட்டுக்கோட்டை) நினைவுபடுத்திவிட்டோம். ஜெயமோகன் வாங்கிவந்த மலர்க்கொத்து இன்னும் என் இல்லத்தின் நடுவில். ஒரு நல்ல நட்பின் தொடக்கம் என ஆழ்மனம் பரவசப்படுகின்றது.

அன்புடன்
வெங்கட்
தொராண்டொ

10 bullet points about, on, with Writer Jeyamohan

ட்விட்டரில் கதைத்தது

1. Chatted with JM abt அணியம் – வறீதையா கான்ஸ்தந்தின். Used to love Tilapia recipes; now getting a guilty feeling while eating the fish. #Books

2. Chatting with Jeyamohan on Tamil TV Media, Nandigram, Ilaiyaraja, Paula Coelho, H1b, Australia, home bldg., Movies. Anything but Ilakkiyam.

3. Probably my happiest moment as a computer type-writer. JeMo also uses phonetic keyboard layout for his jet speed blogs, writing in Tamil.

4. Inspired Quote: There r 3 reader types: 1. Who philosophizes with Vishnupuram; 2. hu adore ‘பின் தொடரும் நிழலின் குரல்’; 3. The bloggers #JM

5. Muttulingam: பிரியாவிடையில் தரப்படும் பரிசு விலைமதிப்பற்றது. Why? அது ஒன்றை எதிர்பார்த்துக் கொடுக்கப்படுவது அல்ல. (அஞ்சலிக்கும் பொருந்துமா?)

6. கண்ணதாசனுக்கும் வலம்புரி ஜானுக்கும் குறிப்பெடுத்து இலக்கியவாதியானது அந்தக்காலம். சாரதியாக வண்டியோட்டும் கைடுகள் ப்ளாகராவது இணையக்காலம். #Lit

7. Draft notes for a blog post on #JM meet: State of Eelam, Tamil Movie director working styles, what does JeMo read, Cauvery Water management.

8. Yesterday’s #JM chats: ஜெயகாந்தன் சபையிலும் சுந்தர ராமசாமி இல்லத்திற்கும் ஆறு தரிசனங்கள்; ஞானம் x கர்மம்; Translations of lit works; Ve.Saa.

9. @dynobuoy Liked ur https://twitpic.com/9moal Jeyamohan’s one liner on US was something along these lines + environment impact of consumerism

10. #JM compliment for me: ‘உங்க வாய்ஸ் டப்பிங்குக்கு ஏற்ற ஒண்ணு. உங்க உருவத்துக்கும் குரலுக்கும் சம்பந்தமேயில்ல. நல்ல கட்டையான ஆம்பளக் குரல்.”

Vital Statistics: 32 Personal Questions

உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவுகளில் உங்களுக்குப் பிடித்த பதிவு?

வெட்டிப்பயல் எழுத்து இளநீர் மாதிரி. சல்னு நேச்சுரலா உண்மையா இருக்கும்; கொஞ்சம் தேங்காய் சரக்கும் உள்ளே இருக்கும். அப்படி ஒன்று.

உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது?

பாலாஜி, பாஸ்டன் என்னும் மின்னஞ்சல் கையெழுத்தை மாற்றிப் போட்டவர் பாரா(கவன்). பாபா என்றழைத்து மரத்தடியில் மதிமயங்கச் செய்தது பின்னர் பலர்.

உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா?

ஆயிரம் பேரைக் கொன்றவர் அரை வைத்தியர்; ஆயிரம் பேரில் வலைப்பதிபவர் அரை எழுத்தாளர் என்றால் ம்ஹும்; மற்றபடி பவர்லெஸ் பாபா என்பதால் ம்ம்ம்.

கடைசியாக அழுதது எப்போது?

போட்டு உடைத்த மாதிரி சொல்ல வெட்கப்படுவதால், சிறுகதையே உகந்தது; எனினும், ‘குட்டி‘ மாதிரி சினிமாப் படங்களுக்கு கூட கண் தளும்பும்.

உங்களுக்கு உங்க கையெழுத்து பிடிக்குமா?

ஆங்கிலம் – ரொம்ப; தமிழ் – ஐஸ் க்ரீம் மாதிரி; துவங்கும்போது சப்புக் கொட்டும்; போகப் போக உருகி ஆறாக ஓடி, குச்சி குச்சியாய் நிற்கும்.

பிடித்த மதிய உணவு?

அலுவலில் இருந்தால் சத்து bar; அலுவல் உலாவில் அமெரிக்க நளபாகம்; வீட்டில் மோர்க்குழம்பு + ரசம் + பருப்புசிலி; சுற்றுலாவில் பீட்ஸா.

நீங்க வேற யாருடனாவது நட்பு வெச்சுக்குவீங்களா?

ஃபேஸ்புக்கில்தானே? உடனடியாய் நானும் பின் தொடர்ந்து விடுவேன். Hi5, Piczo, Bebo, Tagged எல்லாம் நட்பு வைத்துக் கொள்வதில்லை.

கடல்ல குளிக்கப் பிடிக்குமா? அருவியில குளிக்கப் பிடிக்குமா?

பிறந்ததில் இருந்து சென்னை, நியு யார்க், சிகாகோ, பாஸ்டன் என்று கடற்கரை அலுப்பிலேயே வாசஸ்தலம் என்பதால், அருவி மீது பற்று.

ஒருவரைப் பார்க்கும்போது முதலில் எதைக் கவனிப்பீர்கள்?

அறிமுகமானவர் என்றால் கையை – குலுக்க; இல்லை என்றால் முகத்தை – புன்சிரித்து வைக்க; அவர் பார்க்கவில்லை என்றால் – மே.கீ டு இ.வ.

உங்க கிட்ட உங்களுக்குப் பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன?

எதுவும் முடியும் என்று நம்பிக்கை வைப்பது; அதுவும் நம்மாலும் இயலும் என்று முயலாதது.

உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த, பிடிக்காத விசயம் எது?

பொறுமை; நான் புத்தகம் வாங்கிய நூல் மூட்டை தபாலில் வரும்போது, அதை காற்றில் பறக்க விடுவது.

மனைவி இல்லாமல் செய்ய விரும்பும் ஒரே காரியம்?

சமையல்.

இப்போ யார் பக்கத்துல இல்லாம போனதுக்கு வருந்துகிறீர்கள்?

அக்கா.

இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள்?

வெள்ளை அரைக்கை சட்டையில் சிவப்பு கோடுகள்; பழுப்பு காக்கி முழுக்கால் சராய்.

என்ன பார்த்து/கேட்டுக் கொண்டு இருக்குறீங்க?

வெக்கை பிடுங்கும் இரவில், குளிரூட்டப்படாத அறையின் மின்விசிறியில் காற்று வருகிறதா என்னும் சத்தம்.

வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?

கறுப்பு.

பிடித்த மணம்?

சந்தனம்; காபி; பட்சண வாசம்.

பிடித்த விளையாட்டு?

நான் கலந்து கொண்டால் கால்பந்து, ஃப்ரிஸ்பீ, ராக்கெட் பால்; கண்டு களிக்க கூடைப்பந்து, டென்னிஸ்.

கண்ணாடி அணிபவரா?

ஆமென்.

எப்படிப்பட்ட திரைப்படம் பிடிக்கும்?

எழுபத்தியோரு விமர்சனம் படித்தால் மட்டும் புரியக்கூடிய படமாக இராமல், அதே சமயம் சிறார்களும் நிராகரிக்கும் அறிவுகூர்மையற்ற மசாலாகவும் இல்லாதவை.

கடைசியாகப் பார்த்த படம்?

தொலைக்காட்சியில் ‘சேது‘; வெள்ளித்திரையில் முப்பரிமாண ‘Up

பிடித்த பருவ காலம் எது?

பிடிக்காதது – வசந்த காலம்; மற்றது எல்லாம் நேசிப்பேன்.

என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?

1. What every American should know about the Middle East / Melissa Rossi
2. The Pushcart prize: Best of the small presses

உங்கள் டெஸ்க்டாப்ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?

படம் எல்லாம் போட்டால், கணினி வேகத்தைக் கட்டுப்படுத்தி இடத்தை அடைக்கும் என்பதால், வெறும் நீல நிறம்.

பிடித்த சத்தம்? பிடிக்காத சத்தம்?

நேரத்தே ட்ரெயின் வருவதன் அறிகுறியாக எழுப்பும் ஒலி இனிமை; அதைப் பிடிப்பதற்கு எழுப்பிவிடும் கடிகாரம் அலறம்.

வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?

முதன் முதலாக நுழைவுத் தேர்வு எழுத தன்னந்தனியாக சென்ற காரைக்குடி. புதிய அறிமுகங்களுடன் அப்படியே பிள்ளையார்பட்டி, திருச்சி என்று உலாவியது.

உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?

நாலாயிரம் வார்த்தை கட்டுரையின் சக்கை இதுதான் என்று முழுக்கப் படித்தோ படிக்காமலோ ட்விட்டுவது.

உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?

கருக்கலைப்பும் செய்யாமல் காப்பாற்றவும் முடியாமல், வதவதவென்று மக்களைப் பெற்றுப்போட்டு, கடவுள் நம்பிக்கையில் பழிபோடும் பொறுப்பற்றவருக்கு வக்காலத்து வாங்குபவர்.

உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?

சும்மாயிருக்காத பொழுதுகள்… நண்பரைக் குத்திக் கிழிக்கும்; பயனிலருக்கு சாமரம் வீசும்.

உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?

ஜார்ஜ் ஏரி, ப்ளாசிட் ஏரி, நியு யார்க்.

எப்படி இருக்கணும்னு ஆசை?

இருபது கிலே கம்மியாக; ஒரு மணி நேரத்தில் ஐந்து மைலாவது ஓடுபவனாக; அம்மாவுடன் இன்னும் நேரஞ்செலவழிப்பவனாக; சம்பளத்தில் 5%க்கு மேல் தொண்டு நிதி ஒதுக்குபவனாக.

வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?

வாழ்க்கை வரிக்குதிரை மாதிரி. கருப்பு நிறைய இருக்கா, வெள்ளைக் கோடு நிறைந்திருக்கா என்றெல்லாம் கணக்கு பார்க்காவிட்டால் டக்காரா பறக்கும். Life Is What Happens When You Are Busy Making Other Plans.

நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன?

1. வார்த்தைகளின் விளிம்பில் – இவரைக் குறித்து அதிகம் தெரியாது. சமீப காலத்தில் நான் படிக்கத் துவங்கியதில், கவனிக்கத்தக்க வகையில், பொருளடக்கத்துடன் எழுதுகிறார்.

2. குரல்வலை – முன்பொருமுறை இந்த மாதிரி மீம் அழைப்பு விட்டிருந்தார். இன்னும் நான் அதை நிறைவேற்ற இயலவில்லை. அதற்காகவும், நீண்ட நாளாக அவரின் பதிவு கிடப்பில் இருப்பதாலும்.

3. கண்ணோட்டம் – நானும் இலக்கியவாதி என்பதற்கு அடையாளமாக, தமிழ்ச்சூழலில் புரியாத பெயர்கள் பலவற்றை அவிழ்த்துவிடும் பெரும்புள்ளியை அழைக்கும் ஒதுக்கீடு.

4. இகாரஸ் பிரகாஷ்: வித்தியாசமாக யாரையாவது தொடர அழைப்பார்; பதில்களில் அன்னியோன்யம் தொற்றிக் கொள்ளும்.

5. தேன் துளி: இவர்களை சந்தித்தவுடனேயே பதிவு போட வேண்டுமென்று ட்ராஃப்டில் வைத்து அது ஊசிப் போனதால், மன்னிப்பு விடு தூது.

Top 16 Tamil Twitter Users (by influence)

How to evaluate Twitter/Microblog Influence?

Top Tamil Twitter users (by status update numbers) பதிவுக்கு ட்விட்டர் பதில்கள்:

TamilDiaspora — re:Top Tamil Twits, following/followers ratio & followcost should be the prime factors in ranking the users,status update is plus

ரவி — a combination of Number of followers, following Vs followers ratio, google page rank would be a good way to rank.

TamilDiaspora — But I want quality Tweets as well, following/follower ratio (sans celebrities) &followcost will give some idea about the user


இன்னாரின் தமிழ் வலைப்பதிவுக்கு எவ்வளவு மவுசு என்று கணக்கிடுவது போலவே, ஒருவரின் ட்விட்டர் தகவல்களுக்கு எவ்வளவு கிராக்கி என்பதை கணிக்கலாம்.

சில புள்ளிகள்:

  1. ரவி சொல்வது போல் கூகிள் பேஜ்ரேங்க் எண் என்ன?
  2. எத்தனை பேர் இவரை பின் தொடர்கிறார்கள்?
  3. இவரை பின் தொடர்பவர்களில் முக்கியஸ்தர்கள் இருக்கிறார்களா?
  4. இவர் பின் தொடர்பவர்களில் முக்கியஸ்தர்கள் இருக்கிறார்களா? அவர்களிடமிருந்து வரும் சுவாரசியங்களைப் போதிய இடைவெளியில் ரீ ட்வீட்டுகிறாரா?
  5. தலையுமில்லாமல், வாலுமில்லாமல் ட்வீட்டாமல், கொஞ்சம் இடஞ்சுட்டி, பொருள் விளக்கி, முழுச்செய்தியைக் குறுக்கித் தருகிறாரா?
  6. அடர்த்தி (அ) பல்சுவை: ஒரே தலைப்பில் வரும் விஷயங்களைக் கொடுக்கிறாரா? அந்தப் பொருள் அலுக்கும்போது, சாமர்த்தியமாக சொந்த வாழ்க்கை, பிற செய்தி அலசல் என்று வித்தியாசங்காட்டுகிறாரா?
  7. முகத்தைக் காட்ட வேண்டாம். கேரக்டர் தெரியுமாறு, பின்னாலிருக்கும் இரத்தமும் சதையும் கொஞ்சமாவது உருப்பெறுமாறு இயங்குகிறாரா?
  8. ஏற்கனவே வலையில் இயங்கியவரா? புகழ்பெற்றவரா? நில, புலம், அந்தஸ்து மாதிரி இணையபட்டா பெற்றவரா?
  9. தன்னிடம் வினா கேட்பவரிடம் பதில் கொடுக்கிறாரா?
  10. சும்மா கீச்சு, கீச்சு என்று தான் மட்டும் கத்திக் கொண்டிராமல், உரையாடலில் ஈடுபடுகிறாரா?
  11. தன் ஸ்டேட்டஸ்களை பாதுகாத்து வைத்துள்ளாரா? (பின் தொடரும் கூட்டத்தைவிட, பின் தொடர்பவர்களின் அறிமுகம் கோருபவரா?)
  12. ரஜினி படம் போல் அத்தி பூக்கும். அந்த மாதிரி எப்பொழுதாவதுதான் டிவிட்டுகிறாரா?
  13. அவரைத் தவிர வேறு எவருக்கும் தெரிந்திராத தகவல்களை, உங்களின் கேள்விகளுக்குப் பொருத்தமான விடையாக்கித் தருகிறாரா?
  14. யாரைப் படிக்காவிட்டால், தலைவெடித்துவிடும்?
  15. கடைசியாக, சொல்லும் அப்டேட்களினால் ஏதாச்சும் நேரடி பலன் எனக்குக் கிடைக்கிறதா?

ஒவ்வொன்றுக்கும் இன்னாரைத்தான் குறிப்பிடுகிறேன் என்பது அவரவருக்குத் தெரியும் என்பதால், நோ பட்டியல். இருந்தாலும், எனக்கே காலப்போக்கில் இந்தப் பதிவு புரியாமல் போகும் அபாயம் இருப்பதால்:

(எண்கள் ஒரு வசதிக்காகத்தான்… எந்த வரிசையிலுமில்லை)

  1. வளர்மதி (valarmathi2008)
  2. ஆர் செல்வராஜ் (rselvaraj)
  3. பரத் (barath)
  4. ரோசாவசந்த் (rozavasanth)
  5. எழுத்தாளர் பாரா (writerpara)
  6. சிவராமன் ஜி (sivaramang)
  7. அரவிந்தன் கே (Aravindank)
  8. சஜீக் (sajeek)
  9. விக்கி (vickydotin)
  10. கேப்ஸ் (kaps_)
  11. இரா முருகன் (eramurukan)
  12. வெங்கட் (donion)
  13. செந்தில் (chenthil)
  14. அனாதை (anathai)
  15. சஞ்சய் சுப்ரமணியன் (sanjaysub)
  16. -/பெயரிலி. (peyarili)

ட்விட்டர் குறித்த முந்தைய பதிவு:

1. ட்விட்டர்: எளிய அறிமுகம்

2. அடுத்த யுகப் புரட்சிக்குள் நுழைய நீங்கள் தயாரா? A Concise Introduction to Twitter.com and Why you should join there?

What advice will U give to a new blogger?

I would say three things:

1. Focus:

Which things do U know really well?
What is ur knowledge domain?
Where can U give good tips, tricks, suggestions?

2. Quantity:

When #1 Focus is too demanding switch to give regular updates like
– comments on news
– experiences, life events
– Refer articles to read, invite friends to contribute, interview them

3. Online Presence

Submit to aggregators – Digg, Blogkut
Post it in Social Networking sites – Facebook, Twitter
Good Practices to the post – Machine readable (Google understandable) Title, lot of Tags, one or two categories

Any other useful info or sites?

Again 3 things:

a. Quality of content (Audience)

– The visitor might hv come via Search Engine: Sound research, useful tidbits shd be there in each post
– Regular reader: Don’t repeat; say the obvious
– Occasional onlooker: came via social networking sites like reddit.com, Digg, Del.icio.us, clipmarks

b. Short attention span

– Keep it in bulletpoints (summarize each post at top or bottom) ; Use blockquotes: Be aware of HTML
–  Add a relavant Photo – attracts the user to the content, writing; summarize the post in 140 chars in Twitter
– Read a lot; write in simple language

c. Interaction with Visitors

– comment regularly on ur visitor blogs
– write lengthy rebuttals to popular bloggers (like those listed in Desipundit.com)
– don’t cheat ur feed readers: write often; atleast once every day!

Finally Technical Notes:

1. Use wordpress.com (instead of blogger.com)
2. As much a spossible avoid writing lengthy discourses on Politics (at least when starting to write blogs)
3. Never ever post ur Kavithai, story, fiction etc in blogs – Not many will read there
4. Give lots of link to relevant posts from other blogs – Link Love

If at all going via Blogspot route:

http://mashable.com/2009/01/26/blogger-widgets
http://mashable.com/2009/01/16/blogger-toolbox/
http://mashable.com/2008/05/17/70-plus-new-and-beautiful-blogger-templates/
http://mashable.com/2008/12/22/blogger-template-resources/
http://mashable.com/2007/09/13/blogger-templates/
http://mashable.com/2007/09/10/bloggercom-toolbox/