Tag Archives: Sun

தொலைக்காட்சி – சீரியத்துவம்

முந்தைய ட்வீட்ஸ்: நியு யார்க் நகரத்துவம்

http://twitter.com/#!/snapjudge/status/150050111907565568
http://twitter.com/#!/snapjudge/status/123453193555423232
http://twitter.com/#!/snapjudge/status/81711508446388224
http://twitter.com/#!/snapjudge/status/38419815995678720
http://twitter.com/#!/snapjudge/status/38420251473494016
http://twitter.com/#!/snapjudge/status/32630444876890112
http://twitter.com/#!/snapjudge/status/32631133820682240
http://twitter.com/#!/snapjudge/status/30689368649764864

Top Polluting Cities in India: Environment & Global Warming: Carbon footprint with Gold

நன்றி: ஹிந்துஸ்தான் டைம்ஸ் :: இ-பேப்பர்

சூப்பர் ஸ்டார் யாருன்னு கேட்டா?

சன் டிவியில் செய்திகள். சர்வக்ஞர் சிலை திறப்பு விழா. மகள் படித்த புத்தகம் குறித்தும் குமான் குறித்தும் விசாரித்துக் கொண்டே அரைக் கண்ணில் தொலைக்காட்சியிலும் பார்வை. சட்டென்று ‘சூப்பர் ஸ்டார்’ மின்னி மறைகிறார்.

உணர்ச்சி வேகத்தில், ‘அது யாரு தெரியுதா?’ என்று மகளையும் பார்த்தாலே பரவசமாக்குபவரைக் கேட்கிறேன்.

அரை நம்பிக்கையுடன் ‘ரஜினியா?’

‘ஆமாண்டி… ஆமா!’

‘எங்கே?’

DVR இயங்கத் துவங்குகிறது. திரும்ப அந்தக் காட்சியை ஃப்ரீஸ் செய்கிறேன்:

Rajinikanth-Kalainjar-Sarvaknjar-Valluvar-Statue-Events-RM-Veerappan

‘இவர்தானே?’ சந்தேகாஸ்பதமாக சுட்டுகிறாள்.

ரஜினிகாந்த் என்று அவள் நினைத்தவர்: (மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை இணை அமைச்சர் எஸ்.ஜெகத்ரட்சகன்)

Rajniganth-Madras-Sarvakjar-Statue-Pictures-highlights

சன் நியூசில் ஏனோ கமல் கலந்துகொண்டதைக் காட்டவில்லை.

பொன்விழா ஆண்டிலும் கமல்ஹாசன் எப்படி இருக்கிறார் பாருங்க:

Kamal-Vairamuthu-Sarwakjar-Veerapandi-aarumugam-Ki-Veeramani-Chennai-Functions-Photos


சர்வக்ஞர்

1. தினமணி :: சர்வக்ஞர் கூறும் அறம் « தமிழ்ச்செல்வி

2. தமிழ்ஹிந்து :: த்ரிபதி சர்வக்ஞர் & வள்ளுவர் « ஜடாயு » வழிகாட்டும் வசனகர்த்தர்கள்: “”

3. புகைப்படங்கள்: என்வழி

ரஜினியின் எந்திரன்- தி ரோபோ

சென்னை இராஜாங்கம்: V

அவ்வப்போது அமெரிக்காவில் விழும் ஒரு இன்ச் snow, ஒன்றரை மில்லிமீட்டர் பனியை, வீட்டு வாயிலில் இருந்து தெருவுக்குத் தள்ளிவிடுவதற்கே கண்களாலும் மூக்காலும் அழுபவன் நான். மிக மிக எளிமையாக வாசலைத் தெளித்துக் கோலம் போடுவது போன்ற கைங்கர்யம் அது.

குட்டி எவரெஸ்ட் மாதிரி இருக்கும் மணற்குவியலை, தலைக்கு மேல் இருக்கும் குப்பை வண்டியில் shovel செய்தவரைப் பார்த்தவுடன் மனம் நாணிக் கோணியது. சர்வ சாதாரணமாக, பகல் 41 டிகிரி வெயிலில் தூக்கிப் போட்டார். நீல்மெட்டல் சென்னையை சுத்தமாக மாற்றியுள்ளது.

முப்பது வருடம் முன்பு ரூபவாஹினிக்காக இலங்கை ஆண்டெனாக்கள் மொட்டை மாடிகளை நிறைத்திருக்கும். காக்கைகளும் அவற்றை ஆசையாகத் திருப்பி வைக்கும். ராஜபக்ஸே தமிழ்த் தொலைக்காட்சியை நிறுத்தி விட்டாரா என்று நாராயணனை விட்டு விசாரிக்க சொல்லவேண்டும். இன்றைய மாடிகள் முழுக்க சாடிலைட் டிஷ் ஆக்கிரமிப்பு. காக்கைகளும் காணாமல் போய்விட்டது. வேடந்தாங்கலிலாவது இருக்கிறதா என்று ப்ளாஸ்டிக் பைகளில் சோறு கட்டி சென்று பார்த்துவர வேண்டும்.

ஆட்டோக்காரர்கள் மெமரி கார்ட் கொண்டு பாட்டு போடுகிறார்கள். ஆயிரம் ரூபாய் கொடுத்தால் கிளம்பிய இடத்தில் இருந்து சேரும் இடத்திற்கே கேட்கும் அலறலுடன் கூடிய எம்பி3 ஒலி. வேண்டிய பாடல்களை ஐபாட் shuffle ஆக மாற்றும் வசதி. பண்பலை என்னாச்சு என்னும் கேள்விக்கு ‘போயே போச்சு‘ங்கிறார்.

‘ஏன்’?

கேள்விக்கு பத்ரி மொட்டை மாடியில் பதில் சொன்னார்.

‘எஃப்.எம். ரேடியோக்கள் செய்திகளை ஒலிபரப்ப முடியவில்லை. ஆல் இந்தியா ரேடியா தவிர எவரும் நேரடி நிகழ்வுகளை உடனுக்குடன் சொல்லமுடியாது! ஐ.பி.எல் மாதிரி எத்தனையோ லைவ் விஷயங்கள் வானொலிக்கு வரவேண்டும்’.

மோகம் முப்பது தபா; ஆசை அறுபது ராவு என்பது போல் சிட்டி சென்டரும், எக்ஸ்டென்ஷன்களில் உலவும் ஸ்பென்சரும் பல்கிப் பெருத்தபின் சென்னை யுவன்களுக்கும் காரிகைகளுக்கும் மால் அலுத்துப் போய்விட்டது. அல்லது ஜாகையை மாற்றிக் கொண்டுவிட்டார்கள்.

இன்றளவிலும் ‘சூடிதாரில் நான் வருவேன். சல்வார் கமீஸை நான் மறவேன்’ என்று மதுரை சோமுவாகிறார்கள். லுங்கியைப் போன்ற வண்ணமயமான காற்றோட்டமான ஸ்கர்ட், அதிர்ச்சி மதிப்பீடாக தாவணி, நாகரிகமும் குறையாமல் கற்பும் காக்கும் முக்கால் பேன்ட் எதுவும் காணோம். அதெல்லாம் வந்தால் ‘ராம சேனா’வும் பாரதிய ஜனதாவும் வந்துவிடும் என்னும் பயமோ!

‘கடந்த 48 மணி நேரமாக பெண்களுடன் கலந்துரையாடி, பின்தொடர்ந்து “What women wantனு புரிந்து கொள்வதிலேயே நேரம் போவதாக’ சலித்துக்கொண்டவரிடம்தான் விசாரிக்கவேண்டும்.

Srinivasa Perumal Brahmotsavam: Day 2

சிம்ம வாகனம்: Day 1

இரவு ஸூர்யப்ரபை:

துக்ளக் – புத்தாண்டு அட்டை கார்ட்டூன்

thuglaq-dmk-cover-new-year-calendar-image-karunanidhi

'ஒபாமாவிற்கு மிருத்யுஞ்சய ஹோமம் & இளநீர் தாரா தேவை': தினமலர்

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் பராக் ஒபாமா வெற்றி பெற 75 சதவீத வாய்ப்பு உள்ளதாக, கோவை ஆரிய வைத்திய பார்மசியின் ஜோதிடர் குழு கணித்துள்ளது.

ஒபாமா வெற்றிக்காகவும், அவர் சிறந்த உடல் ஆரோக்கியம் பெறவும், கோவையில் சிறப்பு ஹோமம் நடத்தப்படுகிறது.

இதுகுறித்து கோவை ஆரிய வைத்திய பார்மசியின் நிர்வாக இயக்குனர் கிருஷ்ணகுமார் கூறியதாவது: அமெரிக்க அதிபர் வேட்பாளர் ஒபாமா, அங்குள்ள மக்களின் நன்மதிப்பை பெற்றுள்ளார். 1961ல் பிறந்த அவரது ஜாதகப்படி, அவருக்கு இப்போது ‘வியாச (குரு) திசை‘ நடக்கிறது. அவரது ‘கர்மா’வின்படி, டிசம்பர் 2008க்குப் பின் அனைத்து விஷயங்களும் அவருக்கு சாதகமாக அமையும். அவர் தேர்தலில் வெற்றி பெற்று அதிபர் ஆக 75 சதவீத வாய்ப்பு உள்ளது.

ஏப்ரல் 2008 முதல் ஏப்ரல் 2009 வரையிலான காலகட்டத்தில் அவருக்கு வேலை மாற்றம் அமையும். இந்த காலகட்டத்தில் அவர் உயர்ந்த நிர்வாக பொறுப்பை அடைய வாய்ப்பு உள்ளது. ‘நிபுண யோகக்காரர்’ என்பதால் இவர் சிறந்த வாதத் திறமை உள்ளவர். இறைவனின் சகல அனுகிரகங்களும் இவருக்கு உண்டு.

ஜாதகத்தின்படி ‘நீசபங்க ராஜ யோகம்‘ உள்ள இவர், கடும் போராட்டங்களுக்குப் பின், ‘ராஜ யோக நிலை’யை அடைவார்; நம்பிக்கைக்கு உரியவர்; அடிக்கடி டென்ஷன் ஆவது மட்டுமே இவரது ஒரே பிரச்னை. அதனால், இவரது உடல் நிலை பாதிக்கப்படலாம். இவர் 2010 வரை, வாகனப் பயணங்களில் கவனமாக இருப்பது நல்லது. இதற்கு, ‘மிருத்யுஞ்சய ஹோமம்‘ செய்து தீர்வு காணலாம். டென்ஷனால் பணிகள், உடல் ஆரோக்கியம் பாதிக்காமல் தடுக்க, சிவபெருமானுக்கு ‘இளநீர் தாரா‘ வழங்க வேண்டும் இவ்வாறு, கிருஷ்ணகுமார் கூறினார்.

ஒபாமாவின் நலனுக்காக, கோவை, ராமநாதபுரத்திலுள்ள ஆரிய வைத்திய பார்மசியில், அதிகாலை நேரத்தில் ‘மிருத்யுஞ்சய ஹோமம்’ மற்றும் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகின்றன. “அதிபராக தேர்வு செய்யப்பட்டால் ஒசாமா பின்லேடனை பிடிக்காமல் ஓயப் போவதில்லை” என பிரசாரம் செய்து வரும் ஒபாமாவுக்கு, நிறைய எதிரிகள் இருக்க வாய்ப்புள்ளது. அவர்களை முறியடிக்க ‘சத்ரு சம்ஹார பூஜை’யும் நடத்தப்படுகிறது.

“ஒபாமா இந்தியாவுக்கு ஆதரவான மனநிலையை கொண்டவர். அமெரிக்கா ஒரு பெரிய நாடு என்பதால், இந்தியா போன்ற வளரும் நாடுகள் நன்மை பெற, அந்நாட்டில் ஒரு சிறந்த மனிதர் அதிபர் அமைய வேண்டியது முக்கியம். எனவேதான், அவரது நன்மைக்காகவும், இந்தியாவின் எதிர்கால வளர்ச் சிக்காகவும் இந்த ஹோம பூஜைகள் நடத்தப்படுகின்றன,” என, ஹோமம் நடத்துவதற்கான காரணத்தை விளக்கினார், கிருஷ்ணகுமார்.

குஜராத் முதல்வராக நரேந்திரமோடி வெற்றி பெறவும், இவர் ஹோம பூஜைகள் நடத்தியுள்ளார். “ஜோதிடம் ஒரு அறிவியல் கலை; துல்லியமாகக் கணித்தால் பரிகாரங்கள் மூலமாக பெரும் இழப்புகளை தவிர்க்கலாம். நாட்டின் முக்கிய பொறுப்புகளுக்கான தேர்தலுக்கு முன், வேட்பாளரின் ஜாதகத்தை கணிப்பது நாட்டு வளர்ச்சிக்கு நல்லது,” என்று முத்தாய்ப்பாக அவர் குறிப்பிட்டார்.

நன்றி: தினமலர்

ஒரு கார்ட்டூன் & ஒரு கவர்ச்சிப் படம்

Dinamani Mathy

Sun TV Tamil Ramayanam