Tag Archives: Cool

10 bullet points about, on, with Writer Jeyamohan

ட்விட்டரில் கதைத்தது

1. Chatted with JM abt அணியம் – வறீதையா கான்ஸ்தந்தின். Used to love Tilapia recipes; now getting a guilty feeling while eating the fish. #Books

2. Chatting with Jeyamohan on Tamil TV Media, Nandigram, Ilaiyaraja, Paula Coelho, H1b, Australia, home bldg., Movies. Anything but Ilakkiyam.

3. Probably my happiest moment as a computer type-writer. JeMo also uses phonetic keyboard layout for his jet speed blogs, writing in Tamil.

4. Inspired Quote: There r 3 reader types: 1. Who philosophizes with Vishnupuram; 2. hu adore ‘பின் தொடரும் நிழலின் குரல்’; 3. The bloggers #JM

5. Muttulingam: பிரியாவிடையில் தரப்படும் பரிசு விலைமதிப்பற்றது. Why? அது ஒன்றை எதிர்பார்த்துக் கொடுக்கப்படுவது அல்ல. (அஞ்சலிக்கும் பொருந்துமா?)

6. கண்ணதாசனுக்கும் வலம்புரி ஜானுக்கும் குறிப்பெடுத்து இலக்கியவாதியானது அந்தக்காலம். சாரதியாக வண்டியோட்டும் கைடுகள் ப்ளாகராவது இணையக்காலம். #Lit

7. Draft notes for a blog post on #JM meet: State of Eelam, Tamil Movie director working styles, what does JeMo read, Cauvery Water management.

8. Yesterday’s #JM chats: ஜெயகாந்தன் சபையிலும் சுந்தர ராமசாமி இல்லத்திற்கும் ஆறு தரிசனங்கள்; ஞானம் x கர்மம்; Translations of lit works; Ve.Saa.

9. @dynobuoy Liked ur https://twitpic.com/9moal Jeyamohan’s one liner on US was something along these lines + environment impact of consumerism

10. #JM compliment for me: ‘உங்க வாய்ஸ் டப்பிங்குக்கு ஏற்ற ஒண்ணு. உங்க உருவத்துக்கும் குரலுக்கும் சம்பந்தமேயில்ல. நல்ல கட்டையான ஆம்பளக் குரல்.”

ஜெயமோகனை சந்தித்த கதை

beto_frota-cashews-Colors-nose-cool-flickr-photos-imagesஇதற்குப் பெயர் சீமான் ஜோக்காம்.

எழுத்தாளர் ஜெயமோகனை சந்தித்த குறிப்புகளை இயக்குநர் சீமானின் நகைச்சுவையைக் கொண்டு துவங்க வேண்டாம்தான். இருந்தாலும் எங்கேயாவது ஆரம்பிக்க வேண்டுமே!

இன்னொன்றும் இருக்கிறது. ஜெமோ சொன்னதில், என் மனதில் என்ன ஏறி நிலைத்து நிற்கிறது என்பதை இதை வைத்துப் புரிந்து கொள்ளலாம். அல்லது இப்படியும் வைத்துக் கொள்ளலாம். ஜெமோவிற்கு ஆளை எடைபோட்டு எவருக்கு என்ன கொடுக்க வேண்டும் என்பதும் தெரியும் எனலாம்.

ஏதோ ஒன்று… சங்கதிக்குப் போயிடலாம்.

இது இஞ்சினீயரிங் முடித்துவிட்டு மணிரத்னத்திற்கு அசிஸ்டென்ட் டைரக்டராக போக விரும்பியவனின் கதை. விதி விளையாட, இராம நாராயணனின் உதவி இயக்குநராகிறான்.

பாம்பு சேஸ்.

Sylvan_Flickr-Snakes-Green-Rama-Narayanan-Moviesஜிகுஜிகுவென்ற பச்சை சட்டைக்காரனை பாம்பு துரத்தோ துரத்தென்று ஓட்டுகிறது. புல் தடுக்கி சகதியில் விழுந்து விடுகிறான். இது திரைக்கதையில் இல்லை. அம்மன் கோவில் வரை சென்றடைய வேண்டும்.

சட்டை மாற்ற அனுப்பி வைக்கிறார் நெறியாளுநர்.

பார்த்தால், இன்னொரு பச்சை சட்டையைக் காணோம். க்ரூப் டான்சுக்கு வாங்கிய மஞ்சள் இராமராஜன் மட்டுமே நிறைய இருக்கிறது. காஸ்ட்யூம்காரருக்கு இயக்குநர் டெக்னிக் தெரியும். பச்சைக்கு பதிலாக மஞ்சள் போட்டு அனுப்பிவிடுகிறார்.

நம்ம அசிஸ்டென்ட் மணிக்கு இராவணன் ஆக வேண்டியவர். விடுவாரா! கண்ணில் விளக்கெண்ணெய் விட்டு கன்டினியூட்டி பார்ப்பவர். ‘சுரேகா! சுலேகா!! ஷிமோகா!!!’ என்று கத்தி முறையிடுகிறார்.

இராமநாராயணன் அவரை ஆற்றுப்படுத்தி, கடகடவென்று காட்சியை சுட்டு முடிக்கிறார்.

“என்னங்க இது… இப்படி பண்ணிட்டீங்க? ஆரம்பத்துல துரத்தறப்ப பச்சை கலரு. இப்போ மஞ்சள். சனங்க லாஜிக்கா கேள்வி கேப்பாங்களே! திரும்ப இன்னொரு நாள் ஷூட்டிங் செஞ்சரணும்”

“அதெல்லாம் டப்பிங்கில பார்த்துப்பேன்”. இது இயக்குநர் சொன்னதாக சீமான் சகபாடிகளிடம் சொல்வது.

வெறுத்துப் போன அசிஸ்டென்ட் தன் வேலையைத் துறந்து இமயமலைக்கு செல்லும் வழியில் அக்ஷர்தாமில் ஐமேக்ஸ் பார்த்துவிட்டு, பட ரிலீஸன்று சென்னை திரும்பி விடுகிறார்.

அந்தக் காட்சியில் டைரக்டர் எப்படி சமாளித்தார் என்னும் ஆவல். பார்க்கிறார். அந்த சேஸிங் சீனும் வருகிறது.

பச்சை சட்டை. துரத்தல்.

“டேய்… நீ சட்டை மாத்தினேனா எனக்குத் தெரியாதுன்னு நெனக்கிறியா!? பச்சசட்டக்காரந்தானே நீயு!” பாம்பு பேசிவிட்டது. மஞ்சள் சட்டை துரத்தல் தொடர்கிறது.

இதுதான் சீமானின் ராமநாராயணன் ஜோக் என்று ஜெயமோகனால் சொல்லப்பட்டதின் பாபாக்கம்.

Oasis’ 91: 333 031

சிறு சரித்திரக்குறிப்புகள்: சிறுபத்திரிகை மகாத்மியம்

Kaalam-Canada-Sitrithazh-Small-Magz-Tamil-Lit-Coversமுந்தைய பதிவு

  1. தமிழ் சிற்றிதழ்கள்
  2. என்னைக் கவர்ந்த தலை 10 தமிழ் சிறுபத்திரிகைகள்

இணையமெங்கும் சிறுபத்திரிகைகளின் துவக்கம், பல புத்தகங்களில் தமிழ் இலக்கியத்தின் வளர்ச்சி, ஆங்காங்கே வணிகப் பத்திரிகைகளில் வெளிவந்த பதிவாக்கப்பட்ட கவனிக்கத்தக்க மாற்றம், சரித்திரம், வரலாறு என்று பல இடங்களில் கண்டைதையும், படித்ததையும் தொகுக்கும் முயற்சி. அவ்வப்போது சேர்க்கப்படும்.

மேற்கோள் முத்து

1. சு.ரா.: சிறுபத்திரிகைக்காரங்க – இப்படி ஒண்ணு நடந்ததாவே அவங்களுக்குத் தெரியாது. அவங்களுக்குனு சொந்தமா ஒரு உலகம் இருக்கு. சின்ன குட்டி உலகம். ஒரு டாய்லெட் அளவு இருக்கும். அந்த உலகத்துக்குள்ளே அவன் சின்ன சின்ன சண்டைகள் போட்டுக் கொண்டிருப்பானே ஒழிய – இந்த டாய்லெட்டைவிட – ஒரு பெரிய உலகம் இருக்கு. அங்க பல காரியங்கள் நடக்குது. அந்தக் காரியங்கள் நம்ம வாழ்க்கையைப் பாதிக்குது – நீங்க டாய்லெட்ல போய் ஒளிஞ்சிண்டாலும் உங்க வாழ்க்கையை அது பாதிக்காம இருக்காது. So, அப்படிங்கற ஒரு consciousness நம்ம சிறுபத்திரிகைக்காரங்களுக்கு என்னிக்குமே இருந்ததில்லை.

Kalai-Images-Pictures-Thamil-Magazine-Covers-Little-Mag2. புதுமைப்பித்தன்: “நான் ஒரு சிற்றிதழ் ஆரம்பித்தால் அதற்கு சோதனை என்று பெயர் வைப்பேன் … சோதனை என்றால் சோதித்துப் பார்த்தல் என்று பொருள், தொல்லை என்ற பொருளும் அதற்கு உண்டு.”

3. க.நா.சு.: ‘ஒரு பத்திரிகை தொடர்ந்து இயங்கினால், அது சிறு பத்திரிகையே இல்லை.’

தகவல், பின்னணி, வரலாறு

எழுத்து சிற்றிதழ் சி.சு செல்லப்பா அவர்களை ஆசிரியராகக் கொண்டு , ஜனவரி 1959 முதல், புதுமை இலக்கிய மாத ஏடு என்ற அறிவிப்புடன் 50 பைசா விலையில் வெளிவரத் தொடங்கியது.

க.நா.சு நடத்தி வந்த சூறாவளி , சந்திரோதயம் பத்திரிகைகளில் துணையாசிரியராகப் பணிபுரிந்த அனுபவம் சி.சு செல்லப்பாவுக்கு உண்டு.

சுதேசமித்திரன் இதழ் செல்லப்பா எழுதிய கட்டுரை ஒன்றை வெளியட மறுத்த பொழுது எழுந்த கோபத்தில் எழுத்து இதழைத் தொடங்கினார் .

KPR-Keppiyaar-Kumari-District-Alternate-Journals-Issues-Articles-Opinionsந.பிச்சமூர்த்தி எழுத்து இதழின் வளர்ச்சிக்கு மிகவும் உறுதுணையாக இருந்தார் .

எழுத்து நின்றவுடன் சிறிது காலத்திற்குப் பிறகு சுவை என்ற மாத இதழை செல்லப்பா தொடங்கினார் , அதுவும் முதல் இதழோடு நின்று விட்டது.

க.நா.சு இலக்கிய வட்டம் ( நவம்பர் 1963 ) என்ற சிற்றிதழைத் தொடங்கினார்.

பெயர்கள், பட்டியல்

  • நிழல் – ஜூலை 05 « சினிமா, திரைப்பட அலசலுக்கான சஞ்சிகை
  • ஏப்ரல் 2008: வார்த்தை – எனி இந்தியன் இதழ்
  • ஏப்ரல் 2004: பாடலாசிரியர் யுகபாரதி படித்துறை’ என்ற பெயரில் தனியே ஒரு சிற்றிதழ் தொடங்கினார்.
  • மே 2004: தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்திலிருந்து ‘கூட்டாஞ்சோறு’ என்ற இலக்கிய இதழ் ஆரம்பம்.
  • ஜூன் 2004: பெண்களுக்கான சினிமா பற்றி பேசும் ‘கண்ணாடி’ என்ற சிற்றிதழ் கொண்டுவருகிறார் குட்டிரேவதி.
  • கலைஞன் Oppuravu-Literary-Adventures-New-Obsolete-Images-Cover-Photos-artsபதிப்பகம் தொகுத்துள்ள சிற்றிதழ்கள்:
  1. கசடதபற
  2. கணையாழி
  3. மனிதன்
  4. சுபமங்களா
  5. சரஸ்வதி
  6. மணிக்கொடி
  7. சக்தி
  • சாந்தி (தொ.மு.சி ரகுநாதன்)
  • தாமரை(ப.ஜீவானந்தம்)
  • சரஸ்வதி (விஜயபாஸ்கரன்)

கருத்து, வம்பு, கிசுகிசு

உசாத்துணை, இணையத்துக் கட்டுரைகள்

1. Tamil-Neyam-EVR-Periyar-Left-Rational-Thinkers-Contents-Researchமரவண்டின் ரீங்காரம்: எழுத்து சிற்றிதழ்

2. ஆனந்த விகடன் தீபாவளி மலரில்(2004 ) விருட்சம் சிற்றிதழின் ஆசிரியரான அழகிய சிங்கர் அவர்கள் “எழுத்திலிருந்து மணல் புத்தகம் வரை” என்ற கட்டுரையில் சிற்றிதழ்களைப் பற்றி எழுதியிருக்கிறார்.

3. ஆறாம் திணைஇலக்கியம் :: சிற்றிதழ் வரிசை

தொடர்புள்ள புத்தகங்கள்

1. தமிழில் சிறுபத்திரிகைகள் – வல்லிக்கண்ணன்

2. புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் – வல்லிக்கண்ணன்

3. புதுக்கவிதை முற்போக்கும் பிற்போக்கும் – ந. வானமாமலை

4. புதுக்கவிதை வரலாறு – ராஜமார்த்தாண்டன்

Puthu-Ezhuthu-Manonmani-Preface-Table-of-contents-Index-Search-Fiction-Story5. சிறுகதைப் படைப்பின் உள்விவகாரம் -மேலாண்மை பொன்னுச்சாமி

6. இலக்கிய முன்னோடி வரிசை – ஜெயமோகன்

7. இந்திய இலக்கிய சிற்பிகள் (க.நா.சு) – அசோகமித்திரன்

8. இந்திய இலக்கியம் – க.நா.சு.

9. பிரம்மாண்டமும் ஒச்சமும் (சி.சு செல்லப்பாவின் படைப்புலகம்) – பெருமாள்முருகன்

அன்னையைப் போல் ஒரு தெய்வமில்லை

நன்றி: Pajama Diaries

வாலிபம் – வளப்பம் – வணிகம்

அமெரிக்காவின் புதிய தலைமுறைபணக்காரரின் அலுப்பு :: The Phoenix > Lifestyle Features > Living beyond their means?: “The go-go ’80s have receded into the oh-no aughties, but not everyone has gotten the memo.”

ஏற்றிவிடுவதில் அமெரிக்காவின் கெட்டிக்காரத்திற்கு நிகர் கிடையாது. இந்தியாவில் காதலில் மட்டுமே ஊக்க வார்த்தை கொண்டு நிரப்பும் நண்பர் உலகம் என்றால், இங்கே பள்ளியில் துவங்கி பெற்றோர் வரை எல்லோருமே ‘உன்னால் முடியும் தம்பி’ உதயமூர்த்திகள். இப்படி உசுப்பேற்றியே உருப்படாமல் போனதின் குணச்சித்திரமாக Seinfeld தொடரின் ஜார்ஜ் பாத்திரம், நடப்பு ஆண்டில் பட்டதாரியானவரின் முன்னோடியாக காணப்படுகிறார்.

இந்த வருடம் கல்லூரியை முடித்தவர் என்ன செய்கிறார்?

  • ஃப்ளிக்கரில் புகைப்படம் ஏற்றி, ட்விட்டரில் இருக்கும் இடத்தை சொல்லி, நாளொன்றுக்கு எட்டு டாலர் பொக்கீடில் உலகம் சுற்றக் கிளம்புகிறார்.
  • இன்னும் கொஞ்சம் கடன் வாங்கி, மேற்படிப்புக்கு சென்று விடுகிறார்.
  • முதலீட்டு தேவதைகளின் துணை கொண்டு, சொந்தமாக வெப் 3.0 நிறுவனம் துவங்குகிறார்.
  • அப்பாவின் கோடை வாசஸ்தலத்தில் ஆறு மாசம்; அம்மாவின் இரண்டாவது விவாகரத்தில் கிடைத்த ஐரோப்பிய வீட்டில் ஆறு மாசம் தங்க ஆரம்பிக்கிறார்.
  • மருத்துவத்துறையில் நர்ஸ், உள்நாட்டு பாதுகாப்பு, ஆசிரியப் பயிற்சி என்றெல்லாம் சீக்கிரமே அலுக்கும் வேலையைப் புறக்கணித்து, சிரம பரிகாரம் எடுக்கிறார்.

மேற்கத்திய உலகில் வேலை எப்போதுமே அவசியமாக ஒன்றாக இருந்ததில்லை. சமூக அந்தஸ்து செய்யும் தொழிலினால் நிர்ணயிக்கப்படுவதில்லை. பொருளாதார அந்தஸ்து என்பது ரஜினி படம் மாதிரி – சில சமயம் அமோகமாக சோபிக்கும்; சில சமயம் பாபா ஆகி விடும்.

இந்தியாவிலும் இந்தத் தலைமுறையினரின் எண்ணம் இவ்வாறே உள்ளது. “என் அண்ணனைப் போல் எனக்கு குழந்தை, குட்டி கிடையாது. அப்பாவை போல் பிடிக்காத வேலை செய்யப் போவதில்லை. வாலிபம் இருக்கும்போதே வளப்பமாக இல்லாவிட்டாலும், ஆடிப் பாடி கொண்டாடுவோம்” என்னும் நிகழ்காலத்தைக் கொண்டாடுபவர்கள்.

எனக்குக் கிடைக்கும் ஊழியத்தை விட, மாதா மாதம் சம்பளம் தரும் சம்பாத்தியத்தை விட, நான் விரும்பி செய்ய நினைப்பதை — அன்றாடம் பணியாக அமைவதே லட்சியம் என்கிறார்கள்.

நாலு நாள் குண்டி காஞ்சா பவுசும் பராக்கிரமும் தெரியவரும்.

வறுமையின் நிறம் சிகப்பு நிஜ வாழ்க்கையின் பகிடி :: iowahawk: Hot New Trend: Carefree Hipsters Go For Funemployment, Starve-cation: Jobless jitters? Not for these young folks, who are embracing idleness and finding fulfillment in local Del Taco dumpsters.

தொடர்புள்ள முந்தைய பதிவு: வேலையில்லாதவன்தான்! வேலை தெரிஞ்சவன்தான்?

பரிந்துரை: இரண்டு இணையத்து சிறுகதைகள்

சமீபத்தில் இரு நல்ல புனைவு வாசிக்க கிடைத்தது. அவை:

1. சத்யராஜ்குமார் :: மைய விலக்கு « இன்று – Today

2. ரா. கிரிதரன் :: வார்த்தைகளின் விளிம்பில்: தேவதைகள் காணாமல் போயின – சிறுகதை

அவற்றை முடித்து விட்டு இந்தப் பதிவைப் படிப்பது கதைகளுக்கு நீங்கள் செய்யும் ஷேமம்.


மேற்கோள் மூலை

ச.ரா.குமார் கதையில் இருந்து கவர்ந்த இரு இடங்கள்:

அ) இன்பாக்சில் நிஷா அனுப்பிய மின்னஞ்சல். ரொம்பவும் கோபமாகி விட்டால் நிஷா இமெயிலில்தான் பேசுவாள். பத்து கிலோ பைட்களுக்கு திரையில் தெரிந்தது அவள் கோபம்.

ஆ) ‘நீயும், நிஷாவும் ஏன் இப்படி கஷ்டப்படணும்? பார்த்துக்க ஆயிரம் பேர் இருக்காங்க. இங்கே நிறைய சொகுசு இருக்கு. ஆனா லைஃப் இல்லை. நாலு சுவத்துக்குள்ள நாம நாலு பேருமே முகத்தைப் பார்த்துக்கிட்டு… மெட்ராசுக்குப் போயிரலாம்டா.’


ரா.கி.யில் கவர்ந்தவற்றிற்கு சாம்பிள்:

அ) ஜீரணமாகாத உணவை தள்ள முயற்சிப்பதுபோன்ற கடலின் முயற்சி ஒவ்வொறு முறையும் அலையென தோற்கும் காட்சி வியப்பானதே. எதைஎதையோ விழுங்குவதும், பின்னர் எதுவுமே தெரியாதுபோல் கிடப்பதும் இதற்கு வாடிக்கையாகிவிட்டது.

ஆ) ஜப்பான் நாட்டவர்களின் முகவடிவம், எங்கு ஆரம்பித்தாலும் கூர்மையான தாடையிலேயே விழும்.


ஆறு வித்தியாசங்கள்

இரு கதைகளுமே அதிர்ச்சி அல்லது வித்தியாசமான முடிவில் நம்பிக்கை கொண்டவை. இரு கதைகளுக்குமே அது தேவையில்லை என்பது வேறு விஷயம்.

ஒன்று போட்டிக்காக எழுதப்பட்டது. மற்றொன்று அந்தவித நிர்ப்பந்தங்களுக்குட்பட்டு உருவாகாவிட்டாலும், போட்டியில் கலந்துகொள்வதற்கான முஸ்தீபுகளும் முகாந்திரங்களும் நிறைந்தது.

வார்த்தைகளின் விளிம்பில் நிற்பவரிடம் கதை ஜாஸ்தி. இன்று – டுடேவிடம் மூக்கு மேல் வரவைக்கும் விவாதப்புள்ளிகள் ஜாஸ்தி.


விமர்சனம்

சத்யராஜ் கதையில் விமர்சிக்க விஷயம் ஏதுமில்லை. பட்டிமன்றம் மாதிரி இன்னும் கொஞ்சம் எண்ணவோட்டமோ, உரையாடல் மன்றமோ கட்டி, மெரீனா பீச் மணல் அளவு வியாபிக்க கூடிய சமாச்சாரத்தை சுண்டல் மாதிரி பொட்டலம் கட்டி இருக்கிறார்.

குறைந்த பட்சம் அந்த மின்னஞ்சலையாவது அனுபந்தம் ஆக்கி இருக்கலாம் என்னும் ஏக்கம் இருக்கிறது.

oOo

காதலியின் நினைவுகள் என்று இன்னொரு கதை எவராவது எழுதினால் அலுவலை நோக்கி(யே) வடக்கிருக்கலாம் என்று எண்ணுமளவு அலுத்துப் போன டாபிக்கில் பூந்து விளையாடியிருக்கிறார் கிரி. சம்பிரதாயமான ஆரம்பம்.

இத்தினியூண்டு கதையில் உலாவும் அத்தனை பாத்திரங்களுக்கும் மனதில் நிற்கும் அறிமுகங்கள். தண்ணீரில் மிதக்கும் ப்ளாஸ்டிக் ஆக, கவிஞர்களே உவமைகளுக்கு பஞ்சம் பாடும் இந்தக் காலத்தில் சக்கையான தக்கை கொண்ட மிதவையான உறுத்தாத பயன்பாடு அமர்க்களம்.

அப்படியே, ‘நான் அந்தக் காலத்தில் லால் கிலாவில் இப்படித்தான்…’ என்று காதலி காலடி தேட வைப்பதே கதையின் வெற்றி.

இருவருக்கும் என் நன்றி.

Top 16 Tamil Twitter Users (by influence)

How to evaluate Twitter/Microblog Influence?

Top Tamil Twitter users (by status update numbers) பதிவுக்கு ட்விட்டர் பதில்கள்:

TamilDiaspora — re:Top Tamil Twits, following/followers ratio & followcost should be the prime factors in ranking the users,status update is plus

ரவி — a combination of Number of followers, following Vs followers ratio, google page rank would be a good way to rank.

TamilDiaspora — But I want quality Tweets as well, following/follower ratio (sans celebrities) &followcost will give some idea about the user


இன்னாரின் தமிழ் வலைப்பதிவுக்கு எவ்வளவு மவுசு என்று கணக்கிடுவது போலவே, ஒருவரின் ட்விட்டர் தகவல்களுக்கு எவ்வளவு கிராக்கி என்பதை கணிக்கலாம்.

சில புள்ளிகள்:

  1. ரவி சொல்வது போல் கூகிள் பேஜ்ரேங்க் எண் என்ன?
  2. எத்தனை பேர் இவரை பின் தொடர்கிறார்கள்?
  3. இவரை பின் தொடர்பவர்களில் முக்கியஸ்தர்கள் இருக்கிறார்களா?
  4. இவர் பின் தொடர்பவர்களில் முக்கியஸ்தர்கள் இருக்கிறார்களா? அவர்களிடமிருந்து வரும் சுவாரசியங்களைப் போதிய இடைவெளியில் ரீ ட்வீட்டுகிறாரா?
  5. தலையுமில்லாமல், வாலுமில்லாமல் ட்வீட்டாமல், கொஞ்சம் இடஞ்சுட்டி, பொருள் விளக்கி, முழுச்செய்தியைக் குறுக்கித் தருகிறாரா?
  6. அடர்த்தி (அ) பல்சுவை: ஒரே தலைப்பில் வரும் விஷயங்களைக் கொடுக்கிறாரா? அந்தப் பொருள் அலுக்கும்போது, சாமர்த்தியமாக சொந்த வாழ்க்கை, பிற செய்தி அலசல் என்று வித்தியாசங்காட்டுகிறாரா?
  7. முகத்தைக் காட்ட வேண்டாம். கேரக்டர் தெரியுமாறு, பின்னாலிருக்கும் இரத்தமும் சதையும் கொஞ்சமாவது உருப்பெறுமாறு இயங்குகிறாரா?
  8. ஏற்கனவே வலையில் இயங்கியவரா? புகழ்பெற்றவரா? நில, புலம், அந்தஸ்து மாதிரி இணையபட்டா பெற்றவரா?
  9. தன்னிடம் வினா கேட்பவரிடம் பதில் கொடுக்கிறாரா?
  10. சும்மா கீச்சு, கீச்சு என்று தான் மட்டும் கத்திக் கொண்டிராமல், உரையாடலில் ஈடுபடுகிறாரா?
  11. தன் ஸ்டேட்டஸ்களை பாதுகாத்து வைத்துள்ளாரா? (பின் தொடரும் கூட்டத்தைவிட, பின் தொடர்பவர்களின் அறிமுகம் கோருபவரா?)
  12. ரஜினி படம் போல் அத்தி பூக்கும். அந்த மாதிரி எப்பொழுதாவதுதான் டிவிட்டுகிறாரா?
  13. அவரைத் தவிர வேறு எவருக்கும் தெரிந்திராத தகவல்களை, உங்களின் கேள்விகளுக்குப் பொருத்தமான விடையாக்கித் தருகிறாரா?
  14. யாரைப் படிக்காவிட்டால், தலைவெடித்துவிடும்?
  15. கடைசியாக, சொல்லும் அப்டேட்களினால் ஏதாச்சும் நேரடி பலன் எனக்குக் கிடைக்கிறதா?

ஒவ்வொன்றுக்கும் இன்னாரைத்தான் குறிப்பிடுகிறேன் என்பது அவரவருக்குத் தெரியும் என்பதால், நோ பட்டியல். இருந்தாலும், எனக்கே காலப்போக்கில் இந்தப் பதிவு புரியாமல் போகும் அபாயம் இருப்பதால்:

(எண்கள் ஒரு வசதிக்காகத்தான்… எந்த வரிசையிலுமில்லை)

  1. வளர்மதி (valarmathi2008)
  2. ஆர் செல்வராஜ் (rselvaraj)
  3. பரத் (barath)
  4. ரோசாவசந்த் (rozavasanth)
  5. எழுத்தாளர் பாரா (writerpara)
  6. சிவராமன் ஜி (sivaramang)
  7. அரவிந்தன் கே (Aravindank)
  8. சஜீக் (sajeek)
  9. விக்கி (vickydotin)
  10. கேப்ஸ் (kaps_)
  11. இரா முருகன் (eramurukan)
  12. வெங்கட் (donion)
  13. செந்தில் (chenthil)
  14. அனாதை (anathai)
  15. சஞ்சய் சுப்ரமணியன் (sanjaysub)
  16. -/பெயரிலி. (peyarili)

ட்விட்டர் குறித்த முந்தைய பதிவு:

1. ட்விட்டர்: எளிய அறிமுகம்

2. அடுத்த யுகப் புரட்சிக்குள் நுழைய நீங்கள் தயாரா? A Concise Introduction to Twitter.com and Why you should join there?

Image Dump: Cleaning up the Jazzy stuff

Cause: PREPARING FOR THE CLOSING OF YAHOO! 360°

Action:

If Research Papers had a Comment Section

If-research-papers-journals-had-comment-section-PHD-Comics-Cartoons

Thanks: PHD Comics: OMG! ROTFL!!