’உலக நாயகன்’ விஸ்வரூபம் எடுக்கும் பத்மஸ்ரீ கமல் தோழர் கு ஞானசம்பந்தன் உரை
கவிப்பேரரசு வைரமுத்து
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேச்சு
இரண்டாம் பாகம் (தொடர்ச்சி)
இரண்டாம் பாகம் (தொடர்ச்சி)
Posted in Tamil Blog
குறிச்சொல்லிடப்பட்டது appreciation, Authors, Awards, ஆக்கம், இயல், உயிர்மை, எழுத்தாளர், எஸ் ராமகிருஷ்ணன், கனடா, கவிஞர், படைப்பு, பேச்சு, மனுஷ்யபுத்திரன், ரஜினி, வைரமுத்து, Canada, Chennai, EssRaa, Events, Felicitation, Fiction, Functions, Iyal, kavi perarasu, Kaviyarasu, Lit, Literarture, Literary, madras, Maushyaputhiran, Rajini, Rajnikanth, Ramkrishnan, S Ramakrishnan, Shorts, Speech, SR, Story, Tales, Tamil, Uyirmmai, Vairamuthu, VM, Writers
முந்தைய ரஜினி பதிவு: Happy Birthday to Rajni: ’ராஜாதிராஜா’வின் உரை
On Director Shankar:
On Actress and Heroine Aishwarya Rai:
On his Spiritual Journeys to Kedarnath and Badrinath:
Why Rajni is so successful? What makes him tick?
Rajnikanth’s dance movements and Next Projects:
Posted in Tamil Blog
குறிச்சொல்லிடப்பட்டது Aiswarya Rai, இண்டர்வ்யு, உலக அழகி, எந்திரன், ஐஸ்வர்யா ராய், சங்கர், சன், சூப்பர் ஸ்டார், டிவி, நேர்காணல், மாறன், ரஜினி, ரஜினிகாந்த், ரோபோ, ஷங்கர், ஹீரோயின், Cinema, Endhiran, Films, Himalayas, Kasi, Movies, Rajini, Rajni, Rajnikanth, Religion, Religious, Robot, Shankar, Spiritual, Trips, Visits
சென்றவை:
1. விகடன் விருதுகள் – 20103 Superhit Songs in Tamil Cinema – 2008 Year in Review
சிறந்த இயக்குநர்: வெற்றிமாறன் – ஆடுகளம்
சினிமா (திரைப்படம்): ஆடுகளம் – ஃபைவ் ஸ்டார் ஃபிலிம்ஸ்
கதாநாயகர் (நடிகர்): விக்ரம் – தெய்வத் திருமகள்
கதாநாயகி (நடிகை): அஞ்சலி – எங்கேயும் எப்போதும்
துணை கதாபாத்திரம் (குணச்சித்திர) நடிகர்: இளவரசு – முத்துக்கு முத்தாக
வில்லி, குணச்சித்திர நடிகை: உமா ரியாஸ் – மௌன குரு
காமெடி, நகைச்சுவை நடிகர்: சந்தானம் – வேலாயுதம், தெய்வத் திருமகள்
ஜோக்ஸ், நகைச்சுவை நடிகை: கோவை சரளா – காஞ்சனா
வில்லன்: ஜாக்கி ஷெராஃப் – ஆரண்ய காண்டம்
முதற்பட புதுமுக நடிகர்: விஜய் சேதுபதி – தென்மேற்கு பருவக்காற்று
கன்னி புதுமுக நடிகை: இனியா – வாகை சூட வா
பேபி ஸ்டார் (குழந்தை நட்சத்திரம்): சாரா – தெய்வத் திருமகள்
பாடல், மியூசிக், இசையமைப்பாளர்: ஜி வி பிரகாஷ்குமார் – ஆடுகளம், மயக்கம் என்ன
கேமிராமேன் (ஒளிப்பதிவாளர்): வேல்ராஜ் – எங்கேயும் எப்போதும், ஆடுகளம்
எடிட்டிங் (படத்தொகுப்பு): கிஷோர் – ஆடுகளம்
ச்டோரி, மூலக்கதை, கதை: வெற்றிமாறன் – ஆடுகளம்
ஸ்க்ரீன்ப்ளே, திரைக்கதை: தியாகராஜன் குமாரராஜா – ஆரண்ய காண்டம்
டயலாக், வசனம்: சமுத்திரக்கனி – போராளி
ஃபைட் சீக்வன்ஸ் (சண்டைப் பயிற்சி): அனல் அரசு – ரௌத்திரம்
டான்ஸ், பாடல் ஆட்டம், குத்துப் பாடல், நடன இயக்குநர்: ராஜு சுந்தரம் – ’வள்ளியே சக்கரவள்ளியே’: எங்கேயும் காதல்
கலை (ஆர்ட் டைரக்ஷன்): ராஜீவன் – 7ஆம் அறிவு
ஒப்பனை (மேக்கப்): ஆ கோதண்டபாணி – பானு – ஏழாம் அறிவு
ஆடை வடிவமைப்பு, உடை (ட்ரெஸ், காஸ்ட்யூம்ஸ்): ஸ்வேதா – கோ
பாடலாசிரியர் (சாங் ரைட்டர், கவிஞர்): அறிவுமதி – ’விழியும் விழியும்’: சதுரங்கம்
பின்னணிப் பாடகர்கள் (சிங்கர்): எஸ் பி பாலசுப்ரமணியம், எஸ்பிபி சரண் – ’ஐயையோ நெஞ்சு அலையுதடி’: ஆடு களம்
பாடகி: சைந்தவி – ’பிறை தேடும் இரவிலே’: மயக்கம் என்ன
தயாரிப்பு (ப்ரொடக்ஷ்ன்ஸ், டிஸ்ட்ரிப்யூஷன்): ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோஸ் – ஏ ஆர் முருகதாஸ் புரொடக்சன்ஸ்: எங்கேயும் எப்போதும்
நாவல் (நெடுங்கதை): ஆண்பால் பெண்பால் – தமிழ்மகன்
சிறுகதைத் தொகுப்பு (ஷார்ட் ஸ்டோரி): காண்டாமிருகம் – ஜீ முருகன்
புதுக் கவிதை (பொயம், கவிஞர், பா, தளை, பாடல்): சபரிநாதன்: களம் – காலம் – ஆட்டம்
கட்டுரைத் தொகுப்பு (பத்தி, கருத்து, சிந்தனை): அனுபவங்களின் நிழல் பாதை: ரெங்கையா முருகன் – வி ஹரி சரவணன்
மொழிபெயர்ப்பு (ட்ரான்ஸ்லேஷன், மொழியாக்கம்): சிறைபட்ட கற்பனை – க பூர்ணசந்திரன்
புத்தகம், வெளியீடு, ஓவியம், கலை, சிற்பம், புகைப்படம், நிழற்படம், ஒளிப் படம்: வாளோர் ஆடும் அமலை – ட்ராட்ஸ்கி மருது – தடாகம் பதிப்பகம்
சிறு பத்திரிகை (சிற்றிதழ்) : மணல் வீடு – மு. ஹரிகிருஷ்ணன்
விளையாட்டு வீரர் (க்ரிக்கெட், ஸ்போர்ட்ஸ்): ரவிச்சந்திரன் அஷ்வின்
வீராங்கனை: நீச்சல் – ஜெயவீணா
பயிற்சியாளர்: (ட்ரெயினிங்) நீச்சல் – கிரீஷ்
டிவி சேனல்: தொலைக்காட்சி மிடையம்: புதிய தலைமுறை
டிவி நிகழ்ச்சி: (ப்ரொகிராம்): பெரிதினும் பெரிது கேள் – விஜய் டிவி
நெடுந்தொடர் (சீரியல்): திருமதி செல்வம் – சன் டி.வி.
தொகுப்பாளர் (ஹோஸ்ட், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்): சிவகார்த்திகேயன் – ஜோடி நம்பர் #1 சீஸன் 5 (விஜய் டிவி)
தொகுப்பாளினி (பெண்): திவ்யதர்ஷினி: ஹோம் ஸ்வீட் ஹோம் – விசய் தொலைக்காட்சி
பண்பலை: ஹலோ எப்.எம்.
பண்பலைத் தொகுப்பாளர்: மா கா பா ஆனந்த் – ரேடியோ மிர்ச்சி, சென்னை
எப்.எம். தொகுப்பாளினி: ரேடியோ: ஹலோ எப்.எம்., மதுரை
விளம்பரம் – அட்வர்டைஸ்மெண்ட்: ஏர்டெல்: ஒவ்வொரு ஃப்ரெண்டும் தேவை மச்சான்
மோட்டார் பைக் – டூ வீலர்: ஹோண்டா சி பி ஆர் 250 ஆர்
கார்: நாற்சக்கர வாகனம்: மகிழுந்து: மாருதி சூஸூகி – மாருதி ஸ்விஃப்ட் நியூ
Posted in Tamil Blog
குறிச்சொல்லிடப்பட்டது 2011, 2012, Ads, Authors, ஆனந்த விகடன், இசை, கமல், காசு, கோலிவுட், சினிமா, ஜூனியர் விகடன், டிவி, தமிழ், தயாரிப்பு, படம், பாடல், பொது, ரஜினி, விகடன், விளம்பரம், Bikes, Books, Car, Cinema, Fiction, Films, Movies, Music, Novel, Product placement, Products, sales, Sell, Songs, Writers
நான் ரஜினியைப் பற்றி நினைக்கும் போதெல்லாம் பேரரசர் ஆறாம் ஜார்ஜ் நிழலாடுகிறார்.
ராஜாதி ராஜா. அவரின் ஒவ்வொரு சொல்லும் இ.பி.கோ. சட்டமாக பின்பற்றும் அடிப்பொடிகள் கொண்ட இராஜாங்கம். ’ஏதாவது முத்து உதிர்க்க மாட்டாரா?’ என்று ஏங்கும் கூட்டம். அவருக்கு திக்குவாய்.
இந்தியாவின் ஜனாதிபதியை விட ஒப்புக்கு சப்பாணியான இங்கிலாந்தின் அரசராக இருந்தவர். இரண்டாம் உலகப் போரில் ஹிட்லருக்கு எதிராக ஒலித்த குரலாக இருந்தவர். மாட மாளிகையில் வசித்தாலும் போர் வீரனின் சின்னமாக பாட்டாளியின் குறியீடாக முன்னிறுத்தப்பட்டவர். பட்டதரசராக சாமுத்ரிகா லட்சணங்கள் கொண்ட அண்ணன் இருந்தும் ராஜாதி ராஜா ஆனவர்.
ரஜினியை விட திறமையான நடிகர்கள் இருந்தும் கோலிவுட்டின் சூப்பர் ஸ்டார் ஆனவர். வெறுமனே திரையில் தோன்றும் ஹீரோவிற்கு ‘ரஜினி வாய்ஸ்’ பிராண்ட் கொடுத்து, ராஷ்டிரபதியின் ராஜாங்கமாக தமிழகத் தேர்தலை மாற்றிய பெருமை பிபிசி ஊடகங்களுக்கு உண்டு. சமயத்திற்கேற்ப ஹிட்லர் ஜெயலலிதா, ஸ்டாலின் கருணாநிதி என்று முழங்குவதும் உண்டு.
பிரித்தானியப் பேரரசின் நிலப்பரப்புகளுக்கும் முப்படைகளுக்கும் அரசராக இருந்தவருக்கு திக்கு காட்ட இயலாத இயல்பு; ரேடியோவில் பேசுவதற்கான மைக்ரோஃபோனைப் பார்த்தாலே பயந்து நடுங்குவார் என்பதை ‘தி கிங்ஸ் ஸ்பீச்’ திரைப்படம் சித்தரிக்கிறது.
தமிழ் நாட்டின் முடிசூடா மன்னர், முரட்டுக் காளை, ஊர்க்காவலன் என்று போஸ்டரில் ரசிகர்கள் உறுமும் தளபதியும்; தனிக்காட்டு ராஜாவாக, பாயும் புலியாக அதிகாரத்தை நோக்கி சொடக்குப் போட்டு கேள்வி கேட்கும் இராணுவன் வீரனும் தனி மனிதராக பேப்பர் புலியாக இருந்திருக்கிறார். ‘முதல்வன்’ படத்தில் நடிக்கும் தில்லு கூட இல்லாத பயந்தாங்கொள்ளியாக அடங்கிப் போயிருக்கிறார். திருமண மண்டபத்திற்காக சகல சக்திகளிடமும் சரணாகதி அடைந்திருக்கிறார்.
பண்ணையாரை எதிர்க்க எனக்கு திராணி கிடையாது. பணக்காரர்களை எதிர்கொள்ள அன்னா ஹசாரேவாக, அன்று எனக்கு ரஜினி கிடைத்தார்.
படிக்காதவனாக வாழும் ஓட்டை வீட்டுக்காரர்களுக்கு ராஜா வாழ்க்கை கிடைக்காது. எங்களையும் ரஜினி ஓவர்நைட்டில் பணக்காரன் ஆக்கினார்.
இன்றைய தேதியில் ‘சிவில் டிஸ் ஒபீடியன்ஸ்’ என்று காந்தி முழங்கினால் கூட கேட்க ஆளில்லாத முன்னெடுக்க முடியாத முன்னாபாய் சமூகத்தின் சின்னமாக ரஜினி இருக்கிறார். எனவே, நானும் ரஜினிதான்.
Posted in Tamil Blog
குறிச்சொல்லிடப்பட்டது Actors, அதிமுக, அம்மா, அரசியல், இந்தியா டுடே, கருணாநிதி, கலைஞர், சூப்பர் ஸ்டார், ஜெ, ஜெயலலிதா, தமிழ்நாடு, திமுக, நடிகர், பிறந்த நாள், ரஜினி, ரஜினிகாந்த், Birthday, Heroes, India Today, Kamal, Kollywood, Rajini, Rajni, Rajnikanth, Superstar
ரொம்ப நாள் கழித்து ‘மச்சீ’ என்றழைக்கும் உரிமையை கல்லூரி செஷன்ஸ் நீதிமன்ற அனுமதி பெற்றிருந்த தோழர் அழைத்திருந்தார்.
“எந்திரன் பார்த்தாச்சாடா?”
“இனிமேல் ‘பாபா’ குறித்த பயம் போயாச்சு. அப்படியே ‘முள்ளும் மலரும்’, ‘ஆறிலிருந்து அறுபது வரை’னு பல்லவி பாடும் ஷாஜி பிள்ளையாண்டர்களுக்கும் புதுசா ஒண்ணு சேர்ந்துகிடுச்சு.”
எந்திரன் பிரச்சாரங்களை பட்டியல் போட்டால்:
இப்படியாக தமிழிலிருந்தே தமிழுக்கு காப்பியடிக்கும் விமர்சகச் சூழலில் எந்திரமயமான பயம் தொற்றிக் கொண்டது.
எந்திரம் பத்திரம். கூடிய சீக்கிரமே எந்திரக் குழந்தையும் ‘இந்தப் பாடலைப் பாடுபவர் உங்கள் எந்திரனின் வாரிசு’ என்று வெள்ளித்திரையில் வலம் வரும்.
சற்றே தொடர்பிருந்திருக்கக் கூடிய குரல் பதிவு: Conquering A Fear Of Robots : NPR
Posted in Tamil Blog
குறிச்சொல்லிடப்பட்டது இயந்திரன், எந்திரன், என்பிஆர், பட்டியல், பத்து, பாட்காஸ்ட், மனுசன், மெஷின், ரஜினி, ரேடியோ, ரோபாட், ரோபோ, வானொலி, வில் ஸ்மித், வில்லோ, Endhiran, Enthiran, Jada Pinkett Smith, National Public Radio, Rajini, Rajni, Recreation, Tamil script, whip my hair, willow smith
சன் டிவியில் செய்திகள். சர்வக்ஞர் சிலை திறப்பு விழா. மகள் படித்த புத்தகம் குறித்தும் குமான் குறித்தும் விசாரித்துக் கொண்டே அரைக் கண்ணில் தொலைக்காட்சியிலும் பார்வை. சட்டென்று ‘சூப்பர் ஸ்டார்’ மின்னி மறைகிறார்.
உணர்ச்சி வேகத்தில், ‘அது யாரு தெரியுதா?’ என்று மகளையும் பார்த்தாலே பரவசமாக்குபவரைக் கேட்கிறேன்.
அரை நம்பிக்கையுடன் ‘ரஜினியா?’
‘ஆமாண்டி… ஆமா!’
‘எங்கே?’
DVR இயங்கத் துவங்குகிறது. திரும்ப அந்தக் காட்சியை ஃப்ரீஸ் செய்கிறேன்:
‘இவர்தானே?’ சந்தேகாஸ்பதமாக சுட்டுகிறாள்.
ரஜினிகாந்த் என்று அவள் நினைத்தவர்: (மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை இணை அமைச்சர் எஸ்.ஜெகத்ரட்சகன்)
சன் நியூசில் ஏனோ கமல் கலந்துகொண்டதைக் காட்டவில்லை.
பொன்விழா ஆண்டிலும் கமல்ஹாசன் எப்படி இருக்கிறார் பாருங்க:
1. தினமணி :: சர்வக்ஞர் கூறும் அறம் « தமிழ்ச்செல்வி
2. தமிழ்ஹிந்து :: த்ரிபதி சர்வக்ஞர் & வள்ளுவர் « ஜடாயு » வழிகாட்டும் வசனகர்த்தர்கள்: “”
3. புகைப்படங்கள்: என்வழி
Posted in Tamil Blog
குறிச்சொல்லிடப்பட்டது கமல், கமல்ஹாசன், சன், சர்வக்ஞர், சூப்பர் ஸ்டார், செய்தி, டிவி, படம், மகள், மேக்கப், ரஜினி, ரஜினிகாந்த், வழுக்கை, ஹீரோ, Cinema, Daughter, Events, Films, Hero, Heroes, Images, Kamal, Kamalahasan, Kamalahassan, Kids, Movies, News, Photos, Pictures, Rajini, Rajiniganth, Rajinikanth, Rajni, Rajniganth, Rajnikanth, Sarvakjar, Sarvaknjar, Sarwaknjar, Sun, TV
முதலில் நாகார்ஜுனன் பதிவு. அதன் தொடர்ச்சியாக பிரகாஷ் மீம் வித்திட்டிருக்கிறார்.
1 – அ. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்?
ஐந்து வயதில் இருந்து ஓரளவு நினைவில் உள்ளது.
1 – ஆ, நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா?
ப்ரியா.
1 – இ. என்ன உணர்ந்தீர்கள்?
2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?
தமிழ்: தசாவதாரம் (ஆங்கிலம்; வால் – ஈ)
3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?
கடைசியாக முழுமையாகப் பார்த்த படம் ட்யூப் தமிழ் வலையகத்தில் – அஞ்சாதே.
ஆனால், மிக சமீபத்தில், பாதி பார்த்த நிலையில் விட்ட படங்கள் தாக்கத்தை நிறையவே கொடுத்தது.
4. மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா
எல்லோரும் ‘அவள் அப்படித்தான்‘ என்கிறார்கள். ஆனால், என் வாழ்வை திசை திருப்பக் கூடிய சம்பவத்தை ‘அவள் அப்படித்தான்’ நிகழ்த்தியது.
குழந்தையாக இருந்தபோதே ‘எது கலைப்படமோ அதைச் சொல்லி ஒப்பேத்தலாம்’ என்னும் சுபாவம் innate ஆக அமைந்திருக்க வேண்டும். 1979ஆம் ஆண்டு குழந்தைகளின் ஆண்டாக கொன்டாட்டப்பட்டது. என்.எஃப்.டி.சி ஆதரவில் படம் எடுக்க, சென்னை தூர்தர்ஷனில் audition வைத்தார்கள். நானும் சென்றிருந்தேன்.
குடிகாரனாக, பிச்சைக்காரனாக, ஊமையாக எல்லாம் சிவாஜித்தனமான செயற்கையில், அங்கு வந்திருந்த பிற சிறுவர்களைப் போலவே நானும் ஓவர் – ஆக்டிங்கில் மின்னினேன்.
லன்ச்-ப்ரேக்.
பிற்காலத்தில் ரகுவரனை நாயகனாகக் கொண்ட ‘ஏழாவது மனிதன்‘ உட்பட பல படங்களை இயக்கிய ஹரிஹரனின் குழுவோடு உணவருந்தும்போது எல்லோரிடமும் சும்மா கேள்வி கேட்டுக்கொன்டிருந்தார்கள்.
‘உனக்கு என்ன படம் இப்ப பார்க்கணும்? எது பிடிச்ச படம்?’
அன்னை ஓர் ஆலயம், ஆறிலிருந்து அறுபது வரை மாதிரி அப்போதைய படங்கள் அனைத்தையும் வெள்ளித்திரையில் பார்த்த வெறித்தனமான ரஜினி ரசிகன். அம்மாவின் ஒப்புதல் கிடைக்காதது அந்தப் படத்திற்கு மட்டும்தான். இத்தனைக்கும் முதல் எதிரி கமல் வேறு நடித்திருக்கும் படம். தயங்கவே இல்லை.
பட்டென்று சொன்னேன்: ‘அவள் அபப்டித்தான்’
குழுவினர் திகைத்துப் போனார்கள். அவர்கள் டீம் உழைத்த படம் அது. அங்கிருந்த பலரின் செல்லப்பிள்ளை அது. உடனடியாக எனக்கு சான்ஸ் கொடுத்தார்கள் என்பதை சொல்லவும் வேண்டுமோ?!
5-அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா – அரசியல் சம்பவம்?
பெங்களூரில் உடனடியாக வருமா? கன்னடர்கள் கல்லெறிவார்களா?
5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா – தொழில்நுட்ப சம்பவம்?
இரத்தத்தையும் வன்முறையையும் வலிக்க வலிக்க காட்டுவது.
சாதாரண மனிதனின் ‘சத்ரியன்‘ ஆகட்டும்; விபத்தின் பின்விளைவுகளையும் அடிபட்டவர்களாக எண்ணிக்கையில் 167ஓடு 168ஆக கூடிப் போகும் ‘அன்பே சிவம்‘ ஆகட்டும்; ஏழையாக இருந்தால் என்னவெல்லாம் அமுக்கப்படும் என்று கோடிட்ட ‘கண் சிவந்தால் மண் சிவக்கும்‘ ஆகட்டும்.
6. தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?
சிவகுமார் சுயசரிதை, தினத்தந்தி வரலாறு, தி ஹிந்து விமர்சனம், வலைப்பதிவு அசைபோடல், கனவுத் தொழிற்சாலை குறித்து வண்ணத்திரை முதல் வெகுசன ஊடகங்களில் வரும் கருத்து/கட்டுரை.
7. தமிழ்ச்சினிமா இசை?
என்று எல்லாவற்றுக்கும் இசையை நம்பியிருப்பதால், தனித்தீவுக்கு போக விதிக்கப்பட்டாலும் 80 ஜிபி ஐ-பாட் இல்லாமல் செல்லமாட்டேன்.
8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?
ஆங்கிலத்திலும் ஹிந்தியிலும் நிறைய. சில ஸ்பானிஷ்.
9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?
நேரடியாக நடித்த படம் – வாண்டட் தங்கராஜ்.
பிடித்ததா? படத்தில் நடித்த அனுபவம் மிகவும் பிடித்திருந்தது.
வேண்டும்போது கிடைக்கும் ஐஸ்-க்ரீம். சொகுசான படுக்கையறையும் விநோதமான விளக்குகளும் கொன்ட உல்லாச அறை வாசம். பழனி கோவிலுக்கு சென்றால் கூட மூலஸ்தானத்தில் இருந்து மூலவரின் சிறுதுளியே பெயர்த்துக் கொடுக்கும் ராஜ மரியாதை.
என்ன செய்தீர்கள்? ஆறு வயதுச் சிறுவன் தங்கராஜ் பழனிக் கூட்டத்தில் தொலைந்து போகிறான். கூத்தில் அனுமனாக வேடந்தரிக்கும் ‘வள்ளி’ நட்ராஜ், வில்லர்கள் கூட்டத்தை Home Aloneஆக ஏய்ப்பது, கடிந்து கொள்ளும் பெற்றோரின் அன்பைப் புரிந்து கொள்ளும் குழந்தை வேடம்.
சினிமா மேம்பட உதவுமா? வெகு இயல்பாக இருந்தது. பாடல் கிடையாது. மூன்று நாளின் சம்பவங்களை 90 நிமிடங்களில் பரபரவென்று தென் தமிழகமெங்கும் சுழன்று விரியும் படம். அலங்காரில் வெளியாகி இருந்தால் மேம்பட உதவி இருக்கும்.
10. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?
ஒரு வாரத்தில், ஒரு நாளில் எத்தனை நேரம் கேளிக்கைகாக ஒதுக்குகிறோம்? அதில் எவ்வளவு மணி நேரம் சினிமா ஆக்கிரமிக்கிறது?
காலையில் அலுவல் கிளம்பும் அவசரம்; செய்தித்தாள் வாசிப்பு. அதன் பின் பயணத்தில் பழைய ராஜா இசையுடன் மோனம். அலுவலில் பதிவுகள் கவனச்சிதறல்; இரவு உணவுக்குப் பின் ஒரு மணி நேர தொலைக்காட்சி. இதில் சினிமா எங்கே இருக்கிறது?
நண்பனின் கார் சாவி தூரத்தில் இருந்தே திறக்கும் வசதி கொண்டது. ஒரு நாள் என்னை அழைத்தான்.
“டேய், கார் ரிமோட் கீ வேலை செய்ய மாட்டேங்குதுடா! எப்படிடா இப்ப காரைத் திறப்பேன்?”
“நேராக காருக்கும் அருகில் செல். உன்னிடம் இருக்கும் சாவியை துவாரத்தில் இட்டு திறக்கலாம்.”
பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் என்னும் பேட்டரி தீர்ந்து போகலாம். சினிமா என்னும் மகிழுந்தைத் திறக்க கற்பனை என்னும் சாவி, ‘விழிகள் மேடையாம்; இமைகள் திரை’யாகுமா?’
இவர்கள் தொடரவேண்டும் என்று நினைக்கிறேன்.
வழிகாட்டலுக்கு மட்டுமாக சில விதிகள்:
குறிச்சொல்லிடப்பட்டது Audio, அனுபவம், இளையராஜா, கமல், சினிமா, சுடர், சொந்தக்கதை, தமிழ், தியேட்டர், திரைப்படம், தொடர், நடிப்பு, நிகழ்வுகள், படம், பட்டியல், பதிவர் வட்டம், மீம், ரஜினி, ஹீரோ, Cinema, Experiences, Films, Life, Movies, Music

சொல்லப்பட்ட பரிந்துரை: தசாவதாரம் ஸ்டோரீஸ்
சொல்லப்பட்ட பரிந்துரை:
சொல்லப்பட்ட பரிந்துரை: எக்கச்சக்கம்! ஆனால், ரஜினி, சிவாஜி இல்லை

கூகிளின் பச்சை துரோகத்தை, தசாவதாரம் தேடுபவர்களை ‘சிவாஜி‘க்கு திசை திருப்புவதை கண்டிக்கிறேன்.
அது எப்படி! கூகிள் மட்டும் கமலைத் தேடினா ரஜினி வரணும் என்று சரியா யோசிக்குது?!
ஆனால்… ‘சிவாஜி‘ என்று தேடினால், தசாவதாரம் வராமல், கமல் முதுகில் குத்தியுள்ளதை கண்டிக்கிறேன். இனி தன்மான கமல் ரசிகர் எவரும் கூகுளை நாடக்கூடாது என்று பெட்டிசன் போட்டால், கையெழுத்து இடுவேன் என்று வாக்குறுதியும் கொடுக்கிறேன்.
குறிப்பிட்ட ‘சிவாஜி’ தேடல் முடிவுகள்:
Posted in Cinema, Dasavadharam, Dasavatharam, Google, Kamal, Kamalahassan, Kamalhasan, KamalHassan, Movies, Search
குறிச்சொல்லிடப்பட்டது ஆல்டாவிஸ்டா, உலகநாயகன், கமல், கூகுள், சினிமா, சூப்பர் ஸ்டார், டாக்பைல், தசாவதாரம், திரைப்படம், தேடல், நடிகர், மொக்கை, யாஹு, ரஜினி
நன்றி: The Hindu images
முந்தைய பதிவு: மிஸ்ட் ரி-மிக்ஸ் « Snap Judgment: “ரஜினியால் சந்திரமுகியில் ரி-மிக்ஸ் செய்ய முடியாத பாடல்கள்:”
1. எந்தப் பக்கமும் சாயாத பாபா – தாமரையிலைத் தண்ணீர் போல் ‘ஒட்டி ஒட்டாமல் இரு’
2.எட்டு ஊருதான்
எட்டனும் தம்பி அடி ஜோராக
வைக்கிற வாணம் அந்த வானையே
தைக்கணும் தம்பி விடு நேராக
அட தம்பட்டம் தாரதான் தட்டிப் பாடு
3. தொண்டுகள் செய்ய நீயிருந்தால் தொல்லை நேராது தூயவனே
காவியங்கள் உனைப்பாடக்
காத்திருக்கும்பொழுது
காவியுடை நீ கொண்டால் என்னவாகும் மனது
வாழ்வை நீ தேடி வடக்கே நீ போனால்
நாங்கள் போவதெங்கே
4. தமிழக என்.டி.ஆர்
5. சுவாமியே சரணம் பாபா
Posted in Banner, Banners, Poster, POSTERS, Rajini, Rajiniganth, Rajinikanth, Rajni, Rajniganth, Rajnikanth, Religion
குறிச்சொல்லிடப்பட்டது அவமதிப்பு, இந்து, கடவுள், கண்ணன், காந்தி, கிருஷ்ணன், சித்தரிப்பு, பாபா, போஸ்டர், மதம், ரஜினி, ரஜினிகாந்த், விளம்பரம், ஹிந்து
அழகிரி பிறந்தநாள்: அமைச்சர்கள் பங்கேற்பு & 4 ஆயிரம் பேருக்கு உதவி
1. தலைவருக்கு தா கிருட்டிணனை மட்டுமல்ல; கேக்கையும் கட் பண்ணத் தெரியும்.
2. கேகேஎஸ்.எஸ்.ஆர் என்று கேக்கை பெயருக்குள் வைத்துக் கொண்டால் மட்டும் போதுமா? முக மகன் மனதில் இடம் பிடிக்க வேண்டாமா!
3. ஸ்டாலினுக்கு பிடித்த இளைய தளபதி பாட்டு: ‘மதுரைக்குப் போகாதடீ’
4. அழகிரிக்கு பிடித்த பாட்டு விஜய் பாட்டு: ‘மச்சான் பேரு மதுர… நீ நின்னு பாரு எதிர’
5. ‘அட்டாக் பாண்டி’ இல்லாவிட்டாலும் இந்த அழகிரிக்கு வெட்ட தெரியும்.
6. ஜாமீனுக்குள் மீனு சிக்கலாம்; ஆனா அழகிரி சிக்க மாட்டான்.
7. சுழல்விளக்கு பாதுகாப்பு வச்சிண்டிருக்கிறன் எல்லாம் அமைச்சரும் இல்ல; நலத்திட்டங்கள் நல்குபவன் எல்லாம் நாட்டாமையும் இல்ல!
8. நேரில் வந்து வாழ்த்து சொல்றவன் நாளைய அமைச்சர்; போனில் ஹேப்பி பர்த்டே சொல்றவன் நேற்றைய அமைச்சர்.
9. முதல்வருக்கு வாழ்த்துச் சொல்லாட்டி பிழைச்சுரலாம். ஆனால், மூத்த மகன் பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்லாதவன் நீடிச்சதா சரித்திரம் இல்ல!
10. கருத்தாகக் கணிப்பு வெளியிட்ட தொலைக்காட்சியும் கண்ணுமண்ணு தெரியாம கழகத்தை மட்டும் கண்ணா நினைக்கிற தொண்டரும் உயிரோடு இருந்ததா சரித்திரம் இல்ல!