Tag Archives: Personal

Wanted Thangaraj: Movie Promo Still

திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்த கதை: India Films to Indie Movies – Meme

திரைப்படத்தின் புகைப்படம்

வாண்டட் தங்கராஜ்: தமிழ் சினிமா - குழந்தைகள் ஆண்டு - இயக்குநர் ஹரிஹரன்

வாண்டட் தங்கராஜ்: தமிழ் சினிமா – குழந்தைகள் ஆண்டு – இயக்குநர் ஹரிஹரன்

சென்னை ராஜாங்கம்

துக்ளக் சோவிற்கு மிகவும் பிடித்தமான மயிலை ஸ்ரீனிவாசர் கோவிலுக்கு பெருமாள் அழைத்திருந்தார். பிரும்மோத்ஸவ அழைப்பிதழும் கொடுத்தார். புழு, பூச்சிக்கும் அடைக்கலம் உண்டென்பதை, நரசிம்மர் மேல் கரப்பான் பூச்சி(கள்?) ஊர்வதை வைத்து உணர்த்தினார்.

முன்னுமொரு காலத்தில் ஏர் இந்தியாவில் பயணம் சென்றபோது நட்ட நடுவில் ஒரேயொரு வெள்ளித்திரை. அதில் ஒரேயொரு படம். அந்தப் படத்தில் டயான் லேன் (Diane Lane) முயங்குவதைப் பார்த்து, பக்கத்து இருக்கை பாப்பா ‘அங்கிளும் ஆன்ட்டியும் ஏன் அம்மணத்தோண்டியா சண்ட போடறாங்க?’ என்று கேட்க வைத்தார்கள்.

தோஹாவில் இருந்து கிளம்பிய கத்தார் விமானத்தில் வந்த ‘வாரணமாயிரம்’ மகா சைவம். ‘அஞ்சல… அஞ்சல’ பாட்டுக்கு கூட கத்திரி. ஒழுக்கசீலராக்குவதில் வளைகுடாவை விஞ்ச இன்னொரு குடா இருக்கிறதா என்ன?

நியு யார்க்கில் இருந்து கிளம்பிய விமானம் ஏ1 தரம். ஆயிரம் படங்கள்; ஆயிரத்தொரு விளையாட்டுகள்; ஆயிரத்திரண்டு பொழுதுபோக்கு வைத்து அசத்தி இருந்தது கத்தார் வான்வழி. அதில் ‘லாடம்’ படத்தின் ஆங்கிலப் பதிப்பான ‘Lucky Number Slevin’ கொஞ்சமும், நடுத்தர வர்க்க நடு வயது இந்தியரின் வாழ்க்கைக்கு பொருத்தமான ‘Revolutionary Road’ கொஞ்சமும், ‘Seven Pounds’ முழுதுமாக தரிசனம் கிடைத்தது.

வந்த சூட்டோடு வலையுலக முன்னாள் பதிவர் சிலரோடு சந்திப்பும் இனிதே நடந்தேறியது. பிரபாகரன் எங்கே இருக்கிறார், தமிழக முக, சாரு, ஜெயமோகன் என்று மைய நீரோட்டத்தை விட்டு விலகாத உரையாடல்.

தானி ஓட்டுநர்களுடன் பேச்சுத் தொடுத்ததில் ஜெயலலிதாவின் அலம்பலை நாடி பிடித்து வைத்திருக்கிறார்கள். ‘தனி ஈழ அறைகூவல் எல்லாம் டுபாக்கூர்’ என்றார். ‘அவங்க நாடு; அவங்க பிரச்னை’ என்றார்.

இன்னொருவர் ‘பிரபாகரனும் ராஜபக்சேவும் டீலு போட்டாங்க. பிரபாகரன எங்காவது கண்காணாத ஊருக்கு அனுப்பிவைச்சுட்டு, அவன சுட்டுட்டதா கத கட்டிவிட்டுட்டு, நம்ம மக்கள சாவடிக்கிறான் சிங்களக்காரன்’ என்று முடித்தார்.

சென்னையில் ஒரு பேனர் கண்ணில் படவில்லை. சுவரொட்டியும் காணக் கிடைக்கவில்லை. தோரணம், வண்ணவரைபடம் எல்லாமே மாயம். அந்தக் காலத்தில்… ஹ்ம்ம்ம்…

குருவாரம். ஷீர்டி சாய்பாபா சின்னத்தில் தேர்தலில் நின்றால் நிச்சயம் வெற்றி. ஆனால், இந்தியா என்ன ஐரோப்பாவிலா இருக்கிறது? தமிழக பொதுசனம் ஆன்மிகத்தையும் அரசியலையும் என்றும் கலந்து பார்த்து வாக்களிப்பதில்லையே!

இந்தியா இறங்கியவுடன் ப்ளாக்பெரி உயிர் கிடைத்தது. கையளவு அமெரிக்க செல்பேசியில் சகலமும் உடனடியாக தெரிகிறது. அமெரிக்காவில் கூட தொழில்நுட்பம் இம்புட்டு முன்னேறி இருக்குமா? இந்த தடவை இந்தியா வந்தாலும் கூட இணைபிரியாத இணையம்.

Therthal 2009: வாக்கு கொடுத்துட்டேன்

தேவ் அழைக்கிறார்.

பாலபாரதி பவர்பாய்ன்ட் இட்டு கொதிக்கிறார். மாற்றம் வேண்டும் இயக்கம் துவங்குகிறார்கள். பதிவரோ சூடான இடுகைக்கு செய்தி இட்லியும் அலசல் வடையும் பரிமாறுகிறார்.

உங்கள் பொன்னான வாக்கை தேர்தலில் சரியான சின்னம் பார்த்து அமுக்க பத்து காரணம்:

  1. மதன் பாப்புக்கு வழங்குவது போல் ‘தீசுந்தர் சி அடிப்பார்.
  2. கண்ணுக்கு மையழகு. கைக்கு வாக்கு போட்ட மசி அழகு.
  3. தேவ் அழைத்தவர் எல்லாம் வெளிநாடு. நீங்க உள்நாடு.
  4. வேளாவேளைக்கு சாப்பிடுகிறோம்; வீட்டை தூசு தட்டுகிறோம்; அது போல் இதுவும் எளிது + முக்கியம் + கடமை.
  5. பாஸ்போர்ட் முதல் பால் வரை பல க்யூவில் நிற்கிறோம். இந்த காத்திருப்பு வரிசை எம்மாத்திரம்?
  6. எழுபது வயதான என் அம்மா இதுவரைக்கும் எந்தத் தேர்தலையும் தவறவிட்டதில்லை. கால் சரியில்லாதபோதும், எப்படியாவது வாக்களித்து வந்திருக்கிறார்.
  7. தி ஹிந்து, வலைப்பதிவு, சிஎன்என், காமெடி சென்ட்ரல் எல்லாம் பாத்தால் எதற்கும் நயா சென்ட் பயனில்லை. வாக்குச்சாவடியில் எந்திரத்தை தொட்டால் மட்டுமே மோட்சம்.
  8. உங்களுக்கு பதில் இன்னொருத்தர் கணவனாக செயலாற்ற விடுவீர்களா? அப்படியிருக்க கள்ளவாக்கு மட்டும் ஏன் விடுகிறீர்கள்?
  9. அனுபவஸ்தன் சொல்கிறேன். வோட்டு போட்டார்ல் ரொம்ப திருப்தியாக இருக்கும். மனநிறைவு கிடைக்கும்.
  10. இதே மாதிரி இன்னும் நூறு இடுகை வந்து உங்களைத் தொல்லைக்குள்ளாக்கணுமா? தயவு செஞ்சு போட்டுடுங்க!

யாருக்கு போட்டேன் என்று ட்விட்டரில் எனக்கு டைரக்ட் மெஸேஜ் விடவும் மறக்காதீங்க 🙂

நான் இந்தியாவில் இல்லையே என்றால், அட்லீஸ்ட் பதிவு மட்டுமாவது போடுங்க தல•…

    செயல் பயனற்ற நிலை

    ரொம்ப நாளாக கூடவே ஓடுபவர். அன்றும் ஜிம்மில் பைக்கிங் செய்து கொண்டிருந்தார். நான் ஐந்து நிமிடம் ஓடுவதும் நான்கு நிமிடம் நடப்பதுமாக மூச்சு வாங்கிக் கொண்டிருந்தேன். காதில் தற்போதைய ஹிந்தி ரெஹ்மான் ஒலியை மீறி தடால் சப்தம் கேட்டது.

    பக்கத்தில் சாதாரணமாக உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தவர், கீழே விழுந்திருந்தார். 911 அழைத்தார்கள். அங்கே இருந்த எவருக்கும் முதலுதவி தெரியவில்லை.

    ஆம்புலன்ஸ் வருவதற்குள்ளேயே உயிர் பிரிந்து விட்டது. வயது 44.

    அவர் என்னைப் போல் திடீரென்று ஓட வருபவர் அல்ல. பல வருடங்களாக தினசரி வருபவராம்.

    மரணம் கண் முன்னே நிகழ்வதை கையாலாகாமல் பார்ப்பது இரண்டாவது தடவை. முதல் தடவை திருச்சானூர் கோவில் வாசற்படியில் அப்பா வழுக்கியபோது பதைபதைத்ததும் ஓடிப்போய் என்னென்னவோ செய்து பார்த்ததும்; சிரார்த்தம் நம்பிக்கையில்லாமல் போடாமல் இருப்பதும்; ‘நான் கூடப் போறேனில்ல! ஒண்ணுத்துக்கும் கவலை வேண்டாம்’ என்று வாக்குறுதி சுக்கலானதும்; வாழ்க்கை மாயை போன்ற அநித்தியங்கள் தோன்றியதும்; செய்த பாவக்கணக்கின் பட்டியலும்; சில இளையராஜா சோகப்பாடல்களும்; கடவுள் நம்பிக்கையும்; கடவுள் வெறுப்பும்; இலட்சிய வேட்கை கொழுந்துவிட்டெறிவதற்கான தாகசாந்தியும்; எதற்காக சின்னச் சின்ன விசயங்களுக்கு எல்லாம் உணர்ச்சிவசப்பட்டு வைகிறோம் என எல்லாம் ஒட்டுமொத்தமாய் வந்து போனது.

    எதுவும் நிலைத்து இலயிக்கவில்லை.

    ‘ட்விட்டரும் ஃபேஸ்புக்கும் பயன்படுத்தாதே!’

    Harry Lewis: “Blown to Bits: Your Life, Liberty, and Happiness After the Digital Explosion.”

    Almost everything we now do on a regular basis, from sending emails, taking photographs, writing text messages, calling on our cell phones, downloading music, typing on our computers, and using our credit and ATM cards, all of it generates information. And every single day the endless information generated by our ever-expanding digital footprints is recorded, tracked, searched through, sold, analyzed, and saved forever.

    Some might call this hyper-networked digital explosion and its potential for collaboration and innovation a kind of utopia. But others warn that it also raises important concerns about privacy, identity, freedom of expression, accountability, and the future of democracy.

    1. செல்பேசியை அணைத்து விட்டாலும் ஒட்டு கேட்கலாம்.

    அந்தக் காலத்தில் வீட்டுக்குள் புகுந்து, வேவு பார்க்கும் கருவியை நிறுவினார்கள். ஆனால், இன்றோ, மிகவும் சுளுவாக சாஃப்ட்வேரை உங்களின் செல்பேசிக்கு அனுப்பி விடுகிறார்கள்.

    அதன் பிறகு உங்களின் ஒவ்வொரு பேச்சையும் ஒட்டுக் கேட்கலாம்.

    இந்த தொழில்நுட்பத்தைக் கொண்டு மாஃபியா தலைவர்களின் குற்றத்தை நிரூபித்து இருக்கிறார்கள்.

    எஸ்.வி சேகருக்கு குளிராடி போட்டது நதியா காலம். எஃப்.பி.ஐ. செல்பேசி மூலம் உங்களைப் பார்ப்பது இந்தக்காலம்!

    ~oOo~

    2. தான்யா ரைடரின் சம்பவம்:

    மனைவியைக் காணவில்லை என்று கணவன் போலீசை நாடுகிறார். காவல்துறையோ, ‘உங்கள் மனைவி சுதந்திரத்தை நாடி, பிறிதொரு துணையைத் தேடி சென்றிருக்கலாம். எனவே, அவரைத் தேட மாட்டோம். தேடவும் கூடாது!’ என்று மறுத்து திருப்பியனுப்பி விடுகிறது.

    ஒரு வாரம் கழிகிறது.

    ஒரு வேளை கணவனே, தன் மனைவியைத் தீர்த்துக் கட்டியிருப்பாரோ என்று காவலர்களுக்கு சந்தேகம் வருகிறது. அதனால் அவரை குற்றஞ்சாட்டுவதற்காக தான்யாவைத் தேடத் துவங்கினார்கள்.

    கார் விபத்தில் சிக்கிய தான்யா குற்றுயிரும் குலையுயிருமாக ஒரு வாரப் பட்டினியில் சேதமடைந்த காரில் மயக்க நிலையில் கண்டுபிடிக்கப் பட்டார்.

    பெண் சுதந்திரம் வேண்டுந்தான்! குடும்ப வன்முறையிலிருந்து தப்பிக்க வேண்டுந்தான்!!

    அதற்காக, கணவன் புகார் தந்தால் எஃப்.ஐ.ஆர். போட மறுக்கலாமா?

    ~oOo~

    3. நீங்கள் நல்ல தந்தையா? பொறுப்பான தாய்?

    இது விவாகரத்து கேஸ்.

    கடுமையாக உழைக்கும் மனைவி சொல்கிறாள், ‘நான் என் குழந்தையை மிக சிறப்பாக கவனித்துக் கொள்வேன்’.

    கணவனின் வக்கீல் தன் பக்க சாட்சியாக சுங்கச்சாவடிகளில் கட்டும் வரி ரசீதுகளை கொண்டு வரலாம். முன்னாளில் நீங்கள் எப்பொழுது அலுவலில் இருந்து வீட்டுக்கு வந்தீர்கள், எத்தனை நேரம் குழந்தையோடு செலவழித்தீர்கள் என்றெல்லாம் கண்டுபிடிக்க இயலாது.

    ஆனால், இன்றோ, நாற்சக்கர சாலைகளில் இருக்கும் toll boothகளைக் கொண்டு ஒன்பது மணிக்கு வீட்டுக்கு வருவதை சொல்லி, மகளை தன்னிடம் ஒப்படைக்குமாறு வாதிட்டு வென்றும் விடலாம்.

    சௌகரியமாக இருக்கிறது என்பதற்காக EZ-Pass போட்டு வைக்கிறோம். அதைக் கொண்டு, எங்கே, எப்போது, எத்தனை மணி நேரம் செலவழிக்கிறோம் என்பதை நாம் விரும்பாமலே உலகுக்கு சொல்கிறோம்.

    ~oOo~

    4. வாடிக்கையாளர் அட்டை

    ஷாப்-ரைட் ஆரம்பித்து சிவியெஸ் வரை எல்லோரும் தங்களின் நுகர்வோருக்கு ‘தள்ளுபடிக்கான அடையாள அட்டை’ தருகிறார்கள்.

    என்ன சரக்கு அடிப்பீர்கள், அந்த சரக்கு அடித்தால் என்ன நோய் வருகிறது, நோய் வந்தால் என்ன வாங்குவீர்கள் என்றெல்லாம் இதன் மூலம் அறிய முடியும்.

    ~oOo~

    5. விமான நிலையத்தில் CLEAR முறை

    ஒசாமா பின் லாடனின் வேலையை அமெரிக்கா எளிதாக்கி இருக்கிறது. தீவிரவாதி விமானத்திற்குள் நுழைய வேண்டுமா?

    வெறும் 80 டாலர் போதும் ஜென்டில்மேன்.

    உங்களுக்கு சோதனையில் இருந்து விலக்குத் தரப்படும். பாதுகாப்பாக நீங்கள் ‘பாதுகாப்பு சோதனை’யை தவிர்க்கலாம்.

    ஆல் க்ளியர்!

    ~oOo~

    6. கூகிள் சக்தி

    உடம்பு சரியில்லை என்றால் என்ன செய்கிறீர்கள்?

    “மூக்கொழுகல் AND காதடைப்பு” என்று கூகிள் செய்வோம். உங்களை மாதிரியே பக்கத்து தெரு பங்கஜம், அதே பேட்டையில் வசிக்கும் பேட்ரிக் என்று பன்மடங்காக ஒரே மாதிரியான தேடல் வர ஆரம்பிக்கிறது.

    மருத்துவமனைக்கு செல்வதற்கு முன், அரசாங்கத்திற்கு தகவல் போவதற்கு முன், இன்டெலிஜென்ஸ் அறிந்துகொள்வதற்கு முன் கூகிளுக்கு ‘இந்த நோய், இப்படிப்பட்ட இடத்தில்’ பரவ ஆரம்பித்துள்ளது.

    நோய் சரியாகாத படசத்தில் ஓரிரண்டு நாள் கழித்துதான் டாக்டரை நாடுவோம். ஆனால், எல்லா தகவலையும் அதற்கு பல மணி நேரம் முன்பே கூகிள் கணித்துவிடுகிறது.

    இன்ஃபோர்மேசன் இஸ் பவர்!

    காதலர் தினக் கதைகள்

    Happy Valentines Day!

    அன்பர் தினத்திற்காக என்ன வாங்கிக் கொடுக்கலாம் என்று யோசித்துக் கொண்டே விலுக் விலுக்கென்று நடந்தபோதுதான் அது நடந்தது. நடந்தால்தான் பரவாயில்லையே! கால் வழுக்கி கீழே உடல் விழ, வலது கை அதிரடியாகத் தாங்கி தோள் கொடுத்தது.

    சமாளித்து பயணத்தைத் தொடர்ந்தேன்.

    நண்பரிடமும் இந்த வீர சாகச விழுந்தெழுந்த கதையை சொன்னேன். எங்களுக்கு அறிமுகமான இன்னொரு நண்பருக்கு நிகழ்ந்ததை விவரிக்க ஆரம்பித்தார்.

    மனைவி ஊருக்கு புதுசில்லை. என்றாலும் ஆனைக்கும் அடி சறுக்கும் அல்லவா? பனியில் தவறி விழுந்திருக்கிறார். சுற்றும் முற்றும் எவரும் பார்க்கவில்லையே என்று உறுதி செய்துவிட்டு அசால்ட்டாக அப்படியே விட்டும் விட்டார்.

    இரண்டு வாரம் கழித்து தலைவலி, மண்டையிடி. மருத்துவரிடம் போனால் எம்.ஆர்.ஐ, ஸ்கேன் செய்து தலையில் கட்டி இருப்பது தெரியவந்துள்ளது. பனியில் விழுந்ததனால்தான் என்று டாக்டர்கள் சந்தேகிக்கிறார்கள்.

    பனியில் பார்த்து நடந்து கொள்ளவும்.

    ~oOo~

    முன்னே பின்னே புஷ் அப் செய்து மூன்று வருடமாவது ஆகிப் போயிருக்கும். ‘காக்கி சட்டை’ கமலாக ஒற்றைக் கை புஷ் அப் எடுத்த தோள் பட்டை வலித்துக் கொண்டிருந்தது.

    காந்தாரி பரம்பரையில் வந்த மனைவி சும்மா விடுவாரா?

    பார்வையற்ற திருதராட்டிரனுக்காக கண்ணைக் கட்டிக் கொண்டாள் காந்தாரி. கை வலியால் பாதிக்கப்பட்ட கணவனுக்காகவோ, என்னவோ!?

    கார் கதவை சாத்தும்போது கையை வைத்து சாத்திக் கொண்டு விட்டாள். விரல் நகம் பெயர்ந்து உதிர, உதிரமும் கொட்டுகிறது. எனக்கு கால்கட்டு போட்டார்கள். அவளுக்கு இப்போது விரல்கட்டு.

    பட்ட காலே படும்; லே ஆஃப் ஆன குடியே டவுன்சைஸ் ஆகும் என்று பெரியோர்கள் அன்றே பழமொழிந்து இருக்கிறார்கள்.

    ~oOo~

    இந்த சம்பவத்தையும் மதிய உணவில் சம்பாஷித்தோம். இன்னொரு நண்பர் தன் அம்மாவிற்கு செருமனி நிகழ்த்திய கொடூரத்தை நினைவு கூர்ந்தார்.

    லுஃப்தான்ஸா சென்னையில் இருந்து ஃப்ரான்க்ஃபர்ட் கொண்டுவிட்டிருக்கிறது. ஏழு எஸ்கலேட்டர், ஆறு செக்யூரிடி செக் முடித்துவிட்டாள் அவரின் அன்னை.

    கடைசியாக லிஃப்ட்.

    எலிவேட்டரில் பாய்வதற்காக தன் மெல்லிய கையை நடுவில் வீசிப் பார்க்க, லிஃப்ட் கதவு மூடிக் கொண்டு, விரல்களை பதம் பார்த்து விட்டது.

    குருதி கொட்ட கொட்ட, முதலுதவி கேட்டிருக்கிறார். ‘விமான நிலைய ஊழியருக்கு அடிபட்டால்தான் ஃபர்ஸ்ட் – எயிட்; உங்களுக்கு நோ எயிட்’ என்று ஜெர்மானிய ஊழியர்கள் நிராகரித்துவிட்டார்கள். வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாக ‘Defibrillator இருக்கிறது! வேண்டுமா?’ என்றும் கரிசனையோடு விசாரிக்கிறார்கள்.

    கூடவே, இரண்டு பெரிய ஃபாரம்களை நீட்டி, கையெழுத்தும் கோரி இருக்கிறார்கள். கையொப்பம் இட்டால்தான், பாஸ்டனுக்குப் பறக்கும் விமானத்தில் ஏற முடியும். அதாகப்பட்டது, ‘உங்களுக்கு விமானத்தில் அடிபடவில்லை; அதற்கு முன்பே பாதிக்கப்பட்டு விட்டீர்கள்! எங்களுக்கும் உங்கள் உடல் சேதத்துக்கும் எந்தப் பொறுப்பும் கிடையாது!’

    கைகுட்டை எடுத்து ஐஸ் கட்டி ஒத்தடம் கொடுத்து வலது கை இழந்த ஏழு மணி நேரப் பயணத்திற்கு பின் பாஸ்டன் வந்தவுடன் நேரே எமர்ஜென்சி சென்றிருக்கிறார்கள்.

    ‘உடைநெகிழ்ந்தவனுடைய கை, உடனே உதவிக்காப்பது போல் ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு’ என்றுதானே வள்ளுவப் பெருந்தகை சொல்லி விட்டுப் போயிருக்கிறார். சேவை நிறுவனங்களுக்கும், விமான நிலையத்திற்கும், தொலைதூர பயணிகளுக்கும் விரல் நெகிழ்ந்தாலும் பொருந்தும் என்று சொல்லவில்லையே!

    எனவே, லிஃப்ட்டுக்குள் நுழையும் அவசரத்தில் கையை நீட்டாதீர்கள். அதுவும் லுப்தான்சாவில் பயணித்து ப்ரான்க்பர்ட்டில் நீட்டவே நீட்ட வேண்டாம்.

    ~oOo~

    மீண்டும் சொந்தக் கதைக்கே வந்து விடுவோம்.

    வருத்தந் தரும்மெய்யுங் கையில்
        தழையும்வன் மாவினவும்
    கருத்தந் தரிக்கும் நடக்கவின்
        றைய கழல்நினையத்
    திருத்தந் தருளும் திகழ்கச்சி
        ஏகம்பர் சீர்க்கயிலைத்
    துருத்தந் திருப்பதன் றிப்புனம்
        காக்கும் தொழிலெமக்கே.

    எமக்குத் தொழில் ட்விட்டர் அடிப்பது, ப்ளாகில் பின்னூட்டம் இடுவது, விவாதத்தில் வம்பு தேடுவது என்று தேமேன்னு இருந்தவனை பாத்திரம் தேய்ப்பது, சமைப்பது என்று பொறுப்பு கூட்டினார்கள்.

    ஆடலுடன் பாடல் போல் படத்துடன் பப்படம் பொரிப்பது எப்படி என்று எழுதியவரை கிண்டல் செய்ததன் கர்மபலனோ? டிஷ்வாஷர் போட்டால் உலகம் வெம்மையாகிறது என்று ஒப்பாரி கட்டுரை எழுதியதற்கான பழிக்குப் பழியோ? Frozen vegetables வாங்குபவரை ஃப்ரெஷ்ஷாக வாங்கி, கட் செய்தால்தான் சத்து என்று மிரட்டியதற்கான கை மேல் பலனோ? மினிமம் – ஒக்க கூட்டு, தோ கறி, மூன்று கோர்ஸ் இருந்தால் மட்டுமே பசியாறுவேன் என்று முனிசிரேஷ்ட வாழ்க்கையின் சாபமோ?

    இரண்டு நாள் சமைத்தால் போதும். ஐந்தாண்டு வலைப்பதிந்த அனுபவமும் பத்தாண்டு இலக்கியம் வாசித்ததின் ஆய பயனும் ஒருங்கே சித்திக்கும்.

    ~oOo~

    கல்யாணத்திற்கு முன் என்னுடைய சமையல் சம்பிரதாயமானவை. ஃப்ரென்ச் ஃப்ரைஸ் கொண்டு கறி செய்வோம். ஆனியன் ரிங்ஸ் சாம்பாரும் கிடைக்கும்.

    கைக்குக் கிடைத்த பதார்த்தத்தைக் கொண்டு வழக்கமான சிஷ்ருஷைகளை அரங்கேற்றி சமையல் நடக்கும். எல்லாவற்றுக்கும் தாளித்துக் கொட்ட வேண்டும். சாம்பாரோ, ரசமோ, கூட்டோ — எதுவாகினும் கவலை வேண்டாம். எல்லாவற்றிலும் பெருங்காயம் முதல் சிக்கன் மசாலா வரை சகலமும் மிதக்கும்.

    எது செய்தாலும் ஒரே ஸ்டான்டர்ட்; அதே டேஸ்ட். யார் நளபாகப் பொறுப்பெடுத்துக் கொண்டாலும் மாறி விடாத சுவை; சிம்பிள் சூத்திரம். எல்லாவற்றையும் போடு; நாலு கலக்கு கலக்கு. நிறைய காரம் போடு. இதுதான் ட்ரேட் சீக்ரெட்.

    வந்த புதிதில் மனைவிக்கு இதை செய்து போட்டு மிரளவைத்ததுதான். இன்றளவிலும் ‘அவன் வெண்பொங்கல் எக்ஸ்பர்ட் ஆக்கும்!’ என்று செல்லமாய் வஞ்சப் புகழ்ந்து ஒதுக்கி வைத்திருக்க செய்தது.

    ‘இப்படித்தான் இருக்க வேணும் சமையலு’ என்று மைக்ரோ மேனேஜ் செய்து, அடுப்பங்கரையிலே மேற்பார்வையிட்டு, ஒவ்வொன்றையும் எப்படி பொறுமையாக பாதி சூட்டில் வைத்து வேக வைக்கவேண்டும் என்று பாலபாடம் எடுத்ததில் மனைவிக்கு சமையலே மறந்திருக்க வேண்டும்.

    இப்பொழுதெல்லாம் மைரோவேவ் டின்னர் மாதிரி வருமா? இன்று பீட்சா சாப்பிடலாமா என்று மார்க்கெடிங் செய்து பார்க்கிறேன். சமையலை விட சந்தைப்படுத்தல் சுளுவானது.

    ~oOo~

    சமைத்தேன் என்பதற்கான சாட்சியாக கீழே கொண்டைக்கடலை சாம்பார் கிடைக்கிறது. கூடிய விரைவில் ரெஸிபியுடன் சந்திக்கிறேன்.

    kondai-kadalai-sambar-chick-peas-gravy-garbanzo-beans-recipes

    வெற்றிகரமான நூறாவது நாள்

    இந்த வருடம் பள்ளிக்கு 100 நாள் சென்றதற்காக ஏதாவது கட் – அவுட் கொண்டுவர சொன்னார்கள். அந்தத் திட்டத்தில் செய்தது:

    school-100-day-project-children-2009-kids-world-apha-numeric-1

    முந்தைய பதாகைக் குறிப்பு:
    100 days of Kindergarten : Ideas Required

    100th Day Project – School Activities: Kids, Children

    நியு யார்க் நகரம் – தாங்ஸ்கிவிங் வாரம்

    சென்ற வாரம் நியு யார்க் நகரமும் அதன் சார்ந்த வட்டாரங்களிலும் சுற்றிய கதை:

    • வாடகைக் கார் அமெரிக்க தயாரிப்பு. பெரியதாக இருந்தது. துளியசைத்தால் முன்பின் நகர்ந்து சாய்ந்து உயர்ந்து வளைந்து நெளியும் இருக்கை முதல் உள்ளே ஓட்டுநருக்கு ஒரு வெப்பநிலை, பயணிக்கு இன்னொரு குளிர்நிலை வைக்கும் வரை சின்னச் சின்ன சௌகரியங்கள் நிறைந்திருந்தன. எஞ்ஜின் சரியில்லாவிட்டாலும் கவரிங் தூள்.
    • பாஸ்டனில் இருந்து நியுயார்க் செல்லும்வழியில் ஒரு மணி நேரத்திற்கு சராசரியாக 68 மைல் வேகத்தில் சென்றதாக புள்ளிவிவரம் காட்டியது. திரும்பிவரும்போது கும்பலோடு கோவிந்தா போட்டதினால் 35 மைல்தான் ஒரு மணி நேரத்தில் சராசரியாக செய்ய முடிந்தது. மெதுவாக செல்வதற்கு ட்ராஃபிக் மாமா நிறுத்துவாரா?
    • நியுயார்க் கென்ன்டி விமான நிலையம் செல்லும் போதெல்லாம் முன்னுமொரு காலத்தில் எனக்கு நேர்ந்த சம்பவத்தை கூட இருப்பவர்களோடு நினைவு கூர்வேன். பதினெட்டாவது தடவையாக மனைவியும், மூன்றாவது தடவையாக மகளும் கேட்டுவைத்தார்கள். பாஸ்டனில் அந்த மாதிரி செய்தால் கப்பம் கட்ட சொல்கிறார்கள்.
    • நியூ யார்க் ஃப்ளஷிங் கணேஷா கோவில் புனருத்தாரணம் செய்கிறார்கள். நான் அமெரிக்க வந்தபிறகு கட்டி முடிக்கப்பட்ட அரங்கத்திற்கு முதன் முறையாக மேயர் ப்ளூம்பர்க் வந்திருந்தார். மும்பை குண்டுவெடிப்புக்கு இரங்கல் சொன்னார். வலைப்பதிவர்களும் ஒரு நிமிட அஞ்சலி செலுத்தியிருக்கிறார்கள்.
    • உள்ளாட்சி அமைப்பின் சபாநாயகரும் வந்திருந்தார்.  ‘இப்போது முறைப்படி பூரணகும்ப மரியாதை செய்யமுடியவில்லை. அடுத்த முறை சாஸ்திரோப்தமாக அழைப்பதாக’ கோவில் நிர்வாகி வாக்களித்தார். இந்து மதம் லெஸ்பியன்களை எப்படி பார்க்கிறது?
    • நியுயார்க்கில் சென்ற இடமெல்லாம் மும்பை குண்டுவெடிப்பிற்காக மன்னிப்பு கோரினார்கள். ‘நீங்கள் இந்தியர்தானே!? உங்கள் ஊரில் இப்படி நடந்துருச்சே! ரொம்பவும் சாரிஈஈஈ… தங்கள் உறவினர், தெரிந்தவர் யாருக்கும் சேதமில்லையே?’ என்று பரிவுடன் விசாரித்தார்கள். அமெரிக்காவின் விடிவெள்ளி சி என் என்னுக்கும் விடாக்கண்டர் லஷ்கர் – இ – தொய்பாவுக்கும் உயிர் நீத்த ஆறு அமெரிக்கர்களுக்கும் நன்றி.
    • நடுத்தெருவில் புதிய ப்ராட்வே ஷோவிற்காக துண்டுச்சீட்டு கொடுப்பவர் முதல் ஃபாந்தம் ஆஃப் தி ஓபராவிற்கு கோட் சூட் போட்ட கனவான் வரை முகமன் கூறி, புன்னகை சிந்தி, துக்கம் விசாரித்தார்கள். ‘இந்தியராகப் பிறந்திட மாதவம் செய்ய வேண்டும்’ என்பது போன்ற அரச கவனிப்பு.
    • ஃப்ளஷிங் கணேஷ் கோவில் சாப்பாடு ஏ1. அது கேண்டீன் என்று சொல்வது இழுக்கு. நியூ ஜெர்சி சரவண பவன் அண்ணாச்சி தொழிலும்  சுவையும் சேவையும் கற்கவேண்டிய தலம்.
    • இதற்கு நேர் எதிர்மாறாக நியு ஜெர்சி ப்ரிட்ஜ்வாட்டர் பெருமாள் உணவகம். சட்னியும் சாம்பாரும் ஜொலிக்காவிட்டால் தோசை சோபிக்காது என்பதை இவர்களுக்கு சொல்ல வேண்டும். எனக்கு தெலுங்கு தெரிசிலது ஆதலால், ஃப்ரீயா விட்டுவிட்டேன்.
    • நியு ஜெர்சி கோவிலில் அபிஷேகம் என்று கேலன் கேலனாக பால் கொட்டாமல் கால் கேலன் பால், அரைக் கரண்டி தயிர் என்று சிக்கனமாக செய்கிறார்கள். சாக்கடையும் சீக்கிரம் ரொம்பி சுற்றுச்சூழலை பாதிக்காமல், கடவுள் பக்தியும் குறைக்காமல், நல்ல பேலன்ஸ். கோவிந்தா வாழ்க!
    • நியூயார்க் நகரத்தில் இரவில் யாரும் உறங்குவதில்லை. வீட்டில் சமைப்பதுமில்லை. பின்னிரவு ஒரு மணிக்கு கூட சாப்பாட்டுக் கடைகளில் க்யூ வரிசை நீள்கிறது. சாலை முக்குகளில் கூட்டம் கூட்டமாக அரட்டை. மெக்டொனால்ட்ஸ் 24 மணி நேரமும் ஃபாஸ்ட் ஃபுட் செய்து தர வைத்திருக்கிறார்கள். பூஜ்யம் டிகிரி குளிருக்காக கதகதப்பாக இறுக்கியணைத்தபடி இணைந்த உடல்களாக அறுபத்தி மூவர் விழா பவனியாக சாரி சாரியான மக்கள். இந்த டவுன்டர்ன், ரிசெஷன் என்பதெல்லாம் வால் ஸ்ட்ரீட் செஞ்ச போலி என்றார்கள்.
    • கோளரங்கம், நேஷனல் ஜியாகிரபியின் 3டி படம் போல் நான் தூங்குவதற்கு இன்னொரு இடம் அகப்பட்டது. ஃபாந்தம் அஃப் தி ஒபராவின் இன்னிசையும் கும்மிருட்டும் ஜெகஜ்ஜாலங்களும் தாலாட்டி உறங்கச் சொன்னது. ‘மகள் குறட்டை பெரிதா, என் குறட்டை பெரிதா?’ என்று சாலமன் பாப்பையா மன்றத்தில் அடுத்த தூக்கம் தொடர எண்ணம். ஆராரிரோ என்பது மேற்கத்திய உச்சரிப்பில் மறுவி ஆபரா ஆனதாக தமிழறிஞர் எவரும் நிறுவவில்லையா?
    • பாம்பே ட்ரீம்ஸ் இன்னும் ஓடுதா? ஃபாந்தம் ஆஃப் தி ஓபரா இருபதாண்டுகளாக நிறையரங்குகளாக வெற்றிகரமாக நடத்தப்படுகிறது. மெழுகுவர்த்தி நிறைந்த பேய்வீடு, ஊஞ்சல், படிக்கட்டு, பறந்து உலாவுதல், பட்டாசு வெடிகள் என்று உறக்கத்தைக் கலைக்க அரும்பாடு பட்டாலும் ஒபரா பாடல்கள் மெல்லிசையாகவே அமைந்திருக்க வேண்டும்.
    • எம்பயர் ஸ்டேட் ப்ல்டிங்கின் 83-வது மாடியை உள்ளரங்கமாக மாற்றவேண்டும். கடுங்குளிரில் புகைப்படம் சுட்டு சூடேற்ற முடியுமா?
    • பர்மா பசார் கனால் தெரு, ஏழாண்டுகளாக தரைமட்டமாகி இருக்கும் உலக வர்த்தக மைய வளாகம், இந்த ஆண்டு தரைமட்டமான வால் தெரு, தொலைக்காட்சிசூழ் டைம்ஸ் சதுக்கம், திரைப்பட தீவிரவாதிகளால் தகர்க்கப்படும் மேன்ஹட்டன் மேம்பாலங்கள், காபந்து கெடுபிடி நிறைந்த சுதந்திர தேவி, காந்தி பொம்மையும் வசிக்கும் மெழுகு காட்சியகம், ரிப்ளியின் நம்பினால் நம்புங்கள் போன்ற புனிதத்தலங்களில் காலடியும் புகைப்பட ஃப்ளாஷ் அடியும் எடுக்காமல் படேல் வால்யூ எனப்படும் தலபுராணம் நிறைவுறாது.

    வாரயிறுதி விஐபி: மணிக்கூண்டு சிவா

    1. ஒபாமாவிற்காக பிரச்சாரம் மேற்கொண்டபோது கிடைத்த ரசமான அனுபவங்களைப் பகிர முடியுமா? எந்த வீட்டிலாவது விருந்து கிடைத்ததா? ‘நாய்கள் ஜாக்கிரதை’ எச்சரிக்கை இல்லாத இல்லம்; அலாரம் அடித்த வீடு; உங்களைப் பிறிதொருவர் என்று நினைத்து குழம்பியவர்கள் — போன்ற சுவாரசியங்கள் ஏதாவது உண்டா?

    எப்படி விருந்து கிடைக்கும்?! அடி கிடைக்காமல் இருந்தால் போதாதா? கிட்டதட்ட 60 வீடுகள் வரை சென்றேன். கிட்டதட்ட 90% சதவீத மக்கள் மெக்கயன் ஆதரவாளர்கள் போல! கதவை சாத்தாத குறை! நொந்து நூலாய் போனதான் மிச்சம்! நல்ல மற்றும் புதிய அனுபவம்!

    நிறைய வீடுகளில் நாயும் மற்றும் பூனையும் இருந்தது! என் சட்டையில் ஓபாமா படத்தை பார்த்ததும் மடாரென்று ஓருவர் கதவை சாத்தியது என் மன கண்களை விட்ட அகல மறுக்கிறது!

    2. ஒபாமாவை நேரில் சந்திக்கும் வாய்ப்பு தங்களுக்கு கிடைத்ததா? புகைப்படம் எடுத்துக் கொண்டதுண்டா? அளவளாவும் வாய்ப்பு கிடைத்தால், ‘ஒரு கேள்வி கேட்கலாம்’ என்றால் அவரிடம் கேட்டுத் தெரிந்துகொள்ள என்ன வினா/பிரச்சினை/கேள்வி தங்கள் மனதில் தொக்கி நிற்கிறது?

    எனக்கு ஆசைதான்! ஓபாமாவை சந்திக்க வாய்ப்பு கிடைக்கவில்லை! எனது நகரத்து அருகே அவருடையப் பிரச்சாரம் இருந்தது! அலுவலக வேலைக் காரணமாக அவருடைய பிரச்சாரத்திற்கு போக வாய்ப்பு கிடைக்கவில்லை! அப்படி அவரை பார்க்க கிடைத்தால் அவரிடம் மிகவும் பிரியமாக கேட்க விரும்பும் கேள்வி மூன்று.

    கேள்வி ஓன்று : உங்களுக்கு அரசியல் வானில் மிகவும் பிடித்த எழுச்சி பேச்சாளர் யார்? ஏன்?

    கேள்வி இரண்டு : நீங்கள் ஏன் ஹில்லாரி கிளிண்டனை துணை அதிபராக தேர்ந்து எடுக்கவில்லை? அப்படி எடுத்து இருந்தால் உங்களுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என்று தோணவில்லையா?

    கேள்வி மூன்று : நீங்கள் அதிபர் ஆனவுடன் (ஆகிவிட்டால்) ஈழ மக்கள் மிகவும் ஏங்கும் நேசிக்கும் “தமிழ் ஈழத்தை” வாங்கி தருவீர்களா?

    3. ஒபாமாவின் திட்டங்களினுள் எந்த கொள்கை தங்களை வசீகரிக்கவில்லை? எவ்வாறு அதை மாற்றியமைத்தால் தங்களை மேலும் கவர்ந்திருக்கும்?

    அவருடைய எல்லா கருத்தகளிலும் முழு உடன்பாடு உண்டு!

    4. சாதாரணமாக மாதத்திற்கொருமுறை சீட்டாட்டம், வருடத்திற்கொருமுறை பேச்சிலர்ஸ் பார்ட்டி என்று ஊர்சுற்ற கிளம்பினாலே வீட்டில் புகம்பம் வெடிக்கும். களப்பணியினால் குடும்பத்தில் குழப்பம் வந்ததா? எவ்வாறு சமாளித்தீர்கள்?

    அரசியல் பணி / சமூகப் பணி / தமிழ்ச் சங்க பணி / வட அமெரிக்கத் தமிழ்ச் சங்க பேரவை பணி/ எல்லாம் என் மனதிற்கு மிகவும் பிடித்த விசயம். என் வாழ்க்கை துணை இவை எல்லாவற்றிக்கும் முழு ஆதரவு தருகிறார் என்றும் தருவார் என்ற நம்பிக்கை உள்ளது!

    5. 2008க்கான ப்ரைமரி தேர்தலில் எவரையாவது ஆதரித்தீர்களா? இதற்கு முந்தைய (2000/2004) அதிபர் தேர்தல்களில் பிரச்சாரத்தில் ஈடுபட்டதுண்டா? இந்த ஆண்டு ஓட்டு சேகரிக்க வீடு வீடாக சென்றதில் கைக்காசு செலவு உண்டா? அல்லது பஞ்சப்படியாக ‘ஒபாமா தேர்வுக்குழு’ ஏதாவது தருவதுண்டா?

    2008 பிரைமரி தேர்தலில் நான் ஹில்லாரியை ஆதரித்தேன், காரணம் அவர் தந்தைப் பெரியார் சொன்னப் படி பெண்கள் எல்லாப் பொறுப்பிற்கும் வர வேண்டும். மேலும் ஹில்லாரி கடந்த வந்த பாதையில் அவர் அடைந்த துயரங்கள் அதிகம்! அவருடைய கனவு நிறைவேறவில்லை என்ற வருத்தம் எனக்கும் உண்டு!

    ஓபாமா தேர்தல் பணிக்கு சென்ற பொழுது பைசா காசு செலவில்லை! மனமும். நேரமும் வேண்டும் அவ்வளவுதான்!

    மிக்க நன்றி
    மயிலாடுதுறை சிவா

    (ஓபாமாவிற்காக ஒருநாள் – பதிவு)

    Courteous Commenting

    Before you make any questionable comment to someone, you should always ask yourself three questions:

    • Is the comment sexually explicit or derogatory of a protected characteristic?
    • How well do I know the person and what he or she finds offensive?
    • Is it possible that someone might overhear me?

    If you have asked yourself the three questions and are still unsure whether a comment is appropriate or not, think about how you would answer these questions:

    1. Would I want this comment made to my spouse, significant other, or child?
    2. Would I say this if my supervisor, spouse, significant other, or child could hear me?
    3. Would I feel comfortable if my comment were replayed on the 11 o’clock news?
    4. Would I feel comfortable repeating my comment in court?