Tag Archives: madras

Low Class King? – Rajadhi Raja: Nabigalnaa Mecca; Rajannaa Pakkaa!

சினிமா போஸ்டர் இங்கே:

Nabigal-Rajadhi-Raja-Ragava-Lawrence-Shakthy-Chidmbaram-Poster-Ad-Cinema-Islam-Muslim

நபிகள்னா மெக்கா! ராஜான்னா பக்கா – தமிழ் சினிமா: ராஜாதி ராஜா


கண்டனம் அங்கே:

கூத்தாநல்லூர்: இயக்குனர் சக்தி சிதம்பரத்திற்கு சென்னை சுன்னத் வல் ஜமாஅத் கண்டனம்: “தமிழகத்தில் முன்னணி செய்தித்தாள்களில் சினிமா விளம்பரம் பகுதியில் ராஜாதி ராஜா என்ற திரைப்படத்தின் விளம்பரம் வெளியிடப்பட்டிருந்தது. அதில் மக்கா மதினா படத்தை ஒரு பகுதியிலும், அந்த திரைப்படத்தின் ஹீரோ படத்தை ஒரு பகுதியிலும் பிரசுரித்து, நபிகள்னா மெக்கா ராஜான்னா பக்கா என்ற வசனத்தையும் போடப்பட்டிருக்கின்ற அச்செய்தி (விளம்பரம்) ஒட்டுமொத்த இசுலாமியர்கள் மனதை புண்படுத்துகின்ற செயலாக உள்ளது.”

நண்பருக்கு கடிதம்

நலம். நாடலும் அதுவே.

கடிதம் பார்த்தவுடன் பதில் எழுதணும்னு தோணிச்சு. ஆனால், என்ன எழுதலாம் என்று தெரியல.

வேலையில் காய்ச்சு எடுத்துக் கொண்டிருந்தார்கள்னு ஒரு சால்ஜாப்பு சொல்லத் தோணுது. அதற்கப்புறமா இந்தியா + சென்னை போய் மூணு வாரம் ஓய்வெடுத்தப்போ கூட எழுத முடியாமப் போனதுக்கு வருத்தம் சொல்லிக்கறேன்.

மன்னிக்க 🙂

ஆணி புடுங்கறதுனு அலுத்துக்கொள்வது எங்களுக்கு கைவந்த கலை. எழுத்துத் திறமைக்கு மதிப்பில்ல என்று சலித்துக் கொள்வது படைப்பாளிக்கு வலை வந்த கலை.

சென்னையில் ஆட்டோ ஓட்டுறவனோடு பேசிக் கொண்டிருந்தேன். கார்த்தால நாலு மணிக்கு எந்திரிச்சு நாலரைக்கு வண்டிய ஆரம்பிக்கிறவன், மதியானம் ஒன்றரை மணி வரை ஓட்டுறான். அப்புறம் சாப்பாடு; கொஞ்சம் ரெஸ்ட். வெயில் தாழ, நாலு மணிக்கு மீண்டும் இன்னொரு ஷிஃப்ட் போட்டு ராத்திரி 11 மணி வரை அடுத்த ஓட்டம். அதற்கப்புறமும் உழைக்க அவன் ரெடியாம். சவாரி வருவதில்லை என்பதால் உறக்கம்.

நானா இருந்தா இந்தக் கொடுமைய நினைந்து நினைந்து உருகி நாலு பதிவு போட்டிருப்பேன். அவன் ‘சொந்த ஆட்டோ’ என்று பெருமிதம் கொண்டிருந்தான்.

அடுத்தவரை நினைத்து தன்னை மதிப்பிடுபவனுக்கு என்றுமே நிம்மதியில்லை என்பதை இன்றைய நியு யார்க் டைம்சில் பிகோ ஐயரும் சொல்லியுள்ளார். மகிழ்ச்சி என்பது காசினால் வருவதில்லையாம்.

வீட்டில் அனைவரும் நலம்.

மகளுக்கு அவ்வப்பொழுது பொது அறிவு சிற்றுரையாடுகிறேன். கொஞ்சமாய் ஆங்கிலம் சொல்லிக் கொடுக்க முயல்கிறேன். தினமும் அரை மணி நேரம் அவளுடன் செலவழிக்க முடிகிறது.

மற்ற நேரம் டிவி.

வாரயிறுதியில் காரில் பயணிக்கும் நேரம் அவள் கூட இருந்தாலும், இன்னும் சரியாக உபயோகிக்கலாம் என்னும் குற்றவுணர்வுடன் பறக்கிறது.

எம்பிஏ-விலோ எஞ்சினியரிங்கிலோ குழந்தை வளர்ப்பை கட்டாயப் பாடம் ஆக்கலாம். திருமணம் ஆவதற்கு முன் செர்டிஃபிகேட் படிப்பு முடித்தால்தான் தாலி என்றாவது வைக்க வேண்டும். சமைக்கக் கற்று கொடுத்தல் முதல் முதலுதவி மருத்துவம் வரை இதில் சேர்க்க வேண்டும்.

மனைவியுடன் சிறு சிறு பிணக்குகள். பிறகு சமாதானங்கள் என்று சௌகரியமாகவே வாழ்க்கை செல்கிறது.

சமீபத்தில் படித்த புத்தகம் எதுவும் மனதில் நிற்கவில்லை. குள்ளசித்தன் சரித்திரம், யாமம் போன்ற புகழ்பெற்ற வெகுசன நாவல்கள்; நூலகத்தில் எடுத்த சில ஆங்கிலப் புத்தகங்கள்… குறிப்பிட்டு பரிந்துரைக்க எதுவும் இல்லை.

நாளிதழ் வீட்டுக்கு வருவதை நிறுத்தி விட்டேன். இணையத்தில் மட்டுமே தினசரி செய்திகள். இங்கே பாஸ்டன் க்ளோப் திவாலாகும் நிலை.

இதுவரை இமையத்தை நான் வாசித்ததில்லை. இப்பொழுதுதான் கோவேறு கழுதைகள் நியு புக்லேன்ட்ஸில் வாங்கினேன்.

சென்ற வருடம் வரை கடல் ஷிப்பிங் இருந்தது. அமெரிக்கா வந்து சேர்வதற்கு இரண்டரை மாதம் எடுத்துக் கொண்டாலும் சல்லிசான காசு. இப்பொழுது அதை எடுத்துவிட்டார்கள். SAL என்கிறார்கள். சுண்டைக்காய் அரைப்பணம்; சுமகூலி முக்காப் பணம் கதை. 4000 ரூபாய்க்கு புத்தகம். அனுப்ப 5000த்திற்கு மேல் எடுக்கிறது! ஸ்பீட் போஸ்ட்டில் எட்டாயிரத்து சில்லறைதானாம்.

இன்னொருத்தர் பார்க்க புத்தகங்களை எடுப்பது எனக்கு ஒவ்வாதது. இந்த முறை உண்மைத் தமிழன அகப்பட்டு விட்டார். சொல்லவும் முடியாமல் நெளியவும் முடியாமல், படித்து, புரட்டி, அலசி தீர்மானித்தேன்.

நியூ புக்லேன்ட்சுக்கோ கடையை மூடும் நேரம். ஒரு நாள் கூத்துக்காக தாமதமாக திறந்து வைத்திருந்தார்கள்.

அங்கே ஒ ஏ கே தேவரின் மகன், சீரியலில் நடிப்பவர் வந்திருந்தார். குழந்தை வளர்ப்பு + பராமரிப்பு குறித்த புத்தகம் வாங்கிச் சென்றார்.

இருக்கும் புத்தகங்களை படித்தால்தான் புதியது வாங்குவது என்பது இனி மசான வைராக்கியம் அல்ல. வீட்டில் குவிந்திருக்கும் நூல்களை ஒரு முறையாவது அலசி ஆராய்ந்து விமர்சனமோ பதிவோ இட்ட பிறகுதான் இனி அடுத்த வாங்குதல் வைபவம்.

நியூ புக்லேன்ட்ஸ் முழுக்க நிறைய தெரிந்த, அறிந்த முகங்களின் புத்தகங்களைப் பார்க்க மகிழ்ச்சியாகவும் பொறாமையாகவும் இருந்தது. இத்தனை பேரை ஒரளவாவது நேரடியாக அறிந்திருக்கிறோமே என்பதில் சந்தோசம். இவர்கள் எல்லாம் எழுதும்போது நமக்கு எழுத வாய்க்க வகையில்லையே என்பதில் திறமை மீது ஏக்கம்.

எனக்கு இந்த வருட கோட்டா முடிந்தது. அடுத்த வருடம் பிழைத்துக் கிடந்தால் ஜனவரியில்தான் சென்னை செல்ல வேண்டும் என்று ஆசை. அது கிடக்கிறது ஜனவரி 2011! பார்ப்போம்.

விடுமுறையில் சொந்த ஊர் சென்று வந்தால் புத்துணர்ச்சியாகத்தான் இருக்கிறது. ‘என்னத்த செஞ்சு… என்னத்த பண்ணி’ என்று கன்னையாவாக அமிழ்ந்திருக்கும் மனசு புத்துணர்ச்சி அடைய வைக்கிறது. சொந்த பிசினெஸ் துவங்கணும், ஏதாவது புதுசாக் கத்துக்கணும், மனைவியை இன்னும் கொஞ்சம் ஒழுங்கா நேசிக்கணும், குழந்தைய மதிக்கணும் என்றெல்லாம் தோன்றுகிறது.

சொந்த இடம் வந்தவுடன் வேதாளம்… முருங்கை மரம்…

சீக்கிரம் ரிடையர் ஆகணும். இல்லை… கொஞ்சம் பெரிய லீவாப் போட்டு ஊர் நெடுக சுற்றிவிட்டு அலுத்தபிறகு மீண்டும் வேலைக்கு திரும்பணும்.

நிறைய புலம்பிட்டேன்.

யாரைப் பார்த்தாலும் இப்படி அட்வைஸும் ஆலோசனையுமாக சொற்பொழிவதை நிறுத்த வேண்டும் என்பதை திருப்பதியில் ஒரு மருந்துக்கடைகாரர் சொல்லிக் கொடுத்தார்.

எனக்கு தொண்டையில் கிச்கிச். ஹால்ஸ் எடுத்தோம். அதன் கூட இன்னொரு பெயர் தெரியாத வஸ்து தனிக்கட்டையாக இருந்தது. விக்ஸ் போல் இருமல் மாத்திரை என்று எடுத்துப் பார்த்தேன்.

அதுவோ, சப்புகிற மிட்டாய் அல்ல. கடித்துத் துவைக்கும் இனிப்பு மருந்து. வைத்துவிட்டேன்.

அண்ணன் பையனுக்கு அது பிடிக்கும் என்று நச்சரித்துக் கொண்டிருந்தான்.

‘சின்னப் பயன் சார்… கேட்கிறத வாங்கிக் கொடுக்காவிட்டால் துவண்டு போயிடுவான்; பிஞ்சு வெம்பிடும்’ என்று கருத்து சொல்லி தள்ளிவிடப் பார்த்த ஓனரை பொரிந்து தள்ளியவுடன் தான் இன்டெர்னெட்டில் அனானிமஸ் வசதி எம்புட்டு பெருசு என்று புரிந்து கொண்டேன்.

வாழ்த்துகளுடன்,
அடியேன்

சென்னை இராஜாங்கம்: V

அவ்வப்போது அமெரிக்காவில் விழும் ஒரு இன்ச் snow, ஒன்றரை மில்லிமீட்டர் பனியை, வீட்டு வாயிலில் இருந்து தெருவுக்குத் தள்ளிவிடுவதற்கே கண்களாலும் மூக்காலும் அழுபவன் நான். மிக மிக எளிமையாக வாசலைத் தெளித்துக் கோலம் போடுவது போன்ற கைங்கர்யம் அது.

குட்டி எவரெஸ்ட் மாதிரி இருக்கும் மணற்குவியலை, தலைக்கு மேல் இருக்கும் குப்பை வண்டியில் shovel செய்தவரைப் பார்த்தவுடன் மனம் நாணிக் கோணியது. சர்வ சாதாரணமாக, பகல் 41 டிகிரி வெயிலில் தூக்கிப் போட்டார். நீல்மெட்டல் சென்னையை சுத்தமாக மாற்றியுள்ளது.

முப்பது வருடம் முன்பு ரூபவாஹினிக்காக இலங்கை ஆண்டெனாக்கள் மொட்டை மாடிகளை நிறைத்திருக்கும். காக்கைகளும் அவற்றை ஆசையாகத் திருப்பி வைக்கும். ராஜபக்ஸே தமிழ்த் தொலைக்காட்சியை நிறுத்தி விட்டாரா என்று நாராயணனை விட்டு விசாரிக்க சொல்லவேண்டும். இன்றைய மாடிகள் முழுக்க சாடிலைட் டிஷ் ஆக்கிரமிப்பு. காக்கைகளும் காணாமல் போய்விட்டது. வேடந்தாங்கலிலாவது இருக்கிறதா என்று ப்ளாஸ்டிக் பைகளில் சோறு கட்டி சென்று பார்த்துவர வேண்டும்.

ஆட்டோக்காரர்கள் மெமரி கார்ட் கொண்டு பாட்டு போடுகிறார்கள். ஆயிரம் ரூபாய் கொடுத்தால் கிளம்பிய இடத்தில் இருந்து சேரும் இடத்திற்கே கேட்கும் அலறலுடன் கூடிய எம்பி3 ஒலி. வேண்டிய பாடல்களை ஐபாட் shuffle ஆக மாற்றும் வசதி. பண்பலை என்னாச்சு என்னும் கேள்விக்கு ‘போயே போச்சு‘ங்கிறார்.

‘ஏன்’?

கேள்விக்கு பத்ரி மொட்டை மாடியில் பதில் சொன்னார்.

‘எஃப்.எம். ரேடியோக்கள் செய்திகளை ஒலிபரப்ப முடியவில்லை. ஆல் இந்தியா ரேடியா தவிர எவரும் நேரடி நிகழ்வுகளை உடனுக்குடன் சொல்லமுடியாது! ஐ.பி.எல் மாதிரி எத்தனையோ லைவ் விஷயங்கள் வானொலிக்கு வரவேண்டும்’.

மோகம் முப்பது தபா; ஆசை அறுபது ராவு என்பது போல் சிட்டி சென்டரும், எக்ஸ்டென்ஷன்களில் உலவும் ஸ்பென்சரும் பல்கிப் பெருத்தபின் சென்னை யுவன்களுக்கும் காரிகைகளுக்கும் மால் அலுத்துப் போய்விட்டது. அல்லது ஜாகையை மாற்றிக் கொண்டுவிட்டார்கள்.

இன்றளவிலும் ‘சூடிதாரில் நான் வருவேன். சல்வார் கமீஸை நான் மறவேன்’ என்று மதுரை சோமுவாகிறார்கள். லுங்கியைப் போன்ற வண்ணமயமான காற்றோட்டமான ஸ்கர்ட், அதிர்ச்சி மதிப்பீடாக தாவணி, நாகரிகமும் குறையாமல் கற்பும் காக்கும் முக்கால் பேன்ட் எதுவும் காணோம். அதெல்லாம் வந்தால் ‘ராம சேனா’வும் பாரதிய ஜனதாவும் வந்துவிடும் என்னும் பயமோ!

‘கடந்த 48 மணி நேரமாக பெண்களுடன் கலந்துரையாடி, பின்தொடர்ந்து “What women wantனு புரிந்து கொள்வதிலேயே நேரம் போவதாக’ சலித்துக்கொண்டவரிடம்தான் விசாரிக்கவேண்டும்.

சென்னை மெரினா ராஜாங்கம் – IV

ஊக்கம் கொடுத்த பதிவு: பா ராகவன் பேப்பர் » நடந்த கதை

Posters-Marina-Beach-Chennai-Madras-Sightseeing-Child-Laborசென்னை எட்வர்ட் எலியட்ஸ் கடற்கரையில் முன்பெல்லாம் மணல் இருக்கும். இப்பொழுது சிறிய மீன்களும், செதில்களும், இருக்கின்றன. மணல் வீட்டுக்கு பதிலாக leftover மீன் குழம்பு வைத்து சிறார் விளையாடுவார்.

காலையில் தெரிந்த முகத்தினரின் அணிவகுப்பு சொல்ப அதிகம். தாமதமான ஏழரைக்குக் கூட சாருஹாஸன், செய்தி வாசிப்பாளர், நெடுந்தொடர் தம்பதியினர் கூட்டம்.

கூட்டுத்தொழுகை, பிரார்த்தனை க்ளப், அரசியல் பேச்சுக்கு வரும் லாரிக் கூட்டம் போல் ஒரு சேர உடற்பயிற்சி பாவ்லா காட்டுவது தமிழருக்கு மனமகிழ்வு தருகிறது. முகமன் கூறிக்கொள்கிறார்கள். சேர்ந்து இளநீர் சாப்பிடுகிறார்கள். நேற்றைய செய்தியைத் தாங்கிய ‘தி ஹிந்து’வை உரையாடி மகிழ்கிறார்கள்.

ஃபேஸ்புக், ட்விட்டர், குறுஞ்செய்தி என்று குறுகி, தொடர்பை கைவிட்ட தலைமுறை அல்ல அவர்கள். கூட்டுப்புழு சமுதாயத்தில் நேரடி சந்திப்பை மதிப்பவர்கள்.

Parthasarathy-Temple-Triplicane-Entrance-Railway-Station-Chennai-Beach-Mareenaமதியம் மனமகிழ் மன்றத்தில் கேரம், மாலை கன்ட்ரி க்ளபில் ஐபிஎல்லுடன் ராயல் சேலஞ்சர் என்று வழக்கப்படுத்திக் கொண்ட உயர்வட்ட கூட்டம். காலையில் ஐஸ் ஹவுசில் இருந்து லைட் ஹவுஸ் வரை நடந்துவிட்டு பதநீர், இளநீர், வறுகடலை, தர்பூசணி, கிர்னிப்பழம் என்று அப்பிடைசர் அருந்தி, ராதாகிருஷ்ணன் சாலை சரவண பவனில் மசாலா தோசையும் பூரி மசாலாவும் அடித்து துவம்சிப்பவர்கள்.

பாரம்பரிய லுங்கி முதல் மாறனின் அதிகாரபூர்வ ஆடையான பருத்தி அரைக்கால் சட்டை வரை எல்லாவிதமும் பார்க்கக் கிடைக்கிறது. தொடையோடு இறுக்கமான ஷார்ட்ஸ், டெரிலின் ஷர்ட் + முழுக்கால் சட்டை என்று டை கட்டாத குறையோடு தங்கள் நாகரிக அனுபவத்தை பறை சாற்றுபவர் அன்றாட வரவு போல் அத்யந்தமாக சூரிய நமஸ்காரம் செய்கிறார். குர்தி & நீல ஜீன்ஸ் அணியும் ஒருத்தரே ஒருத்தரும் வந்திருந்தார்.

Classical-Tamil-Research-Scholars-Institute-Languagesபெண்களுக்கு 33% சதம் வேண்டாம். 3% கூட தேறமாட்டார்கள். ஓடுபவர்கள் 1%. ஓடுபவர்களை விட குதிரை போலீஸ் அதிகம். பீச் ரோடில் இருந்தே பார்த்தசாரதி அழைக்கிறார். கூடிய சீக்கிரமே மேல்மருவத்தூர் சக்தி பீடம் பிரான்ச், சத்யசாய்பாபா சத்சங், காஞ்சி ஜெயேந்திரர் மட கிளை எல்லாம் அலங்கார வளைவுடன் அரோகரா போட வைக்கலாம்.

தம்பதியினருக்கு பாந்தமான இடம். பிரச்சினைகளை மனம்விட்டு பேச காலைப் புத்துணர்ச்சியுடன் தனிமையும் கிடைக்கும் இடம். கூட்டுக் குடும்பத்திலிருந்து தப்பிக்க தினசரி தேனிலவு தரும் தலம். நிறைய நடுத்தர வர்க்கத்தினர் பயன்படுத்திக் கொண்ட மாதிரிதான் தெரிகிறது.

அமெரிக்காவின் கடற்கரையை எதிர்நோக்கும் சாலைகளில் பல்வேறு பொருளை விற்கும் பேரங்காடி வணி வர்த்தக மையங்கள் நிறைத்திருக்கும். இல்லையென்றால் விநோதமான வடிவமைப்புடன் ஏதாவது பெருநிறுவனம் 99 வருட குத்தகை எடுத்து 98வது மாடியில் போர்ட் மீட்டிங் நடத்திக் கொண்டிருக்கும். அதுவும் லேது என்றால், மடோனாவும் மரியா கரேவும் குடித்தனம் செய்யாமல் காலியாகப் பூட்டி வைத்திருக்கும் மாட மாளிகை அமைந்திருக்கும். இங்கே அரசினர் கட்டிடங்கள், முக ஸ்டாலின் புகுந்து தடுத்தாட்கொண்ட இராணி மேரி கல்லூரி, மாணவர்களே பூட்டிக் கொள்ளும் பிரெசிடன்சி காலேஜ். தொட்டுக்க அரசினர் முன்மாதிரி (மாடல்) மேல்நிலைப் பள்ளியும் உள்ளது.

கோவிலுக்கு சென்றால் இதே நடை பயிலலாம். இன்னும் உக்கிரமாக, வேகமாக புண்ணியம் வரவழைக்கும் வீரியத்துடன் சுழலலாம். ஆனால், சுலோகமோ, நாமாவளியோ முணுமுணுக்க வேண்டும். நாலாவது வெளிப்பிரகார சுற்றுக்குப் பின் ‘என்ன வேண்டுதலோ?’ என்று மூணாம் வீட்டு பச்ச கேட் மாமி கண்ணால் விசாரிப்பாள். எட்டாவது சுற்று முடிந்தவுடன் ‘என்னடீயம்மா பிரச்சினை?’ என்று நேரடியாகவே பிக்கல் பிடுங்குவாள்.

பீச்சில் அதெல்லாம் கிடைக்கமாட்டாது.

சென்னையின் முக்கிய சாலைகளில் நடக்க இயலவில்லை. எப்பொழுதுமே பாதசாரிகளுக்கு முக்கியத்துவம் தராத நகரம். நடராசா சர்வீஸில் செல்பவர்களை கீழே வீழ்த்துவது இருசக்கர வாகனவோட்டிகளின் முக்கிய கடமை. இப்பொழுது அது நாற்சக்கர காலம். ஹோண்டா சிடியும் டொயோட்டா இன்னோவாவும் ஸ்கோடாவும் முட்டி மோதி விளையாடும் 99.999% ஸிக்ஸ் ஸிக்மா சென்னையில் இருந்து தப்பிக்க பாதுகாப்பான இடம் மெரினா வாக்கிங்.

H1N1 (Swine) Flu? Are you in Danger? Will you die?

Mottai Maadi Info Meet on Kizhakku (NHM) Publishers: H1N1 Flu (Swine Virus)

Mottai Maadi Info Meet on Kizhakku (NHM) Publishers: H1N1 Flu (Swine Virus)

பயப்படுணுமா?

எனக்கு பேக்டீரியாவுக்கும் வைரசுக்கும் வித்தியாசம் தெரியாது.

விக்சனரி அகராதிப்படி Bacteria என்றால் நுண்ணுயிரி; Virus என்றால் நோய்க்கிருமி.

ஸ்வைன் காய்ச்சல் என்று இரண்டு மாதம் முன்பு அழைக்கப்பட்டு இன்றளவில் எச்1என்1 என்று ஏதோ அமெரிக்க விசா போல் உருமாற்றம் கண்டிருக்கும் பன்றி ஃப்ளுவிற்கு நீங்கள் பயப்பட வேண்டுமா?

  • நூறு டிகிரி தாண்டும் காய்ச்சல்
  • தொண்டை அரிப்பு
  • ஜலதோஷம், மூக்கடைப்பு

போன்றவை உங்களுக்கு இருந்தால் பன்றிக்காய்ச்சல் வந்திருக்கிறதா என்பதை அறிய சோதனை செய்யவேண்டும். இந்தியாவில் அந்த சோதனைச் சாலை தற்போதைக்கு இரண்டே இடத்தில்தான் உள்ளது: மும்பை அருகே புனே மற்றும் தலைநகரம் எயிம்ஸ், புது டெல்லி.

உங்களின் சாம்பிள் அங்கே பரிசோதனைக்குச் சென்றபின் 48 மணி நேரம் கழித்தே, உங்களுக்கு பன்றிக் காய்ச்சல் உள்ளதா என்பதை ஓரளவு தெரிந்துகொள்ள முடியும். அதற்குள் பலகீனமானவர் என்றால் இறவனடி போய் சேர்ந்திருப்பார்.

எப்படி வரமால் தடுக்கலாம்?

அமெரிக்க துணை ஜனாதிபதி பிடென் வாக்குப்படி, வாசற்படியைத் தாண்டக் கூடாது. எங்கேயாவது கோவில், கோர்ட்டு, கோயிஞ்சாமி கூட்டம் சென்றாலும் பீடிக்கும்.

வருடாவருடம் அமெரிக்காவில் ஃப்ளூ எனப்படும் காய்ச்சலுக்கு இறப்பவர்களின் எண்ணிக்கை: முப்பத்தாறாயிரம் என்பார்கள் சிலர் (36,000 Americans died of Flu related causes each year during the 1990’s.). ஆனால், வழுக்கி விழுந்து இறந்தால் கூட மாரடைப்பு என்று வகைப்படுத்தும் வகையறா என்கிறது CDC – Influenza (Flu) | Q & A: 2007-08 Flu Season

  • கை சுத்தம்: டெட்டாலோ, மெடிமிக்ஸொ… சோப் போட்டு கையை அவ்வப்போது அலம்பி சுத்தாமாக்கிக் கொள்ளுங்கள். மிக முக்கியமாக எதையாவது உண்பதற்கு முன்.
  • சளி நீக்கி: கைகுட்டை பழைய ஹைதர் காலத்து நாகரிகம். க்ளீனெக்ஸ் போல் பேப்பர் துண்டு கைவசம் வைத்துக் கொள்ளுங்கள். தும்மல் வந்தால் அதைப் பயன்படுத்தவும். உடனடியாக குப்பையில் போடவும்.
  • துஷ்டனைக் கண்டால் தூரவிலகு: எவருக்காவது உடம்பு கொதிக்கிறது, காய்ச்சல் என்றால் காத தூரம் ஓடிப் போவிடுங்கள்.
  • அடைந்து கிடக்கவும்: விமானம், இருவுள் பயணம், பேருந்து சவாரி, ஆலயம், அலுவலகம், பள்ளிக்கூடம் போன்ற மூடிய பிரதேசங்களைத் தவிர்க்கவும்.
  • மேலும் விவரங்கள்

சுவாரசியாமான மறுமொழிகளுக்கும் அறிவிப்பும்: பேப்பர் » கிழக்கு மொட்டைமாடிக் கூட்டம்

வயது என்ன?

பின் பதின்வயது, இருபதுகள் என இந்த வைரஸ் இளைஞர்களையே பாதிக்கிறது. இயல்பாக இவர்களுக்கு நோய் எதிர்ப்புத் திறன் சிறப்பாக இருக்கும். 50 வயதுகளில் இருப்போரை H1N1 இன்ஃப்ளுயன்சா குறைவாகவே தாக்கியுள்ளது.

தொற்றுநோய் எச்சரிக்கை

உலக சுகாதார நிறுவனம் (WHO) எச்சரிக்கை நிலையை 5-6 நிலைகளுக்கு உயர்த்தியுள்ளது. 1968 ஆம் ஆன்டுக்குப் பிறகு, ப்ளூ காய்ச்சலுக்காக விடுக்கப்படும் அதிகபட்ச எச்சரிக்கை இது. உலகின் ஒரு பகுதியில் உள்ள இரண்டு நாடுகள், மற்றொரு பகுதியில் ஒரு நாட்டில் நோய் பரவினால் தொற்றுநோய் எச்சரிக்கை விடுக்கப்படும்.

  • நிலை 1-3: பெருமளவு விலங்குகளிடமும் சில மனிதர்களிடமும் பாதிப்பு
  • நிலை 4: மனிதர்களிடையே தொடர்ந்து பரவிக் கொண்டிருப்பது
  • நிலை 5-6 / தொற்றுநோய்: மனிதர்கள் இடையே மிகப் பரவலாகத் தொற்றிய நிலை.
  • உச்சத்துக்குப் பின்: மீண்டும் மீண்டும் தொற்றுவதற்கான வாய்ப்பு
  • தொடர் தொற்றுநோய்: பருவகாலத்துக்கு ஏற்ப நோய் தொற்றுவது.

தடுப்பு மருந்து கிடையாது

இப்போதைக்கு டாமிஃப்லூவைப் போல், தடுப்பு மருந்துகளுக்கு கட்டுப்பட்டு வருகிறது. ஆனால் இது விரைவிலேயே மருந்துக்கு கட்டுப்படாமல் போகலாம். இன்னும் பயங்கரமானதாக உருமாறலாம்.

தடுப்பு மருந்துகள் உருவாக்கப்பட்டாலும் கூட அதன் தடுப்புத் திறன், உரிய பாதுகாப்புத் திறனை பரிசோதிக்க பல்லாண்டு காலம் ஆகும்.

தடுப்பு மருந்து கிடைத்தாலும், வளரும் நாடுகளுக்கு அது போய்ச் சேருமா?

விரைவில் காலத்துக்கு ஏற்ப பரவும் ஃப்லூ காய்ச்சல் உருவாகலாம்.

இதுவரை சேதம்

டபிள்யு.எச்.ஓ அறிக்கைப்படி, 29 நாடுகளில் உள்ள 3,440 ஆய்வுக் கூடங்களில் 48 இறப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. இது இன்னும் பரவினால், வேறு வைரஸ்களுடன் கலந்து மேலும் அதிகமாகப் பரவி, இன்னும் மோசமான ஒன்றாக மாறுவதற்கு அதிக வாய்ப்புள்ளது.

தெளிவாக கணிக்க இயலாததாகவும் தொடர்ச்சியாக மாறிக் கொண்டிருப்பதாகவும் இந்த வைரஸ் இருக்கிறது என்று வொர்ல்ட் ஹெல்த் ஆர்கனைசேஷன் தெரிவிக்கிறது. எனவே அதன் தற்போதைய வடிவம் பறவை, பன்றி, மனிதர்களின் மரபணுக்களைப் பெற்றுள்ளது.

இது தொற்றுநோயாக மாறலாம்.

ஏன்? எதற்கு? எப்படி?

H1N1-Avian-Bird-Flu-Pigs-Swine-Influenza-Health-Medical-Doctor

சில தகவல் உதவி: இந்தியா டுடே

கைசிக நாடகம்: சென்னை ராஜாங்கம் III

ஒளிப்படங்கள், விழியம்: Kaisika Purana Nadagam: Nambaduvaan Sarithiram by Prof. Ramanujam

வரலாறு + சரித்திரம்: கைசிக புராண நாடகம் :: நம்படுவான் சரிதம்

தமிழ் உலா – என்றென்றும் அன்புடன், பாலா: திருக்குறுங்குடி கிராமமும் ‘கைசிக’ நாட்டிய நாடகமும்

சில குறிப்புகள்

  • அழிந்து போகும் பழங்கால கலைவடிவம்: முப்பாட்டனுக்கு முந்தைய காலத்து பழக்கம். தேவதாசியர்கள் அபிநயித்து நடத்திக் காட்டிய கலை வடிவம். இன்று முனைவர்களும் பேராசிரியர்களும் நாடக ஆர்வலர்களும் வைணவப் பெருந்தகைகளும் ஒன்று சேர்ந்து மறுபடி மீட்டெடுத்து இருக்கிறார்கள்.
  • நடனம் + இசை + செவ்வியல்: எண்பது வயது தேவதாசியிடம் இருந்து செவிவழிப் பாடல்களை செம்மையாக்கி, விடிய விடிய பன்னிரெண்டு மணி நேர கூத்து வடிவத்தை இரண்டு மணித்துளிகளாக சுருக்கி, பொருத்தமான அரங்க வல்லுநர்களைக் கோர்த்து, நடிக்க வைத்து, முற்றிலும் இலவசமாக பரவசமாக்கினார்கள்.
  • தேவதாசி + பெண்ணியம்: ஆண் வேடத்தையும் பெண்களே ஏற்று நடிக்கிறார்கள். நாயக நம்படுவானுக்கும் நாராயணனுக்கும் நம்பிக்கும் பெண்களே ஹீரோவாக வேடம் கட்டுகிறார்கள். வாழ்வில் அனுதினமும் அரக்கர்களை தரிசிப்பதால், வில்லன் பிரும்ம ராக்கதனுக்கு, அசல் ஆண் அரங்கேறுகிறார்.
  • விஐபி: ‘கண்டு கொண்டேன்’² வில்லி அனிதா ரத்னம், கூத்துப்பட்டறையின் நிறுவனர்களில் ஒருவரான நா.முத்துசாமி, எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி, நாடகத்தை உருவாக்குவதில் பெரும்பங்கு வகித்த பேராசிரியர் ராமானுஐன், இராமானுஜர் ஆவணப்படம் உண்டாக்கிய அண்ணாமலை, ‘சென்னைஆன்லைன்.காம்’ அண்ணாகண்ணன் என்று பலரையும் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. விரிவாக கானா பிரபா மாதிரி அளவளாவ ஆசை மட்டுமே; சரக்கில்லை.
  • நாடக விமர்சனம்: நடுவில் ஜெட்-லாக் பழிபோடலினாலோ அல்லது ‘அகோ வாரும் பிள்ளாய்’ உரையாடலினாலோ அல்லது ஒரே மாதிரி அபிநயப் பாடல்களினாலோ கொஞ்சமாய் கண் சொருகியது உண்மை.
  • எது தூள் + ரசனை ஜோர்?
    • ஜனரஞ்சகமாக பல்வேறு கதாபாத்திர அறிமுகங்கள் எவ்வாறி மேடை ஏறும், எங்ங்னம் கொணரப்படும் என்பதை சொன்னார்கள்.
    • வில்லன் பிரம்மராஷஸன் தொம் தொம்மென்று Irish ‘tap dancing’ போல் அமர்க்களமாய் காலடி ஓசையில் மிரட்டி உருட்டினார்.
    • கருட வாகனத்துடன் புடைசூழ பெருமாள் தோற்றம் நாடகத்தின் உச்சகட்டம்.
    • மூன்று மணி நேரம் இடையறாது தெருக்கூத்து கிராமியக் கோவிலுக்கே அழைத்துச் சென்ற குரல்வளமிக்க இசைப்பாட்டு மிகவும் குறிப்பிடத்தக்கது.

கைசிக புராண நாடகம்

ஒளிப்படங்கள், விழியம்: Kaisika Purana Nadagam: Nambaduvaan Sarithiram by Prof. Ramanujam

திருக்குறுங்குடி திரு வடிவழகிய நம்பித் திருக்கோவில் கைங்கர்யமான

கைசிக புராண நாடகம்

பிறவித்துயரிலிருந்து ஈடேற எளிதான வழி எது எனப் பூமாதேவி கேட்க, இசைத்தொண்டே வழி என்று ஸ்ரீவராகப் பெருமான் திருவாய் மலர்ந்தருளியது கைசிக புராணம். இதைக் கேட்ட பூமாதேவி ஆண்டாளாக அவதரித்து பூமாலையுடன் பாமாலையும் சூட்டி திரு அரங்கனை மணந்தார்.

ஸ்ரீ வராக புராணத்தில் உள்ள இந்த புராணத்தை கார்த்திகை மாதம் சுக்லபட்ச கைசிக ஏகாதசி முடிந்த துவாதசி காலையில் வைணவக் கோயில்களில் ஸ்ரீ பராசர பட்டர் வியாக்கியானத்துடன் பாராயணம் செய்து வருகிறார்கள். கைசிக ராகத்தின் பலனைச் சிறப்பித்துக் கூறுவதால் கைசிக புராணம் என்று பெயர் பெற்றது.

திருநெல்வேலி மாவட்டத்தில் நாங்குநேரிக்கு 10 கி.மீ. தொலைவில் உள்ள மகேந்திர கிரி அடிவாரத்திலுள்ள திருக்குறுங்குடியில் நம்படுவான் சரிதம் நடைபெற்றதால் அப்பதியிலுள்ள வடிவழகிய நம்பி சன்னதியில் கைசிக ஏகாதசியன்று இந்நாடகம் நடித்துக்காட்டும் கைங்கர்யமாக நடைபெற்று வருகிறது.

மீட்டுருவாக்க முயற்சி

ஐநூறுக்கும் மேலான ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த நாடகம் அதன் முழுவலிமையையும் இழந்து நின்றது. சங்கரக்கம்பர், நாராயணன், குறுங்குடி காந்தம்மாள், நம்பி போன்ற பாரம்பரியக் கலைஞர்களின் கைங்கர்ய உள்ளம் ஓரளவேனும் நடைபெறும் அளவில் இம்மரபைக் காத்து வந்தது.

திருக்குறுங்குடி நம்பி திருக்கோவில் பொறுப்பில் டிவியெஸ் (TVS) குடும்பத்தினர் பங்கேற்றதும் அக்குடும்பத்தில் ஒருவரான நாட்டிய வல்லுநர் திருமதி. அனிதா ரத்னம் அவர்களது உதவியும், முயற்சியும் இந்நாடகத்துக்கு மீண்டும் புத்துயிர் கொடுத்தது.

திரு நாராயண அய்யங்காரின் தத்துவார்த்த ஆலோசனை, பேராசிரியர் சே இராமானுஜத்தின் ஆய்வு மற்றும் வழிகாட்டல், கலைமாமணி பா. ஹேரம்பநாதனின் வடிவாக்கம் ஆகியவை நம்பி திருக்கோவிலில் பத்து ஆண்டுகளாக இத்திருசேவையைத் தொடர வழி செய்துள்ளன.

நம்படுவான் சரிதம்

பாணர் குலத்தில் பிறந்த சிறந்த வைணவ பக்தரான நம்படுவான் தினசரி இரவில் திருக்குறுங்குடி நம்பியை இசையால் பாடிப் புகழ்வதை தமது கைங்கர்யமாகக் கொண்டவர்.

கார்த்திகை மாதம் சுக்கில பட்சம் கைசிக ஏகாதசியன்று நம்படுவான் உண்ணாது உறங்காது விரதங்காத்துப் பெருமாளை சேவிக்க இரவில் வரும்போது, பிரம்ம ராக்ஷசன் ஒருவனால் வழி மறிக்கப்படுகிறார்.

கொன்று தின்று பசி தீர்த்துக் கொள்ள வந்த அந்த ராஷசனிடம், தான் பெருமாளை சேவித்து விட்டுத் திரும்பி வருவதாகப் பல சத்தியங்கள் சொல்லியும் ஏற்காதபோது, பெருமாள் மீதே சத்தியம் செய்து அனுமதி பெறுகிறார்.

பெருமாளைப் பாடி பிரியாவிடை பெற்றுத் திரும்பும் போது வடிவழகிய நம்பியே கிழவராக வந்து சோதிக்க எண்ணி, இராட்சனிடம் திரும்பிப் போகாமல் தப்பித்துச் செல்லும்படி நம்படுவானிடம் கூறுகிறார். ஆனால் நம்படுவானோ சத்தியம் தவறாமல் இராஷஸனிடமே மீண்டும் வருகிறார்.

ஆனால் ராக்ஷஸன் அவரை உண்பதற்குப் பதில் அவரது புண்ணியத்தில் குறிப்பாக கைசிக ராகத்தில் பெருமாளைப் பாடிக் கிடைத்த புண்ணியத்தில் எள்ளளவாவது தருமாறு கெஞ்சுகிறான். அந்தணர் காலத்தில் சோம சர்மாவாக பிறந்த அந்த இராக்கதன் அகந்தையால் யாகத்தில் மந்திரத்தைத் தவறாகச் சொன்னதால் இராட்சனாக சபிக்கப்பட்டான்.

சாப விமோசந்த்திற்காக நம்படுவானின் கைசிக ராகப் புண்ணியத்தைப் பெறக் காத்திருப்பதாகக் கூறி நம்படுவானின் அடிகளில் விழுந்து வணங்குகிறான். நம்படுவானும் இரக்கப்பட்டு தனது பாட்டின் பலனைத் தந்து அவனுக்கு விமோசனம் கொடுத்து நம்பியின் திருவடிகளை அடையச் செய்தார்.

மீட்டுருவாக்கத் திருத்தொண்டும் பங்கேற்பும்

அரங்கில்
நம்படுவான் கைவாரம்: கலைமாமணி குரு பி ஹேரம்பநாதன்
நம்படுவான்: முனைவர் சுமதி சுந்தர்
திருமதி எம் ராஜகுமாரி
பிரம்மராட்சஷன்: திரு எஸ். கோபி
நம்பிக்கிழவர்: குமாரி எம்.ஏ. அருணோதயம்
துணைப்பாத்திரங்கள்: குமாரி. தமிழ்மதி, குமாரி ஜோதி

இசையில்
நட்டுவாங்கம்: திரு எச் ஹரிஹரன்
பாட்டு: திருமதி எஸ் லலிதா
திருமதி எஸ் பானுமதி
குழல்: திரு என் கிரீஷ்குமார்
மிருதங்கம்: திரு என் ஆர் மணிகண்ட தீட்சிதர்
நாதஸ்வரம்: திரு அருண்குமார்
தவில், சுத்தமத்தளம்: திரு டி செந்தில்குமார்

வல்லுநர் ஆலோசனையில்
தத்துவம்: திரு உ.வே திருநாராயண ஐயங்கார்
அரங்க இயல்: கலைமாமணி நா முத்துசாமி
பனுவல்: முனைவர் ம வேலுசாமி
இசை: பேராசிரியர் ம வைத்தியலிங்கம்
முனைவர் அரிமளம் பத்மனாபன்

ஆவணப்படுத்துதலில்
முனைவர் கு. முருகேசன்
திரு எஸ் ஏ கன்னையா

நிர்வாக ஒருங்கிணைப்பு: திரு ஆர் நாகராஜன்
திரு ஜி ராஜமாணிக்கம்
உதவி: திரு ஜி விஜயகுமார்

வடிவமைப்பு: கலைமாமணி பி ஹேரம்பநாதன்

வழி நடத்துநர்: பேராசிரியர் சே இராமானுஜம்

கலையாக்க ஆலோசகர் மற்றும் தாளாளர்: கலைமாமணி திருமதி அனிதா ரத்னம்

தாளாண்மை: ‘அரங்கம்’ அறக்கட்டளை, சென்னை.

சென்னை ராஜாங்கம்

துக்ளக் சோவிற்கு மிகவும் பிடித்தமான மயிலை ஸ்ரீனிவாசர் கோவிலுக்கு பெருமாள் அழைத்திருந்தார். பிரும்மோத்ஸவ அழைப்பிதழும் கொடுத்தார். புழு, பூச்சிக்கும் அடைக்கலம் உண்டென்பதை, நரசிம்மர் மேல் கரப்பான் பூச்சி(கள்?) ஊர்வதை வைத்து உணர்த்தினார்.

முன்னுமொரு காலத்தில் ஏர் இந்தியாவில் பயணம் சென்றபோது நட்ட நடுவில் ஒரேயொரு வெள்ளித்திரை. அதில் ஒரேயொரு படம். அந்தப் படத்தில் டயான் லேன் (Diane Lane) முயங்குவதைப் பார்த்து, பக்கத்து இருக்கை பாப்பா ‘அங்கிளும் ஆன்ட்டியும் ஏன் அம்மணத்தோண்டியா சண்ட போடறாங்க?’ என்று கேட்க வைத்தார்கள்.

தோஹாவில் இருந்து கிளம்பிய கத்தார் விமானத்தில் வந்த ‘வாரணமாயிரம்’ மகா சைவம். ‘அஞ்சல… அஞ்சல’ பாட்டுக்கு கூட கத்திரி. ஒழுக்கசீலராக்குவதில் வளைகுடாவை விஞ்ச இன்னொரு குடா இருக்கிறதா என்ன?

நியு யார்க்கில் இருந்து கிளம்பிய விமானம் ஏ1 தரம். ஆயிரம் படங்கள்; ஆயிரத்தொரு விளையாட்டுகள்; ஆயிரத்திரண்டு பொழுதுபோக்கு வைத்து அசத்தி இருந்தது கத்தார் வான்வழி. அதில் ‘லாடம்’ படத்தின் ஆங்கிலப் பதிப்பான ‘Lucky Number Slevin’ கொஞ்சமும், நடுத்தர வர்க்க நடு வயது இந்தியரின் வாழ்க்கைக்கு பொருத்தமான ‘Revolutionary Road’ கொஞ்சமும், ‘Seven Pounds’ முழுதுமாக தரிசனம் கிடைத்தது.

வந்த சூட்டோடு வலையுலக முன்னாள் பதிவர் சிலரோடு சந்திப்பும் இனிதே நடந்தேறியது. பிரபாகரன் எங்கே இருக்கிறார், தமிழக முக, சாரு, ஜெயமோகன் என்று மைய நீரோட்டத்தை விட்டு விலகாத உரையாடல்.

தானி ஓட்டுநர்களுடன் பேச்சுத் தொடுத்ததில் ஜெயலலிதாவின் அலம்பலை நாடி பிடித்து வைத்திருக்கிறார்கள். ‘தனி ஈழ அறைகூவல் எல்லாம் டுபாக்கூர்’ என்றார். ‘அவங்க நாடு; அவங்க பிரச்னை’ என்றார்.

இன்னொருவர் ‘பிரபாகரனும் ராஜபக்சேவும் டீலு போட்டாங்க. பிரபாகரன எங்காவது கண்காணாத ஊருக்கு அனுப்பிவைச்சுட்டு, அவன சுட்டுட்டதா கத கட்டிவிட்டுட்டு, நம்ம மக்கள சாவடிக்கிறான் சிங்களக்காரன்’ என்று முடித்தார்.

சென்னையில் ஒரு பேனர் கண்ணில் படவில்லை. சுவரொட்டியும் காணக் கிடைக்கவில்லை. தோரணம், வண்ணவரைபடம் எல்லாமே மாயம். அந்தக் காலத்தில்… ஹ்ம்ம்ம்…

குருவாரம். ஷீர்டி சாய்பாபா சின்னத்தில் தேர்தலில் நின்றால் நிச்சயம் வெற்றி. ஆனால், இந்தியா என்ன ஐரோப்பாவிலா இருக்கிறது? தமிழக பொதுசனம் ஆன்மிகத்தையும் அரசியலையும் என்றும் கலந்து பார்த்து வாக்களிப்பதில்லையே!

இந்தியா இறங்கியவுடன் ப்ளாக்பெரி உயிர் கிடைத்தது. கையளவு அமெரிக்க செல்பேசியில் சகலமும் உடனடியாக தெரிகிறது. அமெரிக்காவில் கூட தொழில்நுட்பம் இம்புட்டு முன்னேறி இருக்குமா? இந்த தடவை இந்தியா வந்தாலும் கூட இணைபிரியாத இணையம்.

புத்தக லிஸ்ட்

மே 20 முதல் மூன்று வார சென்னைப் பயணத்தில் வாங்க நினைக்கும் புத்தகப் பட்டியல்:

  1. உமா மகேஸ்வரியின் அரளி வனம் (சிறுகதைகள்) –  பக்கங்கள் 112. விலை ரூபாய் 65. வெளியீடு: எனி இந்தியன் பதிப்பகம்
  2. ஜெயமோகனின் ஈழ இலக்கியம் ஒரு விமர்சனப் பார்வை – பக்கங்கள் 168. விலை ரூபாய் 95. வெளியீடு: எனி இந்தியன் பதிப்பகம்
  3. இலக்கிய உரையாடல்கள் (நேர்காணல்களின் தொகுப்பு): ஜெயமோகன் & சூத்ரதாரி – Rs.150.00; பதிப்பாளர்: எனிஇந்தியன்; பக்கங்கள்: 288
  4. அம்மன் நெசவு: சூத்ரதாரி – Rs.70.00; பதிப்பாளர்: தமிழினி
  5. மீஸான் கற்கள்: புனத்தில் குஞ்ஞப்துல்லாதமிழில்: குளச்சல் மு. யூசுப்; Rs.150.00; பதிப்பாளர்: காலச்சுவடு
  6. நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை: நாஞ்சில் நாடன்; Rs.60.00; பதிப்பாளர்: காலச்சுவடு
  7. அஞ்சலை: கண்மணி குணசேகரன்; Rs.160.00; பதிப்பாளர்: தமிழினி
  8. ரப்பர் (நாவல்): ஜெயமோகன் – Rs.75.00; பதிப்பாளர்: கவிதா
  9. உண்மை கலந்த நாட்குறிப்புகள்: அ. முத்துலிங்கம் – Rs.170.00; பதிப்பாளர்: உயிர்மை; பக்கங்கள்: 287
  10. ஏழாம் உலகம்: ஜெயமோகன் – Rs.170.00; பதிப்பாளர்: தமிழினி
  11. எக்ஸிஸ்டென்ஷியலிசமும் ஃபேன்ஸி பனியனும்: சாருநிவேதிதா – Rs.60.00; பதிப்பாளர்: உயிர்மை; பக்கங்கள்: 104
  12. என் வீட்டின் வரைபடம்: ஜே. பி. சாணக்கியா; Rs.75.00; பதிப்பாளர்: காலச்சுவடு
  13. தமிழ் மண்ணின் சாமிகள்: மணா; Rs.50.00; பதிப்பாளர்: உயிர்மை; பக்கங்கள்: 80
  14. கூளமாதாரி: பெருமாள் முருகன் – Rs.90.00; பதிப்பாளர்: தமிழினி
  15. டேபிள் டென்னிஸ்: கோபிகிருஷ்ணன்; Rs.15.00; பதிப்பாளர்: தமிழினி
  16. வெள்ளெருக்கு: கண்மணி குணசேகரன் – Rs.90.00; பதிப்பாளர்: தமிழினி
  17. கு.அழகிரிசாமி கடிதங்கள் – கி.ரா.வுக்கு எழுதியது: Rs.140.00; உயிர்மை; பக்கங்கள்: 238
  18. சுந்தர ராமசாமி: நினைவின் நதியில்: ஜெயமோகன் – Rs.100.00; உயிர்மை; பக்கங்கள்: 216
  19. கிருஷ்ணப் பருந்து: ஆ.மாதவன் – Rs.35.00; அன்னம்; பக்கங்கள்: 75
  20. கங்கணம்: பெருமாள்முருகன் – RS 235/-
  21. வட்டத்துள்:வத்சலா – Rs.175.00 – உயிர்மை; பக்கங்கள்: 300
  22. ஒரு பனங்காட்டுக் கிராமம்: மு.சுயம்புலிங்கம் – Rs.90.00; உயிர்மை; பக்கங்கள்: 160
  23. வார்ஸாவில் ஒரு கடவுள்: தமிழவன் – Rs.275.00; உயிர்மை – பக்கங்கள்: 438
  24. நான் பேச விரும்புகிறேன்: ச.தமிழ்ச்செல்வன் – Rs.150.00; வம்சி புக்ஸ் – பக்கங்கள்: 152
  25. மிதமான காற்றும் இசைவான கடலலையும்: ச.தமிழ்ச்செல்வன் – Rs.150.00; தமிழினி; பக்கங்கள்: 223
  26. பேசாத பேச்செல்லாம்: தமிழ்ச்செல்வன்- RS 80 /-
  27. சொல்லில் அடங்காத இசை: ஷாஜி; தமிழில்: ஜெயமோகன்: Rs.120.00; உயிர்மை; பக்கங்கள்: 200
  28. பாபுஜியின் மரணம்: நிஜந்தன் – Rs.120.00; உயிர்மை; பக்கங்கள்: 208
  29. மேகமூட்டம்: நிஜந்தன்உயிர்மை; Rs:90.00
  30. மரம்: ஜீ. முருகன் உயிர்மை; Rs:140.00
  31. கண்ணகி: சு.தமிழ்ச்செல்வி உயிர்மை; Rs:120.00
  32. பல நேரங்களில் பல மனிதர்கள்: பாரதி மணி உயிர்மை; Rs: 100.00
  33. வெளிச்சம் தனிமையானது: சுகுமாரன் உயிர்மை; Rs: 120.00
  34. ஏறுவெயில் (நாவல்): பெருமாள்முருகன்: காலச்சுவடு: ரூ. 160
  35. சாயாவனம் (காலச்சுவடு கிளாசிக் வரிசை நாவல்): சா. கந்தசாமி: காலச்சுவடு: ரூ. 150
  36. பள்ளிகொண்டபுரம் (காலச்சுவடு கிளாசிக் வரிசை நாவல்): நீல. பத்மநாபன்: ரூ. 225
  37. சில தீவிர இதழ்கள் (கட்டுரைகள்): காலச்சுவடு: கல்பனாதாசன்: ரூ. 225
  38. வடு: கே.ஏ.குணசேகரன் : காலச்சுவடு: Rs.65.00
  39. வாடிவாசல் (நாவல்): சி. சு. செல்லப்பா : காலச்சுவடு: ரூ. 40
  40. சாய்வு நாற்காலி (நாவல்): தோப்பில் முஹம்மது மீரான் : காலச்சுவடு: ரூ.175
  41. ஒரு கடலோர கிராமத்தின் கதை (நாவல்): தோப்பில் முஹம்மது மீரான் : காலச்சுவடு: ரூ.150
  42. பொய்த் தேவு (நாவல்): க.நா. சுப்ரமண்யம் : காலச்சுவடு: ரூ. 150
  43. வேள்வித் தீ (நாவல்) : எம்.வி. வெங்கட்ராம் : காலச்சுவடு: ரூ. 90
  44. புனலும் மணலும் (நாவல்): ஆ. மாதவன் : காலச்சுவடு: ரூ.90
  45. நான் காணாமல் போகும் கதை (குறுநாவல்): ஆனந்த் : காலச்சுவடு: ரூ.50
  46. போரின் மறுபக்கம்: ஈழ அகதியின் துயர வரலாறு – (அகதியின் அனுபவங்கள்): தொ. பத்தினாதன் : காலச்சுவடு: ரூ.175
  47. அறியப்படாத ஆளுமை: ஜார்ஜ் ஜோசப் (வாழ்க்கைச் சித்திரம்): பழ. அதியமான் : காலச்சுவடு: ரூ.75
  48. உபதேசியார் சவரிராயபிள்ளை – யோவான் தேவசகாயம் சவரிராயன்: (ப-ர்) ஆ. சிவசுப்பிரமணியன் : காலச்சுவடு: ரூ.175
  49. ஒரு தந்தையின் நினைவுக் குறிப்புகள்(அனுபவப் பதிவு): டி.வி. ஈச்சரவாரியர்: தமிழில்: குளச்சல் மு. யூசுப் : காலச்சுவடு:  ரூ.100
  50. ஜானு (ஸி.கே. ஜானுவின் வாழ்க்கை வரலாறு): பாஸ்கரன்: தமிழில்: எம். எஸ். : காலச்சுவடு: ரூ. 40

    பட்டியல் அவ்வப்போது சேகரிக்கப்படும். உங்கள் பரிந்துரை ஏதாவது இருந்தால் சொல்லுங்க…

    ஜூன் போனால் சென்னைக் காற்றே

    1. சென்னையில் டூ வீலர்கள் எல்லாரும் தலையில் எதாவதுக் கட்டிக்கொண்டிருக்கிறார்கள். முன்ஜாக்கிரதை முத்தண்ணாக்களுக்கு ஹெல்மெட். ‘சென்னை-600 028’ விஜயலஷ்மிகளுக்கு துப்பட்டா. இஸ்லாமியர்களுக்கு தொப்பி.

    2. பதிவர் சந்திப்புகள் பல சிட்டி சென்டரில் நடக்கிறது. இரைச்சலுக்கு மத்தியில் வாகாக இல்லை. சீட்டு பிடிப்பது தமிழ்மணத்தில் பின்னூட்டம் இட்டு இடம் தக்கவைத்துக் கொள்வது போன்ற நச்சுப்பிடிச்ச வேலை. மழை பெய்தாலும் ஒதுங்க இடம் தரும் திறந்த வெளி வுட்லண்ட்ஸுக்கு மாற்று கிடைக்க வேண்டும்.

    3. குறைந்த நிறுத்தங்களில் நிற்கும் பேருந்து, சாதா பல்லவன் என்று இரண்டு வகை மட்டுமே அறிந்த எனக்கு, ஏசி, வெறும் சி, சி இல்லாத ஏ என்று குழப்பமான மாநகரப் போக்குவரத்து. ஒவ்வொரு வண்டியிலும் ஏறியவுடன் நடத்துநர் ‘மினிமம் இருபது ரூபா’ என்று ஆட்டோ ஓட்டுநரை ஒத்து மிரட்டுகிறார்கள்.

    4. நுகர்வோருக்கானப் பொருட்காட்சியில் உள்ளே செல்வதற்கு ஐம்பது ரூபாய் கட்டணம் வசூலிக்கிறார்கள். நண்பர் முன்பு எப்போதோ சொன்னதுதான் நினைவிலாடியது: ‘வெளிநாடு போகிறவர்கள், எந்த நிலையில் சென்றார்களோ, அப்படியே தேங்கிப் போயிடறாங்க! தமிழ்நாட்டுக்காரங்க தற்காலத்துக்கு ஏத்தபடி அட்ஜஸ்ட் பண்ணி மாத்திக் கொண்டேயிருக்காங்க.’

    5. சென்னை சிடி சென்ட்டரை விட ஸ்பென்சர்ஸில் நவநாகரிக யுவதிகள் வசந்த்களுடன் சுஜாதாவின் எழுத்தை நிஜமாக்கிக் கொண்டிருந்தார்கள்.

    6. தசாவதரத்தை காலை ஆறு மணியில் இருந்து இரவு பதினொன்று வரை 15 காட்சிகள் ஐநாக்ஸில் திரையிட்டிருந்தார்கள். எல்லா அரங்குமே நிறைந்து விட்டிருந்தது. ‘சந்தோஷ் சுப்பிரமணியம்’ செல்லலாம் என்று திரையரங்கைப் பார்க்கும் ஆசையில் சென்றால், ‘பேட்டரியை குப்பைத் தொட்டியில் போடுவோம்’, ‘செல்பேசிக்கு தடை’ என்று ஜபர்தஸ்து செய்து கொள்கிறார்கள்.

    7. மேலேக் குறிப்பிட்ட ‘ச.சு.’ முதற்கொண்டு இன்டியானா ஜோன்ஸ் வரை துணையெழுத்துகளுடன் பாரிமுனையில் டிவிடியில் இருபது ரூபாய்க்கு லோல்படுகிறது. தசாவதாரமும்தான்.

    8. கபாலி கோவிலை பிரதோஷ காலத்திற்காகவாவது எக்ஸ்டென்சன் செய்ய வேண்டும். ‘நந்தா’ பார்த்தபிறகு எல்லோருக்கும் திரயோதசி மகிமை தெரிந்துவிட்டிருக்கிறது.

    9. அகலபாட்டை இணையம் சுறுசுறுப்பாக பறக்கிறது. இந்த வேகத்தில் வலை கிடைத்தால், இந்தியாவில் டாரென்ட் இறக்கம் புகழ்பெறும்.

    10. இத்தனை மணிக்கு வண்டி வரும் என்பதை 21ஜி, இருவுள் விரைவு வண்டி நிறுத்தங்களில் போட்டிருக்கிறார்கள். இந்தியாவில் சட்டம் இயற்றப்பட்டாலும் கண்டுகொள்ளாமல் இருப்பது போல், இந்த நேரவிவரங்களையும் கணக்கில் எடுத்து கர்மசிரத்தையாக கடிகாரத்தைப் பார்க்க கூடாது.