தேவதர்ஷினி & Erinn Hayes
முந்தைய பதிவு: தமிழ் சினிமா | நடிகைகள் | வலைப்பதிவு
ஒரு காற்றில் அலையும் சிறகு
எந்த நேரம் ஓய்வு தேடும் ?
கண்ணில்லாது காணும் கனவு
எதை தேடி எங்கு போகும் ?
எங்கெங்கும் இன்பம் இருந்தும்
உன் பங்கு போனதெங்கே ?
இது ஏனென்று பதில் யார் சொல்லுவார்
ஒரு காற்றில் அலையும் சிறகு..
யார்க்கும் போலொரு அன்னை தந்தை
உனக்கும் இருந்தது உண்டு
யார்க்கும் போலொரு தேகம் தாகம்
உனக்கும் வளர்ந்தது இங்கு
யார்க்கும் போலே விழிகள் இருந்தும்
உலகமோ இருளில் !
ஒளியைப் போலே ஓர் துணை
வந்து சென்ற துன்பம் யார்க்கும் உண்டோ ?
ஒரு காற்றில் அலையும் சிறகு..
வீதி என்றொரு வீடும் உண்டு
உனக்கது சொந்தமென்று
வானம் என்றொரு கூரை உண்டு
விழிகளும் அறியாது
வேலியில்லா சோலைக்காக
வந்ததொரு காவல்
கண்கள் கொண்ட தெய்வமும்
காவலையும் கொண்டு சென்றதேனோ ?
ஒரு காற்றில் அலையும் சிறகு..

நன்றி: Song of the Day: kaNNil paarvai from naan kadavuL: “‘கண்ணில் பார்வை’ ஷ்ரேயா கோஷல் பாடிய பாடல்.”
oOo
கண்ணில் பார்வை போன போதும்
கண்ணில் ஈரம் ததும்பும் ததும்பும்
கண்ணில்லாத பேரைக் கண்டால்
கனாக்கள் ஒதுங்கும் ஒதுங்கும்
கனவில் கூட இன்பம்
வராமல் இந்த ஜென்மம் !
ஓ தெய்வமே ! இது சம்மதமோ ?

முந்தைய பதிவு: எழுத்தாளர் ஜெயமோகன்: நான் கடவுள்
மேலும்: Amma Un Pillai naan – Nan Kadavul பாடல் : இசை « Karthik’s Perception

நான் கடவுள் குறித்து அவரின் பதிவுகளில் எழுத்தாளர் ஜெயமோகன் எழுதியவை:
காசியில்: கனவின் கதை: “மணிகர்ணிகா கட்டத்துக்கு”
சினிமாவுக்குப் போன இலக்கியவாதி? திரையும் சமரசமும் – ஒரு கடிதம்
படப்பிடிப்பு: தேனியில்…
இசை வெளியீடு: சென்னையில்…
பதில்: இருகேள்விகள்
நாவல் :ஏழாம் உலகம் :கடிதங்கள்
பயணக்குறிப்பு: இந்தியப் பயணம் 17 – வாரணாசி
மற்ற தமிழ்ப்பட வேலை: கதாநாயகன் தேர்வு
கிசுகிசு – எதிர்வினை: ஜூவியின் பதினாறாம் பக்கம்.
முந்தைய பதிவு:
1. “பிச்சைப் பாத்திரம்”
Posted in Cinema
குறிச்சொல்லிடப்பட்டது Arya, எழுத்தாளர், சினிமா, ஜெயமோகன், திரைப்படம், நான் அக்டவுள், நான் கடவுள், பதிவு, பாலா, புகைப்படம், Bala, Blogs, Cinema, Films, Jayamogan, Jeyamohan, Kasi, Movies, Naan Kadavul, Varanasi
நன்றி: பத்தி: அரபிக் கடலோரம் – காலச்சுவடு :: தமிழில்: சுகுமாரன் [இதழ் 98 – பிப்ரவரி 2008]
மலையாள மொழி இன்று அடைந்திருக்கும் நிலைமை விநோதமானது. மலையாளம் என்பது என்ன? மூன்றேகால் கோடி எண்ணிக்கையுள்ள கேரளயர்கள் அன்றாடம் பேசுகிற மொழி. எழுதுகிற மொழி. நிச்சயமாகக் கேரளத்திலுள்ள பெரும்பான்மை மக்களின் பேச்சு மொழியும் எழுத்து மொழியும் மலையாளம் மட்டுமே. உடனடியாக அப்படி இல்லாமல் போய்விடுமென்றும் தோன்றவில்லை.
:::
சட்டபூர்வமான ஆட்சிமொழி மலையாளம். ஆனால், அரசாங்கப் பணிகளில் பெரும்பான்மையும் நடப்பது ஆங்கிலத்தில்தான். எழுத்தறிவு இல்லாத குடிமகனுக்கு நியாயம் கிடைக்க வேண்டிய நீதிமன்ற மொழியும் ஆங்கிலந்தான்.
அதே சமயம்
ஆனால், பாலவாடி முதல் மலையாளியின் முதல் மொழியாகக் கருதப்படுவது ஆங்கிலமே. மலையாளம் வெறும் ‘செக்கண்ட் லாங்வேஜ்’. இந்த விசித்திரமான இரட்டை முகம் எப்படி உருவானது?
‘பயன்பாடு’ என்ற ஒற்றை வார்த்தையே இதற்குப் பதில். மலையாள மொழி மூலம் பயனடைபவர்களுக்கும் பயனடையாதவர்களுக்குமான வேறுபாடு இங்கே தெளிவாகிறது. ‘பயன்’ என்பது என்ன பொருளைத் தருகிறது என்பது எல்லாருக்கும் தெரியும். நமது வாழ்க்கையை எந்த வகையிலாவது மேம்படுத்துகிற ஒன்று. வாழ்க்கையைப் பராமரிக்க உதவும் ஒன்று. வாழ்க்கையில் நம்பக்கூடிய ஒன்று. இவைதாம் அந்தப் பயன்கள்.
சராசரி மலையாளியைப் பொறுத்தவரை அன்றாட வாழ்க்கையில் கருத்துப் பரிமாற்றத்துக்கான கருவி மலையாளம் மட்டுமே. வீட்டில், வழியில், கடையில், அலுவலகத்தில் எங்கும். அல்லது செய்திகள் வாசிக்க, தொலைக்காட்சி பார்க்க, புரோகிதனின் சொற்களைக் கேட்க எல்லாவற்றுக்கும். பத்திரிகை வாசிக்கும்போதும் தொலைக்காட்சி பார்க்கும்போதும் அவன் அரசியல் கட்சிகள், எழுத்தாளர்கள் போன்ற கருத்துத் தொடர்பாளர்களின் சொற்களையும் மறைமுகமாகக் கேட்கிறான். தொலைக்காட்சிகளில் வரும் கலை நிகழ்ச்சிகளும் சினிமாவும் அவனை மலையாளம் வழியாகவே உல்லாசப்படுத்துகின்றன.
பத்திரிகைகள், தொலைக்காட்சி, இலக்கியம், அரசியல், மதச் சொற்பொழிவுகள், சினிமா இவற்றைவிட்டால் வேறு என்ன? அவன் இவற்றுக்கு ஒரு சந்தை மட்டுமே.
அவன் மூலம் இவர்களெல்லாம் வாழ்கிறார்கள். அவர்கள் அவனிடம் மலையாளத்தில் அரசியலை விற்கிறார்கள்; மதத்தை விற்கிறார்கள்; இலக்கியத்தை விற்கிறார்கள்; பத்திரிகையை விற்கிறார்கள்; தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை விற்கிறார்கள். அவன் கொடுக்கும் சந்தாக்கள், காணிக்கைகள், நன்கொடைகள், விலைகள் ஆகியவற்றால் அவர்கள் கேரளத்தில் வலிமையானவர்களாகவும் செல்வந்தர்களாகவும் செல்வாக்குள்ளவர்களாகவும் மாறுகிறார்கள். வேறு வார்த்தைகளில் சொல்வதானால் அவர்கள் அதிகார வர்க்கமாகிறார்கள். சராசரி மலையாளி அதிகாரம் செய்யப்படுபவனாகிறான்.
அரசியல் கட்சிகளும் மதங்களும் ஊடகங்களும் அறிவுஜீவிகளும் அடங்கிய இந்த ஆளும் வர்க்கம் சுதந்திரத்துக்குப் பின் வந்த அரை நூற்றாண்டு கால ஆட்சியில் சராசரி மலையாளியை இந்தியா முழுவதும் அல்லது உலகம் முழுவதும் அப்பத்துக்காக அலையும் ஒரு அகதியாக்கிவிட்டிருக்கிறது. காங்கிரஸ், கம்யூனிஸ்ட், பிற கட்சிகளின் பங்களிப்பு இதுதான். மதத் தலைவர்கள், சாதியமைப்புகள், அறிவுஜீவிகள், பத்திரிகைகள், தொலைக்காட்சி அலைவரிசைகள் எல்லாவற்றின் பங்களிப்பும் இதுதான். அவர்கள் உண்டு கொழுத்தார்கள்.
:::
மலையாளிக்குக் கேரளத்தில் தன்னுடைய பிள்ளைகளின் எதிர்காலம் இருண்டது, மலையாளத்தால் தன்னுடைய பிள்ளைகளுக்குப் பயனில்லை என்பது புரிந்துவிட்டது. அவர்களுக்கு ஒரு வேலையோ வருமான மார்க்கமோ கிடைக்க வேண்டுமானால் அவர்கள் கேரளத்தை விட்டு வெளியேற வேண்டுமென்பதும் புரிந்துவிட்டது. அதற்கு மலையாளம் பிரயோஜனமில்லை என்பதும் புரிந்துவிட்டது. மலையாளம் மூலம் பயனடைந்தவர்கள் வரிசையில் தனக்கும் தன்னுடைய பிள்ளை களுக்கும் இடமில்லை என்பதும் புரிந்துவிட்டது. அப்படியாகத்தான் மலையாளம் செகண்ட் லாங்வேஜாகவும் ஆங்கிலம் முதல் மொழியாகவும் மாறியது.
பெரும்பான்மை மக்களுக்குச் சோறுபோடும் மொழியாக இல்லாமற்போயிருக்கிறது என்பதுதான் இன்று மலையாள மொழியின் அவலம். அது சோறுபோடுவது அரசியல் கட்சிகளுக்கும் பத்திரிகை, தொலைக்காட்சிகளுக்கும் மதத் தலைவர்களுக்கும் சினிமாக்காரர்களுக்கும் அறிவுஜீவிகளுக்கும் மட்டுமே. (இதில் அப்பாவி மலையாள ஆசிரியர்களும் உண்டு). மலையாளம் அவர்களுடைய மொத்தக் குத்தகையாகிவிட்டது. அதனால்தான் நான் பல சந்தர்ப்பங்களிலும் குறிப்பிட்டுக்கொண்டிருக்கிறேன்: ‘மலையாளம் உண்மையைப் பேசத் தெரியாத ஒரு மொழியாக மாறியிருக்கிறது. அதைக் குத்தகையாகக் கொண்டிருப்பவர்கள் எவரும் பொதுவாக உண்மை பேசுபவர்களுமல்ல.’
தமிழின் நிலைமை பற்றி எனக்குத் தெரியாது. அண்டை வீட்டு நிலைமையைத் தமிழ் ஓர் எச்சரிக்கையாக எடுத்துக்கொள்ள வேண்டுமா என்றும் எனக்குத் தெரியாது.
Posted in Tamil, Tamil Cinema, Tamil Movies, Tamil Nadu, Tamilnadu
குறிச்சொல்லிடப்பட்டது காலச்சுவடு, சக்கரியா, சுகுமாரன், தமிழ், மலையாளம், Cinema, City, English, Hindi, Kaalachuvadu, Kalachuvadu, Languages, Malayalam, Mother Tongue, Native, OIG, Politics, Sakkaria, Sukumaran, Tamil, Urban, Zachariah
நன்றி: ரவி ஆதித்யா: நான் கடவுள்
அசல்: Raajavin Ramanamaalai – Pitchai Paathiram (Non-Film devotional album)
புதுசு: Pichaipaathiram – Madhu Balakrishnan: Naan Kadavul
பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தேன்
அய்யனே என் அய்யனே
யாம் ஒரு பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தேன்
அய்யனே என் அய்யனே
பிண்டம் என்னும் எலும்போடு சதை நரம்பு உதிரமும்
அடங்கிய உடம்பு எனும் பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தேன்
அய்யனே என் அய்யனே
பிண்டம் என்னும் எலும்போடு சதை நரம்பு உதிரமும்
அடங்கிய உடம்பு எனும் பிச்சைப் பாத்திரம் ஏந்தி
வந்தேன் அய்யனே என் அய்யனே
அம்மையும் அப்பனும் தந்ததா
இல்லை ஆதியின் வல்வினை சுழந்ததா
அம்மையும் அப்பனும் தந்ததா
இல்லை ஆதியின் வல்வினை சுழ்ந்ததா
இன்மையை நானறியாததா
சிறு பொம்மையின் நிலையினில்
உண்மையை உணர்ந்திட
பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தேன்
அய்யனே என் அய்யனே
பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தேன்
அய்யனே என் அய்யனே
அத்தனை செல்வமும் உன்னிடத்தில்
நான் பிச்சைக்கு செல்வது எவ்விடத்தில்
வெறும் பாத்திரம் உள்ளது என்னிடத்தில்
அதன் சூத்திரமோ அது உன்னிடத்தில்
ஒரு முறையா இரு முறையா பல முறை
பலப் பிறப்பெடுக்க வைத்தாய்
புது வினையா பழ வினையா கணம் கணம்
தினம் தினம் என்னை துடிக்க வைத்தாய்
பொருளுக்கு அலைந்திடும்
பொருளற்ற வாழ்க்கையும் துரத்துதே
உன் அருள் அருள் அருள் என்று
அலைகின்ற மனம் இன்று பிதற்றுதே
அருள் விழியால் நோக்குவாய்
மடற் பதத்தால் தாங்குவாய்
உன் திருக்கரம் எனை அரவணைத்து உனதருள் பெற
பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தேன்
அய்யனே என் அய்யனே
பிண்டம் என்னும் எலும்போடு சதை நரம்பு உதிரமும்
அடங்கிய உடம்பு எனும் பிச்சைப் பாத்திரம்
ஏந்தி வந்தேன் அய்யனே என் அய்யனே
முழு வீடியோ :: Dialogue Writer Jayamohan On Naan Kadavul

பிற செவ்வி:
முந்தைய இடுகை:
நன்றி: Twitter / nklraja
வெளியான இதழ்: ஆனந்த விகடன்
தொடர்புள்ள விருது: நிலாரசிகன் கவிதைகள்..: நிலா விருதுகள் 2008
இலக்கியம்
சிறந்த நாவல்: காவல் கோட்டம் (சு. வெங்கடேசன்)
சிறந்த சிறுகதை தொகுப்பு: தவளைகள் குதிக்கும் வயிறு (வா.மு.கோ.மு)
சிறந்த கவிதை தொகுப்பு: தண்ணீர் சிற்பம் (சி.மோகன்)
சிறந்த கட்டுரை தொகுப்பு: குழந்தைகளுக்கு சாத்தான் பெரியவர்களுக்கு கடவுள் (லஷ்மி மணிவண்ணன்)
சிறந்த வெளியீடு: திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் (கவிதாசரண் வெளியீடு)
சிறந்த சிறுபத்திரிக்கை: தலித் முரசு (ஆசிரியர்: புனித பாண்டியன்)
திரைப்படம்
சிறந்த இயக்குநர்: மிஸ்கின் (அஞ்சாதே)
சிறந்த படம்: அஞ்சாதே
சிறந்த தயாரிப்பு: மோஸர் பேயர் (பூ)
சிறந்த நடிகை: பார்வதி (பூ)
சிறந்த நடிகர்: கமலஹாஸன் (தசாவதாரம்)
சிறந்த புதுமுக நடிகர்: சசிகுமார் (சுப்ரமண்யபுரம்)
சிறந்த புதுமுக நடிகை: ருக்மணி விஜயகுமார் (பொம்மலாட்டம்)
சிறந்த குண நடிகர்: ராமு (பூ)
சிறந்த குண நடிகை: ரம்யா நம்பீஸன் (ராமன் தேடிய சீதை)
சிறந்த நகை நடிகர்: நாசர் (பொய் சொல்ல போறோம்)
சிறந்த நகை நடிகை: சரண்யா மோகன் (யாரடி நீ மோகினி)
சிறந்த இசையமைப்பாளர்: ஹாரிஸ் ஜெயராஜ் (தாம் தூம், வாரணம் ஆயிரம்)
சிறந்த பாடலாசிரியர்: தாமரை (வாரணம் ஆயிரம்)
சிறந்த பின்னணி பாடகர்: ஹரிஹரன் (நெஞ்சுக்குள் பெய்திடும்)
சிறந்த பின்னணி பாடகி: ஷ்ரேயா கோஷல் (முகுந்தா முகுந்தா)
சிறந்த ஒளிப்பதிவாளர்: ரத்னவேலு (வாரணம் ஆயிரம்)
சிறந்த படத்தொகுப்பு: பிரவீன் ஸ்ரீகாந்த் (சரோஜா)
சிறந்த கதை: ச.தமிழ்செல்வன்: (பூ)
சிறந்த திரைக்கதை ஆசிரியர்: கமலஹாஸன் (தசாவதாரம்)
சிறந்த வசனம் : சி.பி.நாராயணன், ஆர். சுப்ரமணியன் (அபியும் நானும்)
சிறந்த சண்டைப் பயிற்சி: கனல் கண்ணன் (பீமா)
சிறந்த நடன இயக்குநர்: தினா (கத்தாழ கண்ணாலே)
சிறந்த ஒப்பனை: பானு, யோகேஷ், வித்யாதர் (வாரணம் ஆயிரம்)
சிறந்த கலை இயக்கம்: தோட்டா தரணி , எம். பிரபாகரன், சமீர் சந்தா (தசாவதாரம்)
சிறந்த ஆடை வடிவமைப்பு: நளினி ஸ்ரீராம் (வாரணம் ஆயிரம்)
சிறந்த விளையாட்டு வீரர்: விஸ்வநாதன் ஆனந்த்
சிறந்த விளையாட்டு வீராங்கனை: இளவழகி (கேரம்)
சிறந்த பயிற்சியாளர்: ஃப்ராங்க் (உயரம் தாண்டுதல்)
தொலைக்காட்சி
சிறந்த சேனல்: விஜய் டிவி
சிறந்த டிவி நிகழ்ச்சி: மானாட மயிலாட
சிறந்த தொகுப்பாளர்: கோபிநாத் (நீயா நானா)
சிறந்த தொகுப்பாளினி: சின்மயி (சூப்பர் சிங்கர் – விஜய் டிவி)
சிறந்த நெடுந்தொடர்: திருமதி. செல்வம் (சன் டிவி)
வானொலி
சிறந்த பண்பலை: ஹெலோ FM
சிறந்த பண்பலை தொகுப்பாளர்: அஜய் (ரேடியோ மிர்ச்சி)
சிறந்த பண்பலை தொகுபாளினி: ஒஃபீலியா (பிக் FM)
இன்ன பிற
சிறந்த விளம்பரம்: மேக்ஸ் நியூயார்க் லைஃப்
சிறந்த மோட்டார் பைக்: யமஹா RI5
சிறந்த கார்: நியூ ஹோண்டா சிடி
சிறந்த செல்பேசி: ஆப்பிள் 3ஜி ஐபோன்