Tag Archives: Cinema

Separated at Birth

தேவதர்ஷினி & Erinn Hayes

முந்தைய பதிவு: தமிழ் சினிமா | நடிகைகள் | வலைப்பதிவு

Naan Kadavul – Lyrics

bala-arya-jeyamohan-cinema-films-reviews-naan-kadavul-stills-030ஒரு காற்றில் அலையும் சிறகு
எந்த நேரம் ஓய்வு தேடும் ?

கண்ணில்லாது காணும் கனவு
எதை தேடி எங்கு போகும் ?

எங்கெங்கும் இன்பம் இருந்தும்
உன் பங்கு போனதெங்கே ?

இது ஏனென்று பதில் யார் சொல்லுவார்
ஒரு காற்றில் அலையும் சிறகு..

யார்க்கும் போலொரு அன்னை தந்தை
உன‌க்கும் இருந்த‌து உண்டு
யார்க்கும் போலொரு தேகம் தாகம்
உனக்கும் வளர்ந்தது இங்கு
யார்க்கும் போலே விழிகள் இருந்தும்
உலகமோ இருளில் !

ஒளியைப் போலே ஓர் துணை
வந்து சென்ற‌ துன்பம் யார்க்கும் உண்டோ ?
ஒரு காற்றில் அலையும் சிறகு..

வீதி என்றொரு வீடும் உண்டு
உனக்கது சொந்தமென்று
வானம் என்றொரு கூரை உண்டு
விழிகளும் அறியாது

வேலியில்லா சோலைக்காக‌
வந்ததொரு காவல்
க‌ண்க‌ள் கொண்ட தெய்வ‌மும்
காவ‌லையும் கொண்டு சென்ற‌தேனோ ?
ஒரு காற்றில் அலையும் சிறகு..
bala-arya-movies-cinema-films-reviews-naan-kadavul-stills-003
நன்றி: Song of the Day: kaNNil paarvai from naan kadavuL: “‘கண்ணில் பார்வை’ ஷ்ரேயா கோஷல் பாடிய பாடல்.”

oOo

கண்ணில் பார்வை போன போதும்
கண்ணில் ஈரம் ததும்பும் ததும்பும்
கண்ணில்லாத பேரைக் கண்டால்
கனாக்கள் ஒதுங்கும் ஒதுங்கும்
கனவில் கூட இன்பம்
வராமல் இந்த ஜென்மம் !
ஓ தெய்வமே ! இது சம்மதமோ ?
bala-arya-movies-cinema-pooja-reviews-naan-kadavul-stills-028
முந்தைய பதிவு: எழுத்தாளர் ஜெயமோகன்: நான் கடவுள்

மேலும்: Amma Un Pillai naan – Nan Kadavul பாடல் : இசை « Karthik’s Perception
bala-arya-movies-cool-films-reviews-naan-kadavul-stills-005

எழுத்தாளர் ஜெயமோகன்: நான் கடவுள்: பாலா

நான் கடவுள் குறித்து அவரின் பதிவுகளில் எழுத்தாளர் ஜெயமோகன் எழுதியவை:

காசியில்: கனவின் கதை: “மணிகர்ணிகா கட்டத்துக்கு”

”சார் பெரிய ரைட்டர்!”

ஆனந்த விகடன் பேட்டி 2007

சினிமாவுக்குப் போன இலக்கியவாதி? திரையும் சமரசமும் – ஒரு கடிதம்

படப்பிடிப்பு: தேனியில்…

‘நான் [கிட்டத்தட்ட] கடவுள்’

இசை வெளியீடு: சென்னையில்…

நான் கடவுள், கடிதங்கள்

பதில்: இருகேள்விகள்

நாவல் :ஏழாம் உலகம் :கடிதங்கள்

பயணக்குறிப்பு: இந்தியப் பயணம் 17 – வாரணாசி

மற்ற தமிழ்ப்பட வேலை: கதாநாயகன் தேர்வு

கிசுகிசு – எதிர்வினை: ஜூவியின் பதினாறாம் பக்கம்.

முந்தைய பதிவு:
1. “பிச்சைப் பாத்திரம்”

2. வசனகர்த்தா ஜெயமோகன் பேட்டி

3. Om Siva Om – Vijay Prakash: நான் கடவுள் – இளையராஜா

4. Naan Kadavul – Music

5. நான் கடவுள் – அஹம்ப்ரம்மாஸ்மி

மலையாளம், மலையாளி – ஓர் எச்சரிக்கை: சக்கரியா

நன்றி: பத்தி: அரபிக் கடலோரம் – காலச்சுவடு :: தமிழில்: சுகுமாரன் [இதழ் 98 – பிப்ரவரி 2008]

மலையாள மொழி இன்று அடைந்திருக்கும் நிலைமை விநோதமானது. மலையாளம் என்பது என்ன? மூன்றேகால் கோடி எண்ணிக்கையுள்ள கேரளயர்கள் அன்றாடம் பேசுகிற மொழி. எழுதுகிற மொழி. நிச்சயமாகக் கேரளத்திலுள்ள பெரும்பான்மை மக்களின் பேச்சு மொழியும் எழுத்து மொழியும் மலையாளம் மட்டுமே. உடனடியாக அப்படி இல்லாமல் போய்விடுமென்றும் தோன்றவில்லை.

:::

சட்டபூர்வமான ஆட்சிமொழி மலையாளம். ஆனால், அரசாங்கப் பணிகளில் பெரும்பான்மையும் நடப்பது ஆங்கிலத்தில்தான். எழுத்தறிவு இல்லாத குடிமகனுக்கு நியாயம் கிடைக்க வேண்டிய நீதிமன்ற மொழியும் ஆங்கிலந்தான்.

அதே சமயம்

  • நாளிதழ்கள்,
  • தொலைக்காட்சிகள் பயன்படுத்தும் மொழி மலையாளம் மட்டுமே.
  • சட்டமன்ற விவாதங்களின் மொழி மலையாளம்.
  • மதப் புரோகிதர்களும் சாதியமைப்புகளும் மக்களுடன் பேசுவது மலையாளத்தில்தான். சமஸ்கிருதத்திலோ அரபியிலோ லத்தீனிலோ அல்ல.
  • சினிமாவின் மொழியும் சினிமாப் பாட்டுகளின் மொழியும் மலையாளமே.
  • நாடகங்கள் மலையாளம்.
  • கதையும் கவிதையும் நாவலும் மலையாளம்.
  • அரசியல் சொற்பொழிவுகள் மலையாளம்.

ஆனால், பாலவாடி முதல் மலையாளியின் முதல் மொழியாகக் கருதப்படுவது ஆங்கிலமே. மலையாளம் வெறும் ‘செக்கண்ட் லாங்வேஜ்’. இந்த விசித்திரமான இரட்டை முகம் எப்படி உருவானது?

‘பயன்பாடு’ என்ற ஒற்றை வார்த்தையே இதற்குப் பதில். மலையாள மொழி மூலம் பயனடைபவர்களுக்கும் பயனடையாதவர்களுக்குமான வேறுபாடு இங்கே தெளிவாகிறது. ‘பயன்’ என்பது என்ன பொருளைத் தருகிறது என்பது எல்லாருக்கும் தெரியும். நமது வாழ்க்கையை எந்த வகையிலாவது மேம்படுத்துகிற ஒன்று. வாழ்க்கையைப் பராமரிக்க உதவும் ஒன்று. வாழ்க்கையில் நம்பக்கூடிய ஒன்று. இவைதாம் அந்தப் பயன்கள்.

சராசரி மலையாளியைப் பொறுத்தவரை அன்றாட வாழ்க்கையில் கருத்துப் பரிமாற்றத்துக்கான கருவி மலையாளம் மட்டுமே. வீட்டில், வழியில், கடையில், அலுவலகத்தில் எங்கும். அல்லது செய்திகள் வாசிக்க, தொலைக்காட்சி பார்க்க, புரோகிதனின் சொற்களைக் கேட்க எல்லாவற்றுக்கும். பத்திரிகை வாசிக்கும்போதும் தொலைக்காட்சி பார்க்கும்போதும் அவன் அரசியல் கட்சிகள், எழுத்தாளர்கள் போன்ற கருத்துத் தொடர்பாளர்களின் சொற்களையும் மறைமுகமாகக் கேட்கிறான். தொலைக்காட்சிகளில் வரும் கலை நிகழ்ச்சிகளும் சினிமாவும் அவனை மலையாளம் வழியாகவே உல்லாசப்படுத்துகின்றன.

பத்திரிகைகள், தொலைக்காட்சி, இலக்கியம், அரசியல், மதச் சொற்பொழிவுகள், சினிமா இவற்றைவிட்டால் வேறு என்ன? அவன் இவற்றுக்கு ஒரு சந்தை மட்டுமே.

அவன் மூலம் இவர்களெல்லாம் வாழ்கிறார்கள். அவர்கள் அவனிடம் மலையாளத்தில் அரசியலை விற்கிறார்கள்; மதத்தை விற்கிறார்கள்; இலக்கியத்தை விற்கிறார்கள்; பத்திரிகையை விற்கிறார்கள்; தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை விற்கிறார்கள். அவன் கொடுக்கும் சந்தாக்கள், காணிக்கைகள், நன்கொடைகள், விலைகள் ஆகியவற்றால் அவர்கள் கேரளத்தில் வலிமையானவர்களாகவும் செல்வந்தர்களாகவும் செல்வாக்குள்ளவர்களாகவும் மாறுகிறார்கள். வேறு வார்த்தைகளில் சொல்வதானால் அவர்கள் அதிகார வர்க்கமாகிறார்கள். சராசரி மலையாளி அதிகாரம் செய்யப்படுபவனாகிறான்.

அரசியல் கட்சிகளும் மதங்களும் ஊடகங்களும் அறிவுஜீவிகளும் அடங்கிய இந்த ஆளும் வர்க்கம் சுதந்திரத்துக்குப் பின் வந்த அரை நூற்றாண்டு கால ஆட்சியில் சராசரி மலையாளியை இந்தியா முழுவதும் அல்லது உலகம் முழுவதும் அப்பத்துக்காக அலையும் ஒரு அகதியாக்கிவிட்டிருக்கிறது. காங்கிரஸ், கம்யூனிஸ்ட், பிற கட்சிகளின் பங்களிப்பு இதுதான். மதத் தலைவர்கள், சாதியமைப்புகள், அறிவுஜீவிகள், பத்திரிகைகள், தொலைக்காட்சி அலைவரிசைகள் எல்லாவற்றின் பங்களிப்பும் இதுதான். அவர்கள் உண்டு கொழுத்தார்கள்.

:::

மலையாளிக்குக் கேரளத்தில் தன்னுடைய பிள்ளைகளின் எதிர்காலம் இருண்டது, மலையாளத்தால் தன்னுடைய பிள்ளைகளுக்குப் பயனில்லை என்பது புரிந்துவிட்டது. அவர்களுக்கு ஒரு வேலையோ வருமான மார்க்கமோ கிடைக்க வேண்டுமானால் அவர்கள் கேரளத்தை விட்டு வெளியேற வேண்டுமென்பதும் புரிந்துவிட்டது. அதற்கு மலையாளம் பிரயோஜனமில்லை என்பதும் புரிந்துவிட்டது. மலையாளம் மூலம் பயனடைந்தவர்கள் வரிசையில் தனக்கும் தன்னுடைய பிள்ளை களுக்கும் இடமில்லை என்பதும் புரிந்துவிட்டது. அப்படியாகத்தான் மலையாளம் செகண்ட் லாங்வேஜாகவும் ஆங்கிலம் முதல் மொழியாகவும் மாறியது.

பெரும்பான்மை மக்களுக்குச் சோறுபோடும் மொழியாக இல்லாமற்போயிருக்கிறது என்பதுதான் இன்று மலையாள மொழியின் அவலம். அது சோறுபோடுவது அரசியல் கட்சிகளுக்கும் பத்திரிகை, தொலைக்காட்சிகளுக்கும் மதத் தலைவர்களுக்கும் சினிமாக்காரர்களுக்கும் அறிவுஜீவிகளுக்கும் மட்டுமே. (இதில் அப்பாவி மலையாள ஆசிரியர்களும் உண்டு). மலையாளம் அவர்களுடைய மொத்தக் குத்தகையாகிவிட்டது. அதனால்தான் நான் பல சந்தர்ப்பங்களிலும் குறிப்பிட்டுக்கொண்டிருக்கிறேன்: ‘மலையாளம் உண்மையைப் பேசத் தெரியாத ஒரு மொழியாக மாறியிருக்கிறது. அதைக் குத்தகையாகக் கொண்டிருப்பவர்கள் எவரும் பொதுவாக உண்மை பேசுபவர்களுமல்ல.’

தமிழின் நிலைமை பற்றி எனக்குத் தெரியாது. அண்டை வீட்டு நிலைமையைத் தமிழ் ஓர் எச்சரிக்கையாக எடுத்துக்கொள்ள வேண்டுமா என்றும் எனக்குத் தெரியாது.

“பிச்சைப் பாத்திரம்” – நான் கடவுள்

நன்றி: ரவி ஆதித்யா: நான் கடவுள்

அசல்: Raajavin Ramanamaalai – Pitchai Paathiram (Non-Film devotional album)

புதுசு: Pichaipaathiram – Madhu Balakrishnan: Naan Kadavul

பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தேன்
அய்யனே என் அய்யனே
யாம் ஒரு பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தேன்
அய்யனே என் அய்யனே

பிண்டம் என்னும் எலும்போடு சதை நரம்பு உதிரமும்
அடங்கிய உடம்பு எனும் பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தேன்
அய்யனே என் அய்யனே

பிண்டம் என்னும் எலும்போடு சதை நரம்பு உதிரமும்
அடங்கிய உடம்பு எனும் பிச்சைப் பாத்திரம் ஏந்தி
வந்தேன் அய்யனே என் அய்யனே

அம்மையும் அப்பனும் தந்ததா
இல்லை ஆதியின் வல்வினை சுழந்ததா

அம்மையும் அப்பனும் தந்ததா
இல்லை ஆதியின் வல்வினை சுழ்ந்ததா
இன்மையை நானறியாததா
சிறு பொம்மையின் நிலையினில்
உண்மையை உணர்ந்திட

பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தேன்
அய்யனே என் அய்யனே

பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தேன்
அய்யனே என் அய்யனே

அத்தனை செல்வமும் உன்னிடத்தில்
நான் பிச்சைக்கு செல்வது எவ்விடத்தில்
வெறும் பாத்திரம் உள்ளது என்னிடத்தில்
அதன் சூத்திரமோ அது உன்னிடத்தில்

ஒரு முறையா இரு முறையா பல முறை
பலப் பிறப்பெடுக்க வைத்தாய்
புது வினையா பழ வினையா கணம் கணம்
தினம் தினம் என்னை துடிக்க வைத்தாய்

பொருளுக்கு அலைந்திடும்
பொருளற்ற வாழ்க்கையும் துரத்துதே
உன் அருள் அருள் அருள் என்று
அலைகின்ற மனம் இன்று பிதற்றுதே
அருள் விழியால் நோக்குவாய்
மடற் பதத்தால் தாங்குவாய்
உன் திருக்கரம் எனை அரவணைத்து உனதருள் பெற

பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தேன்
அய்யனே என் அய்யனே
பிண்டம் என்னும் எலும்போடு சதை நரம்பு உதிரமும்
அடங்கிய உடம்பு எனும் பிச்சைப் பாத்திரம்
ஏந்தி வந்தேன் அய்யனே என் அய்யனே

Where is the Party – Silambattam Inspirations

முதற்கண் வேர் இஸ் தி பார்ட்டி திறனாய்வை வாசிக்கவும். அதன் தொடர்ச்சியாக வேர் இஸ் தி பார்ட்டி? ஆங்.. திருமங்கலத்துல! அரசியலாக்கத்தையும் காணவும்.

இப்போது பிற பரிந்துரை:

  1. பன்ச் சிம்புவின் ஏற்றத்தாழ்வு: வேர் இஸ் தி Parity
  2. சீன சிம்பு பார்ட்டி: வேர் இஸ் தி copper-t
  3. லிட்டில் சிம்புவின் பீட்டர்: வேர் இஸ் தி Potty
  4. ஜூம் கணினி சிம்பு: வேர் இஸ் தி PuTTY
  5. பால் குழப்பம் மன்மதன்: வேர் இஸ் தி Panty டுனைட்
  6. பொய் சொல்லப் போறோம் மாப்பிளை முறுக்கு சிம்பு: வேர் இஸ் தி ப்ராப்பர்டி
  7. பைரேட்ஸ் ஆஃப் தி பீச் வாலிபால் சிம்பு: வேர் இஸ் தி Booty

வேற எதுனாச்சும் தோணிச்சுனா சிம்புவுக்கு சொல்லுங்க 🙂

வசனகர்த்தா ஜெயமோகன் பேட்டி: பாலாவின் ‘நான் கடவுள்’

  • மலையாள வசனங்களை நண்பர் ஷாஜி எழுதினார்
  • ‘ருத்ரன் மிகவும் தனிமையில் இருந்தான். அப்பொழுது கடவுள் கூட அவனிடம் இல்லை. இறைவன் இல்லாதத் தனிமை என்னும் எக்ஸ்பிரெஷனை பாலா விஷுவலாக எடுத்திருக்கிறார்.’
  • அஹம் ப்ரும்மாஸ்மி என்பது பிருகதாரண்ய உபநிடதத்தில் இருந்து எடுக்கப்பட்டது. அதனைப் பிற்காலத்தில் ஆதிசங்கரர் விரித்துரைத்தார்.
  • “நான் முழுமையான வணிகப்படத்திற்கு வசனம் எழுதும் மனநிலையில் இல்லை.”
  • “ஏழாம் உலகம் கொஞ்சம் மைல்டாக சொல்லும் விஷயங்கள் இந்தப் படத்தில் இன்னும் தீவிரமாக காட்சியாக்கப்பட்டிருக்கிறது.”

முழு வீடியோ :: Dialogue Writer Jayamohan On Naan Kadavul

naan-kadavul-bala-arya-pooja-ilaiya-raja-aham-brahmasmi

பிற செவ்வி:

  1. நான் கடவுள் குறித்து நடிகை பூஜா
  2. நடிகர் ஆர்யாவின் நேர்காணல்
  3. கலை இயக்குநர் கிருஷ்ணமூர்த்தி :: Nan Kadavul

முந்தைய இடுகை:

1. Om Siva Om – Vijay Prakash: பாடல் வரிகள் & இளையராஜா

2. Naan Kadavul – Music

விகடன் அவார்ட்ஸ் 2008

நன்றி: Twitter / nklraja
வெளியான இதழ்: ஆனந்த விகடன்
தொடர்புள்ள விருது: நிலாரசிகன் கவிதைகள்..: நிலா விருதுகள் 2008

இலக்கியம்

சிறந்த நாவல்: காவல் கோட்டம் (சு. வெங்கடேசன்)
சிறந்த சிறுகதை தொகுப்பு: தவளைகள் குதிக்கும் வயிறு (வா.மு.கோ.மு)

சிறந்த கவிதை தொகுப்பு: தண்ணீர் சிற்பம் (சி.மோகன்)
சிறந்த கட்டுரை தொகுப்பு: குழந்தைகளுக்கு சாத்தான் பெரியவர்களுக்கு கடவுள் (லஷ்மி மணிவண்ணன்)

சிறந்த வெளியீடு: திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் (கவிதாசரண் வெளியீடு)
சிறந்த சிறுபத்திரிக்கை: தலித் முரசு (ஆசிரியர்: புனித பாண்டியன்)


திரைப்படம்

சிறந்த இயக்குநர்: மிஸ்கின் (அஞ்சாதே)
சிறந்த படம்: அஞ்சாதே
சிறந்த தயாரிப்பு: மோஸர் பேயர் (பூ)

சிறந்த நடிகை: பார்வதி (பூ)
சிறந்த நடிகர்: கமலஹாஸன் (தசாவதாரம்)

சிறந்த புதுமுக நடிகர்: சசிகுமார் (சுப்ரமண்யபுரம்)
சிறந்த புதுமுக நடிகை: ருக்மணி விஜயகுமார் (பொம்மலாட்டம்)

சிறந்த குண நடிகர்: ராமு (பூ)
சிறந்த குண நடிகை: ரம்யா நம்பீஸன் (ராமன் தேடிய சீதை)

சிறந்த நகை நடிகர்: நாசர் (பொய் சொல்ல போறோம்)
சிறந்த நகை நடிகை: சரண்யா மோகன் (யாரடி நீ மோகினி)

சிறந்த இசையமைப்பாளர்: ஹாரிஸ் ஜெயராஜ் (தாம் தூம், வாரணம் ஆயிரம்)
சிறந்த பாடலாசிரியர்: தாமரை (வாரணம் ஆயிரம்)

சிறந்த பின்னணி பாடகர்: ஹரிஹரன் (நெஞ்சுக்குள் பெய்திடும்)
சிறந்த பின்னணி பாடகி: ஷ்ரேயா கோஷல் (முகுந்தா முகுந்தா)

சிறந்த ஒளிப்பதிவாளர்: ரத்னவேலு (வாரணம் ஆயிரம்)
சிறந்த படத்தொகுப்பு: பிரவீன் ஸ்ரீகாந்த் (சரோஜா)

சிறந்த கதை: ச.தமிழ்செல்வன்: (பூ)
சிறந்த திரைக்கதை ஆசிரியர்: கமலஹாஸன் (தசாவதாரம்)
சிறந்த வசனம் : சி.பி.நாராயணன், ஆர். சுப்ரமணியன் (அபியும் நானும்)

சிறந்த சண்டைப் பயிற்சி: கனல் கண்ணன் (பீமா)
சிறந்த நடன இயக்குநர்: தினா (கத்தாழ கண்ணாலே)
சிறந்த ஒப்பனை: பானு, யோகேஷ், வித்யாதர் (வாரணம் ஆயிரம்)

சிறந்த கலை இயக்கம்: தோட்டா தரணி , எம். பிரபாகரன், சமீர் சந்தா (தசாவதாரம்)
சிறந்த ஆடை வடிவமைப்பு: நளினி ஸ்ரீராம் (வாரணம் ஆயிரம்)


சிறந்த விளையாட்டு வீரர்: விஸ்வநாதன் ஆனந்த்
சிறந்த விளையாட்டு வீராங்கனை: இளவழகி (கேரம்)

சிறந்த பயிற்சியாளர்: ஃப்ராங்க் (உயரம் தாண்டுதல்)


தொலைக்காட்சி

சிறந்த சேனல்: விஜய் டிவி
சிறந்த டிவி நிகழ்ச்சி: மானாட மயிலாட

சிறந்த தொகுப்பாளர்: கோபிநாத் (நீயா நானா)
சிறந்த தொகுப்பாளினி: சின்மயி (சூப்பர் சிங்கர் – விஜய் டிவி)

சிறந்த நெடுந்தொடர்: திருமதி. செல்வம் (சன் டிவி)


வானொலி

சிறந்த பண்பலை: ஹெலோ FM

சிறந்த பண்பலை தொகுப்பாளர்: அஜய் (ரேடியோ மிர்ச்சி)
சிறந்த பண்பலை தொகுபாளினி: ஒஃபீலியா (பிக் FM)


இன்ன பிற
சிறந்த விளம்பரம்: மேக்ஸ் நியூயார்க் லைஃப்
சிறந்த மோட்டார் பைக்: யமஹா RI5
சிறந்த கார்: நியூ ஹோண்டா சிடி
சிறந்த செல்பேசி: ஆப்பிள் 3ஜி ஐபோன்

Naan Kadavul – Music

Music Reviews:

Writer Previews:
jeyamohan.in » Blog Archive » சென்னையில்…: யூகிசேது எல்லார் பேரையும் சொல்லி வழக்கம்போல பாராட்டினார். நவீன இலக்கியம் என்றாலே ஜெயமோகன் தான் என்ற வகையில் அவர் சொன்னபோது இருவர் கைதட்டினார்கள். நான் மகிழ்ச்சி அடைய ஆரம்பிப்பதற்குள் ‘ஜெயமோகன் ஒழிக’ என்று அரங்கில் இருந்து ஒரு குரல் எழுந்தது.

நான் இதுவரை தொலைக்காட்சிகளில் தலைகாட்டியதில்லை. அந்த ஊடகம் மேல் அப்படி ஒரு கசப்பு உண்டு. மேலும் அதன் வழியாக ஒன்றும் வாசகர்கள் வரமாட்டார்கள் என்ற எண்ணம். எனக்குத்தெரிந்து தொலைக்காட்சி ஊடகங்களில் பேட்டி கொடுக்காத ஒரே எழுத்தாளன் நான் தான்

Movie Previews:
ராம் சுரேஷ்: நான் கடவுள் – பாலாவின் விகடன் பேட்டி: “பக்திப் படம் எடுப்பது என் வேலை இல்லை. எவருடைய நம்பிக்கை களையும் காயப்படுத்தக் கூடாது என்பது என் இயல்பு. அந்த அடிப்படை நாகரிகத்தில் நான் எப்போதும் தெளிவா இருக்கேன். இது விளிம்பு நிலை மனிதர்களின் உலகம்.

‘நான் கடவுள்’ படத்தில், ஆர்யா, பூஜாவைத் தவிர, அத்தனை பேரும் புதுமுகங்கள். உடல் வளர்ச்சி இல்லாத, மன வளர்ச்சி இல்லாத மனிதர்கள். அவங்க கையில வசனப் பேப் பரைக் கொடுத்து, ‘பேசுப்பா!’னு படம்பிடிக்க முடியாது. அவங்க ளோட பழகி, அவங்க நம்மோட பழகின்னு ஒவ்வொருத்தரையும் ஒரு குழந்தை போலப் பார்த்துக்கணும். ஆறு மாச ஷூட்டிங் முடிஞ்ச பிறகு, இப்போ அவங்க அத்தனை பேரும் என் குடும் பம்.

இன்னொரு பக்கம் காசி சாமி யார்கள். அகோரின்னு சொல்லப் படுகிற, நர மாமிசம் சாப்பிடுற சாமியார்களையும் நடிக்க வெச்சிருக்கேன். இப்படி ஒரு படத்தை உருவாக்குற வலியை, வார்த்தைகளில் புரியவைக்க முடியாது. ஏன்னா, இது வித்தி யாசமான படம்னு சொல்றதே பழைய வார்த்தையாகிப்போச்சு. இது நாம் கருணை காட்டாத, நம்மால் புரிந்துகொள்ளப்படாத, கடைசி மனிதர்களின் உலகம்!'”

Twitter Reviews:

  • நான் கடவுள் ஏழாம் உலகம் தான் – naadodi
  • நான் கடவுள்-ல் இளையராசா ஒரு Mediocre ஆகத் தெரிகிறார் (பாடல்களில் மட்டும்) …மது பாலக்கிருட்டின ணைவிட இ.ராசாவின் ரமண மாலையில் வரும் பிச்சைப் பாத்திரம் ஏந்திவந்தேன்…பாடல் பிழிவதோடு மட்டுமல்லாமல் ராசாவின் உச்சரிப்பும் சொக்க வைக்கும் இரு…இரு…அருள்…அருள்..களில் வரும் ரு வின் ஏற்றம் என்னை அசரவைத்திருக்கிறது. இம்மாதிரியான ஏற்ற இறக்கம் ராசாவிற்கு அடுத்தபடியாக கமலகாசனில் பாடல் உச்சரிப்பில் கண்டிருக்கிறேன் (அ) கேட்டிருக்கிறேன். – Potteakadai
  • Naan Kadavul songs reminded me of early 90s Rama.Narayanan movies. Not my cup… maybe I’ll start liking after a few mo re hrs of listening! – dynobuoy
  • நான் கடவுள் – ஹே ராம் கிளாஸை எதிர்பார்ப்பவர்கள் ஒழியக்கடவது. ராஜா kep t it simple. எனவே, complexity எதிர்பார்க்கும் என்னைப்போன்றவர்களுக்கு பெருத்த ஏமாற்றமாகத்தானிருக்கும். ஆனாலும் ஒன்றிரண்டு பாடல்கள் பிரபலமாகும். ஷ்ரேயா கோஷாலின் குரல் இனிமை. பிச்சை பாத்திரம் – பழைய ராஜாவின் வடிவத்தைவிட ஏமாற்றம்தான். மெது பாலகிருஷ்ணன் சொதப்பல்.- donion
  • ̀நான் கடவுள்’ மிகுந்த ஏமாற்றம்;புதிதாய் ஒரேயொரு சாதாரண பாடல். இனி எந்த இசைக்கொடையும் ராஜாவால் அளிக்க முடியாது என்ற அலுப ்பு மட்டுமே வருகிறது – rozavasanth
  • ராஜா பாடிய ஒரு காற்றில் கொஞ்சம் திறமையான இசைக்கோர்ப்பு. கண்ணில் பார்வை சில முறை கேட்டால் பிடிக்ககூடும். – donion
  • ஒரு பெரிய ரசிகர் கூட்டம் பயித்தியமாய் ராஜா அமைத்து வெளிவரும் இசைக்காக காந்திருந்து, முதல் நாள் ஒரிஜினல் சிடி வாங்கி, பலமுறை கேட்டு கழகக்கண்மணி போல, அற்புதம் மீண்டும் நிகழ்ந்ததாய் சமாதானமும் ஒவ்வொருமுறையும் சொல்லிக்கொள்கிறது – rozavasanth
  • ராஜா தன் ரசிகர்களுக்கு தருவதும் ஒரு அரசியல் தலைவரின் நரம்பு சிலிர்ப்பு தரும் அறிக்கையை போலத் தான் இருக்கிறது. – rozavasanth
  • இனி பாலாவின் திரையாக்கத்தில்தான் இருக்கிறது. – donion
  • ’நான் கடவுள்’ படம் இளையராஜாவுடன் உத்தம் சிங் இணைந்து இசை என்கிறார்களே, இவருக்கு எதற்கு உதவி? தனியே செய்யமுடியாதபடி கடினமான சப்ஜெக்டா? – nchokkan

Superhit Songs in Tamil Cinema – 2008 Year in Review

நினைவுகூர்தல்: 1. Tamil Film Songs – Best of 2007 :: திரைப்பட இசை வரிசை

2. 2008 – பேசப்பட்ட தமிழ் திரைப்படங்கள்

3. தமிழ்ப்பதிவர்களின் விக்கி, வாக்கெடுப்பு: தமிழ்நாட்டின் டாப் 10 விஷயங்கள்

தமிழ்ப்பட பாடல் பட்டியல்:

என்றும் கேட்கலாம் பத்து

  1. ஆழியிலே முக்குளிக்கும் அழகே தாம் தூம் :: ஹாரிஸ் ஜெயராஜ் – ஹரிச்சரண்
  2. சூச்சூ மாரி பூ :: எஸ் எஸ் குமரன் – மிருதுளா எஸ், பார்த்தசாரதி, ஸ்ரீமதி
  3. அனல் மேலே பனித்துளி வாரணம் ஆயிரம் :: ஹாரிஸ் ஜெயராஜ் – சுதா ரகுநாதன்: தாமரை
  4. சொல் சொல்லு சொல்லம்மா குசேலன் :: ஜிவி பிரகாஷ்குமார் – ஹரிஹரன், பூஜா, ரஞ்சனி, சுஜாதா: பா விஜய்
  5. அன்பே அன்பேதான் வாழ்க்கையே – கண்ணும் கண்ணும் :: தினா – தினா
  6. எப்போ நீ – காளை :: ஜீவி பிரகாஷ் – மதுஸ்ரீ
  7. சின்னச் சின்ன கனவுகள் – வாழ்த்துகள் :: யுவன் சங்கர் ராஜா – ஸ்வேதா
  8. இரு விழியோ – பிரிவோம் சந்திப்போம் :: வித்யாசாகர் – சைந்தவி, வினீத் ஸ்ரீனிவாசன்: ஜெயந்தா
  9. அபிநயம் காட்டுகின்ற ஆரணங்கே – உளியின் ஓசை :: இளையராஜா – பாம்பே ஜெயஸ்ரீ, சுதா இரகுநாதன்
  10. அய்யாரே! மனம் தய்யார்ரே (ஆவாரம்பூவுக்கும்) – அறை எண் 305இல் கடவுள் :: வித்யாசாகர் – ஷ்ரேயா கோஸல்

ஒளிப்பதிவு பத்து (பாடல் அருமை என்றால், வெள்ளித்திரை படமாக்கலில் பின்னி அமர்க்களப்படுத்திய பத்து கானங்கள்)

  1. கத்தாழக் கண்ணால அஞ்சாதே :: சுந்தர் சி பாபு – நவீன் மாதவ்: கபிலன்
  2. அவ என்ன என்ன தேடி வந்த அஞ்சல வாரணம் ஆயிரம் :: ஹாரிஸ் ஜெயராஜ் – கார்த்திக் & வி பிரசன்னா: தாமரை
  3. கண்கள் இரண்டால் சுப்ரமணியபுரம் :: ஜேம்ஸ் வசந்தன் – பெல்லிராஜ், தீபா மரியம்
  4. தோழியா? என் காதலியா? காதலில் விழுந்தேன் :: விஜய் ஆன்டனி – ஹரீஷ் ராகவேந்திரா, மேகா, ஸ்ரீசரண்: பிவி பிரசாத்
  5. குட்டிப் பிசாசே – காளை :: ஜீவி பிரகாஷ் – சிலம்பரசன், சுசித்ரா
  6. ரகசியக் கனவுகள் ஜல் ஜல் – பீமா :: ஹாரிஸ் ஜெயராஜ் – ஹரிஹரன் & மதுஸ்ரீ: யுகபாரதி
  7. வெண்மேகம் பெண்ணாகி – யாரடி நீ மோகினி :: யுவன் சங்கர் ராசா – ஹரிஹரன்
  8. மெதுவா மெதுவா – பிரிவோம் சந்திப்போம் :: வித்யாசாகர் – ஹரிணி & கார்த்திக்: கபிலன்
  9. அட கடகட டம்டம் அதிரடி பிம்பம் – சத்யம் :: ஹாரிஸ் ஜெயராஜ் – ப்ரேம்ஜி
  10. அடடா… என்னை ஏதோ செய்கிறாய் – சந்தோஷ் சுப்ரமணியம் :: தேவி ஸ்ரீப்ரசாத் – சித்தார்த்: நா முத்துக்குமார்

துள்ளிசை பத்து

  1. நாக்க முக்க காதலில் விழுந்தேன் :: விஜய் ஆன்டனி – சின்னப்பொண்ணு: பிவி பிரசாத்
  2. வேர் இஸ் தி பார்டி? – சிலம்பாட்டம் ::  யுவன் ஷங்கர் ராஜா – முகேஷ், ப்ரியதர்ஷினி
  3. டாக்ஸி டேக்சி – சக்கரக்கட்டி :: ஏ ஆர் ரெஹ்மான் – பென்னி தயால், ப்ளேஸ், ஜாவெத் அலி, விவியன் Chaix: ப்ளேஸ், நா முத்துக்குமார், விவியன் Chaix
  4. உலக நாயகனே – தசாவதாரம் :: ஹிமேஷ் ரேஷம்மயா – வினீத்
  5. உய்யாலாலோ – தாம் தூம் :: ஹாரிஸ் ஜெயராஜ் – கைலாஷ் கெர், சுஜாதா
  6. கட்டிப்பிடிக்கும் கரடிய நம்புங்கமுனியாண்டி, விலங்கியல் மூன்றாமாண்டு :: வித்யாசாகர் – மாலதி லஷ்மண், ஜெயமூர்த்தி: வைரமுத்து
  7. கட்டிலுக்கு மட்டும்தானா பொம்பள – தனம் :: இளையராஜா – இளையராஜா: முத்துலிங்கம்
  8. கிச்சு கிச்சு – ஏகன் :: யுவன் சங்கர் ராஜா – வசுந்தரா தாஸ் & யுவன் ஷங்கர்ராஜா
  9. ஆடியடங்கும் உலகத்தில் ஆட வந்திருக்கேன் – பாண்டி :: ஸ்ரீகாந்த் தேவா – கிரேஸ் கருணாஸ், செந்தில் தாஸ்: அவ என்ன என்ன தேடி வந்த அஞ்சல
  10. திண்டுக்கல்லு, திண்டுக்கல்லு/நகரு நகருடா – திண்டுக்கல் சாரதி :: தினா