Tag Archives: இந்தியா

இந்தியத் தேர்தல்: தேவையான மாற்றங்கள்

இந்தியத் தேர்தல் முறை காலத்திற்கேற்ப மாறலாம். தேசிய ஆலோசனை கவுன்சில் தலைவராக இருப்பது தவறு; பிரதம மந்திரி வேட்பாளரை அறிவிப்பது இழுக்கு என்று சாடுவது எல்லாம் தனி காமெடி. அதை விட்டுவிடலாம்.

வாக்களிப்பு முடிய 48 மணி நேரம் இருக்கிறபோது பிரச்சாரத்தை முடிப்பது விநோதமான அந்தக் கால வழக்கம். தொலைக்காட்சி, இணையம், தொலைபேசி போன்ற தொடர்பு சாதனங்கள் இல்லாத தரைவழி அஞ்சல் மட்டுமே உள்ள காலத்திற்கு ஏற்ற வழக்கத்தை விட்டொழிக்க வேண்டும். ஃபேஸ்புக்கில் பிரச்சாரம், குறுஞ்செய்தியில் தகவல், கட்சி டிவியில் விளம்பரம் என்றான பிறகு கடைசி நிமிட பொதுக்கூட்டத்திற்கு மட்டும் தடை போடுவதை விட்டு விடலாம்.

தேர்தல் நாளன்று விடுமுறை அளிப்பது அடுத்த ஹைதர் அலி கால பழக்கம். எந்த ஊரில் இருக்கிறோமோ, அந்த ஊரில் வாக்களிக்க வசதி செய்ய வேண்டும். பெங்களூரில் படிக்கிறோமா… அங்கேயே வாக்களியுங்கள். பம்பாயில் பணிபுரிகிறீர்களா… அங்கேயே வோட்டுப் போடுங்கள். சொந்த ஊருக்கு பஸ் பிடித்து, அந்தத் தொகுதியில் யார் நிற்கிறார் என்று சாதி பார்த்து, கட்சி பார்த்து வாக்களிப்பதை விட, வசிக்கும் இடத்திற்குப் பொருத்தமான வாக்காளரைத் தேர்ந்தெடுப்பது காலத்திற்கேற்ற நடைமுறை.

வாக்களிப்பது என்பது சலுகை அல்ல. கடமை. வாக்குப் போடுவதை உரிமையாக நினைப்பவர்கள் வேலை நாளன்றும் வாக்களிப்பார்கள். வாக்களிப்பதை சிறப்பு தள்ளுபடியாக நினைப்பவர்களுக்குத்தான் லீவு கொடுக்க வேண்டும். மாலையில் எட்டு மணி வரை வாக்குப் போடும் நேரத்தை நீட்டிக்கலாம். மதிய உணவிற்கு செல்வது போல், ஊழிய நாளின் நடுவே வாக்குச்சாவடிக்கு சென்று வரலாம். தேர்தல் நாளுக்காக அரசு விடுமுறை விடுவது சோம்பேறித்தனத்தின் உச்ச எடுத்துக்காட்டு.

கடைசியாக வாக்குப் போடும் போது பிறர் பார்க்க, தன் வாக்கை செலுத்துவது. இதுவும் ஒன்றும் கொலைக் குற்றமல்ல. குழந்தைகளை வாக்குச்சாவடிக்கு அழைத்துச் சென்று, எவ்வாறு வாக்களிப்பது, எந்த பொத்தானை அழுத்துவது என செயல்முறை விளக்கம் செய்ய உதவலாம். என்னைப் போன்ற சந்தேகப் பிராணிகளுக்கு இறுதி கட்ட சோதனையாக, இந்த இன்னொருவரின் துணை உதவலாம். ரகசிய காப்பு விதிமுறை மீறல் எல்லாம் பத்தாம்பசலித்தனத்தின் வெளிப்பாடு.

இவ்வளவும் மாறினால் கூட என்ன… ஒரு மண்டலம் கூட பொறுப்பு வகிக்க திறனில்லாதவர்கள் கூட பிரதம மனிதிரியாகப் போட்டியிடும் சுதந்திர நாடாக இருப்பது மகிழ்ச்சியான கொண்டாட்டம்

John Abraham’s Madras Cafe – Movie Review

அசல் தலைப்பு: மெட்ராஸ் கஃபே
வைத்திருக்க வேண்டிய தலைப்பு: ராஜீவ் காந்தியைக் கொன்றதை ஏன் இந்தியாவால் தடுக்க முடியவில்லை என்பதற்கான சப்பைக்கட்டு

சான் ஓஸே பக்கம் போனீர்கள் என்றால் மெட்ராஸ் கஃபே நிச்சயம் எட்டிப் பாருங்கள் என்பார்கள் பே ஏரியாவசிகள். இந்தியா – இலங்கை – ஈழ முக்கோண பிரச்சினை அறிவதற்கு மெட்ராஸ் கஃபே உதவும்.

ராஜீவ் காந்தி இறந்ததற்காக நாடே வருத்தப்படுகிறது. ஆனால், எண்ணற்ற தனி மனிதர்களின் சொந்த இழப்புகளை பிரச்சார தொனியின்றி போகிற போக்கில் இந்தப் படம் இயல்பாக முன்வைப்பது பிடித்திருந்தது. அன்னிய நாட்டின் அமைதிக்காக செல்லும் தூதுவர் ஈ.பி.ஆர்.எல்.எஃப்.புக்கும் புலிகளுக்கும் நடுவில் மாட்டிக் கொண்டு சாவது; துப்பறிபவர்களின் குடும்பம் சீரழிவது போன்றவை போகிற போக்கில் வந்து போகின்றன.

படம் என்றால் வில்லன் இருக்கவேண்டும். இதுவோ கிட்டத்தட்ட ஆவணப்படம். விறுவிறுப்பாக சம்பவங்களைக் கோர்த்து, நடுநடுவே லட்சணமான மனைவியை ஊறுகாய் போல் தொட்டுக் கொண்ட சாகசப்படம். சுட்டுவிரல் நீட்டி தப்பு செய்தவர்கள் இவர்கள்தான் என்று குற்றஞ்சாட்டாமல், என்ன நடந்தது, எப்படி நடந்தது, எப்பொழுது நடந்தது என்பதை மட்டும் விவரிக்கிறார்கள்.

இலங்கையா… அவர்கள் 1983 படுகொலைகளை நிறைவேற்றினார்கள்.
விடுதலைப் புலிகளா… அவர்கள் நிறைய முதுகில் குத்தல்களும் கண்மூடித்தனமான கொள்கைகளும் கொண்டிருந்தார்கள்.
இந்திய ராணுவமா… மேலிடத்து உத்தரவை சிரமேற்கொண்டு பணிந்தார்கள்.
உளவுத்துறையா… எவர் யாருக்கு விசுவாசமாக இருந்தார்கள் என்பது அவர்களே அறியாமல் இயங்கினார்கள்.
இந்தியாவா… எந்த இந்தியர் என்பதைப் பொறுத்து விதவிதமாக மனிதருக்கே உரிய மாபாதகங்களுடன் நடந்துகொண்டார்கள்.
ராஜீவ் காந்தியா… யேசுவிற்குப் பிறகு உலகத்தில் உதித்த மகான். புத்தர் வழியில் அகிம்சையை போதித்து சென்னைக்கு வந்தவர். மகாத்மாவிற்குப் பிறந்த இந்தியாவில் உதயமான உத்தமர்!

படத்தின் குறைகள்? சென்னைத் தமிழுக்கும் ஈழத்தமிழுக்கும் வித்தியாசம் காட்டவில்லை என்று பொங்கலாம். மட்டக்களப்பு பிரதேசங்களையும் யாழ்ப்பாணத்தையும் குழப்புகிறார்கள் எனலாம். ஜான் ஆபிரகாம் படகில் போகும்போது சவரம் செய்த வழவழ முகத்துடன் பயணிக்கிறார் என விசனிக்கலாம். எனினும், அந்த நிருபர் ஜெயா கதாபத்திரத்தை அனிதா பிரதாப் போல் கோர்த்து வைக்காத துரோகத்தை மன்னிக்கவே முடியாது. அந்த ஒரு சங்கதிக்காகவே மேதகு தலைவரின் கட்டை வேகாது!

படத்தில் எல்லா மொழியும் பேசுகிறார்கள். நடுவே தமிழக திராவிட கட்சித் தலைவரை விளித்து, ‘தலைவா… பணம் வந்துடுச்சு! காரியத்த முடிச்சுடலாம்!’ போன்ற பேச்சுகள் பின்னணியில் ஓடுகின்றன. பொருளியல் வரலாற்று அறிவும், திரைமொழியின் நுணுக்கமான பார்வையும், பல்வேறு அரசியல்களை கிரகிக்கும் சக்தியும் கிடைக்கப் பெற்றவர்கள் மட்டுமே இந்தப் புலனாய்வுப் புனைவை புரிந்து கொண்டு பார்க்க இயலும்.

நல்ல வேளை… படம் எல்.டி.டி.ஈ. பிரபாகரன் இறந்த பிறகு வந்திருக்கிறது. இல்லையென்றால், கொஞ்ச நாளில் ஜான் ஆபிரஹாம் போட்டுத் தள்ளப்பட்டிருப்பார்.

STEM: Ratio of female workers in Software: India vs US

உடன் பணியாற்றுபவர்களில் ஒன்றிரண்டு மகளிர் மட்டுமே இருப்பது, மேற்கத்திய உலகின் கணினியில் குப்பை கொட்டுபவர்களின் குறைபாடுகளில் முக்கியமான ஒன்று.

சென்னை சாஃப்ட்வேர் நிறுவனங்களில் ஐம்பது சதவிகிதமாவது பெண் பொறியாளர்கள் இருப்பார்கள். இந்திய கல்லூரிகளில் பெண்களுக்கும் ஆண்களுக்குமான விகிதாசாரம் கிட்டத்தட்ட சம அளவில் இருக்கிறது. அந்த சமன்பாடு அலுவல் வேலைகளிலும் வெளிப்படுகிறது.

அமெரிக்க கல்லூரிகளிலும் சம விகிதங்களில் இரு பாலினரும் படிக்கிறார்கள். ஆனால், பெண்கள் பெரும்பாலும் கணிதம் / கம்ப்யூட்டர் / தொழில் நுட்பம் போன்ற அறிவியல் துறைகளைத் தேர்ந்தெடுப்பதில்லை. இதற்கு பள்ளிப் பருவத்தில் படிப்பை விட அழகில் கவனம் செலுத்துவதற்கான நிர்ப்பந்த சூழலை குற்றஞ்சாட்டலாம்.

அலுவலில் வெரைட்டியான மனிதர்கள் இருப்பது நிறுவனத்திற்கு முக்கியம். வெள்ளை, கறுப்பு, தாத்தா, இளநரை, கல்லூரி மணம் மாறாத பாலகன், ரூபவதி எல்லோரும் இருந்தால் குழுவில் கலந்து கட்டி வேலை நடக்கும். ஆனால், சௌந்தரிகளுக்கு மனிதவளமும் மார்க்கெடிங்கும் சிறந்த தொழிற்துறையாக அடையாளப்படுத்தி இருக்கும் அமெரிக்காவில் மெலிஸா மேயர்கள் சீ.ஈ.ஓ.க்களாகி விடுகிறார்கள்.

பெண்ணுரிமையும் சட்டங்களும்: சொந்த முடிவுகளை சுதந்திரமாக தேர்ந்தெடுத்தல்

ஜெயமோகனுக்கு எழுதிய கடிதம்: http://www.jeyamohan.in/?p=29188

கருக்கலைப்பு-ஒரு கடிதம் வாசிக்கக் கிடைத்தது.

இந்த நிகழ்ச்சியைப்பற்றிப் பேசுவதற்கு முன் சில விஷயங்களைத் தெளிவுபடுத்த வேண்டியுள்ளது [இலக்கிய இடக்கரடக்கல்கள்]

//அது ஒரு கொலையல்ல என்று பார்ப்பது எப்படி… நம் மனைவியின் மாதவிடாய் தள்ளிப்போகிறது என்றதிலிருந்தே நம் உறவு ஆரம்பமாகிறது அல்லவா…//

கட்சிக்கு ஆள் சேர்ப்பது போல்…
கூட்டத்தைப் பெருக்க குடும்பத்தினரை கூட்டுவது போல்…
மதத்தை முன்னேற்ற எண்ணிக்கை அதிகரிப்பது போல்…
குழந்தைகளை நிறைய ஈன்றெடுங்கள் என்பது அந்தக் காலம்.

ஒன்றோ, இரண்டோ… ஒழுங்காய் வளர்த்தால் சிறப்பு என்பது இந்தக் காலம்.

இதில் எங்கே கொலை வருகிறது?

இந்தியாவில் கர்ப்பம் கலைப்பு என்றாலே பெண் குழந்தை என்றளவிலும், மேற்கில் (குறிப்பாக கிறித்துவ பெரும்பான்மையினர் கொண்ட நாடுகளில்) கருக்கலைப்பு என்றாலே தெய்வக்குத்தம் என்றளவிலும் எளிமையாக்க முடிகிறது.

அமெரிக்கா வந்த புதிதில் நான் தங்கியிருந்த வீட்டிற்கு வெகு அருகில் ‘Planned Parenthood’ என்னும் வசதி வாய்ப்பற்றோருக்கான உதவி ஸ்தாபனம் இயங்கி வந்தது. தினசரி காலை ஏழு மணிக்கு சிலுவை தாங்கியவர்களும் உள்ளே ஆலோசனைக்குச் செல்பவர்களைக் கடுமையாகத் திட்டும் பதாகைகள் தாங்கியவர்களும் வந்து விடுவார்கள். அந்தத்  தன்னார்வ நிறுவனம் மூடும் எட்டு மணி வரை உள்ளே செல்வோரையும், வெளியே வருவோரையும் மிக மோசமாக வைவார்கள். கேட்கவே பயமாகவும், அருவருப்பாகவும், அசிங்கமாகவும் இருக்கும். ஒருவரைக் குறி வைத்துப் பத்துப் பதினைந்து பேர் சூழ்வார்கள்.

அதைக் கேட்போர் ஏற்கனவே நோய்க்கு உள்ளானவர்கள்; அல்லது பதின்ம வயதிலேயே, பள்ளிப் படிப்பு முடிக்காமலேயே கரு தாங்கியவர்கள்; மிக முக்கியமாக ஏழைகள். அவர்கள் இந்த அர்ச்சனையைக் கேட்கும் போது எவ்வளவு மன உளைச்சலுக்கு உள்ளாவார்கள் என நான் நினைக்கும் கையாலாகாத்தனத்தை எண்ணி வருந்தியதுண்டு.

ஏற்கனவே கிடைத்த பதிவுகளில் சில:

அ) பாலா – ஒப்ரா வின்ஃப்ரேயும் அமீர்கானும்

பெண் சிசுக் கொலை என்னும் தலைப்பில் அந்த 1.30 மணி ஆவணம், பெண் சிசுக் கொலை என்னும் தலைப்பை நன்றாக ஆராய்ந்து, அதன் காரணங்களை, அது பற்றிய தவறான எண்ணங்களை அகற்றி, பாதிக்கப் பட்டவர்களுடன் உரையாடி, அது சம்பந்தமாக மேலே செய்ய வேண்டிய காரியங்களைக் குறிப்பிட்டு நேயர்களையும் அதில் ஈடுபட அழைத்து –

ஆ) சிறில் அலெக்ஸ்கத்தோலிக்க மதம்-ஒரு கடிதம்

இ) பெருஞ்சுவர் சூழ்ந்த பெண்

ஈ) மறைக்கப்பட்ட பைபிள் :தோமையர் எழுதிய சுவிசேஷம்

முலைப்பால் குடிக்கும் சிசுக்களைக் கண்ட யேசு தன் சீடர்களிடம் “முலைகுடிக்கும் இந்தக் குழந்தைகள் சொர்க்கத்தில் நுழைபவர்களைப்போல “என்று சொன்னார் .

சீடர்கள் அவரிடம் “அப்படியானால் நாங்கள் குழந்தைகளாக மாறி சொர்க்கத்திற்குள் பிரவேசிக்கலாமா?” என்றார்கள் .

யேசு அவர்களிடம் “எப்போது நீங்கள் இரண்டை ஒன்றாக்குகிறீர்களோ ,எப்போது நீங்கள் அகம் புறம் போலவும் , புறம் அகம் போலவும் , மேலே இருப்பது கீழே இருப்பது போலவும் ஆகிறீர்களோ , எப்போது நீங்கள் ஆண் ஆணும் பெண் பெண்ணும் அல்லாமலாகும்படி ஆணையும் பெண்ணையும் ஒன்றாக ஆக்கிக் கொள்கிறீர்களோ எப்போது நீங்கள் ஒரு கண்ணுக்குப் பதிலாகப் பல கண்களும் , ஒரு கைக்குப் பதிலாக இன்னொரு கையும் ஒரு பாதத்துக்கு பதிலாக இன்னொரு பாதமும் ஒரு சமானத்தன்மைக்கு பதிலாக இன்னொரு சமானத்தன்மையும் உள்ளவர்களாகிறீர்களோ அப்போது நீங்கள் சொர்க்க ராஜ்யத்துக்குள் பிரவேசிப்பீர்கள்” என்றார் .

அமெரிக்கா: இந்தியக் கோவிலில் தீவிரவாதத் தாக்குதல்

அமெரிக்காவில் குழந்தைகளுக்கு பேன் வந்திருந்தால் பள்ளிக்கு செல்ல முடியாது. ஆனால், துப்பாக்கி வைத்திருந்தால் செல்ல முடியும். இந்தக் காலத்தில் பேன் வந்த தலைகளை பார்ப்பது அரிது. ஆனாலும், பேன் கொண்டு வந்த தொற்று நோய்களையும் கொள்ளை நோய்களையும் எண்ணிப் பார்த்தால் மனித வர்க்கத்தின் மீதான அதன் வீரியத்தை அறிய முடியும்.

காதிற்கு அருகேதான் பேன்களுக்கு விருப்பமான இடம். உறவு மேற்கொண்டவுடன் தன் முட்டைகளை நல்ல கோந்து போட்டு ஒட்டி வைக்கும். அவை குஞ்சு பொரித்து பன்மடங்காக பெருகும். எதுவுமே நமக்குத் தெரியாது. அது பாட்டுக்கு குடும்பம் நடத்தி வளரும். பேன்களினால் பறக்க முடியாது. எனவே, நேரடியான நெருக்கமான சந்திப்புகளில் தொற்றிக் கொள்ளும்.

பேன்கள் போலத்தான் வெள்ளை மேட்டிமையுணர்வாளர்கள். அந்தக் காலத்தில் இராணுவ கூடாரங்களிலும் போர் நடக்கும் இடங்களிலும் பேன் செழித்தது. முதலாம் உலகப் போரில் கால் பங்கு போர் வீரர்கள் நோய்வாய்ப்பட்டதற்கு பேன் மூலமாகப் பரவிய சுரங்களே காரணம்.

பத்தொன்பதாம் நூற்றாண்டிலும் ‘ஜெயில் ஜுரம்’ என்ற பெயரில் ஐரோப்பவிலும் வட அமெரிக்காவிலும் தலை விரித்தாடியது. நீதிபதிகளையும் பீடித்து கொன்று குவித்தது. நான் பேன்களைப் பற்றித்தான் சொல்லுகிறேன். வெள்ளை நிறத்தின் மீதான மீயுணர்விற்குள்ளேயே போகவில்லை.

ஆண்டி பயாடிக் போல் மார்டின் லூதர் கிங் வந்தாலும் இன்னும் பேன் நடமாட்டம் உண்டு.

அமெரிக்காவில் துப்பாக்கி வாங்குதல் எளிது. அதனினும் எளிது, அந்தத் துப்பாக்கிக்கு ஜோடியாக ஏகே47 வகை தானியங்கி துப்பாக்கிகள் சேர்த்து வாங்குவது. அதனினும் மிக எளிது, அந்தத் துப்பாக்கிகளுக்கான தோட்டாக்கள்.

இந்த மாதிரி சல்லிசான விலையில் தோட்டாக்களும் துப்பாக்கிகளும் வாங்கியவர்கள், அதை பயன்படுத்த இடம் தேடுகிறார்கள். வீடீயோ கேம்ஸில் பொய்யாக சுட்டு அலுத்துப் போனவர்கள், இரு கைகளிலும் ஆயுதம் ஏந்தி நிஜ மனிதர்களை சாகடிக்க விரும்புகிறார்கள்.

சிலருக்கு பள்ளிக்கூட வளாகம்.
சிலருக்கு கல்லூரி கேம்பஸ்.
சிலருக்கு நாடாளுமன்ற உறுப்பினரின் சொற்பொழிவு கூட்டம்.
புதியதாக இந்திய வழிபாட்டு ஆலயங்களும் இந்தப் பட்டியலில் சேர்ந்திருக்கிறது.

சாதாரணமாக வகுப்புகளில் எல்லோரும் கேலி செய்வதைப் பொறுக்காதவர்கள், துப்பாக்கி தாங்கி, கிண்டல் செய்தவர்களையும் நடுவில் தென்படுபவர்களையும் கொன்று குவிப்பார். ஆராய்ச்சி மாணவர், மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று இந்த மாதிரி மனச்சிதைவுக்கு உள்ளானோர் கொல்வது சகஜம்.

பத்தாவது படிக்கும் பள்ளிக்கூடமும் பி.எச்டி. செய்யும் பல்கலைக்கழகமும் பிணக்கிடங்காக ஆவது அமெரிக்காவில் மாதம் ஒரு முறையோ அல்லது இரு முறையோ நடக்கிறது.

ஆனால், இந்தியர்களை குறிவைத்து தாக்குவது இதுவே முதல் முறை.

ஐரோப்பாவில் நடந்தது மாதிரி வெள்ளைத் தோலின் உன்னதத்தை நிலை நாட்ட நடந்த தாக்குதலில் இது அமெரிக்காவின் முறை.

சீக்கியர்களின் கோயிலில் ஒருவர் புகுந்து துப்பாக்கிச்சூடு நடத்தியதில் துப்பாக்கிச்சூடு நடத்திய ஒருவன் உள்பட 7 பேர் பலியாயினர். அமெரிக்காவில் கடந்த இரு வாரங்களுக்கு முன் பேட்மேன் படம் திரையிடப்பட்ட சினிமா தியேட்டரில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் படம் பார்த்துக் கொண்டிருந்த 12 பேர் உயிர் இழந்த சுவடு மறைவதற்குள் ‌சீக்கிய கோயிலான குருத்துவாராவில் அடுத்த சம்பவம் நடந்துள்ளது.

இறந்தவர்கள் பாடு தேவலாம். இந்த மாதிரி ஃபையரிங்கில் மாட்டி கை கால் இழந்தவர்களின் பாடு பேஜார். இது வரை நல்ல திடகாத்திரமாக இருந்துவிட்டு, திடீரென்று ஒரு நாளில் டிஸ்ஏபிள்ட் ஆகிறார்கள். சம்பளம் குறைப்பு, வேலையில் பாதிப்பு என்று சீரழிகிறார்கள்.

வெள்ளை மேட்டிமையை நம்புபவர்களுக்கு பல பிரச்சினை.

கருப்பின ஒபாமா தலைவராக இருப்பது சின்ன விஷயம். தங்களின் ராஜ்ஜியத்தில் கறுப்பர்கள் அடிமைகளாக இல்லாதது நிறையவே வருத்தமான விஷயம். அண்டை நாடுகளான மெக்சிகோவில் இருந்து அயல்நாட்டின் லத்தீன் அமெரிக்கர்கள், உள்ளே நுழைவது சினம் தரும் விஷயம். எல்லாவற்றிற்கும் மேலாக இஸ்லாமியர்களையும் அமெரிக்காவில் சுதந்திரமாக உலவ விடுவது உச்சந்தலை வரைக்கும் உசுப்பேற்றி இரத்த நாளங்களை முறுக்கேற்றி உள்ளூர் தீவிரவாதத்தை உருவாக்கும் விஷயம்.

கோபம் தலைக்கேறினால் எந்த மதமும் கண்ணுக்குத் தெரிவதில்லை. டர்பன் கட்டியவர் எல்லாம் முஸ்லீம்; தாடி வளர்த்தவர் எல்லாம் ஒசாமா பின் லாடன்.

எடுத்தார் துப்பாக்கியை… கொன்றார் சீக்கியர்களை!

இந்தியர்கள் மீதான வெறுப்பிற்கும் பல காரணங்களை சொல்லலாம்.

எச்1பி விசாவில் வந்து நூறாயிரத்திற்கு மேல் வாங்க வேண்டிய சம்பளத்திற்கு பதில் பாதி விலையில் நிறைவான வேலை செய்து, மண்ணின் மைந்தருக்கு வேலையில்லாத் திண்டாட்டத்தை உருவாக்குவது…

சொகுசான கார்; ஆசைக்கொரு பையன்; ஆஸ்திக்கொரு பெண் என்று மகிழ்ச்சியாக உலவுவது…

ஆஃப்ஷோரிங், அவிட்சோர்சிங் என்று தினந்தோறும் தொலைக்காட்சி பிரச்சாரத்தை பார்ப்பது…

இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் எல்லாம் அகண்ட பாரதமாக நினைப்பது…

தன்னுடைய சர்ச்சில் தென்படாதது…

கடவுளைத் தொழ கோவிலுக்கு சென்றால், இனி கோவிலிலேயே சமாதி ஆகுவோம் என்று பயம் வரும். அதுவும் அந்த திரிசூலத்துடன் மகிஷாசுர மர்த்தினியை பார்க்கும்போது காங்கிரஸ் ஊழலுக்கு எதிராக நின்ற அன்னா ஹசாரே போல் நம்பிக்கையும் வரலாம்.

1945,ஆகஸ்ட் மாதம், 6-ம் தேதி, ஜப்பானின் ஹிரோஷிமா மற்றும் நாகசாகி மீது அமெரிக்கா அணுகுண்டு வீசி தாக்குதல் நடத்தியது. மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர் எரிந்து சாம்பலாயினர்.மேலும் கதிர்வீச்சால், பல்லாயிரக்கணக்கானோர் நோயால் பாதிக்கப்பட்டனர்.

அன்று உலகப் போர் முடிவிற்கு வந்தது. மேலாதிக்க மனப்பான்மை முடிவிற்கு வருவது எக்காலமோ!

நியு யார்க் நகரத்துவம்

முந்தைய ட்வீட்ஸ்: கச்சேரி – பட்டுத்துவம்

http://twitter.com/#!/snapjudge/status/140438871124086784
http://twitter.com/#!/snapjudge/status/140437811554816000
http://twitter.com/#!/snapjudge/status/139302935413792768
http://twitter.com/#!/snapjudge/status/109822758334119936
http://twitter.com/#!/snapjudge/status/84093662040035328
http://twitter.com/#!/snapjudge/status/83155807893585920
http://twitter.com/#!/snapjudge/status/69867402753605632
http://twitter.com/#!/snapjudge/status/66452802750255104
http://twitter.com/#!/snapjudge/status/25929786018766848

பாரதம் – அருந்ததித்துவம்

முந்தைய ட்வீட்ஸ்: பாட்டி – கோணங்கித்துவம்

http://twitter.com/#!/snapjudge/status/28457309344636928
http://twitter.com/#!/snapjudge/status/90837635865657345
http://twitter.com/#!/techrsr/status/90792818414600193
http://twitter.com/#!/snapjudge/status/106063037529735168
http://twitter.com/#!/snapjudge/status/105956968778309632
http://twitter.com/#!/snapjudge/status/107477912181145601
http://twitter.com/#!/snapjudge/status/107478615704354817
http://twitter.com/#!/snapjudge/status/107480807161081856
http://twitter.com/#!/snapjudge/status/105954223014936576
http://twitter.com/#!/snapjudge/status/103313101776101376

சூதாட்டம் – இருபதுத்துவம்

முந்தைய ட்வீட்ஸ் தொகுப்பு: ட்விட்டரும் நானும் (2)

http://twitter.com/#!/snapjudge/status/54903018038104065
http://twitter.com/#!/writerpara/status/54226168085360640
http://twitter.com/#!/snapjudge/status/54226479332069376
http://twitter.com/#!/snapjudge/status/54217823819546624
http://twitter.com/#!/snapjudge/status/54213601187205120
http://twitter.com/#!/snapjudge/status/54213335381573632
http://twitter.com/#!/snapjudge/status/54210123412930560
http://twitter.com/#!/snapjudge/status/54198400379392001
http://twitter.com/#!/snapjudge/status/54189480202076163
http://twitter.com/#!/snapjudge/status/54188632029925377
http://twitter.com/#!/snapjudge/status/54167139350888449
http://twitter.com/#!/snapjudge/status/54164963031400448
http://twitter.com/#!/snapjudge/status/54161211050311680
http://twitter.com/#!/snapjudge/status/54152895637094400
http://twitter.com/#!/snapjudge/status/54149115784855552
http://twitter.com/#!/snapjudge/status/54146559855697920
http://twitter.com/#!/snapjudge/status/54145866642100224
http://twitter.com/#!/snapjudge/status/54144336492888064
http://twitter.com/#!/snapjudge/status/54143336524677120
http://twitter.com/#!/snapjudge/status/54135831354556417
http://twitter.com/#!/snapjudge/status/54139015644983296
http://twitter.com/#!/snapjudge/status/54136867972591616
http://twitter.com/#!/snapjudge/status/54133130109526016
http://twitter.com/#!/snapjudge/status/54132370466553856
http://twitter.com/#!/snapjudge/status/54129114726150144
http://twitter.com/#!/snapjudge/status/54124683116818432
http://twitter.com/#!/snapjudge/status/54123752539164672
http://twitter.com/#!/snapjudge/status/54122292044763136
http://twitter.com/#!/snapjudge/status/54121828318318592
http://twitter.com/#!/snapjudge/status/54120715615617024
http://twitter.com/#!/snapjudge/status/54119168714342400
http://twitter.com/#!/snapjudge/status/54118470194958337
http://twitter.com/#!/snapjudge/status/54115845051383808
http://twitter.com/#!/snapjudge/status/54114371827269632
http://twitter.com/#!/snapjudge/status/54111978167353344
http://twitter.com/#!/snapjudge/status/54110589462659073
http://twitter.com/#!/snapjudge/status/54109319439990786
http://twitter.com/#!/snapjudge/status/54130021735993344
http://twitter.com/#!/snapjudge/status/53439389321269248

It happens only in India: பத்து அதிசயங்கள்

இந்தியாவில் மட்டுமே இது சாத்தியம். நம்பமுடியவில்லை  பத்து வினோத நகைச்சுவை நேரங்கள் + கதாமாந்தர்களின் தொகுப்பு:

  1. மொத்த வருவாயில் இருபது சதவீதத்துக்கு மேல் இவர்கள் கபளீகரம் செய்கிறார்கள். ஜாம் ஜாம் ரிடயர்மெண்ட்; அந்த ஓய்வில் கை நிறைய பென்ஷன். ஆனால், வேலை நேரத்தில் கை அசைக்கக் கூட லஞ்சம் கோருவார்கள்: அரசு ஊழியர் / ஐ ஏ எஸ் ஆபீசர்
  2. சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு சிறப்பிதழ் கொண்டு வருவார்கள்; நேற்று பிறந்த பாரதியாருக்கு ‘நீயா/நானா’ டைட்டில் சாங்கில் கூட சான்ஸ் கிடைக்காது. : மீடியா / தொலைக்காட்சி ஊடகங்கள்.
  3. ஊழலுக்கு எதிராக ‘இந்தியன்’, ‘ரமணா’க்கள் வெள்ளி விழா கொண்டாடுவோம். அன்னா ஹஜாரே வைபவம் அனுசரிப்போம். ஆனால், அவசரத்திற்கு கொள்ளிக்கட்டையைக் கொண்டு தலையை சொறிகிறோம்: லஞ்சம் / கையூட்டு.
  4. ருபாயா சயீத் கடத்தப்பட்டால் அரசாங்கம் பதை பதைக்கிறது. உடனடியாக, மண்டல் கமிஷன் நாயகர் விபி சிங் செயலில் இறங்குகிறார். மந்திரி மகளை விடுவிக்க பணமும், பொருளும், தீவிரவாதிகளும் தரப்படுகிறது: வாரிசு /அதிகார வர்க்கம்.
  5. மஞ்சள், துளசி, மூலிகை காலங்காலமாக இருக்கும்; இருந்தாலும் நச்சுப் பொருள் கொண்ட ஜான்சன் & ஜான்சன் கொண்டு பிஞ்சுகளைக் குளிப்பாட்டுகிறோம். சந்திராயன் கொண்டு கண்டுபிடித்தாலும் கிணற்றிலிட்ட விளக்காக சந்தைப்படுத்த மாட்டோம்: நய்பால்த்தனம் / கலாம் அடக்கம்.
  6. நூறாண்டுகளுக்கு ஒரு முறை லிங்கனும் கென்னடியும் கொல்லப்பட்டால் அமெரிக்கா; பத்தாண்டுக்கு ஒரு முறை லால் பகதூர் சாஸ்திரி, இந்திரா, ராஜீவ் கொய்யப்பட்டால் இந்தியா: உளவுத்துறை / தேசிய பாதுகாப்பு.
  7. ஓ பன்னீர்செல்வம் முதலமைச்சராக இருப்பார்; சசிகலா & கோ கவனிக்கப்படுவார். அது ஜெயலலிதாவின் தியாகமாக கருதப்படவில்லை. ஆனால், இத்தாலியின் போஃபர்ஸ் சோனியா இன்றும் செம்மல்: தலையாட்டி பொம்மை / அனுதாப அலை.
  8. சிவில் போர் நடக்கிறது; பிரச்சினை சுமூகமாகிறது. ஆக்குபை வால் ஸ்ட்ரீட் பிரகடனமாகிறது; 99% குரல் ஒலிக்கிறது. தலித், முஸ்லீம், சிறுபான்மை உரிமை நசுக்கப்பட்டது; மாயாவதி, திருமா, கருணாநிதி பில் கேட்ஸ் ஆகிறார்: சாதி / இனம் / மதம் / குலம்.
  9. அமெரிக்க அதிபர் ஆக வேண்டுமானால், இவாஞ்சலிக்க கிறித்துவராக இருக்க வேண்டும்; கருத்தடையை ஆதரிக்கக் கூடாது; அறிவியலை நம்பக் கூடாது; இந்தியாவில் கடவுளையும் நவக்கிரகங்களையும் நம்பிக் கொண்டே டெஸ்ட் ட்யூப் பேபி முதல் இதயமாற்று வரை முன்னோடி மருத்துவ முறை சாத்தியம்: பரிசோதனை எலி / பகுத்தற்வு பாசறை.
  10. சொல்லி அலுத்து விட்டது. வருடம் மாறலாம்; காலம் செல்லலாம்; பாகிஸ்தான் கூட பாய் பாய் ஆகிவிடலாம். பஞ்சாப் போச்சு; காஷ்மீர் வந்தது! டும்!! டும்!!! : தீவிரவாதம் / பயங்கரவாதம்.

புதிய தலைமுறை: தாய் மண்ணே வணக்கம்

புதிய தலைமுறையின் சுதந்திர தின ஸ்பெஷல் (1)

புதிய தலைமுறை: தாய் மண்ணே வணக்கம்: விடுதலை நாள் வெளியீடு (2)

”இந்தியா காலேஜில் போட்டா, இவ்ளோ ஆகாது இல்ல? சீட்டும் ஈஸியா கெடச்சிடும்!”

குளிர்கால கிறிஸ்துமஸ் பார்ட்டி ஆகட்டும்; கோடைகால பிக்னிக் ஆகட்டும். அமெரிக்காவில் வாழும் எங்களிடையே இதுதான் இன்றைய பேச்சு.

’தாய் மண்ணே வணக்கம்’ என்று வணங்க மட்டும் செய்யாமல், தாங்கள் கற்ற மண்ணிலேயே தங்கள் மகவுகளும் கல்வி கற்க அனுப்புவதுதான் தற்போதைய தேசி ட்ரெண்ட்.

பள்ளிக்காலம் வரை குடும்பச்சூழலில் ஹிட்லர்தனமான கெடுபிடிகளுடன் வளர்ந்த பையன், பதின்ம வயதில் கல்லூரியில் நுழையும் சமயத்தில்தான் கட்டுப்பாடுகளற்ற முழு சுதந்திரத்தையும் அதற்கு ஈடு கொடுக்கும் பணப்ப்புழக்கத்தையும் காண்கிறான். பெண்களுக்கு நேரும் நிர்ப்பந்த குழப்பங்களும் இருபாலார் இணைந்து தங்கும் விடுதிகளில் சேர்த்துவிட வேண்டிய விருப்பத்தேர்வின்மையும் பெற்றோரை அலைக்கழிக்கிறது.

இதற்கான குறுகிய கால தீர்வாக இந்தியாவிற்கு மூட்டை கட்டி அனுப்பி விடுகிறோம்.

‘லேட்டாக வரீங்க… குழந்தைகள கவனிக்கிறதேயில்ல!’ குற்றச்சாட்டுகளிலிருந்து விடுதலை கிடைக்கிறது. நம்மை நன்றாக வளர்த்து முதலீட்டுக்குரிய விருப்ப வஸ்துவாக்கிய தாத்தா, பாட்டியின் கைகளில் பேத்தி, பேரன்கள் ஒழுங்காக வளர்வார்கள் என்னும் நம்பிக்கையும் உண்டு.

மொத்தத்தில் பணங்காச்சி இயந்திரங்களை உருவாக்கும் புனிதத்தலம். காந்தியும் விவேகாந்தரும் பின்பற்றும் நிலையான ஆன்மிக மணம் கவழும் அமுதமனம். பக்கத்து வீட்டு மாமாவும் ஒன்றுவிட்ட ஊர்க்கார சொந்தமும் எப்பொழுதும் கண்காணித்திருக்கும் கோள்மூட்டும் விழிப்புணர்வு கேந்திரம்.

‘உன் வாழ்க்கை உன் கையில்’ என்று முடிவெடுக்கும் உரிமையை இந்திய நடுத்தரவர்க்கம் கொடுக்க ஆரம்பித்துவிட்டது. ஆனால், தாங்கள் புலம்பெயர்ந்தபோது எப்படிப்பட்ட எண்ணங்களை வைத்திருந்தோமோ, அப்படியான விழுமியங்களையே தொடர்ந்து தேங்கிப் போய்விட்டிருக்கிறோம்.

‘தினமும் கோவிலுக்குப் போய் வருவாள். சிவ சேனா மாதிரி நிறைய பேர் இருக்கிறார்கள். குட்டைப் பாவாடை எல்லாம் போட்டுக் கொள்ள மாட்டாள்.’ – இது பெண்ணைப் பெற்றவர்.

‘இங்கே படிப்பதையே பசங்க ரொம்ப கேவலமா நெனக்கிறாங்க. சிரத்தையா பரீட்சை எழுதறவன கீக்னு சொல்லி அந்நியமாக்கி ஒதுக்கிடறாங்க. அவன் கே ஆயிடுவானோன்னு பயமா இருக்கு. அவனுக்கு ஃப்ரெண்ட்ஸே இல்லியே!’

இந்தியாவில் ஆண் குழந்தையைப் பெற்றவர் இப்படியெல்லாம் கவலை கொள்வதில்லை. தற்பால்விரும்பியாக இருப்பது அவரவர் விருப்பமென்று இந்தியப் பெருநகரங்கள் ஒப்புக் கொண்டுவிடலாம். ஆனால், அமெரிக்க வாழ் இந்தியருக்கு ஒவ்வாமை கலந்த அதிர்ச்சி தருவதாகவே ஒரினச்சேர்க்கை அமைந்துள்ளது.

இந்தியர்கள் காலப்போக்கிற்கு ஏற்ப மாற்றிக் கொள்வதில் வல்லுநர்கள். டார்வின் சொன்ன பரிணாம வளர்ச்சியில் முழு நம்பிக்கை கொண்ட அறிவியலாளர்கள். சிவன் தலையில் கங்கை இருப்பதை கும்பிட்டுக் கொண்டே அணை கட்டுவார்கள். அப்படியே மூன்றாம் பிறையை அரோகரா போட்டுக் கொண்டே சந்திரனில் நீர் இருப்பதை உலகெலாம் ஓதுவார்கள்.

இந்த விஞ்ஞானமும் மெய்ஞானமும் கலந்துருகும் கலயம் எனக்கு ரொம்பவேப் பிடித்திருக்கிறது. அந்த மாய யதார்த்தத்தைத் தேடித்தான் மக்கட்செல்வங்களை இந்தியாவைத் திரும்ப அனுப்புகிறோமோ?!