Tag Archives: Freedom

அனேக அகமுடையார்: யானம் சிறுகதை விமர்சனம்

ஜெயமோகன் அவ்வப்போது சிறுகதைகளை வெளியிடுவது மகிழ்ச்சியாக இருக்கிறது. அவரின் வயதில் அல்லது அவரைப் போன்ற ஆளுமையை அடைந்த பிறகு அவரின் சமகாலத்தவரோ, அவருக்கு முந்தைய இலக்கிய ஜாம்பவான்களோ அத்திப் பூத்தது போலத்தான் சிறுகதைகள் எழுதினார்கள். அவர்கள் நாவல் எழுதுவதில் மட்டுமே கவனம் செலுத்தினார்கள். அல்லது பேசாமல் இருப்பதே கௌரவத்தைக் காப்பாற்றும் என்று அமைதி காத்தார்கள்.

நான் நினைத்தது – ஜெயகாந்தன், சுந்தர ராமசாமி, வண்ணதாசன், வண்ணநிலவன், எஸ். ராமகிருஷ்ணன் போன்றோர். சுஜாதா மட்டும் விதிவிலக்கோ!?

இந்த எண்ணம் தவறுதலாக இருக்கலாம். இருபதுகளில் துவங்கி அறுபது வயது தாண்டியும் எந்த எழுத்தாளராவது தொடர்ச்சியாக சிறுகதைகளை தொண்ணூறுகளில், 2000களில் வெளியிட்டார்களா?
தீபாவளி சிறப்பிதழ்கள் தவிர்த்து அதற்கான பத்திரிகைகள் இருந்ததா என்பதைக் குறித்த என் எண்ணத்தையும் திருத்தவும்.

நிற்க.

யானம் (சிறுகதை) | எழுத்தாளர் ஜெயமோகன் (jeyamohan.in)

இந்தப் பதிவு இலக்கியகர்த்தாக்களின் பிற்கால படைப்பூக்கம் பற்றியது அல்ல. அமெரிக்காவில் வசிக்காத ஒருவர் அமெரிக்காவைப் பற்றி புனைவு எழுதலாமா என்பதைப் பற்றியும் அல்ல. எனினும், அதையும் நோக்குவோம்.

ஒரே ஒரு மேற்கோள்: “என்ஜாய் பண்றாங்களோ இல்லியோ, இது ஸ்கூலிலே பிரெஸ்டிஜ் இஷ்யூவா இருக்கு”

பொத்தாம்பொதுவாக ஜல்லியடிப்பது வாத்தியாரின் வித்தை. ஜெயமோகனின் சிறுகதைகளில் ஒற்றை வரி தீர்ப்பு கொடுத்து மொத்த சமுதாயத்தை சுருக்குவதும் அவ்வப்போது செய்வதுதான். இதிலும் சாமர்த்தியமாக கதாபாத்திரத்தின் வசனமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. இதே போல் கதை நெடுக மனைவியும் கணவனும் கனமான உரையாடல்களில் ஈடுபடுகிறார்கள்.

கார் என்பது எல்லைகளில்லா சுதந்திரம். நான்கு சுவருக்குள் அடைபட்டுக் கிடக்கும் வீட்டில் இருந்தும், உடன் இருக்கும் நபர்களிடமிருந்தும் கட்டற்ற விடுதலை. பிடித்த பாடல். நினைத்த வேகம். இலக்கற்ற பாதை. அமெரிக்காவில் ஆண்டி முதல் அரசர் வரை எவரும் எளிதில் வாங்கி, உடனடியாக ஊர்ச்சுற்ற, இல்லமாக குடியிருக்க என்று நினைத்த மாதிரிக்கு பயன்படுத்தும் மூலமுதலாதாரப்பொருள்.

யானம் சிறுகதையில் நான்கைந்து நல்ல பொறிகள், துவக்க கண்ணிகள் இருக்கின்றன:
1. அந்தத் தற்கொலை எண்ணம்
2. பச்சை விளக்கிற்காக காத்திருக்கும்போது(ம்) பக்கத்து வண்டிகளை எட்டிப் பார்ப்பது
3. விடுமுறை விட்டால் காரை எடுத்துக் கொண்டு எங்காவது கிளம்புவது

அதை விட அந்த இடங்களை உளவியல் ரீதியாக தீர்க்கமாகவோ சம்பவங்களின் கோர்வையில் ஆழமாகவோ உள்ளே செல்லாமல் ஹெலிகாப்டரில் பறக்கும் அவசரத்துடன் தாண்டி விடுகிறார். அதை விட ஆபத்தான பிரதேசம் – இந்திய சாலைகளையும் போக்குவரத்தையும் அமெரிக்க மக்களோடும் இயந்திரங்களோடும் ஒப்பிடும் பிரதேசங்கள். அவை இன்னும் தேய்வழக்காக அலுமினிய பிரகாசத்துடன் மின்னிடுகின்றன.

காரில் இருக்கும் விடலைகளும் பாந்தன்களும் இன்றைய காலத்தில் செல்பேசியில் மூழ்குவார்களேத் தவிர இந்த மாதிரி தத்துவபூர்வமான விவாதங்களுக்குள் செல்லமாட்டார்கள். கதைதானே? ஜெயமோகன் கற்பனைதானே? அரட்டை அடிக்கக் கூடாதா என்ன!?

எனினும், கதையின் அடிநாதம் முக்கியமான ஒன்றைச் சுட்டுகிறது.

இந்தக் காலத் தம்பதியினருக்கு விவாகரத்தில் விருப்பமில்லை. இல்லறமும் போரடிக்கிறது. ஒருவனுக்கு ஒருத்தி என்னும் பத்தாம்பசலி கொள்கைகளிலும் கிஞ்சித்தும் நம்பிக்கை இல்லை.

அவர்கள் திறந்த வாழ்க்கையை விரும்புகிறார்கள். அன்றாடம் ஒரேயொருவடன் தாம்பத்தியம் வைத்துக் கொள்வதினால் வரும் அலுப்புகளை உணர்ந்தவர்கள்.

”நியு யார்க்கர்” கட்டுரையில் இருந்து நறுக்:

So many rules! “American Poly” reveals Americans to be very American. Good Puritans, we made marriage into work and non-monogamy into even more work—something that requires scheduling software, self-help manuals, even networking events. Presumably, participants could at least skip the icebreakers.

https://www.newyorker.com/magazine/2024/01/01/american-poly-christopher-gleason-book-review-more-a-memoir-of-open-marriage-molly-roden-winter

”அன்புள்ள அல்லி” கேள்வியில் இருந்து இன்னொரு மேற்கோள்:

My nesting partner of a decade and I opened our relationship about four years ago, and for the first three years, we were ethically non-monogamous, but not poly. We’re pretty parallel, but we’re recently trying garden party style for big events… the polycule… metamour…

https://slate.com/human-interest/2024/01/birthday-plan-relationships-sex-advice.html

மணிரத்னம் ஓகே கண்மணி எடுத்தது போல், அனேக அகமுடையார் கொள்கைகளை ஜனரஞ்சகமாக்க இன்றைய கல்கித்தனமான கதை. மணி ரத்தினம் சினிமா போல் இதுவும் ஒட்டிக்கோ/கட்டிக்கோ வேட்டியாக பல்லிளிக்கிறது.

உங்கள் வாசிப்பில் என்ன உணர்ந்தீர்கள்?

IPL, LPL, LTTE, IPKF – T20 and Team Names

பத்து வயதிருக்கும். வீட்டில் எதையும் படிக்கும் சுதந்திரம். அந்த அட்டை கிழிக்கப்பட்ட நூல் வாசிக்கக் கிடைத்தது. ரஜினியின் படமான ‘தர்ம் யுத்தம்’ போல் அந்த 1983 கொலைகாரர்கள், கறுப்பு ஜூலை அராஜகவாதிகள் எல்லோரையும் தீர்த்துக் கட்ட எவராவது பிறக்க மாட்டார்களாக என மனம் துடிதுடிக்க வைத்த புத்தகம். கற்பனையில் பல்வேறு சண்டைகளை எண்ணிப் பார்த்து சமாதானம் அடைவேன்.

இன்றைய காலகட்டத்தில் இலங்கை பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் நடத்துகிறது. அதற்கான அணிகளின் பெயர்களில் இயக்கங்களின் பெயரைப் போட்டால் எப்படி இருக்கும்!?

இலங்கையில் இருக்கும் தமிழருக்கான சுதந்திரப் போராட்ட வரலாற்றில் பல நிலைகளில் பல்வேறு காலகட்டங்களில் இயக்கங்கள் செயல்பட்டன. ஈழ இயக்கங்களில் புகழ்பெற்றவற்றின் பெயர்கள் (அகரவரிசைப்படி):

1. ஈழ தேசிய விடுதலை முன்னணி (ஈ.என்.டி.எல்.எஃப். – Eelam National Democratic Liberation Front (ENDLF))
2. ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி) (Eelam People Democratic Party (EPDP))
3. ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னனி (ஈ.பிஆர்.எல்.எஃப். – Eelam People’s Revolutionary Liberation Front (EPRLF))
4. ஈழ புரட்சிகர மாணவர் இயக்கம் (ஈரோஸ் – Eelam Revolutionary Organization of Students (EROS) – ஈ.ஆர்.ஓ.எஸ்.)
5. தமிழீழ விடுதலைப் புலிகள் (எல்.டி.டி.ஈ – Liberation Tigers of Tamil Eelam (LTTE) – எல்.ரி.ரி.ஈ.)
6. தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (ப்ளாட் (அ) புளொட் – People’s Liberation Organization of Tamil Eelam (PLOTE) – பி.எல்.ஒ.டி.ஈ.)
7. தமிழீழ விடுதலை இயக்கம் (டெலொ (அ) ரெலா – Tamil Eelam Liberation Organization (TELO) – டெலோ)
8. தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகள் (டி.எம்.வி.பி. – Tamileela Makkal Viduthalai Pulikal (TMVP))
9. தமிழர் விடுதலைக் கூட்டணி (அரசியல் கட்சி) (டுல்ஃப் (அ) ரி.யு.எல்.எப் – Tamil United Liberation Front (TULF) – டி.யு. எல்.எஃப்)

இலங்கை ப்ரீமியர் லீக் எல்.பி.எல் டி20 அணிகளின் பெயர்கள்:

1. Colombo Strikers – கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் என்பதற்கு பதில்: கொழும்பு கொமாண்டோக்க‌ள்
2. Dambulla Aura – டம்புல்லா ஆரா என்பதற்கு பதில்: தம்புள்ளை துள்ளர்கள்
3. Galle Titans – கேலே டைட்டன்ஸ் என்பதற்கு பதில்: கல்லே கெரில்லாக்கள்
4. Jaffna Kings – ஜாஃப்னா கிங்ஸ் என்பதற்கு பதில்: யாழ்ப்பாண புலிகள்
5. B-Love Kandy – கண்டி பி-லவ் என்பதற்கு பதில்: கண்டி கழுகுகள்

இன்னும் ஆர்வமாக இலங்கை டிவெண்டி 20 பார்ப்போமோ?

A Visit with Mahatma Gandhi: 1924: Atlantic Archives

0_Atlantic_Weekly_Archives_Bharat_Freedom_Intro

1_Mahatma_Gandhi_Hindu_Muslim_Untouchability_Pariah_Dalits

2_MK_Gandhi_India_Visits_Freedom_Non_Violence

3_Mahatma_Mohandas_Karamchand_Gandi_India_Travelogue_Experiences

4_Mahatma_Gandhi_1920_Atlantic_India_Independence

சுதந்திர மென்பொருள், ஆய்வுக் கட்டுரை, இலவச விடுதலை

ஆரன் ஷ்வார்ஸ் தற்கொலை வருத்தமும் கோபமும் பயமும் தருகிறது.

எம்.ஐ.டி. ஆய்வுகளை உலகிற்கு தர விரும்புகிறார். பல்கலைக்கழக பேராசிரியர்களின் மேட்டர்களை எல்லோரும் படித்து பயன்பெற விழைகிறார். ராமானுஜர் போல் தான் பெற்றதை உலகெங்கும் பரப்ப நினைக்கிறார். சந்தா கட்டி காசு கொடுத்தால்தான் வாசல் திறக்கும் என்பதை எதிர்த்தார்.

அதற்காக முப்பத்தைந்தாண்டு கடுங்காவல் தண்டனை. சில மில்லியன் டாலர் அபராதம் என்று தில்லி வெறியர்களை தாக்கும் பொதுசனம் போல் எம்.ஐ.டி. பல்கலையும் நடுவண் அரசும் வழக்கு தொடுக்கிறது.

இருபதுகளில் உள்ள ஆராய்ச்சியாளர் ஜெயிலுக்குப் போனால்… தற்கொலை செய்துகொண்டுவிட்டார்

லாரென்ஸ் கீயாட் (1939-2012)

Lawrence_Guyot_Civil_Rights_Activist_Leaders_Voting_Rights_Mississippi_MS_Citizens_USA_Obamaஇன்றைக்கு ஒபாமாவை நினைத்தால் நிறைவாக இருக்கிறது. நிற ஒற்றுமையை எண்ணி மகிழ இயலுகிறது. சமத்துவத்தை இயல்பாக கொண்டாட முடிகிறது.

ஐம்பதாண்டுகள் முன்பு வரை இந்த நிலையா? அமெரிக்காவில் கறுப்பு நிறத் தோல் கொண்டவர்களும் வெள்ளையர்களும் சரிசமமாக புழங்கினார்களா?

நாம் பிறப்பதற்கு முன் நமக்காக போராடினவர்களில் லாரன்ஸ் கீயாட் முக்கியமானவர். கடந்த வாரம் இயற்கை எய்தினார். நிற வெறி மிக மோசமாக இருந்த மிஸிசிப்பி மாநிலத்தில் சமூக நீதிக்காக கொடி உயர்த்தியவர். கருப்பர்களுக்கு வாக்குரிமை கிடைப்பதற்காக உழைத்தவர். தற்போது பராக் ஒபாமா தலைவராக இருக்கும் டெமொகிராடிக் கட்சியில் விளங்கிய இன வேறுபாடுகளை நீக்குவதற்காக முனைந்து செயல்பட்டவர்.

லாரன்சின் துணிச்சலுக்கும் கறுப்பின விடுதலைக்கான செயல்பாட்டுக்கும் பல நிகழ்வுகளையும் போராட்டங்களையும் உதாரணமாக சொல்லலாம். ஃபேனி லூ ஹேமரும் ஹேமரின் இரண்டு கூட்டாளிகளும் கைதானவுடன் நடந்த நிகழ்ச்சியை நியு யார்க் டைம்ஸ் ஆவணப்படுத்தி இருக்கிறது.

Lawrence_Young_Mississippi_MS_Deep_South_MLK_guyot

1963ஆம் ஆண்டின் ஜூன் மாதம். வெள்ளையர்களுக்கு ஒரு வாயில்; கறுப்பர்களுக்கு எந்த நுழைவாயிலும் இல்லை என்னும் நிலை. அமெரிக்காவின் தெற்கு மாநிலங்களில் மிகக் கடுமையான இனப் பாகுபாடு விளங்கிய காலகட்டம். மிசிசிப்பி பேருந்து நிலையத்தை வெள்ளைத் தோல் நிறத்தவர்கள் மட்டுமே பயன்படுத்தலாம். அப்போது ஹேமரும் அவரது நண்பர்களும் தடையை மீறி, பிரவேசம் செய்ய முயல்கிறார்கள். கைதாகிறார்கள்.

அவர்களை ஜாமீனில் எடுக்க கீயாட் செல்கிறார். ஹேமரும் அவர் கூட வந்தவர்களும் மோசமாக கையாளப் பட்டிருந்தார்கள். கைது செய்வதே சட்டமீறல் எனினும், குற்றஞ்சாட்டப்பட்டவர்களை நடத்திய விதம் கொடூரமாக இருந்ததைக் குறித்து தட்டிக் கேட்கிறார் கீயாட்.

‘நீ யாருடா சொல்ல வந்துட்டே’ என்னும் தொனியில் அபிமன்யு கீயாட்டை ஒன்பது காவலர்கள் சூழ்கிறார்கள். தங்கள் துப்பாக்கியை வைத்து அச்சுறுத்துகிறார்கள். கிடைத்த ஆயுதங்களைக் கொண்டு சராமாரியாகத் தாக்குகிறார்கள். துளி ஆடை கூட இல்லாமல் அம்மணமாக்கி அசிங்கப்படுத்தியதாகக் கொக்கரிகிறார்கள். அவரின் ஆண்குறியை நசுக்கி விட எத்தனிக்கிறார்கள்.

குற்றுயிரும் கொலையுயிருமாக கீயாட் இருப்பதைப் பார்த்து அஞ்சிய மருத்துவர்கள், சித்திரவதையை நிறுத்துமாறு இறைஞ்சினார்கள். சித்திரவதையைத் தொடர கீயாட்டையும் கைது செய்து ஜெயிலில் அடைக்கிறார்கள். காவலர்களின் உடல்வதை நீடிக்கிறது.

பெயில் எடுக்க வந்த கீயாட்டை முட்டிக்கு முட்டி தட்டுகிறார்கள். அப்படியானால் அவருக்கு யார் பிணை கொடுப்பார்கள்? எப்படி வெளியே வர முடியும்? எவ்வாறு ஹேமரும் கீயாட்டும் தங்கள் அனுபவங்களை பிறருக்கு சொல்ல முடியும்?

இந்த நிலையில் வேண்டுமென்றே ஜெயில் கதவை பூட்டாமல் திறந்து வைத்து, கூடவே கத்தியையும் போட்டு வைக்கிறார்கள். தூண்டிலில் மீன் மாட்டினால், குரல்வளையை அழுத்து துண்டம் போட்டு, உலகிற்கு தங்கள் பக்க கட்டுக்கதையை விற்று விடலாம். ஆனால், கீயாட் மாட்டவில்லை.

ஹோவெல் ரெயின்ஸ் எழுதிய My Soul Is Rested: The Story of the Civil Rights Movement in the Deep South (1977) புத்தகத்தில் இந்த கொடூரத்தை பகிர்ந்து இருக்கிறார் கீயாட்.

மிஸிஸிப்பியின் ஜாக்ஸன் நகரத்தில் கீயாட்டின் தோழரான மெட்கர் எவர்ஸ் கொலை செய்யப்படுகிறார். அதன் பின், கீயாட்டும் உடனடியாக மரணமடைந்தால், கலவரம் மூளும் என்று அஞ்சிய காவல்துறை கீயாட்டை விடுவித்தது.

அடுத்த வருடமே கீயாட் மீண்டும் சிறைக் கைதியாகிறார். காவல்துறையினர் கருப்பினருக்கு நிகழ்த்தும் அட்டூழியங்களை நடுவண் அரசான வாஷிங்டன் பார்வைக்கு கொண்டு செல்ல பதினேழு நாள் உண்ணாவிரத நோன்பு மேற்கொள்கிறார். ஐம்பது கிலோ எடை இழந்தாலும் உணர்வும் எழுச்சியும் உறுதியும் இழக்காமல், சக கறுப்பர்களையும் மீட்கிறார்.

”அடுத்தவர் உன் மீது ஆக்கிரமிப்பு செய்யலாம். ஆனால், நாம் அடங்கிப் போவது நம் கையில் இருக்கிறது” என்று அந்த சத்தியாகிரகத்தை நினைவு கூர்கிறார்.

1939ஆம் ஆண்டு ஜூலை பதினேழாம் தேதி மிஸிஸிப்பியில் பிறந்தார் கியாட். அவருடைய அப்பா கூலித் தொழிலாளியாக வேலை பார்த்தார். டூகலூ கல்லூரியில் இருந்து 1963ல் வேதியியலிலும் உயிரியலிலும் பட்டம் பெற்றார். அகிம்சாவழி மாணவர்களின் குழு சார்பாக பல்கலைக்கழகத்தில் படித்த காலத்திலேயே மிசிசிப்பி முழுக்க பயணம் மேற்கொண்டு சமூகநீதி பட்டறைகளை முனைப்போடு ஒருங்கிணத்தார்.

அமெரிக்க குடிமகன்கள் எல்லோரும் ஓட்டளிக்க வேண்டும் என்பதில் குறியாக இருந்தார். இனப்பிரிவிற்கு எதிராக போராடிய மார்ட்டின் லூதர் கிங் போன்றோர் எங்கும் எதிலும் வெள்ளையர்களுக்கு சமமான உரிமைக்காக குரலெழுப்பிய தருணங்களில், கீயாட் வாக்குப்பெட்டியை மட்டும் குறிவைத்து இயங்கினார். கருப்பர்கள் வாக்கு போட்டு தங்களுக்கு உவப்பானவர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அதன் மூலம் அமெரிக்கா முழுக்க கருப்பின சமத்துவ உரிமையை அடையலாம் என்று நம்பினார். வெள்ளையரிடம் இருந்து இன உரிமை பெறுவதற்கு பதில், ஜனநாயகத்தின் பேரிலும் தேர்தல் வெற்றி மூலமாகவும் சட்டதிருத்தங்களையும் சமூக சீர்திருத்தங்களையும் அடையும் வழிக்காக விழிப்புணர்வை புகட்டினார்.

1971இல் சட்டப் படிப்பில் முதுகலை பட்டத்தை முடித்தார். அதன் பின் வாஷிங்டன் நகரத்தில் பணியாற்றினார்.

தற்பால்விரும்பிகளுக்கான போராட்டத்தை ஆதரிக்கும்போது அவர் சொன்ன மேற்கோள் நமக்கு நல்ல வழிகாட்டியாக இருக்கும்: “நமக்கு முக்கியம்னு படறதுக்காக உயிரைப் பணயம் வைத்து போராடறதுக்கு ஈடா இந்த உலகத்தில் எதுவுமே கிடையாது. லிங்கன் சொன்னது போல் சுடறவன் கிட்ட இருந்து தப்பிச்சுட்டு அவன் முன்னாடி சாதிக்கறது தனி சுகம்!”

அஞ்சலிகள்.

வாழ்க்கைக் குறிப்பு

Free Speech, Religion Clash Over ‘Innocence of Muslims’ Film: Cartoon: Movie critics – Dan Wasserman

Thanks: cartoon from Dan Wasserman of the Boston Globe

Indian Cartoonist’s Arrest & Free Speech Debate: Recent picks from Newspapers

Cartoons by Aseem Trivedi

A cartoon depicting Sansad Bhavan, the Indian parliament building in New Delhi, as a toilet. By Aseem Trivedi, from cartoonsagainstcorruption.blogspot.co.uk

A depiction of Ajmal Kasab urinating on the Indian constitution. Kasab was the only member of the Pakistani terrorist group that attaced Mumbai in 2008 to be captured. He is currently in Indian custody, sentenced to death. By Aseem Trivedi, from cartoonsagainstcorruption.blogspot.co.uk

Cartoon depicting the Indian parliament building, which contains the Rajya Sabha (upper house) and Lok Sabha (lower house). By Aseem Trivedi, from cartoonsagainstcorruption.blogspot.co.uk

The cartoon, by Aseem Trivedi, that provoked complaints to the police. From cartoonsagainstcorruption.blogspot.co.uk


Asian Age: Here and Now by Sudhir Tailang


Cartoonist Manjul: Column – Irregular at DNA: Daily News and Analysis


Tamil Newspaper Dinamani (Indian Express group): Adade Mathi


The Hindu: Keshav


Ajit Ninan at TOI: Times of India


Hindustan Times: Shreyas Navare


The Indian Express (original – Delhi): Business As Usual by Unny


Satish Acharya: Mid-Day


Mir Suhail Qadiri: Kashmir Reader


Tehelka

Think. And Be Damned

Drawing a dangerous line

‘The arrest of the cartoonist in Bengal, the Internet control laws — this is all part of a shutdown of democratic freedoms we take for granted,’ says Sudhir Tailang

Free Speech or hate speech?: By Mahmood Mamdani

I empathise with those baffled by the rapidly spiralling controversy around the series of cartoons depicting Prophet Muhammad. The cartoons were first published in the Danish paper, Jyllands-Posten, nearly five months ago, in September. The initial protest was limited to Denmark’s Muslim minority but was brushed off by both government and civil society. This is when some of the ultra-conservative Danish imams took up the matter and set off for Saudi Arabia and Egypt with a dossier containing the inflammatory cartoons. Last week came the diplomatic explosion: Saudi Arabia recalled its ambassador in Denmark and Libya shut its embassy. Then followed the boycott of Danish goods, demonstrations, strikes, flag burning, and now fires set to embassies in Damascus and Beirut.

கள்ளவோட்டுதான் ஜனநாயகமா?

அசல் இடுகை: ஆங்கிலம் தான் சோறு போடுகிறதா?

Madurai-Monkey-Tamil-Nadu-Drink-Water-Flickr-Redbull-Chimpவாக்காளர் நலம் சார்ந்து பேசினால், “தேர்தல் சமயத்தில் ஆரத்தியெடுத்து, தேர்தலை வைத்து சோறு தின்பவர்களுக்கு ஏன் ஊழல் பற்றி இவ்வளவு வெறுப்பு, ஏன் இந்த போலித்தனம்?” என்கிறார்கள்.

ஓட்டுதான் சோறு போடுகிறது என்றால், வாக்கு அளித்தவர்கள் அல்லவா பணக்காரர்களாக இருக்க வேண்டும்? ஜனநாயகம் பேசும் நாடுகளில் வேலை இல்லா திண்டாட்டமே இருக்கக்கூடாதே? இந்தியாவில் வோட்டளித்தும் கூட எத்தனை பேர் வேலையற்று இருக்கிறார்கள்? எத்தனைத் வாக்காளர்களுக்கு ஓட்டு சோறு போடுகிறது?

அரசியலை முதன்மையாக வைத்து தொழில் நடத்துபவருக்கு கூட வேறு பல திறன்கள் தேவை. வெறும் ஓட்டை வைத்துக் கொண்டு **** முடியாது.

cats-read-books-language-books-images-photos-flickr-paul-nganஒரு துறை சார்ந்த அறிவு, தொடர்பாடல் திறன், உழைப்பு, முயற்சி என்று வெற்றிக்குத் தேவைப்படும் பல காரணகளில் ஒன்று தான் வெற்றிக்கான கள்ள வாக்கு. அதற்கு மேல் booth capturingஐ உயர்த்திப் பிடிக்கவும் வாலாட்டவும் காலை ***** தேவையில்லை.

ஓட்டு மக்களாட்சி முறைகளுள் ஒன்று. அதற்காக உலகத்தினர் அளவு கடந்தும் தேவையே இல்லாமலும் தங்கள் பிரதிநித்துவங்களில் வாக்குரிமையைக் கலப்பதில்லை. ஓட்டளிக்க விரும்பாததும் முயலாததும் சமூகப் போக்காகவும் தனியாள் உரிமையாகவும் இருக்கலாம்.

ஆனால், “சோறு போடும் நன்றிக்காக கள்ள வாக்கை கலக்கலாம்” என்பதைத் தன்மானமுள்ள எந்த சுதந்திர நாடும் ஏற்றுக் கொள்ளாது.

தொடர்புடைய இடுகை: சுருக் + சறுக் + நறுக் பகீர்

சுதந்திரம்: விடுதலையும் பேச்சுரிமையும்

பத்ரி: எண்ணங்கள்: எழுத்துரிமை, பேச்சுரிமை, எரிப்புரிமை:

தடை செய்யப்பட்ட இயக்கத்தை (விடுதலைப் புலிகள்) ஆதரித்ததாக அல்லது இந்தியத் தலைவர்களை (உயிருடன் இருப்பவர்களை அல்லது இறந்தவர்களை) அவமரியாதை செய்ததாக அல்லது அவர்களது உருவ பொம்மைகளை எரித்ததாகக் குற்றம் சாட்டி சிலர் கடுமையான தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்படுகிறார்கள்.

இது மிகவும் அபாயகரமானது. எமெர்ஜென்சி காலத்தைய நிலையைப் போன்றது.

கறுப்புக்கொடி காண்பித்தல், உருவ பொம்மையை எரித்தல் ஆகியவை ஒருவருக்கு எதிராக தங்களது கோபத்தைக் காண்பித்தல். இதனால் யாருடைய உயிருக்கும் உடைமைக்கும் ஆபத்தில்லை. குறிப்பிட்ட இடத்தை இதற்கென ஒதுக்கி, அங்கே மட்டும் இதனைச் செய்துவிட்டுப் போகுமாறு அனுமதி அளித்துவிட்டுப் போய்விடலாம் காவல்துறை.

மனிதனுக்கு frustration என்பது ஏற்படுவது இல்லையா? இந்த அரசாங்க மெஷினரியால் எத்தனை முறை சாதாரண மக்கள் வஞ்சிக்கப்படுகிறார்கள்? கோபத்தில் வெகுண்டு, ஒருவர் “ஒனக்கெல்லாம் நல்ல சாவே வராது!” என்று சபிக்கும்போது அரசாங்க அதிகாரியைத் திட்டிய குற்றத்துக்காக சிறையில் போடுவேன் என்று சொல்லலாமா?

எதிர்ப்பை அனுமதிக்காத குடியாட்சி, குடியாட்சியே அல்ல.

காட்டுமிராண்டிச் சமூகமாக இருக்கிறோம் நாம். இது மாறவேண்டும்.

தீவிரவாதம் பற்றி முணுமுணிப்பை வெளியிட்டதற்கு முட்டிக்கு முட்டி தட்டிய கதை:

“The Statesman” republished an op-ed from “The Independent,” Britain – “Why should I respect these oppressive religions?”. Some Muslims in Calcutta went berserk like they did in the case of Taslima Nasreen. A case was filed against editor – Ravindra Kumar, and the publisher – Anand Sinha, and they were arrested./blockquote>

இப்பொழுது சமீபத்திய (பழைய!?) செய்தி:

கொல்கத்தாவிலிருந்து வெளிவரும் பிரபல நாளிதழான தி ஸ்டேட்ஸ்மேன் (The Statesman) நாளிதழின் ஆசிரியரும் வெளியீட்டாளரும் இன்று (ஃபெப்ரவரி 11) கைது செய்யப் பட்டனர்.

இஸ்லாம் மதத்தினை தாக்கும் விதமாக எழுதியதாக ஆங்காங்கே நடந்த ஆர்ப்பாட்டத்தினை அடுத்து இந்த நாளிதழின் ஆசிரியர் ரவீந்திர குமார் மற்றும் வெளியீட்டாளர் ஆனந்த் சின்கா ஆகியோர் கைது செய்யப்பட்டதாக காவல்துறை இணை ஆய்வாளர் பிரதீப் சட்டர்ஜி கூறினார்.

முகமது சகீது என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் இந்நடவடிக்கை எடுக்கப் பட்டதாகவும், இந்திய குற்றவியல் சட்டம் 295A மற்றும் 34 ஆகியவற்றின் அடிப்படையில் புகார் அளிக்கப் பட்டதாகவும் கூறப்படுகிறது.

எதை அச்சில் இட்டார் என்று இவ்வளவு கொந்தளித்தார்கள்?

All people deserve respect, but not all ideas do. I don’t respect the idea that a man was born of a virgin, walked on water and rose from the dead. I don’t respect the idea that we should follow a “Prophet” who at the age of 53 had sex with a nine-year old girl, and ordered the murder of whole villages of Jews because they wouldn’t follow him.

பிரான்சு பிரெசும் சுதந்திர ஊடகவியலாளர் பரிசும்

முதலில் ரோஸ்: Reporters without Borders 2008 Award for Thissanayagam இருந்து:

(பிரான்சில் இருந்து இயங்கும்) எல்லை இல்லாத செய்தியாளர்கள் 2008 ஆண்டுக்கான விருதினைப் பெறுகின்றவர்களிலே ஒருவராக திசநாயகமும் இருக்கின்றார்.

ரிபோர்ட்டர்ஸ் வித்தவுட் பார்டர்ஸின் செய்திக்குறிப்பு: Reporters sans frontières – International: “Cuban journalist, North Korean radio station and two Burmese bloggers win 17th annual Reporters Without Borders Prize”

சரி…

ஆனானப்பட்ட பிரான்சில் ஊடக சுதந்திரம் எப்படி இருக்கிறதாம்?

How free is the French press? :: Henry Samuel

Last Friday Vittorio de Filippis, former publisher of the left-wing Libération newspaper, was – according to press reports – seized at his home before dawn, handcuffed in front of two young boys and whisked off for interrogation by an investigating magistrate. Police told him he was “worse than scum” and kept him for five hours in a cell with no access to a lawyer. Oh, and he was strip-searched twice and subjected to “body cavity” examinations.

  • டவுசரை அவிழ்த்து சோதனை
  • வக்கீலுக்கு வழியில்லாமல் விசாரணை
  • பத்து வயது மகன் முன்னால் அடித்து உதைத்து இழுத்து செல்லுதல்

இதற்குப் பெயர்தான் ஹிப்போக்ரசியா?

The Truth about Hypocrisy: Scientific American :: By Scott F. Aikin and Robert B. Talisse: “Charges of hypocrisy can be surprisingly irrelevant and often distract us from more important concerns”