Tag Archives: Environment

தடுப்பும் தண்டவாளப் பயணமும்

ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்:
அ) இந்தியாவில் உயிர்களுக்கு மதிப்பு கிடையாது.
ஆ) பதவியோ, பணமோ இருந்தால் மட்டுமே இந்தியாவில் மதிப்பு.
இ) நூற்றைம்பது கோடி பேரில் 15,000 பேர் இறப்பதெல்லாம் ஒரு சங்கதியே கிடையாது.
ஈ) மறுபிறவி, ஜனனமும் மரணமும் சுழற்சி என்றிருப்பதை இந்தியர்கள் அறிவதால் பிற உயிர்கள் இறப்பதை அலட்சியம் செய்கிறார்கள்.

1984-இல் ‘தி ஹிந்து’ நாளிதழின் கடைசி பக்கங்களைத் தவிர முகப்புப் பக்கத்தையும் படிக்கத் துவங்கிய காலம். நவம்பர் 84 முழுக்க இந்திரா காந்தியும் அவரைத் தொடர்ந்து வாரிசு ராஜீவ் அரசராக ஆன கதையும் அலங்கரித்தது. டிசம்பரில் போபால் விபத்து குறித்து அந்தத் தலைப்புச் செய்தியை பார்த்தபோது, கையாலாகாத்தனமும் கோபமும் ஆத்திரமும் அழுகையும் எல்லாமுமாக குழப்பமாக, இந்த அரசு மீதும், அதன் அதிகாரிகள் மீதும், நாடு மீதும், நாட்டின் விதிகள் மீதும், அசூயை கலந்த வெறுப்பு எழுந்தது.

எனக்குத் தெரிந்த யூனியன் கார்பைட் நிறுவனம் ‘எவரெடி’ (Eveready) பாட்டரி தயாரித்தது. என்னவர்களின் கண்களையும் எண்ணற்றவர்களின் உயிர்களையும் பறிக்கக் காரணமுமாய் இருந்தது. ‘கண் சிவந்தால் மண் சிவக்கும்’ என்று படங்கள் வந்த காலம். வெள்ளித்திரையில் கண்கவர் நாயகிகள் எளிதில் காதலில் விழுவது போல், திரைப்படங்களில் மட்டுமே புரட்சி வெடிக்கும் என விளங்கத் துவங்கியது. நிஜத்தில் வில்லன்கள் சௌகரியமாக படகுக் கார்களில் பவனி செல்வார்கள். ஐந்தரை இலட்சம் பேரை முடமாக்கினாலும் எந்தவித பின் விளைவுகளும் சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படாமல் சொகுசாக அடுத்த கைங்கர்யத்தில் இறங்கி விடுவார்கள்.

எத்தனை சாலை விபத்துகள்?
ஒவ்வொரு மாதமும் எவ்வளவு இரயில் தடம்புரண்டு, எதிருக்கெதிர் ட்ரெயின் மோதிக் கொண்ட இறப்புகள்?
சூரத்தில் கொடுந்தொற்று, சென்னையில் புயல், கடலில் சூறாவளியில் மீனவர்கள், நிலநடுக்கம், பூகம்பம், மழை வெள்ளம்…
அதெல்லாவற்றையும் விட திறமைக்கு வேலைகொடுக்காத சூழல். கொடும் பசி நிலவிய சமூகம்.

இந்திய தினசரிகளுக்கு எதிர்மறையாய் செய்திகளைத் தருவதில் இருந்த அசுரத்தனமா?
அல்லது நம் நாட்டில் நிஜமாகவே அலட்சியமும் அசட்டைத்தனமும் அசமஞ்சமும் சேர்ந்த நிர்வாகத் திறமையின்மையா?
ஒவ்வொரு அதிகாரியும் லஞ்சம் வாங்கக் கூசாதவர்களாக, அராஜகம் செய்தால் எந்தவித எதிர்விளைவும் கிடைக்காத சாக்கடைத்தனமா?

நெட்ஃப்ளிக்ஸில் ’ரெயில்வே மென்’ (The Railway Men) பார்த்தவுடன் தோன்றியது —> இன்று இதெல்லாம் மாறியிருக்கிறதா?
அல்லது செயல்துடிப்புடன் புத்திசாலித்தனமாக செயல்பட்டவர்கள், ‘கடமையைச் செய! பலனை எதிர்பாராதே!!’ ரகமா?

குறைந்த பட்சம் நல்லவர்களும் நேர்மையாக இயங்கியவர்களும் தன்னலம் பாராது இயங்கியவர்களும் இருந்திருக்கிறார்கள். என் ‘துரியோதனப்’ பார்வைக்கு அவர்கள் தென்படவில்லை.
பாலும் தேனும் இன்னும் இந்தியாவில் ஓடவில்லை. அவற்றை ஒடவைப்பதற்காக உண்மையாக உழைப்பவர்களை நாமும் கண்டுகொள்ளவில்லை.

நன்றி: https://aqli.epic.uchicago.edu/country-spotlight/india/

முடங்கிய கடல் நீரும் எல்லைகளில்லா அலைகளும்

கார்ஸன் கழிமுகம் கவிதையை பார்க்கும்போதே கடற்கரையைப் பார்ப்பது போல் இருக்கும். சில சமயம் ஜோராகத் தெரிகிறது. சில சமயம் காணாமல் போய் விடுகிறது. கண்ணில் பார்க்கும் எல்லாவற்றையும் விவரிக்கிறார்.

பார்ப்பதை புரிந்துகொள்வதுதானே மூளையின் வேலை? மனிதரின் மனதில் உதிக்கும் எண்ணங்களும் இயற்கையோடு உறவாடும் சிந்தனைகளும் எங்கு ஒருங்கிணைகின்றன? இந்தப் படைப்பே இயற்கையின் படைப்பா அல்லது அறிவால் உதித்த கற்பனையா?

இயற்கை என்றால் இயற்கை எய்துவதும் இயற்கையின் பங்குதானே… எப்போது மரணம் வரும் என்று சொல்ல முடியாதபடி சடாரென்று மரணம் நிகழும். அதுபோல் சுற்றுப்புறச் சூழலும் பாதிப்படைந்து மரணம் அடையுமா? அல்லது மெல்ல மெல்ல நச்சுப்பொருள் போட்டு உடலில் பாதகம் வருவது போல் இயற்கையும் மெதுவாகத்தான் இறக்கிறதா?

பார்ப்பதையெல்லாம் எவ்வளவு தூரம் உணர்ந்து அறிந்து வைத்திருக்கிறோம்?

இந்த ஆக்கத்தை தேர்ந்தெடுத்தவருக்கும், மொழியாக்கம் செய்தவரும் நன்றிகள்.

கும்கி: பார்க்கலாமா? போரா?

பத்து நிமிடத்தில் எடுக்க வேண்டியதை முழு நீளப் படமாக்கினால் எப்படி எடுக்கக் கூடாது என்பதற்கு ‘கும்கி’ நல்ல உதாரணம்.

ஹிட் ஆன பாடல்கள். ஓவர் ஆக்டிங்கில் சீனியர் சிவாஜியாக மிளிரும் தம்பி ராமையா. முறைப்பும் உடற்பயிற்சியும் ஆகிய இரண்டு பாவங்கள் மட்டுமே அறிந்த ஜூனியர் சிவாஜியாக விக்ரம் பிரபு.

எருமையைக் கண்டு யானை பின்வாங்குவது படத்தின் ஹைலைட். யானைகளுக்கும் லைசன்ஸ் பேப்பர் வேண்டும் என்றறிய வைத்தார்கள். இவ்வளவு மரங்கள் நிறைந்த காடுகளுக்கு தப்பிச் செல்லாமல் போயிட்டோமே என்று வீரப்பன் & கோ வருந்தியிருப்பார்கள்.

என்னதான் செல்லப் பிராணி வளர்த்தாலும், காதலின் முன் அது தூசு என்பது படத்தின் நீதி. அடிதடியை விட பாசமும் ப்ளாக்மெயிலும் காதலை உடைக்க கை கொடுக்கும் என்பது கொசுறு மெஸேஜ்.

ஒரு படமோ, இரண்டு படமோ நன்றாக இயக்கிவிட்டு, அதன் பிறகு, அசிஸ்டெண்ட் இயக்குநர்களுக்கு வாய்ப்பு கொடுத்து தயாரிப்பில் இறங்கி, பிறரின் படங்களை மெருகேற்றுவதுதான் இப்போதைய டிரெண்ட். பிரபு சாலமனும் அவ்வாறே ஷோ யானையாக மாறி கும்கிகளை அடையாளம் காட்டணும்.

விவாத சங்கதி: பேசுவதற்கான சமாசாரங்கள்

விவாதிப்பதற்கான விஷயங்கள் உலகெங்கும் எக்கச்சக்கம். ஒரு பட்டியல்.

  1. அன்னா அசாரே: தேர்தல் சீரமைப்பு – எவர் போட்டியிடலாம்? எவ்வளவு செலவழிக்கலாம்?
  2. ஆப்கானிஸ்தான் போர்
  3. ஆர்க்டிக் பிரதேசத்தில் இருந்து எண்ணெய் எடுக்கலாமா? சவூதி கிணறுகளே போதுமானதா?
  4. கார்பன் குறைவாக கக்கும் நாடுகள் கரிமம் அதிகம் உபயோகிப்பவர்களிடமிருந்து பணம் மட்டும் பெற்றுக் கொள்ளலாமா? உலகமே உமிழ்வுகளை ஒட்டுமொத்தமாக குறைக்கவேண்டுமா?
  5. எச்.ஐ.வி (அ) எயிட்ஸ்
  6. எல்லையில் சுவரெழுப்பி பாதுகாப்பதா? உலகமே இணையத்தாலும் பொருளாதாரத்தாலும் சுருங்கிய நிலையில் திறந்தவெளியாக குடிபுகலை அனுமதிப்பதா?
  7. வங்கிகளை திவாலாக்குவதா? மீட்டெடுப்பதா?
  8. வலைப்பதிவுகள்
  9. லட்சாதிபதிகள் கோடீஸ்வரர்கள் ஆவது: பெரு நிறுவனங்களில் முதன்மையான்வர்களின் சம்பளம் பன்மடங்கு அதிகரிப்பது
  10. துப்பாக்கி தோட்டா கட்டுப்படுத்தல்: நுகர்வோர் சந்தையாக அனைவரும் பாதுகாப்புக்கு வைத்திருக்கலாமா? காவல்துறைக்கு மட்டுமே சொந்தமா?
  11. இஸ்ரேலும் இரானும் பாலஸ்தீனமும்
  12. கல்வியறிவு: வாழ்க்கைக்குத் தேவையான படிப்பும் வருவாய்க்கும் உபயோகமான கல்லூரி வாழ்க்கையும்
  13. உடல்நல காப்பீடு: எகிறும் மருத்துவ செலவும் ஏறும் வயோதிகர் மக்கள்தொகையும்
  14. வட கொரியா: போக்கிரி நாடுகளின் கையில் இராணுவ பலம்
  15. அணு ஆயுதம்: மாற்று சக்தி
  16. உடல் பருமன்: மாறும் உணவு கலாச்சாரம்
  17. கடற்கொள்ளையர்: சோமாலியாவை மேற்கத்திய நாடுகள் ஊக்குவிக்கிறதா?
  18. கலவிக் கல்வி: இந்திய நாகரிகம் காமசூத்ராவை கோவிலிலேயே கொண்டிருந்தாலும், வைய விரிவு வலையெங்கும் மிக அதிகமான பலான தேடல் கொண்டிருப்பதன் சூட்சுமம்
  19. அறிவியல் ஆராய்ச்சி: எவாஞ்சலிகல் கிறித்துவத்தின் கட்டுப்பெட்டித் தன்மைகளை எவ்வாறு தடுத்து, ஸ்டெம் செல் போன்ற துறைகளில் மருத்துவத்தை முன்னேற்றலாம்?
  20. தீவிரவாதம்: போரிட்டு அடக்க முடியுமா?
  21. உலக வெம்மையாக்கம்
  22. பள்ளிக்கூட மாணவர் பிரச்சினைகள்: சோசியல் மீடியா அச்சுற்றுத்தல்
  23. மாற்று எரிசக்தி
  24. பொக்கீடுகள்: வரிச்சுமை, பட்ஜெட்
  25. அரிதாகிப் போன ஜீவராசிகள் குறித்து அஞ்ச வேண்டுமா? டைனோசார் போல் போனால் போட்டுமா?

நீயா? நானா 🙂

அணு உலைகளை ஏன் அமெரிக்கா உதயகுமார் எதிர்க்கிறார்?

வைகலும் வெண்ணெய்
கைகலந்து உண்டான்
பொய் கலவாது என்
மெய் கலந்தானே.
(திருவாய்மொழி – 1.8.5)
உட்பொருள்
அயல் மனைகளில் தினமும் புகுந்து, மிகுந்த விருப்போடு தன் கைகளால் கிடைத்ததை அளைந்து, கைகளில் அகப்பட்டதை மகிழ்ச்சியுடன் உண்ட அமெரிக்கா, சிறிதும் சந்தேகத்திற்கு இடமில்லாமல் இன்று நம்மில் கலந்தான்.
அராபியர் கடைந்த எண்ணெய் எவ்வளவு விருப்பமோ அதே அளவிற்கு உலகின் அணுகலன்களும் அமெரிக்காவிற்கு விருப்பமானதாயிற்று என்பது உரை.

அமெரிக்காவிற்கு மூன்று கவலைகள்:

1. தங்களை விட பராக்கிரமத்துடன் இன்னொரு இடம் வளர்ந்துவிட்டதாக உலகம் நினைக்கத் துவங்கிவிடுமோ?

2. தங்களுக்கான காரியங்களை சாதிக்கக் கூடிய குறைவான செலவில் நிறைவான லாபம் தரும் ஸ்தலங்கள் குறைந்துவிடுமோ!

3. தங்களின் முதல் மரியாதையான இந்திர பதவி போன்ற ஸ்திரதன்மைக்கு இந்தியா போன்ற குடியரசு வல்லரசு கோருமோ?

இந்த அச்சங்களை நீக்க அமெரிக்கா பல உபாயங்களைக் கையாளுகிறது. அதில் ஒரு அஸ்திரம் திரு உதயக்குமார்.

உலகெங்கும் உள்ள அணு உலைகள் அமெரிக்காவின் ஆதிக்கத்திற்கு பங்கம் விளைவிக்கிறது. முன்னும் ஒரு காலத்தில் இரண்டே இரண்டு நாடுகள் மட்டுமே அணு உலை வைத்திருந்தது. ஒன்று அமெரிக்கா; இன்னொன்று ருசியா.

கொஞ்ச நாள்போக்கில் நட்பு நாடுகளான இங்கிலாந்திற்கும் பிரான்ஸிற்கும் அமெரிக்கா அணுப் பொருட்களைக் கொடுத்தது. சீனாவும் அணுகுண்டு வெடிக்கும் நாடாக வளர்ந்தது.

பாரதீய ஜனதா ஆட்சிக்கு வந்ததும் இந்தியா அணு சோதனை செய்து பறைசாற்ற, இராவோடு ராவாக பாகிஸ்தானும் இந்த ஐவரோடு இணைந்து எழுவரானது.

இன்றைய அளவில் இஸ்ரேல் – நம்பர் எட்டு.

வட கொரியாவால் தம்மாத்துண்டு வெடியாவது போட முடியும் – ஒன்பது.

இரான் கடும் பிரயத்தனத்தில் இருப்பதால் – #10.

இப்படியே போனால், சங்கரன்கோவில் வாக்காளர் எல்லோருக்கும் யுரேனியம் தருவதாக ஜெயலலிதா அறிவிக்கும் நாள் தூரத்தில் இல்லை.

இந்த மாதிரி உலகெங்கும் அதிகாரமும் அணுவும் சிதறி இருப்பதை அமெரிக்கா விரும்பவில்லை. இருப்பதை எல்லாம் தன்னிடம் கொண்டு வரவேண்டும். இனிமேல் எவருக்கும் தாரை வார்க்கக் கூடாது என்பது ஒபாமா சித்தாந்தம்.

இதில் பையன் ஜார்ஜ் புஷ் வேறு ரகம். நல்ல நாடாக இருந்தால் அவர்களிடமும் கொஞ்சம் கொடுத்து வைப்பதில் தவறில்லை என்று பார்ப்பது ரிபப்ளிகன் கட்சி. உற்ற தோழனாக இருந்தாலும், நாம் படியளந்தால் மட்டுமே பாக்கெட் மணி என்று கெட்டியாக இருப்பது டெமொக்ரடிக் கட்சி.

அமெரிக்க அரசியல் நினைவுக்கு வந்தது.

அதிகாரத்தைக் கையில் எடுக்கும் குழுவை அமெரிக்காவில் டெமொக்ரட்ஸ் என்கிறார்கள். ஒபாமா கட்சி. மக்களுக்கு நல்லது கெட்டது தெரியாது என்று எண்ணுபவர்கள் இவர்கள் பக்கம். மக்களிடமே நல்லது கெட்டதை விட்டுவிட்டால், சுயநலமாக இருப்பார்கள்; எனவே, அதிகாரம்தான் பொதுவுடைமையாக இயங்க வேண்டும் என்று கருதுபவர்களும் இவர்கள் பக்கம்.

பொறுப்பைக் கையில் எடுக்கும் குழுவை ரிபப்ளிகன் கட்சி என்கிறார்கள். மிட் ராம்னியின் கட்சி. இன்னொருத்தருக்கு என்னுடைய கஷ்ட நஷ்டங்கள் தெரியாது என்று நினைப்பவர்கள் இவர்கள் பக்கம். தூண்டி விட வேண்டிய திரியாக இருப்பதை விட மெழுகுவர்த்தியாக எரிய விரும்புபவர்கள்.

இந்தியாவில் தன்னிறைவு வரக்கூடாது. மின் உற்பத்தி இடைஞ்சல் செய்ய வேண்டும். இதனால் அயல் முதலீட்டாளர்களுக்கும் கவலை பிறக்கும். எவனோ, எவளோ…. எப்போது பார்த்தாலும் எதற்காவது செங்கொடி தூக்கி வேலை நிறுத்த போராட்டம் செய்யும் நாடு என்னும் பிம்பம் எழும்…

இது பங்குச்சந்தையைக் கவிழ்ப்பதற்கு நல்லது.

அணு மின்சாரம் என்றால் ஏதோ நாக பாணம் போல் சயனைட் குப்பி பயம் எழுப்புவதால் உள் கட்டுமானங்களில் சுணக்கம் விழும். நம்பகமான நாடு அல்ல என்னும் பிம்பத்தை சுமத்தலாம்.

டாலர் கீழே படுத்திருக்கும் இந்த நிலையில் இது பேஷ்.

கிடைத்தார் உதயகுமார். குருஷேத்திரமாகிறது கூடங்குளம்.

Situation Hopeless… But Not Serious

தொடர்புள்ள சுட்டிகள்:

1. NNSA HEU removal featured on The Rachel Maddow Show | National Nuclear Security Administration

2. The Koodankulam Struggle and the ‘Foreign Hand’ @ EPW by S P Udayakumar

3. அழிவிற் சிறந்தது :: ஒரு குட்டி பூர்ஷ்வாவின் தேடல்.

4. பத்ரி சேஷாத்ரி: எந்த மின்சாரம் ‘நல்லது’?

5. பத்ரி சேஷாத்ரி: கூடங்குளம் போராட்டம்

6. கூடங்குளமும் தி.நகரும் « நேசமுடன்

7. கூடு :: இலக்கியம் :: குறும்படம்: “குமுதம் தீராநதி ஜனவரி மாத இதழில் வெளிவந்த சு.ப. உதயகுமார் அவர்களின் நேர்காணல் – சந்திப்பு: லட்சுமி மணிவண்ணன், கிருஷ்ணகோபால்.”

8. தமிழ்ஹிந்து – கூடங்குளம் அணு மின் நிலையம்: சர்ச்சைகளும், தீர்வுகளும் – 1 & விஸ்வாமித்ரா

9. அணு மின்சக்தி நமது அத்தியாவசியத் தேவை | ஆர்.பாலாஜி

10. எஸ்.குருமூர்த்தி  » கூடங்குளம் போராட்டம்- திரைக்குப் பின்னால் யார்?

பாட்டாவின் நதி – ஜெயமோகன்

ஜெய மோகன் மருதையப்பாட்டா என்றதும், அவர் கணையாழியில் எழுதிய கவிதை நினைவுக்கு வந்தது.

வெளியான இதழ்: மே, 1987

இந்த வழியாகத்தான்
எங்கள் பழைய நதி ஓடியதாம்
முன்பு
ரொம்ப காலத்துக்கு முன்பு.

பெரிய நதி அது.
எங்கள் தாத்தா அதில்தான்
குளிப்பாராம்
அவரோடு பெரிய யானையும்.

அப்புறம் எப்படியோ
நதி நின்று போச்சாம்.
அந்த இடமெல்லாம் மணலாச்சு.
மணல் மேலே
எங்கப்பா வீடுகட்டிக் குடிவந்தார்.
இப்பக்கூட
எங்க கொல்லைப்புறத்தைத்
தோண்டி பார்த்தால்
மீன் முட்கள்
கிடைக்கின்றன.

எங்கள் பெரிய நதியோட
நினைவாகத்தான்
நாங்கள்
சனிக்கிழமைதோறும்
குளிக்கறதில்லை.

ஆசாரக்கோவை கதைகள் 1 – ஆசார வித்து

தூரத்தில் விமானம் தெரிந்தது. அதில் அப்பா வருவார். தூங்குவதற்கு முன் கட்டியணைத்துப் போர்த்திவிட்டு ‘குட் நைட்’ சொல்வார். நாளைக்கு சனிக்கிழமை. வந்துவிடுவார்.

இப்பொழுது விமானம் நெருங்குகிறது. அல்ல… கலிஃபோர்னியா கான்டோர் வந்து இறங்கியது.

“நீ அழிந்து கொண்டிருக்கிறாயாமே”

“சேச்சே! உன் அப்பாவ கிட்டக்கயே வச்சுக்கணும்னு நீ கேட்ட இல்லியா! அதுக்காக வந்திருக்கேன்.”

“கருடன் மேல் பெருமாள் பறப்பது போல் நீதான் எங்கப்பாவ கூட்டிகிட்டு வரப்போறியா?”

“இல்ல… நான் படைச்ச மக்களையெல்லாம் அழிக்கணும்.”

“என்னது?”

“உனக்கு தெரியுமில்லியா? நாந்தான் இந்த உலகத்தை சிருஷ்டிச்சேன். முன்னுமொரு தினத்தில் மேலேயிருந்த முதியவர் பிரளயத்தை உண்டுசெஞ்சார். வாக்கு சாதுர்யம் இல்லாதவங்க எல்லாரும் அம்பேல். நான் மச்சாவதாரம் எடுத்து ஏட்டுச் சுரைக்காய்களைக் காப்பாற்றினேன். இப்பொழுதும் அந்த மாதிரி செய்யணும்”

“எனக்கு ஆசாரக்கோவை ஞாபகத்துக்கு வருது. உனக்கு நன்றி சொல்லணும்.”

நன்றி யறிதல் பொறையுடைமை இன்சொல்லோடு
இன்னாத எவ்வுயிர்க்கும் செய்யாமை கல்வியோடு
ஒப்புரவு ஆற்ற அறிதல் அறிவுடைமை
நல்லினத் தாரோடு நட்டல் இவைஎட்டும்
சொல்லிய ஆசார வித்து

“இருக்கட்டும். உங்கப்பாவை அமெரிக்க ஜனாதிபதி ஆக்கட்டுமா? டைம்ஸ் பத்திரிகையின் ஆண்டுநாயகர் ஆக்கட்டுமா? முதலாவதாக ஆனால் உலக வெம்மையினால் பனிக்கட்டி உருகி, பூமிச்சூட்டினால் சுனாமி கொணர்ந்த கோபன்ஹேகான் நாயகர் என்று புராணம் பாடலாம். இரண்டாமவர் ஆனால், பணமுதலைகளுக்கு டாலர் மாலை தொடுக்கும் கஜேந்திர யானை என்று வரலாறு போடலாம்.”

“இது இட்லி-வடையில் வரும் முனி கடிதம் போல் விஷயக்கோர்வை ஆகிறது. எனக்குப் புரிகிற மாதிரி சொல்லு.”

“ரொம்ப சிம்பிள். கூடிய சீக்கிரமே ஹைதியில் பூகம்பம் வரப்போகிறது. அதற்கு முன் கடவுளுக்கு பலிகடா தேவை. உங்கப்பன் மேல் பழியைப் போடலாம் என்று யோசிக்கிறோம். போதிய பஞ்சப்படியும் பதவியும் கொடுத்து விடுவோம். ரெடியா?”

விக்கிக் குறிப்பு: The Wiyot tribe of California say that the condor recreated mankind after Above Old Man wiped humanity out with a flood.[49] However, other tribes, like California’s Mono, viewed the condor as a destroyer, not a creator. They say that Condor seized humans, cut off their heads, and drained their blood so that it would flood Ground Squirrel‘s home. Condor then seized Ground Squirrel after he fled, but Ground Squirrel managed to cut off Condor’s head when Condor paused to take a drink of the blood.

ஐ.நாவின் உடற் கழிவு வாயு

இது முதல் செய்தி: Water in Moon: India’s Chandrayaan-1 mission :: நீர் நிரம்பிய நிலவு

biopact_biogas_pipeline_UN-Indiaஇரண்டாவது: UN offsets balance CO2 emissions | Marketplace From American Public Media

உலக அதிபர்கள் அனைவரும் ஐக்கிய நாடுகள் அமைப்பு சந்திப்புக்காக நியு யார்க் வந்திருக்கிறார்கள். ஒவ்வொரு தலைவருக்கும் இரு மந்திரிகள். ஒவ்வொரு மந்திரிக்கும் நான்கு அதிகாரிகள். ஒவ்வொரு அதிகாரிக்கும் ஒரு மனைவி. ஒவ்வொரு மனைவிக்கும் இரு மெய்காப்பாளர்கள்.

Bio-gas-recycle-solar-photo-synthetic-electricity-utilityஇந்த மாதிரி கூட்டிப் பார்த்து, அதற்கான கார்பன் கழிவுகளை இந்தியாவிடம் விற்று விட்டது ஐ.நா.

லிபியாவின் அரசர் கடாஃபி மாதிரி கூடாரம் அடித்தவர்களின் சிக்கன நடவடிக்கையை எடுத்துக் கொண்டதா என்று தெரியவில்லை.

மொத்தமாக வெளியாகும் நச்சுப் பொருள் எவ்வளவு என்று கணக்குப் municipal_solid_waste_generation_for_selected_large_cities_in_asiaபோட்டார்கள். அவ்வளவுக்கும் ஈடுகட்டும் விதமாக, பயோகாஸ் முறையில் அடுப்புகள் வாங்கிக் கொடுத்து விட்டார்கள். மரங்களை வெட்டி, விறகடுப்பில் சமைக்க வேண்டாம். சிக்கனத்திற்கு சிக்கனம். புகை, கரியமில வாயு போன்ற சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு பாதுகாப்பு.

காலங்காலமாக மாட்டுச் சாணத்திலிருந்து வறட்டி, காலைக் கடனாக கழிகளை உரமாக்குவது போன்றவற்றின் பரிணாம மற்றும் அறிவியல் வளர்ச்சி.

biogas_lifecycle2025க்குள் ஒன்பது லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் மாபெரும் தொழில்துறையாக பயோ கேஸ் அமையும். மற்றொரு மாற்று எரிசக்தியான சூரியக்கதிர்கள் மூலம் அமைந்த மின்கலத்துறையில் ஒரு லட்சம் பேர் பயனடைவார்கள்.

பெரும்பாலும் கிராமப்புறங்களில் இந்த வளர்ச்சி அமைந்திருக்கும். அங்கிருக்கும் மைக்ரோ க்ரெடிட் நிறுவனங்களுக்கும், அதன் மூலம் குறுங்கடன் பெறுபவர்களுக்கும் சென்றடைந்து, பெண்களுக்கும் தன்னிறைவு தரும் திட்டம்.biogasn-India-Cooking-stove-plants-alt-energy-fuel

India Together: Compact biogas plant making waves – 10 July 2006: “Biogas plants are not new, but their size, relative unwieldyness and reliance on large quantities of cattle dung have held back their potential attractiveness for the domestic cooking sector. That may change soon, thanks to the ingenuity of Dr Anand Karve. Vinita Deshmukh reports about Karve’s new award-winning compact plant.”

India: 100 Days of Sonia + Manmohan Singh Congress Government

1. Hits and misses of UPA's first 100 days – SiliconIndia: “‘If you ask me ministry-wise, I feel home and finance ministries have been the best performers in terms of quick action and implementation,’ said industrialist Rajeev Chandrasekhar, who is also a member of the upper house of parliament.

‘The road and transport ministry has also shown focus,’ Chandrasekhar added.

Amit Mitra, secretary general of the Federation of Indian Chambers of Commerce and Industry (FICCI), specifically mentioned the direct tax code, the budget, the Right to Education Act and the railway budget as areas where the government has shown it means serious business.

On the flip side, experts found little movement in areas like telecom where the policy on spectrum for third generation telephone services was decided only Friday. Even in the power sector, they felt strategy needed fine-tuning to get more capital.”

HT-Manmohan-100-days-hits-miss-synopsis-Congress-sonia-government

2. Price rise, food insecurity mar UPA II's 100 days- Politics/Nation-News-The Economic Times: “Food security has become elusive. An unprecedented rise in the prices of essential commodities, including rice and pulses, has smashed the class divide, making even daal-roti a luxury for many.

“I will count you the targets they (the government) themselves set for the first 100 days. Women’s Reservation Bill, right to education, food security act, judges’ assets bill, plus a plethora of other infrastructure building promises. And then look what we have achieved,””

100-days-agenda-UPA-Congress-Achieve-Score-graphs

3. The wind of the 100 days – Views – livemint.com: “Pressing issues such as managing the drought and reviving a slowing economy have received only ad hoc attention. There are other matters of great importance for the long-term future of the country that have not been addressed. How to initiate the next round of economic reforms? How to arrive at a meaningful consensus on climate change in the country? How to deal effectively with Pakistan and China?”

4. The Pioneer > Online Edition : >> At the end of 100 days: “The President listed 24 things the UPA Government would do in its first 100 days in office. They included internal security and preservation of communal harmony and stepping up of economic growth, particularly in agriculture, manufacturing and services. The President also mentioned consolidation of the existing flagship programmes for employment, education, health and rural infrastructure besides introduction of new food security and skill development programmes. Women empowerment, including early passage of the Women’s Reservation Bill, and constitutional amendment to provide 50 per cent reservation for women in panchayats and urban local bodies were also mentioned. Action for welfare of weaker sections and minorities besides disabled and senior citizens and governance reform were the other points covered in the President’s address. The other important areas were prudent fiscal management and energy security.

the biggest setback for the Government plans on economy came from the failure of the monsoon, resulting in 171 districts declared as drought hit and the agriculture ministry battling with the drought. The kharif crops are lost and the only hope is the rabi crop for which the Government has hiked the minimum support price. ”

5. UPA's 100 days and a 100 lies later…: Rediff.com news: “Anupam Trivedi, a member of the Bharatiya Janata Party”

Top Polluting Cities in India: Environment & Global Warming: Carbon footprint with Gold

நன்றி: ஹிந்துஸ்தான் டைம்ஸ் :: இ-பேப்பர்