Tag Archives: Dead

வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி! மக்களின் மனதில் நிற்பவர் யார்?

ஜிம் சைமன்ஸ் மறைந்துவிட்டார்.

தமிழ் ஊடகங்களில் லங்காஸ்ரீ மட்டுமே கட்டுரை வெளியிட்டு இருக்கிறது. அவர்களின் அஞ்சலிக் குறிப்பில் இருந்து:

“கணிதம் மற்றும் தரவு சார்ந்த அணுகுமுறையால் நிதிச் சந்தைகளில் முதலீடு செய்வதில் புரட்சியை ஏற்படுத்தியவர் ஜிம் சைமன்ஸ் (Jim Simons).
31 பில்லியன் டொலர்கள் நிகர மதிப்புள்ள ஜிம் சைமன்ஸ் உலகின் பணக்காரர்களில் ஒருவர் ஆவார்.
வர்த்தகம் குறித்த முடிவுகளுக்கு கணினி சிக்னல்களை பயன்படுத்தி முன்னோடியாக திகழ்ந்ததால் ”Quant King” எனும் பெயரால் ஜிம் சைமன்ஸ் அழைக்கப்பட்டார்.”

https://news.lankasri.com/article/world-richman-jim-simons-dies-at-86-1715378169

நினைத்துப்பார்க்க முடியாத அளவு பணத்தை கணித ஆராய்ச்சிக்காக களத்தில் குவித்தவர். கணிதவியல் ஆராய்ச்சியாளர்கள், கணக்கில் ஆர்வம் கொண்டோர் என அனைவரையும் சொகுசாக ஒன்று சேர்த்து மாநாடுகளை நடத்தியவர். ஸ்டோனி ப்ரூக் பல்கலையில் SCGP (Simons Center for Geometry and Physics), நியு யார்க் நகரில் சைமன்ஸ் மையம், Mathematical Sciences Research Institute (MSRI) என்று அழைக்கப்பட்ட Simons Laufer Mathematical Sciences Institute (SLMath); தொழில்நுட்பத் துறையிலும் அறிவியல் ஆய்வு என உலகின் அனைத்து ஆராய்ச்சிகளையும் இலவசமாகக் கொடுக்கும் arXiv தளத்திற்கு பல பில்லியன்கள்; மாக்மா ஒப்பந்தம்; AMS-Simons மானியங்கள்; சைமன்ஸ் இணைவாக்க நிதிநல்கை; குவாண்டா சஞ்சிகை (Quanta); கணக்கை சுவாரசியமாகச் சொல்லிக் கொடுக்கவும் புதிய விஷயங்களை விளக்கவும் Numberphile யூடியுப் கன்னல்; Math for America; தேசிய கணித அருங்காட்சியகம்; சைமன்ஸ் வானாய்வகம்

உதவித் தொகைகளை பட்டியல் போட்டால் பில் கேட்ஸ் ஃபவுண்டேஷன் கூட ‘எச்சில் கையால் காகத்தை விரட்டுவது’ போல் தோன்றிவிடும்.

ஆய்வு மாணவர்களிடம் புழங்கும் நகைச்சுவையைக் கேட்டிருப்பீர்கள்: வேறெந்தத் துறையைக் காட்டிலும் வடிவகணிதம் சார்ந்த ஆராய்ச்சி முடித்தவருக்குத்தான் சராசரியாக அதிகபட்சமாக ஒரு மில்லியன் டாலர் சம்பளம் கிடைக்கும். சைமன்ஸ் மூன்று பில்லியன் சம்பாதிக்கிறார். மற்ற எல்லோரும் வருடத்திற்கு அறுபதாயிரம் டாலர் வாங்குவோம்.

“Be guided by beauty. I really mean that. Pretty much everything I’ve done has had an aesthetic component, at least to me. Now you might think ‘well, building a company that’s trading bonds, what’s so aesthetic about that?’ But, what’s aesthetic about it is doing it right. Getting the right kind of people, and approaching the problem, and doing it right […] it’s a beautiful thing to do something right.”

Jim Simons

அஞ்சலி – ஆபிச்சுவரி

நண்பனின் தாத்தா மறைந்து போனார். அவருடைய அஞ்சலிக் குறிப்பை அனுப்பி இருந்தாள்.

– எப்படி இறந்து போனார் என்பது முதல் வரி.
– அவருடைய மகன், மகள், மருமகன், பேரக் குழந்தைகள், கொள்ளூப் பேத்திகள் எல்லாம் இரண்டாம் பத்தியை நிறைத்து இருந்தார்கள்.
– எங்கே பிறந்தார், யாருக்கு எத்தனையாவது மகனாகப் பிறந்தார், எப்போது மணம் புரிந்தார் என்பதெல்லாம் இன்னொரு பத்தி.
– எவருக்கு பணி புரிந்தார், எப்பொழுது ஓய்வு பெற்றார், எத்தனை போரில் சண்டை போட்டார், எந்த ஊரில் வசித்தார் என்பது அடுத்த பத்தி.
– அவருக்கு என்ன பிடிக்கும் என்பது ஒரே ஒரு வரி.
– எங்கே சென்று அவருக்கு அஞ்சலி செலுத்தலாம், என்றைக்கு பத்து, கிரேக்கியம் என்பதெல்லாம் இறுதி வாக்கியங்கள்.

218 வார்த்தைகள் இருந்தது.
15 வாக்கியங்கள்.
6 பத்திகள் பிரிக்கப்பட்டு இருந்தது.
to, as, during, before, and, of, in என நிறைய விகுதிகள் அடைத்து இருந்தது.
விருந்தினர் பதிவேட்டில் இரண்டு பேர் தங்கள் வருத்தத்தைப் பதிவு செய்திருந்தனர்.

Conspiracy Theory: பாஸ்டன் ப்ரூயின்ஸ் & தீவிரவாதிகள்

புருயின்ஸ் கெலிப்பார்கள் என்று கணித்தேன். சறுக்கிவிட்டது.

பாஸ்டன் ப்ரூயின்ஸ் அருமையான அணி. பனிச்சறுக்கு ஹாக்கியில் முக்கியமான அணி. இரண்டாண்டுகள் முன்பு கூட உலகக் கோப்பையை வென்ற அணி. இந்த முறையும் இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருக்கும் அணி.

அவர்கள் ஏன் வெல்வார்கள்?

சாதாரணமாக மிக மிக அற்புதமாக ஆடும் வர்க்கத்தார் கூட நேர் போட்டிகளில் வென்றதாக சரித்திரம் இல்லை. உதாரணத்திற்கு மியாமி ஹீட்ஸ் குழுவை எடுத்துக் கொள்ளலாம். ஏழு போட்டிகள் நடக்கும். மியாமியால் நான்கே போட்டிகளில் எதிரணியை வீழ்த்திவிட முடியும். எனினும், யாருக்காவது அடிபடும்; நடுவர் தீர்ப்பு சாதகமாக அமையாது; குழுத்தலைவர் formல் இருக்கமாட்டார்…

இப்படி ஏதாவது காரணம் சொல்லி கடைசி பந்து வரை டி20 போட்டியை இழுத்தடிப்பது போல் நான்கு மேட்ச்களில் முடிக்க வேண்டியதை ஏழாக்கி முடிப்பார்கள். ஆனால், பாஸ்டன் புரூயின்ஸ் நான்கே போட்டிகளில் ரணகளம் செய்து முன்னேறுகிறார்கள்.

இந்த முறை பாஸ்டன் புருயின்ஸ் வெல்வதற்கு மிக முக்கிய காரணம் பாஸ்டன் குண்டுவெடிப்புகள். ஜார்னேவ் சகோதரர்கள் கைங்கர்யத்தால் சோகமும் இருளும் கவ்விய பிரதேசத்திற்கு இந்த வெற்றி புத்துணர்ச்சி கொடுக்கும்.

கூடைப்பந்தாட்டத்தில் விளையாடும் பாஸ்டன் செல்டிக்ஸ் இப்போதைக்கு வாகை சூட முடியாது. பேஸ்பால் ஆடும் பாஸ்டன் ரெட் சாக்ஸும் அவ்வாறே. பேட்ரியாட்ஸ் போட்டி துவங்க நெடுநாள் உள்ளது. இந்த நிலையில் உள்ளூர் அணிக்கு கொற்றம் கிடைத்தால் நகரத்தில் மாற்றம் கிடைக்கும்.

மாஸசூஸட்ஸ் மீண்டும் ஊட்டம் கண்டு தலையெடுத்து மீட்சி அடையும் அடையாளமாக புரூயின்ஸ் வெல்வார்கள்.

மேரி என்றால் மன்னிப்பு; மேற்கு என்றால் ஆக்கிரமிப்பு

பிரித்தாளும் சூழ்ச்சி என்பதை பிரித்தானியர் இன்றளவும் விடவில்லை என்பதற்கு நல்ல உதாரணம் வடக்கு அயர்லாந்து.

பெல்ஃபாஸ்ட் நகரின் கத்தோலிக்கர்களுக்கும் புரோட்டஸ்டண்டுகளுக்கும் நடுவே சுவர் எழுப்புவதை சரித்திர பின்னணியில் விவரிக்கிறது: The American Scholar: Belfast: City of Walls – Robin Kirk

இங்கிலாந்தின் அங்கமாக இருப்பதை கத்தோலிக்கர்கள் விரும்பவில்லை. அரசி ஆளும் யுனைடெட் கிங்டம் கீழே இருப்பதை ப்ரோட்டஸ்டண்ட்டுகள் விரும்புகிறார்கள். இரு சாராரும் அடித்துக் கொண்டு சாகாமல் இருப்பதற்காக பெரிய தடுப்பு அரண்களைக் கட்டிக் கொண்டே இருக்கிறார்கள்.

எல்லாம் இரண்டு மயம். பக்கத்து பக்கத்து தெருக்களில் தனித் தனி மருத்துவமனை. ஒரே சாலையின் இரு புறங்களில் இரண்டு பாடசாலைகள். காசு விரயம் ஆகிறதே என்று இங்கிலாந்து மாளிகையின் அரச குடும்பம் லண்டனில் இருந்து கவலை கொண்டிருக்கிறது.

1984ன் ஞாயிறு காலை. தேவாலயத்தின் வாசல். திருப்பலி முடிந்து வெளியே வருகிறார் அரசு மெஜிஸ்திரேட்டின் மகள். எதிர் அணிக்கு அப்பா வேலை செய்ததற்காக கொலை செய்கிறார் மேரி மெகார்டில். குற்றம் நிரூபிக்கப்பட்டு ஆயுள் தண்டனைக்கு சிறை செல்கிறார் மேரி. சில வருடம் முன்பு அமைதி ஒப்பந்தத்தின் மூலம் அரசாங்கத்தின் உயர் பதவியில் அமர்கிறார் மேரி. அந்தக் கொலையை கேட்டால் ‘துன்பியல் நிகழ்வு’ என்கிறார் மேரி.

Steven Spielberg’s Lincoln Movie: Amendments, Wars and Elections

ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் எடுத்த ’லிங்கன்’ திரைப்படத்தை தியேட்டரில் பார்த்தேன். ‘லைஃப் ஆஃப் பை’ படத்திற்கு பிறகு பார்த்த படம். உணர்ச்சிகரமாக எடுத்து இருக்கிறார்.

குழந்தைகளுக்கு ஆங்காங்கே அலுப்பு தட்டலாம். ஆங்கிலம் ஓரளவு புரிகிற எனக்கு கூட சில இடங்களில் கவனக்குறைவினால் வசனம் புரியாமல் தவறவிட்டேன். துணை எழுத்து இல்லாமல் படம் பார்ப்பதை தவிர்க்கலாம்.

ஏற்கனவே கென் பர்ன்ஸ் எடுத்தது, பி.பி.எஸ். தொலைக்காட்சியில் வந்தது என நாலைந்து லிங்கன் பார்த்தாலும் ஸ்பீல்பெர்க் லிங்கன் வித்தியாசமானவர். அரசியல்வாதி. சமரசங்கள் செய்து சாதுரியமாக முன்னேற்றத்திற்கு உழைப்பவர்.

போர் என்றால் லட்சக்கணக்கில் பொதுமக்கள் சாவார்கள்; தலைவர்கள் சௌகரியமாக தப்பிப் பிழைப்பார்கள்; பொருளாதார காரணங்கள் இருக்கும் என்றெல்லாம் திரையில் காட்ட ஸ்பீல்பெர்க் வேண்டும்; ஆனால், ஐம்பது மாநிலங்களுக்கு 50 நட்சத்திரங்கள் என்று 36 மாகாணக் கொடி ஏற்றாத சறுக்கல்களுக்கும் ஸ்பீல்பெர்க் மேல் பழி போடவேண்டும்.

வெள்ளையர் மட்டுமே கறுப்பின் சமத்துவத்திற்கு போராடியதாக நிலை நிறுத்துவது படத்தின் மிகப் பெரிய குறை அல்ல; The Last King of Scotland, Blood Diamond, The Help என அது என்றென்றும் ஹாலிவுட்டின் தேய்வழக்கு.

சுதந்திர மென்பொருள், ஆய்வுக் கட்டுரை, இலவச விடுதலை

ஆரன் ஷ்வார்ஸ் தற்கொலை வருத்தமும் கோபமும் பயமும் தருகிறது.

எம்.ஐ.டி. ஆய்வுகளை உலகிற்கு தர விரும்புகிறார். பல்கலைக்கழக பேராசிரியர்களின் மேட்டர்களை எல்லோரும் படித்து பயன்பெற விழைகிறார். ராமானுஜர் போல் தான் பெற்றதை உலகெங்கும் பரப்ப நினைக்கிறார். சந்தா கட்டி காசு கொடுத்தால்தான் வாசல் திறக்கும் என்பதை எதிர்த்தார்.

அதற்காக முப்பத்தைந்தாண்டு கடுங்காவல் தண்டனை. சில மில்லியன் டாலர் அபராதம் என்று தில்லி வெறியர்களை தாக்கும் பொதுசனம் போல் எம்.ஐ.டி. பல்கலையும் நடுவண் அரசும் வழக்கு தொடுக்கிறது.

இருபதுகளில் உள்ள ஆராய்ச்சியாளர் ஜெயிலுக்குப் போனால்… தற்கொலை செய்துகொண்டுவிட்டார்

லாரென்ஸ் கீயாட் (1939-2012)

Lawrence_Guyot_Civil_Rights_Activist_Leaders_Voting_Rights_Mississippi_MS_Citizens_USA_Obamaஇன்றைக்கு ஒபாமாவை நினைத்தால் நிறைவாக இருக்கிறது. நிற ஒற்றுமையை எண்ணி மகிழ இயலுகிறது. சமத்துவத்தை இயல்பாக கொண்டாட முடிகிறது.

ஐம்பதாண்டுகள் முன்பு வரை இந்த நிலையா? அமெரிக்காவில் கறுப்பு நிறத் தோல் கொண்டவர்களும் வெள்ளையர்களும் சரிசமமாக புழங்கினார்களா?

நாம் பிறப்பதற்கு முன் நமக்காக போராடினவர்களில் லாரன்ஸ் கீயாட் முக்கியமானவர். கடந்த வாரம் இயற்கை எய்தினார். நிற வெறி மிக மோசமாக இருந்த மிஸிசிப்பி மாநிலத்தில் சமூக நீதிக்காக கொடி உயர்த்தியவர். கருப்பர்களுக்கு வாக்குரிமை கிடைப்பதற்காக உழைத்தவர். தற்போது பராக் ஒபாமா தலைவராக இருக்கும் டெமொகிராடிக் கட்சியில் விளங்கிய இன வேறுபாடுகளை நீக்குவதற்காக முனைந்து செயல்பட்டவர்.

லாரன்சின் துணிச்சலுக்கும் கறுப்பின விடுதலைக்கான செயல்பாட்டுக்கும் பல நிகழ்வுகளையும் போராட்டங்களையும் உதாரணமாக சொல்லலாம். ஃபேனி லூ ஹேமரும் ஹேமரின் இரண்டு கூட்டாளிகளும் கைதானவுடன் நடந்த நிகழ்ச்சியை நியு யார்க் டைம்ஸ் ஆவணப்படுத்தி இருக்கிறது.

Lawrence_Young_Mississippi_MS_Deep_South_MLK_guyot

1963ஆம் ஆண்டின் ஜூன் மாதம். வெள்ளையர்களுக்கு ஒரு வாயில்; கறுப்பர்களுக்கு எந்த நுழைவாயிலும் இல்லை என்னும் நிலை. அமெரிக்காவின் தெற்கு மாநிலங்களில் மிகக் கடுமையான இனப் பாகுபாடு விளங்கிய காலகட்டம். மிசிசிப்பி பேருந்து நிலையத்தை வெள்ளைத் தோல் நிறத்தவர்கள் மட்டுமே பயன்படுத்தலாம். அப்போது ஹேமரும் அவரது நண்பர்களும் தடையை மீறி, பிரவேசம் செய்ய முயல்கிறார்கள். கைதாகிறார்கள்.

அவர்களை ஜாமீனில் எடுக்க கீயாட் செல்கிறார். ஹேமரும் அவர் கூட வந்தவர்களும் மோசமாக கையாளப் பட்டிருந்தார்கள். கைது செய்வதே சட்டமீறல் எனினும், குற்றஞ்சாட்டப்பட்டவர்களை நடத்திய விதம் கொடூரமாக இருந்ததைக் குறித்து தட்டிக் கேட்கிறார் கீயாட்.

‘நீ யாருடா சொல்ல வந்துட்டே’ என்னும் தொனியில் அபிமன்யு கீயாட்டை ஒன்பது காவலர்கள் சூழ்கிறார்கள். தங்கள் துப்பாக்கியை வைத்து அச்சுறுத்துகிறார்கள். கிடைத்த ஆயுதங்களைக் கொண்டு சராமாரியாகத் தாக்குகிறார்கள். துளி ஆடை கூட இல்லாமல் அம்மணமாக்கி அசிங்கப்படுத்தியதாகக் கொக்கரிகிறார்கள். அவரின் ஆண்குறியை நசுக்கி விட எத்தனிக்கிறார்கள்.

குற்றுயிரும் கொலையுயிருமாக கீயாட் இருப்பதைப் பார்த்து அஞ்சிய மருத்துவர்கள், சித்திரவதையை நிறுத்துமாறு இறைஞ்சினார்கள். சித்திரவதையைத் தொடர கீயாட்டையும் கைது செய்து ஜெயிலில் அடைக்கிறார்கள். காவலர்களின் உடல்வதை நீடிக்கிறது.

பெயில் எடுக்க வந்த கீயாட்டை முட்டிக்கு முட்டி தட்டுகிறார்கள். அப்படியானால் அவருக்கு யார் பிணை கொடுப்பார்கள்? எப்படி வெளியே வர முடியும்? எவ்வாறு ஹேமரும் கீயாட்டும் தங்கள் அனுபவங்களை பிறருக்கு சொல்ல முடியும்?

இந்த நிலையில் வேண்டுமென்றே ஜெயில் கதவை பூட்டாமல் திறந்து வைத்து, கூடவே கத்தியையும் போட்டு வைக்கிறார்கள். தூண்டிலில் மீன் மாட்டினால், குரல்வளையை அழுத்து துண்டம் போட்டு, உலகிற்கு தங்கள் பக்க கட்டுக்கதையை விற்று விடலாம். ஆனால், கீயாட் மாட்டவில்லை.

ஹோவெல் ரெயின்ஸ் எழுதிய My Soul Is Rested: The Story of the Civil Rights Movement in the Deep South (1977) புத்தகத்தில் இந்த கொடூரத்தை பகிர்ந்து இருக்கிறார் கீயாட்.

மிஸிஸிப்பியின் ஜாக்ஸன் நகரத்தில் கீயாட்டின் தோழரான மெட்கர் எவர்ஸ் கொலை செய்யப்படுகிறார். அதன் பின், கீயாட்டும் உடனடியாக மரணமடைந்தால், கலவரம் மூளும் என்று அஞ்சிய காவல்துறை கீயாட்டை விடுவித்தது.

அடுத்த வருடமே கீயாட் மீண்டும் சிறைக் கைதியாகிறார். காவல்துறையினர் கருப்பினருக்கு நிகழ்த்தும் அட்டூழியங்களை நடுவண் அரசான வாஷிங்டன் பார்வைக்கு கொண்டு செல்ல பதினேழு நாள் உண்ணாவிரத நோன்பு மேற்கொள்கிறார். ஐம்பது கிலோ எடை இழந்தாலும் உணர்வும் எழுச்சியும் உறுதியும் இழக்காமல், சக கறுப்பர்களையும் மீட்கிறார்.

”அடுத்தவர் உன் மீது ஆக்கிரமிப்பு செய்யலாம். ஆனால், நாம் அடங்கிப் போவது நம் கையில் இருக்கிறது” என்று அந்த சத்தியாகிரகத்தை நினைவு கூர்கிறார்.

1939ஆம் ஆண்டு ஜூலை பதினேழாம் தேதி மிஸிஸிப்பியில் பிறந்தார் கியாட். அவருடைய அப்பா கூலித் தொழிலாளியாக வேலை பார்த்தார். டூகலூ கல்லூரியில் இருந்து 1963ல் வேதியியலிலும் உயிரியலிலும் பட்டம் பெற்றார். அகிம்சாவழி மாணவர்களின் குழு சார்பாக பல்கலைக்கழகத்தில் படித்த காலத்திலேயே மிசிசிப்பி முழுக்க பயணம் மேற்கொண்டு சமூகநீதி பட்டறைகளை முனைப்போடு ஒருங்கிணத்தார்.

அமெரிக்க குடிமகன்கள் எல்லோரும் ஓட்டளிக்க வேண்டும் என்பதில் குறியாக இருந்தார். இனப்பிரிவிற்கு எதிராக போராடிய மார்ட்டின் லூதர் கிங் போன்றோர் எங்கும் எதிலும் வெள்ளையர்களுக்கு சமமான உரிமைக்காக குரலெழுப்பிய தருணங்களில், கீயாட் வாக்குப்பெட்டியை மட்டும் குறிவைத்து இயங்கினார். கருப்பர்கள் வாக்கு போட்டு தங்களுக்கு உவப்பானவர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அதன் மூலம் அமெரிக்கா முழுக்க கருப்பின சமத்துவ உரிமையை அடையலாம் என்று நம்பினார். வெள்ளையரிடம் இருந்து இன உரிமை பெறுவதற்கு பதில், ஜனநாயகத்தின் பேரிலும் தேர்தல் வெற்றி மூலமாகவும் சட்டதிருத்தங்களையும் சமூக சீர்திருத்தங்களையும் அடையும் வழிக்காக விழிப்புணர்வை புகட்டினார்.

1971இல் சட்டப் படிப்பில் முதுகலை பட்டத்தை முடித்தார். அதன் பின் வாஷிங்டன் நகரத்தில் பணியாற்றினார்.

தற்பால்விரும்பிகளுக்கான போராட்டத்தை ஆதரிக்கும்போது அவர் சொன்ன மேற்கோள் நமக்கு நல்ல வழிகாட்டியாக இருக்கும்: “நமக்கு முக்கியம்னு படறதுக்காக உயிரைப் பணயம் வைத்து போராடறதுக்கு ஈடா இந்த உலகத்தில் எதுவுமே கிடையாது. லிங்கன் சொன்னது போல் சுடறவன் கிட்ட இருந்து தப்பிச்சுட்டு அவன் முன்னாடி சாதிக்கறது தனி சுகம்!”

அஞ்சலிகள்.

வாழ்க்கைக் குறிப்பு

Free Speech, Religion Clash Over ‘Innocence of Muslims’ Film: Cartoon: Movie critics – Dan Wasserman

Thanks: cartoon from Dan Wasserman of the Boston Globe

அமெரிக்கா: இந்தியக் கோவிலில் தீவிரவாதத் தாக்குதல்

அமெரிக்காவில் குழந்தைகளுக்கு பேன் வந்திருந்தால் பள்ளிக்கு செல்ல முடியாது. ஆனால், துப்பாக்கி வைத்திருந்தால் செல்ல முடியும். இந்தக் காலத்தில் பேன் வந்த தலைகளை பார்ப்பது அரிது. ஆனாலும், பேன் கொண்டு வந்த தொற்று நோய்களையும் கொள்ளை நோய்களையும் எண்ணிப் பார்த்தால் மனித வர்க்கத்தின் மீதான அதன் வீரியத்தை அறிய முடியும்.

காதிற்கு அருகேதான் பேன்களுக்கு விருப்பமான இடம். உறவு மேற்கொண்டவுடன் தன் முட்டைகளை நல்ல கோந்து போட்டு ஒட்டி வைக்கும். அவை குஞ்சு பொரித்து பன்மடங்காக பெருகும். எதுவுமே நமக்குத் தெரியாது. அது பாட்டுக்கு குடும்பம் நடத்தி வளரும். பேன்களினால் பறக்க முடியாது. எனவே, நேரடியான நெருக்கமான சந்திப்புகளில் தொற்றிக் கொள்ளும்.

பேன்கள் போலத்தான் வெள்ளை மேட்டிமையுணர்வாளர்கள். அந்தக் காலத்தில் இராணுவ கூடாரங்களிலும் போர் நடக்கும் இடங்களிலும் பேன் செழித்தது. முதலாம் உலகப் போரில் கால் பங்கு போர் வீரர்கள் நோய்வாய்ப்பட்டதற்கு பேன் மூலமாகப் பரவிய சுரங்களே காரணம்.

பத்தொன்பதாம் நூற்றாண்டிலும் ‘ஜெயில் ஜுரம்’ என்ற பெயரில் ஐரோப்பவிலும் வட அமெரிக்காவிலும் தலை விரித்தாடியது. நீதிபதிகளையும் பீடித்து கொன்று குவித்தது. நான் பேன்களைப் பற்றித்தான் சொல்லுகிறேன். வெள்ளை நிறத்தின் மீதான மீயுணர்விற்குள்ளேயே போகவில்லை.

ஆண்டி பயாடிக் போல் மார்டின் லூதர் கிங் வந்தாலும் இன்னும் பேன் நடமாட்டம் உண்டு.

அமெரிக்காவில் துப்பாக்கி வாங்குதல் எளிது. அதனினும் எளிது, அந்தத் துப்பாக்கிக்கு ஜோடியாக ஏகே47 வகை தானியங்கி துப்பாக்கிகள் சேர்த்து வாங்குவது. அதனினும் மிக எளிது, அந்தத் துப்பாக்கிகளுக்கான தோட்டாக்கள்.

இந்த மாதிரி சல்லிசான விலையில் தோட்டாக்களும் துப்பாக்கிகளும் வாங்கியவர்கள், அதை பயன்படுத்த இடம் தேடுகிறார்கள். வீடீயோ கேம்ஸில் பொய்யாக சுட்டு அலுத்துப் போனவர்கள், இரு கைகளிலும் ஆயுதம் ஏந்தி நிஜ மனிதர்களை சாகடிக்க விரும்புகிறார்கள்.

சிலருக்கு பள்ளிக்கூட வளாகம்.
சிலருக்கு கல்லூரி கேம்பஸ்.
சிலருக்கு நாடாளுமன்ற உறுப்பினரின் சொற்பொழிவு கூட்டம்.
புதியதாக இந்திய வழிபாட்டு ஆலயங்களும் இந்தப் பட்டியலில் சேர்ந்திருக்கிறது.

சாதாரணமாக வகுப்புகளில் எல்லோரும் கேலி செய்வதைப் பொறுக்காதவர்கள், துப்பாக்கி தாங்கி, கிண்டல் செய்தவர்களையும் நடுவில் தென்படுபவர்களையும் கொன்று குவிப்பார். ஆராய்ச்சி மாணவர், மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று இந்த மாதிரி மனச்சிதைவுக்கு உள்ளானோர் கொல்வது சகஜம்.

பத்தாவது படிக்கும் பள்ளிக்கூடமும் பி.எச்டி. செய்யும் பல்கலைக்கழகமும் பிணக்கிடங்காக ஆவது அமெரிக்காவில் மாதம் ஒரு முறையோ அல்லது இரு முறையோ நடக்கிறது.

ஆனால், இந்தியர்களை குறிவைத்து தாக்குவது இதுவே முதல் முறை.

ஐரோப்பாவில் நடந்தது மாதிரி வெள்ளைத் தோலின் உன்னதத்தை நிலை நாட்ட நடந்த தாக்குதலில் இது அமெரிக்காவின் முறை.

சீக்கியர்களின் கோயிலில் ஒருவர் புகுந்து துப்பாக்கிச்சூடு நடத்தியதில் துப்பாக்கிச்சூடு நடத்திய ஒருவன் உள்பட 7 பேர் பலியாயினர். அமெரிக்காவில் கடந்த இரு வாரங்களுக்கு முன் பேட்மேன் படம் திரையிடப்பட்ட சினிமா தியேட்டரில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் படம் பார்த்துக் கொண்டிருந்த 12 பேர் உயிர் இழந்த சுவடு மறைவதற்குள் ‌சீக்கிய கோயிலான குருத்துவாராவில் அடுத்த சம்பவம் நடந்துள்ளது.

இறந்தவர்கள் பாடு தேவலாம். இந்த மாதிரி ஃபையரிங்கில் மாட்டி கை கால் இழந்தவர்களின் பாடு பேஜார். இது வரை நல்ல திடகாத்திரமாக இருந்துவிட்டு, திடீரென்று ஒரு நாளில் டிஸ்ஏபிள்ட் ஆகிறார்கள். சம்பளம் குறைப்பு, வேலையில் பாதிப்பு என்று சீரழிகிறார்கள்.

வெள்ளை மேட்டிமையை நம்புபவர்களுக்கு பல பிரச்சினை.

கருப்பின ஒபாமா தலைவராக இருப்பது சின்ன விஷயம். தங்களின் ராஜ்ஜியத்தில் கறுப்பர்கள் அடிமைகளாக இல்லாதது நிறையவே வருத்தமான விஷயம். அண்டை நாடுகளான மெக்சிகோவில் இருந்து அயல்நாட்டின் லத்தீன் அமெரிக்கர்கள், உள்ளே நுழைவது சினம் தரும் விஷயம். எல்லாவற்றிற்கும் மேலாக இஸ்லாமியர்களையும் அமெரிக்காவில் சுதந்திரமாக உலவ விடுவது உச்சந்தலை வரைக்கும் உசுப்பேற்றி இரத்த நாளங்களை முறுக்கேற்றி உள்ளூர் தீவிரவாதத்தை உருவாக்கும் விஷயம்.

கோபம் தலைக்கேறினால் எந்த மதமும் கண்ணுக்குத் தெரிவதில்லை. டர்பன் கட்டியவர் எல்லாம் முஸ்லீம்; தாடி வளர்த்தவர் எல்லாம் ஒசாமா பின் லாடன்.

எடுத்தார் துப்பாக்கியை… கொன்றார் சீக்கியர்களை!

இந்தியர்கள் மீதான வெறுப்பிற்கும் பல காரணங்களை சொல்லலாம்.

எச்1பி விசாவில் வந்து நூறாயிரத்திற்கு மேல் வாங்க வேண்டிய சம்பளத்திற்கு பதில் பாதி விலையில் நிறைவான வேலை செய்து, மண்ணின் மைந்தருக்கு வேலையில்லாத் திண்டாட்டத்தை உருவாக்குவது…

சொகுசான கார்; ஆசைக்கொரு பையன்; ஆஸ்திக்கொரு பெண் என்று மகிழ்ச்சியாக உலவுவது…

ஆஃப்ஷோரிங், அவிட்சோர்சிங் என்று தினந்தோறும் தொலைக்காட்சி பிரச்சாரத்தை பார்ப்பது…

இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் எல்லாம் அகண்ட பாரதமாக நினைப்பது…

தன்னுடைய சர்ச்சில் தென்படாதது…

கடவுளைத் தொழ கோவிலுக்கு சென்றால், இனி கோவிலிலேயே சமாதி ஆகுவோம் என்று பயம் வரும். அதுவும் அந்த திரிசூலத்துடன் மகிஷாசுர மர்த்தினியை பார்க்கும்போது காங்கிரஸ் ஊழலுக்கு எதிராக நின்ற அன்னா ஹசாரே போல் நம்பிக்கையும் வரலாம்.

1945,ஆகஸ்ட் மாதம், 6-ம் தேதி, ஜப்பானின் ஹிரோஷிமா மற்றும் நாகசாகி மீது அமெரிக்கா அணுகுண்டு வீசி தாக்குதல் நடத்தியது. மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர் எரிந்து சாம்பலாயினர்.மேலும் கதிர்வீச்சால், பல்லாயிரக்கணக்கானோர் நோயால் பாதிக்கப்பட்டனர்.

அன்று உலகப் போர் முடிவிற்கு வந்தது. மேலாதிக்க மனப்பான்மை முடிவிற்கு வருவது எக்காலமோ!

நெருப்பிலாமல் புகையுமா?

செய்தி: Blaze destroys Khalsa Mahal; 1 fireman dead

The fire broke out in the offices of Commissioner and Director of Industries and Commerce and Director of Social Welfare. (தொழில் வணிக வரி அலுவலகம்)

Believing that the fire was fully doused, a team led by Divisional Fire Officer, Central Chennai, Priya Ravichandran, entered the building around 1:30 am and suddenly the roof caved in. K.Anbazhagan (55), leading fireman at Teynampet station, died on the spot.

சென்னை எழிலகத்தில் தீ: வணிகவரி- சமூகநலத்துறை ஆவணங்கள் சாம்பல்; சதியா ?

இந்த அலுவலகத்தில் இருந்த முக்கிய ஆவணங்கள் அனைத்தும் எரிந்து சாம்பலாயின. பொங்கல் திருநாளை முன்னிட்டு அரசு அலுவலகத்திற்கு தொடர் விடுமுறை என்பதால் சென்னையில் உள்ள அனைத்து தலைமை அலுவலகங்களும் வெறிச்சோடி காணப்பட்டன.


ஏன்? சில துப்பறியும் எண்ணங்கள்

1. அமைச்சர் எத்தனை அமைச்சரடி: சமூக நலத்துறை அமைச்சராக பதவி வகித்த செல்வி ராமஜெயத்தை அமைச்சர் பதவியிலிருந்து முதல்வர் ஜெயலலிதா நீக்கம் செய்தார். புதிய சமூச நலத்துறை அமைச்சராக வளர்மதியையும் நியமித்துள்ளார். சென்ற வருடம் – திமுக: சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன்.

2. ஆட்சியர் ஊழல்: Directorates of Social Welfare, and Industries and Commerceஇல் இருந்து எத்தனை ஆணையர்கள் (தற்போதைய இயக்குநர் ஜோதி நிர்மலா) சம்பந்தப் பட்டிருக்கிறார்கள் என்பதைக் கண்டுபிடிப்பவருக்கு ‘பரத் – சுசிலா விருது’ வழங்கப் போவதாக அறிவிப்பு.

3. தயார் நிலை: பொங்கல் நேரத்தில் தீயணைப்பு வீரர்கள் சொந்த ஊருக்கு செல்கிறார்களா அல்லது சென்னையிலேயே இருக்கிறார்களா என்று சோதனை செய்தார்கள்

4. ஸ்மோக் அலாரம் வணிகம் / தீயோலம் வர்த்தகம்: புகை எழுந்தாலே சத்தம் எழுப்பும் கருவிகளை விற்பவர்களின் சதிச்செயல் இது.

5. புதிய கட்டிடம் எழுப்ப திட்டம்: இருக்கும் எழிலகத்தை இடிக்கச் சொன்னால், புராதனம், கலாச்சாரம், பாரம்பரியம், வரலாற்றுச் சின்னம் என்றெல்லாம் புயல் கிளப்புவார்கள். மதராஸ் மியூசிங்ஸ், தியடோர் பாஸ்கரன், இல கணேசன் எல்லோரும் எழுதத் தொடங்குவார்கள். இப்படி இடித்தால் மல்டிப்ளெக்ஸ் மாடி அமைக்கலாம்.

6. அப்பாவி அன்பழகன் கொலை: நாலு குழந்தைகளுக்கு அப்பாவான நடுத்தர வர்க்கத்தை நடுத் தெருவிற்கு கொண்டு வந்தால் எப்படி சர்வைவ் ஆவார்கள் என்று வேடிக்கை பார்க்கும் ரியாலிடி டிவியின் சூழ்ச்சி. 😦