Tag Archives: Congress

How does Anna Hazare fare among Indians in News?

SourceGoogle Insights for Search – Web Search Interest: anna hazare – India

Regional interest

  1. Haryana
  2. Uttar Pradesh
  3. Assam
  4. Orissa
  5. Madhya Pradesh
  6. Rajasthan
  7. Bihar
  8. Punjab
  9. Delhi
  10. Gujarat

City

  1. Noida
  2. Gurgaon
  3. Indore
  4. Bhopal
  5. Jaipur
  6. Pune
  7. Ahmedabad
  8. Chandigarh
  9. Lucknow
  10. Bangalore

Search terms

Top searches

  1. anna hazare news
  2. anna news
  3. anna hazare latest
  4. lokpal
  5. corruption
  6. anna live
  7. anna hazare facebook
  8. anna hazare fast
  9. anna arrested
  10. wiki anna hazare

In Tamil Nadu

  1. Thanjavur
  2. Chennai
  3. Coimbatore

How do I Interpret this data?

  • Kolkata, Trivandrum are virtually not present
  • Maharashtra, Gujarat are not trending
  • People in big metros are not searching; second level cities are Googling
  • The current momentum is much bigger than the Mar-Apr protest. It has drawn more attention of cyber folks.
  • Sun TV, Kalainjar News, Zee Tamil channels are not giving attention to the Delhi events; Anna Hazare is virtually unsearched in தமிழ்
  • அண்ணா, அன்னா, ஹசாரே, ஹஸாரே – everything is lower ranked in popularity than typical ரஜினி, கமல், கலைஞர்
  • Corruption, Lokpal has become synonymous words with Anna Hasare

10 Similes between Politician Rahul Gandhi & Actor Rajinikanth

ராகுல் காந்தி ரஜினிகாந்த்
தளபதிக்கு பிரதம மந்திரியாகும் வயசு ஹீராவாக நடிக்கும் வயசு
இத்தாலி நாட்டு குடும்பத்தில் பிறந்தவர் மகாராஷ்டிர குடும்பத்தில் கர்நாடகத்தில் பிறந்தவர்
இந்திய அரசியலை மறுத்து, வெளிநாடு சென்றதாக செய்தி வந்ததுண்டு தமிழ் சினிமாவை வெறுத்து, மருத்துவமனையில் ஓய்வெடுத்ததாக செய்தி உண்டு
சொந்தமாக முனைந்ததில் பிகார் போல் பின்னடைவுகள் எக்கச்சக்கம். சொந்தத் தயாரிப்பில் ‘வள்ளி‘ ஃப்ளாப்
‘கரீபி ஹடாவோ’ கோஷங்கள் ரீமேக் செய்கிறார் அமிதாப் படங்களை தமிழ் சினிமாவுக்கு ரீமேக் செய்தார்
கொள்ளுத் தாத்தாவைப் போல் ரஷியாவின், சீனாவின் நண்பர் ஜாக்கி சானை விட ஜப்பானின் புகழ்பெற்ற நடிகர்
ஞாநி, மாலன் போன்ற அறிவிஜீவிகளின் பழக்கமுண்டு துக்ளக் ‘சோ‘ போன்ற அரசியல்வாதிகளின் சகவாசமுண்டு
ஸ்பெட்ரம் 2ஜி, ஆதர்ஷ், ஐபிஎல் இருந்தாலும் மீடியா திரையில் மிஸ்டர் க்ளீன் இமேஜ் எந்திரனுக்கு ஐம்பது கோடிக்கு மேல் சம்பளம் வாங்கினாலும், கருப்பு பணம் தகர்க்கும் சிவாஜி வெள்ளித்திரை இமேஜ்
ஏழையின் குடிசைக்கு விசிட் அடிப்பார் சாமியாரின் இமயமலைக்கு போய் வருகிறார்
திமுக, அதிமுக – எந்தப் பக்கம் சாய்வார் என்று யாருக்கும் தெரியாது அமலா பால், ஹன்ஸிகா மொட்வானி – எந்த ஹீரோயின் தேர்ந்தெடுப்பார்?

முந்தைய ஒப்புமை:
10 Similes between Writer Charu Nivethitha & Actor Kamalhasan

ரத்த சரித்திரம் – How it narrates the Story of BJP vs Congress?

இந்தப் பதிவுக்கு இகாரஸ் பிரகாஷ் எழுதிய ஆயிரத்தில் ஒருவன் விமர்சனம் ஊக்கம் தந்தது.

படத்தின் துவக்கத்தில் வரும் உரிமைதுறப்பு: ‘இந்தப்படத்தில் வரும் சம்பவங்கள் கற்பனையே’
பிறகு துவங்கும் படத்தின் சற்றே பெரிய எழுத்தில் வரும் டைட்டில் கார்டு: ”நிஜத்தில் நடந்த கதை”

என்ன கதை?

காந்தி சிலையுடன் காட்சித் துவக்கம். ஏன்?

ஆனந்தபுரத்தைத் திருப்பி போட்டால் தண்டி. அஹிம்ஸையின் மறுபக்கமாக அரசியல் செய்கிறார் நாகேந்திர மூர்த்தி (ஜின்னா & பிரிட்டிஷார்).

இவரது வலது கரமாக விளங்கும் வீரபத்ரனை (பாரதம்) பெரிதும் நம்புகிறார். விவசாய பாட்டாளிகளுக்காக (பாரதியவாசிகள்) உண்மையாக பாடுபடும் மக்கள் பிரதிநிதி.

இந்தக் கூட்டணியை விரும்பாத நாகமணி (ஜவகர்லால் நேரு) இந்தியாவைக் கலைத்து இரண்டாகப் பிரிக்கிறார். மக்களின் ஆதரவு ஒருங்கிணைந்த பாரதத்திற்கு ஏற்படுகிறது. இதனால் ஜின்னாவும் நேருவும் ஆங்கிலேயரும் இணைந்து வீரபத்ரனை, அவரது நம்பிக்கையான ஆளை (ஹிந்து – ஆர்.எஸ்.எஸ்.) வைத்தே தீர்த்து கட்டுகின்றனர்.

தவறான ஆட்களின் கோள்மூட்டுதலால் அதுவரை காத்து வந்தவரையும் (இந்தியா) அவரது முதல் மகனையும் (காந்தி) கொலைசெய்கிறார்கள்.

கொல்லப்பட்டவரின் இரண்டாவது மகன் (இந்து முஸ்லீம் பிரிவினையை சொல்வதற்காக இரண்டாவது என்னும் குறியீடு) அதற்காக ஒரு பழிவாங்கல் கதையை தன் அரிவாளால் எதிரிகளின் ரத்தத்தால் எழுதுகிறான். அது மாத்திரமல்லாது தனக்கு எவருமே எதிரிகளே இருக்கக்கூடாது என்று ஒரு ஆபரேஷன் திட்டம் (எமர்ஜென்சி) செய்து அனைவரையும் கொல்வதற்கு ஏற்பாடு செய்கிறான்.

அரசியல் அவனை (காங்கிரஸ்) அரவணைக்கிறது.

எதிரிகளைத் தவிர்த்து பிற பொதுமக்களுக்கு அவன் நியாயமாகவே நடந்துகொள்கிறான் போலத்தான் தெரிகிறது.

நடுவில் பிரதாப்பின் மனைவியாக ராதிகா ஆப்தே ராஜீவ காந்தியை அரசியலை விட்டு ஒதுங்கி நிற்கவைக்கும் சோனியா.

சூப்பர் ஸ்டாராக அரசியலில் குதித்தவர் சிவராஜ். (சத்ருஹன் சின்ஹா – அமெரிக்கா) கோகோ கொலாவாக தண்டிபுரத்தில் நுழையும் அவரை வன்முறை வரிகள் கொண்டு, சட்ட வெடிகுண்டு வீசி துரத்தியடிக்கின்றன.

இவர்களை எதிர்க்க யார் சரியான ஆளாக இருக்க முடியும் என்று அவர் யோசிக்கும் போது கண்ணில் படுபவன் மன்மோகன் சிங் + நரசிம்மராவ். உலகமயமாக்கி, பொருளாதார வல்லுநராக்குகிறது.

திருப்பமாக அவனைப்போலவே அவனால் கொல்லப்பட்ட அரசியல்வாதியின் மகன் (பாரதீய ஜனதா கட்சி) உருவெடுக்கிறான். எந்தச் சமாதானங்களுக்கும் உட்படத் தயாராகயில்லாத வெறி (அயோத்தியா ராமர் கோவில் + பாப்ரி மசூதி இடிப்பு) நிறைந்ததாக இருக்கிறது அவன் நோக்கம். வளர்ந்து நிற்கும் இவனை பழிதீர்ப்பது அவனுக்கு கடினமான வேலையாக இருந்தாலும் சில தோல்விகள், போராட்டங்களுக்குப் பின் நினைத்ததைச் சாதிக்கிறான்.

தொடர்புள்ள பதிவுகள்:

1. அங்காடித் தெரு: இலக்கியம், குறியீடு, அரசியல் – Extrapolation
2. சந்திரமுகி க(வ)லையா?

விமர்சனம்:
1. பிச்சைப் பாத்திரம் – சுரேஷ் கண்ணன்
2.
ஆதிமூலகிருஷ்ணன்

olla podrida

ரெண்டு மாசம் இருக்கும் போல் தோன்றியது. ஆனால், ஒரு மாசம் மட்டுமே ஆகியிருக்கிறது. தமிழ்மணம் பக்கம் சென்று ரெண்டு மாசம் இருக்கும் போல் தோன்றியது.

நித்தியானந்தாவிற்கு டாப் 10 போட கொள்ளை ஆசை. நேரம் அமையவில்லை. இப்பொழுதும் போடலாம். அட்லீஸ்ட் ட்விட்டரில் கிடைத்த சம்பாஷணைகளில் கவர்ந்ததைத் தொகுக்கலாம்.

ரோமன் கத்தோலிக்க மதகுருமாரால் மேற்கொள்ளப்பட்ட சிறார் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு வணக்கத்துக்குரிய பிதா, பாப்பரசர் பெனடிக்ட்டும் உறுதுணை நின்றிருக்கிறார். திருச்சபையின் திரைமறை திருப்பலி களப்பணி.

அரசியல்வாதிக்கு அடுத்த தேர்தலில் நிற்க வேண்டாம் என்றால் துணிச்சல் வரும். ஒபாமா போன்றவருக்கு அதுவே அபயம் என்றால் ஜிம் பன்னிங் (Jim Bunning) போன்ற சிலருக்கு அசட்டுத் துணிச்சல். மறுமுறை வாக்கு கோரினால் நிச்சயம் தோல்வி என்பதால் அதீத நிலைப்பாடா? அல்லது டெமொக்ரடிக் ஆளுங்கட்சியே காசு கொடுத்து கூவச் சொல்லியதா?

கிறித்துவிற்கு முன் பிறந்த போப்பை விமர்சிக்கும் இந்தப் பதிவில் 1907ல் இயற்றப்பட்டது நீங்குவது பாராட்டுவதுதானே பொருத்தம்?

இல்லை… தேர்தல் நிதிக்கு தரப்படும் பணம் எப்படி வேண்டுமானாலும், எவ்வளவு வேண்டுமானாலும், கொடுக்கலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

ஒபாமாவிற்கும் ஹில்லரிக்கும் இதனால் பெரும்பாதிப்பு இருக்காது. ஆனால், அமெரிக்காவில் பென்ச் நீதிபதிகளுக்கும் தேர்தல் உண்டு. அவர்கள் உள்ளூர் வழக்கொன்றில், நிறுவனத்திற்கு எதிராக தீர்ப்பளித்திருப்பார். அவர், மறுபடி வாக்காளரை சந்திக்கும்போது, அதே நிறுவனம் அசுர பலத்துடன் மீடியாவில் எதிர்மறை விளம்பரத்தை சுழலடிக்கும். போட்டி வேட்பாளருக்கு பற்றுடன் வரவு வைக்கும்.

இதே போல் மாநில சட்டமன்றத்திலும், பெருவணிகர்களைப் பகைத்துக் கொள்ளும் சட்ட மசோதாக்களை ஆதரிக்க அரசியல்வாதிகள் அஞ்சும் சூழல் தோன்றும். இன்று வணிக ஸ்தாபனத்திற்குப் பிடிக்காத சட்ட வரைவை நிறைவேற்றினால், நாளைய பொழுதில் பில்லியன் டாலர் கணக்கில் தீர்த்துக் கட்டப்படுவோம் என்பது அவருடைய லிபிதம்.

ஒவ்வொரு அரசியல்வாதியாக, ஒவ்வொரு நீதிபதியாக, ஒவ்வொரு தேர்தலாக இந்த மாதிரி செலவழிக்க வேண்டாம். வணிக நிறுவனத்தின் பலம் என்பது அல் க்வெய்தாவின் ஆள்சேர்ப்பு மாதிரி. எங்கேயாவது ஒரு வெடிகுண்டு போதும். பூரா பாகிஸ்தானும் தீவிரவாதிகளின் தேசம் மாதிரி தோன்றும். அதே போல், எங்காவது ஒரு சாம்பிள் போதும். ‘அவனுக்கு நேர்ந்த கதி, உனக்கும் ஆவணுமா?’ என்றே மிரட்டி, அனைவரையும் வழிக்குக் கொணரலாம்.

தொடர்புள்ள இடுகை: ஒரு பில்லியனைத் தாண்டிய 2008 தேர்தல் வசூல்! « US President 08

Democrats Far Outspend Republicans On Field Operations, Staff Expenditures – WSJ.com

In 2004, the Democratic Party spent nearly $120 million on advertising in support of then-nominee John Kerry, compared to only $500,000 this fall

தலைப்புக்கு என்ன அர்த்தம்?

1. An incongruous mixture.
2. A spicy stew of seasoned meat, vegetables, chickpeas, etc.

ETYMOLOGY: From Spanish olla podrida (literally, rotten pot), from olla (pot) + feminine of podrido (rotten).

USAGE: “Alice Randall’s collection of cookbooks is formidable, an olla podrida of Junior League and soul food cookbooks and classics like The Joy of Cooking.”
– Penelope Green; What Matters Most; The New York Times; Sep 16, 2009.

துவக்கத்தில் எதற்கு தமிழ்மணம் பேச்சு? அன்றாடம் வராவிட்டால், கவர்ந்திழுக்கிற மாதிரி தமிழ்மணத்தில் எதுவுமேயில்லை. திடீரென்று வந்து விழுபவருக்கு சென்னைக்குப் போன அமெரிக்கன், சேனல்களைத் தாண்டிய கதையாக, டிவியை அணைக்கவைக்கிறது. ‘சூப்பர் சிங்கர்’ எங்கே, துணையெழுத்தோடு ‘ராமாயணம்’ அங்கே என்று காட்ட வேண்டாமோ?

Washington DC: Jeyamohan Visit – Thanksgiving

வாஷிங்டன் டிசி-க்கு எழுத்தாளர் ஜெயமோகன் சென்று வந்து பல மாதம் ஆகி விட்டது. நினைவில் இருந்து சில துளிகளும் நன்றி நவில்தல்களும்.

வாஷிங்டனுக்கு வருகிறேன் என்று ஜெயமோகன் சொன்னவுடனேயே ராஜனை மின்னஞ்சலில் தொடர்பு கொண்டவர் வேல்முருகன். ஸ்ரீகாந்த் மீனாக்ஷி டிசி தமிழ்ச்சங்கத்தின் தலைவராக இருந்தபோது செயலாளராக இருந்தவர். பிளந்துகிடந்த வாஷிங்டன் தமிழ்ச்சங்கங்களை இணைப்பதில் இவருக்கும் பங்கிருப்பதாக திண்ணை வம்பி கிடைத்தது தனிப்பதிவுக்கான கதை.

வேல்முருகனோடு தொலைபேசியில் கொஞ்சம் tag விளையாடிவிட்டு, கடைசியாக வாய் – அஞ்சலின்றி ஒருவருக்கொருவர் வாயாடும் வாய்ப்பு கிடைத்தது. மிகவும் இன்முகத்துடன் அழைத்தார். சபையடக்கமாக தாங்க்ஸ் என்னும் வார்த்தையே சொல்லவேண்டாம் என்று உரிமையோடு பேசினார்.

பாஸ்டனில் இருந்து தன்னந்தனியே நியு ஜெர்சி பயணம். செல்லும் வழியில் வழக்கமான கட்டுமானப் பணிகள். ‘அமெரிக்காவில் மறுமுதலீட்டு திட்டம்’ நடைமுறையாக்கத்தில் நிறைய இடித்துப் போட்டு, மாற்றுப் பாதை கொடுத்திருந்தார்கள். அன்று வெள்ளிக்கிழமை மதியம். விடுமுறை அல்ல. எனினும், இரவில் மட்டுமே பணி நடக்கும் என்று பலகை போட்டிருந்தாலும், வேடிக்கை பார்க்கும் காரோட்டுனர்கள் மெதுவாகவே ஸ்டியரிங் பயின்றார்கள். அடிமட்ட தொழிலாளிகளுக்கான வேலைவாய்ப்பு பெருக பெருக, பெருநிறுவனங்களும் லாபம் ஈட்ட, நமக்கும் தேன் வழியும் என்று multiplier effect எல்லாம் சிந்தித்துக் கொண்டே துகாரமின் வீட்டை அடைந்தபோது ஆறு மணி.

டைனோபாய் ரன்னிங் காமென்டரி கொடுத்துக் கொண்டிருந்தார். ப்ரிட்ஜ்வாட்டர் கோவிலில் ராமரின் பளிங்குச்சிலை முன் நிற்கிறோம். ஜெயமோகன் சிற்ப அழகை ரசிக்கிறார். கை கூப்பவேயில்லை. எந்த தெய்வத்தையும் வணங்கவேயில்லை. சர்வமத ஆலயம் போல் சமணருக்கும் சம ஒதுக்கீடு தந்திருப்பதை குறித்து பேசுகிறார். எங்கள் பேச்சைக் கேட்டுவிட்ட மடிசார் கட்டாத மாமி முகஞ்சுளிக்கிறார்.

“எப்ப சார் துக்கா வீட்டுக்கு வருவீங்க?”

“அது மாமி அல்ல. தாவணி கட்டிய பைங்கிளி. இப்பொழுது ஜெமோ…”

ஒருவழியாக ஏழரை மணிக்கு ‘பராக்கா’வும் (குரங்குத்தவம் – http://kuranguththavam.blogspot.com ) உடன் வந்து சேர்ந்தார்கள். ‘இலவசக்கொத்தனார்’ம் கொஞ்ச நேரத்தில் வந்தவுடன் இணையம், போலி டோண்டு என்று வழக்கமான இடங்களில் போரடிக்க, இட்லி+மசால் தோசை மொக்கிய பிறகு தூக்கக் கலக்கத்துடன் துகாவிடம் இருந்து பிரியாவிடை பெற்றபோது ஒன்பதரை தாண்டி இருக்கும்.

அடுத்த நான்கு மணிநேரம் அதி சுவாரசியம். ராஜன் குறிப்பிட்டது போல் ஆளின் கிரகிப்புக்கு ஏற்ப பேசுவதில் ஜெயமோகன் வித்தகர். என்னுடனும் ‘வெட்டிப் பயல்’ பாலாஜியுடனும் நடந்த உரையாடல்களில் பெரும்பாலானவை சினிமாவும் சினிமா சார்ந்த மயக்கங்களுமாக முடிந்து போனது.

பரந்த வாசிப்பாளரான அர்விந்த் கிடைத்தவுடன் யுவன், நாஞ்சில் நாடன் என்று இலக்கியத்தில் துவங்கியது. கொஞ்ச நேரம் கழித்து ஷாஜி, இளையராஜா, யுவன் என்று இசைப்பயணமாக ஆலாபனை ரீங்கரித்தது. படு காத்திரமாக விஷ்ணுபுரம் ஆராய்ச்சி, காடு நாவலில் பொதிந்த இரகசியங்கள், என்று ஜெயமோகனின் படைப்புலகிற்கு பின்புலம் அமைத்தது. அங்கிருந்து, வேதங்களின் குறியீடு, மகாபாரதக் கதைகளின் இருண்மை, ஞான மரபு, தத்துவார்த்த தர்க்கம் என்று ஆங்கில உலகின் புத்தக அறிவுக்கும் தமிழில் வாசித்த படக்கதைகளுக்கும் முடிச்சுப் போட்டு, அதில் ஜெயமோகனின் டச் உடன் தீர்க்கமாக அலசப்பட்டது.

முதலில் போட்ட திட்டத்தின்படி இந்தப் பயணத்தில் வெட்டிப்பயல் உடன் வந்திருக்க வேண்டும். அவர் கழன்று கொன்டதில், அர்விந்த் சேர்ந்துகொள்ள, எதிர்பாராத விருந்து. நான் அவ்வப்போது வண்டியும் ஓட்டினேன் என்பதால் வாஷிங்டன் வந்து சேர்ந்தது.

மணி ஒன்றரை இருக்கும். செல்பேசியில் வேல்முருகனை அழைக்க, தூக்கக் கலக்கத்துடன் ‘எவ…. அவ!’ என்று உருமினார். அமெரிக்காவில் ஹோட்டல்களுக்குப் பஞ்சமில்லை என்பதால் நர்மதா (ரமதா என்பதை செல்லமாக இவ்வாறும் விளிக்கலாம்), ரெட் லைட் இன் ஆகிய எதிலோ தங்கலாம் என்று மனதைத் தேற்றினாலும், வேல்முருகன் இல்லத்திற்கே வந்துவிட்டோம்.

நாங்கள் மூவரும் வேல்முருகனின் வீட்டை அடைந்தபோது பின்னிரவு இரண்டு ஆகிவிட்டது. சில பல குளறுபடிகள் செய்தோம். பாத்ரூம் கதவு பூட்டியே தாளிட்டு விட்டு, அதன் பின் அடைப்பு என்று கொஞ்சம் எசகுபிசகுகள். அமெரிக்க வாழ்வில் நடப்பதுதான்… சல்தா ஹை.

அடுத்த நாள் காலை எழுத்தாளர் சத்யராஜ்குமார் (http://inru.wordpress.com/ ) இணைந்து கொண்டார். ஜெமோ எல்லோருடனும் இயல்பாக உரையாடினார். வீட்டில் இருந்த வேல்முருகனின் தாயார், இசை பயிலும் மகள், Wii ஆடும் மகனுடன் கொஞ்சல். எல்லோருடனும் சகஜமாக உரையாடுவது எனக்கு எம்பிஏ-வில் கற்றுத்தரப்பட்டது. எனினும், விஷயம் அறிந்து பேசுதல் + கூச்சம் போக்கி சகஜமாக்குதல் — இரண்டும் கைவந்த கலையாக அவருக்கு இருந்தது.

வாஷிங்டன் நினைவுச்சின்னம், லிங்கன் நினைவுச்சின்னம், உலகப் போர் 1,2 நினைவாலயம், ஜெஃபர்சன் சிலை, கொரியா போர், வியட்நாம் சண்டை என்று திக்கொன்றாக அமைந்த பரந்து விரிந்த தளபதிகள்; படைக்களங்கள்; வீரர்களுக்கான மெமோரியல்கள்; அமைதிப் பூங்காக்கள். எதையும் அவசரப்படாமல் நிதானமாக கவனித்தார்.

நடுவே சினிமா நடிகர்களுக்கு மட்டும் நிகழும் சில விஷயங்களும் இங்கே நடந்தது. “சார்… நீங்க ஜெயமோகன் தானே?! உங்க ப்ளாகைத் தொடர்ந்து படிக்கிறேன். இன்னிக்கு டிசி வரதா போட்டு இருந்தீங்க! இங்கேதான் இருப்பீங்கன்னு நெனச்சோம். பார்த்துருவோம்னு நெனச்சோம்… அப்படியே உங்களப் பார்த்ததில ரொம்ப சந்தோஷம்!”

“மாலையில் நடக்கும் கூட்டத்திற்கு வரீங்களா?”

“முடிஞ்சா பார்க்கிறோம்! ஆனா, உங்கள இங்க… இப்போ பார்த்து பேசியதுதான் எங்களுக்கு மகிழ்ச்சி”.

இரு சிறு கூட்டங்கள். உச்சிவெயில் மண்டையைப் பிளக்கிறது. ஜெமோ சந்தித்த பரவசத்தில் அவர்களிடமிருந்து பல வினாக்கள். ஜெமோவும் பதில் கொடுத்துக் கொண்டே, அவர்களின் விழைவுகளை, பின்புலங்களை கிரகித்துக் கொள்கிறார். ஒருவரல்ல; இருவரல்ல… இரு சிறு சிறு குழாம்களில் இருந்து ஏழு & எட்டு பேர் இவ்வாறு அகஸ்மாத்தாக தொடர்பு கொண்டார்கள். நான் நடிகை ரஞ்சிதாவுடனும் வைகைப் புயலுடனும் விமானங்களில் அளவளாவியது எனக்கு நினைவிலாடி கிறங்கடித்தது.

மதியம் சமர்த்துப் பையன்களாக தாஸனி வாங்கப் போக, “பாலா… நீங்க தண்ணியடிப்பீங்கதானே? உங்களுக்கு வேணுமின்னா வாங்கிக்கிடுங்க” என்று பெர்மிட் தரப்பட, குளிர்ந்த கரோனா ருசிக்க கிடைத்தது.

காலையில் இட்லி. மதியம் ஒரு சிக்கன் சான்ட்விச். பிற்பகலில் இரு பழங்கள். இதுதான் ஜெயமோகனின் அன்றைய டயட். அது தவிர முந்தின நாள் இரவு பாத்ரூம் களேபரம் போன்ற சிக்கல் முடிந்து உறங்கும் போது இரண்டரை ஆவது இருக்கும். காலையில் ஆறு மணிக்கு எழுந்து, எட்டு மணிக்கு காரில் காலடி.. மன்னிக்க… டயரடி வைத்தாகி விட்டது. கொஞ்சம் போல் வீட்டில் ஓய்வெடுக்கலாம் என்பதையும் நிராகரித்து, ‘போனால் வராது’ எனபதாக காங்கிரஸ் நூலகம், கேபிட்டல் என்று பொசுங்கும் வெயிலில் நடையோ நடை.

கால் டம்ளர் டீ மட்டும் அவருக்கு காட்டிய பிறகு, சிறப்புரையாற்ற அவரை அழைத்து சென்றோம். போகும் வழி வெறும் இருபது நிமிடம்தான் என்றாலும். வெளியில் கொளுத்திய நூறு பதாகையில் இருந்து குளிரூட்டப்பட்ட காரும், காலை எட்டில் இருந்து சாயங்காலம் நான்கு வரை நடந்த நடையும், அந்த நடையின் நடுவே ஆதுரமிக்க ஜெமோவின் சொல்லாடல்களும், அப்படியே கேப் விட்ட இடைவேளைகளில் என்னுடைய டிசி சொற்பொழிவுகளையும் கேட்ட மயக்கத்தில் ஜெமோ கொஞ்சம் கண்ணயர்ந்தார்.

நிகழ்ச்சி அமைப்பாளரான பீட்டர் யெரோனிமௌஸ் அறிமுகம் தர அரம்பித்தார். அதற்கு பவர்பாயிண்ட் வைத்திருந்தார். அதன் பிறகு அடுத்த அறிமுகம் தர வேல்முருகனை அழைக்க, அவர் என்னை அழைத்து ஒதுங்கி விட்டார்.

டிசி வரும் பயணத்தின் நடுவில் ஜெயமோகன் சொன்னது இப்பொழுது நினைவிற்கு வந்து செமையாக இம்சித்தது. ‘எனக்கு அறிமுகம் கொடுப்பவர்கள் சரியான அறிமுகம் தருவதில்லை. “இவர் தீரர், வீரர்; சூரர்” என்றோ, “இவர் பதினேழரை நாவல்களும் மூவாயிரத்து அறுநூற்றி இருபத்தெட்டு பக்கங்களும் எழுதியவர்” என்றோ, “இவர் சாகித்திய அகாதெமி, ஞானபீடம் வென்றவர்” என்றோ, “தமிழகத்தின் விடிவெள்ளி, எழுஞாயிறு” என்று அடைமொழிகளால் குளிப்பாட்டியோ பேச அழைப்பார்கள். அதற்கு பதில் என் எழுத்து எவ்வாறு அவரை சென்றடைந்தது, எப்படி செழுமையாக்கியது என்றெல்லாம் சொல்லலாம்’

அப்படித்தான் அறிமுகம் கொடுத்தேனா என்று தெரியாது. எழுதியும் தயார் செய்யவில்லை. சுருக்கமான அறிமுகம் வைத்தேன்.

அதன் பின் ஜெயமோகன் பேசினார். இருபது நிமிஷங்களுக்குள்ளேயே முடித்துவிட்டார்.

புறவயமான உலகை அகவயமாகப் பார்ப்பதன் அவசியம் என்ன? எப்படி விரிந்து பரந்த அகில அண்டத்தையும் — தக்கினியூண்டு மனசும் கையளவு மூளையும் கொண்டு மதிப்பிடுவது? அவ்வாறு மதிப்பிட்டாலும், புறச்சிக்கல்களை தன்வயப்படுத்தி சிக்கல் நீக்கி உள்ளே கொணர்ந்தாலும், அதை விட குறுகலான மொழியைக் கொன்டு வெறும் 10,000 வார்த்தைகளேக் கொன்ட பாஷையை சாதனமாக வைத்து விவரிப்பது எங்ஙனம்?

காலங்காலமாக உலகம் எவ்வாறு ஒவ்வொரு துளியையும் ஒவ்வொருவருக்குள்ளும் அனுப்பி வருகிறது? அதைப் புரிந்து கொள்வதன் சூட்சுமம் என்ன? கலாச்சாரம் என்கிறோம். பாரம்பரியம் என்று சொல்கிறோம். அதெல்லாம் எப்படி வருகிறது?

இப்படி abstract ஆக அரம்பித்த உரை சட்டென்று ஜனரஞ்சகமாகி கிளைதாவி முடிந்துவிட்டது. சாதாரண கேள்வி – பதில் என்றால், இதில் எழும் வினாக்கள் ஏராளம். அதைக் கேட்டிருப்பார்கள். குளிர் நம்மை அணுகாமல் இருக்க கையுறை அணிந்த கைகளை, பாக்கெட்டுக்குள் திணித்துக் கொள்வது போன்ற மனப்பான்மையுடன் வினாத் தொடுப்பவர் கூட்டம்.

‘வார்த்தை’ பிகே சிவக்குமார் சொன்னது போல் இது வேறு கும்பல். “நீங்க சினிமாவுக்கு வசனம் எழுதியிருக்கீங்க! அதனால், எந்த நடிகை அதிகமாக குலுக்குவார்கள் என்பதைக் குறித்து ஏன் நீங்கள் அவதானிக்கவில்லை?” என்பன போன்ற வினாக்கள் வந்தன. விலாவாரியான தகவல்களுக்கு கீழே இருக்கும் ட்விட் வர்ணனையைப் படிக்கலாம்.

சாதாரணமாக ஜெயமோகன் இத்தகைய கேள்விகளை நேரடியாகவே எதிர்கொண்டு அதற்கும் தர்க்கபூர்வமாகவும் இந்திய சிந்தனை மரபுவழியாகவும் விளக்குவார்; விளக்குகிறார்; விளக்குகினார். அன்று ‘உங்கள் பதிலை மூன்றரை நொடிகளில் முடித்துக் கொள்ளவேண்டும்! அடுத்த கேள்விக்கு செல்ல வேண்டும் அல்லவா?’ என்று ஸ்பீட் செஸ் போன்ற ஆட்டம். கலைஞர் கருணாநிதியின் எகத்தாள ஒன்லைனர்கள் எடுபட்டிருக்கும். விசாலம் கோரும் விவாதம் நிகழ இடம் பொருள் ஏவல் அமையவில்லை.

அன்றைய பின்னிரவில் வேல்முருகன் தனக்கு ‘பெரியார் இன்றளவிலும் முதன்மையானவராகத் தெரிகிறார். அதிகாரத்தை நோக்கி கேள்வி எழுப்பியது; அடக்குமுறையை தவிர்த்தது; சுய மரியாதை; தாழ்த்தப்பட்டோருக்கு குரல் கொடுக்கும் விதத்தை நிலைநாட்டியது; பாமரருக்கும் பகுத்தறிவை எடுத்துச் சென்றது’ என்று விரிவாக அடுக்க, ஒவ்வொன்றாக, அனைத்தையும் தவிடு பொடியாக்கும் எதிரணியின் நிலைப்பாடுகளை, அவரே ‘அட… ஆமாம்!!’ என்று மாறிப்போகுமளவு ஜெமோ எடுத்து வைத்தார்.

இவ்வகையான இன்ஃபார்மல் களம் இருந்தால் அன்றைய மீட்டிங் சிறப்புற்றிருக்கும். எட்டரை மணிக்கு அரங்கத்தை காலி செய்ய வேண்டும். ஏழரைக்கு அணு ஆயுதப் பேச்சு என்று வாயில் வாட்ச் கட்டிவிடாத களம் வேண்டும்.

சத்யராஜ்குமார் உடனும் நிர்மலுடனும் ஜெமோ பேசியதும் சுவாரசியமே. நிர்மல் (http://sinthipoma.wordpress.com/2007/05/04/12/ ) குறித்தும் நிறைய எழுதவேண்டும். அவர் அடுத்த நாள் எங்களுடன் இணைந்து கொண்டார்.

இந்த மாதிரி எழுத்தாளர் பயணத்தை அடுத்த முறை திட்டமிட்டால், பாஸ்டனில் இருந்து இரயிலிலோ விமானத்திலோ வாஷிங்டன் செல்வது; அங்கே நிர்மல்/சத்யராஜ்குமார்/வேல்முருகன் பெற்றுக் கொள்வது — என்று சுலபமாக அமைக்கலாம்.

பட்டால்தான் தெரிகிறது!


அப்பொழுது எழுதிய லைவ் டிவிட் கவரேஜில் இருந்து:

1. When a waterfall supposed to represent #FDR presidency is not working, does it symbolize that the administration failed? #Memorials #DC

2. Tomb of the Unknown. Amphitheater. DC Washington. Arlington http://post.ly/1apD

3. Changing of guards in Unknown Soldier Tomb in Virginia Arlington Cemetery. http://post.ly/1anf

4. Jemo in Arlington Cemetery. DC. http://post.ly/1al7

5. Vote of thanks. Young chap; tense; mispronounces names. I am also mentioned. http://post.ly/1Zpq 8:59 PM

6. How Tamils shd stay united against Atomic power plants & nuclear energy? Y no TN leader against this cause. http://post.ly/1ZpC 8:50 PM

7. Why Nuclear, 123 deals, waste management, accidents, catastrophical predictions, Russia job creation. #energy http://post.ly/1Zp1 8:46 PM

8. Udhayakumar takes over the stage. Asuran book gets released by Sankarapandi. http://post.ly/1Zoo 8:44 PM

9. Koodankulam Nuclear project activist Uthayakumar speech. Pulithevan/LTTE contacts. Prabhakaran dead reminiscences. http://post.ly/1Zog 8:43 PM

10. Commemorative plaque presented to Jeyamohan in Washington DC Meet. http://post.ly/1Zmy 8:27 PM

11. Velmurugan Periyasamy tells abt his expediments with Periyar. EVR’s influence on self. Rationalization & influence. http://post.ly/1Zmn 8:23 PM

12. Shylaja abt Bheema’s characterization in Nathi Karaiyiniley. #JM abt Asoka Vanam. Girl wise inheritance property in his http://post.ly/1ZmC 8:19 PM

13. Tamil language classical structure: Qn. Ans by #JM: 4k divya prabhandham, current poets, Pramil. Su. Vilvaratnam. Abhi. http://post.ly/1Zlp 8:16 PM

14. Qn by him abt fights among writer thinkers. #JM Ans: Appreciates Periyar EVR 4 giving freedom to question. Gr8 ans lac http://post.ly/1ZlU 8:12 PM

15. JM has a gr8 reply abt Periyaar. Compares him with MN Roy, EMS, Ambedkar. EVR is not reason based! http://post.ly/1ZlD 8:07 PM

16. MP Siva chokes with emotion. Wants #JM to become a big writer. Qns abt EVR Periyar. Rationality & spirituality mix. http://post.ly/1Zkw 8:04 PM

17. Religion, Quran, suicides: search of life thru journeys in Ilakkiyam. http://post.ly/1ZkD 7:58 PM

18. Jeyamohan talks abt Oomai Chennai. Janakiraman, Jeyakanthan, Sujatha, Asoka Mithiran, Sundara Ramasamy. Kaadu: how it came into being?! 7:54 PM

19. Sornam Sankarapandi Sudalaimadan condemns the state of responses given by Tamil writers on demise of LTTE. #srilanka statements #sweep 7:50 PM

20. Dr. Thani Cheran disagrees with #JM on Therkku Vazhgirathu. Says TN is not influential wrt Tamil Eezham. http://post.ly/1ZjS 7:47 PM

21. Ans by #JM: A million Tamils r out of TN. How 2 safeguard if free country is separated out. US is best eg of coexistenc http://post.ly/1Zj3 7:41 PM

22. Qn by Saminathan. Multiplicity, diversity x individuality. Will it curtail rebels? How to ensure Independence. http://post.ly/1Zij 7:38 PM

23. JM ans abt education: economy, British looting. Hope for future gen. Famines, hunger will be history. http://post.ly/1ZiE 7:33 PM

24. I’m a reader of Sanga Chitrangal. The only interesting blog is #JM How to bring ilakkiyam to kids? #lit http://post.ly/1Zhr 7:29 PM

25. Shylaja shared her question with me. Y no female chars are shown as intelligent in his fiction; incl Anal & many Mahabh http://post.ly/1Zhb 7:26 PM

26. Sornam Sudalaimadan Sankarapandi qns abt self righteousness with dravidian movement is debased. http://post.ly/1ZhW 7:23 PM

27. AIIMS India Foundation Rave Shankar chats abt #JM blog; Ajithan school was moving. http://post.ly/1ZhA 7:19 PM

28. Audience is hysterical with #JM narration abt common Tamils addiction with Kumudam/Vikadan vs Kaadu http://post.ly/1Zh2 7:17 PM

29. Lit as infotainment vs prev twit. Ilakkiyam is useful in any nook & corner of the world. Why read fiction? http://post.ly/1Zgk 7:14 PM

30. The magnificence absorbed from the universe into self. Iota of world inside each of us. http://post.ly/1ZgZ 7:12 PM

31. #JM talks about Nithya Chaithanya Yathi. Narration definition. Inner vs outer world. Conversations – language http://post.ly/1ZgK 7:09 PM

32. Myladuthurai MP Siva snaps pictures in the #JM #DC Meet. http://post.ly/1ZfW 6:58 PM

33. Writer Jeyamohan gathering in Washington DC. Intro by Peter Yeronimouse. http://post.ly/1ZfE 6:55 PM

34. Library of Congress. Writer Jeyamohan with books, reference, Washington DC. http://post.ly/1ZS0 4:12 PM

35. With Velmurugan in Virginia. Washington DC visits Jeyamohan. http://post.ly/1Yrm 9:37 AM

36. DC welcomed JM. Car chat» Vishnupuram is an anti-kaaviyam. Yuvan’s Manal Keni. What defines a Kappiam? Discussion vs argument mthds Marabu.1:33 AM Jul 25

தொடர்புள்ள பதிவு:
Jeyamohan DC பேச்சில் நல்ல தரமான இலக்கியத்தை அல்லது எந்நாடு இலக்கியத்தில் முண்ணனி வகிக்கிறது என்று எதுவும் சொல்லவில்லை: http://bit.ly/GJ4vE

India: 100 Days of Sonia + Manmohan Singh Congress Government

1. Hits and misses of UPA's first 100 days – SiliconIndia: “‘If you ask me ministry-wise, I feel home and finance ministries have been the best performers in terms of quick action and implementation,’ said industrialist Rajeev Chandrasekhar, who is also a member of the upper house of parliament.

‘The road and transport ministry has also shown focus,’ Chandrasekhar added.

Amit Mitra, secretary general of the Federation of Indian Chambers of Commerce and Industry (FICCI), specifically mentioned the direct tax code, the budget, the Right to Education Act and the railway budget as areas where the government has shown it means serious business.

On the flip side, experts found little movement in areas like telecom where the policy on spectrum for third generation telephone services was decided only Friday. Even in the power sector, they felt strategy needed fine-tuning to get more capital.”

HT-Manmohan-100-days-hits-miss-synopsis-Congress-sonia-government

2. Price rise, food insecurity mar UPA II's 100 days- Politics/Nation-News-The Economic Times: “Food security has become elusive. An unprecedented rise in the prices of essential commodities, including rice and pulses, has smashed the class divide, making even daal-roti a luxury for many.

“I will count you the targets they (the government) themselves set for the first 100 days. Women’s Reservation Bill, right to education, food security act, judges’ assets bill, plus a plethora of other infrastructure building promises. And then look what we have achieved,””

100-days-agenda-UPA-Congress-Achieve-Score-graphs

3. The wind of the 100 days – Views – livemint.com: “Pressing issues such as managing the drought and reviving a slowing economy have received only ad hoc attention. There are other matters of great importance for the long-term future of the country that have not been addressed. How to initiate the next round of economic reforms? How to arrive at a meaningful consensus on climate change in the country? How to deal effectively with Pakistan and China?”

4. The Pioneer > Online Edition : >> At the end of 100 days: “The President listed 24 things the UPA Government would do in its first 100 days in office. They included internal security and preservation of communal harmony and stepping up of economic growth, particularly in agriculture, manufacturing and services. The President also mentioned consolidation of the existing flagship programmes for employment, education, health and rural infrastructure besides introduction of new food security and skill development programmes. Women empowerment, including early passage of the Women’s Reservation Bill, and constitutional amendment to provide 50 per cent reservation for women in panchayats and urban local bodies were also mentioned. Action for welfare of weaker sections and minorities besides disabled and senior citizens and governance reform were the other points covered in the President’s address. The other important areas were prudent fiscal management and energy security.

the biggest setback for the Government plans on economy came from the failure of the monsoon, resulting in 171 districts declared as drought hit and the agriculture ministry battling with the drought. The kharif crops are lost and the only hope is the rabi crop for which the Government has hiked the minimum support price. ”

5. UPA's 100 days and a 100 lies later…: Rediff.com news: “Anupam Trivedi, a member of the Bharatiya Janata Party”

Top Polluting Cities in India: Environment & Global Warming: Carbon footprint with Gold

நன்றி: ஹிந்துஸ்தான் டைம்ஸ் :: இ-பேப்பர்

இந்தக் கால கட்சிகளும் இரண்டாச்சு பெண்ணாலே

Meira Kumar- first woman Speaker of Lok Sabha: Women's Bill issue emerges again

Meira Kumar- first woman Speaker of Lok Sabha: Women's Bill issue emerges again

Image Dump: Cleaning up the Jazzy stuff

Cause: PREPARING FOR THE CLOSING OF YAHOO! 360°

Action:

தேர்தல்: கருத்தில் கவர்ந்தது

பா ராகவன் :: Pa. Raghavan | writerpara.com » தேர்தல் 2009 – என்ன சொல்கிறது? | இந்தியத் தேர்தல் 2009 – தமிழகம் என்ன சொல்கிறது?

இலங்கைப் பிரச்னை, விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்குச் சீர்குலைவின் விளைவான வன்முறைச் சம்பவங்கள், வாரிசு அரசியல் ஆகியவை திமுகவுக்கு முற்றிலும் எதிரான தீர்வைத் தரக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பாதி எதிர் மட்டுமே.

அடித்தட்டு வாக்காளர்களுக்கு ஒரு ரூபாய் அரிசி, கலர் டிவி போன்ற கவர்ச்சித் திட்டங்கள் பிடித்திருக்கின்றன. நல்ல சாலைகள், பாலங்கள், போக்குவரத்து வசதிகள், வேலை வாய்ப்புகள், வேலை நியமனங்கள், பொதுவில் – மாநில அளவில் பெரிய பிரச்னைகள் இல்லாமல் இருப்பது ஆகியவையே முக்கியமாகப் பட்டிருக்கின்றன.

அதிமுகவுக்கு அவசியம் வாக்களித்தே தீரவேண்டும் என்பதற்கான நியாயமான காரணங்கள் ஏதும் பாமர மக்களுக்கு இல்லை.

வைகோ தோற்றிருப்பது, இலங்கைப் பிரச்னையை மக்கள், வாக்களிக்கையில் யோசிக்க வேண்டிய விஷயமாகப் பார்க்கவில்லை என்பதை எடுத்துக்காட்டுகிறது.

சீமான், பாரதிராஜா போன்றவர்களின் பேச்சுகளை ரசித்தவர்கள், அதையும் திரைப்படக் காட்சிகளாகவே எடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.

மீண்டும் மன்மோகன் சிங்கின் பெயரால் சோனியா ஆள்வார்.


மா சிவகுமார் :: எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்: தேர்தல் முடிவுகள் – சில குறிப்புகள்

மதவாதக் கட்சிகளின் பிரச்சாரம் எடுபடாமல் போனாலும்,

* கர்நாடகா, குஜராத், இமாச்சல பிரதேச மாநிலங்களில் உறுதியான வெற்றியையும்,
* மத்தியபிரதேசம், ஜார்கண்டு, உத்தரபிரதேசம், மகாராஷ்டிரம் போன்ற மாநிலங்களில் போட்டி போடும் வலிமையுடனும்,
* பீகார் மாநிலத்தில் கூட்டணி ஆதரவிலும்
இன்னும் தளைத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

மாயாவதியின் அகில இந்திய கனவு பொய்த்துப் போய் விட்டது. அகில இந்திய அளவில் ஒத்த நோக்குடைய கட்சிகளுடன் கூட்டணி வைத்துக் கொள்ளவும் இறங்கி வர வேண்டும்.

பாமகவை எப்படியாவது தோற்கடித்தே தீருவது என்று செயல்பட்ட திமுக பணபலத்தின் முடிவாக பாமக 6 தொகுதிகளிலும் மண்ணைக் கவ்விய நல்லது நடந்திருக்கிறது. இரண்டு தீய சக்திகள் மோதிக் கொண்டால் குறைந்தது ஒன்று ஒழிந்து விடுகிறது.

குடும்ப அரசியல், பணத் திமிர் என்று செயல்பட்ட திமுகவின் அலட்டல் இன்னும் அதிகமாகும்.

அனைத்து மதங்களையும் அணைத்துச் செல்ல வேண்டும் என்ற இந்திய கோட்பாட்டுக்குக் கிடைத்த வெற்றி தேர்தல் முடிவுகள். உபியில் மாயாவதி, ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு, தமிழ்நாட்டில் செயலலிதா மூவருமே வாய்ப்பு கிடைத்தால் பிஜேபியுடன் சேர்ந்து கொள்வார்கள் என்ற எண்ணம் பரவலாக இருப்பதால் சிறுபான்மை மதத்தினர் வாக்களிக்க விரும்பவில்லை.

கன்னியாகுமரி தொகுதியில் திமுகவின் ஹெலன் டேவிட்சனுக்கு வாக்களிக்குமாறு முடிவெடுத்தார்களாம். கம்யூனிஸ்டுகளை ஒதுக்குவது என்று கேரளா முடிவெடுத்த பிரதிபலிப்பு கன்னியாகுமரியிலும்


அனானியார் சொன்னது:

பாஜக மேல் கட்சிகளுக்கு ஒருவித மனத்தடை உருவாகி இருக்கிறது. ஆனால் இதில் ஊடகங்களால் உருவாக்கி விட்ட பொய் செய்திகள் அதிக அளவில் பங்கு வகிக்கிறது.

தமிழகத்தில் அதிமுக / பாஜக கூட்டணி இருந்திருந்தால் மொத்த காங்கிரஸ் எதிர்ப்பு / திமுக எதிர்ப்பு ஓட்டுக்களும் ஒரே இடத்தில் குவிந்திருக்க வாய்ப்பு அதிகமாக இருந்திருக்கும். அது நடக்கவில்லை.

ஜனதா தள் / பகுஜன் சமாஜ் போன்ற கட்சிகள் பிராந்தியத்தில் நல்ல செல்வாக்குடன் இருந்தாலும் இன்னமும் தேசிய அளவில் வளர்ச்சி பெறவில்லை என்பது உண்மை.

பகுஜனின் தலைமையின் ஊழல் மற்றும் சாதிய பிரதிநித்துவ போக்கு நம்பிக்கையை ஏற்படுத்தவில்லை.

கம்யூனிஸ்ட்களுக்கு பிராந்திய கட்சிகள் அளவிற்குதான் வீச்சு இருக்கிறது.

ஆகவே இன்றும் காங்கிரஸிற்கு மாற்றாக ஒரு தேசியக் கட்சி என்ற முறையில் பாஜகதான் இருக்கிறது. தொடர்ந்து இருக்கும் என்பதும் தெரிகிறது.

பாஜக மதசார்பற்ற முத்திரை பெறுவதற்காக சங்கத்திடமிருந்து துண்டித்துக் கொள்ள நினைக்கலாம். அது வெறும் கண்துடைப்பாகத்தான் இருக்க முடியும். கோயில் போன்ற விவகாரங்களை விட்டுவிட்டு… அடிப்படை பிரச்சினைகளை முதன்மைப் படுத்தி வளர்ச்சி முறையில் நிறைய நல்ல முயற்சிகளை செய்ய முன் வந்தால் வரும் தேர்தல்களில் வளரலாம்.


Krish :: பதிவுகள்: தேர்தல் 2009 – ஒரு பார்வை

தோழர்கள் பிடிவாதமாக “பல” கொள்கைகளை எதித்தனர். கேரளாவும், மேற்கு வங்கமும் தொழில் துறையில் மற்ற மாநிலங்களை விட பின் தங்கி இருப்பது அந்த மக்களை சிந்திக்க வைத்துள்ளது.

தங்கள் சுய நலத்துக்காக அடிக்கடி அணிமாறியும், அரசை மிரட்டி தனக்கு வேண்டிய காரியங்களை சாதித்து வந்தவர்களையும் மக்கள் இனம் கண்டு கொண்டு விட்டனர். லல்லு, முலாயம், பஸ்வான், மாயாவதி, ராமதாஸ் போன்றோர் இனி திருந்தினால் நன்று.

இந்த தேர்தலில் கரும் புள்ளியாக இருப்பது பணநாயகம். தென்னிந்தியாவில், குறிப்பாக தமிழ் நாட்டில் பணம் பல வெற்றிகளை தீர்மானித்திருப்பது ஜனநாயகத்திற்கு பெரிய சவால். இதனால் பதவி காலத்தில் என்ன தவறு செய்தலும், கடைசியாக பணம் கொடுத்து வெற்றி பெற்றுக் கொள்ளலாம் என்ற எண்ணம் மேலோங்கும்.


தேர்தல் சொல்லும் செய்தி… « அனாதி என்ற குடிகாரன்:

தங்கபாலுவுக்கு மெகா டிவி இருக்கிறது.

சமக, கார்த்திக் : மேடையில் இடையிடையே வந்து சிரிப்புக் காட்டி விட்டு செல்லும் அசத்தப் போவது யார் குழுவினர்.


கார்க்கி :: சாளரம்: தமிழக தேர்தல் காமெடிகள்

தேநீர். அல்லது. பந்து (டீ.ஆர்.பாலுன்னு எதுக்கு இங்லீஷல சொல்லிகிட்டு) வருவதாக இருந்ததால் கூட்டம் அதிகமாக இருந்தது. காரில் சென்ற நான் ஹார்ன் அடித்துக் கொண்டே கடக்க முயன்றேன்.

“அப்படி சுத்திக்கிட்டு போங்க சார்.வோட்டு கேட்க வ்ர்றாங்க” என்றார் ஒரு உடன்பிறப்பு.

எனக்கு வழிவிட்டா எங்க வீட்டுல இருக்கிற அஞ்சு ஓட்டு கிடைக்கும் என்றேன் கண்ணாடியை கீழே இறக்கி. அதற்குள் அங்கு வந்த ஒரு வட்டமோ சதுரமோ, நகருங்கப்பா. டிராஃபிக் ஆவுதுன்னு களத்தில் இறங்கினார். கூட இருந்த அல்லக்கை ஒன்று “இதையே அதிமுக காரன் கிட்ட சொல்ல முடியுமா? என்றார்.

அவங்க கலாட்டா நமக்கு தெரியாதா பாஸ். மோசமானவங்க என்று சிரித்தேன். அவரும் சிரித்தார். இதுதான் நேரம் என்று நீங்க அதிமுகன்னு அழகிரி திமுகவைத்தானே சொல்றீங்க என்றபடி நேரா செகண்ட் கியர் போட்டேன். தன்னை மறந்து சிரித்துக் கொண்டிருந்தார் அந்த அல்லக்கை. அவரது தலைவர் ஸ்டாலினா தயாநிதி மாறனா என்றுத் தெரியவில்லை.


ஜாக்கி சேகர் :: பிருந்தாவனமும் , நொந்தகுமாரனும் தேர்தல் முடிவுகள் சொல்லும் சேதி….

எந்த தேர்தலிலும் இல்லாது இந்த தேர்தலில் இளைஞர் கூட்டம் பெரும் அளவில் வாக்கு அளித்தது.

சீமான், தாமரை, பாரதிராஜா போன்றவர்களின் ஆவேச பேச்சு, ஜெவின் தனி ஈழம், ராமதாசின் தைலாபுர பிரஸ்மீட், வைகோ போன்றவர்களின் எழுச்சியான பேச்சு இவைகளையும் மீறி இந்த வெற்றி என்கிற போது யோசிக்க வேண்டிய விஷயம்.

தொலைக்காட்சியில் சீமான் பேச்சும் ஈழ மக்கள் பிரச்சனைகளும் திரும்ப திரும்ப ஒளிபரப்பியது ஆனால் அது ஒரு இடத்தில் கூட வரவில்லை. வெளிப்படையாக ஆயுதம் கொடுத்தது காங்கிரஸ் கட்சி என்று மக்களுக்கு தெரிந்தும் 9 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்று இருக்கிறது.


குசும்பன் :: குசும்பு: வெற்றி தோல்வி பற்றி ந�

கேள்வி: பா.ம.க தலைவர் இது பணத்தால் வாங்கப்பட்ட வெற்றி, பணம் விளையாடி இருக்கு என்று சொல்லி இருக்கிறாரே, அதோடு பீனிக்ஸ் பறவை போல் மீண்டு வருவோம் என்று சொல்லி இருக்கிறாரே அது பற்றி?

பதில்: முதலில் அவர் பா.ஜ.கவையும் லாலுவையும் பார்த்து கற்றுக்கொள்ளவேண்டியது நிறைய இருக்கு, தோல்வியை ஒப்புக்கொண்டு அதற்கான காரணத்தை கண்டுபிடிப்போம் என்று சொல்லும் ராஜ்நாத் சிங்கும், காங்கிரஸோடு கூட்டணி வைக்காமல் மத்தியில் ஆட்சியை பிடிக்கலாம் என்று நினைத்த எங்களுக்கு மக்கள் பாடம் புகட்டிவிட்டனர் என்று சொல்லும் லாலுவிடம் இருந்தும் அந்த பக்குவத்தை பெறவேண்டும்.


மூக்கு சுந்தர் :: My Nose: தேர்தல் 2009 முடிவுகள்

எம்.ஜி.ஆர் பாணியில் கலைஞரின் இலவச அரசியல் அடித்தட்டு மக்களை வசீகரித்து இருக்கிறது. கலைஞரின் அரசியல் மத்தியமரிடமிருந்து அடித்தட்டு மக்களை குறிவைத்து மாறியதற்கு பொன்மனச் செம்மலே காரணம்.


IdlyVadai – இட்லிவடை: விஜயகாந்த் அடுத்து என்ன செய்ய வேண்டும் ?


அசுரன்: இந்த தேர்தலில் மக்கள் யாருக்கு பாடம் கற்றுக் கொடுத்தார்கள்?

எந்த அயோக்கியன் வந்தாலும் இதைத்தான் செய்யப் போகிறான் எனும் போது, மாற்று வழி எதுவும் புலப்படவில்லை எனும் போது, யார் அதிக பணம் கொடுக்கிறானோ, யார் நம்ம சாதிக்காரனோ, யார் வெற்றி பெறுவார்களோ அவர்களுக்கு வோட்டு போட்டு விட்டு போய்விடுவோம் என்பதைத்தான் மக்கள் இந்த தேர்தலில் வெளிப்படுத்தியுள்ளனர்.


CableSankar: காங்- திமுக கூட்டணி வெற்றி பெற்றது எப்படி?

பாமகவின் தோல்விக்கு இன்னொரு முக்கிய காரணம் அவர்கள் வெற்றி பெற்றால் மதுவிலக்கு வந்துவிடுமோ என்ற பயத்தில் ஏற்கனவே பலபேர் நாட்டு பிரச்சனை, ரிசஷன், வீட்டு பிரச்சனையையெல்லாம் கட்டிங்க் அடித்தும், புகைவிட்டும் ஆத்தி கொண்டிருப்பதை இவர்கள் கெடுத்து விடுவார்கள் என்று யோசித்து ஆண் வாக்காளர்கள் எல்லாம் வரிந்து கட்டி கொண்டு பமகவுக்கு எதிராய் ஓட்டு போட்டிருக்கிறார்கள் என்று உளவு துறை செய்தி ஒன்று தெரிவிக்கிறது.


சென்னைக் கச்சேரி: மொத்தமாக வென்றது அதிமுக தான்

வட தமிழ்நாட்டில் குறிப்பாக திமுகவின் கோட்டையாம் தென்சென்னையில் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் திமு கழக வேட்பாளர் மண்ணைக் கவ்வியது போலவோ…திருவள்ளூரில் திமு கழகம் வீழ்ந்தது போலவோ… கொங்கு மண்டலத்தின் கரூரில் முக்கிய வேட்பாளர் தோல்வி கண்டதைப் போலவோ தென்மண்டலத்தில் திமுக எங்கும் மூக்கு உடைபடவில்லை…


ட்விட்டர்:

narain: நல்ல வேளை. ஏ.சி. சண்முகம் இன்னமும் அறிக்கை விடலை.முதலியார்கள் ஆதரவினால் தான் திமுக அமோக வெற்றின்னு

~o0o~
காசி

Anyone trying to link this election with Eelam are living in some imagnary world, or in monitor and keyboard (and maybe in siRRithazs) – 2:11 PM May 16

1,48,300; 1,35,942; 1,10,037; 1,09,796; 99,083; 91,772; 25,036: Any guess what are these numbers?

Those are the victory margins by which the PMK lost. The largest ~1.5 lakh where Kaduvetti Guru contested.

akaasi

In spite of sincere Pro-Tamil, Pro-downtrodden agenda, and reasonably good track record of ministers, why PMK is drubbed so badly?1:44 AM May 17th from web

~o0o~

kabishraj :: பாமக அடுத்து என்ன செய்யும்? இருக்கவே இருக்கு திமுக. “அண்ணா” என்றால் கருணாநிதி நெஞ்சம் இனித்து, கண்கள் பணித்து சேர்த்துக் கொள்வார். about 16 hours ago from web

~o0o~

ksnagarajan :: இந்த தேர்தலில் தமிழக மக்கள் மிகத் தெளிவாக வாக்களித்திருக்கிறார்கள். அவர்கள் Pro-LTTE(PMK, MDMK) மற்றும் Anti-Eelam(Congress) ஆகிய இரு துருவங்களையும் ஒதுக்குயிருக்கிறார்கள்

~o0o~

athisha: சென்னை முழுக்க கடும் மின்வெட்டு.. விஷமிகள் சில்மிஷம் – சன்டிவி \ திமுக மின்னணு இயந்திரங்களில் முறைகேடு செய்ய சதி – ஜெயாடிவி

~o0o~

பத்ரி சேஷாத்ரி

bseshadri :: I am told, the final TN voting percentage is 70+, though yet to see the EC data. 10% votes “polled” during the last one hour.12:39 AM May 15

Paying voters is one thing. Paying polling officials is yet another thing altogether.

(1) Paying voters directly. We have all heard them. From Rs. 500 per head to Rs. 2,500 and so on.

(2) Paying polling booth officials and polling agents of opposite parties to cast bulk votes between 4-5 in several polling booths.

(3) Paying presiding officers (I heard numbers like Rs. 2 lakh!) to fix votes for them in the dying hours.

~o0o~

srikan2 :: Manmohan Singh the first person to return to power after a full-term as PM since, guess what, since one Mr J.Nehru!!11:06 AM May 16th f