அமெரிக்க உச்சநீதிமன்ற நீதிபதி சோனியா சொட்டமயார் தன் வாழ்க்கை வரலாற்றை எழுதி இருக்கிறார். புத்தக வெளியீட்டை ஒட்டி எல்லா ஊடகங்களிலும் பேட்டியும் நூல் அறிமுகமும் கிடைத்தது.
சக உச்சநீதிமன்ற நீதிபதியான கிளாரென்ஸ் தாமஸ் கருப்பர். சோனியா ஸ்பானிஷ் மொழி பேசுபவர். இருவருமே சிறுபான்மையினர். அஃபர்மேடிவ் ஆக்ஷன் எனப்படும் இடஒதுக்கீட்டினால் பயன் பெற்றவர்கள்.
ப்ரின்ஸ்டனில் படித்த காலத்தில் விருந்துக்கு அழைத்து இருக்கிறார்கள். அங்கே மேயர் இவருக்கு அறிமுகமாகிறார். முதன்முறையாக பார்த்தவுடன் கேட்ட கேள்வி: “நீ ஸ்பானிஷ் மொழி பேசுவதால்தான் உனக்கு சீட் கொடுத்தார்களா?”
பொறுமையாக பதில் சொல்கிறார். என்னுடைய SAT மதிப்பெண் இத்தனை. நான் சேவை செய்த நிறுவனங்கள் இவை. நான் பள்ளியில் வகித்த பொறுப்புகள் என்ன என்றெல்லாம் விளக்குகிறார். அவரின் பதில், “நானும் ஆயிரம் பேரிடம் இதே கேள்வியை இப்படி கேட்டு அவமானம் செய்ய நினைத்திருக்கிறேன். நீதான் முதன் முதலாக உன்னால்தான் நீ முன்னேறினாய் என்று விளக்கி இருக்கிறாய்”.
6. முழு சுதந்திரம் தந்திருக்கும் மனைவி – ”வீட்டின் சுமையை தன் மீது சுமத்தாதவர். எழுத்தாளனாக இரு என்று திருமணத்திற்கு முன் சொல்வது சுலபம்; ஆனால், அதை பதினேழு ஆண்டுகளாக செயலாக்குபவர்.”
7. மகன்கள்
8. நண்பர்கள் – ”என் கிட்ட பணம் இல்ல… என்ன பண்ணுவ? என்று கேட்ட ஒரு மணி நேரத்திற்குள் என் வங்கிக் கணக்கில் ஒரு லட்சம் டெபாசிட் செய்தவர்கள் இருக்கிறார்கள். ’ஒரு எழுத்தாளனாக நீ வாழும்போது பொருளாதாரக் காரணங்களுக்காக நீ எழுதமுடியாமப் போயிட்டா, நாங்கள்ளாம் உன் நண்பர்களாக இருந்து பிரயோசனமேயில்ல!’ என்னுடைய பர்ஸில் எனக்குத் தெரியாமல் தன்னுடைய கிரெடிட் கார்டை சொருகி, ’உலகில் எங்கு போனாலும், அவனுக்குத் தேவையானதை வாங்கிக்கட்டும்’ என்று மனைவியிடம் சொல்லிச் செல்பவர்கள் இருக்கிறார்கள்”
9. வாசகர்கள்
10. அ முத்துலிங்கம்
11. தமிழ் இலக்கியத் தோட்டம்
கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் 2011க்கான வாழ்நாள் தமிழ் இலக்கிய சாதனை விருது பெற்ற எஸ்.ராமகிருஷ்ணன் ஆற்றிய ஏற்பு உரை:
ஏற்புரை பேச்சில் நான் கவனித்தவை
* வாழ்ந்த கதையச் சொல்லவா? வீழ்ந்த கதையை சொல்ல்வா? தெரிஞ்ச கதையை சொல்ல்வா? தெரியாத கதையை சொல்ல்வா? நாம ஜெயிச்ச கதையை சொல்ல்வா? தோத்த கதையை சொல்ல்வா… எந்தக் கதையை சொல்ல! என்பார்கள்.
* நான் பாணர்களோட வரிசையை சேர்ந்தவனாகத்தான் நினைக்கிறேன்.
* அறம்: உணவகம் தயாரிப்பவர் எவ்வாறு கொள்கைப் பிடிப்புடன் இருக்கிறார்?
* பிரிவு: வீட்டில் இருந்து வெளியேறுகிறார்கள்; ஆனால், மீண்டும் ஊர் சென்று ஒன்று கூடுகிறார். உணர்ச்சியைக் கட்டுப்படுத்த, வேதனையை மட்டுப்படுத்த இனிப்பையும் உணவையும் கொண்டாடுகிறார்கள். இலக்கியத்திலும் இந்தத் துயரம் பிரதிபலிக்கிறது.
* மறைந்து வாழும் காலகட்டம்: அர்ச்சுனன் கூட பேடியாக ஒரு வருடம் வாழ்ந்திருக்கிறான். மிகப் பெரிய வீரன் கூட ஒளிந்திருந்து அமைதி காத்த கதை அது.
* தன் சீடர் கூட்டத்துடன் இரவு தங்குவதற்கு இடம் தேடி ஜென் துறவி சத்திரத்திற்கு வருகிறார். அந்த இடத்தின் காப்பாளனோ, இவர்களைப் பார்த்தவுடன் ஒரு கோப்பை நிறைய பாலுடன் வருகிறான். அதைப் பார்த்த சன்னியாசி, சிரித்துவிட்டு, அந்த பாலின் மீது ஒரு இலையைப் போடுகிறார். இதைப் பார்த்து சத்திரத்து இன் சார்ஜ் இடம் கொடுத்து விடுகிறார்.
என்ன நடந்தது அங்கே?
சத்திரம் ஹவுஸ்ஃபுல். அங்கே இருப்பவர்கள் குடித்திருக்கிறார்கள். அதை பால் நிரம்பிய கோப்பை குறிப்பிடுகிறது. அதன் மீது ஒரு இலை போடுவதன் மூலம், ஒரு மூலையில் ஒதுங்கிக் கொள்வதாக சாது சொல்கிறார்.
Tamil Literary Garden of Toronto, Canada has Honored Tamil Writer S. RAMAKRISHNAN with ‘Lifetime Literary Achievement Award‘ in Tamil for the year 2011, “IYAL VIRUDHU” as pronounced in Tamil, for his life time achievement in literary contribution to the Tamil Literature.
Profile
S. Ramakrishnan is an influentially important writer of modern Tamil literature.
He is a full-time writer who has been active over the last 25 years in diverse areas of Tamil literature like short stories, novels, plays, children’s literature and translations.
Born in 1966, he is a native of Mallankinar village of Virudhunagar district of Tamilnadu. He has travelled all over India and having experience of living in its different parts of the country.
His short stories are noted for their modern story-telling style in Tamil. He had, as Editor, brought out the literary publication, Atcharam for five long years. Now, his web site http://www.sramakrishnan.com serves as a serious literary movement for young readers since it has become an important web site where contemporary literary innovations, world literature and world cinema congregate in a fertile ambience. An inspiring aspect of this site is that it has secured 23 lakh visits from readers all over the world. His short stories and articles have been translated and published in English, Malayalam, Hindi, Bengali, Telugu, Kannada and French.
A great story-teller, he has organized over thirty story-telling camps for school children, all over Tamilnadu. He has authored four books for children. He has organized a special story-telling camp for children with dyslexia-related learning disabilities. He has also organized screenplay writing camps for short film directors and students of cinema creation in important cities like Chennai, Coimbatore, etc.
His novel Upa Paandavam, written after a deep research into Mahabharata, was not only selected as the best novel in Tamil, it was widely well received by the readers. The novel Nedum Kuruthi, which spoke of the dark and tragic existential experiences of the tribe of oppressed people cruelly stamped as criminal tribe by the British, secured the Ghanavaani award for the Best Novel. His novel Yaamam, written with Chennai city’s three hundred years history as back drop, is another widely appreciated creation. His Urrupasi is a novel that conveys the stirring mental agonies of a young man who was unemployed because he took his degree majoring in Tamil language.
He became a celebrated author to lakhs of readers through his series of articles like Thunai Ezhuthu, Desanthari, Kathavilaasam, Kelvikurri and Chiridhu Vellicham which appeared in the highly circulated Tamil weekly, Ananda Vikatan. He is the first writer in Tamil to have created a broad circle of readers for his columns. The compilation book of the articles, Thunai Ezhuthu, has created a new history by selling almost a lakh of copies.
A connoisseur of world cinema, he has compiled an introductory compendium on world cinema with thousand pages called Ulaga Cinema. He has written four important books on cinema viz. Ayal Cinema, Pather Panchali, Chithirangalin Vichithirangal and Paesa Therindha Nizhalgal.
The short film Karna Motcham with his screenplay won the National Award for Best Short Film and went on to win, so far, 27 important awards in Indian and International Film Festivals. Another short film Matraval has won three coveted awards as the best Tamil Short Film.
He has worked as Screenplay and Dialogue writer in Tamil films like
with over ten films to his credit. Some of these films have successfully crossed 100 days of continuous screening in theatres.
He has written and published five novels, ten collections of short stories, 24 collections of articles, four books for children, three books of translation and nine plays. He also has a collection of interviews to his credit.
Among the many important awards won by him are Tagore Litearay Award for his novel Yamam. Sangeetha Nataka Academy Award for Best Young playwright, Iyal Award from Canada, Award for Best Novel from Government of Tamilnadu, Award of Literary Thoughts, CKK Literary Award, Best Novel Award of Progressive Writers’ Union, Jnanavaani Award and Young Achiever Award, Periyar Award. Salem Tamil Sangam award and also the winner of Kannadasn Award.
Three Doctorates and 13 M.Phil. Degrees have been awarded to scholars for researching into his writings. His books have been prescribed as part of syllabi of 2 Universities and 9 Autonomous Colleges.
S. Ramakrishnan lives in Chennai with wife Chandra Prabha and sons Hariprasad and Aakash.
1. என்னைத் தீண்டிய கடல் By வறீதையா — வகை : கட்டுரைகள்
2. கவிதை என்னும் வாள்வீச்சு By ஆனந்த் — வகை : கட்டுரைகள்
3. கரை தேடும் ஓடங்கள் By ராமச்சந்திரன் உஷா
4. நாமார்க்கும் குடியல்லோம் By கரு.ஆறுமுகத்தமிழன்
5. எங்கள் நினைவில் சு.ரா. (குடும்பத்தாரின் நினைவுகள்)
6. தாயார் சன்னதி By சுகா
7. தோள்சீலைக் கலகம் : தெரிந்த பொய்கள் தெரியாத உண்மைகள் By கணேசன்
8. சினிமா அனுபவம் (அடூர் கோபாலகிருஷ்ணன்) By அடூர் கோபாலகிருஷ்ணன்
9. கடிகாரம் அமைதியாக எண்ணிக்கொண்டிருக்கிறது By அ.முத்துலிங்கம்
10. ஒன்றுக்கும் உதவாதவன் By அ.முத்துலிங்கம்
11. நளிர் — நாகார்ஜுனன்
12. சொல்லாததும் உண்மை (பிரகாஷ்ராஜ்)
13. முக்குவர்: வரலாறு, வாழ்வியல், எதிர்காலம் By வறீதையா கான்ஸ்தந்தின்
14. மயிலிறகு குட்டி போட்டது By பிரபஞ்சன்
15. எழுத்தென்னும் நிழலடியில் By பாவண்ணன்
16. அமெரிக்காவில் மூன்று வாரம் Byம.பொ.சிவஞானம்
17. இலக்கிய ஆராய்ச்சி காலாண்டு இதழ் ( பாகம் – 1 ) By இந்திரஜித்
18. பிறக்கும் ஒரு புது அழகு By காலச்சுவடு கண்ணன்
19. காலத்தைச் செரிக்கும் வித்தை By குட்டி ரேவதி
20. ஓவியம் கூறுகளும் கொள்கைகளும் By புகழேந்தி
21. புனைவின் நிழல் By மனோஜ்
22. நான் கண்ட ரஷ்யா By அகிலன்
23. பல நேரங்களில் பல மனிதர்கள் By பாரதி மணி
24. அடடே! By மதிகார்ட்டூன்கள்
25. உவன் இவன் அவன் By சந்ரு
26. ஆதி திராவிடன்இதழ்த் தொகுப்பு
27. அக்கிரகாரத்தில்பெரியார் By பி.ஏ.கிருஷ்ணன்
28. நம் தந்தையரைக் கொல்வதெப்படி By மாலதி மைத்ரி
29. இருப்பும் விருப்பும் By கி.பி. அரவிந்தன்
30. கர்ப்பமாய் பெற்ற கன்னிகள் By அ.கா.பெருமாள்
31. கிருஷ்ணன் நம்பி ஆக்கங்கள் By தொகுப்பாசிரியர்: ராஜமார்த்தாண்டன்.
32. அம்மாவின் ரகசியம் By சுநேத்ரா ராஜகருணாநாயக — தமிழில் :- எம். ரிஷான் ஷெரீப்
33. அனுபவங்களின் நிழல் பாதை By ரெங்கையா முருகன் ,வி .ஹரி சரவணன் — வகை : குறுநாவல்கள்
34. நஞ்சையில நாலு மா By சுந்தரபுத்தன்
35. விழா மாலைப் போதில் By அசோகமித்திரன்
36. குருதியில் நனையும் காலம் By ஆளுர் ஷாநவாஸ் (முன்னுரை: ஆ.மார்க்ஸ்)
37. எழுதுவதெல்லாம் எழுத்தல்ல By பாமரன்
38. ப்ளீஸ்! இந்தப் புத்தகத்தை வாங்காதீங்க! By கோபிநாத்
39. சினிமாவின் மூன்று முகங்கள் By சுதேசமித்திரன்
40. எசப்பாட்டு By இந்தியா டுடெ தமிழ்ப் பதிப்பின் எக்ஸிக்யூட்டிவ் எடிட்டர் ஆனந்த் நடராஜன்
41. கலி புராணம் By மு.தளையசிங்கம்
42. இராசேந்திரசோழன்குறுநாவல்கள்
43. பேய்க்கரும்பு By பாதசாரி
44. சனங்களின் சாமிகள் கதை By அ.கா.பெருமாள்
45. தெரிந்த கோவை தெரியாத கதை By கவியன்பன்.கே.ஆர்.பாபு
46. இவன்தான் பாலா By பாலா
47. சுண்ணாம்பு கேட்ட இசக்கி By அ.கா.பெருமாள்
48. நான் நீ மீன் By கலாப்ரியா (கவிதை)
49. முதல் 74 கவிதைகள் By யுவன் சந்திரசேகர்
50. சூரியன் தகித்த நிறம் By பிரமிள்
51. மேன்ஷன் கவிதைகள் By பவுத்த அய்யனார்
52. எனது மதுக்குடுவை By மாலதி மைத்ரி
53. திரும்பிச் சென்ற தருணம் By பி.ஏ.கிருஷ்ணன்
54. பலார்ஷாவிலிருந்தும் நாக்பூருக்கு By தெலுங்கில் ஸ்ரீ விரிஞ்சி (தமிழில் :- கெளரி கிருபானந்தன்.)
55. களவு போகும் புரவிகள் By வேணுகோபால்
56. பூரணி பொற்கலை By கண்மணி குணசேகரன்
57. தஞ்சை ப்ரகாஷ் கதைகள் By காவ்யா சண்முகசுந்தரம்
58. மரணத்தின் வாசனை By அகிலன்
59. மயில்வாகனன் மற்றும் கதைகள் By அஜயன் பாலா
60. மிதமான காற்றும் இசைவான கடலலையும் By தமிழ்ச்செல்வன்
61. லீலை By சுகுமாரன்
62. பிரமிள் படைப்புகள் (முழுத் தொகுப்பு)
63. வெள்ளி விரல் By ஆர்.எம்.நெளஸாத்
64. நான் கொலை செய்யும் பெண்கள் By லதா (காலச்சுவடு)
65. நகரத்தில் மிதக்கும் அழியா பித்தம் By ம.தவசி
66. பதுங்குகுழி By பொ.கருணாகரமூர்த்தி
67. ஒரு பனங்காட்டுக் கிராமம் By மு.சுயம்புலிங்கம்
68. இலட்சுமணப்பெருமாள் கதைகள்
69. கருப்பாயி என்கிற நூர்ஜஹான் By அன்வர் பாலசிங்கம்
70. தொலைகடல் By உமா மகேஸ்வரி
71. லயோலா என்ற பெரும்பாம்பின் கதை By சுகுமாரன்
72. கனவுகளுடன் பகடையாடுபவர்கள் By ஜி.குப்புசாமி (மொழிப்பெயர்ப்பு )
73. என் தாத்தாவுக்கொருதூண்டில் கழி By ஜெயந்தி சங்கர்
74. அப்பாஸ்பாய் தோப்பு By எஸ்.அர்ஷியா
75. லண்டன் டயரி By இரா.முருகன்
76. ஆறா வடு By சயந்தன்
77. எட்றா வண்டியெ By வா.மு.கோமு
78. ராஜூஜோக்ஸ் (கார்டூன் நகைச்சுவை)
79. இதழாசிரியர்கள் மூவர் By விக்கிரமன்
80. அதிமனிதர்களும் எதிர்மனிதர்களும் By பிரேம்
81. கரித்தாள் தெரியவில்லையா தம்பீ… By பெருமாள் முருகன்
82. உடைந்த மனோரதங்கள் By பெருமாள் முருகன் (கு.ப.ரா. பற்றிய விமர்சனக் கட்டுரைகளின் தொகுப்பு)
83. சிலுவையின் பெயரால் By ஜெயமோகன்
84. கர்நாடக சங்கீதம் : ஓர் எளிய அறிமுகம் By மகாதேவன் ரமேஷ்
85. சுபமங்களாமொழிப்பெயர்ப்புக் கதைகள்
86. சங்க இலக்கியத்தில் பொது மக்கள் By முனைவர் கு.ராச ரத்தினம்
87. கோப்பை தேநீரும் கொஞ்சம் கவிதையும் By ஹரி கிருஷ்ணன்
88. டயலாக் By ஜூனியர் விகடன்
89. தமிழர் சமயம் தமிழர் வேதம் தமிழகத்துக் கோயில்கள் By யு.சுப்ரமணியன்
90. மதன்ஜோக்ஸ்
91. காவல் தெய்வங்கள் ( காலங்களை கடந்தும் நிக்கிற கிராம தேவதைகள் வழிபாடு ) By பி.சுவாமிநாதன்
92. சுதந்திரப் போரில் தமிழ் சினிமா By அறந்தை நாராயணன்
93. நான் எப்படிக் கம்யூனிஸ்ட் ஆனேன்?..வி.பி.சிந்தன் (இளையபாரதி )
94. :நேருவழக்குகள் – ஆசிரியர் : ஞாலன் சுப்பிரமணியன்
95. சகுனம் By எஸ்.வி.ராமகிருஷ்ணன்
96. ஆ மாதவன் கதைகள்
97. ஒரு புகைப்பட நிருபரின் அனுபவங்கள். : ஆசிரியர்: மதுரைஎஸ்.எஸ். ராமகிருஷ்ணன்
98. சூப்பர் ஸ்டார் சொன்ன சூப்பர் கதைகள் : ஆசிரியர் : சபீதா ஜோஸப்
99. சில நேரங்களில் சில அனுபவங்கள் (பாகம் 1,2) : ஆசிரியர் : பாக்கியம் ராமசாமி
100. உரையாடலினி By அய்யனார் விஸ்வநாத்
101. கு.அழகிரிசாமி கடிதங்கள் (கி.ரா.வுக்கு எழுதியது) By கி. ராஜநாராயணன்.
102. தொலைக்காட்சிவிளம்பரத்தின் உள்முகங்கள் By கழனியூரன்
103. ஆறுமுகசாமியின் ஆடுகள் By சா.கந்தசாமி
104. புதுமொழி 500 – ரவிபிரகாஷ் (விகடன் பிரசுரம்)
105. மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்பாடல்கள் – தொகுப்பு: பி.இ.பாலகிருஷ்ணன்
106. விட்டில் – சமகால அரசியல் பகுப்பாய்வு By இராகவன் (காலச்சுவடு பதிப்பகம்)
107. ஈழத்து நாட்டார் பாடல்கள் By ஈழவாணி
108. தமிழினி ஒரு வருட உள்நாட்டு சந்தா
இப்பொழுது உங்களுக்கான வினாக்கள்:
2012-ல் என்ன வாங்கினீர்கள்?
முக்கியமாக புனைவுகளில் சுவாரசியமானவை எவை?
புதிய புத்தகங்களில் தங்களைக் கவர்ந்த கதாசிரியர் யார்?
இந்திரா பார்த்தசாரதி என்னுடைய விருப்பமான எழுத்தாளர். அவருடைய நாவல்கள் வாசித்திருக்கிறேன். சிற்சில கட்டுரைகள் வாசித்த அளவில் சுவாரசியம் நிறைந்தவை. படிப்பதற்கு சுவையாக இருந்தாலும், மீண்டும் படிக்கத் தூண்டுபவை. மீண்டும் படித்தாலும் அனுபவ முதிற்ச்சிற்கேற்ப பொருள் கூட்டுபவை.
அன்னியப்படுத்தாத மொழி சுஜாதா வாகர்களைக் கவரும். இன்றைக்கும் பொருத்தமான சமூகக் களங்களும், குடும்பச் சூழல்களும் ரமணி சந்திரன் நேசர்களையும் இழுக்கும். ஆண் மனதின் உளவியலை விரிவாக வெளிக் கொணர்வதால் பெண் சினேகிதிகளிடம் இரவல் கொடுத்தால் பிரச்சினை வரலாம்.
உருவக விமர்சகம்
ஆர்வி-க்கு மகாபாரதம் உவப்பு என்பதால் ஒரு பாரதக் கதை.
அழகிய குட்டி கிராமம். குடியானவனின் வீட்டு கொல்லைப்புறத்தில் மாடு புல் மேய்கிறது. திடீரென்று புலி உறுமல் சத்தம். விவசாயி அழ ஆரம்பிக்கிறான். புலிக்கு ஒன்றும் புரியவில்லை. அழுவதற்கான காரணத்தை வினவுகிறது.
“காட்டின் அரசரே! எனக்கு திருமண வயதில் அழகும் அறிவுமுள்ள மகள் இருக்கிறாள். அவளுக்கு சரியான வரன் அமையவில்லை.”
“எந்த மாதிரி பையனாக பார்க்கிறாய்?” என்கிறது புலி.
“உன்னைப் போல் பலமும் புத்தியும் பராக்கிரமும் நிறைந்தவனாக இருக்கவேண்டும்.”
“அப்படியென்றால், நானே அவளை மணமுடிக்கட்டுமா?”
“இதேதான்… இதைத்தான் நானும் யோசித்தேன். ஆனால், நாமிருவரும் வேறு வேறு வர்க்கம். எனக்கு சரியென்றாலும் இஷ்டமித்திர பந்துக்கள் ஒப்புக் கொள்ளணும். அதற்காக ஊருக்குள் போய் உற்றார் உறவினரிடம் கேட்டு வருகிறேன்.”
சென்று வருகிறான். “என் தலைவரே! அவர்களுக்கும் பேருவகைதான். ஆனால், என் மகளிடம் ஒரு வார்த்தை கேட்டு விடுகிறேன்.”
புலி மீண்டும் விடை தர, வீட்டினுள் சென்று திரும்புகிறான். “ஓ ராஜாவே! என் மகளுக்கு முழு சம்மதம். ஆனால், அவளுக்கு உன் கூரிய நகத்தையும் கோரப் பற்களையும் பார்த்தால் குலை நடுங்குகிறது. அவளை ஆரத் தழுவும்போது அவை பதம் பார்க்குமோ என்று அச்சம் எழுகிறது.”
”ப்பூ… அவ்வளவுதானே. அவற்றை வெட்டி எறிந்து விடலாம்.”
கிராமத்தானும் புலியின் ஆயுதங்களை அதன் ஆணைப்படியே நீக்குகிறான். நீக்கிய அடுத்த கணமே குச்சி கொண்டு புலியை ஓட ஓட விரட்டி அடிக்கிறான்.
இ.பாவின் கதைகளின் சிறப்பே அவரது கதாபாத்திரங்களின் தோல்விதான். தோல்வியென்றால் தாடி வளர்த்து, போதையோடு அருவெறுப்பை கூட்ட ஒரு நாயையும் இழுத்துக்கொண்டு திரியும் ரொமான்டிக் காதல் தோல்வியல்ல. தன் இயலாமையின் உச்சங்களை கண்ணாரக்கண்டு பின் சராசரி வாழ்க்கைக்குள் போய் தன்னை திணித்துக்கொள்ளும் தோல்வி – தன்னை பற்றி தானே வளர்த்துக்கொள்ளும் அறிவுஜீவி பிம்பம் கிழிந்து தொங்க தன்னுள் இருந்து வெளிவரும் தன் உண்மை உருவை உணர்ந்து தளர்ந்து போய்த்திரும்பும் கதாநாயகர்கள் இவரது கதைகளில் மட்டுமே சாத்தியம். எப்படியும் க்ளைமாக்சில் தான் ஹீரோவாய் இருக்கும் ஒரே காரணத்தாலேயே ஜெயித்துவிடும் ரக ஆட்களில்லை இவர்கள். அமிர்தத்தை போன்றவர்களின் கதையை எழுத அபார துணிச்சல் வேண்டும் – இவர்களைத்தான் தினசரி வாழ்வில் நாம் அதிகம் சந்திக்கிறோம் (சில சமயங்களில் கண்ணாடியில் கூட சந்திக்க நேரிடலாம்.)
யோசித்து பாருங்கள், இதே கதையை சிந்து பைரவி எப்படி சொன்னது என்று – கதாநாயகனின் சறுக்கல்களை கூட அறிவுஜீவித்தன ஜிகினாத்தூவி அழகாக்கி விற்கும் சராசரி கதைகளோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது இ.பாவின் துணிவு நமக்கு வியப்பையளிக்கிறது.
குற்ற உணர்ச்சி இல்லாமல் இருப்பதே பெரிய மன நிம்மதி. நிம்மதியைத் தேடிய வாழ்க்கை என்பது வாய்ப்பு வசதிகளைப் பெருக்கிக்கொள்வதிலோ அல்லது கூடுதலாகக் கிட்டுகிற சில லட்சங்களுக்காகப் பிடிக்காத வேலையைச் செய்வதிலோ அல்ல என்பதுவும் புரிந்தது. தாவி அலைகிற மனத்தைக் கட்டிப்போடும் சக்தி இந்த உணர்ச்சிக்கு இருக்கிறது. இந்த எண்ணம் மனத்தில் நிழலாடும்போதெல்லாம் இந்திரா பார்த்தசாரியின் ‘நாசகாரக் கும்பல் ‘ என்னும் சிறுகதையும் நிழலாடும்.
ராஜ் சந்திரா
ஒரே தராசை எல்லா எழுத்தாளர்களுக்கும் உபயோகப்படுத்துவதில் வரும் விபரீதம் இது. இ.பா. கதைகள் நேரடியாக வாசகனிடம் பேசுபவை. அதன் நோக்கம் ‘இது போன்ற விளையாட்டுகள் உன் முன்னால் நடப்பவை’ என்று கூறுவதுடன் முடிந்துவிடும். இதில் ‘தரிசனம்’ பார்ப்பது உங்கள் பிழை. இவ்வகைக் கதைகளும் நமக்குத் தேவை என்று நான் நினைக்கிறேன். இவ்வகையான அரசியல் அங்கதங்கள் investigative journalism தரும் திருப்தி.
இ.பா எதை நினைத்து ‘குருதிப்புனல்’ கதையை நகர்த்தினாரோ அது சரியாக எடுபடவில்லை. பலரும் நாயுடுவின் ஆண்மை குறையைத்தான் கண்டார்கள். ஆனால் நாயுடுவின் சாதி வெறி (உ-ம். ‘பறையன் என்னை அடிக்கிறான்’ என்று கத்தும் முக்கியமான காட்சி) அவர்களுக்குத் தெரியவில்லை. Characterization-ல் இ.பா-வின் தோல்வி இது.
அவரின் கதை மாந்தர்களின் உரையாடலில் இ.பா. பிரகாசிக்கிறார் என்று சொல்லலாம். உதாரணமாக ‘மாயமான் வேட்டை’, ‘ஆகாயத் தாமரை’, ‘குருதிப் புனல்’
நாவல்களில் அவர்கள் வைக்கும் வாதங்கள் நிச்சயம் revisit செய்யும் தகுதி பெற்றவை. ஆனால் அ.மி-யின் தீவிர வாசகனாகிய எனக்கு இ.பா-வின் மாந்தர்கள் தரையில் கால் பாவாமல் நடக்க முயன்று கீழே விழுபவர்கள். ஆனால் கீழே விழுவதையும் இ.பா-வே நிகழ்த்துகிறார், as a part of the story.
இ.பா-வின் பாணியில் குறியீடுகளுக்கு இடம் கிடையாது. ‘கொஞ்சமாகக் கொடுங்க ஐயா’ என்றாலும் எல்லாவறையும் கொட்டுவார். அவரின் கதைகளைப் படிக்கும்போது வரும் களைப்புக்கு இதுவும் ஒரு காரணம். ‘ஆகாயத் தாமரை’-யில் கதை நாயகன் தன் frequency-க்கு யாரும் இல்லை என்ற வெறுப்பில் இறுதியில் ஒரு விவசாயியாக/கூலித் தொழிலாளியாக மாறி விடுவான். அதை கதாநாயகி மற்றவர்கள் அடைந்த தோல்வியாக நினைப்பாள். அந்த நினைப்பையும் அவர் வரிகளாக எழுதி நம்மை சிரமப் படுத்துவார். வாசகர்கள் புத்திசாலிகள் என்பதை இ.பா ஒப்புக் கொண்டதில்லை.
அவரின் சிஷ்யரான ஆதவன் கதைகளுக்கும் மேற்சொன்னவை பொருந்தும்.
இ.பா., சிறுகதைக்கான இலக்கணங்களையோ வரையறைகளையோ குறித்துக் கவலைப் படுபவரல்ல. விசாரணைக்குட்படுத்த விரும்பும் மனப்பாங்கு மட்டுமே அவருக்கு முக்கியம்.. அவரது சிறுகதைகள் ஒரு மையப்புள்ளியில் தொடங்கித் தனி மனிதப் பிரச்சினைக்குள் செல்வது போல் தோன்றினாலும், கதை முடியும் போது சமூகத்தின் பொதுவியாதிகளில் ஒன்றை விசாரணைக்குட் படுத்தும் நோக்கத்தை நிறைவேற்றும் தன்மை கொண்டவைகளாகவே விளங்குகின்றன.
கிராமத்திற்கு புதிதாக வந்திருந்த இளம் பாதிரியாரை விருந்துக்கு அழைக்கிறார் மறை மாவட்ட ஆயர். ஃபேஸ்புக்கில் ஸ்டேட்டஸ் பார்க்கும்போது பக்கத்தில் வரும் பரிந்துரைகள் கவனத்தை சிதறடிப்பது போல், உணவின் ருசியுடன் உணவை செய்த வீட்டு வேலைக்காரியின் மீதும் பாதிரியாருக்கு கண் அலை பாய்கிறது. இவ்வளவு லட்சணமான பெண்ணை சும்மாவா பிஷப் வைத்திருப்பார் என்று சிந்திக்க வைக்கிறது.
பிஷப் நாடி பிடித்து விடுகிறார். “நீ நெனக்கிற மாதிரி எதுவும் இல்ல… அவ எனக்கு சமைச்சுப் போடறதுக்கும் துணி தோய்க்கிறதுக்கும் மட்டுமே துணையா இருக்கா!”
ஒரு வாரம் போன பின் வேலைக்காரி பிஷப்பிடம் சொல்கிறாள். “யாராவது ஸ்பெஷலா வந்தால் மட்டுமே அந்த வெள்ளிக் கரண்டி பயன்படுத்துவேன். அருட் தந்தை வந்துட்டுப் போனப்புறமா அதைக் காணவில்லை. அவர் எடுத்திருக்க மாட்டார்… இல்லியா?”
“ஆவர் எடுத்திருப்பார்னு தோணல. இருந்தாலும் கடுதாசு போடறேன்”னு சொன்ன ஆயர் எழுதினார்: “நீங்கள் வெள்ளிப் பாத்திரங்களை எனது இல்லத்தில் இருந்து எடுத்ததாக நான் சொல்லவில்லை. ஆனால், உண்மை என்னவென்றால் தாங்கள் இரவு உணவிற்கு வந்த நாளில் இருந்து அந்த சாமானைக் காணவில்லை!”
கொஞ்ச நாள் கழித்து பாதிரியிடம் இருந்து பதில் வந்திருந்தது: “மேன்மை பொருந்திய ஆயர் அவர்களுக்கு, நீங்கள் பணிப்பெண்ணுடன் படுப்பதாக நான் சொல்லவில்லை. ஆனால், நிஜத்தை சொல்லவேண்டுமென்றால், உங்கள் படுக்கையில் நீங்கள் உறங்கிக் கொண்டிருந்தால், அங்கே உள்ள அந்த வெள்ளிக் முட்கரண்டி உங்களை உறுத்தியிருக்கும்.”
ஆஃபீஸ்ஸ்பேஸ்
அலுவல் மீட்டிங்குகளும் இப்படித்தான்… எதையோ நினைப்போம். சொல்ல மாட்டோம். அவர்களாகவே ஏதோ புரிந்து கொள்வார்கள். பின்னணியில் அரசியல் சூழ்ச்சி திட்டம் நடக்கும். உள்ளடி வேலை இருக்கும். சின்னச் சின்ன குழுவாக சந்திப்புகள் அரங்கேறும். மின் மடலில் காய் நகர்த்தப்படும்.
அதை வால் ஸ்ட்ரீட் ஜர்னல் சொல்கிறது:
The Quiet Plotter
Deadly Meetings in the Workplace – WSJ.com: CRIME: Practices passive-aggressive insubordination. MODUS OPERANDI: Remains quiet at meetings; later undermines bosses and decisions. LEVEL: First degree nuisance
இந்த மாதிரி பெயர்கள் எல்லாம் எங்கிருந்து கிடைக்கின்றது? எப்படி முத்திரை குத்துகிறார்கள்?
The Multitasker?
The Jokester?
The Dominator
The Rambler?
Placater
Decimator
Detonator
Naysayer
விவாத விளையாட்டு
எல்லாமே கம்ப்யூட்டர் விளையாட்டுகளில் புழக்கத்தில் இருப்பவை. சொல்லப் போனால், ரோல் ப்ளே எனப்படும் இன்னின்னார் இப்படி இப்படி செய்வதில் வல்லவர் என உருமாறும் ஆட்டங்கள்.
சிலர் இதில் உருப்படியானவர்கள். காரியத்தை முடிக்க உதவுபவர்கள். முன்னேற்றத்திற்கு வழிகோல்பவர்கள். ப்ராஜெக்ட்டையும் கம்பெனியையும் அடுத்த கட்டத்திற்கு நகர்த்துபவர்கள். செயல்வீர்ர்கள். அப்படிப்பட்டவர்களின் பங்குகளை இப்படி பிரிக்கலாம்:
கல்வியாளர் (பயிற்றுனர்)
சமரச மார்க்கவியலாளர் (Compromiser)
க்ரியா ஊக்கி (Encourager)
தகவல் தேடி (Seeker of Information)
சந்தேகாஸ்தபமானதை கேள்விக்குள்ளாக்குபவர் (Questioner of dubious Assertions)
சரிபார்ப்பவர் (Validator)
பொறுமையாக காது கொடுப்பவர் (Attentive Listener)
பிணக்குகளை ஊடல்களாக்கி கொசுவாக்குபவர் (Diffuser of Tension)
This country, with its institutions, belongs to the people who inhabit it. Whenever they shall grow weary of the existing Government, they can exercise their constitutional right of amending it or their revolutionary right to dismember or overthrow it.
ஏர் உழுவைத் திருப்பிப் போட்டது போல் கேள்விக்குறி இருப்பது தற்செயல் அல்ல! பழைய மண்ணாக இருக்கும் மூடநம்பிக்கைகளை உடைக்கவும் அடுத்து விதைகள் வளர்ந்து பூத்துக் குலுங்க புத்துணர்வாக்கவும் வினாக்குறி ஏர்.
கேள்வி : `விஷ்ணுபுரம்’ நாவல் குறித்த உங்கள் `contention’ என்ன?
எஸ். ரா : முதலில் அந்தத் தீமில் எனக்கு ஈடுபாடு இல்லை. காலம் என்பது சில பல வஸ்துக்களால் தீர்மானிக்கப்படுவதில்லை. ஒவ்வொரு காலமும் ஒரு `மனவளர்ச்சி’ கொண்டது. குறிப்பிட்ட பிரத்யேகமான பய உணர்ச்சி கொண்டது. ஒரு ஆதிகுடி குகைவாசிக்கு பகல் / இரவு என்பது தெரியாது. அவனுக்கு பொருள் தோன்றுகிறது / மறைகிறது அவ்வளவே. ஆனால் பகல் / இரவின் விளைவுதான் தோன்றுதல் மறைதல் என்பது எப்படி எழுதப்படுவது?
ஒரு கட்டத்தை எழுத்தில் நாவலாகக் கொண்டுவரும் போது அதன் `மனம்’ எப்படி புரியப்படவேண்டும் என்பதில்தான் பிரச்னை இருக்கிறது. இயற்கை மதங்கள் பல்வேறு பயங்களால் உருவானதே. தற்போது இருக்கும் மதங்கள் அதைப் `பயன்பாடா’ மாற்றிக் கொண்டது. இப்ப-நம்ம பாரம்பரியத்துல ஏகப்பட்ட பக்தி இலக்கியம்-பாசுரம், எல்லாம் இருக்கின்றன. ஆனால் நாயன்மார்களுக்கோ-ஆழ்வாக்ளுக்கோ அது ஒரு மார்க்கம், ஞான மார்க்கம், அல்லது ஏதோ ஒன்றை அடைவதற்கான ஒரு கருவி. ஆனால் நமக்கு அது இன்று ஒரு கவிதை மட்டுமே. திருப்பாவை பாடல்கள் இன்னிக்கு நாம கேட்டா அதன் கவிதைத் தன்மையை மட்டும்தான் எடுத்துக்குறோம் அவங்களோட வாழ்வியலுக்குள்ள நாம் போகமுடியாது.
`விஷ்ணுபுரம்’ நாவல் பழைய தத்துவம் / இலக்கியம் / வாழ்வு போன்றவைகளை நவீன காலக்கட்டப் பார்வையில் அணுகுகிறது. மேலும் பல இடங்கள் `சினிமாட்டிக்கா’ இருக்கு, இப்ப நாம யானைய பார்த்திருக்கோம், அதுக்கு மதம் பிடிக்கும்னு கேள்விப்பட்டுருக்கோம், தமிழ் இலக்கியத்துல உதயணன் கதையில் தான் யானை ஊரையே துவம்சம் செய்யும்னு கேள்விப்பட்டிருக்கோம், இவர் கதைல ஒரு யானை ஒரு ஊரையே காலி செய்கிறது. இது, சினிமாடிக் தனமாகும். நமக்கும் யானைக்குமான உறவுகள் அப்படி இல்லையே. மேலும் அவரால் `பவுத்தம்’ சம்பந்தப்பட்ட தீவிரத் தேட்டத்தை வைக்க முடியவில்லை. பவுத்த நபர்கள் வருகிறார்கள். பவுத்த தர்க்கம் இருக்கிறது. ஆனால் பவுத்த சாரம் இல்லை.
கேள்வி : அந்த நாவலின் முடிவில் வரும் `பிரளயம்’ என்ற `Apocalypse’ ஏற்புடையதா?
எஸ். ரா : மார்க்வெஸின் `நூறாண்டு காலத் தனிமை’ நாவலில் வரும் Apocalypse’ ஞாபகம் என்பதன் நாட்டியமாக இருக்கிறது. அந்தப்பகுதி நாவலையே வேறுவிதமாக வாசிக்க வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது. ஜெயமோகனின் நாவலில் அது ஒரு `condition’ என்பதாக வருகிறது. மேலும் நம் தத்துவ புராண மரபு பிறப்பு / இறப்பு , படைப்பு / அழிவு என்பதை தொடர்ச்சியானதாக சர்க்குலராகப் பார்க்கிறது. பிரம்மாவிற்கும் சிவனுக்கும் இதுதான் வேலை. இவர் கதையில் இது ஒரு `வீழ்ச்சி’ என்பதாக முன்வைக்கப்படுகிறது. `வீழ்ச்சி’ என்பது கிறித்தவ மத விவகாரம்.
கேள்வி : ஏன் இதுலயும் பிரளயத்துலேந்து `நீலி’ புறப்படுகிறாளே?
எஸ். ரா : கொஞ்சம் Tribes மரபு, கொஞ்சம் – ரிலிஜன் – மரபு இது எல்லாத்தையும் அப்படிஅப்படியே அடுத்தடுத்து வைக்கிறார். ஆனா `நீலி’ என்பது அவரது Nostalgia சம்பந்தப்பட்ட விஷயம். அவருக்கு `உக்கிரமான பெண்’ என்பது ஏதோ ஒரு விதத்தில் தேவைப்படுகிறது. அவருக்கு `உக்கிரம்’ மேல் ஒரு obsession இருக்கு.
கேள்வி : `விஷ்ணுபுரம்’ நாவலை ஒரு அழகியல் வேலைப்பாடாக ஏற்கிறீர்களா?
எஸ். ரா : நாவல் என்ற மிகப்பெரிய வகையினத்தில் `விஷ்ணுபுரம்’ நிச்சயமாக ஒரு முக்கியமான வேலைப்பாடுதான். ஆனால் ஒரு மரபார்ந்த மனம்தான் அதில் ஆப்ரேட் ஆகிறது. ஆனால் நடை மரபு ரீதியானதாக இல்லை.
கேள்வி : ஜெயமோகனின் `பின்தொடரும் நிழலின் குரல்’ நாவலின் கம்யூனிச எதிர்ப்பு களம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
எஸ். ரா : நமக்கு அறிமுகப்படுத்தப்பட்ட `கம்யூனிசம்’ வைத்துதான் நாம் அதை அறிந்து கொண்டுள்ளோம் :
தமிழ்ப் படைப்பிலக்கிய உலகில் வரலாறு, சமூகம், நகைச்சுவை போன்றவற்றைப் போலவே ஆன்மீகத்திற்கும் மிக முக்கிய இடமுண்டு. ஆறுமுக நாவலர் தொடங்கி வேதநாயக சாஸ்திரியார், ரா. கணபதி, பரணீதரன், மணியன், லக்ஷ்மி சுப்ரமணியம் எனப் பலர் இதன் வளர்ச்சிக்குப் பங்காற்றியுள்ளனர். இவர்கள் வரிசையில் மூன்று தலைமுறைகளாக எழுதி வருபவர் ஆர். பொன்னம்மாள். இவர், மே 21, 1937 அன்று சென்னை, திருவல்லிக்கேணியில் ராமசுப்ரமண்யம்-லக்ஷ்மி அம்மாள் தம்பதியினருக்கு மகளாகத் தோன்றினார். பள்ளிப்படிப்பு சென்னையில். ஏழு வயதில் தந்தையை இழந்தார். அதன் பின் எட்டாம் வகுப்பு வரை மட்டுமே இவரால் கற்க முடிந்தது. குடும்பம் கல்லிடைக் குறிச்சிக்குக் குடி பெயர்ந்தது. சிறுவயதில் படித்த அம்புலிமாமா, ஜில்ஜில், டமாரம், பாப்பா மலர், பாலர் மலர், கல்கண்டு போன்ற பத்திரிகைகள் இவரது வாசிப்பார்வத்தைத் தூண்டின. வளர வளர கல்கி, தேவன், பி.எஸ். ராமையா, எஸ்.வி.வி., எல்லார்வி, லக்ஷ்மி போன்றோர் எழுதிய நூல்கள் படிக்கக் கிடைத்தன. அவை இவரது அறிவை விசாலமாக்கியதுடன் எழுதும் ஆர்வத்தையும் தூண்டின.
தனது வீட்டைச் சுற்றி வசித்த குழந்தைகளுக்கு தினமும் கதைகள் சொல்வது வழக்கமானது. ‘தமிழ்நாடு’ இதழ் அறிவித்த சிறுகதைப் போட்டிக்கு சிநேகிதி ருக்மிணியின் தூண்டுதலால் ஒரு சிறுகதையை எழுதி அனுப்பினார். ஆசிரியரின் பாராட்டுதலுடன் ‘இரட்டைப் பரிசு’ என்ற அச்சிறுகதை பிரசுரமானது. தொடர்ந்து தமிழ்நாடு இதழிலேயே ‘அன்பு மனம்’, ‘வழிகாட்டி’, ‘இன்ப ரகசியம்’, ‘விதி சிரித்தது’, ‘கண் திறந்தது’, ‘சந்தேகப் பேய்’ போன்ற பல சிறுகதைகள் வெளியாகி வரவேற்பைப் பெற்றன. 1958ல் எஸ்.எம்.சுப்ரமண்யத்துடன் திருமணம் நிகழ்ந்தது. குடும்பப் பொறுப்பு மிகுந்ததால் தொடர்ந்து எழுத இயலவில்லை என்றாலும் புத்தக வாசிப்பும் நேசிப்பும் தொடர்ந்தது. கணவர் ஒரு பத்திரிகை ஆர்வலராக இருந்ததால் பத்திரிகைகள், நாளிதழ்கள் வாசிக்கக் கிடைத்தன. கணவரின் உறுதுணையுடன் ஜோதிடம் மற்றும் சம்ஸ்கிருதத்தை நன்கு கற்றுத் தேர்ந்தார்.
1976ல் தினமணி நாளிதழ், குழந்தை எழுத்தாளர் சங்கப் போட்டி ஒன்றை அறிவித்தது. குடும்பச் சூழலால் அதுவரை எழுதாமலிருந்த பொன்னம்மாள் தனது குழந்தைகளின் தூண்டுதலால் ‘கடவுளின் கருணை’ என்ற சிறுகதையை எழுதி அனுப்பினார். அது பிரசுரத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதுடன் பரிசும் கிடைத்தது. தொடர்ந்து சில சிறுகதைகளயும் வானொலி நாடகங்களையும் எழுதிய போதும் முழுமையாக எழுத்தில் ஈடுபட இயலவில்லை. சில ஆண்டுகள் இடைவெளிக்குப் பின் மீண்டும் எழுத ஆரம்பித்தார். 1983ல் இவர் எழுதிய ‘கருணை விழிகள்’ என்ற நாவல் தங்கப் பதக்கம் பெற்றது. அது பின்னர் கோகுலத்தில் தொடராக வெளிவந்து சிறுவர்களின் வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து தீவிரமாக எழுத ஆரம்பித்தார்.
இவரது முதல் சிறுகதைத் தொகுப்பான ‘கடவுளின் கருணை’யை பழனியப்பா பிரதர்ஸ் வெளியிட்டு ஊக்குவித்தது. இவர் எழுதிய ஆயிரம் பக்கங்களுக்கு மேல் உள்ள ‘பாண்டுரங்க மகிமை’யை பிரபல கிரி டிரேடிங் நிறுவனம் வெளியிட்டது. தொடர்ந்து எழுதுமாறு அதன் உரிமையாளர் கிரி ஊக்குவிக்கவே பல நூல்களையும், ‘காமகோடி’ இதழுக்காகப் பல்வேறு, கதை, கட்டுரை, வரலாற்றுச் சம்பவங்களையும் எழுத ஆரம்பித்தார். குறிப்பாக இவர் குழந்தைகளுக்காக எழுதியிருக்கும் ‘கருணை விழிகள்’, ‘பறவைகள் பலவிதம்’, ‘பொன்மனம்’, ‘திருக்குறள் கதைகள்’, ‘பாட்டி சொன்ன கதைகள்’ (மூன்று பாகங்கள்) போன்ற 50க்கும் மேற்பட்ட நூல்கள் குறிப்பிடத்தக்கன. ‘ஸ்ரீமத் பாண்டுரங்க விஜயம்’, ‘சிவலீலை’, ‘நாராயணீயம்’, ‘தேவி திருவிளையாடல்’, ‘கருட புராணம்’, ‘நாலாயிர திவ்ய பிரபந்த விளக்கம்’, ‘பரமாச்சர்யாள் பாதையிலே’, ‘குரு ரத்னங்கள்’, ‘சத்ய சாயி வரலாறு’, ‘மகாபாரதக் கதைகள்’ போன்ற ஆன்மீக நூல்கள் பல பதிப்புகள் கண்டவையாகும். குறிப்பிடத்தக்க வகையில் சில நாடகங்களையும் பொன்னம்மாள் எழுதியிருக்கிறார். அவற்றில் சிலவற்றுக்குப் பரிசும் கிடைத்துள்ளது. குழந்தை இலக்கியம், ஆன்மீகம், நாவல், சிறுகதை, வாழ்க்கை வரலாறு என 90 நூல்கள் வரை எழுதியிருக்கும் பொன்னம்மாளின் படைப்புகளை வானதி பதிப்பகம், நியூ ஹொரைஸன் மீடியாவின் தவம் பதிப்பகம் போன்றவை தொடர்ந்து வெளியிட்டு ஊக்குவித்து வருகின்றன. இவரது நூல்களுக்கு தமிழக அரசுப் பரிசு, மத்திய அரசின் சிறந்த நூல் விருது, குழந்தை எழுத்தாளர்கள் சங்கப் பரிசு, ஏவிஎம்மின் தங்கப் பரிசு, ஸ்டேட் பாங்க் பரிசு, பபாசி விருது, குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா விருது போன்றவை கிடைத்துள்ளன.
“இன்றைக்கு டிவி மற்றும் பெரியவர்களின் ஒத்துழைப்பின்மை குழந்தை இலக்கியத்தை நசிய வைத்திருக்கிறது. குழந்தைகளும் சீரியல் பார்ப்பதற்கு ஃபோர்ஸ் செய்யப்படுகிறார்கள். இதனால் ஏற்படும் விளைவு குழந்தைகள் தங்களின் உலகத்தை இழக்கிறார்கள். முன்பு பெரியவர்கள் குழந்தைகளை ஒதுக்கும்போதோ, ஒதுங்கும்போதோ – புத்தகம் தோழன் ஆனது. புத்திசாலித்தனம் வளர்ந்தது. ஆனால், இன்று டிவி வீட்டுக்குள் வந்துவிட்டபின் நிலைமை மாறிப்போய் விட்டது” என்று கூறும் பொன்னம்மாள், “சிறுவர் இலக்கியத்தில் அழ. வள்ளியப்பாவுக்குப் பிறகு பெரிய வெற்றிடம் ஏற்பட்டிருக்கிறது. அறிவியல் சமாசாரங்களை ஈ.எஸ். ஹரிஹரன் எளிய முறையில் கதைகள் மூலமாக சொல்கிறார். தாவரங்கள், மிருகங்கள் குறித்த வாண்டுமாமாவின் புத்தகங்கள் குறிப்பிடத்தக்கனவாய் இருக்கின்றன. மா.கோதண்டராமன் எழுதிய அறிவியல் கட்டுரைகள் ஆழமாகவும் சுவையாகவும் சிறுவர்களுக்கு ஏற்ற முறையில் இருக்கும். பூவண்ணன் நடைமுறைக்கு ஏற்ப புனைகதைகள் படைக்கிறார். சௌந்தர் எழுதும் குழந்தைகளுக்கான படைப்புகளும் அவசியம் சிறுவர்களின் புத்தக அலமாரியில் இருக்கவேண்டும். ஆனால் இன்று குழந்தை இலக்கிய வளர்ச்சி மிகவும் பின்தங்கியே இருக்கிறது” என்று வருந்துகிறார்.
இன்றைய சிறார் இதழ்கள் குறித்து, “குழந்தைகளே எழுதும் புதிர்கள், ஓவியங்கள் அவர்களின் திறமையை வெளிப்படுத்துகிறது. தமிழார்வத்தையும் வளர்க்கிறது. குழந்தைகளுக்கு மட்டும் நடத்தப்படும் சிறுகதைப் போட்டி, அறிவியல் போட்டி போன்றவையும் வரவேற்கத்தக்கன. சாதனை புரிந்தவர்கள், ரோல் மாடல்கள், பல்துறை விற்பனர்கள், உடல் ஊனமுற்றவர்கள் என பலரின் வாழ்க்கை குறிப்புகளும், சரிதைகளும் குழந்தைகளுக்கு ஊக்கம் கொடுக்கிறது. தூண்டுகோலாக அமைகிறது.” என்கிறார். “குழந்தைகள் ஈரமண். அனைத்து ஊடகங்களும் பத்து சதவீதமாவது முழுக்க முழுக்க வயதுவாரியாகக் குழந்தைகளுக்கு ஒதுக்க வேண்டும். பொறுமை, முன்னேற்றம், தன்னம்பிக்கை, அன்பு, பணிவு, சேமித்தல், ஆடம்பரம் தவிர்த்தல், நேரம் விரயமின்மை, காலங்கள் மாற்றம், கனவு, நம்பிக்கை போன்றவற்றை விதைத்து வருங்காலத்திற்குத் தயார் செய்ய வேண்டும்” எனச் சொல்லும் பொன்னம்மாளின் வேண்டுகோள் அவசியம் ஊடகங்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்று.
இன்றும் இளைய தலைமுறையினருக்கு இணையாக எழுத்துப் பணியை மேற்கொண்டு வருகிறார் ஆர். பொன்னம்மாள். எழுத்தாளர், கட்டுரையாளர், விமர்சகர் பாஸ்டன் பாலாஜி இவரது மகன்.
ஒரு கார்ட்டூன். மாணவர்களுக்கு அந்தக் கால சூழலை எளிதில் உணர்த்துவதற்காக பாடப்புத்தகத்தில் இருக்கிறது. அதற்கு எதிர்ப்பு.
புத்தகத்தை புரட்டியிருப்பார்களா என்பது சந்தேகம். அந்தப் பக்கத்தையாவது பார்த்திருப்பார்களா என்பது அதனினும் சந்தேகம். இவர்களுக்கு இடஞ்சுட்டிப் பொருள் விளக்கம் கற்றுக் கொடுக்கும் பொறுப்பு யாரைச் சேரும்?
இந்த மாதிரி கவன ஈர்ப்பு கட்சி எம்.எல்.ஏ., எம்பி.க்களுக்கு ஆழமாக ஆராய, முழுவதுமாக வாசித்து கருத்து சொல்ல எப்பொழுது நேரமும் பொறுமையும் தன்னடக்கமும் கிட்டும்?
சரித்திரத்தை சுவாரசியமாக்குவது பிடிக்கவில்லையா? சமகால சினிமா மூலமாக சிந்திக்க வைப்பதை விரும்பவில்லையா? வரலாற்று நூலை வாசித்து யோசிக்குமாறு அமைத்திருப்பது ரசிக்கவில்லையா?
செய்தி
The school textbook cartoon of BR Ambedkar which created a furore in parliament on Friday was sketched by cartoonist Keshav Shankar Pillai in the 1950s while the Constitution was being framed, said a human resource development ministry official.
The cartoon depicts Nehru as asking Ambedkar to speed up the work on the Constitution.
The issue was raised by Dalit activist Thol Thirumavalavan, the Lok Sabha MP who heads the Viduthalai Chiruthaigal Katchi of Tamil Nadu, where protests were staged over the row.
Shankar, as he was popularly called, later founded the publishing house, Children’s Book Trust, in 1957. He made cartoons for newspapers and his magazine, Shankar’s Weekly, started in 1948. The government of India honoured him with Padma Shri in 1956, Padma Bhushan in 1966 and Padma Vibhushan in 1976.
The controversial cartoon was probably first published in 1948 and has been a part of NCERT’s (National Council Of Educational Research And Training) Class XI textbook in Tamil Nadu since 2006. The cartoon is credited to Children’s Book Trust.
It shows Ambedkar, a Dalit leader and creator of the Indian Constitution, seated on a snail with ‘Constitution’ written on it and India’s first prime minister, Jawaharlal Nehru, whipping the snail. In the background is a crowd.
காந்தியும் பாரத மாதவும் – ஓம் – இந்துத்வா கோஷம்
இந்தக் கார்ட்டூன் அடுத்து கண்டனத்திற்கு உள்ளாகலாம்
Pictures like this reveal how Mahatma Gandhi was perceived by people and represented in popular prints Within the tree of nationalism, Mahatma Gandhi appears as the looming central figure surrounded by small images of other leaders and sages.
அரசியல் பாடம்
பாடத்தை எப்படி விளக்குகிறார்கள்?
எவ்வாறு எளிமையாக்குகிறார்கள்?
செய்தித்தாள் வாசிக்காதே
ஆர் கே லஷ்மண் கார்ட்டூன்கள் இடம் பிடித்திருக்கின்றன:
கருத்துப்படம்
முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமை நக்கல் அடிக்கிறார்கள் எனலாம்.
படேல்
நேருவின் பேரன்களும் பேத்திகளும் அரியணையில் அம்ர்ந்திருப்பதால், சர்தார் வல்லபாய் படேல் நக்கலடிக்கப் படுவதை கண்டு கொள்ளவில்லை என்று பாரதீய ஜனதா கட்சி சொல்ல வேண்டும்.
இந்திரா காந்தி
போராட்டமும் வளர்ச்சியும் – முரண்
’அமெரிக்கா’ உதயகுமார் கூடங்குளத்தில் நடத்தும் வியாபாரப் போராட்டத்தை குறிப்பால் உணர்த்தி இருப்பதால், அந்த கேலி சித்திரத்தையும் நீக்கும் வரை உண்ணாவிரதப் போராட்டம்:
இந்தி எதிர்ப்பு கிளர்ச்சி – இராஜாஜி
கவிதை
Namdeo Dhasal
Turning their backs to the sun, they journeyed through centuries.
Now, now we must refuse to be pilgrims of darkness.
That one, our father, carrying, carrying the darkness is now bent;
Now, now we must lift the burden from his back.
Our blood was spilled for this glorious city
And what we got was the right to eat stones
Now, now we must explode the building that kisses the sky!
After a thousand years we were blessed with sunflower giving fakir;
Now, now, we must like sunflowers turn our faces to the sun.
English translation by Jayant Karve and Eleanor Zelliot of Namdeo Dhasal’s Marathi poem in Golpitha.
கவுண்டமணி – செந்தில்
நகைச்சுவை காமெடி ஜோக்குகள் இடம் பெற்றிருக்கின்றன
A Communist Party bureaucrat drives down from Moscow to a collective farm to register a potato harvest.
“Comrade farmer, how has the harvest been this year?” the official asks.
“Oh, by the grace of God, we had mountains of potatoes,” answers the farmer.
“But there is no God,” counters the official.
“Huh”, says the farmer, “And there are no mountains of potatoes either.”
ஈழம் & இலங்கைப் பிரச்சினை
அடுத்ததாக தொல் திருமா போன்ற தமிழின உணர்வுத்தூண்டிகள் விடுதலைப் புலிகள் குறித்து தி ஹிந்து கார்ட்டூன் எடுத்துக் கொள்வார்கள் என நம்பலாம்
காங்கிரசு அல்லாத பிரதம மந்திரிகள்
ஜனதா கட்சியை தாழ்த்துகிறார்கள் என முழங்க வேண்டும். ‘நிலையான ஆட்சி’ தாரக மந்திரத்தை ஓதும் சாத்தான் படம்!
பத்திரிகை முகப்பு
ஏன் இல்லுஸ்டிரேடட் வீக்லி, சண்டே, சண்டே இந்தியன், தி வீக், போன்றவை இடம் பிடிக்க வில்லை?
அமுல்
விளம்பரம் போடுகிறார்கள். மற்ற பாலாடை கம்பெனிகளும் பட்டர் நிறுவனங்களும் போர்க்கொடி தூக்கலாம்.
ஏன் கார்ட்டூன் தேவை?
சில பகீர் கார்ட்டூன்கள் முடிந்த பின் சிந்தனையைத் தூண்டும் கேள்விகளும் கீழ்க்காணும் வினாக்களும் இருக்கின்றன
1. Suppose you are the Secretary of State in the US (their equivalent of our Minister of External Affairs). How would you react in a press conference to these cartoons?
2. Drawn by well known Indian cartoonist Kutty, these two cartoons depict an Indian view of the Cold War.
3. If you were to draw this, who would you show as waiting in the wings?
4. Why does the cartoonist use the image of the ship Titanic to represent EU?
5. The two cartoons, one from India and the other from Pakistan, interpret the role of two key players who are also interested in the region. Do you notice any commonality between their perspectives?
6. How should the world address issues shown here?
7. Do you agree with this perspective?
இட ஒதுக்கீடு
சமூக நீதியை எப்படி சுருக்கமாக சொல்வது?
சமமாக மக்களை நடத்த வேண்டியதை எவ்வாறு மனதில் நிலைநிறுத்துவது?
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் அவர்களுக்காக பாபாசாஹேப் அம்பேத்கார் மேற்கோள்:
* Accept that some days you’re the pigeon, and some days you’re the statue.
* Solitude is independence
* Call no man happy until he is dead - Oedipus
* It is what you read when you don't have to that determines what you will be when you can't help it. - Oscar Wilde
* The difference between literature and journalism is that journalism is unreadable and literature is not read. - Oscar Wilde