Tag Archives: Authors

Tamil Books Wishlist – 2012 தமிழ்ப் புத்தகங்கள்: ஆலோசனை (aka) விழைப்பட்டியல்

சமீபத்திய புத்தகங்களில் எதை வாங்க வேண்டும் என்று ஆசை பிறக்கிறது?

என்னிடம் இருக்கிறது தவிர, எந்த நூல்களை தருவிக்க ஆர்வம் கிடைக்கிறது?

இணையத்தில் உள்ள புத்தகக் கடைகளில் மேய்ந்தால் எவை ‘என்னை வாங்கு’ என்று அழைக்கிறது?

இதில் பிரபலமான எழுத்தாளர்கள் நிச்சயம் இருப்பார்கள்; தவிரக்க வேண்டிய நூலாசிரியர்கள் தவற விடப் பட்டிருப்பார்கள்.

பட்டியல்களுக்கேயுரிய விடுபடுதல்களும் இருக்கலாம்.

உங்கள் பரிந்துரையில் சமீபத்திய நூல் வரவுகளில் முக்கியமானவை எவை?

முதலில் நூலகம் தொடர்பான சில வலையகங்கள்:

  1. நியூ ஹொரைசன் மீடியா – கிழக்கு – காமதேனு – https://www.nhm.in/shop/home.php
  2. சென்னை ஷாப்பிங் – http://www.chennaishopping.com
  3. உடுமலை –http://www.udumalai.com/
  4. தினமலர் புத்தக விமர்சனம் + அறிமுகம்: http://books.dinamalar.com/index.asp
  5. நம்ம கோடம்பாக்கம்: http://600024.com/store/books/
  6. நூல் உலகம்.காம் – http://www.noolulagam.com/
  7. டிஸ்கவரி புக் பேலஸ்: http://discoverybookpalace.com/
  8. நியு புக் லான்ட்ஸ் – http://www.newbooklands.com/new/home.php
  9. தமிழ் புக்ஸ் ஆன்லைன்: http://www.tamilbooksonline.in/booklist1.php
  10. கன்னிமரா பப்ளிக் லைப்ரரி – http://connemara.tnopac.gov.in/cgi-bin/koha/opac-main.pl
  11. சிங்கப்பூர் நூலகம் –http://catalogue.nlb.gov.sg/

இப்பொழுது என்னுடைய பரிந்துரை புத்தக லிஸ்ட்:

1. என்னைத் தீண்டிய கடல் By வறீதையா — வகை : கட்டுரைகள்
2. கவிதை என்னும் வாள்வீச்சு By ஆனந்த் — வகை : கட்டுரைகள்
3. கரை தேடும் ஓடங்கள் By ராமச்சந்திரன் உஷா
4. நாமார்க்கும் குடியல்லோம் By கரு.ஆறுமுகத்தமிழன்
5. எங்கள் நினைவில் சு.ரா. (குடும்பத்தாரின் நினைவுகள்)
6. தாயார் சன்னதி By சுகா
7. தோள்சீலைக் கலகம் : தெரிந்த பொய்கள் தெரியாத உண்மைகள் By கணேசன்
8. சினிமா அனுபவம் (அடூர் கோபாலகிருஷ்ணன்) By அடூர் கோபாலகிருஷ்ணன்
9. கடிகாரம் அமைதியாக எண்ணிக்கொண்டிருக்கிறது By அ.முத்துலிங்கம்
10. ஒன்றுக்கும் உதவாதவன் By அ.முத்துலிங்கம்
11. நளிர் — நாகார்ஜுனன்
12. சொல்லாததும் உண்மை (பிரகாஷ்ராஜ்)
13. முக்குவர்: வரலாறு, வாழ்வியல், எதிர்காலம் By வறீதையா கான்ஸ்தந்தின்
14. மயிலிறகு குட்டி போட்டது By பிரபஞ்சன்
15. எழுத்தென்னும் நிழலடியில் By பாவண்ணன்
16. அமெரிக்காவில் மூன்று வாரம் By ம.பொ.சிவஞானம்
17. இலக்கிய ஆராய்ச்சி காலாண்டு இதழ் ( பாகம் – 1 ) By இந்திரஜித்
18. பிறக்கும் ஒரு புது அழகு By காலச்சுவடு கண்ணன்
19. காலத்தைச் செரிக்கும் வித்தை By குட்டி ரேவதி
20. ஓவியம் கூறுகளும் கொள்கைகளும் By புகழேந்தி
21. புனைவின் நிழல் By மனோஜ்
22. நான் கண்ட ரஷ்யா By அகிலன்
23. பல நேரங்களில் பல மனிதர்கள் By பாரதி மணி
24. அடடே! By மதி கார்ட்டூன்கள்
25. உவன் இவன் அவன் By சந்ரு
26. ஆதி திராவிடன் இதழ்த் தொகுப்பு
27. அக்கிரகாரத்தில் பெரியார் By பி.ஏ.கிருஷ்ணன்
28. நம் தந்தையரைக் கொல்வதெப்படி By மாலதி மைத்ரி
29. இருப்பும் விருப்பும் By கி.பி. அரவிந்தன்
30. கர்ப்பமாய் பெற்ற கன்னிகள் By அ.கா.பெருமாள்
31. கிருஷ்ணன் நம்பி ஆக்கங்கள் By தொகுப்பாசிரியர்: ராஜமார்த்தாண்டன்.
32. அம்மாவின் ரகசியம் By சுநேத்ரா ராஜகருணாநாயகதமிழில் :- எம். ரிஷான் ஷெரீப்
33. அனுபவங்களின் நிழல் பாதை By ரெங்கையா முருகன் ,வி .ஹரி சரவணன் — வகை : குறுநாவல்கள்
34. நஞ்சையில நாலு மா By சுந்தரபுத்தன்
35. விழா மாலைப் போதில் By அசோகமித்திரன்
36. குருதியில் நனையும் காலம் By ஆளுர் ஷாநவாஸ் (முன்னுரை: ஆ.மார்க்ஸ்)
37. எழுதுவதெல்லாம் எழுத்தல்ல By பாமரன்
38. ப்ளீஸ்! இந்தப் புத்தகத்தை வாங்காதீங்க! By கோபிநாத்
39. சினிமாவின் மூன்று முகங்கள் By சுதேசமித்திரன்
40. எசப்பாட்டு By இந்தியா டுடெ தமிழ்ப் பதிப்பின் எக்ஸிக்யூட்டிவ் எடிட்டர் ஆனந்த் நடராஜன்
41. கலி புராணம் By மு.தளையசிங்கம்
42. இராசேந்திரசோழன் குறுநாவல்கள்
43. பேய்க்கரும்பு By பாதசாரி
44. சனங்களின் சாமிகள் கதை By அ.கா.பெருமாள்
45. தெரிந்த கோவை தெரியாத கதை By கவியன்பன்.கே.ஆர்.பாபு
46. இவன்தான் பாலா By பாலா
47. சுண்ணாம்பு கேட்ட இசக்கி By அ.கா.பெருமாள்
48. நான் நீ மீன் By கலாப்ரியா (கவிதை)
49. முதல் 74 கவிதைகள் By யுவன் சந்திரசேகர்
50. சூரியன் தகித்த நிறம் By பிரமிள்
51. மேன்ஷன் கவிதைகள் By பவுத்த அய்யனார்
52. எனது மதுக்குடுவை By மாலதி மைத்ரி
53. திரும்பிச் சென்ற தருணம் By பி.ஏ.கிருஷ்ணன்
54. பலார்ஷாவிலிருந்தும் நாக்பூருக்கு By தெலுங்கில் ஸ்ரீ விரிஞ்சி (தமிழில் :- கெளரி கிருபானந்தன்.)
55. களவு போகும் புரவிகள் By வேணுகோபால்
56. பூரணி பொற்கலை By கண்மணி குணசேகரன்
57. தஞ்சை ப்ரகாஷ் கதைகள் By காவ்யா சண்முகசுந்தரம்
58. மரணத்தின் வாசனை By அகிலன்
59. மயில்வாகனன் மற்றும் கதைகள் By அஜயன் பாலா
60. மிதமான காற்றும் இசைவான கடலலையும் By தமிழ்ச்செல்வன்
61. லீலை By சுகுமாரன்
62. பிரமிள் படைப்புகள் (முழுத் தொகுப்பு)
63. வெள்ளி விரல் By ஆர்.எம்.நெளஸாத்
64. நான் கொலை செய்யும் பெண்கள் By லதா (காலச்சுவடு)
65. நகரத்தில் மிதக்கும் அழியா பித்தம் By ம.தவசி
66. பதுங்குகுழி By பொ.கருணாகரமூர்த்தி
67. ஒரு பனங்காட்டுக் கிராமம் By மு.சுயம்புலிங்கம்
68. இலட்சுமணப்பெருமாள் கதைகள்
69. கருப்பாயி என்கிற நூர்ஜஹான் By அன்வர் பாலசிங்கம்
70. தொலைகடல் By உமா மகேஸ்வரி
71. லயோலா என்ற பெரும்பாம்பின் கதை By சுகுமாரன்
72. கனவுகளுடன் பகடையாடுபவர்கள் By ஜி.குப்புசாமி (மொழிப்பெயர்ப்பு )
73. என் தாத்தாவுக்கொருதூண்டில் கழி By ஜெயந்தி சங்கர்
74. அப்பாஸ்பாய் தோப்பு By எஸ்.அர்ஷியா
75. லண்டன் டயரி By இரா.முருகன்
76. ஆறா வடு By சயந்தன்
77. எட்றா வண்டியெ By வா.மு.கோமு
78. ராஜூ ஜோக்ஸ் (கார்டூன் நகைச்சுவை)
79. இதழாசிரியர்கள் மூவர் By விக்கிரமன்
80. அதிமனிதர்களும் எதிர்மனிதர்களும் By பிரேம்
81. கரித்தாள் தெரியவில்லையா தம்பீ… By பெருமாள் முருகன்
82. உடைந்த மனோரதங்கள் By பெருமாள் முருகன் (கு.ப.ரா. பற்றிய விமர்சனக் கட்டுரைகளின் தொகுப்பு)
83. சிலுவையின் பெயரால் By ஜெயமோகன்
84. கர்நாடக சங்கீதம் : ஓர் எளிய அறிமுகம் By மகாதேவன் ரமேஷ்
85. சுபமங்களா மொழிப்பெயர்ப்புக் கதைகள்
86. சங்க இலக்கியத்தில் பொது மக்கள் By முனைவர் கு.ராச ரத்தினம்
87. கோப்பை தேநீரும் கொஞ்சம் கவிதையும் By ஹரி கிருஷ்ணன்
88. டயலாக் By ஜூனியர் விகடன்
89. தமிழர் சமயம் தமிழர் வேதம் தமிழகத்துக் கோயில்கள் By யு.சுப்ரமணியன்
90. மதன் ஜோக்ஸ்
91. காவல் தெய்வங்கள் ( காலங்களை கடந்தும் நிக்கிற கிராம தேவதைகள் வழிபாடு ) By பி.சுவாமிநாதன்
92. சுதந்திரப் போரில் தமிழ் சினிமா By அறந்தை நாராயணன்
93. நான் எப்படிக் கம்யூனிஸ்ட் ஆனேன்?..வி.பி.சிந்தன் (இளையபாரதி )
94. :நேரு வழக்குகள் – ஆசிரியர் : ஞாலன் சுப்பிரமணியன்
95. சகுனம் By எஸ்.வி.ராமகிருஷ்ணன்
96. ஆ மாதவன் கதைகள்
97. ஒரு புகைப்பட நிருபரின் அனுபவங்கள். : ஆசிரியர்: மதுரை எஸ்.எஸ். ராமகிருஷ்ணன்
98. சூப்பர் ஸ்டார் சொன்ன சூப்பர் கதைகள் : ஆசிரியர் : சபீதா ஜோஸப்
99. சில நேரங்களில் சில அனுபவங்கள் (பாகம் 1,2) : ஆசிரியர் : பாக்கியம் ராமசாமி
100. உரையாடலினி By   அய்யனார் விஸ்வநாத்
101. கு.அழகிரிசாமி கடிதங்கள் (கி.ரா.வுக்கு எழுதியது) By கி. ராஜநாராயணன்.
102. தொலைக்காட்சி விளம்பரத்தின் உள்முகங்கள் By கழனியூரன்
103. ஆறுமுகசாமியின் ஆடுகள் By சா.கந்தசாமி
104. புதுமொழி 500 – ரவிபிரகாஷ் (விகடன் பிரசுரம்)
105. மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்கள் – தொகுப்பு: பி.இ.பாலகிருஷ்ணன்
106. விட்டில் – சமகால அரசியல் பகுப்பாய்வு By இராகவன் (காலச்சுவடு பதிப்பகம்)
107. ஈழத்து நாட்டார் பாடல்கள் By ஈழவாணி
108. தமிழினி ஒரு வருட உள்நாட்டு சந்தா

இப்பொழுது உங்களுக்கான வினாக்கள்:

2012-ல் என்ன வாங்கினீர்கள்?

முக்கியமாக புனைவுகளில் சுவாரசியமானவை எவை?

புதிய புத்தகங்களில் தங்களைக் கவர்ந்த கதாசிரியர் யார்?

Nanjil Nadan meet at New Jersey: Live Report & Commentary by sharpshooting critic Dyno

Thanks: @dynobuoy

http://twitter.com/dynobuoy/status/209440304162545664

Sahitya Academy winner & Noted Tamil writer Nanjil Nadan at Boston – Quick Notes

முந்தைய பதிவு: அமெரிக்காவில் எழுத்தாளர் நாஞ்சில் நாடனுடன் வாசகர் சந்திப்புகள்

பொத்தான் நீக்காத முழுக்கை நீளும் வெளிர் நீல சட்டை. இஸ்திரி கலையாத கருநீல முழுக்கால் சட்டை. அமெரிக்க பொறியியலாளர்களுக்கு போட்டியாக விப்ரோ ஏற்றுமதி செய்யும் நாற்பதாயிர வெள்ளி சமபளத்திற்கு நிறைவான வேலை நல்கும் குந்துரத்தர் போல் தெரியும் நாஞ்சில் நாடன் வந்தார்.

முதல் முறை அமெரிக்க பயணம். ஆனாலும், வரும் வழியில் இரு குடும்பத்தாருக்கு அவர்களுக்கு உரிய விமானத்தை வழி காட்டி, ஆங்கிலம் தெரியாத மூன்று முதல் விஜயத்தாருக்கு படிவங்களை நிரப்பி உதவி வழியனுப்பி, இன்னும் சில சந்தேகப் பேர்வழிகளின் ஐயங்களை நீக்கி வழிநடத்தி தானும் வந்து சேர்ந்தார்.

கம்ப ராமாயணத்தில் குகனுடன் ஐவரானோம் மாதிரி அவர்கள் எல்லோரும் நாஞ்சிலுடன் இணைந்தார்களா என்று தெரியவில்லை. ஆனால், அவர்களுக்கு தமிழ் தெரிந்திருந்தால், கம்பனின் சுவையை அவர்களின் நுனி நாக்கில் ஏற்றி இருந்திருப்பார்.

நாஞ்சில் நாடனுக்கு நேம் டிராப்பிங் என்றால் பொய்கையாழ்வார், குமரகுருபரர், தேம்பாவணிக்கு உரை எழுதிய புனித *%$#&@+>, சீறாப்புராணத்திற்கு பதம் பிரித்த புண்ணியவான் ஆகியோர்.

இந்த மாதிரி சிறப்பு விருந்தினர்களை வருவித்து விருந்தினராக்குவதற்காக ராஜனுக்கு சிறப்பு நன்றி.

வாசர்களையும் தமிழ் சிந்தனையாளர்களையும் கோர்க்கும் பெருமை திருமலை ராஜனையே சாரும். முன்னதாக ஜெயமோகன் வந்தார். இப்பொழுது நாஞ்சிலார். கிழக்கு கடற்கரை நண்பர்களை ஒருங்கிணைப்பதில் ஆகட்டும்; புதிதாக அணுக நினைப்பவர்களை இயல்பாக்குவதில் ஆகட்டும்; எல்லோரிடமும் நிதி வசூலிப்பது ஆகட்டும்; வாரயிறுதி மட்டுமே கோறுபவர்களிடம் கறாராக பேசுவதில் ஆகட்டும்; விசா நடைமுறைகளை சிக்கலின்றி பெற்றுத் தருவதில் ஆகட்டும்.

ராஜன் இல்லாவிடில் இந்த மாதிரி இயல்பான அன்னியோன்யமான சந்திப்புகள் சாத்தியப்படாது.

என்னை மாதிரி எழுதுவோரை நாஞ்சில் நாடன் அம்பறாத் துணியில் சில்லறையைப் போட்டு வில்லேந்துபவராக வருணிப்பார்.

அதாவது எதிர்த்தாப்பில் இராவணன். ஒரு கணம் தாமதித்தாலும் மோதி பஸ்மமாக்கி விடுவான். அப்பேர்ப்பட்ட அவசரத்தில் விநாடி நேரம் கூட வீணாக்காத இராமன். அம்பறாத்துணியில் அம்பு நிறைந்திருக்க வேண்டும். சரியான அஸ்திரமாக இருக்க வேண்டும். உடனடியாக கையில் வர வேண்டும். விரல்களை பதம் பார்க்காமல், வில்லில் வகையாக ஏறி, வில்லனை வீழ்த்த வேண்டும்.

எழுத்தாளனுக்கு வார்த்தையும் இப்படி சுழல வேண்டும். அவனுடைய அம்பறாத்துணியாகிய மூளையில் சிந்தனை வில்லுக்கேற்ற சொற்கள் சிக்க வேண்டும். எல்லா இடத்திலும் பற்றி, என்று, ஆகவே போன்று தேய்வழக்கு கூடாது.

இது எப்படி சாத்தியம்?

எவர் கர்ம சிரத்தையாக சங்க இலக்கியமும் காப்பியங்களும் கீழ்க்கணக்கையும் வில்லியையும் வாசிக்கிறோம்?

நாஞ்சில் நாடனைப் போல் வாத்தி கிடைத்தால் எவரும் வாசிப்போம்.

நிறுத்தி நிதானமாக கம்பனின் வெண்பாக்களை நினைவு கூர்கிறார். சீதையைத் தேடி வரும் மாயமானைப் போல் கம்பரின் செய்யுளை சொல்லும்போது பளபளப்பாக இருக்கிறது; ஆனால் கைவசம் சிக்காமல், நழுவுகிறது; எனினும் ஆசையாக மனம் உத்வேகம் கொள்ள வைக்கிறது.

நண்பர் பாஸ்டன் வேல்முருகன் ஜென் கதையை அடிக்கடி சொல்வார்:

ஜென் துறவி மாதிரி நானும் மையமாக தலையாட்டி வைத்தேன். இதை யாரும் அவருக்கு சொல்லி விடாதீர்கள்.

இந்திரா பார்த்தசாரதி என்னும் புலியும் விமர்சக குடிகளும்

முந்தைய பதிவுகள்

1. குருதிப்புனல் (நாவல்)

2. இந்திரா பார்த்தசாரதி: ஆறாம்திணை

3. Interview with Indira Parthasarathy – Balaji Srinivasan

4. முரண்பாடுகள் – தமிழ் சிஃபி சமாச்சார் பத்திகளின் தொகுப்பு ::எதிர்வினை

5. ஹெலிகாப்டர்கள் கீழே இறங்கி விட்டன – இந்திரா பார்த்தசாரதி

விமர்சக மொழி

இந்திரா பார்த்தசாரதி என்னுடைய விருப்பமான எழுத்தாளர். அவருடைய நாவல்கள் வாசித்திருக்கிறேன். சிற்சில கட்டுரைகள் வாசித்த அளவில் சுவாரசியம் நிறைந்தவை. படிப்பதற்கு சுவையாக இருந்தாலும், மீண்டும் படிக்கத் தூண்டுபவை. மீண்டும் படித்தாலும் அனுபவ முதிற்ச்சிற்கேற்ப பொருள் கூட்டுபவை.

அன்னியப்படுத்தாத மொழி சுஜாதா வாகர்களைக் கவரும். இன்றைக்கும் பொருத்தமான சமூகக் களங்களும், குடும்பச் சூழல்களும் ரமணி சந்திரன் நேசர்களையும் இழுக்கும். ஆண் மனதின் உளவியலை விரிவாக வெளிக் கொணர்வதால் பெண் சினேகிதிகளிடம் இரவல் கொடுத்தால் பிரச்சினை வரலாம்.

உருவக விமர்சகம்

ஆர்வி-க்கு மகாபாரதம் உவப்பு என்பதால் ஒரு பாரதக் கதை.

அழகிய குட்டி கிராமம். குடியானவனின் வீட்டு கொல்லைப்புறத்தில் மாடு புல் மேய்கிறது. திடீரென்று புலி உறுமல் சத்தம். விவசாயி அழ ஆரம்பிக்கிறான். புலிக்கு ஒன்றும் புரியவில்லை. அழுவதற்கான காரணத்தை வினவுகிறது.

“காட்டின் அரசரே! எனக்கு திருமண வயதில் அழகும் அறிவுமுள்ள மகள் இருக்கிறாள். அவளுக்கு சரியான வரன் அமையவில்லை.”

“எந்த மாதிரி பையனாக பார்க்கிறாய்?” என்கிறது புலி.

“உன்னைப் போல் பலமும் புத்தியும் பராக்கிரமும் நிறைந்தவனாக இருக்கவேண்டும்.”

“அப்படியென்றால், நானே அவளை மணமுடிக்கட்டுமா?”

“இதேதான்… இதைத்தான் நானும் யோசித்தேன். ஆனால், நாமிருவரும் வேறு வேறு வர்க்கம். எனக்கு சரியென்றாலும் இஷ்டமித்திர பந்துக்கள் ஒப்புக் கொள்ளணும். அதற்காக ஊருக்குள் போய் உற்றார் உறவினரிடம் கேட்டு வருகிறேன்.”

சென்று வருகிறான். “என் தலைவரே! அவர்களுக்கும் பேருவகைதான். ஆனால், என் மகளிடம் ஒரு வார்த்தை கேட்டு விடுகிறேன்.”

புலி மீண்டும் விடை தர, வீட்டினுள் சென்று திரும்புகிறான். “ஓ ராஜாவே! என் மகளுக்கு முழு சம்மதம். ஆனால், அவளுக்கு உன் கூரிய நகத்தையும் கோரப் பற்களையும் பார்த்தால் குலை நடுங்குகிறது. அவளை ஆரத் தழுவும்போது அவை பதம் பார்க்குமோ என்று அச்சம் எழுகிறது.”

”ப்பூ… அவ்வளவுதானே. அவற்றை வெட்டி எறிந்து விடலாம்.”

கிராமத்தானும் புலியின் ஆயுதங்களை அதன் ஆணைப்படியே நீக்குகிறான். நீக்கிய அடுத்த கணமே குச்சி கொண்டு புலியை ஓட ஓட விரட்டி அடிக்கிறான்.


லக்ஷ்மி

’ஹெலிகாப்டர்கள் கீழே இறங்கி விட்டன’

இ.பாவின் கதைகளின் சிறப்பே அவரது கதாபாத்திரங்களின் தோல்விதான். தோல்வியென்றால் தாடி வளர்த்து, போதையோடு அருவெறுப்பை கூட்ட ஒரு நாயையும் இழுத்துக்கொண்டு திரியும் ரொமான்டிக் காதல் தோல்வியல்ல. தன் இயலாமையின் உச்சங்களை கண்ணாரக்கண்டு பின் சராசரி வாழ்க்கைக்குள் போய் தன்னை திணித்துக்கொள்ளும் தோல்வி – தன்னை பற்றி தானே வளர்த்துக்கொள்ளும் அறிவுஜீவி பிம்பம் கிழிந்து தொங்க தன்னுள் இருந்து வெளிவரும் தன் உண்மை உருவை உணர்ந்து தளர்ந்து போய்த்திரும்பும் கதாநாயகர்கள் இவரது கதைகளில் மட்டுமே சாத்தியம். எப்படியும் க்ளைமாக்சில் தான் ஹீரோவாய் இருக்கும் ஒரே காரணத்தாலேயே ஜெயித்துவிடும் ரக ஆட்களில்லை இவர்கள். அமிர்தத்தை போன்றவர்களின் கதையை எழுத அபார துணிச்சல் வேண்டும் – இவர்களைத்தான் தினசரி வாழ்வில் நாம் அதிகம் சந்திக்கிறோம் (சில சமயங்களில் கண்ணாடியில் கூட சந்திக்க நேரிடலாம்.)

யோசித்து பாருங்கள், இதே கதையை சிந்து பைரவி எப்படி சொன்னது என்று – கதாநாயகனின் சறுக்கல்களை கூட அறிவுஜீவித்தன ஜிகினாத்தூவி அழகாக்கி விற்கும் சராசரி கதைகளோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது இ.பாவின் துணிவு நமக்கு வியப்பையளிக்கிறது.


பாவண்ணன்

தாவியலையும் மனம் (எனக்குப் பிடித்த கதைகள் – 71 ) இந்திரா பார்த்தசாரதியின் ‘நாசகாரக்கும்பல்’

குற்ற உணர்ச்சி இல்லாமல் இருப்பதே பெரிய மன நிம்மதி. நிம்மதியைத் தேடிய வாழ்க்கை என்பது வாய்ப்பு வசதிகளைப் பெருக்கிக்கொள்வதிலோ அல்லது கூடுதலாகக் கிட்டுகிற சில லட்சங்களுக்காகப் பிடிக்காத வேலையைச் செய்வதிலோ அல்ல என்பதுவும் புரிந்தது. தாவி அலைகிற மனத்தைக் கட்டிப்போடும் சக்தி இந்த உணர்ச்சிக்கு இருக்கிறது. இந்த எண்ணம் மனத்தில் நிழலாடும்போதெல்லாம் இந்திரா பார்த்தசாரியின் ‘நாசகாரக் கும்பல் ‘ என்னும் சிறுகதையும் நிழலாடும்.


ராஜ் சந்திரா

ஒரே தராசை எல்லா எழுத்தாளர்களுக்கும் உபயோகப்படுத்துவதில் வரும் விபரீதம் இது. இ.பா. கதைகள் நேரடியாக வாசகனிடம் பேசுபவை. அதன் நோக்கம் ‘இது போன்ற விளையாட்டுகள் உன் முன்னால் நடப்பவை’ என்று கூறுவதுடன் முடிந்துவிடும். இதில் ‘தரிசனம்’ பார்ப்பது உங்கள் பிழை. இவ்வகைக் கதைகளும் நமக்குத் தேவை என்று நான் நினைக்கிறேன். இவ்வகையான அரசியல் அங்கதங்கள் investigative journalism தரும் திருப்தி.

இ.பா எதை நினைத்து ‘குருதிப்புனல்’ கதையை நகர்த்தினாரோ அது சரியாக எடுபடவில்லை. பலரும் நாயுடுவின் ஆண்மை குறையைத்தான் கண்டார்கள். ஆனால் நாயுடுவின் சாதி வெறி (உ-ம். ‘பறையன் என்னை அடிக்கிறான்’ என்று கத்தும் முக்கியமான காட்சி) அவர்களுக்குத் தெரியவில்லை. Characterization-ல் இ.பா-வின் தோல்வி இது.

அவரின் கதை மாந்தர்களின் உரையாடலில் இ.பா. பிரகாசிக்கிறார் என்று சொல்லலாம். உதாரணமாக ‘மாயமான் வேட்டை’, ‘ஆகாயத் தாமரை’, ‘குருதிப் புனல்’

நாவல்களில் அவர்கள் வைக்கும் வாதங்கள் நிச்சயம் revisit செய்யும் தகுதி பெற்றவை. ஆனால் அ.மி-யின் தீவிர வாசகனாகிய எனக்கு இ.பா-வின் மாந்தர்கள் தரையில் கால் பாவாமல் நடக்க முயன்று கீழே விழுபவர்கள். ஆனால் கீழே விழுவதையும் இ.பா-வே நிகழ்த்துகிறார், as a part of the story.

இ.பா-வின் பாணியில் குறியீடுகளுக்கு இடம் கிடையாது. ‘கொஞ்சமாகக் கொடுங்க ஐயா’ என்றாலும் எல்லாவறையும் கொட்டுவார். அவரின் கதைகளைப் படிக்கும்போது வரும் களைப்புக்கு இதுவும் ஒரு காரணம். ‘ஆகாயத் தாமரை’-யில் கதை நாயகன் தன் frequency-க்கு யாரும் இல்லை என்ற வெறுப்பில் இறுதியில் ஒரு விவசாயியாக/கூலித் தொழிலாளியாக மாறி விடுவான். அதை கதாநாயகி மற்றவர்கள் அடைந்த தோல்வியாக நினைப்பாள். அந்த நினைப்பையும் அவர் வரிகளாக எழுதி நம்மை சிரமப் படுத்துவார். வாசகர்கள் புத்திசாலிகள் என்பதை இ.பா ஒப்புக் கொண்டதில்லை.

அவரின் சிஷ்யரான ஆதவன் கதைகளுக்கும் மேற்சொன்னவை பொருந்தும்.


அ.ராமசாமி

இன்னும் சில நாசகாரக்கும்பல்கள் :இந்திரா பார்த்தசாரதியின் கதை

இ.பா., சிறுகதைக்கான இலக்கணங்களையோ வரையறைகளையோ குறித்துக் கவலைப் படுபவரல்ல. விசாரணைக்குட்படுத்த விரும்பும் மனப்பாங்கு மட்டுமே அவருக்கு முக்கியம்.. அவரது சிறுகதைகள் ஒரு மையப்புள்ளியில் தொடங்கித் தனி மனிதப் பிரச்சினைக்குள் செல்வது போல் தோன்றினாலும், கதை முடியும் போது சமூகத்தின் பொதுவியாதிகளில் ஒன்றை விசாரணைக்குட் படுத்தும் நோக்கத்தை நிறைவேற்றும் தன்மை கொண்டவைகளாகவே விளங்குகின்றன.


Videos and Interviews

Indra Parthasarathy Documentary Part 1

வெப்-உலகம்: நேர்காணல் – எஸ். ராமகிருஷ்ணன்

சந்திப்பு : ஆர். முத்துக்குமார்

கேள்வி : `விஷ்ணுபுரம்’ நாவல் குறித்த உங்கள் `contention’ என்ன?

எஸ். ரா : முதலில் அந்தத் தீமில் எனக்கு ஈடுபாடு இல்லை. காலம் என்பது சில பல வஸ்துக்களால் தீர்மானிக்கப்படுவதில்லை. ஒவ்வொரு காலமும் ஒரு `மனவளர்ச்சி’ கொண்டது. குறிப்பிட்ட பிரத்யேகமான பய உணர்ச்சி கொண்டது. ஒரு ஆதிகுடி குகைவாசிக்கு பகல் / இரவு என்பது தெரியாது. அவனுக்கு பொருள் தோன்றுகிறது / மறைகிறது அவ்வளவே. ஆனால் பகல் / இரவின் விளைவுதான் தோன்றுதல் மறைதல் என்பது எப்படி எழுதப்படுவது?

ஒரு கட்டத்தை எழுத்தில் நாவலாகக் கொண்டுவரும் போது அதன் `மனம்’ எப்படி புரியப்படவேண்டும் என்பதில்தான் பிரச்னை இருக்கிறது. இயற்கை மதங்கள் பல்வேறு பயங்களால் உருவானதே. தற்போது இருக்கும் மதங்கள் அதைப் `பயன்பாடா’ மாற்றிக் கொண்டது. இப்ப-நம்ம பாரம்பரியத்துல ஏகப்பட்ட பக்தி இலக்கியம்-பாசுரம், எல்லாம் இருக்கின்றன. ஆனால் நாயன்மார்களுக்கோ-ஆழ்வாக்ளுக்கோ அது ஒரு மார்க்கம், ஞான மார்க்கம், அல்லது ஏதோ ஒன்றை அடைவதற்கான ஒரு கருவி. ஆனால் நமக்கு அது இன்று ஒரு கவிதை மட்டுமே. திருப்பாவை பாடல்கள் இன்னிக்கு நாம கேட்டா அதன் கவிதைத் தன்மையை மட்டும்தான் எடுத்துக்குறோம் அவங்களோட வாழ்வியலுக்குள்ள நாம் போகமுடியாது.

`விஷ்ணுபுரம்’ நாவல் பழைய தத்துவம் / இலக்கியம் / வாழ்வு போன்றவைகளை நவீன காலக்கட்டப் பார்வையில் அணுகுகிறது. மேலும் பல இடங்கள் `சினிமாட்டிக்கா’ இருக்கு, இப்ப நாம யானைய பார்த்திருக்கோம், அதுக்கு மதம் பிடிக்கும்னு கேள்விப்பட்டுருக்கோம், தமிழ் இலக்கியத்துல உதயணன் கதையில் தான் யானை ஊரையே துவம்சம் செய்யும்னு கேள்விப்பட்டிருக்கோம், இவர் கதைல ஒரு யானை ஒரு ஊரையே காலி செய்கிறது. இது, சினிமாடிக் தனமாகும். நமக்கும் யானைக்குமான உறவுகள் அப்படி இல்லையே. மேலும் அவரால் `பவுத்தம்’ சம்பந்தப்பட்ட தீவிரத் தேட்டத்தை வைக்க முடியவில்லை. பவுத்த நபர்கள் வருகிறார்கள். பவுத்த தர்க்கம் இருக்கிறது. ஆனால் பவுத்த சாரம் இல்லை.

கேள்வி : அந்த நாவலின் முடிவில் வரும் `பிரளயம்’ என்ற `Apocalypse’ ஏற்புடையதா?

எஸ். ரா : மார்க்வெஸின் `நூறாண்டு காலத் தனிமை’ நாவலில் வரும் Apocalypse’ ஞாபகம் என்பதன் நாட்டியமாக இருக்கிறது. அந்தப்பகுதி நாவலையே வேறுவிதமாக வாசிக்க வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது. ஜெயமோகனின் நாவலில் அது ஒரு `condition’ என்பதாக வருகிறது. மேலும் நம் தத்துவ புராண மரபு பிறப்பு / இறப்பு , படைப்பு / அழிவு என்பதை தொடர்ச்சியானதாக சர்க்குலராகப் பார்க்கிறது. பிரம்மாவிற்கும் சிவனுக்கும் இதுதான் வேலை. இவர் கதையில் இது ஒரு `வீழ்ச்சி’ என்பதாக முன்வைக்கப்படுகிறது. `வீழ்ச்சி’ என்பது கிறித்தவ மத விவகாரம்.

கேள்வி : ஏன் இதுலயும் பிரளயத்துலேந்து `நீலி’ புறப்படுகிறாளே?

எஸ். ரா : கொஞ்சம் Tribes மரபு, கொஞ்சம் – ரிலிஜன் – மரபு இது எல்லாத்தையும் அப்படிஅப்படியே அடுத்தடுத்து வைக்கிறார். ஆனா `நீலி’ என்பது அவரது Nostalgia சம்பந்தப்பட்ட விஷயம். அவருக்கு `உக்கிரமான பெண்’ என்பது ஏதோ ஒரு விதத்தில் தேவைப்படுகிறது. அவருக்கு `உக்கிரம்’ மேல் ஒரு obsession இருக்கு.

கேள்வி : `விஷ்ணுபுரம்’ நாவலை ஒரு அழகியல் வேலைப்பாடாக ஏற்கிறீர்களா?

எஸ். ரா : நாவல் என்ற மிகப்பெரிய வகையினத்தில் `விஷ்ணுபுரம்’ நிச்சயமாக ஒரு முக்கியமான வேலைப்பாடுதான். ஆனால் ஒரு மரபார்ந்த மனம்தான் அதில் ஆப்ரேட் ஆகிறது. ஆனால் நடை மரபு ரீதியானதாக இல்லை.

கேள்வி : ஜெயமோகனின் `பின்தொடரும் நிழலின் குரல்’ நாவலின் கம்யூனிச எதிர்ப்பு களம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

எஸ். ரா : நமக்கு அறிமுகப்படுத்தப்பட்ட `கம்யூனிசம்’ வைத்துதான் நாம் அதை அறிந்து கொண்டுள்ளோம் :

மேலும் படிக்க —> வெப்-உலகம்

Interview of S Ramakrishnan: Question and Answer with Tamil Writers and Notable Thinkers







S Ramakrishnan’s Felicitation Function: Canada’s Iyal Award Event at Chennai by Uyirmmai

’உலக நாயகன்’ விஸ்வரூபம் எடுக்கும் பத்மஸ்ரீ கமல் தோழர் கு ஞானசம்பந்தன் உரை

கவிப்பேரரசு வைரமுத்து

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேச்சு

இரண்டாம் பாகம் (தொடர்ச்சி)

எஸ் ராமகிருஷ்ணன் ஏற்புரை

2012 Anadhan Vikadan Awards for Popular Tamil Cinema, TV and Bestsellers

சென்றவை:
1. விகடன் விருதுகள் – 2010

2. விகடன் அவார்ட்ஸ் 2008

3 Superhit Songs in Tamil Cinema – 2008 Year in Review

4. Tamil Film Songs – Best of 2007 Movie Music

5. 2007 -Year in Review

6. 2006 Reminiscences

7. Year in Reviews – 2006

8. டாப்டென் – 2005

9. பிடித்த 10 படங்கள்

சிறந்த இயக்குநர்: வெற்றிமாறன் – ஆடுகளம்

சினிமா (திரைப்படம்): ஆடுகளம் – ஃபைவ் ஸ்டார் ஃபிலிம்ஸ்

கதாநாயகர் (நடிகர்): விக்ரம் – தெய்வத் திருமகள்

கதாநாயகி (நடிகை): அஞ்சலி – எங்கேயும் எப்போதும்

துணை கதாபாத்திரம் (குணச்சித்திர) நடிகர்: இளவரசு – முத்துக்கு முத்தாக

வில்லி, குணச்சித்திர நடிகை: உமா ரியாஸ் – மௌன குரு

காமெடி, நகைச்சுவை நடிகர்: சந்தானம் – வேலாயுதம், தெய்வத் திருமகள்

ஜோக்ஸ், நகைச்சுவை நடிகை: கோவை சரளா – காஞ்சனா

வில்லன்: ஜாக்கி ஷெராஃப் – ஆரண்ய காண்டம்

முதற்பட புதுமுக நடிகர்: விஜய் சேதுபதி – தென்மேற்கு பருவக்காற்று

கன்னி புதுமுக நடிகை: இனியா – வாகை சூட வா

பேபி ஸ்டார் (குழந்தை நட்சத்திரம்): சாரா – தெய்வத் திருமகள்

பாடல், மியூசிக், இசையமைப்பாளர்: ஜி வி பிரகாஷ்குமார் – ஆடுகளம், மயக்கம் என்ன

கேமிராமேன் (ஒளிப்பதிவாளர்): வேல்ராஜ் – எங்கேயும் எப்போதும், ஆடுகளம்

எடிட்டிங் (படத்தொகுப்பு): கிஷோர் – ஆடுகளம்

ச்டோரி, மூலக்கதை, கதை: வெற்றிமாறன் – ஆடுகளம்

ஸ்க்ரீன்ப்ளே, திரைக்கதை: தியாகராஜன் குமாரராஜா – ஆரண்ய காண்டம்

டயலாக், வசனம்: சமுத்திரக்கனி – போராளி

ஃபைட் சீக்வன்ஸ் (சண்டைப் பயிற்சி): அனல் அரசு – ரௌத்திரம்

டான்ஸ், பாடல் ஆட்டம், குத்துப் பாடல், நடன இயக்குநர்: ராஜு சுந்தரம் – ’வள்ளியே சக்கரவள்ளியே’: எங்கேயும் காதல்

கலை (ஆர்ட் டைரக்‌ஷன்): ராஜீவன் – 7ஆம் அறிவு

ஒப்பனை (மேக்கப்): ஆ கோதண்டபாணி – பானு – ஏழாம் அறிவு

ஆடை வடிவமைப்பு, உடை (ட்ரெஸ், காஸ்ட்யூம்ஸ்): ஸ்வேதா – கோ

பாடலாசிரியர் (சாங் ரைட்டர், கவிஞர்): அறிவுமதி – ’விழியும் விழியும்’: சதுரங்கம்

பின்னணிப் பாடகர்கள் (சிங்கர்): எஸ் பி பாலசுப்ரமணியம், எஸ்பிபி சரண் – ’ஐயையோ நெஞ்சு அலையுதடி’: ஆடு களம்

பாடகி: சைந்தவி – ’பிறை தேடும் இரவிலே’: மயக்கம் என்ன

தயாரிப்பு (ப்ரொடக்‌ஷ்ன்ஸ், டிஸ்ட்ரிப்யூஷன்): ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோஸ் – ஏ ஆர் முருகதாஸ் புரொடக்சன்ஸ்: எங்கேயும் எப்போதும்

இலக்கியம், கதை, புனைவு, ஆக்கம், எழுத்தாளர்

நாவல் (நெடுங்கதை): ஆண்பால் பெண்பால் – தமிழ்மகன்

சிறுகதைத் தொகுப்பு (ஷார்ட் ஸ்டோரி): காண்டாமிருகம் – ஜீ முருகன்

புதுக் கவிதை (பொயம், கவிஞர், பா, தளை, பாடல்): சபரிநாதன்: களம் – காலம் – ஆட்டம்

கட்டுரைத் தொகுப்பு (பத்தி, கருத்து, சிந்தனை): அனுபவங்களின் நிழல் பாதை: ரெங்கையா முருகன் – வி ஹரி சரவணன்

மொழிபெயர்ப்பு (ட்ரான்ஸ்லேஷன், மொழியாக்கம்): சிறைபட்ட கற்பனை – க பூர்ணசந்திரன்

புத்தகம், வெளியீடு, ஓவியம், கலை, சிற்பம், புகைப்படம், நிழற்படம், ஒளிப் படம்: வாளோர் ஆடும் அமலை – ட்ராட்ஸ்கி மருது – தடாகம் பதிப்பகம்

சிறு பத்திரிகை (சிற்றிதழ்) : மணல் வீடு – மு. ஹரிகிருஷ்ணன்

இன்ன பிற

விளையாட்டு வீரர் (க்ரிக்கெட், ஸ்போர்ட்ஸ்): ரவிச்சந்திரன் அஷ்வின்

வீராங்கனை: நீச்சல் – ஜெயவீணா

பயிற்சியாளர்: (ட்ரெயினிங்) நீச்சல் – கிரீஷ்

டிவி சேனல்: தொலைக்காட்சி மிடையம்: புதிய தலைமுறை

டிவி நிகழ்ச்சி: (ப்ரொகிராம்): பெரிதினும் பெரிது கேள் – விஜய் டிவி

நெடுந்தொடர் (சீரியல்): திருமதி செல்வம் – சன் டி.வி.

தொகுப்பாளர் (ஹோஸ்ட், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்): சிவகார்த்திகேயன் – ஜோடி நம்பர் #1 சீஸன் 5 (விஜய் டிவி)

தொகுப்பாளினி (பெண்): திவ்யதர்ஷினி: ஹோம் ஸ்வீட் ஹோம் – விசய் தொலைக்காட்சி

பண்பலை: ஹலோ எப்.எம்.

பண்பலைத் தொகுப்பாளர்: மா கா பா ஆனந்த் – ரேடியோ மிர்ச்சி, சென்னை

எப்.எம். தொகுப்பாளினி: ரேடியோ: ஹலோ எப்.எம்., மதுரை

விளம்பரம் – அட்வர்டைஸ்மெண்ட்: ஏர்டெல்: ஒவ்வொரு ஃப்ரெண்டும் தேவை மச்சான்

மோட்டார் பைக் – டூ வீலர்: ஹோண்டா சி பி ஆர் 250 ஆர்

கார்: நாற்சக்கர வாகனம்: மகிழுந்து: மாருதி சூஸூகி – மாருதி ஸ்விஃப்ட் நியூ

35th Chennai Book Fair: Videos and News: Inauguration by Speaker Jeyakkumar

முந்தையக் குறிப்பு: 35th Chennai Book Fair 2012: Inauguration And Award Function

தினமணி செய்திக் குறிப்பு

1. 35வது சென்னை புத்தகக் கண்காட்சி: தொடக்க விழா: விருது வழங்கல்: ஆர் பொன்னம்மாள் – குழந்தை எழுத்தாளர்

2. சென்னை நிகழ்வுகள்: புத்தக விழா: 2012: குத்துவிளக்கு தொடக்கம்: இலக்கிய நிகழ்வுகள்

3. 35th Chennai Book fair Videos: Youtube Links: Publisher Exhibitions: BAPASI: Best Children Writer Awards: Prizes for Kids’ Author

35th Chennai Book Fair 2012: Inauguration And Award Function

Earlier Post: அழ வள்ளியப்பா நினைவு விருது: சிறந்த குழந்தை எழுத்தாளர்