Tag Archives: படைப்பு

விமர்சன ஆய்வு: ஜெயமோகனின் “இன்வெர்னெஸ்”

கதை என்ன என்பதை வாசித்து விட்டு வரவும்.

இந்தக் கதையின் மையக் கருத்து உண்மையிலேயே சுவாரஸ்யமானது: ஒரு சொல் — ஜெபமாக பேயுரு கூத்தாக வெறியுருக் கொள்வது; ஊரின் பெயர் உள்ளுணர்வின் நிலையாக மாறுவது; மொழி அகத்திணையின் சிறையாகவோ, விடுதலையாகவோ மாறுவது. ஆனால் சக்தி வாய்ந்த கருத்தும் சக்தி வாய்ந்த கதையும் ஒன்றல்ல.

1. உணர்வு ஆழமின்மை — கதையின் மிகப் பெரிய தோல்வி

இது கதையின் மிகத் தீவிரமான பிரச்சினை.

அந்தப் பெண்தான் கதையின் நெறிமுறை மையம், உணர்வு மையம். ஆனால் ஜெயமோகன் அவளுடைய உள்ளுணர்வை நமக்குக் காட்டவே மறுக்கிறார். அவளது அறிகுறிகளை மட்டும் காட்டுகிறார் — திரும்பத் திரும்ப வரும் வார்த்தை, வீட்டுக்குள் மட்டுமே வாழ்தல், உலகைப் பற்றிய குழந்தைத்தனமான புரிதல் — ஆனால் அவளுடைய அனுபவத்தை ஒருபோதும் தருவதில்லை. அவள் என்ன உணர்கிறாள்? “இன்வெர்னெஸ்” என்ற வார்த்தை அவளுக்கு என்ன? ஆறுதலா? ஏக்கமா? தியான நிலையா? கதை அவள் உள்ளுணர்வுக்குள் நுழைவதை மறுக்கிறது. அவள் எப்போதும் வெளியிலிருந்தே பார்க்கப்படுகிறாள் — ராகவனால், சாதனாவால், வழிகாட்டியால், கதைசொல்லியால் — இந்த தூரம் ஆழமான மர்மம் போல் காட்டப்படுகிறது; ஆனால் உண்மையில் அது தவிர்ப்பு மட்டுமே.

இருபத்தெட்டு ஆண்டு கூத்தாட்டு வெறித்தனம் கதையின் மையமான உண்மை. அது முழுமையாக விளக்கப்படவில்லை. அவள் பதினேழு ஆண்டுகளுக்கு முன்பு லண்டன் வந்தாள் என்று சொல்கிறார்கள். ஆனால் இந்த வெறித்தனம் இருபத்தெட்டு ஆண்டுகள் — அவள் பிரிட்டன் வருவதற்கு ஒரு தசாப்தத்திற்கும் மேல் முன்பே தொடங்கியிருக்கிறது. அது எங்கு தொடங்கியது? என்ன தூண்டியது? இந்தியாவில் இருந்தபோதா? திருமணத்திற்குப் பிறகா? கர்ப்பகாலத்தில்? இவற்றை கதை நேரடியாக விளக்க வேண்டியதில்லை — ஆனால் அவற்றை கோடிட்டுக் காட்ட வேண்டும், அவற்றின் எடையை நம்மை உணரச் செய்ய வேண்டும். ஜெயமோகன் எதுவும் தருவதில்லை. இந்த சாமியாடித்தனம் எந்த வாழ்க்கை சூழலிலும் வேரூன்றாமல் மிதக்கிறது.

இதை அம்பையின் எழுத்துடன் ஒப்பிட்டுப் பார்ப்போம் — அதே தமிழ் இலக்கிய மரபில் வேலை செய்யும் எழுத்தாளர். “காட்டில் ஒரு மான்” போன்ற கதைகளில் அம்பை இதே போலொரு பெண்ணின் அகத்தேடலையும், அவளது சுதந்திர வேட்கையையும் மையமாகக் கொண்டு உள்ளுணர்வையும் மனவோட்டங்களையும் அழுத்தத்துடனும் உணர்த்துகிறார். ஜெயமோகன் தன் கதாபாத்திரத்தை விசித்திரமான ஷோகேஸ் அழகு பொருளாக, மென்மையான மர்மமாக ஆக்கிவிடுகிறார். இந்த இரண்டுக்கும் இடையே முக்கியமான பெரிய வித்தியாசம் இருக்கிறது.

உணர்வு உச்சகட்டமான தருணம் — அவள் பனியின் மேல் நடந்து போவது — அதிர்ச்சியூட்டும் அலட்சியத்துடன் கையாளப்படுகிறது. ராகவன் அவள் போவதைப் பார்க்கிறார், பிறகு தூங்கிவிடுகிறார். குறட்டை விடுகிறார். விழிக்கிறார். சாதனா அருகில் இருக்கிறாள். இந்த பற்றற்றத் துண்டிப்பு நுட்பமான கலைத்திறனா அல்லது தைரியமின்மையா? இதற்கு முன்பு எந்த உணர்வு திரட்சியும் இல்லாததால், இது அலட்சியம் கலந்த சௌகரியமாகவே வாசிப்பில் முடிகிறது. உணர்வுகளை அடக்கும் நுட்பமான நடை சம்பாதிக்கப்பட வேண்டும்; அது வெறுமையிலிருந்து (மறுமொழி கடிதங்களிலிருந்து) உருவாக்கப்பட்டால், அது நடையல்ல — அது இல்லாமை மட்டுமே.


2. தமிழ் குடும்பம்: வெளித்தோற்றத்தில் மட்டுமே, ஆழத்தில் இல்லை

கதை தமிழ் குடும்ப வாழ்க்கையை கையாட்டுகிறது, ஆனால் அதனுள் வாழவில்லை.

நமக்குக் கிடைப்பவை: கர்ப்பகாலத்தில் வெண்ணை சாப்பிடு என்று அம்மா சொன்னாள் என்ற குறிப்பு. மகள் தாயை அன்போடு கிண்டல் செய்வது. வாழ்க்கையில் சலிப்படையாமல் இருக்கும் கணவர். இவை அறிமுகமான தமிழ்க் குடும்ப வகைகள் — நடைமுறை வாழ்க்கையறிந்த மூதாட்டி, நவீன சுதந்திரமான மகள், தளர்வற்ற கணவர். ஆனால் இவர்கள் கோடுகளால் ஆனவர்கள், மனிதர்களால் அல்ல.

புனைவில் இல்லாதது என்னவென்றால் தமிழ் குடும்ப வாழ்வின் குறிப்பிட்ட சமூகத் திரை — இந்த தலைமுறையினர் இடையேயான கணவன்-மனைவி உரையாடலின் குறிப்பிட்ட சட்டகங்கள், புலம்பெயர் தமிழர் அடையாளத்தின் எடை, இல்லத்தில் பழகும் நேரத்தை கட்டமைக்கும் சடங்குகள், உணவு பண்பாட்டின் குறிப்பிட்ட நுணுக்கங்கள், லண்டன் தமிழர் வீட்டின் இயல்பான உரசல்கள். ராகவனும் மனைவியும் பேசும்த் தமிழ் கதையின் உண்மையான இன்பங்களில் ஒன்று — தாளம் உண்மையானது, பேச்சு இதமானது. ஆனால் எளிமைத் தமிழ் மட்டுமே கலாச்சாரச் சிறப்பாகாது. இதையே ராமேஸ்வரத்தில் கடலில் கூட சொல்லிச் செல்லலாம். தார் பாலவனக் குடும்பத்தில் பாலைவனமாக்கலாம். தஞ்சயில் மருதமாக்கி அறுவடையாக்கலாம். காஷ்மீரத்தில் கைலாயம் கட்டலாம்.

கதையென்றால் தனித்துவம் தேவை.

பூமணியோ, இமையமோ வழக்குத் தமிழை எழுதும்போது, அது சித்தரிக்கப்படும் குறிப்பிட்ட சமூக உலகிலிருந்து பிரிக்கவே முடியாதவகையில் பின்னிப் பிணைந்திருக்கும் — சாதி, தொழில், புவியியல், பிராந்திய / நிலப்பரப்பு, பிரத்தியேக சமூகம் — சூழல் மூலம் வார்த்தைகளின் குறிப்பிட்ட எடை துலங்கும். இங்கோ, எளிமைத் தமிழ் உணர்வுப்பூர்வமாக இனிமையாக இருக்கிறது, ஆனால் சமூக ரீதியில் மண் வாசனையற்றும் இங்கிலாந்து பிரதேசத் தொடர்பற்றும் மிதக்கிறது.

திருமணத்திற்கு முன்பு அந்தப் பெண் யாராக இருந்தாள் என்பதையும் நாம் அறியோம். கதையின் மறைமுக வாதம் — அவள் முற்றிலும் உள்ளுணர்விற்கு திரும்பிவிட்டாள், வெளி உலகம் தன்னை கடந்து போகட்டும் என்று விட்டுவிட்டாள் என்பது — அவள் திரும்புவதற்கு முன்பு யாராக இருந்தாள் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும் என்ற தேவையை உருவாக்குகிறது. ஜெயமோகன் இதை தருவதில்லை. அவளுக்கு கடந்த காலமே இல்லை, சொந்தக் குடும்பமில்லை, மனைவி-அம்மா என்பதற்கு முன்பான அடையாளமில்லை. இது வேண்டுமென்றே செய்த கலை முடிவல்ல; இது வெறும் பள்ளம்.

வாசக இடைவெளி தேவை.
குழிகள் தேவையில்லை.

ஆடு தாண்டும் காவிரியாக இருந்தால் சிறுகதை.
பாம்பன் பாலம் தேவைப்பட்டால் கீதை.

Tamil: A Biography by David Dean Shulman

3. வீட்டுக்குள் அடைக்கப்பட்ட பெண்: அழகுபடுத்தப்பட்டது, ஆய்வு செய்யப்படவில்லை

இங்குதான் கதையின் நெறிமுறையும் அழகியலும் மிகத் தீவிரமாக பிரிகின்றன.

அந்தப் பெண் லண்டனில் பதினேழு ஆண்டுகளாக வாழ்கிறாள், கிட்டத்தட்ட வீட்டிலிருந்தே வெளியே வந்ததில்லை. இன்வெர்னெஸ் எங்கிருக்கிறது என்று தெரியாது. பிரிட்டனின் வரைபடத்தையே பார்த்ததில்லை. வெளியே குளிர் இருக்கிறது, அது கர்ப்பத்தில் இருக்கும் குழந்தையை பாதிக்குமா என்று கேட்கிறாள் — இயற்பியல் உலகைப் பற்றிய அவளது புரிதல் உண்மையிலேயே கவலைக்குரியது. பிக்பென் கடிகாரத்தை முதல்முறை பார்த்தபோது, “எதுக்கு அவ்வளவு உயரத்திலே வைக்கணும்? தரையிலே வைச்சா எல்லாரும் நேரம் பாப்பாங்கல்லவா?” என்று கேட்டவள்.

ஜெயமோகன் இவை அனைத்தையும் அன்பான பார்வையில் காட்டுகிறார். சாதனா அவளை “ராணித்தேனீ” என்று அழைக்கிறாள் — கூட்டுக்குள்ளே இருக்கும் ராணி, எங்கும் போகாது, எல்லாமே தேடி வரும் என்று. ராகவன் கண்கள் சிரிக்கின்றன. கதைசொல்லி அவளை இதமாக்கத்தக்கவளாகப் பார்க்கிறார். வழிகாட்டிகூட அவளது நிலை பற்றி எதுவும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை.

ஆனால் கதை என்ன சொல்கிறதோ — அதை அன்பான தொனியுடன் வழங்கினாலும் — அது அந்தப் பெண் கிட்டத்தட்ட இரண்டு தசாப்தங்களாக உலகிலிருந்து தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறாள் என்பதும், அவளுக்கு இருபத்தெட்டு ஆண்டு காலமாக (மன) நலம் குன்றிய அறிகுறி இருக்கிறது, எந்த சிகிச்சையும் பலனளிக்கவில்லை என்பதும், வெளி உலகின் மீது அவளுக்கு இருக்கும் பிடிப்பு மிகவும் குறைவாக இருக்கிறது என்பதும்தான்.

ராகவன் வழிகாட்டியிடம் சொல்கிறார்: “மற்றபடி அவளுக்கு எந்த பிரச்சினையும் இல்லை.” அவளுடைய நிலையில் இருக்கும் ஒருவரைப் பற்றி இப்படி சொல்வது அதிர்ச்சியூட்டும் கூற்று — ஆனால் கதை இதை விசாரிக்கவே மறுக்கிறது.

அந்தப் பெண் பதினேழு ஆண்டுகள் வீட்டுக்குள் மட்டுமே இருப்பது ஆன்மீக உள்நோக்கினால் அல்ல. குறிப்பிட்ட சமூக, உளவியல், உறவியல் நிலைமைகளால் அவள் அப்படி ஆகியிருக்கிறாள் — அந்த நிலைமைகளுக்கு பெயர் இருக்கிறது, வரலாறு இருக்கிறது, விளைவுகள் இருக்கிறது. ஜெயமோகன் இதை ஆன்மீக மர்மம் போல் காட்டுகிறார். உண்மையில் இது கடுமையான agoraphobia ஆகவோ, dissociative நிலையாகவோ, அல்லது — கதை மிகவும் தவிர்க்கும் வாசிப்பு இது — சமூக ரீதியில் இயல்பானதாக ஆக்கிவிட்ட, யாரும் கவனிக்காமல் போன தனிமைப்படுத்தலாகவோ இருக்கலாம்.

கதை அறிமுகப்படுத்தும் “ராணித்தேனீ” உருவகம் ஜெயமோகன் நினைப்பதை விட அதிகம் வெளிப்படுத்துகிறது. ராணித்தேனீ தேர்ந்தெடுத்து கூட்டுக்குள் இருப்பதில்லை. அவள் உயிரியலினாலும் சமூக கட்டமைப்பாலும் உள்ளேயே இருக்கும்படி ஆக்கப்படுகிறாள், ஒரேயொரு பணிக்காக வளர்க்கப்படுகிறாள், அவளது வாழ்க்கை முழுக்க இனப்பெருக்கமும் குடும்பப் பணிகளாலும் வரையறுக்கப்படுகிறது. கதை இதை இனிமையான நகைச்சுவையாகப் பயன்படுத்துகிறது. ஆனால் இது கதையின் மையப் பிரச்சினையாக இருக்கவேண்டும்.

அவளது தொழுவிலடித்தலை அழகுபடுத்துவதன் மூலம் — அதை அழகானதாக, புராணக்கதையின் உருவமாக, உலகம் தாங்க இயலாதவொரு வித உள்ளுணர்வாக மாற்றுவதன் மூலம் — கதை ஆய்வு செய்யப்படவேண்டியதை அறியாமல் காதல்கொள்கிறது. இது கற்பனை சக்தியின் கடுமையான தோல்வி.

Tamil: A Biography by David Dean Shulman

4. மொழிபெயர்ப்பிற்கான எழுத்து: மேற்கத்திய ஆலோகச் சிக்கல்

இந்தக் கதை முழுக்க இந்தியாவிற்கு வெளியே நடக்கிறது. ஒவ்வொரு காட்சியும் லண்டனிலோ இன்வெர்னெஸிலோ நடக்கிறது. மையமான நிலப்பரப்பு — உறைந்த ஸ்காட்டிஷ் ஆறு, குளிர்கால வெளிச்சம், கல் சுவர்கள், விறகு எரியும் கபே — இவை ஐரோப்பியமானவை. மையமான சின்னம் இருப்பது ஸ்காட்டிஷ் ஊரின் பெயர். நம் தமிழ்ப் பெண்ணின் உளவியல் நிலை ஐரோப்பிய புவியியல் வழியாக காட்டப்படுகிறது.

இது தவறல்ல. புலம்பெயர் இலக்கியம் இயல்பாகவே ஏற்றுக்கொண்ட நாட்டின் நிலப்பரப்பில் ஈடுபடுகிறது. ஆனால் சிறந்த புலம்பெயர் எழுத்து — வி.எஸ். நைபால், ரோமேஷ் குணேசேகர, ”துவக்க/ஆதிகால” ஜெயமோகன் — கலாச்சாரங்களின் சந்திப்பு உராய்வை, பரஸ்பர ஒளியூட்டலை, பிரத்தியேக நுண்ணறிவை உருவாக்கும். தாய்நாடு அழிக்கப்படுவதில்லை; அது புதிய இடத்துடன் உரையாடல் நடத்தும்.

“இன்வெர்னெஸ்” கதையில் இந்தியா இல்லை. தமிழ்நாடு இல்லை. கதையின் நிலப்பரப்பு, உணர்வு, சின்னக் கட்டமைப்பு — இவை அனைத்தும் எந்த கலாச்சார மொழிபெயர்ப்பும் இல்லாமல் மேற்கத்திய வாசகருக்கு முழுமையாக கிடைத்துவிடும். எளிய தமிழ் உரையாடல், கர்ப்பகாலக் கவலைகள், அம்மா சொல்லிய ஆலோசனை — இவை கட்டமைப்புக்கு அச்சாணியாக இல்லாமல், பூச்சாக செயல்படுகின்றன.

Granta அல்லது The White Review போன்ற ஆங்கில இதழின் இலக்கிய வாசகர் இந்தக் கதையை இப்படி படிப்பார்: ”நவீன ஐரோப்பாவில் தத்தளிக்கும், ஆன்மீக இழப்பில் இருக்கும் மர்மமான இந்தியப் பெண், பொருள் உலகத்துடன் ஈடுபட இயலாமல், இறுதியில் உறைந்த நிலப்பரப்பில் கரைந்துவிடுகிறாள். ”அவளது அடைப்பு சமூக நிலையாக வாசிக்கப்படுவதில்லை — ஆன்மீக உயர்வாக, பாசக்கயிறு மோட்சமாகவே மெய்க்காட்டப்படுகிறது. இந்த வாசிப்பை சாத்தியமாக்கி இருக்கலாம் — எனினும், கதை அதை வீறுகொண்டெழுந்து உணரச் செய்யும் உழைப்பை விதைக்கவில்லை.

ஜெயமோகனின் மிகச் சிறந்த எழுத்து மேற்குத் தொடர்ச்சி மலையில், கன்னியாகுமரி மாவட்டத்தின் கடற்கரை சமவெளிகளில், அவர் தசாப்தங்களாக வாழ்ந்த சமூகங்களின் குறிப்பிட்ட சமூகச் சூழலியலில் வேரூன்றியது. விஷ்ணுபுரம் ஐரோப்பிய சட்டகங்களால் தாங்க இயலாதது. ஏனென்றால் அது தன் குறிப்பிட்ட இடம், வரலாறு, உணர்வு ஆகியவற்றில் ஆழமாக வேரூன்றியது. “இன்வெர்னெஸ்” மேற்குலகிற்கு தூக்கிச் செல்லக்கூடியது. அது நன்கு பயணிக்கிறது. எதைத் தியாகம் செய்து பெயர்வுத்திறன் செதுக்கப்பட்டது என்பது கேள்விகளைத் தூண்ட வேண்டும்.


5. ஆராய்ந்த இடத்தின் அடிப்படையின்மை

இன்வெர்னெஸின் விளக்கங்கள் — அதன் வரலாறு, புவியியல், ஹீப்ரூ நெஸ், வெப்பநிலை அளவீடுகள் — கிட்டத்தட்ட முழுக்க வழிகாட்டியின் விளக்க உரை வழியாக வழங்கப்படுகின்றன. இது முக்கியமான நுட்ப சிக்கல்.

கதாசிரியர் தன் கதைக்கான களத்தை வாழ்வதன் மூலம் அல்ல, ஆராய்ச்சி மூலம் அறிந்தால், அந்த அறிவு புனைவில் உணர்வாக அல்ல, தகவலாக வந்து சேரும். வழிகாட்டியின் இன்வெர்னெஸ் பற்றிய விளக்கங்கள் களஞ்சியத் தன்மை கொண்டவை — 2000 ஆண்டில் நகரமான தகவல், Inverness-shire என்ற மாவட்டப் பெயர், Scottish Highlands Authority தலைமையிடம் — இவை வாழ்ந்த அறிவாக அல்ல, படித்த அறிவாக தெரிகின்றன. உறைந்த ஆறும் குளிர்கால வெளிச்சமும் திறம்படவே விளக்கமாக இருந்தாலும், தொகுக்கப்பட்ட காட்சி குறிப்புகளிலிருந்து வந்தது போல் தெரிகின்றன — அனுபவிக்கப்பட்டவை அல்ல.

இதை காடு நாவலில் ஜெயமோகன் வனத்தை காட்டும் விதத்துடன் ஒப்பிட்டுப் பாருங்கள். அங்கு, தாவரங்களும் ஒலிகளும் வெளிச்சமும் நீரின் குறிப்பிட்ட தன்மையும் சுற்றுச்சூழல் உடலில் பதிவாகும் விதம் — இவை உள்ளிருந்து அறியப்பட்டவை. நிலப்பரப்பு விவரிக்கப்படவில்லை; அது வாழப்படுகிறது. “இன்வெர்னெஸ்” கதையில், ஸ்காட்டிஷ் நிலப்பரப்பு சின்னமாக பயன்படுத்தப்படுகிறது (உறைந்த ஆறு = உறைந்த உள்ளுணர்வு) ஆனால் வாழப்படவில்லை. ஏ.ஐ. தயாரித்த படம் போல். பனி என்னும் கருத்தாக்கம் மிஞ்சி விடுகிறது. அதன் குளிர் உடலில் தட்டுவதில்லை.

கதையின் மையமான நாடகீய தருணம் — இருபத்தெட்டு ஆண்டுகளாக தன்னுள்ளே வாழ்ந்த வார்த்தையின் இடத்தில் ஸ்தூல உடலில் உண்மையை அந்தப் பெண் தரிசிப்பது — அந்த வார்த்தையின் இடம் சக்தியாக நம்முள் உறையும் அவசியம் தேவைப்படுகிறது. இன்வெர்னெஸ் என்ற நகரம் வெறும் தொகுப்பாக இருந்தால், அந்தப் பெண்ணின் உள் இன்வெர்னெஸுக்கும் வெளி இன்வெர்னெஸுக்கும் இடையிலான மோதலுக்கு எந்த வலுவும் இல்லை.


6. கட்டமைப்பு சிக்கல்கள்

இரண்டு கூடுதல் கவலைகளும் கவனிக்கப்படவேண்டியவை.

காலக்கணக்கின் முரண்பாடு: வழிகாட்டி அந்தப் பெண்ணுக்கு எவ்வளவு காலமாக இந்த நிலை என்று கேட்கிறான். ராகவன் “இருபத்தெட்டு ஆண்டுகள்” என்கிறார். மகளுக்கு பதினாறு வயது. அவள் லண்டன் வந்து பதினேழு ஆண்டுகள். அப்படியென்றால் இந்த பித்தநிலை அவள் பிரிட்டன் வருவதற்கு பதினோரு ஆண்டுகள் முன்பே தொடங்கியிருக்கிறது, மகள் பிறப்பதற்கு பன்னிரண்டு ஆண்டுகளுக்கும் முன்பே. இது உண்மையிலேயே சுவாரஸ்யமானது — “இன்வெர்னெஸ்” என்ற வார்த்தை தனக்கு தெரியும் என்று உணர்வதற்கு முன்பே அவளை ஆட்கொண்டிருக்கிறது, கூடுதலாக இந்தியாவில் நடந்த ஏதோவொரு சம்பவத்திலிருந்து. ஆனால் கதை இதை சிறிதுகூட வளர்க்கவில்லை. இது முக்கியமான கதை மர்மம் — ஜெயமோகன் மறந்துவிட்டாரா அல்லது வேண்டுமென்றே ஒதுக்கினாரா என்று தெரியாது. எப்படியிருந்தாலும் இது வாசகனுக்கு சிக்கல்.

முடிவின் இயந்திரத்தனமான வட்டம்: சாதனா வருகிறாள், “இன்வெர்னெஸ்” என்கிறாள். ராகவன் திரும்பத் திரும்ப சொல்கிறார். அந்த வார்த்தை தொற்றுநோய் போல் அல்லது ஆன்மீக பகிர்வாக அடுத்த தலைமுறைக்கும் கணவருக்கும் பரவுகிறது. இது கட்டமைப்பு ரீதியாக புத்திசாலித்தனமானது ஆனால் உணர்வு ரீதியாக வெறுமையானது. ஏனென்றால் அந்த வார்த்தை என்ன என்பது ஆழமாக நிறுவப்படவில்லை, எனவே அதன் பரவல் வெறும் வடிவமாகவே நிற்கிறது. உள்ளது — உண்மையான இன்வெர்னெஸ் — தப்பிக்க முடியாதது என்ற கருத்தை இறுதி கோடிட்டுக் காட்டுகிறது, ஆனால் அந்த உள்ளம் ஒருபோதும் காட்டப்படவில்லை என்பதால், சைகை வெறும் வடிவ சைகையாக மட்டுமே நிற்கிறது.


கனவுருப்புனைவு

துவக்கநிலை எழுத்தாளரின் படைப்பெனில் “இன்வெர்னெஸ்” உண்மையிலேயே சுவாரஸ்யமான மையக் கருத்துடைய கதை — ஒரு ஊரின் பெயர் உள்ளுணர்வின் நிலையாக மாறுவது, வார்த்தைக்கும் உலகிற்கும் இடையிலான இடைவெளி — ஆனால் அது தனது சாத்தியத்தை அடையவில்லை. ஏனென்றால் அது உள்ளுணர்வின் கடினமான வேலையை, அக-கலாச்சார தனித்தன்மையை, தார்மீக சுயபரிசோதனை செய்து நெறிமுறை ஆய்வாக்க மறுக்கிறது.

கதையின் தமிழ் கதாபாத்திரம் அடைக்கப்படுகிறாள், இறுதியில் உட்கொள்ளப்படுகிறாள் — கதை இதை அழகாகக் கண்டறிகிறது. இன்னும் தைரியமான இந்தக் கதையின் வடிவம் இதை *அதிர்ச்சியூட்டுவதாக* கண்டறியும். அவள் இந்த நிலைக்கு எப்படி வந்தாள், அதற்கு அவள் என்ன விலை கொடுத்தாள், அவளுடைய அடைப்பை உருவாக்கிய குறிப்பிட்ட சமூக உலகை பொய்மையற்ற நேர்மையுடன் காட்டுவதற்கான தேவை — இதையெல்லாம் தமிழ் இலக்கியம் தன் சிறப்பான தருணங்களில் எப்போதும் கையாண்டிருக்கிறது: புதுமைப்பித்தனிலிருந்து அம்பை வரை.

இப்படியிருக்க, “இன்வெர்னெஸ்” மேற்கத்திய இதழ்களுக்கும் மொழிபெயர்ப்பு சந்தைக்கும் பயணிக்கக்கூடியது — ஏனென்றால் அது பயணிக்கும்படி தன்னை போதுமான அளவு இலகுவாக்கிக் கொண்டது. பயணிப்பதில் அது என்ன கைவிட்டது என்றால் வலுவாக செதுக்கிய கதாபாத்திர பலத்தை, வேரூன்றிய நிலையை, சமூக ரீதியில் ஆய்வு செய்யப்பட்டதை. அந்த எடைதான் இலக்கிய எழுத்து என்பதை வெறும் மனநிலை சித்திரத்திலிருந்து வேறுபடுத்தி நிலைநிறுத்துகிறது.


ஜெ.மோ. தளத்தில் வெளியான கடிதங்கள்:

ஏ. ஐ. உதவியுடன் எழுதியது

மேலும்:

ஒருநாள் வீட்டை ஆராய்ந்தபோது வேதப்புத்தகத்தின் ஆங்கிலப் பிரதியொன்று கிடைத்தது. புத்தகத்தின் இறுதிப் பக்கங்களில் கூத்ரீக்கள் – அதுதான் அவர்களுடய ஆரம்பப் பெயர்- அவர்களுடைய வரலாற்றை எழுதியிருந்தனர். அதன்படி இன்வெர்னெஸ் (Inverness) என்ற இடத்திலிருந்து வந்தவர்கள் ஆகிறார்கள். பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கக்காலத்தில் அவர்கள் கூலிகளாக (peons) வந்தவர்கள் என்பதில் ஐய்யங்களில்லை. அதன்பிறகு உள்ளூர் சிவப்பிந்திந்தியர்களுடன் அவர்கள் இனம் கலந்துவிட்டது. 1870க்குப் பிறகு அவர்களைப் பற்றிய வேறுதகவல்களில்லை. ஆங்கிலத்தை மறந்துபோனார்கள். 

https://www.vallinam.com.my/issue21/story1.html

StoryJudge – ஸ்டோரி ஜட்ஜ்: தற்கால தமிழ் இலக்கியம்

சர்ச்சைகளுக்கு இங்கு பஞ்சமே இல்லை.
சிறுகதைகளுக்கும் இங்கு கொட்டிக் கிடக்கிறது.

வாசிப்பவர்கள்? அரிது.
வாசித்ததை நயம்பட விமர்சிப்பவர்கள்? அரிதினும் அரிது!

சென்ற ஜனவரி மாதத்தில்:
வாசகசாலை – 18 கதைகள்
சொல்வனம் – 5
மயிர் – 8
வல்லினம் – 10
பதிவுகள் – 3
நடுகல் – 10

இவை தவிர கனலி இதழில் – “Fate of a Man” (Судьба человека; சுட்பா செலோவெகா) சோவியத் ரஷ்ய எழுத்தாளர் மிகைல் ஷோலோகோவ் எழுதிய சிறுகதை மொழியாக்கம் வந்திருக்கிறது.

காலச்சுவடு ஜனவரி 2026 – 313 இதழில்
1. மழை நிற்கப் போவதில்லை: பெருந்தேவி
2. குறளி : யுவன் சந்திரசேகர்
3. தொலைகின்ற இடம் : கோகுலக்கண்ணன்

– ஜனவரியில் வெளியாகாத இதழ்கள்: யாவரும், அழிசி
– சிறுகதைகள் வெளியிடாத இதழ்கள்: அகழ்
– வெளியாகி இருக்குமோ என்று தேடிய தளங்கள்: நடு வெப், அம்ருதா, உயிர்மை
– இன்னும் பார்க்க வேண்டிய இதழ்கள்: குவிகம், பண்புடன், நீலி, திண்ணை, அந்திமழை, கணையாழி, கீற்று
– அச்சில் மட்டுமே இருந்திருக்கக் கூடிய இதழ்கள்: தமிழ்வெளி, நீலம், உயிர் எழுத்து, கல்குதிரை

இது தவிர வேறு இருக்கலாம். இருக்கும்.
அவற்றைச் சொல்லுங்கள்

இவ்வளவும் எதற்கு?

ஸ்டோரிஜட்ஜ் என்றொரு முயற்சி.
வரும் கதைகளை எல்லாம் வாசிப்பது.
வாசித்ததில் பிடித்ததை விவாதிப்பது.
கூடவே, ஊறுகாயாக சமூக ஊடக விவகாரங்களைத் தொட்டுக் கொள்வது.

சில கேள்விகளுக்கு பதிலளிக்கப் பார்ப்பது:
அ) புகழ் பெற்ற அல்லது நிறைய கவனிக்கப் பெற்றவர்கள் யார்? அஜிதன், ஜெயமொகன், ஜி.எஸ்.எஸ். வி நவின், சுப்ரபாரதிமணியன்
ஆ) ஒரே எழுத்தாளரே பல பல இடங்களில் இடம் பெற்றிருக்கிறாரா? டீன் கபூர்
இ) குழந்தைகளுக்கான இலக்கியம் – சிறுவர்களுக்கான கதைகள் எப்படி இருக்கின்றன?
ஈ) மொழியாக்கங்கள், மொழிபெயர்ப்புகள் – எந்த மொழி, எவர் தமிழாக்கம் செய்தார், யாரின் படைப்பு?
உ) பெண் எழுத்தாளர்கள் உண்டா? எத்தனை பேர்? – ஸ்ரீரஞ்சனி, கமலதேவி, லாவண்யா சுந்தர்ராஜன், றின்னோஸா, மனுஷி, அருணா சிற்றரசு, ஷைலஜா, தன்யா, லதா , மலர்விழி மணியம்

இதெல்லாம் உங்களாலும் செய்ய இயலும்.
வரும் வாரங்களில் நீங்களும் ஸ்டோரி ஜட்ஜ் விமர்சன அரங்கில் பங்கெடுக்க வாருங்கள்.
கை கொடுங்கள்.

செப்பும் வினாவும் வழாஅல் ஓம்பல்

தமிழில் கடித இலக்கியம் பிரபலம்.
கி.ரா.வுக்கு கு. அழகிரிசாமி எழுதிய கடிதங்கள், அம்பேத்கரின் கடிதங்கள், வ.உ.சி. காந்தி கடிதப் போக்குவரத்து, பகிரங்கக் கடிதங்கள், கழக உடன் பிறப்புகளுக்கு எழுதிய கடிதங்கள் என்று பெரிய பட்டியல்.

அது போல் சமூக ஊடகங்களில் வெளியான சுவாரசியமான உரையாடல்கள், பின்னூட்டங்கள், கவுண்ட்டர் கொடுத்து போடும் அதிரடி பதில்கள் – போன்றவற்றை வருடா வருடம் ஒருவர் தொகுத்து நூலாக்க வேண்டும்.

விகடன் வலைபாயுதே போல் தெரிந்தவர்களை மட்டும் கவனிக்காமல், (எந்தப் பத்திரிகை) வலைப்பேச்சு போல் தற்கால வம்புதும்புகளை செய்தித் துணுக்கு போல் சேகரிப்பதோடு நிற்காமல்…

அந்தந்த வாரத்தில் வலைஞர்களை

  1. கொதிப்புயரச் செய்து கொந்தளிக்க வைத்த நிகழ்வுகளுக்கான பன்முகப் பார்வை
  2. கவனம் பெற்ற நூல்; விமர்சனத்திற்குள்ளான புத்தகம்
  3. மீம்; கிண்டல் படங்கள்; கேலிச் சித்திரங்கள்
  4. நாலே வார்த்தையில் நறுக்குத் தெறித்தது போன்ற பின்மொழி
  5. வாதங்கள், பிரதிவாதங்கள்; காரசாரமான கருத்து வசனங்கள்
  6. கம்பீர் முதல் கவின் வரை – பிரமுகர் தகவல் குறித்த முத்துகள்
  7. மாமல்லன் போல் ஒரு சிக்கலை மட்டும் ஒரு தரப்பில் இருந்து கையில் எடுக்காத நடுநிலை ஸ்ட்டேஸ் க்வோ மொண்ணைத்தனம்

ஒரு வருடத்திற்கு ஒரு வெளியீடு.
கிண்டில் + அச்சு நூல்.
அதிக பட்சம் 250 பக்கங்கள்.
தமிங்கிலம் – எனவே ஆங்கிலமும் பரவலாக எட்டிப் பார்க்கும்.

பிரிட்டானிக்கா, மலையாள மனோரமா இயர் புக் எல்லாம் அந்தக் காலம்.
இந்தத் தொகுப்பு ஜென்-ஆல்ஃபா, ஜென்-Z காலம்.

தலைப்பிற்கான உரை : 
செப்புதலையும் வினாவுதலையும் வழுவாமற் போற்றுக. (நன்றி: தமிழ் எண்ணம்: தொல்காப்பியரின் ‘வினாவும் செப்பும்’: கருத்தாடல் நோக்கு )

சொல்வனம் #312

புதிய சொல்வனம் இதழில் பல முக்கிய ஆக்கங்கள் இருக்கின்றன. முகப்புக் கட்டுரையை விட்டுவிடலாம். எழுதியவரும் எழுதப்பட்டவரும் சொல்வனம் ஆசிரியர் குழுவில் தொடர்ந்து காத்திரமாகப் பங்களிப்பவர்கள். பத்து சிறுகதைகள். ஒவ்வொன்றையும் தனித்தனியாக பின்னொரு ரத சப்தமி அன்று அறிமுகம் செய்யலாம். ஐந்தாறு தொடர்கள்; இரண்டு வாசகர் கடிதங்கள் போன்றவற்றையும் ‘பார்த்த ஞாபகம் இல்லையோ’ என எங்கேனும் ஏற்கனவே எழுதியிருப்பேன்.

312ஆம் சொ.வ. இதழில் என்னைக் கவர்ந்தவை:
1. செமிகோலன் எழுதிய கவிப்பித்தனின் சாவடி தொகுப்பிற்கான எண்ணங்கள்
2. வெங்கட்ரமணன் எழுதிய கிணற்றிலிருந்து வெளிவரும் உண்மை

முதல் பதிவு நேர்மையாக சக காலப் படைப்பாளியின் ஆக்கங்களை அணுகுகிறது. ஒவ்வொரு புத்தகக் கண்காட்சியிலும் பத்து, பதினைந்து புதிய எழுத்தாளர்களின் புத்தம்புதிய நாவல்களையும் தொகுப்புகளையும் வாங்கினாலும், எவரைக் குறித்தும் பதிவு செய்வதில்லை. அந்தக் குறையை அரைப்புள்ளி நீக்குகிறார். அதற்காக “வாழ்க!” (“தொடர்க”வும் கூடவே சொல்லி வைக்கிறேன்).

கனடா வெங்கட் எழுதிய கட்டுரையை அலுவலில் திறந்து விடாதீர்கள். அக்கம்பக்கம் பார்த்துப் படியுங்கள். (சரோஜாதேவி புத்தகம் என்று ராம்பிரசாத் எழுதியதைப் பொதுவிடங்களில் பலர் பார்க்க புரட்டுவதில் எந்த ஆபத்தும் இல்லை). க.வெ. (இவர் டொரொண்டோ பக்கம் இருப்பதால் என்னைப் போன்றோரால் டொரொண்டொ வெங்கட் என்றும் அழைக்கப்படுகிறார்) தத்துவத்தில் துவங்கி, ஓவியத்திற்கு பாய்ந்து கர்ண பரம்பரைக் கதைகளைச் சொல்லி சிறுவாணியாகப் பாய்ந்தோடுகிறது.

உண்மையாக ஓவியத்தைப் பார்த்தால் இளமையாக இருக்கிறது. இன்றைய டிக்டாக் காலத்தில் போலி முகத்தைப் பொருத்தி உலா வருவது சகஜம். அந்தக் காலத்தில் செயற்கை நுண்ணறிவு இல்லாமலே சொந்தமாக வேஷம் போட்ட பொய்யை எல்லோரும் தீட்டிக் கொண்டிருக்க, உண்மையை படம் வரைந்தவரின் கதையைப் படியுங்கள்.

அனேக அகமுடையார்: யானம் சிறுகதை விமர்சனம்

ஜெயமோகன் அவ்வப்போது சிறுகதைகளை வெளியிடுவது மகிழ்ச்சியாக இருக்கிறது. அவரின் வயதில் அல்லது அவரைப் போன்ற ஆளுமையை அடைந்த பிறகு அவரின் சமகாலத்தவரோ, அவருக்கு முந்தைய இலக்கிய ஜாம்பவான்களோ அத்திப் பூத்தது போலத்தான் சிறுகதைகள் எழுதினார்கள். அவர்கள் நாவல் எழுதுவதில் மட்டுமே கவனம் செலுத்தினார்கள். அல்லது பேசாமல் இருப்பதே கௌரவத்தைக் காப்பாற்றும் என்று அமைதி காத்தார்கள்.

நான் நினைத்தது – ஜெயகாந்தன், சுந்தர ராமசாமி, வண்ணதாசன், வண்ணநிலவன், எஸ். ராமகிருஷ்ணன் போன்றோர். சுஜாதா மட்டும் விதிவிலக்கோ!?

இந்த எண்ணம் தவறுதலாக இருக்கலாம். இருபதுகளில் துவங்கி அறுபது வயது தாண்டியும் எந்த எழுத்தாளராவது தொடர்ச்சியாக சிறுகதைகளை தொண்ணூறுகளில், 2000களில் வெளியிட்டார்களா?
தீபாவளி சிறப்பிதழ்கள் தவிர்த்து அதற்கான பத்திரிகைகள் இருந்ததா என்பதைக் குறித்த என் எண்ணத்தையும் திருத்தவும்.

நிற்க.

யானம் (சிறுகதை) | எழுத்தாளர் ஜெயமோகன் (jeyamohan.in)

இந்தப் பதிவு இலக்கியகர்த்தாக்களின் பிற்கால படைப்பூக்கம் பற்றியது அல்ல. அமெரிக்காவில் வசிக்காத ஒருவர் அமெரிக்காவைப் பற்றி புனைவு எழுதலாமா என்பதைப் பற்றியும் அல்ல. எனினும், அதையும் நோக்குவோம்.

ஒரே ஒரு மேற்கோள்: “என்ஜாய் பண்றாங்களோ இல்லியோ, இது ஸ்கூலிலே பிரெஸ்டிஜ் இஷ்யூவா இருக்கு”

பொத்தாம்பொதுவாக ஜல்லியடிப்பது வாத்தியாரின் வித்தை. ஜெயமோகனின் சிறுகதைகளில் ஒற்றை வரி தீர்ப்பு கொடுத்து மொத்த சமுதாயத்தை சுருக்குவதும் அவ்வப்போது செய்வதுதான். இதிலும் சாமர்த்தியமாக கதாபாத்திரத்தின் வசனமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. இதே போல் கதை நெடுக மனைவியும் கணவனும் கனமான உரையாடல்களில் ஈடுபடுகிறார்கள்.

கார் என்பது எல்லைகளில்லா சுதந்திரம். நான்கு சுவருக்குள் அடைபட்டுக் கிடக்கும் வீட்டில் இருந்தும், உடன் இருக்கும் நபர்களிடமிருந்தும் கட்டற்ற விடுதலை. பிடித்த பாடல். நினைத்த வேகம். இலக்கற்ற பாதை. அமெரிக்காவில் ஆண்டி முதல் அரசர் வரை எவரும் எளிதில் வாங்கி, உடனடியாக ஊர்ச்சுற்ற, இல்லமாக குடியிருக்க என்று நினைத்த மாதிரிக்கு பயன்படுத்தும் மூலமுதலாதாரப்பொருள்.

யானம் சிறுகதையில் நான்கைந்து நல்ல பொறிகள், துவக்க கண்ணிகள் இருக்கின்றன:
1. அந்தத் தற்கொலை எண்ணம்
2. பச்சை விளக்கிற்காக காத்திருக்கும்போது(ம்) பக்கத்து வண்டிகளை எட்டிப் பார்ப்பது
3. விடுமுறை விட்டால் காரை எடுத்துக் கொண்டு எங்காவது கிளம்புவது

அதை விட அந்த இடங்களை உளவியல் ரீதியாக தீர்க்கமாகவோ சம்பவங்களின் கோர்வையில் ஆழமாகவோ உள்ளே செல்லாமல் ஹெலிகாப்டரில் பறக்கும் அவசரத்துடன் தாண்டி விடுகிறார். அதை விட ஆபத்தான பிரதேசம் – இந்திய சாலைகளையும் போக்குவரத்தையும் அமெரிக்க மக்களோடும் இயந்திரங்களோடும் ஒப்பிடும் பிரதேசங்கள். அவை இன்னும் தேய்வழக்காக அலுமினிய பிரகாசத்துடன் மின்னிடுகின்றன.

காரில் இருக்கும் விடலைகளும் பாந்தன்களும் இன்றைய காலத்தில் செல்பேசியில் மூழ்குவார்களேத் தவிர இந்த மாதிரி தத்துவபூர்வமான விவாதங்களுக்குள் செல்லமாட்டார்கள். கதைதானே? ஜெயமோகன் கற்பனைதானே? அரட்டை அடிக்கக் கூடாதா என்ன!?

எனினும், கதையின் அடிநாதம் முக்கியமான ஒன்றைச் சுட்டுகிறது.

இந்தக் காலத் தம்பதியினருக்கு விவாகரத்தில் விருப்பமில்லை. இல்லறமும் போரடிக்கிறது. ஒருவனுக்கு ஒருத்தி என்னும் பத்தாம்பசலி கொள்கைகளிலும் கிஞ்சித்தும் நம்பிக்கை இல்லை.

அவர்கள் திறந்த வாழ்க்கையை விரும்புகிறார்கள். அன்றாடம் ஒரேயொருவடன் தாம்பத்தியம் வைத்துக் கொள்வதினால் வரும் அலுப்புகளை உணர்ந்தவர்கள்.

”நியு யார்க்கர்” கட்டுரையில் இருந்து நறுக்:

So many rules! “American Poly” reveals Americans to be very American. Good Puritans, we made marriage into work and non-monogamy into even more work—something that requires scheduling software, self-help manuals, even networking events. Presumably, participants could at least skip the icebreakers.

https://www.newyorker.com/magazine/2024/01/01/american-poly-christopher-gleason-book-review-more-a-memoir-of-open-marriage-molly-roden-winter

”அன்புள்ள அல்லி” கேள்வியில் இருந்து இன்னொரு மேற்கோள்:

My nesting partner of a decade and I opened our relationship about four years ago, and for the first three years, we were ethically non-monogamous, but not poly. We’re pretty parallel, but we’re recently trying garden party style for big events… the polycule… metamour…

https://slate.com/human-interest/2024/01/birthday-plan-relationships-sex-advice.html

மணிரத்னம் ஓகே கண்மணி எடுத்தது போல், அனேக அகமுடையார் கொள்கைகளை ஜனரஞ்சகமாக்க இன்றைய கல்கித்தனமான கதை. மணி ரத்தினம் சினிமா போல் இதுவும் ஒட்டிக்கோ/கட்டிக்கோ வேட்டியாக பல்லிளிக்கிறது.

உங்கள் வாசிப்பில் என்ன உணர்ந்தீர்கள்?

Solvanam Stories – 292nd Issue

சொல்வனம் இதழின் 292வது வெளியீட்டில் நிறைய கதைகள் வந்திருக்கின்றன.

ஒவ்வொன்றையும் பற்றி எனக்குத் தோன்றியவை:

  1. 1/64, நாராயண முதலி தெரு: சித்ரூபன் எழுதியிருக்கிறார்

அந்தக் கால நினைவுகள். சொல்வனம் என்றாலே நொஸ்டால்ஜியா என்னும் தேய்வழக்கிற்கு பொருத்தமான ஆக்கம். அவ்வப்போது, அந்தக் கால ‘ரெட்டை வால் குருவி’, ‘அழியாத கோலங்கள், ‘கோகிலா’ என்று பழைய படங்களைப் பார்ப்பேன். இதுவும் அது போன்ற ஒண்டுக் குடித்தன பதிவு. இங்கு சென்றிருக்கிறேன். பார்த்திருக்கிறேன். பழகியிருக்கிறேன். அனுபவித்திருக்கிறேன். அதை சிறப்பாக மலரும் நினைவுகள் கொடுக்கிறார்.

  1. இப்படியும் ஒரு நாள், ஒரு கதை: மோஹன் ஹரிஹரன் எழுதியிருக்கிறார்

இது “Everything Everywhere All at Once” போன்று எல்லாமுமாக இருக்கிறது.
அதி புனைவா… உண்டு
அறிவியல் புனைவா… உண்டுங்க அம்மா
நிஜ சம்பவங்கள்… உண்டு ஐயா
கட்டுரை தளத்தில் தகவல்கள்… அதுவும் உண்டு
இதையெல்லாம் கிண்டலடிக்கும் சுய எள்ளல்… எல்லாம் உண்டு

  1. ஒரு குழந்தையும் இரு உலகங்களும்: விக்னேஷ்

இது சிறப்பான ஆக்கம். மனதில் பதியும் சித்திரங்கள். பாத்திரப் படைப்பு. இருண்மையைக் கோரும் விவரிப்பு. நல்ல படைப்பு!
வாழ்த்துகள்!!

  1. Femino 16: சப்னாஸ் ஹாசிம்

இதை விமர்சித்தால் மாட்டிக் கொள்வீர்கள். முதலில் கதை புரிந்ததா என்று கேட்டுக் கொள்ளுங்கள்… அப்புறம் பெண்ணியம், அரசியல் சரிநிலை, இஸ்லாம் மதம் – வேண்டாம்… மாட்டிக்குவேன். விளங்கிக் கொண்டு வருகிறேன்.

நீங்கள் படித்துப் பார்த்து உங்களுக்குப் புரிந்ததை சொல்லுங்கள்

  1. சுத்தமும் ஐரீனும்: பிரதீப் நீலகண்டன்

கோகுலம் படித்த திருப்தி கிடைக்கிறது. குழந்தைகள் பகுதி துவங்கியிருப்பதை அறிவிக்க மறந்து விட்டார்கள் #Solvanam

  1. ஒரு தபலா, சாரங்கி, கே.கே மற்றும் நான்: தேஜூ சிவன்

தமிழ் தொலைக்காட்சிகளின் சீரியல் பார்த்த நிறைவைத் தரும் நெகிழ்வான உருக வைக்கும் கண்ணீர் காட்சிகள் நிறைந்த சிந்து பைரவி. ‘சுந்தரி’, ‘எதிர் நீச்சல்’, ‘மிஸ்டர் மனைவி’, ‘இனியா’, ‘கயல்’, ‘இலக்கியா’, ‘அன்பே வா’, ‘அருவி’ எல்லாம் பார்த்து கொலை வெறியில் உருவாகிய கதை.

  1. பனிக்காலத்தின் பகல்: ராஜேஷ் வைரபாண்டியன்

தேவலாம். முடிவை நோக்கி ஓடும் கதை. Everything Everywhere All at Once பார்த்ததன் மல்டிவெர்ஸ் விளைவு!

தமிழில் இவ்வளவு பேர் தீவிரமாக இலக்கியத்தை பேணுவது ஆரோக்கியமான விஷயம். பல்சுவையும் உண்டு. உட்பொதியும் கிடைக்கிறது.

உங்களுக்கு எந்தக் கதை கவர்ந்தது?

Best Allegory Novels in Tamil

இந்தக் கேள்வி என்னுடைய வலைப்பதிவு ஒன்றுக்கு பின்னூட்டமாக வந்திருந்தது:

“i’ve been reading tamil fiction for a couple of years now and your blog has been useful for book recommendations;
can u please make a list of allegorical novels in tamil”

நான் ஏழெட்டு வருடமாக என் வலைப்பதிவில் தொடர்ச்சியாக எழுதவில்லை என்பது முதல் அதிர்ச்சி. என்னிடம் வந்து கேட்கிறார் என்பது “இன்னும் கூகுள், கோரா போன்ற தேடுபொறிகளும் கேள்வி – விடை வலையகங்களும் வயதிற்கு வரவில்லை,” என்பதை உணர்த்திய முதிர்ச்சி.

எந்தக் கேள்வி கேட்டாலும் அதற்கு பதில் வைத்திருப்பது ஒரு கன்சல்டண்ட் மனோபாவம். தனக்குத் தெரிந்ததை வைத்துக் கொண்டு தெரியாதவற்றை உணர வைப்பது இலக்கியவாதி மனோபாவம். இரண்டும் அமையைப் பெற்றவன் நான். சந்தர்ப்பத்தை நழுவ விடவில்லை.

கூகிள் மூலமாக “தமிழில் அலிகரி கதைகள்” எனத் தேடும்போது என் பதிவு முதல் பத்தில் வந்து நின்றிருக்கும். ஆனால், நான் எழுதும் மேட்டருக்கும் வைக்கும் தலைப்புக்கும் உள்ளடக்கத்திற்கும் எந்த சம்பந்தமும் இருந்திருக்காது. எம்.ஃபில். மாணவர் குழம்பியிருப்பார். பி.எச்டி. ஆய்வுக்கு எதை எடுப்பது, ஆராய்ச்சிக்கு எப்படி முட்டுக் கொடுப்பது என்று பிரமித்திருப்பார்.

எனவே, அதை முகாந்திரமாக வைத்து #சொல்வனம் தளத்தில் கேள்விக்கு விடையளித்திருக்கிறேன்.

இவற்றை அதிகதைகள் என்று சொல்லலாம். எழுத்தில் சொல்லப்பட்டதற்கு மீறி இன்னும் பலவற்றை உணர்த்துவதால்…

இந்தப் படைப்புகள் நம் எல்லோருக்கும் பழகிய “ஆக்கம்” என்னும் வடிவத்திற்குள் அடங்காதவை. இதற்கு நெடிய பாரம்பரியம் உண்டு. புத்தர், ஈசாப், மஹாபாரதம், அக்பர்-பீர்பால், வேதாளக் கதைகள், பாட்டி சொன்ன கதைகள் என நிறைய முன்னோடிகள் உண்டு. இந்தக் கால ஆளூமைகள் என்றால் இத்தாலோ கால்வினோ, ஃபோர்ஹே, காஃப்கா, மிரோஜெக் என அடுக்கிப் போகலாம்.

“நவீனத் தமிழலக்கிய அறிமுகம்” நூலில் ஜெயமோகன் எழுதிய “இலக்கியச் சூழலின் போலி பாவனைகள்” என்பதையும் படித்து விடுங்கள்!

பொன்னம்மாள் பக்கம் in தீபம்

நன்றி: http://www.kalkionline.com/deepam/2012/sep/20092012/deepam0901.php

Tamil Books Wishlist – 2012 தமிழ்ப் புத்தகங்கள்: ஆலோசனை (aka) விழைப்பட்டியல்

சமீபத்திய புத்தகங்களில் எதை வாங்க வேண்டும் என்று ஆசை பிறக்கிறது?

என்னிடம் இருக்கிறது தவிர, எந்த நூல்களை தருவிக்க ஆர்வம் கிடைக்கிறது?

இணையத்தில் உள்ள புத்தகக் கடைகளில் மேய்ந்தால் எவை ‘என்னை வாங்கு’ என்று அழைக்கிறது?

இதில் பிரபலமான எழுத்தாளர்கள் நிச்சயம் இருப்பார்கள்; தவிரக்க வேண்டிய நூலாசிரியர்கள் தவற விடப் பட்டிருப்பார்கள்.

பட்டியல்களுக்கேயுரிய விடுபடுதல்களும் இருக்கலாம்.

உங்கள் பரிந்துரையில் சமீபத்திய நூல் வரவுகளில் முக்கியமானவை எவை?

முதலில் நூலகம் தொடர்பான சில வலையகங்கள்:

  1. நியூ ஹொரைசன் மீடியா – கிழக்கு – காமதேனு – https://www.nhm.in/shop/home.php
  2. சென்னை ஷாப்பிங் – http://www.chennaishopping.com
  3. உடுமலை –http://www.udumalai.com/
  4. தினமலர் புத்தக விமர்சனம் + அறிமுகம்: http://books.dinamalar.com/index.asp
  5. நம்ம கோடம்பாக்கம்: http://600024.com/store/books/
  6. நூல் உலகம்.காம் – http://www.noolulagam.com/
  7. டிஸ்கவரி புக் பேலஸ்: http://discoverybookpalace.com/
  8. நியு புக் லான்ட்ஸ் – http://www.newbooklands.com/new/home.php
  9. தமிழ் புக்ஸ் ஆன்லைன்: http://www.tamilbooksonline.in/booklist1.php
  10. கன்னிமரா பப்ளிக் லைப்ரரி – http://connemara.tnopac.gov.in/cgi-bin/koha/opac-main.pl
  11. சிங்கப்பூர் நூலகம் –http://catalogue.nlb.gov.sg/

இப்பொழுது என்னுடைய பரிந்துரை புத்தக லிஸ்ட்:

1. என்னைத் தீண்டிய கடல் By வறீதையா — வகை : கட்டுரைகள்
2. கவிதை என்னும் வாள்வீச்சு By ஆனந்த் — வகை : கட்டுரைகள்
3. கரை தேடும் ஓடங்கள் By ராமச்சந்திரன் உஷா
4. நாமார்க்கும் குடியல்லோம் By கரு.ஆறுமுகத்தமிழன்
5. எங்கள் நினைவில் சு.ரா. (குடும்பத்தாரின் நினைவுகள்)
6. தாயார் சன்னதி By சுகா
7. தோள்சீலைக் கலகம் : தெரிந்த பொய்கள் தெரியாத உண்மைகள் By கணேசன்
8. சினிமா அனுபவம் (அடூர் கோபாலகிருஷ்ணன்) By அடூர் கோபாலகிருஷ்ணன்
9. கடிகாரம் அமைதியாக எண்ணிக்கொண்டிருக்கிறது By அ.முத்துலிங்கம்
10. ஒன்றுக்கும் உதவாதவன் By அ.முத்துலிங்கம்
11. நளிர் — நாகார்ஜுனன்
12. சொல்லாததும் உண்மை (பிரகாஷ்ராஜ்)
13. முக்குவர்: வரலாறு, வாழ்வியல், எதிர்காலம் By வறீதையா கான்ஸ்தந்தின்
14. மயிலிறகு குட்டி போட்டது By பிரபஞ்சன்
15. எழுத்தென்னும் நிழலடியில் By பாவண்ணன்
16. அமெரிக்காவில் மூன்று வாரம் By ம.பொ.சிவஞானம்
17. இலக்கிய ஆராய்ச்சி காலாண்டு இதழ் ( பாகம் – 1 ) By இந்திரஜித்
18. பிறக்கும் ஒரு புது அழகு By காலச்சுவடு கண்ணன்
19. காலத்தைச் செரிக்கும் வித்தை By குட்டி ரேவதி
20. ஓவியம் கூறுகளும் கொள்கைகளும் By புகழேந்தி
21. புனைவின் நிழல் By மனோஜ்
22. நான் கண்ட ரஷ்யா By அகிலன்
23. பல நேரங்களில் பல மனிதர்கள் By பாரதி மணி
24. அடடே! By மதி கார்ட்டூன்கள்
25. உவன் இவன் அவன் By சந்ரு
26. ஆதி திராவிடன் இதழ்த் தொகுப்பு
27. அக்கிரகாரத்தில் பெரியார் By பி.ஏ.கிருஷ்ணன்
28. நம் தந்தையரைக் கொல்வதெப்படி By மாலதி மைத்ரி
29. இருப்பும் விருப்பும் By கி.பி. அரவிந்தன்
30. கர்ப்பமாய் பெற்ற கன்னிகள் By அ.கா.பெருமாள்
31. கிருஷ்ணன் நம்பி ஆக்கங்கள் By தொகுப்பாசிரியர்: ராஜமார்த்தாண்டன்.
32. அம்மாவின் ரகசியம் By சுநேத்ரா ராஜகருணாநாயகதமிழில் :- எம். ரிஷான் ஷெரீப்
33. அனுபவங்களின் நிழல் பாதை By ரெங்கையா முருகன் ,வி .ஹரி சரவணன் — வகை : குறுநாவல்கள்
34. நஞ்சையில நாலு மா By சுந்தரபுத்தன்
35. விழா மாலைப் போதில் By அசோகமித்திரன்
36. குருதியில் நனையும் காலம் By ஆளுர் ஷாநவாஸ் (முன்னுரை: ஆ.மார்க்ஸ்)
37. எழுதுவதெல்லாம் எழுத்தல்ல By பாமரன்
38. ப்ளீஸ்! இந்தப் புத்தகத்தை வாங்காதீங்க! By கோபிநாத்
39. சினிமாவின் மூன்று முகங்கள் By சுதேசமித்திரன்
40. எசப்பாட்டு By இந்தியா டுடெ தமிழ்ப் பதிப்பின் எக்ஸிக்யூட்டிவ் எடிட்டர் ஆனந்த் நடராஜன்
41. கலி புராணம் By மு.தளையசிங்கம்
42. இராசேந்திரசோழன் குறுநாவல்கள்
43. பேய்க்கரும்பு By பாதசாரி
44. சனங்களின் சாமிகள் கதை By அ.கா.பெருமாள்
45. தெரிந்த கோவை தெரியாத கதை By கவியன்பன்.கே.ஆர்.பாபு
46. இவன்தான் பாலா By பாலா
47. சுண்ணாம்பு கேட்ட இசக்கி By அ.கா.பெருமாள்
48. நான் நீ மீன் By கலாப்ரியா (கவிதை)
49. முதல் 74 கவிதைகள் By யுவன் சந்திரசேகர்
50. சூரியன் தகித்த நிறம் By பிரமிள்
51. மேன்ஷன் கவிதைகள் By பவுத்த அய்யனார்
52. எனது மதுக்குடுவை By மாலதி மைத்ரி
53. திரும்பிச் சென்ற தருணம் By பி.ஏ.கிருஷ்ணன்
54. பலார்ஷாவிலிருந்தும் நாக்பூருக்கு By தெலுங்கில் ஸ்ரீ விரிஞ்சி (தமிழில் :- கெளரி கிருபானந்தன்.)
55. களவு போகும் புரவிகள் By வேணுகோபால்
56. பூரணி பொற்கலை By கண்மணி குணசேகரன்
57. தஞ்சை ப்ரகாஷ் கதைகள் By காவ்யா சண்முகசுந்தரம்
58. மரணத்தின் வாசனை By அகிலன்
59. மயில்வாகனன் மற்றும் கதைகள் By அஜயன் பாலா
60. மிதமான காற்றும் இசைவான கடலலையும் By தமிழ்ச்செல்வன்
61. லீலை By சுகுமாரன்
62. பிரமிள் படைப்புகள் (முழுத் தொகுப்பு)
63. வெள்ளி விரல் By ஆர்.எம்.நெளஸாத்
64. நான் கொலை செய்யும் பெண்கள் By லதா (காலச்சுவடு)
65. நகரத்தில் மிதக்கும் அழியா பித்தம் By ம.தவசி
66. பதுங்குகுழி By பொ.கருணாகரமூர்த்தி
67. ஒரு பனங்காட்டுக் கிராமம் By மு.சுயம்புலிங்கம்
68. இலட்சுமணப்பெருமாள் கதைகள்
69. கருப்பாயி என்கிற நூர்ஜஹான் By அன்வர் பாலசிங்கம்
70. தொலைகடல் By உமா மகேஸ்வரி
71. லயோலா என்ற பெரும்பாம்பின் கதை By சுகுமாரன்
72. கனவுகளுடன் பகடையாடுபவர்கள் By ஜி.குப்புசாமி (மொழிப்பெயர்ப்பு )
73. என் தாத்தாவுக்கொருதூண்டில் கழி By ஜெயந்தி சங்கர்
74. அப்பாஸ்பாய் தோப்பு By எஸ்.அர்ஷியா
75. லண்டன் டயரி By இரா.முருகன்
76. ஆறா வடு By சயந்தன்
77. எட்றா வண்டியெ By வா.மு.கோமு
78. ராஜூ ஜோக்ஸ் (கார்டூன் நகைச்சுவை)
79. இதழாசிரியர்கள் மூவர் By விக்கிரமன்
80. அதிமனிதர்களும் எதிர்மனிதர்களும் By பிரேம்
81. கரித்தாள் தெரியவில்லையா தம்பீ… By பெருமாள் முருகன்
82. உடைந்த மனோரதங்கள் By பெருமாள் முருகன் (கு.ப.ரா. பற்றிய விமர்சனக் கட்டுரைகளின் தொகுப்பு)
83. சிலுவையின் பெயரால் By ஜெயமோகன்
84. கர்நாடக சங்கீதம் : ஓர் எளிய அறிமுகம் By மகாதேவன் ரமேஷ்
85. சுபமங்களா மொழிப்பெயர்ப்புக் கதைகள்
86. சங்க இலக்கியத்தில் பொது மக்கள் By முனைவர் கு.ராச ரத்தினம்
87. கோப்பை தேநீரும் கொஞ்சம் கவிதையும் By ஹரி கிருஷ்ணன்
88. டயலாக் By ஜூனியர் விகடன்
89. தமிழர் சமயம் தமிழர் வேதம் தமிழகத்துக் கோயில்கள் By யு.சுப்ரமணியன்
90. மதன் ஜோக்ஸ்
91. காவல் தெய்வங்கள் ( காலங்களை கடந்தும் நிக்கிற கிராம தேவதைகள் வழிபாடு ) By பி.சுவாமிநாதன்
92. சுதந்திரப் போரில் தமிழ் சினிமா By அறந்தை நாராயணன்
93. நான் எப்படிக் கம்யூனிஸ்ட் ஆனேன்?..வி.பி.சிந்தன் (இளையபாரதி )
94. :நேரு வழக்குகள் – ஆசிரியர் : ஞாலன் சுப்பிரமணியன்
95. சகுனம் By எஸ்.வி.ராமகிருஷ்ணன்
96. ஆ மாதவன் கதைகள்
97. ஒரு புகைப்பட நிருபரின் அனுபவங்கள். : ஆசிரியர்: மதுரை எஸ்.எஸ். ராமகிருஷ்ணன்
98. சூப்பர் ஸ்டார் சொன்ன சூப்பர் கதைகள் : ஆசிரியர் : சபீதா ஜோஸப்
99. சில நேரங்களில் சில அனுபவங்கள் (பாகம் 1,2) : ஆசிரியர் : பாக்கியம் ராமசாமி
100. உரையாடலினி By   அய்யனார் விஸ்வநாத்
101. கு.அழகிரிசாமி கடிதங்கள் (கி.ரா.வுக்கு எழுதியது) By கி. ராஜநாராயணன்.
102. தொலைக்காட்சி விளம்பரத்தின் உள்முகங்கள் By கழனியூரன்
103. ஆறுமுகசாமியின் ஆடுகள் By சா.கந்தசாமி
104. புதுமொழி 500 – ரவிபிரகாஷ் (விகடன் பிரசுரம்)
105. மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்கள் – தொகுப்பு: பி.இ.பாலகிருஷ்ணன்
106. விட்டில் – சமகால அரசியல் பகுப்பாய்வு By இராகவன் (காலச்சுவடு பதிப்பகம்)
107. ஈழத்து நாட்டார் பாடல்கள் By ஈழவாணி
108. தமிழினி ஒரு வருட உள்நாட்டு சந்தா

இப்பொழுது உங்களுக்கான வினாக்கள்:

2012-ல் என்ன வாங்கினீர்கள்?

முக்கியமாக புனைவுகளில் சுவாரசியமானவை எவை?

புதிய புத்தகங்களில் தங்களைக் கவர்ந்த கதாசிரியர் யார்?

S Ramakrishnan’s Felicitation Function: Canada’s Iyal Award Event at Chennai by Uyirmmai

’உலக நாயகன்’ விஸ்வரூபம் எடுக்கும் பத்மஸ்ரீ கமல் தோழர் கு ஞானசம்பந்தன் உரை

கவிப்பேரரசு வைரமுத்து

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேச்சு

இரண்டாம் பாகம் (தொடர்ச்சி)

எஸ் ராமகிருஷ்ணன் ஏற்புரை