Category Archives: Movies

வேர் இஸ் தி பார்ட்டி – பொழிப்புரை

‘நெவர் ஸெ குட்பை’ படத்தில் வந்த பாடலை ‘முயற்சி காதலை கைகூட்டும்’ என்று மொழியாக்கும் சிம்புவின் முயற்சிக்கு தமிழ்ப்படுத்தல்:

ஹே டோளுமியா
ஹே தாரிமியா
ஹை டோலுமியா
தைய்யா

டால்மியா சிமென்ட் விலை ஏறி சரிந்ததே? அது தாராளமான மதிப்பீடல்லவா? (தாரிமியா மரூஉ) அப்பொழுதே வீட்டு விலையும் இறங்கும் என்றறிருந்திருக்க வேண்டும்: பொருளியல்.

Dole வாழைப்பழம் அங்கக (organic) முறையா? அல்லவே! பொருளாதாரத்திற்கு நிகழ்ந்ததுதான் உலகவெம்மைக்கும் நிகழும் என்பது தெளிவு.

ஹே பைய்யா
ஹே பையா
ஹே பையா
ஹை தைய்யா

அண்ணே என்பார்கள்; சின்னப்பய என்பார்கள்; பாக்கெட்டை ரொப்பிக் கொள்ளும் தன்னலக்காரன் என்பார்கள். அவர்களை கண்டுகொள்ளாமல் ‘தைதை’ என்று குதித்து முன்னேறுவாயாக!

ஹே தூமிலே டூமிலே
தும்மா டும்மாங்கொய்யா
ஹே தும்மா தூமா பையா

டுமீல் சத்தம் கேட்டவுடன் உள்துறை அமைச்சராக ப சிதம்பரம் முன்னேறுவார் என்பதை முன்கூட்டிய சொல்கிறார் கவிஞர் சிம்பு.

தமிழ் மாநில காங்கிரஸ் ஆரம்பித்தவுடன் பழனியப்பன் சிதம்பரம் பிசுபிசுக்கும் என்று எண்ணிய மாம்பழ (கொய்யாவும் கனி என்றறிக) பாட்டாளிகளை ‘ஒங்கொய்யால’ என்று சுடுசொல் தாக்குதலும் நடத்தி, உம்மா கொடுத்த ‘பாபா’ பெட்டிக்கு நடந்த அவமதிப்பாளர்களை ‘பையா’ என்று விளிக்கிறார்

என்னம்மா பண்ணலாம்
டிஸ்கோவுக்குப் போகலாம்
வோட்காவ போடலாம்
ஓடிப்பாடி ஆடலாம்

பாரதி என்ன சொன்னான்? ஓடி விளையாடி பாப்பா? பாப்பாவில் பப் ஒளிந்திருப்பதை இதுவரை எவரேனும் கண்டீர்களா?

வோட்காவ என்பதை வோட் கா என்று பிரிக்கவும். வாக்கு காப்போம்; சொன்னதைச் செய்வோம் கட்சிக்கு ‘வா

ஆல்ரெடி நேரமாச்சு
பப்பும் தானே மூடிப் போச்சு

நேரத்தே அறுவடை செய். பருவத்தே பயிர் செய். காற்றுள்ள போதே தூற்றிக் கொள்!

வேர் இஸ் தி பார்ட்டி
ஆ… உங்க வீட்ல பார்டி
வேர் இஸ் தி பார்ட்டி
ஆ… நம்ம வூட்டுல பார்டி

‘நீ என்பது நானல்லவோ’ என்னும் சூர சம்ஹார கானம் நினைவிருக்கிறதா? உங்க வீட்டில் என்பது என் நமது வீடு. ஆழ்ந்த தத்துவம் என்பதால் ரீப்பீட்டேய்!

சாடர்டே நைட்டு என்னும் க்ளப்தானே
அது 11:30க்கு மூடினா போரிங்தானே
போலீஸ் ரொம்ப இப்ப ஸ்ட்ரிக்ட் ஆனது
நம்ம யூத் மனசு ரொம்ப வெக்ஸ் ஆனது

தமிழ்மணம் ’40’ என்னும் பின்னூட்ட உயரெல்லை வந்தபோது கொதித்தார்களே? ஏன்?

அதைத்தான் பாட்டாலே கேட்கிறார்.

ஹவுஸ் பார்டி கூட் இப்போ இல்லவே இல்லியா
பக்கத்து வூட்டுக்காரன் ரொம்ப ரொம்பத் தொல்லையா
எங்களுது லைப்பு
இது என்சாய் பண்ற வயசு

தனியாக, சுயம்புவாக இருவரால் இயங்க முடியாதா?
கூகிள் என்னும் பெரியண்ணன் தொல்லையா?
எங்களுடைய மொக்கையை, வேஸ்ட் என்று தீர்மானிக்கும் மூத்த பதிவர்களுக்கு கண்டன கீதம்!

வெர் இஸ் தி பார்டி
ஆ… உங்க வூட்ல பார்ட்டி
வேர் இஸ் த பார்ட்டி
ஆ… நம்ம வீட்டுல பார்டி

இன்று எங்கே கும்மி என்னும் கூக்குரலை பாட்டாக்கி இருக்கிறான் எங்கள் சிலம்பரசன்.
இன்று என்னுடைய பதிவில் நீ மறுமொழிந்தால், நாளை உன் இடுகைக்கு என் பதில் மரியாதை கிடைக்கும்!

வெர் இஸ் தி பார்டி டுனைட்?
ஆ… உங்க வீட்ல
வெர் இஸ் தி பார்டி டுனைட்?
ஆ… எங்க வூட்ல
வெர் இஸ் தி பார்டி டுனைட்?
நடு ரோட்ல
வெர் இஸ் தி பார்டி டுனைட்?
தமில்நாட்ல

அதன் பிறகு ‘ஒன்று எங்கள் சாதியே! ஒன்று எங்கள் நீதியே!! வலைப்பதியும் மக்கள் யாவரும் ஒருவர் பெற்ற மக்களே’ என்று ம.கோ.ரா. வேதமாக அனைவருக்கும் இலவச(க்) கும்மி!

முன்னல்லாம் ஒரு பொண்ணு வேனுமின்னா
நாங்க காலேஜுக்கும் பஸ் ஸ்டான்டுக்கும் போனமுங்க
இப்பல்லாம் ஒரு பொண்ணு வேனுமுன்னா
இந்த க்ளப்புக்கும் பப்புக்கும்வரணுமுங்க

துவங்கிய இடத்துக்கு மீண்டும் வருவோம். பொருளியல் முன்னேற்றம் நடுத்தர மக்களை மட்டுமே அடுத்த கட்டத்துக்கு நகர்த்தி இருக்கிறது. பிராமணப் பெண்கள் ஸ்கூட்டியும் மாருதியுமாக முன்னேறி விட்டார்கள். ஆனால், பாமரர்களின் நிலை எப்போது உயரும்?

வீட்ல இருந்து போகும்போது எல்லாத்தையும் மறைக்கிறாங்க
பப்புல பார்த்தா எல்லாத்தையும் குறைப்பீங்க
உன்ன குத்தம் சொல்லாதே
சந்தோசத்த கொல்லாதே

என்னதான் நாடு முன்னேறினாலும் திருடர், தாதா, முரடர்களின் பயம் அதிகரித்துள்ளது. அதனால், வீட்டுக் கணினியில் குக்கீ, ஹிஸ்டரி, கேச் எல்லாம் கோவிந்தா. ஆனால், காபிஷாப் கணினியில் மேய்ந்தாலோ, இதற்கு நேர் மாறாக தவணை அட்டையைக் கூட பயன்படுத்தும் உலகம். அங்கே உலாவும் கொந்தர்களிடம் அடையாளத்தை இழத்தல்!

இதன் பிறகு என்னை குற்றம் சொல்லாதே. பாட்டின் அர்த்தத்தைக் கொல்லாதே என்னும் சுய எள்ளலும், பின்நவீனத்துவ, மாந்திரிக எதார்த்தமும் கூடிய தலைசிறந்த பாட்டுக்கு பாராட்டுகள்!

மும்பை தாக்குதல்: இரு பதிவுகள்

பாம்பே தீவிரவாதி

பாம்பே தீவிரவாதி

பதிவு ஒன்று: உள்ளூர் வார இதழில் அகஸ்மாத்தாக மும்பை குண்டுவெடிப்பு ஆரம்பம் ஆன அன்று வெளியான பாஸ்டன் ஃபீனிக்சில் வெளியாகிய சீதா நாரயணின் கட்டுரை:

The Phoenix > Features > Terror masala: “Bollywood’s colorful, multi-genre musicals serve up their most interesting character yet: the singing, dancing terrorist.”

As such, writers have recently begun to experiment with realism, to introduce region and dialect into the story, to present more nuanced explanations of characters’ motives, and to dare to depict social problems like political corruption, drug trafficking, gang violence, poverty, and, yes, terrorism. These are depressing problems, so what better way to present them than with a dash of Bollywood élan? Which brings us to an unusual movie protagonist: the singing, romancing, family-loving, dancing, emotionally open . . . terrorist.


பதிவு இரண்டு: என்ன நடக்கும் என்பதை சொல்லும் ப்ளாகேஸ்வரியின் இடுகை.

Blogeswari: நாளை?: ராம் கோபால் வர்மா எப்படி திரையாக்குவார் என்பதையும் மகேஷ் பட் கதை எவ்வாறு இருக்கும் என்று சொல்லியிருக்கிறது.

அவரின் முந்தைய அனுபவங்கள்: Blogeswari: நேற்று…. & மீடியாவிற்கு ஒரு வேண்டுகோள்

இளையராஜா பாடி இசையமைத்ததில் பிடித்தவை

ட்விட்டரில் ரோசா சொன்னதில் இருந்து:

1. உனக்கெனத்தானே இன்னேரமா
2. மெட்டி ஒலி காற்றோடு
3. தென்றல் வந்து தீண்டும் போது
4. எங்கே செல்லும் இந்த பாதை
5. தாழம்பூ தலையோடு (படம்:ஆல்பம்)

ட்விட்டரில் உ.வெங்காயம் சொன்னதில் இருந்து:

6. நிலா அது வானத்து மேல
7. காட்டுவழி போற புள்ள
8. ஜனனி, ஜனனி
9. சாமக்கேழி ஏ கூவுதம்மா
10. தரிசனம் கிடைக்காதா

ட்விட்டரில் ரோசா சொன்னதில் இருந்து:

11. உதய கீதம் பாடுவேன்
12. நான் தேடும் செவ்வந்தி பூ
13. உன் குத்தமா என் குத்தமா
14. நம்ம காட்டுல
15. பறவையே எங்கு இருக்கிறாய்.

16. ஒரு ஜீவன்
17. அறியாத வயசு
18. நிலா அது வானத்து மேலே (ரிப்பீட்டு)
19. நல்லதோர் வீணை
20. சந்தரரும் சூரியரும்

21. காதலென்பது பொதுவுடம
22. குண்டுமணி குலுங்குதடி
23. தோள்மேல தோள்மேல
24. பூ மாலையே
25. இந்தப் பூங்காற்று தாலாட்ட

26. ஒரு மஞ்சக் குருவி
27. அம்மன் கொயில் கிழக்காலே
28. என்ன பாட்டு பாட
29. கண்ணியிலே சிக்காதடி
30 கண்ணம்மா காதலெனும்

31. எங்கஊரூ பாட்டுகாரன்
32. காடெல்லாம் பிச்சிப்பூ
33. கண்மலர்களின் அழைப்பிதழ்
34. பொன்னோவியம் கண்டேனம்மா..
35. நில்..நில்..நில்.. பதில் சொல்..சொல்..சொல்.. எனை வாட்டாதே!

36. போடய்யா ஒரு கடிதாசு
37. வீட்டுக்கு வீடு வாசப்படி
38. ஆத்தாடி பாவாடை காத்தாட
39. நின்னை சரணடைந்தேன்
40. உன் குத்தமா என் குத்தமா

ட்விட்டரில் உ.வெங்காயம் சொன்னதில் இருந்து:

41. எடுத்து நான் விடவா (எஸ்.பி.பியுடன்)
42 தென்னமரத்துல தென்றலடிக்குது
43. தரிசனம் கிடைக்காதா (ரிப்பீட்டு)
44. ஆறு அது ஆழமில்ல
45. சந்தத்தில் பாடாத கவிதை

ட்விட்டரில் ரோசா சொன்னதில் இருந்து:

46. ஊரோரமா ஆத்துப்பக்கம்
47. காதல் ஓவியம்
48. அடி ஆத்தாடி
49. நேத்து ஒருத்தர ஒருத்தர பாத்தோம்
50. அந்த நிலாவத்தான்

ட்விட்டரில் உ.வெங்காயம் சொன்னதில் இருந்து:

51. செவ்வரளி தோட்டத்துல
52. புன்னகையில் மின்சாரம்
53. வெளக்கு வச்ச நேரத்துல
54. நான் தேடும் செவ்வந்திப்பூவிது (ரிப்பீட்டு)
55. தாஸ் தாஸ் சின்னப்ப

ட்விட்டரில் ரோசா சொன்னதில் இருந்து:

56. வாட வாட்டுது (சக்களத்தி)
57. சிறு பொன்மணி
58. துள்ளி எழுந்தது காற்று
59. சொர்கமே என்றாலும்
60. யாரோ யாரோ (உல்லாசம்)

61. ரசிகனே என் அருகில் வா
62. வீட்டுக்கு ஒரு மகனை
63. மலரே பேசு
64. திண்டாடுதே ரெண்டு கிளியே
65. வீணைக்கு வீணை

66. சோளம் விதைக்கையிலே
67. அம்மா எனும் வார்த்தைதான்
68. மருதாணி அரைச்சேனே
69. ஆலமரத்துக் குயிலே
70. தோட்டம் கொண்ட ராசாவே

71. தாலாட்டு மாறிப்போனதோ
72. ஒரு கணம் ஒரு யுகமாக
73. ஏப்ரல் மேயில
74. எம்பாட்டு எம்பாட்டு.(பூமணி)
75. தென்பாண்டி சீமையிலே

76. மைனா மைனா மாமன் புடிச்ச
77. இந்த மான் உன் சொந்த
78. சின்னமணிக்காக சேத்துவச்சேன் பாரு
79. அரிதாரத்தை பூசிக்
80.அப்பனென்றும் அம்மையென்றும் (குணா)

81. மச்சி மன்னாரு
82. திண்டாடுதே (ஆனந்தகும்மி)
83. கலயா நிஜமா (கூலி#1)
84. காதல் கசக்குதையா
85.உன்னோட உலகம் வேறு

86. என்ன பாடுவது .. பாட்டெல்லாம் எனக்கு படத்தெரியாது
87. காட்டு வழி கால் நடையா போற..(அது ஒரு கனா காலம்)
88. என்ன மறந்தாலும் (காதல் சாதி )
89. பாட்டாலே புத்தி சொன்னார்
90. தேவதை படத்தில் கவிதா கி.மூர்த்தியுடன் பாடியது

91. தென்ன மரத்துல தென்றல் அடிக்குது
92. காதல் கசக்குதய்யா
93. இந்திரன் வந்ததும்
94. கத கேளு (மை.ம.கா.ரா)

95.காட்டு வழி போற(ம.மம்ப)
96. கத போலத் தோணும், இது கதையும் இல்ல
97. சோழர் குல குந்தவை போல் – உடன்பிறப்பு
98. பாளையம் பண்ணப்புர சின்னத்தாயி பெத்த மகன் எரிய வராண்டா… ஓரம்போ, ஓரம்போ
99. கண்ணே என் கார்முகிலே

101. பொன்ன போல ஆத்தா என்னை பெத்து பொட்டா
102. ராஜா..ராஜாதி
103. எங்க ஊரு காதலை பத்தி – புதுப்பாட்டு
104. உள்ளங்கள் இன்பத்தில் ஆடட்டும் – கவரிமான்
105. அய்யா வூடு தொறந்துதான் கிடக்கு

106. மரத்த வச்சவன்
107. ஊரு உறங்கும் நேரத்தில் (கண்ணா உனை தேடுகிறேன்)
108. அந்த காண்டாமணி
109. வழி விடு வழி விடு என் தேவி வருகிறாள்


கொசுறு:

icarusprakash

  1. தாலாட்டு மாறிப்போனதே – உன்னை நான் சந்தித்தேன்
  2. ஒரு கணம் ஒரு யுகமாக – நாடோடித் தென்றல்
  3. உள்ளங்கள் இன்பத்தில் ஆடட்டும் – கவரிமான்
  4. சிறு பொன்மணி – கல்லுக்குள் ஈரம்
  5. கண்ணே என் கார்முகிலே -வா :: தங்கமான ராசா.
  6. மெட்டி மெட்டி இராகம் எங்கேயோ – மெட்டி
  7. துப்பாக்கி கையிலெடுத்து, ரெண்டு தோட்டாவு பையிலெடுத்து
  8. பொன்னோவியம், சங்கீதமாம் எங்கெங்கும் – கழுகு

kabishraj

  1. திண்டாடுதே ரெண்டு கிளியே – ஆனந்தக் கும்மி
  2. வீணைக்கு வீணை – வீரத்தாலாட்டு
  3. அம்மா என்னும் வார்த்தைதான் – தாலாட்டு கேட்குதம்மா
  4. மருதாணி அரச்சேனே – ராஜா கைய வச்சா
  5. வாடி என் கப்பக்கிழங்கே

Aravindank

  1. பொன்ன போல ஆத்தா என்னை பெத்து பொட்டா.. :: தேடி வந்த ராசா

nchokkan

  1. கத போலத் தோணும், இது கதையும் இல்ல … (வீரத் தாலாட்டு)
  2. ‘இந்திரன் வந்ததும் சந்திரன் வந்ததும் இந்த சினிமாதான்’

வாரணம் ஆயிரம்: ச்சும்மா அதிருதுல்ல! (இரண்டாம் பாகம்)

முந்தைய விமர்சனத் தொகுப்பு

கோவில் மடப்பள்ளியின் அருகே கை கழுவ குழாய் போட்டிருப்பார்கள். பிரசாதம் வாங்கி சாப்பிட்ட பிற்பாடு அங்கு கை நனைத்துக் கொள்வது தாத்பர்யம். அந்தக் குழாய் மித்தத்திலேயே பக்தகோடிகளின் குழந்தைகள் வாந்திபேதி முதல் நான்கு மாதம் முன்பு அனுமனுக்கு சாத்திய வெண்ணெய் முதற்கொண்டு எல்லாமும் மிதக்கும். கற்பூர வாசமும் கமழ, திருவாதிரைக் களியும் கிடைக்க, விறுவிறு துளசியும் கிடைக்கும் சன்னிதானத்தில் இறை மணத்திற்கு குறைவே கிடையாது.

வாரணம் ஆயிரமும் மணக்கிறது.

கற்பூர அரூபமாக தந்தையின் பேரன் பாசம். திருவாதிரைக் களி தரும் அசட்டு தித்திப்புடன் குளிர் தென்றலாகிய பக்கத்து வீட்டு சினேகிதி கம் மனைவியின் பாசம். புதினா போன்ற காரசார சுவையும் இல்லாமல் கருவேப்பிலை போல் லோக்கல் சரக்காகவும் இறங்காத இதமான துளசியாக காதலி. மசாலா அதிகமாகி கடமுடா செய்த குழந்தைத்தனமாக புது தில்லி பயணங்கள்.

திரைப்படமோ, எழுத்தோ, ஓவியமோ! எப்பொழுது நிறைவுறுகிறது?

எனக்கு வீட்டுப்பாடம் செய்கின்ற மகள் அதை முடித்துவிட்டால், இந்தப் பதிவின் இறுதி வாக்கியமும் எழுதப்பட்டிருக்கும். நடிகருக்கு அடுத்த படம் வரை. இயக்குநருக்கு தயாரிப்பாளரின் நிதிநிலை.

வாரணமாயிரத்தில் கவுதமிற்கு நிறைய பட்ஜெட் இருந்திருக்க வேண்டும். இழைப்பதற்கு பதில் இறைத்திருக்கிறார்.

கதாபாத்திரங்கள் எவ்வாறு பார்வையாளனுக்குள் உருவாகிறது?

சம்பவங்களால் நிறைந்தது வாழ்க்கை. திரைப்படம் முடிந்தவுடன் எந்த காட்சிகள் தங்கிப் போகின்றன? பேரனுக்கு கதை சொல்ல முடியாத தாத்தா தெரிகிறார்.

சிம்ரனிடம் வலியுறுத்தப்பட்ட ‘கிருஷ்ணனுக்கு உங்களைப் பிடிச்சிருக்காம்’ நிற்கிறதா?

Movies enact rituals; we know the form; watch 4 variations. Gr8 is the one with free will; சப் குச் சலேகா. but, don’t say that is realistic. – ஸ்னாப்ஜட்ஜ்

திரைப்படங்களில் எனக்குப் பிடித்ததாக மூன்று குணாதிசயங்களை சொல்லலாம்:

  1. அமைதியாக, ஆர்பாட்டமில்லாத மென் நகர்வு
  2. நளினமான நடை, கீறல் விழாத வசனம்
  3. குழப்பமான சங்கதி; ஏன் பிடித்திருக்கிறது என்பதை விளக்க முடியாத விவரிப்பு.

ஓக்லஹோமா குண்டுவெடிப்பு மிகச் சரியான அதிர்ச்சியை (#3) கொடுக்கிறது.

கல்லூரி சகாவிற்கு தினசரி காலை எட்டு மணிக்கு சந்திப்பு உண்டு. உலக வர்த்தக மையத்தின் எண்பதாவது மாடி அலுவலில் போய் உட்காராவிட்டால் சிரச்சேதம் செய்துவிடுவார்கள் என்பான். விதிக்கப்பட்ட 9/11 அன்று மட்டும் வாசற்படித் தடுக்கி விழுந்து விடுகிறான். சிராய்த்த இடத்தில் பேன்ட்டை அவிழ்த்து பேண்ட் – எயிட் போட்டு முதலுதவி முடித்து, மீட்டிங்கைத் தவறவிட்டு போய் சேர்ந்தால், மீட்டீங்கில் இருந்தவர்கள் போய் சேர்ந்திருக்கிறார்கள்.

அன்று மட்டும்! நம்பமுடியவில்லை. நிஜ வாழ்க்கை. விதி?

நளினமான நடை, கீறல் விழாத வசனம் நிறையவே உண்டு. ஆங்காங்கே ஆங்கிலம் கலந்த பி சென்டர், சி சென்டர் என்று பிரித்தாளாத சூழ்ச்சி.

இறுக்கமான உள்பொதிந்த திரைக்கதையாகிய #1 மட்டும் மொத்தமாக சறுக்கி சிவாஜியின் சத்தத்தோடு தமிழ்ப்படமாக அரங்கேறுகிறது. அஞ்சல ஆட்டமாகட்டும்; வெறுமனே காதலர் ஆகி உல்லாசபுரியில் சல்லாசம் ஆகட்டும்; இராணுவ வீரனாக வெற்றி வாகை குவிப்பது ஆகட்டும்; வாசனைக்கு மசாலா அல்ல -> மசாலாவிற்கு நடுவில் பருக்கைகளாக சம்பவங்கள்.

டிஸ்னிவோர்ல்டில் மட்டுமே சாத்தியமாகும் இவ்வாறான கனவுலக நிகழ்வுகள் திரையில் அரங்கேற்றுவது ஸ்லம்டாக் மில்லியனராகும் இந்திய சினிமாவில் மட்டுமே சாத்தியம். எனவே விட்டுவிடுவோம்.

பராக் ஒபாமாவின் தாரக மந்திரம் போல் அப்பா கிருஷ்ணன் நம்பிக்கையாக காலந்தள்ளுகிறார். பில் க்ளின்டன் போல் சகலமும் தெரிந்த அப்பாவின் நிழலில் ஹில்லரியாக மகன் சூர்யா. சூர்யா உணர்ச்சிவசப்படுபவன். அப்பா பற்றற்ற ஞானியாக முன்னேறி செல்பவர். பையனோ கவிஞனை ஒத்த மனநிலையில் துடிப்பானவன்; செயல் வீரன். தந்தை அரசு உத்தியோகமாக காலத்தை ஓட்டுபவர். பிள்ளை ஜார்ஜ் புஷ்ஷின் அமெரிக்காவாக கடன் வாங்கி, முதுவலி அஜீத்தாக ஸ்போர்ட்ஸ் கார் ஓட்டுபவன்.

ஸ்டாக்ஹோம் சின்ட்ரோம் தெரிந்திருக்கும். கூண்டுக்குள் அடைத்த கிரிமினலையே காதலிக்க ஆரம்பிப்பது. அமெரிக்கா வந்த தொணதொணப்பு சூர்யாவின் தொண்ணூறு நாள் சிறையில் மேக்னா மாட்டிக் கொள்ள காதல் ஆரம்பிக்கிறது.

இதன் உல்டா ‘ரிவர்ஸ் ஸ்டாக்ஹோம் சின்ட்ரோம்’. சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருப்பவர் மேல் சிறைக் காவலாளிக்கு அனுதாபக் காதல் தோன்றுவது. இது ப்ரியாவின் நிலை. போதை, குறிக்கோளின்மை என்று இலக்கற்ற வலைப்பதிவனாய் வீடெனும் சிறையில் தனியனாய் ஆன சூர்யாவை பக்கத்து வீட்டு ப்ரியா பச்சாதாப காதல் கொள்கிறார்.

  • மக்கள் மாறுகிறார்களா? இல்லை.
  • உலகம் மாறி விடுமா? ஆம்.

கல்லூரியில் சூர்யாவை சேர்த்துவிட்டு பிரியாவிடை கோரும் தந்தை கிருஷ்ணனுக்கும் போர்முனைக்கு செல்லும் சூர்யாவிற்கு வாழ்த்து சொல்லி அனுப்பும் தாத்தா கிருஷ்ணனுக்கும் வித்தியாசம் உண்டா? கிடையாது. இதெல்லாம் எப்போது உணர முடிகிறது?

கௌதம் மேனன் என்னும் கிருஷ்ணன் → சூர்யா எனப்படும் ‘வாரணமாயிர’த்தை ் → கல்லூரியாகிய திரையரங்கில் விட்டிருக்கிறார். அது எப்படி வளர்கிறது என்பது ‘வாரணம் ஆயிரம்’ கையில் கிடையாது. உலகம் என்னும் உங்களின் அனுபவப் பருக்கையில்தான் எங்கோ ஒட்டியிருக்க வேண்டும்.

‘ஒழுங்காப் படிச்சுடுவான்’ என்னும் நம்பிக்கை, ‘சரியா செஞ்சுடுவான்’ என்று இராணுவத்திலும் தொடர்கிறது. பையன் சூர்யாவும் அதே நம்பிக்கையில்தான் ‘அன்பு வெல்லும்’ என்று மேக்னாவை துரத்தினான். ‘நான் என்னை மீட்டெடுப்பேன்’ என்று மாற்றிக் கொள்ளும் முயற்சியாக ப்ரியாவை கரம்பிடிக்கிறான்.

‘இதைத்தான் செய்யவேண்டும்’ என்பது போன தலைமுறை உபதேசம். ‘மனதிற்கு விருப்பமான லட்சியத்தை எவருக்கும் உபத்திரவமில்லாமல் எப்படியாகினும் செய்து காட்டு’ என்பது இந்தக்கால தாரக மந்திரம்.

மேலும் சில பார்வைகளின் நறுக்குகள்

நடிகர் நம்பியாரா இப்படி செய்தார்? – வதந்தி

முன்னுமொரு காலத்தில் நடிகை சரோஜா தேவி அளித்த பேட்டியில் படித்தது:

“இயக்குநர் ‘கட்’ என்ற பின்பும் நம்பியார் நிறுத்தவில்லை.

முதல் முறை ‘என்ன சார்! நிஜத்திலும் வில்லன் ஆயிடுவீங்க போல?’ என்றேன். சுதாரித்து சுயநிலைக்கு வந்தவர், அடுத்த அடுத்த டேக்கில் மேலும் எல்லைமீறினார்.

கோபம் வந்து எல்லோர் முன்பும் பொரிந்து தள்ளினேன். மன்னிப்பு கேட்ட பின்தான் விட்டேன். அதற்குப் பரிகாரமாகத்தான் அவர் மாலை போட்டு விரதம் செய்கிறார்.”

பைண்ட் செய்யப்பட்ட தொடர்கதையில் பிட் நியூஸாக படித்தது மட்டுமே தங்கிப்போக; எந்தப் படத்தில், எப்போது, எந்தப் பத்திரிகையில் வந்தது என்பது எல்லாம் மறந்துவிட்டது.

இப்பொழுது போல் கத்திரித்து ஒட்டுவதும் அன்றைய வண்ணத்திரை காலத்தில் எனக்கு இல்லாததால் அச்சு ஆதாரம் தற்போது இல்லை.

வாரணம் ஆயிரம்: எதிர்பார்ப்பும் மசாலாவும்

படம் பார்த்த கதை

  • நாலைந்து பேர்தான் இருப்பார்கள் என்று எதிர்பார்த்தேன்; கிட்டத்தட்ட 150 பேராவது வந்திருந்தார்கள். (பாஸ்டன் பக்கத்தில் மட்டும் மொத்தம் பத்து காட்சிகள்)
  • இணையமில்லாத பாலாஜியாக போதை சூர்யா துடித்து முடிந்த திரையரங்கு நிசப்தத்தில், பின் இருக்கை சிறுமி கேட்ட கேள்வி: “What happened to him ma? Why is he acting up like that?’
  • முஸாஃபிர்இல் சமீராவை பார்த்தவுடனேயே பூமிகா மாதிரி பொறுமை, நதியாவின் ஆளுமை, பானுப்ரியாவின் அழகு எல்லாம் சேர்ந்திருக்கும் இவரை தமிழுக்கு அழைக்க வேண்டாமோ என்று பொருமியது.
  • மூகாம்பிகா, மெக்கானிகல், மியூசிக் என்று ‘மின்னலே – 2’வாக இல்லாமல் இருந்தாலும், இடைச்செருகலாய் ஆங்காங்கே ஆசுவாசப்படுத்தியதாக வந்த விமர்சனங்கள் குழப்பியிருந்தது.

படம் எப்படி?

பார்வையாளர் வட்டம் யார்:

  1. நாற்பதைத் தாண்டி ‘நான் சின்னப் பையனாக இருந்தப்ப…’ என்று தொடங்குபவர்கள்.
  2. ‘நமக்குக் கிடைக்கும் நல்ல கணவன், கடைத்தேறும் காலம் வரை மெல்லிய மனங்கவர் காதலனாக இருப்பான்’ என்பதை நம்பும் மணமாகாத பெண்கள்.
  3. காக்க காக்க’வின் மிடுக்கையும் ‘மாயாவி‘யின் துடுக்கையும் ‘பேரழகன்‘ அமரிக்கையும் கொண்டாடும் நடிகர் சூர்யாவின் ரசிகர்கள்.
  4. ‘Chick flick பார்க்கணும்; ஆனா, தமிழில் இருக்கணும்’ என்றெண்ணும் ஆங்கிலேயர்கள்.
  5. ‘எனக்கு கமல் படம் பிடிக்கும்; ஆனா, அம்மா மட்டுமே ஆக்கிரமிக்கும் தசாவதார அதிமுக மாதிரி இல்லாமல், கலைஞர் குடும்ப அங்கத்தினர் போல் பலர் நிறைந்த திமுக வேண்டும்’ என்று ஆசைப்படும் சினிமா ரசிகர்கள்.

கதை:

என் மகள் எனக்கு நேற்று சொல்லியது: He meets this friend first. She dies. He marries another girl later. Now, his father dies.

அப்புறம்?

  • மிகக் குறைவான எதிர்பார்ப்புகளுடன் செல்ல வேண்டும்.
  • நான் சிறுவனாக இருந்தபோது என் பெற்றோர் ‘திரிசூலம்‘ இழுத்து சென்றார்கள். ‘இமயம்‘ போன்ற ‘எத்தனையோ தாங்கிட்டோம்! இதையும் பார்த்துட மாட்டோமா?’ என்பதை தவிடுபொடியாக்கிய சிவாஜி சாரின் நடிப்பு அங்கே எனக்கு கிடைத்தது. உங்களுக்கு இது இன்றைய சிவாஜியாகிய சூர்யாவின் நடிப்புக்கு திலகமாகவும், அடுத்த தலைமுறைக்கு மொக்கை அழுகையாகவும் தோன்றும்.

மொத்தத்தில்?

  • சிக்கன் பிரியாணியில் லெக் பீஸ் கிடைக்கவில்லை. ஆனால், தொட்டுக்க சிக்கன் விங்ஸ் இருப்பதால் நெஞ்சில் பறக்கிறது.

வீடியோ பேட்டி


பதிவுகளும் பதில்களும்

சரித்திரம்

இதுவரை வந்த இவரின் எந்த படமும் சோடை போகவில்லை, ஏமாற்றியதில்லை. வாரணம் ஆயிரமும், ஏமாற்றவில்லை.

ஆனா என்ன ஒரே வித்யாசம்னா, கௌதம் மேனனின், மற்ற படங்களெல்லாம், டிவிடி வாங்கி வச்சுக்கிட்டு, மூணு நாலு மாசத்துக்கு ஒரு தரம், திரும்ப பாத்தாலும் போரடிக்காத வகையைச் சேர்ந்தவை. வாரணத்தை, அப்படியெல்லாம் திரும்ப திரும்ப பாக்கமுடியாது.

சர்வேசன்

லா அன்ட் ஆர்டர் பார்ப்பவருக்கு வேட்டையாடு விளையாடு அரிச்சுவடி என்றால் ப.கி.மு.ச.த்திலும் ஜெனிஃபர் ஆனிஸ்டனே வியாபித்திருந்தார். ‘மின்னலே‘வில் 80 ஹாக்கி அணியாக தங்கம் வென்று ‘காக்க காக்க’வில் 83 கிரிக்கெட் கபில் தேவாக இருந்த கவுதம், முந்தைய இரண்டில் மேட்ச் ஃபிக்சிங் கபில் தேவாக சறுக்கியதை, வாரணமாயிரத்தில் மீட்டெடுத்திருக்கிறார்.


கல்யாணம் செய்தால் திரையில் காட்டித்தான் ஆக வேண்டுமா?

ஒரு சந்தேகம்.

சூர்யா BE முடிக்கும் போது 22 வயசு.

அப்றொம், பிசினஸ் பண்ணி, வீடு கட்டி முடிக்க ஒரு ரெண்டு வருஷம் -> 24 வயசு.

அப்றொம் US visa + US visit ஒரு ஒரு வருஷம்? -> 25 வயசு.

அதுக்கு அப்றொம், போதை, டில்லி பயணம் ஒரு வருஷம்னு வெச்சிக்கலாம். -> 26 வயசு.

Armyல major ஆகறதுக்கு ஒரு 5 வருஷம்? (எனக்கு தெரில) -> 31 வயசு.

அதுக்கு அப்றொம், கல்யாணம் பண்ணி குழந்தை பொறந்து, குழந்தைக்கு 3 வயசு ஆகற மாதிரி காட்றாங்க. சோ இன்னொரு 4 வருஷம் அதுக்கு. ஆக க்ளைமேக்ஸ் அப்போ சூர்யாக்கு 35 வயசு ஆகுது.

குத்து ரம்யா ஒரு சீன்ல சூர்யாவ பாத்து, “உனக்கு 17 வயசு எனக்கு 15 வயசு, அப்போவே உன்ன எனக்கு புடிச்சுது” அப்டீன்னு சொல்றா. சோ படம் முடியும் போது குத்து ரம்யாக்கு 33 வயசு.

வெற ஒரு சீன்ல, குத்து ரம்யாவும், சூர்யாவோட தங்கையும் ஒரே க்லாஸ்னு சொல்றாங்க. ஆக தங்கைக்கும் படம் முடியும் போது 33 வயசு. ஆனா கல்யாணமே நடக்கல? தங்கைக்கு என்ன ப்ரச்சனனு எங்கயாச்சும் சொன்னாக்களா? நான் மிஸ் பண்ணிடேனா?

Truth

ஃபிகர் ஃப்ரீயா இருக்கா என்பதை எவ்வளவு டீசண்ட்டா கேட்கிறார்? தங்கைக்கு கல்யாணமாகவில்லை என்றும் சொல்லவில்லை.


ஆவக்கா பிரியாணி

வேல பாக்கிற கம்பெனி பசங்க எல்லாமா சேந்து வாரணம் ஆயிரம் படம் போறதுக்கு முடிவு பண்ணி இண்டெர்னெட்ல டிக்கெட் புக் பண்ண முடிவு பண்ணிருக்காங்க, அதுல இருந்த ஒரு தெலுகுப்பையன் அந்த குரூப்புக்கு எங்க நமக்கும் வாரணம் ஆயிரம் புக் பண்ணிருவாங்களோன்னு பயந்து எனக்கு ஒரு ஆவக்கா பிரியாணி புக் பண்ணிருங்கன்னு ஒரு முன்னெச்சரிக்கை மெயில் அனுப்பிருக்காரு, அந்த மெயில் லிஸ்ட்ல இருந்த தமிழ்ப்பையன் ஒருத்தரு எனக்கு ஒரு சிக்கன் பிரியாணி ஒன்னு அப்படின்னு ரிப்ளை பண்ணிட்டாரு,ஆவக்கா பிரியாணி ஒரு தெலுங்கு படம்னு தெரியாம.

குடுகுடுப்பை

🙂 😀 😛


Is it an adaptation?

The film was believed to be based on the Best Foreign Film Oscar Winner, ‘Character‘ Directed by Mike van Diem, The Netherlands.

Mohana Krishna

இந்தப் படத்தின் கதையைப் படித்தால் அப்படித் தெரியவில்லை!


மெதுவடை

அப்பா சூர்யா பரிதாபமாக இருக்கிறார்.

கோவி. கண்ணன்

ரஜினி ‘பாபா’ மாதிரி இருக்கார்னு சொல்லாமல் செய்துவிட்டாரே?!


அப்பன் பூஜையில் நுழைந்த கரடி மகன்

இந்தியத் திரைப்படம் ஒன்றுக்கு அடிப்படைக் கட்டமைப்பை ஏற்படுத்தும் கதை என்ற ஒன்று இல்லாததால் திருவிழாவில் தொலைந்த குழந்தை மாதிரி படம் எங்கெங்கோ அலைபாய்கிறது.
:::
தசாவதாரத்தை மிஞ்சிய தொழில்நுட்ப சாத்தியங்கள் சில இரட்டை வேடம் என்பதால் இப்படத்தில் சாத்தியப்பட்டிருக்கிறது. துரதிருஷ்டவசமாக சராசரி சினிமா ரசிகன் அவற்றையெல்லாம் கண்டுகொள்ளப் போவதில்லை.

லக்கிலுக்

Bug testing என்பது கிடைக்கவே முடியாத தவறும் கண்டுபிடிக்குமாறு அமைய வேண்டும். அது போல் ‘நல்லா நடிச்சிருக்கான்யா!’, அருமையான மேக்கப், என்ன மாதிரி கேமிரா என்றெல்லாம் வெளிப்படையாக ஜிகினா ஒட்டாமல்; அதே சமயம் ‘வெள்ளித்திரைபிரகாஷ்ராஜ் சொல்வது போல் தலை வாழை இலையில் பொரியல், வடை, அப்பளம், லட்டு, காரக்குழம்பு என்று ரகரகமாகவும் கொட்டியிருக்கிறார் கவுதம்.


ஆறும் அது ஆழமில்ல

காதலனின் ஒப்புதலைப் பெற டெல்லி வரை வந்திருந்தவளை பிடித்திருக்கின்றது பிடிக்கவில்லை என்று ஒரு முடிவாக சொல்லாத முன் தொட முயற்சிக்கும் சூர்யாவிடம் அவர் காட்டும் கோபமும் கேள்விகளும் அற்புதம். எனக்கும் உன்னோட தோள்ல சாய்ந்துக்கனும் உன்னை கிஸ் பண்ணனும்னு ஆசைதான் ஆனால் என்னை பிடிச்சிருக்கா இல்லையா என்றதையே சொல்லாமல் தொட பார்க்கிற நீ என்ன மாதிரியான மனுஷன் என்கிற அவருடைய கேள்வி ஏனோ என்னை மிகவும் இம்சித்தது.

ஸ்ரீநிவாசன் அ. பால் ஜோசப்


தனயனைக் காத்த தந்தை

மகனின் வாழ்க்கை வழியாக தந்தையின் வாழ்க்கையை சொல்லும் விதம் புதிது. ஒரு இளைஞன் சமுதாயத்தில் நல்ல நிலைக்கு வர வேண்டுமானால் அவனுக்கு அவன் தந்தையிடம் இருந்து கிடைக்கும் ஆலோசனைகளும், வழிகாட்டுதல்களும், சுதந்திரமும் முக்கியம்.

வீரசுந்தர்


சிறுவர்களுக்கான திரைப்படம் அல்ல

படம் நகர நகர நம்மோடு கதைச் சொல்லியும் கூட வந்து நம்மை அவர்களோடு இணைத்துக் கொண்டு படத்தை மெல்ல நகர்த்தும் திறனை கவுதமிடம் யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். ஏனென்றால் நம் தமிழ் இரசிகர்கள் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம், விரைவு, ஒரு நகைச்சுவை தடம் என்று எல்லாமும் கலந்த மசாலாவையே சுவைத்து பழகிவிட்டார்கள். அதுவே தமிழ் இரசிகர்களின் எதிர்பார்ப்பு என்று தெரிந்தும் கூட இப்படிப்பட்ட சிகிச்சையை தைரியமாகத் தந்த இயக்குனருக்கு ஒரு சபாஷ் சொல்லாமல் இருக்க முடியவில்லை.

படத்தைப் பற்றி ஒரு வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால் ‘கவிதை’. ஏனெனில் சிலருக்கு படம் புரியாமலுமிருக்கலாம். குழந்தைகள் நீதிக் கதையின் முடிவில் அப்ப ‘கதை என்ன சொல்ல வருது’ என்று கேட்பது போல் படத்தைப் பார்த்து முடித்த பிறகு என்ன சொல்ல முயற்சியிருக்காங்க என்று கேட்பவர்களுக்குச் சொல்ல எந்த நீதியும் இல்லை.

ஜெஸிலா


வாழ்க்கை என்ன? வாழ்ந்து பார்க்கலாம் அப்பாவும், வாழ்ந்து காட்டலாம் மகனும்

பதின்ம சூர்யா, கல்லூரி சூர்யா, காதல் சூர்யா, பொறுப்பான சூர்யா, தடுமாறும் சூர்யா, அலையும் சூர்யா, திரும்பும் சூர்யா, உழைக்கும் சூர்யா, சாகச சூர்யா, குடும்ப சூர்யா,அப்பா சூர்யா,சந்தோஷமாய் மரணிக்கும் சூர்யா. ஒவ்வொரு காட்சியிலும் புதிய சூர்யாவை பார்க்க முடிகிறது.
:::
சுயசரிதை படங்கள் கசாமுசா வென இருப்பது தான் எனக்குப் பிடித்திருக்கிறது. நேர்கோட்டில் எவரின் வாழ்வும் இல்லை.

அய்யனார்


🙂

நான்: படம் ஆரம்பித்ததுமே அப்பா சூர்யா சிரித்த முகமாகவே சாகிறார்! ஏன்?

சூர்யா: மீதி படம் பாக்க போகும் உங்களை நினைச்சா பாவமா இருக்கு என்று! நினைச்சு பார்த்து இருப்பார்!

குசும்பன்


மிகை நாடும் கலை குறித்த மாற்றுப் பார்வை

தவமாய்த்தவமிருந்து, ஆட்டோகிராப் போன்ற சேரன் படங்களை உயர் மத்தியதர வர்க்கக் குடும்பத்திற்குப் பொருத்தி மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்ப உதவியுடன் உருவாக்கப்பட்டுள்ள படம். ஆனால் தவமாய்த்தவமிருந்து, ஒன்பது ரூபாய் நோட்டில் இருக்கும் ஒரிஜினாலிட்டியும் பார்வையாளனின் மீதான தாக்கமும் வாரணத்திற்குக் கிடையாது. மணிரத்னம், ஷங்கர், மேனன் போன்ற வலதுசாரிச் சினிமா இயக்குனர்களின் படங்களிலிருந்து கேமிரா, இசை, அழகியல் போன்ற சமாச்சாரங்களைக் கழற்றிவிட்டுப் பார்த்தால் அடிப்படை அறிவும் தர்க்கமும் கூட இல்லாது அம்மணமாய் நிற்பது தெரியும்

சுகுணாதிவாகர்


படத்தில் எனக்கு மிகவும் பிடித்த பாடல்

அவ என்ன என்ன தேடி வந்த அஞ்சல…
அவ நெரத்த பார்த்து செவக்கும் செவக்கும் வெத்தல..
அவ அழக சொல்ல வார்த்த கூட பத்தல..
அட இப்போ இப்போ எனக்கு வேணும் அஞ்சல..
அவ இல்ல இல்ல நெருப்பு தானே நெஞ்சில..

வொண்ணுக்குள்ள ஒண்ணா
என் நெஞ்சிக்குள்ள நின்னா..
கொஞ்சம் கொஞ்சமாக
உயிர் பிச்சி பிச்சித் திண்ணா..
அவ ஒத்த வார்த்த சொன்னா..
அது மின்னும் மின்னும் பொன்னா..
உன் எண்ணம் சொல்லி என்னா..
அவ மக்கி போனா.. மண்ணா

அடங்கா குதிரையைப் போல அட அலஞ்சவன் நானே..
ஒரு பூவப்போல பூவப்போல மாத்திவிட்டாளே..
படுத்தா தூக்கமும் இல்ல..என் கனவுல தொல்ல..
அந்த சோழிப்போல சோழிப்போல புன்னகையால…

எதுவோ எங்கள சேர்க்க,
இருக்கு கயித்தில..தோக்க,
ஓ.கண்ணாம்மூச்சி ஆட்டம் ஒண்ணு ஆடிபார்த்தோமே!!

துணியால் கண்ணையும் கட்டி,
கைய காற்றில நீட்டி,
இன்னும் தேடறன். அவள..
தனியா.. எங்கே போனாளோ!!
தனியா.. எங்கே போனாளோ!!
தனியா.. எங்கே போனாளோ!!

வாழ்க்க ராட்டிணம் தான் டா,தினம் சுத்துது ஜோரா,
அது மேல கீழ மேல கீழ காட்டுது, தோடா!!
மொத நாள் உச்சத்திலிருந்தேன், நான் பொத்துனு விழுந்தேன்..
ஒரு மீனப்போல மீனப்போல தரையில நெளிஞ்சேன்…
யாரோ கூடவே வருவார் யாரோ பாதியில் போவார்,
அது யாருயென்ன ஒண்ணும் நம்ம கையில் இல்லையே!!
வெளிச்சம் தந்தவ ஒருத்தி அவளை இருட்டல நிறுத்தி
ஜோரா பயணத்த கிளப்பி,
தனியா.. எங்கே போனாளோ!!
தனியா.. எங்கே போனாளோ!!
தனியா.. எங்கே போனாளோ!!


நான் படம் பார்க்க போகலாமா?

நீண்ட நாவலைப் படிப்பது போல சில சமயங்களில் சுவாரஸ்யமகாவும் சில சமயங்களில் அயர்ச்சியூட்டுவதாகவும் சில சமயங்களில் போதை தருவதாகவும் சில சமயங்களில் வடுவேற்படுத்துவதாகவும், சில சமயங்களில் மென்முறுவல் பூக்க வைப்பதாகவும் இருந்த போதிலும் படிக்காமல் கீழே வைக்க முடியாத அளவுக்கு ஒன்றிப்போக முடிவதாக இருப்பது படத்தின் சிறப்பு.

ஆசிப் மீரான்


உள்ளங்கவர் கதாநாயகி

குத்துரம்யா கொஞ்சம் பப்ளியாய் இப்ப அழகாகவே இருக்கிறார். பெங்களூர் பக்கத்தில் ரம்யாவை ‘கிழவி’ என்று சொல்வார்கள் என்றாலும் – பள்ளிக் கூட மாணவி உடையிலும் அருமையாக இருக்கிறார்.

எல்லாவற்றிற்கும் மேல், கேம்பிற்கு வரும் பொழுது புடவையில் ம்ம்ம் பிரம்மாதம்.

ஆனால் எனக்கு சமீரா ரெட்டியைப் பிடித்துப் போனது, அதற்கு மிகமுக்கிய காரணம் அந்தக் காதலாய்த் தான் இருக்க வேண்டும். RECயில் படித்த அமேரிக்காவில் MS Computers படிக்கும் பிகர் அப்படித்தான் இருக்கும்.

அந்தப் பொண்ணு பேசுற மாதிரி, அந்தப் பொண்ணு நடக்குற மாதிரி தான் இருக்கும். கௌதம் அதை உணர்ந்து செய்திருக்கிறார்.

அந்தப் பெண் சுகி(சுடிதாரில்)யில் வரும் எல்லா சமயங்களிலும் ஷால் அணிந்திருப்பதை கவனித்தீர்களா?

டிரெயினில் சூர்யா அவளிடம் சேட்டை செய்யும் பொழுது சமீராவின் ரியாக்‌ஷன் மனதைக் கவர்வதாக இருந்தது. இந்தப் பொண்ணும் கொஞ்சம் பப்ளியாய், சிரிக்கும் பொழுது அவள் முகமே சிரிக்கிறது.

மோகன்தாஸ்

காளியைக் கண்டு குளிர்வாய் மனமே

செய்தி: Supermodel poses as goddess Kali, sparks a row

விழியம்: Video: Inside Goddess Heidi Klum's Halloween Party! at The Insider

புகைப்படங்கள்: Heidi Klum’s Halloween Costume Kicks Ass

Kuselan – DVD Experiences

  • குசேலன் குறுவட்டில் சந்திரமுகியும் இருந்தது.
  • மிக மிகக் குறைந்த எதிர்பார்ப்புடன் பார்த்ததாலோ என்னவோ!? படம் ரொம்பவே பிடித்துப் போயிருக்கிறது!
  • வடிவேலு காட்சிகள் குறித்து எக்கச்சக்க எச்சரிக்கை இருந்ததால், அவரின் அனைத்து சீன்களும் 5 பாடல்களும் கழற்றியபின் படம் ஒன்றரை மணி நேரம்தான்.
  • மீனா அதற்குள் தொலைக்காட்சி தொடருக்கு சென்றிருக்க வேண்டாம். சங்கீதா போல் நாயகி முதல் அனைத்து கதாபாத்திரங்களுக்கும் பாந்தமாக இருப்பார்.
  • கலக்கல்
    • ஆர் சுந்தர்ராஜன் உடன் ஆன கேள்வி – பதில்
    • கடைசி 20 நிமிடங்கள்
  • மற்றவர்கள்
    • சந்தானம் – சமையற்காரனாக; தோரணை காட்டும் சினிமாக்காரனாக.
    • சந்தானபாரதி – சிகையலங்காரம்
    • லிவிங்ஸ்டன் – வெறுப்பின் உச்சியை பிரபலிக்கும் ஒன்பதாவது அதிசயம் கூட எதார்த்தமான சித்தரிப்பு

‘நல்லவனாக இருந்தால் மட்டும் போதாது; வல்லவனாக வாழவும் தெரியணும் பாலு’

India Films to Indie Movies – Meme

முதலில் நாகார்ஜுனன் பதிவு. அதன் தொடர்ச்சியாக பிரகாஷ் மீம் வித்திட்டிருக்கிறார்.

1 – அ. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்?

ஐந்து வயதில் இருந்து ஓரளவு நினைவில் உள்ளது.

1 – ஆ, நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா?

ப்ரியா.

1 – இ. என்ன உணர்ந்தீர்கள்?

  • பெண்கள் சினிமாவில் நுழைந்தால் ஆபத்து பின்தொடரும்.
  • ஸ்ரீதேவி நீச்சலுடை.
  • எவராவது கடத்தி சென்றுவிட்டால் குடும்பப் பாட்டு கற்றுவைத்துக் கொள்ளவேண்டும்.

2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?

தமிழ்: தசாவதாரம் (ஆங்கிலம்; வால் – ஈ)

3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?

கடைசியாக முழுமையாகப் பார்த்த படம் ட்யூப் தமிழ் வலையகத்தில் – அஞ்சாதே.

ஆனால், மிக சமீபத்தில், பாதி பார்த்த நிலையில் விட்ட படங்கள் தாக்கத்தை நிறையவே கொடுத்தது.

  • அறை எண் 305இல் கடவுள் – மகாமக கொடுமையான நாடகத்தனம்
  • அன்பைத் தேடி – எத்தனையோ பழைய படங்களை புத்துருவாக்கம் செய்யும் நிலையில் இந்த premise நன்றாக இருந்தது. ஏதாவது கற்பனையில் சஞ்சரித்து நிஜத்தைக் கோட்டை விடும் நாயகன் சிவாஜி. (குழந்தை நடிகை) இந்திரா (காந்தி) & நாயகன் (ம.கோ.) ராமுவையும் கோர்த்து அரசியல் கிண்டல் செய்யும் சோ.
  • எவனோ ஒருவன் – சுவாரசியமான அறச்சீற்றம்

4. மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா

எல்லோரும் ‘அவள் அப்படித்தான்‘ என்கிறார்கள். ஆனால், என் வாழ்வை திசை திருப்பக் கூடிய சம்பவத்தை ‘அவள் அப்படித்தான்’ நிகழ்த்தியது.

குழந்தையாக இருந்தபோதே ‘எது கலைப்படமோ அதைச் சொல்லி ஒப்பேத்தலாம்’ என்னும் சுபாவம் innate ஆக அமைந்திருக்க வேண்டும். 1979ஆம் ஆண்டு குழந்தைகளின் ஆண்டாக கொன்டாட்டப்பட்டது. என்.எஃப்.டி.சி ஆதரவில் படம் எடுக்க, சென்னை தூர்தர்ஷனில் audition வைத்தார்கள். நானும் சென்றிருந்தேன்.

குடிகாரனாக, பிச்சைக்காரனாக, ஊமையாக எல்லாம் சிவாஜித்தனமான செயற்கையில், அங்கு வந்திருந்த பிற சிறுவர்களைப் போலவே நானும் ஓவர் – ஆக்டிங்கில் மின்னினேன்.

லன்ச்-ப்ரேக்.

பிற்காலத்தில் ரகுவரனை நாயகனாகக் கொண்ட ‘ஏழாவது மனிதன்‘ உட்பட பல படங்களை இயக்கிய ஹரிஹரனின் குழுவோடு உணவருந்தும்போது எல்லோரிடமும் சும்மா கேள்வி கேட்டுக்கொன்டிருந்தார்கள்.

‘உனக்கு என்ன படம் இப்ப பார்க்கணும்? எது பிடிச்ச படம்?’

அன்னை ஓர் ஆலயம், ஆறிலிருந்து அறுபது வரை மாதிரி அப்போதைய படங்கள் அனைத்தையும் வெள்ளித்திரையில் பார்த்த வெறித்தனமான ரஜினி ரசிகன். அம்மாவின் ஒப்புதல் கிடைக்காதது அந்தப் படத்திற்கு மட்டும்தான். இத்தனைக்கும் முதல் எதிரி கமல் வேறு நடித்திருக்கும் படம். தயங்கவே இல்லை.

பட்டென்று சொன்னேன்: ‘அவள் அபப்டித்தான்’

குழுவினர் திகைத்துப் போனார்கள். அவர்கள் டீம் உழைத்த படம் அது. அங்கிருந்த பலரின் செல்லப்பிள்ளை அது. உடனடியாக எனக்கு சான்ஸ் கொடுத்தார்கள் என்பதை சொல்லவும் வேண்டுமோ?!

5-அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா – அரசியல் சம்பவம்?

பெங்களூரில் உடனடியாக வருமா? கன்னடர்கள் கல்லெறிவார்களா?

5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா – தொழில்நுட்ப சம்பவம்?

இரத்தத்தையும் வன்முறையையும் வலிக்க வலிக்க காட்டுவது.

சாதாரண மனிதனின் ‘சத்ரியன்‘ ஆகட்டும்; விபத்தின் பின்விளைவுகளையும் அடிபட்டவர்களாக எண்ணிக்கையில் 167ஓடு 168ஆக கூடிப் போகும் ‘அன்பே சிவம்‘ ஆகட்டும்; ஏழையாக இருந்தால் என்னவெல்லாம் அமுக்கப்படும் என்று கோடிட்ட ‘கண் சிவந்தால் மண் சிவக்கும்‘ ஆகட்டும்.

6. தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?

சிவகுமார் சுயசரிதை, தினத்தந்தி வரலாறு, தி ஹிந்து விமர்சனம், வலைப்பதிவு அசைபோடல், கனவுத் தொழிற்சாலை குறித்து வண்ணத்திரை முதல் வெகுசன ஊடகங்களில் வரும் கருத்து/கட்டுரை.

7. தமிழ்ச்சினிமா இசை?

  • திருப்புகழ் கூட டி.எம்.எஸ் பாடிய சினிமாப் பாட்டு – ஆன்மிகம்
  • எஸ்.பி.பி பாடிய பாடல் என்பதால் சங்கராபரணம் – கர்நாடக/சாஸ்திரீய சங்கீதம்
  • வேப்பமரத்து உச்சி பேய் முதல் கல்லை மட்டும் கண்டால் – சமூகம்
  • மன்றம் வந்த தென்றலுக்கு என்பதும் கல்யாண மாலை கொண்டாடுவதும் – வாழ்க்கை

என்று எல்லாவற்றுக்கும் இசையை நம்பியிருப்பதால், தனித்தீவுக்கு போக விதிக்கப்பட்டாலும் 80 ஜிபி ஐ-பாட் இல்லாமல் செல்லமாட்டேன்.

8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?

ஆங்கிலத்திலும் ஹிந்தியிலும் நிறைய. சில ஸ்பானிஷ்.

  • When Harry met Sally – ஆங்கிலம்
  • City of God – வேற்றுமொழி (துணையெழுத்து உபயம்)
  • Mississippi Masala (தேசி – NRI)
  • Raju Ban Gaya Gentleman – இந்தி

9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?

நேரடியாக நடித்த படம் – வாண்டட் தங்கராஜ்.

பிடித்ததா? படத்தில் நடித்த அனுபவம் மிகவும் பிடித்திருந்தது.

வேண்டும்போது கிடைக்கும் ஐஸ்-க்ரீம். சொகுசான படுக்கையறையும் விநோதமான விளக்குகளும் கொன்ட உல்லாச அறை வாசம். பழனி கோவிலுக்கு சென்றால் கூட மூலஸ்தானத்தில் இருந்து மூலவரின் சிறுதுளியே பெயர்த்துக் கொடுக்கும் ராஜ மரியாதை.

என்ன செய்தீர்கள்? ஆறு வயதுச் சிறுவன் தங்கராஜ் பழனிக் கூட்டத்தில் தொலைந்து போகிறான். கூத்தில் அனுமனாக வேடந்தரிக்கும் ‘வள்ளி’ நட்ராஜ், வில்லர்கள் கூட்டத்தை Home Aloneஆக ஏய்ப்பது, கடிந்து கொள்ளும் பெற்றோரின் அன்பைப் புரிந்து கொள்ளும் குழந்தை வேடம்.

சினிமா மேம்பட உதவுமா? வெகு இயல்பாக இருந்தது. பாடல் கிடையாது. மூன்று நாளின் சம்பவங்களை 90 நிமிடங்களில் பரபரவென்று தென் தமிழகமெங்கும் சுழன்று விரியும் படம். அலங்காரில் வெளியாகி இருந்தால் மேம்பட உதவி இருக்கும்.

10. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

  • அருண் வைத்யநாதன் போன்ற தமிழ் சினிமாவின் நாகேஷ் குகூனூர்கள்
  • தொலைக்காட்சி, இணையம், செல்பேசித்திரை என்று விரியும் வழிகள்
  • குறைந்த பொருட்செலவும் பத்து நிமிடத்தில் உலகத்தின் கவனத்தை ஈர்க்கவைக்கும் நேர விரயமாகாத நுட்பங்களின் அணுக்கம்

11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?

ஒரு வாரத்தில், ஒரு நாளில் எத்தனை நேரம் கேளிக்கைகாக ஒதுக்குகிறோம்? அதில் எவ்வளவு மணி நேரம் சினிமா ஆக்கிரமிக்கிறது?

காலையில் அலுவல் கிளம்பும் அவசரம்; செய்தித்தாள் வாசிப்பு. அதன் பின் பயணத்தில் பழைய ராஜா இசையுடன் மோனம். அலுவலில் பதிவுகள் கவனச்சிதறல்; இரவு உணவுக்குப் பின் ஒரு மணி நேர தொலைக்காட்சி. இதில் சினிமா எங்கே இருக்கிறது?

நண்பனின் கார் சாவி தூரத்தில் இருந்தே திறக்கும் வசதி கொண்டது. ஒரு நாள் என்னை அழைத்தான்.

“டேய், கார் ரிமோட் கீ வேலை செய்ய மாட்டேங்குதுடா! எப்படிடா இப்ப காரைத் திறப்பேன்?”

“நேராக காருக்கும் அருகில் செல். உன்னிடம் இருக்கும் சாவியை துவாரத்தில் இட்டு திறக்கலாம்.”

பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் என்னும் பேட்டரி தீர்ந்து போகலாம். சினிமா என்னும் மகிழுந்தைத் திறக்க கற்பனை என்னும் சாவி, ‘விழிகள் மேடையாம்; இமைகள் திரை’யாகுமா?’

இவர்கள் தொடரவேண்டும் என்று நினைக்கிறேன்.

வழிகாட்டலுக்கு மட்டுமாக சில விதிகள்:

  1. இசை, சினிமாப்படங்கள் போன்ற புள்ளிக்கு மூன்றுக்கு மேல் பட்டியல் போடுவதை தவிர்க்கலாம்
  2. புள்ளிவிவர ஆட்டத்தைத் தொடர ஐந்து பேருக்கு அழைப்பு விடுக்கவும்
  3. இந்த வழிகாட்டல்களை முற்றுமாக நிராகரிக்கலாம்; ஆனால், டக்குன்னு பதிவிடணும் 🙂

இளையராஜா இசையில் இறுதியாக இதம் தந்த இந்தி அல்லாத இனியவை எது?

இளையராஜா இசையில் கடைசியாக மனதை அள்ளிய பாடல் பெற்ற படம் எது? Cheeni Kum சொல்லக்கூடாது. எனக்கு ‘சேது’.

இதுதான் என்னுடைய கேள்வி. ட்விட்டரில் வெளியான மற்றவர்களின் எண்ணங்கள்:

neotamizhan @bsubra இளங்காத்து வீசுதே…. பிதாமகன்

spinesurgeon @bsubra உன்னைவிட (விருமாண்டி) . அத்ற்கு முன் எங்கே செல்லும் இந்த பாதை (சேது)

sivaramang @bsubra ‘kaiyetha kombatho’ from vinodayathra –http://tinyurl.com/5ay368, if tamil katrilvarum&kajuraho from ONOK http://tinyurl.com/644jfh

santhoshguru @bsubra Sihi Gaali from a Kannada movie Aah Dinagalu

paval @bsubra நீ பார்த்த பார்வைக்கு.. (ஹே ராம்!)

neotamizhan @bsubra @paval இசையில் தொடங்குதம்மா…. ஹே ராம்

krgopalan @bsubra எளங்காத்து வீசுதே…! (பிதாமகன்)

sudgopal @bsubra “மயில் போல பொண்ணு ஒண்ணு..” பாரதி

anbudan_BALA @bsubra பாட்டு தொண்டையில நிக்குது, மொட்டையும் ஜானகியும் பாடின பாட்டு, படம்:அவதாரம்

rarunach @anbudan_BALA Thendral vandhu veesum bodhu?

sureshkannan70 @bsubra //இளையராஜா இசையில் // நினைவிலிருப்பது ” உன்ன விட” (விருமாண்டி) சேதுக்கப்புறம் எதுவுமே பிடிக்கலையே? இணையத்துல உதைக்கப் போறாங்க.

sureshkannan70 பாலாவிற்கு போட்டிக் கேள்வி: ரகுமானின் இசையில் கடைசியாய் நன்றாக அமைந்திருப்பதாக தோன்றின பாடல் எது? எனக்கு ‘மருதாணி” (சக்கரகட்டி)

mohandoss @bsubra எனக்கு விருமாண்டி

sugavasi @bsubra “பிதாமகன்”-ல் “எளங்காத்து வீசுதே”….Loved it. The BGM for the movie was also great.

nandhakumar @bsubra எனக்கு விருமாண்டியும் ஹேராமில் இசையில் தொடங்குதம்மாவும்தான்…

ilavanji @bsubra விரு விரு மாண்டி விருமாண்டி!!! 🙂

rozavasanth @bsubra கடைசியாய் எரிச்சலை கிளப்பியது மாயாபஜார், அஜந்தா, க.க.பா., உளியின் ஓசை, தனம் அட எல்லாமே!

bmurali80 @bsubra ஒரு நாள் ஒரு கனவு – ஃபாசில் படம், இளையராஜா இசையில். 3 பாடல்கள் கிளாஸ்…

icarusprakash @bsubra : kajuraho kanavile – http://tinyurl.com/6eodmz

sudgopal @bsubra “எனக்குப் பிடித்த பாடல்…” ஜூலி கணபதியையும் சேர்த்துக்கோங்க

parisalkaaran @bsubra இளையராஜா இசையில்… நீங்க கேட்டதுக்கு என் பதில் இளங்காத்து வீசுதே…. (பிதாமகன்)

penathalar @bsubra இளங்காத்து வீசுதே. வானவில்லே வானவில்லே

valluvan @bsubra Virumandi

rozavasanth @bsubra சரி, கேள்விக்கான பதில், கடைசியாக மனதை அள்ளியது (சொல்லப்போனால் அழ வைத்தது) ̀அழகி’.

rozavasanth @donion உங்களுக்கு ஜூலி கணபதியின் இசை பிடிக்கவில்லையா? (பிடித்திருந்ததாக எனக்கு நினைவு, இப்போது சரியாக தெரியவில்லை.)

icarusprakash @donion we tend to ignore these just becoz the films are bad. I zapped when i saw athu oru… few weeks back in tv

icarusprakash @donion even i thought so. but u shud spend some time listening to the BGM scores of julie ganapathy and athu oru kana kalam.

rarunach @bsubra My last ilaiyaraja favorite was “Onna vida” from Virumandi. (Used Imdb for ilaiyaraja’s filmography!). Kaasi, how about you?

thendral @bsubra கடைசியா அவரு இசை அமைத்த படம் எது…? ம்ம்ம் 😉