ஆரம்ப காலத்தில் இப்படித்தான் கடல் கொந்தளித்ததாம். எல்லோரும் உயிர் பிழைக்க எதிலெல்லாமோ புகுந்து கொண்டார்களாம். ஓர் ஆணும் பெண்ணும் மட்டும் தங்களுடைய வீட்டிலிருந்த சுரைக் குடுக்கைக்குள் புகுந்து கொண்டார்களாம்.
உலகத்திலுள்ள மரம் செடி கொடி உயிரினங்கள் மற்ற பொருட்கள் எல்லாம் அழிந்துவிட்டதாம். ஆனால் சுரைக்குடுக்கைக்கு மட்டும் எந்தச் சேதமும் ஏற்படவில்லையாம். வெள்ளம் வடியும் வரை தண்ணீரிலேயே மிதந்து கொண்டிருந்ததாம். சுரைக்குடைக்குள்ளிருந்த ஆணும் பெண்ணும் பலநாள் பட்டினியால் குடுக்கைக்குள்ளேயே மயங்கிக் கிடந்தார்களாம்.
வெள்ளம் வடிந்தபோது சுரைக்குடுக்கை ஏதோ இரண்டு பாறைகளுக்கிடையில் சிக்கிக் கொண்டதாம். நன்றாக வெயில் எரித்த போது, அந்த வெயிலின் சூட்டால் சுரைக்குடுக்கை வெடித்து அந்த ஆணும் பெண்ணும் வெளியே வந்தார்களாம்.
பாறைகளுக்கு நடுவில் கையில் வேல் வைத்துக் கொண்டு நின்ற ஒரு சாமியின் சிலை மட்டும்தான் இருந்ததாம். உலகத்தில் வேறு எதுவுமே இல்லையாம். அந்த ஆணும் பெண்ணும் சேர்ந்து அவர்கள் மூலமாகப் பெருகியவர்கள்தாம் மனிதர்கள் என்பது இந்த சனங்கள் அடிக்கடி சொல்லும் கதை.
தொட்டுக்க நகைச்சுவை: ஷாலினி, சென்னை.
‘தாத்தா…தாத்தா… நான் ஒண்ணு கேப்பேனாம்…நீ கரெக்ட்டா சொல்லிடுவியாம்…’
‘என்ன சொல்லு?’
‘ஆமையும் முயலும் நுழைவுத்தேர்வு எழுதிச்சாம். ஆமை 80 % எடுத்துச்சாம். முயல் 81 % எடுத்துச்சாம். ஆனா ஆமைக்குத்தான் ‘காடு‘ பொறியியல் கல்லூரில அட்மிஷன் கிடைச்சுச்சாம்….ஏன்?…சொல்லு’
‘ஆங்….தெரியலையே’
‘நீ ஒண்ணாங்கிளாஸ் படிக்கிறப்ப வந்த லெசன்ல முயலுக்கும் ஆமைக்கும் நடந்த போட்டில யார் ஜெயிச்சது?’
‘ஆமை’
‘அதான் தாத்தா…ஆமைக்கு ஸ்போர்ட்ஸ் கோட்டாவில அட்மிஷன் கிடைச்சிடுச்சி…இதுகூடத் தெரியலை…சரியான மக்கா இருக்கியே?…’