Daily Archives: பிப்ரவரி 17, 2008

ஒபாமா x ஹில்லரி – விளம்பர மோதல்: டிவி

1. விஸ்கான்சினில் ஹில்லரியின் அம்பு. ‘விவாதம் செய்ய அழைத்தால், ஒபாமா ஓடி ஒளிந்து கொள்கிறார்’ என்கிறார். ‘வெறும் வெட்டிப்பேச்சு உதவுமா’ என்று அஸ்திரம் பலமாகிறது:

அதன் தொடர்ச்சி:

2. சென்ற டிவி விளம்பரத்திற்கான பதிலடி. ‘பழைய குருடி; கதவைத் திறடி’ என்பது போல் அதே அரசியல் என்று சாடுகிறார்.

3. ஹில்லாரி க்ளின்டனின் நேர்மறையான விளம்பரம். எந்த விஷயங்களில் ஒபாமாவின் திட்டங்கள் சறுக்குகின்றன என்பதைத் தெளிவாக்குகின்றன:

4. இது சும்மா ஜாலிக்கு… நக்கல் விட்டுக்கறாங்க:

5. இவர்களின் விளம்பரங்களைக் குறித்த நியு யார்க் டைம்ஸின் ஆய்வு (பெரிய செவ்வ்வாய்க்கு முன்பு தொகுக்கப்பட்டது)

அமெரிக்கத் தேர்தல்களில் எனக்குப் பிடித்தவை

அமெரிக்காவில் நடக்கும் தேர்தலுக்கும் பிற குடியாட்சி முறை நாடுகளில் நடக்கும் தேர்தல்களுக்கும் பல வித்தியாசங்கள் உள்ளன. அமெரிக்கத் தேர்தல்களில் எனக்குப் பிடித்த சிலவற்றை இங்கே சொல்ல விரும்புகிறேன்.

1. பிரைமரி தேர்தல்: இந்தியாவில் இருப்பவர்களுக்கு இது ஓர் அச்சரியமான விஷயம். இந்தியாவில் கட்சிகள் தனிப்பட்டவர் சொத்தாகவே உள்ளது. திமுக என்பது கருணாநிதி குடும்பச் சொத்து. அஇஅதிமுக, ஜெயலலிதாவின் சொத்து. காங்கிரஸ், சோனியாவிடம் அடகு வைக்கப்பட்டுள்ளது. பாஜக – ஆர்.எஸ்.எஸ்ஸுக்குப் பாதி, அத்வானிக்கு மீதி… ராமதாஸ், வைகோ, விஜயகாந்த், திருமாவளவன், மாயாவதி, முலாயம் சிங் யாதவ், லாலு பிரசாத் யாதவ் என்று கட்சிகள் அனைத்துமே தனிச்சொத்தாகவே உள்ளது. (கம்யூனிஸ்டுகள் தவிர.)

அதனால் எந்தத் தொகுதிக்கு யார் வேட்பாளர் என்பதை கட்சியின் உரிமையாளர் தீர்மானிப்பார். பிடிக்காவிட்டால், நீங்கள் பிரிந்துபோய் வேறு கட்சி ஆரம்பிக்கலாம்! அல்லது கட்சியின் மேலிடம் கைகாட்டிய வேட்பாளரைத் தோற்கடிக்க என்ன செய்யவேண்டுமோ அத்தனை கெட்ட காரியங்களையும் கட்சிக்கு உள்ளே இருந்துகொண்டே செய்யலாம்.

ஆனால் அமெரிக்காவில் எந்தப் பதவிக்கு யார் நிற்பது என்பதை கட்சியின் உறுப்பினர்கள் வாக்கு மூலம் தேர்ந்தெடுக்கிறார்கள். இது குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு மட்டும்தான் என்றில்லை! நான் வசித்த சின்னஞ்சிறு இத்தாகாவில் – மொத்த மக்கள் தொகை 30,000-மோ என்னவோ – மேயர் தேர்தலுக்கான வேட்பாளர்களுக்கும் ஒவ்வொரு வார்ட் கவுன்சிலர் பதவிக்கும் இந்த பிரைமரி உண்டு. இதனால் நிஜமாகவே கட்சி மேலிடத்துக்கு ஜிஞ்சா போடாத, தன்மானம் உள்ளவர்கள்கூட மக்களை வசீகரித்தால் தேர்தலில் நிற்கக்கூடிய வாய்ப்பைப் பெறலாம்.

என்றாவது ஒருநாள் இது இந்தியாவிலும் ஏற்படும் என்று நம்புவோம்.

2. எண்டார்ஸ்மெண்ட்: இந்தியாவில் நேரடியாக அரசியலில் ஈடுபடாத, ஆனால் மக்களிடம் நிறைய செல்வாக்கு உள்ளவர்கள் வெளிப்படையாக தேர்தல் தொடர்பான தங்களது கருத்துகளை வெளியிட மாட்டார்கள்.

மக்களிடம் செல்வாக்கு உள்ளவர்கள் என்றால்… பத்திரிகைகள், பத்தி எழுத்தாளர்கள், பேராசிரியர்கள், தொலைக்காட்சி பிரமுகர்கள், சினிமா நடிகர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள், அறிவுஜீவிகள் இத்யாதி, இத்யாதி. எனக்குத் தெரிந்து இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை தவிர்த்து – அதுவும் எதிர்மறையாக மட்டுமே – வேறு எந்தப் பத்திரிகையும் தலையங்கம் எழுதி ஒரு கட்சியை ஆதரித்ததாக நினைவில்லை. ஏன் ஒரு கட்சிக்கு அல்லது ஒரு வேட்பாளருக்கு வாக்களிக்கவேண்டும் என்று தரவுகளுடன் இவர்கள் யாருமே பேசியதில்லை. தமிழகத் தேர்தல் ஒன்றில் ரஜினிகாந்த் திமுகவுக்கு ஆதரவாகக் காட்சி அளித்த ‘பிட்டுப் படம்’ ஒன்று மட்டும்தான் நியூட்ரல் ஆசாமி ஒருவர் கொடுத்த எண்டார்ஸ்மெண்ட்.

பொதுவாக கட்சியிலே உறுப்பினர்களாக இருக்கும் கலைஞர்கள் (நடிகர்கள், எழுத்தாளர்கள்) தங்களது ஆதரவை வெளிக்காட்டி, பிரசாரத்திலும் ஈடுபடுவார்கள். நான் அவர்களைச் சொல்லவில்லை. கட்சி சார்பற்றவர்கள், ஒரு குறிப்பிட்ட தேர்தலில் குறிப்பிட்ட கட்சியையோ, வேட்பாளர்களையோ ஆதரிக்குமாறு சொலவதைச் சொல்கிறேன்.

இது பெரிய அளவில் அமெரிக்காவில் நடக்கிறது. எண்டார்ஸ் செய்பவர்கள், பொதுவாக இவருக்கே எனது வாக்கு என்று மட்டும் சொல்லி, விட்டுவிடுவதில்லை. அதற்குமேல் சென்று, ஏன், எதற்கு என்று சொல்கிறார்கள். இது பாமரர்களுக்கு அல்லது அரசியலை மிகவும் கவனமாகப் பரிசீலிக்க நேரம் இல்லாதவர்களுக்கு நல்ல வழிகாட்டியாக அமையக்கூடும்.

தான் ஆதரவளிக்காத ஒருவர் ஆட்சிக்கு வந்தால் அதனால் தனக்கு என்ன கெடுதல் ஏற்படும் என்ற பயம் இல்லாமையால்தான் இந்த எண்டார்ஸ்மெண்ட் நடக்கிறது. அந்த மாதிரியான முதிர்ச்சியான அரசியல் இந்தியாவில் இல்லை. ‘நமக்கு எதிரா நடந்துகிட்ட இவனை எப்படி டார்ச்சர் கொடுத்து அழிப்பது’ என்பதுதான் இந்திய அரசியலின் அடிநாதம். அதனாலேயே யாரும் வாய்திறந்து சில விஷயங்களைப் பேசுவதில்லை.

இனி வரும் நாள்களில் இந்த முறை மாற்றம் பெறலாம்.

ஓபாமா- கிளிண்டன் – மெக்கயின் – யார் வந்தால் இந்தியாவிற்கு அதிக நன்மை? நாம் இவ்ர்களில் யாரை விரும்புகிறோம்?

இங்கே இந்தியர்கள் கிட்ட தட்ட 3 மில்லியன் பேர் இருக்கிறார்கள். இங்குள்ள எத்னிக் (ethnic ) க்ருப்பில் மூன்றாவது. ஒரளவு பணக்காரர்கள். இவர்கள் யாரை ஆதரிக்கிறார்கள்? எல்லோரும் அமெரிக்காவை மட்டும் நினைக்க நாமோ, இரண்டு நாடுகளையும் நினைக்கிறோம்!
இங்கே பெரும்பாலன இந்தியர்கள் டெமாக்ரட் கட்சியியே அதரவு செய்கிறார்கள். போன தேர்தலில் கிட்டதட்ட 80% சதவிகிதம் இந்தியர்கள் ஓட்டு டெமாக்ரட் கட்சிக்கு கிடைத்தது. நான் அறிந்தவரை ரிபப்ளிகன் கட்சிக்கு மிக மிக பணக்காரர்கள் ஆதரவு இருக்கிறது.

பெரும்பாலோர் immigration கொள்கை காரணம்மாக Democrat party support ஆதரவு என நினைக்கிறேன். இப்போது நிலைமை மாறி ஒரளவு ரிபப்ளிகன் கட்சிக்கும் ஆதரவு உள்ளது.

Louisiana கவர்னராக ஒரு Republican இந்தியர் தேர்ந்து எடுக்கப்பட்டது தெரிந்து இருக்கும். .

அது தவிர White houseல் Deepavali கொண்டாடுகிறார்கள்! கிட்ட தட்ட நாமும் ஒரு Factor என பெருமை பட்டு கொள்ளலாம்! New york, California, New Jersey state ல் கணிசமான வாக்குகள் உள்ளன.

Super Tuesday- இல் நம்முடைய பங்கு பற்றி oru sample article:
************************************************************

Washington, February 6: The three million-strong Indian- American community is believed to have swung the electoral fortunes of major US Presidential hopefuls, including Senators Hillary Clinton and Barack Obama, in the primaries of ‘super Tuesday’.

For Democratic Senators Hillary Rodham Clinton and Barack Obama, the community has not only played a crucial role in the run-up to the primaries both by way of physical and financial support but also with their huge concentrations in big and diverse states may have played even a “swing” role.

Indian-Americans are well dotted across the states of New York and New Jersey, the two major states going to Clinton last night; and Illinois, the home state of Obama, also has a large population of the community that has for the most part thrown its weight behind the son of the soil.

In California, especially where the Indian American community is present in large numbers, their voting impact has certainly helped Clinton get this huge state that offered as many as 441 delegates to the national convention.

There is no saying what would have happened to Clinton if she had lost California.

Exit polls in California showed that Clinton did very poorly among the White and African American population but did spectacularly well with the Asian American community by a three-to-one margin and with the Hispanic community by a two-to-one margin.

****************************************************************************
ஆக பெரும்பான்மை ஜனங்கள் கிளிண்டனையே ஆதரித்து இருக்கிறார்கள்!

ஓபாமா- கிளிண்டன் – மெக்கயின் – யார் வந்தால் இந்தியாவிற்கு அதிக நன்மை?

அணு ஒப்பந்தம்:

முதலில் மெக்கயின்: பெரும்பாலும் புஷ்ஷின் கொள்கைகளே இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

ஓபாமா- கிளிண்டன் : இந்தியாவுடனான அணு ஒப்பந்தம் குப்பை கூடையில் போட chance அதிகம். ஆனால் அதற்கு முன்பு நாமே குப்பை கூடையில் போட்டு விடுவோம் எனத் தோன்றுகிறது.

மற்ற எந்த விஷயதிலும் பெரும் வித்தியாசம் இருக்கும் எனத் தெரியவில்லை. ஆனால் இந்தியாவுடன் ஆன நல்லுறுவு republican time ல் ஆரம்பித்தது என எண்ணுகிறேன். இதற்கு அப்பொதைய காலகட்ட compulsion ம் கூட! [I remember George Bush senior after taking oath, took time to call Rajiv Gandhi and opened a new era in the bilateral relations].

நம்மை அவ்வளவு சுலபாமாயி ஒதுக்கி தள்ள் முடியாது. யார் வந்தாலும் நமக்கான உரிய மரியாதை கிடைக்கும் !!

please opinion your voice…

ரான் பால் – ஏன் வாக்களிக்க ஒப்பவில்லை?

‘ஆளில்லா ஊருக்கு இலுப்பைப்பூ சக்கரை’ என்பது பழமொழி. இராக் போரை எதிர்ப்பவர்களுக்கு இலுப்பைப்பூவாக அகப்பட்டிருப்பவர் முற்போக்குவாதி (லிபரல்/லிபரடேரியன்) ரான் பால். ஜனநாயகக் கட்சியின் தீவிர இடதுசாரி சின்னமாகக் கருதப்படும் டெனிஸ் குசினிச் இலுப்பைப்பூவாக நினைத்துத்தான் ரான் பாலை தேர்ந்தெடுத்திருக்க வேண்டும். (Kucinich suggests a Republican running mate – cleveland.com: “Call it the liberal-libertarian ticket, where left meets right and Democrat Dennis Kucinich picks Republican Ron Paul to be his vice president.”)

இந்த மாதிரி பலரும் ஏமாறக்கூடும் என்பதற்காக, ரான் பால் ஏன் என் வோட்டுக்கு உகந்தவரில்லை என்பதற்காக சில காரணங்கள்:

1. ‘யாதும் ஊரே; யாவரும் கேளிர்‘ – உலகம் முழுவதையும் ‘ஒரு தாய் மக்கள் நாமென்போம்’ என்பதற்காக அமைந்த ஐக்கிய நாடுகள் சபையில் இருந்து அமெரிக்கா விலகவேண்டும் என்கிறார். ஐநா- வை எவ்வாறு மேம்படுத்தலாம் என்று ஆலோசனைகளைக் கூட சொல்லாமல், அமெரிக்காவின் அரசுரிமைத் தாக்கப்படுவதாக குற்றஞ்சாட்டுவது அர்த்தமற்றது.

2. கருக்கலைப்புக்கு செல்லும் க்ளினிக் வாசலில், ‘தைரியாமாகச் சொல்… நீ மனிதன்தானா? என்பது போன்ற சூலச்சிலுவைகளைத் தாங்கி ‘சாகடிக்காதே… கொல்லாதே… ஐயோ… அணுஅணுவாக சித்திரவதை செய்யப்போகிறாயே…’ என்று குத்திவிடுவது போன்ற பயமுறுத்தலுடன் சிசுவதை, கண்ணைக் குத்தும் போன்ற சகல பில்லி சூனியங்களையும் அரங்கேற்றுவார்கள். வன்புணர்வால் பாதிக்கப்பட்டவர், பதின்ம வயதில் பலவந்தப்படுத்தப்பட்டவர் போன்ற கேஸ்களில் கூட அபார்ஷனை எதிர்க்கும் குடியரசுக் கட்சியின் அதிதீவிர பாரம்பரியக் காவலராய், ரான் பால் இருக்கிறார்.

3. இட ஒதுக்கீடு, affirmative action, காலங்காலமாக தாழ்த்தப்பட்டவர்களுக்கு தரப்படும் வாய்ப்பு போன்றவற்றை எதிர்க்கிறார். (அவரின் பிரச்சார தளத்தில் இருந்து: Ron Paul 2008 › Issues › Racism: “Liberty means free-market capitalism, which rewards individual achievement and competence – not skin color, gender, or ethnicity.”)

4. இனவெறியர்: Think Progress » Ron Paul: 95 percent of black men are ‘criminal.’ – கறுப்பர் என்றாலே கொள்ளையடிப்பவர், வன்புணர்பவர், திருடர், கொலையாளி என்று நம்புகிறவர்.

5. வாய்ப்புகளைத் தேடிவருபவர்களைத் தடுப்பவர்: சமீபத்தில் பார்த்த ‘பேபல்’ படத்தில் வருவது போல் மெக்சிகோ போன்ற நாடுகளில் இருந்து சொர்க்கபூமியாக நினைத்து குடிபுகல்பவர்களைத் தடுக்க நினைக்கிறார். (காலச்சுவடின் விமர்சனத்தில் இருந்து: திரை: வேற்று மொழிப் படங்கள் :: கடவுளின் சதி – குவளைக்கண்ணன் | Kalachuvadu |: “பண்டைய பாபிலோனியாவில் சொர்க்கத்தை அடைவதற்காக மனிதர்கள் விண்ணை முட்டும் கோபுரம் ஒன்றைக் கட்டுகிறார்கள். தனது இடத்தை அடைய நினைத்த மனிதர்களின் திமிரைக் கண்ட கடவுள், மனிதர்கள் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளாதபடி செய்து அவர்கள் சொர்க்கத்தை அடையவிடாமல் செய்துவிடுகிறார். மனிதர்கள் கட்டிய அந்தக் கோபுரத்தின் பெயர் பேபல். இந்தக் கதை ஆதியாகமத்தின் 11ஆம் அத்தியாயத்தில் சொல்லப்பட்டுள்ளது.”)

6. அமெரிக்க அடித்தட்டு மக்களின் சம்பளத்தைக் குறைக்க விரும்புகிறவர்: அந்தப் பக்கம் ஹில்லரி ஒன்பதரை டாலருக்கு ஊதியத்தை உயர்த்துவதாக வாக்குறுதி அளித்தால், இவர் இப்போது கிடைக்கும் வருமானத்தை இன்னும் கொஞ்சம் நசுக்கிப் பிழிந்தெடுத்து, வணிகர்களைக் கொழிக்க வைப்பதாக வாக்குறுதி கொடுக்கிறார். (Immigration and the Welfare State by Rep. Ron Paul: “Our current welfare system also encourages illegal immigration by discouraging American citizens from taking low-wage jobs.”)

7. மொழி துவேஷம் பாராட்டுகிறவர்: Immigration and the Welfare State by Rep. Ron Paul: “All federal government business should be conducted in English.” – 2006- ஆம் ஆன்டு மக்கள்தொகை கணக்கெடுப்புபடி 44.3 மில்லியன் ஹிஸ்பானிய மக்கள் அமெரிக்காவில் வசிக்கிறார்கள். கிட்டத்தட்ட ஏழு சதவீத குடிமக்களின் மொழியை மொத்தமாக ஒதுக்க சொல்கிறவர், என்போன்ற தமிழ் பற்றாளர்களின் கோரிக்கையெல்லாம் கண்டுகொள்ளமாட்டார்.

8. கொண்ட முற்போக்கு (லிபரடேரியன்) கொள்கைகளிலேயே முரண்களை வெளிப்படுத்துபவர்: நாட்டின் எல்லைகளை கடுமையாக கண்காணிக்க பேரதிகாரத்தை முன்வைக்கும் சமயத்தில், அரசாங்கத்தை சிக்கென்று வைத்துக் கொள்ள சொல்லும் லிபரல் தத்துவத்தில் இருந்து விலகிச் சென்று குழம்புகிறவர். தனிமனிதனை சுயம்புவாகக் கருதும் தாராளவாதி கட்சியின் கோட்பாடை உயர்த்துவதாக பிரஸ்தாபித்துக் கொள்ளும் அதே வேளையில், பெண்கள் சுயமாக மகவை குறித்த முடிவை எடுக்கும் உரிமையை அரசாங்கத்தின் பிடியில் வைத்துக் கொன்டு கட்டுப்படுத்த நினைக்கிறவர்.

9. பாலியல் வன்முறைக்கு ஆதரவாளர்: “அலுவல் என்றால் ‘அப்படி – இப்படி’ எசகுபிசகாக இருக்கத்தான் செய்யும். சில அட்ஜஸ்ட்மென்ட்களை செய்து கொள்ள இயலாவிட்டால், பிறிதொரு வேலையைத் தேடிக் கொள்ள வேண்டியதுதானே!” என்னும் கருத்தை எண்ணுகிறவர். Ron Paul on Employee Rights (Part 1): Sexual Harassment-What’s the Big Deal? | California Employee Rights Blog: “Why don’t they quit once the so-called harassment starts? …[H]ow can the harassee escape [any] responsibility for the problem?”

10. பெண்களுக்கு வேலையில் பாரபட்சம் ஏற்படுவதை கண்டுகொள்ளாமல் இருக்க சொல்பவர்: “பெண்கள் வடிவாக கண்ணுக்கு லட்சணமாக இருக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பதில் என்ன தவறைக் கண்டீர்கள்? ஆணுக்கும் பெண்ணுக்கும் சம சம்பளம் என்றெல்லாம் கட்டாயப்படுத்தக் கூடாது.” – Ron Paul on Employee Rights (Part 2): Unattractive Women Need Not Apply | California Employee Rights Blog: “The idea that the social do-gooder can legislate a system which forces industry to pay men and women by comparable worth standards boggles the mind…The concept of equal pay for equal work is…an impossible task…. By what right does the government assume the power to tell an airline it must hire unattractive women if it does not want to?”

11. அரசு பள்ளிக்கூடங்களை மூடவேண்டும்: அனைவருக்கும் கல்வி என்பது தற்போதைய முறையிலேயே சாத்தியமாகி இருக்கிறது. பெரும் செல்வந்தர்களுக்கு மட்டுமே சாத்தியப்படக்கூடிய தனியார் கல்விக்கூடங்களை முன்னிறுத்தல், பெற்றோர்களை (அம்மாவை என்று இங்கு வாசிக்கவும்) வீட்டிலே முடக்கி குழந்தைகளுக்கு பாடம் சொல்லித்தர வைத்தல் போன்றவற்றை ஆதரிக்கிறார். Ron Paul 2008 › Issues › Education: “The federal government has no constitutional authority to fund or control schools.”

12. ‘Rich get richer; poor get poorer‘ என்று சொல்லிவிட்டு நூறு கோடிக்கு ‘சிவாஜி’ திரைப்படத்தின் வியாபாரத்தை கவனிப்பது போல், ரான் பாலும் அக்மார்க் அரசியல்வாதி. – Sorry, Mr. Franklin, “We’re All Democrats Now” by Rep. Ron Paul: “Although the motivating factor is frequently the desire for the poor to better themselves through the willingness of others to sacrifice for what they see as good cause, the process is doomed to failure.
.
.
Democracies lead to chaos, violence and bankruptcy.”

நன்றி: Sherry Wolf: Ron Paul, libertarianism, and the freedom to starve to death

குறிப்புகள்: ரான் பால் புலம்புவது போல், மெக்சிகோவில் இருந்து பஞ்சம் பிழைக்க வந்தவர்களுக்கு மருத்துவம் பார்த்தே அமெரிக்க மருத்துவசாலைகள் சீரழிகின்றன என்பதை ஆதாரங்களுடன் மறுக்கும் சில புத்தகங்கள்:

  1. Uninsured in America: Life and Death in the Land of Opportunity: Susan Sered, Rushika Fernandopulle
  2. Medical Apartheid: The Dark History of Medical Experimentation on Black Americans from Colonial Times to the Present: Harriet A. Washington
  3. One Nation, Uninsured: Why the U.S. Has No National Health Insurance: Jill Quadagno

அமெரிக்க அதிபர் தேர்தல் – எம் மணிகண்டன் (தினமணி)

உலகின் வலிமை மிகுந்த தலைவர்களுள் ஒருவராகக் கருதப்படுபவர் அமெரிக்க அதிபர். அவர் அந்நாட்டு நாடாளுமன்றத்துக்கோ, அமைச்சரவைக்கோ கட் டுப்பட்டவரல்ல. எந்தப் பிரச்னையிலும் தன்னிச்சையாக முடிவெடுக்க முடியும்.

அவரைப் பதவியிலிருந்து நீக்குவதும் சாதாரண விஷயமல்ல. தேசத்துரோகம், கொள்ளை போன்ற மோசமான குற்றங்களுக்காக மட்டுமே அவர்மீது நாடாளுமன்றம் குற்றவிசாரணை செய்து பதவியி லிருந்து நீக்க முடியும். வேறு தண்டனை எதுவும் வழங்கிவிட முடியாது. உலகிலேயே ராணுவம், பொருளாதாரம், தொழில்நுட்பத்தில் வல்லரசாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கும் ஒரு நாட்டின் அதிபருக்கு இவ்வளவு அதிகாரங்கள் தரப்பட்டிருக்கின்றன என்பதால் அவரே உலகிலேயே அதிக வல்லமை படைத்தவராகிறார்.

இவருக்கு நேரெதிர் அமெரிக்காவின் துணை அதிபர். காலையில் எழுந்தவுடன், ‘அதிபர் நலமாக இருக்கிறாரா?’ என்பதைக் கேட்டுத் தெரிந்து கொண்டு, மீண்டும் தூங்கப் போய்விடலாம் என்று துணை அதிபரின் பணிகளைப் பற்றி நகைச்சுவை யாகக் குறிப்பிடுவதுண்டு. அதிபருக்கு உடல்நிலை சரியில்லாமல்போய் செயல்படமுடியாத நிலைக்குப் போனாலோ, அவர் இறந்துபோனாலோ துணை அதிபர், அதிபராவார். இது தவிர, செனட் அவையை வழிநடத்தும் பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

அமெரிக்காவில் ஜனநாயகக் கட்சி மற் றும் குடியரசுக் கட்சி ஆகிய இரு தேசிய கட்சிகள் மட்டுமே தற்போது முக்கியக் கட்சிகளாக இருக்கின்றன. மூன்றாவது தேசியக் கட்சி உருவாவதற்கோ, மாநிலக் கட்சிகள் எழுச்சி பெறவோ வாய்ப்பு மிகவும் குறைவு. அதனால் இப்போதைக்கு இரு தேசியக் கட்சிகளின் வேட்பாளர்களே தொடர்ந்து அதிபராகவும் துணை அதிபராகவும் இருந்து வருகின்றனர்.

நாடாளுமன்ற அவைகளையும் இரு கட் சிகளின் உறுப்பினர்கள்தான் நிரப்புகி றார்கள். அரிதாக வேறு கட்சி அல்லது சுயேச்சைகள் இடம்பெறுவதுண்டு.

மற்ற நாடுகளைப் போல் அல்லாமல் அமெரிக்காவின் அதிபர் தேர்தல் நடை முறை மிகவும் சிக்கலானது. தேர்தல் நடப்பதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே அதிபர் தேர்தலில் போட்டியிட விரும்புவோர் முன்னிலைப்படுத்தப்படுகின்றனர்.

தேர்தல் பிரசாரம்:

அதிபர் தேர்தலுக்கான பிரசாரம் இரு கட்டங்களைக் கொண் டது. முதலாவது கட்சிகள் நடத்தும் வேட்பாளர் தேர்தலுக்கான பிரசாரம்.

இரண்டாவது, வேட்பாளர்கள் அறிவிக் கப்பட்டதும் இரு கட்சிகளுக்கு இடையே நடக்கும் போட்டி பிரசாரம்.

பொதுவாக அதிபராக இருப்பவரோ அல்லது துணை அதிபராக இருப்பவரோதான் அடுத்த தேர்தலுக்கு அந்தக் கட்சியின் சார்பில் வேட்பாளராவதற்கான வாய்ப்புகள் அதிகம். எந்தக் கட்சியைச் சேர்ந்தவர் அதிபராக இருக்கிறாரோ அந்தக் கட்சியின் வேட்பாளர் முன்னரே முடிவு செய்யப்பட்டுவிடுவார். அதில் போட்டி இருந்தாலும்கூட, அதில் அவரே வெற்றிபெறுவார். அதிபர் புஷ் இரண்டு முறை பதவி வகித்துவிட்டதாலும் துணை அதிபர் டிக் சீனி போட்டியி டப் போவதில்லை என அறிவித்துவிட்ட தாலும் 2008-ம் ஆண்டுத் தேர்தலில் இந்த நிலை இல்லை.

வேட்பாளர் தேர்தல்கள்:

நமது நாட்டில் நடப்பதுபோல் வேட்பாளர்களைக் கட்சி மேலிடப் பிரதிநிதிகள் மட்டுமே முடிவு செய்வதில்லை. கட்சி உறுப்பினர்களும் பொதுமக்களும் வேட்பாளர்களைத் தேர்வு செய்வதில் முக்கியப் பங்குவகிக்கின்றனர். வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பதற்காகக் கட்சிகளின் மாநிலப் பிரிவு கள் நடத்தும் தேர்தல்களே வேட்பாளர் தேர்தல் எனப்படுகின்றன. ஒரு கட்சியின் சார்பில் அதிபர் தேர்தலில் போட்டியிட விரும்புவோர் இந்தத் தேர்தலில் ஒவ்வொரு மாநிலமாகப் பிரசாரம் மேற்கொண்டு ஆதரவு திரட்டுவார்கள்.

பொதுவாகத் தேர்தல் நடக்கும் ஆண் டின் துவக்கத்தில் இருந்தே வேட்பாளர் தேர்தல்கள் நடக்கின்றன.

வேட்பாளர் தேர்தல்களைப் பொறுத்த வரை ஒவ்வொரு மாநிலமும் வெவ்வேறு நடைமுறைகளைக் கடைப்பிடிக்கின்றன.
கட்சிகளும் வெவ்வேறு விதிமுறைகளைக் கடைப்பிடிக்கின்றன. ஒவ்வொரு மாநிலத்துக்கென இரு கட்சிகளும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பிரதிநிதிகள் வாக்கை ஒதுக்கியிருக்கின்றன. இந்த எண்ணிக்கை நிலையானதல்ல. மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடுவதுடன், கட்சிகளும் தங்களது விதிமுறைகளின்படி வெவ்வெறு எண்ணிக்கையிலான பிரதிநிதிகளை ஒதுக்குகின்றன. எடுத்துக்காட் டாக, 2008-ம் ஆண்டில் நாடுமுழுவதும் சேர்த்து ஜனநாயகக் கட்சிக்கு 4029 பிரதிநிதிகள் வாக்கு உண்டு. வேட்பாளர் தேர்தலில் வெற்றிபெற வேண்டுமானால் 2025 பிரதிநிதிகளின் ஆதரவைப் பெற்றாக வேண்டும்.

குடியரசுக் கட்சியைப் பொறுத்தவரை மொத்த பிரதிநிதிகள் வாக்குகள் 2380. வெற்றிபெறுவதற்கு 1191 வாக்குகள் தேவை.
வேட்பாளர் தேர்தல்கள் காகஸ் மற்றும் பிரைமரி என்ற இரு பிரிவுகளைக் கொண் டது. இவற்றுக்கும் உட்பிரிவுகள் உண்டு.
சில மாநிலங்களில் காகஸ் முறையிலிலும் சில மாநிலங்களில் பிரைமரி முறையிலும் வேட்பாளர் தேர்தலைக் கட்சிகள் நடத்துகின்றன. ஒரு மாநிலத்தில் ஒரு கட்சி காகஸ் முறையில் தேர்தலை நடத்தினா லும் மற்றொரு கட்சி பிரைமரி முறையில் தேர்தலை நடத்தக்கூடும்.

பொதுவாக வேட்பாளர் தேர்தல்கள் முதலில் நடப்பது அயோவா (காகஸ்) மற் றும் நியூஹாம்ப்ஷயர் (பிரைமரி) மாநிலங்களில்தான். இதற்கு எந்தவொரு பிரத்யேகக் காரணமும் இல்லை. ஆண்டுத் தொடக்கத்தில் அயோவாவில் தொடங்கும் வேட்பாளர் தேர்தல்கள் ஜூன் மாதம் வரை ஒவ்வொரு மாநிலமாக நடக்கும்.

இந்தத் தேர்தல்களில் கட்சியின் சார் பில் அதிபர் தேர்தலில் களமிறங்க விரும்புபவர்கள் போட்டியிடுவார்கள். வேட்பாளர் தேர்தலில் பொதுமக்கள் (அல்லது கட்சி உறுப்பினர்கள்) அளிக்கும் வாக்குகளின் அடிப்படையில் அந்தந்தப் போட்டியாளர்களுக்குப் பிரதிநிதிகள் வாக்கு கிடைக்கும். அனைத்து மாநிலங்களிலும் வேட்பாளர் தேர்தல்கள் முடிந்த தும் கட்சிகளின் தேசியக் கூட்டம் நடக்கும். இக் கூட்டத்தில் அதிபர் வேட்பாள ரைப் பிரதிநிதிகள் தேர்வு செய்வார்கள்.

வேட்பாளர்கள் விவாதம்:

இரு முக்கியக் கட்சிகளும் வேட்பாளர்களை அதிகாரப் பூர்வமாக அறிவித்ததும், அவர்கள் இருவ ரும் ஒரே மேடையில் தோன்றி விவாதம் நடத்துவார்கள். தேர்தலுக்கு முன்பாக குறைந்தது 2 முறையாவது இந்த விவாதம் நடக்கும்.

தேர்தல் நாள்:

அமெரிக்க அதிபர் தேர்தல் என்பது அதிபர் மற்றும் துணை அதி பர் ஆகிய இருவருக்குமான தேர்தலாகும்.

இது 220 ஆண்டுகால பாரம்பரியம் கொண்டது. அமெரிக்காவின் அனைத்துத் தேர்தல் நடைமுறைகளும் நாள்காட் டியின் அடிப்படையில் நடத்தப்படுவது சிறப்பம்சம். ஒவ்வொரு லீப் ஆண்டும் நவம்பர் முதல் திங்கள்கிழமைக்கு அடுத்து வரும் செவ்வாய்க்கிழமையில் (இந்த ஆண்டு நவம்பர் 4) அதிபர் தேர்தல் நடக்கிறது. அரசியல் சட்டப்படி தேர்வாளர் குழு மூலமாகவே அதிபர் தேர்ந்தெ டுக்கப்படுகிறார். எனினும் இந்தத் தேர்வாளர் குழுவினர் நேரடியாக மக்களால் தேர்ந்தெடுக்கப்படுவதால் அதிபர் வேட்பாளருக்கு மாநில வாரியாக மக்கள் செல்வாக்கு இருந்தாக வேண்டும்.

அமெரிக்காவின் 50 மாநிலங்கள் மற்றும் மத்திய அரசின் ஆளுகைக்கு உள் பட்ட தலைநகரப் பகுதியான கொலம்பியா மாவட்டம் ஆகியவற்றிலிருந்து ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான தேர்வாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

இந்த எண்ணிக்கை அந்தந்த மாநிலங்களில் உள்ள நாடாளுமன்ற (செனட் மற்றும் பிரதிநிதிகள் அவை) உறுப்பினர்களின் எண்ணிக்கைக்குச் சமம். கொலம்பியா மாவட்டத்துக்கு நாடாளுமன்றத் தில் பிரதிநிதித்துவம் இல்லை என்றபோ திலும் 1964-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சட்டத் திருத்தப்படி 3 தேர்வாளர் களைத் தேர்ந்தெடுக்கலாம்.

கட்சியின் மாநிலத் தலைமை தங்களுக்குரிய தேர்வாளர்களை முன்னரே நியமித் துவிடுகின்றன (இதற்கும் மாவட்ட அளவிலான தேர்தல் மற்றும் பிரசாரம் உண்டு). வாக்காளர்கள் எந்தக் கட்சியின் வேட்பாளரைத் தேர்ந்தெடுக்க விரும்புகிறார்களோ அந்தக் கட்சி நியமித்த தேர் வாளர் குழுவுக்கு வாக்களிக்க வேண்டும்.

அதாவது வாக்குச் சீட்டில் அதிபர் வேட் பாளரின் பெயருக்குப் பதிலாக அவரது கட்சியின் தேர்வாளர் குழுவினரின் பெயர்களோ அல்லது சுருக்கமாக கட்சிக ளின் பெயர்களோ இருக்கும். வாக்காளர்கள் அவற்றில் ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும். பல்வேறு மாநிலங்களிலும் தேர்ந்தெடுக்கப்படும் தேர்வாளர் குழுவினர் பின்னர் கூடி அதிபரைத் தேர்ந்தெடுப்பார்கள்.

ஒரு மாநிலத்தின் அதிக வாக்குகளை (சில மாநிலங்களில் 50 சதவீதத்துக்கும் அதிகமான) வேட்பாளர் ஒருவர் பெற்று விட்டால், அந்த மாநிலத்தின் அனைத்துத் தேர்வாளர் வாக்குகளையும் அவரே பெற்றுவிடுவார். உதாரணமாக ஒரு மாநிலத்தின் தேர்வாளர்கள் குழுவின் எண் ணிக்கை 30 என வைத்துக் கொண்டால் அந்த மாநிலத்தில் நடைபெற்ற தேர்தலில் ஒரு வேட்பாளர் மற்றவர்களைவிட அதிக (அல்லது 50 சதவீதத்துக்கும் அதிக மான) வாக்குகளைப் பெற்றுவிட்டால் அவர் அந்த மாநிலத்தின் 30 தேர்வாளர்க ளையும் பெற்றுவிடுவார் (மெய்ன் மற்றும் நெப்ராஸ்கா ஆகிய மாநிலங்கள் மட்டும் வேட்பாளர்கள் பெறும் வாக்குகளின் விகிதாசார அடிப்படையில் தேர்வாளர்களை ஒதுக்கீடு செய்கின்றன).

தேர்வாளர்கள் அனைவரும் அந்த வேட்பாளரின் கட்சியால் நியமிக்கப்பட்டவர்கள் என்பதால் பின்னர் நடக்கும் அதிபரைத் தேர்ந்தெடுக்கும் கூட்டத்தில் அவருக்கு ஆதரவாகவே வாக்களிப்பார்கள். ஒரு கட்சியால் நியமிக்கப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட தேர்வாளர்கள் மாற்றுக் கட்சி வேட்பாளருக்கு வாக்களிப்பதும் உண்டு.

இதைத் தடுப்பதற்கு சில மாநிலங்களில் சட்டம் இருக்கிறது. ஆனால் இதுவரை யாரும் தண்டனை பெற்றதில்லை.
அமெரிக்க அதிபர் தேர்தல் நடை முறையை உற்று நோக்கினால் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்படுபவர் நாடு முழுவதும் மக்களின் பெரும்பான்மையான வாக் கைப் பெற்றிருக்க வேண்டிய அவசியம் இல்லை என்பது தெரியவரும். அதாவது மாநில ரீதியில்தான் அதிபரின் வெற்றி கணக்கிடப்படுகிறதே தவிர, நாட்டின் ஒட் டுமொத்த வாக்குகளின் அடிப்படையில் அல்ல.

உதாரணமாக 2000-ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளரான புஷ், நாடு முழுவதும் பதிவான வாக்குகளில் 47 சதவீதத்தையும், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஜன நாயகக் கட்சி வேட்பாளர் அல்-கோர் 48 சதவீத வாக்குகளையும் பெற்றனர்.

ஆனால் தேர்வாளர் வாக்குகளின் அடிப்ப டையில் புஷ் வெற்றி பெற்றார்.

அதிபர் தேர்தலை மத்திய அரசு நடத்துவது இல்லை என்பது கவனிக்க வேண் டிய மற்றொரு விஷயம். ஒவ்வொரு மாநிலமும் அந்தந்த மாநில சட்டத்துக்கும் மத்திய அரசியல் சட்டத்துக்கும் உட்பட்டு வெவ்வேறு முறைகளில் ஒரே நாளில் தேர்தல்களை நடத்துகின்றன. அதிபரைத் தேர்ந்தெடுக்கும் தேர்வாளர்களைத் தேர்ந்தெடுப்பது மட்டுமே தேர்தலின் நோக்கம்.

நாடு முழுவதும் 538 தேர்வாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இது நாடாளுமன்ற செனட் அவை (ஒரு மாநிலத்துக்கு 2 உறுப்பினர் வீதம் மொத்தம் 100) உறுப்பினர்களின் எண்ணிக்கை, பிரதிநிதிகள் அவை (மொத்தம் 435) உறுப்பினர்களின் எண்ணிக்கை, கொலம்பியா மாவட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட தேர்வாளர்களின் எண்ணிக்கை (3) ஆகியவற்றின் கூடுதலுக்குச் சமம்.

தேர்வாளர்கள் கூட்டம்:

மாநிலங்களில் நடக்கும் தேர்தல்களின் முடிவுகள் வெளியானதுமே அதிபர் யார் என்பது கிட்டத் தட்ட முடிவாகிவிடும். ஏனெனில் எந்த வேட்பாளருக்கு எத்தனை தேர்வாளர்கள் இருக்கிறார்கள் என்பது தெரிந்துவிடும்.

தேர்தல் முடிந்த பிறகு, வரும் டிசம்பர் மாதத்தின் இரண்டாவது புதன்கிழ மைக்கு அடுத்துவரும் திங்கள்கிழமையன்று அந்தந்த மாநிலத் தலைநகரங்க ளில் (கொலம்பியா மாவட்டத்துக்கு வாஷிங்டனில்) கூடுவார்கள். ஆக, 51 இடங்களில் ஒரே நேரத்தில் தேர்வாளர்கள் கூட்டங்கள் நடக்கும். வாக்குச் சீட்டு அல்லது வெற்றுத்தாள் மூலமாக அதிபருக்கான வாக்கைத் தேர்வாளர்கள் அளிப்பார்கள். நடைமுறையில் பெரும் பாலான மாநிலங்களில், அனைத்து வாக்குகளும் ஒரே வேட்பாளருக்குச் செல்லும். அதிபர் தேர்தலுக்கான முடிவு அறி விக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே அதே நடைமுறைப்படி துணை அதிபருக்கான தேர்தலும் நடக்கும்.

மொத்தமுள்ள 538 தேர்வாளர் வாக்குகளில், ஒரு வேட்பாளர் குறைந்தபட்சம் 270 வாக்குகளைப் பெற்றால் அவர் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்படும். சில நேரங் களில் எந்த வேட்பாளரும் 270 வாக்குகளைப் பெறாவிட்டால், அதிபரைத் தேர்ந் தெடுக்கும் பொறுப்பை நாடாளுமன்ற பிரதிநிதிகள் அவை ஏற்கும். நடைமுறையில் இரண்டு வேட்பாளருக்கு அதிகமானோர் தேர்தலில் போட்டியிட்டாலோ அல்லது இரு வேட்பாளர்களும் 269 வாக் குகளைப் பெற்றாலோ இந்த நிலை ஏற்படலாம். இதுவரை 1800-களில் இருமுறை மட்டுமே நாடாளுமன்ற பிரதிநிதிகள் அவை மூலம் அதிபர் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.

டாக்டர். ரான் பால்: சில பதில்கள்

எனது அமெரிக்காவின் காந்தி: டாக்டர் ரான் பால் என்ற பதிவிற்கு வந்த கேள்விகளுக்கு எனக்கு தெரிந்தவரை இங்கு பதிலலித்துள்ளேன்.

வருமான வரி கட்டாமல் அரசை ஏய்ப்பவரும் ‘கான்ஸ்டிடியூஷன்’ சொல்கிறபடிதான் நடக்கிறார்களா?

வருமான வரியே தேவையற்றது எனும் போது, வருமான வரி கட்டாதவர்கள் தவரிழைப்பவர் ஆக மாட்டார்கள். நீங்கள் FOX Business news பார்ப்பவர்களாக இருந்தால் பீட்டர் ஹிப் பற்றித் தெரிந்திருப்பீர்கள். அவரது தந்தை இர்வின் ஹிப் பற்றியும் படித்துப் பாருங்கள். சில உண்மைகள் புரியும்.

வசதியாக வாழ்பவர்கள் வரி கட்டாமல் இருப்பது நாட்டிற்கு நன்மை விளைவிக்குமா?

மிக நல்ல கேள்வி. இதற்கு சுருக்கமாக பதில் சொல்வது இயலாது. இருந்தாலும் முடிந்தவரை முயற்சிக்கிறேன். 1) குடியரசு கட்சியின் கொள்கையே சிரமப்பட்டு வேலை செய்பவன், அரசாங்கத்தை எதிர்பார்க்காமல் முழு பலனையும் அனுபவிக்க வேண்டும் என்பது. அரசாங்கம் எல்லாம் செய்து கொடுக்கும் என்று எண்ணுபவர்கள் பெரும்பாலும் ஜனநாயக கட்சியை ஆதரிப்பவர்கள். ஆனால் தற்போது இரண்டு கட்சிக்களின் கொள்கையிலும் பெரிய வித்தியாசம் இல்லை. இருவரில் யார் அதிக சமதர்மவாதி (social) என்ற போட்டி நடந்து கொண்டிருக்கிறது. பணக்காரனிடம் வாங்கி எழைகளுக்குக் கொடுக்கும் சமதர்மம், நடைமுறையில் அவ்வளவு சாத்தியமில்லை என்பது அமெரிக்காவில் ஏழைகளின் எண்ணிக்கை பெருகுவதிலும், மத்திய வர்க்கத்தின் எண்ணிக்கை குறைவதிலும், ஏழை-பணக்கார வித்தியாசம் அதிகமாவதிலும் தெரிகிறது. 2) எனக்குத்தெரிந்த வரை ரான் பால் வருமான வரியை மட்டும்தான் வேண்டாம் என்கிறார். மற்ற வரிகளை அல்ல. காரணம்: Federal reserve அந்தப் பணத்தை என்ன செய்கிறது என்பது தெளிவாக இல்லை. அவ்வளவு பணத்தையும் வீணாக செலவு செய்ததால் இப்போது ஒவ்வொரு அமெரிக்கனும் பெரும் கடனாளியாகிக் கொண்டிருக்கிறான். இதற்கு பதிலாக, சிரமப்பட்டு வேலை செய்கிற ஒவ்வொருவரும் அதன் பலனை, அரசாங்கத்திற்கு கொடுத்துவிட்டு அவர்களை எதிர்பார்க்காமல், தானே அனுபவித்தல் சிறப்பு. நேரம் கிடைத்தால் இந்த வீடியோவைப் பாருங்கள்.

இராக்கின் மீது போர் தொடுத்தது தப்பு; ஆனால், நீங்கள் ‘ஆப்கானிஸ்தானை தாக்கியது மட்டும் சரி’ என்று சொல்வது ஏன்?

டாக்டர். ரான் பால் ஆப்கானிஸ்தானை தாக்கியது சரியென்று சொல்லவில்லை. 9/11 -க்குப் பிறகு நடந்த காங்கிரஸ் ஓட்டெடுப்பில் புஷ்ஷின் செயல்களுக்கு ஆதரவாக ஓட்டழித்தது உண்மைதான். அவர் எதிர்பார்த்தது பின் லேடனை குறிவைத்துத் தாக்குவதைத்தான். ஆனால் நடந்ததோ ஈராக்கை ஆக்கிரமிப்பதும், முசரப் போன்ற சர்வாதிகாரியிடம் பணத்தைக் கொட்டுவதும், ஈரான் மீது போரைத் தொடங்குவதும். MTV-யில் கொடுத்தப் பேட்டியில் இதைப்பற்றி (3-வது பதில்) கூறியிருக்கிறார்.

தற்போதைய ஜனாதிபது புஷ் முதற்கொன்டு அனைத்து அமெரிக்க அதிபர்களும், ஆப்பிரிக்காவிற்கு (கிள்ளுக்கீரை அளவாவது) உதவுவதை தார்மீக நெறியாகக் கொண்டிருக்கிறார்கள். நீங்களோ… அள்ளி வழங்குவது இருக்கட்டும்; ‘ஐ.நா., உலக வங்கி போன்ற எல்லாமே குப்பை’ என்று தாங்கள் சொல்கிறீர்கள். எனவே, ஆப்பிரிக்கா போன்ற இல்லாதோருக்கு கை கொடுப்பதும் அமெரிக்காவின் ‘கான்ஸ்டிடியூஷனிற்கு’ எதிரான ஒன்றுதானா?

டாக்டர். ரான் பால் முந்தைய பதிலில் உள்ள வீடியோவில் முதல் கேள்விக்கான பதிலில் கூறியதில் இருந்து நான் அறிந்து கொண்டது, அவர் அமெரிக்க அள்ளி வழங்குவதை எதிப்பதில்லை. அவர் கருதுவது அந்தப்பணம் பெரும்பாலான சமயத்தில் சரியான மக்களுக்குச் சென்றடவதில்லை, அதை யாரும் சரியாக கவனிப்பதில்லை என்றுதான். மேலும் இப்போதைய அமெரிக்க பொருளாதாரத்தைக் கருத்தில் கொண்டால், நீண்ட நாட்களுக்கு சீனா போன்ற நாடுகளிடம் கடன் வாங்கியும், வெறும் காகிதப்பணத்தை அச்சடித்தும் வீண் செலவு செய்ய முடியாது. அது சரியென்றே படுகிறது.

அமெரிக்காவில் எனக்குப் பிறந்த குழந்தை, இந்த நாட்டின் பிரஜையாக மாறுகிறது. முறையற்ற வழியில் குடிபுகலை தடுப்பது வேறு; இந்த மாதிரி நியாயமாக எச்1-பி வைகயறாவில் வந்து பெற்றுக் கொள்ளும் புதிய தலைமுறையையும் அமெரிக்க குடிமகளாக ஆகாமல் இருக்க வைக்க வேண்டும் என்பது சுயநலத்தின் உச்சமல்லவா? அமெரிக்காவே குடிபுகுந்தவர்களால் உருவான நாடு என்பதை நினைவில் நிறுத்திப் பார்த்தால், தாங்கள் கூறும் ‘கான்ஸ்டிடியூசனுக்கும்’ எதிரானது அல்லவா?

டாக்டர். ரான் பால் அவர்களது குடியேறுதல் பற்றிய அவரது கொள்கை விளக்கத்தில், சட்ட விரோதமாக வந்தவர்களின் குழந்தை தானகவே குடியுரிமை பெருவதைத்தான் எதிர்ப்பதாகத்தான் எனக்குப் புரிகிறது. அது எனக்கு நியாயமாகவும் படுகிறது. உண்மையாக சொல்லப்போனால், சில விசயங்களில் நம்மை போன்று சட்டதிற்குட்பட்டு வருபவர்களை விட சட்ட விரோதமாக வருபவர்களுக்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக படுகிறது. உதாரணமாக நியூயார்க் நகரத்தில் சட்ட விரோதமாக இருப்பவர்களுக்கு ஓட்டுனர் உரிமம் அளிப்பது பற்றி விவாதம். என்னைப் பொருத்தவரை சட்ட விரோதமாக வருபவர்களுக்கு எந்த உரிமையும், வேலையும், சலுகைகளும் கொடுக்கக்கூடாது. இவைகள் கிடைப்பதால்தான் ஒவ்வொருதினமும் பல மெக்சிகோவினர் எல்லையைக் கடக்க முற்பட்டு உயிரிழக்கின்றனர். ரான் பால் கூறுவது போல், அமெரிக்க பொருளாதாரம் நன்றாக இருக்கும்போது இதெல்லாம் ஒரு பிரச்சினையே இல்லை. இப்போது பொருளாதாரம் விழ்ந்து கொண்டிருக்கும்போது எல்லாவற்றையும் கருத்தில் கொள்ளவேண்டியுள்ளது. 14-வது மசோதா திருத்தத்தின் படி சட்ட விரோதமாக வருபவர்களின் குழந்தைகள் தானாகவே குடியுரிமை பெருவது அனுமதிக்கப்பட்டுள்ளது. ரான் பால் அந்த திருத்தத்தை எதிர்க்கிறார். அவருடன் நான் உடன்படுகிறேன்.