அமெரிக்காவில் இன்று நடந்த ஜனாதிபதி வேட்பாளர்களுக்கான தேர்தல்களில் குடியரசு கட்சி சார்பாக ஜான் மெக்கெயினும், ஜனநாயகக் கட்சி சார்பாக பராக் ஒபாமாவும் வென்றனர்.
ஒபாமா கடந்த எட்டு மாகாணங்களைத் தொடர்ச்சியாக வென்றதன் மூலம் பெரும்பான்மை பிரதிநிதிகளை ஹில்லரி க்ளின்டனிடமிருந்து கைப்பற்றியிருக்கிறார். எனினும் மார்ச் 4 நடக்கும் அடுத்த கட்ட ப்ரைமரிகளில் ஹில்லாரி தலைதூக்கினால் மீண்டும் முன்னிலை பெறமுடியும்.
அடுத்த செவ்வாய் அன்று, இரண்டு மாகாணங்கள் – விஸ்கான்சினும் ஹவாயும் வாக்களிக்க இருக்கிறது.
மார்ச் நான்கு வாக்குப்பதிவு நடக்க இருக்கும் டெக்சாஸில், இன்று நடந்த மேரிலாந்து மாகாணம் போலவே – பெருமளவில் ஆப்பிரிக்க-அமெரிக்கர்கள் இருப்பதும் அவர்களில் பெரும்பானமையோர் ஒபாமாவுக்கு வாக்களிப்பதும் குறிப்பிடத்தக்கது.
அனைத்துப் போட்டிகளிலும் வென்றதன் மூலம் மெகெயின் பலமடைந்திருந்தாலும், வெர்ஜீனியாவில் இழுபறியாக ஊசலாடி நூலிழையில் மைக் ஹக்கபீயை தோற்கடித்திருக்கிறார். எவாஞ்சலிகல் கிறித்துவர்களின் வாக்கையும், குடியரசு கட்சியின் பாரம்பரிய (பழமைவாத) வாக்காளர்களின் நம்பிக்கையைப் பெறவும் மேலும் முயற்சியெடுக்க வேண்டும் என்று நோக்கர்கள் அபிப்ராயம் தெரிவித்துள்ளார்கள்.
Posted in ஒபாமா, குடியரசு, செய்தி, ஜனநாயகம், மெக்கெய்ன்
குறிச்சொல்லிடப்பட்டது அமெரிக்கா, ஒபாமா, கிளின்டன், ஜான், தேர்தல், தோல்வி, ப்ராக், ப்ரைமரி, முடிவுகள், மெக்கெயின், மைக், வாக்கு, வெற்றி, ஹக்கபி, ஹில்லரி