Tag Archives: Sonia

ஏலம் ஆரம்பம்: ஐபிஎல் தேர்தல்

Thuglaq-Images-Cartoons-Congress-BJP-Third-Front-IPL-Players-Leaders

Why should you vote for DMK Alliance?

India Elections 2009: Cartoons: The New Yorker

கார்ட்டூன்: இந்திய அரசியலும் தமிழக எம்பி பேரங்களும்

Congress: கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை

நன்றி: தினமணி

தொடர்புள்ள பதிவு: Who will win? Congress vs BJP: Neeraja Chowdhry: India Elections 2009 Analysis « தேர்தல் முடிவு எப்படி இருக்கும்?: “தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குப் பின்னடைவு :: நீரஜா சௌத்ரி

கடந்த தேர்தலை விட காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் குறைகிறது; கூட்டணி கட்சிகள் நெருக்கடிக்கு பணிந்தது

2004-ம் ஆண்டு பாராளு மன்றத்தேர்தலின் போது மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் 417 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி போட்டியிட்டது.

இதில் 150 தொகுகளில் தான் காங்கிரஸ் கட்சியால் வெற்றி பெற முடிந்தது. இந்த தடவை அதிக இடங்களில் போட்டியிட்டால் தான், கடந்த தடவை வென்ற 150 தொகுதிகளை விட கூடுதல் இடங்களை பெற முடியும் என்று காங்கிரஸ் தலைவர்கள் கருதினார்கள். இதற்காக மாநில கட்சிகளிடம் காங்கிரஸ் பேச்சு நடத்தி வருகி றது. ஆனால் காங்கிரஸ் நினைத்த படி எதுவும் நடக்கவில்லை.

கூட்டணி கட்சிகள் எல்லாம் தாங்கள் அதிக தொகுதிகளை வைத்துக் கொண்டு சிறிதளவு இடத்தையே காங்கிரசுக்கு விட்டுக் கொடுக்க முன் வந்துள்ளன.

  • உத்தரபிரதேசத்தில் முலாயம் சிங்,
  • பீகாரில் லல்லு பிரசாத்,
  • மராட்டியத்தில் சரத்பவார்,
  • மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜி

ஆகியோர் மிக, மிக குறைந்த தொகுதிகளையே காங்கிரசுக்கு கொடுக்க உள்ளனர்.

காஷ்மீரில் உள்ள தேசிய மாநாட்டு கட்சியும் காங்கிரசுக்கு குறைவான இடங்களைத் தான் தர முடியும் என்று கூறி உள்ளது. இது காங்கிரசுக்கு நெருக்கடியாக மாறி உள்ளது. உத்தரபிரதேசத்தில் கடந்த தடவை காங்கிரஸ் கட்சி மொத்தம் உள்ள 80 தொகுதிகளில் 73 தொகுதி களில் போட்டியிட்டு 9 இடங்களில் வெற்றி பெற்றது. இந்த தடவை முலாயம்சிங் யாதவின் சமாஜ் வாடி கட்சியுடன் நட்பை ஏற்படுத்தியுள்ள காங்கிரசுக்கு 17 முதல் 20 தொகுதிகள் வரையே கிடைக் கும் என்று தெரிகிறது. எனவே கடந்த தேர்தலுடன் ஒப்பிடுகையில் இந்த தடவை சுமார் 30 இடங்களை காங்கிரஸ் இழக்கும் என்று தெரிகிறது.

DMDK Vijaikanth Alliance Partner Cartoons

DMDK Vijaikanth Alliance Partner Cartoons

காங்கிரஸ் கட்சிக்கு இந்த தடவை ஆந்திரா, தமிழகம் இரு மாநிலங்கள் மட்டுமே ஆறுதலாக அமைந்துள்ளன. ஆந்திராவில் கணிசமான தொகுதிகளை பெற்று வெற்றி பெற முடியும் என்று சோனியா நம்பிக்கையுடன் உள்ளார்.

தமிழ்நாட்டில் கடந்த தடவை 10 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிட்டது. இந்த தடவை 20 தொகுதிகள் வரை தி.மு.க.விடம் காங்கிரஸ் கேட்கிறது. காங்கிரசுக்கு 12 முதல் 15 இடங்கள் வரை தி.மு.க. கொடுக்கும் என்று கூறப்படுகிறது.

Number of Seats & Vote Percetage of Congress

Seats & Votes

தொகுதிகள் எண்ணிக்கை குறைவது பற்றி காங்கிரஸ் பொதுச் செயலாளர்களில் ஒருவர் கூறுகையில், “கூட் டணி கட்சிகளுக்கு உரிய இடம் கொடுக்க வேண்டிய பொறுப்பு காங்கிரசுக்கு உள்ளது. அது தான் கூட்டணி தர்மமாகும். இது எங்களுக்கு அதிக பலத்தை தரும்” என்றார்.

ஈழமும் திமுகவும்: ‘அடடே’ மதி: தினமணி கருத்துப்படங்கள்

பழைய இந்தியா: மாறியிருக்கிறதா?

நன்றி: india source:life – Google Image Search | LIFE photo archive hosted by Google

பாகிஸ்தானுடன் மட்டும் உறவு கொண்டாடுகிறாரா ஒபாமா?

India reels over Obama’s silence

Asia Times Online :: South Asia news, business and economy from India and Pakistan: By: M.K. Bhadrakumar

India’s leaders are miffed that United States president-elect Barack Obama didn’t give them a telephone call, as he did numerous heads of state around the world — including Pakistan’s.

    அலசலில் இருந்து சில முக்கியபுள்ளி:

    • ருசியாவைப் போல் மன்மோகனும் நடந்து கொள்ளலாம். ஜெயித்தவுடன் Dmitry Medvedevஐ ஒபாமா அழைக்கவேயில்லை. பொறுத்திருந்து பார்த்த டிமிட்ரி தானே தொலைபேசியை சுழற்றி ஒபாமாவை அழைத்து வாழ்த்து சொல்லி, செய்தியையும் ஊடகங்களில் பரப்பிவிட்டார். புலம்பி சோம்பவில்லை.
    • காஷ்மீர் பிரச்சினையைத் தீர்த்துவைக்க முன்னாள் அதிபர் பில் கிளின்டனை, ஒபாமா நியமிக்கக் கூடும்.
    • பில் க்ளிண்டனைப் போலவே காஷ்மீரத்துக்கு தனி தூதுவரையோ ஆலோசகரையோ ஒபாமா வைத்துக் கொள்வதன் மூலம் ‘காஷ்மீர் சுதந்திர நாடு‘ என்னும் கொள்கைக்கு வலிமை சேர்ப்பார்.
    • சீனாவின் அதிகாரத்தை மட்டுப்படுத்த, ‘இந்தியாவிற்கு அதிக முக்கியத்துவம் கிடைக்கும்‘ என்று இந்தியா பகல் கனவு காண்கிறது.
    • அமெரிக்கப் பொருளாதாரம் ஆட்டங்கண்டுள்ள இந்த நேரத்தில், சீனாவின் நிதியை ஒபாமா பெரிதும் நம்பியுள்ளார்.
    • பெர்சிய வளைகுடாவில் இருந்து மலாக்கா நீரிணை வரை இந்தியாவை இராணுவ உதவிக்கு உறுதுணையாக நம்பியிருந்த ஜார்ஜ் புஷ் பதவிக்காலம் முடிந்துபோய்விட்டது.
    • அதே போல், முந்தைய குடியரசு கட்சி ஆட்சியில் இருந்தபோது, ஆப்கானிஸ்தானுக்குள் இந்தியா நுழையவும் அடிகோல்வதற்கான முயற்சிகளை வைத்திருந்தது.
    • இந்த மாதிரி காரணங்களினால் சீன எண்ணெய்க்குழாய் பாதிக்கப்படலாம் என்பதால் —

      • அருணாச்சல் பிரதேசத்திற்குள் சீனா அத்துமீறல்களை வைத்தது
      • இந்திய – அமெரிக்க அணு ஒப்பந்தத்திற்கு கம்யூனிஸ்ட்கள் முரண்டியது
    • அமெரிக்கா உடன் இந்தியா கையெழுத்திட்ட அணு சக்தி ஒப்பந்தத்தில் கருத்து வேறுபாடு எழும். அமெரிக்காவில் கையெழுத்திட்ட புஷ் இனிமேல் இல்லை. இந்தியாவில் ஒப்புக்கொண்ட மன்மோகன்/காங்கிரஸ் பதவி இழக்கலாம். அணு ஆயுத சோதனைத் தடை ஒப்பந்தத்தை (CTBT) இந்தியா பின்பற்ற ஒபாமா விரும்புகிறார்.

    தனக்குரிய மரியாதையை அமெரிக்கா தந்து தன்னை உயர் ஸ்தானத்தில் வைக்க வேண்டும் என்று இந்தியா நினைக்கிறது. பாகிஸ்தானும் ஒன்றுதான்; இந்தியாவிற்கும் அதே தட்டுதான் என்று சமன்படுத்தப் பார்க்கிறார் பராக் ஒபாமா.

    இது காஷ்மீரில் பிரிவினைவாதிகள் வளரவும், இந்தியாவிற்கு கோபமும் வரவைக்கும்.


    தொடர்புள்ள செய்திகள்:

    Obama tried to speak to me: PM: “இந்தியாவை ஒபாமா ஒதுக்கவில்லை – பிரதமர்”

    அமெரிக்க அதிபராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள பராக் ஒபாமா தன்னுடன் தொலைபேசியில் பேச முயன்றதாகவும், தனது வெளிநாட்டுப் பயணம் காரணமாக பேச முடியாமல் போய்விட்டதாகவும் பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.

    கத்தாரிலிருந்து நேற்றிரவு டெல்லி திரும்பும் வழியில் விமானத்தில் நிருபர்களிடம் பேசிய பிரதமர், இந்தியாவை ஒபாமா ஒதுக்குகிறார், அதனால் தான் என்னுடன் இன்னும் பேசவில்லை என்பதெல்லாம் புரளிகள். கடந்த 8ம் தேதியே அவர் என்னைத் தொடர்பு கொள்ள முயன்றுள்ளார்.

    ஆனால், அந்தத் தொடர்பை மேற்கொள்ள (to establish contact) மிகச் சிறிய கால அவகாசமே இருந்தது. அதற்குள் எனது திட்டப்படி நான் ஓமன் கிளம்ப வேண்டியதாகிவிட்டது. தொடர்ந்து 3 நாட்களாக பயணத்திலேயே இருக்கிறேன். இதனால் தான் பேச முடியவில்லை.

    முன்னதாக காஷ்மீர் பிரச்சனையைத் தீர்த்தால் தான் இந்தப் பிராந்தியத்தில் தீவிரவாதம் ஒழியும் என ஒபாமா கூறியுள்ள கருத்து இந்தியாவுக்கு அதிர்ச்சி தந்துள்ளது. இது இரு நாட்டு விவகாரம், இதில் மற்றவர்கள் தலையிட வேண்டியதில்லை என வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.


    என்னைப் புறக்கணித்தாரா ஒபாமா: பிரதமர் விளக்கம்

    அதிபராகத் தேர்வு பெற்ற பின்னர் பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி உட்பட 15 நாட்டுத் தலைவர்களுடன் ஒபாமா தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.

    அமெரிக்காவில் 'ஒபாமாவுக்காக தமிழர்கள்' – அதிபர் தேர்தல் பதிவுகள்

    1. சாரா பேலினும் சோனியா காந்தியும் :: முனைவர் நாகேஸ்வரி அண்ணாமலை

    ஏ.பி.ஸி. (ABC) என்னும் டி.வி. நிறுவனம் இவரைப் பேட்டி கண்டபோது என்னென்னவோ உளறியிருக்கிறார். ‘ஜனாதிபதி புஷ்ஷின் கோட்பாடு பற்றி என்ன நினைக்கிறீர்கள்?’ என்று நிருபர் கேட்டதற்கு, ‘அவருடைய கொள்கையின் எந்த அம்சம் பற்றிக் கேட்கிறீர்கள்?’ என்று கேட்டு மழுப்பியிருக்கிறார்.

    ‘ரஷ்யாவுக்கு மிக அருகில் உங்கள் மாநிலம் இருக்கிறதே. ரஷ்யா கடந்த இரண்டு வாரங்களில் நடந்துகொண்டது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?’ என்ற நிருபரின் கேள்விக்கு ‘அலாஸ்காவிலிருந்து ரஷ்யாவைப் பார்க்கலாம்’ என்று விடை அளித்திருக்கிறார் பேலின். அப்படியும் விடாமல் நிருபர் ‘ஜார்ஜியாவில் ரஷ்யா நடந்துகொண்டது பற்றி உங்கள் அனுமானம் என்ன?’ என்று கேட்டதற்கும் சரியான பதில் அளிக்கவில்லை.

    இந்தப் பேட்டி நடந்த அன்றே (செப்டம்பர் 11, 2008) பேலினுடைய மகனும் மற்றும் சிலரும் ஈராக்கிற்குக் கிளம்பிய சந்தர்ப்பத்தில் பேலின் பேசிய உரையில் ‘இன்று அமெரிக்கக் கட்டடங்களை வீழ்த்தி ஆயிரக்கணக்கான அமெரிக்கர்களின் இறப்பிற்குக் காரணமாக இருந்த நம் எதிரிகளோடு இவர்கள் போர் புரியப் போகிறார்கள்’ என்றார். ஈராக்கிற்கும் ஈராக்கை ஆண்ட சத்தாம் ஹுசேனுக்கும் 2001ஆம் வருஷம் செப்டம்பர் மாதம் பதினோராம் தேதி அமெரிக்காவில் நடந்த சம்பவத்திற்கும் சம்பந்தம் எதுவும் இல்லை என்று புஷ்ஷே மறைமுகமாக ஒப்புக்கொண்ட பிறகும் அது பற்றி பேலினுக்குத் தெரியாமல் இருப்பது எவ்வளவு பயங்கரமான விஷயம் என்கிறார்கள்.

    சென்ற வருடம்தான் பாஸ்போர்ட் பெற்ற, அமெரிக்க வெளியுறவு பற்றியும் உள்நாட்டுப் பாதுகாப்பு பற்றியும் எதுவும் தெரியாத இந்த பேலினைத் தேர்ந்தெடுத்திருப்பதன் மூலம் குடியரசுக் கட்சி ஓட்டுப் போடும் தகுதி பெற்ற அமெரிக்கக் குடிமக்களை இழிவுபடுத்தியிருக்கிறது என்று நியுயார்க் டைம்ஸ் பத்திரிக்கை அங்கலாய்க்கிறது.


    2. வீரகேசரி: பதிவு! – Pathivu.com: “அமெரிக்கத் தேர்தல் மாற்றத்திற்கு வித்திடுமா? – நோர்வேயிலிருந்து வெற்றித் திருமகள்”

    செனட்டர் பராக் ஒபாமா 158.5 மில்லியன் அமெரிக்க டொலரையும், செனட்டர் ஹிலரி கிளின்டன் 140.7 மில்லியன் அமெரிக்க டொலரையும், ஜனாதிபதி வேட்பாளர் ஜோன் மக்கெயின் 58.4 மில்லியன் அமெரிக்க டொலரையும் செலவிட்டிருப்பதாக ஓர் அண்ணளவான கணிப்பீடு ஒன்று தெரிவிக்கின்றது.ஆசிய பிராந்தியத்திலே விவசாயத்துறைக்கு அளிக்கப்படாத முக்கியத்துவத்தினால், ஏறத்தாழ 218 மில்லியன் மக்கள் பட்டினிச்சாவை எதிர்கொள்ளும் இவ்வேளையில் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கு இவ்வளவு நிதித்தொகை செலவிடப்படுவது அவசியம்தானா என தமது ஆதங்கங்களையும் விசனங்களையும் பல ஊடகங்கள் எழுப்பி நிற்கின்றன.


    3. News view – TamilWin.com:

    அமெரிக்காவிலுள்ள தமிழர்களை உள்ளடக்கிய ‘ஒபாமாவுக்கான தமிழர்கள்‘ என்ற அரசியல் செயற்பாட்டுக் குழுவானது ஜனாதிபதித் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளரான பராக் ஒபாமாவுக்கு ஆதரவு வழங்குவதாக அறிவித்திருக்கிறது.

    ‘ஒபாமாவுக்கான தமிழர்கள் அமைப்பு’ வெளியிட்டுள்ள அறிக்கையில்; “இலங்கைப் பிரச்சினைக்கான தீர்வானது பொஸ்னியாவையோ அல்லது மொன்ரிநிக்ரோ, கிழக்குத்தீமோர், கியூபெக், ஸ்லோவாக்கியா, கொசோவா போன்ற நாடுகளில் ஏற்பட்ட தீர்வைப் போன்று அமைய முடியும். தூதுவர் ரிச்சட் கோல்புக்கின் நிபுணத்துவத்தை பயன்படுத்தக் கூடியதாக இருக்கும் என்று நாம் கருதுகிறோம்” என்று அமைப்பின் பேச்சாளர் கூறியுள்ளார்.


    4. மணிக் கூண்டு: அமெரிக்காவின் நிறப்பற்று!!! | மயிலாடுதுறை சிவா: ஓபாமாவிற்காக ஓர் நாள்!