Tag Archives: Dead

முத்துக்குமாரும் காந்தியும்: கேள்விகள்

1: தற்கொலை குறித்து உங்கள் கருத்தென்ன?

2. உயரிய லட்சியங்களுக்காக தன்னை வருத்திக் கொள்வதும், தற்கொலை செய்து கொள்வதும் அதற்கு வீரவணக்கம் செய்வதும் பாராட்டுக்குரிய செயலா?

3. அடைய வேண்டிய இலக்கிற்காக வழிமுறையில் சில சமரசங்களை செய்து கொள்ளலாமா?

4. கணவன் இறந்தவுடன் மனைவியையும் தீக்குளிக்க வைப்பது சரிதானா?

5. வாழ்க்கையின் பாரத்தைத் தாங்க இயலாதவர்கள் தற்கொலை மேற்கொள்கிறார்களா?

6. மற்றவர் மேல் எல்லா சுமையையும் போட்டுவிட்டு, தான் தீக்குளித்து விடுதலைப் பெற்றுக் கொள்கிறார்களா?

7. கிறித்துவத்தில் பாவமன்னிப்பு; பௌத்தத்தில் கர்மா; இஸ்லாமின் சொர்க்கம் போல் இல்லாமல் இந்து மதத்தில் மறுபிறவி போன்ற கருத்தாக்கங்கள்தான் தியாகத்தின் சின்னமாக அர்ப்பணிக்க வைக்கிறதா?

8. உயரிய இடங்களை அடைய முடியாதவர், மற்றவரைக் கண்டு பொறாமைப்படுபவர், அடுத்தவரின் மதிப்பிற்கு ஆசைப்படுபவர்களை எல்லாம், இந்த வீரவணக்க நிகழ்வுகள் உயர்வு நவிற்சிக்கு வித்திட வைத்து, தீக்குளிப்புகளை ஊக்கப்படுத்துகிறதா?

9. வீரம் என்றால் கத்தி கொண்டு போரிட்டு சண்டையில் எதிரியை வீழ்த்துவதா?

10. தற்கொலையும் கூடாது; உண்ணாவிரதத்திலும் பயனில்லை; அப்படியானால் அறப்போராட்டங்களைத் துவக்கி, பெருமளவில் மக்களிடம் கொண்டு சென்று, ஆட்சியார்களிடம் மாற்றத்தை எவ்வாறு உருவாக்குவது?

11. ஒபாமா போல் பெரிய அளவில் துவக்க கால பணசேமிப்பு இல்லாமல், சுய ஆர்வத்தை வித்தாக வைத்து, பலரை ஈர்த்து, மாற்றங்களுக்கு கால்கோள் இடுவது எங்ஙனம்?

12. திருவிழா கொண்டாட்டம் போல் வீரவணக்கமும் குழுவாகக் கூடி கூத்து போட்டு, கும்பலாக ஒன்றுசேர்ந்து, கூட்டம் பார்த்து பிரமித்து, மகிழ்ச்சியைப் பகிரும் தருணங்கள்தானா?

Pratap Chatterjee on “Halliburtons Army”

  • page14_halliburton__s_armyடிக் சேனிக்கு மட்டும் ‘ஹாலிபர்டனி’ன் எல்லா புகழும் சென்றடையக் கூடாது. இரண்டாம் உலகப்போரில் இருந்து வாடகைக்கு போர் வீரர்களை குத்தகை விடும் நிறுவனமாக ஹாலிபர்டன் திகழ்கிறது.
  • இராக் போரை ஹாலிபர்டனுக்கு ஏலம் கொடுத்தவர் டொனால்ட் ரம்ஸ்ஃபெல்ட் ஆவார். அதே ரம்ஸ்ஃபீல்ட் லின்டன் பி. ஜான்ஸன் காலத்தில் ஹாலிபர்டனை மிகக் கடுமையாக விமர்சித்து இருக்கிறார்.
  • டிக் சீனி தலைமைப் பொறுப்பை எடுத்தவுடன் வெறும் 100 மில்லியன் பண்ணிக் கொண்டிருந்த ஹாலிபர்டன் 2.3 பில்லியன் பணக்கார நிறுவனமாக மாறியது.
  • டிக் செனி துணை ஜனாதிபதி ஆகியவுடன் வாஷிங்டனில் ஹாலிபர்டன் லாபி செய்வதற்கான நிதியை சரி பாதியாக குறைத்துக்கொன்டது.
  • இராக் போர் முடிந்தாலும் ஹாலிபர்டனின் லாபத்திற்கு எந்தக் குறைவும் இருக்காது. போஸ்னியாவில் ஆகட்டும் அல்லது பிறிதொரு போர்க்களத்தில் ஆகட்டும்; அங்கே, அவுட்சோர்சிங் முறையில் ஹாலிபர்டனுக்குத்தான் கான்ட்ராக்ட் விடப்படும்; விடப்படுகிறது.
  • பராக் ஒபாமாவினால் ஹாலிபர்ட்டன் குத்தகையை ரத்து செய்ய இயலாது. ஆனால், கொடுக்கும் பணம் எவ்வாறு, எதற்காக, எப்படி செலவாகிறது என்பதற்கு கணக்கு கேட்க முடியும்.
  • தெற்காசியர்களும் இந்தியர்களும் கொத்தடிமையாக மலம் அள்ளுவதற்கும் ஆபத்தான வேலைக்கும் வைக்கப்பட்டு ஹாலிபர்ட்டனுக்கு கிடைக்கும் கொள்ளை லாபம் குறைந்து, இந்த தகிடுதத்தங்கள் அம்பலம் ஏறுமாறு வெளிப்படையான செயல்பாடுகள் அரங்கேறக் கூடும்.
  • Labor exploitation and an unofficial “caste system” perpetrated by Halliburton/KBR and its subcontractors, with sliding pay scales based on workers’ nationalities.

தொடர்புள்ள சில சுட்டி:

1. நேர்காணல்: Pratap Chatterjee: Texas Monthly February 2009: “An extended interview with the author of Halliburton’s Army: How a Well-Connected Texas Oil Company Revolutionized the Way America Makes War.”

2. ப்ரதாப் சாடர்ஜியின் வலைப்பதிவு: Pratap Chatterjee's blog | The War Comes Home, A Project of KPFA Radio

அமெரிக்காவால்/அமெரிக்காவினால்/அமெரிக்காவில் ஏவியன் ஃப்ளூ?

அதிகாரபூர்வ அமெரிக்கா செய்தி:

Feds apologize but insist birds had to be poisoned – NJ.com: Hundreds of birds that dropped dead on Somerset County cars, porches and snow-covered lawns, alarming residents over the weekend, were all of a rather foul breed of fowl — the notorious European starling, which the United States Department of Agriculture killed on purpose.

Everything from Avian influenza to West Nile disease, both bird-killing ailments that also affect humans, was feared. But no humans or pets were ever at risk, said the USDA, contending the pesticide, known as DRC-1339, is inert once it is eaten by the birds and becomes metabolized.


கனடா செய்தி: 60,000 B.C. turkeys culled in avian flu outbreak:

“The mass destruction of thousands of turkeys on a farm near Abbotsford, B.C., began Monday after the Canadian Food Inspection Agency (CFIA) confirmed a positive test result for avian flu over the weekend.

‘Today the Canadian Food Inspection Agency has started the humane destruction of approximately 60,000 birds on the infected premises in British Columbia where H5 avian influenza has been confirmed,’ said Sandra Stephens, a CFIA disease control specialist.”


இந்தியா செய்தி:

பறவைக் காய்ச்சல்: கோழிகள் அழிப்பு தொடர்கிறது: இரு கிராமங்களிலும் நேற்று 2ஆவது நாளாக சுமார் 7 ஆயிரம் கோழிகள் அழிக்கப்பட்டதாகவும், மால்டாவில் 600 கோழிகள் பறவைக்காய்ச்சலாம் உயிரிழந்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

45 ஆயிரம் கோழிகளை அழிப்பதற்கு கூடுதல் காலம் தேவைப்படுதால், 32 குழுக்களாக பிரிந்து அழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.


அமெரிக்காவில் என்ன நடக்கிறது?

சீனாவில் பறவைக்காய்ச்சல் என்று நிருபணம் ஆன பின், நியு ஜெர்சியில் விஷம் கலந்த மாத்திரைகளை கொடுத்து பறவைகளை கொல்ல சொல்லி உத்தரவு.

நியுஜெர்சி வீடுகளில் பறவைகளாக செத்து விழுந்திருக்கிறது. ஒரு சில வீட்டு கூரைகளில் நாற்பதுக்கும் மேலாக கொத்தாக பொத்தென்று மரணம் எய்திருக்கின்றன. அவற்றை அகற்றுவது வீட்டு சொந்தக்காரரின் கடமை எனவும் சொல்லப்பட்டுவிட்டது.

நியு ஜெர்ஸி நாளிதழில் செய்தி வந்திருக்கிறது. ஆனால், இதுகுறித்து எதுவும் எழுதக்கூடாது சொல்லவும் கூடாது என்று கட்டளை இட்டது போல் இராட்சச விநியோக இதழ்களில் கப்சிப்.

அதிக பறவைத்தொகை, அதனால் கொன்று விட்டோம் என்பது மேல் துடைப்பு.

அப்படி இருந்தால் வழக்கம் போல வேட்டைக்கு அனுமதி தந்திருப்பார்கள். இதே போல் பொது நலத்துறை மூலமாக ஒரு முறை வாத்து முட்டைக்குள் விஷம் ஊசி மூல நிரப்பினார்கள்.

இதன் தொடர்பாக ஆப்கானிஸ்தானில் சிலர் பரிசோதித்துக் கொண்டிருக்கும் போது பாதிக்கப்பட்டு பிளேக்கால் இறந்தனர். இதை உளவுத்துறை மிக இரகசியமாக வைத்திருக்கிறது. ஆக ஸ்ட்ரெயின் தயார்.


தொடர்புள்ள சில செய்திக் குறிப்பு:

1. AFP: Japan suspends imports of French foie gras, poultry

2. Bird flu strikes Cooch Behar – Kolkata – Cities – The Times of India: After Malda and Darjeeling, bird flu has now spread to Cooch Behar.

3. The Ecologist – 10 things you didn’t know about bird flu: The biblical concept of ‘dominion over the fish of the sea and over the birds of heaven; and every living thing that moved upon the earth’ has populated a veritable Pandora’s box full of humankind’s greatest killers. Scourges such as smallpox and measles, which have claimed hundreds of millions of lives in recent centuries, were birthed in the barnyard about 10,000 years ago.

Smallpox likely came from camelpox and measles from the rinderpest virus of cattle. Before the domestication of ducks, there was likely no such thing as the human flu or influenza pandemics. Domesticated pigs probably gave us whooping cough, and water buffalo, leprosy. Horses likely gave us the common cold.

பாஸ்போர்ட் – சீனப் புரட்சி

உரிமைதுறப்பு: நான் சீனா சென்றதில்லை. சீனாவில் என்னுடன் கல்லூரியில் படித்த இரு நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்களிடம் இந்தக் கட்டுரையைக் காட்டியபோது, கருத்து சொன்னால் தலை கொய்யப்படும் என்று சொல்லி, மாற்றங்களைப் பரிந்துரைக்க மறுத்துவிட்டார்கள். எனவே, இந்த செய்திக் கோர்வை முழுக்க முழுக்க ஊடகத் தகவலை அடிப்படையாகக் கொண்டது.

அடக்குமுறையைத் தவிர வேறொன்றையும் அறிந்திருக்கவில்லை சீனா. வெகுண்டு எழுந்து சீனர்கள் போராட ஆரம்பிக்கும் ஒவ்வொரு சமயமும் அவர்கள் மிருகத்தனமாக ஒடுக்கப்பட்டனர். ஆண்டான் அடிமை மனோபாவம் தகர்த்தெறியப்படவேண்டும். உழைக்கும் மக்களின் ஆட்சி அமையவேண்டும்.

சீனா ஒரு குடியரசாக மலர வேண்டும்.

புத்தக அறிமுகத்தில் இருந்து.

தொடர்பான சமீபத்திய செய்தி இரண்டு

1. மக்கள் எழுச்சி, வேலையில்லாத் திண்டாட்டம், சோசலிசம்

China warned to expect greater public unrest as job prospects worsen – Times
Online
:

முதற்கண் சீனப் புத்தாண்டு வாழ்த்து.

சீன அரசு வெளியீடு (The Outlook Magazine, published by the Government’s Xinhua news agency) புத்தாண்டு வாழ்த்து சொன்ன கையோடு வன்முறை கலந்த போராட்டங்கள் நிறைந்த வருடமாக அடுத்த வருடம் அமையும் என்றும் கணித்திருக்கிறது.

புதிதாக பட்டம் பெறும் கோடிக்கணக்கான மாணவர்களும் ஏற்கனவே வேலையில்லாமல் இருக்கும் பத்து மில்லியன் கூலியாள்களும் கோபப்பட்டு இந்த எழுச்சி நிகழும் என்று அரசே ஒத்துக் கொண்டிருக்கிறது.

சீன கம்யூனிசக் கட்சிக்கு இது மணி விழா ஆண்டு. வரும் அக்டோபர் ஒன்றாம் தேதி அறுபதாம் கல்யாணம் கட்டிக் கொள்ளும் தருணத்தில் ஒலிம்பிக்சின் போது செய்த மோடி மஸ்தான் வேலையை மீண்டும் அரங்கேற்றும் கணத்தில், இந்தப் போராட்டம் எழலாம்.

சென்ற ஆண்டில் மட்டும் எண்பத்தி மூன்று லட்ச தொழிலாளர்களுக்கு வேலை பறிபோனதையும் அரசாங்க ஆய்வு குறிப்பிட்டிருக்கிறது.

இதைப் போன்ற ஆயிரக்கணக்கான (அரசுக் கணக்குப் படி ஆயிரம் என்றால், பத்தாயிரம் எழுச்சிகளாவது இருக்கும்) கொடி தூக்கல்களை நசுக்கி எறிவது போல் இந்த உரிமைக்கோறலையும் துச்சமாக தூக்கி எறிய கபர்தார் போட்டிருப்பது வெட்ட வெளிச்சமாகி உள்ளது.


2. கம்யூனிசமும் ஊழலும் – பிரிக்கமுடியாத இரத்த உறவு!

*Corruption taints every facet of life in China – Los Angeles Times:

லியாவ் (Liao Mengjun) பள்ளிக் கல்வியை முடித்து விட்டான். ‘ஸ்கூலில் இருந்து டிசி வாங்கப் போறேம்மா’ என்று சொல்லிவிட்டுக் கிளம்பியவனை பிணவறையில்தான் அடுத்துப் பார்ப்போம் என்பதை பெற்றோர் அறிந்திருக்கவில்லை.

பதினைந்து வயது பாலகனின் நெற்றியைப் பிளந்திருந்தார்கள். வலது முட்டி எலும்புக்கூடாக காட்சியளித்தது. கைகள் இரன்டும் உடைந்து தனியாக இருந்தது.

அனாதரவாக இருந்த கையிலிருந்த சுட்டு விரலை கோரமாக சிதைத்திருந்தார்கள்.

எதையோ ஒப்புதல் வாக்குமூலம் செய்ய முயற்சித்திருக்கிறார்கள். யார்?

அவனுடைய வாத்தியார்தான்.

ஏன்?

பள்ளிக்கூடங்களில் நடைபெறும் ஊழலையும் அநியாயமாகப் பறிக்கப்படும் பணத்தையும் கல்விச்சாலையில் பிடுங்கப்படும் முறைகேடான லஞ்சமும் காரணம்.

சீனாவில் ஊழல் செய்து எவராவது பெருந்தலை மாட்டிக் கொண்டால் பேரளவிற்கு உடனடியாக தூக்கில் போட்டுவிடுவார்கள். அவரை விசாரித்தால், தாங்களும் மாட்டிக் கொண்டு விடுவோம் என்னும் அச்சம் முதல் காரணம். ஆக்சன் கிங் போல் செயலில் உத்வேகம் கொண்டிருப்பதாய் காட்டுவது இரண்டாம் காரணம்.

ஆனால், சைனாவில் ஊழலும் லஞ்சமும் புரையோடி வளர்ந்து சர்வ அடுக்குகளிலும் வியாபித்து கோலோச்சி வருகிறது.

இப்படி ஊழல் இராச்சியமாக இருப்பது அறிந்திருந்தால் சீன கம்யூனிசக் கட்சி என்ன செய்கிறது? தங்கள் நலனிற்கும் ஆட்சிக்கும் பங்கம் விளையாத வரை ‘நீ பிறரை எவ்வளவு அடித்தாலும் பிரச்சினை இல்லை’ என்று தாராள சிந்தனையோடு நீருற்றி வளர்த்து வருகிறது.

சுதந்திரம் இருந்தால்தானே இதை காவல் நிலையத்திலோ, நீதிமன்றங்களிலோ, சட்டமன்றத்திலோ முறையிட முடியும்?

சுதந்திரம் இருந்தால் பேச்சுரிமை பெற்று கொத்தடிமை முறையும் ஒழிந்துவிடுமே?

எதுக்கு சுதந்திரம் தந்து, ஊழலை அம்பலமாக்கி, தங்கள் பதவியை, அதிகார போதையை, பணந்தரும் கல்பதருவை இழக்க வேண்டும் என்கிறது சீன கம்யூனிசம்.

அவர்கள் நிலையில் நீங்கள் இருந்தாலும் இப்படித்தான் முடிவெடுப்பீர்கள்.

சீனப் பொருளாதாரம் ஏழு ட்ரில்லியன் டாலர் மதிப்பு கொண்டது. இதில் ஒரு டிரிலியன் லஞ்ச வர்த்தகம்.

‘ஊழலை எல்லோரும் வெறுக்கிறார்கள். குறிப்பாக பொதுசனத்துக்கு கடுங்கோபம் வருது. அதற்கு காரணம் அவர்களுக்கு லஞ்சம் வராததுதான்!’ என்று கூலாக சொற்பொழிவாற்றுகிறார் இரயில்வே துறை மீது வழக்கு தொடுக்க முயற்சித்த ஜியாவ் (Qiao Zhanxiang).

Foshan, or “Buddha Mountain” :: ஃபோஷான் (அ) புத்தமலை

  • குருவி படத்தில் கொத்தடிமையாக இருந்தது போல் உழைப்பாளிக் கூட்டம் இங்கே நிஜத்தில் நடத்தப்படுகிறது.
  • உடம்பு சரியில்லையா? அவசரமாக கவனிக்கணுமா? சோசலிச நாட்டில் பணம் அதிகம் கொடுத்தால் உடனடி மருத்துவ சேவை உத்தரவாதம்.
  • வண்டி ஓட்டத் தெரியாமல் உரிமம் வேண்டுமா? அப்படி ஓட்டிய வண்டு எவரையாவது கொன்றால் வழக்கு தள்ளுபடி ஆக வேண்டுமா? வெட்டுங்க பணத்தை!

“போசான் மட்டுமல்ல; ஒட்டு மொத்த சீன அரிசிக்கு ஃபோசான் ஒரு பருக்கை பதம்,” என்கிறார் ரென் (Ren Jianming, vice director of the Clean Government Research Center at Beijing’s Qinghua University)

திபெத் விடுதலை அடைய தலாய் லாமா எவ்வளவு லஞ்சம் கொடுக்க வேண்டும் என்று யாராவது சீன ஜனாதிபதியிடம் கேட்டு சொல்லுங்களேன்.

மும்பை தாக்குதல்: இரு பதிவுகள்

பாம்பே தீவிரவாதி

பாம்பே தீவிரவாதி

பதிவு ஒன்று: உள்ளூர் வார இதழில் அகஸ்மாத்தாக மும்பை குண்டுவெடிப்பு ஆரம்பம் ஆன அன்று வெளியான பாஸ்டன் ஃபீனிக்சில் வெளியாகிய சீதா நாரயணின் கட்டுரை:

The Phoenix > Features > Terror masala: “Bollywood’s colorful, multi-genre musicals serve up their most interesting character yet: the singing, dancing terrorist.”

As such, writers have recently begun to experiment with realism, to introduce region and dialect into the story, to present more nuanced explanations of characters’ motives, and to dare to depict social problems like political corruption, drug trafficking, gang violence, poverty, and, yes, terrorism. These are depressing problems, so what better way to present them than with a dash of Bollywood élan? Which brings us to an unusual movie protagonist: the singing, romancing, family-loving, dancing, emotionally open . . . terrorist.


பதிவு இரண்டு: என்ன நடக்கும் என்பதை சொல்லும் ப்ளாகேஸ்வரியின் இடுகை.

Blogeswari: நாளை?: ராம் கோபால் வர்மா எப்படி திரையாக்குவார் என்பதையும் மகேஷ் பட் கதை எவ்வாறு இருக்கும் என்று சொல்லியிருக்கிறது.

அவரின் முந்தைய அனுபவங்கள்: Blogeswari: நேற்று…. & மீடியாவிற்கு ஒரு வேண்டுகோள்

டைனோ: எல்லோரும் துப்பாக்கி சுட கற்றிருக்கணும்

டைனோ Says:
நவம்பர் 29, 2008 at 2:04 பிற்பகல்

அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரம் பெருகி விட்டது, துப்பாக்கி வைத்திருப்பனெல்லாம் கன்சர்வேட்டிவ் என்று கட்டியம் கூறி வெறுப்பை உமிழ்பவர்கள் இதையும் படிக்கவேண்டும்! NRAவின் பக்கத்து நியாயங்கள் அவர்களின் வாழ்க்கையை வாழ்ந்து பார்த்தால்தான் தெரியும். Right to self-defense!

அனைவருக்கு துப்பாக்கியும் தோட்டாவும் கொடுப்பதால் கிடைக்கும் நன்மை பயக்கும் திட்ட வரைவுகள்:

  1. மீசை இருந்தால் ஆம்பளை என்பது பழமொழி. துப்பாக்கி வைத்திருப்பவர் வீரர். அத்துமீறி உள்ளே வருபவர்களை துப்பாக்கியை வைத்து சுட குறி பார்ப்பதற்குள், அவர்கள் உங்களிடமிருந்து ஆயுதத்தைப் பறிப்பார்கள். ‘ஏழைகளுக்கும் தோட்டா‘ என்று இந்தத் திட்டத்திற்கு நாமகரணமிடலாம்.
  2. பாஸ்டன் பக்கம் மாதத்திற்கு இரண்டு குழந்தை (சமீபத்திய இறப்பில் பத்து மாசம் ஒன்றும் மூன்று வயது சிறுவனும்) இறக்கிறார்கள். இந்த மாதிரி துப்பாக்கி வைத்திருப்பவர்களின் வீட்டில், விளையாட்டாக எடுத்து சுட்டுப் பார்த்து ‘மக்கள் தொகையை மட்டுப்படுத்தல் திட்டம்‘ வெற்றிகரமாக என்.ஆர்.ஏ வினால் நடத்தப்படுகிறது.
  3. வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் என்பதாக காய்கறி கத்தியைக் கூட ஸ்திரமாக பிடிக்கத் தெரியாதவர்கள் கையில் துப்பாக்கியை திணித்து, ‘புல்லாங்குழல் அடுப்பூதும் திட்டம்‘ என நடுநடுங்க வைக்கலாம்.
  4. வீழ்ந்து கிடக்கும் நிதிநிலையை நிலைநிறுத்த, துப்பாக்கி விற்பனையை அதிகரித்து, அதனால் புல்லட் ப்ரூஃப் மேலணி மேனியாவை முடுக்கி, தொடர்ச்சியாக தோட்ட புகமுடியா கார்கள் என்று ‘சந்தைப்படுத்தி சதை துப்பும் திட்டம்’ வரவைக்கும்.
  5. பள்ளிகளில் கடந்த மாதம் எந்தவித தாக்குதலும் நடைபெறவில்லை. (Timeline: US shooting sprees – History of school shootings). இது அமெரிக்க கலாச்சாரத்திற்கு மிகப் பெரிய இழுக்கு. இதைப் போக்க ‘வாசகசாலை சிறார்களை சகட்டுமேனிக்கு சுட்டுத் தள்ளும் திட்டம்‘ அறிமுகம்.
  6. நத்தார் தினம் நெருங்குகிறது. விரும்பிய டிஃபனி பரிசையும் லெக்சஸையும் கொடுக்க முடியாத வறியவர்கள் (பார்க்க #1 ‘ஏழைகளுக்கும் தோட்டா’) கையில் துப்பாக்கியை கொடுத்து அங்காடிகளையும் கடைகளையும் பாதுகாப்பற்றதாக ஆக்கி, பனி விழாத புவிவெப்ப சூழலின் இறுக்கத்தைக் குறைத்து ‘சடலம் விழும் காலம்’ வருகிறது.
  7. மான்களும் மூஸ்களும் இன்னும் கொஞ்ச காலமே காடுகளில் காணக்கிடைக்கும். அதற்குள் பாக்கி இருக்கும் ஒன்றிரண்டையும் ஒழித்துவிட ‘சாரா பேலின் சகாயம்’ உதயம்.
  8. தீவிரவாதி கையில் மட்டும் ஏகே-47 இருக்கிறதே? சஞ்சய் தத் ஆசைப்பட்டதும் இதுதானே! உங்களிடமும் வெடிகுண்டும், ஏவுகணைகளும் கிடைத்தால் ‘பக்கத்து விட்டு பரமசிவத்துடன் பஞ்சாயத்துக்கு செல்லேல்’ என சடக்கென்று பாயும்.

அனானிகள் போலி முகம் கொண்டு அடுத்தவரைத் திட்டுவது போல் அசட்டு தைரியம் கொடுக்க துப்பாக்கி உதவுகிறது.

என்னை விட்டு ஓடிப் போக முடியுமா?

joseph-m-pallipurath-church-dead-killer-india-wifeபள்ளிபுரத் ஜோசப் ஏழு மலை கடந்து இரண்டு கடல்களைக் கடந்து கஷ்டப்பட்டு இந்தியா சென்றடைந்து மனைவியைக் கண்டுபிடித்தார். மூன்று மாத காலமாக மனைவியை வாட்டியெடுத்து நரகத்தில் தள்ளினார். சாய்ந்து கொள்வதற்கு மாமியாரும் இல்லாத வீட்டில் இருந்து, இவரின் கொடுமையில் இருந்து தப்பியோடி நியுஜெர்சியில் தஞ்சம் புகுந்தார் மனைவி ரேஷ்மா.

இந்தியா சென்று இல்லத்தரசியைக் கண்டுபிடித்தது போல் மீன்டும் கஷ்டப்பட்டு தேடிக் கண்டுபிடித்து அதே மனைவியை சுட்டுத் தள்ளியும்விட்டார்.

nijith-kurian-st-thomas-syrian-orthodox-knanaya-churchஜோஜப்பை விட்டுப் பிரிந்த ரேஷ்மா ஜேம்ஸ் நியு ஜெர்சியில் இருக்கும் கசினுடன் ஒதுங்கி வாழ்ந்து வந்தார். கலிபோர்னியாவின் சாக்ரமென்டோவில் கிளம்பிய ஜோசப், நியூ ஜெர்சியின் க்ளிஃப்டனில் ஞாயிறு காலை தேவாலயத்திற்கு வந்த மனைவியை அடையாளம் கண்டுகொண்டு நெற்றிப் பொட்டில் சுட்டுத் தள்ளினார்.

பக்கத்தில் இருந்த சிலருக்கும் குறிதவறி குண்டு பாய்ந்துள்ளது.ரேஷ்மாவின் கசின் சில்வி பெரிஞ்செரிலுக்கும் பலத்த காயம். ரேஷ்மாவைக் காப்பாற்ற முனைந்த இருபத்தாறு வயது கூட நிரம்பாத மலோசெரிலும் மரணமடைந்தார்.

ஜியார்ஜியாவுக்கு தப்பியோடிய ஜோசப்பை உறவினர்களின் வீட்டில் வைத்து பிடித்துவிட்டார்கள்.

reshma-kunnaserry-thoompanakkunnel-pazhoothuruthu-kaduthuruthyமேலும் விவரங்களுக்கு:

1. The Associated Press: NJ church killings shake up close-knit community: “The shootings at the St. Thomas Syrian Orthodox Knanaya Church in Clifton have reverberated throughout the Knanaya faith, a close-knit Christian minority in India”

2. Authorities nab California man accused of fatally shooting estranged wife, another man in Clifton, N.J., church – Lehigh Valley News, Easton News, Nazareth News, Bethlehem News, Phillipsburg: “Pallipurath, of Sacramento, is suspected of shooting and killing 24-year-old Reshma James, and Dennis John Mallosseril inside the St. Thomas Syrian Orthodox Knanaya Church in Clifton”

3. Kaduthuruthy shocked: “Reshma, the only daughter of James and Mercy, had got married on August 25, 2007, to Joseph Sanish Pallipurath, 27, son of Pallipurathu Mathew from Nilambur”

காதல் கடிதம் எழுதினேன்; கொலையானேன்

பெயர்: மனிஷ் குமார்

வயது: 15

வசிப்பிடம்: கோரார் கிராமம், கைமுர் மாவட்டம், பிகார்

சாதி: ரவிதாஸ் (தலித்)

விரும்பியது: தோட்டி மகள் (தலித்)

முதல் குற்றம்: மூன்று மாதம் முன்பு காதல் கடிதம் எழுதியது

இரண்டாம் குற்றம்: விரும்பியவளின் விருப்பத்துடன் நேசித்தது

தண்டனை: ரயிலுக்கு அடியில் தள்ளி மரணம்

பார்வையாளர்: மனீஷ்குமாரின் தாயார்

தண்டனை கொடுத்த இடம்: துர்காவதி கிராம காவல் நிலையம்

காவல்துறை: உடந்தையாக இருந்ததற்காக சப்-இன்ஸ்பெக்டர் இடைநீக்கப்பட்டிருக்கிறார்.

மேலும் விவரங்களுக்கு:

1. Teenager murdered for writing love letter to girl of higher caste – Times Online: “Prakash Louis, a sociologist based in Bihar, said ∑ “Caste-based atrocities are common here: rapes, murders, beatings. The privileged prey on the weak,” said Uday Kumar, a director of the Bihar-based Dalit Association for Social and Human Rights Awareness. Similar abuses are reported regularly across India. Alamelu, the leader of a group of Dalit women in the southern state of Tamil Nadu, said:”

2. Boy thrown in front of train for falling in love – India – The Times of India: “Lalita Devi alleged that cops had told her to settle the dispute ‘outside the police station’ when she, along with her son, went to them for help after the boy was tonsured and paraded around the market. She said the accused assaulted her and her son outside the police station and dragged them to a railway track. Despite her repeated pleas for her son’s life, the killers threw the boy in front of a train on the Gaya-Mughalsarai section.”

பழைய இந்தியா: மாறியிருக்கிறதா?

நன்றி: india source:life – Google Image Search | LIFE photo archive hosted by Google

ஒபாமாவை கொல்ல சதி: 2 பேர் கைது (செய்தித் தொகுப்பு)

சிஃபி: ஒபாமாவைக் கொல்லச் சதி

டென்னசி மாகாண போலீசார் சந்தேகத்திற்கிடமான இரண்டு வாலிபர்களைப் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் இருவரும் துப்பாக்கிகள் விற்கும் கடையில் கொள்ளையடித்து ஆப்ரிகன், அமெரிக்கன் பள்ளியில் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்தது தெரிய வந்தது.

மேலும் 88 வெள்ளையர்களையும், 14 கருப்பர்களையும் மொத்தம் 102 பேரை கொல்வதற்காக அவர்கள் திட்டம் தீட்டியிருந்தனர்.

டேனியல் கோவர்ட் (வயது 20) மற்றும் பால் ஷெல்ஸ்மான் (வயது 18) ஆகிய இரண்டு பேரும் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்த துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.


தமிழ் செய்தி: ஒபாமாவைக் கொல்ல சதி திட்டம்: 2மாணவர்கள் கைது!

ஒபாமா தேர்தல் பிரசாரம் செய்யும் போது காரை வேகமாக ஓட்டிச் சென்று அவரைக் கொலை செய்ய திட்டம் தீட்டியியிருந்ததாக கைது செய்யப்பட்ட 2 மாணவர்களும் வாக்குமூலம் அளித்துள்ளனர்.


மாலைமலர்: அமெரிக்க அதிபர் தேர்தல்: ஒபாமாவை கொல்ல சதி; 2 பேர் கைது

ஏற்கனவே தனது தாத்தாவிடம் இருந்து டேனியல் ஒரு துப்பாக்கியை திருடி வைத்திருந்தான். ஒபாமா பொதுக்கூட்டத்தில் பேசும் போது அவரை நோக்கி வேகமாக காரை ஓட்டிச் செல்லவும் காரின் ஜன்னல் வழியாக துப்பாக்கியால் சரமாரி சுடவும் திட்டமிட்டு இருந்ததாகவும் டேனியல் தெரிவித்துள்ளான்.


தட்ஸ்தமிழ்: ஓபாமாவை கொல்ல சதி: 2 வெள்ளையர்கள் கைது

வெப்துனியா: ஒபாமாவை கொல்ல சதி: 2 பேர் கைது!