Tag Archives: Cinema

Manushyaputhiran & Uyirmmai’s Uyirosai 1st Anniversary

அறிவிப்புகள்:

உயிர்மை.காம் வழங்கும் வார இணைய இதழ்: “இது உயிரோசையின் 50ஆவது இதழ் :: மனுஷ்ய புத்திரன்எழுதியதில் இருந்து:

  • நமது பண்பாட்டு வேர்கள், கலை, இலக்கியம், தத்துவம், சமூகம், அரசியல், சர்வதேச விவகாரங்கள், சினிமா என ஏராளமான துறை சார்ந்த எண்ணற்ற கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன.
  • 1500க்கும் மேற்பட்ட படைப்புகள் பல்லாயிரம் பக்கங்களுடன் மிக அரிதான பிழைகளுடன் பதிவேற்றம்.
  • எதையும் எழுதலாம் என்ற எழுத்து சுதந்திரத்தையோ இணைய சுதந்திரத்தையோ சிறிதும் ஏற்கவில்லை.
  • ஓராண்டாக உயிரோசை கடும் பொருட் செலவுடன் — ஓராண்டில் கிட்டத்தட்ட 3 லட்சம் ரூபாய்.
  • உயிரோசைக்கு ஒரு சிறிய அளவிலான சந்தா தொகை

Uyirmai.com & Manushyaputhran in Uyirosai.com: “உயிரோசை ஓராண்டு நிறைவு விழா: இணைய எழுத்துக்கள் இன்றும் நாளையும்: உயிரோசையை முன் வைத்து — சிறப்புரைகள்: சாருநிவேதிதா & எஸ்.ராமகிருஷ்ணன்

என்னுரை

உயிர்மை போன்ற பத்திரிகை நடத்துமிடத்தில், உயிரோசை போன்ற இணையத்தில் மட்டும் வெளியாகும் வார இதழ் நடத்துவது வெகு சுலபம்.

மாத இதழ். அதுவும் அச்சில் வெளியாகும் இதழ். ஒல்லியாக விளம்பரம் இன்ன பிறவெல்லாம் கழித்தால் 150 ஒருங்குறி கிலோபைட்டுக்குள் அடங்கும் இதழ். அதற்குள் எல்லோரையும் திருப்தி செய்ய இயலாது.

அதை விட புத்தகமாக்கல் லாபகரமானது. ஜூன் 2009 உயிர்மையை வாங்கமாட்டீர்கள். ஆனால், ஜூன் 2000த்தில் வெளியான புத்தகத்தை பத்தாண்டு கழித்தாலும் வாங்குவீர்கள். விமர்சிப்பீர்கள். வாசிக்கக் கூட செய்துவிடுவீர்கள்.

ஆகவே,

  1. புத்தகத்திற்கு ஆள் பிடிப்பது எப்படி? எழுதவும் ஆள் வேண்டும்; படிக்கவும் கூட்ட வேண்டும்.
  2. பத்திரிகையில் விற்பனையாகாத பெயரை எப்படி சந்தைப்படுத்துவது?
  3. அச்சில் கழித்துக் கட்டப்பட்டதை, மனம் புண்படாமல், தேர்வானதாக சொல்வது எப்படி?
  4. துணை ஆசிரியர் கவிதைகளையும், வளரும் உதவி ஆசிரியர் தலையங்கங்களையும் வெளிவரச் செய்யும் வழி எது?
  5. ப்ராண்ட் அம்பாசடர்களை உருவாக்குவது எப்படி?
  6. அறுபது பக்கத்திற்குள் இடங்கொடுக்க முடியாதவருக்கு, மனதில் மட்டுமல்லாமல், பாலம் அமைத்து, இடங்கொடுப்பது எப்படி?
  7. மூத்த தலைமுறையினருக்கு அறிமுகமானவர்களை வைத்து உயிர்மை பதிப்பகத்திற்கு ரெகுலர் விளம்பரம் பெறுவது எப்படி?
  8. சாரு.ஆன்லைன், ஜெயமோகன். இன், எஸ். ராமகிருஷ்ணன்.காம் போன்ற தனி மனிதர்களே புகழைத் தட்டிச் செல்லாமல், அவரின் வெளியீட்டாளரும் எப்படி தன்னை நிலை நிறுத்திக்கொள்வது?
  9. இணையம் வந்தபிறகு இலக்கியச்சண்டை என்பது நொடிக்கு நொடி பதிவிடுவது. அதற்கு ஈடுகொடுக்க வாரம்தோறுமாவது வெளியாவது.
  10. வாரப் பத்திரிகை குமுதம், மாதமொருமுறை இலக்கியம் சமைக்க ‘தீராநதி‘ ஆகும்போது, மாதாந்தரி சிற்றிலக்கிய சிற்றேடு, வாராந்தரி ஆகக் கூடாதா? கூடுமா?

What did Uyirosai achieve? உயிரோசை என்ன சாதித்தது?

1. தமிழ் சினிமா குறித்த சுவாரசியங்கள் இலக்கியமாகா என்பதை தமிழ்மகன் கொண்டு முறியடித்தது.

2. தனிவலை இல்லாத சுகுமாரன், வாஸந்தி, இந்திரா பார்த்தசாரதி, தமிழவன் போன்ற மூத்த இலக்கியவாதிகளை தொடர்ச்சியாக எழுதவைத்தது.

3. சொந்த வலையகமாக இருந்தால் அமிதாப் பச்சன் போல் ‘என்னை எல்லாரும் திட்டறாங்க’ என்று அழுதோ, மறுமொழிகளை மறைத்து/பின் திறந்து/மீண்டும் மட்டுறுத்தி என்று சுழற்சிக்குள் சிக்கியோ காணாமல் போகும் அபாயத்தை தவிர்த்தது.

3. சுதேசமித்திரனின் potentialல் துளி ஆளுமையாவது வெளிக்கொணர்ந்தது.

4. இந்திரஜித் பத்தி நிஜமாகவே தவறவிட முடியாததாக இருப்பது.

5. Lack of consistency in மனோஜ், மாயா, சஞ்சித், அபிலாஷ் என்பதைக் குறையாக சொல்ல வந்தாலும், அவர்கள் எல்லாம், புது எழுத்தாளர்களாமே!?!

6. இலக்கியவிருதுகள் குறித்து பன்முக விமர்சனம் வராவிட்டாலும், முழுமையான ஆளுமை சித்திரம் கிடைக்காவிட்டாலும், பின்னணியும் அரசியலும் அறியச்செய்திரா விட்டாலும், இன்னின்னாருக்கு இப்படி என்று செய்தியாக்கியது.

7. ‘உரையாடல்‘ மாதிரி போட்டி இல்லாவிட்டாலும், இதழுக்கு ஒரு சிறுகதையாவது வெளியிடுவது. (கவிதைகளும் வருகிறது. எவராவது வாசித்ததுண்டா?)

8. எழுத்தாளருக்குத் தேவை அங்கீகாரம். படைப்பை ‘நல்லாருக்கு!’ என்று குறிப்பால் உணர்த்தி, உயிர்மை வெளியீட்டீல் இடங்கொடுத்து, பீடத்தில் ஏற்றி அமரவைப்பது.

9. தமிழகத் தொலைக்காட்சி நிகழ்ச்சி குறித்து தொடர் எழுதாமல் இருந்தது.

10. ஒரு வருடம்; 50 இதழ் என்பது லேசுப்பட்ட சமாச்சாரம் இல்லை. அதுவும் இணையத்தில். முணுக்கென்றால் வோர்ட்பிரெஸ், சட்டென்று ப்ளாக்ஸ்பாட் நிலவும் சூழலில், நாலு குதிரை, மூன்று மாடு, ஓரிரு கழுதை, என்று animal farmஐ கட்டி மேய்த்திருப்பது.

How Uyirosai could have done better? உயிரோசை எவ்வாறு மேலும் பரிமளித்திருக்கலாம்?

1. பாபுஜியின் கருத்துப் படம்

2. உயிரோசையின் வடிவமைப்பு

வலையில் உள்ள சில வண்ணங்கள் கண்களுக்கு உறுத்தலாக இருப்பதைச் சரி செய்தால் படிப்பவர்களை அசதியுறாமல் இருக்கச் செய்யும். புகைப்படங்களும் மிகவும் சிதறிப்போன ஒரு தோற்றத்தை அளிக்கின்றன. – வெங்கடாசலம் / சிங்கப்பூர்

3. தமிழ்ப் பெயர்ப்பு

மொழிகளினூடான பயணத்தில், கவித்துவம் பின்தங்கிவிடுகிறதோ என்ற ஐயம் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. – மெ.உலகநாதன் / சென்னை

4. புது நூல்கள் அறிமுகம் (அல்லது) புது புத்தக விளம்பரம்தானே?

5. குறுந்திரைப்படங்கள் விமர்சனம் + பார்வை

6. பெண் படைப்பாளிகளின் பங்களிப்பு

7. ஓவியங்கள், சிற்பம், நுண்கலை

8. அரசியல் சப்தங்களுக்கு பதில் அனுபவங்களின் பகிர்வு

9. ஈழம், இலங்கை கவனிப்பு

10. பாலியல், பொருளாதாரம்/வர்த்தகம்/நிதிநிலை போன்ற பேசப்படாத & தட்டையான தமிழ் ஊடகப் பார்வை பெறும் தலைப்புகள்.

Where did Uyirosai mimic other websites? உயிரோசை எங்ஙனம் பிற வலையக செயல்பாடுகளை பிரதிபலித்தது?

1. வெட்டி, ஒட்டும் Ctrl+C வகையறா → ஹைக்கூ தொடர், முல்லா கதைகள், சூஃபி கதைகள்

2. திண்ணை

3. சொல்வனம் போல் வாசகர் கருத்துகளைத் தடை செய்தல்

4. கீற்று போல் விளம்பரங்கள்

5. அந்திமழை போல் ஆதிகால வெப்1.0 தோற்றம்

6. தமிழோவியம் போல் அ.ராமசாமி போல் சில எழுத்தாளர்களுக்கு நிழற்படம்; பாவண்ணன் போல் வேறு சிலருக்கு எந்த ஒளிப்படமும் mastheadம் இடாமை.

7. இஷா (ஈசா?) யோகம் மாதிரி பக்கத்திற்குப் பக்கம் திரு. மனுஷ்யபுத்திரன் அவர்களின் திருவுருவப்படம்.

8. பதிவுகள் மாதிரி marquee scrolling செய்தி ஓடவிடுவது.

9. தமிழ்மணத்தில் இருக்கும் தனிப் பதிவரின் இடுகை போல் ஒற்றைப் பார்வையை மட்டும் தருவது. பத்திரிகைக்கு அழகு பல்நோக்கில் பல்லூடகமாக வருவது.

10. ஆறாம்திணை கொஞ்ச நாள் கழித்து தென்றலானது. அது போல்?

Separated at Birth: MDMK leader VaiKo vs Director Mahendran

முந்தைய பதிவு: தமிழ் சினிமா | நடிகைகள் | வலைப்பதிவு | தொலைக்காட்சி | இலக்கியம் | வில்லன் | இயக்குனர்

சூப்பர் ஸ்டார் யாருன்னு கேட்டா?

சன் டிவியில் செய்திகள். சர்வக்ஞர் சிலை திறப்பு விழா. மகள் படித்த புத்தகம் குறித்தும் குமான் குறித்தும் விசாரித்துக் கொண்டே அரைக் கண்ணில் தொலைக்காட்சியிலும் பார்வை. சட்டென்று ‘சூப்பர் ஸ்டார்’ மின்னி மறைகிறார்.

உணர்ச்சி வேகத்தில், ‘அது யாரு தெரியுதா?’ என்று மகளையும் பார்த்தாலே பரவசமாக்குபவரைக் கேட்கிறேன்.

அரை நம்பிக்கையுடன் ‘ரஜினியா?’

‘ஆமாண்டி… ஆமா!’

‘எங்கே?’

DVR இயங்கத் துவங்குகிறது. திரும்ப அந்தக் காட்சியை ஃப்ரீஸ் செய்கிறேன்:

Rajinikanth-Kalainjar-Sarvaknjar-Valluvar-Statue-Events-RM-Veerappan

‘இவர்தானே?’ சந்தேகாஸ்பதமாக சுட்டுகிறாள்.

ரஜினிகாந்த் என்று அவள் நினைத்தவர்: (மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை இணை அமைச்சர் எஸ்.ஜெகத்ரட்சகன்)

Rajniganth-Madras-Sarvakjar-Statue-Pictures-highlights

சன் நியூசில் ஏனோ கமல் கலந்துகொண்டதைக் காட்டவில்லை.

பொன்விழா ஆண்டிலும் கமல்ஹாசன் எப்படி இருக்கிறார் பாருங்க:

Kamal-Vairamuthu-Sarwakjar-Veerapandi-aarumugam-Ki-Veeramani-Chennai-Functions-Photos


சர்வக்ஞர்

1. தினமணி :: சர்வக்ஞர் கூறும் அறம் « தமிழ்ச்செல்வி

2. தமிழ்ஹிந்து :: த்ரிபதி சர்வக்ஞர் & வள்ளுவர் « ஜடாயு » வழிகாட்டும் வசனகர்த்தர்கள்: “”

3. புகைப்படங்கள்: என்வழி

கந்தசாமி: பாடல்

Related Song Lyrics from Kandhasamy: Kandasamy: Ithellaam Dooppu; Kanthasamythaan Taappu

மியாவ் மியாவ் பூனை
அட…
மீசை இல்லா பூனை
திருடித் திங்கப் பார்க்கறியே
திம்சுக்கட்ட மீனை?

Araleya-Cats-Dogs-Lick-Flickr-Images-Cleanமில்க்கை தேடும் பூனை
சீ…போ‘ன்னு விரட்ட மாட்டேன்
உங்கப்பா மேல ஆணை!

1. நம் இதயம் ஒண்ணு
2. நம் உடல்தான் ரெண்டு
3. நாம் ஒண்ணா சேர்ந்தா ஆவோம் மூணு

1. உன் பார்வை ஒண்ணு
2. அதில் அர்த்தம் இரண்டு
3. அது சொல்லத் தூண்டும் வார்த்தை மூணு

~oOo~

வேகத்துக்கு நான் பழசு
வெட்கத்துக்கு நான் புதுசு

மோதலுக்கு நான் பழசு
காதலுக்கு நான் புதுசு

1. நம் மெத்தை ஒண்ணு
2. அதில் தூக்கம் ரெண்டு
3. அதில் நித்தம் வேணும் யுத்தம் மூணு

1. உன் இடுப்பு ஒண்ணு
2. அதில் உடுப்பு ரெண்டு
3. அதில் வேணும் கடிச்ச தடிப்பு மூனு

~oOo~

கூச்சத்துக்கு லீவு கொடு
தேகத்துக்கு நோவு கொடு

ஆடைகளை தூர விடு
ஆசைகளை சேர விடு

1. நம் முத்தம் ஒண்ணு
2. அதில் எச்சில் ரெண்டு
3. அந்த போதையில் மறக்கும் காலம் மூன்று

1. உன் மேனி ஒண்ணு
2. அதில் தேனீ ரெண்டு
3. கொட்டும் நானே ஹனி மூணு


இந்தப் பாட்டை மாற. உல்டாப்பா குழந்தைகளுக்கு பாடினால்:

vivetmart_Flickr-Yokviv_Photos-Cats-Dogs-Bulldogலொள் லொள் நாய்
அட…
லொடக்கு இல்லா நாய்
காவல் காக்க நிக்கறியே
காலங்கார்த்தால டோய்

எலும்பைத் தேடும் நாய்
சீ…போ‘ன்னு விரட்ட மாட்டேன்
ஓநாய் மேல பொய்!

1. நம் மூக்கு ஒண்ணு
2. நம் மோப்பம்தான் ரெண்டு
3. நாம் ஒண்ணா சேர்ந்தா பிடிப்போம் தாணு

1. உன் முகரை ஒண்ணு
2. அதில் கண்ணு இரண்டு
3. அது கவனிக்காட்டா ஆகும் காலு மூணு

~oOo~

திட்டலுக்கு நான் பழசு
இலக்கியத்துக்கு நான் புதுசு

பொட்டைக்கு நான் பழசு
கொட்டைக்கு நான் புதுசு

1. நம் வண்ணம் ஒண்ணு
2. அதில் காந்தல் ரெண்டு
3. அதில் நித்தம் வேணும் முகப்பூச்சு மூனு

1. உன் வாலு ஒண்ணு
2. அதில் கருத்து ரெண்டு
3. அதில் பேப்பர் போட்டா அர்த்தம் ஆகும் மூன்று

~oOo~

ரேபிஸுக்கு லீவு கொடு
ரேப்பிஸ்ட்டுக்கு நோவு கொடு

போகரை தூர விடு
சேகரோடு சேர விடு

1. நான் வளர்ப்பது ஒண்ணு
2. அதில் லாபம் ரெண்டு
3. பசிச்சா வாய்க்குள் பறந்துபோகும் காணு

1. உன் மேனி ஒண்ணு
2. அதில் சேஷ்டை ரெண்டு
3. கொட்டும் பேஷ்டை மூணு

~oOo~

Kandasamy: Ithellaam Dooppu; Kanthasamythaan Taappu

நன்றி: விவசாயி

கூழு, சுண்டலு, வேர்கடலை, வத்தகறி, வடுமாங்கா, சுண்ட கஞ்சி,சுட்ட வாழை, மக்காச்சோளம், நீர்மோரு, பேட்டரித்தண்ணி, இளநீ, இராத்தொக்கு, உப்புகண்டம், பழைய சோறு, டிகிரி காப்பி, இஞ்சி மரப்பா, கடலை முட்டாய், கமர்கட்டு, வெள்ளரிக்காய், எளந்தப்பழம், குச்சி ஐசு, கோலி சோடா, முறுக்கு, பஞ்சு முட்டாய், கரும்பு சாறு, மொளகா பஜ்ஜி, எள்ளு வடை, பொரி உருண்டை, ஜிகிருதண்டா, ஜீராத் தண்ணி, ஜவ்வு மிட்டாய், கீர வடை, கிர்ணிபழம், அவிச்ச முட்டை, ஆஃபாயில்,பள்ளிமுட்டாய், பப்பாளி, பொகையில, போதைபாக்கு, புண்ணாக்கு..

இதெல்லாம் டூப்பு, பிட்சாதான் டாப்பு ஏஏஏ
இதெல்லாம் டூப்பு, பிட்சாதான் டாப்பு

அண்ணன், அண்ணி, நாத்தனாரு, மாமியாரு, மாமனாரு, ஓரகத்தி, சக்காளத்தி, தம்பிகாரன், தங்கச்சி, சித்தப்பன், பெரியப்பன், பாட்டன், முப்பாட்டன், பேத்தி, கொள்ளுப்பேத்தி, பேரன், கொள்ளுப்பேரன், பொண்டாட்டி, வெப்பாட்டி, நல்ல புருசன், கள்ளப்புருசன், மச்சினிச்சி, மாமனாரு, கொழுந்தனாரு,கொழுந்தியா, மூதாரு, பாட்டி, போட்டி, அக்காப்பொண்ணு, அத்தைப் பொண்ணு, காதலன், காதலி, டாவு, டைம்பாஸு, தாய்மாமன், பங்காளி, தம்பிபுள்ள, தத்துபுள்ள, சகல,சம்பந்தி, முறை மாமன், முறைப் பொண்ணு, தலைச்சன் புள்ளை, இளைய புள்ளை,மூத்த தாரம், இளையதாரம், தொடுப்பு, ஒன்னு விட்டது, ரெண்டு விட்டது, ரத்த சொந்தம், மத்த சொந்தம், ஜாதிக்காரன், பொண்ணு எடுத்தவன், பொண்ணு தந்தவன்…

இதெல்லாம் டூப்பு, நண்பந்தான் டாப்பு.. ஏஏஏ
இதெல்லாம் டூப்பு, நண்பந்தான் டாப்பு

சோகம், அழுகை, சோம்பல், காதல் தோல்வி, கடுப்பு, எக்ஸாம் பெயிலியர், எரிச்சல், வெறுப்பு, வேதனை, கோபம், பிரிவு, நஷ்டம், பட படப்பு,பழிவாங்கல், பாவம், போட்டுக்கொடுத்தல், பொறாமை, கிண்டலு, எளப்பம், எச்ச புத்தி, இறுமாப்பு, சகுனி வேலை, சதிச்செயல் ,கோல்மூட்டல், குறுக்குப்புத்தி, ஒட்டுக்கேட்டல், ஓரவஞ்சனை, பொய், புளுகுமூட்டை, டகுல் வேலை, டப்பாங்குத்து, அரக்கத்தனம், பீலா, பில்டப்பு, பிசாத்து,கொள்ளிக்கண்ணு, குசும்பு, சின்னத்தனம், சிண்டுமுடி, அல்லக்கை, அல்பம், டேருமாரு, டிமிக்கி, ஊள உதார், ஒப்பாரி, ஜால்ரா, ஜக்கடித்தல்,திருட்டுத்தனம், தில்லுமுல்லு, சண்டித்தனம்..

இதெல்லாம் டூப்பு, ஜாலிதான் டாப்பு.. ஏஏஏ
இதெல்லாம் டூப்பு, ஜாலிதான் டாப்பு

குப்புசாமி, கோவிந்தசாமி, முன்சாமி, முத்துசாமி, கிருஷ்ணசாமி, மாடசாமி, மயில்சாமி, வேலுசாமி, வீராசாமி, கண்ணுசாமி, கருப்பசாமி, மலைச்சாமி, பழனிசாமி, குருசாமி, கோட்டசாமி, சின்னசாமி, பெரியசாமி, ஆறுசாமி, அழகுசாமி, அப்பாசாமி, கொண்டசாமி, வேட்டசாமி, வெங்கடசாமி, தங்கசாமி, பெருமாள்சாமி, நாரயணசாமி, சிவசாமி, சீனுசாமி, சடையசாமி, சந்திராசாமி, வெள்ளசாமி, குயில்சாமி, குமாரசாமி, கோதண்டசாமி, அங்குசாமி, துரைசாமி, பொன்னுசாமி, அய்யாசாமி, அண்ணசாமி, நல்ல சாமி..

இதெல்லாம் டூப்பு, கந்தசாமி டாப்பு.. ஏஏஏ
இதெல்லாம் டூப்பு, கந்தசாமிதான் டாப்பு

Kamal’s ‘Unnai Pol Oruvan’: Preview

பெயர் பட்டியல்

அசல் தலைப்பு: தலைவன் இருக்கின்றான்

ஹிந்தி ஒரிஜினல்: ஏ வெட்னெஸ்டே

தெலுங்கு டப்பிங் பதிப்பு: ஈநாடு

இசை: ஸ்ருதி கமல்ஹாசன்

பாடலாசிரியர்:உயிர்மைமனுஷ்யபுத்திரன்

திரைக்கதை & வசனம்: இரா முருகன்

தகவல், வதந்தி

உன்னைப் போல் ஒருவனில் அரசு உயர் அதிகாரியாக தலைமைச் செயலாளர் கதாபாத்திரம் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது. அதில் லட்சுமி நடிக்கிறார்.

இந்தியில் ஜிம்மி ஷெர்கில் நடித்த வேடத்தில் அஜீத் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

சக்ரி டொலேடி, இயக்குகிறார். இவர், அமெரிக்காவில் உள்ள புளோரிடா திரைப்பட கல்லூரியில் படித்தவர். `சலங்கை ஒலி’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர்.

50 ஆண்டு பொன்விழா

கேள்வி:- நீங்கள் திரையுலகுக்கு வந்து 50 ஆண்டுகள் ஆகிறதே. இதை விழாவாக கொண்டாடுவீர்களா?

பதில்:- உன்னைப்போல் ஒருவன் படம் மே மாதத்தில் முடிந்து விடும். என்றாலும் ஆகஸ்டு 12-ந் தேதி வெளியிட முடிவு செய்து இருக்கிறோம். ஆகஸ்டு 12-ந் தேதிதான் என் முதல் படம் `களத்தூர் கண்ணம்மா’ வெளிவந்தது. பொன்விழா ஆண்டையொட்டி வரும் இந்த படத்தையும் அதே தேதியில் வெளியிட திட்டமிட்டு இருக்கிறோம். இதை பெரிய விழாவாக எடுக்க ரசிகர்கள் ஏற்பாடு செய்து வருகிறார்கள்.

உன்னைப் போல் ஒருவன் – நிருபர் சந்திப்பு:

கமல் மேற்கோள்

i) ‘அரசியல் பேசுவதாக இருந்தால் காரணமில்லாமல் (நிருபர்களை) சந்திக்கலாம்; நான் சினிமா எடுக்கும்போதுதான் மீட் செய்வேன்.’

ii) ‘சில பேர் ரொம்ப கெட்டிக்காரங்களா இருப்பாங்க! ஆனா, அவங்களோட வேல செய்யுறது ரொம்ப சிரமம்.’

விளம்பரத் தட்டி, போஸ்டர், பேனர்

Unnai-pol-Oruvan-Kamal-Hassan-Shruthi-Mohanlal-UPO-Wednesday

எ வெட்னெஸ்டே

Naseeruddin Shah’s interview to HT : NAACHGAANA:
Question: Kamal Haasan is remaking A Wednesday in Tamil and will be playing your part.

Answer: Okay, but why just mine? (Laughs) He should be playing all the parts.”

விமர்சனங்கள், பார்வையாளர் எண்ணங்கள், ஹிந்தி திரைப்படம்

Unnai-pol-Oruvan-Kamal-Hassan-A-wednesday-UPO-Hindi-films-banners
1. ந. உதயகுமார் :: கற்றதும் சிந்தித்ததும் !!: எ வெட்னெஸ்டே – ஹிந்தி திரைப்படம்

2. அம்பி :: அம்மாஞ்சி: ஏ வெட்னெஸ்டே

3. இட்லிவடை :: IdlyVadai: “நேற்று – எனக்குள் ஒருவன் , இன்று – உன்னைப்போல் ஒருவன்”

இரா முருகன்

  • நடிகர்கள் சீமான்,
  • டாக்டர் பரத்,
  • கணேஷ்,
  • தெலுங்கு திரைப்பட இயக்குனர் நீல்கண்டன் (பாரதிராஜாவின் உதவியாளராகப் பணியாற்றியவர்),
  • வசன கர்த்தா ரமாதேவி,
  • படத்தின் உதவி இயக்குனர்கள்

– எல்லோரோடும் யூனிட் உணவை உண்டு, ஒரு சேரப் பொழுது கழித்துப் பழகியது மறக்க முடியாத அனுபவம். — பற்றி எல்லாம் ஒரு புத்தகம் எழுதிக் கொண்டிருக்கிறேன் – Sight at Shoot.

  • முக்கியமாக நண்பர் சிவாஜி (இயக்குனர் சந்தானபாரதியின் சகோதரர் – அபூர்வ சகோதரர்கள் படத்தில் ஜனகராஜை ‘தெய்வமே’ என்று புகழும் கான்ஸ்டபிள் சம்பந்தம் இவர்தான்). நல்ல நகைச்சுவை உணர்வும் இலக்கியப் பரிச்சயமும் உள்ள சிவாஜி பற்றி,
  • நண்பர் ஜாஃபர் பற்றி (பிரதாப் போத்தனின் படங்களில் உதவி இயக்குனர் இவர்),
  • ஒளிப்பதிவு நிபுணர் மனோஜ் சோனி பற்றி,
  • கலை இயக்குனர் தோட்டா தரணி பற்றி,
  • ஒப்பனைக் கலைஞர் செல்வி சாரு குரானா பற்றி,

ஹைதராபாத்தில் ஒரு வாரக் கடைசி விடாமல் போன, இருந்த, திரும்பியது குறித்து எல்லாம் விவரமாக எழுத வேண்டும்.

நண்பன் ஆனந்த் கிருஷ்ணமூர்த்தியை (ஒலிப்பதிவில் இன்னொரு ரசூல் பூக்குட்டி சதி லீலாவதி கமல் மகனாக வந்த இந்தச் ‘சிறுவன்’) எப்படி மறக்க முடியும்?

க்ளைமாக்ஸ் காட்சிக்காக புதிதாக எழுப்பப் பட்டுக் கொண்டிருக்கும் 14 மாடி கட்டிடத்தில் (போக 280 படி, திரும்ப வர இன்னொரு 280) எல்லோரும் ஏறி இறங்கிய நாட்கள் பற்றியும் எழுதியே ஆகவேண்டும். தினம் 10 தடவை – 5600 படி ஏறி இறங்கி முதல் சில நாள் கால் யானைக்காலாகி அப்புறம் இயல்பு நிலைக்கு வந்தது. காலையில் ஆறரை மணிக்கு படியேற ஆரம்பிக்கும்போது பார்த்தால் இரண்டு படி முன்னால் ஓடிக் கொண்டிருப்பார் கமல். அவர் முகத்தில் உறக்கச் சுவடோ, களைப்போ இந்த இரண்டு மாதத்தில் ஒரு முறை கூட கண்டதில்லை.

கிளைமாக்ஸ் காட்சியில் ஒரே டேக்கில் அவர் நடித்து முடித்த போது எதிர்பாராத விதமாக (ரிகர்சலில் செய்யாத ஒன்று) அவர் சட்டென்று சில வினாடிகள் வசனமின்றி தன் பாத்திரத்தை வெளிப்படுத்திய விதத்தைக் கண்டு ‘கட்’ சொன்னதும் முழு யூனிட்டுமே கைதட்டியது. ஆரம்பித்து வைத்தவன் இதை எழுதுகிறவன்.

‘That was an one-man symphony, kamal-ji’ – I told. He just smiled.

முழுவதும் வாசிக்க :: Eramurukan.in

ரஜினியின் எந்திரன்- தி ரோபோ

Achamundu Achamundu: 10 Questions

ஜெயமோகன் வந்துபோன களேபரத்தில் இட்லி-வடை கேள்வி + குறுவட்டு வாய்ப்பு நழுவிவிட்டது.

அதனால் என்ன 🙂

1. Achamundu Achamundu சென்சார் ஆகிவிட்டதா? அடல்ட்ஸ் ஒன்லியா? அல்லது குழந்தைகளுடன் பார்க்கும் ‘ஏ’ படமா? (வேட்டையாடு… விளையாடு, வாரணம் ஆயிரம் போன்ற தமிழ் சினிமாக்கள், யு/ஏ, யு என்று வந்தாலும், போதை, வன்முறை, பதின்மருக்கான கதைக்களம் கொண்டிருக்கும். அந்த மாதிரி பெற்றோர் நெளியும் காட்சிகள் இருந்தால் குழந்தையை வீட்டில் விடுவதற்காக கேட்டு வச்சுக்கலாமேன்னு…)

2. பாஸ்டனில் கூட இத்துப் போன (நாடக சபா) தியேட்டரில்தான் பெரும்பாலும் ரிலீஸ் செய்கிறார்கள். இந்த லட்சணத்தில் சென்னை தவிர்த்த தமிழக/ஆந்திர கிராமங்களுக்கு ரெட், 4கே துல்லியம் எல்லாம் எவ்வளவு ரீச் ஆகும்? தேவையா? ஆய பயன் என்ன?

3. வில்லன் என்பவர் தமிழ் சினிமாவின் தாத்பர்யமான கெட்ட கதாபாத்திரத்தின் குறியீடு மட்டுமா? அல்லது எவ்வாறு அப்படி ஆனார், அவருக்குள்ள நியாயங்கள் என்று பன்முகப் பரிணாமம் உண்டா?

4. இந்தப் படத்திற்கு exotic factor தவிர்த்து அமெரிக்கா எதற்கு? இந்தியாவிலேயே கதைக்களன் + பின்புலம் சரிப்படுமா? தேசிக்களின் அகச்சிக்கல்களின் மீது படம் வெளிச்சம் பாய்ச்சுகிறதா?

5. உங்களின் உதவி இயக்குநர்கள் குறித்து? எவ்வாறு திரைக்கதையில் உதவினார்கள்? எப்படி டீம் உருவானது?

6. வசனம் எழுத, கதை தோன்ற யார் inspiration? எந்த நொடியில், எதைப் பார்த்தவுடன் கரு உதித்தது? ஏதாவது புத்தகம்… சமகால ஹாலிவுட்/உலக சினிமா போன்றவற்றால் பாதிப்பு ஏற்பட்டதா?

7. நியு யார்க்கில் சினிமா கற்றுக் கொண்டதற்கும், தமிழ் சினிமாவிற்கும் என்ன வேறுபாடு? எங்கே ஒற்றுமை? ஆறு வித்தியாசம் ப்ளீஸ்…

8. படத்தின் பட்ஜெட், எத்தனை ப்ரின்ட், எங்கெல்லாம் வெளியீடு போன்ற தகவல்கள் தூவ முடியுமா?

9. இதுவோ புதுமுகங்களின் காலம்; கல்லூரி, சுப்ரமணியபுரம்… ஃப்ரெஷ் முகம் போட்டால் இந்த கேரக்டருக்கு பாந்தம் கூடியிருக்கும் என்று எண்ணியதுண்டா?

10. கேபி, பாரதிராஜா போல் எல்லா இயக்குநருமே மிகச் சிறந்த நடிகர்கள்.நீங்க எப்போ ஹீரோ ஆகப் போறீங்க? தருண் கோபி, பேரரசு, சேரன், சுந்தர் சி வரிசையில் அடுத்த கதாநயகனாக ஆவீர்களா?

11. Finally, can you share some ஜிலு ஜிலு photos of அச்சமுண்டு… அச்சமுண்டு!, Prasanna-Sneha together, making of AA & Sneha alone?

ஜெயமோகனை சந்தித்த கதை

beto_frota-cashews-Colors-nose-cool-flickr-photos-imagesஇதற்குப் பெயர் சீமான் ஜோக்காம்.

எழுத்தாளர் ஜெயமோகனை சந்தித்த குறிப்புகளை இயக்குநர் சீமானின் நகைச்சுவையைக் கொண்டு துவங்க வேண்டாம்தான். இருந்தாலும் எங்கேயாவது ஆரம்பிக்க வேண்டுமே!

இன்னொன்றும் இருக்கிறது. ஜெமோ சொன்னதில், என் மனதில் என்ன ஏறி நிலைத்து நிற்கிறது என்பதை இதை வைத்துப் புரிந்து கொள்ளலாம். அல்லது இப்படியும் வைத்துக் கொள்ளலாம். ஜெமோவிற்கு ஆளை எடைபோட்டு எவருக்கு என்ன கொடுக்க வேண்டும் என்பதும் தெரியும் எனலாம்.

ஏதோ ஒன்று… சங்கதிக்குப் போயிடலாம்.

இது இஞ்சினீயரிங் முடித்துவிட்டு மணிரத்னத்திற்கு அசிஸ்டென்ட் டைரக்டராக போக விரும்பியவனின் கதை. விதி விளையாட, இராம நாராயணனின் உதவி இயக்குநராகிறான்.

பாம்பு சேஸ்.

Sylvan_Flickr-Snakes-Green-Rama-Narayanan-Moviesஜிகுஜிகுவென்ற பச்சை சட்டைக்காரனை பாம்பு துரத்தோ துரத்தென்று ஓட்டுகிறது. புல் தடுக்கி சகதியில் விழுந்து விடுகிறான். இது திரைக்கதையில் இல்லை. அம்மன் கோவில் வரை சென்றடைய வேண்டும்.

சட்டை மாற்ற அனுப்பி வைக்கிறார் நெறியாளுநர்.

பார்த்தால், இன்னொரு பச்சை சட்டையைக் காணோம். க்ரூப் டான்சுக்கு வாங்கிய மஞ்சள் இராமராஜன் மட்டுமே நிறைய இருக்கிறது. காஸ்ட்யூம்காரருக்கு இயக்குநர் டெக்னிக் தெரியும். பச்சைக்கு பதிலாக மஞ்சள் போட்டு அனுப்பிவிடுகிறார்.

நம்ம அசிஸ்டென்ட் மணிக்கு இராவணன் ஆக வேண்டியவர். விடுவாரா! கண்ணில் விளக்கெண்ணெய் விட்டு கன்டினியூட்டி பார்ப்பவர். ‘சுரேகா! சுலேகா!! ஷிமோகா!!!’ என்று கத்தி முறையிடுகிறார்.

இராமநாராயணன் அவரை ஆற்றுப்படுத்தி, கடகடவென்று காட்சியை சுட்டு முடிக்கிறார்.

“என்னங்க இது… இப்படி பண்ணிட்டீங்க? ஆரம்பத்துல துரத்தறப்ப பச்சை கலரு. இப்போ மஞ்சள். சனங்க லாஜிக்கா கேள்வி கேப்பாங்களே! திரும்ப இன்னொரு நாள் ஷூட்டிங் செஞ்சரணும்”

“அதெல்லாம் டப்பிங்கில பார்த்துப்பேன்”. இது இயக்குநர் சொன்னதாக சீமான் சகபாடிகளிடம் சொல்வது.

வெறுத்துப் போன அசிஸ்டென்ட் தன் வேலையைத் துறந்து இமயமலைக்கு செல்லும் வழியில் அக்ஷர்தாமில் ஐமேக்ஸ் பார்த்துவிட்டு, பட ரிலீஸன்று சென்னை திரும்பி விடுகிறார்.

அந்தக் காட்சியில் டைரக்டர் எப்படி சமாளித்தார் என்னும் ஆவல். பார்க்கிறார். அந்த சேஸிங் சீனும் வருகிறது.

பச்சை சட்டை. துரத்தல்.

“டேய்… நீ சட்டை மாத்தினேனா எனக்குத் தெரியாதுன்னு நெனக்கிறியா!? பச்சசட்டக்காரந்தானே நீயு!” பாம்பு பேசிவிட்டது. மஞ்சள் சட்டை துரத்தல் தொடர்கிறது.

இதுதான் சீமானின் ராமநாராயணன் ஜோக் என்று ஜெயமோகனால் சொல்லப்பட்டதின் பாபாக்கம்.

Achamundu Achamundu: Knowns & Unknowns

Achamundu-Arun-Prasanna-Sneha-Movies-Films-Pictures-Reviews-Images-clips-018
1. Filmed in NJ and post-production in LA. Red one camera + Live Sound are some notable technical details.

2. Prasanna & Sneha doing father & mother of 6 year old daughter for first time.

3. Movie is about Child molestation, villain (John Shea) abducting their daughter.

4. Villain John Shea dialogues are only in English throughout the movie. (no dubbing)

5. All songs are in background. No duets.

6. Hollywood style romance scenes (but no lip to lip 😦

7. Being a serious movie, no separate comedy.

8. Movie highlights lifestyle of an average Indian in America.

9. Movie has bagged “Garden State Home Grown” award for filming it entirely in NJ.

10. Will be the first Tamil movie to have subtitles in 18+ languages.