Tag Archives: Blogs

ஈழப் படுகொலை: முத்துக்குமார் பத்திரிகை ஊழியர் தீக்குளித்து தற்கொலை: பதிவுத் தொகுப்பு

-/பெயரிலி.
அவர்களின் நல்லெண்ணத்துக்கு மதிப்பளித்தாலும், தம்மைத்தாமே கொளுத்திக்கொள்வது பயங்கரமான மடமைத்தனம்.

தம்மைத்தாமே கொன்று கொல்வது ஒரு பரபரப்பை ஏற்படுத்தும். அதற்குப் பின்னால், எல்லாப்பரபரப்பும் மடிந்தபின்னால், சார்ந்திருக்கும் குடும்பத்தினை ஒரு நாயும் அணுகிப் பார்க்காது.

ஈழத்திலே எத்தனையோ இவர்களின் வயதினை ஒத்தவர்கள் உயிர்வாழ இன்னொரு வழிமுறை கிட்டாதா என்று எறிகணைவீச்சிலே செத்துப்போக, இத்தனை வழிமுறைகளிருக்கும் இவர்கள் இப்படியாக இங்கே செத்துப்போவது அநியாயம்.

தமிழகத்திலே கொளுத்திக்கொள்ளவேண்டியவர்களும் முத்துக்குமாரர்களல்ல; கொளுத்திக்கொல்லவேண்டியவர்களும் முத்துக்குமாரர்களல்ல.

நடைவண்டி: ‍‍இலங்கைத் தமிழர் பிரச்னைக்காக‌ இன்னொரு இளைஞர் தீக்குளிப்பு.: ஆழியூரான்

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே பள்ளப்பட்டியைச் சேர்ந்த ரவி என்ற 30 வயது கூலித் தொழிலாளி இன்று காலை இலங்கைத் தமிழர் பிரச்னைக்காக தீக்குளித்துள்ளார். அவர் விடுதலை சிறுத்தைகள் அமைப்பைச் சேர்ந்தவர் என்றும், தமிழர் தேசிய இயக்கத்தைச் சேர்ந்தவர் என்றும் இருவிதமாகவும் சொல்லப்படுகின்றன.


தீக்குளிக்கும் முன்னர் முத்துகுமாரின் இறுதி அறிக்கை!
வந்தாரை வாழ வைக்கும் செந்தமிழ் நாட்டில் சேட்டு என்றும், சேட்டனென்றும் வந்தவனெல்லாம் வாழ, சொந்த ரத்தம் ஈழத்தில் சாகிறது.
:::
பட்டினிப் போராட்டத்தின் மூலம் களம் இறங்கியிருக்கும் சட்டக்கல்லூரி மாணவர்களே… உங்கள் போராட்டம் வெற்றிபெற சகதமிழனாக நின்று வாழ்த்துகிறேன். உங்களோடு களம் இறங்க முடியாமைக்கும் வருந்துகிறேன். தமிழ்நாட்டிற்காதவரான போராட்டம் எதுவாக இருந்தாலும் சரி, முதலில் களம் காண்பவர்கள் நீங்கள், வழக்கறிஞர்களும்தான். இந்த முறையும் நான்கு மாதங்களுக்கு முன்பாகவே களத்தில் இறங்கியவர்கள் இந்த இரண்டு தரப்பும்தான். உங்களுடைய இந்த உணர்வை மழுங்கடிக்கவே திட்டமிட்டு இந்திய உளவுத்துறை ஜாதிய உணர்வைத் தூண்டிவிட்டு, அம்பேத்கர் சட்டக்கல்லூரி அனர்த்தத்திற்கு வழிவகுத்திருக்கலாம் என்பது என் சந்தேகம்.
:::
ஆயுத தளபாடங்களும், உளவு விமானங்களும்தான் இலங்கை போகின்றனவே தவிர, இந்தியாவால் அனுப்பப்பட்ட ஒரு பாராசெட்டமால் மாத்திரையைக் காட்டச் சொல்லுங்கள் பார்க்கலாம்.

விதியே விதியே என்செய் நினைத்திட்டாய் என் தமிழ் சாதியை…
அன்பார்ந்த உழைக்கும் தமிழ்மக்களே…


நர்சிம்
என்ன எழுதுவது?
நெகிழ்ச்சியாக இருக்கிறது என்று எழுதினால் நான் கோழை.. ஏனெனில் நான் நெகிழும் நிகழ்வில் உடன்கட்டை ஏறியிருக்க வேண்டும்
மகிழ்ச்சியாக உணர்கிறேன் என்றால்.. நான் ஒரு சாடிஸ்ட்.. உன் முடிவில் என்ன மகிழ்ச்சி?
:::
14 பக்க கடிதம் எழுதும் அளவு அவகாசம் இருந்த உனக்கு ஒரு நிமிடம் சிந்திக்க கிடைக்காததை எண்ணித்தான் வருத்தமாக இருக்கிறது.
யார் யாது சொன்னாலும் இது வீரம் அல்ல முத்துக்குமார்.
:::
உன் மரணச்செய்திகள் இன்னும் 3 நாட்களுக்கு உன் உடலை எரித்த தீயை விட பலமடங்கு எரியும்..அதற்கு பிறகு உன் அஸ்தியை போல இந்த நிகழ்வும் கரைந்து மறைந்து மறந்து போகும். என்ன பலன்?
யாவரும் கேளிர்!!…


இட்லிவடை
இவ்வளவு வாய்கிழிய பேசும் தமிழக தலைவர்கள் திருமங்கலம் இடைத்தேர்தலில் இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவு பற்றி ஏன் ஒரு வார்த்தை கூட பேசவில்லை ?
:::
இலங்கையில் விடுதலைப்புலிகள் வீழ்ச்சி அடைந்தால் தான் இவர்களுக்கு ஈழ தமிழர்கள் மீது பரிவு ஏற்படுமா ? இரண்டு வருஷம் முன்பு எங்கே போனது இந்த பாசம் ?

நடிகர் சத்யராஜ், இயக்குநர் ஆர்.கே.செல்வமணி, போன்றவர்கள் செங்கல்பட்டு மணவர்களின் உண்ணாவிரத பந்தலில் மாணவர்களை உசுப்பிவிடுகிறார்கள். ஏன் இவர் பையன் “ஸ்டுடண்ட் நம்பர் ஒன்” சிபி இதில் கலந்துக்கொள்ள கூடாது ?
முத்துக்குமரன் தீக்குளிக்க யார் காரணம்?


உண்மைத் தமிழன்
“செத்தாவது தொலைவோம்.. அப்போதாவது இந்தப் பிரச்சினை விஸ்வரூபமெடுக்கிறதா என்று பார்ப்போம்..” என்று அவர் நினைத்து அதனையே செயல்படுத்தியிருக்கிறார்.
:::
இதில் அசிங்கப்படுத்தும்விதமாக சரத்குமார் ஏதோ ஒரு கல்யாண வீட்டில் கையெடுத்துக் கும்பிடுவதைப் போன்ற போஸில் ஒரு தட்டியை அவரது கட்சிக்காரர்கள் வைத்து கொடுமைப்படுத்தியிருக்கிறார்கள்.
:::
அஞ்சலி செலுத்த வந்தவர்கள் அனைவருமே அந்த இடத்தில் அங்கிருப்பவர்களிடம் “முத்துக்குமார் செய்தது சரியானது அல்ல.” என்று சொன்னால் திரும்பி உயிருடன் போவார்களா என்பது சந்தேகமே. அந்த அளவுக்கு கூடியிருக்கும் இளையோர் பட்டாளம் கொதிப்புடன் காட்சியளிக்கிறது.
:::
மதியம்வரைக்கும் இது தமிழ் உணர்வாளர்களுக்கான போராட்டமாக சென்று கொண்டிருந்தது. மதியத்திற்குப் பிறகு முழுக்க, முழுக்க அரசியலாக மாறிவிட்டது. மாலையில் தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆதரவுக் கூட்டமாக மாறிவிட்டது. மாலையில் வைகோ தனது பேச்சை முடித்தபோது “பிரபாகரன் வாழ்க..” என்று முழுக்கமிட..
:::
ஜெயா டிவி செய்திகளில் மதியம்வரை முதல் விளம்பரம் முடிந்து அடுத்த segment-ல் முத்துக்குமார் விஷயத்தைச் சொன்னார்கள். மதியத்திற்கு மேல் சட்டமன்ற உறுப்பினர் பாபு தாக்கப்பட்ட சம்பவத்திற்குப் பின்பு இது ஒன்றையே திரும்பத் திரும்ப இப்போதுவரையிலும் காட்டி வருகிறார்கள்.

மதுரையில் தங்களது அலுவலகம் தாக்கப்பட்டபோது அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்துவிட்டு ரவுடி பட்டம் சூட்டி பரபரப்பை ஏற்படுத்திய சன் டிவி போனால் போகிறதென்று நினைத்து பத்தோடு பதினோறாவது செய்தியாக இதனைச் சொன்னார்கள்.

கலைஞர் டிவியில் நேற்றே ஒரு கொடுமை நடந்தது. பத்திரிகையாளர் என்ற செய்தியைக்கூட போடாமல் “ஈழப் பிரச்சினைக்காக சென்னையில் ஒருவர் தீக்குளிப்பு..” என்று ஒரு வரி செய்தியை மட்டுமே ஓடவிட்டார்கள். பத்திரிகையாளர் என்பதையும், ஈழப் பிரச்சினைக்காக என்பதையும் செய்திகளில் அதிகம் இடம் பெறாமல் கவனமாகப் பார்த்துக் கொண்டார்கள் இதன் செய்திப் பிரிவு ஆசிரியர்கள்.

மக்கள் டிவியில் ராமதாஸ் மாலை போடுவதை மட்டுமே திரும்பத் திரும்ப காட்டி அதனை சாதாரணமான ஒரு அஞ்சலி செய்தியாக்கி தன்னைக் காப்பாற்றிக் கொண்டுவிட்டார்.
முத்துக்குமார் எதிர்பார்த்தது நடக்கிறதா..?


கொழுவி
எத்தனை ஈழத் தமிழருக்கு 95 இல் யாழ்பாண இடப்பெயர்வின் போது தீக்குளித்து மாண்ட தமிழக உறவின் பெயர் தெரியும்?
முத்துகுமரன்கள் வேண்டாம்


superlinks
த‌ற்கொலைகள் செய்துகொள்வது கோழைத்தனமான முடிவா ?
ஈழ‌த்தில் இந்திய‌ ப‌ய‌ங்க‌ர‌வாத‌ அர‌சு ந‌ட‌த்தும் இன‌ப்ப‌டுகொலை போர்


அசுரன்:
“என்னைவிட புத்திசாலியான குழந்தைகள், சிறுவர்கள், வாலிபர்கள், பெண்கள் அனைவரும் இலங்கையில் கொல்லப்படுகிறார்கள். போர் முனையில் சிக்கித் தவிக்கிறார்கள். அவர்களை காப்பாற்ற வேண்டும் என்பதை வலியுறுத்திதான் நான் தீக்குளித்தேன்” என முத்துக்குமரன் தெரிவித்தார்.
நக்கீரன்: உயிரை கொடுத்து உணர்வை வளர்த்தாய், நீ இட்ட தீ எரிந்து சமைக்கும் முத்துக்குமரா!!


நாக.இளங்கோவன்
வெறுமனே, “எனக்கு இதில் உடன்பாடு இல்லை, நான் தற்கொலையை வெறுக்கிறேன் – இது கோழைத்தனம்…” என்றெல்லாம் நினைப்பதை விட்டு விட்டு, அவன் உணர்வினைப் போற்றவேண்டும். அதனை மதிக்க வேண்டும். நாமும் உணர்வு கொள்ள வேண்டும். அதுவே அந்த ஆன்மாவுக்கு நாம் செய்ய வேண்டிய மரியாதை.
நயனம் – nayanam: முத்துக்குமரனின் தீக்குளிப்பும் சில கருத்துகளும்!


வினவு
வேலைக்காக தட்டச்சு செய்து வாழும் முத்துக்குமாரின் கைகள் தனது 2000 வார்த்தைகள் அடங்கிய மரண சாசனத்தை ஒரு அரசியல்
கட்டுரையாக நிதானம் தவறாமல் அடித்திருக்கிறது. முத்துக்குமாருக்கு பல தலைவர்கள் அஞ்சலி செலுத்தியிருந்தாலும் அவர் இந்த தலைவர்களின் மோசடி நாடகத்தை புரிந்தே எழுதுகிறார். குறிப்பாக தி.மு.கவின் உணர்ச்சிப் பசப்பல்கள் வடிவேலு காமடியைவிட கீழாக இருப்பதாக கேலி செய்கிறார்
ஈழமும் முத்துக்குமாரின் தியாகமும் – நமது கடமை என்ன?


வினவு
முத்துக்குமார் எனும் வீரனின் உயிரைத் துறக்கத் துணிந்த தியாகம் கொழும்பில் இந்திய- இலங்கை கிரிக்கெட் ஆட்டத்தை ரசிக்கும் அற்பங்களின் இழிவை எள்ளி நகையாடட்டும். முத்துக்குமார் எனும் இளைஞனின் தியாகம் ஈழத்தில் கொத்துக் கொத்தாய் செத்து விழும் ஈழத்தமிழனின் பிணங்களைக் கண்டு உவகை கொள்ளும் சுப்பிரமணிய சுவாமி, ஜெயலலிதா, இந்து ராம், தமிழக காங்கிரசு நரிகள் முதலான ஒநாய்களின் வெறியை தமிழக மக்கள் அறுப்பதற்கு உதவட்டும். முத்துக்குமார் எனும் அந்தத் தொழிலாளியின் மரணம் புலம்பெயர்ந்த நாடுகளில் வில்லு படத்தை ரசித்துக் கொண்டிருக்கும் ஈழத்தமிழனின் மரத்துப் போன சுரணையை மீட்டுக் கொண்டு வரட்டும். முத்துக்குமாரின் தீக்குளிப்பு பதிவுலகில் அக்கப்போரையும், அரட்டையையும், வாடிக்கையாகக் கொண்டிருக்கும் சில பதிவர்களுக்கு சமூக அக்கறை என்றால் என்ன என்பதைக் கற்றுக் கொடுக்கட்டும். முத்துக்குமார் எனும் அந்த வார்த்தை இதுவரை ஈழத்திற்காக இது வரை ஒரு துரும்பையும் எடுத்துப் போடாதவர்களின் மனச்சாட்சியை கிளறி எழுப்பட்டும்.
ஈழம்: முத்துக்குமாரை கொன்ற தீ சுரணையற்ற மனங்களை சுடட்டும்!


வத்திராயிருப்பு தெ. சு. கவுதமன்
குடியரசு தினத்தன்று, இந்திய அரசுக்கெதிரான ஆர்ப்பாட்டம் என்பதால் பரபரப்புடன் வந்திருந்த காவல்துறையினர், தோழர் கோவனின் இனஉணர்வுமிகுந்த, கணீரென்ற பாடல்களுக்கு மெய்மறந்து நின்றதைக் காணமுடிந்தது.
அங்கூ…. அங்கூ…: ஈழத்திற்காக ஓர் ஆர்ப்பாட்டம்…


பி.இரயாகரன்
புலிப்பாசிசம் எப்படி தனிநபர் பயங்கரவாதத்தை அடிப்படையாக கொண்டு, சமூகத்தை தனக்கு எதிராக நிறுத்தி சீரழிந்து அரசியல் ரீதியாக தற்கொலை செய்கின்றதோ, அப்படித்தான் தனிநபர் தற்கொலையும்;. இந்த வகையில் முத்துக்குமாரனின் தற்கொலையும், புலியிச அரசியல் எல்லைக்கு உட்பட்டதுடன், அதுஎதான் வழிகாட்டியுள்ளது. மக்கள் விடுதலைக்கு வழிகாட்டாத புலிப்போராட்டமோ, தற்கொலையை தேர்ந்தெடுத்தது. அதையே தன் தோல்வியிலும் மற்றவர்களுக்கும் வழிகாட்டுகின்றது.

சமூகத்தின் மீது நம்பிக்கை இழந்து, அவர்களைச் சார்ந்து போராட முடியாது போன நிலையில் தான், புலியிசம் மனித அவலத்தை தன் அரசியலாக உற்பத்தி செய்கின்றது.
முத்துக்குமாரன் தற்கொலையும், தனிநபர் பயங்கரவாதமும்


கலகம் / தமிழ் அரங்கம்
உண்ணாவிரதங்களும் ஆர்ப்பாட்டங்களும் தொடர்கின்றன, இவற்றுக்கு சளைக்காமல் திரையரங்குகளில் படங்களோ வெற்றிகளை குவித்து ஓடிக்கொண்டிருக்கின்றன. டாஸ்மாக்கில் கூட்டம் அலை மோதுகிறது,மெரினாவில் சுற்றிபார்க்க வருபவர்களும், தீம் பார்க்கில் கூத்தடிக்க போவோரின் எண்ணிக்கையும் குறையவில்லை. தங்க கடற்கரையில் சிலு சிலு காத்து வாங்க கூட்டமோ முண்டியடிக்கிறது.
சுடாத நெருப்பும்,சுடுகிற கண்ணீரும்


வாசு
நிஜமாகவே இலங்கை தமிழருக்காக தற்கொலை செய்து கொண்டாரா அல்லது பணம் கொடுத்து அரசியல் கட்சிகள் எதாவது இதை செய்ய சொன்னதா என்று தெரியவில்லை. எதுவாக இருந்தாலும் முத்துக்குமார் எடுத்த முடிவு பைத்தியக்காரத்தனமானது.
Our Thoughts: உயிர் இத்தனை மலிவா?


சக்கடத்தார் சக்(ங்)கடத்தார்
எங்கட பாசத்திற்குரிய உறவுகளே! உங்கள் உள்ளத்தில் இருக்கும் ஆதரவு எங்களுக்கு நன்றாகத் தெரியும். உங்கள் ஆட்சியாளர்கள் எலும்புத் துண்டுக்காக வாலாட்டுவதற்கு நீங்கள் ஏன் இப்படியான வழியில் உங்கள் உயிரை மாய்க்க வேண்டும்?? உங்கள் ஆதரவை, உங்கள் உணர்வைப் புரிந்து கொண்டவராய்த் தானே நாங்கள் இருக்கின்றோம்.. பிறகு ஏன் உறவுகளே இப்படியான வழி முறைகளைக் கைக் கொள்ள வேண்டும்?? இனிமேல் இப்படியான உயிரை மாய்க்கின்ற வேலைகளில் ஈடுபட வேண்டாம் எம் அன்புக்குரிய உறவுகளே??
கிழவனின் கிறுக்கல்கள்…: தீ கொழுத்தத் தணல் கொடுக்கும் நாட்டில் தீக் குளிப்பா???


சுபானு
நாள்தோறும் வருகின்ற வன்னிச் செய்திகளின் கனதி இங்கே மனங்களில் உறுத்தலைக் கூட்டிக் கொண்டிருக்கின்றது. அதைவிடவும் எதுவும் செய்ய முடியவில்லையே என்ற ஆதங்கம் இருக்கின்றதே அது அதைவிடக் கொடுமை. ஒரு இரும்புக் கூட்டுக்குள் விலங்கிடப்பட்டு உணர்வுகளைக் கூட சுதந்திரமாக வெளியிடக் கூட முடியாத மனித மனங்களைக் கொண்டு வாழ வேண்டிய கட்டாயம்.

அதைவிட வருத்தம் என்னவென்றால் எனக்கேன் இந்த வேண்டாப் பொல்லாப்பு என்று என் பல்கலைக்கழக நண்பர்கள் சிலபேர் மனம் விட்டுக் கதைக்கூட பயப்பட்டு ஓடுகின்றார்களே அவர்களை என்னவென்று சொல்வது. வெறுமனே நண்பர் வட்டாரங்களுக்கிடையில் தமது வீரவசனம் பேசிக்கொண்டும், சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் காதல் கதைகளில் தம்மை ஈடுபடுத்திக் கதைத்துக் கொண்டும், நாம் உண்டு எம் வேலையுண்டு என்னும் என இருக்கும் நாம் எங்கே, ஈழத்தமிழர்க்காக தன் இன்னுயிரை தமிழர்க்காக அர்ப்பணித்த அந்த முத்துக்குமார் எனும் இளைஞர் எங்கே.

சின்னத் தீச் சுடர் ஒன்று கையில் பட்டாலே வலியில் துடித்துப் போய்விடுவோம். ஆனால் முத்துக்குமார் தன் உடலையே மண்ணெண்னையூற்றித் ஈழத் தழிழர்களுக்காக தீக்கிரையாக்கினான்
ஊஞ்சல் – Unchal: கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரம்


யுவகிருஷ்ணா
கடந்த வாரம் பெண்ணே நீ அலுவலகத்துக்கு சென்றபோது கூட முத்துக்குமாரை சந்திக்க நேர்ந்தது. அவர் கூகிளில் தேடிப்பார்க்கும் விஷயங்கள் வித்தியாசமானதாக இருக்கும். நான் சென்றபோது..
மடிப்பாக்கம் லக்கிலுக்: ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு


Stop the Vanni Genocide / படுகொலைகளை நிறுத்து
எனது பெயர் முத்துக்குமார், எனது சொந்த ஊர் திருச்செந்தூர் அருகில் உள்ள ஆத்தூர் கொழுவை நல்லூர் ஆகும். எனது தந்தை தாம்பரத்தில் பழைய இரும்புக்கடை வைத்துள்ளார். எனக்கும் அவருக்கும் பேச்சுவார்த்தை கிடையாது.
முத்துக்குமாருக்கு அஞ்சலிகள்


மணிகண்டன்
முத்துகுமரனின் இந்த செயல் அசாதாரணமானது. மக்களின் மெத்தனபோக்கை சற்றே மாற்றும் அளவிற்கு சக்தி வாய்ந்தது. இந்த சூழ்நிலையில் அவரின் மையக்கருத்தான “ஈழ மக்களின் துயர் துடைப்போம்” என்பதே முன்னிறுத்த படவேண்டும். அவரது முழு அறிக்கை தமிழகத்தில் உள்ள ஒருமித்த கருத்துள்ள கட்சிகளையும் ஒன்று சேரவிடாது. முத்துகுமரன் உணர்ச்சி கொந்தளிப்பில் எழுதப்பட்ட / பேசப்பட்ட கருத்தை எல்லாம் நம்பிய நல்ல மனிதர்.

பான் கி மூன் சீனர் என்றும், ராஜிவ் காந்தியின் கொலை இன்டெர்போல் விசாரணைக்கு செல்ல வேண்டும் என்று அவர் கூறிய கருத்தை முன்னிறுத்த வேண்டிய அவசியம் இல்லை.


தமிழ் சசி / Tamil SASI

தீக்குளிப்பு போன்றவற்றை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. தமிழகத்தில் இது போன்ற செயல்களுக்கு எந்த அர்த்தமும் இல்லை. இன்று பேசி விட்டு நாளை எல்லோரும் அவரவர் வேலைகளை பார்க்க சென்று விடுவார்கள். ஆனால் “நீண்ட” துன்பத்தில் சிக்க போவது அந்த இளைஞரை நம்பி இருக்கும் குடும்பம் தான்.

இத்தகைய போராட்டங்கள் தவிர்க்கப்பட வேண்டும்

இனி பல முத்துகுமரன்கள் உருவாகுவார்கள் போன்ற அரசியல்வாதிகளின் பேச்சு பொறுப்பில்லதது. ஒரு முத்துகுமார் போதும்.

ஹிந்தி திணிப்பிற்காக இது போன்று பல இளைஞர்கள் தீக்குளித்த சாம்பலில் இருந்து தான் திமுக ஆட்சியை பிடித்தது. அப்படி ஆட்சியை பிடித்த திமுகவின் இன்றைய தலைவர் திருக்குவளை முத்துவேல் கருணாநிதி தன்னுடைய வாரிசுகளை தான் ஆட்சியில் அமர்த்த முயலுகிறார். நடுவண் அரசில் அவர் கட்சியின் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் தமிழக நெடுஞ்சாலைகளில் ஹிந்தி எழுத்துக்களை நிறுவிய பொழுது அதனை அவரால் தடுக்க முடியாமல் போனது. இது தான் வரலாற்று நிகழ்வு. இதனை இளைஞர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

தீக்குளிப்பு போன்ற அர்த்தமற்ற செயல்களை தவிர்க்க வேண்டும்.


முத்து தமிழினி
கருணாநிதி இலங்கை பிரச்சினையினால் ஆட்சியை இழந்ததே இல்லை என்று லேட்டஸ்ட்டாக வரும் தகவல்கள் நல்ல காமெடி.1989 ஆட்சி எதனால் போச்சு என்று யாராவது சொன்னால் தேவலை.எனக்கு தெரிந்த அரைகுறை அரசியலும் மறந்து விட்டது.

நம்மால் எதுவும் செய்ய முடியவில்லை. இருக்கவே இருக்கார் கலைஞர் என்று நாமெல்லாம் அவரை கும்முவதாக சில காலம் முன்பு சொல்லியிருந்தேன்.அதே தான் இப்பவும். கலைஞர் ராஜினாமா செய்தால் ஈழம் மலருமா? கருணாநிதியும் இதை நாசூக்காக கேட்டார். யாரும் கண்டுக்கலை.
ஒரு தமிழனின் பார்வை:ஈழ பிரச்சினை – கருணாநிதியை கும்முவது தீர்வாகாது


வெற்றி

அது தெற்காசிய பேட்டை தாதா என்ற கோதாவில் இந்தியா எடுத்துள்ள நிலை. எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் இதுதான் நடக்கும்

முத்து, நீங்கள் மேற்கூறியுள்ள கருத்துடன் எனக்கு உடன்பாடில்லை. காரணம், பாரதிய ஜனதாக் கட்சி ஆட்சியில் இருந்த போது காங்கிரசுக் கட்சி போல கண்மூடித்தனமாக தமிழின அழிப்புக்குத் துணை போகவில்லை.

2000ம் ஆண்டில் நோர்வே மூலம் முன்னெடுக்கப்பட்ட சமாதான முயற்சிகளில் பாரதிய ஜனாதாக் கட்சி மறைமுகமாக பெரும் பங்காற்றி இருந்தது என நான் அறிந்தேன்.

அதுமட்டுமல்ல, அடல் பிகாரி வாஜ்பாய் அவர்கள் ஈழ விடயத்தில் தமிழக மக்களினதும் தமிழகத் தலைவர்களினதும் கருத்துக்கும் உணர்வுகளுக்கும் ஓரளவுக்கேனும் மதிப்பளித்துச் செயற்பட்டார்.

பா.ஜ.க தனித் தமிழீழத்தை ஆதரிக்கவில்லையெனினும், ஈழத்தமிழர்களின் சிக்கல் பேச்சுவார்த்தை மூலம் தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளக் கூடிய தீர்வை நோக்கியே இருந்தது.

ஆனால் காங்கிரசுக் கட்சி, தமிழின அழிப்புக்கு சிங்கள அரசுக்கு உதவியளித்து வருகிறது.


We The People

நம்மால் எதுவும் செய்ய முடியவில்லை. இருக்கவே இருக்கார் கலைஞர் என்று நாமெல்லாம் அவரை கும்முவதாக சில காலம் முன்பு சொல்லியிருந்தேன்.அதே தான் இப்பவும். கலைஞர் ராஜினாமா செய்தால் ஈழம் மலருமா? கருணாநிதியும் இதை நாசூக்காக கேட்டார்.யாரும் கண்டுக்கலை.

அப்புறம் எதுக்கு உண்ணாவிரதம், மனிதசங்கிலி, எம்.பிக்கள் ராஜினாமா என்று டெய்லி நாடகம் போட்டார் என்று அவரிடமோ! இல்லை நீங்களாவோ சொன்னால் தேவலை??!!

1989 தி.மு.க ஆட்சி போனதுக்கு காரணம் ஜெ-ராஜீவ் கூட்டணியே தான் அது தான் அரசியல், நீங்க சொல்லறத பார்த்தா 1980 எம்.ஜி.ஆர் ஆட்சி கலைப்பு ஈழப்பிரச்சனைக்காக என்று சொல்லுவீங்க போல… என்னங்க உங்கள ஒரு அரசியல் புலின்னு நினைச்சா, இப்படி காமெடி பண்ணறீங்க!!?


ராஜ நடராஜன்
கருணா, அனந்தசங்கரி, பிள்ளையான் போன்றவர்கள் இடம் மாறியும் கூட உங்களை புதுப்பித்துக் காட்டும் மக்களுக்கு நம்பிக்கையூட்டும் நிகழ்வுகளை நீங்கள் உருவாக்காததே தமிழக தமிழர்களின் நம்பிக்கையின்மைக்கான காரணமும், இருப்பதை உறுதியாகப் பற்றிக் கொண்டாவது சுய கவுரவத்துடன் வாழலாம் என்ற நம்பிக்கைதான் ஈழத்தமிழனுக்கு இத்தனை அவலங்களுக்கும் மத்தியிலும் இன்னும் மக்களை விடுதலைப்புலிகளின் பக்கம் இழுக்கிறதெனலாம்.

இலங்கை அரசு புலம் பெயர்ந்த தமிழனை மீண்டும் சம உரிமையோடு அணைத்துக்கொள்வதும், அல்லது இரண்டாம்தரக் குடிமகனாக வரவேற்பதும்,அல்லது அகதியாக உலகம் முழுவதும் ஊர்சுற்றவிடுவதும் போன்ற முக்கியமான நிகழ்வுகள் எதிர்காலத்தில் காத்துக் கிடக்கின்றன.மண்வாசனை காரணமாகவோ இயலாமையினாலேயோ தன் மண்ணை விட்டு நகராத உயிரோடிக்கும் உண்மை தமிழர்களின் எதிர்காலம் நிலைக்கவேண்டும்.
பார்வையில்: தமிழகம்,ஈழம், இலங்கை-ஓர் பார்வை


பத்ரி சேஷாத்ரி
விடுதலைப் புலிகளை இலங்கை ராணுவத்தால் அழித்தொழிக்க முடியும் என்று நான் நம்பவில்லை. அப்படியே அது நடந்தாலும், அதையொட்டி, ராஜபக்‌ஷேவும் இலங்கை அரசும் தமிழர்களுக்கு எதையும் அள்ளிக்கொடுத்துவிடப் போவதில்லை. தமிழர்களின் நிலை இப்போது இருப்பதைவிட மிக மோசமாகத்தான் போகும்.

விடுதலைப் புலிகள் அமைப்பால் இலங்கையைத் துண்டாக்கி, தனி ஈழத்தைப் பெறுவது சாத்தியம் என்றும் எனக்குத் தோன்றவில்லை.
எண்ணங்கள்: இலங்கைப் பிரச்னையும் தீக்குளித்தலும்


யட்சன்
தமிழுணர்வாளர்களின் வெறும் வாய்க்கு அவலாய் போனதை தவிர அந்த இளைஞனால் எதை சாதிக்கமுடிந்ததென தெரியவில்லை. இயலாமையின் உச்சத்தில் கவன ஈர்ப்பாய் செய்ததை தியாகமென சொல்வதை காட்டிலும் தற்கொலையென்றே வரையறுக்கலாம்.
:::
விடுதலைப்புலிகளின் செயல்களையெல்லாம் கண்ணை மூடிக்கொண்டு நியாயப்படுத்தும் போக்கினை யார் துவங்கினார்களென தெரியவில்லை.
:::
விமர்சனங்களை தாங்கிக்கொள்ளும் பக்குவமில்லாதவர்களின் எதிர்வினைக்கு பயந்து முப்பது வருடங்களுக்கு மேலாய் புனிதபதாகையினை புலிகளுக்கு தந்த என் தமிழினமும் குற்றவாளிதான்.
முட்டாள் குமரனும் சில முழு பூசனிக்காய்களும்….


மாலன்
இந்த நெருப்பை மீண்டும் ஊடகங்கள் ஊதிப் பெரிதாக்கி அது இன்னும் பல தற்கொலைகளுக்கு இட்டுச் செல்லக் கூடாதே என்பதுதான். மண்டல் கமிஷன் பரிந்துரைகளை ஏற்பதாக வெளியான அறிவிப்பை அடுத்து ராஜீவ் கோஸ்வாமி தீக்குளித்த போது ஊடகங்கள் அதைப் பற்றி எழுதி விசிறிவிட விளம்பர வெளிச்சத்திற்கு ஆசைப்பட்டு 18லிருந்து 24 வயதுள்ள 159 இளைஞர்கள் தீக்குளித்தார்கள்.(அன்று தொலைகாட்சி இந்தளவிற்கு பரவியிருக்கவில்லை, கடவுளுக்கு நன்றி )
:::
விடுதலைப் புலிகள், சிங்கள அரசு இரண்டுமே தங்களது அதிகார எல்லைகளை விரிவுபடுத்திக் கொள்ள, விரிவுபடுத்திக் கொண்ட எல்லைகளைத் தக்க வைத்துக் கொள்ள மோதுகின்றன. இதற்கான வழி போர் என அவை தேர்ந்தெடுத்திருக்கின்றன. கடந்த 30 ஆண்டுகளாக நடைபெற்று வரும் போரில் இந்த இரண்டு தரப்புமே நிரந்தரமான வெற்றிகளைப் பெற்றதில்லை என்று அறிந்தும் அவை இந்த வழியைத் தேர்ந்தெடுத்திருக்கின்றன.
:::
இலங்கைத் தமிழர்கள் அதிகாரம் பெற வேண்டும் என்பதுதான் அவர்களது இலட்சியமாக இருந்திருக்குமானால், அவர்கள் ராஜீவ் – ஜெயவர்த்தன ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டிருப்பார்கள். (அது உறுதியளித்த மாநிலக் கவுன்சில்களின் அதிகாரத்தைப் பின், இந்தப் 18 ஆண்டுகளில், மாநில சுயாட்சிப் போராட்டங்கள் போன்ற அரசியல் விவாதங்கள் (political discourse) நடவடிக்கைகள் (political processes) மூலம் விரிவுபடுத்தியிருக்கமுடியும்.அதை அவர்கள் ஏற்க மறுத்ததற்குக் காரணம் ராஜீவ் – ஜெயவர்த்தன திட்டத்தில் (scheme) தங்களுக்கு முக்கியத்துவம் இல்லை என்பதே. பின்னர் ரணில் விக்ரமசிங்கேயோடு ‘தேனிலவு’ கொண்டாடிய நாட்களில் கூட அவர்கள் ஓர் அதிகாரப் பகிர்வினை எட்டியிருக்க முடியும். ஆனால் விடுதலைப் புலிகளின் இலட்சியம் தமிழர்கள் அதிகாரம் பெற வேண்டும் என்பது அல்ல;

தாங்கள் அதிகாரம் பெற வேண்டும் என்பதே.
என் ஜன்னலுக்கு வெளியே…: முத்துக்குமார்

மறுமொழிவதில் எத்தனை வகை உண்டு?

நன்றி: In a Word – The Atlantic (January/February 2009)

முதலில் ‘Get A Life’ () ‘போங்கடா! போய் பிள்ளகுட்டிங்கள படிக்க வைங்கடா’ பதிலடிக்காரர் அறிமுகம்:

  • இணையத்தில் தங்களுக்கு உவப்பில்லாத இடங்களில் வலம்வருவது வாடிக்கை.
  • வித்தியாசமான கிண்டல் கூடிய உவமை நிறைய கைவசம் வைத்திருக்கவும். உதாரணம்: ஊசி நுனியில் யானையைக் கூட நுழைத்துவிடலாம். ஆனால், உங்களுக்கு புத்தியை புகட்ட முடியாது.

gotcha-get-a-life-internet-debates-comments-atlantic-word-fugitives-wide

அடுத்து ‘Gotcha‘ () ‘புரியல; தயவு செய்து விளக்கவும்’ கண்டுபிடிப்பாளர் குணாதிசயம்:

  • அடுத்த பிறவியிலும் இலக்கண ஆசிரியராக மறுஜென்மம் கிடைக்காத இவருக்கு சந்தி, பால் பொருத்தம், பன்மை ஒழுங்கமைவு மட்டுமே முக்கியம்.
  • ‘ஈழம் பிண்ணனி சரித்திரம்’ கட்டுரையில் தமிழீழம் குறித்த தகவலை விட்டுவிட்டு, “பிண்ணனி சரியில்லையே; பின்னணிதானே வரும் என்று கூட அறியாத தாங்கள்…” என்று தன்னுடைய மொத்த மறுப்பையும் முடித்துவிடுவார்.

எழுத்தாளர் ஜெயமோகன்: நான் கடவுள்: பாலா

நான் கடவுள் குறித்து அவரின் பதிவுகளில் எழுத்தாளர் ஜெயமோகன் எழுதியவை:

காசியில்: கனவின் கதை: “மணிகர்ணிகா கட்டத்துக்கு”

”சார் பெரிய ரைட்டர்!”

ஆனந்த விகடன் பேட்டி 2007

சினிமாவுக்குப் போன இலக்கியவாதி? திரையும் சமரசமும் – ஒரு கடிதம்

படப்பிடிப்பு: தேனியில்…

‘நான் [கிட்டத்தட்ட] கடவுள்’

இசை வெளியீடு: சென்னையில்…

நான் கடவுள், கடிதங்கள்

பதில்: இருகேள்விகள்

நாவல் :ஏழாம் உலகம் :கடிதங்கள்

பயணக்குறிப்பு: இந்தியப் பயணம் 17 – வாரணாசி

மற்ற தமிழ்ப்பட வேலை: கதாநாயகன் தேர்வு

கிசுகிசு – எதிர்வினை: ஜூவியின் பதினாறாம் பக்கம்.

முந்தைய பதிவு:
1. “பிச்சைப் பாத்திரம்”

2. வசனகர்த்தா ஜெயமோகன் பேட்டி

3. Om Siva Om – Vijay Prakash: நான் கடவுள் – இளையராஜா

4. Naan Kadavul – Music

5. நான் கடவுள் – அஹம்ப்ரம்மாஸ்மி

புத்தாண்டு வாழ்த்து

  1. வெறுமனே புத்தாண்டு வாழ்த்தாக பதிவிடாமல், படிப்பவருக்கு ஏதாவது பிரயோசனப்படுமா என்றும் யோசித்து பதிவிடவும். (உதாரணம்: பத்ரி: புத்தாண்டு உறுதிமொழி
  2. நிறைய வாசிக்கவும். (உ.: How to be picky with blog posts? – Primer for selective reading)
  3. டிப்ஸ் கொடுக்கவும். (உ.: பா ராகவன்: திருவிழாவுக்குத் தயாராகுங்கள்!)
  4. blog-stats-2008-visitor-graphs-tamil-jeyamohan

  5. பதிவொன்றுக்கு படமொன்று இடவும்.
  6. மொக்கையோ, கருத்தோ, அனுபவத்தை அணு அணுவாகப் பகிர்தலோ: 250 வார்த்தைகளுக்கு மிக வேண்டாம். (உ.: வேர் இஸ் தி பார்ட்டி – பொழிப்புரை)
  7. 250 வார்த்தைக் கோட்டைத் தாண்டுபவர், உயிரோசைக்கோ திண்ணை போன்றவற்றுக்கோ எழுதி எழுத்தைக் கூர்மையாக்கிக் கொள்ளவும். இரண்டிலும் உன் எழுத்து வெளியாகாவிட்டால், மனுஷ்யபுத்திரனை நேரில் சந்தித்து நட்பு கொள்ளலாம் (அ) அடுத்த புல்லட் பாயின்ட்டை படிக்க.
  8. இந்தப் பதிவைப் போல் புள்ளி புள்ளியாகப் பிரித்து 1,2,3 என்று இடுக.
  9. அப்படியே 250ஐத் தாண்டுமென்றால் அடுத்தவரைக் குறித்த ருசிகரத் தகவலோ, லாவகமான மொழிப்பிரவாகமோ, ஏதோவென்று உள்ளேயிருந்து கிச்சுகிச்சு மூட்ட வேண்டும். (உ.: ஜெயஸ்ரீ: பரித்ரானாய ஸாதூனாம்… – Part 2)
  10. புத்தகமெழுதிய மனிதரெல்லாம் பதிவரில்லை; பதிவு வைத்திருக்கும் மனிதரெல்லாம் புத்தகம் எழுதத் தகுதியானவரில்லை. பதிவு நடை என்பது வேறு; புத்தக ஆக்கம் என்பது வேறு. (இரட்டை குதிரை சவாரிக்கு உ.: முகில்: அகம் – புறம் – அந்தப்புரம்)
  11. முன்பே எழுதியதைத் திரும்ப திரும்ப வேறு வேறு விதமாக சொல்ல அஞ்ச வேண்டாம். (உ.: வலைப்பதிவருக்கு டிப்ஸ், புதிதாய் பதிபவர்களுக்கு வழிகாட்டி)
  12. புதிய வாசகர் தினந்தோறும் சேரும் காலமிது. எனவே, பழம்பாடல் ரீமிக்ஸாக (பதிவுக்குள்ளேயே) சொன்னதை சுவைபட மாற்றி மாற்றி எழுதிப் பதிவாக்கு. (உ.: லக்கிலுக்/யுவகிருஷ்ணா: தமிழ் வலையுலக மார்க்கெட்டிங் உத்திகள்!)
  13. அதற்காக, ஒரே சப்ஜெக்டில் அடுத்தடுத்து தொடர்ந்து எழுத வேண்டாம். (உ.: 2008ன் கலக்கல் பதிவர்)
  14. சிவனின் அடிமுடி கொண்டவராக ஒரு சப்ஜெக்டில் ஆழமான அறிவு இருப்பின், அதை மட்டும் முன்னிலை நிறுத்த தனிப்பதிவு துவங்கலாம். (உ.: தமிழில் புகைப்படக்கலை: PiT Photography in Tamil)
  15. எளிமையான வார்ப்புரு வைத்திரு. உன் பதிவுக்கு எவ்வளவு பேர் எப்படி வந்தார் என்பது எனக்குத் தேவையில்லாத தகவல். உலாவியில் சீக்கிரம் வருகிறதா என்பது மட்டுமே முக்கியம்.(டெம்பிளேட் உ.: கூடுதுறை)
  16. பாட்டு கேட்க வேண்டுமானால், எனக்கு விருப்பமானதை மனதிற்கு உவந்த முறையில் (ரேடியோ, எம்பி3, ஐபாட்) என்று கேட்டுக் கொள்வேன். தானியங்கியாக சத்தத்தை அலற விடாதீர்.(காதுக்கு கேடு உ.: தமிழ்த்துளி)
  17. பதிவின் நடுவில் பொருத்தமாக அடுத்தவருக்கு சுட்டுவதை பெருக்கவும்: chrisbrogan.com: 27 Blogging Secrets to Power Your Community
  18. உன் பதிவிற்கும் பொருத்தமான இடங்களில் தாராளமாக உரல் இடவும். (உ.: வலைப்பதிவரின் வாழ்க்கைச்சுழல் & வலைப்பூ வைரஸ்)
  19. பதிய நினைத்தால் பதியலாம்; வழியா இல்லை பூமியில்? (உ.: இராயர் காப்பி கிளப்: வலைப்பதிவுகளிலும் என்ன எழுதலாம்?
  20. அரசியல், சினிமா, சமூகம் ஆகியவை குறித்து மட்டுமே தொடர்ந்து அரியணையில் இருந்து முத்து உதிர்க்கப் போவதாக இருந்தால் ட்விட்டர் மட்டுமே உங்களுக்குப் போதுமானது. (உ.: ட்விட்டர்: எளிய அறிமுகம்)
  21. 250 ஆகிவிட்டது. முற்றும்.

Top Tamil Bloggers in 2008

சென்ற வருடத்தில் தமிழ்ப்பதிவுகளைக் கலக்கியது யார்?

கடந்த வருடத்தில் 1500+ பதிவுகள் தமிழ்மணத்தில் இணைந்துள்ளன. (துவக்கம் – 2008 இறுதி)

குறிப்பிடத் தகுந்த பதிவுகளை சேமித்து வைக்கும் முயற்சியில் இறங்காவிட்டால், இந்தத் தகவல் எனக்கு தெரிந்திருக்காது. இத்தனை புதியவர்களில் நான் வாசிக்க ஆரம்பித்தது மிகமிகக் குறைவு. முதல் நான்கு வருடத்தில் 2500 பதிவுகளும், கடந்த வருடம் மட்டும் 60% வளர்ச்சி கண்டிருப்பதும் மிக ஆரோக்கியமான சூழல்.

கவனிக்க மறந்திருப்பீர். தமிழ்ப்பதிவும் பதிவரும் கடந்த வருடத்தில் 60+ சதவீதம் (1500 new Tamil Blogs) எண்ணிக்கையில் அதிகரித்துள்ளது.

எனவே, நான் புலம்பியதை வாபஸ் வாங்க வேண்டிய நிலை?!

இதே போல், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மொழிகளின் புள்ளிவிவரம் என்ன? எத்தனை ஜாஸ்தி ஆகியிருக்கும்? மொத்தம் எவ்வளவு?

புதிய வலைப்பூ ஒவ்வொருவரையும் சொடுக்கி, மேலோட்டமாகவாது மேய்ந்து, தலை பத்து பட்டியலிடுவது என்னும் முடிவில் மாற்றம். 1500+ஐயும் படித்து முடிக்க மூன்று மாதமாவது ஆகும். அதற்குள் ‘சூடான இடுகை’, சீமான், பாலஸ்தீனம், தமிழ்மண விருது எல்லாமே ஆறிப் போகும்.

முதற்கண் முக்கியஸ்தர் கவனிப்பு

(அதாவது புதிதாக எதுவும் எழுதாமல், வேறெங்கோ இட்டதை மீள்பதிவு செய்யும் பத்து பட்டியல்)

  1. கவிதை & பேட்டி
  2. தமிழச்சி தங்கபாண்டியன்

  3. creations
  4. நீல பத்மநாபன்

  5. Revathy | PassionForCinema
  6. ரேவதி

  7. பேசுகிறார்
  8. பாலகுமாரன்

  9. துணிவே துணை :: கல்கண்டு
  10. லேனா தமிழ்வாணன்

  11. வாழ்க தமிழுடன் !
  12. நெல்லை கண்ணன்

  13. எழுத்துகள்
  14. அ.ராமசாமி

  15. Pamaran
  16. பாமரன்

  17. சாரு ஆன்லைன்
  18. சாருநிவேதிதா

  19. Era murugan
  20. இரா முருகன்

உடனடியாக நினைவுக்கு வருபவர், நண்பரின் பரிந்துரை, சூடான இடுகையில் அடிக்கடி உலா வந்தவர், ட்விட்டரில் என்னைப் பின் தொடர்பவர், துறைசார்ந்து எழுதுபவர், திரட்டி சாராமல் இயங்குபவர், மாற்று(.நெட்) திரட்டியில் தொடர்ந்து கவனிக்கப்பட்டவர், என்னை கவனிப்பவர், கிழக்கு பதிப்பகத்தில் இருந்து கிளம்பிய கூட்டம், வோர்ட்ப்ரெஸ்.காம்-இல் அடிக்கடி தென்பட்டவர் என்றெல்லாம் ரொம்ப யோசித்து என்னுடைய பட்டியல்.

தலை பத்து(+1) 2008

  1. யாழிசை ஓர் இலக்கிய பயணம்
  2. லேகா

  3. பயணங்கள்
  4. மரு. ஜா. மரியானோ அண்டோ புருனோ மஸ்கரனாஸ்

  5. வினவு, வினை செய்!
  6. மக்கள் கலை இலக்கியக் கழகம்

  7. மனம் போன போக்கில்
  8. என். சொக்கன்

  9. ச்சின்னப் பையன் பார்வையில்
  10. பூச்சாண்டி

  11. ஏ ஃபார் Athisha
  12. அதிஷா

  13. பரிசல்காரன்
  14. கிருஷ்ணகுமார்

  15. இந்திய மக்களாகிய நாம்….
  16. சுந்தரராஜன்

  17. Pennin(g) Thoughts
  18. ரம்யா ரமணி

  19. மணியின் பக்கம்
  20. பழமைபேசி

  21. தமிழில்
  22. டாக்டர் ஷாலினி

விஐபி, பழம்பதிவர், நான் அதிகம் வாசிக்காத பத்து(+1) உப பட்டியல்:

  1. R P Rajanayahem
  2. ஆர் பி ராஜநாயஹம்

  3. தங்கள் அன்புள்ள
  4. முரளிகண்ணன்

  5. சிதைவுகள்…
  6. பைத்தியக்காரன்

  7. சூர்யா – மும்பை
  8. சுரேஷ்குமார்

  9. mathimaran
  10. வே. மதிமாறன்

  11. வெட்டிவம்பு
  12. விஜய் குமார்

  13. ஓவியக்கூடம்
  14. ஜீவா

  15. முத்துச்சரம்
  16. ராமலக்ஷ்மி

  17. மொழி விளையாட்டு
  18. ஜ்யோவ்ராம் சுந்தர்

  19. US President 08 :: அமெரிக்க அதிபர் தேர்தல்
  20. குழுப்பதிவு

  21. writerpara.net | பேப்பர்
  22. பா ராகவன்

நிறைய அடிபடுகிறார்

(அ)

இவர்களும் இருக்கிறார் 13

தொடர்புள்ள சில:

1. Happening Tamil Blogs – Must Read 30: Index

2. தமிழ்ப்பதிவுகள் – குறிப்பிடத்தக்க முகமூடிகள்

3. வலைப்பதிவுகள் – அடுத்த கட்டம

Thamizmanam Awards 2008 – User Interface & Web Page: Suggested Improvements

தமிழ்மண மின்மடல் அறிவிப்பு:

அன்புள்ள பதிவருக்கு,

தமிழ்மணத்தின் வணக்கங்கள்.

இவ்வாண்டின் மிகச்சிறந்த இடுகைகளைத் தெரிவுசெய்யும் தமிழ்மணம் விருதுகள்-2008 வழியாக உங்களைச் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சியடைகிறோம்.

இவ்விருது பற்றிய அறிவிப்புகள், ஏற்கனவே வெளியிடப்பட்டிருந்தன. தற்சமயம் இத்தெரிவு பற்றிய முழுமையான விபரங்கள் தமிழ்மணம் வலைப்பதிவில் வெளியிடப்படிருக்கின்றது.

இப்பொழுதிலிருந்து 2009-01-05 11:59 PM வரை, இவ்விருதுத் தெரிவிற்கென அமைக்கப்பட்டிருக்கும் சிறப்புப் பக்கத்தில் இவ்வாண்டில் (2008) எழுதப்பட்டவற்றுள் மிகச்சிறந்ததாக நீங்கள் கருதும் உங்களது இடுகைகளை பரிந்துரைக்கலாம்.

இதற்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்புத் தளத்தில் உள்நுழைவதற்கான தொடுப்பு இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இது உங்களுக்கு மட்டுமேயான தனித் தொடுப்பாகும்.

இத்தெரிவுத் தளத்தில் இவ்வாண்டில் நீங்கள் எழுதிய அனைத்து இடுகைகளும் வரிசைப்படுத்தப்பட்டிருப்பதைக் காணலாம். இதில் பிரிவுக்கு ஒன்றாக உங்களது சிறப்பான இடுகைகளை சமர்ப்பிக்க இயலும்.

இப்பக்கத்திற்கு நியமனங்கள் வரவேற்கப்படும் கால இடைவெளியில் எத்தனை முறை வேண்டுமானாலும் உட்செல்லலாம்.

இச்செயல்பாடுகள் குறித்து உங்களுக்கு எழும் கேள்விகளை/ஐயங்களை தமிழ்மணம் வலைப்பக்கத்தில் பின்னூட்டமாக எழுப்பலாம்.

இவ்விருதுகள் சிறக்க உங்களின் பங்களிப்பை ஆர்வமுடன் எதிர்நோக்குகின்றோம்.

புரிந்துணர்வுடன் தொடரும் உங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி.

வாழ்த்துக்களுடன்
தமிழ்மணம்.நெட் – விருதுக்குழு::2008

குறிப்பு: இம்மின்னஞ்சல் தானியங்கியாக அனுப்பப்படுவதால், இம்முகவரியை எவ்விதத்திலும் உபயோகிக்க இயலாது.

tm-awards-2008-nominations-tamil-bloggers-posts-user-interfaceஇப்போது மேம்படுத்த சில ஆலோசனை + கருத்து:

  1. இன்டெர்னெட் எக்ஸ்ப்ளோரர் 7-இல் சரியாகத் தெரியவில்லை. பக்கவாட்டில் உள்ளது போல் தெரிகிறது.
  2. ‘ஏன் இவ்வாறு தெரிகிறது? என்ன நிவர்த்தி?’ என்பதை எல்லாம் தீர்த்துவைக்க மின்னஞ்சல் முகவரி கொடுத்து உதவலாம். தொடர்பு கொள்ள ட்விட்டர் முதற்கொண்டு பல்வேறு தொழில் நுட்ப கருவிகள் இருக்கும் யுகத்தில் Contact Form, அரட்டை ஐடி என்று எதுவும் இல்லாமல் இருப்பது வசதி அளிக்கவில்லை.
  3. ‘ஐயங்களை தமிழ்மணம் வலைப்பக்கத்தில் பின்னூட்டமாக எழுப்பலாம்’ என்பது சிரமமான வசதி. மறுமொழி ஒழுங்காக சென்றதா? ஸ்பாம், எரிதத் தடுப்பானில் கபளீகரம் ஆனதா? விவகாரமான கேள்வி என்பதால் மட்டுறுத்தப் பட்டு மறுக்கப்பட்டதா? என்று கதங்கதங்கென்று கதி கலங்காவிட்டாலும், ஏதுவாக இல்லை.
  4. ‘தெரிவுத் தளத்தில் இவ்வாண்டில் நீங்கள் எழுதிய அனைத்து இடுகைகளும் வரிசைப்படுத்தப்பட்டிருப்பதைக் காணலாம்.’ என்கிறார்கள்: ஆனால், 2006இலிருந்து நான் எழுதிய அனைத்துப் பதிவுகளும் இடம்பிடித்துள்ளன.
  5. ஒரு வருடத்துக்கு ஏறக்குறைய 400+ பதிவுகள். எல்லாவற்றையும் மூன்று முறை இடம்பிடிக்க வைக்கும் பக்கத்திற்கு பதிலாக மேட்ரிக்ஸ் கொடுத்து சுலபமான இடைமுகம் ஆக்கி இருக்கலாம். பிரிவு-1, பிரிவு-2 என்று எளிதாக செல்லுமாறு வடிவமைத்து, ஸ்க்ரால் செய்து தவறவிடுவதை இந்த மாதிரி புத்திசாலித்தனமான லிஸ்ட் தவிர்க்கும்.
  6. தேர்வு செய்த்தை வாபஸ் வாங்கும் வசதியும், போட்டிக்கான இடுகையை மாற்றி அமைத்துக் கொள்ளும் மறுவாய்ப்பும் தூள்.
  7. எதைத் தேர்ந்தெடுத்திருக்கிறோம் என்பதை மிகவும் சுலபமாக (Can you confirm your selections? என்பது போல்) வைக்கலாம். மீண்டும் சிறப்புத் தளத்தில் உள்நுழைவதற்கான தொடுப்பு  கொண்டு நம்முடைய தேர்வு பக்கத்திற்கு சென்றால் சட்டென்று மூன்று விழைவுகளையும் முகப்பில், பக்கத்தின் மேலே பளிச்சென்று காட்டவேண்டும்.
  8. இதுவரை நாமினேட் ஆனவர்கள் பட்டியல் எங்கே கிடைக்கிறது?
  9. போட்டி வெற்றிகரமாக நடக்க மகிழ்ச்சி கலந்த வாழ்த்துகள்.
  10. நீங்க கலந்து கொண்டாச்சா?

தொடர்புள்ள இடுகை: தமிழ்மணம் விருதுகள் 2008 – இடுகைப் பரிந்துரைகள் துவக்கம்

State of Tamil Blogs & 2009 Predictions

வருடா வருடம் அறிஞர் அண்ணா சிலைக்கு மாலையிடுவோம். அது போல் இந்த வருடத்திற்கான ஆய்வு:

  1. வரி, விளம்பரம்/க்ரெய்க்ஸ் லிஸ்ட்: தமிழ்ப்பதிவுகளுக்கு பராக் ஒபாமா போன்ற மாயாஜாலக்காரர் தேவைப்படுகிறார். பில் க்ளின்டன் போன்ற தமிழ்மணம் ஹில்லரி போல் ஏதாவது புதுப்பித்துக் கொண்டாலும், புஷ் கூட்டாளிகளுடன் கும்மாளம் போடுவது போல் க்ரூப்கள் மிகுந்திருப்பதால், கடல் வழியாக அத்துமீறும் பாகிஸ்தானிய தீவிரவாதி போல் புதுப் பதிவர் தேக்கநிலையை நீக்கத் தேவைப்படுகிறார்.
  2. வாய்ஸ் கிடையாது/ரஜினி: தமிழ்ப்பதிவர் பரம சாது. சவுண்டு விடுவார். எதிராளி ஏவுகணையோ இளக்காரப் பார்வையோ பார்த்தால் அடங்கி அல்லது ஒதுங்கி விடுவார். இதை விட மோசமாக கடைக்குழு ஒன்று இருக்கிறது. இன்னும் இரண்டு பேர் உங்க பதிவிற்கு வரவைக்குமாறு ஹிட் தருவோம் என்றால் சகல ஸ்க்ரிப்ட்களையும் இணைத்து பச்சோந்தியாய் விளம்பரம் கொடுத்து சமூக ஒருங்கிணைப்பிலோ உள்ளடக்க வீரியத்திலோ ஈடுபாடில்லாத குழு. ஆங்கிலப் பதிவு நிகழ்வு: Abstract: How Twittering Critics Brought Down Motrin Mom Campaign – Digital: “Bloggers Ignite Brush Fire Over Weekend, Forcing J&J to Pull Ads, Issue Apology”
  3. நேரடி கவரேஜ்/தஸ்லீமா நஸ்ரின்: ‘ஐயா! நீங்க மலேசியாவில்தானே இருக்கீங்க? உங்க லோக்கல் விஷயத்தை எழுதுங்களேன்?’ என்றால் ஓடி ஒளிந்துவிட்டு, பத்தாயிரம் மைல் தள்ளி இருக்கும் ‘க்ரீன்லாந்தில் பசுமைப்புரட்சிக்கு வித்திடுவோம்’ என்று சவடால் விடும் பதிவு நிறைந்த வலையுலகில் நுழைந்துள்ளோம். சீன ஒலிம்பிக்ஸ் பற்றி எழுதினால் அரசு வெட்டிடும் என்பதில் துவங்கி சிங்கப்பூர் எதிர்க்கட்சித் தலைவரின் பரிதாப நிலை வரை − ஐந்தாண்டு அனுபவமுள்ள பதிவுலகில் அருகில் இருந்து அவதானிக்க எவரும் இல்லாத உள்ளூர் அனுபவசாலியின் அவல நிலை.
  4. செருப்பு புஷ்/அ – அருந்ததி ராய்: ஜார்ஜ் புஷ் மேல் செருப்படிக்கும் விளையாட்டை ஊக்குவிக்கும் சுதந்திரத்தைத் தரும் அமெரிக்காவை சவூதியில் இருந்து விமர்சிக்கும் வார்ப்புரு எழுத்தாளர். சாரா பேலினின் தொப்புள் படம் கிடைக்குமா என்று தேடிக் கொண்டே பெண்ணுரிமை பேசும் கருத்து சுதந்திரவாதியின் ஸ்டீரியோடைப் எழுத்தை மதிக்கும் சக வாசகர் வட்டம் எனத் தொடரும் infinite recursive loop.
  5. சமூகப் பொறுப்பு/’சத்யம்’ ராஜு: ஐந்து வருடமாக ஒரு whistleblower உருவாகவில்லை. அரசு, பத்திரிகை, நிறுவனம், விளம்பர உலகம் என்று பதிவு பரவவில்லை. டீக்கடை பெஞ்சாகவே ஒதுங்கி பழைய பேப்பரில் உண்டான கருத்தை மறுவாந்தியெடுத்து கொள்கை நம்பிக்கையும் சிருஷ்டி கற்பனையும் படைப்பூக்கமும் இன்றி கிணற்றுவாளியில் சிக்கிய தவளையாக இன்னும் கிணற்றுக்குள்ளே குதிக்கவே சிரமகதியில் வாளிக்குள் துள்ளி விளையாடுகிறது.
  6. ஆனந்த விகடன் டு குமுதம்/ஞாநி: தமிழ்மணம் போனது; தேன்கூடு வந்தது என்று ‘வாலு போச்சு; கத்தி வந்தது’ குரங்கு கதையாக வலைப்பதிவர் ஆரம்பத்தில் மாறினார். பின்னால் தமிழ்வெளி பக்கம் சென்று பார்த்தார். இப்பொழுது தமிழீஷ் புளகாங்கிதம் அடைகிறார். சொவ்வறை குந்துரத்தனாகிய நான் நேரங்காட்டுவதுதான் முக்கியம் → அதனால் தினக்கூலி கிட்டுவது அதை விட முக்கியம் என்பதாக எழுதுவதுதான் முக்கியம்; எழுதுபொருள் குறித்த கவலை இல்லாத இணையம்.
  7. தெரிந்த முகம்/சீனா: தமிழ்நாட்டின் பெட்டிக்கடையிலாவது முன்பின் அறியாதவருடன் வெளிப்படையான கருத்துப் பரிமாற்றம் அகஸ்மாத்தாக அரங்கேறும். தமிழ் வலையுலகோ, சீனாவைப் போன்றது. நாலு சுவருக்குள் நடக்கும் பேச்சில்தான் போதிய சோதனைக்குப் பின் உள்ளத்துக் கிடக்கை வெளியேறும். அரட்டையில் சொன்னால் பொதுவில் போட்டு விடுவார்; தொலைபேசியில் பேசினால் பதிந்துவிடுவார் என்று அச்சம், மடம், நாணுபவர் இங்கு நிறைந்திருப்பர். சைனாவைப் போலவே மக்கள் கூட்டம் நிறைய இருந்தாலும், அவர்களால் எக்கச்சக்கா சாமான்/பதிவு தயாரிக்கப்பட்டாலும், அவற்றால் அவர்களுக்கு எந்தப் பயனும் கிடைக்காது. ‘செம்மொழி’, கூகிள் மொழி என்று பம்மாத்து பல சீனாவைப் போலவே ஒளிர்ந்தாலும் உள்ளுக்குள்ளே ஈறும் பேனும், ஈயும் பீயுமாக மகிழ்ந்திருக்கும்.
  8. அங்கீகாரம்/சு.சுவாமி: “பூங்காவில் இடமுண்டா? தமிழீஷில் எண்ணிக்கை ஏறுமா? தமிழ்மணத்தில் வாக்கு கிடைக்குமா?” என்பது போய் “‘உயிர்மை.காம்’இல் ஒரு எழுத்து வராதா? ‘வார்த்தை‘யில் ஒரு வார்த்தை வெளியாகாதா?” என்பதும் விலகி “ஆனந்த விகடன் வலையகத்தில் பெயர் பெறுவேனா? சன் டிவி பிறந்த நாள் வாழ்த்து உதிர்க்கப்படுவேனா?” என்பதுதான் பதிவரின் அலட்சியமாக, குறியாக இருக்கிறது. எப்பாடு பட்டேனும் அமைச்சர் பதவியை மகனுக்கு வாங்கிக் கொடுக்கும் தந்தையாக வலைஞர் செயல்பட்டு திருப்தியடைகிறார்.
  9. விசங்கக்குபவர்/பாஸ்டன் பாலாஜி: ‘நீ எத்தனை புத்தகம் எழுதி மாற்றத்தை உருவாக்கினாய்? ‘அச்சமுண்டு அச்சமுண்டுஅருண் மாதிரி ஏதாவது படித்து படமாக்கினோம் என்றாவது சொல்லமுடியுமா? கலை தாகம் எவ்வாறு ஆக்கசக்தியானது? தொழில்நுட்பக் கல்வி எவ்வளது தூரம் தமிழானது? தமிழிலக்கியம் எங்ஙனம் உலக மொழிகளில் மொழிபெயர்ப்பானது?’

டிவிட்டவோ உளறவோ வேண்டியது

பரவாயில்லை. இங்கே இருக்கட்டும். தப்பில்லை.

  • இந்த வருட நாயகராக டைம்ஸ் யாரைத் தேர்ந்தெடுக்கும்? பராக் ஒபாமா என்கிறார்கள். அமெரிக்க அதிபர் பதிவில் இன்னொரு இடுகை தயார்.
  • அமெரிக்காவில் புகழ்பெற்றவர் இருக்கட்டும். இந்தியாவின் இந்த வருட நட்சத்திரம் யார்?
  • இந்த வருடத்தில் மிரட்டிய, ரசித்த, வியந்து போக வைத்த தமிழ்ப் பதிவு: யாழிசை ஓர் இலக்கிய பயணம் :: லேகா
  • ஆர்வமின்மையால் சற்றுமுன் தொய்ந்து விட; அயர்ச்சியினால் கில்லி காணாமல் போக; முடிவு வெளியானதால் அமெரிக்க அதிபர் பதிவும் காலியானது.
  • அடுத்தது விளையாட்டு கதாநயாகர்:

michael-phelps-si-sportsman-year-2008-olympics-swim1

canada-internet-usage-usa-social-media-networking-nyt1

  • ஃப்ளிக்கரில் கிடைக்கும் ஆயிரக்கணக்கான ஒளிப்படங்களை எவ்வாறு எளிதாக மேய்வது? காம்ப்ஃப்ளைட்
  • சகிக்கலை/சலிக்கலை – ஒரேழுத்து வித்தியாசம். ‘தெனாவட்டு’ குறித்த சன் டிவி டாப் 10 விமர்சனம்: சலிக்கலை என்பது சகிக்கலை என்று காதில் விழுந்தது.
  • தமிழ்மணத்தின் சமீபத்திய அறிவிப்புகள் இயல்பாக வந்து விழுகிறது. நன்றாக இருக்கிறது.
  • ஒன்பதாண்டுகள் கழிதந்த பின் திண்ணை.காம், வார்த்தை என்னும் அச்சிதழாக உருவெடுத்த மாதிரி தமிழ்மணத்தின் பூங்கா அச்சாக்கம் காண இன்னும் ஏழாண்டு காலம் காத்திருக்க வேண்டுமா? அதுவரை ட்விட்டர் பதிவர்களை விழுங்காதிருக்குமா!
  • கையில் நகச்சுத்தி. ஆங்கிலத்தில் நகச்சுத்திக்கு என்ன பெயர்? ஏன் எலுமிச்சை வைக்கிறோம்?
  • உளறல்.காம் புதிய வோர்ட்ப்ரெஸில் இயங்குகிறது. ஒவ்வொரு புதிய வெளியீட்டிலும் மிரட்டாமல் எளிதாக்கி அசத்துகிறார்கள்.

இவையெல்லாம் சமீபத்தில் ட்விட்டியது:

  1. அக்காலத்தில் காபி கடை பெஞ்சில் இலவசமாக தினசரி படித்தார்கள். இன்றும் அதே காபி கடையில் அமர்ந்து இலவசமாக இணையத்தில் செய்தி வாசிக்கிறாங்க.
  2. I presume Guru peyarchi is smiling on Asia and frowning on USA while utterly confused with EU.
  3. குயிலப் பிடிச்சி கூண்டிலடைச்சு கூவச் சொல்லுகிற உலகம்; காரை கொடுத்து தங்க நாற்சக்கர நெடுஞ்சாலையும் தந்து ஸ்பீட் லிமிட்டும் போடுகிற உலகம்!
  4. மனக்கிலேசங்களை கருத்தாக சொல்ல விரும்பி பதிவாக்குவது இயல்பு. அப்பதிவிற்கு கேள்விகளால் எதிர்வினையும் டிஸ்க்ளெய்மர்களால் பதிலும் நிறைவது மரபு.
  5. கம்யூனிஸ்ட்டில் ம்யூஸ் (muse) இருக்கிறது. கேபிடலிஸ்ட்டில் கேடலிஸ்ட் (catalyst) இருக்கிறாரே. முந்தையது கலையூக்கி; இது செயல் ஊக்கி?
  6. அடுத்தவர்களின் வாழ்க்கையை ட்விட்டியே ட்விட்டாளனின் பொழுதுபோகிறது. அவர்களிடம் ‘எழுதாமல் வாழ்வாயாக’ என்று சொல்ல லௌகீகவாதிகள் மறந்துபோனார்கள்.
  7. எதுவும் படிக்காமல் சும்மா இருந்தால் சிந்தனை ஊறுகிறது. வாசித்தால் அறிவு விசாலமாகிறது. சிந்திக்காத அறிவுக்கூர்மையா? அறிவில்லாத சிந்தனையா?
  8. சூழலும் தூண்டுதலும் இல்லாமல் தேடல் இல்லை. வீட்டு நாய்க்கு கறி வராவிட்டால், ரெண்டே நாளில் முயலைத் தேடி வேட்டையாடும்.
  9. கூலிக்கு மாரடித்தவனின் நிரலியை நிறுவனம் விற்று லாபமடையும். எழுத்தாளனின் காலத்தைத் தாண்டி நிற்கும் படைப்பினால், எழுதியவனுக்கு என்ன கிடைக்கும்?
  10. Where did மொக்கை come from? I Mock -> Mock I -> மொக்+ஐ -> 2ஆம் வேற்றுமை உருபு Object ஆனது. #Grammar
  11. தம்மடிக்கும் போது தப்பான திசை நோக்கி பிறர் முகத்தில் புகை விடுவது போல் சாலையை கடனே என்று பார்த்துவிட்டு காரை கவனியாமல் கடக்க ஆரம்பித்தான்.
  12. பஜாமாவிலும் பட்டன், ஜட்டியிலும் பட்டன் என்றிருந்தால், ஒரு பொத்தானை இன்னொரு குழியில் இடம் மாற்றித் தள்ளிவிடும் அபாயம் உள்ளது.
  13. கன்றுக்குட்டி ‘ம்மா’ என்று கத்துவது போல் கதறலுடன் குசு ஒன்று வெளிப்பட்டது.
  14. கனவுகள் மேஜிகல் ரியலிசமாய் இருப்பது ஏன்? ஒபாமா போல் எனக்கொரு செல்லப்பிராணி வந்தது. மீடியம் சைஸ் புலியை சிவாவா போல் கையில் கொண்ட துயில்.
  15. கிளவுஸ் போட்டிருக்கிறவளுக்கு கல்யாணமாயிடுச்சான்னு எப்படி தெரிஞ்சுக்கறது?
  16. நாலு பதிவு எழுதறத விட நாலு பாட்ட எம்பி3ஆ பகிர்ந்தால் எட்டு கமென்ட்டு ‘நன்றி’ சொல்லி வருதே. பேசாம ‘மோகன்குமார்’ ஆயிடலாமா!
  17. ராவுக்கு என்னதான் வயித்துக்கு தீனி போட்டாலும், காத்தால எழுந்தா ஏதாவது கேட்கும். நேத்து பூ வாங்கிக் கொடுத்திருந்தா, அது நேத்தே வாடிப் போயாச்.
  18. டிவி சீரியல் மாதிரி மத்தவன் புலம்பலைக் கேட்பது ‘following’. யூ-ட்யுப் போல் உன்னுடைய கருத்தைக் கேட்பவன் follower. நான் TiVo கட்சி
  19. பொதுவாக என் உடம்பு இரும்பு! உன்னைப் பார்த்தால் ஆகுமே கரும்பு! எதிரிகளெல்லாம் எனக்கு துரும்பு! என்னிக்கும் வச்சுக்காதே வம்பு! #Rajni
  20. உன் கம்ப்யூட்டரில் நான் உலாவியா? ஸ்க்ரீன் ஸேவரா? உன் உலாவியில் நான் புத்தகக்குறியா? Add-onஆ?

மும்பை தாக்குதல்: இரு பதிவுகள்

பாம்பே தீவிரவாதி

பாம்பே தீவிரவாதி

பதிவு ஒன்று: உள்ளூர் வார இதழில் அகஸ்மாத்தாக மும்பை குண்டுவெடிப்பு ஆரம்பம் ஆன அன்று வெளியான பாஸ்டன் ஃபீனிக்சில் வெளியாகிய சீதா நாரயணின் கட்டுரை:

The Phoenix > Features > Terror masala: “Bollywood’s colorful, multi-genre musicals serve up their most interesting character yet: the singing, dancing terrorist.”

As such, writers have recently begun to experiment with realism, to introduce region and dialect into the story, to present more nuanced explanations of characters’ motives, and to dare to depict social problems like political corruption, drug trafficking, gang violence, poverty, and, yes, terrorism. These are depressing problems, so what better way to present them than with a dash of Bollywood élan? Which brings us to an unusual movie protagonist: the singing, romancing, family-loving, dancing, emotionally open . . . terrorist.


பதிவு இரண்டு: என்ன நடக்கும் என்பதை சொல்லும் ப்ளாகேஸ்வரியின் இடுகை.

Blogeswari: நாளை?: ராம் கோபால் வர்மா எப்படி திரையாக்குவார் என்பதையும் மகேஷ் பட் கதை எவ்வாறு இருக்கும் என்று சொல்லியிருக்கிறது.

அவரின் முந்தைய அனுபவங்கள்: Blogeswari: நேற்று…. & மீடியாவிற்கு ஒரு வேண்டுகோள்

தமிழ்ப்பதிவுகளில் அமெரிக்க அதிபர் தேர்தல்

ஒரு அகதியின் நாட்குறிப்பு

அமெரிக்காவின் 44வது ஜனாதிபதியாக பராக் ஒபாமா தேர்ந்தெடுக்கப்படும் சாத்தியக்கூறுகள் மிகப்பிரகாசம் – பேராசிரியர் எரிக் அஸ்லானர் நேர்காணல் :: வீரகேசரி நாளேடு – 10/27

கேள்வி: இலங்கை போன்ற நாடுகளில் கடைசி நேர அனுதாப அலைகள் தேர்தல் முடிவில் தாக்கம் செலுத்துவது வரலாற்றில் நிருபணமாகியுள்ளது அந்தவகையில் தற்போது பின்னிலையிருக்கும் மக்கெய்னுக்கு சாதகமாக ஏதேனும் திடீர் திருப்பங்கள் ஏற்படச்சாத்தியமுள்ளதா?

:::
கேள்வி: இந்தத்தேர்தலுக்கு முன்னர் அதிகம் அறியப்படாத பராக் ஒபாமாவின் எழுச்சிக்கு காரணம் யாது?

பதில்:

  • ஒபாமா ஒரு ரொக் இசைக்கலைஞர் போன்று மக்களை வசீகரிக்கக்கூடிய அபார பேச்சாற்றல் மிக்கவர்
  • தேர்தலில் முன்பெல்லாம் அதிக நாட்டங்காண்பிக்காத இளைஞர் யுவதிகளை தேர்தல் பிரசார மேடைகளுக்கு இழுத்துவந்தமை அவரது வெற்றிக்கு காரணம்
  • இணையம் கைத்தொலைபேசி குறுஞ்சேவை உட்பட நவீன தொலைதொடர்பு சாதனங்களை மிக உச்சளவில் பயன்படுத்தியமையும் அவரது ஏற்றத்திற்கு காரணம்

ஏன் ஒபாமா வெற்றி பெற வேண்டும்?

– முனைவர் நாகேஸ்வரி அண்ணாமலை

மிகவும் நோயுற்றிருக்கும் அவருடைய தாய் வழிப் பாட்டியைப் பார்க்க ஹவாய்க்குப் போயிருக்கும் ஒபாமா தான் அமெரிக்கப் பிரஜை இல்லை என்பதற்கான ஆவணங்களை அழிக்கப் போயிருக்கிறார் என்ற வதந்தியைக் கிளப்பியிருக்கிறது.

:::

ஸ்பெயினைத் தோற்கடித்து கியூபாவை அமெரிக்கா தன் ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவந்தது. அது மட்டுமல்ல, பிலிப்பைன்ஸ், போர்ட்டரீகோ மற்றும் பசிபிக் கடலில் உள்ள குவாம் என்னும் தீவு ஆகியவற்றையும் தன் ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவந்தது.

:::

இந்திய பத்திரிக்கையாளர் எம்.ஜே. அக்பர் கூறுவது போல் உள்நாட்டைப் பொறுத்தவரை அமெரிக்கா ஜனநாயக நாடு என்றாலும் உலகைப் பொறுத்தவரை ஒரு சர்வாதிகாரி.

:::

அமெரிக்காவின் முழு ஆளுமையிலிருந்து இந்தியாவைக் காப்பாற்றிய பெருமை, மறைந்த பாரதப் பிரதமர் இந்திரா காந்தியைத்தான் சேரும்.

:::

தன் சிறு வயதில் இந்தோனேஷியாவின் ஜாகர்த்தாவில் வளர்ந்து வந்த போது எப்போதும் சண்டை போட அமெரிக்கா தயாராக இருப்பதையும், தன்னுடைய பொருளாதார அமைப்பை மற்ற நாடுகளின் மீது திணிக்க விரும்புவதையும், தன் நலனுக்காக ஊழல் நிறைந்த சர்வாதிகார்களை அமெரிக்கா ஆதரித்து வந்ததோடு அந்த நாடுகளில் நடக்கும் ஊழலைக் கண்டுகொள்ளாமல் இருந்ததையும் அறிந்ததாகவும் தன் புத்தகத்தில் கூறியிருக்கிறார்.


ஒளியேற்றுவாரா ஒபாமா

ஸதக்கத்துல்லாஹ், கடையநல்லூர்

அமெரிக்கத் தேர்தல் முடிவை விட அங்குள்ள மக்கள் அதிகம் எதிர்பார்ப்பது பொருளியல் பிரச்சினைக்கான தீர்வைத்தான். ஓராண்டுக்கு முன் அதிபர் தேர்தல் பிரசாரம் தொடங்கியபோது, அமெரிக்கப் பொருளியல் நிலைத் தன்மையோடு இருந்தது.


4. Conservative Tamils for McCain | Asian Americans for McCain