‘கல்லுக்குள் ஈரம்’ பார்த்த போது ஏழு வயசு. இந்தப் பக்கத்தில் அம்மாவும் அந்தப் பக்கத்தில் அண்ணாவும் அமர்ந்திருப்பார்கள். தேவி காம்ப்ளெக்ஸா, வெலிங்டனா, சித்ராவா என நினைவில் இல்லை. இரண்டாம் ஆட்டம் பார்த்துவிட்டு 21ல் உட்கார்ந்திருக்கும் தூக்கக் கலக்கத்தில் இப்படி சேர்த்து வைக்காமல் சாகடிச்சுட்டாங்களே என்பது மட்டுமே தோன்றியது.
சினிமாகாரர்களை கொஞ்சம் சொல்வதால் மனம் இன்றும் ‘க.ஈ.’ படத்தை நினைவில் வைத்திருக்கவைக்கிறதோ? மற்ற பாரதிராஜா எடுத்த, தற்போதைய அமீர் / சசிகுமார் வகையறா எடுக்கும், மதுரைப் பக்கத்தில் உள்ள டவுன் பஸ் மட்டுமே நிற்கும் சந்து பொந்துகளை முதலில் காட்டியதால் நிழலாடுகிறதோ? மனோபாலா, ரங்கராஜன், மணிவண்ணன் போன்ற பிற்கால பிரபலங்களின் கன்னி தொடக்கம் இங்கே இருந்திருக்குமே?
தெரியவில்லை. எனவே, மீண்டும் பார்த்தேன்.
‘முதல் மரியாதை’யின் இளவட்டக் கல் இருக்கிறது. அந்தப் படத்தில் ஜெயிலில் இருந்து திரும்பும் சத்யராஜ் போலவே பாசமிகு மாமன் (சேனாதிபதி?) இருக்கிறார். கவுண்டமணிக்கு மிக விரிவான கதாபாத்திர உருவாக்கம். ’க.ஈ.’ வந்ததற்கு அடுத்த ஆண்டு வந்த பாலைவனச் சோலை கும்பலில் இருந்து இதில் உடல் ஊனமுற்றவராக சந்திரசேகரும், பள்ளி ஆசிரியராக ஜனகராஜும் இருக்கிறார்கள்.
மனதிற்கு நெருக்கமான கதை. திரைப்பட கதாநாயகனை கணவனாக அடைய விரும்பும் சினிமா மோக மனம் கொண்ட விஜயசாந்தியும் டீக்கா டிரெஸ் போட்டிருக்கும் ஆங்கிலம் பேசும் அடாவடி ஆதர்ச இயக்குநரை விரும்பும் அருணாவும் வசிக்கும் கிராமம். நாள் முழுக்க உழைத்து, அரை வயிற்றுக்கு சாப்பிட்டு, கோலமிக்க ஆறும், ஓய்வெடுக்க மலைமுகடுகளும், அடர்த்தியான காடுகளும் கொண்ட கனவு கிராமம். முனிக்கு படையல் போட்டதில் தெய்வ குற்றமும், அடுத்தவர் வாழ்க்கையை மெல்வதில் சுகமும் காணும் நெருக்கமான உறவு வேண்டாமலேயே உங்களைத் துரத்தும் கிராமம்.
படத்தில் உள்ள அத்துணை கதாபாத்திரங்களை ஆழமாக உலவவிடவில்லை. மாடன் வழிபாட்டை விரிவாகக் காட்டவில்லை. உள்ளூர் பெண்ணொடு ”டைரக்டர்” இப்படியெல்லாம் நடந்து கொள்வது சாத்தியமேயில்லை. இதற்கு முந்தைய ஆண்டு வந்த “புதிய வார்ப்புகள்” போல் அசல் தெருக்கூத்தைக் காணமுடியவில்லை, என்றெல்லாம் விமர்சிக்கலாம்.
ஆனால், இரண்டு மணி நேரத்தில் கட் அவுட் மாந்தர்களையும் தோட்டி குடும்பத்தையும் இன்று கூட யாரும் இவ்வளவு இயல்பாக கோர்க்கவில்லை என்பதால் சபாஷ் போட வைக்கிறது. அப்படி கோர்த்தால் என்ன ஆகும் என்பதை நிதர்சனமாக முடிப்பதால் முக்கியமாகவே நிற்கிறது. எல்லாவற்றையும் விட ஊரில் இருப்போர் வாழ்க்கையையும் வருகை தருவோர் இயல்பையும் உணர்த்துவதால் இன்றும் விருப்பத்துடன் ரசிக்க வைக்கிறது.
அசல் தலைப்பு: மெட்ராஸ் கஃபே வைத்திருக்க வேண்டிய தலைப்பு: ராஜீவ் காந்தியைக் கொன்றதை ஏன் இந்தியாவால் தடுக்க முடியவில்லை என்பதற்கான சப்பைக்கட்டு
சான் ஓஸே பக்கம் போனீர்கள் என்றால் மெட்ராஸ் கஃபே நிச்சயம் எட்டிப் பாருங்கள் என்பார்கள் பே ஏரியாவசிகள். இந்தியா – இலங்கை – ஈழ முக்கோண பிரச்சினை அறிவதற்கு மெட்ராஸ் கஃபே உதவும்.
ராஜீவ் காந்தி இறந்ததற்காக நாடே வருத்தப்படுகிறது. ஆனால், எண்ணற்ற தனி மனிதர்களின் சொந்த இழப்புகளை பிரச்சார தொனியின்றி போகிற போக்கில் இந்தப் படம் இயல்பாக முன்வைப்பது பிடித்திருந்தது. அன்னிய நாட்டின் அமைதிக்காக செல்லும் தூதுவர் ஈ.பி.ஆர்.எல்.எஃப்.புக்கும் புலிகளுக்கும் நடுவில் மாட்டிக் கொண்டு சாவது; துப்பறிபவர்களின் குடும்பம் சீரழிவது போன்றவை போகிற போக்கில் வந்து போகின்றன.
படம் என்றால் வில்லன் இருக்கவேண்டும். இதுவோ கிட்டத்தட்ட ஆவணப்படம். விறுவிறுப்பாக சம்பவங்களைக் கோர்த்து, நடுநடுவே லட்சணமான மனைவியை ஊறுகாய் போல் தொட்டுக் கொண்ட சாகசப்படம். சுட்டுவிரல் நீட்டி தப்பு செய்தவர்கள் இவர்கள்தான் என்று குற்றஞ்சாட்டாமல், என்ன நடந்தது, எப்படி நடந்தது, எப்பொழுது நடந்தது என்பதை மட்டும் விவரிக்கிறார்கள்.
இலங்கையா… அவர்கள் 1983 படுகொலைகளை நிறைவேற்றினார்கள். விடுதலைப் புலிகளா… அவர்கள் நிறைய முதுகில் குத்தல்களும் கண்மூடித்தனமான கொள்கைகளும் கொண்டிருந்தார்கள். இந்திய ராணுவமா… மேலிடத்து உத்தரவை சிரமேற்கொண்டு பணிந்தார்கள். உளவுத்துறையா… எவர் யாருக்கு விசுவாசமாக இருந்தார்கள் என்பது அவர்களே அறியாமல் இயங்கினார்கள். இந்தியாவா… எந்த இந்தியர் என்பதைப் பொறுத்து விதவிதமாக மனிதருக்கே உரிய மாபாதகங்களுடன் நடந்துகொண்டார்கள். ராஜீவ் காந்தியா… யேசுவிற்குப் பிறகு உலகத்தில் உதித்த மகான். புத்தர் வழியில் அகிம்சையை போதித்து சென்னைக்கு வந்தவர். மகாத்மாவிற்குப் பிறந்த இந்தியாவில் உதயமான உத்தமர்!
படத்தின் குறைகள்? சென்னைத் தமிழுக்கும் ஈழத்தமிழுக்கும் வித்தியாசம் காட்டவில்லை என்று பொங்கலாம். மட்டக்களப்பு பிரதேசங்களையும் யாழ்ப்பாணத்தையும் குழப்புகிறார்கள் எனலாம். ஜான் ஆபிரகாம் படகில் போகும்போது சவரம் செய்த வழவழ முகத்துடன் பயணிக்கிறார் என விசனிக்கலாம். எனினும், அந்த நிருபர் ஜெயா கதாபத்திரத்தை அனிதா பிரதாப் போல் கோர்த்து வைக்காத துரோகத்தை மன்னிக்கவே முடியாது. அந்த ஒரு சங்கதிக்காகவே மேதகு தலைவரின் கட்டை வேகாது!
படத்தில் எல்லா மொழியும் பேசுகிறார்கள். நடுவே தமிழக திராவிட கட்சித் தலைவரை விளித்து, ‘தலைவா… பணம் வந்துடுச்சு! காரியத்த முடிச்சுடலாம்!’ போன்ற பேச்சுகள் பின்னணியில் ஓடுகின்றன. பொருளியல் வரலாற்று அறிவும், திரைமொழியின் நுணுக்கமான பார்வையும், பல்வேறு அரசியல்களை கிரகிக்கும் சக்தியும் கிடைக்கப் பெற்றவர்கள் மட்டுமே இந்தப் புலனாய்வுப் புனைவை புரிந்து கொண்டு பார்க்க இயலும்.
நல்ல வேளை… படம் எல்.டி.டி.ஈ. பிரபாகரன் இறந்த பிறகு வந்திருக்கிறது. இல்லையென்றால், கொஞ்ச நாளில் ஜான் ஆபிரஹாம் போட்டுத் தள்ளப்பட்டிருப்பார்.
மன அழுத்தம் நீங்க நான் மூன்று உபாயங்களை பின்பற்றுகிறேன். எல்லோரும் சொல்கிற உடற்பயிற்சியை விட வீட்டை சுத்தம் செய்கிற பராமரிப்பு. அமைதியான இசையின் பின்னணியில் தியானம் என்பதை விட நிசப்தமான புத்தக அறையில் பூனையுடன் தஞ்சம். உளவியலாளரிடம் பகிர்வதை விட நாலு ஃபேஸ்புக் கருத்தாளர்களுக்கு கேள்வியாக பதில் போடுவது.
ரஜினி படம் பிடிக்குமா? கமல் படம் பிடிக்குமா? என்னுடைய இடையீடு சுணக்கங்களை களைவதற்குப் பின்னால் இந்தக் காரணமும் இருக்கிறது.
’நான் சிவப்பு மனிதன்’ அதிரடியாக இறங்குவார். ‘ராமன் ஆண்டாலும்’னு வாழ்க்கையை கொண்டாடுவார். ’நல்லவனுக்கு நல்லவ’னாக நிறுவனங்களை வெற்றிகரமாக நடத்துவார். ’பில்லா’ மாதிரி உளவாளியாக சென்றால் கூட ஆக்ஷன் இருக்கும்.
அந்த ஜென்மத்திலேயே பழிவாங்காமல் இன்னொருவரை எதிர்நோக்கும் ‘கல்யாணராமன்’. சிம்லா ஸ்பெஷல், உயர்ந்த உள்ளம் எல்லாமே நம்பக்கூடிய முகங்களின் பிரதிபலிப்பு. ’வாழ்வே மாயம்’ போல் உண்மையைப் போட்டு உடைக்க சஞ்சலப்படும் மனிதன். சகல கலா வல்லவன் முதல் விஸ்வரூபம் வரை கமல்ஹாசன் ஒற்றராக செல்வது கூட லாஜிக் நிறைந்ததாக இருக்கும்.
கமல் கதாபாத்திரங்கள் சாதுவானவை. நான் அன்றாடம் எதிர்கொள்கிறவர்கள். தொண்ணூறு சதவிகிதத்தினர் இவ்வாறே தங்கள் குணாதிசயங்கள வைத்திருக்கிறார்கள்.
ரஜினி நட்சத்திரம். கண்டிப்பு நிறைந்தவர். வாட்டத்தைப் போக்க நம்ப இயலாதவற்றை சாதிக்கிறார். என் கலக்கங்களை நீக்க முடியும் என உறுதியான உற்சாகம் தருகிறார்.
ராகா.காம் செய்யும் மிக உத்தமமான காரியம் என்பது நான்-ஸ்டாப் கன்னலில் பாடல்களை தொடர் ஒலிபரப்பாக கோர்ப்பதுதான். ஒரு நாள் சந்திரபாபு, இன்னொரு நாள் இசையமைப்பாளர் வேதா, என்னும் வரிசையில் இன்று கிளாசிக்ஸ் ஓடிக் கொண்டிருந்தது.
அப்பொழுது வஞ்சிக் கோட்டை வாலிபன் படத்தில் கொத்தமங்கலம் சுப்பு எழுதி சீர்காழி கோவிந்தராஜன் பாடிய ‘வெற்றிவேல்… வீரவேல்’ கிடைத்தது.
பல நல்ல புறநானூறு பாடல்களையும் பரணி பாடிய வரலாற்றையும் எழரை நிமிடத்திற்கான நாடகக் காட்சியாக ஒருங்கிணைத்திருக்கிறார்கள். சட்டென்று ‘பிரேவ் ஹார்ட்’ திரைப்படத்தை நினைவிற்கு கொண்டு வந்தது.
ஸ்காட்லாந்து மக்கள் பிரிட்டிஷாருக்கு எதிராக ஏன் சண்டை போட்டார்கள்? போர்களுக்காக வில்லியம் வாலஸ் எவ்வாறு மக்களை சேர்த்தார்? Offence is the best defense என்பதை தற்கால விளையாட்டு பயிற்றுநர்களுக்கு, அக்கால வரலாறு கொண்டு விளக்கிய படம். மெல் கிப்சன் நடித்த ’பிரேவ்ஹார்ட்’டில் சிலந்தியைப் பார்த்து விடாமுயற்சியைக் கற்றுக் கொண்ட ராபர்ட் ப்ரூஸும் இருந்தார்.
இரண்டுமே பிரும்மாண்டமான போர்ப்படங்கள். வில்லன்களாக அரசர்களைக் கொண்டவை. காதல் நிறையவே உண்டு. இரண்டு நாயகிகள் கொண்ட கதை. வீரதீரம் நிறைந்த நாயகன். 1958ல் தமிழில் வெளியான ‘வ.கோ.வா.’ சூப்பர் ஹிட். ப்ரேவ்ஹார்ட்டும் நல்ல வசூல் கொடுத்தது.
மீண்டும் இந்த மாதிரி சரித்திரத்தையும் மசாலாவையும் தேசப்பற்றையும் சரியாக மிக்ஸ் செய்யும் மசாலாக்கள் எப்பொழுது வரும்?
அ) படம் எப்படி?
நல்லாருந்துச்சு. சுவாரசியமாப் போகுது.
ஆ) எது பிடிச்சிருந்தது?
பிராமணப் பொண்ணு சிக்கன் சாப்புடறது; முதல் சண்டைக் காட்சி; ஆப்கானிஸ்தான் லொக்கேஷன்
இ) என்ன இருந்திருக்கலாம்?
ஆண்ட்ரியாவுடன் டூயட்; கோடை கால ஆடை அணிந்த ஹீரோயின்; அப்புறமாய் கொஞ்சம் கதை
ஈ) குழந்தைகளைக் கூட்டிப் போலாமா?
செக்ஸ் வச்சுக்கறதுனா என்னன்னு கேப்பாங்க; கை வேறு கால் வேறா வருவதைப் பாத்து பயப்படலாம்
உ) இயக்குநர் கமலுக்கு எவ்வளவு மார்க்?
விருமாண்டி அளவு உணர்ச்சி இல்லை; ஹே ராம் அளவுக்கு சரக்கும் இல்லை. இருந்தாலும் ஃபோகஸ் இருப்பதால் எழுபது.
ஊ) இஸ்லாமியர்கள் ஃபீலிங் ஆகிறார்களே?
பனியில் நடந்தா பார்த்து நடங்க; அல்லது வழுக்கிரும்னு சொல்லுற மாதிரி, மார்க்கத்தில் பார்த்து நடக்க சொல்லுறாரோனு நெனச்சேன். அந்த மாதிரி அட்வைஸ் கூட இல்ல. டைட்டில் மட்டும் வலமிருந்து இடம் வருவது மாதிரி சின்னச் சின்ன நகாசு மட்டுமே.
எ) கார் சேஸிங் இருக்காமே?
அதற்கு பதிலா இன்னும் கொஞ்சம் கேரக்டர் டெவலப்மெண்ட் செஞ்சிருக்கலாம்.
ஏ) துப்பாக்கி, எந்திரன் – ஒப்பிடுக.
விஜய் படம் புத்திசாலித்தனம். ரஜினி படம் பிரமிப்பு. கமல் படம் இரண்டும் கலந்து வந்திருக்கணும்; ஆனா, டைரக்டர் பேச்ச கேட்கமாட்டாரே
ஐ) என்னோட அமெரிக்க நண்பருக்கு போட்டுக் காட்டலாமா?
இது தூய இந்தியருக்கு மட்டுமே ரசிக்கக் கூடியது. அவர்களுக்கு புதுசா எதுவும் சரக்கு இல்லை. போர்ன் ஐடெண்ட்டியும் ட்ராஃபிக்கும் பாக்குற கும்பலுக்கு விசுவரூபமெல்லாம் சரிப்படாது
ஒ) ஆக்டர் கமலுக்கு எவ்வளவு மார்க்கு?
உறுத்தாம வந்து போகிறார். தேய்வழக்காக வசனகர்த்தா சொல்லுறத கூட சகிக்க வைக்கிறார். முக்கியமா அந்த பயங்கரவாதி கெட்டப்புக்காகவே நூற்றுக்கு நூறு போடலாம்.
ஓ) நெஜத்தில் இப்படி எல்லாம் நடக்குமா?
தீவிரவாதிகளுக்கு புது புது ஐடியா எல்லாம் கொடுத்திருக்காரே
ஔ) “தூங்காத என் கண்ணில் துயில் உரித்த கண்ணன்… விதை இல்லாமல் வேர் இல்லையே’ போல் கவித்துவமாக சிந்தனை சொல்லுப்பா…
புறாவில் என்ன பாகுபாடு என்பது பயலாஜிஸ்டுக்குத்தான் தெரியும்; அது போல் மனிதனின் பிரிவுகள் அறிவியலாருக்கு மட்டுமே புலப்பட வேண்டும். புறா கோவில் மாடத்திலும் தங்கும்; அங்கிருந்து மசூதிக்கும் பறக்கும். நாயகனும் அவ்வாறே.
இந்தியாவின் #1 மூலதனமான மக்கள்தொகை பிரச்சினையை இந்திப்படம் ’விக்கி டோனர்’ விவாதிக்கிறது. தில்லி டாக்டர்கள் தமிழக காளிமுத்துகள் போல் ரொம்ப காலமாகவே பிரபலம்.
விவாகரத்து ஆனவர்களை மருமகளாக ஆக்குவதில் பெற்றோர் காட்டும் பக்குவம்; திருமணங்களில் ஈகோவும் இனக்கவர்ச்சியும்; மன அழுத்தம் காரணமாக பாலியல் சிக்கல்; முதிர்கன்னியை மணப்பதால் மகப்பேறு இல்லாமை; கவலை இல்லா வாழ்க்கைக்கும் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கும் இடையே உள்ள paradox; தத்து எடுப்பதில் உள்ள அசூயை; ஆற்றல் மிகுந்த நல்ல விந்து கிடைப்பதில் உள்ள சிக்கல்; மரபணு சார்ந்து கிடைக்கும் பாரம்பரிய திறமையா அல்லது வளர்ப்பதின் மூலமே வெற்றித் திருமகனை உருவாக்க முடியுமா என்னும் விவாதம்…
இவ்வளவு விவகாரமான விஷயங்களை அலசினாலும், ரொம்பவே அலட்டிக்காமல், அதிகம் அழுவாச்சி சிந்தாமல் நகைச்சுவையுடன் எதார்த்தமாக சொல்லிச் சென்றார்கள். படத்தின் வெற்றிக்கு சேலம் சிவராஜ் – அன்னு கபூர் அவசியமான காரணம்.
Olli Belly Jelly Belly Malli Vaasa Malli
Un Maeni Vengala Velli
Šølli Šølli Unna Alli Killi Kannam Killi
Vilayaada Vanthavan Gilli
Laichana Laichana Ithay
Lavangam Lavangam Kaadichana
Inichana Inichana
Vaai Madalil Kadala Thanichanaa
Køzhukana Møzhukana
Nalla Payuthu Payuthu Thalukanaa
Èlachaana Køzhachaana
Rømba Šethuki Šethuki Ozhachana
Nee Šengiskana Ini Un Kiss Thana
Naan Mangøøse Thanaa
Un Kayil Kachakasthana
Irukaana Idupirukaana Illaiyana Illiyana
Un Èdaithaanaa Inba Kadaithanaa
Mel Èdaithandi Kudaithanaa
Ada Ikani Mukani Mugadu
Naan Thutha Naga Thagudu
Un Uthatukul Èthana Uthadu
Onnu Kudu Kudu
Adi Anjana Manjana Mayilu
Nee Kanjan Janga Railu
Un Iduppae Aaram Viralu
Nee Killu Killu
Olli Belly Jelly Belly Malli Vaasa Malli
Un Maeni Vengala Velli
Šølli Šølli Unna Alli Killi Kannam Killi
Vilayaada Vanthavan Gilli
====================
இருக்காண்ணா இடுப்பிருக்காண்ணா இல்லையாணா இல்லியனா
உன் இடைதானா இன்ப கடைதனா
மெல் எடைதன்டி குடைதனா
அட இக்கனி முக்கனி முகடு
நான் துத்த நாக தகடு
உன் உதடுகுள் எதனை உதடு
ஒண்ணு குடு குடு
அடி அஞ்சன மஞ்சன மயிலு
நீ கஞ்சன் ஜங்கா ரையிலு
உன் இடுப்பே ஆறாம் விரலு
நீ கிள்ளு கிள்ளு
ஒல்லி பெல்லி ஜெல்லி பெல்லி மல்லி வாச மல்லி
உன் மேனி வெங்கல வெல்லி
சொல்லி சொல்லி உன்ன அல்லி கில்லி கன்னம் கில்லி
விலயாட வந்தவன் கில்லி
ஒல்லி பெல்லி ஜெல்லி பெல்லி மல்லி வாச மல்லி
உன் மேனி வெங்கல வெல்லி
சொல்லி சொல்லி என்ன அல்லி கில்லி கன்னம் கில்லி
விலயாட வந்தவன் கில்லி
ஒருவாட்டி இடுபாட்டி மலை இறக்க இறக்கதில தள்ள
எடங்காட்டி தடங்காட்டி என அற்கக பற்க்க வந்து கொல்லேன்
அடங்கடி மடங்கடி வாய் உறைக்க உறைக்க முத்தம் வெய்யேன்
படங்காடி பயம் காடி நெஞ்சு இறக்க இறக்க தப்பு செய்யேன்
நான் சின்ன பையன் நீ கண்ண வெய்யேன்
நான் சொன்ன செய்யேன் வா வயில் வழை வாயேன்
ஒல்லி பெல்லி ஜெல்லி பெல்லி மல்லி வாச மல்லி
உன் மேனி வெங்கல வெல்லி
சொல்லி சொல்லி உன்ன அல்லி கில்லி கன்னம் கில்லி
விலயாட வந்தவன் கில்லி
லைச்சனா லைச்சனா என்னை
லவங்கு லவங்கு காடிச்சனா
இனிச்சனா இனிச்சனா
வாய் மடலில் கடலை திணிச்சனா
கொழுகனா மொழுகனா
நல்ல பழுத்து பழுத்து தலுகானா
எழச்சானா கொழைசானா
ரொம்ப செதுக்கி செதுக்கி ஒழைச்சனா
நீ செங்கிஸ்தனானா இனி உன் கிஸ் தானா
நான் மங்கூஸ் தானா
உன் கயில் கஸகஸ்தானா!
இருக்காண்ணா இடுப்பிருக்காண்ணா இல்லையாணா இல்லியனா
உன் இடைதானா இன்ப கடைதனா
மெல் எடைதன்டி குடைதனா
அட இக்கனி முக்கனி முகடு
நான் துத்த நாக தகடு
உன் உதடுகுள் எதனை உதடு
ஒண்ணு குடு குடு
அடி அஞ்சன மஞ்சன மயிலு
நீ கஞ்சன் ஜங்கா ரையிலு
உன் இடுப்பே ஆறாம் விரலு
நீ கிள்ளு கிள்ளு
Dance by youth members from North Carolina, Wisconsin, Connecticut, Virginia, and Maryland performing to parts of various Tamil kuthu songs such as “Sonna Puriyathu,” “Kalasala,” “Kadhal Vandhale,” “Irukaanaa,” “Pidikale,” “Mannarkudi,” and ending with beat segment from “Dia Dole” song. Performed at FeTNA Silver Jubilee Convention at Baltimore, MD.
kallaasala kalasala.. kalaasala kalasala
vadake ketu paaru enna pathi solluvaan
jardha beeda pole en perathaan melluvaan
Vidya Vandana Singing – Nee Ninaindhaal at FETNA 2012
வித்யா அய்யர் & வந்தனா ஐயர் பாடும் அன்பே வா… முன்பே வா!
ஆடல் கலையே தேவன் தந்தது
’அது… இது… எது!’ சிவகார்த்திகேயன்
நீயா… நானா! அரட்டை அரங்கம்
பரதநாட்டியம்
வெளிநாடுவாழ் தமிழர்களுக்கு கண்ணதாசனின் அறிவுரை: நியுயார்க் தமிழ்ச்சங்கத்திற்கு கவிஞர் கண்ணதாசன் எழுதிய அறிவுரைக் கவிதை சீர்காழி கோவிந்தராஜன் அவர்களால் இசையமைக்கப்பட்டது. வட அமெரிக்க தமிழ்ச் சங்கங்களின் (FETNA) வெள்ளிவிழா நிகழ்வில் இந்த பாடல் பரதநாட்டியமாக அரங்கேற்றப்பட்டது. The event took place in Baltimore, MD, USA on July 5,6&7, 2012 and participated by more than 2,500 Tamils, including leading figures from Tamilnadu and Canada.
வீணை இசை
Dance Program – Nannarae Nannarae
இளைய தளபதி நடிகர் விஜய் – Puli Urumuthu: சிறுவர் நடனம்: புலி உறுமுது! இடி இடிக்குது!! வேட்டைக்காரன்!!!
தமிழிசை
FETNA 2012 Charlotte Silambam
மேடையில் நாட்டியம் – Kummi Adi Pennae
Thanthana Thana Thanthana…
Kumiyadi Penney Kumiyadi
Kudi Kolavayum Poatu Kummi Adi
Kumiyadi Penney Kumiyadi
Kudi Kolavayum Poatu Kummi Adi
———————————————————————————————————
ஏ, பெத்தவங்க பார்த்து வச்ச பொண்ண எனக்கு புடிக்கல..
பொண்ண கொஞம் புடிச்சாலும் தாலி கட்ட புடிக்கல
தாலி கட்ட நினைச்சாலும் ஜாலி பண்ண புடிக்கல
ஜாலி பண்ணி முடிச்சாலும் சேர்ந்து வாழ புடிக்கல
உன்ன மட்டும் புடிக்குது, உன் கண்ண மட்டும் புடிக்குது..
உன்ன மட்டும் புடிக்குது, உன் கண்ண மட்டும் புடிக்குது..
ஏ ஆம்பளைங்க வைச்சிருக்கும் மீசை எனக்கு புடிக்கல
மீச கொஞசம் புடிச்சாலும் பேச எனக்கு புடிக்கல
பேச கொஞம் புடிச்சாலும் பழக எனக்கு புடிக்கல
பழக எனக்கு புடிச்சாலும் பலானதும் புடிக்கல
உன்ன மட்டும் புடிக்குது, உன் கண்ண மட்டும் புடிக்குது..
உன்ன மட்டும் புடிக்குது, உன் கண்ண மட்டும் புடிக்குது..
ஏ தூத்துகுடியில துடிப்பான ஆளொருத்தன்
துரத்திவந்தானே எனக்கு புடிக்கல
ஏ காரைக்குடியில களையான பொண்ணொருத்தி
கண்ணடிச்சாளே எனக்கு புடிக்கல
ஏ சேல கட்ட புடிக்கல
சீப்பெடுத்து தலவாரி பின்ன பிடிக்கல
ஏ வேட்டி கட்ட பிடிக்கல
விதவிதமா ஜீன்ஸ் வாங்கி போட பிடிக்கல
பலகாரம் புடிக்கல, பல வாரம் தூங்கல
எனக்கே என்னையெ கூட சில நேரம் புடிக்கல
உன்ன மட்டும் புடிக்குது, உன் கண்ண மட்டும் புடிக்குது..
உன்ன மட்டும் புடிக்குது, உன் கண்ண மட்டும் புடிக்குது..
1. தமிழ் வணிகசினிமா பற்றிய ஒரு இளக்காரமான பார்வை பொதுவாக அறிவுஜீவிகளிடம் உள்ளது. என்னிடமும் இருந்தது. ஆனால் உலகமெங்கும் உள்ள வட்டாரசினிமாக்களை ஹாலிவுட் சினிமா முற்றாக அழித்து அம்மக்கள் தங்களுக்குள் பேசிக்கொள்ளும் வெகுஜன ஊடகமாக சினிமா அமையாமல் ஆக்கிவிட்டிருக்கிறது. அந்த அபாயத்தை சமாளித்து இங்கே தமிழ் வணிகச்சினிமா வெற்றிகரமாக இருப்பதே ஒரு பண்பாட்டுச்சாதனை. அது,தொடர்ச்சியான ஃபீட் பேக் மெக்கானிசம் மூலம் உருவாக்கப்பட்டது. ஆகவே தமிழ்ச்சமூகத்தின் சராசரியால் உருவாக்கப்பட்டது அதன் தரம்.
2 இக்காரணத்தால் தமிழில் சராசரிக்கு மேலான ஒரு தளத்தில் படங்கள் வரமுடியவில்லை. அப்படி ஒரு படத்தை உருவாக்கும் முயற்சிகள் பல நடக்கின்றன. அதன்விளைவாக உருவான ஒன்றே குறும்பட இயக்கம். அதற்குப் பொருளியல் சுமை இல்லை என்பதனால் அது சுதந்திரமாக இயங்க முடியும் என்ற நிலை இருந்தது. ஆனால் நடைமுறையில் அது வெற்றியா என்ற தயக்கம் இருக்கிறது. ஆரம்பத்தில் குறும்படங்கள் மீது இருந்த எதிர்பார்ப்பு இல்லை இப்போது.
3 . காரணங்கள் இரண்டு. இந்தப் படங்களிலேயே அவை தெரிகின்றன. ஒன்று இலக்கியவாசிப்போ, அறிமுகமோ இல்லாதவர்களால் இப்படங்கள் எடுக்கப்படுகின்றன. ஆகவே கதைக்கருவிலும் வாழ்க்கை அவதானிப்புகளிலும் ஒரு முதிர்ச்சி இல்லை மிகச் சாதாரணமான கதைகளைச் சாதாரணமாக எடுக்கிறாகள். இந்தக்குறும்படங்களின் கதைகளைக் குமுதம் கூட வெளியிடுமா என்பது சந்தேகமே. பெரும் சிறுகதைச்சாதனைகள் நிகழ்ந்த ஒரு மொழியில் இத்தகைய படங்கள் வருவதை நாம் ஒரு சரிவு என்றே நினைக்கவேண்டும். இரண்டாவதாக இப்படங்கள் குறைந்த நேர அளவுள்ள, சிறிய சட்டகம் கொண்ட படங்கள். இதற்கான ஒரு திரைமொழி , திரைக்கதை வடிவம் உருவாக்கப்படவேண்டும். ஆனால் பெரிய படங்களின் அதே திரைமொழி, அதே திரைக்கதை உத்தியில் இவை எடுக்கப்படும்போது பார்வையனுபவம் சிறப்பாக அமைவதில்லை.
ஏறத்தாழ முப்பது பேர் பார்வையாளர்கள். மூன்று நபர்கள் கொண்ட ஜூரி.
தமிழ் வணிக சினிமாவை நிராகரித்துப் பேச முடியாது. தமிழ்ப்படங்கள் என்பது ஒரு பண்பாட்டு உரையாடல். அவை சராசரி மனிதர்களுடன் பேசக்கூடியவை. ஆவரேஜ் ஆளுக்காகத்தான் படமெடுக்க முடியும். எதிர்காலத்தில் கலைப்படங்கள் காலூன்றலாம். ஆனால், இன்றைக்கு அந்த நிலை கிடையாது.
பகுதி ஒன்று
* உணவு: பெரிய சாப்பாட்டு மேஜை. அயிரம் பேர் உண்ணக் கூடிய விருந்து போன்ற அயிட்டங்கள் காட்டப்பட வேண்டும். பார்வையாளனுக்கு பசியாக இருக்கலாம். கல்யாண சாப்பாடு தேவையிருக்கலாம். அதைத் தீர்க்க வேண்டும்.
* ஆடை, அணிகலன்: நாயகி தன்னுடைய டிரெஸரைத் திறந்து நூற்றுக்கணக்கான புடைவையை அலசுவாள். அவற்றில் இருந்து ஒன்றைத் தேர்ந்தெடுப்பாள். சினிமா பார்ப்பவனுக்கு அத்தனை புடவை எடுத்து தர முடியாது. பார்ப்பவளுக்கு இந்த மாதிரி சாய்ஸ் இருப்பது போல் கற்பனை தருவதற்கு சரோஜாதேவியும் ஜெயலலிதாவும் இவ்வ்வாறு செலக்சன் செய்ய வேண்டும்.
* இடம், லொக்கேஷன்: ஒவ்வொரு ஊரில் ஒவ்வொரு கலாச்சாரம். அனைத்து ஊர்களிலும் பிடிக்குமாறு புரியுமாறு எடுக்க வேண்டிய தேவை இருக்கிறது. சென்னையில், சின்னாளப்பட்டியில், சிகாகோவில், ஸ்கார்பரோவில் என்று எல்லா இடத்திற்கான சராசரி விருப்பங்களை உள்ளடக்கி எடுக்கிறார்கள்.
* ரிலாக்ஸேஷன்: இரண்டே கால் மணி நேரம் படம் ஓட வேண்டும். சினிமாவிற்கு கிளம்புவதற்கு பெரிய விஷயம். அந்தளவு சிரமப்பட்டு வருபவர்கள், டக்கென்று எண்பது மணித்துளிகளில் முடித்து அனுப்ப முடியாது.
* வணிக சினிமா: காதல் இல்லாத தமிழ் சினிமா எடுபடாது; எடுக்கணும்னு அவசியம் இல்ல. தமிழகச் சூழலில் காதல் செய்யும் வாய்ப்பு இல்லாததால் ஈடேற்றம் செய்வதற்கு இளமையும் காதலும் சினிமாவில் நிறைவேற்றுகிறது.
பகுதி இரண்டு
* சிறு பத்திரிகைக்காரன்: நா பார்த்தசாரதி, அகிலன், கல்கி எல்லாம் வணிக எழுத்தாளர்கள். அவர்கள் மட்டுமே புகழ் பெற்று விளங்கிய காலம் உண்டு. இன்று வெகுசன இலக்கியம் அல்லாதவர்கள்தான் புகழ் பெற்றவர்களாக இருக்கிறார்கள். நான் சிறுபத்திரிகைக்காரன். இன்று மைய எழுத்தாக விளங்குகிறேன். அது போல் குறும்படக்காரர்களும் மெயின் நீரோட்டத்தை நிர்ணயிப்பவர்களாக ஆகலாம்.
* இலக்கிய வாசிப்பு: கதைகளை தேர்தெடுக்கும்போது எண்ணங்களை மையமாக வைக்காமல், சிறப்பான சிறுகதைகளை எடுத்துக் கொள்ளலாம்.
கலியுகம் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் முதலில் பேசிய கவிஞர் அறிவுமதி, மனுஷ்யபுத்திரன் குங்குமத்தில் வழக்கு எண் படத்தை துவைத்து காயப்போட்டுவிட்டதாக குறைபட்டுக் கொண்டார். இதுபோல் மனுஷ் போன்ற இலக்கியவாதிகளே செய்தால், அடுத்து வரும் தயாரிப்பாளர்களும் வர மாட்டார்கள்.. இது தமிழ்ச் சினிமா துறையின் வளர்ச்சியையே பாதிக்கும். அது மிக அருமையான படம் என்று சொன்னார்.
இரண்டு சினிமாக்கள் நினைவுக்கு வருகின்றன. இரண்டுமே சோ ராமசாமி நடித்த படங்கள். இரண்டுமே இளையராஜா குடும்பத்தினர் இசையமைத்தவை. 1981ல் வெளிவந்த கழுகு. 1998ல் வெளிவந்த காதலா… காதலா.
இந்த இரு படங்களுக்கும் நடுவே உள்ள தூரம் என்பது இரு தலைமுறைகளுக்கு, இரு காலகட்டங்களுக்கு நடுவே உள்ள தொலைவு. கழுகு எண்பதுகளில் வெளியானாலும் அது உண்மையில் இக்கால மனநிலைகளையும் எண்ணங்களையும் வெளிப்படுத்திய படம். 2020க்குப் பின்னால் வலுப்பெற்ற மனநிலைகளையும் எண்ணங்களையும் காட்டும் படம் காதலா… காதலா.
கழுகு இந்தியாவில் தொண்ணூறுகளில் நிலவிய ஆன்மிகத் தேடல்களையும் பா.ஜ.க.வின் வளர்ச்சியையும் பற்றிப் பேசுகிறது. ‘போலி சாமியார்’ என்ற சொல்லாட்சி அன்று மிகப்பிரபலம். இணையான இன்னொரு சொல்லாட்சி ‘மதவாத அரசியல்’. ஒரே பிரச்சினையின் இருமுகங்கள். இவ்விரு சரடுகளையும் பின்னியே கமல் கதைகளும் சத்யராஜ் படங்களும் வெளிவந்தன.
கழுகு நகரத்தில் செல்வம் சம்பாதித்த பிறகு தோன்றும் வெறுமையைக் காட்டுகிறது. அவர்களின் மனக்கசப்பும், விரக்தியும், வெற்றி அடைந்ததனால் உண்டான ஏமாற்றமும், ஒட்டுமொத்தமான தேடலின்மையும் அதன் காட்சிகளில் வெளிப்படுகின்றன. ’நேர்மை மட்டும் இருந்தாப் போதுமா சாமீ? கூட அதிர்ஷ்டமும் வேணும்!’ என்னும் வியாபாரியின் வசனங்களைத் தொடர்ந்து ‘போன வருஷம் நல்லா இருந்தா மனைவி செத்துப் போயிட்டா!’என்று அவன் சொல்வது உதாரணம்.
முழுமையான தீவிரவாதத்தில் முடியும் ‘கழுகு’க்கு நேர் மாறான படம் ‘காதலா… காதலா’. தலைப்பே அதைச் சொல்லிவிடுகிறது.
எண்பதுகளில்தான் கோவில் பூசாரிகளும் அர்ச்சக்ர்களும் காவியுடை தரித்து வெளிவர ஆரம்பித்து வைய விரிவு வலையில் இணைத்த கம்ப்யூட்டரில் புகுந்த வைரசு போல பரவினர்.
அவர்களில் முதன்மையானவரான பங்காரு அடிகளை அடிபப்டையாகக் கொண்டு உருவான படம் அது. மெயின் சாமியார் பெயரே ஸ்ரீலஸ்ரீ ஆனந்த விகடனாந்தா.
எழுபது எண்பதுகள் ஆன்மிகக் கதைகளைப் பேசின. பக்தர்கள் கோவில் செல்பவர்களாக, எந்தக் கஷ்டத்திலும் கடவுளை மலைபோல் நம்புபவராக இருக்கவேண்டும் என இலக்கியமும் ஏபி நாகராஜனும் அறைகூவின. ஆனால் எண்பதுகளின் தொடக்கத்தில் வெளிவர ஆரம்பித்த ஜெகதீசன் மற்றும் இராம நாராயணன் திரைப்படங்கள் ஒரு தனிமனிதனின் மேஜிக் கொண்டு தெய்வம் மனுஷ ரூபேனாம் என்று சொல்ல ஆரம்பித்தன.
அகத்தியரும் கேபி சுந்தராம்பாளும் எழுபதுகளின் இலட்சிய புருஷர்கள். எண்பதுகளில் கேயார் விஜயாவும் தீபிகா சிகாலியாவும் அந்த இடத்துக்கு வந்து அமர்ந்தார்கள். சினிமாவிலோ தொலைக்காட்சியிலோ சீதாவகவோ அம்மனாகவோ வந்துவிட்டு கொஞ்சம் கவனமாக செயல்பட்டால் பணமும் அதிகாரமும் கைவரும், அதுவே வாழ்க்கையின் வெற்றி என அந்தப்படங்கள் சொல்லின.
அன்றைய சூழலை வைத்தே அந்தக் கூற்றை நாம் புரிந்துகொள்ள வேண்டும். எண்பதுகளில் இந்தியா கடைப்பிடித்துவந்த அரைகுறை சோஷலிசம் மீதான நம்பிக்கை தகர்ந்தது. வேலூர் ஜலகண்டேசுவரர் செயலிழந்து மூடியிருந்தார். திராவிட கட்சிகளின் ஹிந்து அறநிலையத்துறையின் பெரும் கபளீகரத்தினால் கோவில் மானியங்கள் உறைந்து நின்றது. விளைவாக உச்சகட்ட நம்பிக்கையின்மை. நாம் முன்னுதாரணமாகக் கொண்ட மூலஸ்தானமே தத்தளித்துக் கொண்டிருந்தது.
அந்நிலையில்தான் டிஜிஎஸ் தினகரன் பாணி ’கடவுளைக் கண்டேன்’ குரல்கள் எழ ஆரம்பித்தன. பிரார்த்தனை கிளப் கோரிக்கைகள் எழுந்தன. அந்தப் பொதுவான எண்ண ஓட்டம்தான் மெல்ல மெல்ல முதிர்ச்சி கொண்டு புட்டபர்த்தி சாய் பாபா ஆக செயல்வடிவம் பெற்று திருமூலரைத் தூக்கிப்போடச்செய்தது. இயேசுவின் முகமான சகோதரர் வந்து சேர்ந்தார். ஆன்மிகத்தை விற்கும் சுவிசேஷ நற்செய்தி கூட்டம் ஆரம்பித்தது.
ஆன்மிக எளிமையமாக்கல் கீழ்மட்ட வறுமையை பெரிதாக ஒன்றும் செய்யவில்லை. ஆனால் நடுத்தரவர்க்கத்துக்கு வாய்ப்புகளை அதிகரித்தது. தெய்வத்தின் குரல் ஒலிக்க ஆரம்பித்தது. வேலை நெருக்கடியினால் உருவான மன அழுத்தங்களுக்கு நம்பிக்கையை ஊட்டுபவையாக அந்த ஆன்மிக நிறுவனங்கள் அமைந்தன.
கடவுளை வேண்டி வரங்களைப் பெறுவது என்பதே நம்முடைய பழைய மனநிலையாக இருந்தது. பண்பாடுகளை ஒரு நியதியாக, கடமையாக நாம் கற்பிதம்செய்துகொள்ள வேண்டிய கட்டாயத்தை கார்ப்பரேட் சாமியாரிசம் உருவாக்கியது. பணத்தைக் கொடுத்து நிம்மதியைப் பெறுவதை வாழ்க்கைவிதியாகக் கொண்ட ஒரு சமூகத்தை கட்டமைக்க வேண்டியிருந்தது. அதைச்செய்தவை கார்பரேட் ஆன்மிக நூல்கள்.
பொதுநலன், சமூகநலன் எதைப்பற்றியும் கவலைகொள்ளவேண்டாம் என அவை கற்பித்தன. ஆசாமியிடம் நெருங்குவதே வாழ்க்கையின் பயன் என்று சித்தரித்தன. நம்முடைய மீடியா பிரக்ஞையில் இந்தக் கார்ப்பரேட் சாமிகள் உருவாக்கிய பெரும் மாற்றத்தை நாம் இன்னும் சரியாக மதிப்பிடவில்லை.
எண்பதுகளில் இருந்து நம் ஆலயச்சூழல் எப்படியெல்லாம் மாறிவந்திருக்கிறது என்று பார்த்தாலே இது புரியும். எண்பதுகளில் ஆலயங்கள் ஜாதிகளின் நாற்றங்கால்கள். சமூகம் சார்ந்த கொண்டாட்டங்களும் சாதி சார்ந்த வர்த்தகங்களும் கொண்டவை. இன்றைய கோவில்களில் இன அரசியலே இல்லை. பக்தர்கள் முழுக்கமுழுக்க தொழில்முறை நோக்கு கொண்டவர்கள். அன்று இலக்கியபிரக்ஞை கொண்ட, சொற்பொழிவுகளைக் கேட்கும் பழக்கம் கொண்ட, கலைத்திறன் கொண்ட பக்தர்கள் கதாநாயகர்களாகக் கருதப்பட்டனர். இன்று, பணக்கார பக்தர்கள், ஊடகத்தில் செல்வாக்கு மிக்க பக்தர்களே ஆலயங்களின் நாயகர்கள்.
இந்தமாற்றம் நிகழ ஆரம்பிக்கும் காலகட்டத்தைக் காட்டுகிறது காதலா… காதலா. ஆனால் அன்று இந்தச் சுயநலச் சிந்தனைகள் இன்னும் முதிரவில்லை. முந்தைய இலட்சியவாதத்தின் சாயலும் கொஞ்சம் இருந்தது. அந்தப்படத்தில் கமல்ஹாசன் (இராமலிங்கம்) கொஞ்சம் இலட்சியவாத நோக்கு கொண்டிருக்கிறான். சேவைகள் செய்கிறான். ஆனால் கழுகு முந்தைய காலகட்டத்தின் முற்றிய விரக்தியைக் காட்டுகிறது.
இன்றைய இளைஞர்களால் கழுகு காட்டும் சூழலை, அந்த மனநிலையை சரியாகப் புரிந்துகொள்ளமுடியாமல் போகலாம். இரண்டாமுலகப்போருக்குப் பின்னால் மேலைநாடுகளில் உருவான ஓஷோவும் கிருஷ்ணமூர்த்திகளும்
நம்பிக்கை இழப்பும் கலையில், இலக்கியத்தில், தத்துவத்தில், ஆன்மிகத்தில் கொந்தளிப்பை உருவாக்கிக்கொண்டிருந்தன. இளைய தலைமுறை எதிர்ப்பும், விரக்தியும் கொண்டதாக தெருவில் இறங்கியது.
மருத்துவ சிகிச்சைகளில் ப்ரானிக் ஹீலிங் [Pranic Healing] உருவாகி வந்தது. பொதுப்பேச்சில் கட்டிப்புடி வைத்தியம் என இதைச் சொல்வார்கள். அரசியலில் திராவிட பாணி வன்முறைக்கிளர்ச்சி எழுந்தது. கம்யூனிஸ்ட் அளவில் அது பரவியது.
தமிழகத்தில் காஞ்சிப் பெரியவர் காலகட்டம் முடிந்தபின் பிறந்த தலைமுறை குருபீடங்களில் நம்பிக்கை இழந்தது. பெரியாருக்குப்பின் பக்தி பரவலாகியது, ஆனால் சங்கர மடத்தின் சனாதனத் திட்டங்கள் காரணமாகத் ஆன்மிகம் வளரவில்லை. ஆகவே வெறுமையான சம்பிரதாயம் உருவாகியது. ஒரு தலைமுறையே செயலற்று சோகம் கொண்டு வீட்டில் முடங்கியது.
அவர்களுக்கு கூட்டுப் பிரார்த்தனையின் மனநிலைகளும் பங்காரு அடிகள் பாணி தனிநபர் தொழுகை குணப்படுத்தல்களும் பெரும் ஈர்ப்பை அளித்தன. காவியுடை அணிவது, இரண்டு வார்த்தைகளில் புரியாமல் பேசுவது, ஆங்கில வார்த்தகளைப் பயன்படுத்துவது என ஒரு உலகம். இன்னொரு உலகம் மிடையம் சார்ந்தது. இந்தியாவில் சுப்பிரமணிய சாமியும் சந்திரசுவாமியும் அரசால் கொடூரமாக நசுக்கப்பட்டபோது மனச்சோர்வு கொண்டவர்களின் எண்ணிக்கை மேலும் பெருகியது.
இந்தக்காலகட்டத்தில்தான் நான் என் முதிரா இளமையை ஆரம்பித்தேன் என்பதனால் எனக்கு நேரடி மனப்பதிவே உண்டு. அக்கால எழுத்துக்களில் திரைப்படங்களில் எல்லாம் இந்த திக்கற்ற பார்வதியையும் நல்லதங்காளையும் காணலாம். அந்த சோகத்தை உடல்மொழி மூலம் துலாபாரம் என்ற படத்தில் கச்சிதமாக வெளிப்படுத்திய சாரதா பெரும் விருது பெற்றார்.
தமிழில் அந்த சோகத்தைப் பதிவுசெய்த பிற திரைப்படங்கள் என மழலைப் பட்டாளம் [1980] உருவங்கள் மாறலாம் போன்றவற்றைச் சொல்லலாம்.
இலக்கியத்தில் மிக அழுத்தமான பதிவுகள் ஜெயகாந்தனிடத்திலும், ஜே.ஜே குறிப்புகளிலும் ஜீனோவுள்ளும் கந்தசாமிப் பிள்ளையிடத்திலும் கிடைக்கப் பெற்றவை.
நித்தியானந்தாவைப்பற்றிப் பேசுவதற்காகவே இந்த விரிவான சித்தரிப்பை அளித்தேன். இந்த காலகட்டப்பிரிவினை இல்லாமல் நித்தியானந்தாவை சரியாகப் புரிந்துகொள்ள முடியாது. இப்படிச் சொல்லலாம்.
நித்தியானந்தா முந்தைய காலகட்டத்தை நோக்கிப் பேசியவர். இன்று அவரை இரண்டாம் கட்டத்தைச் சேர்ந்தவர்கள் தங்கள் தேவைக்கும் பார்வைக்கும் ஏற்ப புரிந்துகொள்கிறார்கள்.
சென்னையைப் பார்த்து இப்படி ஜொள்ளு விட வைக்கமுடியுமா! – சாங்கர்
கொசுறு: கடவுள் வாழும் கோவிலிலே கற்பூர தீபம்:ஒரு தலை ராகம்
நியாயமாக ‘பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா’வோ, ’விழிகள் மேடையாம்; இமைகள் திரைகளாம்’ கிளிஞ்சல்களோ பிடித்திருக்க வேண்டும்; ஆனால், கல்லூரி காதல் என்றால் டி ராஜேந்தர் முதல் படம்.
* Accept that some days you’re the pigeon, and some days you’re the statue.
* Solitude is independence
* Call no man happy until he is dead - Oedipus
* It is what you read when you don't have to that determines what you will be when you can't help it. - Oscar Wilde
* The difference between literature and journalism is that journalism is unreadable and literature is not read. - Oscar Wilde