Tag Archives: MSV

அறுபது ஆண்டுகள் பாடிய நதி – என்றும் ஒலிக்கும் தாய்மொழி

எஸ். ஜானகியை எனக்கு எப்படித் தெரியும்?
விவித்பாரதியில் “கண்ணா நீ எங்கே? வா வா நீ இங்கே!” வழியாக மிமிக்ரி கலைஞர் மாதிரி என அறிமுகமானார்.

ஆனால், அதற்கு முன்னேலேயே தெற்கு மாட வீதி வன்னியர் மண்டபத்தில் அமர்க்களமாய் “மச்சானப் பார்த்தீங்களா!” பாடினவர் என்றறியேன்.
இந்தக் கதையை அம்மாவிடம் சொல்ல, அவர் கொஞ்சும் சலங்கை “சிங்கார வேலனே தேவா”விற்கு அழைத்துச் சென்றார்.
அக்காவோ அவருக்குப் பிடித்த, நெஞ்சத்தைக் கிள்ளாதே, “உறவெனும் புதிய வானில்” மூழ்கச் செய்தார்.

அம்மாவிற்கு குங்குமம் படத்தின் காட்சியமைப்பான “சின்னஞ்சிறிய வண்ணப் பறவை” பிடிக்கும். அதில் சாரதா பதைபதைப்பார். அந்தக் குரலும் ஜானகி.
எனக்கு ஸ்ரீதேவி. “செந்தூரப் பூவே” முதல் தர்மயுத்தம் “ஆகாய கங்கை பூந்தேன் மலர்” என நடிகை மட்டுமே தெரிவார். எத்தனை ஆலாபனை! என்ன ஹம்மிங்!
அக்கா நிச்சயமாய் “காற்றுக்கென்ன வேலி” சொல்லி சுஜாதாவின் பாய்ச்சல் கலந்த துள்ளல் குரலை உணர்த்தியிருப்பார்.
பாரதியார், “கண்ணன் மனநிலையைத் தங்கமே தங்கம்” சொல்வார்.

குரலை வைத்து ஆளை எடை போடக் கூடாது.
அன்றில் இருந்து எஸ்.பி.பி.யை ‘பொம்பள ஜானகி’ என்றழைக்க ஆரம்பித்தேன்.
அவருக்கு “கடவுள் அமைத்து வைத்த மேடை” என்றால், ஜானகிக்கு “சிப்பியிருக்குது முத்துமிருக்குது! திறந்து பார்க்க நேரமில்லடி ராசாத்தி!” கதை.

வேலையில் ஒன்றிப் போய் ஊறிக் கிடக்கும் ப்ளேலிஸ்ட் பட்டியலில் அவர் நிரந்தர முதல்வி:
– உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன் (அவளுக்கென ஒரு மனம்)
– சொல்லத்தான் நினைக்கிறேன்
– தேன் சிந்துதே வானம் (பொண்ணுக்குத் தங்க மனசு)
– அந்தப்புரத்தில் ஒரு மகராஜன் (தீபம்)
– ஒரு வானவில் போலே (காற்றினிலே வரும் கீதம்)
– அழகிய கண்ணே (உதிரிப்பூக்கள்)
– காற்றில் எந்தன் கீதம் (ஜானி)
– பொன்வானம் பன்னீர் தூவுது (இன்று நீ நாளை நான்)

மேலே சொன்னதெல்லாம் “தங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி” என்றால் அடுத்து வருவது “குயிலே கவிக்குயிலே” என நினைவேக்க நனவோடை:
* அடி ஆத்தாடி (கடலோரக் கவிதைகள்)
* நல்ல நேரம் நாளும் யோகம் (ஜெயமாலினி!)
* நாதம் என் ஜீவனே (காதல் ஓவியம்)
* புத்தம் புது காலை (அலைகள் ஓய்வதில்லை)
* வெட்டி வேரு வாசம் (முதல் மரியாதை)
* தூங்காத விழிகள் ரெண்டு (அக்னி நட்சட்திரம்)
* இந்த மல்லிக மனச (டி ராஜேந்தர்)

அடுத்த தலைமுறையையும் அவர் விடவில்லை!
– சுந்தரி கண்ணால் ஒரு சேதி
– கண்மணி அன்போட காதலன்
– தென்றல் வந்து தீண்டும் போது
– மார்கழித் திங்கள் அல்லவா

மனம் அலைபாயும் போது “தூரத்தில் நான் கண்ட உன் முகம்” என நிழல்கள் ஓடும்.
சாந்தோம் பள்ளியில் ஒலித்த ஒரே சினிமாப் பாடல் “மாதா உன் கோவிலில் மணிதீபம் ஏற்றினேன்!”.
அதைக் கேட்டு மதம் மாறலாம் என்ற எண்ணம் எழுமளவு மெய்யுருக்கம்.
அதன் பின் “அலைகள் ஒய்வதில்லை” படத்தைப் பார்த்து முடிவை மாற்றி விட்டேன்.

நடுவே எம்.பி3 யுகம். அப்பொழுது எஸ் ஜானகி ஹிட்ஸ் எனப் போட்டு ~170 சொச்சம் பாடல் சிடி கிடைத்தது.
96 போன்ற படங்களில் அவருக்கு மரியாதை செய்தபோது ஜானு என்னும் பெயர் சந்தோஷம் தந்தது.

பக்திப் பாடலோ… பஜனோ… கஜலோ!

உங்களுக்கு என்ன ஜானகி நினைவு?
எஸ்.ஜே. என்றால் எந்தப் பாடல்?

ஒலியும் ஒளியும்

நாற்பது வயதை எட்டிப்பார்ப்பவரின் ஞாபகத்தின் படி எந்தப் பாடல்கள் கொசுவர்த்தியை மீட்டும்? சிதறலாய் ஒரு பத்து

1. ராக்கம்மா கையத் தட்டு: தளபதி

மணி ரத்னம் இரண்டாம் பட்சம்; ரஜினி மூன்றாம் பட்சம்; இளையராஜா #1

2. டெலிபோன் மணி போல் சிரிப்பவள் இவளா: இந்தியன்

ரஜினிகாந்த் முதலாம் இடத்தில் வந்தால், கமல்ஹாசன் கூடவே வரவேண்டுமே!

3. மலர்களே மலர்களே: லவ் பேர்ட்ஸ்

மாற்றிய சட்டை அனைத்தும் பிரபு தேவாவிற்கா அல்லது அடுத்த படத்திற்கா என்னும் உண்மை தெரிஞ்சாகணும்.

4. ராஜ ராஜ சோழன் நான்: ரெட்டை வால் குருவி

அர்ச்சனாவின் ரவிக் புடைவையின் அன்னியோன்யமோ; ராதிகாவின் ஆரத்தழுவலோ!

5. மன்றம் வந்த தென்றலுக்கு: மௌன ராகம்

நிச்சயிக்கப்பட்ட திருமணங்களின் வண்டவாளங்களை இரண்டு சரணங்களில் சுருக்கும் அழகு.

6. இந்த வாழ்வே மாயம்: வாழ்வே மாயம்

கமலுக்கென்று நிறைய பாடல்கள் இருக்கின்றன; ‘அந்தி மழை’, ‘உனக்கென்ன மேலே நின்றாய்’, அண்ணாத்தே ஆடுறார்…

7. தோல்வி நிலையென நினைத்தால்: ஜெய்சங்கர்

பாடலுக்கேற்ற காட்சியமைப்பு; கடவுளை தரிசித்தது போன்ற உத்வேக எழுப்புதல்.

8. கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்: திருடா திருடா

வைரமுத்து மாயாஜாலம்; ரெஹ்மானின் இளமை; திரைப்படத்தின் பசுமை

9. தெய்வம் தந்த வீடு, வீதி இருக்கு: அவள் ஒரு தொடர்கதை

கண்ணதாசன் அருமை தெரியாத காலம்; பாலச்சந்தர் குன்சாக புரிந்த நேரம்; பெண்ணுரிமை புரிந்ததாக மயங்கிய சமயம்.

10. டேக் இட் ஈசி ஊர்வசி: காதலன்

சென்னையைப் பார்த்து இப்படி ஜொள்ளு விட வைக்கமுடியுமா! – சாங்கர்

கொசுறு: கடவுள் வாழும் கோவிலிலே கற்பூர தீபம்: ஒரு தலை ராகம்

நியாயமாக ‘பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா’வோ, ’விழிகள் மேடையாம்; இமைகள் திரைகளாம்’ கிளிஞ்சல்களோ பிடித்திருக்க வேண்டும்; ஆனால், கல்லூரி காதல் என்றால் டி ராஜேந்தர் முதல் படம்.

இசை – ராஜத்துவம்

முந்தைய ட்வீட்ஸ்: விச்வரூபம் – ஆஸ்கருத்துவம்

http://twitter.com/#!/snapjudge/status/105723512320299008
http://twitter.com/#!/snapjudge/status/108609994697613312
http://twitter.com/#!/snapjudge/status/134671573792722945
http://twitter.com/#!/snapjudge/status/116582204699721728
http://twitter.com/#!/snapjudge/status/76704664632033280
http://twitter.com/#!/snapjudge/status/76767474774835200
http://twitter.com/#!/snapjudge/status/76767888136077312
http://twitter.com/#!/snapjudge/status/21315335340687360
http://twitter.com/#!/snapjudge/status/26338528015159296
http://twitter.com/#!/snapjudge/status/76768136317239296

2012 Boston Events: Film Music Performance by New England Thamil Sangam for Pongal

நாள்: சனி, ஜனவரி 14
நேரம்: மதியம் 4:30
இடம்: ஆஷ்லாண்ட் உயர்நிலைப் பள்ளி

Boston Events - Thamil Pongal special: 2012 Happy New Year to USA