Daily Archives: ஜனவரி 7, 2009

“பிச்சைப் பாத்திரம்” – நான் கடவுள்

நன்றி: ரவி ஆதித்யா: நான் கடவுள்

அசல்: Raajavin Ramanamaalai – Pitchai Paathiram (Non-Film devotional album)

புதுசு: Pichaipaathiram – Madhu Balakrishnan: Naan Kadavul

பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தேன்
அய்யனே என் அய்யனே
யாம் ஒரு பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தேன்
அய்யனே என் அய்யனே

பிண்டம் என்னும் எலும்போடு சதை நரம்பு உதிரமும்
அடங்கிய உடம்பு எனும் பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தேன்
அய்யனே என் அய்யனே

பிண்டம் என்னும் எலும்போடு சதை நரம்பு உதிரமும்
அடங்கிய உடம்பு எனும் பிச்சைப் பாத்திரம் ஏந்தி
வந்தேன் அய்யனே என் அய்யனே

அம்மையும் அப்பனும் தந்ததா
இல்லை ஆதியின் வல்வினை சுழந்ததா

அம்மையும் அப்பனும் தந்ததா
இல்லை ஆதியின் வல்வினை சுழ்ந்ததா
இன்மையை நானறியாததா
சிறு பொம்மையின் நிலையினில்
உண்மையை உணர்ந்திட

பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தேன்
அய்யனே என் அய்யனே

பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தேன்
அய்யனே என் அய்யனே

அத்தனை செல்வமும் உன்னிடத்தில்
நான் பிச்சைக்கு செல்வது எவ்விடத்தில்
வெறும் பாத்திரம் உள்ளது என்னிடத்தில்
அதன் சூத்திரமோ அது உன்னிடத்தில்

ஒரு முறையா இரு முறையா பல முறை
பலப் பிறப்பெடுக்க வைத்தாய்
புது வினையா பழ வினையா கணம் கணம்
தினம் தினம் என்னை துடிக்க வைத்தாய்

பொருளுக்கு அலைந்திடும்
பொருளற்ற வாழ்க்கையும் துரத்துதே
உன் அருள் அருள் அருள் என்று
அலைகின்ற மனம் இன்று பிதற்றுதே
அருள் விழியால் நோக்குவாய்
மடற் பதத்தால் தாங்குவாய்
உன் திருக்கரம் எனை அரவணைத்து உனதருள் பெற

பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தேன்
அய்யனே என் அய்யனே
பிண்டம் என்னும் எலும்போடு சதை நரம்பு உதிரமும்
அடங்கிய உடம்பு எனும் பிச்சைப் பாத்திரம்
ஏந்தி வந்தேன் அய்யனே என் அய்யனே

அமெரிக்கா தன்னை மட்டும் முன்னேற்றிக் கொள்ள நினைத்தால் உலகப் பொருளாதாரம் பலத்த அடிவாங்கும்.

FT.com / Columnists / Martin Wolf – Choices made in 2009 will shape the globe’s destiny: Financial Times

Some entertain hopes of restoring the globally unbalanced economic growth of the middle years of this decade. They are wrong. Our choice is between a better balanced world economy and disintegration. And it must be made this year.

public-debt-banking-crisis-ft-graphs-indices

Banking Crises: An Equal Opportunity Menace: The historical frequency of banking crises is quite similar in high- and middle-to-low-income countries, with quantitative and qualitative parallels in both the run-ups and the aftermath. We establish these regularities using a unique dataset spanning from Denmark’s financial panic during the Napoleonic War to the ongoing global financial crisis sparked by subprime mortgage defaults in the United States.

Banking crises dramatically weaken fiscal positions in both groups, with government revenues invariably contracting, and fiscal expenditures often expanding sharply. Three years after a financial crisis central government debt increases, on average, by about 86 percent. Thus the fiscal burden of banking crisis extends far beyond the commonly cited cost of the bailouts. Our new dataset includes housing price data for emerging markets; these allow us to show that the real estate price cycles around banking crises are similar in duration and amplitude to those in advanced economies, with the busts averaging four to six years. Corroborating earlier work, we find that systemic banking crises are typically preceded by asset price bubbles, large capital inflows and credit booms, in rich and poor countries alike.

:: Levy Economics Institute of Bard College ::

usa-america-sector-balances-trade-deficit-balanced-budget-obama

ஜெயந்தி சங்கர்: புது புத்தகங்கள்

mana-pirigai-novel-fiction-tamil-literature-jayanthi-shankar1. மனப்பிரிகை (நாவல்)

அவனுக்கும் அவளுக்கும் ஒருவரையொருவர் பிடித்துப் போகிறது. ஆனால், இருவருமே ‘திருமணம்’ எனும் வாழ்நாள் கமிட்மெண்டுக்குத் தயாராகவில்லை என்று கருதுகிறார்கள்.

அவ்வாறான வாழ்நாள் பந்தத்துக்கு ஒருவருக்கொருவர் சரியானவர் தானா என்று எப்படித்தான் தெரிந்து கொள்வது என்று யோசிக்கிறார்கள். ஒரு உடன்படிக்கைக்கும் வருகிறார்கள். என்ன உடன்படிக்கை? சந்தியாவும் கோபியும் சேர்ந்தார்களா? திருமணத்திலா? என்னதான் நடந்தது?

நிறைய கிளைக்கதைகளுடன் சிங்கப்பூரில் நடக்கும் இந்தக்கதை புதிய மொழியிலும் வடிவிலும் சொல்லப்பட்டுள்ளது.

பக்கம்- 275 :: சந்தியா பதிப்பகம்


thirai-kadalodi-jeyanthy-sankar-books2. திரைகடலோடி (சிறுகதைகள்)

ஆசிரியரின் ஐந்தாவது சிறுகதைத் தொகுதியான ‘திரைகடலோடி’யில் பத்து சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன.

ரவி சுப்ரமணியம் எழுதியிருக்கும் முன்னுரையில் இருந்து: ‘இந்தக்கதைகளில் வரும் மனிதர்கள் நம் மனிதர்கள். இரண்டாயிரம் வருஷமாய் பொருள் தேடப் பிரிந்து செல்லும் மரபுடைய நம்மினத்தின் வாரிசுகள்.

கதைகளைத் திறம்படச் சொல்வதில் தேர்ச்சி பெற்றிருக்கும் உள்ளடக்கத் தேர்வில் செலுத்தும் கவனம் அசாத்தியமானதாக இருக்கிறது. மொழியையும் உணர்வுகளையும் சம்பவங்களையும் சம்பாஷணைகளையும் ஊடுபாவாய் இவர் இணைக்கும் விதம், கதைக்குள் தென்படும் தற்காலத் தன்மை போன்றவை இவரைத் தனித்துக் காட்டுகிறது.’

பக்கம் – 130 :: மதி நிலையம் வெளியீடு


meen-kulam-chinese-shorts-children-jayanthy-sankar3. மீன் குளம்

(சிறார் சீனக் கதைகள் – ஆங்கிலம் வழி)

அரிசி வீதி, இந்த மருத்துவமனையில் பேய் இருக்கிறது, நீர்ச் சக்கரம், டிராகனின் முத்து, மீன் குளம், தவளையின் கால்கள் உள்ளிட்ட 33 சிறார்கதைகள் அடங்கிய இந்த நூல் சிறார்கள் படிக்கக்கூடிய எளிய மொழியில் ஆங்காங்கே கோட்டோவியங்களுடன் அழகிய வண்ண அட்டையில் அமைந்துள்ளது. சீனக்கலாசாரத்தில் சிறார்களுக்கு ருசியும் ஈடுபாடும் ஏற்படக்கூடிய சுவாரஸியம் நிறைந்த கதைகள்.

பக்கம் – 160 :: மதி நிலையம் வெளியீடு

Where is the Party – Silambattam Inspirations

முதற்கண் வேர் இஸ் தி பார்ட்டி திறனாய்வை வாசிக்கவும். அதன் தொடர்ச்சியாக வேர் இஸ் தி பார்ட்டி? ஆங்.. திருமங்கலத்துல! அரசியலாக்கத்தையும் காணவும்.

இப்போது பிற பரிந்துரை:

  1. பன்ச் சிம்புவின் ஏற்றத்தாழ்வு: வேர் இஸ் தி Parity
  2. சீன சிம்பு பார்ட்டி: வேர் இஸ் தி copper-t
  3. லிட்டில் சிம்புவின் பீட்டர்: வேர் இஸ் தி Potty
  4. ஜூம் கணினி சிம்பு: வேர் இஸ் தி PuTTY
  5. பால் குழப்பம் மன்மதன்: வேர் இஸ் தி Panty டுனைட்
  6. பொய் சொல்லப் போறோம் மாப்பிளை முறுக்கு சிம்பு: வேர் இஸ் தி ப்ராப்பர்டி
  7. பைரேட்ஸ் ஆஃப் தி பீச் வாலிபால் சிம்பு: வேர் இஸ் தி Booty

வேற எதுனாச்சும் தோணிச்சுனா சிம்புவுக்கு சொல்லுங்க 🙂

வசனகர்த்தா ஜெயமோகன் பேட்டி: பாலாவின் ‘நான் கடவுள்’

  • மலையாள வசனங்களை நண்பர் ஷாஜி எழுதினார்
  • ‘ருத்ரன் மிகவும் தனிமையில் இருந்தான். அப்பொழுது கடவுள் கூட அவனிடம் இல்லை. இறைவன் இல்லாதத் தனிமை என்னும் எக்ஸ்பிரெஷனை பாலா விஷுவலாக எடுத்திருக்கிறார்.’
  • அஹம் ப்ரும்மாஸ்மி என்பது பிருகதாரண்ய உபநிடதத்தில் இருந்து எடுக்கப்பட்டது. அதனைப் பிற்காலத்தில் ஆதிசங்கரர் விரித்துரைத்தார்.
  • “நான் முழுமையான வணிகப்படத்திற்கு வசனம் எழுதும் மனநிலையில் இல்லை.”
  • “ஏழாம் உலகம் கொஞ்சம் மைல்டாக சொல்லும் விஷயங்கள் இந்தப் படத்தில் இன்னும் தீவிரமாக காட்சியாக்கப்பட்டிருக்கிறது.”

முழு வீடியோ :: Dialogue Writer Jayamohan On Naan Kadavul

naan-kadavul-bala-arya-pooja-ilaiya-raja-aham-brahmasmi

பிற செவ்வி:

  1. நான் கடவுள் குறித்து நடிகை பூஜா
  2. நடிகர் ஆர்யாவின் நேர்காணல்
  3. கலை இயக்குநர் கிருஷ்ணமூர்த்தி :: Nan Kadavul

முந்தைய இடுகை:

1. Om Siva Om – Vijay Prakash: பாடல் வரிகள் & இளையராஜா

2. Naan Kadavul – Music