Daily Archives: ஜனவரி 3, 2009

Naan Kadavul – Music

Music Reviews:

Writer Previews:
jeyamohan.in » Blog Archive » சென்னையில்…: யூகிசேது எல்லார் பேரையும் சொல்லி வழக்கம்போல பாராட்டினார். நவீன இலக்கியம் என்றாலே ஜெயமோகன் தான் என்ற வகையில் அவர் சொன்னபோது இருவர் கைதட்டினார்கள். நான் மகிழ்ச்சி அடைய ஆரம்பிப்பதற்குள் ‘ஜெயமோகன் ஒழிக’ என்று அரங்கில் இருந்து ஒரு குரல் எழுந்தது.

நான் இதுவரை தொலைக்காட்சிகளில் தலைகாட்டியதில்லை. அந்த ஊடகம் மேல் அப்படி ஒரு கசப்பு உண்டு. மேலும் அதன் வழியாக ஒன்றும் வாசகர்கள் வரமாட்டார்கள் என்ற எண்ணம். எனக்குத்தெரிந்து தொலைக்காட்சி ஊடகங்களில் பேட்டி கொடுக்காத ஒரே எழுத்தாளன் நான் தான்

Movie Previews:
ராம் சுரேஷ்: நான் கடவுள் – பாலாவின் விகடன் பேட்டி: “பக்திப் படம் எடுப்பது என் வேலை இல்லை. எவருடைய நம்பிக்கை களையும் காயப்படுத்தக் கூடாது என்பது என் இயல்பு. அந்த அடிப்படை நாகரிகத்தில் நான் எப்போதும் தெளிவா இருக்கேன். இது விளிம்பு நிலை மனிதர்களின் உலகம்.

‘நான் கடவுள்’ படத்தில், ஆர்யா, பூஜாவைத் தவிர, அத்தனை பேரும் புதுமுகங்கள். உடல் வளர்ச்சி இல்லாத, மன வளர்ச்சி இல்லாத மனிதர்கள். அவங்க கையில வசனப் பேப் பரைக் கொடுத்து, ‘பேசுப்பா!’னு படம்பிடிக்க முடியாது. அவங்க ளோட பழகி, அவங்க நம்மோட பழகின்னு ஒவ்வொருத்தரையும் ஒரு குழந்தை போலப் பார்த்துக்கணும். ஆறு மாச ஷூட்டிங் முடிஞ்ச பிறகு, இப்போ அவங்க அத்தனை பேரும் என் குடும் பம்.

இன்னொரு பக்கம் காசி சாமி யார்கள். அகோரின்னு சொல்லப் படுகிற, நர மாமிசம் சாப்பிடுற சாமியார்களையும் நடிக்க வெச்சிருக்கேன். இப்படி ஒரு படத்தை உருவாக்குற வலியை, வார்த்தைகளில் புரியவைக்க முடியாது. ஏன்னா, இது வித்தி யாசமான படம்னு சொல்றதே பழைய வார்த்தையாகிப்போச்சு. இது நாம் கருணை காட்டாத, நம்மால் புரிந்துகொள்ளப்படாத, கடைசி மனிதர்களின் உலகம்!'”

Twitter Reviews:

  • நான் கடவுள் ஏழாம் உலகம் தான் – naadodi
  • நான் கடவுள்-ல் இளையராசா ஒரு Mediocre ஆகத் தெரிகிறார் (பாடல்களில் மட்டும்) …மது பாலக்கிருட்டின ணைவிட இ.ராசாவின் ரமண மாலையில் வரும் பிச்சைப் பாத்திரம் ஏந்திவந்தேன்…பாடல் பிழிவதோடு மட்டுமல்லாமல் ராசாவின் உச்சரிப்பும் சொக்க வைக்கும் இரு…இரு…அருள்…அருள்..களில் வரும் ரு வின் ஏற்றம் என்னை அசரவைத்திருக்கிறது. இம்மாதிரியான ஏற்ற இறக்கம் ராசாவிற்கு அடுத்தபடியாக கமலகாசனில் பாடல் உச்சரிப்பில் கண்டிருக்கிறேன் (அ) கேட்டிருக்கிறேன். – Potteakadai
  • Naan Kadavul songs reminded me of early 90s Rama.Narayanan movies. Not my cup… maybe I’ll start liking after a few mo re hrs of listening! – dynobuoy
  • நான் கடவுள் – ஹே ராம் கிளாஸை எதிர்பார்ப்பவர்கள் ஒழியக்கடவது. ராஜா kep t it simple. எனவே, complexity எதிர்பார்க்கும் என்னைப்போன்றவர்களுக்கு பெருத்த ஏமாற்றமாகத்தானிருக்கும். ஆனாலும் ஒன்றிரண்டு பாடல்கள் பிரபலமாகும். ஷ்ரேயா கோஷாலின் குரல் இனிமை. பிச்சை பாத்திரம் – பழைய ராஜாவின் வடிவத்தைவிட ஏமாற்றம்தான். மெது பாலகிருஷ்ணன் சொதப்பல்.- donion
  • ̀நான் கடவுள்’ மிகுந்த ஏமாற்றம்;புதிதாய் ஒரேயொரு சாதாரண பாடல். இனி எந்த இசைக்கொடையும் ராஜாவால் அளிக்க முடியாது என்ற அலுப ்பு மட்டுமே வருகிறது – rozavasanth
  • ராஜா பாடிய ஒரு காற்றில் கொஞ்சம் திறமையான இசைக்கோர்ப்பு. கண்ணில் பார்வை சில முறை கேட்டால் பிடிக்ககூடும். – donion
  • ஒரு பெரிய ரசிகர் கூட்டம் பயித்தியமாய் ராஜா அமைத்து வெளிவரும் இசைக்காக காந்திருந்து, முதல் நாள் ஒரிஜினல் சிடி வாங்கி, பலமுறை கேட்டு கழகக்கண்மணி போல, அற்புதம் மீண்டும் நிகழ்ந்ததாய் சமாதானமும் ஒவ்வொருமுறையும் சொல்லிக்கொள்கிறது – rozavasanth
  • ராஜா தன் ரசிகர்களுக்கு தருவதும் ஒரு அரசியல் தலைவரின் நரம்பு சிலிர்ப்பு தரும் அறிக்கையை போலத் தான் இருக்கிறது. – rozavasanth
  • இனி பாலாவின் திரையாக்கத்தில்தான் இருக்கிறது. – donion
  • ’நான் கடவுள்’ படம் இளையராஜாவுடன் உத்தம் சிங் இணைந்து இசை என்கிறார்களே, இவருக்கு எதற்கு உதவி? தனியே செய்யமுடியாதபடி கடினமான சப்ஜெக்டா? – nchokkan

பொன்னம்மாள் – கௌரவிப்பு + பாராட்டு

Felicitations by “Sri Vaishnava Maha Sangam” on December 24, 2008.

எளிய தமிழில் தற்காலத்திற்கு ஏற்ற வகையில் நாலாயிர திவ்ய பிரபந்தம் தந்ததற்கும் அதற்கு முன்பு எழுதிய ஸ்ரீஹயக்ரீவர், லஷ்மி நரசிம்மர், சுதர்சனர் வரலாறு போன்ற வைணவ நூல்களுக்காகவும் நடந்த பாராட்டு விழாவின் புகைப்படங்கள்:

தொடர்பான பதிவு: <a href=”http://rp-padaippu.blogspot.com/”>பொன்னம்மாள்</a&gt;

Dilip Kumar gets Saral Award

ராபர்ட் ஆரோக்கியம் அறக்கட்டளை வழங்கும் சாரல் விருது வழங்கும் விழாவும்
டி.எஸ். துரைசாமியின் கருங்குயில் குன்றத்துக் கொலை நூல் வெளியீட்டு விழாவும்

நாள்: ஜனவரி 06, 2009, செவ்வாய்
இடம்: பிலிம்சேம்பர், சென்னை 6
நேரம்: மாலை 6 மணி

சாரல் இலக்கிய விருது பெறுபவர் திலீப்குமார்

2008க்கான சாரல் விருதிற்காக எழுத்தாளர் திலீப்குமாரை, மா. அரங்கநாதன், தேனுகா, ரவிசுப்ரமணியன் அடங்கிய நடுவர் குழு தேர்ந்தெடுத்துத் தந்துள்ளது.

பங்கேற்போர்:

  • பாலுமகேந்திரா
  • இறையன்பு
  • தேனுகா
  • ஜெயமோகன்
  • ரவிசுப்ரமணியன்
  • பெர்னர்ட் ‘டி’ சாமி
  • ஜேடி ஜெர்ரி

திலீப்குமார் குறித்த முந்தைய இடுகை: Writer Dilip Kumar Meet