1. சாரா பேலினும் சோனியா காந்தியும் :: முனைவர் நாகேஸ்வரி அண்ணாமலை
ஏ.பி.ஸி. (ABC) என்னும் டி.வி. நிறுவனம் இவரைப் பேட்டி கண்டபோது என்னென்னவோ உளறியிருக்கிறார். ‘ஜனாதிபதி புஷ்ஷின் கோட்பாடு பற்றி என்ன நினைக்கிறீர்கள்?’ என்று நிருபர் கேட்டதற்கு, ‘அவருடைய கொள்கையின் எந்த அம்சம் பற்றிக் கேட்கிறீர்கள்?’ என்று கேட்டு மழுப்பியிருக்கிறார்.
‘ரஷ்யாவுக்கு மிக அருகில் உங்கள் மாநிலம் இருக்கிறதே. ரஷ்யா கடந்த இரண்டு வாரங்களில் நடந்துகொண்டது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?’ என்ற நிருபரின் கேள்விக்கு ‘அலாஸ்காவிலிருந்து ரஷ்யாவைப் பார்க்கலாம்’ என்று விடை அளித்திருக்கிறார் பேலின். அப்படியும் விடாமல் நிருபர் ‘ஜார்ஜியாவில் ரஷ்யா நடந்துகொண்டது பற்றி உங்கள் அனுமானம் என்ன?’ என்று கேட்டதற்கும் சரியான பதில் அளிக்கவில்லை.
இந்தப் பேட்டி நடந்த அன்றே (செப்டம்பர் 11, 2008) பேலினுடைய மகனும் மற்றும் சிலரும் ஈராக்கிற்குக் கிளம்பிய சந்தர்ப்பத்தில் பேலின் பேசிய உரையில் ‘இன்று அமெரிக்கக் கட்டடங்களை வீழ்த்தி ஆயிரக்கணக்கான அமெரிக்கர்களின் இறப்பிற்குக் காரணமாக இருந்த நம் எதிரிகளோடு இவர்கள் போர் புரியப் போகிறார்கள்’ என்றார். ஈராக்கிற்கும் ஈராக்கை ஆண்ட சத்தாம் ஹுசேனுக்கும் 2001ஆம் வருஷம் செப்டம்பர் மாதம் பதினோராம் தேதி அமெரிக்காவில் நடந்த சம்பவத்திற்கும் சம்பந்தம் எதுவும் இல்லை என்று புஷ்ஷே மறைமுகமாக ஒப்புக்கொண்ட பிறகும் அது பற்றி பேலினுக்குத் தெரியாமல் இருப்பது எவ்வளவு பயங்கரமான விஷயம் என்கிறார்கள்.
சென்ற வருடம்தான் பாஸ்போர்ட் பெற்ற, அமெரிக்க வெளியுறவு பற்றியும் உள்நாட்டுப் பாதுகாப்பு பற்றியும் எதுவும் தெரியாத இந்த பேலினைத் தேர்ந்தெடுத்திருப்பதன் மூலம் குடியரசுக் கட்சி ஓட்டுப் போடும் தகுதி பெற்ற அமெரிக்கக் குடிமக்களை இழிவுபடுத்தியிருக்கிறது என்று நியுயார்க் டைம்ஸ் பத்திரிக்கை அங்கலாய்க்கிறது.
2. வீரகேசரி: பதிவு! – Pathivu.com: “அமெரிக்கத் தேர்தல் மாற்றத்திற்கு வித்திடுமா? – நோர்வேயிலிருந்து வெற்றித் திருமகள்”
செனட்டர் பராக் ஒபாமா 158.5 மில்லியன் அமெரிக்க டொலரையும், செனட்டர் ஹிலரி கிளின்டன் 140.7 மில்லியன் அமெரிக்க டொலரையும், ஜனாதிபதி வேட்பாளர் ஜோன் மக்கெயின் 58.4 மில்லியன் அமெரிக்க டொலரையும் செலவிட்டிருப்பதாக ஓர் அண்ணளவான கணிப்பீடு ஒன்று தெரிவிக்கின்றது.ஆசிய பிராந்தியத்திலே விவசாயத்துறைக்கு அளிக்கப்படாத முக்கியத்துவத்தினால், ஏறத்தாழ 218 மில்லியன் மக்கள் பட்டினிச்சாவை எதிர்கொள்ளும் இவ்வேளையில் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கு இவ்வளவு நிதித்தொகை செலவிடப்படுவது அவசியம்தானா என தமது ஆதங்கங்களையும் விசனங்களையும் பல ஊடகங்கள் எழுப்பி நிற்கின்றன.
அமெரிக்காவிலுள்ள தமிழர்களை உள்ளடக்கிய ‘ஒபாமாவுக்கான தமிழர்கள்‘ என்ற அரசியல் செயற்பாட்டுக் குழுவானது ஜனாதிபதித் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளரான பராக் ஒபாமாவுக்கு ஆதரவு வழங்குவதாக அறிவித்திருக்கிறது.
‘ஒபாமாவுக்கான தமிழர்கள் அமைப்பு’ வெளியிட்டுள்ள அறிக்கையில்; “இலங்கைப் பிரச்சினைக்கான தீர்வானது பொஸ்னியாவையோ அல்லது மொன்ரிநிக்ரோ, கிழக்குத்தீமோர், கியூபெக், ஸ்லோவாக்கியா, கொசோவா போன்ற நாடுகளில் ஏற்பட்ட தீர்வைப் போன்று அமைய முடியும். தூதுவர் ரிச்சட் கோல்புக்கின் நிபுணத்துவத்தை பயன்படுத்தக் கூடியதாக இருக்கும் என்று நாம் கருதுகிறோம்” என்று அமைப்பின் பேச்சாளர் கூறியுள்ளார்.
4. மணிக் கூண்டு: அமெரிக்காவின் நிறப்பற்று!!! | மயிலாடுதுறை சிவா: ஓபாமாவிற்காக ஓர் நாள்!