Daily Archives: ஒக்ரோபர் 14, 2008

அமெரிக்காவில் 'ஒபாமாவுக்காக தமிழர்கள்' – அதிபர் தேர்தல் பதிவுகள்

1. சாரா பேலினும் சோனியா காந்தியும் :: முனைவர் நாகேஸ்வரி அண்ணாமலை

ஏ.பி.ஸி. (ABC) என்னும் டி.வி. நிறுவனம் இவரைப் பேட்டி கண்டபோது என்னென்னவோ உளறியிருக்கிறார். ‘ஜனாதிபதி புஷ்ஷின் கோட்பாடு பற்றி என்ன நினைக்கிறீர்கள்?’ என்று நிருபர் கேட்டதற்கு, ‘அவருடைய கொள்கையின் எந்த அம்சம் பற்றிக் கேட்கிறீர்கள்?’ என்று கேட்டு மழுப்பியிருக்கிறார்.

‘ரஷ்யாவுக்கு மிக அருகில் உங்கள் மாநிலம் இருக்கிறதே. ரஷ்யா கடந்த இரண்டு வாரங்களில் நடந்துகொண்டது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?’ என்ற நிருபரின் கேள்விக்கு ‘அலாஸ்காவிலிருந்து ரஷ்யாவைப் பார்க்கலாம்’ என்று விடை அளித்திருக்கிறார் பேலின். அப்படியும் விடாமல் நிருபர் ‘ஜார்ஜியாவில் ரஷ்யா நடந்துகொண்டது பற்றி உங்கள் அனுமானம் என்ன?’ என்று கேட்டதற்கும் சரியான பதில் அளிக்கவில்லை.

இந்தப் பேட்டி நடந்த அன்றே (செப்டம்பர் 11, 2008) பேலினுடைய மகனும் மற்றும் சிலரும் ஈராக்கிற்குக் கிளம்பிய சந்தர்ப்பத்தில் பேலின் பேசிய உரையில் ‘இன்று அமெரிக்கக் கட்டடங்களை வீழ்த்தி ஆயிரக்கணக்கான அமெரிக்கர்களின் இறப்பிற்குக் காரணமாக இருந்த நம் எதிரிகளோடு இவர்கள் போர் புரியப் போகிறார்கள்’ என்றார். ஈராக்கிற்கும் ஈராக்கை ஆண்ட சத்தாம் ஹுசேனுக்கும் 2001ஆம் வருஷம் செப்டம்பர் மாதம் பதினோராம் தேதி அமெரிக்காவில் நடந்த சம்பவத்திற்கும் சம்பந்தம் எதுவும் இல்லை என்று புஷ்ஷே மறைமுகமாக ஒப்புக்கொண்ட பிறகும் அது பற்றி பேலினுக்குத் தெரியாமல் இருப்பது எவ்வளவு பயங்கரமான விஷயம் என்கிறார்கள்.

சென்ற வருடம்தான் பாஸ்போர்ட் பெற்ற, அமெரிக்க வெளியுறவு பற்றியும் உள்நாட்டுப் பாதுகாப்பு பற்றியும் எதுவும் தெரியாத இந்த பேலினைத் தேர்ந்தெடுத்திருப்பதன் மூலம் குடியரசுக் கட்சி ஓட்டுப் போடும் தகுதி பெற்ற அமெரிக்கக் குடிமக்களை இழிவுபடுத்தியிருக்கிறது என்று நியுயார்க் டைம்ஸ் பத்திரிக்கை அங்கலாய்க்கிறது.


2. வீரகேசரி: பதிவு! – Pathivu.com: “அமெரிக்கத் தேர்தல் மாற்றத்திற்கு வித்திடுமா? – நோர்வேயிலிருந்து வெற்றித் திருமகள்”

செனட்டர் பராக் ஒபாமா 158.5 மில்லியன் அமெரிக்க டொலரையும், செனட்டர் ஹிலரி கிளின்டன் 140.7 மில்லியன் அமெரிக்க டொலரையும், ஜனாதிபதி வேட்பாளர் ஜோன் மக்கெயின் 58.4 மில்லியன் அமெரிக்க டொலரையும் செலவிட்டிருப்பதாக ஓர் அண்ணளவான கணிப்பீடு ஒன்று தெரிவிக்கின்றது.ஆசிய பிராந்தியத்திலே விவசாயத்துறைக்கு அளிக்கப்படாத முக்கியத்துவத்தினால், ஏறத்தாழ 218 மில்லியன் மக்கள் பட்டினிச்சாவை எதிர்கொள்ளும் இவ்வேளையில் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கு இவ்வளவு நிதித்தொகை செலவிடப்படுவது அவசியம்தானா என தமது ஆதங்கங்களையும் விசனங்களையும் பல ஊடகங்கள் எழுப்பி நிற்கின்றன.


3. News view – TamilWin.com:

அமெரிக்காவிலுள்ள தமிழர்களை உள்ளடக்கிய ‘ஒபாமாவுக்கான தமிழர்கள்‘ என்ற அரசியல் செயற்பாட்டுக் குழுவானது ஜனாதிபதித் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளரான பராக் ஒபாமாவுக்கு ஆதரவு வழங்குவதாக அறிவித்திருக்கிறது.

‘ஒபாமாவுக்கான தமிழர்கள் அமைப்பு’ வெளியிட்டுள்ள அறிக்கையில்; “இலங்கைப் பிரச்சினைக்கான தீர்வானது பொஸ்னியாவையோ அல்லது மொன்ரிநிக்ரோ, கிழக்குத்தீமோர், கியூபெக், ஸ்லோவாக்கியா, கொசோவா போன்ற நாடுகளில் ஏற்பட்ட தீர்வைப் போன்று அமைய முடியும். தூதுவர் ரிச்சட் கோல்புக்கின் நிபுணத்துவத்தை பயன்படுத்தக் கூடியதாக இருக்கும் என்று நாம் கருதுகிறோம்” என்று அமைப்பின் பேச்சாளர் கூறியுள்ளார்.


4. மணிக் கூண்டு: அமெரிக்காவின் நிறப்பற்று!!! | மயிலாடுதுறை சிவா: ஓபாமாவிற்காக ஓர் நாள்!

முதன் முறையாக தமிழில் சாரா பேலின் நேர்காணல்: சத்யா

முதல் பகுதி

3. சாரா பேலினை தமிழில் மொழிபெயர்க்க உங்களைத் தேர்ந்தெடுக்கிறார்கள். அவரின் கேட்டி கௌரிக் பேட்டியையோ சார்லி கிப்ஸன் செவ்வியையோ தமிழாக்கிக் கொடுக்கவும்.

இவ்வளவு சுலபமான கேள்வியைக்கேட்டுட்டீங்க. சரி பரவாயில்லை. பேலின் பேட்டி கீழே

பேலினை பேட்டி எடுப்பவர்: இப்போதைய பொருளாதாரத்தை பத்தி என்ன நினைக்கிறீங்க?

சாரா பேலின்: அது வந்து .. ஆங்..மெக்கெயின் ஒரு அஞ்சாநெஞ்சர். இந்த மாதிரி மாபெரும் புரச்சிகர மனிதராலத்தான் இந்த தேசத்தை காப்த்தமுடியும் வேணும்னா ரோட்டோரமா உங்காந்து பீடி புடிக்கறவற ஏங்க காசு புழக்கம் இருக்கான்னு கேட்டா இல்லைன்னு தான் சொல்லுவார்.என்னனாஞ் சொல்றது? (காமராவைப்பாத்து ஒரு சின்ன கண்ண்டிப்பு)

பே.பே.எ.: இல்லை இன்னொரு முறை கேக்கறேன், பீடி புடிக்கறவற கேக்கலை உங்களைக் கேக்கறேன் பொருளாதாரத்தை எப்படி சரிபண்ணுவீங்க.

பேலின்: பெருளாதாரத்தை எப்படி சரிபண்றது அதுதானே உங்க கேள்வி. ஆதொள கீர்ந்தானரம்பத்திலே அலாஸ்காவுல இப்படித்தான் நான் சங்கீத நாமகீர்த்தனம் பண்ணி மக்களை உய்விக்கும்போது ரேடியோ ஸ்டேஷன் நஷடத்துல நடக்கறத கண்டு பிடிச்ச இலவசமா குடுக்கற காபி மெஷின்ல இனிமே காசு குடுத்துத்துத்தான் குடிக்கணும்னு ஒரு அருமையான புரட்சிகர திட்டத்தை முன்வைசேசன். சும்மா அதிருதில்ல.( காமராவைப்பாத்து மத்திமமா இன்னொரு கண்ண்டிப்பு)

பே.பே.எ.: சரி உங்களோட வெளிநாட்டு கொள்கைய சொல்லுங்க.

பேலின்: அது வந்து .. ஆங். வெளிநாட்டு கொள்கை என்ன அதுதானே உங்க கேள்வி. எங்க வீட்டூலேந்து எட்டிப்பாத்தா கனடா தெரியும்.இந்த பக்கம் எட்டி பாத்தா ரஷ்யா தெரியும். நிறைய அனுபவம் இருக்கு.

எங்க அஞ்சா நெஞ்சர் வியட்நாம் எல்லாம் போயிருக்கார். அவருக்கு நிறைய அனுபவம் இருக்கு.அரசியல் பண்றதுன்னா சும்மா இல்லை. ஒரு நாளைக்கு இருபது பேப்பர் படிக்கணும். நிறைய வெளிநாட்டு பேப்பரெல்லாம் படிக்கறேன். நிறைய வெளிநாடுகள் இருக்கு. நிறைய கொள்கைகள் இருக்கு அதனால நிறைய வெளிநாட்டு கொள்கை இருக்கு.

பே.பே.எ.: சரி ஆப்கானிஸதான பத்தி சொல்லுங்க.

பேலின்: அப்கானிஸதான் நிறைய ஆறுகள் இருக்கு, மலைகள் இருக்கு, மக்கள் சுபிட்சமா இருக்காங்க வெறென்ன.

பே.பே.எ.: குறிப்பா எந்த பகுதி இப்படி நல்லா இருக்குன்னு சொல்ல முடியுமா.

பேலின்: எந்தப்பகுதின்னு கேட்டா .. அது வந்து எல்லா நாட்லையும் ஆறுகள் மலைகள் எல்லாம் இருக்கு மக்கள் வசதியா வாழறாங்க அதுமாதிரிதான் இதுவும். அடுத்த முறை பேட்டி எடுக்கும் போது சரியாச்ச சொல்லீடறேன்.

பே.பே.எ.: கடைசியா ஒருகேள்வி நீங்க சொல்றதல்லாம் பாத்தா சுத்தமா தேறாத கேஸ்போல இருக்கீங்க.மக்களும் அப்படித்தான் பேசிக்கிறீங்க. நீங்க புதுசா என்னதான் பண்ணுவீங்க?

பேலின்: அது.. வந்து.. மெகயின் நல்லவர். வல்லவர்.அப்புறம் நான் வந்து நேரிடியா மக்கள் கிட்ட பேசிக்கறேன். (மனசுக்குள்ளே) அவங்க தான் பதிலுக்கு பதில் கேள்வி கேட்க மாட்டாங்க.

4. செனேட்டராக இருந்தபோதே தற்போதைய வீட்டுக்கடன் பிரச்சினையையும் அதன் மேலெழுந்த நிதிநிலை மதிப்பீடு நிலைகுலைவையும் கண்டுணர முடியாத ஒபாமாவா? இராக் மீது போர் தொடுத்தால் ஓரிரண்டு நாளில் அமெரிக்காவின் கடமை முடியும் என்று கணித்த மெகயினா? இருவரில் உங்கள் தேர்வு எவர்?

சத்யா