Tag Archives: Hinduism

Chicago Ramar Temple: Ram = Problems

ராமர்  கோவில் என்பதற்கு பிரச்சினை என்று அர்த்தம். கோவில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்னும் பழமொழிக்கேற்ப, அமெரிக்காவில் ஒவ்வொரு நகரத்திலும் ஹிந்து மந்திர் இருக்கிறது. அங்கே நடக்கும் சண்டையில், பிரிந்து போய் இரண்டாவது கோவிலும் நிச்சயமாக இருக்கும்.

கத்ரு, வினதை கதை ஆகட்டும்; காந்தாரி x குந்தி ஆகட்டும். புராண காலத்தில் இருந்து போட்டிக்கு பிள்ளை பெறுவது இந்தியர் வழக்கம். வாஷிங்டன் டிசி நகரத்தில் ஒரே தெருவில் இரு ஆலயங்கள். சிகாகோவில் பத்து மைல் வட்டத்துக்குள் இரு ஆலயங்கள்.

அரோரா ஆலயம் திருப்பதி போல் என்றால் பக்கத்து ஊரான லெமாண்ட் ஆலயம் கொஞ்சம் வடக்கிந்திய பாணியில் ஹரே ராம் ஹரே கிருஷ்ணா கலந்த பத்ராசலம் இராமர்.

மூலஸ்தானத்தில் பளிங்கு கற்களும் இருக்கும்; கூடவே கருங்கற் சிலையும் இருக்கும்; பஞ்சலோக உற்சவரும் காணக்கிடைப்பார்.

இந்த நிலையில் திடீரென்று வடக்கு வழக்கத்திற்கு நாக் அவுட் கிடைத்திருக்கிறது.

போட்டி கோவிலிலேயே போட்டி. பலிபீடத்திற்கு யார் பலி என்றெல்லாம் தமிழ்ப் பேப்பர் தலைப்பு கொடுத்திருக்கும். ஆனால் அமெரிக்காவில் ஆங்கில நாளிதழ் மட்டுமே இதை கவனித்திருக்கிறது.

உள்ளூர்காரர்கள்தான் உள்விஷயங்களை சொல்ல வேண்டும்.

துவக்க காலத்தில் கோவிலை அமைத்தவர்களின் கருத்தை கவனத்தில் கொள்ள வேண்டுமா? தென்னிந்திய ஆகமவிதிப்படி மொழுமொழு சிலைகள் மூலஸ்தானத்தை ஆக்கிரமிக்கலாமா? தெலுங்கு வண்ணமான கருப்பு அல்லாத வெள்ளை வெளேர் சிலைகள் நீக்குவது தர்மமா என்றெல்லாம் கோர்ட்டில் வாதாடி இருப்பார்கள் என்று நம்புகிறேன்.

கோவில் பொக்கீடு கணக்கு: HTGC – Lemont – Chicago – Temple -IL – Financials – Annual Report 2009_new

ஆசாரக்கோவை கதைகள் 1 – ஆசார வித்து

தூரத்தில் விமானம் தெரிந்தது. அதில் அப்பா வருவார். தூங்குவதற்கு முன் கட்டியணைத்துப் போர்த்திவிட்டு ‘குட் நைட்’ சொல்வார். நாளைக்கு சனிக்கிழமை. வந்துவிடுவார்.

இப்பொழுது விமானம் நெருங்குகிறது. அல்ல… கலிஃபோர்னியா கான்டோர் வந்து இறங்கியது.

“நீ அழிந்து கொண்டிருக்கிறாயாமே”

“சேச்சே! உன் அப்பாவ கிட்டக்கயே வச்சுக்கணும்னு நீ கேட்ட இல்லியா! அதுக்காக வந்திருக்கேன்.”

“கருடன் மேல் பெருமாள் பறப்பது போல் நீதான் எங்கப்பாவ கூட்டிகிட்டு வரப்போறியா?”

“இல்ல… நான் படைச்ச மக்களையெல்லாம் அழிக்கணும்.”

“என்னது?”

“உனக்கு தெரியுமில்லியா? நாந்தான் இந்த உலகத்தை சிருஷ்டிச்சேன். முன்னுமொரு தினத்தில் மேலேயிருந்த முதியவர் பிரளயத்தை உண்டுசெஞ்சார். வாக்கு சாதுர்யம் இல்லாதவங்க எல்லாரும் அம்பேல். நான் மச்சாவதாரம் எடுத்து ஏட்டுச் சுரைக்காய்களைக் காப்பாற்றினேன். இப்பொழுதும் அந்த மாதிரி செய்யணும்”

“எனக்கு ஆசாரக்கோவை ஞாபகத்துக்கு வருது. உனக்கு நன்றி சொல்லணும்.”

நன்றி யறிதல் பொறையுடைமை இன்சொல்லோடு
இன்னாத எவ்வுயிர்க்கும் செய்யாமை கல்வியோடு
ஒப்புரவு ஆற்ற அறிதல் அறிவுடைமை
நல்லினத் தாரோடு நட்டல் இவைஎட்டும்
சொல்லிய ஆசார வித்து

“இருக்கட்டும். உங்கப்பாவை அமெரிக்க ஜனாதிபதி ஆக்கட்டுமா? டைம்ஸ் பத்திரிகையின் ஆண்டுநாயகர் ஆக்கட்டுமா? முதலாவதாக ஆனால் உலக வெம்மையினால் பனிக்கட்டி உருகி, பூமிச்சூட்டினால் சுனாமி கொணர்ந்த கோபன்ஹேகான் நாயகர் என்று புராணம் பாடலாம். இரண்டாமவர் ஆனால், பணமுதலைகளுக்கு டாலர் மாலை தொடுக்கும் கஜேந்திர யானை என்று வரலாறு போடலாம்.”

“இது இட்லி-வடையில் வரும் முனி கடிதம் போல் விஷயக்கோர்வை ஆகிறது. எனக்குப் புரிகிற மாதிரி சொல்லு.”

“ரொம்ப சிம்பிள். கூடிய சீக்கிரமே ஹைதியில் பூகம்பம் வரப்போகிறது. அதற்கு முன் கடவுளுக்கு பலிகடா தேவை. உங்கப்பன் மேல் பழியைப் போடலாம் என்று யோசிக்கிறோம். போதிய பஞ்சப்படியும் பதவியும் கொடுத்து விடுவோம். ரெடியா?”

விக்கிக் குறிப்பு: The Wiyot tribe of California say that the condor recreated mankind after Above Old Man wiped humanity out with a flood.[49] However, other tribes, like California’s Mono, viewed the condor as a destroyer, not a creator. They say that Condor seized humans, cut off their heads, and drained their blood so that it would flood Ground Squirrel‘s home. Condor then seized Ground Squirrel after he fled, but Ground Squirrel managed to cut off Condor’s head when Condor paused to take a drink of the blood.

Mylapore Kapaliswarar Temple Golu: Navarathri Celebrations

Chennai Golu: Navarathri Greetings

Golu Photos - Tamil Nadu: Navarathri: Dussehra in Chennai

முத்துக்குமாரும் காந்தியும்: கேள்விகள்

1: தற்கொலை குறித்து உங்கள் கருத்தென்ன?

2. உயரிய லட்சியங்களுக்காக தன்னை வருத்திக் கொள்வதும், தற்கொலை செய்து கொள்வதும் அதற்கு வீரவணக்கம் செய்வதும் பாராட்டுக்குரிய செயலா?

3. அடைய வேண்டிய இலக்கிற்காக வழிமுறையில் சில சமரசங்களை செய்து கொள்ளலாமா?

4. கணவன் இறந்தவுடன் மனைவியையும் தீக்குளிக்க வைப்பது சரிதானா?

5. வாழ்க்கையின் பாரத்தைத் தாங்க இயலாதவர்கள் தற்கொலை மேற்கொள்கிறார்களா?

6. மற்றவர் மேல் எல்லா சுமையையும் போட்டுவிட்டு, தான் தீக்குளித்து விடுதலைப் பெற்றுக் கொள்கிறார்களா?

7. கிறித்துவத்தில் பாவமன்னிப்பு; பௌத்தத்தில் கர்மா; இஸ்லாமின் சொர்க்கம் போல் இல்லாமல் இந்து மதத்தில் மறுபிறவி போன்ற கருத்தாக்கங்கள்தான் தியாகத்தின் சின்னமாக அர்ப்பணிக்க வைக்கிறதா?

8. உயரிய இடங்களை அடைய முடியாதவர், மற்றவரைக் கண்டு பொறாமைப்படுபவர், அடுத்தவரின் மதிப்பிற்கு ஆசைப்படுபவர்களை எல்லாம், இந்த வீரவணக்க நிகழ்வுகள் உயர்வு நவிற்சிக்கு வித்திட வைத்து, தீக்குளிப்புகளை ஊக்கப்படுத்துகிறதா?

9. வீரம் என்றால் கத்தி கொண்டு போரிட்டு சண்டையில் எதிரியை வீழ்த்துவதா?

10. தற்கொலையும் கூடாது; உண்ணாவிரதத்திலும் பயனில்லை; அப்படியானால் அறப்போராட்டங்களைத் துவக்கி, பெருமளவில் மக்களிடம் கொண்டு சென்று, ஆட்சியார்களிடம் மாற்றத்தை எவ்வாறு உருவாக்குவது?

11. ஒபாமா போல் பெரிய அளவில் துவக்க கால பணசேமிப்பு இல்லாமல், சுய ஆர்வத்தை வித்தாக வைத்து, பலரை ஈர்த்து, மாற்றங்களுக்கு கால்கோள் இடுவது எங்ஙனம்?

12. திருவிழா கொண்டாட்டம் போல் வீரவணக்கமும் குழுவாகக் கூடி கூத்து போட்டு, கும்பலாக ஒன்றுசேர்ந்து, கூட்டம் பார்த்து பிரமித்து, மகிழ்ச்சியைப் பகிரும் தருணங்கள்தானா?

கிருஷ்ணா! கிருஷ்ணா!

மலந்துடைக்க தாள்களை கடகடவென பறித்த சமயம் திரௌபதியை துச்சாதனன் துகிலுரிந்தது நினைவுக்கு வருகிறது.
10:33 AM Nov 20th

அதே போன்ற இன்னொரு மலங்கழிக்கும் இடம். ஆத்மார்த்தமாக தியானித்து நச்சுகளை வெளியேற்றுகையில் கிருஷ்ணனே வந்துசேர்ந்தார்.

‘என்னடா! நீ ‘ஒன்லி விமல்’ சூட்டிங், ஷர்ட்டிங் பார்த்தது இல்லையாடா?’

‘ஏஞ்சாமி?’

‘அங்கே கூட இப்படி துணிக்கட்டுகளை பண்டில் பண்டிலாக அடுக்கி வைத்திருப்பார்கள். எண்பதுகளின் தமிழ்நாட்டு கோ ஆப்டெக்ஸில் இதைப் பார்த்தவன் நீ. இருந்தும் ஏன்டா என்னோட இன்சிடென்ட்டை வம்புக்கு இழுத்தாய்?’

‘உங்கள எங்க சாமி உள்ளே இழுத்தேன்? நான் துச்சாதனன். வெள்ளைப் புடைவையாக பேப்பர். கொடுத்தது காஸ்ட்கோ; வாங்கி வைத்தது நான்; தயாரித்தது ஸ்காட் கம்பெனியாம்’.

த்வைதம் பேசுகிறாயா? டாய்லெட் பேப்பருக்காக மரத்தை வெட்டியது தவறு என்பாய். அங்கு மீண்டும் பச்சை தழைக்காவிட்டால் க்ரீன்பீஸ் கொண்டு போராட்டம் நடத்துவாய். தண்ணீரைக் கொட்டி ஃப்ளஷ் செய்யாதே என்றும், அதை அப்படியே வைத்திருந்து உரமாக்கலாம் என்றும் பேதம் பாராட்டுவாய்!’

‘சாமீ! ரொம்ப விக்கிப்பீடியா பக்கம் போகாதீங்க. அப்படியே டெமொக்ரசி நௌ எல்லாம் வேணாம்.’

‘அது இருக்கட்டும். மீண்டும் கேட்கிறேன். அள்ள அள்ளக் கொடுத்தவன் கிருஷ்ணன். பத்து தடவை பீ பெய்தால் தீர்ந்து போகும் உருளையோடு ஒப்பிடலாமா?’

‘முதல்ல இதுக்கு பதில் சொல்லுங்க சாமீயோவ். கிறித்துவம், இஸ்லாம் போன்ற மதங்கள் த்வைதத்தின் அடிப்படையிலும் புத்தம், ஜெயினம் எல்லாம் கடவுள் அபவாதம் என்னும் அத்வைதம் போதிக்குதா?’

‘முதலில் பிரபத்தியை அணுகு மகனே. சர்வமும் சித்திக்கும்’

‘யூ மீன் பாப்பாத்தி?’

‘பிரபத்தி என்றால் பரிபூரண சரணாகதி அப்பா’.

‘எது எப்படியோ. பிரபத்தி பேர் நல்லாருக்கு. அடுத்த தமிழ் ஹீரோயினுக்கு வெச்சுக்கலாம். அதற்கப்புறம் அவளை சரணாகதி அடைஞ்சா மோட்சம் வருமே.’

‘எனக்கு மீராபாய்தான் சரி. நான் ஜூட்.’

காளியைக் கண்டு குளிர்வாய் மனமே

செய்தி: Supermodel poses as goddess Kali, sparks a row

விழியம்: Video: Inside Goddess Heidi Klum's Halloween Party! at The Insider

புகைப்படங்கள்: Heidi Klum’s Halloween Costume Kicks Ass

God Bless You – Viduthalai: Cartoons

Cartoons by Viduthalai