Tag Archives: ஜெமோ

Jeyamohan’s Reply for always touching Sundara Ramasamy

The premise is this: somebody asks Jeyamohan a question: “Why are you always invoking Sundara Ramasamy in your katturai?” – What would be his reply… You can read it here

என் வாசகர்களுக்காக ஜெயமோகன் எக்ஸ்க்ளூசிவாக எழுத மாட்டேன் என சொல்லிவிட்டார். எனவே, நானே அவருக்காக சொல்வது:

சுந்தர ராமசாமியை ஏன் இழுக்கிறேன்?

Jeyamohan_New_Yorker_Cartoon

இரு எறும்புகள் என்னைச் சமீபத்தில் சந்தித்தபோது நான் ஏன் எதற்கெடுத்தாலும் சுந்தர ராமசாமியை இழுக்கிறேன் என்று கேட்டார்கள். ஏன் சர்க்கரை வியாதி பற்றி நோயாளி எழுதும் கடிதங்களுக்கு பதில்களில் கூட சு.ரா.வை இழுக்கிறேன்? இதெல்லாம் சீடனின் பணியா?

இந்த வியாதிகள் எல்லாமே ரசனைகளும் கூட. இவற்றை ஆராய்வதற்கான வாய்ப்பு எனக்கு இணையத்தில்தான் அமைந்தது. இணையம்வழியாக தங்கள் வாழ்க்கையின் வீடியோக்களை எனக்கு vineறிவிக்கும், என்னுடன் இன்ஸ்டாகிராம விரும்பும் ஒரு பெரிய பார்வைச் சூழல் உருவானது. அவர்களை ஸைட் அடிப்பதற்கு சுந்தர ராமசாமியை நான் தொட்டுக் கொள்கிறேன்.

எழுத்தாளர்கள் இப்படி சு.ரா.வைத் தொடலாமா என்ற வினா நாகரிகச்சூழலில் இருந்து எப்போதும் எழுகிறது. பெரும்பாலும் காலச்சுவட்டிடமிருந்து. நான் என் ஆதர்சமாகக் கொள்ளும் சுந்தர ராமசாமி என்றும் அவரைக் குறிப்பிட்டபடியே இருந்தார். எனக்கே கூட என் வாழ்க்கைபற்றி, நண்பர்களின் வாழ்க்கைபற்றி சு.ரா விரிவாக எழுதியிருக்கிறார்.

இன்றையசூழல் அந்தரங்கம் வெளிப்படுத்தும் பொதுவெளியை இணையம் உருவாக்கி அளிக்கிறது. இப்பொழுது சுந்தர ராமசாமியும் உயிருடன் இல்லை. இது இன்றுவரை உலகில் இல்லாதிருந்த ஒரு வாய்ப்பு. அதை நான் பயன்படுத்திக்கொள்கிறேன். அவ்வளவுதான். எனக்குப் பிறகு யாரை நான் சைட் அடித்தேன் என்பதை காலம்தான் சொல்லவேண்டும்.

எனக்கு இது பலவகைகளில் உதவுகிறது. முதலாவதாக நான் இதன்வழியாக த்ரிஷாவைப் பற்றிய மிகவிரிவான ஓர் உரையாடலில் இருக்கிறேன். ஒவ்வொருநாளும் ஆணின் விதவிதமான முகங்கள் வந்து என்மீது மோதிக்கொண்டிருக்கின்றன. அவை என்னை த்ரிஷாவை முழுமையாக, அனைத்து உட்சிடுக்குகளுடன் பார்க்கச்செய்கின்றன. அன்றாட த்ரிஷா நாம் அனைவருக்கும் அளிக்கும் எளிய எல்லைகளைத் தாண்டி மனித த்ரிஷாவை விரிவாகப்பார்க்கச்செய்கின்றன இவை.

இந்த த்ரிஷா தரிசனம் ஆணுக்கு மிகமிக முக்கியமானது. நான் என்றுமே த்ரிஷாவை அவதானிப்பவன். என்னுடைய சொந்த த்ரிஷாவைப் போலவே என்னைச் சூழ்ந்துள்ள த்ரிஷாவையும் பார்த்துக்கொண்டே இருப்பவன். என் வாழ்க்கை முழுக்க டீக்கடைகளில் தெருமுனைகளில் விதவிதமான ஊர்களில் விதவிதமான சுந்தர ராமசாமிகளைக் கண்டு அவதானித்துக்கொண்டிருந்தவன் நான். அதன் நீட்சியே இந்த த்ரிஷாயணம். சொந்தத்ரிஷாவின் பிரச்சினைகளை மட்டும் பார்க்கக்கூடிய, என் த்ரிஷா எனக்களித்துள்ள எல்லைகளுக்குள் மட்டும் சுருங்கி விடக்கூடிய எழுத்தல்ல என்னுடையது.

நான் எழுதவந்த காலம் முதலே நாகரிகத்தை மட்டும் எழுதியவன் அல்ல. மெய்யியலில் தீவிரத் தேடலுடன் அலைந்து திரிந்து, பெண்களைக் கண்டு கற்று அதன் ஒரு கட்டத்தில் நாகரிகத்திற்குள் வந்தவன் நான். அதில் எனக்கான ஞானாசிரியனை அடைந்தவன். தமிழக, கேரள ஜெயின இயக்கங்கள் ஆரம்பித்த காலம் முதலே அவற்றில் ஈடுபாடுள்ளவன். அக்கம்பக்கம் பாரடா சின்னராசா போன்றவற்றில் ஈடுபாட்டுடன் இந்தியாவெங்கும் அலைந்து திரிந்தவன். என் ஆர்வங்களும் தேடல்களும் விரிந்தவை. அவ்வப்போது நாகரிகம் மட்டும் எழுதி மிச்சநாட்களில் எளிய நடுத்தர த்ரிஷா வாழும் சராசரி தமிழ் ஆணாக நான் என்றும் இருந்ததில்லை.
உலக நாகரிகத்தில் நான் மதிக்கும் பெரும் நடிகர்கள் அனைவருமே அப்படிப்பட்டவர்கள்தான். அப்படிச் செயல்படும் ஆசை சுந்தர ராமசாமிக்கும் இருந்தது. ஜே.ஜே சிலகுறிப்புகளில் அவர் ஆதர்சமாக முன்வைக்கும் ஜே.ஜே, எம்.கெ.அய்யப்பன் இருவரும் அப்படி செயல்பட்டவர்கள்தான். ஆனால் த்ரிஷாவால் அப்படிச் செயல்படக்கூடவில்லை. காரணம் ஒன்று அவரது சம்பளம். இரண்டு, அவரது காலகட்டம் நாகரிகத்தை ஓர் அடிப்படைவாதமாக அணுகிய பெண்ணிய யுகம் என்பது.

இளைய தளபதி விஜய்க்கு முன்னுதாரணமாகக் கொள்ளப்பட்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவரது மாணவர் தனுஷ் ஆகியோரை நான் நன்கறிவேன். சுந்தர ராமசாமி ‘அழகிய தமிழ்மகன்’. அவர் தமிழில் சுறா போல் இருந்தவர். அவருக்கு தமிழிலக்கியமே ‘ஆடுகளம்’. சு.ரா., கண்ணன், நான் – ஆகியோர் ‘மூன்று’. அவரின் ‘சீடன்’ நான்.

ஆனால் நான் சைட் அடித்தவற்றை வெற்றுப்பார்வைகளாக முன்வைப்பதில் எனக்கு ஆர்வமில்லை. அதை ஒருபோதும் ஆண் செய்யக்கூடாது. அந்த அறிதல்கள் த்ரிஷாவை எப்படி விளக்குகின்றன என்று மட்டுமே அவன் யோசிக்கவேண்டும். இந்தப் பதிவுகளில் நான் அதற்காகவே முயல்கிறேன். என் வில்லங்கங்கள் எவையும் வெறும் தனிப்பட்ட அபிப்பிராயங்களாக இல்லை. அவை சுந்தர ராமசாமி கொண்டே வில்லங்கமாகும் என்பதை வாசகர் கவனிக்கலாம்.

என் ஆற்றல் முழுமையைக்கொண்டும் த்ரிஷாத்தருணங்களைப் பற்றிச் சிந்திக்கிறேன். தனித்தனியாக நான் கற்றறிந்த உடலியல், பொருளியல், மெய்யியல்கூறுகள் ஆகியவற்றை நடைமுறைசார்ந்து ஒரே புள்ளியில் தொகுத்துக்கொள்ள இவை உதவுகின்றன. வாசகர்கள் தங்கள் த்ரிஷாவின் தருணங்களை வெள்ளமென ஓடிச்செல்லும் ஃபிலிம் பெருக்கில் கவன ஒழுக்கில் ஒரு துளியாக நிறுத்தி முழுமைநோக்குடன் அணுக அவை உதவுகின்றன என்றே நினைக்கிறேன்.

இந்த வகையான த்ரிஷா, சுரா உரையாடல் என்பது நம் சமூகத்தில் மிகமிகக்குறைவாகவே நிகழ்கிறது. இத்தகைய ஒரு விவாதக்களத்தின் அடுத்தபடியாகவே நாகரிகம் நிகழமுடியும். அவ்வாறு விரிந்த இலக்கிய – சினிமா – பெண்ணிய விவாதத்தின் ஒரு பகுதியாக நிகழாமல் வெறுமே நாகரிக பிரதிபலிப்பு நிகழும் என்றால் அது நாகரிக உத்திகள் பற்றிய ரசனையாகவே முடியும். த்ரிஷாவுடன் இயைபு கொள்ளாது. ஒரு கட்டத்தில் வெறுமே சமகால அன்னிய நாகரிகங்களை அசட்டுத்தனமாக நகலெடுப்பதில் முடியும். அதற்கு ஏராளமான உதாரணங்கள் தமிழில் உண்டு.

ஆகவே சுந்தர ராமசாமியைத் தொட்டுக் கொள்வதன் மூலம் நாகரிகத்தை அமர்த்துவதற்கான பீடத்தை உருவாக்குகின்றன என்று சொல்லலாம். இவை எல்லாமே முடிவில் நாகரிகம் நோக்கியும் மெய்யியல்நோக்கியும்தான் வந்து சேர்கின்றன. இவ்விவாதங்களின் மூன்றாவது பயன் என நான் நினைப்பது இதையே.

இந்த ஸ்பரிசங்கள் முற்றிலும் இணையத்தளத்தில் நிகழ்பவை. இவற்றை உய்த்துணர்வதில் என்னுடைய கலைசார்ந்த நுண்ணுணர்வு பெரும்பங்களிப்பாற்றுகிறது. ஆகவேதான் இவை ஓர் வலைஞனின், பரபரப்பாளனின் முடிவுகளை விட ஒரு படி மேலானவை என்கிறேன். எங்கோ ஓர் இடத்தில் இந்த சுரா நேம் டிராப்பிங்கில் என் அகம் சொல்லில்லாமல் திகைத்துவிடும். அங்கிருந்துதான் நான் என் அறம் புனைகதைக்கான தொடக்கத்தைப்பெற்றேன்.

இந்த சுய எல்லை அறிதல் இத்தகைய தொடுதல்களில் ஈடுபடுபவர்களுக்கு அவசியம். தமிழ் ஆண்களில் மிகப்பெரும்பாலானவர்களுக்கு நாகரிகத்துக்கு அப்பால் அடிப்படை நாசூக்கு கூடத் தெரியாது. நாகரிகமே ஒரு எளிய கைப்பழக்கம் என்பதற்கு அப்பால் தெரியாது. அவர்கள் என்னுடைய சு.ரா. தொடுதல்களைக் கண்டு திகைப்படைவதை என்னால் புரிந்துகொள்ளமுடிகிறது. த்ரிஷாவை அவர்களுக்குப் பரிந்துரைக்க மாட்டேன். அவர்களிடம் ஒருபோதும் சுந்தர ராமசாமி தொடுதல்களுக்கு வரவேண்டாம் என்றே சொல்வேன். எறும்பு ஊறுகிறது என சர்க்கரையை நோக்கி எலி ஊர்ந்தால் கடித்துவிடும்.

தொடர்புள்ள பதிவுகள்:
1. ஆண்களின் கண்கள்…
2. ஏன் விவாதிக்கிறேன்

ஜெமோ எஃபெக்ட்: படிப்பதில் எல்லாம் வெண்முரசு

Benji_Chinelo_Short_Story_Fiction_Red_New_Yorkerநியு யார்க்கரில் சினேலோ (Chinelo Okparanta) எழுதிய ”பென்ஜி” கதை வாசித்தேன். நாற்பதுகளைத் தாண்டிய பின்னும் மனைவியைத் தேடிக் கொண்டிருக்கும் குள்ளமாய், பணக்காரனாய், அம்மா கோந்தாக இருக்கும் ஆப்பிரிக்கனை பற்றிய கதை. மூன்று முக்கிய கதாபாத்திரங்கள். அம்மா, குள்ளப் பையன், அம்மாவின் புதுத் தோழி. நடுநடுவே வீட்டில் வேலைப் பார்க்கும் தோட்டக்காரரும், சிப்பந்திகளும் வந்து போகிறார்கள்.

பத்து… பன்னிரெண்டு வருடக் கதையை சிறுகதையில் கொடுக்கிறார். அம்மாவிற்கும் தோழிக்கும் நடுவே நடக்கும் உரையாடல், தோழிக்கும் பையனுக்கும் உரையாடல், கூடவே நிறைய சம்பவங்கள் என அமைதியாக நகர்கிறது. நைஜீரியா அறிமுகமாகிறது. முடிவெல்லாம் ஊகிக்க முடிந்தாலும் மனிதர்களின் குணாதிசயமும் சாமர்த்தியமும் சமரசமும் சுவாரசியமாக்குகிறது.

வெண்முரசு வாசித்து வரும் சமயத்தில் இந்தக் கதையும் வாசித்ததால், அந்தத் தோழி கதாபாத்திரத்தை சத்தியவதிக்கு ஒப்பிட்டுப் பார்த்தேன். பணக்கார நாற்பதுவயசுக்காரனை பீஷ்மராக வைத்துக் கொள்கிறேன். மகாபாரதத்திற்கு இப்படி ஒரு முலாம் பூசிப் பார்த்தால் மகாபாரதத்தின் சூட்சுமங்களை இன்னும் வெளிப்படையாக எழுத்தாளரும் விவரிக்கலாம். அந்த கதாபாத்திரங்களின் நிர்ப்பந்தங்களையும் நிராசைகளையும் வாசகரும் எளிதில் அணுகலாம்.

கதையில் இருந்து..

”பணம் போதலை போதவில்லையென் சிலர் எப்பொழுதும் புலம்பிக் கொண்டே இருப்பார்கள். அப்படி அலட்டுபவர்களிடம்தான் பணம் கொட்டிக் கிடக்கும். அல்லது பணம் குறைவாக இருப்போர்தான் செல்வச்செழிப்பில் இருப்பது போல் பாவ்லா காட்டுகிறார்கள் எனலாம். இந்த இரண்டு வர்க்கத்தில் அவள் எந்த ரகம்?”

கனடாவில் கதாசிரியர் ஜெயமோகன் உரை: தமிழ் சினிமாவும் ஹாலிவுட் திரைப்படங்களும்

பேசியவரின் பதிவு: திரைப்பட விழா » எழுத்தாளர் ஜெயமோகன்

உரையில் சொன்ன நான்கு மையக்கருத்துக்கள்.

1. தமிழ் வணிகசினிமா பற்றிய ஒரு இளக்காரமான பார்வை பொதுவாக அறிவுஜீவிகளிடம் உள்ளது. என்னிடமும் இருந்தது. ஆனால் உலகமெங்கும் உள்ள வட்டாரசினிமாக்களை ஹாலிவுட் சினிமா முற்றாக அழித்து அம்மக்கள் தங்களுக்குள் பேசிக்கொள்ளும் வெகுஜன ஊடகமாக சினிமா அமையாமல் ஆக்கிவிட்டிருக்கிறது. அந்த அபாயத்தை சமாளித்து இங்கே தமிழ் வணிகச்சினிமா வெற்றிகரமாக இருப்பதே ஒரு பண்பாட்டுச்சாதனை. அது,தொடர்ச்சியான ஃபீட் பேக் மெக்கானிசம் மூலம் உருவாக்கப்பட்டது. ஆகவே தமிழ்ச்சமூகத்தின் சராசரியால் உருவாக்கப்பட்டது அதன் தரம்.

2 இக்காரணத்தால் தமிழில் சராசரிக்கு மேலான ஒரு தளத்தில் படங்கள் வரமுடியவில்லை. அப்படி ஒரு படத்தை உருவாக்கும் முயற்சிகள் பல நடக்கின்றன. அதன்விளைவாக உருவான ஒன்றே குறும்பட இயக்கம். அதற்குப் பொருளியல் சுமை இல்லை என்பதனால் அது சுதந்திரமாக இயங்க முடியும் என்ற நிலை இருந்தது. ஆனால் நடைமுறையில் அது வெற்றியா என்ற தயக்கம் இருக்கிறது. ஆரம்பத்தில் குறும்படங்கள் மீது இருந்த எதிர்பார்ப்பு இல்லை இப்போது.

3 . காரணங்கள் இரண்டு. இந்தப் படங்களிலேயே அவை தெரிகின்றன. ஒன்று இலக்கியவாசிப்போ, அறிமுகமோ இல்லாதவர்களால் இப்படங்கள் எடுக்கப்படுகின்றன. ஆகவே கதைக்கருவிலும் வாழ்க்கை அவதானிப்புகளிலும் ஒரு முதிர்ச்சி இல்லை மிகச் சாதாரணமான கதைகளைச் சாதாரணமாக எடுக்கிறாகள். இந்தக்குறும்படங்களின் கதைகளைக் குமுதம் கூட வெளியிடுமா என்பது சந்தேகமே. பெரும் சிறுகதைச்சாதனைகள் நிகழ்ந்த ஒரு மொழியில் இத்தகைய படங்கள் வருவதை நாம் ஒரு சரிவு என்றே நினைக்கவேண்டும். இரண்டாவதாக இப்படங்கள் குறைந்த நேர அளவுள்ள, சிறிய சட்டகம் கொண்ட படங்கள். இதற்கான ஒரு திரைமொழி , திரைக்கதை வடிவம் உருவாக்கப்படவேண்டும். ஆனால் பெரிய படங்களின் அதே திரைமொழி, அதே திரைக்கதை உத்தியில் இவை எடுக்கப்படும்போது பார்வையனுபவம் சிறப்பாக அமைவதில்லை.


ஏறத்தாழ முப்பது பேர் பார்வையாளர்கள். மூன்று நபர்கள் கொண்ட ஜூரி.

தமிழ் வணிக சினிமாவை நிராகரித்துப் பேச முடியாது. தமிழ்ப்படங்கள் என்பது ஒரு பண்பாட்டு உரையாடல். அவை சராசரி மனிதர்களுடன் பேசக்கூடியவை. ஆவரேஜ் ஆளுக்காகத்தான் படமெடுக்க முடியும். எதிர்காலத்தில் கலைப்படங்கள் காலூன்றலாம். ஆனால், இன்றைக்கு அந்த நிலை கிடையாது.

பகுதி ஒன்று

* உணவு: பெரிய சாப்பாட்டு மேஜை. அயிரம் பேர் உண்ணக் கூடிய விருந்து போன்ற அயிட்டங்கள் காட்டப்பட வேண்டும். பார்வையாளனுக்கு பசியாக இருக்கலாம். கல்யாண சாப்பாடு தேவையிருக்கலாம். அதைத் தீர்க்க வேண்டும்.

* ஆடை, அணிகலன்: நாயகி தன்னுடைய டிரெஸரைத் திறந்து நூற்றுக்கணக்கான புடைவையை அலசுவாள். அவற்றில் இருந்து ஒன்றைத் தேர்ந்தெடுப்பாள். சினிமா பார்ப்பவனுக்கு அத்தனை புடவை எடுத்து தர முடியாது. பார்ப்பவளுக்கு இந்த மாதிரி சாய்ஸ் இருப்பது போல் கற்பனை தருவதற்கு சரோஜாதேவியும் ஜெயலலிதாவும் இவ்வ்வாறு செலக்சன் செய்ய வேண்டும்.

* இடம், லொக்கேஷன்: ஒவ்வொரு ஊரில் ஒவ்வொரு கலாச்சாரம். அனைத்து ஊர்களிலும் பிடிக்குமாறு புரியுமாறு எடுக்க வேண்டிய தேவை இருக்கிறது. சென்னையில், சின்னாளப்பட்டியில், சிகாகோவில், ஸ்கார்பரோவில் என்று எல்லா இடத்திற்கான சராசரி விருப்பங்களை உள்ளடக்கி எடுக்கிறார்கள்.

* ரிலாக்ஸேஷன்: இரண்டே கால் மணி நேரம் படம் ஓட வேண்டும். சினிமாவிற்கு கிளம்புவதற்கு பெரிய விஷயம். அந்தளவு சிரமப்பட்டு வருபவர்கள், டக்கென்று எண்பது மணித்துளிகளில் முடித்து அனுப்ப முடியாது.

* வணிக சினிமா: காதல் இல்லாத தமிழ் சினிமா எடுபடாது; எடுக்கணும்னு அவசியம் இல்ல. தமிழகச் சூழலில் காதல் செய்யும் வாய்ப்பு இல்லாததால் ஈடேற்றம் செய்வதற்கு இளமையும் காதலும் சினிமாவில் நிறைவேற்றுகிறது.

பகுதி இரண்டு

* சிறு பத்திரிகைக்காரன்: நா பார்த்தசாரதி, அகிலன், கல்கி எல்லாம் வணிக எழுத்தாளர்கள். அவர்கள் மட்டுமே புகழ் பெற்று விளங்கிய காலம் உண்டு. இன்று வெகுசன இலக்கியம் அல்லாதவர்கள்தான் புகழ் பெற்றவர்களாக இருக்கிறார்கள். நான் சிறுபத்திரிகைக்காரன். இன்று மைய எழுத்தாக விளங்குகிறேன். அது போல் குறும்படக்காரர்களும் மெயின் நீரோட்டத்தை நிர்ணயிப்பவர்களாக ஆகலாம்.

* இலக்கிய வாசிப்பு: கதைகளை தேர்தெடுக்கும்போது எண்ணங்களை மையமாக வைக்காமல், சிறப்பான சிறுகதைகளை எடுத்துக் கொள்ளலாம்.

தொடர்புள்ள தற்கால செய்தி: Manushyaputhiran vs Arivumathy on S Ramakrishnan vs Kamalahasan: Marketing Kaliyugam Movie Songs

கலியுகம் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் முதலில் பேசிய கவிஞர் அறிவுமதி, மனுஷ்யபுத்திரன் குங்குமத்தில் வழக்கு எண் படத்தை துவைத்து காயப்போட்டுவிட்டதாக குறைபட்டுக் கொண்டார். இதுபோல் மனுஷ் போன்ற இலக்கியவாதிகளே செய்தால், அடுத்து வரும் தயாரிப்பாளர்களும் வர மாட்டார்கள்.. இது தமிழ்ச் சினிமா துறையின் வளர்ச்சியையே பாதிக்கும். அது மிக அருமையான படம் என்று சொன்னார்.

Tamil Books Wishlist – 2012 தமிழ்ப் புத்தகங்கள்: ஆலோசனை (aka) விழைப்பட்டியல்

சமீபத்திய புத்தகங்களில் எதை வாங்க வேண்டும் என்று ஆசை பிறக்கிறது?

என்னிடம் இருக்கிறது தவிர, எந்த நூல்களை தருவிக்க ஆர்வம் கிடைக்கிறது?

இணையத்தில் உள்ள புத்தகக் கடைகளில் மேய்ந்தால் எவை ‘என்னை வாங்கு’ என்று அழைக்கிறது?

இதில் பிரபலமான எழுத்தாளர்கள் நிச்சயம் இருப்பார்கள்; தவிரக்க வேண்டிய நூலாசிரியர்கள் தவற விடப் பட்டிருப்பார்கள்.

பட்டியல்களுக்கேயுரிய விடுபடுதல்களும் இருக்கலாம்.

உங்கள் பரிந்துரையில் சமீபத்திய நூல் வரவுகளில் முக்கியமானவை எவை?

முதலில் நூலகம் தொடர்பான சில வலையகங்கள்:

  1. நியூ ஹொரைசன் மீடியா – கிழக்கு – காமதேனு – https://www.nhm.in/shop/home.php
  2. சென்னை ஷாப்பிங் – http://www.chennaishopping.com
  3. உடுமலை –http://www.udumalai.com/
  4. தினமலர் புத்தக விமர்சனம் + அறிமுகம்: http://books.dinamalar.com/index.asp
  5. நம்ம கோடம்பாக்கம்: http://600024.com/store/books/
  6. நூல் உலகம்.காம் – http://www.noolulagam.com/
  7. டிஸ்கவரி புக் பேலஸ்: http://discoverybookpalace.com/
  8. நியு புக் லான்ட்ஸ் – http://www.newbooklands.com/new/home.php
  9. தமிழ் புக்ஸ் ஆன்லைன்: http://www.tamilbooksonline.in/booklist1.php
  10. கன்னிமரா பப்ளிக் லைப்ரரி – http://connemara.tnopac.gov.in/cgi-bin/koha/opac-main.pl
  11. சிங்கப்பூர் நூலகம் –http://catalogue.nlb.gov.sg/

இப்பொழுது என்னுடைய பரிந்துரை புத்தக லிஸ்ட்:

1. என்னைத் தீண்டிய கடல் By வறீதையா — வகை : கட்டுரைகள்
2. கவிதை என்னும் வாள்வீச்சு By ஆனந்த் — வகை : கட்டுரைகள்
3. கரை தேடும் ஓடங்கள் By ராமச்சந்திரன் உஷா
4. நாமார்க்கும் குடியல்லோம் By கரு.ஆறுமுகத்தமிழன்
5. எங்கள் நினைவில் சு.ரா. (குடும்பத்தாரின் நினைவுகள்)
6. தாயார் சன்னதி By சுகா
7. தோள்சீலைக் கலகம் : தெரிந்த பொய்கள் தெரியாத உண்மைகள் By கணேசன்
8. சினிமா அனுபவம் (அடூர் கோபாலகிருஷ்ணன்) By அடூர் கோபாலகிருஷ்ணன்
9. கடிகாரம் அமைதியாக எண்ணிக்கொண்டிருக்கிறது By அ.முத்துலிங்கம்
10. ஒன்றுக்கும் உதவாதவன் By அ.முத்துலிங்கம்
11. நளிர் — நாகார்ஜுனன்
12. சொல்லாததும் உண்மை (பிரகாஷ்ராஜ்)
13. முக்குவர்: வரலாறு, வாழ்வியல், எதிர்காலம் By வறீதையா கான்ஸ்தந்தின்
14. மயிலிறகு குட்டி போட்டது By பிரபஞ்சன்
15. எழுத்தென்னும் நிழலடியில் By பாவண்ணன்
16. அமெரிக்காவில் மூன்று வாரம் By ம.பொ.சிவஞானம்
17. இலக்கிய ஆராய்ச்சி காலாண்டு இதழ் ( பாகம் – 1 ) By இந்திரஜித்
18. பிறக்கும் ஒரு புது அழகு By காலச்சுவடு கண்ணன்
19. காலத்தைச் செரிக்கும் வித்தை By குட்டி ரேவதி
20. ஓவியம் கூறுகளும் கொள்கைகளும் By புகழேந்தி
21. புனைவின் நிழல் By மனோஜ்
22. நான் கண்ட ரஷ்யா By அகிலன்
23. பல நேரங்களில் பல மனிதர்கள் By பாரதி மணி
24. அடடே! By மதி கார்ட்டூன்கள்
25. உவன் இவன் அவன் By சந்ரு
26. ஆதி திராவிடன் இதழ்த் தொகுப்பு
27. அக்கிரகாரத்தில் பெரியார் By பி.ஏ.கிருஷ்ணன்
28. நம் தந்தையரைக் கொல்வதெப்படி By மாலதி மைத்ரி
29. இருப்பும் விருப்பும் By கி.பி. அரவிந்தன்
30. கர்ப்பமாய் பெற்ற கன்னிகள் By அ.கா.பெருமாள்
31. கிருஷ்ணன் நம்பி ஆக்கங்கள் By தொகுப்பாசிரியர்: ராஜமார்த்தாண்டன்.
32. அம்மாவின் ரகசியம் By சுநேத்ரா ராஜகருணாநாயகதமிழில் :- எம். ரிஷான் ஷெரீப்
33. அனுபவங்களின் நிழல் பாதை By ரெங்கையா முருகன் ,வி .ஹரி சரவணன் — வகை : குறுநாவல்கள்
34. நஞ்சையில நாலு மா By சுந்தரபுத்தன்
35. விழா மாலைப் போதில் By அசோகமித்திரன்
36. குருதியில் நனையும் காலம் By ஆளுர் ஷாநவாஸ் (முன்னுரை: ஆ.மார்க்ஸ்)
37. எழுதுவதெல்லாம் எழுத்தல்ல By பாமரன்
38. ப்ளீஸ்! இந்தப் புத்தகத்தை வாங்காதீங்க! By கோபிநாத்
39. சினிமாவின் மூன்று முகங்கள் By சுதேசமித்திரன்
40. எசப்பாட்டு By இந்தியா டுடெ தமிழ்ப் பதிப்பின் எக்ஸிக்யூட்டிவ் எடிட்டர் ஆனந்த் நடராஜன்
41. கலி புராணம் By மு.தளையசிங்கம்
42. இராசேந்திரசோழன் குறுநாவல்கள்
43. பேய்க்கரும்பு By பாதசாரி
44. சனங்களின் சாமிகள் கதை By அ.கா.பெருமாள்
45. தெரிந்த கோவை தெரியாத கதை By கவியன்பன்.கே.ஆர்.பாபு
46. இவன்தான் பாலா By பாலா
47. சுண்ணாம்பு கேட்ட இசக்கி By அ.கா.பெருமாள்
48. நான் நீ மீன் By கலாப்ரியா (கவிதை)
49. முதல் 74 கவிதைகள் By யுவன் சந்திரசேகர்
50. சூரியன் தகித்த நிறம் By பிரமிள்
51. மேன்ஷன் கவிதைகள் By பவுத்த அய்யனார்
52. எனது மதுக்குடுவை By மாலதி மைத்ரி
53. திரும்பிச் சென்ற தருணம் By பி.ஏ.கிருஷ்ணன்
54. பலார்ஷாவிலிருந்தும் நாக்பூருக்கு By தெலுங்கில் ஸ்ரீ விரிஞ்சி (தமிழில் :- கெளரி கிருபானந்தன்.)
55. களவு போகும் புரவிகள் By வேணுகோபால்
56. பூரணி பொற்கலை By கண்மணி குணசேகரன்
57. தஞ்சை ப்ரகாஷ் கதைகள் By காவ்யா சண்முகசுந்தரம்
58. மரணத்தின் வாசனை By அகிலன்
59. மயில்வாகனன் மற்றும் கதைகள் By அஜயன் பாலா
60. மிதமான காற்றும் இசைவான கடலலையும் By தமிழ்ச்செல்வன்
61. லீலை By சுகுமாரன்
62. பிரமிள் படைப்புகள் (முழுத் தொகுப்பு)
63. வெள்ளி விரல் By ஆர்.எம்.நெளஸாத்
64. நான் கொலை செய்யும் பெண்கள் By லதா (காலச்சுவடு)
65. நகரத்தில் மிதக்கும் அழியா பித்தம் By ம.தவசி
66. பதுங்குகுழி By பொ.கருணாகரமூர்த்தி
67. ஒரு பனங்காட்டுக் கிராமம் By மு.சுயம்புலிங்கம்
68. இலட்சுமணப்பெருமாள் கதைகள்
69. கருப்பாயி என்கிற நூர்ஜஹான் By அன்வர் பாலசிங்கம்
70. தொலைகடல் By உமா மகேஸ்வரி
71. லயோலா என்ற பெரும்பாம்பின் கதை By சுகுமாரன்
72. கனவுகளுடன் பகடையாடுபவர்கள் By ஜி.குப்புசாமி (மொழிப்பெயர்ப்பு )
73. என் தாத்தாவுக்கொருதூண்டில் கழி By ஜெயந்தி சங்கர்
74. அப்பாஸ்பாய் தோப்பு By எஸ்.அர்ஷியா
75. லண்டன் டயரி By இரா.முருகன்
76. ஆறா வடு By சயந்தன்
77. எட்றா வண்டியெ By வா.மு.கோமு
78. ராஜூ ஜோக்ஸ் (கார்டூன் நகைச்சுவை)
79. இதழாசிரியர்கள் மூவர் By விக்கிரமன்
80. அதிமனிதர்களும் எதிர்மனிதர்களும் By பிரேம்
81. கரித்தாள் தெரியவில்லையா தம்பீ… By பெருமாள் முருகன்
82. உடைந்த மனோரதங்கள் By பெருமாள் முருகன் (கு.ப.ரா. பற்றிய விமர்சனக் கட்டுரைகளின் தொகுப்பு)
83. சிலுவையின் பெயரால் By ஜெயமோகன்
84. கர்நாடக சங்கீதம் : ஓர் எளிய அறிமுகம் By மகாதேவன் ரமேஷ்
85. சுபமங்களா மொழிப்பெயர்ப்புக் கதைகள்
86. சங்க இலக்கியத்தில் பொது மக்கள் By முனைவர் கு.ராச ரத்தினம்
87. கோப்பை தேநீரும் கொஞ்சம் கவிதையும் By ஹரி கிருஷ்ணன்
88. டயலாக் By ஜூனியர் விகடன்
89. தமிழர் சமயம் தமிழர் வேதம் தமிழகத்துக் கோயில்கள் By யு.சுப்ரமணியன்
90. மதன் ஜோக்ஸ்
91. காவல் தெய்வங்கள் ( காலங்களை கடந்தும் நிக்கிற கிராம தேவதைகள் வழிபாடு ) By பி.சுவாமிநாதன்
92. சுதந்திரப் போரில் தமிழ் சினிமா By அறந்தை நாராயணன்
93. நான் எப்படிக் கம்யூனிஸ்ட் ஆனேன்?..வி.பி.சிந்தன் (இளையபாரதி )
94. :நேரு வழக்குகள் – ஆசிரியர் : ஞாலன் சுப்பிரமணியன்
95. சகுனம் By எஸ்.வி.ராமகிருஷ்ணன்
96. ஆ மாதவன் கதைகள்
97. ஒரு புகைப்பட நிருபரின் அனுபவங்கள். : ஆசிரியர்: மதுரை எஸ்.எஸ். ராமகிருஷ்ணன்
98. சூப்பர் ஸ்டார் சொன்ன சூப்பர் கதைகள் : ஆசிரியர் : சபீதா ஜோஸப்
99. சில நேரங்களில் சில அனுபவங்கள் (பாகம் 1,2) : ஆசிரியர் : பாக்கியம் ராமசாமி
100. உரையாடலினி By   அய்யனார் விஸ்வநாத்
101. கு.அழகிரிசாமி கடிதங்கள் (கி.ரா.வுக்கு எழுதியது) By கி. ராஜநாராயணன்.
102. தொலைக்காட்சி விளம்பரத்தின் உள்முகங்கள் By கழனியூரன்
103. ஆறுமுகசாமியின் ஆடுகள் By சா.கந்தசாமி
104. புதுமொழி 500 – ரவிபிரகாஷ் (விகடன் பிரசுரம்)
105. மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்கள் – தொகுப்பு: பி.இ.பாலகிருஷ்ணன்
106. விட்டில் – சமகால அரசியல் பகுப்பாய்வு By இராகவன் (காலச்சுவடு பதிப்பகம்)
107. ஈழத்து நாட்டார் பாடல்கள் By ஈழவாணி
108. தமிழினி ஒரு வருட உள்நாட்டு சந்தா

இப்பொழுது உங்களுக்கான வினாக்கள்:

2012-ல் என்ன வாங்கினீர்கள்?

முக்கியமாக புனைவுகளில் சுவாரசியமானவை எவை?

புதிய புத்தகங்களில் தங்களைக் கவர்ந்த கதாசிரியர் யார்?

வெப்-உலகம்: நேர்காணல் – எஸ். ராமகிருஷ்ணன்

சந்திப்பு : ஆர். முத்துக்குமார்

கேள்வி : `விஷ்ணுபுரம்’ நாவல் குறித்த உங்கள் `contention’ என்ன?

எஸ். ரா : முதலில் அந்தத் தீமில் எனக்கு ஈடுபாடு இல்லை. காலம் என்பது சில பல வஸ்துக்களால் தீர்மானிக்கப்படுவதில்லை. ஒவ்வொரு காலமும் ஒரு `மனவளர்ச்சி’ கொண்டது. குறிப்பிட்ட பிரத்யேகமான பய உணர்ச்சி கொண்டது. ஒரு ஆதிகுடி குகைவாசிக்கு பகல் / இரவு என்பது தெரியாது. அவனுக்கு பொருள் தோன்றுகிறது / மறைகிறது அவ்வளவே. ஆனால் பகல் / இரவின் விளைவுதான் தோன்றுதல் மறைதல் என்பது எப்படி எழுதப்படுவது?

ஒரு கட்டத்தை எழுத்தில் நாவலாகக் கொண்டுவரும் போது அதன் `மனம்’ எப்படி புரியப்படவேண்டும் என்பதில்தான் பிரச்னை இருக்கிறது. இயற்கை மதங்கள் பல்வேறு பயங்களால் உருவானதே. தற்போது இருக்கும் மதங்கள் அதைப் `பயன்பாடா’ மாற்றிக் கொண்டது. இப்ப-நம்ம பாரம்பரியத்துல ஏகப்பட்ட பக்தி இலக்கியம்-பாசுரம், எல்லாம் இருக்கின்றன. ஆனால் நாயன்மார்களுக்கோ-ஆழ்வாக்ளுக்கோ அது ஒரு மார்க்கம், ஞான மார்க்கம், அல்லது ஏதோ ஒன்றை அடைவதற்கான ஒரு கருவி. ஆனால் நமக்கு அது இன்று ஒரு கவிதை மட்டுமே. திருப்பாவை பாடல்கள் இன்னிக்கு நாம கேட்டா அதன் கவிதைத் தன்மையை மட்டும்தான் எடுத்துக்குறோம் அவங்களோட வாழ்வியலுக்குள்ள நாம் போகமுடியாது.

`விஷ்ணுபுரம்’ நாவல் பழைய தத்துவம் / இலக்கியம் / வாழ்வு போன்றவைகளை நவீன காலக்கட்டப் பார்வையில் அணுகுகிறது. மேலும் பல இடங்கள் `சினிமாட்டிக்கா’ இருக்கு, இப்ப நாம யானைய பார்த்திருக்கோம், அதுக்கு மதம் பிடிக்கும்னு கேள்விப்பட்டுருக்கோம், தமிழ் இலக்கியத்துல உதயணன் கதையில் தான் யானை ஊரையே துவம்சம் செய்யும்னு கேள்விப்பட்டிருக்கோம், இவர் கதைல ஒரு யானை ஒரு ஊரையே காலி செய்கிறது. இது, சினிமாடிக் தனமாகும். நமக்கும் யானைக்குமான உறவுகள் அப்படி இல்லையே. மேலும் அவரால் `பவுத்தம்’ சம்பந்தப்பட்ட தீவிரத் தேட்டத்தை வைக்க முடியவில்லை. பவுத்த நபர்கள் வருகிறார்கள். பவுத்த தர்க்கம் இருக்கிறது. ஆனால் பவுத்த சாரம் இல்லை.

கேள்வி : அந்த நாவலின் முடிவில் வரும் `பிரளயம்’ என்ற `Apocalypse’ ஏற்புடையதா?

எஸ். ரா : மார்க்வெஸின் `நூறாண்டு காலத் தனிமை’ நாவலில் வரும் Apocalypse’ ஞாபகம் என்பதன் நாட்டியமாக இருக்கிறது. அந்தப்பகுதி நாவலையே வேறுவிதமாக வாசிக்க வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது. ஜெயமோகனின் நாவலில் அது ஒரு `condition’ என்பதாக வருகிறது. மேலும் நம் தத்துவ புராண மரபு பிறப்பு / இறப்பு , படைப்பு / அழிவு என்பதை தொடர்ச்சியானதாக சர்க்குலராகப் பார்க்கிறது. பிரம்மாவிற்கும் சிவனுக்கும் இதுதான் வேலை. இவர் கதையில் இது ஒரு `வீழ்ச்சி’ என்பதாக முன்வைக்கப்படுகிறது. `வீழ்ச்சி’ என்பது கிறித்தவ மத விவகாரம்.

கேள்வி : ஏன் இதுலயும் பிரளயத்துலேந்து `நீலி’ புறப்படுகிறாளே?

எஸ். ரா : கொஞ்சம் Tribes மரபு, கொஞ்சம் – ரிலிஜன் – மரபு இது எல்லாத்தையும் அப்படிஅப்படியே அடுத்தடுத்து வைக்கிறார். ஆனா `நீலி’ என்பது அவரது Nostalgia சம்பந்தப்பட்ட விஷயம். அவருக்கு `உக்கிரமான பெண்’ என்பது ஏதோ ஒரு விதத்தில் தேவைப்படுகிறது. அவருக்கு `உக்கிரம்’ மேல் ஒரு obsession இருக்கு.

கேள்வி : `விஷ்ணுபுரம்’ நாவலை ஒரு அழகியல் வேலைப்பாடாக ஏற்கிறீர்களா?

எஸ். ரா : நாவல் என்ற மிகப்பெரிய வகையினத்தில் `விஷ்ணுபுரம்’ நிச்சயமாக ஒரு முக்கியமான வேலைப்பாடுதான். ஆனால் ஒரு மரபார்ந்த மனம்தான் அதில் ஆப்ரேட் ஆகிறது. ஆனால் நடை மரபு ரீதியானதாக இல்லை.

கேள்வி : ஜெயமோகனின் `பின்தொடரும் நிழலின் குரல்’ நாவலின் கம்யூனிச எதிர்ப்பு களம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

எஸ். ரா : நமக்கு அறிமுகப்படுத்தப்பட்ட `கம்யூனிசம்’ வைத்துதான் நாம் அதை அறிந்து கொண்டுள்ளோம் :

மேலும் படிக்க —> வெப்-உலகம்

புதுமைப்பித்தனை புத்தகம் போட்டது யார்? காலச்சுவடு & ஆ.இரா வெங்கடாசலபதி x தமிழினி & வேதசகாயகுமார்

பதிவுகள்:

அ) துவக்கம் இங்கே: புதுமைப் பித்தன் படைப்புகள் செம்பதிப்பு : சில கேள்விகள் – கோபால் ராஜாராம்

1.  புதுமைப்பித்தன் படைப்புகள் -என் ஆய்வின் கதைஎம் வேதசகாய குமார்

2. புதுமைப்பித்தன் – கோபால் ராஜாராமின் கேள்விகளுக்கான பதிலும் இன்னும் பிற குறிப்புகளும் :: கண்ணன் (காலச்சுவடு ஆசிரியர்)

3. ‘அன்னை இட்ட தீ ‘ புத்தகத்தின் முன்னுரை :: ஆ. இரா. வேங்கடாசலபதி

4.  ஜெயகாந்தனின் இந்திய முற்போக்கு அழகியல் -1 | ஜெயமோகன்.in

ஜெயகாந்தன் மீதான இன்றைய நவீனத்துவ நோக்கை சுந்தர ராமசாமியை முன் ஏராகக் கண்டு வேதசகாய குமார் உருவாக்கினார் என்றால் அது மிகை அல்ல. பலகாலமாக வேதசகாய குமார் எழுதிய கட்டுரைகளுக்கு ஆதாரமாக அமைந்த அவரது [முனைவர்பட்ட ]ஆய்வுநூல் ‘புதுமைப்பித்தனும் ஜெயகாந்தனும் ‘ [தமிழினி பதிப்பகம் சென்னை] இக்கருத்துக்களை விரிவாக தொகுத்துக் காட்டுகிறது. அது முழுக்க சுந்தர ராமசாமியின் வரிகள் மேற்கோள்களாக நிரபியிருக்கின்றன.

தமிழின் தேர்ந்த விமரிசகர்களில் ஒருவரான எம்.வேதசகாய குமாரின் ஆய்வு நூல் இவ்வகையில் மிக பிழையான பார்வையை வெளிப்படுத்துகிறது. எந்தவித வரலாற்று போதமும் இல்லாமல் அன்று பிரபலமாக இருந்த வடிவ ஆய்வையே அடிப்படையாகக் கொண்டு துரதிருஷ்டவசமான இறுதி முடிவுகளுக்கு வந்து சேர்கிறது.

5. முதுநிலை ஆய்வுப்பேராசிரியர் கட்டுரையும், சில கேள்விகளும் :: K.ரவி ஸ்ரீநிவாஸ்

வேதசகாய குமாரின் முனைவர் பட்ட ஒட்டு மொத்த ஆய்வில் அவரது சுயமான பங்களிப்பு, அவரது சிந்தனைகளின் பங்கு என்ன என்ற கேள்வி எழுகிறது.அது எத்தனை சதவீதம் என்ற கேள்விக்கு யார் பதில் தரப்போவது யார் – ஜெயமோகனா இல்லை குமாரா ?

6. புதுமைப்பித்தன் இன்று… | jeyamohan.in

7. வேதசகாயகுமாரின் கலைக்களஞ்சியம் | செயமோகன்.in :: Encyclopedia Tamil Criticism

8. விரியும் கருத்துப் புள்ளிகள் :வேதசகாயகுமாரின் பண்பாட்டு விமரிசனங்கள். | [27- 9- 2009 அன்று நாகர்கோயில்வேதசகாயகுமார் 60 கூட்டத்தில் எழுத்தாளர் ஜெய மோகன் ஆற்றிய உரை

9. வேதசகாயகுமார் விழா | ஜெயமோஹன்.in

10. சொல்புதிது பற்றி… | எம்.வேதசகாயகுமார் எழுதிய [எம்.வேதா] நாய்களைப்பற்றிய ஒரு உருவகக் கதை சுந்தர ராமசாமியைப் பற்றியது என்று சொல்லப்பட்டு பெரும் பிரச்சாரம் கிளப்பப்பட்டது. [நாச்சார் மடத்து விவகாரங்கள்]

11. ஒரு முழுப் பூசணிக்காயும், சில சோற்றுப் பருக்கைகளும் :: K. ரவி ஸ்ரீநிவாஸ்

12. எம் வேதசகாயகுமார், ஆர்.எம் .சதக்கத்துல்லா / மற்றும் சொல்புதிது ஆசிரியர் குழு

அன்புள்ள திண்ணை ஆசிரியருக்கு ,

எஸ்.வேதா என்பது எஸ்.வேதசகாயகுமார் என்பதன் சுருக்கம். இப்பெயரில் நான் கதைகள் முன்பு எழுதியதுண்டு. இனியும் எழுதலாம் தனிப்பட்ட முறையில் இன்றைய அரசியல் சூழலைப்பற்றிய என் மனச்சோர்வையும் உயரிய மதிப்பீடுகள் என நான் பலகாலமாக நம்பியவற்றின் வீழ்ச்சியையும் சொல்கின்ற கதை ‘நாச்சார் மடவிவகாரங்கள் ‘ . அந்த வீழ்ச்சியை குறிக்க என் முன் தூலமாக உள்ள சொந்த அனுபவம் சார்ந்த உதாரணம் சுந்தர ராமசாமி .

சுந்தர ராமசாமி மீது நான் கொண்ட குருசீட உறவுக்கு நீண்ட முப்பதுகால வரலாறு உண்டு. அவர் கல்வித்துறை மீது வைத்த கடுமையான விமரிசனங்களை உண்மையென நம்பி கல்வித்துறையுடன் கடுமையாக மோதி பலர்வெறுப்பையும் கோபத்தையும் சம்பாதித்தவன் நான். அதற்காக நான் அடைந்த இழப்புகள் சாதாரணமல்ல . வசந்திதேவியை மாபெரும் கல்வித்துறை சக்தி என்று சித்தரித்து அவர் எழுதிய நூல எனக்கு அதிர்ச்சி அளித்தது . வசந்தி தேவியையும் , சுந்தர ராமசாமி அப்படி எழுதியதற்கான காரணங்களையும் அறிந்த எனக்கு ஏற்பட்டது ஆழமான மனச்சோர்வு .

வசந்தி தேவியே பெரிய கல்வியாளர் என்றால்

  • நெ .து .சுந்தரவடிவேலு
  • வ .செ குழந்தை சாமி
  • வ .சுப மாணிக்கம்

போன்றவர்கள் என்ன குறைந்து விட்டார்கள் ? யாருக்காக இந்த ஆட்டத்தை ஆடினோம் ?

இது ஓர் உதாரணம்தான். வாழ்க்கையின் இந்தக் கட்டத்தில் வெற்றுப்பேச்சுகளால் ஏமாற்றப்பட்டவனாக உணர்கிறேன். அதேபோல நான் நம்பிய அரசியலிலும் என் ஏமாற்றம் பெரிது.

‘நாச்சார் மட விவகாரங்கள் ‘ கதை தொடங்கும் புள்ளி இதுதான். அது ஓர் அங்கதம். அக்கதை கதைகளுக்குரிய வழக்கப்படி வளர்ந்து மேலும் பல இடங்களை தொட்டுசெல்கிறது. இக்கதையை காலச்சுவடு அவர்கள் மீதானவிமரிசனமாக காட்டும் முன்புவரை எவருக்குமே அப்படி படவில்லை என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன் . திண்ணையில் கூட விமரிசனம் வந்ததை படித்தேன்.

நவீனத்துவ மரபைச்சேர்ந்த கதைகளின் அழகியல் கடுமையும் தீவிரமும் கொண்டதுதான். உதாரணமாக சுந்தர ராமசாமியின் நடுநிசி நாய்கள் என்ற தொகுப்பில் உள்ள கவிதைகளையே எடுத்துக் கொள்ளலாம். இந்தக் கதையேகூட ‘வானம் வந்திறங்கியதும் இளைப்பாற ஒரு கட்டில் செய்தேன் ‘ என்ற பசுவய்யா கவிதையின் மறுவடிவம்தான். வந்திறங்கிய வானம் ‘கழிப்பறை எங்கே ? ‘ என்று கேட்பதுதான் அக்கவிதை. என் கதையை வேண்டுமென்றே திரித்து சிக்கல்களை உருவாக்க சிலர் முயல்வது இலக்கியத்துக்கு ஆபத்தானது . அப்படிப் பார்த்தால் சுந்தர ராமசாமி எழுதிய ‘ நடு நிசி நாய்கள் ‘ , ‘நாய்கள் ‘ , ‘ ஆந்தையை பார்த்து நாளாச்சு ‘ போன்ற கவிதைகள் எல்லாம் யாரைப்பற்றியவை என்று நாம் கேட்க வேண்டி வரும். அவை கசடதபற என்ற இலக்கியக் குழுவினரையும் க. நா. சுப்ரமணியத்தையும் குறித்தவை என்று இலக்கிய உலகில் அன்று பேசப்பட்டதுண்டு. ‘ஒரிஜினல் ஆந்தை ‘ என க நா சு பலகாலம் உள்வட்டத்தால் வசைபாடப்பட்டதும் , அவர் மிக மனம் வருந்தி பதினேழு வருடம் சுந்தரராமசாமியின் தொடர்பை துண்டித்திருந்ததும் நடந்தது. இது எனக்கு நன்கு தெரிந்ததே. அப்படி பொருள் கொண்டால் எந்த இலக்கியமும் ஆபத்தானதாக மாறிவிடும்.

படைப்பாளிகள் மீதான வன்முறை பற்றி காலச்சுவடு பேசுகிறது. காலச்சுவடுதான் அவதூறுகளுக்கென்றே ஒரு பகுதியை ஆரம்பித்த முதல் சிற்றிதழ் . அவதூறுகளை தமிழிலேயே அதிகமாக வெளியிட்ட இதழ். நீதிமன்றம் செல்ல வசதியாகவா அதில் அவதூறுகளை வெளியிட்டனர் ? உதாரணமாக ஆர் பி ராஜநாயகம் எழுதிய கட்டுரையையே சொல்லலாம். அதை தொடர்ந்து கண்ணன் எழுதிய குறிப்பில் ‘மற்ற நண்பர் ‘ என்று சொல்லி என் சாதியைப்பற்றி தேரோட்டி என உள்ளர்த்தம் வைத்து நக்கல் செய்து எழுதிய இதழ் அது. தெரியாமல் கேட்கிறேன், சுந்தர ராமசாமியை விமர்சிக்கும்போதுமட்டும்தான் படைப்பு வன்முறையாகிறதா ? கையெழுத்திட்ட மகாஜனங்களில் எத்தனைபேர் இவ்விஷயங்களை கண்டித்தார்கள் ? விஷத்தை நாசூக்காக உமிழ்ந்தால் அது வன்முறை இல்லையா ?

இலக்கியப் படைப்பு நன்றாக வரலாம், சரியாக வராமலும் போகலாம். அது எழுதுபவனின் திறனைப்பொறுத்த விஷயம். அதை இம்மாதிரி கொச்சைப்படுத்துவது நோய்க்கூறான மனநிலை .

தொடர்ச்சி

நான் எழுதிய ‘ நாச்சார்மடம் ‘ உண்மையில் மிக எளிமையான ஒரு கதை. அதில்பெரிதாக வசை ஏதும் இல்லை. அதன் தொடக்கம் என்னவாக இருந்தாலும் கடைசியில் நான் உத்தேசித்தது ராமர்கோவில் விஷயமும் வாஜ்பாயும்தான்.

சுந்தரராமசாமி எழுதிய வசைக்கவிதைகள் கதைகள் ஆகியவை தோண்டி எடுக்கப்பட்டு பேசப்படுகின்றன. புதிய காற்று பத்திரிகையில் சுந்தர ராமசாமி எழுதிய தனிநபர் வசைகளின் ஒரு பட்டியல்தரப்பட்டுள்ளது .

காலச்சுவடு அளித்த கோரிக்கைமனுவுக்கு பதிலாக தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் சார்பில் சுந்தர ராமசாமி நிகழ்த்திய கீழ்த்தரமான தனிநபர் தாக்குதல்களை பட்டியலிட்டு எழுதி காலச்சுவடுக்கு அனுப்பி அது பிரசுரிக்க மறுத்த கடிதத்தின் நகலும் எங்கும் கிடைக்கிறது.

புளியமரத்தின் கதையில் வரும் இசக்கி உண்மையில் நாகர்கோவிலில் உள்ள பி எஸ் மணி என்ற சிறு பத்திரிகையாளர்தான் என்ற செய்தியும், இது அக்காலத்தில்பெரிய பிரச்சினையாகி அடிதடி விளிம்புவரை போய் சக்கைபுளிக்கறி பயத்தால் கைவிடப்பட்டது என்பதும் எனக்கே இப்போதுதான் தெரிந்தது.

அதைவிட முக்கியமான விஷயம் எல்லாருமே ‘நாச்சார்மடம் ‘ என்று சாதாரணமாக சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள் என்பது தான். உண்மையில் எனக்கே வருத்தமாக இருக்கிறது. நான் இதை கண்டிப்பாக உத்தேசிக்கவில்லை. காலச்சுவடு பிரசுரித்த அறிக்கையில் கையெழுத்திட்ட ஒரு எழுத்தாளரே ஒரு கூட்டத்தில் ‘நாச்சார் மட விமரிசனமுறை ‘ என்று சொன்னதாக கேள்விப்பட்டேன். நாகர்கோவிலில் நடந்த ஓர் இலக்கியக் கூட்டத்தில்பல பேச்சாளர்கள் சாதாரணமாக ‘நாச்சார்மடங்களின் பார்வை ‘ என்றெல்லாம் பேசுவதைக் கேட்டேன்.

13. படைப்பின் வன்முறை – எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், வாசகர்களின் கூட்டறிக்கை

சொல்புதிது (ஏப்ரல்-ஜூன், 2003) இதழில் எம். வேதா என்பவர் எழுதியதாகப் பிரசுரிக்கப்பட்டுள்ள ‘நாச்சார் மட விவகாரங்கள்’ என்ற ‘சிறுகதை’ மிக மோசமான தனிமனித அவதூறாக உள்ளது. கீழே கையொப்பமிட்டுள்ள எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், வாசகர்களாகிய நாங்கள் அதைக் கண்டிக்கிறோம்.

14. இயல் விருது சில விவாதங்கள்

ரோஜா முத்தையாச் செட்டியார் எம்.வேதசகாயகுமாருக்கு நெருக்கமானவர். அவருக்கு பல நூல்களை கொடுத்தவர். தன் முனைவர் ஆய்வுநாட்களில் வேதசகாயகுமார் பெரும்பாலும் செட்டியார் வீட்டில்தங்கி ஆய்வுசெய்திருக்கிறார். கையில் காசு இல்லாத குமாருக்கு செட்டியார் சாப்பாடுபோட்டு உதவியிருக்கிறார். தன்னைத்தேடிவந்தவர்களை எல்லாம் உபசரிப்பவர் அவர்.

ரோஜா முத்தையாச் செட்டியார் வாழ்நாளெல்லாம் சேர்த்த நூல்கள் அவர் மரணத்துக்குப் பின்னர் சிகாகோ பல்கலை உதவியுடன் சென்னையில் ஒரு நூலகமாக அமைக்கப்பட்டது. ஒரு கதைக்காக எனக்கு சில பழைய கிறித்தவ வெளியீடுகள் தேவைப்பட்டன. அவற்றை வேதசகாயகுமார் சேர்த்து செட்டியாருக்குக் கொடுத்ததாகச் சொன்னார். ஆகவே நான் ரோஜா முத்தையா செட்டியார் நூலகத்துக்குச் சென்றேன்.’பொதுமக்களுக்கு’ அனுமதி இல்லை என்றார்கள். அங்கே இருந்த நூலகர் சங்கரலிங்கம் என்பவரைச் சந்தித்தேன். அவர் என் முகம் பார்த்தே பேசவில்லை. ஒரு ·பைலை புரட்டியபடி ஏதாவது கல்வி நிறுவன அடையாள அட்டை தேவை என்றார் அவர். நான் ஓர் எழுத்தாளன் என்றேன் – அப்போது விஷ்ணுபுரம் வந்துவிட்டது. ”ஆமா, அப்டி சொல்லிட்டு தினம் ஒருத்தன் வாறான்…”என்று சொல்லி வெளியேபோகும்படி கைகாட்டினார். இந்த ஆசாமி ஒரு புகழ்பெற்ற நூலகர் என்று பிற்பாடு கேள்விப்பட்டேன்.

15. பிரமைகளும், பிரகடனங்களும்-2 :: K.ரவி ஸ்ரீநிவாஸ்

16. அரவிந்தன்

அவதூறு என்ற வார்த்தையைச் சிறுமைப்படுத்தும் அநாகரிகத்தின் உச்சமான இந்தக் கதை சுந்தர ராமசாமி, கண்ணன், மனுஷ்ய புத்திரன் ஆகியோரைப் பெயரிட்டுத் திட்டவில்லை. மற்றபடி வெட்கம், கூச்சம் ஆகியவற்றை முற்றாகத் துறந்த அப்பழுக்கற்ற கேவலமான மொழியில் இவர்கள் மூவரையும் திட்டித் தீர்க்கிறது இந்தக் கதை. சுந்தர ராமசாமியின் வீடு, வீட்டில் வேலை செய்யும் பெண்கள் உள்பட அவர் சம்பந்தப்பட்ட பல அம்சங்களை, செய்திகளை, நபர்களைக் கேவலப்படுத்தியிருக்கும் இந்த ‘எழுத்தாளரை ‘ தமிழுக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறது சொல் புதிது.

இந்தக் கதை எழுதப்பட்டதன் பின்னணியை இங்கு நினைவுபடுத்திக்கொள்வது நல்லது. மு. தளையசிங்கம் குறித்து ‘சொல் புதிது ‘ நடத்திய கருத்தரங்கு பற்றி ராஜநாயஹம் என்பவர் எழுதிய கட்டுரையைக் ‘காலச்சுவடு ‘ சென்ற ஆண்டு பிரசுரித்தது. பலர் அந்தக் கட்டுரையைக் கண்டித்தார்கள். நாஞ்சில் நாடன் போன்ற சிலர் தங்களது கண்டனத்தை எழுத்துபூர்வமாக (காலச்சுவடிலேயே) பதிவு செய்தார்கள். அதையடுத்து அந்தக் கட்டுரை வெளியிடப்பட்டதன் பின்னணியை விளக்கி காலச்சுவடு ஆசிரியர் கண்ணன் ஒரு குறிப்பை எழுதினார். ‘சொல் புதிது ‘ இதழில் ராஜ நாயஹத்தின் கட்டுரையை ஒட்டி ஒரு குறிப்பு வந்திருந்தது. அதில் மனுஷ்ய புத்திரனின் மதத்தைக் குறித்த ஒரு சொற்றொடர் இருந்தது. ‘காலச்சுவடி ‘ன் அடுத்த இதழில் இதற்கான எதிர்வினையை மனுஷ்ய புத்திரன் பதிவுசெய்தார்.

இதுவரையிலும் வெளிப்படையாக நடைபெற்றுவந்த இந்த மோதலை நிழல் யுத்தமாக மாற்ற முயன்றிருக்கிறது ‘சொல் புதிது ‘. எம். வேதா என்ற ‘புத்தம்புதிய ‘ எழுத்தாளர் ஒருவர் ‘காலச்சுவடு ‘, சுந்தர ராமசாமி, மனுஷ்ய புத்திரன், கண்ணன் ஆகிய பெயர்ச்சொற்களை நேரடியாகக் குறிப்பிடாமல் ஆனால் படிப்பவர்களுக்கு இந்தச் சொற்களைத் தவிர வேறு எதுவும் நினைவுக்கு வந்துவிடாத அளவுக்கு வெளிப்படையான குறிப்புகளுடன் ஒரு கதை எழுதுகிறார்.

ஓர் எழுத்தாளனுக்கு இருக்க வேண்டிய ஈரமும் தார்மீக உணர்வும் சிறிதேனும் அவரிடம் எஞ்சியிருக்குமெனில் ‘கால்கள் சூம்பிப்போன நொண்டி நாய் ‘ என்ற தொடரை எழுதியதற்காக அல்லது எழுத அனுமதித்ததற்காக அவர் பல நாள் தூக்கத்தை இழப்பார் என்பதில் சந்தேகமில்லை.

‘நாச்சார் மட விவகாரங்கள்’ சிறுகதையை நான்தான் எழுதினேன் என்கிறார் வே.ச.கு. தனது கூற்றுக்கு வலுசேர்க்க, இதற்கு முன்பும் கதைகள் எழுதியிருக்கிறேன் என்று அறிவிக்கிறார். இனிமேலும் எழுதுவேன் என்று மிரட்டுகிறார். அவர் கூறவது பொய் என்று கூற நான் விரும்பவில்லை. ஆனால் இந்தக் கதையில் – அதன் சகல கீழ்மைகளையும் தாண்டி – வெளிப்பட்டிருக்கும் புனைவு அம்சத்தை அவரால் சாதித்திருக்க முடியும் என்பதற்கான எந்த அடையாளமும் இதுவரை வெளிப்பட்டதில்லை. இதற்கு முன்பும் கதைகளை எழுதியிருக்கிறேன் என்று அடக்கமாகச் கூறிக்கொள்ளும் வே.ச.கு. அதற்கான ஆதாரங்களை வெளியிட வேண்டும் என்று கோருகிறேன்.

  • ஜெயமோகன் காலச்சுவடின் ஆரம்ப இதழ் ஒன்றில் எருமை மாட்டை வைத்து ஒரு கவிதை எழுதியிருந்தார். தமிழக அரசியல்வாதி ஒருவரைப் பற்றிய சித்திரமாக அதைப் பார்க்க முடியும் என்று அவர் என்னிடம் அப்போது கூறினார்.
  • மனுஷ்ய புத்திரனின் ‘அரசி’ கவிதை,
  • எஸ். ராமகிருஷ்ணனின் ‘ராமசாமிகளின் வம்ச சரித்திரம்’ என்ற சிறுகதை,
  • சுராவின் ‘ஜே. ஜே. சில குறிப்புகள்’,
  • நீல. பத்மநாபனின் ‘தேரோடும் வீதியிலே’,
  • சாரு நிவேதிதாவின் ‘ஜீரே டிகிரி’ என்று பல உதாரணங்களை இந்த வகையில் அடுக்கிப் பார்க்கலாம்.
  • புற உலகை அழுத்தமாக நினைவுபடுத்தும் இத்தனை பிரதிகளுக்கு மத்தில் ‘தேரோடும் வீதியிலே’ நாவல் மட்டும் சில எழுத்தாளர்களின் கண்டனத்திற்கு உள்ளானது ஏன் என்பதை யோசித்துப்பார்க்க வேண்டும்.

1. சுராவின் கருத்துக்களை நம்பி மோசம்போனேன் என்று சிறு குழந்தை போல அழும் வே.ச.கு., கல்வித்துறையில் அவர் என்ன செய்தார், அதன் விளைவாக என்னதான் நடந்தது என்பதை பகிரங்கப்படுத்த முன்வருவாரா?

2. ‘ஒரிஜினல் ஆந்தை’ பற்றி இப்போது எழுதும் வே.ச.கு., சுராவைத் தனது குருவாக வரித்திருந்த 30 ஆண்டுகளில் இந்த ஆந்தை பற்றி வாய் திறக்காமல் இருந்தது ஏன்? குருநாதரின் ‘குற்றம்’ அப்போது கண்ணில்படவில்லையா? அல்லது பக்தி விசுவாசம் கையைக் கட்டிப்போட்டு விட்டதா?

3. பு.பி. செம்பதிப்பு தொடர்பாகத் திண்ணை ஆசிரியர் குழு எழுப்பிய கேள்விகளுக்கான பதில்களைக் கண்ணன் முன்வைத்திருந்தார். அதில் அவர் வே.ச.குவுக்கும் சொல்புதிதுக்கும் சில கேள்விகளை எழுப்பியிருந்தார். அதற்கு இன்றுவரை யாரும் பதில் சொல்லவில்லை. பதில் சொல்ல முடியாத கையறு நிலைதான் வன்மமாக வெளிப்படுகிறது என்று நான் எடுத்துக்கொள்வதில் மதிப்பீடுகளின் பிதாமகர் வே.ச.குவுக்கு ஏதேனும் ஆட்சேபணை உண்டா?

17. காலச்சுவடு கண்ணன்

சொல்புதிதின் முன்னாள் ஆசிரியர் குழு உறுப்பினர் திருமதி எஸ். அருண்மொழி நங்கை (ஜெயமோகனின் மனைவி) சொல்புதிதில் ‘என்ன ஆனது இந்த எழுத்தாளர்களுக்கு ? ‘ என்ற கட்டுரையை எழுதியுள்ளார். இதைப் படித்துப் பார்த்து சொல்புதிதுக்கு எழுத்தாளர்கள் மேல் இருக்கும் மரியாதையை அறிந்துகொள்ளலாம். அதிலிருந்து ஒரு வாக்கியம்: ‘வீட்டுக்கு வரும் பெரும்பாலான எழுத்தாளர்கள் அலுப்பூட்டக் கூடியவர்களாக இருக்கிறார்கள். ‘ (சொல்புதிது 11, பக். 7).

18. சூர்யா

அன்று விஷ்ணுபுரம் மிக பரபரப்பாக பேசப்பட்ட ஓர் வருகை. எம் வேதசகாயகுமாரும் எஸ் ராமகிருஷ்ணனும் நாவலை கடுமையாகத் தாக்கிப் பேசினர்.

வேதசகாயகுமார் அன்று காலச்சுவடு அருகில். இருவரும் சொல்லிவைத்தது போல விஷ்ணுபுரத்தை வசைபாடினார்கள். ஜெயமோகனுக்கு இலக்கிய நுண்ணுணர்வே இல்லை என்றார் வேதசகாயகுமார் . எஸ் ராமகிருஷ்ணன் அதை ஓர் ஆர். எஸ் எஸ் பிரச்சாரம், அது ஒரு ஸ்தலபுராணத்தின் உல்டா என்றெல்லாம் சொன்னார்.

அங்கே தேவதேவன் மட்டுமே விஷ்ணுபுரத்தின் காவியத்தன்மையை சுட்டிக்காட்டி பாராட்டிபேசினார்.

19. பதிப்பியல் நோக்கில் புதுமைப்பித்தன் கதைகள் :: ஆ. இரா. வேங்கடாசலபதி

எம். வேதசகாயகுமார், புதுமைப்பித்தனும் ஜெயகாந்தனும், தமிழினி, நூலின் பின்னிணைப் பில் வெளியிட்டுள்ள புதுமைப்பித்தன் கதைகள் அட்டவணைக்கும் நான் பின்னிணைப்பு 3இல் கொடுத்துள்ள தகவல்களுக்குமிடையே உள்ள வேறுபாடுகளை வாசகர்களே ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்ளலாம். நான் சேகரித்த மூல ஆவணங்கள் கலைகளுக்கான இந்திய மையத்தின் நல்கையோடு நுண்படச் சுருளிலும் குறுந்தகட்டிலும் பதிவு செய்யப்படு கின்றன. இப்பதிவுகள் சென்னை ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்திலும், காலச்சுவடு அறக்கட்டளை அலுவலகத்திலும் ஆர்வ முள்ளவர்கள் பார்ப்பதற்கு 1 ஜுலை 2001 முதல் வைக்கப்படும். யாரு டைய தகவல்கள் ஆதாரபூர்வமானவை என்பதை வாசகர்களே நேரில் கண்டு தெரிந்துகொள்ளலாம்.

20. புதுமைப்பித்தன் செம்பதிப்பு பற்றிய கேள்விகளுக்கு என் பதில்கள் :: இரா. வேங்கடாசலபதி

இறுதியாக

வேதசகாயகுமார் அல்லது ‘எனக்கு பொறத்தாலே போ பிசாசே!’

(ஆர்வி – புதுமைப்பித்தன் படைப்புகள் – வேதசகாயகுமாரின் ஆய்வின் கதை :: RV)

அமெரிக்காவில் திராவிட கலாச்சாரம்

மதியம் பதினொன்றே முக்கால்.

‘இன்று எங்கே சாப்பிடலாம்?’

‘மினர்வா போகலாமா?’

‘சரி’

நானும் அவளும் என்னுடைய காரில் பயணிக்க ஆரம்பித்தோம்.

‘ஏதாவது இந்தியப் பாட்டு போடேன்’

கொஞ்சம் தர்மசங்கடம். ஐ-பாடில் ‘ஆடுங்கடா என்ன சுத்தி’, ‘கெடா காறி’; தூக்கத்தை விரட்டும் பாடல்கள் எனக்கு உவப்பானவை. அதிர்ஷ்டவசமாக சிடி-யில் ரங்கீலா இருந்தார்.

‘அனிமல் கிங்டம் மாதிரி ம்யூசிக் ஆக இருக்கே? காட்டுவாசி தீமா?’

இல்லை என்று மறுத்தேன். அமெரிக்காவில் இந்திய ப்ரெட்டும், சிக்கன் டிக்கா மசாலாவும் பிடித்த தக்கினியூண்டு இடத்தை, ஆஸ்கார் ரெஹ்மான் கூட பிடிக்க முடியாது. சாரு, ஷாஜி சொல்வதிலும் பாயின்ட் இருக்கிறது.

வழக்கம் போல் பஃபே தேர்ந்தெடுத்தேன்.

அமெரிக்காவில் மதுவருந்தும் பப்களில் மாபெரும் தொலைக்காட்சி திரை இருக்கும். நாலு டிவியும் நாற்புறம் நிறைந்திருக்கும். எல்லாவற்றிலும் ஏதாவது விளையாட்டு காண்பிப்பார்கள். அவர்களுக்குப் போட்டியாக இந்திய உணவகங்களில் பெரிய திரை வைக்கிறார்கள்.

இந்திப் பாடல், தெலுங்கு ஆட்டம், தமிழ் குத்து என்று ஒருங்கிணைப்புடன் தேசிய உணர்வு பொங்க விடுகிறார்கள்.

‘யூ ட்யூபில் உங்க சண்டைக் காட்சி பார்த்தேன். பஞ்சதந்திரக் கதை மாதிரி மேஜிக்கலா இருந்தது. மலைக்கு நடுவில் கயிற்றுப் பாலம். நட்ட நடுவில் ஒருத்தன் ஆக்ட்ரெஸோட விரலப் பிடிச்சுண்டு இருக்கான். இன்னொருத்தன் அவனோட காலைத் தழுவித் தொங்கிண்டு இருக்கான். தீடீர்னு தன்னோட லெக் பீஸை கட் பண்ணிக்கிறான். பாலத்தை அறுத்து பறந்து போய் ஹீரோயினை அந்தப் பக்கம் விடறான். ரொம்ப காமெடியா இருந்துச்சு.’

‘இராவணன்?’

‘தெரியல… ரெண்டு மூணு பார்த்தேன்! எல்லாமே ஒரே மாதிரி இருந்தது. வெரி கன்ஃப்யூஸிங்.’

மணி ரத்தினத்தின் வழுக்கலுக்கு சுகாசினியே காரணம் என்பதை சுருக்கமாக விளக்கினேன்.

‘இதென்ன சாங்? இஸ் இட் தி எக்ஸ்ப்ளாயிடெடிவ் சீக்வென்ஸ்?’

“என் பேரு மீனாகுமாரி” போய்க் கொண்டிருந்தது. ‘அதென்ன exploitative song?’

‘நீதானே சொல்லிக் கொண்டிருந்தாய். ரொமான்ஸ், சோகம், வீரம், ருத்ரம் போன்ற நவரசங்களும் ஒவ்வொரு படத்தில் எட்டு பாடலாக அமையும் என்று… அது போல் இது போல் டான்சிங்?’

‘இது குடும்பப் படம். இது சூப்பர் மேன் பற்றியது. இந்தியாவில் “தெய்வம் மனுஷ ரூபம்” என்னும் தொன்மத்தை பின்பற்று முருகரை அடியொற்றி “கந்தசாமி” என்று யூ செர்டிஃபிகேட்… அதான் G for General Audiences அத்தாட்சி முத்திரையுடன் வெளியான படம்.’

இந்த முறை அவள் ம்ம்ம்ம்.

‘இதென்ன ரோட்டில் யாருமே இல்லை. வழிப் போக்கர்கள் கூட டீக்கா இருக்காங்களே!’

‘கஜினி; அவனுக்கு அஞ்சு நிமிஷம்தான் உலகம் நினைவில் இருக்கும். அதன் பிறகு மறந்து போகும். மெமண்டோ பார்த்திருப்பியே? அதன் முன் தோன்றிய தமிழன். நீ குந்தர் கிராஸ் மாதிரி. ரொம்பக் கேள்வி கேட்கிறே. உனக்கு ஒரு சமூகமே நொந்து நூடில்ஸாய் இருக்குனு புரிய வாய்ப்பேயில்ல. கலைகள் எங்க நாட்டில் இருக்கக் கூடாதா? உனக்கு இது சதைக் காட்சிசாலை. எங்களுக்கு நிர்வாணா!’

தெம்பாய் இன்னொரு நாப்கின் எடுத்து துடைத்தெறிந்தோம்.

What have you read among Jeyamohan books?

ஜெயமோகன் எழுதிய புத்தகங்களின் பட்டியலை (http://www.jeyamohan.in/?p=11233) கொடுத்தார்.

எனக்கு மூன்று வினாக்கள் எழுந்தன:

1. உங்களுக்கு இந்த லிஸ்ட்டில் மிகவும் பிடித்தது எது?

2. அவசியம் இந்த வருடம் படிக்க வேண்டும் என்று நினைப்பது?

3. அனுராதா ரமணன்/சுஜாதா மட்டுமே அறிமுகமான நண்பருக்கு, பரிசாக எந்த படைப்பை கொடுப்பீங்க?

தர்மசங்கடத்திற்கு தயார் என்றால்… கொசுறு கேள்வி:
இவற்றுள் தங்களைக் கவராத நூல்?

வாக்கெடுப்பு (தற்போதைய நிலை) – தொகுக்கப்பட்ட பதில்:

மனதில் நிற்பவை

காடு – 7

பின் தொடரும் நிழலின் குரல் – 4

விஷ்ணுபுரம் – 3

சங்கச் சித்திரங்கள் – 3

இன்றைய காந்தி – 3

பனிமனிதன் – 2

ஏழாம் உலகம் – 2

நவீன தமிழிலக்கிய அறிமுகம் – 2

ஜெயமோகன் குறு நாவல் முழுத் தொகுப்பு – 2

சிறுகதைத் தொகுப்பு – 2

கொற்றவை

பத்ம வியூகம்

இலக்கிய முன்னோடிகள் வரிசை

நாவல் கோட்பாடு

ஊமைச்செந்நாய் (மத்தகம்)

வாசிக்க விழைபவை

கொற்றவை – 6

விஷ்ணுபுரம் – 4

ரப்பர் – 2

சங்க சித்திரங்கள்

இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்

பின் தொடரும் நிழலின் குரல்

காடு

ஏழாம் உலகம்

குறுநாவல் தொகுப்பு

பரிந்துரை

ஜெயமோகன் குறு நாவல் முழுத் தொகுப்பு – 3

அனல்காற்று – 2

வாழ்விலே ஒருமுறை – 2

சங்கச் சித்திரங்கள் – 2

ஏழாம் உலகம் – 2

காடு

கன்னியாகுமரி

நிகழ்தல்

ஊமை செந்நாய் தொகுப்பு

நிழல் வெளி கதைகள்

நினைவின் நதியில்

இன்றைய காந்தி

தேவகி சித்தியின் டயரி, ஒன்றுமில்லை, விரல், மாடன் மோட்சம்

சிரமதசை

சங்கச் சித்திரங்கள்

இலக்கிய விமர்சனம் தொகுப்பு

ஏழாம் உலகம்

கொற்றவை

விஷ்ணுபுரம்

உங்கள் பதில்களை – https://groups.google.com/forum/#!topic/jeyamohan/R6CvIwQYmfM குழுமத்தில் தரலாம்.

தமிழ் நூல் பரிந்துரை – 2010

சென்ற வருடம் வாங்கிய புத்தகங்களின் பட்டியல்:

  1. சடங்கில் கரைந்த கலைகள் – அ. கா. பெருமாள்
  2. நினைவில் நிற்கும் நேர்காணல்கள் – அண்ணாகண்ணன் (திரிசக்தி பதிப்பகம்)
  3. நாத வெளியிலே – இசைஞானி இளையராஜா
  4. சித்திரம் பேசுதடி: தமிழ்த்திரை பற்றிய காலப் பதிவுகள் – சு. தியடோர் பாஸ்கரன் – உயிர்மை (2004)
  5. விகடன் தீபாவளி மலர்
  6. நினைவின் தாழ்வாரங்கள்கலாப்ரியா (சந்தியா வெளியீடு)
  7. சென்னையின் கதை (1921): கிளின் பார்லோ – தமிழில் ப்ரியாராஜ் (சந்தியா வெளியீடு)
  8. உறங்கா நகரம் (சென்னையின் இரவு வாழ்க்கை): வெ. நீலகண்டன் (சந்தியா வெளியீடு)
  9. தமிழ்நாடு நூறாண்டுகளுக்கு முந்தைய பயணக்கட்டுரை – ஏ.கே. செட்டியார் (சந்தியா வெளியீடு)
  10. இரண்டு மரங்கள் – பாவண்ணன் (சந்தியா வெளியீடு)
  11. கிராமங்கள் பேசுகின்றன – கார்முகில் (சந்தியா வெளியீடு)
  12. ஒற்றை வாசனை – இந்திரா (சந்தியா வெளியீடு)
  13. திரௌபதியும் சாரங்கப் பறவையும் – நாகூர் ரூமி (சந்தியா வெளியீடு)
  14. மூன்றாம் பாலின் முகம் (அரவாணி எழுதிய முதல் தமிழ் நாவல்) – பிரியா பாபு (சந்தியா வெளியீடு)
  15. ஊர்க்கதைகள் – வெ. நீலகண்டன் (சந்தியா வெளியீடு)
  16. கல்கி முதல் கண்ணன் வரை – மு. பரமசிவம் (சந்தியா வெளியீடு)
  17. உரையாடும் சித்திரங்கள் – பாவண்ணன் (சந்தியா வெளியீடு)
  18. கிராமங்களில் உலவும் கால்கள் – கழனியூரன் (சந்தியா வெளியீடு)
  19. வ.உ.சி. நூல் திரட்டு – தொகுப்பு : வீ. அரசு (சந்தியா வெளியீடு)
  20. புராதன இந்தியா என்னும் பழைய 56 தேசங்கள் – பி.வி. ஜகதீச அய்யர் (சந்தியா வெளியீடு)
  21. தென்னிந்திய கிராம தெய்வங்கள் – தமிழில் : வேட்டை எஸ். கண்ணன் (சந்தியா வெளியீடு)
  22. மதராசப்பட்டினம் – நரசய்யா (பழனியப்பா பிரதர்ஸ்)
  23. பதினெட்டு சித்தர்களின் முக்கிய பாடல்களும் விளக்கங்களும் – தமிழ்ப்பிரியன் (நர்மதா)
  24. எங்கிருந்து வருகுதுவோ – ரா.கி.ரங்கராஜன் (விகடன் பிரசுரம்)
  25. சுந்தர ராமசாமி : நினைவின் நதியில் – ஜெயமோகன்
  26. தேசாந்திரி – எஸ். ராமகிருஷ்ணன்: விகடன் பிரசுரம்
  27. கேள்விக்குறி – எஸ்.ராமகிருஷ்ணன்
  28. நீர் மிதக்கும் கண்கள் – பெருமாள் முருகன் (காலச்சுவடு)
  29. சிற்றகல் – சிறு பத்திரிக்கை கவிதை தொகுப்பு Author/ Compiler:பூமா ஈஸ்வரமூர்த்தி/ லதா ராமகிருஷ்ணன்
  30. செல்லுலாயிட் சித்திரங்கள்: தமிழ்மகன் (உயிர்மை)
  31. காற்றில் யாரோ நடக்கிறார்கள் – எஸ். ராமகிருஷ்ணன்
  32. எக்சிஸ்டென்ஷியலிசமும் ஃபேன்சி பனியனும் – சாரு நிவேதிதா
  33. தனிக்குரல் – ஜெயமோகன்
  34. இசையின் தனிமை – ஷாஜி
  35. பூமியை வாசிக்கும் சிறுமி – கவிதை – சுகுமாரன்.
  36. சினிமாவின் மூன்று முகங்கள் – சுதேசமித்திரன்
  37. கல்கி வளர்த்த தமிழ்
  38. மாயினி – எஸ்.பொ
  39. ஓ பக்கங்கள் (2009-2010): ஞானபாநு – ஞாநி
  40. புறநானூற்றுக் குறும்படங்கள் – தமிழண்ணல் (மீனாட்சி புத்தக நிலையம்)
  41. இலக்கியச் சித்திரங்களும் கொஞ்சம் சினிமாவும் – கு.ஞானசம்பந்தன்
  42. என்னைத் தீண்டிய கடல் / வறீதையா கான்ஸ்தந்தின். (காலச்சுவடு)
  43. உப்பிட்டவரை – ஆ சிவசுப்பிரமணியன் (காலச்சுவடு)
  44. நீர் பிறக்கும் முன் – இந்திரா
  45. ஒரு நகரமும் ஒரு கிராமமும் (கொங்குப் பகுதியில் சமூக மாற்றங்கள்): பேரா.எஸ்.நீலகண்டன் – காலச்சுவடு

முந்தைய பதிவுகள் சில:
அ)  புத்தக லிஸ்ட்

ஆ)  2008 – Tamil Books

புத்தகப் பதிவுகள்:

தொடர்புள்ள என்னுடைய முந்தைய பதிவுகள்:

  1. நத்தார் தின விழைவுப் பட்டியல்
  2. புது யுகத்தில் தமிழ் நாவல்கள்
  3. புத்தகக் குறி (மீமீ)
  4. சென்னை சென்றபோது பர்ஸைக் கடித்த சில புத்தகங்களின் பட்டியல்
  5. சென்னை செல்லாமலேக் கடித்தவை: செப். 2005
  6. வருட இறுதி: புத்தகங்கள் – 2005

தமிழ் ட்வீட்ஸ் – குறுஞ்செய்தி வாக்கு: சிற்றெழுத்து ஓடை

1. பிச்சைக்காரனின் சிரத்தையையொத்த பகுப்புகள் கொண்ட தமிழ் பேப்பரில் ‘நல்ல எழுத்து’ ( http://www.tamilpaper.net/?cat=23 ) பகுதி அ.மு/மி பவ.

2. பிரிட்டிஷ் ம்யூசியத்துக்கு போன 10 வயசுக்காரி டகடகவென்று எல்லா ஓவியத்தையும் ட்ரேஸ் செஞ்ச மாதிரி ஜெயாவில் #Kamal http://bit.ly/clUIo0

3. பல் பிடுங்கப்பட்ட பாம்புகள் பரிதாபமாய் பல்லிளிக்கும்போது ‘They deserve it’ தோன்றினால் பாவமா?

4. ஏழு வருசம் முன்பு போட்ட பதிவை இப்படி ட்வீட்டுவது தவறல்ல; அப்படியே மறுபதிவது இமாலய தவறு. தீபாவளி வாழ்த்துக்கள்: wp.me/p3fCv-se

5. டபுள் கா மீட்டா சாப்பிட்டிருக்கீங்களா? தேவாமிர்தம்னு பேசிக்கறாங்களே… அதேதான். இனிய தீபாவளி ஸ்வீட்.

6. அறிவாளி விஷயமறிந்தவள்; புத்திசாலி விஷயத்தை அலசத் தெரிந்தவள்; சாமர்த்தியசாலி புத்திசாலியை வேலைக்கு அமர்த்தத் தெரிந்தவள்.

7. தூரத்தில் +ல் யேசு பிரும்மாண்டமாய் அழைத்தார். நெருங்கினேன். நெடிந்துயர்ந்த கட்டிடங்களுக்கிடையில் கிறிஸ்து காணாமல் போனார்.

8. குரங்கு கையில் பூமாலை; @charunivedita கையில் இலக்கியம்; அமெரிக்கன் கையில் தெர்மோஸ்டாட்; @peyarili கையில் ஒளிப்படம்; தமிழன் கையில் கலாசாரம்

9. இந்தியாவில் இருந்தால் தாத்தா, பாட்டிகளைக் கொல்லலாம்; இங்கே இருப்பது ஒரேயொரு கார்; எத்தனை முறை பழுதடையச் செய்வது? #லீவு

10. மைக் மோகன் என்பார்கள்; கவர்னர் பட்வாரி போல் எங்கும் அட்டெனடன்ஸ் என்பார்கள்; விமர்சக சுப்புடு என்பார்கள்; கர்னாடக வித்வான் சௌம்யா எனலாம்.

11. ‘சரணம்’ ரெண்டு வகைப்படும் என்கிறார் எஸ் பி ஷைலஜா. ஷரணாகதி – கிருத்திகாவிடம் சரவண பவன்; ச்சரணம் – ரஜினி கல்யாணத்திற்கு பாமக அழைப்பு.

12. ஆயர்பாடியில் இருந்து ஆய் வந்ததா? ஆயா வந்தாளா?

13. Cold வந்தாலும் கணவன்; ஃப்ளூ வந்தாலும் புருஷன் என்றால், அரை மைல் ஓடிட்டு அரைஞாண் கயிறு லூசாயிடுச்சான்னு பார்க்கிற மாதிரி இல்ல என்கிறாள்.

14. காதலை சொல்லத் தெரியாத 80s வகையறா ‘கல்லறை’ cliche கிடையாதென்பதும் @ppothen ‘அப்பாவின் காதலை’ பழசு என்பதை பார்ப்பதும்தான் தமிழ் சினிமா ரசிகர்

15. திருட்டுக் கதை என்றால் @ppothen சாதாரணமா கோபம் வரும். ஆனா, தெரிஞ்சவங்க சுப்ரமணிய ராஜுவை சுட்டுப் போட்டா பாராட்டுவார் போல. #Naalaiya #TV

16. ‘நாளைய இயக்குநர்’ல் மதனுக்கு Suicide வந்தால் பிடிக்கல; மது, சிகரெட்டுக்கு தடா போடுறார்; திருவிளையாடல் எடுத்தாப் பாராட்டுறார். பரிசில் தரார்

17. கலைஞர் டிவி ‘தம்பி வெட்டோத்தி சுந்தரம்’ நிகழ்ச்சியில் தயாரிப்பாளரை ‘சொந்தில்நாதன்’ ஆக்கியதன் பிண்ணனி என்ன? அஞ்சலிப் பாப்பாவையும் காணோமே.

18. நோட் பண்ணதையெல்லாம் நோட் செஞ்சது பதிவர் காலம். இதெல்லாம் நோட் பண்ணணுமா நெனக்கிறது, இந்தக் காலம்.

19. http://www.keetru.com போய் @tamilpaper வருவது தமிழிணையத்தின் சீரழிவு என்று எத்தனை கட்டுரை வந்திருக்கிறது? #Tamils

20. NBCஇன் Olympics அப்புறம் தூர்தர்ஷனின் Commonwealth பார்த்தால், ஷெனாய் வாசிப்புடன் கமலா காமேஷ் கவர்ச்சி டான்ஸ் உணர்ச்சி பொங்குகிறது. #DD

21. So many blue jeans at #necc14 it looks like uniform. Shirts differentiate coders.

22. Saw ‘Buddha‘ in PBS: Very poetic adaptation; imaginative cartoons to symbolize mystical & religious portions; profound quotes in rusticness

23. saw ‘Diary of a Wimpy Kid’: My daughter observed, ‘The book was much better; I had imagined the main character to be different!’ I liked it.

24. What is your strategy? Being a specialist niche player or jack of all arts? In career? In blogs? What works for your company?

25. I used to think FourMediumOneLarge as something to do with whiskey. It seems layout spec for ribbons in sharepoint. #scale

26. Some predictions (rather currently in prod) 1. Mouse is the new remote. 2. JavaScript is the new C language. 3. SharePoint is the new Excel.

27. சிவாஜி படமே பார்க்காத சபதத்தினால், ‘சுமதி என் சுந்தரி’ டைட்டிலில் ஏன் half-clad women from men’s magazines ஏன் நிறைந்திருக்கிறார்கள்?

28. ஹஜ்ஜுக்கும் புத்தாண்டு டைம்ஸ் சதுக்கத்திற்கும் என்ன வித்தியாசம்? சவுதி செல்வதற்கு சென்னை காசு கொடுக்கும். டைம்ஸில் குண்டு வெடிக்கும்.

29. Doordarshan பொதிகையில் ‘வாலிப வாலி’: என்னவாக இருந்தாலும் ‘மலரும் நினைவு’களை அடிச்சுக்க எதுவுமேயில்ல… காமராஜ், கல்கி, ராஜாஜி, அம்மா சென்டி

30. மணிரத்னத்தின் ‘ஆய்த எழுத்து’: என்னதான் ஊர்க்குருவி (& சம் காக்காஸ் ஆல்ஸோ) சுஜாதாவாக நினைத்தாலும், கிட்ட நெருங்க இப்போதைக்கு எவருமே லேதண்டி

31. கற்றது தமிழ்: ‘நான் கடவுள்’ முன்னோடி; ஜெயமோகன் வசனத்தை விட தமிழ் எம்.ஏ ஷார்ப். Flow இருக்கிறது; நாயகருக்காக ‘ஐயோ… பாவம்’ கூட வருகிறது.

32. கடமை, கண்ணியம், கட்டுப்பாடு: வெளியாகியபோது வெகுவாக ரசித்த படங்களை இப்போது பார்த்தால், காலப்போக்கும் விமர்சனவலை-மனமும் ரசிக்கவைக்கவில்லை.

33. ‘பார்த்திபன் கனவு’ படம்: செம திக் கதை; கருப்பு சரோஜா தேவி; காரண காரியம் முழுமையாக சொல்லாத திடுக் திருப்பங்கள். குழப்ஸ்.

34. சாமர்த்தியம் என்பது இந்தியராய் பிறந்த எவருக்கும் பாடமாய் அனுபவிப்பது; அவ்வாறு கற்றதை சுயநல பொது பயன்பாடுக்கு மாற்றுவது மேற்கத்திய நாகரிகம்

35. ராசா எத்தனை ராஜா! ஆண்டிமுத்து ராஜாவா? மன்மத ராசாவா? ஸ்பெக்டரம் மாபியாவா? தலித்தியத்தவரா? நீலகிரி பிரபுவா? எப்பவுமே அவரு ராசாவா? #Raja #Rasa

36. Wanted: டாஸ்மாக் நிவேதிதாவும் நீமன் மோகனும் க்ளோபஸ் புத்திரரும் போலோகிருஷ்ணனும் நிறைந்த தற்கால தமிழ் இலக்கியம் வளர வால் மார்ட்கள் தேவை.

37. The perfume from the lady standing in front of me at the Dunkin Donuts is more pleasant, refreshing & strong than the Coffee itself.

38. ஆண்டியார், அல்லி, அரசு, பிரார்த்தனை க்ளப், பராசக்தி என்று பதில் கேட்டால் Monopoly. ‘போலி… போலி’ என்று போலினால் இணையக்காலி. #வார்மிண்ட்

39. Veblen Good என்றால் பூணூல் என்பார் வீரமணி பார்ட்டி. ஐ-பாட் என்பர் சீன அடியார். வெப்ளென் வேண்டாம், வாழை போதும் என்பது 7ஆம் உலகம்.

40. சாப்பிடும்போது கொல்லைக்குப் போனதைப் பற்றி பேசினால் திட்டு விழும். பாத்ரூமில் Food mag படித்தால் பீயை உண்ணத் தோன்றுமா?

41. ஈ ஓட்டும் குறிப்பு: அமெரிக்கக் கொசுக்களை ரெண்டு கையால் தட்டிக் கொல்வதை விட ஒரே கையால் அபகரிப்பது எளிது.

42. தப்புத் தப்பாக செய்தியைத் திரிப்பது பெரிய தவறா? தப்பும் தவறுமாக ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மாற்றுவது தவறா?? செய்தியே சொல்லாமல் விடுவது?

43. கலைஞர் டிவிக்கு மொழிபெயர்ப்பவருக்கு இரண்டு மொழிகள் தெரியாது. 1. இந்தி; 2. ஆங்கிலம். எனினும், தமிழில் தட்டச்சுவதால் வேலை கிடைச்சுடுச்சு.

44. டேட் என்றால் நாள்பட பொருள். நாள்போகப் போக முன்னேற்றம். டேட் போடாவிட்டால் பால் கெட்டுப் போகுமே…

45. பாத்ரூமிற்கும் கர்னாடக கச்சேரி அரங்கிற்கும் ஆறு ஒற்றுமை இருக்கு… தெரியுமா?

46. Who in your life demonstrates living to the full (not living recklessly) and what other characteristics do they display?

47. எழுத்தாளனுக்கும் பறக்காவெட்டிக்கும் வித்தியாசம்? 1. ரசிகர்: http://bit.ly/9BBurw 2. கீபோர்ட்நடுங்கி: http://bit.ly/aAec80

48. Oru என்பதில் இருந்து Our பிறந்தது. ‘நாம் அனைவரும் ஒன்று’ என்பதன் குறியீடு. அதை ‘நமக்கு ஒருவர்’ என்று திரிப்பது தவறு. #குக #கால்வெட்டுவல்

49. சூதாட்டம் @akaasi க்கு பிடிக்காது. ஏன்?

50. Santosh Sivan’s Sivapuram: கொஞ்சம் அன்னியன்; Appleஇன் புது கண்டுபிடிப்பு போல் காவ்யா மாதவன்; மலையாள மேஜிக்; எகிறி குதிக்கும் ஜோர்.

51. அங்காடித் தெருவில் ஜவுளிக்கடைகாரரை வில்லனாகக் காட்டுவது சுந்தர ராமசாமிக்கான குறியீடு; பாத்ரூம் சுத்தம் செய்பவர் சாரு நிவேதிதா எனலாமா?

52. வீட்டு வாசல் புல்லை மான் மேய்ந்தால், லயிந்து அழகு பார்க்கும் மனது, வாத்துக் கூட்டம் கபளீகரிக்க வந்தால் அடித்து துரத்துகிறது.

53. தூரத்தில் நீச்சல் குளம். ‘நீந்துவது ஆணா? பெண்ணா?’ கேள்வி எழுகிறது. எல்லாமே எந்திரன் என்கிறது பைனாகுலர் இல்லாத கண்பார்வை தூரதிருஷ்டம்.

54. பதிவருக்கும் எழுத்தாளருக்கும் வித்தியாசம்? ப்ளாகர் கிண்டலடிப்பார்; எழுத்தர் 1/2 மணி நான் ஸ்டாப் கருத்துரை; அவர் பழகியவர்; இவர் பெரியவர்.

55. எட்டு பேரு; அட்லான்டிக் சிடி; விடிய விடிய அரட்டை; சகஜமான கால் வாறல்; கல்லூரி ரீயுனியன் மாதிரி ஒரு சந்திப்பு. வருசா வருசம் பதிவர் விசிட்டணும்

56. கொன்னா பாவம் தின்னாப் போச்சு பழசு. தின்னா வாசம், (பல்) ஃப்ளாஸினா போச்சு புதுசு.

57. Celbrityக்கும் @charuniveditaக்கும் என்ன வித்தியாசம்? புகழை விமர்சித்தால் பிஆர்ஓ வக்காலத்து; சாருவை விமர்சித்தவருக்கு வக்காலத்து கூட்டம்

58. ‘அவசியம் எனில் மட்டுமே பேசலாம்’ என்றால் அவசியமில்லை எனில் கூட அரட்டையடிக்கலாம் என்னும் அர்த்தம் பொதிந்துள்ளதா?

59. ஜெமோ சொன்னப்புறம்தான் தெளிவாக காதில் விழுகிறது ‘அருந்ததிப் பயலே’; அது வசவு என்பதும் விளக்கியபிறகே புரிகிறது.

60. 10 lists hv @charunivedita @uyirmmai has 13; @writerpara – 59; 163 for @selvaraghavank A top 10 for listing count shd be due

61. முதலியம் -> முதலியார்; பிரம்மச்சரியம் -> பிராமணர்; தோட்ட தரணியம் -> செட்டியார்; தேவரடியாரியம் தேவேந்திராவா தர்மேந்திராவா?

62. அந்தக் காலத்தில் இஸ்லாம் மட்டுமே இருந்துச்சு என்பதற்கான அடையாளமே மதார்ஸாவில் இருந்து திரிந்த மதராசப்பட்டினம் என்பதாம்.

63. Massல் ஒரு எம்மும் புடுங்க முடியாது… அப்படியும் பிடுங்கினாக்க, Ass ஆயிடும்.

64. ‘சத்யா’ திரைப்படத்தில் தன் சாதி என்ன என்பதை கமல் வெளிப்படையாக்குவது ஏன் என்பதிருக்கட்டும்! படத்தில் சத்யமூர்த்தி என்ன #caste ? #Satya

65. இதயம் தொட்ட கதைகள் – தமிழ்ச்செல்வனின் `ஒரு பிரம்பு ஒரு மீசை’: வசனம் கொஞ்சம் செப்பனிடலாம். மத்தபடிக்கு அருமை. #JayaTV #Shorts

66. ஆயிரம் பக்கம் எழுதினால் ரெண்டு மூணு சீன் கூடவா உருப்படாம போயிடும்? ‘ராஸலீலா’ மாதிரி திராபைகளில் கூட முத்துகள் உண்டே.

67. அவர்களுக்கு சொந்தமாகவோ பதிப்பாளரோ எடிட் செய்ய கைவரவில்லை. ஓவர்-ரைட்டிங்கை ஒழுங்கு செய்ய இயக்குநரிடம் சரண். கைமேல் பலன்

68. அந்த லிம்கா விளம்பரத்தைப் பார்த்தால் ‘அங்காடித் தெரு’ துவக்கப் பாடல் பார்த்த துள்ளல் ஒட்டிக் கொள்கிறது. அழகான ஜோடி; ஜில் ரம்மியம்.

69. ஜெயா டிவியில் ‘தினம் ஒரு திவ்ய நாமம்’ தலைப்புப் பாடலில் புடைவைத் தலைப்பை பிடித்து கும்மியடிப்பவர்களின் முழுப் பாட்டு கிடைத்தால் ஷேமம்.

70. ‘ஒரு ஷாட்’ எடுத்த ‘நாளைய இயக்குநர்’ 3ஆம் பரிசு: Either I have high standards of School dramas or that 5 min was Magical Bullshitism.

71. Playback singer S Janaki looks incredibly healthy & young with a even more sweet voice at 72. Belated wishes!

72. Turned on ChannelLive. Now eagerly waiting for a notable event like Jaya or Kalainjar’s death on respective TV’s live coverage stream.

73. பதவியில் இருக்கும் போது போனால், மூன்று நாள் விடுமுறை கிடைக்குமே என்று பிஞ்சிலேயே யோசிச்ச ஆளுங்கதானே

74. காஸ்மிக் தூசி யாராக இருக்கும்?

75. Notable recent books: Naked Science by Charles Wheelan. Undressing the dismal science.

76. The drunkard’s Walk by Leonard Mlodinow. How Randomness rules our lives. #books

77. Everyday Survival. Why smart people do Stupid things by Laurence Gonzales. #books

78. Eating the Dinosaur by Chuck Klosterman. #books

79. Traffic. Why we drive the way we do and what it says about us by Tom Vanderbilt. #books

80. When a lover is on the other end, cell rings like rock music; while it is the wife it rings like coins clanking.

81. The quantum is love directly related to the distance, communication medium among (>n) pyaaris & spouse’s cooking capabilities.

82. நவீன ‘நான் சிகப்பு மனிதன்’ Kanagavel Kaakka: ஜூனியர் ஷங்கர் கவின்பாலா என்றால் சீனியர் சுஜாதா மாதிரி @writerpara

83. Thamizhachi Thangapandiyan was the original Priyamani in Veli Rangarajan’s Ravanan by Ku Alagirisami: http://bit.ly/9ohe4y #Maniratnam

84. நித்யானந்தருக்கு மட்டுமல்ல, வீழ்ச்சியடைந்த எல்லா மனிதர்களின் ஒரே பலவீனம் தன் உடன் இருப்பவரை நம்புவதுதான். – Manushyaputhiran

85. கார்ப்ரேட் சாமியார் & பரஸ்பர முதுகு சொறிதல்: நமக்குப் பிடித்ததையே அவர் சொல்கிறார். அப்படிச் சொல்வதுதான் நமக்குப் பிடித்திருக்கிறது.-Charu

86. Queen Rocks… ‘We will… we will rick you!’ What is a similar timeless uplifting classic in Tamil? #Songs #Music

87. Phil Jackson is the ultimate closer. Knows when to step up, where to speed things, calls key plays, stops momentum with timeouts.Hate him 🙂

88. Reputation matters to not get into foul trouble. That seems to be the difference between ‘traveler’ Gasol & Wallace.

89. Chitra used to be uncomfortable with the not so subtle advances from Singer Mano on Alka, Sahana, Nithyasree in Vijay TV’s Super Singer Jr.

90. மனோ நன்றாக நிர்வகித்தாரா 😦 He was close to a pervert to with his ‘நீங்க நல்லா அழகா இருக்கீங்க’ when a singer has sung well.

91. Difference between winning team and a loser in NBA: When you cannot shoot field goals, drive & get fouled to get free throws- Michael Jordan

92. ஒருவனுக்கு ஒருத்தி என்றால் ஒருவனின்/ஒருத்தியைத்தான் நசுக்க முடியும். It shd be a n…m cardinality association relationship.

93. Unsung heroes list: Rasheed Wallace. Rombavey sung heroes list: Kevin Garnet, Kobe Bryant.

94. Who is sitting beside Leonardo DiCaprio? Dress லட்சணமா இருக்கு

95. Kobe Bryant, Dwight Howard, Lebron James… everybody is getting switched off one by one by Boston Celtics. It is the defense! stupid

96. Lakers shd be called Rebound பிச்சைக்காரன். If only Celtics can rebound and avoid the second chance rather third chance points by LA…

97. Lakers vs Celtics rivalry buildup seems to be epic like India vs Pakistan, Red Sox vs Yankees, Army vs Navy, Nadal vs Federer. #NBA

98. Without referees intervention, NBA will not be interesting. When players have a bad day, umpires make them champs. Lakers made interesting.

99. இன்றைய முடிபுத்துவம்: பரஸ்பர நம்பிக்கையின் பின்னே இருப்பது மக்களின் மனதில் ஆழமாக இருக்கும் பழிவாங்கும் உணர்ச்சி. #Quotology

100. i3 – மூன்று முகம்; i5 – மைக்கேல் மதன காமராஜன்; i7 – எல்லாம் இன்ப மயம்; பாக்கி எல்லாம் தசாவதாரம்.

101. i3, i5, i7, dual-core, multi-core – அசந்தா அடிக்கறது மைக்ரோசாஃப்ட் பாலிசி; அசராம அப்க்ரேடறது இன்டெல் ஸ்டரடீஜி.

102. ஓ ரெய்லி போல் சாருவோ வக்கணையான வலைப்பதிவரோ டிவி நிகழ்ச்சியில் சார்பான கருத்து வைத்து வலியுறுத்தி அரட்டை அடித்தால் வித்தியாச ஹிட் ஆகும்

103. மடலில் விடாக்கண்டரை குப்பை வீசலாம். மின்னஞ்சல்காரர் எரிதவகை. வலை ராவல்பிண்டிகளையும் கடக்கலாம். முகத்துக்கு எதிரான மொழிவெள்ளத்தை வெல் இயலா

104. மசாலான்னா ‘மெகாதீரா’. தெலுங்குப் பட டைட்டிலில் பேருக்குக் கூட ஆங்கில இனிஷியல் இல்லியே. எப்பத்தான் நாலெழுத்து கத்துப்பாங்களோ? #Telugu #Films

105. இன்றைய உவமை: ஆயில் கிணறு – வலைப்பதிவு. குத்தகை – செய்தியோடை. இரான் – போலி டோண்டு. BP – வினவு: http://nyti.ms/a4G6C3

106. @ivansivan //தினம் சில வரிகள்// துவங்கிய இடத்திற்கே மீண்டும் வந்தாச்சு போலிருக்கே. (‘வாழ்க்கை ஒரு வட்டம்’னு இ.த, அன்னிக்கே சொல்லிட்டாரே 😉

107. There are two types of people: one who has their name in ration cards & others who keep their names in two ration cards

108. பாலைவனச்சோலை கடசீல வர வாழ்க்கைக்கான டயலாக் வலைப்பதிவுக்குப் பொருந்துது. திண்ணைகள் மாறலாம்; ஆனால், அஞ்சு பேர் உட்கார்ந்திருப்பாங்க.