Tag Archives: Politics

ஆல்பெனியில் எழுத்தாளர் ஜெயமோகன்

அனைத்துப் புகைப்படங்களும்: DhooL.com :: View topic – SOTD #551: Vishvesh Obla | சொல்வனம் » ஓப்லா விஸ்வேஷ்

நியு யார்க்கில் ஜெயமோகன்: ஒளிப்படங்கள்

அனைத்துப் படங்களும் ஆக்கம்: கணையாழி வோர்ட்ப்ரெஸ் – நாராயணன்

Nizhalil-Jayamohan-New-York-Metropolitan-Met-Museum-Art-NY-USA-America-Authors-Tamil

மெட்ரோபாலிடன் ம்யூசியம் ஆஃப் ஆர்ட் :: நியு யார்க் கலை, வரலாறு அருங்காட்சியகத்தில் எழுத்தாளர் ஜெயமோகன்

Jeyamohan-New-York-Metropolitan-Met-Museum-Art-NYC-US-America-Writers-Tamil

Writer Jeyamohan visit in America

My quick takes on his personality, style, discussion topics :: சொல்வனம்

அரிதான இன்னொரு ரகத்தை சேர்ந்தவர் ஜெயமோகன். எடுக்கிறார். முதற் பக்கத்தை நின்று கொண்டே படிக்கிறார். கவனிக்க: வரிக்கு வரி படிக்கிறார். நான் அனேகமாக அமேசானில் கூட ஒரு வரி படித்தால், இரு வரி விட்டு, அடுத்த வரிக்குத் தாவித் தாவி வாசிப்பேன். பொறுமையைப் பார்த்தால் பொறாமையாக இருந்தது. மூன்று பக்கமாவது முழுமையாகப் படிக்கிறார். அதன் பிறகு, வாங்கலாமா, வேண்டாமா என்று முடிவெடுக்கிறார். நான் மூன்று மணி நேரம் திட்டமிட்டிருந்த புத்தக நிலைய சுற்றுலா, ஒன்பது மணி நேரம் ஆனபிறகும், ஜெமோ அசராமால், அலசிக் கொண்டிருந்தார்.

முழுவதும் வாசிக்க :: அமெரிக்காவில் ஜெயமோகன்


ஜெயமோகனின் அமெரிக்க வருகை தொடர்பான முந்தைய பதிவுகள்:

ஜெயமோகனின் தொராண்டோ வருகை

எழுதியவர்: வெங்கட் (24 Oct 2001)

எழுத்தாளர் ஜெயமோகன் சற்றேறக்குறைய மூன்று வாரங்களை கனடாவில் கழித்துவிட்டு இல்லம் திரும்பியிருக்கிறார். இந்தப் பயணம் அவருக்கு நல்ல அனுபவங்களைத் தந்திருக்கும் என நம்புகின்றேன். அவரது அமெரிக்கப் பயணம் மாடிமோதும் விமானங்கள், மடித்த அஞ்சல்களில் வரும் வியாதிகள் இன்னபிற எதிர்பாராத காரணங்களால் நிகழாமற் போயிற்று. அமெரிக்காவின் இழப்பு; கனடாவின் இலாபம். அவர் நிறைய நாட்களை எங்களுடன் செலவிட்டுச் செல்லமுடிந்தது.

  • எழுத்தாளர் முத்துலிங்கம்
  • மகாலிங்கம்
  • காலம் செல்வம்

இன்னும்பிற ஈழத்து நண்பர்கள் அவரது பயணத்தை ஒருங்கமைத்திருந்தார்கள். கடந்த 21ம் தேதி ஜெயமோகன் வாசகர்களைச் சந்தித்தார்; மழை ஞாயிறு. சந்திப்பு என்னுடை இல்லத்திலிருந்து நடை தொலைவில்தான் (நல்லதாகப் போயிற்று, ஒண்டாரியோவின் கடுமையான வாகன ஓட்டுநர் அனுமதி விதிகளினால் நான் நாள்வரை காரிருந்தும் “கால்நடைதான்”).

காலை 10 மணி முதல் புத்தகக் கண்காட்சியும் விற்பனையும் காலம் செல்வத்தால் “வாழும் தமிழ்” சார்பாக நிர்வகிக்கப்பட்டது. நம்பமுடியவில்லை; கண்காட்சியில் குறுந்தொகை முதல் நேற்று வந்த புளியமரத்தின் கதை மறுபதிப்பு வரை – கிட்டத்தட்ட 700 – 800 புத்தகங்கள்..

அடியேனுக்கு ஆ.மாதவனின் கிருஷ்ணப் பருந்து போன்ற அருகிவரும் புத்தகங்கள் சில கிட்டின. இன்னும் சொல்புதிது, எக்ஸில், சதங்கை போன்ற எண்ணிலா சிற்றிதழ்கள். நண்பகலில் ஜெயமோகன் வாசக நண்பர்களுடன் விருந்துண்டார். (அடியேன், கரகரத்த தொண்டையுடன் குடைகீழ் இல்லம் வந்து மிளகு ரசம்-சாதம்).

பிற்பகலில் சந்திப்பு களை கட்டியது. ஜெயமோகனைப் பற்றி சம்பிரதாயமான அறிமுகம் எழுத்தாளர் மகாலிங்கம் அவர்களால் (அந்த அறிமுகத்தின் தேவையின்மை விரைவிலேயே தெரியவந்தது). ஜெயமோகன் விமர்சன மரபும் – தொடர்பும் எனும் தலைப்பில் உரையாற்றினார். தமிழ் விமர்சன மரபை மூன்று பெரும் வகைகளாகப் பகுத்து விரித்துரைத்தார்.

  1. மரபுவழி விமர்சனம் (Geneological criticism – உ-ம் தளையசிங்கம்),
  2. எதிர்வினை விமர்சனம் (Dialectical Criticism, உ-ம் கா.நா.சு / கைலாசபதி)
  3. குழப்பநிலை விமர்சனம் (Chaotic criticism, உ.ம் ஜெயமோகன்).

இறுதியில் ஒரு வாசகன் இவையெல்லாம் கடந்து தன் சுய அனுபவத்தினால் மதிப்பீடு செயதலே எல்லாவற்றிலும் காட்டிலும் சிறந்தது என்பதற்கான விளக்கங்கள். ஜெயமோகன் ஒரு நல்ல ஆசிரியர் என்றுதான் கூறவேண்டும். மிகவும் தெளிவான ஆற்றொழுக்கு உரை.

தொடர்ந்து கேள்வி-பதில் என்று அறிவிக்கப்பட வாசகர்கள் மத்தியில் மௌனம். மெதுவாக ஒரு முதிர்ந்த வாசகர் தன்னை இலக்கிய ஆர்வலனில்லை என்று அறிமுகப்படுத்திக் கொண்டு ஜெயமோகனை ஏன் தமிழ்நாட்டுப் பல்கலைகள் ஆசிரியராகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை என வினவினார். மடை திறந்தது; தொடர்ந்து சரமாரியாகக் கேள்விகள்.

அவரது விமர்சனக் கோட்பாடுகள் தொடங்கி, படைப்புகள் குறிந்தவை – மிகவும் வலுவான கேள்விகள்; உறுத்தாத குரல்களில்.

அப்பொழுதான் வாசகர்களின் வீச்சை நான் அறியத்தொடங்கினேன். கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் போனதே தெரியவில்லை. அரசியல், தனிநபர் குறித்த கேள்விகள் எவையும் கேட்கப்படவில்லை – முற்றிலும் கலை, இலக்கியம் சார்ந்தனவையே.

“இலக்கியம் சலனத்தைத்தான் உண்டுபண்ணுகின்றது – அது முன்னோக்கிச் செல்வதில்லை”

எனும் அவரது கருதுகோளையும், “மொழி மனிதனின் கருவி” என்ற என்னுடைய புரிதலின் மீதானதுமான கருத்துப் பறிமாறல்களில் அடியேனும். இரண்டு விடயங்களிலும் நாங்கள் ஒருமிக்கப்போவதில்லை என்று ஒருமித்து உணர்ந்துகொள்ள அவற்றிலிருந்து எளிதாக விலகவும் முடிந்தது.

(மொழி – கருவி பற்றி அவர் முன்வைத்த கருத்து தற்கால மொழியியல் கோட்பாடுகளைச் சார்ந்தது என்றும்; அவரது ஆழ்மனத்தில் அதில் குறையிருப்பதாகப் படுவதாகவும் சொன்னார்)

நான் தமிழகத்தில் எந்த இலக்கியக் கூட்டங்களுக்கும் அதிகம் போனதில்லை. (அதிக பட்சம் ஆறு அல்லது ஏழு பேருக்குமேல் தாண்டாதவைதான் என்னுடைய அனுபவங்கள்). எனினும் சிற்றிதழ்களில் படிக்கும் இலக்கியக்கூட்டம் பற்றிய விபரங்களிலிருந்து இது முற்றிலும் மாறுபட்டது.

அதிசயமான உண்மை; ஒரு வடதுருவ மூலையில், மழை வலுத்த ஒரு ஞாயிறு மதியத்தில் ஒரு தீவிர எழுத்தாளர்/விமர்சகருடன் மதிய உணவு அருந்தவும், தொடர்ந்து அவரது உரையைக் கேட்டு விவாதிக்கவும் பதினைந்து கனேடிய டாலர்கள் கட்டணத்தில் அறுபது பேர்கள். – வாழும் தமிழென்னும் நம்பிக்கை என்னுள் இலையுதிர் காலத்தில் துளிர்க்கிறது.

இக்கூட்டத்திற்கு முதல் வாரம் அடியேன், ஜெயமோகனை திரு. முத்துலிங்கம் அவர்களது இல்லத்தில் சந்திக்க முடிந்தது. ஒரு முறையான நேர்காணலாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அது – திசை திரும்பிய கருத்துச் சிதறல்களாக முடிந்தது.

சென்ற புதனன்று இரவு திரும்பவும் ஜெயமோகனைச் சந்திக்க முடிந்தது – இம்முறை என்னுடைய இல்லத்தில். என்னுடைய எல்லா கேள்விகளுக்கும் கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் பொறுமையாக பதிலிறுத்தார். (நான் எப்பொழுது நான்கு ஒலிநாடாக்களை அச்சிலேற்ற முடியும் என்று தெரியவில்லை).

அவருடைய பல பதில்களும் கருத்துக்களும் இன்றைய “பாஷன்”-சார்ந்த இலக்கியவாதிகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. இறுக்கம் அதிகமில்லாத அவரது நட்பு –

  • இலக்கியம்,
  • மரபு,
  • இவடிவம்,
  • காவியம்,
  • புனைகதைகள் விடுத்த இலக்கியங்கள்,
  • அறிவியல் புனைவுகள்

போன்று இன்றைய இலக்கியவாதிகளால் மறுக்கப்படும் அல்லது ஒதுக்கப்படும் பல விடயங்களைப் பற்றி எளிதாகக் கேள்விகள் கேட்கமுடிந்தது.

எந்த ஒரு போக்கினாலும் பாதிக்கப்படாமல் தன்னுடைய ஆளுமையை முற்றாகத் தனித்துவப்படுத்திச் செதுக்கிக் கொண்டுள்ளார் ஜெயமோகன்.

கிட்டத்தட்ட இரவு பதினொன்றரைக்கு – வற்றல் குழம்பு, சகிதமாக ஒரு நல்ல கும்பகோணம் சமையலை அவருக்கு அளித்து இல்லத்தையும் அவரது துணைவியாரையும் (எங்க ஊர்தாங்க – பட்டுக்கோட்டை) நினைவுபடுத்திவிட்டோம். ஜெயமோகன் வாங்கிவந்த மலர்க்கொத்து இன்னும் என் இல்லத்தின் நடுவில். ஒரு நல்ல நட்பின் தொடக்கம் என ஆழ்மனம் பரவசப்படுகின்றது.

அன்புடன்
வெங்கட்
தொராண்டொ

10 bullet points about, on, with Writer Jeyamohan

ட்விட்டரில் கதைத்தது

1. Chatted with JM abt அணியம் – வறீதையா கான்ஸ்தந்தின். Used to love Tilapia recipes; now getting a guilty feeling while eating the fish. #Books

2. Chatting with Jeyamohan on Tamil TV Media, Nandigram, Ilaiyaraja, Paula Coelho, H1b, Australia, home bldg., Movies. Anything but Ilakkiyam.

3. Probably my happiest moment as a computer type-writer. JeMo also uses phonetic keyboard layout for his jet speed blogs, writing in Tamil.

4. Inspired Quote: There r 3 reader types: 1. Who philosophizes with Vishnupuram; 2. hu adore ‘பின் தொடரும் நிழலின் குரல்’; 3. The bloggers #JM

5. Muttulingam: பிரியாவிடையில் தரப்படும் பரிசு விலைமதிப்பற்றது. Why? அது ஒன்றை எதிர்பார்த்துக் கொடுக்கப்படுவது அல்ல. (அஞ்சலிக்கும் பொருந்துமா?)

6. கண்ணதாசனுக்கும் வலம்புரி ஜானுக்கும் குறிப்பெடுத்து இலக்கியவாதியானது அந்தக்காலம். சாரதியாக வண்டியோட்டும் கைடுகள் ப்ளாகராவது இணையக்காலம். #Lit

7. Draft notes for a blog post on #JM meet: State of Eelam, Tamil Movie director working styles, what does JeMo read, Cauvery Water management.

8. Yesterday’s #JM chats: ஜெயகாந்தன் சபையிலும் சுந்தர ராமசாமி இல்லத்திற்கும் ஆறு தரிசனங்கள்; ஞானம் x கர்மம்; Translations of lit works; Ve.Saa.

9. @dynobuoy Liked ur https://twitpic.com/9moal Jeyamohan’s one liner on US was something along these lines + environment impact of consumerism

10. #JM compliment for me: ‘உங்க வாய்ஸ் டப்பிங்குக்கு ஏற்ற ஒண்ணு. உங்க உருவத்துக்கும் குரலுக்கும் சம்பந்தமேயில்ல. நல்ல கட்டையான ஆம்பளக் குரல்.”

மீண்டும் கார்சாய்: ஆப்கானிஸ்தான் தேர்தல் களம்

President Hamid Karzai was photographed by an election worker in Jalalabad, Afghanistan, on Monday as he official registered to stand for reelection. His running mates are seated to his right.

President Hamid Karzai was photographed by an election worker in Jalalabad, Afghanistan, on Monday as he official registered to stand for reelection. His running mates are seated to his right.

  • ஆப்கானிஸ்தானில் ஆகஸ்ட் 20ஆம் தேதி தேர்தல் நடக்கப் போகிறது.
  • தாலிபானிடமிருந்து விடுதலையாகி ஏழு வருடங்கள் கழிந்துவிட்டது; 31 பில்லியன் அமெரிக்க டாலர்கள் கரைந்துவிட்டது.
  • நான்கு டஜன் வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் இருக்கின்றனர். இரு பெண்கள், முன்னாள் கேபினட் அமைச்சர்கள், புத்தம்புதிய அமெரிக்க அடிவருடிகள், கம்யூனிஸ்ட்கள், நமது ஊர் சகுந்தலா தேவி போல் குழந்தை ஜீனியஸ் எல்லாரும் நிற்கிறார்கள்.
  • Simple majority போதாது. 20 சதவிகிதம் வாக்குப் பெற்றுவிட்டு, “தனிப் பெரும்பான்மை எமக்கே! ஆட்சி நமதே!” என்று முழங்க முடியாது. குறைந்தபட்சம் 50% வாக்குகளுக்கு மேல் பெற்றால்தான் வெற்றி. இல்லையென்றால், முதல் இரண்டு இடங்களை வென்ரவர்களுக்குள், மீண்டும் ஜனாதிபதி தேர்தலுக்கான இறுதிச்சுற்று வாக்குப் பதிவு நடக்கும்.
  • அங்கும் ஜாதி/இன வாரியாகத்தான் வோட்டு விழுகிறது. பெரும்பான்மை சமூகமான பஷ்டூன் இனத்தைச் சேர்ந்தவர் அமீது கர்சாய்.
  • பதினாறு மில்லியன் பேர் ஏழாயிரம் வாக்குச்சாவடிகளில் வாக்களிக்கப் போகிறார்கள்.
  • வாக்காளருக்கான அடையாள அட்டைப் பதிவை தாலிபான்கள் தடுக்கவில்லை. கடந்த 2004, 2005 தேர்தல்களைப் போலவே இந்த தடவையும் தாலிபானால், தேர்தலுக்கு பிரச்சினை வராது என்கிறார்கள்.
  • எனினும், ஒரு லட்சம் போலீஸ், அதன் மேல் இன்னொரு லட்சம் இராணுவ வீரர்கள், அவர்களின் பாதுகாப்புக்கு மேலும் இன்னொரு லட்சம் வெளிநாட்டு படைவீரர்கள் போட்டிருக்கிறார்கள். வெளிநாட்டில் இருந்து பாதுகாப்பில் பணிபுரிபவர்களில் முக்கால்வாசிப் பேர் அமெரிக்கர்கள்.

வேட்பாளர்கள்

Dr. Abdullah in Kabul after filing to run for president.

Dr. Abdullah in Kabul after filing to run for president.

  • ஹமீத் கார்சாய்க்கு துணையாக இரு உதவி ஜனாதிபதிகள் உறுதுணையாக களத்தில் நிற்கிறார்கள்.
    • மில்லியன் கணக்கில் ரூபாய் நோட்டை அச்சிட்டு சொந்தப் புழக்கத்திற்கு பதுக்கிக் கொண்டதால், மந்திரிசபையை விட்டு கல்தா கொடுக்கப்பட்ட மொஹம்மது காசிம் Mohammed Qasim Fahim.
    • முன்னாள் முஜாஹிதீன் முகமது கரீம் Muhammad Karim Khalili
  • அமீது கர்சாயிடம் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த டாக்டர் அப்துல்லா, அவரிடமிருந்து விலகி சரியான போட்டியாக விளங்குகிறார். எனினும், கர்சாயை தோற்கடிப்பது துர்லபம்.
  • முன்னாள் நிதியமைச்சர் அஷ்ரஃப் கனி (Ashraf Ghani)யும் போட்டியிடுகிறார்.
  • தற்போதைக்கு ரமஜான் பஷர்தோஸ்த் (Ramazan Bashardost) மக்கள் மனதை ஒவ்வொரு வோட்டாக சேமித்து, நான்காவது இடத்தைப் பிடித்துள்ளார்.
    • தென் சென்னை சிட்டி பாபு மாதிரி மெத்த படித்தவர்.
    • முனைவர்.
    • பிரான்சில் குப்பை கொட்டியவர்.
    • அல் க்வெய்தாவை வீழ்த்திய அமெரிக்காவிற்கு செல்லப்பிள்ளையாக இருந்துகொண்டு, அரசை மொத்தமாக குத்தகை எடுத்து, லஞ்சத்தை அனாயசமாக நிறைவேற்றும் கர்ஸாயின் ஊழல் ராஜாங்கத்தை ஒழிக்கிறேன் என்கிறார்.
    • காந்தியை மேற்கோள் காட்டுகிறார்.
    • புத்தகப் புழு.
    • இணைய தளம் வைத்திருக்கிறார்.
    • 15% சதவிகித மக்களைக் கொண்ட ஹசாரா இனத்தைச் சேர்ந்தவர்.
    • முன்னாள் மந்திரிசபையில், திட்டத்துறை அமைச்சராக இருந்தபோது தனது சம்பளத்தை தானமாக, தன்னுடைய ஊழியர்களுக்கு வழங்கியவர்.
    • கறை படிந்த தொண்டு நிறுவனங்களைத் தடை செய்கிறேன் என்று 2000க்கும் மேற்பட்ட ஊழல் என்.ஜி.ஓ.க்களை தடை செய்து, லஞ்ச ஒழிப்பில் அக்கறை காட்டியதால், அமைச்சரவையை விட்டு நீக்கப்பட்டவர்.

அமெரிக்கா

  • தன்னுடைய எதிரிகளை ஹமீது கர்சாய் போட்டுத் தள்ளிவிட்டு, “அமெரிக்கா குண்டு போட்டுச்சு! அதான் செத்துட்டாங்க!” என்று திருட்டுப் பட்டம் கட்டிவிட்டதாக அமெரிக்கா நினைக்கிறது.
  • அமெரிக்காவிற்கு புதிய முகம் தேவை. ஏழாண்டுகளாக கர்சாயைப் பார்த்து ஆப்கானிஸ்தர்களுக்கும் அலுத்துவிட்டது.
  • தொடரும் தாக்குதல்களில், சில அப்பாவிகளும், பல உள்ளூர்வாசிகளும் துர்மரணம் அடைந்த கோபத்தில், தாலிபான் மீண்டும் எழுச்சியடைவதற்கு வாய்ப்பு அதிகம். இந்த சமயத்தில், பழைய பெருச்சாளிகளுடன் கூட்டணி அமைத்துள்ள சாமர்த்தியசாலி மீது அச்சம் கலந்த பயம் எழுந்துள்ளது.

அசைக்க முடியாத உப ஜனாதிபதி வேட்பாளர் தேர்வு + பணபலம் + பெரும்பான்மை சமூகத்தின் சின்னம் + கடைசி நிமிட அரசியல் பேர வித்தகர் என்பன எல்லாவற்றுக்கும் மேல் சர்வ அதிகாரமும் கொண்டவர் என்பதால் அடுத்த ஐந்தாண்டுக்கு கர்சாயைப் பொறுத்துக்கொள்ள அமெரிக்கா தயார். இந்தத் தேர்தல் அவருக்கு எச்சரிக்கை மணி மட்டுமே.

ஈழம் விரும்பும் கருணாநிதி: கார்ட்டூன்

Liberal-Projection-Obama-Cartoons-Ted-Rall-Torture

India Elections 2009: Irrelevant Online Crowd

அனைவரையும் வாக்களிக்க அழைக்கிறோம்.

அதன் தொடர்ச்சியாக இணையத்தில் தேர்தல் பிரச்சாரமும் தகவலும் சூடு பிடிப்பதாக சிலர் சொல்கின்றனர்:

1. Online resources for the Indian general election 2009 – Part 1 – Play Things

2. India’s First Digital Election is a collaborative wiki to compile a database of internet and mobile initiatives being used in the 2009 Indian general elections by political parties, individual politicians, and civil society groups.

3. Mumbai Votes – Election Campaign Resource

விளம்பரத்திற்கும் ஊடகத்திற்கும் மெகா பொக்கீடு என்கிறார்கள்:

Indian political parties are flush with funds: “Congress, India’s oldest and now the ruling party, is set to splurge a whopping Rs.20 billion (Rs.2,000 crore/$400 million) in this election.
:::
Abraham said the main beneficiary of the huge spending would be the media sector.

“The sectors that would directly benefit would be mainly media, be it print, audio or visual, communication and transportation

கருத்துப்படங்களும் பட்டை கிளப்புகிறது:

myspace-twitter-social-networking-technology-voters

உங்கள் அலுவலில் ரிசப்ஷனிஸ்ட் இருப்பார். கொஞ்சம் அழகாக; நிறைய இளமையாக; அவ்வப்போது மாறிக் கொண்டு; அது போல் கட்சிகள் வலையில் செலவழிப்பதை இன்னும் அவசியமில்லாத அலங்காரமாகவே கருதுகின்றன. ஏன்?

  • ரிசப்ஷனிஸ்ட் நிரலாளர் ஆக மாறுவது எல்லாம், ‘கண்டு  கொண்டேன்; கண்டு கொண்டேன்’ தபூ சினிமாவில் நடக்கும். நிஜத்தில், வாக்காக மாறாது.
  • வளர்ந்த நாடுகளிலேயே வலையில் இருந்து எழுந்து வந்து வாக்குப் போடுவோர் அரிது. பாமர இந்தியாவில்:
Rank Country Literacy Rate
59 Maldives 96.3
85 China 90.9
86 Sri Lanka 90.7
87 Indonesia 90.4
88 Vietnam 90.3
89 Myanmar 89.9
93 Malaysia 88.7
109 Mauritius 84.3
147 India 61.0
160 Pakistan 49.9
162 Nepal 48.6
164 Bangladesh 47.5
165 Bhutan 47.0
  • இணையத்தில் சாதிச்சங்கத்திற்கு வலையகம் இருக்கிறதா? அப்படியே மொத்த உறுப்பினரின் வாக்குகளும் விழுமா?

obama-caste-community-india-cartoons-toi-ninan-mayavathy

  • சன் டிவி சீரியல், தி ஹிந்து ஓப்பன் பேஜ் அபாயின்ட்மென்ட் என்றிருப்போரே target இல்லை என்னும்போது இணையம் எம்மாத்திரம்?

தேவை: பொருத்தமான கற்பனை

அரசியல் கருத்துப்படங்கள்

ஓடுவது யார்?

  • விஜய்காந்த்
  • அன்புமணி ராமதாஸ்
  • சரத்குமார்
  • வைகோ

யானை பாட்டாளி மக்கள் கட்சியின் சின்னம்; என்றாலும் இங்கே யாருக்குப் பொருத்தம்?

  • சிரஞ்சீவி
  • ராகுல் காந்தி
  • அத்வானி

உங்கள் எண்ணத்தில் உதித்த மேற்கோள் என்ன!?

Therthal 2009: Our Next PM – Mayavathy

இந்தியாவின் அடுத்த பிரதமர் யார்? ஏன் மாயாவதிக்கு அந்த நாற்காலி கிடைக்கும்? எப்படி பொருத்தம்?

காங்கிரஸ், பாரதிய ஜனதா தலைமையிலான அணிகளுக்கு மாற்றாக வலுவான அணியை உருவாக்கிய இடதுசாரி கட்சிகள் மாநிலக் கட்சிகளின் தலைவர்களை மட்டும் சேர்ப்பது என்ற பழைய பாணியைக் கைவிட்டுவிட்டு, பாரதிய ஜனதா + காங்கிரசின் தோழமைக் கட்சிகளையே ஒன்றன்பின் ஒன்றாக வெளியில் இழுத்துள்ளனர்.

mayavathy-deve-gowa-tdp-trs-third-front-alliance

  • கடந்த தேர்தலில் 24 கட்சிகளுடன் கூட்டணி வைத்திருந்த பாஜக, இப்போது ஒரு கை விரல்கள் கூட காணாத அளவு சுருங்கி விட்டது. பாஜக கூட்டணியால் ஆட்சியை பிடிக்கமுடியாது.
  • முலாயம் சிங் யாதவ் குறித்து நீங்கள் அறிவீர்கள் அல்லவா? XLRI Alumna takes on Mulayam Singh Yadav « Gautam’s Net

up-corruption-samajwadimulayamundisclosedassets

மாவட்ட தேர்தல் அதிகாரியை மிரட்டிய சமாஜ்வாடி கட்சி

நீங்கள் ஒரு பெண் அதிகாரியாக இருப்பதால் என்னை நானே கட்டுப் படுத்திக் கொள்கிறேன். நீங்கள் மட்டும் பெண்ணாக இல்லையென்றால் கடுமையான விளைவுகளைச் சந்திக்க வேண்டி வந்திருக்கும். – ஆபாச வார்த்தைகளால் பெண் கலெக்டரை திட்டிய முலாயம்சிங்

நிதிப்பற்றாக்குறை, வருவாய்ப் பற்றாக்குறை, பொருளாதார மந்த நிலை, விஷம்போல் ஏறும் விலைவாசி

point-blank-blogspotrisingfoodprices

  • சாதாரண மக்களைப் பாதிக்கும் பொருளாதார கொள்கையில் எத்தகைய மாற்றத்தையும் பாஜக, காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் மேற்கொள்ளப்படவில்லை.

வேலையில்லாத் திண்டாட்டம், லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழப்பு, கட்டுமானத் தொழில் பாதிப்பு, வாகனம் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையில் தேக்க நிலை, ஜவுளித் தொழில் பாதிப்பு, ஏற்றுமதி பாதிப்பு

  • பொருளாதார கொள்கையை வகுப்பதில் காங்கிரஸ், பாஜக இரண்டுமே ஒன்றுக்கொன்று சளைத்தவை அல்ல. அவை பின்பற்றிய கொள்கைகள் தனியார் நிறுவனங்களுக்கும், தொழிலதிபர்களுக்கு சாதகமானவையாகும். இவ்விரு கட்சிகளும் தொழில் நிறுவனங்களின் நிதியை சார்ந்துள்ளதே இதற்கு முக்கியக் காரணமாகும்.

சட்டம்- ஒழுங்கு சீரழிவு

  • இவ்விரு கட்சிகளின் ஆட்சியில் எல்லையை கூட பாதுகாக்க முடியவில்லை. இதனாலேயே பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.

சமூக சீர்திருத்தம்

  • பகுஜன் சமாஜ் கட்சியின் தேர்தல் அறிக்கை: உத்தரப் பிரதேசத்தில் அரசு நிறுவனங்கள் தனியார் வசம் கொடுக்கப்பட்டால் கூட இட ஒதுக்கீடு முறையை கட்டாயம் அமல்படுத்த வேண்டும் என்ற நிபந்தனையோடுதான் வழங்கும்.
  • தங்கள் கட்சி மத்தியில் ஆட்சிக்கு வந்தால் உயர்வகுப்பினருக்கும் உரிய இட ஒதுக்கீடு அளிக்கப்படும் என்று மாயாவதி குறிப்பிடுகிறார்.

bsp-mayawati-uttar-pradesh-elephant-dalits-polls

  • பாரதிய ஜனதாவுடன் நட்புறவு: உத்தரப் பிரதேசத்தில் இதற்கு முன் மூன்று முறை முதலமைச்சராகப் பதவி ஏற்றார் மாயாவதி. அந்த மூன்று முறையுமே பாரதிய ஜனதாவின் உதவியால்தான் அவர் முதல்வர் ஆனார். பாரதிய ஜனதாவின் லால்ஜி தாண்டனைத்தான் மாயாவதி அண்ணனாகக் கருதுகிறார்.

adade-1mathy-third-mayavathy-pawar-jj-admk