Tag Archives: Films

Naan Kadavul – Music

Music Reviews:

Writer Previews:
jeyamohan.in » Blog Archive » சென்னையில்…: யூகிசேது எல்லார் பேரையும் சொல்லி வழக்கம்போல பாராட்டினார். நவீன இலக்கியம் என்றாலே ஜெயமோகன் தான் என்ற வகையில் அவர் சொன்னபோது இருவர் கைதட்டினார்கள். நான் மகிழ்ச்சி அடைய ஆரம்பிப்பதற்குள் ‘ஜெயமோகன் ஒழிக’ என்று அரங்கில் இருந்து ஒரு குரல் எழுந்தது.

நான் இதுவரை தொலைக்காட்சிகளில் தலைகாட்டியதில்லை. அந்த ஊடகம் மேல் அப்படி ஒரு கசப்பு உண்டு. மேலும் அதன் வழியாக ஒன்றும் வாசகர்கள் வரமாட்டார்கள் என்ற எண்ணம். எனக்குத்தெரிந்து தொலைக்காட்சி ஊடகங்களில் பேட்டி கொடுக்காத ஒரே எழுத்தாளன் நான் தான்

Movie Previews:
ராம் சுரேஷ்: நான் கடவுள் – பாலாவின் விகடன் பேட்டி: “பக்திப் படம் எடுப்பது என் வேலை இல்லை. எவருடைய நம்பிக்கை களையும் காயப்படுத்தக் கூடாது என்பது என் இயல்பு. அந்த அடிப்படை நாகரிகத்தில் நான் எப்போதும் தெளிவா இருக்கேன். இது விளிம்பு நிலை மனிதர்களின் உலகம்.

‘நான் கடவுள்’ படத்தில், ஆர்யா, பூஜாவைத் தவிர, அத்தனை பேரும் புதுமுகங்கள். உடல் வளர்ச்சி இல்லாத, மன வளர்ச்சி இல்லாத மனிதர்கள். அவங்க கையில வசனப் பேப் பரைக் கொடுத்து, ‘பேசுப்பா!’னு படம்பிடிக்க முடியாது. அவங்க ளோட பழகி, அவங்க நம்மோட பழகின்னு ஒவ்வொருத்தரையும் ஒரு குழந்தை போலப் பார்த்துக்கணும். ஆறு மாச ஷூட்டிங் முடிஞ்ச பிறகு, இப்போ அவங்க அத்தனை பேரும் என் குடும் பம்.

இன்னொரு பக்கம் காசி சாமி யார்கள். அகோரின்னு சொல்லப் படுகிற, நர மாமிசம் சாப்பிடுற சாமியார்களையும் நடிக்க வெச்சிருக்கேன். இப்படி ஒரு படத்தை உருவாக்குற வலியை, வார்த்தைகளில் புரியவைக்க முடியாது. ஏன்னா, இது வித்தி யாசமான படம்னு சொல்றதே பழைய வார்த்தையாகிப்போச்சு. இது நாம் கருணை காட்டாத, நம்மால் புரிந்துகொள்ளப்படாத, கடைசி மனிதர்களின் உலகம்!'”

Twitter Reviews:

  • நான் கடவுள் ஏழாம் உலகம் தான் – naadodi
  • நான் கடவுள்-ல் இளையராசா ஒரு Mediocre ஆகத் தெரிகிறார் (பாடல்களில் மட்டும்) …மது பாலக்கிருட்டின ணைவிட இ.ராசாவின் ரமண மாலையில் வரும் பிச்சைப் பாத்திரம் ஏந்திவந்தேன்…பாடல் பிழிவதோடு மட்டுமல்லாமல் ராசாவின் உச்சரிப்பும் சொக்க வைக்கும் இரு…இரு…அருள்…அருள்..களில் வரும் ரு வின் ஏற்றம் என்னை அசரவைத்திருக்கிறது. இம்மாதிரியான ஏற்ற இறக்கம் ராசாவிற்கு அடுத்தபடியாக கமலகாசனில் பாடல் உச்சரிப்பில் கண்டிருக்கிறேன் (அ) கேட்டிருக்கிறேன். – Potteakadai
  • Naan Kadavul songs reminded me of early 90s Rama.Narayanan movies. Not my cup… maybe I’ll start liking after a few mo re hrs of listening! – dynobuoy
  • நான் கடவுள் – ஹே ராம் கிளாஸை எதிர்பார்ப்பவர்கள் ஒழியக்கடவது. ராஜா kep t it simple. எனவே, complexity எதிர்பார்க்கும் என்னைப்போன்றவர்களுக்கு பெருத்த ஏமாற்றமாகத்தானிருக்கும். ஆனாலும் ஒன்றிரண்டு பாடல்கள் பிரபலமாகும். ஷ்ரேயா கோஷாலின் குரல் இனிமை. பிச்சை பாத்திரம் – பழைய ராஜாவின் வடிவத்தைவிட ஏமாற்றம்தான். மெது பாலகிருஷ்ணன் சொதப்பல்.- donion
  • ̀நான் கடவுள்’ மிகுந்த ஏமாற்றம்;புதிதாய் ஒரேயொரு சாதாரண பாடல். இனி எந்த இசைக்கொடையும் ராஜாவால் அளிக்க முடியாது என்ற அலுப ்பு மட்டுமே வருகிறது – rozavasanth
  • ராஜா பாடிய ஒரு காற்றில் கொஞ்சம் திறமையான இசைக்கோர்ப்பு. கண்ணில் பார்வை சில முறை கேட்டால் பிடிக்ககூடும். – donion
  • ஒரு பெரிய ரசிகர் கூட்டம் பயித்தியமாய் ராஜா அமைத்து வெளிவரும் இசைக்காக காந்திருந்து, முதல் நாள் ஒரிஜினல் சிடி வாங்கி, பலமுறை கேட்டு கழகக்கண்மணி போல, அற்புதம் மீண்டும் நிகழ்ந்ததாய் சமாதானமும் ஒவ்வொருமுறையும் சொல்லிக்கொள்கிறது – rozavasanth
  • ராஜா தன் ரசிகர்களுக்கு தருவதும் ஒரு அரசியல் தலைவரின் நரம்பு சிலிர்ப்பு தரும் அறிக்கையை போலத் தான் இருக்கிறது. – rozavasanth
  • இனி பாலாவின் திரையாக்கத்தில்தான் இருக்கிறது. – donion
  • ’நான் கடவுள்’ படம் இளையராஜாவுடன் உத்தம் சிங் இணைந்து இசை என்கிறார்களே, இவருக்கு எதற்கு உதவி? தனியே செய்யமுடியாதபடி கடினமான சப்ஜெக்டா? – nchokkan

நான் கடவுள் – அஹம்ப்ரம்மாஸ்மி

11. ட்விட்டரில் வந்த சுறுக் + நறுக் கருத்துக் கோர்வை

10. Movie Reviews in English: Naan Kadawul Cinema Viewers Takeaways

9. சுடச்சுட விமர்சனங்கள், பார்வைகள்ஸ்பாய்லர்கள் இருக்கலாம்

8. ‘Nenu Devudni’ – அஜீத் & பாலா சண்டை; வதந்தி, கிசுகிசு

7. கதை: சென்சார் விமர்சனம்முன்னோட்டம், விமர்சனம், தணிக்கை குழு கருத்து

6. Naan Kadavul – Music: விமர்சனம், மதிப்பீடு, பேட்டி

5. வசனகர்த்தா ஜெயமோகன் பேட்டிவீடியோ

4. நான் கடவுள் குறித்து அவரின் பதிவுகளில் எழுத்தாளர் ஜெயமோகன்வலைப்பதிவு, அனுபவக் குறிப்பு

3. Om Siva Om – Vijay Prakash: பாடல் வரிகள் & இளையராஜா: அர்த்தம், ருத்ரம்

2. “பிச்சைப் பாத்திரம்” – நான் கடவுள்: பாடல் வரிகள்

1. ஒரு காற்றில் அலையும் சிறகு & கண்ணில் பார்வை போன போதும்Lyrics


naan-kadavul-bala-cinema-posters

What were the notable & forgettable Tamil Movies in 2008: Thamil Cinema

சென்ற வருட நினைவுகூர்தல்: Tamil Film Songs – Best of 2007 Movie Music | 2007 – பேசப்பட்ட தமிழ் திரைப்படங்கள்

இந்த வருடம் – தமிழ்ப்பதிவர்களின் விக்கி, வாக்கெடுப்பு: தமிழ்நாட்டின் டாப் 10 விஷயங்கள்

என்னுடைய திரைப்பட பட்டியல்:

பேயறைய வைத்த பத்து:

  1. அறை எண் 305இல் கடவுள் – மகாமக கொடுமையான நாடகத்தனம்.
  2. குருவி – ஆளுங்கட்சி தயாரித்தால் ப்ரொடக்ஷன் க்வாலிடி கியாரண்டி; படத்தின் க்வாலிடி பணால்.
  3. பீமா – டாம் க்ரூய்ஸ் மாதிரி ஆகிட்டு வருகிறார் விக்ரம். த்ரிஷாவைத் தேய்ச்சால் மட்டும் போதுமா?
  4. பழனி – குரங்கு கையில் பூமாலை என்றால் பழமொழி; பேரரசு கையில் படம் என்றால் அதே மொழி புதுசாயிடும்.
  5. உளியின் ஓசை – அமெரிக்க அதிபர்களுக்கு ஓய்வெடுத்தபின் அருங்காட்சியகமோ நூலகமோ வைப்பது பொழுதுபோக்கு; அதே போல் தமிழினத் தலைவருக்கு திரைவசனம் எழுதுவது கொடும்போக்கு.
  6. நெஞ்சத்தைக் கிள்ளாதே – நடிக்கத் தெரிந்த நடிகையை கொண்டு நல்ல தலைப்பை நாறடித்த அகத்தியன்.
  7. வல்லமை தாராயோ – தன்னைத்தானே மூத்தப் பதிவராக நினைத்துக் கொண்டு சூடான இடுகைக்கும் சொந்தக்காரராய் பாவித்து படுத்தியெடுக்கும் தமிழ்ப்பதிவராக ரோல் தேவைப்பட்டால் சொல்லுங்க; பார்த்திபன் வருவார்; அவர் வந்தாலே தானியங்கியாக அகம்பாவ நிறைகுடம் ரொம்பும்.
  8. வைத்தீஸ்வரன் – தன்னைத்தானே சவுக்கால் அடித்துக்கொண்டு காசு கேட்கும் கழைக்கூத்தாடிக்கு கிடைக்கும் காசு கூட அதிகமாக இருக்கும். சரத்திற்கு ஏன் இந்த மசாக்கிஸ்ட் மனப்பான்மை? சமத்துவமாக ‘அரசி’யில் நடிக்க வரணும்.
  9. பசும்பொன் தேவர் வரலாறு: இட ஒதுக்கீடு
  10. அய்யாவழி: இட ஒதுக்கீடு

கொசுறு: சக்கரக்கட்டி: காசிருந்தா சேமநல உண்டியலில் நிதியாக்குங்க; அருணாச்சலத்தில் ரஜினி செஞ்ச மாதிரி ‘செந்திலை’ இயக்குநராக வைத்து படமெடுக்கவா செய்யணும்?

விமர்சகரின் விருப்ப பத்து:

  1. காஞ்சிவரம் – அவசியம் பாருங்க.
  2. பூ – புஷ்பமாரி பொழிகிறது; ஆளுயர பூமாலை குவிகிறது. வாசம் இன்னும் மோப்பம் பிடிக்காததால் நோ காமென்ட்ஸ்.
  3. சுப்ரமணியபுரம் – Difference between a quality movie & exploitative film: ‘Revolutionary Road’ uses 50s backdrop to define its characters. இங்கே எண்பதுகளைக் காட்டி மயக்கி சாதா சொக்குகிறது.
  4. தசாவதாரம் – Bolt ஆங்கிலப் படத்தில் அசகாய சூரனாக நாய் தன்னைத் தானே கற்பனை செய்து கொண்டு உலாவும். கமலும் கேயெஸ் ரவிக்குமாரும் அந்த உலகநாயக நாய்க்குட்டியாக (கவனிக்க போல் அல்ல) சஞ்சரித்ததாக வித்தகப் பதிவர்கள் எழுதி மாய்ந்த படம்.
  5. வாரணம் ஆயிரம் – இரண்டு விமர்சனம் எழுதியிருக்கோம்ல 🙂
  6. அரசாங்கம் – ஐந்து வயதுக்குட்பட்டோருக்குத்தானே விஜய்காந்த் படம் எடுப்பார் என்னும் நம்பிக்கையை பொய்யாக்கி, பத்து வயது மிகாதோரும் புளகாங்கிதமடைந்தனராம்!
  7. வெள்ளித்திரை – தெலுங்கில் அசல் பார்த்த ‘ரசிகர்்’ மீண்டும் விஜய்/’ரீமேக்’ ரவியை சகித்துக் கொள்வார். ஆனால், இந்த மலையாளத்தில் பார்த்தவரின் அங்கசேஷ்டையும் கலாரசனையும் இருக்கே! என்னத்த சொல்லுவேன்?
  8. தனம் – அதிகம் பேசப்படாததை எடுத்தாண்டதற்கான பொலிடிகலி கரெக்ட் ஒதுக்கீடு.
  9. இராமன் தேடிய சீதை – அந்த பசுபதி பிட் இன்னொரு முழுப்படமா இருந்திருக்கலாம்.
  10. பொம்மலாட்டம் – ‘கல்லுக்குள் ஈரம்’ இயக்குநர் சிகப்பு ரோஜாக்களாக டிக்..டிக்…டிக்!?

ரசிகரின் ரசனைக்கு பத்து:

  1. அஞ்சாதே – மற்ற படம் எல்லாம் டெட்ராய்ட்டின் மும்மூர்த்தி அமெரிக்க ஆட்டோ நிறுவனங்கள் போல் தத்தி தத்தி நடக்கும் சாலையில் லம்போர்கினியாக ஊர்வலம் காட்டி மிரட்டியது.
  2. பிரிவோம் சந்திப்போம் – அமெரிக்காவில் மனைவியை இட்டாண்டு வந்திருக்கீங்களா? எங்கோ கிள்ளி, நெளியவைக்கும்.
  3. கண்ணும் கண்ணும் – நம்பமுடியாத விஷயங்களை நம்பக்கூடிய முறையில் நடைகோணாத பாணியில் சொன்னது.
  4. யாரடி நீ மோகினி – என்னுடைய மேனசரை நான் டாவடித்த ஞாபகம் வந்து ஒரே ஃபீலிங்ஸ் ஆஃப் லோக்கல்ஸ் ஆயிடுச்சுபா!
  5. சரோஜா சுப்ரமணியபுரத்தை எல்லாம் கொண்டாடும் சிற்றிதழ் இந்த மாதிரி முயற்சிகளை புறந்தள்ளும் கபடவேடம் ஏனோ?
  6. ஜெயங்கொண்டான் – அதிகாரமும் உரிமையும் மருட்சியும் சமவிகிதத்தில் கலந்த சகோதர பாசத்தையும் சூட்டிகையான காதலும் சிவாஜிக்கு தங்கச்சியாக ஓவர்-ஆக்டிங் தந்துவிடும் அபாயமுள்ள பாவ்னாவிடம் அமரிக்கையும் தந்தற்காக ஷொட்டு.
  7. சந்தோஷ் சுப்ரமணியம் – சித்தார்த்தை சின்னப் பையனாகவும், ஜெனீலியாவை இன்னும் கொஞ்சம் க்யூட்டாகவும் கண்டிருந்தாலும், ஆங்கில மொழியாக்கம் படிக்காமல், பார்க்க வைத்தது.
  8. பொய் சொல்லப் போறோம் ஹிந்தியில் பார்த்திருதாலும், கதையை நம்பி கதாநாயக பிம்பங்களை உதறிய படம் என்ற வகையில் நல்ல படம்.
  9. குசேலன் வடிவேலுவை மட்டும் நீக்கிவிட்டால் படம் சூப்பர்.
  10. ஆயுதம் செய்வோம் – ‘எனக்கு நடிக்க வராது; நடனம் தெரியாது; கையையும் காலையும் சுத்துவேன்; நல்ல நகைச்சுவை ட்ராக்கை படம் நெடுக்க வைப்பேன்’ என்று சத்தியப் பிரமாணம் எடுத்து இருக்கும் சுந்தர் சியை மறப்பவர்களுக்கு ஈரேழு பிறப்பிலும் நற்கதி கிடைக்காது.

விமர்சனத்திலும் பார்க்காத ஐந்து:

  1. அபியும் நானும் – இன்னொரு வாரணம் ஆயிரம் இல்லியே?
  2. சில நேரங்களில் – நல்லா இருந்ததாம். வின்சென்ட் அசோகன் எப்படி இருக்கார்?
  3. சாது மிரண்டா – எப்படி இருக்கு?
  4. நேபாளி – மோசமில்லை என்கிறார்கள்; இனிமேல்தான் சன் டிவியில் தர்ம தரிசனம் ஆவணும்
  5. காதலில் விழுந்தேன் – சன் டிவி சந்தைப்படுத்தல் மட்டும்தான் USPஓ?

உங்க படம் இங்கே இடம்பிடித்திருக்கிறதா?

மும்பை தாக்குதல்: இரு பதிவுகள்

பாம்பே தீவிரவாதி

பாம்பே தீவிரவாதி

பதிவு ஒன்று: உள்ளூர் வார இதழில் அகஸ்மாத்தாக மும்பை குண்டுவெடிப்பு ஆரம்பம் ஆன அன்று வெளியான பாஸ்டன் ஃபீனிக்சில் வெளியாகிய சீதா நாரயணின் கட்டுரை:

The Phoenix > Features > Terror masala: “Bollywood’s colorful, multi-genre musicals serve up their most interesting character yet: the singing, dancing terrorist.”

As such, writers have recently begun to experiment with realism, to introduce region and dialect into the story, to present more nuanced explanations of characters’ motives, and to dare to depict social problems like political corruption, drug trafficking, gang violence, poverty, and, yes, terrorism. These are depressing problems, so what better way to present them than with a dash of Bollywood élan? Which brings us to an unusual movie protagonist: the singing, romancing, family-loving, dancing, emotionally open . . . terrorist.


பதிவு இரண்டு: என்ன நடக்கும் என்பதை சொல்லும் ப்ளாகேஸ்வரியின் இடுகை.

Blogeswari: நாளை?: ராம் கோபால் வர்மா எப்படி திரையாக்குவார் என்பதையும் மகேஷ் பட் கதை எவ்வாறு இருக்கும் என்று சொல்லியிருக்கிறது.

அவரின் முந்தைய அனுபவங்கள்: Blogeswari: நேற்று…. & மீடியாவிற்கு ஒரு வேண்டுகோள்

இளையராஜா பாடி இசையமைத்ததில் பிடித்தவை

ட்விட்டரில் ரோசா சொன்னதில் இருந்து:

1. உனக்கெனத்தானே இன்னேரமா
2. மெட்டி ஒலி காற்றோடு
3. தென்றல் வந்து தீண்டும் போது
4. எங்கே செல்லும் இந்த பாதை
5. தாழம்பூ தலையோடு (படம்:ஆல்பம்)

ட்விட்டரில் உ.வெங்காயம் சொன்னதில் இருந்து:

6. நிலா அது வானத்து மேல
7. காட்டுவழி போற புள்ள
8. ஜனனி, ஜனனி
9. சாமக்கேழி ஏ கூவுதம்மா
10. தரிசனம் கிடைக்காதா

ட்விட்டரில் ரோசா சொன்னதில் இருந்து:

11. உதய கீதம் பாடுவேன்
12. நான் தேடும் செவ்வந்தி பூ
13. உன் குத்தமா என் குத்தமா
14. நம்ம காட்டுல
15. பறவையே எங்கு இருக்கிறாய்.

16. ஒரு ஜீவன்
17. அறியாத வயசு
18. நிலா அது வானத்து மேலே (ரிப்பீட்டு)
19. நல்லதோர் வீணை
20. சந்தரரும் சூரியரும்

21. காதலென்பது பொதுவுடம
22. குண்டுமணி குலுங்குதடி
23. தோள்மேல தோள்மேல
24. பூ மாலையே
25. இந்தப் பூங்காற்று தாலாட்ட

26. ஒரு மஞ்சக் குருவி
27. அம்மன் கொயில் கிழக்காலே
28. என்ன பாட்டு பாட
29. கண்ணியிலே சிக்காதடி
30 கண்ணம்மா காதலெனும்

31. எங்கஊரூ பாட்டுகாரன்
32. காடெல்லாம் பிச்சிப்பூ
33. கண்மலர்களின் அழைப்பிதழ்
34. பொன்னோவியம் கண்டேனம்மா..
35. நில்..நில்..நில்.. பதில் சொல்..சொல்..சொல்.. எனை வாட்டாதே!

36. போடய்யா ஒரு கடிதாசு
37. வீட்டுக்கு வீடு வாசப்படி
38. ஆத்தாடி பாவாடை காத்தாட
39. நின்னை சரணடைந்தேன்
40. உன் குத்தமா என் குத்தமா

ட்விட்டரில் உ.வெங்காயம் சொன்னதில் இருந்து:

41. எடுத்து நான் விடவா (எஸ்.பி.பியுடன்)
42 தென்னமரத்துல தென்றலடிக்குது
43. தரிசனம் கிடைக்காதா (ரிப்பீட்டு)
44. ஆறு அது ஆழமில்ல
45. சந்தத்தில் பாடாத கவிதை

ட்விட்டரில் ரோசா சொன்னதில் இருந்து:

46. ஊரோரமா ஆத்துப்பக்கம்
47. காதல் ஓவியம்
48. அடி ஆத்தாடி
49. நேத்து ஒருத்தர ஒருத்தர பாத்தோம்
50. அந்த நிலாவத்தான்

ட்விட்டரில் உ.வெங்காயம் சொன்னதில் இருந்து:

51. செவ்வரளி தோட்டத்துல
52. புன்னகையில் மின்சாரம்
53. வெளக்கு வச்ச நேரத்துல
54. நான் தேடும் செவ்வந்திப்பூவிது (ரிப்பீட்டு)
55. தாஸ் தாஸ் சின்னப்ப

ட்விட்டரில் ரோசா சொன்னதில் இருந்து:

56. வாட வாட்டுது (சக்களத்தி)
57. சிறு பொன்மணி
58. துள்ளி எழுந்தது காற்று
59. சொர்கமே என்றாலும்
60. யாரோ யாரோ (உல்லாசம்)

61. ரசிகனே என் அருகில் வா
62. வீட்டுக்கு ஒரு மகனை
63. மலரே பேசு
64. திண்டாடுதே ரெண்டு கிளியே
65. வீணைக்கு வீணை

66. சோளம் விதைக்கையிலே
67. அம்மா எனும் வார்த்தைதான்
68. மருதாணி அரைச்சேனே
69. ஆலமரத்துக் குயிலே
70. தோட்டம் கொண்ட ராசாவே

71. தாலாட்டு மாறிப்போனதோ
72. ஒரு கணம் ஒரு யுகமாக
73. ஏப்ரல் மேயில
74. எம்பாட்டு எம்பாட்டு.(பூமணி)
75. தென்பாண்டி சீமையிலே

76. மைனா மைனா மாமன் புடிச்ச
77. இந்த மான் உன் சொந்த
78. சின்னமணிக்காக சேத்துவச்சேன் பாரு
79. அரிதாரத்தை பூசிக்
80.அப்பனென்றும் அம்மையென்றும் (குணா)

81. மச்சி மன்னாரு
82. திண்டாடுதே (ஆனந்தகும்மி)
83. கலயா நிஜமா (கூலி#1)
84. காதல் கசக்குதையா
85.உன்னோட உலகம் வேறு

86. என்ன பாடுவது .. பாட்டெல்லாம் எனக்கு படத்தெரியாது
87. காட்டு வழி கால் நடையா போற..(அது ஒரு கனா காலம்)
88. என்ன மறந்தாலும் (காதல் சாதி )
89. பாட்டாலே புத்தி சொன்னார்
90. தேவதை படத்தில் கவிதா கி.மூர்த்தியுடன் பாடியது

91. தென்ன மரத்துல தென்றல் அடிக்குது
92. காதல் கசக்குதய்யா
93. இந்திரன் வந்ததும்
94. கத கேளு (மை.ம.கா.ரா)

95.காட்டு வழி போற(ம.மம்ப)
96. கத போலத் தோணும், இது கதையும் இல்ல
97. சோழர் குல குந்தவை போல் – உடன்பிறப்பு
98. பாளையம் பண்ணப்புர சின்னத்தாயி பெத்த மகன் எரிய வராண்டா… ஓரம்போ, ஓரம்போ
99. கண்ணே என் கார்முகிலே

101. பொன்ன போல ஆத்தா என்னை பெத்து பொட்டா
102. ராஜா..ராஜாதி
103. எங்க ஊரு காதலை பத்தி – புதுப்பாட்டு
104. உள்ளங்கள் இன்பத்தில் ஆடட்டும் – கவரிமான்
105. அய்யா வூடு தொறந்துதான் கிடக்கு

106. மரத்த வச்சவன்
107. ஊரு உறங்கும் நேரத்தில் (கண்ணா உனை தேடுகிறேன்)
108. அந்த காண்டாமணி
109. வழி விடு வழி விடு என் தேவி வருகிறாள்


கொசுறு:

icarusprakash

  1. தாலாட்டு மாறிப்போனதே – உன்னை நான் சந்தித்தேன்
  2. ஒரு கணம் ஒரு யுகமாக – நாடோடித் தென்றல்
  3. உள்ளங்கள் இன்பத்தில் ஆடட்டும் – கவரிமான்
  4. சிறு பொன்மணி – கல்லுக்குள் ஈரம்
  5. கண்ணே என் கார்முகிலே -வா :: தங்கமான ராசா.
  6. மெட்டி மெட்டி இராகம் எங்கேயோ – மெட்டி
  7. துப்பாக்கி கையிலெடுத்து, ரெண்டு தோட்டாவு பையிலெடுத்து
  8. பொன்னோவியம், சங்கீதமாம் எங்கெங்கும் – கழுகு

kabishraj

  1. திண்டாடுதே ரெண்டு கிளியே – ஆனந்தக் கும்மி
  2. வீணைக்கு வீணை – வீரத்தாலாட்டு
  3. அம்மா என்னும் வார்த்தைதான் – தாலாட்டு கேட்குதம்மா
  4. மருதாணி அரச்சேனே – ராஜா கைய வச்சா
  5. வாடி என் கப்பக்கிழங்கே

Aravindank

  1. பொன்ன போல ஆத்தா என்னை பெத்து பொட்டா.. :: தேடி வந்த ராசா

nchokkan

  1. கத போலத் தோணும், இது கதையும் இல்ல … (வீரத் தாலாட்டு)
  2. ‘இந்திரன் வந்ததும் சந்திரன் வந்ததும் இந்த சினிமாதான்’

சினிமாப் படங்களும் வாக்குப்பெட்டியும்

உங்களுக்குப் பிடித்த அமெரிக்க ஜனாதிபதி யார்?

அமெரிக்க அதிபராக நடித்தவர்களுள் ஹாரிஸன் ஃபோர்ட் மிகவும் சிறப்பாக மிளிர்ந்ததாக கருத்துக்கணிப்பு வந்துள்ளது.

குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிடும் ஜான் மெகயினுக்கும் ஹாரிசன் போர்டுக்கும் ஆறு வயசுதான் வித்தியாசம். இரண்டாம் நிலையில் ஆப்பிரிக்க அமெரிக்கரான ஒபாமாவை ஒத்த மார்கன் ஃப்ரீமன் வந்துள்ளார்.

செய்தி: Harrison Ford voted best U.S. movie president | Entertainment | Reuters

தலை ஐந்து நடிகர்கள்:

1. Harrison Ford in Air Force One

2. Morgan Freeman in Deep Impact

3. Michael Douglas in The American President

4. Bill Pullman in Independence Day

5. Kevin Kline in Dave.

அது சரி. ‘தமிழக முதலமைச்சர்களாக எவ்வளவு பேர், எந்த எந்தப் படங்களில் நடித்திருக்கிறார்கள்?’ என்று ட்விட்டரில் கேட்டதற்கு வந்த பதில்கள்:

W & McCain

‘கரிசல்’ சன்னாசியின் ஜார்ஜ் W. புஷ் வாழ்க்கைப்படம் குறித்த திரை விமர்சனம்: டபிள்யூ

கருத்துப் படம்:

கொசுறு படம்:

அங்கும் இங்கும் – ட்விட்டரில் கதைத்த விவரம்

  1. மகளுடன் (மனைவியுடனும்) இரண்டு படங்கள் மீண்டும் பார்த்தேன்.’திருடா திருடா’ இன்னும் முடிக்கவில்லை. எஸ்.பி.பி. சீக்கிரமே நடிக்க வந்திருக்க வேண்டும்.
  2. இருவர்: ‘இந்தப் படம் இம்புட்டு நல்லா இருக்குமா?’ என்று நான் குசேலன் பார்த்தபிறகு ஆச்சரியப்பட்ட மாதிரி மனைவி அசந்து போனாள். நிறுத்தி நிதானமாக எம்ஜியாரின் ‘நான் ஏன் பிறந்தேன்’ ஆரம்பித்து ஜெயலலிதாவின் சுய வரலாறு எழுதிய கதை வரை பின்னணியோடு படம் பார்த்தாள். நிறையக் கேள்வி கேட்டாள்; நிறைய அளக்க முடிந்தது. படம் பார்த்து முடிக்க ஒரு வாரம் ஆனது:
    • எம் ஆர் ராதா சுட்டாரா? ஏன்?
    • வி என் ஜானகி முதல் மனைவி இல்லையா?
    • மு க.வுக்கு எத்தனை மனைவி? முக முத்து படத்தில் உண்டா?
    • கனிமொழிக்கு சொல்லிக் கொடுக்கும் பாடல் எதில் வருகிறது? என்ன அர்த்தம்?
    • ப்ரூக்ளின் ஆஸ்பத்திரி சென்றதெல்லாம் வரவில்லையே
    • ரிக்ஷாக்காரனா? கட்சி சின்னம் வருமா?
    • அண்ணா யார்? பெரியார் எங்கே?
    • ஆர் எம் வீரப்பனா அல்லது அமைச்சர்களுமா?
  3. அஞ்சலி: மணி ரத்னம் என்றாலே போர் என்ற மகளை நிமிர்ந்து உட்கார வைத்தது. Of course, அழுது விட்டோம்.
  4. மகளுடன் அமெரிக்க அரசியல்: பக்கத்து பென்ச் தோழி மெகயின் ஆதரவாளராம். இரண்டு காரணங்கள் – டினா ஃபே; அப்புறம் ஜான் வந்தால் பள்ளிகளுக்கு விடுமுறை அதிகரிப்பதாக அவளிடம் சொல்லி இருக்கிறாராம்.
  5. உருளைக் கறி: நாலு கிழங்கை எடுத்தோமா; குக்கரில் வேக வைத்தோமா; தோசைக் கல்லில் ரென்டு பெரட்டு பெரட்டினோமா என்பது என் பாணி. மனைவியோ மைரோவேவ் பயன்படுத்தி நாலு நாழி வேக வைக்கிறார். அதன் பிறகு தோலை உறிக்கிறார் (ஐய்யோ! அய்யய்யோ!!! சத்தெல்லாம் போவுதே); அதற்குப் பிரகு நான் ஸ்டிக் தவ்வா அழுமளவு ரோஸ்ட் நடக்கிறது. பசி வயத்தைப் பிடுங்க எந்த ஷேப்பில் காய் இருந்தாலும் கபளீகரம் ஆகிறது.
  6. ஸீக்வல்: எனக்குத் தெரியாத டேட்டாபேஸா என்று மிதப்போடு வகுப்புக்கு சென்றால் என்னென்னவோ சொல்லிக் கொடுத்தார்கள். கற்றது மைக்ரோசாஃப்ட் அளவு; கல்லாதது ஓபன் சோர்ஸ் அளவு!
  7. கட்டாந்தரையில் அண்ணாமலை: ஆர்வக்கோளாறில் டென்ட் அடித்து தூங்குவது போல் மெத்தையை வீட்டு கீழே படுத்து பார்த்ததில் முதுகு பேந்துவிட்டது. அடுத்த நாள் படுக்கையில் புரண்டு கூட உறங்க முடியாத அவஸ்தை. வாழ்ந்து கெட்ட குடும்பம் என்றால் இதான் அர்த்தமா?
  8. கல்யாணம், காதல்: முஸ்லீம்களுக்கு நடுவில் நிலவும் நிச்சயிக்கப்பட்ட திருமணம் குறித்து என்.பி.ஆர் புலம்பல் கலந்த பழைய பல்லவியை ஒப்பித்தது. புதிதாக எதுவும் இல்லாவிட்டாலும், போக்குவரத்தில் சிக்கிய காலைப்பொழுதில் கேட்டு வைத்தேன். ‘உங்களிருவருக்கும் காதல் உண்டா?’ என்று கொக்கி போட்டு தொக்கி நிற்கவிட்டார்கள். இந்தக் காதல் என்றால் என்ன?
    • வெள்ளி இரவு வெளியில் சாப்பிடுவது
    • அவ்வப்போது ‘ஐ லவ் யூ’ சொல்லிக் கொள்வது
    • அவ்வப்போது இன்னொருவரின் வேலையை எடுத்துக் கொண்டு ஆச்சரிய சந்தோஷம் அளிப்பது
    • எதிர்பாராத நேரத்தில் முத்தமோ சில்மிஷமோ நடத்துவது
    • கண்ணீரைத் துடைத்து விடுவது
    • பெற்றோரை நினைத்து ஏங்க வைக்காத சூழலை உருவாக்குவது
    • பொண்ணுக்கும் பூ பிடிக்கும் என்று மறக்காதது
    • எதிர்பார்ப்புகளில் சிக்கிக் கொள்ளாதது
  9. தமிழ் சங்கமும் ஹாலோவீனும்: பாஸ்டன் தமிழர்கள் மாறுவேடப் போட்டி நடத்துகிறார்கள். அமெரிக்காவில் சூனியக்கார கிழவியும் இளவரசிகளும் (சாரா பேலினும்தான்) ‘ட்ரிக் ஆர் ட்ரீட்’ சென்றால் இவர்கள் ஔவையார், கண்ணகி, வள்ளுவர், பாரதி, கட்டபொம்மன் கேட்கிறார்கள். நான் ‘பெரியார்’ ஆக போகட்டும். கவனம் திருப்புவாள் என்று நினைத்தேன். மனைவியோ ‘சிலப்பதிகாரம்’ என்று வசனத்திற்காக தேட என்னுடைய பதிவே கூகிளில் விடையாக வந்தேற ‘கொடும… கொடும என்று கோவிலுக்குப் போனா.. அங்கே’ என்று சொலவடைத்தாள்.
  10. ஒட்டுக்கேட்டல்: அவனுக்கு நாற்பத்தைந்து வயதிருக்கலாம். நான் முதன் முதலாக சென்ற உணவகத்தில் சரியான க்யூவில் நான் நின்றிருக்க, அவனோ தவறான க்யூவில் நின்றிருந்தான். கூட வந்திருந்தவள் (ஐம்பது இருக்கும்) அவனை என் பின்னே நிற்க சொன்னாள். அவர்களுடன் முப்பது பிராயத்தை பத்தாண்டுகள் முன்பு கடந்தவளும் வந்திருந்ததை என் அருகில் உள்ள இருக்கைகளில் அவர்கள் அமரும்போதுதான் கவனித்தேன்.

அவள்: ‘உன்னோட டேட்டிங் கதை என்னவாச்சு?’

அவன்: ‘ரெண்டு வாரம் முன்னாடி அந்த ரெஸ்டாரென்ட் போயிருந்தோம் இல்லியா? ரொம்ப யதார்த்தமா பேசிண்டிருந்தோம். ரொம்ப நல்லாப் போச்சு. என் வீடு வரைக்கும் வந்தா. ஞாயித்துக்கெழம கூப்பிட்டப்ப ‘ஏர்போர்ட்ல இருக்கேன்‘னு கட் பண்ணிட்டா. அந்த திங்கட்கிழம என்ன அவக் கூப்பிட்டிருந்தா! அவளே கூப்பிட்டா! நான் போன் செய்யாம அவளே பேசினது எனக்கு டென்சன குறைச்சது. சனிக்கிழம சந்திக்கலாம்னு சொன்னா. போன வாரம் நானும் ரெடியா இருந்தேன். ரெண்டரை ஆச்சு; மூன்றரை ஆச்சு; போன் பண்ணினா ரிங் போவுது; நாலரை ஆச்சு. எனக்கு அப்பவே தெரிந்து போச்சு. அஞ்சு ஆச்சு. நான் என் போன ஆஃப் செஞ்சுட்டேன். ஆறு ஆச்சு. இன்னும் அவ போன் ரிங் போயிண்டே இருக்கு. வாய்ஸ் மெஸேஜ் போவுது. ஆஃப் பண்ணல… எடுக்க மாட்டேங்கிறா! திண்ணக்கம். எல்லாம் அந்த ஏர்போர்ட் விவகாரமாத்தான் இருக்கும். டெக்ஸ்ட் மெஸேஜ் செஞ்சேன். அதுக்கும் பதில் இல்ல. அடுத்த நாள் கூப்பிட்டா! ஏதோ சால்ஜாப்பு சொல்றா. எனக்குத் தெரியும்! அவ என்ன ஏமாத்தறா! கடுப்பா பேசி கட் பண்ணிட்டேன். டெக்ஸ்ட் செஞ்சா. மரியாதையா இருக்காதுன்னு நானும் பதில் போட்டேன். திங்கள், செவ்வாய், புதன்… டெக்ஸ்ட்டா செய்யறோம். எனக்குப் பொறுக்கல. போன் செஞ்சேன். அவ எடுக்கல. ஆனா, டெக்ஸ்ட்டுக்கு மட்டும் உடனுக்குடன் பதில்!’

இன்னொருவள்: ‘அவ டீச்சர்னு சொன்னியே? க்ளாஸ்ல இருந்திருப்பாளா இருக்கும்?!’

அவன்: ‘அதெப்படி? க்ளாஸில் இருந்தா — டெக்ஸ்ட் ஒண்டி செய்ய முடியுமா? நேத்திக்குக் கூப்பிட்டா. கட் அண்ட் ரைட்டா சொல்லிட்டேன். சரிப்பட மாட்டேன்னு. அவ இந்த சனிக்கிழம கூப்பிடுவான்னு நெனக்கிறேன். அந்த ஃப்ளைட் பார்ட்டி இந்த வீகெண்ட் போய் சேர்ந்துரும். அதற்கப்புறம் என்ன சாப்பிட அழைப்பான்னு எனக்குத் தோணுது’

நான் சாப்பிட்டு முடித்துவிட்டதால் நடையைக் கட்டிவிட்டேன். அவர் தொடர்ந்து கொண்டிருந்தார்.

கடவுள் அமைத்து வைத்த மேடையோ, கல்யாண மாலை கொண்டாடுமோ, மனைவி அமைவதெல்லாமோ முணு முணுக்காமல் – போகிற வழிக்கு ஸீக்வல் பாராயணித்துக் கொண்டேன்.

Kuselan – DVD Experiences

  • குசேலன் குறுவட்டில் சந்திரமுகியும் இருந்தது.
  • மிக மிகக் குறைந்த எதிர்பார்ப்புடன் பார்த்ததாலோ என்னவோ!? படம் ரொம்பவே பிடித்துப் போயிருக்கிறது!
  • வடிவேலு காட்சிகள் குறித்து எக்கச்சக்க எச்சரிக்கை இருந்ததால், அவரின் அனைத்து சீன்களும் 5 பாடல்களும் கழற்றியபின் படம் ஒன்றரை மணி நேரம்தான்.
  • மீனா அதற்குள் தொலைக்காட்சி தொடருக்கு சென்றிருக்க வேண்டாம். சங்கீதா போல் நாயகி முதல் அனைத்து கதாபாத்திரங்களுக்கும் பாந்தமாக இருப்பார்.
  • கலக்கல்
    • ஆர் சுந்தர்ராஜன் உடன் ஆன கேள்வி – பதில்
    • கடைசி 20 நிமிடங்கள்
  • மற்றவர்கள்
    • சந்தானம் – சமையற்காரனாக; தோரணை காட்டும் சினிமாக்காரனாக.
    • சந்தானபாரதி – சிகையலங்காரம்
    • லிவிங்ஸ்டன் – வெறுப்பின் உச்சியை பிரபலிக்கும் ஒன்பதாவது அதிசயம் கூட எதார்த்தமான சித்தரிப்பு

‘நல்லவனாக இருந்தால் மட்டும் போதாது; வல்லவனாக வாழவும் தெரியணும் பாலு’