Tag Archives: Authors

10 Similes between Writer Charu Nivethitha & Actor Kamalhasan

சாரு நிவேதிதா கமல்ஹாசன்
வயது 56 என்று சொல்லிக் கொள்கிறார் தெளிவாகவே 56 எனப் பகிர்ந்துள்ளார்
பார்த்தது, படித்தது, நண்பருடன் பேசியது, நண்பர் எழுதியது எல்லாவற்றையும் படைக்கிறார். பார்த்தது, படித்தது, நண்பருடன் பேசியதன் கலவையாக படைக்கிறார்.
35 ஆண்டுகளாக எழுதுகிறார் 50 ஆண்டுகளாக கலைச்சேவை
எங்கிருந்து எடுத்தார் என்பது ஆபீதின் மாதிரி பலர் முயன்று தெரிவித்தாலும் தெரியவருவது துர்லபம். சுட்ட ஒரிஜினலை கண்டுபிடிப்பது இவரிடம் எளிது.
சாரு நிவேதிதாவிற்கு கடிதங்கள் எழுதும் தேவதைளில் அனேகர் ரஷ்மி, தீபிகா போல் மூன்றெழுத்து கனவுக்கன்னி. அவ்வப்போது நேஹாவும் உதயமாகிறார். ஸ்ரீதேவி, சினேகா, அசின், த்ரிஷா
சாரு ‘கமினே‘ பார்த்ததாக எழுதினார். கமல் ‘ஜெயமோகன்‘ பிடித்ததாக மேடையில் பேசினார்.
மனதில் தோன்றியதை வரையும் சர்ரியலிசம், குழப்பினாலும் கவர்கிறது; சாரு claim செய்யும் எழுத்துவகை சறுக்கியலிசம் ஆகி விடுகிறது ஆஸ்கார் படங்கள் புரிந்து மனதில் நிலைக்கிறது; ஹே ராமும் ஆளவந்தானும் சறுக்கியலிஸம்
அமரந்தா, அவந்திகா வாணி, சரிகா
நடிகர் திரைப்பட நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர், திரைக்கதையாசிரியர், பாடலாசிரியர், பின்னணிப் பாடகர், கவிஞர்
சாகித்ய அகாடெமி, ஞானபீடம், இலக்கிய நோபெல், கலைமாமணி கிடைக்கக் கூடிய நாவல் எழுதிக் கொண்டிருப்பார். மருதநாயகம் வெளியாக நிறைய வாய்ப்புண்டு.

பாஸ்டனும் ஞாநியும்

நன்றி: ஆப்பிள் தேசம் – 9: நாடகத்துக்குக் கூட்டம் அதிகம்! – ஞாநி

பாஸ்டனுக்கு என்னை அழைத்த பாலா கணினித் துறையில் உயர்பதவியில் இருப்பவர். தீவிரமான வாசகர். சென்னை மந்தைவெளிக்காரர். சாந்தோமிலும் பிலானியிலும் படித்தவர். அப்பா சமையற்கலைஞர். அம்மா பக்திக்கட்டுரைகளும் கதைகளும் எழுதுபவர். பாலா தனக்கென்று மூன்று நான்கு வலைப்பூக்கள் வைத்திருப்பது தவிர, அம்மாவின் படைப்புகளை வெளியிடவும் வலைப்பூ வைத்திருக்கிறார்.

பாஸ்டனில் நான் என்ன பார்க்க விரும்புகிறேன் என்று அவர் போனில் கேட்டிருந்தபோது சொன்ன பல விஷயங்களில் ஒன்று நாடகம். எனவே என்னை விமான நிலையத்தில் வரவேற்று அங்கிருந்து நேராக ஒரு நாடக அரங்கிற்கு அழைத்துப் போய்விட்டார்.

அமெரிக்காவில் பள்ளியிலும் கல்லூரியிலும் பல்கலைக்கழகங்களிலும் நாடகம், இசை நாடகம் முதலிய நிகழ் கலைகள் முக்கிய இடம் வகிக்கின்றன. பாஸ்டனில் நான் பார்த்த நாடகம், வால்தாம் பப்ளிக் ஸ்கூல்ஸ் எனப்படும் பள்ளிக்கூட அமைப்பும் ரீகிள் மியூசிக் தியேட்டர் எனும் குழுவும் இணைந்து நடத்தியவை. வால்தாம் பள்ளியின் மாணவர்களும் ஆசிரியர்களுமாக 41 வருடங்களுக்கு முன்னால் உருவாக்கிய குழுதான் ரீகிள். இப்போது அதில் முழு நேரத் தொழில்முறை நடிகர்களுடன் பள்ளி மாணவர்களும் இணைந்து நாடகங்களைத் தயாரிக்கிறார்கள்.

நான் பார்த்த, சிண்ட்ரெல்லா கதையை அடிப்படையாகக் கொண்ட இண்ட்டு தி உட்ஸ் (காட்டுக்குள்ளே) ஓர் இசை நாடகம். நடித்தவர்களில் யார் முழு நேர நடிகர், யார் மாணவர் என்று பிரித்துச் சொல்லமுடியாத ஒரே தரத்தில் உயர்ந்த நடிப்பு. அபாரமான இசை. காட்சி மாற்றங்களும் ஒளி, ஒலி அமைப்புகளும், நம்ம ஊர் ஆர்.எஸ்.மனோகரைப் போல அங்கே ஊருக்கு நாலு பேராவது இருக்கிறார்கள் என்று தோன்றவைத்தன.

நாடக டிக்கட்டுகள் 57 டாலர்கள் முதல் மாணவர்களுக்கு 25 டாலர்கள் என்று வெவ்வேறு விகிதங்களில் இருந்தன. நாடகத்தில் பங்கேற்கும் எல்லாருக்கும்சம்பளம் தரப்படுகிறது. இதை புரவலர்களிடமிருந்து நன்கொடையாகக் கேட்கிறார்கள். பின்மேடைக் கலைஞர்களுக்கு 24 டாலர். பிரதான நடிகருக்கு 500 டாலர். பிரபலமான நடிகரென்றால் 1000 டாலர். இயக்குநருக்கு 5000 டாலர். துணை நடிகர்களுக்கு 100 டாலர். ஒவ்வொரு பாத்திரத்துக்கும் மாற்று நடிகரை தயாராக வைத்திருக்கிறார்கள். இவர்களுக்கு ஊதியம் 50 டாலர்.

காட்டுக்குள்ளே நாடகம் தொடர்ந்து பத்து நாட்களுக்கு நடத்தப்பட்டது. அடுத்த எட்டு நாள் இன்னொரு நாடகம். பிறகு அதே போல இன்னொன்று என்று கோடைக்காலத்தில் தொடர்ந்து நாடகங்கள் நடத்தப்படுகின்றன. நான் சென்ற அன்று அரங்கு நிறைந்து வழிந்தது. எந்திரனுக்கு வருகிற கூட்டம் மாதிரி அங்கே நாடகம் பார்க்க வருகிறார்கள். அந்த அளவுக்கு சினிமாவுக்குக் கூட வருவதில்லை.

அமெரிக்காவில் என் சுற்றுலாவின்போது வேறு நகரங்களிலும் சில நாடகங்களைப் பார்த்தேன். அவற்றைப் பற்றி அந்தந்த நகரங்களுக்குச் செல்லும்போது விரிவாகப் பார்ப்போம்.

நாடகம் பார்த்துவிட்டு பாலா வீட்டுக்கு வெஸ்ட்ஃபோர்டுக்கு சென்று அவருடன் தங்கினேன். இரவு நேரம் பின்பக்கம் தோட்டத்தைப் போய் பார்க்க வேண்டாம். கரடி வந்தாலும் வரும் என்றார். காட்டுக்குள்ளே வீடுகளைக் கட்டியமாதிரி இருந்தது.

பாலா வீடு அருள் வீட்டுக்கு நேர்மாறு. அருள் வீட்டில் பொருட்கள் எல்லாமே கச்சிதமாக ஏறத்தாழ ஒழுங்காக சீராக வைக்கப்பட்ட சூழல் இருந்தது. பாலா வீட்டின் உட்புறம் ஒரு மந்தவெளி ஃபீலிங்கைக் கொடுத்தது. எந்த அறையிலும் எதுவும் இருக்கலாம் என்ற போக்கில் வாழ்வது நமக்கு சகஜமானது. இப்போது கூட என் கட்டில் மீது புத்தகங்கள், நோட்டுகள், சார்ஜர், மருந்துப் பெட்டி, வாட்டர் பாட்டில், டவல், ஜட்டி எல்லாம் இருக்க, அதன்மீது என் லேப்டாப் மினி கணினியை வைத்துக் கொண்டு கட்டிலை மேசையாக்கி நான் தரையில் உட்கார்ந்து எழுதுகிறேன். பாலாவின் வீடு இதே போல இருந்தது.

அவர் மனைவியும் குழந்தைகளும் வெளியூர் சென்றிருந்தார்கள். அதனால் இப்படி இல்லை எப்போதுமே இப்படித்தான் என்றார் பாலா. அவருடைய நூலகம் என்னை பிரமிக்க வைத்தது. தமிழில் கடந்த பல பத்தாண்டுகளில் வந்திருக்கக்கூடிய எந்த முக்கியமான புத்தகமானாலும் அங்கே இருந்தது. எல்லாமே தீவிரமான வாசிப்புக்குரியவை. அதற்கு நிகரான ஓர் ஆங்கில நூலகம்.

வெளிநாட்டில் வாழ்ந்தாலும் வீட்டுக்குள் நம்ம ஊர் மாதிரியே சூழலை ஏற்படுத்திக் கொண்டு இரு உலகங்களிலும் சஞ்சரிக்கும் கலையை நம்மவர்கள் கற்று வைத்திருக்கிறார்கள்.

ஞாநி: பயோடேட்டா

முந்தைய பதிவு: ஞாநி

புத்தகங்கள்

பழைய பேப்பர்:  Collection of articles on current affairs.

மறுபடியும்: Collection of articles on current affairs.

பலூன்: நாடகம்

தவிப்பு: ஆனந்த விகடனில் வெளியான தொடர்கதை – நாவல்

கண்டதைச் சொல்லுகிறேன்: Collection of articles publishedin India Today Tamil edition

அய்யா:  Filmscript of five part serial on life of Periyar E.V.R.

கேள்விகள்: Interiews with public persons from different walks of life

மனிதன் பதில்கள்: Answers to readers’ questions published in Dinamani kadhir

நெருப்பு மலர்கள்: Articles about unknown and unsung women who shaped history

பேய் அரசு செய்தால்: Articles on current affiars

அயோக்கியர்களும் முட்டாள்களும்: Articles on culture, media and politics

? : Collection of articles on issues

அறிந்தும் அறியாமலும்:  On life education for adoloscents and parents

ஓ பக்கங்கள்:  (five volumes)

என் வாழ்க்கை என் கையில்: (on lifeskils)

தியேட்டர்

1976 –1977: founder member of கூத்துப்பட்டறை – Koothu-p-pattarai, a group formed to revive traditional tamil theatre form of kooth and to evolve a modern idiom of theatre from these roots.

1977: trained in theatre by Prof.S.Ramanujam and Malayalam playwright G.Sankara Pillai.

1978: founded ‘Pareeksha’ – பரீக்ஷா: theatre group to work among the urban middle class audiences of Madras.

1978: founded வீதி open space theatre group.

1980: trained in theatre by bengali theatre person Badal Sircar.

மேடை நாடகம்

Evam Indirajith, Michil, Boma , Bakhi Itihas ( all bengali plays by Badal Sircar translated into tamil)

கமலா (marathi play by Vijay tendulkar translated into Tamil)

Jadhugruhadaha ( bengali play by Ranjith Roy Chaoudhry translated into Tamil)

Another 20 original tamil plays by eminent tamil writers

  • Indira Parthasarathy,
  • N.Muthuswami,
  • Asokamithiran,
  • Sundara Ramaswami,
  • Jeyanthan,
  • Ambai C.S.Lakshmi,
  • K.V.Ramaswami,
  • S.M.A.Ram,
  • Aranthai Narayanan.

எழுதிய நாடகங்கள்

ஏன் ( on homosexuality) (1979)

பலூன் ( about a protest theatre group and the judicial system) (1981)

A Tamil play without a name ( about nameless and forgotten women activists of India in early 20th century, who struggled for rights to education and equality) for workshop production by students of women’s christian college(1999)

Written several one actor plays for both men and women.

மொழிபெயர்ப்பு

Exception and the rule by Bertolt Brecht

Harold Pinter‘s One for the road

J.B.Priestley‘s Inspector calls.

The caucasian chalk circle by Bertolt Brecht

Mother of 1084 by Mahaswetha Devi

பட்டறை

Conducted numerous workshops for children and college students.

Trained over 400 students of M.S. University, Tirunelveli, South Tamilnadu, over a period of two years, in basic skills of theatre. (1995- 1996)

Trained students of Women’s christian college, Madras and directed a workshop production with them. (1999 and 2001 )

Trained students of Bharathidasan university – two batches to prepare them for a tour of India – people and places under vision 2020 programme organised by Lions International. Conducted the tour  for them in 2006 when they met the President of India.

தொலைக்காட்சி & விழியம்

Scripted and directed several tamil television serials for Doordarshan, Madras. Best actress award for the serial விண்ணிலிருந்து மண்ணுக்கு (about a theatre group and a fallen filmstar) (1990)

Best dirctor, best serial and best production awards for the serial பிக்னிக் ( story: writer sujatha) from santhome communication centre.( this fiction serial is about child labour in garages)

Scripted and directed a docu- drama serial வேர்கள் on women freedom fighters of India for Doordarshan during the golden jubilee of Indian independence.( 1997)

Scripted and directed a docu- drama serial அய்யா on the life of rationalist and thinker Periyar EVR for Doordarshan during the 125th birth anniversary of the leader( 2004)

Scripted and directed about 20 video documentaries for M.S.Swaminathan research foundation and its project ACCESS. Subjects ranging from gender issues to bio villages to pre school education for children.

Video films ‘ Reminiscences of Kanuvai Gopal’ about a boy in a child care centre, and devils in the deep sea about problems of fish workers participated in the first international video festival on science and development at Tiruvananthapuram.

Video film ‘What are you Doing?‘ on gender issue selected for screening at the International documentary festival ( miff 2000)at Mumbai in February 2000.

Scripted and produced over 20 episodes of quiz and 10 episodes of children’s programme for GEC tamil channel.(1995)

Scripted and produced 60 minute teaching aid for teachers of early childhood eduction centres in seven languages , titled ‘ Let us learn to help them learn‘ (2001)

Scripted directed and produced two part serial ‘ஆனந்தி‘ for ஸ்டார் விஜய் டிவி (2009)

தொகுப்பாளர்

Compered the international film festival at chennai in 1990 for doordarshan.

Scripted and produced several interview programmes with different personalities for doordarshan and all india radio. Popular programmes include interview with artiste குஷ்பு, profiles on young film makers, on veteran music director கே.வி மகாதேவன்.

Presented news and music programme on FM chennai for m/s priyavision for one year.

Compered election analysis programmes in english for Asianet at chennai. Participated in election analysis programmes of தூர்தர்ஷன் over several elections.

திரைப்படம்

Founder of the one reel movement in colloboration with Pyramid Saimira group,  to show 10 minute films before main films in theatres aimed at introducing new themes and new talents to cinema.Directed and produced the first one reel ‘திருமதி ஜேம்ஸ் இப்போது என்ன செய்ய வேண்டும்?‘ featuring actors ரோகிணி and Neelson based on a short story by writer திலீப்குமார். ( december 2007)

Directed the second one reel movement film உள்ளேன் ஐயா featuring actor ‘தலைவாசல்’ விஜய் based on a short story by writer அன்பாதவன் ( february 2008)

Has started a movement for taking cinema directly to home, called கோலம் where the creator and connoisseur directly meet. (2009 august). First digital video movie விசாரணை to be released in July 2010.

இன்ன பிற

Produced several features for all india radio and doordarshan. Scored music for a television short film. Compered a radio programme for one year.conducted interviews with political leaders, film artistes, and scholars for doordarshan.

Translated live into Tamil public speeches of

  • V.P.Singh,
  • George Fernandes,
  • Nagabhushan Patnaik,
  • Asghar Ali Engineer,
  • Nikhil Chakravarthy and
  • Medha Patkar.

வெளிநாட்டு வருகைகள்

Visited Australia in 1994 for festival of India as a writer delegate sent by Government of India.

Visited Nepal in 1998 to attend a workshop on impact of satellite channels on South Asia.

Visistd Singapore and Malaysia in 2009.

Njaani visit to US: அமெரிக்காவில் ஞாநி

எழுத்தாளர் ஞாநி Author & columnist O Pakkangal njaaniஅமெரிக்கா பக்கம் எட்டிப் பார்க்கிறார். தற்போதையப் பயணத்திட்டம்:

ஜூன் 17 – வருகை
ஜூன் 24 வரை சிகாகோ, நயாகரா, கொலம்பஸ்
ஜூன் 25 முதல் 28 வரை – பாஸ்டன் / நியு இங்கிலாந்து வாசம்
ஜூன் 29 – ஜூலை 5 வரை: நியு யார்க், ஃபிலடெல்பியா;
ஜூலை 5 – 7: வாஷிங்டன் டிசி.
ஜூலை 11 – ஊர் திரும்புதல்

ஞானி இணையதளம் :: www.gnani.net

சிறு இன்ட்ரோ

தொலைக்காட்சியில் அவரின் ‘கண்ணாடிக் கதைகள்’ தொடருக்கு வெகுசன வரவேற்பு இருந்தது.

விகடன் குழுமத்திலிருந்து வெளியான ‘ஜூனியர் போஸ்ட்’ இதழை அவர்தான் பொறுப்பேற்றுப் பார்த்துக்கொண்டார்.

அவர் விகடனில் எழுதிய ‘தவிப்பு’ தொடர்கதை – புனைகதையா, நிஜ சம்பவத் தொகுப்பா என மயக்கம் தரும் அளவுக்குக் கற்பனையும் உண்மைச் சம்பவங்களும் பின்னிப் பிணைந்திருக்கும்.

கதாசிரியர், கட்டுரையாளர், பத்திரிகையாளர், குறும்பட இயக்குநர், விமர்சகர், நாடகாசிரியர் எனப் பல பரிமாணங்கள் கொண்டவர் ஞாநி.

கலைஞர் ஓய்வு எடுத்து கொள்ளலாம், ஸ்டாலினுக்கு பொறுப்புக்களை வழங்கலாம், ஒரு தந்தையாக கலைஞர், என்பது வயதை தொடும் ஒரு மனிதனாக கலைஞர் ஓய்வு எடுத்து கொள்ளலாம் என்று ஒ பக்கங்களில் எழுதியதால் ஆனந்த விகடன் அரண்டு போய் தொடரை நிறுத்தியது.

சிவாஜி (2007) படத்தில் சரக்கு இல்லை என்பதை ஆணித்தனமாக அடித்து கூறிய அஞ்சாநெஞ்சன். நடிகர் திலகம் சிவாஜியின் இடம் இன்று தமிழ்த்திரையுலகில் காலியாக இருப்பதாகவும் அதை நிரப்புவதற்கு கமலை விட விக்ரமிற்கே அதிக தகுதி இருப்பதாகவும் கூறி இருக்கிறார்.

தைரியமாக தன் கருத்தை வெளியிடுவதில் ஞானிக்கு நிகர் ஞானிதான். ஒரு முறை ஏதோ ஒரு நடிகையின் சர்ச்சையில் எழுத்தாளர் சுஜாதாவே கருத்து சொல்ல பயந்து கொண்டு, நான் என்ன ஞானியா என்று சொன்னதாக நினைவு.


ஜெயமோகன் எழுதிய அறிமுகம்

தமிழில் நான் எப்போதுமே கவனித்து வாசிக்கும் இதழாளர்களில் ஒருவர் ஞாநி. நான் சின்னப்பையனாக இருந்த காலத்தில் நாடகங்கள் அழிகிறதா என்ற ஒரு விவாதம் குமுதத்தில் வந்தது. அதில் ‘ருத்ராட்சப்பூனைகளே !’என்று சீறி ஞாநி எழுதிய குறிப்பு வெளியாகியிருந்தது. அதுதான் நான் அவரைப்பற்றி படித்த முதல் தகவல். அதன் பின் இந்த முப்பது வருடத்தில் அவரை நுட்பமாகக் கூர்ந்து கவனிப்பவனாகவே இருந்திருக்கிறேன். அதன் பின் அவர் சங்கராச்சாரியாரை பேட்டிகண்டு எடுத்து வெளியிட்டது எனக்கு மிகவும் பிடித்த கட்டுரையாக இருந்திருக்கிறது.

ஞானியின் அரசியல் சமூகவியல் கருத்துக்களில் எனக்கு எப்போதுமே முரண்பாடுதான். அவர் தவறாகச் சொல்கிறார் என்று தோன்றுவதில்லை. மாறாக எளிமைப்படுத்திவிடுகிறார் என்று தோன்றும். சமூக இயக்கம் என்பது எப்போதுமே முழுக்கப் புரிந்துகொள்ள முடியாத முரணியக்கத்தின் விளைவு. வன்முறை இல்லாமல் அம்முரணியக்கம் நிகழ்மென்றால் அது வளர்ச்சிப்போக்காகவே இருக்கும் என்பது நான் கொண்டுள்ள இலட்சியவாத நம்பிக்கை. ஞாநி அந்த முரணியக்கத்தை காண்பதில்லை. கறுப்பு வெள்ளைகளில் நிற்கும் தீவிர நோக்கு அவருடையது. அந்த எளிமைநோக்குதான் அவரை ஈவேராவை நோக்கி இழுத்திருக்கிறது.

ஆனால் தன்னளவில் நேர்மை கொண்ட இதழாளர் என நான் அவரை நினைக்கிறேன். தன் கருத்துக்களுக்காக போராடக்கூடியவர். அதன் பொருட்டு எதையும் இழக்க தயாராக இருப்பவர். சலியாத சமூகக் கோபம் கொண்டவர். தமிழில் இன்றைய தலைமுறையில் அப்படி சிலரை மட்டுமே நம்மால் சுட்டிக் காட்ட முடிகிறது. ஞாநி நான் சொல்லும் பெரும்பாலான கருத்துக்களை எதிர்ப்பார். ஆனால் அவர் தமிழில் ஒரு தார்மீக சக்தி என்றே நான் எப்போதும் எண்ணி,சொல்லி வருகிறேன்.

தமிழில் அவ்வாறு சமூகக் கோபம் கொண்டவர்களாக காட்டிக் கொள்பவர்களில் பெரும்பாலானவர்கள் வெறும் தனிநபர்க் காழ்ப்பும் உள்ளடங்கிய சாதிக்காழ்ப்பும் மட்டுமே கொண்டவர்கள் என்பதை நான் பொதுத்தளத்தில் செயல்பட ஆரம்பித்த இந்த முப்பது ஆண்டுகளில் கண்டு சலிபப்டைந்திருக்கிறேன். ஞானி தனிப்பட்ட காழ்ப்புகள் அற்றவர். தனிப்பட்ட கோபங்களுக்கு தாவிச்சென்றாலும் உடனே குளிர்ந்துவிடுபவர்

எனக்கும் ஞாநிக்கும் சில பொது அம்சங்கள் கூட இருக்கின்றன. அவரைப்போலவே நானும் அசோகமித்திரனின் எழுத்துக்களின் தீவிர வாசகன். அவரை போலவே எனக்கும் பழைய போஸ்ட் கார்டு போல உடம்பெல்லாம் முத்திரைகள். ஞாநியை பார்ப்பனர் என்றும் [ இந்துத்துவர் என்றும் கூட !] பிற்போக்குவாதி என்றும் முத்திரை குத்தும் எழுத்துக்களை நான் சென்ற எத்தனையோ வருடங்களாக கண்டுவருகிறேன். அதை முன்வைப்பவர்கள் எவருமே எளிய அடிப்படை நேர்மை கூட இல்லாத அரசியல் ஆத்மாக்கள்

பெரும்பாலான சமயங்களில் ஞாநி முத்திரைகளுக்கு எதிராக அதீதமாக உணர்ச்சிவசப்படுவார். நேரடியாக அவர் எகிறுவதைக்கூட கண்டிருக்கிறேன். என்ன செய்வது, தமிழில் எழுதினால் இது நிகழாமலிருக்காது. நான் சிரிக்கக் கற்றுக் கொண்டுவிட்டேன். அவர் இன்னும் கொஞ்சம் புன்னகையாவது செய்யலாம்.

வாசகர்களுக்கு ஆர்வமூட்டும் அரசியல் சமூகவியல் விவாதங்களுக்காக அதை சிபாரிசு செய்கிறேன்.
www.gnani.net

மேலும்:

ஞாநி அவரது அடையாளமான நீளமான ஜிப்பா போட்டு கிளம்பினார். அந்தக்காலத்தில் அவர் ஜமுக்காளத்தால் ஆன கல்கத்தா ஜிப்பாதான் போட்டுவந்தார். இப்போது சேலைத்துணியால் ஆன வேறுவகை ஜிப்பா. இது இன்னமும் சிறியது, இரண்டு ஞாநிக்களுக்கு தாராளமாக போதும்.

ஞாநி மாதம் ஒருமுறையாவது வந்து அசோகமித்திரனைப் பார்த்துக்கொண்டிருந்தார். ஆனாலும் வழியை துல்லியமாகக் கேட்டு தெரிந்துகொண்டே இருந்தார். பொதுவாக நான் திருப்பங்களுக்கு ஒருமுறை வழி கேட்பவர்களையே கண்டிருக்கிறேன். நேர்கோட்டில்கூட அடையாளம் தேவைப்பட்டது ஞாநிக்கு. முழுக்க வழி கேட்டு சென்றபின் இறுதிப்பகுதி மறந்துவிட்டதனால் மீண்டும் அசோகமித்திரனிடமே வழி கேட்டோம்

ஞாநியை பலகாலமாக அறிந்தும் நெருங்கிப்பழக வாய்க்கவில்லை. ஆகவே ஒரு சந்தர்ப்பமாக அமையட்டுமே என அவரது வீட்டிலேயே தங்க முடிவெடுத்தேன். கே.கே.நகரில் பெரிய வளாகம் கொண்ட அகலமான வீடு அவரது. அதிக மரச்சாமான்கள் இல்லாத கூடத்தை நாடக பயிற்சியறையாகவே வைத்திருக்கிறார் ஞாநி.

ஞாநியின் முன்னாள் மனைவி பத்மா அவருக்கு உடல்நலமில்லை என்பதனால் வந்து தங்கி கவனித்துக்கொண்டிருந்தார்.

அங்கே கே.ஆர்.அதியமானைப் பார்த்தேன். ஞாநியுடன் இப்போது அவர்தான் நெருக்கமாக இருக்கிறார் என்று பட்டது. ஞாநியும் அவரும் கருத்தடிப்படையில் நேரெதிர் புள்ளிகள். அதியமான் தனியார்மயம்-வலதுசாரிப் பொருளியலின் பிரச்சாரத்துப்பாக்கி –பீரங்கியெல்லாம் ரொம்ப பெரிது. நடுவே சோதிடம் பற்றி என்னிடம் கேட்டார். நான் என் பிள்ளைகளுக்கு ஜாதகமே எழுதவில்லை என்றேன். ஏன் என்றார். எங்கள் குலத்தொழிலே ஜாதகம் எழுதுவது என்பதனால்தான் என்றேன்.

ஞாநியின் இல்லத்தில் உற்சாகமாக பேசிக்கொண்டிருந்தோம். ஞாநி உடல்நிலை தேறியிருக்கிறார். அஞ்சியோபிளாஸ்ட் பண்ணப்பட்ட எந்த ஒரு எழுத்தாளரையும் போல உற்சாகமாக அதைப்பற்றிப் பேசினார். அது தன் உடலை நுட்பமானதோர் இயந்திரமாகப் பார்க்கும் பரபரப்பை அவருக்கு அளித்திருக்கிறது என்று தோன்றியது. நன்றாகவே மெலிந்திருந்தார். பலவகையான நோய்கள் வழியாக கடந்துவந்திருந்தார். குடலில் காசநோய் தாக்கி கடுமையான மருந்துகள் வழியாக நலம் மேம்பட்டபோதுதாந் இதய அடைப்பு கண்டடையப்பட்டது.

ஞாநி நான் பார்த்தபோதெல்லாம் சோடாப்புட்டிக் கண்ணாடிதான் போட்டிருந்தார். அவருக்கு ஒரு கோபக்கார இளைஞர் அல்லது இளம்முதியவரின் தோற்றத்தை அது அளித்திருந்தது. இப்போது அந்தக் கண்ணாடி இல்லை. கண்ணில் காடராக்ட் வந்து அறுவை சிகிழ்ச்சை செய்த போது பழைய இயற்கை விழியாடிகளை தூக்கிக் கடாசிவிட்டு புதிய அளவான ஆடிகளை வைத்தார்களாம். ஆச்சரியமாக இருந்தது.

ஆனால் ஞாநி அவருக்கு வழக்கமான அதி உற்சாகத்துடன்தான் இருந்தார். தொட்டுத்தொட்டு அரசியல் இலக்கியம் இலக்கியஅரசியல் என்று பேசிக்கொண்டிருந்தோம். ஞாநி தன்னைப்பற்றிய வம்புகளைப் பேசுவதில்லை என்பதை இரண்டுநாட்களில் கூர்ந்து கவனித்தேன்.இறந்தகாலம் குறித்தும் அதிகமாகப் பேசுவதில்லை. பரீக்ஷாவின் கடந்தகாலம் குறித்தும் மிக அபூர்வமாகவே பேச்சு எழுந்தது. அவருக்கு வெவ்வேறு சமகாலப் பிரச்சினைகளிலேயே தீவிர ஆர்வம் இருந்தது.

மதியம் ஒருமணிவாக்கில் பத்மா சமைத்த விஜிடபிள்பிரியாணியையும் தயிர்சாதத்தையும் வட்டமாக தரையில் அமர்ந்து சாப்பிட்டோம். தனக்கு பொதுவாக தரையில் அமர்வதும் படுப்பதுமே பிடிக்கும் என்றார் ஞாநி. கட்டில்கூட உடல்நலம் மோசமானபிறகு வந்ததுதான். அவரிடமிருந்த ஒரு மரபெஞ்சுக்கு அவருடைய வயதே ஆகிவிட்டது என்றார் – ஆரோக்கியமாக இருந்தது.

நான்குமணிவாக்கில் திரும்பிவந்தபோது ஞாநியின் பரீக்ஷா நண்பர்கள் ஒவ்வொருவராக வந்தார்கள். பெரும்பாலும் எல்லாரும் இளைஞர்கள்.ஞாநிக்கு தலைமுறை தலைமுறையாக நாடகநண்பர்கள் வந்துகொண்டே இருக்கிறார்கள். கல்பற்றா நாராயணன் கவிதை ஞாபகம் வந்தது, குழந்தைகள் எல்லாரும் ஜெயித்துப்போகிறார்கள், சரசம்மா டீச்சர் இப்போதும் ரெண்டாம்கிளாஸில்தான்.

திரும்பவந்தபோது எல்லாரும் சென்றுவிட்டிருந்தார்கள். ஞாநி உங்களை தேடினார் என்றார் பத்மா. உலகிலேயே மனைவியால் ஞானியாக அங்கீகரிக்கப்பட்ட ஒரே மனிதர் இவர்தான் என்று நான் சொன்னேன். இல்லல்ல நான் சங்கர்னுதான் சொல்லுவேன். இப்ப அடையாளம் தெரியணும்கிறதுக்காக ஞானீன்னு சொல்றேன் என்றார் பத்மா.

ஞாநி எங்களிடம் சாப்பிட்டாயிற்றா என்றார். தனசேகரும் பிறரும் கிளம்பிச் சென்றார்கள். நான் ஞாநியுடனும் பிறருடனும் ன் இரவு ஒன்றரை மணிவரை பேசிக்கொண்டிருந்தேன். சமகால அரசியல். சமகாலத்தின் பெரும்பண்பாடு என்பது எப்படியோ ஏதோ வழிகளில் சமசரம் செய்துகொள்வதாக ஆகிவிட்டிருப்பதை ஞாநி மீண்டும் மீண்டும் சுட்டிக்காட்டினார். சமரசமின்மையின் தோல்வி மீதான கவற்சி சமகால இளைஞர்களில் குறைந்துவிட்டது என்றார். பின்னர் கண்ணயரும்போது பத்மாவும் இந்திராவும் பேசிக்கொண்டிருந்த ஒலி கேட்டுக்கொண்டே இருந்தது.


கீற்று :: Dheemtharikida | Gnani

மீண்டும் ‘தீம்தரிகிட ‘ வெளிவருகிறது

1982ல் நான் சில நண்பர்கள் உதவியுடன் தொடங்கி, மூன்று இதழ்களுடன் நின்று போய், பிறகு 1985ல் மீண்டும் வெளியிட்டு ஏழு இதழ்களுடன் நின்று போன ‘தீம்தரிகிட ‘ இதழை மறுபடியும் வெளியிட விரும்புகிறேன்.

சொந்த முயற்சியில் பத்திரிகை நடத்துவது என்ற பரிசோதனையை 1987ல் வெளியிட்ட சென்னை நகரத்துக்கான ‘ஏழு நாட்கள் ‘ என்ற இதழுடன் நான் நிறுத்திக் கொண்டேன். ஒவ்வொரு முறையும் பத்திரிகை நன்றாக விற்பனையானது.(1982ல் முப்பதாயிரம் பிரதிகள் வரை விற்றோம்). கடை விரித்தோம் கொள்வாரில்லை என்ற நிலை இருக்கவில்லை. ஆனால் விற்ற பணத்தை வசூலிக்க முடியாமலும் போதுமான செயல்முறை மூலதனம் இல்லாமலும் முயற்சிகள் முடங்கிப் போயின.

இனி சொந்த முயற்சியில் பத்திரிகை வெளியிடுவது இல்லை என்று தீர்மானித்துக் கொண்டு அந்த முடிவை உறுதியுடன் பதினைந்து ஆண்டுகளாகப் பின்பற்றிவந்திருக்கிறேன். இப்போது ஏன் மறுபடியும் அந்தப் பரிசோதனையில் இறங்க வேண்டியதாகிவிட்டது? சிரங்கு பிடித்தவன் கை போன்ற மன அரிப்புகள் காரணம் அல்ல என்பதை 15 ஆண்டு பிடிவாதமே காட்டும்.

தீம்தரிகிட இருபது ஆண்டுகள் முன்பு தொடங்கப்பட்டபோது அத்தகைய முயற்சிகளுக்கான தேவை இருந்த நிலை இன்றும் மாறிவிடவில்லை என்பது பொதுவான காரணம். அதை விட முக்கியமான காரணம் கடந்த ஓராண்டு காலமாக நான் சந்திக்கும், உணரும் ஒரு மாற்றம். நான் எப்போதும் பெரிய பத்திரிகைகளில் வேலை செய்வதை என் ஜீவிதத்துக்கான வழியாகவும், கருத்து வெளிப்பாட்டுக்கான வழியாகவும் சேர்த்தே செய்துவந்திருக்கிறேன். வருமானத்துக்காக வேறொரு வேலை, கருத்து வெளிப்பாட்டுக்கு இன்னொரு சாதனம் என்ற நிலையில் நான் இருக்கவில்லை.

கடந்த ஓராண்டாக நான் சந்திக்கும் நிலை இதுவரை கடந்த 30 ஆண்டுகளில் நான் சந்தித்திராதது. கருத்துச் சமரசங்கள் செய்துகொள்ளாமல் எனக்கு முழு நேர வேலையோ பகுதி நேர வேலையோ தமிழ் மீடியா சூழலில் கிடைக்கும் வாய்ப்பு இல்லை. தமிழில்தான் இயங்குவது என்று 22 ஆண்டுகள் முன்பு மேற்கொண்ட முடிவை மாற்றிக் கொள்ளவும் எனக்கு விருப்பமில்லை. இதற்கு முன்பு எனக்கு முழுக் கருத்துச் சுதந்திரம் கொடுத்து நான் எழுத அனுமதித்த இதழ்கள் கூட இந்த ஓராண்டில் பல முறை என் கட்டுரைகளை, ஏன், கடிதங்களைக் கூட நிராகரித்தன. வெளியிட்ட ஓரிரு முறையும், சில பகுதிகளை நீக்கிவிட்டு வெளியிட நான் ஒப்புக் கொண்ட பிறகே வெளியிடும் நிலை.

இது பற்றிப் பலருடனும் பல முறை விவாதித்தபோது தெரிய வரும் உண்மை ஒன்றுதான். முன்னெப்போதையும் விட, இன்று மீடியாவில் கருத்துச் சுதந்திரத்துக்கான இடம் சுருங்கிக் கொண்டே வருகிற்து. இதற்குப் பல சமூக, அரசியல் காரணங்கள் உண்டு. சார்புகளை மீறிப் பல்வேறு கருத்துக்களும் குறிப்பாக, பொதுக் கருத்துக்களுடன் முரண்படும் கருத்துக்களும் வாசகர் முன்பு வைக்கப்பட வேண்டும் என்ற பார்வை மங்கிக் கொண்டே வருகிறது.

இந்தச் சூழலில்தான் ‘தீம்தரிகிட ‘ இதழை மறுபடியும் கொண்டு வர விரும்புகிறேன். முதல் இதழ் விழிப்பு உணர்வு தினமான ஏப்ரல் 1 அன்று வெளிவரவேண்டும் என்பது என் அவா. தொடக்கத்தில் இரு மாத இதழாக தீம்தரிகிட ஓராண்டில் ஆறு இதழ்கள் வெளிவரும். ஆண்டு சந்தா: ரூ 100/-.

வெகுஜன இதழ்களின் வாசகர்களின் தீவிரமான அறிவு, ரசனைத் தேடல்களுக்கான உணவாக, உந்துதலாக ‘தீம்தரிகிட ‘ இருக்க வேண்டும் என்ற ஆதி நோக்கத்தில் எந்த மாற்றமும் இல்லை. சிற்றிதழ்களின் நோக்கம், செய்ல்பாடுகளிலிருந்து இது வேறுபட்டது என்பதால் முரண்பட்டது அல்ல.எந்த நல்ல விஷயமும் பலரையும் சென்றடைய வேண்டும்; நல்ல விஷயங்களை நாடுகிறவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டும் என்பதே என் நிரந்தரமான நோக்கம்.கதை, கவிதை, அரசியல், சமூகம், திரைப்படம், நாடகம், இசை, கலைகள் என்று சகல துறைகளிலும் எப்போதும் போல ‘தீம்தரிகிட ‘ அக்கறை செலுத்தும்.

இதை சாத்தியப்படுத்த, தொடக்கத்திலேயே குறைந்தபட்சம் ‘தீம்தரிகிட ‘ இதழுக்கு ஐநூறு சந்தாதாரர்களாவது தேவை. நீங்களும் உங்கள் முயற்சியினால் இன்னும் சிலரும் சந்தாதாரர்களானால், இது சாத்தியம்தான். ஐநூறு சந்தாதாரர்கள் மார்ச் 15க்குள் கிடைக்காவிட்டால் தீம்தரிகிட இதழை வெளியிடும் என் திட்டம் தளர்ச்சியடையும். அந்த நிலைமை ஏற்படாமல் தவிர்ப்பதில் உங்கள் பங்கை நீங்கள் அவசியம் ஆற்றவேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

என்னுடனும் ‘ தீம்தரிகிட ‘ இதழில் வெளிவரும் கருத்துக்கள், படைப்புகளுடனும் நீங்கள் சில சமயம் உடன்படலாம்; சில சமயம் முரண்படலாம். ஆனால் தமிழின் வெகுஜன வாசகர்களின் தீவிரமான அறிவு, ரசனைத்தேடல்களை ஊக்குவிக்க, வளர்க்க உதவுகிற ஒரு களம் தேவை என்பதை நீங்கள் ஏற்றுக் கொண்டால், தயவு செய்து இந்த முயற்சியை ஆதரியுங்கள்.அடுத்த ஓரிரு வாரங்களில் உங்களுடைய, உங்கள் நண்பர்களுடைய மணியார்டர்கள் வந்து குவியட்டும். அவற்றை அஸ்திவாரக்கற்களாகக் கொண்டு நானும் நண்பர்களும் தீம்தரிகிட இதழை, கோபுரமாக இல்லாவிட்டாலும் சிறு குடிலாகவேனும் கட்டுவோம்.

‘தீம்தரிகிட ‘ இரு-மாத இதழ்.
தனி இதழ் விலை: ரூ 15.
ஆண்டுக்கு ஆறு இதழ்கள்.
ஆண்டு சந்தா:ரூ. நூறு.
வெளிநாடுகளுக்கு: USD 20 (அ) ரூ 1000.


திண்ணை

1. ராஜ் டி.வி Vs தயாநிதி மாறன் : உள் நோக்கம் ?

2. இரண்டு கடிதங்களுக்கு ஞாநியின் பதில்கள் :

a. தலித் பிரச்சினையில் உம் கருத்து என்ன ? – ரெங்கதுரை
b. ஞானம் கெட்டவர்களின் கோணல் பார்வை – மாயவரத்தான்

3. நூலகம்

4. ’எண்’ மகன். நாடகம்- பரீக்‌ஷா

5. மறதி அல்லது வெட்கங்கெட்டவர்கள்

6. வீரப்பன் மட்டும்தான் கிரிமினலா ?

7. எம் எஸ் :அஞ்சலி

8. கண்டதைச் சொல்லுகிறேன்: பேட் பாய்ஸ் :: சுஜாதாவும் ஷங்கரும் – (இந்தியா டுடே செப்.17,2003)

9. பெரியார் 125 (அயோக்கியர்களும் முட்டாள்களும்)

10. காங்கிரஸ் தோல்வி :ஓர் அலசல்

11. என்னைப் போல் ஒருவனா நீ? – சினிமா விமர்சனம் : உன்னைப் போல் ஒருவன்

12. ஒரு காமெடி சாமியாரின் டிராஜெடி நாடகம் :: காஞ்சி சங்கர மடத்தலைவர் ஜயேந்திரர்

13. இலக்கியவாதிகளையெல்லாம் சினிமாவுக்கு வாருங்கள் என்று அழைக்கிறார் கமல்ஹாசன்.

14. கேள்வி -2 தமிழன் அறிவைத் தடுத்தாரா பெரியார் ?

15. கல்பாக்கம்

16. குடந்தை குழந்தைகள் கொலைக்கு யார் பொறுப்பு ?

17. ரஜினிக்கு ஒரு பகிரங்க மடல்

18. அன்புள்ள மனுஷ்யபுத்திரன்

19. தமிழ் அரசியல்

20. உயிர்ப்பலியும் பெரியாரும்

21. டயரி – வி.பி.சிங்

22. பதிப்பகங்களா மிதிப்பகங்களா ?

24. முரசொலி மாறன்

25. பாசமா ? பாசிசமா ? – தி.மு.கவும் பா.ம.கவும்

26. இன்னொரு ரஜினிகாந்த் ? – விஜயகாந்த்

27. மஞ்சுளா நவநீதனுக்கு இறுதியாக.


Quotes

1. கடற்கரையில் கிரிக்கெட் ஆடுவது இளைஞர்களின் பிறப்புரிமை.

கருத்துகள்

1. ஞாநி Vs. சா.நி. – ரவிபிரகாஷ்

2. நித்தியும் ரஞ்சியும் சாருவும் பின்னே ஞாநியும்…

3. பூச்செண்டு – ஞாநி விளக்கம்

4. ‘ஓ பக்கங்கள்’ – பாகம் 3 :: Pa. Raghavan

Washington DC: Jeyamohan Visit – Thanksgiving

வாஷிங்டன் டிசி-க்கு எழுத்தாளர் ஜெயமோகன் சென்று வந்து பல மாதம் ஆகி விட்டது. நினைவில் இருந்து சில துளிகளும் நன்றி நவில்தல்களும்.

வாஷிங்டனுக்கு வருகிறேன் என்று ஜெயமோகன் சொன்னவுடனேயே ராஜனை மின்னஞ்சலில் தொடர்பு கொண்டவர் வேல்முருகன். ஸ்ரீகாந்த் மீனாக்ஷி டிசி தமிழ்ச்சங்கத்தின் தலைவராக இருந்தபோது செயலாளராக இருந்தவர். பிளந்துகிடந்த வாஷிங்டன் தமிழ்ச்சங்கங்களை இணைப்பதில் இவருக்கும் பங்கிருப்பதாக திண்ணை வம்பி கிடைத்தது தனிப்பதிவுக்கான கதை.

வேல்முருகனோடு தொலைபேசியில் கொஞ்சம் tag விளையாடிவிட்டு, கடைசியாக வாய் – அஞ்சலின்றி ஒருவருக்கொருவர் வாயாடும் வாய்ப்பு கிடைத்தது. மிகவும் இன்முகத்துடன் அழைத்தார். சபையடக்கமாக தாங்க்ஸ் என்னும் வார்த்தையே சொல்லவேண்டாம் என்று உரிமையோடு பேசினார்.

பாஸ்டனில் இருந்து தன்னந்தனியே நியு ஜெர்சி பயணம். செல்லும் வழியில் வழக்கமான கட்டுமானப் பணிகள். ‘அமெரிக்காவில் மறுமுதலீட்டு திட்டம்’ நடைமுறையாக்கத்தில் நிறைய இடித்துப் போட்டு, மாற்றுப் பாதை கொடுத்திருந்தார்கள். அன்று வெள்ளிக்கிழமை மதியம். விடுமுறை அல்ல. எனினும், இரவில் மட்டுமே பணி நடக்கும் என்று பலகை போட்டிருந்தாலும், வேடிக்கை பார்க்கும் காரோட்டுனர்கள் மெதுவாகவே ஸ்டியரிங் பயின்றார்கள். அடிமட்ட தொழிலாளிகளுக்கான வேலைவாய்ப்பு பெருக பெருக, பெருநிறுவனங்களும் லாபம் ஈட்ட, நமக்கும் தேன் வழியும் என்று multiplier effect எல்லாம் சிந்தித்துக் கொண்டே துகாரமின் வீட்டை அடைந்தபோது ஆறு மணி.

டைனோபாய் ரன்னிங் காமென்டரி கொடுத்துக் கொண்டிருந்தார். ப்ரிட்ஜ்வாட்டர் கோவிலில் ராமரின் பளிங்குச்சிலை முன் நிற்கிறோம். ஜெயமோகன் சிற்ப அழகை ரசிக்கிறார். கை கூப்பவேயில்லை. எந்த தெய்வத்தையும் வணங்கவேயில்லை. சர்வமத ஆலயம் போல் சமணருக்கும் சம ஒதுக்கீடு தந்திருப்பதை குறித்து பேசுகிறார். எங்கள் பேச்சைக் கேட்டுவிட்ட மடிசார் கட்டாத மாமி முகஞ்சுளிக்கிறார்.

“எப்ப சார் துக்கா வீட்டுக்கு வருவீங்க?”

“அது மாமி அல்ல. தாவணி கட்டிய பைங்கிளி. இப்பொழுது ஜெமோ…”

ஒருவழியாக ஏழரை மணிக்கு ‘பராக்கா’வும் (குரங்குத்தவம் – http://kuranguththavam.blogspot.com ) உடன் வந்து சேர்ந்தார்கள். ‘இலவசக்கொத்தனார்’ம் கொஞ்ச நேரத்தில் வந்தவுடன் இணையம், போலி டோண்டு என்று வழக்கமான இடங்களில் போரடிக்க, இட்லி+மசால் தோசை மொக்கிய பிறகு தூக்கக் கலக்கத்துடன் துகாவிடம் இருந்து பிரியாவிடை பெற்றபோது ஒன்பதரை தாண்டி இருக்கும்.

அடுத்த நான்கு மணிநேரம் அதி சுவாரசியம். ராஜன் குறிப்பிட்டது போல் ஆளின் கிரகிப்புக்கு ஏற்ப பேசுவதில் ஜெயமோகன் வித்தகர். என்னுடனும் ‘வெட்டிப் பயல்’ பாலாஜியுடனும் நடந்த உரையாடல்களில் பெரும்பாலானவை சினிமாவும் சினிமா சார்ந்த மயக்கங்களுமாக முடிந்து போனது.

பரந்த வாசிப்பாளரான அர்விந்த் கிடைத்தவுடன் யுவன், நாஞ்சில் நாடன் என்று இலக்கியத்தில் துவங்கியது. கொஞ்ச நேரம் கழித்து ஷாஜி, இளையராஜா, யுவன் என்று இசைப்பயணமாக ஆலாபனை ரீங்கரித்தது. படு காத்திரமாக விஷ்ணுபுரம் ஆராய்ச்சி, காடு நாவலில் பொதிந்த இரகசியங்கள், என்று ஜெயமோகனின் படைப்புலகிற்கு பின்புலம் அமைத்தது. அங்கிருந்து, வேதங்களின் குறியீடு, மகாபாரதக் கதைகளின் இருண்மை, ஞான மரபு, தத்துவார்த்த தர்க்கம் என்று ஆங்கில உலகின் புத்தக அறிவுக்கும் தமிழில் வாசித்த படக்கதைகளுக்கும் முடிச்சுப் போட்டு, அதில் ஜெயமோகனின் டச் உடன் தீர்க்கமாக அலசப்பட்டது.

முதலில் போட்ட திட்டத்தின்படி இந்தப் பயணத்தில் வெட்டிப்பயல் உடன் வந்திருக்க வேண்டும். அவர் கழன்று கொன்டதில், அர்விந்த் சேர்ந்துகொள்ள, எதிர்பாராத விருந்து. நான் அவ்வப்போது வண்டியும் ஓட்டினேன் என்பதால் வாஷிங்டன் வந்து சேர்ந்தது.

மணி ஒன்றரை இருக்கும். செல்பேசியில் வேல்முருகனை அழைக்க, தூக்கக் கலக்கத்துடன் ‘எவ…. அவ!’ என்று உருமினார். அமெரிக்காவில் ஹோட்டல்களுக்குப் பஞ்சமில்லை என்பதால் நர்மதா (ரமதா என்பதை செல்லமாக இவ்வாறும் விளிக்கலாம்), ரெட் லைட் இன் ஆகிய எதிலோ தங்கலாம் என்று மனதைத் தேற்றினாலும், வேல்முருகன் இல்லத்திற்கே வந்துவிட்டோம்.

நாங்கள் மூவரும் வேல்முருகனின் வீட்டை அடைந்தபோது பின்னிரவு இரண்டு ஆகிவிட்டது. சில பல குளறுபடிகள் செய்தோம். பாத்ரூம் கதவு பூட்டியே தாளிட்டு விட்டு, அதன் பின் அடைப்பு என்று கொஞ்சம் எசகுபிசகுகள். அமெரிக்க வாழ்வில் நடப்பதுதான்… சல்தா ஹை.

அடுத்த நாள் காலை எழுத்தாளர் சத்யராஜ்குமார் (http://inru.wordpress.com/ ) இணைந்து கொண்டார். ஜெமோ எல்லோருடனும் இயல்பாக உரையாடினார். வீட்டில் இருந்த வேல்முருகனின் தாயார், இசை பயிலும் மகள், Wii ஆடும் மகனுடன் கொஞ்சல். எல்லோருடனும் சகஜமாக உரையாடுவது எனக்கு எம்பிஏ-வில் கற்றுத்தரப்பட்டது. எனினும், விஷயம் அறிந்து பேசுதல் + கூச்சம் போக்கி சகஜமாக்குதல் — இரண்டும் கைவந்த கலையாக அவருக்கு இருந்தது.

வாஷிங்டன் நினைவுச்சின்னம், லிங்கன் நினைவுச்சின்னம், உலகப் போர் 1,2 நினைவாலயம், ஜெஃபர்சன் சிலை, கொரியா போர், வியட்நாம் சண்டை என்று திக்கொன்றாக அமைந்த பரந்து விரிந்த தளபதிகள்; படைக்களங்கள்; வீரர்களுக்கான மெமோரியல்கள்; அமைதிப் பூங்காக்கள். எதையும் அவசரப்படாமல் நிதானமாக கவனித்தார்.

நடுவே சினிமா நடிகர்களுக்கு மட்டும் நிகழும் சில விஷயங்களும் இங்கே நடந்தது. “சார்… நீங்க ஜெயமோகன் தானே?! உங்க ப்ளாகைத் தொடர்ந்து படிக்கிறேன். இன்னிக்கு டிசி வரதா போட்டு இருந்தீங்க! இங்கேதான் இருப்பீங்கன்னு நெனச்சோம். பார்த்துருவோம்னு நெனச்சோம்… அப்படியே உங்களப் பார்த்ததில ரொம்ப சந்தோஷம்!”

“மாலையில் நடக்கும் கூட்டத்திற்கு வரீங்களா?”

“முடிஞ்சா பார்க்கிறோம்! ஆனா, உங்கள இங்க… இப்போ பார்த்து பேசியதுதான் எங்களுக்கு மகிழ்ச்சி”.

இரு சிறு கூட்டங்கள். உச்சிவெயில் மண்டையைப் பிளக்கிறது. ஜெமோ சந்தித்த பரவசத்தில் அவர்களிடமிருந்து பல வினாக்கள். ஜெமோவும் பதில் கொடுத்துக் கொண்டே, அவர்களின் விழைவுகளை, பின்புலங்களை கிரகித்துக் கொள்கிறார். ஒருவரல்ல; இருவரல்ல… இரு சிறு சிறு குழாம்களில் இருந்து ஏழு & எட்டு பேர் இவ்வாறு அகஸ்மாத்தாக தொடர்பு கொண்டார்கள். நான் நடிகை ரஞ்சிதாவுடனும் வைகைப் புயலுடனும் விமானங்களில் அளவளாவியது எனக்கு நினைவிலாடி கிறங்கடித்தது.

மதியம் சமர்த்துப் பையன்களாக தாஸனி வாங்கப் போக, “பாலா… நீங்க தண்ணியடிப்பீங்கதானே? உங்களுக்கு வேணுமின்னா வாங்கிக்கிடுங்க” என்று பெர்மிட் தரப்பட, குளிர்ந்த கரோனா ருசிக்க கிடைத்தது.

காலையில் இட்லி. மதியம் ஒரு சிக்கன் சான்ட்விச். பிற்பகலில் இரு பழங்கள். இதுதான் ஜெயமோகனின் அன்றைய டயட். அது தவிர முந்தின நாள் இரவு பாத்ரூம் களேபரம் போன்ற சிக்கல் முடிந்து உறங்கும் போது இரண்டரை ஆவது இருக்கும். காலையில் ஆறு மணிக்கு எழுந்து, எட்டு மணிக்கு காரில் காலடி.. மன்னிக்க… டயரடி வைத்தாகி விட்டது. கொஞ்சம் போல் வீட்டில் ஓய்வெடுக்கலாம் என்பதையும் நிராகரித்து, ‘போனால் வராது’ எனபதாக காங்கிரஸ் நூலகம், கேபிட்டல் என்று பொசுங்கும் வெயிலில் நடையோ நடை.

கால் டம்ளர் டீ மட்டும் அவருக்கு காட்டிய பிறகு, சிறப்புரையாற்ற அவரை அழைத்து சென்றோம். போகும் வழி வெறும் இருபது நிமிடம்தான் என்றாலும். வெளியில் கொளுத்திய நூறு பதாகையில் இருந்து குளிரூட்டப்பட்ட காரும், காலை எட்டில் இருந்து சாயங்காலம் நான்கு வரை நடந்த நடையும், அந்த நடையின் நடுவே ஆதுரமிக்க ஜெமோவின் சொல்லாடல்களும், அப்படியே கேப் விட்ட இடைவேளைகளில் என்னுடைய டிசி சொற்பொழிவுகளையும் கேட்ட மயக்கத்தில் ஜெமோ கொஞ்சம் கண்ணயர்ந்தார்.

நிகழ்ச்சி அமைப்பாளரான பீட்டர் யெரோனிமௌஸ் அறிமுகம் தர அரம்பித்தார். அதற்கு பவர்பாயிண்ட் வைத்திருந்தார். அதன் பிறகு அடுத்த அறிமுகம் தர வேல்முருகனை அழைக்க, அவர் என்னை அழைத்து ஒதுங்கி விட்டார்.

டிசி வரும் பயணத்தின் நடுவில் ஜெயமோகன் சொன்னது இப்பொழுது நினைவிற்கு வந்து செமையாக இம்சித்தது. ‘எனக்கு அறிமுகம் கொடுப்பவர்கள் சரியான அறிமுகம் தருவதில்லை. “இவர் தீரர், வீரர்; சூரர்” என்றோ, “இவர் பதினேழரை நாவல்களும் மூவாயிரத்து அறுநூற்றி இருபத்தெட்டு பக்கங்களும் எழுதியவர்” என்றோ, “இவர் சாகித்திய அகாதெமி, ஞானபீடம் வென்றவர்” என்றோ, “தமிழகத்தின் விடிவெள்ளி, எழுஞாயிறு” என்று அடைமொழிகளால் குளிப்பாட்டியோ பேச அழைப்பார்கள். அதற்கு பதில் என் எழுத்து எவ்வாறு அவரை சென்றடைந்தது, எப்படி செழுமையாக்கியது என்றெல்லாம் சொல்லலாம்’

அப்படித்தான் அறிமுகம் கொடுத்தேனா என்று தெரியாது. எழுதியும் தயார் செய்யவில்லை. சுருக்கமான அறிமுகம் வைத்தேன்.

அதன் பின் ஜெயமோகன் பேசினார். இருபது நிமிஷங்களுக்குள்ளேயே முடித்துவிட்டார்.

புறவயமான உலகை அகவயமாகப் பார்ப்பதன் அவசியம் என்ன? எப்படி விரிந்து பரந்த அகில அண்டத்தையும் — தக்கினியூண்டு மனசும் கையளவு மூளையும் கொண்டு மதிப்பிடுவது? அவ்வாறு மதிப்பிட்டாலும், புறச்சிக்கல்களை தன்வயப்படுத்தி சிக்கல் நீக்கி உள்ளே கொணர்ந்தாலும், அதை விட குறுகலான மொழியைக் கொன்டு வெறும் 10,000 வார்த்தைகளேக் கொன்ட பாஷையை சாதனமாக வைத்து விவரிப்பது எங்ஙனம்?

காலங்காலமாக உலகம் எவ்வாறு ஒவ்வொரு துளியையும் ஒவ்வொருவருக்குள்ளும் அனுப்பி வருகிறது? அதைப் புரிந்து கொள்வதன் சூட்சுமம் என்ன? கலாச்சாரம் என்கிறோம். பாரம்பரியம் என்று சொல்கிறோம். அதெல்லாம் எப்படி வருகிறது?

இப்படி abstract ஆக அரம்பித்த உரை சட்டென்று ஜனரஞ்சகமாகி கிளைதாவி முடிந்துவிட்டது. சாதாரண கேள்வி – பதில் என்றால், இதில் எழும் வினாக்கள் ஏராளம். அதைக் கேட்டிருப்பார்கள். குளிர் நம்மை அணுகாமல் இருக்க கையுறை அணிந்த கைகளை, பாக்கெட்டுக்குள் திணித்துக் கொள்வது போன்ற மனப்பான்மையுடன் வினாத் தொடுப்பவர் கூட்டம்.

‘வார்த்தை’ பிகே சிவக்குமார் சொன்னது போல் இது வேறு கும்பல். “நீங்க சினிமாவுக்கு வசனம் எழுதியிருக்கீங்க! அதனால், எந்த நடிகை அதிகமாக குலுக்குவார்கள் என்பதைக் குறித்து ஏன் நீங்கள் அவதானிக்கவில்லை?” என்பன போன்ற வினாக்கள் வந்தன. விலாவாரியான தகவல்களுக்கு கீழே இருக்கும் ட்விட் வர்ணனையைப் படிக்கலாம்.

சாதாரணமாக ஜெயமோகன் இத்தகைய கேள்விகளை நேரடியாகவே எதிர்கொண்டு அதற்கும் தர்க்கபூர்வமாகவும் இந்திய சிந்தனை மரபுவழியாகவும் விளக்குவார்; விளக்குகிறார்; விளக்குகினார். அன்று ‘உங்கள் பதிலை மூன்றரை நொடிகளில் முடித்துக் கொள்ளவேண்டும்! அடுத்த கேள்விக்கு செல்ல வேண்டும் அல்லவா?’ என்று ஸ்பீட் செஸ் போன்ற ஆட்டம். கலைஞர் கருணாநிதியின் எகத்தாள ஒன்லைனர்கள் எடுபட்டிருக்கும். விசாலம் கோரும் விவாதம் நிகழ இடம் பொருள் ஏவல் அமையவில்லை.

அன்றைய பின்னிரவில் வேல்முருகன் தனக்கு ‘பெரியார் இன்றளவிலும் முதன்மையானவராகத் தெரிகிறார். அதிகாரத்தை நோக்கி கேள்வி எழுப்பியது; அடக்குமுறையை தவிர்த்தது; சுய மரியாதை; தாழ்த்தப்பட்டோருக்கு குரல் கொடுக்கும் விதத்தை நிலைநாட்டியது; பாமரருக்கும் பகுத்தறிவை எடுத்துச் சென்றது’ என்று விரிவாக அடுக்க, ஒவ்வொன்றாக, அனைத்தையும் தவிடு பொடியாக்கும் எதிரணியின் நிலைப்பாடுகளை, அவரே ‘அட… ஆமாம்!!’ என்று மாறிப்போகுமளவு ஜெமோ எடுத்து வைத்தார்.

இவ்வகையான இன்ஃபார்மல் களம் இருந்தால் அன்றைய மீட்டிங் சிறப்புற்றிருக்கும். எட்டரை மணிக்கு அரங்கத்தை காலி செய்ய வேண்டும். ஏழரைக்கு அணு ஆயுதப் பேச்சு என்று வாயில் வாட்ச் கட்டிவிடாத களம் வேண்டும்.

சத்யராஜ்குமார் உடனும் நிர்மலுடனும் ஜெமோ பேசியதும் சுவாரசியமே. நிர்மல் (http://sinthipoma.wordpress.com/2007/05/04/12/ ) குறித்தும் நிறைய எழுதவேண்டும். அவர் அடுத்த நாள் எங்களுடன் இணைந்து கொண்டார்.

இந்த மாதிரி எழுத்தாளர் பயணத்தை அடுத்த முறை திட்டமிட்டால், பாஸ்டனில் இருந்து இரயிலிலோ விமானத்திலோ வாஷிங்டன் செல்வது; அங்கே நிர்மல்/சத்யராஜ்குமார்/வேல்முருகன் பெற்றுக் கொள்வது — என்று சுலபமாக அமைக்கலாம்.

பட்டால்தான் தெரிகிறது!


அப்பொழுது எழுதிய லைவ் டிவிட் கவரேஜில் இருந்து:

1. When a waterfall supposed to represent #FDR presidency is not working, does it symbolize that the administration failed? #Memorials #DC

2. Tomb of the Unknown. Amphitheater. DC Washington. Arlington http://post.ly/1apD

3. Changing of guards in Unknown Soldier Tomb in Virginia Arlington Cemetery. http://post.ly/1anf

4. Jemo in Arlington Cemetery. DC. http://post.ly/1al7

5. Vote of thanks. Young chap; tense; mispronounces names. I am also mentioned. http://post.ly/1Zpq 8:59 PM

6. How Tamils shd stay united against Atomic power plants & nuclear energy? Y no TN leader against this cause. http://post.ly/1ZpC 8:50 PM

7. Why Nuclear, 123 deals, waste management, accidents, catastrophical predictions, Russia job creation. #energy http://post.ly/1Zp1 8:46 PM

8. Udhayakumar takes over the stage. Asuran book gets released by Sankarapandi. http://post.ly/1Zoo 8:44 PM

9. Koodankulam Nuclear project activist Uthayakumar speech. Pulithevan/LTTE contacts. Prabhakaran dead reminiscences. http://post.ly/1Zog 8:43 PM

10. Commemorative plaque presented to Jeyamohan in Washington DC Meet. http://post.ly/1Zmy 8:27 PM

11. Velmurugan Periyasamy tells abt his expediments with Periyar. EVR’s influence on self. Rationalization & influence. http://post.ly/1Zmn 8:23 PM

12. Shylaja abt Bheema’s characterization in Nathi Karaiyiniley. #JM abt Asoka Vanam. Girl wise inheritance property in his http://post.ly/1ZmC 8:19 PM

13. Tamil language classical structure: Qn. Ans by #JM: 4k divya prabhandham, current poets, Pramil. Su. Vilvaratnam. Abhi. http://post.ly/1Zlp 8:16 PM

14. Qn by him abt fights among writer thinkers. #JM Ans: Appreciates Periyar EVR 4 giving freedom to question. Gr8 ans lac http://post.ly/1ZlU 8:12 PM

15. JM has a gr8 reply abt Periyaar. Compares him with MN Roy, EMS, Ambedkar. EVR is not reason based! http://post.ly/1ZlD 8:07 PM

16. MP Siva chokes with emotion. Wants #JM to become a big writer. Qns abt EVR Periyar. Rationality & spirituality mix. http://post.ly/1Zkw 8:04 PM

17. Religion, Quran, suicides: search of life thru journeys in Ilakkiyam. http://post.ly/1ZkD 7:58 PM

18. Jeyamohan talks abt Oomai Chennai. Janakiraman, Jeyakanthan, Sujatha, Asoka Mithiran, Sundara Ramasamy. Kaadu: how it came into being?! 7:54 PM

19. Sornam Sankarapandi Sudalaimadan condemns the state of responses given by Tamil writers on demise of LTTE. #srilanka statements #sweep 7:50 PM

20. Dr. Thani Cheran disagrees with #JM on Therkku Vazhgirathu. Says TN is not influential wrt Tamil Eezham. http://post.ly/1ZjS 7:47 PM

21. Ans by #JM: A million Tamils r out of TN. How 2 safeguard if free country is separated out. US is best eg of coexistenc http://post.ly/1Zj3 7:41 PM

22. Qn by Saminathan. Multiplicity, diversity x individuality. Will it curtail rebels? How to ensure Independence. http://post.ly/1Zij 7:38 PM

23. JM ans abt education: economy, British looting. Hope for future gen. Famines, hunger will be history. http://post.ly/1ZiE 7:33 PM

24. I’m a reader of Sanga Chitrangal. The only interesting blog is #JM How to bring ilakkiyam to kids? #lit http://post.ly/1Zhr 7:29 PM

25. Shylaja shared her question with me. Y no female chars are shown as intelligent in his fiction; incl Anal & many Mahabh http://post.ly/1Zhb 7:26 PM

26. Sornam Sudalaimadan Sankarapandi qns abt self righteousness with dravidian movement is debased. http://post.ly/1ZhW 7:23 PM

27. AIIMS India Foundation Rave Shankar chats abt #JM blog; Ajithan school was moving. http://post.ly/1ZhA 7:19 PM

28. Audience is hysterical with #JM narration abt common Tamils addiction with Kumudam/Vikadan vs Kaadu http://post.ly/1Zh2 7:17 PM

29. Lit as infotainment vs prev twit. Ilakkiyam is useful in any nook & corner of the world. Why read fiction? http://post.ly/1Zgk 7:14 PM

30. The magnificence absorbed from the universe into self. Iota of world inside each of us. http://post.ly/1ZgZ 7:12 PM

31. #JM talks about Nithya Chaithanya Yathi. Narration definition. Inner vs outer world. Conversations – language http://post.ly/1ZgK 7:09 PM

32. Myladuthurai MP Siva snaps pictures in the #JM #DC Meet. http://post.ly/1ZfW 6:58 PM

33. Writer Jeyamohan gathering in Washington DC. Intro by Peter Yeronimouse. http://post.ly/1ZfE 6:55 PM

34. Library of Congress. Writer Jeyamohan with books, reference, Washington DC. http://post.ly/1ZS0 4:12 PM

35. With Velmurugan in Virginia. Washington DC visits Jeyamohan. http://post.ly/1Yrm 9:37 AM

36. DC welcomed JM. Car chat» Vishnupuram is an anti-kaaviyam. Yuvan’s Manal Keni. What defines a Kappiam? Discussion vs argument mthds Marabu.1:33 AM Jul 25

தொடர்புள்ள பதிவு:
Jeyamohan DC பேச்சில் நல்ல தரமான இலக்கியத்தை அல்லது எந்நாடு இலக்கியத்தில் முண்ணனி வகிக்கிறது என்று எதுவும் சொல்லவில்லை: http://bit.ly/GJ4vE

தமிழ்ச் சிறுகதைகள்: ஆகஸ்ட் 2009

இந்த மாதம் படித்த கதைகளில் என் மனதை அசைத்துப் பார்த்து, கவனத்தை ஈர்த்து, உங்களுக்கும் குறிப்பிடத்தக்கவையாக இருந்த சில:

1. ஹரன்பிரசன்னா :: சொல்வனம் » அலை

நாவல்களிலே ஃப்ளாஷ்பேக் என்னும் வஸ்து சிரமமானது. சிறுகதையிலேயே நிகழ்த்தி காட்டுகிறார். சில வார்த்தைகள் கதையில் வரும்போது, அப்படியே நெகிழச் செய்து விடும். இங்கே ‘கந்தரப்பம்’. அப்படியே என்னை எங்கோ கொண்டு போய் விட்டது.

வம்பு கேள்வி: அதெல்லாம் சரி… ஹரன் பிரசன்னா ஏன் பைத்தியக்காரன் நடத்திய ‘உரையாடல்‘ போட்டியில் பங்குபெறவில்லை?

2. வ. ஸ்ரீநிவாசன் ::சொல்வனம் » உயிரிழை

முதல் வரியில் கதை முடிஞ்சுடணும் என்னும் கோட்பாட்டை பின்பற்றுகிறார். அந்த ஆரம்பத்தை வாசித்தவுடன் மேஜிகல் நியலிசமோ, குறியீட்டு இம்சையோ என்னும் பயத்தை அறவே போக்கியும் விடுகிறார்.

வம்பு கேள்வி: கதை கூட புரிஞ்சுக்கலாங்க. அது என்னங்க! அப்ஸ்ட்ராக்டா தோட்டா வட்டம் போட்ட படம்?

3. கர்ட் வானகட் :: சொல்வனம் » ஹாரிசன் பெர்ஜரான்மொழிபெயர்ப்பு :: விஷ்வநாத் சங்கர்

இம்சை இல்லாத மொழிபெயர்ப்பு. கதை ரொம்ப கவலைப்படுகிறது. கனவு லோகத்தில் சஞ்சரிக்கிறது. வெகு தீவிரமாக பிரசாரிக்கிறது.

வம்பு கேள்வி: கர்ட் வானகட் இப்ப இருந்தா ஒபாமாவின் உடல்நலத் திட்டமான சம்ச்சீர் ‘சேமநலக் காப்பீடு’ குறித்து என்னங்க சொல்லியிருப்பார்? அதற்கும் கத விட்டிருப்பாரோ!

4. கிச்சாமி | சத்யராஜ்குமார்.காம்

அமெரிக்க வாழ்க்கையை இவ்வளவு வெளிப்படையாக எழுதினால் தாங்காது சாமீ. ஆனாலும், நம்ம இணைய வாசகர்கள், கதையை கதையாகப் பார்க்காமல், ‘நீங்களா?’, ‘அப்படி சட்டம் கிடையாதே?’, ‘என் மனைவி அவ்வாறு இல்லையாக்கும்‘ என்று மறுமொழிவது தனிக் கதை.

வம்பு கேள்வி: கதைக்கு கீழே கருத்து சொல்ல முடியாம, வலைப்பதிவிலே தனியா இன்னொரு இடத்திலே பதில்பொட்டிய வச்சிருக்கீங்களே! ஏனுங்க?

5. நாகார்ஜுனன் :: திணை இசை சமிக்ஞை: 108

ஒரு கதை. அதை எப்படியெல்லாம் சொல்லலாம்? நாகார்சுனன் மறுமொழியில் இருந்து: தமிழ் எழுத்தாளர்கள் ஒரே ஸ்டைலில் பல கதைகளை எழுதியதை, எழுதுவதை (இதற்கு ஒரே major விதிவிலக்கு புதுமைப்பித்தன்) வாசிக்கிற, எழுதப்போவதையெல்லாம் வாசிக்கப்போகிற நமக்கு ஒரே கதையை பல ஸ்டைலில் எழுதினால் ஏன் வாசிக்க முடியாது..

வம்பு கேள்வி: உங்களுக்கு கதைக்கான கரு பஞ்சமா சார்? வேணும்னா நான் ரெண்டு knot சொல்லட்டுமாங்க!

6. முரளிகண்ணன் :: நீரோடை: துண்டு சிகரெட்

வெட்டிப்பயல் மாதிரி சொல்ணுமின்னா, இவரோட எழுத்து ‘சும்மா நல்லா இருக்கு நல்லா இருக்குனு சொல்லி போர் அடிச்சி போச்சி...’

வம்பு கேள்வி: உங்களுக்கு மெய்யாலுமே கற்பனை ஜாஸ்தியா? அல்லது நாட்குறிப்பை அப்படியே எழுத சங்கோசமா?

7. சித்ரன் :: நீரோட்டம் « புள்ளி

சமீபத்திய ‘கல்கி’ பத்திரிகையில் வெளியான கதை. சோடை போகுமா? நல்ல வேளையாக இந்த மாதம் கதை எழுதியிருக்கிறார். இவரெல்லாம் நம்ம லிஸ்டில் இருப்பது லிஸ்ட்டுக்கு பெருமைங்க.

வம்பு கேள்வி: அந்தக் கடைசி திருப்பம்தான் இதனுடைய மிகப் பெரிய உச்சம் என்றாலும், அப்படிப்பட்ட இறுதிவரி திகில் இல்லாவிட்டால், இந்தக் கதையை எப்படி முடித்திருப்பிர்கள்?

8. ஆல்பர்ட்டோ மொராவியா :: பறவையின் தடங்கள் » Blog Archive » உத்தரவிடு பணிகிறேன்மொழிபெயர்ப்பு :: நாகூர் ரூமி

மொழியாக்கம் என்பதெல்லாம் சொன்னால்தான் தெரியும். அப்படியொரு அசல் படைப்புக்கு நிகரான மொழி லாவகம். இன்னொரு முறை ஆசுவாசப் படுத்திக் கொண்டு வாசித்தால் உள்ளே பொதிந்திருக்கும் மற்ற விஷயங்கள் புலப்படும்.

வம்பு கேள்வி: கப்பலுக்கு போன மச்சான்‘ மாதிரி அடுத்த நாவல் எப்பங்க?

9. ரா. கிரிதரன் :: வார்த்தைகளின் விளிம்பில்: மெளன கோபுரம்

பறவைகள் விமானத்தில் மோதுவதால் அறுநூறு மில்லியன் டாலர் சேதம் ஆகின்றன. வானூர்தியில் வந்து விழும் பறவைக் கூட்டத்தின் மேல் 583 விபத்துகளின் பழியைப் போட முடியும். செத்த கணக்கு சேர்க்கவில்லை. இப்படியெல்லாம் புள்ளி விவரம் அடுக்குபவரை நேர்த்தியாக எதிர்கொள்ள உதவுவது புனைவுலகம். வாழ்வை சொல்லி, அதன் நியாயங்களை சரித்திர பூர்வமாக, கலாச்சார ரீதியாக புரிய வைக்கும் முயற்சிதான் இலக்கியம். இந்தக் கதை அந்த ரகம்.

வம்பு கேள்வி: உங்களுக்கு கதை எழுதுவது தவிர வேற எதாவது வேல உண்டுங்களா?

10. ரா. கிரிதரன் :: வார்த்தைகளின் விளிம்பில்: நண்டு சொன்ன `பெரியவங்க` கதை

வித்தியாசமான, அநாயசமான ஆரம்பம். கதை சொல்லி முடிக்கும் அவசரத்தில் நண்டு இருப்பதால், ஆசிரியரைப் பழிக்க வேண்டாம்.

வம்பு கேள்வி: நண்டு சொன்ன நாவலின் சுருக்கம் என்பதுதானே உண்மை?


தொகையறா

அந்தக் கால கவிதைகளில் தொகை (எட்டுத்தொகை போன்ற) நூல்களில் இருப்பதுதான் புகழ்பெற்று கோலோச்சுக்கிறது. அதே போல், இந்தக் கால சிறுகதைகளுக்கும் அறிமுகம் வேண்டுபவர், ‘நெஞ்சில் நிறைந்தவை‘ (சிவசங்கரி வானதி பதிப்பகம்), ‘முத்துக்கள் பத்து‘ (அம்ருதா பதிப்பகம்), ஐம்பதாண்டு கால தமிழ்ச் சிறுகதைகள் (சா. கந்தசாமி கவிதா பப்ளிகேஷன்ஸ்), ‘எனக்குப் பிடித்த கதைகள்‘ (பாவண்ணன்) போன்ற தொகுப்புகளையும் எஸ் ராமகிருஷ்ணன், சுஜாதா, ஜெயமோகன், க.நா.சு. இரா முருகன், போன்றவர்களின் பரிந்துரைப் பட்டியலையும் நாடுகிறார்கள்.

இவர்கள் எல்லோருமே சொல்லி வைத்தது போல் தற்கால இணைய எழுத்துகளை, வலையில் மட்டும் புழங்கும் தமிழ்ச் சிறுகதைகளை முற்றாக புறக்கணித்துவிடுகிறார்கள். இதற்கு நிவர்த்தியாக, தமிழ் வலையகங்களில் (சொல்வனம், திண்ணை, உயிரோசை, நிலாச்சாரல், தமிழோவியம், தமிழ்ப்பதிவுகள், இன்ன பிற) கிடைப்பதில் குறிப்பிடத்தக்க ஆக்கங்களை ஒரு இடத்தில் சுட்டி கொடுத்து தொகுத்தால் செமையாக இருக்கும்.

இணையத்தில் தடுக்கி விழுபவர்களுக்கும் பயனாக இருக்கும். இணையமே கதியாக கட்டுரைகளையும் ட்விட்டுகளையும் மட்டுமே வாசிக்கும் என் போன்றோருக்கும் உருப்படியான விஷயமாக இருக்கும்.

எழுத்தாளர் பெயரோ, எழுதியவரின் மூலமோ கூட தெரியாமல் போகலாம். ஆனால், நாளைய பின்னும் ‘முக்கியமான புனைவு’ என்று தேடினால் எளிதில் மாட்டும்.

Interview with Jeyamohan: Videos & Audio Chat

நேர்காணுபவர்கள்: தூள்.காம் பிபிபாலாஜி ஸ்ரீனிவாசன் & ச திருமலை ராஜன்

1. தமிழ் இலக்கிய சூழல் இப்போது எப்படி இருக்கு?

2. இணையத்தினால் ஏற்பட்ட பாதிப்பு

3. விஷ்ணுபுரம் உருவான கதை

4. எழுத்தாளர் விமர்சகராக இருப்பதில் +ve -ve (இருக்கும் ”சிறந்த”
லிஸ்டில் எல்லாம் இவர் எழுத்துக்களை இவரே சேர்த்துக்கொள்வது)

5. அமெரிக்க பயணம் எப்படி இருக்கு?

6. அவர் ஊர் மக்களின் நகைச்சுவை உணர்வு

7. இலக்கிய சர்ச்சைகளில் ஈடுபடும் எழுத்தாளர்கள்

8. தன் எழுத்தை மார்க்கெட்டிங் செய்ய வேண்டிய சூழல்

நன்றி: http://www.itsdiff.com/Tamil.html

My experiences with A Muttulingam

சொல்வனம் இதழில் வெளியான வியத்தலும் உண்டே கட்டுரையில் இருந்து:

நெடுஞ்சாலைப் பயணத்தின் நடுவே ஜெயமோகன் இணைந்து கொண்டார். கையில் பத்துத் தோட்டாக்குறிகள் போட்ட சிறு குறிப்பு வைத்திருக்கிறார். அதில் இருந்து கேள்விகள் விழுகின்றன. ‘உங்கள் நாவல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும் முயற்சிகள் எங்ஙனம் உள்ளன?’; ‘கனவுக்கும் எழுத்துக்கும் உள்ள தொடர்பு?’

முழுவதும் வாசிக்க: முத்துலிங்கத்துடன் ஒரு தினம்


தொடர்புள்ள பேட்டி & சுட்டி:

அ.முத்துலிங்கம் நேர்காணல் – ஜெயமோகன்: “நீங்கள் அதன்மேல்தான் நிற்கிறீர்கள்!” :: சொல் புதிது ஏப்ரல் 2003 இதழில் வெளியான பேட்டி

ஈழ எழுத்தாளரான அ. முத்துலிங்கம் கல்லூரியில் படிக்கும்போதே தன் முதல் சிறுகதை தொகுதியான ‘அக்கா ‘ வை கைலாசபதி முன்னுரையுடன் வெளியிட்டு பரவலான கவனத்தை கவர்ந்தார் . பிறகு வேலை நிமித்தம் வெளிநாடு சென்றார் .

ஐ நா அதிகாரியாக ஆப்ரிக்க நாடுகளிலும் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானிலும் பணியாற்றினார். இந்த வலுவான அனுபவப்பின்னணியுடன் நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் எழுத வந்தார் . அவரது அடுத்த சிறுகதை தொகுப்பை மித்ர வெளியிட்டது . ‘திகட சக்கரம். ‘ தொடர்ந்து ‘ வடக்கு வீதி ‘ முதலிய தொகுதிகள் வெளிவந்தன.

சமீபத்தில் காலச்சுவடு வெளியீடாக வந்துள்ள ‘மகாராஜாவின் ரயில் வண்டி ‘ மிகவும் இலக்கிய முக்கியத்துவம் பெற்றதாக உள்ளது. அ.முத்துலிங்கத்தின் கட்டுரைகளும் புகழ்பெற்றவை. இலங்கை அரசின் சாகித்ய விருது பெற்றுள்ளார் .


A Muttulingam « Tamil Archives

A Muttulingam is free! But, why? « Snap Judgment

கடற்கரய் in தீராதநதி (குமுதம்) – ஜூன் 1, 2007: “ஜனநாயக்தில் எனக்கிருந்த நம்பிக்கையும், மதிப்பும் போய்க்கொண்டிருக்கிறது – அ.முத்துலிங்கம்”

சமகால தமிழிலக்கியத்திற்கு ஈழம் வழங்கியுள்ள கொடை என்று அ.முத்துலிங்கம் படைப்புகளைச் சொல்லலாம். ஒரு வனத்தின் புதிர்ப் பாதையைப்போன்று விரியும் இவரின் படைப்புகள் ஒரு வானத்தின் திடீர் திடீர் வண்ணமாறுதலுக்கு ஒத்து இயங்குபவை. கூடவே இவரின் படைப்புலகம் மரபின் வேர்களிலிருந்து விடுபட்டுவிடாதவை.

1958 முதல் எழுதிவரும் முத்துலிங்கம் யாழ்ப்பாணத்தில் பிறந்து பல அரசியல் நெருக்கடிகளால் புலம் பெயர்ந்தவர். இருபது வருடங்களாக ஐக்கியநாடுகள் சபையில் அதிகாரியாகப் பணிபுரிந்துவிட்டு ஓய்வு பெற்றபின் தன் மனைவியுடன் தற்சமயம் கனடாவில் வசிக்கிறார்.

இலங்கை அரசின் ‘சாகித்ய விருது’ (1998), ‘இலக்கியச் சிந்தனை விருது’, ‘இந்திய ஸ்டேட் வங்கி பரிசு’ என பல விருதுகள் பெற்றவர். இவரின் 75 சிறுகதைகள் அடங்கிய முழுத் தொகுதி ‘அ. முத்துலிங்கம் கதைகள்’ ஒன்றும், ‘அங்கே இப்ப என்ன நேரம்’ என்ற முழு கட்டுரைத் தொகுதி ஒன்றையும் ‘தமிழினி’ வெளியிட்டிருக்கிறது. ‘வியத்தலும் இலமே’ என்ற, இவர் எடுத்த உலக எழுத்தாளர்கள் நேர்காணல் நூல் காலச்சுவடு வெளியீடாகவும் வந்திருக்கிறது.

‘கடிகாரம் அமைதியாக எண்ணிக் கொண்டிருக்கிறது’’ ‘உயிர்மை’ வெளியிட்டிருக்கும் நூலின் தொகுப்பாசிரியர் இவர்.

A for Apple – Tag version for Twitter IDs

சென்ற வருடத்தில் A for Apple tagஐ ரவி உபயத்தில் போட்டிருந்தேன். அவ்வாறே ட்விட்டர்.காம் பயனர் பெயர்களில், எவர் பெயர் என்னுடைய பட்டியலில் வந்து நிற்கிறது என்னும் கேள்விக்கான விடை:

செய்முறை:
1. ஃபயர் ஃபாக்ஸ் திறக்கவும்
2. http://twitter.com/ தட்டச்சவும்
3. ‘ஏ’ விசையைத் தட்டியவுடன் எந்த முகவர் ஐடி வந்து நிற்கிறது?

A for anathai
B for bseshadri
C for cvalex
D for dynobuoy
E for elavasam

F for twitter.com favorites
G for gchandra
H for hemanth
I for ivansivan
J for joe_milton

K for ksrk
L for lazygeek
M for msathia
N for narain
O for ommachi

P for peyarili
Q for யாருமில்லை
R for ravidreams
S for srikan2
T for TamilDiaspora

U for யாருமில்லை
V for valarmathi2008
W for writerpara
X for யாருமில்லை
Y for yathirigan

Z for யாருமில்லை

தொடர்புள்ள பட்டியல் பதிவுகள்:

1. Top Tamil Twitter users (by status update numbers) « 10 Hot

2. Top 16 Tamil Twitter Users (by influence) « Snap Judgment

Obla Vishvesh :: Three days with Jayamohan

ஒளிப்படங்களுக்கு: ஆல்பெனியில் எழுத்தாளர் ஜெயமோகன்

I have known from personal encounters that it is a strange experience to meet a man of letters who has lived in one’s world of ideas alone. For, an image of the writer is unconsciously built in one’s mind as one reads more and more of his writings. I remember Sri Aurobindo’s remarks on D.H.Lawrence :

‘Anyhow it seems to me Lawrence must have been a difficult man to live with, even for him it must have been difficult to live with himself.’

Such impressions that the reader forms in his mind makes the writer, I believe, a curious object of observation when he is met in person. One at least unconsciously wants to see if the writer fits in the mould that one has already cast the image of the writer!

I have known the Tamil writer Jeyamohan only a year or so. I must have heard his name before but the name had not registered in my mind since I hadn’t read any of his works. Even now, I haven’t read any of his novels but the few articles that I read in the last one year from his website gave me the impression that here was a writer to whom writing was a commitment in life. A sense of such commitment isn’t some choice one makes as one chooses a profession or even a social service, but something that arises out of an inward response to human life. And such a response is invariably informed not only by a mastery of the writings of many great writers but also through conscious and unconscious observations of life in all its complexities. One not only learns from such writers but also enriches one’s life reading them.

When I knew that a good friend of mine was arranging a trip in US for Jeyamohan and that he would be spending a few weeks in the East Coast, I thought it would be a great occasion for me to spend a few days with a good writer by offering to take him around a few places. We meet people all the time and each encounter makes impressions some of which fade and some of which make a permanent remark. I was very curious to know if a writer (as him) would be a different person from most of the people I have liked to observe.

The first impression that I had of him as he stepped out of the greyhound bus from Boston brought a smile to me, since he didn’t have a mustache and the pictures that I had seen of him had it! He had arrived Albany with the distinction of traveling in a greyhound bus within five days of landing in the US (I have friends in the US who have never boarded a greyhound bus though they have been living here for fifteen years!).

As if it were not enough the bus he had originally booked got overbooked as well and he had to board in a later bus to Albany from Boston (which must be one of the rare events in the history of Greyhound bus service in the US, which gets hardly filled). He was shorter than me and a little older.

In the first few minutes itself, I remember I asked him if he spoke Malayalam at home, since his Tamil sounded strange to me (I found out later that I was not familiar with that accent that is common in Kanyakumari district). He was a little tired and sounded taciturn. I remembered Vairamuthu and I was wondering if he too would talk only a little, though he didn’t look stiff as Vairamuthu. That was only till we reached home.

It was already late in the night when I brought him home. From that moment, except for a short time when he was with his laptop, it was him talking, talking all the time till he dropped out of my car and boarded in another that took him to Milford, CT, along with another set of friends.

One cannot judge a person by his capacity to mingle with people (most great writers are very reserved in their nature; Wordsworth and Lawrence, despite their passion for human relationship and their acute sense of togetherness, were loners in their lives), but one observes an admirable openness towards life in the kind of unreserved nature that Jeyamohan had. He became talkative the moment he settled in our couch.

There was no sense of uneasiness of meeting someone and his family for the first time in life. And when he started talking about the Sourashtrians in Tamilnadu, of whom he knew a lot of information, and his acquaintance with M.V.Venkatram, a Sourashtrian-born Tamil writer, there was no more ice to be broken since he had touched the things that wear dear to my family as Sourashtrians — he was no more a stranger for us from then. The man who had been bits and bytes of written text for me began to materialize himself in flesh and blood as Captain Kirk and his Star Trek Crew would materialize from thin air! And as I found out in the next two days with him, he was not just a store house of information (which he possessed in an amazing quantity), but someone to whom such information was not a matter of some kind of intellectual curiosity, but something that gave a direction in his life.

We went to a few picturesque places around. While those places held their regular charm for me, I was more interested in listening to him. I wasn’t in the least disappointed that he didn’t have anything to say about D.H.Lawrence other than the fact that though he had read ‘Sons and Lovers’ and ‘Lady Chatterley’s Lovers’, he had only found Lawrence to be ‘dated’, for which I would have loved to enter into a heated argument with someone else.

Nor was I perturbed when he said Sri Aurobindo’s exposition of the Gita sounded to him as written for Westerners’ understanding. For, I found that an argument about them would lead nowhere since he had the same interests, the interest in Life as related to the Mind and Civilization both had — only that his interests were given shape from another perspective. And there was no need for me to make a point as well, since I was in the presence of someone who had read far greater than me and hence had a lot to hear from.

On a lonely hiking trail along Lake George, one of the most picturesque lakes in North America, after taking a ride in the ferry which was sparsely filled because of intermittent rains that only added more charm to the lake with one half of it reflecting the somber light and the other half reflecting the lush green of the mountains around, he spoke on the relevance of philosophical thinking and the difference between the Eastern and Western modes of philosophical thought.

He elaborated on the snake-rope analogy of the Upanishads and related it to the two modes of perception and also took it to another level as expounded by his spiritual master, Nithya Chaitanya. Since it seemed to be a subject he loved to speak he was animated but pretty dispassionate in what he spoke. He didn’t seem to lose his mental poise at all when making his point.

Through his explanation I could see that he was reiterating a string of thought that he had in his mind for a long time but which needed constant articulation to strengthen itself into a meaningful argument : the very mode of philosophical thinking (which most readers find often repetitive).

Interestingly he had explained to me earlier how Philosophy relates to learning and life. I had earlier been struck by his simplified remarks on Wittgenstein from one of his essays and hence brought in this subject.

What was the purpose of writing thousands and thousands of pages if one could simplify a philosopher as that? That it gave one a sense of the process of thought (as he explained) was evident in the way he expounded his thoughts on its relevance. One may not need to read someone as Wittgenstein in depth to make a remark as he did in his essay on him, but without informed by the achievement of a voluminous philosopher as Wittgenstein, which can come only by reading him seriously, one could not speak the way he could on such subjects.

After a long talk that lasted till we came to the end of the trial, his eyes suddenly caught an animal that peeped out of its hole from the root of a tree and he was immediately fascinated by it. The lake was looking stunning as well and we switched over to talking something else.

A few friends at Albany wanted to meet him. He for sure seemed to be popular, at least through the quarrels in the battlegrounds of bloggers, if not through his novels. A few friends came to meet him at the Niagara Falls from Toronto .

As always, Niagara falls was crowded. I have never been attracted by this water falls except in unusual occasions as winter when the water freezes, but I was glad that Jeyamohan met some of his good friends from Toronto there and had a nice chat with them, which I too enjoyed listening to. The long drive to and fro Niagara Falls was memorable as well, since he continuously kept talking.

The third day after he came to Albany I dropped him off on the way to Connecticut , where he got picked up by his other friends. His unceasing voice, I kept hearing all through my drive back home.