Tag Archives: அறிமுகம்

நூலகம் – 2015 புத்தகங்கள்

தந்தையர் தினத்திற்காக பரிசு என்ன தரலாம் என்று மகள் கேட்டாள். புத்தகக் கடையில் கொஞ்ச நேரம் என்னை தனியே விட்டு வைக்குமாறு சொன்னேன். சனிக்கிழமை மாலை அன்று அத்தனை பேரை பார்ன்ஸ் அண்ட் நோபிள் கடையில் பார்த்ததில் மழையைக் கண்ட கலிஃபோர்னியா போல் மகிழ்ச்சி ஏற்பட்டது. இலக்கின்றி மேய ஆரம்பித்தேன்.

முதலில் புத்தம் புதிய அதிவிற்பனை நூல்களைப் பார்த்தேன்.

”Make Something Up: Stories You Can’t Unread By Chuck Palahniuk”Make-Something-Up அட்டைப்படம் கவர்ந்தது. ‘ஃபைட் கிளப்’ (Fight Club) எழுதியவரின் கதைத் தொகுப்பு. புகழ்பெற்ற பள்ளியில் படிக்கும் பிரகாசமான பதின்ம வயது மாணவர்கள் புத்தம்புது போதை மருந்தின் தாக்கத்தில் வீழ்ந்து கிடப்பதை ‘Zombies’ சொல்கிறது என்கிறார்கள். தந்தையின் அந்திமக் காலத்தின் கடைசி நிமிடங்களில் சொல்லக்கூடாத நகைச்சுவையை ஜோக்கடிக்க விரும்புவதை ‘Knock, Knock’ல் எழுதுகிறார். தன்னிடம் தசைப்பிடிப்பை நீக்க வரும் சாகக்கிடப்பவர்களுக்கு ‘விடுதலை’ அளிக்கும் ‘Tunnel of Love’ என பலதரப் பட்ட கதை இருப்பதாக உள் அட்டை சொல்லியது.

ronda-rousey-when_things_Get_Bad_Back_Cover_Motivation_Inspiration

அடுத்தது “My Fight / Your Fight by Ronda Rousey”. கருப்பு வெள்ளைப் படம் கவர்ந்தது. பெண்களுக்கான சுய முன்னேற்ற நூல். எனக்கு எப்போதுமே ரஜினிகாந்த் பிடித்தேயிருக்கும் என்பது போல், இது மாதிரி உற்சாகப்படுத்தி, ஊக்கமூட்டும் வார்த்தைகளைச் சொல்லும் வாழ்கை அனுபவப் புத்தகங்களும் பிடித்தே இருக்கிறது. இரண்டு மூன்று அத்தியாயங்கள் வாசித்தேன். ‘ஏதாவது சாதிக்கணும்ப்பா…’ என்னும் எண்ணம் கரைபுரண்டோட வைக்கிறது. சகட்டு மேனிக்கு ஃபக் உபயோகிக்கிறார். அதை விட சரளமாகத் தோல்விகளைத் தாங்கிக் கொண்டு வெற்றிப் படிக்கட்டுகளை ஏறி இருக்கிறார்.

கதைப் புத்தகம் ஆச்சு; டானிக் பூஸ்ட் ஆச்சு; கடைசியாக கொஞ்சம் இலக்கிய அரட்டை + வம்பு.

Harold Bloom delivers the chosen ones unto the multitudes. (From left: Willa Cather, Edith Wharton, Edgar Allan Poe, Philip Roth, Ernest Hemingway, and James Baldwin.)

Harold Bloom delivers the chosen ones unto the multitudes. (From left: Willa Cather, Edith Wharton, Edgar Allan Poe, Philip Roth, Ernest Hemingway, and James Baldwin.)

Harold Bloom எழுதிய “The Daemon Knows: Literary Greatness and the American Sublime”. ப்ளூம் – இந்தப் பெயர் எப்படி எனக்கு அறிமுகம் ஆனது?

வழக்கம் போல் செய்திகளில் அடிபட்டுதான் அறிந்துகொண்டேன். 2004ஆம் வருடம். நவோமி வொல்ஃப் (Naomi Wolf) உடைய உள்தொடயில் கைவைத்து பல்லிளித்து அத்துமூறிய இன்னொரு பேராசிரியர் என்ற வகையில்தான் தெரிய வந்தார். பெண்களைக் கருதுவது போல்தான் இலக்கிய மதிப்பீடுகளையும் முன்வைக்கிறாரோ என்னும் சர்ச்சை தொடர்ந்தது. 1994ல் இனம், நிறம், பால் அடிப்படையில் புத்தகங்களை வகைப்படுத்தி, பல தரப்பட்ட நூல்களை வாசிக்க வேண்டும் என்னும் கருத்தை ‘அழுகுணிக்காரர்களின் போதனாசாலை’ என்று இவர் கருதினார். அது இப்போது மாறி இருக்கிறதா என்பதை இந்த நூலை வாசித்தால் தெரியும்.

நூல்கள் ஆச்சு. அடுத்தது சஞ்சிகைகள்.

ஆங்கிலத்தில் வெளியாகும் பத்திரிகைகளைப் பார்த்தால், தமிழ் எழுத்துக்களைப் போல் எக்கச்சக்கம். தமிழில் வெறும் 26 எழுத்துக்கள் மட்டும் இருந்துவிட்டு, இத்துணை நூல்களும் காத்திரமான மாதாந்தரிகளும் வெளியாகிக் கொண்டிருந்தால் எவ்வளவு அற்புதமாக இருக்கும்!

பார்டர்ஸ் சென்றால் மட்டுமே வழக்கமாகப் புரட்டும், மெண்டல் ஃப்ளாஸ், நி.வொய்.ஆர்.பி., எல்லாம் இப்போது நூலகத்திலேயேக் கிடைப்பதால், அதை அப்படியே விட்டு வைத்தேன்.

லஃபாம்ஸ் குவார்ட்டர்லி மனிதநேயம், அருளுடைமை (philanthropy) குறித்து, சிறப்பிதழ் வெளியிட்டு இருக்கிறார்கள்.

Lapahams_Quartterly_Philanthropy

காரல் மார்க்ஸ், பில் கேட்ஸ், கர்ட் வானகட் என்று பல முக்கியமான எழுத்தாளர்கள். ஏதன்ஸ், எகிப்து, பாரிஸ் என்று முக்கியமான நகரங்கள். தற்கால கருத்துருவாக்கிகள் – என பலதரப்பட்ட விஷயங்களைக் கோர்வையாக ஒரே நூலில் அடக்கி இருக்கிறார்கள்.

ப்ரமத்தீயஸ் (Prometheus) பற்றிய குறிப்பு கூட கவர்ந்தது. இந்த உலகின் முதல் பரோபகாரி. கிரேக்கத் தொன்மத்தில் மிகவும் புகழ்பெற்றவர். தேவர்களுக்கு மட்டுமே சொந்தமாக இருந்த தொழில்நுட்பமான ‘நெருப்பு செய்யும் கலை’யை உலகெங்கும் எடுத்துக் கொடுத்தவர். சாதாரண மனிதர்களுக்கும் தீ வளர்க்கும் வித்தையைக் கற்றுக் கொடுத்தக் குற்றத்திற்காக மரண தண்டனை விதிக்கப்பட்டார். பாறையில் கட்டப்பட்டு வைத்திருக்கப்பட்டார். ஒவ்வொரு நாளும் கொஞ்ச கொஞ்சமாக அவருடைய ஈரற்குலையை, கழுகுகள் உண்டு வரும். இந்தக் கதை கூட நமது ஊர் வேதங்களின் ’ப்ரா மத்’ (திருடுவது) என்னும் சொல்லில் இருந்து வந்திருக்கிறது. பிரா மத் செய்தவன் பிரமாத்தியஸ், என்னும் நாடகமும் இந்தக் கருப்பொருள் சார்ந்த வெளியீட்டில் இடம் பெற்று இருக்கிறது.

Monkey_business_Mag_Stanford_Creative

ஜப்பானில் வெளியாகும் ’குரங்குத் தொழில்’ (Monkey Business International) முழுக்க முழுக்க ஜப்பானிய மொழி எழுத்தாளர்களை மொழிபெயர்க்கிறது. தற்கால சப்பானிய இலக்கியத்தை அமெரிக்காவிற்கும் மேற்குலகிறகும் அறிமுகம் செய்கிறது. ஜப்பானிய எழுத்தாளர்களை அமெரிக்காவிற்கு அழைக்கிறது. வாசகர் சந்திப்புகளை ஏற்பாடு செய்கிறது. புனைவிலக்கிய கர்த்தாக்களையும், அவர்களின் மொழிபெயர்ப்பாளர்களையும், இவற்றை ஒருங்கிணைக்கும் வர்த்தகர்களையும், எல்லாவற்றையும் வெட்டி, ஒட்டி, கருத்துச் சொல்லும் எடிட்டர்களையும் ஒருங்கிணைக்கிறது. ஐந்து இதழ்கள் வெளியாகி இருக்கின்றன.

Makeshift_Magazines_Covers_Law_Order

”நீங்க எப்படி வாழ வேண்டுமென்று போதிக்காமல், நான் ஆலோசனைகளை சொல்லித் தருவதை விட, உங்க வாழ்க்கை எப்படி நடக்கிறது என்பதைப் புரிந்து கொண்டு, அதற்கேற்ற தீர்வுகளைத் தருவது முக்கியமானது” என்னும் கொள்கைப்படி மேக்‌ஷிஃப்ட் (Makeshift) நடக்கிறது. நைஜீரியாவின் குக்கிராமங்களில் வீட்டிலேயே தயாராகும் விமானங்களைச் சொல்கிறார்கள். மெக்சிகோவின் போதைக் கடத்தல்காரர்களோடு உலாவி, அதையும் பதிகிறார்கள். சீனாவின் கொந்தர்கள், எவ்வாறு சீனப் பெருஞ்சுவரை உடைத்து கணினி சுதந்திரத்தை நாடுகிறார்கள் என்பதையும் செய்திக் கட்டுரை ஆக்குகிறார்கள். பன்னிரெண்டு இதழ்கள் வெளியாகி இருக்கிறது.

Esopus_22

இலக்கியம் படித்து களைத்துப் போனது மூளை. கொஞ்சம் கலை வெளியீடுகள் பக்கம் ஒதுங்கினேன்.

கலையும் மருத்துவமும் ஒருங்கிணையும் புள்ளியை ஈஸோப்பஸ் (Esopus) சிறப்பிதழாகக் கொணர்ந்து இருக்கிறது. செம தடிமனான பத்திரிகை. ஐநூறு பக்கங்களுக்கு மேல் இருக்கும். எல்லாத் தாள்களும் கெட்டித் தாள். நடு நடுவே இடைச் செருகலாக பதாகைகள், அந்தக் கால மருத்துவக் குறிப்புகள், வெளியீடுகள். இந்த இதழுக்குப் பங்களிப்போர் பட்டியல் மேலும் மலைக்க வைக்கிறது: ஓவியக் கலைஞர்கள், அறுவை மருத்துவர்கள் போல் விதவிதமான வைத்தியர்கள், எழுத்தாளர்கள், மனநோய் வைத்தியர்கள், மனநலக் காப்பகக்காரர்கள், மனநல சிகிச்சை தருபவர்கள், சினிமாக்காரர்கள், பல் வைத்தியர்கள், செவிலிகள், கவிஞர்கள், பொறியாளர்கள், மருத்துவ கலன் தயாரிப்பவர்கள், ஆஸ்பத்திரி ஊழியர்கள், வைத்தியசாலை நிர்வாகிகள், மருத்துவமனை சிப்பந்திகள், இசை விற்பன்னர்கள், புகைப்பட நிபுணர்கள், உள்ளரங்கு வடிவமைப்பாளர்கள், இரத்தம் எடுப்பவர்கள், வரைபுத்தகம் எழுதுபவர்கள், பேராசிரியர்கள்…

புரட்ட புரட்ட சரித்திரமும், சிற்பமும், உருவாக்குதலும், இறப்பும், கருவியாக்கமும், உயிரும் நிறைந்து இருக்கிறது.

BR-MayJune2015_cover-medium

சபீல் ரஹ்மான் பெயரைப் பார்த்துதான் பாஸ்டன் ரிவ்யூ பத்திரிகையை எடுத்தேன். தற்கால செய்தியை அலசி இருந்தார்கள். ஒரு பிரச்சினை. அதைக் குறித்து ஒரு முக்கிய கட்டுரை. அதற்கு பத்து விதமான எதிர்வினைகளையும் மாற்றுக் கருத்துகளையும் வெளியிட்டு இருந்தார்கள்.

இன்றைய பொழுதில் வேலைக்காரர் இன்றி கொள்ளை இலாபம் சம்பாதிப்பதே இலட்சியம். கார்களே வைத்துக் கொள்ளாமல், கார் ஓட்டுனர்களையும் பணிக்கு அமர்த்தாமல், பில்லியன் பில்லியனாகப் புரட்டும் ஊபர் (Uber); ஹோட்டல்களை வைத்துக் கொள்ளாமல், தங்குமிடங்களையும் வாடகைக்கு எடுக்காமல், உலகெங்கும் விடுதிகளை நடத்தும் ஏர் பி அண்ட் பி (Airbnb); செய்தியார்களே இல்லை என்றாலும் உலகின் அனைத்து மக்களும் நொடிக்கு நொடி செய்தி அறிந்து கொள்ளும் தளமாக இயங்கும் ஃபேஸ்புக்; இதே போல் அலிபாபா, அமேசான், பே-பால் (Paypal) என பல நிறுவனங்கள் அசையாச் சொத்து வைத்துக் கொள்வதில்லை; ஊழியர்களையும் நியமிப்பதில்லை; அதனால், மிகக் குறைந்த விலையில் தங்கள் சேவையை, வாடிக்கையாளர்களுக்குக் கொடுக்கிறார்கள்.

அரசாங்கம் எப்பொழுது மூக்கை நுழைக்க வேண்டும் என்று நாம் எதிர்பார்க்கிறோம்? மக்கள் நலன் பாதிக்கும் போது, அதற்கேற்ற சட்டதிட்டங்களை அரசு நிறைவேற்ற வேண்டும் எனக் கோருகிறோம். நாம் அதிகம் பணம் செலவழித்து, பொருள்களை வாங்கும்போது, நம்முடைய ஆதாயத்திற்காக அரசு, அந்த அநியாயக் கொள்ளைக்கார நிறுவனத்தைக் கட்டுப்படுத்தப் போராடுகிறோம்.

ஒரு பொருளின் விலையை மட்டும் பார்த்து, அந்தத் துறையில் போதிய அளவு போட்டி நிலவுகிறதா என்பதையும் கணித்துப் பார்த்து, முடிவெடுத்தது அந்தக் காலம். இன்றோ, அந்த நிறுவனம் எவ்வாறு தன் அசுரபலத்தை பிரயோகிக்கிறது, எவ்வாறு தன் வீச்சை பயன்படுத்துகிறது என்பதை ஆராய்ந்து, அதன் படி முடிவெடுப்பது அவசியம் என சபீர் வாதிடுகிறார். அமேசானுக்குப் போட்டியாக கூகுள் இருக்கலாம். ஆனால், அவர்களின் அரசியல் என்ன? தூரயியங்கி முதல் பிட் காயின் வரை எப்படி அவர்கள் தங்களுடைய நுகர்வோருக்கும், சிப்பந்திகளுக்கும், பொருள் விற்போருக்கும் ஆக்கபூர்வமான வகையில் இயங்குகிறார்கள் என்பதை ஆய்ந்தறிந்து, புரிந்து கொண்டு, அதற்கேற்ப சட்டவரையறைகளை உருவாக்க வேண்டும் என்கிறார்.

இணையம் என்றால் என்ன என்றே ரெஹ்மானுக்கு புரியவில்லை என்பது முதல் அனைவரும் தொழிலாளிகளாவும், உற்பத்தியாளராகவும், வர்த்தகராகவும் இருக்கும் திறமூல சமூகம் எவ்வாறு வருங்காலத்தில் இயங்கும் என்பது வரை பலதரப்பட்ட விமர்சனக் கட்டுரைகள் தொடர்கின்றன.

இப்பொழுது மண்டை மெல்ல ‘போதும்’ என்றது. இருந்தாலும் Trans/lation என்று சொன்னதால் விட்னெஸ் எடுத்தேன்.

Witness_Lit_Magz_Online_Issues_Translation

வாசியுங்கள்.

State of Tamil Cinema Reviewers: Movies vs Books

கடந்த பதினைந்து வருடங்களாக பட அறிமுகங்களை எழுதுபவன் + இணையத்திலும் பத்திரிகைகளிலும் விமர்சனங்களை அவ்வப்போது வாசித்தும் வருபவன் என்ற முறையில் எனக்குப் பட்டது….

* பெரும்பலான சமயம் படம் வெளியானவுடன் டாரெண்ட் தரவிறக்கத்தில் படம் பார்ப்பதால், திரையரங்கின் மன ஒருமை கிடைப்பதில்லை. அதை விடக் கொடுமை, ஆங்கிலப் படத்திற்கு ப்ளூ ரே ப்ரிண்ட்டும் தமிழ்ப்படங்களுக்கு திருட்டு விசிடியும் பார்க்க வேண்டும் என்னும் மனப்பான்மை.

* விகடன் விமர்சனம் போல் மார்க் போட்டு வாடிக்கை. எல்லாப் படத்திற்கும் மதிப்பெண் மட்டுமே வழங்கத் தெரியும்.

* திக்குவாய், குருடி போன்ற குறைபாடுகளை நல்ல நடிப்பு என்றும் ரஜினி, விஜய் படங்களை மசாலா என்றும் வகைப்படுத்துவோம்.

* கேமிராவில் ஒளிப்படம் எடுப்பதாலும், நாலைந்து முறை குழந்தைகள் நிகழ்ச்சியை வீடியோ எடுத்ததாலும் சினிமா எடுக்கும் அனைத்து வித்தையும் தெரிந்ததாக நினைக்கிறோம்.

* தொலைக்காட்சி சீரியல் (என்னைப் போல் ஆசாமிகள் தூர்தர்ஷன் நாடகம்) பார்த்தே பழக்கம். திரைப்படங்களிலும் அதே வாசனை எதிர்பார்க்கிறோம்.

* புத்தகத்திற்கு அறிமுகம் எழுதுவதை விட சினிமாவிற்கு அறிமுகம் கொடுப்பது எளிதானது. உதாரணமாக இயக்குநர் பாலா போன்ற புகழ்பெற்ற எழுத்துலக ஜாம்பவானை விமர்சிக்க நிறைய திராணி வேண்டும். ஆனால், ‘பாலா’ போன்றவரை விமர்சிப்பதால் சாதாரண மனுஷனாக அடையாளம் காட்டிக் கொள்ளலாம். இன்னும் விரிவாகச் சொன்னால் ஆயிரம் பக்க புத்தகத்தை தாக்கி எழுதினால் இலக்கியவாதியாக ஆகிவிடும் அபாயம் இருக்கிறது. ‘கடல்’ படத்தையும் பரதேசியையும் விமர்சித்தால் humble ஆளாகி விடலாம்.

* மோசமான படத்தைப் பாராட்டியும், சுவாரசியமான படைப்பை மட்டம் தட்டியும் எழுதினால் மட்டுமே கவனம் கிடைக்கிறது.

* சென்ற கால சினிமாவில் இருந்து வித்தியாசமாய் நின்று தமிழ்த் திரைப்படங்களை எது முன்னகர்த்துகிறது என்று கவனித்து பகிர்வதை விட, அந்தத் திரைப்படங்களின் கதையை வைத்து மன்றாடுவது எளிது.

என்னுடைய ஆண்டிராய்ட் போனிற்கு புதிதாக ஏதாவது நிரலியை நிறுவிக் கொண்டே இருப்பேன். சில சமயம் அதைத் தொடர்ச்சியாக பயன்படுத்துவேன். சில சமயம் உடனடியாக நீக்கிவிடுவேன். அது எனக்கு எப்படி உபயோகமாகிறது, ஏற்கனவே இருக்கும் மற்ற அப்ளிகேஷன்களில் இருந்து எவ்வாறு மாறுபடுகிறது என்பதைப் பொறுத்து என் முடிவு அமைகிறது. வைரஸ் போன்ற தாக்குதல் கொடுத்தால் மட்டுமே, கூகுள் கடை சென்று மட்டகரமான தரமதிப்பீடு தருகிறேன்.

சினிமாவிற்கும் அதே அளவீடு பயன்படுத்தலாம். நோய்க்கிருமி போல் கலையை கீழே இழுக்கிறதா? அல்லது தனிப்பட்ட முறையில் உபயோகமான விதத்தில் முன்னேற்றுகிறதா?

Vaishnavist Thiruppathy Tour Guide: 108 Divya Desam Book by Ponnammal

Thanks: Kalki Book Reviews

108 Divya Desangal: R Ponnammal Books

The Hindu Book Intro

108 Divya Desangal - Tamil Books


Kumudham Jothidam

108 Thiviya Thesangal

ஆடிஸி: Odyssey: ஓர் அறிமுகம்

ஆடிசியை ஏன் கிளாசிக் என்கிறோம்? சிறிய அறிமுகம் + பார்வை + விமர்சனம்.

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். படம் பார்க்கிற மாதிரி ஆடிசி அமைந்திருக்கிறது. ’சிவாஜி’யில் ரோபோ ரஜினி செய்கிற சாகசம் பிடித்திருக்கிறதா? உங்களுக்கு ஓடிசி பிடிக்கும்.

இரண்டாயிரத்து எழுநூறு ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட கதை. சொந்த வீட்டுக்குப் போய்க் கொண்டிருப்பவனை, விநோதமான மிருகங்களும் வித்தியாசமான (மாற்றுத் திறனாளி?) மனிதர்களும் தடுத்து, படுத்துகிறார்கள்.

புருஷனாக சண்டைக்குப் போயாகி விட்டது. கணவனாகத் திரும்ப விரும்புகிறான். மகனுக்கு தந்தையாக வாழ, இல்லம் சேரப் போகிறான்.

வலைப்பதிவில் கூட நினைவலைகள் புகழ் பெற்றது. ஆட்டோகிராப் படத்தின் ‘ஞாபகம் வருதே’ பாடல் போல் பழையதை அசை போடுவதன் சுகத்தை ஆடிசி சொல்கிறது.

மகாபாரதம் போல் மீண்டும் மீண்டும் வாசிக்கலாம். தூக்கம் வராத இரவுகளில் குழந்தைகளுக்கு வாசிக்கலாம். ஜெயமோகனின் விஷ்ணுபுரம் போல் நடுநடுவில் இருந்து வாசிக்கலாம்.

’ஆடிசி’ சொல் ஆங்கிலத்தில் அன்றாட வாழ்வில் பயன்படும் வார்த்தை.

“ஆமெரிக்காவிற்கு எப்படி வந்தீங்க?”

“அது ஒரு ஆடிஸி!”

“வலைப்பதிவில் தமிழ் உண்டா?”

“இப்படிக் கேட்டுட்டீங்களே… தமிழ்ப்பதிவுகள் மிகப் பெரிய ஆடிசி மேற்கொண்டுள்ளது.”

இங்கே இராமாயணமு மகாபாரதமும். கிரேக்கத்தில் ஹோமருக்கு இலியாட் & ஆடிஸி. இரு கதைகளும் பின்னிப் பிணைந்தவை. டுரோஜன் போரை இலியாட் சொல்கிறது. சண்டை முடிந்தவுடன் ஓடிஸி தொடங்குகிறது.

இலங்கைக்கு செல்லும் அனுமான் போல் வழியெங்கும் பிரச்சினைகள்:

  • கடுமையான புயல் காற்று
  • சிதறிக் கிடக்கும் பாறைகள் கை கோர்த்து படகை அழிக்க நினைப்பது
  • சுழிப் போட்டு பாதையை சுழல வைக்கும் கடல்
  • மனிதர்களைப் பன்றியாக மாற்றும் அழகி
  • பாடலில் மயங்க வைக்கும் பாடகி
  • தாமரையை உண்ணும் (பாரதீய ஜனதா?) போதைப் பிரியர்கள்

ஹீரோ இப்படி இடாகா (சொந்த) ஊர் வர கஷ்டப்பட்டுக்கொண்டிருக்க, இடாகா-வில் மனைவியையும் அவனுடைய நிலத்தையும் அபகரிக்க அண்டை வீட்டார் விழைகிறார்கள். “உன் கணவன் செத்துப் போய்ட்டான். என்னக் கட்டிக்க” என்னும் மிராசுதாரர்களிடமிருந்து, தன் அம்மாவை, மகன் காப்பாற்றி வருவது இன்னொரு இழை.

மனைவி பெனலொப்பி இருபதாண்டுகளாக கணவனைப் பிரிந்து தனிமையில் இருக்கிறாள். போருக்கு பத்தாண்டுகள். ஊர் திரும்ப இன்னொரு பத்தாண்டுகள். ஓடீஸஸ் உயிரோடு இருக்கின்றானா என்பது கூட அறியாத பயம் கலந்த சோகம் கொண்டவள் பெனொலப்பீ.

இருபதாண்டுகள் கழித்து வரும் ஆடவனை, எப்படி தன்னுடைய கணவன் என்று பெனலொப்பி கண்டுபிடிக்கிறாள்? குடும்பப் பாடல் கிடையாது. மரபணு சோதனை இல்லை. ‘தாலி கட்டியவனைத் தெரியாதா?’ என்னும் லாஜிக் சறுக்கல் லேது. எப்படி? நீங்களேப் படிச்சுத் தெரிஞ்சுக்குங்க.

ஓடீசஸ்

ஒடீஸசிடம் எந்த அற்புத சக்தியும் கிடையாது. பத்து பேர குத்த மாட்டான். ஒரே சமயத்தில் இருபது பேரோடு சிலம்பம் ஆட மாட்டான். பறக்க மாட்டான். குண்டுகளைக் கையால் தடுக்க மாட்டான். ஆனால், புத்திசாலி. மகா புத்திசாலி. சூட்சும புத்தி கொண்டவன். தன் அறிவைக் குறித்து பெருமிதம் கொண்டவன். கடுமையான விசுவாசம் கொண்டவன். நாட்டிற்கும் வீட்டிற்கும் நாய் போன்ற நன்றி உடையவன். இவன் என் ஹீரோ.

டேவிடும் கொலியாத்தும் கதைக்கு முன்னோடியாக சைக்ளோப்ஸ். கொஞ்சம் ராமனின் வாலி. நிறைய கும்பகர்ணன். அப்படியே துணைக்கு சிந்துபாத்தின் பூத பிசாசுகளையும் சேர்த்தால், நமக்கு பாலிஃபீமஸ் கிடைக்கிறார். இன்றைய பிரகாஷ்ராஜ் வில்லன்களின் கொள்ளுத் தாத்தா.

சைக்ளாப்சுக்கு நாகரிகம் தெரியவில்லை. பழங்குடி எனலாம். இவனின் தந்தை பாஸீடான். பாஸிடானுக்கு கோபம் வருகிறது. தன் மகனை, சைக்ளாப்சைக் கொலை செய்த ஓடீசஸ் மேல் கோபம் வருகிறது. பாஸீடான் கடல்களின் அரசன். வாயு பகவான். வருண தெய்வம். புயல் சின்னம் ஏற்றுகிறான்.

அம்மா செண்டிமெண்ட்டும் ஓடிசியில் உண்டு. “உன் விதியை அறியும் ஆசை, என் அன்பின் உத்வேகம் – இவைதான் இறந்திருக்கின்றன்” என்கிறாள். பாதாள லோகம், கனவு உலகம் எல்லாம் வருகிறது.

ஹோமர்

இவ்வளவு கிளைக் கதைகள், இத்தனை கதாபாத்திரங்கள் – அத்தனையும் ஒருவரா எழுதியிருக்கிறார்? வேத வியாசர் சொல்லச் சொல்ல விநாயகர் எழுதியது போல், கம்பரின், வால்மீகியின், துளசிதாசரின் இராமாயணம் போல் ஹோமரின் இலியாடும் ஒடிசியும் ஒற்றை ஆள் எழுதியது அல்ல. காலங்காலமாக வாய்மொழியாக வந்த பாடல்களின் தொகுப்பு. நாட்டிற்கேற்ப, பாஷைக்கேற்ப, பண்பாட்டிற்கேற்ப மாற்றங்கண்ட தொகுப்பு.

ராப்சோட்ஸ் எனப்படும் (ராப்சடி.காம் இங்கிருந்துதான் வந்தது 🙂 ஏதன்ஸ் நாடகக் கலைஞர்களால் கூத்தாக்கம் செய்யப்பட்ட கதை. போருக்குச் சென்ற அலெக்சாந்தர் கையோடு எடுத்து வந்திருக்கிறார். பைபிளுக்கு அடுத்தபடியாக கிறிஸ்டோபர் கொலம்பஸ் ஒடிசியை நாடி இருக்கிறார். லாரென்ஸ் ஆஃப் அரேபியா மேற்கோள் காட்டுகிறார்.

இலக்கியம்

ஒடிசியின் காட்சிகள் ஓவியத்தில் இடம்பிடித்திருக்கிறது. டாண்டே போன்றவர்களிடம் கதாபாத்திரமாக உலா வருகிறது. டென்னிசனின் கவிதையில் தோன்றுகிறது. ஜாகுலின் கென்னடி ஒனாசிஸ் தகனத்தில் அஞ்சலிப் பாடலாக ஒலிக்கிறது. பெனலப்பியை மையமாக வைத்து மார்கரெட் ஆட்வுட் நாவல் எழுதுகிறார். ஜேம்ஸ் ஜாய்சும் ‘யூலிசிஸ்’ (ஓடீசஸுக்கு இத்தாலியப் பேர்) கொடுக்கிறார். டெரக் வால்காட்டின் ஓமராஸ் கவிதை; ஃபிரான்ஸ் காஃப்கா… ஸ்டீவன் ஸ்பீல்பெகின் ஈ.டி… பட்டியல் நீளம்.

போரில் இருந்து வீடு திரும்புபவர்களுக்கு மனித மாண்புகள் இருக்குமா? உயிரைக் கொன்று குவித்த இராணுவ வீரர், சமூகத்தின் ஒழுங்கற்ற கட்டமைப்பில் இயங்க இயலுமா? எதிரி எங்கே இருப்பார் என்றறியாத வியட்நாம், இராக், ஆப்கானிஸ்தான் யுத்தகளத்தில் பணியாற்றியவரால், சகஜநிலைக்கு மீள முடியுமா? யாரை நம்புவது? இயல்பாக உறக்கம் கூட வராத கொலைக்களம் போல் இல்லமும் ஆகிப் போவதை ஓடிஸஸ் மூலமாக உணரலாம்.

‘யார் இவர்’ என்று அறிந்து கொள்வதன் ஆர்வம் அதிகரிக்க அதிகரிக்க, அந்தப் புத்தகத்தை காவியம் என்று அழைக்கும் தகுதியும் அதிகரிக்கிறது. ஆடிசி மனிதத்தை சொல்கிறது. ஆடிசி யார் என்று இன்னும் இன்றும் தேடுகிறோம்.

புத்தக தினம்

“If you want to know how I know about every book here, I can tell you! Because I never read any of them.” – நியு யார்க் டைம்ஸ் விமர்சனம்

மாக்கியவெல்லியைக் கூட மாச்சியவெல்லி என்று விளிப்பவன் நான். மெத்த புத்தகம் பல படித்த பாச்சா வேகுவதில்லை.

ரொம்ப நாள் கழித்து மாதுவை பார்த்தவுடன் விசாரித்தான். ‘நீ நிறைய படிப்பாயே? என்ன புத்தகம் சமீபத்தில் படித்தாய்?’ திரைப்படமாக பார்த்த ‘நேம்சேக்’கில் துவங்கி, பார்பரா காஸ்டெல்லோ தொட்டு, திஸாரஸ் கொடுத்த ரோஜெட் சுயசரிதம் என்று ஜாலியாக ஒரு மணி நேரம் ஓடியேப் போனது.

இந்த மாதிரி பேச (அல்லது வலைக்குறிப்பெழுத) என்ன செய்ய வேண்டும்?

சினிமாவிற்கு ஐஎம்டிபி என்றால், நூல்களுக்கு கம்ப்ளீட் ரிவ்யூ.

அவர்கள் மூலமாகக் கிடைத்த பரிந்துரைதான் இன்றைய பதிவுக்கான மேட்டர்: How to Talk About Books You Haven’t Read – Pierre Bayard

நல்ல நிரலி எழுதுவதற்கான சாமுத்ரிகா லட்சணங்கள், பட்டியல் எதற்கெல்லாம் போடலாம், என்று கேட்டால் நீட்டமாக பேச முடியும். படித்த புனைவுகளை ஆராய்ந்து குதறி ‘ஜஸ்ட் எ மினிட்’ ஆக கூகிள் அரட்டையில் மாட்டிக் கொண்டால்? (சமீபத்தில் கப்பி இப்படித்தான் கேட்டு வைத்தார். இந்த மாதிரி அவஸ்தை படுகிறேன் என்று அறிந்த அலுவல்பிராட்டி, என்னுடைய அரட்டை வசதியையே அனைவருக்கும் நீக்குமாறு உத்தரவிட்டு மானத்தைக் காப்பாற்றியுள்ளார்).

புத்தகங்களை நான்காக பிரிக்க சொல்கிறார்: கேள்விப்பட்டது; கேள்வி கூடப் படாதது; மேலோட்டப் பார்வை இட்டது; மறக்கப்பட்டது.

இது அவரின் கணக்கு வழக்கு:
Books he has started but not finished

  • The Man Without Qualities, Robert Musil
  • Ulysses, James Joyce

Books he has only heard others talk about

  • The Aeneid, Virgil
  • Oliver Twist, Charles Dickens

Books he has read but forgotten

  • The Interpretation of Dreams, Sigmund Freud
  • Steppenwolf, Hermann Hesse

Books about which he admits he knows nothing

  • Rhetoric, Aristotle
  • Mémoires, Joachim du Bellay

நானும் போட்டுப் பார்த்தால்…
கேள்விப்பட்டது

கேள்வி கூடப் படாதது

  • விஷ்ணுபுரம் – ஜெயமோகன்
  • கடல்புறா – சாண்டில்யன்
  • பாழி – கோணங்கி

மேலோட்டப் பார்வை இட்டது

  • குருதிப்புனல் – இந்திரா பார்த்தசாரதி
  • பதினெட்டாவது அட்சக்கோடு – அசோகமித்திரன்
  • ஜே.ஜே. சில குறிப்புகள் – சுந்தர ராமசாமி

மறக்கப்பட்டது

  • கனவுத் தொழிற்சாலை – சுஜாதா
  • பொன்னியின் செல்வன் – கல்கி
  • காதலெனும் தீவினிலே – எஸ்.ஏ.பி.
  • முகமது பின் துக்ளக் – சோ

இந்தக் குறிப்பில் இருக்கும் புத்தகத்தை நான் இன்னும் வாசிக்கவில்லை. நூலகத்தில் எடுத்து இப்போதுதான் ஆரம்பித்திருக்கிறேன். சுருக்கமான அத்தியாயங்கள்; விறுவிறு நடை.

வாசிப்பதே சுகம்; படம் பார்ப்பதே பரமபதம் என்று ஓய்ந்துவிடாமல், ‘எத்துணை காலம்தான் வாசித்து மட்டுமே காலந்தள்ளுவது’ என்று வலைப்பதிவர் போல் துள்ளியெழுந்து சிந்தனைகளை திக்கெட்டும் பரப்ப — எழுதுகோலெடுக்க பணிக்கிறார். எனினும் ரவி ஸ்ரீனிவாசின் நேற்றைய பதிவைப் பார்த்தவுடன் உந்துதல் எழுந்தது… இன்று பதிவிட்டாகிவிட்டது.

முடிப்பதற்கு முன் இன்னொரு மேற்கோள்:

இப்புத்தகத்தைப் பற்றிக் கேள்விப்பட்டவுடன் இதைப் படிக்க வேண்டாம் என்று எனக்குத் தோன்றிய உள்ளுணர்வு? Pop psychology புத்தகங்களைப் பற்றிய எனது நெகட்டிவ் சாய்மானமே அதற்குக் காரணம் என்று நினைக்கிறேன். ‘Don’t judge a book by its cover’ என்பது போல், ‘Don’t judge a book’s content by its topic’ – ‘Blink’: உள்ளுணர்வுகளை நம்பலாமா?

நீதி
நல்லாப் படிங்க. படிக்க வைங்க. படிச்சதைப் பயன்படுத்துங்க.
Happy to onlook - Cartoons, Comics

இளவரசு அறிமுகமான படம் எது?

விடை தெரிந்துகொள்வது எளிதுதான் 🙂

ட்ரிவியாபேட்டைக்கு சமர்ப்பணம்.

தொடர்புடைய சுட்டி: திரைப்படம்.காம்

இன்று வந்த ஸ்பாம்

ParasparFund.In பரஸ்பரநிதி ParasparFund.Com

நிதி நிறுவனங்கள் எல்லாம் தெரியாத ஆள் அழைத்தால் வாங்க மனம் ஒப்புமா? இந்த மாதிரி எரிதம் அஞ்சல் அனுப்புவது அச்சமே தரும்; முதலீடுகளைப் பெற்று கொடுக்காது.

தான் யார் என்ற குட்டி சுய அறிமுகம்; அதன் பிறகு எவ்வாறு இந்த அஞ்சல்பெட்டி அனுப்பலில் இருந்து விடுவித்துக் கொள்ளுதல் என்னும் குறிப்பு எதுவும் காணக்கிடைக்கவில்லை 😦

இன்று மின்மடல் திருடும் நிறுவனம், நாளைக்கு மொத்தமாக பிறவற்றையும் அபேஸ் செய்யுமோ என்னும் பயம் வரும்.

தினமணி – 2007 தமிழ் பத்திரிகை தீபாவளி மலர்கள்: அறிமுகம்

2007 Diwali Malar Deepavali Magazine Specials Dinamani