இணையத்திற்கு வந்த புதிதில் குறிஞ்சி மலர் பூத்தது போல் இல்லாவிட்டாலும், அத்தி பூத்தது போலத்தான் மின்னஞ்சல் வரும். அந்த மாதிரி வரும் மடல்களில் அளவுக்கதிகமாகவே பெட்டிஷன் இருக்கும்.
‘காஷ்மீருக்கு விடுதலை கொடு’
‘சோனியா காந்தியை வெளியேற்று’
‘எலிக்கும் ஆலமரத்திற்கும் திருமண சட்டதிருத்தம் நிறைவேற்று’
‘பொதுவில் கொட்டாவி விட ஒப்புதல் வழங்கு’
இப்படி கலந்துகட்டி இருக்கும். தட்டச்சத் தெரிந்த ஒரே காரணம் மட்டுமல்ல. இருபத்து நான்கு மணி நேர இண்டெர்நெட்டும் இருப்பதால் மட்டுமே தினசரி நாலைந்து பெட்டிசன் விண்ணப்பங்களில் பெயர் போட்டு, முகவரி இட்டு, தொலைபேசி கொடுத்து நிரப்பி இருக்கிறேன்.
வைய விரிவு வலை வயசுக்கு வந்ததும், இந்த முகவரிகளுக்கு கடிதம் போடத் துவங்கினார்கள்….
’பனிக்கரடியைக் காப்பாற்ற பத்து பைசா கொடுத்தால் போதும்!’
‘துப்பாக்கிகளை ஒழிக்க நன்கொடை தாரீர்!’
‘இரத்த தானம் தரமுடியவில்லையா… பணமாக அள்ளித் தரலாமே!’
கொடுக்காதவுடன், செல்பேசியிலும் வீட்டு போனிலும் அழைத்துக் கேட்டார்கள். கூடவே, பெட்டிசனிலும் கையொப்பம் கேட்டார்கள்.
இந்தியா போல் அமெரிக்காவில் தெரு முக்குகளிலோ காபி கடை வாயிலிலோ அறிமுகமில்லாத நாலைந்து பேர் சட்டென்று கூடி கதைக்க முடியாது. இந்த மாதிரி impromptu free speech கூட்டங்களுக்கு 144 தடா.
அதனால், பெட்டிசன் நியாயமான உணர்வுபூர்வமான அணுகுமுறை. சிதறிக் கிடப்பவர்களை ஒன்று சேர்க்கவும், குட்டி குட்டி ஊர் அன்னியர்களை அறிந்து கொண்டு ஒருங்கிணைக்கவும் சாலச் சிறந்த வழி.
அசோக ராஜா காலத்து வழக்கமான இந்தியாவில் எதற்கு இன்னும் பெட்டிசனில் மட்டும் விண்ணப்பத்தைப் போடுகிறார்கள்?
இங்கிலாந்தின் அங்கமாக இருப்பதை கத்தோலிக்கர்கள் விரும்பவில்லை. அரசி ஆளும் யுனைடெட் கிங்டம் கீழே இருப்பதை ப்ரோட்டஸ்டண்ட்டுகள் விரும்புகிறார்கள். இரு சாராரும் அடித்துக் கொண்டு சாகாமல் இருப்பதற்காக பெரிய தடுப்பு அரண்களைக் கட்டிக் கொண்டே இருக்கிறார்கள்.
எல்லாம் இரண்டு மயம். பக்கத்து பக்கத்து தெருக்களில் தனித் தனி மருத்துவமனை. ஒரே சாலையின் இரு புறங்களில் இரண்டு பாடசாலைகள். காசு விரயம் ஆகிறதே என்று இங்கிலாந்து மாளிகையின் அரச குடும்பம் லண்டனில் இருந்து கவலை கொண்டிருக்கிறது.
1984ன் ஞாயிறு காலை. தேவாலயத்தின் வாசல். திருப்பலி முடிந்து வெளியே வருகிறார் அரசு மெஜிஸ்திரேட்டின் மகள். எதிர் அணிக்கு அப்பா வேலை செய்ததற்காக கொலை செய்கிறார் மேரி மெகார்டில். குற்றம் நிரூபிக்கப்பட்டு ஆயுள் தண்டனைக்கு சிறை செல்கிறார் மேரி. சில வருடம் முன்பு அமைதி ஒப்பந்தத்தின் மூலம் அரசாங்கத்தின் உயர் பதவியில் அமர்கிறார் மேரி. அந்தக் கொலையை கேட்டால் ‘துன்பியல் நிகழ்வு’ என்கிறார் மேரி.
இது ரொம்ப பழைய கதை. நவம்பரில் நடந்து முடிந்த தேர்தல் கதை
ஒரு ஊரில் ஒருத்தி இருந்தாள். அவள் ஒரு கோழியும் ஒரு சேவலும் வளர்த்தாள். அது நாளொரு முட்டையும் இட்டு வந்தது. சிறு சிக்கன் பல பணம் என்பதற்கேற்ப, ஒன்றை இரண்டாக்கி, இரண்டை பன்மடங்காகப் பெருக்கினாள்.
அவளுக்கு பக்கத்து வீடு மாளிகையாக இருந்தது. அதில் இருந்தவளுக்கு பத்து கோழி இருந்தது. தினந்தோறும் ஆறுமுகனின் கைக்கு ஒன்றாக டஜன் ஈண்டது.
திடீரென்று ஒரு நாள் மாளிகைக்காரிக்கு முட்டை வரத்து குறையத் துவங்கியது. அவள் பக்கத்துவீட்டுக்காரியை சந்தேகப்பட்டாள்.
அரசனிடம் முறையிட்டாள். ஒற்றைக் கோழி வைத்திருப்பவளோ ‘நான் எடுக்கவில்லை’ என மறுக்கிறாள்.
குழம்பிப்போன ராஜா, அடுத்த நாளுக்கு ஒத்திவைத்து அனுப்பித்துவிட்டான். விடிந்தது. அரண்மனை வாயிலில் சேறும் சகதியும் ஆக்கிவைக்க சொன்னான். வாயிலைக் கடந்ததும் ஒரு சிறிய கப்பும், இரண்டு வாளி நிறைய தண்ணீரும் வைத்தான்.
இருவரும் வந்தார்கள். ஒத்தை கோழிக்காரி ஒரேயொரு குடுவையளவு நீரை வைத்து, இரண்டு கால்களையும் சுத்தமாக அலம்பிக் கொண்டுவிட்டாள்.
பத்து மாட்டுக்காரிக்கு ஒரு வாளி போதவில்லை. பருத்த கால்கள். கவனம் சிதறிய நடை. சறுக்கி விடக் கூடாதென்ற பயம். எல்லாம் சேர்ந்து முட்டி வரை கரை. முன்னவள் பாக்கி வைத்திருந்த வாளித் தண்ணீரையும் தாராளமாக தாரை வார்த்தாள்.
மரியாதைராமன் பார்த்துக் கொண்டிருந்தார். தன் முட்டை போதாதென்று அடுத்தவர் முட்டையையும் சுடும் பழக்கம் கொண்ட பணக்காரியை கண்டித்து, அபராதம் விதித்தார்.
அங்கே சாட்சியம் இல்லை. அமெரிக்காவில் மீடியம் இருந்தாலும் மக்கள் மருண்டதில் ஒபாமாவின் பிடி தளர்ந்து முட்டை சிதறிவிட்டது.
மரியாதைராமன் போல் குடிமகன்களுக்கும் குழப்பம். நிறைய வைத்திருப்பவர் சிரத்தையாக மேய்த்தால், எதற்காக வளர்ச்சியில் பின் தங்க வேண்டும்? ஒழுங்காக கணக்கு போட்டு, கண்ணுங்கருத்துமாக நிர்வகித்தால், ஏழை பக்கத்துவீட்டுக்கார இந்தியா/சீனா போல் நாமும் முன்னேறலாமே?
இப்போதைக்கு அமெரிக்காவின் விஜயகாந்த் ஆன ‘டீ பார்ட்டி‘யிடம் தஞ்சம் புகுந்திருக்கிறார்கள்.
தலைப்புக்கும் இந்தக் கதைக்கும் என்ன சம்பந்தம்?
முதலில் புள்ளிவிவரம்:
கி.பி. 1980: அமெரிக்காவின் மொத்த வருவாயின் பத்து சதவீதத்தை ஒரு சதவீத பெரும்பணக்காரர் ஈட்டுகிறார்கள்.
2007: வெறும் பத்து சதவிகித பெரும்பணக்காரர்கள் 50% (சரி பாதி) வருவாயை வைத்திருக்கிறார்கள்.
2007: நான்கு லட்சம் டாலருக்கு மேல் ஈட்டும் மிகப்பெரும் செல்வந்தர்களிடம் 25% பணம் அடைந்திருக்கிறது.
1973 முதல் இப்போது வரை, பாக்கி 99% சதவிகித சராசரி அமெரிக்கரின் வருவாய் 8.5% உயர்ந்திருக்கிறது.
அதே காலகட்டத்தில் 1% செல்வந்தர்களின் சம்பளம் 190% வளருகிறது.
இப்போது விஜய்காந்த்தின் மதிப்பை உணர்ந்திருப்பீர்கள்.
இந்த அநியாயத்தைத் தட்டிக் கேட்க யாருமே இல்லையா?
இப்படி பணங்குவிப்பவர்கள் ஆட்சியில் இருக்க வேண்டுமா?
எட்டு மில்லியன் அமெரிக்கர்களை வேலையில்லாமல் தவிப்பது குற்றமில்லையா?
முழங்கினார்கள்; ‘தேநீர் கட்சி‘ வென்றது.
இப்பொழுது நிகழ்காலம். முதலில் டுனீசியா; நேற்று எகிப்து; நாளை யேமன்? ஜோர்டான்?
Political crisis in Egypt
எங்கெல்லாம் புரட்சி வெடிக்கிறது… எப்படி வெடித்தது! ஏன் உருவானது… இதுதான் ஊடகங்களின் பேசு பொருள்.
ஜூலி கணபதியும் நந்தலாலாவும் தோஷமில்லை. தோற்றுவாய் தெரிந்துவிடும். ஆனால், உலக சினிமா குறித்து எஸ் ராமகிருஷ்ணன் எழுதினால் கபர்தார். ‘துணையெழுத்து‘ விகடன் வாசகரும் வெளிறுவார்; ‘வெயிலைக் கொண்டு வாருங்கள்’ இலக்கிய ஆர்வலரும் பிளிறுவார்.
சோ ராமசாமி நாடகம் போட்டால் தோஷமில்லை. இலக்கியவிரும்பியும் மாற்றுப்பிரதி பிரகடனவாதியுமான பிரசன்னா ராமசுவாமி நாடகம் போட்டால்?
நேரடியாக நிகழ்ச்சியைப் பார்த்தால் மட்டுமே இந்த மாதிரி நாடகத்தை விமர்சிக்கலாம். கிடைப்பதோ கலைஞர் டிவி ஒளிபரப்பு மட்டுமே… அதை வைத்து மதிப்பீடு செய்யலாம்.
1. டிவி பார்வையாளர்: அழகிக்கு ஃபோகஸ் கொடுப்பது சரியே. ஆனால், அவ்வப்போது பிக்சர் இன் பிக்சர் மாதிரி மொத்த திரையும் காமிங்கப்ப்பா…
2. பரத நாட்டிய சுப்புடு: முன்னாடி பத்மா சுப்ரமணியம் பாட்டி வருவார்; இப்பொழுது அவர் இடத்தில் அனிதா ரத்னம். தமிழச்சி தங்கபாண்டியனுக்கு சான்ஸ் கொடுங்கப்பா…
தாலிபான் பாணி கொடூரச் செயலாலகக் கருதப்படும் கெளரவக் கொலைகள் (Honor Killings) என்பது இஸ்லாமிய நாடுகளில்தான் மிகுதியாக இருக்கிறது. முஸ்லீம்களை இந்த நாடகம் இழிவு செய்கிறதா?
மூன்று பேர் நடுவில் வரும் ஒப்பாரியில் இடம்பிடிக்கிறார்கள். அவர்கள் மு.க. அழகிரி, ஸ்டாலின், கனிமொழியின் குறியீடா?
ஒலிப்பேழையில் சினிமாப் பாடல், பேக்ட்ராப் பவர்பாயின்ட் ஸ்லைடுகள், ‘மானாட மயிலாட’ குத்தாட்டம், ப்ரொஜஷன் ஸ்க்ரீனில் ஃப்ளிக்கர் ஒளிப்படம் – இவை எல்லாம் இருந்தால் நவீன நாடகம் தயார்?
அதிகாரபூர்வ செய்திக் குறிப்பு
ThatsTamil
ஐந்தாவது சென்னை சங்கமம் கலை விழா பிரமாதமான இசை நாடகத்துடன் கோலாகலமாக தொடங்கியது.
சென்னை தீவுத் திடலில் நேற்று மாலை 5வது சென்னை சங்கமம் கலை நிகழ்ச்சி தொடங்கியது. முதல்வர் கருணாநிதி இதைத் தொடங்கி வைத்தார்.
கலை விழாவின் தலை விழாவாக பிரசன்னா ராமசாமியின் வானம் வசப்படும் என்ற இசை நாடக நிகழ்ச்சி நடந்தது. கெளரவக் கொலைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நாடகமாக இது அமைந்தது. அனைவரையும் கவரும் வகையிலான இந்த நாடகத்தில் இடம் பெற்ற வலுவான சமுதாயச் செய்தி அனைவரையும் நெகிழ வைத்தது.
ஒரு எளிய கதையை எடுத்துக் கொண்டு அதை இசை வடிவில் பிரமாதமாக அமைத்திருந்தனர். ஒரு கிராமத்து இளைஞன், வேலை தேடி நகரத்திற்கு வருகிறான். வந்த இடத்தில் காதல் மலர்கிறது. காதலியுடன் தனது ஊருக்குத் திரும்பிச் செல்கிறான். இருவரும் வேறு வேறு சாதியினர்.
இதனால் இளைஞனின் ஊரில் பிரளயம் ஏற்படுகிறது. ஊர்ப் பஞ்சாயத்துக் கூட்டி இந்தக் காதலைப் பிரிக்க உத்தரவிடப்படுகிறது. ஊரில் கலவரம் வெடிக்கிறது. இரண்டாக பிரிந்த கிராமம், சண்டையில் ஈடுபடுகிறது. யார் பெரியவர் என்ற இந்த மோதலால் அந்த இளைஞன் மற்றும் பெண்ணின் காதல் ஸ்தம்பித்துப் போகிறது. இறுதியில் நடப்பது மனதை உருக்குகிறது.
இந்த நாடகத்தின் தொடக்கத்தில் இரண்டு திருநங்கைகளின் அழகான நடனம் அனைவரையும் வியக்க வைப்பதாக இருந்தது. அதேபோல மாற்றுத் திறனாளி ஒருவரின் ஏரோபிக் நடனமும் அனைவரையும் கவர்ந்தது.
200க்கும் மேற்பட்ட கலைஞர்கள் இந்த இசை நாடகத்தில் கலந்து கொண்டு நடித்து, நடனமாடினர். இசையும், கதையைச் சொல்லிய விதமும், நடனமும் இணைந்து கண் கவர் விருந்தாகவும், மனதுக்கு நல்ல செய்தியைத் தருவதாகவும் நாடகம் அமைந்திருந்நதது.
கிராமிய நடனங்கள், பாரதியாரின் பாடல்கள், தமிழ் சினிமாப் பாடல்கள் என வெரைட்டியான இசை வடிவங்களை இழையோட வைத்திருந்த விதம் அருமை. அதிலும் 3 பெண்கள் இணைந்து பாடிய அந்த ஒப்பாரிப் பாடல், கண்களை நனைக்கத் தவறவில்லை.
முத்து மாரியம்மன் வேடத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடனக் கலைஞர் அனிதா ரத்னம் பங்கேற்றார். வெறுமனே வேடிக்கை பார்த்து விட்டு போய் விடும் வகையிலான நாடகமாக இல்லாமல், சமூகத்திற்குத் தேவையான அருமையான செய்தியை சொன்ன இந்த நாடகத்தைப் பாராட்டதவர்களே கிடையாது.
பிரளயன் பேட்டியில் பிரசன்னா ராமஸ்வாமி
சமகால தமிழ் நாடகம் தொடர்பா ஒரு ஏழு நிமிடத்திற்கு ஒரு சின்ன டாக்குமெண்ட்டரி செய்யவேண்டியிருந்தது. அப்படி செய்யும்போது பிரசன்னா ராமசாமியை ஒரு பேட்டி எடுத்தேன். அதில் அவர் ரொம்ப சரியாகச் சொன்னார். தென்னிந்திய நாடகங்களோடு சமகால தமிழ் நாடகங்களை ஒப்பிடும்போது ஒன்றைக் கவனிக்கவேண்டும்.
மலையாள-கர்நாடகா நாடக உலகில் பெரிய சாதனைப் படைப்புகள் பல வந்திருக்கு. காவலம் நாராயண பணிக்கர், சங்கரப்பிள்ளை, அப்புறம் பி.வி.கரந்த், கிரிஷ்கர்னாட், பிரசன்னா என்று பெரிய ஆளுமைகள் உண்டு. அடுத்த தலைமுறையினர் நாடகம் தயாரிக்கிறபோது இந்த பெரிய ஆளுமைகளின் பாதிப்பு அந்த பாணி முற்றிலும் மாறாமல் அப்படியே இருக்கும்.
ஆனா தமிழ் நாடகம் அப்படி இல்ல. பன்முகத் தன்மையோடு இருக்கு.
எங்கள் சென்னைக்கலைக்குழுவுக்கு ஒரு பாணி. கூத்துப்பட்டறைக்கு வேறு பாணி. பரிக்ஷா ஞாநிக்கு இன்னொன்று. அப்புறம் மங்கையோட மௌனக்குரல், மேஜிக் லேண்டர்ன், மு.ராமசாமி, ராஜீ, ஆறுமுகம், கே.ஏ.குணசேகரன், வேலுசரவணன், முருகபூபதி இப்படி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பாணி. எல்லோருக்கும் முன்னோடியான ராமானுஜம் சாருக்கு தனித்த பாணி. இந்த பன்முகத் தன்மைதான் தமிழ் நாடகத்தோட சிறப்பு.
இது கேரளாவிலும் இல்ல. கர்னாடகாவிலும் இல்ல. இது உண்மைதான். ஆனா இந்த ஆற்றல்களையெல்லாம் கொண்டு தமிழ் நாடகத்தின் உண்மையான சவால்களை நாம் சந்திக்க தவறுகிறோம்.
கெளரவக் கொலைகளைத் தொடர்ந்து தற்கொலைகளும் தமிழகத்தில் அதிகரிப்பு
மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தின் தொகுதியான சிவகங்கையில் ஒருகிராமத்தில் பெண்கள் தற்கொலை செய்வது அதிகரித்து வருகிறது. கடந்த 2008 முதல் ஜூன் 2010 வரை மட்டும் இங்கு 39 பெண்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
அதேபோல அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் தொகுதியான ஆண்டிப்பட்டி இடம்பெற்றுள்ள தேனி மாவட்டத்தில் இதே காலகட்டத்தில் 82 பெண்கள் தற்கொலை செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் 90 பேரும், தூத்துக்குடியில் 136 பேரும் தற்கொலை செய்துள்ளனர்.
இவற்றில் பெரும்பாலானோர் குடும்பப் பிரச்சினைகள், ஜாதி விட்டு காதலித்ததால் ஏற்பட்ட காதல் பிரச்சினைகள் தொடர்பாக தற்கொலை செய்து கொண்டவர்கள்.மேலும் ஜாதிக்காக தற்கொலை செய்தவர்களும் கணிசமாக உள்ளனராம். அதாவது கெளரவ கொலைகளைப் போல கெளரவ தற்கொலைகளாக இவை வர்ணிக்கப்படுகின்றன.
கமலஹாசனின் ‘மருதநாயகம்’ மாதிரி ரொம்ப நாளாக பெட்டியில் பூட்டி இருந்தது… அசலாக வினவியது: 2009 – யூலை முப்பது
1. ஸ்வைன் ஃப்ளூ எப்போது ஒழிந்து போகும்? என் உயிருக்கு ஆபத்து வருமா? வருடா வருடம் காய்ச்சல் வருவதுதானே… ஏன் இந்த வருஷம் இப்படி மிரட்டுகிறார்கள்?
2. அமெரிக்கா எதற்கெடுத்தாலும் அச்சுறுத்துகிறது. வேலை போய் விடுமோ என்னும் நிரந்தர பாதுகாப்பின்மை; இல்லறம் முறிந்துவிடுமோ என்னும் சுதந்திர தேவி தாம்பத்தியம்; அல் க்வெய்தா முதல் பள்ளிச் சிறுவர் வரை போட்டுத் தள்ளிவிடுவாரோ என்னும் மனமுறிவு மடமை. உண்மைதானா? இந்தியா நிம்மதி தேசமா?
3. தமிழ்ப்பதிவுகளை நான் படித்த மட்டும் பெண்கள் பெரிதும் பதிவு எழுதுவதில்லை. ஆங்கிலத்துடன் ஒப்பிட்டால் வாசகி கூட்டம் கூட இடுகைகளாகத் தொடர்ந்து இயங்குவதில்லை. அப்படியா? மகளிருக்கென்று தனியாக டாபிக்குகள் உண்டா? தேவையா?
4. ஆணுக்குப் பெண் அடங்கித்தான் போக வேண்டும் என்பதன் வெளிப்பாடுதான் ஒபாமாவின் கீழ் ஹில்லரி செயல்படுகிறாரா? அமெரிக்க அரசியலில் பெண்கள் நிலை எவ்வாறு இருக்கிறது?
5. டெஹல்கா போன்ற மாற்று இந்திய ஊடகங்கள் கூட ராகுல் காந்தியை முன்னிறுத்துகின்றன. ராஜீவுடன் நேரில் பழகியவர் நீங்கள். காங்கிரஸ் அரசியலின் அடுத்த நம்பிக்கை நட்சத்திரம் ராகுல் குறித்து…
6. தங்களின் இளமைக்கால ஊர்களான பாண்டிச்சேரி, பெங்களூரூ, கும்பகோணம் எல்லாம் சமீபத்தில் மறுபடி எப்போது சென்றீர்கள்? என்ன மாற்றம் உணர்கிறீர்கள்?
7. கல்வித்துறை எப்போதுமே அலுவல், அரசியல் போன்ற சக இடங்களை விட முன்னோடியாக செயல்படுவது. பெண்களுக்கு கல்லூரியிலும் பல்கலையிலும் சம உரிமை கிட்டுகிறதா? படிப்பிலாவது அட்ஜஸ்ட்மென்ட் இல்லாமல் காலம் தள்ள முடிகிறதா?
8. நேரில் சந்தித்தபோது பெண்களின் ஆடைத் தேர்வை சமூகம் எவ்வாறு நிர்ப்பந்திக்கிறது என்பது குறித்து சொல்லிக் கொண்டிருந்தீர்கள். ஸ்கர்ட் அழகான ஆடை அல்லவா? உங்களுக்கு பாவாடை மீது ஏன் இத்தனை கோபம்?
9. ரொம்பப் பெண்கள் குறித்த கேள்விகளாகி விட்டது. அமெரிக்காவில் ஆண்களின் நிலை எப்படி இருக்கிறது? ஆடவருக்கு மட்டுமே உரித்தான பிரச்சினை என்று ஏதாவது இருக்கிறதா? என்ன இடர்களை எதிர்நோக்குகிறார்கள்?
ஹவாய் பல்கலைக்கழக சரித்திரப் பேராசிரியராக இருக்கும் ஸ்டைன் சோழர் காலத்துக் கல்வெட்டுக்கள், செப்பேடுகளிலிருந்து முற்றிலும் புதிய முடிவுகளுக்கு வந்திருக்கிறார். அதே கல்வெட்டுக்கள்தாம், செப்பேடுகள்தாம்; ஆனால் முடிவுகள் முற்றிலும் வேறுபட்டவை.
சோழப் பேரரசு என்பதெல்லாம் ரீல். நாடு, கூற்றம் என்ற பிரிவுகளில் விவசாயிகளும் பிராமணர்களும் ஏறக்குறைய தன்னிச்சையாகப் பரிபாலனம் செலுத்திவந்த நிலப் பகுதிகளின் இறுக்கமற்ற சேர்க்கைதான் சோழ மண்டலம் முழுவதும். சோழ மன்னர்களுக்கு அவர்கள் ஒன்றும் அப்படியே சரண் அடையவில்லை. திறை செலுத்தினாலும் சுதந்தரமாகத்தான் இருந்தார்கள் என்று ஆணித்தரமாகக் காட்டுகிறார்.
அவர் சொல்வது நிசமென்றால் நாம் இதுவரை சோழ ராஜாக்கள் பற்றி எழுதியிருக்கும் சரித்திரக் கதைகள் அனைத்தும் ரீல். எல்லாம் கான்ஸல்!
இந்தப் புத்தகத்தைப் பற்றி நம் தமிழறிஞர்கள் எதுவும் கண்டுகொள்ளாதது வியப்பாகவே இருக்கிறது. ஆழமான ஆராய்ச்சியுள்ள புத்தகம்.
இதில் இருக்கும் அடிக்குறிப்புக்களை நோக்கும் போது கலிபோர்னியா, சிகாகோ போன்ற எத்தனையோ அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் சிலம்பிலிருந்தும் சங்கத்திலிருந்தும் மேற்கோள்கள் காட்டி எத்தனை ஆராய்ச்சிக் கட்டுரைகள் வெளிவந்திருக்கின்றன என்பது வியப்பாக இருக்கிறது.
மற்ற பேராசிரியர்கள் உண்மையைத் தேடிக் கொண்டிருக்கும்போது இங்கு ஒரு கோஷ்டி லெமூரியா சரடு விட்டுக்கொண்டிருக்கிறது.
Table of Contents Introduction
I South India: The Region
II Formation of the Medieval Agrarian Order Brahman and Peasant in Early South Indian History
III Peasant Micro Regions: the Nadu
IV The Coromandel Brahmadeya Village
V Right and Left Hand Castes (valaṅgai and iḍaṅgai)
VI The Transition to Supra-local Integration in the Twelfth and Thirteenth Centuries
VII The Chola State and the Agrarian Order
VIII The Vijayanagara State and Society
From Books Reviews (Excerpts)
1. Stein’s characterization of the Chola empire (and by extension of other traditional Indian kingdoms) as a “pyramidal segmentary state” with a king whose principal function is more ritual than executive has not been universally accepted, it has come to constitute the central focus of subsequent discussion of the subject.
2. In a usage borrowed from Aiden Southall, Stein portrays the medieval South Indian state as an organic structure that gained its power and cohesion directly from local society. The basic units of the state were not administrative divisions, but peasant microregions (nadus – நாடுகள்).
Within these areas of intensive rice agriculture, dominant peasant Sudra cultivators with powerful Brahmin priestly groups ruled by means of local assemblies (நாட்டார் – nattaar).
Within each naadu or ‘discrete social universe’, the respectable Vellalas, Kammas and Reddys patronized Brahmin-managed temples, individual priests and most strikingly the large Brahmin-landlord-run villages (brahmadeyas – பிரம்மதேசங்கள்).
The dominant Sudras gained legitimacy and ritual purity in return.
The Pallava-Chola states rose by agglomerating or ‘massing’ several hundred nuclear or core areas, but these medieval rulers did not use vast royal standing armies to conquer and destroy local institutions. Nor did they deploy vast numbers of paid royal officials to integrate their empire – in contrast to the older view K.A. Nilakanta sastri and other historians. To be sure, within the “circumscribed core territories of their capitals’, the Pallava-Chozha monarchs exercised “compelling coercive power’ (p. 24). Beyond the Kaveri River Zone, however the king ruled by ‘ritual hegemony’ rather than executive authority, that is (following A.M. Hocart’s theory of ‘sacral kingship’), by the recognition of the monarch’s superior royal dharma on the part of local notables.
Each Pallava or Choza ruler buttressed this claim by constructing and endowing huge temple complexes, by patronizing Brahmins and by furthering the royal Siva cult.
3. The ‘segmentary model’ was applied to the Chola state in South India by Burton Stein in his influential work, Peasant State and Society in Medieval South India (New Delhi, 1980). Stein has been severely criticized by several historians, in particular, R. Champakalakshmi, ‘Peasant State and Society in Medieval South India – A Review Article’, IESHR, 18, 3–4 (July–December 1981), 411–26; B. D. Chattopadhyaya, ‘Political Processes and the Structure of Polity in Early Medieval India’, presidential address, (Ancient India) PIHC, 44 session (Burdwan, 1983), New Delhi, 1984, 25–63; and James Heitzman, ‘State Formation in South India, 850–1280’, IESHR, 24 (1987), 35–61.
“It’s really unfair to expect people to choose. It’s like asking to be loyal to one parent or the other.”
SHAFIA ZALOOM, who is Asian and white, on being asked to pick a racial identity
Race and the Social Contract – New York Times: “Europeans support a big welfare state because they believe the money will probably go to other white Europeans. In America, support for social spending among respondents to General Social Survey polls increased in tandem with the share of welfare recipients in the area who were in their own racial group…. all-white congregations become less charitably active as the share of black residents in the local community grows.”
* Accept that some days you’re the pigeon, and some days you’re the statue.
* Solitude is independence
* Call no man happy until he is dead - Oedipus
* It is what you read when you don't have to that determines what you will be when you can't help it. - Oscar Wilde
* The difference between literature and journalism is that journalism is unreadable and literature is not read. - Oscar Wilde