கமலஹாசனின் ‘மருதநாயகம்’ மாதிரி ரொம்ப நாளாக பெட்டியில் பூட்டி இருந்தது… அசலாக வினவியது: 2009 – யூலை முப்பது
1. ஸ்வைன் ஃப்ளூ எப்போது ஒழிந்து போகும்? என் உயிருக்கு ஆபத்து வருமா? வருடா வருடம் காய்ச்சல் வருவதுதானே… ஏன் இந்த வருஷம் இப்படி மிரட்டுகிறார்கள்?
2. அமெரிக்கா எதற்கெடுத்தாலும் அச்சுறுத்துகிறது. வேலை போய் விடுமோ என்னும் நிரந்தர பாதுகாப்பின்மை; இல்லறம் முறிந்துவிடுமோ என்னும் சுதந்திர தேவி தாம்பத்தியம்; அல் க்வெய்தா முதல் பள்ளிச் சிறுவர் வரை போட்டுத் தள்ளிவிடுவாரோ என்னும் மனமுறிவு மடமை. உண்மைதானா? இந்தியா நிம்மதி தேசமா?
3. தமிழ்ப்பதிவுகளை நான் படித்த மட்டும் பெண்கள் பெரிதும் பதிவு எழுதுவதில்லை. ஆங்கிலத்துடன் ஒப்பிட்டால் வாசகி கூட்டம் கூட இடுகைகளாகத் தொடர்ந்து இயங்குவதில்லை. அப்படியா? மகளிருக்கென்று தனியாக டாபிக்குகள் உண்டா? தேவையா?
4. ஆணுக்குப் பெண் அடங்கித்தான் போக வேண்டும் என்பதன் வெளிப்பாடுதான் ஒபாமாவின் கீழ் ஹில்லரி செயல்படுகிறாரா? அமெரிக்க அரசியலில் பெண்கள் நிலை எவ்வாறு இருக்கிறது?
5. டெஹல்கா போன்ற மாற்று இந்திய ஊடகங்கள் கூட ராகுல் காந்தியை முன்னிறுத்துகின்றன. ராஜீவுடன் நேரில் பழகியவர் நீங்கள். காங்கிரஸ் அரசியலின் அடுத்த நம்பிக்கை நட்சத்திரம் ராகுல் குறித்து…
6. தங்களின் இளமைக்கால ஊர்களான பாண்டிச்சேரி, பெங்களூரூ, கும்பகோணம் எல்லாம் சமீபத்தில் மறுபடி எப்போது சென்றீர்கள்? என்ன மாற்றம் உணர்கிறீர்கள்?
7. கல்வித்துறை எப்போதுமே அலுவல், அரசியல் போன்ற சக இடங்களை விட முன்னோடியாக செயல்படுவது. பெண்களுக்கு கல்லூரியிலும் பல்கலையிலும் சம உரிமை கிட்டுகிறதா? படிப்பிலாவது அட்ஜஸ்ட்மென்ட் இல்லாமல் காலம் தள்ள முடிகிறதா?
8. நேரில் சந்தித்தபோது பெண்களின் ஆடைத் தேர்வை சமூகம் எவ்வாறு நிர்ப்பந்திக்கிறது என்பது குறித்து சொல்லிக் கொண்டிருந்தீர்கள். ஸ்கர்ட் அழகான ஆடை அல்லவா? உங்களுக்கு பாவாடை மீது ஏன் இத்தனை கோபம்?
9. ரொம்பப் பெண்கள் குறித்த கேள்விகளாகி விட்டது. அமெரிக்காவில் ஆண்களின் நிலை எப்படி இருக்கிறது? ஆடவருக்கு மட்டுமே உரித்தான பிரச்சினை என்று ஏதாவது இருக்கிறதா? என்ன இடர்களை எதிர்நோக்குகிறார்கள்?
10. ட்விட்டர் குறித்து…?