பெயர் : சிரஞ்சீவி
பிறந்த தேதி : 22-8-1955 (வயது 53)
தலைவர் : பிரஜா ராஜ்யம்
கட்சி தோற்றம் : 100 நாளை தாண்டிவிட்டது
மாநிலம் : ஆந்திரா
இதற்கு முன் : நடிகர்
பட்டம் : மெகா ஸ்டார்
1978 : முதல் சினிமா
திருமணம் : 1980
பிடித்த ஹீரோயின் : ஹேமமாலினி
அதிக படங்களில்
ஜோடி : விஜயசாந்தி (19 படம்)
திருப்பம் : அரசியலில் குதிப்பு
தேர்தலில் : தனித்து போட்டி
களம் : சட்டசபை, மக்களவை
நடிகை ரோஜா : அன்று கதாநாயகி, இன்று வில்லி
நம்புவது : சினிமா கவர்ச்சி
எதிர்பார்ப்பு : முதல்வர் பதவி
முன்னுதாரணம் : என்.டி.ஆர்.
கடந்தகாலம் : படப் பெட்டியில்
எதிர்காலம் : ஓட்டுப் பெட்டியில்
ரிலீஸ் : 16ம் தேதி
தல! பெயர் : நிதிஷ்குமார்
பிறந்த தேதி : 1-3-1951 (வயது 58)
கட்சி : ஐக்கிய ஜனதா தளம்
மாநிலம் : பீகார்
சின்னம் : அம்பு
இதற்கு முன் : 6 முறை எம்.பி.,
மத்திய அமைச்சர்,
முதல்வர்
இப்போது : முதல்வர்
2004 தேர்தலில் : 8 எம்.பி.க்கள்
சாதனை : 15 ஆண்டு லாலு
ஆட்சிக்கு முற்றுப்புள்ளி
இருப்பது : தே.ஜ. கூட்டணியில்
போட்டி : 25 தொகுதியில்
லட்சியம் : லாலு அண்ட் கோவை வீழ்த்துவது
பிரதமர் பதவி : இருப்பதில்
நீடித்தால் போதும்
பெயர் : ராமதாஸ்
கட்சி : பா.ம.க.
தொழில் : அரசியல்
கொள்கை : சூழ்நிலையை பொறுத்து
எப்போதும் : கூட்டணி
இருப்பதில்லை : ஒரே அணி
சென்னை வரை : அன்பு சகோதரி
டெல்லி வரை : அன்பு மணி
நிரந்தர முகவரி : தைலாபுர தோட்டம்
தற்காலிக முகவரி : போயஸ் தோட்டம்
பிடித்த நிறம் : பச்சை
பிடித்த கேம்ஸ் : லாங்க் ஜம்ப்
பிடித்த சினிமா : குரு என் ஆளு
பிடித்த பாட்டு : மாம்பழமாம் மாம்பழம்…
(சினிமா பாட்டல்ல)
பிடித்த சபா : ராஜ்யசபா
2004 தேர்தலில் : சூரியனோடு
2009ல் : இலையோடு
நம்புவது : இலங்கையை
நம்பாதது : கையை
எலக்ஷனில் : நிற்பதில்லை
மகனை : நிறுத்துவதில்லை
சாதனை : தாவுவதில்
தவறு : மரம் வெட்டியது
பரிகாரம் : செடி நடுவது
லட்சியம் : அணிமாறுவதில் கின்னஸ்
AB Bharadhan – CPI: Marxists, Communists, Left Front: Thamizh Murasu
Sibu Soren: Jharkand: Bihar: JMM
Deve Gowda: Karnataka – Janata Dal (Secular) – Kumarasamy
பெயர் : சந்திரசேகர ராவ்
பிறந்த தேதி : 17-2-1954 (வயது 55)
மாநிலம் : ஆந்திரா
தாய் வீடு : தெலுங்கு தேசம்
தனிக்குடித்தனம் : தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி
காரணம் : தெலுங்கானா
சின்னம் :கார்
இதற்கு முன் : எம்.எல்.ஏ., மத்திய அமைச்சர்
2004 தேர்தலில் : காங்கிரஸ் கூட்டணி
கிடைத்தது : 5 எம்.பி., 26 எம்.எல்.ஏ.
ஆட்சியில் பங்கு : மத்தியிலும், மாநிலத்திலும்
13-9-2006 : ஆதரவு வாபஸ்
காரணம் : தெலுங்கானா
2009 தேர்தலில் : மூன்றாவது அணி
எத்தனை சீட்? : கிடைத்த வரை லாபம்
சாதனை : பிரிந்து வந்த கட்சியுடன் கூட்டு
மகா சாதனை : விஜயசாந்தி கட்சி இணைப்பு
காரணம் : தெலுங்கானா
சென்ற வருடம் சென்னையில் ‘சாக்லேட் கிருஷ்ணா‘ தரிசனம். அதிலே வந்தவர் கிரேசி மோகனும் மாது பாலாஜியும். அந்த முப்பதாண்டு கால மேடை அனுபவத்திற்கு நிகரான நாடகத்தை நிகழ்த்திக் காட்டினார்கள் நியூ ஜெர்ஸி ஸ்டேஜ் ஃப்ரென்ட்ஸ் குழு.
எஸ் வி சேகர் நடித்து சுந்தா இயக்கிய ‘ஒரு சொந்த வீடு வாடகை வீடாகிறது‘ நாடகம். அன்றைய மதராஸில் வாடகைக்கு வீடு கிடைப்பது கஷ்டம். கைக்குழந்தை இருந்தால் மொசைக் தரை பாழாகி விடும் என்று நிராகரிப்பார்கள். அதற்குப் பதிலாக வளர்ந்த குழந்தை இருந்தாலோ, வயசுப்பயன், பிரும்மச்சாரி சேஷ்டை என்று புதிய காரணம் கண்டுபிடிப்பார்கள். வீடு வாங்குவதற்கோ ரொக்கத் தொகை கொண்டு கிரயம் முடிக்கவேண்டும். திவாலாகும் சிட்டி பேங்கும், கூவிக் கூவி வீட்டுக்கடன் தரும் ஐசிஐசிஐயும் உதயமாகாத எண்பதுகளில் கிரேசி மோகனால் எழுதப் பட்டது.
இவ்வளவு சிரமதசையில் வாடகை வீடு கிடைத்தால், அதை எவராவது காலி செய்வார்களா?
இதுவே எண்பதுகளின் சூப்பர்ஹிட் நாடகத்தின் கரு. அதை அமெரிக்காவிற்கு ஏற்றபடி Enfamilம், மில்லேனியத்திற்கு ஏற்றபடி ஸ்வைன்ஃப்ளுவும் கொண்டு உற்சாகம் கொப்புளிக்க படைப்பு மெருகேற்றி இயக்கியுள்ளார் குரு.
வளைகுடாவில் வின்டோஸ் வெளியானால் கூட அராபிய மொழியில் வெளியாகும். அதே போல் அமெரிக்காவில் அசலில் இருந்த கபாலி கோவில் தெப்பக்குளமும், 200 ரூபாய் வாடகையும் அப்படியே வைத்திருப்பதற்கு பதில் பாஸ்டன் காம்ன்ஸையும் டாலர் சோகத்தையும் பாலயோகிக்கு பதில் மகாலஷ்மி கோவிலையும் கொணர்ந்திருக்கலாம். அன்றும் இன்றும் பாகிஸ்தான் ஊடுருவல் தொடர்வதுதான் நகைச்சுவை நாடகத்தின் சோக மெஸேஜ்.
தமிழக சபாக்களில் நாடகம் பார்த்தால் முசுடுக்களையும் சிரிக்க வைக்க சில உபாயம் கையாள்வார்கள். முக்கியமான வசனத்தை சொன்னவுடன் ‘டொய்ங்ங்ங்ங்…’ என்று சத்தம் ஒலிக்கும். இன்னொரு விலா நோகவைக்கும் உரையாடல் முடிந்தவுடன் ‘ட்ட்டுர்ர்ருக்க்க்…’னு பிறிதொரு சவுண்ட் கொடுப்பார்கள். அதெல்லாம் பாஸ்டனில் கொடுக்காததாலோ என்னவோ, சிரிப்பு மழை பொழியாமல் அமைதி காத்தார் பார்வையாளர். அடுத்த முறை ஒரு கை ஓசையாக cue தந்தால் நாங்களும் இரு கைத்தட்டலாக புன்னகைப்போம் என்று நம்புகிறேன்.
ஸ்டேஜ் ஃப்ரென்ட்சிடம் மிகவும் பிடித்த விஷயம் அவர்களின் அரங்கப் பொருளின் பொருத்தமும் நிறைவான மேடை அமைப்பும். அது ஏனோ, இந்த தடவை, ரொம்ப எளிமையாக, நாட்டு நடப்பை பிரதிபலித்தது. அமெரிக்காவில் recession என்றால் ஸ்டேஜ் ப்ரென்ஸும், ஸ்டேஜை குறைத்து விட்டார்கள்.
சாது சங்கரனின் நீண்ட தலைமுடியை வெட்டுவது கூட ஒரு டெனன்ட் கமான்ட்மென்ட் ஆக்கலாமே என்று நாடகத்தில் வருவதால் நிஜமாகவே கூந்தலை வளர்க்குமளவு கமிட்மென்ட் கொண்ட மோகன்; மீசையை முறுக்கி விட்டு அட்ஜஸ்ட் செய்துகொண்டே வீட்டு சொந்தக்காரராகவே ஆன ஆதிகேசவன் ஆகிய இருவரும் டாப் க்ளாஸ். குறையே சொல்ல இயலாத இயல்பான நடிப்பு.
எஸ் வி சேகர் ஏற்று நடித்த பத்து என்னும் பத்மநாபன் பாத்திரத்தில் வந்த குருவும் ஹீரோ அய்யாசாமியாக வாடகைக்கு வந்து வீட்டை ஆக்கிரமிக்கும் இரமணி – இருவரும் தேவையானதை செய்துச் சென்றார்கள்.
எஸ் வி சேகரின் ஏற்ற இறக்கங்களையும், நீட்டமான பத்திரிகை ஜோக்குகளையும் வெகு சாதாரணமாக சம்பாஷணையில் நுழைக்கும் சாமர்த்தியமும் பத்துவாகிய குருவிடம் கிடைக்கவில்லை. ஒரிஜினலில் அவர் சடாரென்று சென்னை மொழி பேசுவார்; அங்கிருந்து கிண்டல் மொழிக்கு தாவுவார். அவ்வளவு ஈடுகட்டாவிட்டாலும், குருவால் இன்னும் நிறைய முடிந்திருக்கும் என்பது ‘ரகசிய சினேகிதியே‘ போன்றவற்றால் தோன்றியது.
அந்த மாதிரி அய்யாசாமி இரமணியும் வந்திருக்கும் உள்ளூர் கூட்டத்திற்கு இந்த அளவு நடித்தால் போதும் என்பது மாதிரி went through the motions. பாஸ்டனில் ஜே கே ரித்திஸ் படம் போட்டால் கூட ஹவுஸ் ஃபுல்லாக்கும் தமிழர்கள், இந்த மாதிரி நேரடி மேடை நிகழ்வுகளைக் காண ஏனோ வருவதில்லை.
சில நண்பர்களிடம் நேற்று அழைப்பு விடுத்தபோது கூட ‘இலவசமா?’ என்றார்கள். ‘நீ நடிக்கிறாயா?’ என்றார்கள். பெரும்பாலான நியு இங்கிலாந்துக்காரர்களின் பழக்கதோஷம் இது. தெரிந்தவர்கள் பங்கேற்கிறார்கள் என்றால் மட்டுமே வருவார்கள். நுழைவுக் கட்டணம் நயாபைசா கிடையாது என்றால் நிச்சயம் நுறு மைல் தாண்டி நிகழ்ச்சி இருந்தாலும் தலைக்காட்டுவார்கள். குழந்தைகளின் திறமையை அரங்கில் செய்து காட்டலாம் என்றால் எப்பாடுபட்டேனும் அட்டென்டன்ஸ் இடுவார்கள். முன்னூறு மைல் தொலைவில் இருந்து பதின்மூன்று பேர் குழு இரத்தமும் சதையுமாக உயிரோட்டமான நாடகத்தை நடித்துக் காட்ட வருகிறார் என்றால் ஏனோ காணாமல் போனவர் ஆகிவிடுகிறார்கள்.
தமிழ்ப்படங்களே தமிழில் தலைப்பு வைத்து வரிவிலக்குப் பெறுவது போல், நாடகத்தின் டைட்டிலை தமிழிலேயே பொருத்தமாக அமைத்திருக்கலாம். வடிவேலுதான் ‘தூக்கிக் காட்டு’வை காமெடியாக்கி, விவேக்கையும் ‘உவ்வேக்’காக தமிழ் சினிமா பாரம்பரியமாக்கி இருந்தால், இங்கும் R rated ஜோக் தூவப்பட்டிருக்கிறது. சிரிப்பை வரவைக்க அடல்ட்ஸ் ஒன்லி தேவையில்லை.
நண்பர் கணேஷ் சந்திரா வில்லன் தோற்றத்துடன் குழந்தைசாமியாக வெகுளியானப் பாத்திரப்படைப்புக்கு வேண்டியதை அளவோடு வெளிப்படுத்தி இருந்தார்.
இந்த வருடம் புதியதாக அரங்கேறிய ஆரோக்கியசாமி & நவநீதம், புதுசு என்பதே சொல்ல இயலாதவாறு திருப்திகரமாக நடித்தார்கள். பெருமாள் & ப்ரோக்கர்பரமசிவம் ஆகிய இருவரும் மோசம் இல்லையென்றாலும் opportunities for improvement என்று உடல்மொழியை சொல்லலாம். ‘நஷ்ட ஈடு‘ நாதமுனி & கேடி செல்வராஜ் தங்களுக்குக் கொடுக்கப்பட்டதை, செப்பனிடச் சொல்ல எந்தக் கருத்தும் இல்லாமல் செவ்வனே செய்திருக்கிறார்கள்.
பெண்கள் இருவரும் இளைய தளபதி விஜய் திரையில் தோன்றும் கணந்தோறும் கையைக் காலை ஆட்டி உதறலை சமாளிப்பது போல் கொஞ்சமாய் அபிநய சரஸ்வதிகளாகி இருந்தார்கள்.
நாடகம் முடிந்து திரும்பும் சமயத்தில் வானத்தைப் பார்க்குமாறு மகள் சொன்னாள். பிடித்தமான பாதி நிலவாக பெரிய அளவில் மேகங்களுக்கு நடுவில் சிக்கிக் கொண்டிருந்தார் சந்திரன். அப்படியே அதன் அருகில் பார்த்தால் கண்கூச வைக்கும் மெர்க்குரி விளக்கு வரிசை. ஒவ்வொரு விளக்கைச் சுற்றியும் நூற்றுக்கணக்கான விட்டில் பூச்சி. அத்தனையும் அந்த மஞ்சள் ஒளியை மொய்த்துக் கொண்டிருந்தன.
மனிதகுலத்துக்கு மூத்த குலம் ஈக்களின் குலம். ஆதாம் ஏவாளும் மொகஞ்சதாரோவிற்கு வருவதற்கு முன்பே அங்கே எந்தையும் தாயும் கொஞ்சிக் குலாவிய பூச்சிக்கூட்டம். அந்தக் காலத்தில் நிலவொளி மட்டுமே ஆதாரம். நிலவைப் பின்பற்றிப் பறப்பவை நேர்க்கோட்டில் பறக்கும். இருட்டின் பயணத்திலும் இலக்கை அடையும்.
ஆனால், இந்தக் கால ஈக்களுக்கு இடைஞ்சல் எக்கச்சக்கம். மெர்க்குரி, சோடியம், வெண்குழல், வடிவேலு, விவேக் விளக்கு என்று ரகவாரியாக வெளிச்சம் தரும் இரவுப் பயணத்தில் திக்கற்ற பார்வதியாக, செயற்கை மொழியில் மோதி மறைகின்றன.
நியூ ஜெர்சி ஸ்டேஜ் ஃப்ரென்ட்ஸ்களும் அசலான நிலாவை குறிக்கோளாக கொண்டு, கிரேசி/எஸ் வி சேகர் சோடியம் வேபர் மயங்கி தடைப்படாமல் உச்சங்களைத் தொடர விழைகிறேன்.
இந்தியாவின் அடுத்த பிரதமர் யார்? ஏன் மாயாவதிக்கு அந்த நாற்காலி கிடைக்கும்? எப்படி பொருத்தம்?
காங்கிரஸ், பாரதிய ஜனதா தலைமையிலான அணிகளுக்கு மாற்றாக வலுவான அணியை உருவாக்கிய இடதுசாரி கட்சிகள் மாநிலக் கட்சிகளின் தலைவர்களை மட்டும் சேர்ப்பது என்ற பழைய பாணியைக் கைவிட்டுவிட்டு, பாரதிய ஜனதா + காங்கிரசின் தோழமைக் கட்சிகளையே ஒன்றன்பின் ஒன்றாக வெளியில் இழுத்துள்ளனர்.
கடந்த தேர்தலில் 24 கட்சிகளுடன் கூட்டணி வைத்திருந்த பாஜக, இப்போது ஒரு கை விரல்கள் கூட காணாத அளவு சுருங்கி விட்டது. பாஜக கூட்டணியால் ஆட்சியை பிடிக்கமுடியாது.
நீங்கள் ஒரு பெண் அதிகாரியாக இருப்பதால் என்னை நானே கட்டுப் படுத்திக் கொள்கிறேன். நீங்கள் மட்டும் பெண்ணாக இல்லையென்றால் கடுமையான விளைவுகளைச் சந்திக்க வேண்டி வந்திருக்கும். – ஆபாச வார்த்தைகளால் பெண் கலெக்டரை திட்டிய முலாயம்சிங்
நிதிப்பற்றாக்குறை, வருவாய்ப் பற்றாக்குறை, பொருளாதார மந்த நிலை, விஷம்போல் ஏறும் விலைவாசி
சாதாரண மக்களைப் பாதிக்கும் பொருளாதார கொள்கையில் எத்தகைய மாற்றத்தையும் பாஜக, காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் மேற்கொள்ளப்படவில்லை.
வேலையில்லாத் திண்டாட்டம், லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழப்பு, கட்டுமானத் தொழில் பாதிப்பு, வாகனம் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையில் தேக்க நிலை, ஜவுளித் தொழில் பாதிப்பு, ஏற்றுமதி பாதிப்பு
பொருளாதார கொள்கையை வகுப்பதில் காங்கிரஸ், பாஜக இரண்டுமே ஒன்றுக்கொன்று சளைத்தவை அல்ல. அவை பின்பற்றிய கொள்கைகள் தனியார் நிறுவனங்களுக்கும், தொழிலதிபர்களுக்கு சாதகமானவையாகும். இவ்விரு கட்சிகளும் தொழில் நிறுவனங்களின் நிதியை சார்ந்துள்ளதே இதற்கு முக்கியக் காரணமாகும்.
சட்டம்- ஒழுங்கு சீரழிவு
இவ்விரு கட்சிகளின் ஆட்சியில் எல்லையை கூட பாதுகாக்க முடியவில்லை. இதனாலேயே பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.
சமூக சீர்திருத்தம்
பகுஜன் சமாஜ் கட்சியின் தேர்தல் அறிக்கை: உத்தரப் பிரதேசத்தில் அரசு நிறுவனங்கள் தனியார் வசம் கொடுக்கப்பட்டால் கூட இட ஒதுக்கீடு முறையை கட்டாயம் அமல்படுத்த வேண்டும் என்ற நிபந்தனையோடுதான் வழங்கும்.
தங்கள் கட்சி மத்தியில் ஆட்சிக்கு வந்தால் உயர்வகுப்பினருக்கும் உரிய இட ஒதுக்கீடு அளிக்கப்படும் என்று மாயாவதி குறிப்பிடுகிறார்.
பாரதிய ஜனதாவுடன் நட்புறவு: உத்தரப் பிரதேசத்தில் இதற்கு முன் மூன்று முறை முதலமைச்சராகப் பதவி ஏற்றார் மாயாவதி. அந்த மூன்று முறையுமே பாரதிய ஜனதாவின் உதவியால்தான் அவர் முதல்வர் ஆனார். பாரதிய ஜனதாவின் லால்ஜி தாண்டனைத்தான் மாயாவதி அண்ணனாகக் கருதுகிறார்.
கடந்த தேர்தலை விட காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் குறைகிறது; கூட்டணி கட்சிகள் நெருக்கடிக்கு பணிந்தது
2004-ம் ஆண்டு பாராளு மன்றத்தேர்தலின் போது மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் 417 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி போட்டியிட்டது.
இதில் 150 தொகுகளில் தான் காங்கிரஸ் கட்சியால் வெற்றி பெற முடிந்தது. இந்த தடவை அதிக இடங்களில் போட்டியிட்டால் தான், கடந்த தடவை வென்ற 150 தொகுதிகளை விட கூடுதல் இடங்களை பெற முடியும் என்று காங்கிரஸ் தலைவர்கள் கருதினார்கள். இதற்காக மாநில கட்சிகளிடம் காங்கிரஸ் பேச்சு நடத்தி வருகி றது. ஆனால் காங்கிரஸ் நினைத்த படி எதுவும் நடக்கவில்லை.
கூட்டணி கட்சிகள் எல்லாம் தாங்கள் அதிக தொகுதிகளை வைத்துக் கொண்டு சிறிதளவு இடத்தையே காங்கிரசுக்கு விட்டுக் கொடுக்க முன் வந்துள்ளன.
உத்தரபிரதேசத்தில் முலாயம் சிங்,
பீகாரில் லல்லு பிரசாத்,
மராட்டியத்தில் சரத்பவார்,
மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜி
ஆகியோர் மிக, மிக குறைந்த தொகுதிகளையே காங்கிரசுக்கு கொடுக்க உள்ளனர்.
காஷ்மீரில் உள்ள தேசிய மாநாட்டு கட்சியும் காங்கிரசுக்கு குறைவான இடங்களைத் தான் தர முடியும் என்று கூறி உள்ளது. இது காங்கிரசுக்கு நெருக்கடியாக மாறி உள்ளது. உத்தரபிரதேசத்தில் கடந்த தடவை காங்கிரஸ் கட்சி மொத்தம் உள்ள 80 தொகுதிகளில் 73 தொகுதி களில் போட்டியிட்டு 9 இடங்களில் வெற்றி பெற்றது. இந்த தடவை முலாயம்சிங் யாதவின் சமாஜ் வாடி கட்சியுடன் நட்பை ஏற்படுத்தியுள்ள காங்கிரசுக்கு 17 முதல் 20 தொகுதிகள் வரையே கிடைக் கும் என்று தெரிகிறது. எனவே கடந்த தேர்தலுடன் ஒப்பிடுகையில் இந்த தடவை சுமார் 30 இடங்களை காங்கிரஸ் இழக்கும் என்று தெரிகிறது.
DMDK Vijaikanth Alliance Partner Cartoons
காங்கிரஸ் கட்சிக்கு இந்த தடவை ஆந்திரா, தமிழகம் இரு மாநிலங்கள் மட்டுமே ஆறுதலாக அமைந்துள்ளன. ஆந்திராவில் கணிசமான தொகுதிகளை பெற்று வெற்றி பெற முடியும் என்று சோனியா நம்பிக்கையுடன் உள்ளார்.
தமிழ்நாட்டில் கடந்த தடவை 10 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிட்டது. இந்த தடவை 20 தொகுதிகள் வரை தி.மு.க.விடம் காங்கிரஸ் கேட்கிறது. காங்கிரசுக்கு 12 முதல் 15 இடங்கள் வரை தி.மு.க. கொடுக்கும் என்று கூறப்படுகிறது.
Seats & Votes
தொகுதிகள் எண்ணிக்கை குறைவது பற்றி காங்கிரஸ் பொதுச் செயலாளர்களில் ஒருவர் கூறுகையில், “கூட் டணி கட்சிகளுக்கு உரிய இடம் கொடுக்க வேண்டிய பொறுப்பு காங்கிரசுக்கு உள்ளது. அது தான் கூட்டணி தர்மமாகும். இது எங்களுக்கு அதிக பலத்தை தரும்” என்றார்.
4. அப்ப படம் நல்லா ஒடும்னு தோணுது.நான் கடவுள் பத்தி பேசுன எல்லாரும் பயங்கர Goryனு சொல்றாங்க. தயாரிப்பாளாருக்கும் பாலாவுக்கும் வேலை ஒவர். – narain
5. NAAN KADAVUL passed 12A: The BBFC gave the Tamil language film NAAN KADAVUL a rating of 12A on Fri, 06 Feb. This.. http://tinyurl.com/b9e4lp – bbfc
6. நான் கடவுள் ஒரு அற்புதம்…பூஜாவுக்கு நேஷனல் அவார்டு கொடுக்கலையெண்டால் இந்தியாவைக் கொளுத்துவோம் என்று ஒரு ரசிகர் பொங்குகிறார் – Potteakadai
7. Saw Naan Kadavul. watchable once. heavy plot. too sad. his earlier three movies touched me better. bala has to reinvent his hero characters. – ravidreams / ரவி
8. found this line “Bala can ask Danny Boyle (Slumdog Millionaire director) to take a walk” in Naan Kadavul review http://tinyurl.com/csfmsb – DK
9. A H A M B R A H M A S I….. A must watch movie from Bala – anenth
10. A friend of mine whos a bigtime Bala fan watched the movie. He says the movie is a ‘Thooo’ . I’m still gonna watch it. – benly
11. Sify review – Outstanding. Indiaglitz calls it “a movie to cherish and celebrate” & says Bala’s gone to greater heights.
* Accept that some days you’re the pigeon, and some days you’re the statue.
* Solitude is independence
* Call no man happy until he is dead - Oedipus
* It is what you read when you don't have to that determines what you will be when you can't help it. - Oscar Wilde
* The difference between literature and journalism is that journalism is unreadable and literature is not read. - Oscar Wilde