Tag Archives: Elections

Pain vs. Hope: Fears vs. Dreams: Public Elections x Personal Decisions

பயத்திற்கும் நம்பிக்கைக்கும் நடுவே தேர்தல் நடக்கிறது.

அச்சமூட்டுவது எப்படி?

‘அன்னியர் இத்தாலியர் இந்தியப் பிரதமர் ஆகலாமா?’ – சோனியா காந்தியை பாரதீய ஜனதா கட்சி எதிர்க்கிறது. ‘மோடி மட்டும் பி.எம். ஆனால், மொத்த பாரதமும் பாகிஸ்தான் மாதிரி ஆகிவிடும்!’ – சந்தேகப் புகையை கிளப்பி துன்பப் பாதையை காட்டுகிறார் ஷிண்டே.

நம்பிக்கையை விற்பது எப்படி?

நான்காண்டுகளுக்கு முந்தைய அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர் ஒபாமா எல்லோருக்கும் தெரிந்த உதாரணம். வாஜ்பேயி ‘இந்தியா ஓளிர்கிறது’ என்றார்; தோற்றார். ‘நிலையான அரசாங்கம்’ என்பதை இந்திரா காங்கிரஸ் முன்வைத்து வி.பி. சிங் + தேவி லால் – சந்திரசேகர் ஜனதாவை வென்றது.

உலகின் எல்லா தேர்தல்களிலும் பீதிக்கு எதிராக ஆசை வார்த்தை போட்டியிடுகிறது.

என்னிடம் சிக்ஸர் அடிக்க விருப்பமா அல்லது விக்கெட் விழாமல் இருக்க விருப்பமா என்று கேட்டால், எளிதாக விடை சொல்லி விடுவேன். ஒவ்வொரு பந்தையும் தூக்கி அடிப்பேன். ஆனால், விக்கெட்டிற்கு பதில் விரை என்று மாற்றினால், சிக்சர் பக்கமே செல்ல மாட்டேன்.

Obama 2nd Term start: State of the Union 2013

நேற்று ஒபாமா பேசினார்.

பிடித்த தலைவர்களின் பிடித்தமான கொள்கைகளை கேட்பது சுகம். அவை நிறைவேறாவிட்டாலும் கூட கேட்பது சுகம். நாளைக்கு எழுந்தால் இவற்றுக்கு எல்லாம் பலமான முட்டுக்கட்டை விழும் என்று அறிந்திருந்தாலும், தலைவரின் உணர்ச்சிகரமான உரையின் சாத்தியக்கூறுகளையும் வருங்காலம் குறித்த கனவுகளுக்காகவும் நேரலையில் பார்ப்பது சுகம்.

கூடை கவிழ்த்த மாதிரி சிகை அலங்காரத்துடன் மிஷேல் ஒபாமா. அவருக்கு ஒரு புறம் இறந்த காலம். இன்னொரு புறம் நம்பிக்கை காலம். பதினைந்து வயது மகளை தெருச்சண்டை துப்பாக்கிச் சூட்டிற்கு பலி கொடுத்தவர் ஒரு பக்கம் அமர்ந்திருந்தார். மின்ரத்து ஆன புயல் இரவில் பதினைந்து சிசுக்களை காப்பாற்றி கரை சேர்த்த செவிலி இன்னொரு புறம் அமர்ந்திருந்தார்.

ஒபாமா பேசியதில் பிடித்த மேற்கோள்கள்:

* கென்னடி சொன்னதாக, “சட்டசபைக்கு வருவது போட்டி போட்டு ஆட்சியைப் பிடிப்பதற்காக அல்ல; முன்னேற்றத்திற்காக கை கோர்ப்பதற்காகத்தான் அரியணை போட்டி.”

* ’நிறைவேற்ற இயலாத புதிய புதிய வாக்குறுதிகளை அரசாங்கம் கொடுக்க வேண்டாம்; ஆனால், ஏற்கனவே உறுதியளித்த சத்தியங்களைக் காப்பாற்ற வேண்டும்’

* ‘கட்டற்ற குண்டுகளை கட்டுப்படுத்தும் சட்டத்திற்கான உங்கள் வாக்குகளை நியூ டவுன் சிறார்கள், உங்கள் கடமையாக ஆக்கியிருக்கிறார்கள். ஏகே47 துப்பாக்கிகளால் கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கானோர் வாக்குரிமை கேட்கிறார்கள்.’

இவ்வளவு பேசினாலும், செயலாற்றாத காங்கிரசில்தான் சூட்சுமம் இருக்கிறது. அனைவருக்கும் குறைந்த பட்ச சம்பளத்தை உயர்த்தினால் பொருளாதார தடுமாற்றம் நிறைந்த சூழலில் பணவீக்கமும் பெருகும் என்பதை குடியரசு கட்சி அல்ல… ஒபாமாவின் டெமோகிரட்ஸே அறிவார்கள்.

நினைப்பது நல்லதுதான்; ஆனால், நடக்கவேண்டியது என்ன?

Steven Spielberg’s Lincoln Movie: Amendments, Wars and Elections

ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் எடுத்த ’லிங்கன்’ திரைப்படத்தை தியேட்டரில் பார்த்தேன். ‘லைஃப் ஆஃப் பை’ படத்திற்கு பிறகு பார்த்த படம். உணர்ச்சிகரமாக எடுத்து இருக்கிறார்.

குழந்தைகளுக்கு ஆங்காங்கே அலுப்பு தட்டலாம். ஆங்கிலம் ஓரளவு புரிகிற எனக்கு கூட சில இடங்களில் கவனக்குறைவினால் வசனம் புரியாமல் தவறவிட்டேன். துணை எழுத்து இல்லாமல் படம் பார்ப்பதை தவிர்க்கலாம்.

ஏற்கனவே கென் பர்ன்ஸ் எடுத்தது, பி.பி.எஸ். தொலைக்காட்சியில் வந்தது என நாலைந்து லிங்கன் பார்த்தாலும் ஸ்பீல்பெர்க் லிங்கன் வித்தியாசமானவர். அரசியல்வாதி. சமரசங்கள் செய்து சாதுரியமாக முன்னேற்றத்திற்கு உழைப்பவர்.

போர் என்றால் லட்சக்கணக்கில் பொதுமக்கள் சாவார்கள்; தலைவர்கள் சௌகரியமாக தப்பிப் பிழைப்பார்கள்; பொருளாதார காரணங்கள் இருக்கும் என்றெல்லாம் திரையில் காட்ட ஸ்பீல்பெர்க் வேண்டும்; ஆனால், ஐம்பது மாநிலங்களுக்கு 50 நட்சத்திரங்கள் என்று 36 மாகாணக் கொடி ஏற்றாத சறுக்கல்களுக்கும் ஸ்பீல்பெர்க் மேல் பழி போடவேண்டும்.

வெள்ளையர் மட்டுமே கறுப்பின் சமத்துவத்திற்கு போராடியதாக நிலை நிறுத்துவது படத்தின் மிகப் பெரிய குறை அல்ல; The Last King of Scotland, Blood Diamond, The Help என அது என்றென்றும் ஹாலிவுட்டின் தேய்வழக்கு.

படத்தொகுப்பு

Cartoons: Last Week News

This gallery contains 9 photos.

லாரென்ஸ் கீயாட் (1939-2012)

Lawrence_Guyot_Civil_Rights_Activist_Leaders_Voting_Rights_Mississippi_MS_Citizens_USA_Obamaஇன்றைக்கு ஒபாமாவை நினைத்தால் நிறைவாக இருக்கிறது. நிற ஒற்றுமையை எண்ணி மகிழ இயலுகிறது. சமத்துவத்தை இயல்பாக கொண்டாட முடிகிறது.

ஐம்பதாண்டுகள் முன்பு வரை இந்த நிலையா? அமெரிக்காவில் கறுப்பு நிறத் தோல் கொண்டவர்களும் வெள்ளையர்களும் சரிசமமாக புழங்கினார்களா?

நாம் பிறப்பதற்கு முன் நமக்காக போராடினவர்களில் லாரன்ஸ் கீயாட் முக்கியமானவர். கடந்த வாரம் இயற்கை எய்தினார். நிற வெறி மிக மோசமாக இருந்த மிஸிசிப்பி மாநிலத்தில் சமூக நீதிக்காக கொடி உயர்த்தியவர். கருப்பர்களுக்கு வாக்குரிமை கிடைப்பதற்காக உழைத்தவர். தற்போது பராக் ஒபாமா தலைவராக இருக்கும் டெமொகிராடிக் கட்சியில் விளங்கிய இன வேறுபாடுகளை நீக்குவதற்காக முனைந்து செயல்பட்டவர்.

லாரன்சின் துணிச்சலுக்கும் கறுப்பின விடுதலைக்கான செயல்பாட்டுக்கும் பல நிகழ்வுகளையும் போராட்டங்களையும் உதாரணமாக சொல்லலாம். ஃபேனி லூ ஹேமரும் ஹேமரின் இரண்டு கூட்டாளிகளும் கைதானவுடன் நடந்த நிகழ்ச்சியை நியு யார்க் டைம்ஸ் ஆவணப்படுத்தி இருக்கிறது.

Lawrence_Young_Mississippi_MS_Deep_South_MLK_guyot

1963ஆம் ஆண்டின் ஜூன் மாதம். வெள்ளையர்களுக்கு ஒரு வாயில்; கறுப்பர்களுக்கு எந்த நுழைவாயிலும் இல்லை என்னும் நிலை. அமெரிக்காவின் தெற்கு மாநிலங்களில் மிகக் கடுமையான இனப் பாகுபாடு விளங்கிய காலகட்டம். மிசிசிப்பி பேருந்து நிலையத்தை வெள்ளைத் தோல் நிறத்தவர்கள் மட்டுமே பயன்படுத்தலாம். அப்போது ஹேமரும் அவரது நண்பர்களும் தடையை மீறி, பிரவேசம் செய்ய முயல்கிறார்கள். கைதாகிறார்கள்.

அவர்களை ஜாமீனில் எடுக்க கீயாட் செல்கிறார். ஹேமரும் அவர் கூட வந்தவர்களும் மோசமாக கையாளப் பட்டிருந்தார்கள். கைது செய்வதே சட்டமீறல் எனினும், குற்றஞ்சாட்டப்பட்டவர்களை நடத்திய விதம் கொடூரமாக இருந்ததைக் குறித்து தட்டிக் கேட்கிறார் கீயாட்.

‘நீ யாருடா சொல்ல வந்துட்டே’ என்னும் தொனியில் அபிமன்யு கீயாட்டை ஒன்பது காவலர்கள் சூழ்கிறார்கள். தங்கள் துப்பாக்கியை வைத்து அச்சுறுத்துகிறார்கள். கிடைத்த ஆயுதங்களைக் கொண்டு சராமாரியாகத் தாக்குகிறார்கள். துளி ஆடை கூட இல்லாமல் அம்மணமாக்கி அசிங்கப்படுத்தியதாகக் கொக்கரிகிறார்கள். அவரின் ஆண்குறியை நசுக்கி விட எத்தனிக்கிறார்கள்.

குற்றுயிரும் கொலையுயிருமாக கீயாட் இருப்பதைப் பார்த்து அஞ்சிய மருத்துவர்கள், சித்திரவதையை நிறுத்துமாறு இறைஞ்சினார்கள். சித்திரவதையைத் தொடர கீயாட்டையும் கைது செய்து ஜெயிலில் அடைக்கிறார்கள். காவலர்களின் உடல்வதை நீடிக்கிறது.

பெயில் எடுக்க வந்த கீயாட்டை முட்டிக்கு முட்டி தட்டுகிறார்கள். அப்படியானால் அவருக்கு யார் பிணை கொடுப்பார்கள்? எப்படி வெளியே வர முடியும்? எவ்வாறு ஹேமரும் கீயாட்டும் தங்கள் அனுபவங்களை பிறருக்கு சொல்ல முடியும்?

இந்த நிலையில் வேண்டுமென்றே ஜெயில் கதவை பூட்டாமல் திறந்து வைத்து, கூடவே கத்தியையும் போட்டு வைக்கிறார்கள். தூண்டிலில் மீன் மாட்டினால், குரல்வளையை அழுத்து துண்டம் போட்டு, உலகிற்கு தங்கள் பக்க கட்டுக்கதையை விற்று விடலாம். ஆனால், கீயாட் மாட்டவில்லை.

ஹோவெல் ரெயின்ஸ் எழுதிய My Soul Is Rested: The Story of the Civil Rights Movement in the Deep South (1977) புத்தகத்தில் இந்த கொடூரத்தை பகிர்ந்து இருக்கிறார் கீயாட்.

மிஸிஸிப்பியின் ஜாக்ஸன் நகரத்தில் கீயாட்டின் தோழரான மெட்கர் எவர்ஸ் கொலை செய்யப்படுகிறார். அதன் பின், கீயாட்டும் உடனடியாக மரணமடைந்தால், கலவரம் மூளும் என்று அஞ்சிய காவல்துறை கீயாட்டை விடுவித்தது.

அடுத்த வருடமே கீயாட் மீண்டும் சிறைக் கைதியாகிறார். காவல்துறையினர் கருப்பினருக்கு நிகழ்த்தும் அட்டூழியங்களை நடுவண் அரசான வாஷிங்டன் பார்வைக்கு கொண்டு செல்ல பதினேழு நாள் உண்ணாவிரத நோன்பு மேற்கொள்கிறார். ஐம்பது கிலோ எடை இழந்தாலும் உணர்வும் எழுச்சியும் உறுதியும் இழக்காமல், சக கறுப்பர்களையும் மீட்கிறார்.

”அடுத்தவர் உன் மீது ஆக்கிரமிப்பு செய்யலாம். ஆனால், நாம் அடங்கிப் போவது நம் கையில் இருக்கிறது” என்று அந்த சத்தியாகிரகத்தை நினைவு கூர்கிறார்.

1939ஆம் ஆண்டு ஜூலை பதினேழாம் தேதி மிஸிஸிப்பியில் பிறந்தார் கியாட். அவருடைய அப்பா கூலித் தொழிலாளியாக வேலை பார்த்தார். டூகலூ கல்லூரியில் இருந்து 1963ல் வேதியியலிலும் உயிரியலிலும் பட்டம் பெற்றார். அகிம்சாவழி மாணவர்களின் குழு சார்பாக பல்கலைக்கழகத்தில் படித்த காலத்திலேயே மிசிசிப்பி முழுக்க பயணம் மேற்கொண்டு சமூகநீதி பட்டறைகளை முனைப்போடு ஒருங்கிணத்தார்.

அமெரிக்க குடிமகன்கள் எல்லோரும் ஓட்டளிக்க வேண்டும் என்பதில் குறியாக இருந்தார். இனப்பிரிவிற்கு எதிராக போராடிய மார்ட்டின் லூதர் கிங் போன்றோர் எங்கும் எதிலும் வெள்ளையர்களுக்கு சமமான உரிமைக்காக குரலெழுப்பிய தருணங்களில், கீயாட் வாக்குப்பெட்டியை மட்டும் குறிவைத்து இயங்கினார். கருப்பர்கள் வாக்கு போட்டு தங்களுக்கு உவப்பானவர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அதன் மூலம் அமெரிக்கா முழுக்க கருப்பின சமத்துவ உரிமையை அடையலாம் என்று நம்பினார். வெள்ளையரிடம் இருந்து இன உரிமை பெறுவதற்கு பதில், ஜனநாயகத்தின் பேரிலும் தேர்தல் வெற்றி மூலமாகவும் சட்டதிருத்தங்களையும் சமூக சீர்திருத்தங்களையும் அடையும் வழிக்காக விழிப்புணர்வை புகட்டினார்.

1971இல் சட்டப் படிப்பில் முதுகலை பட்டத்தை முடித்தார். அதன் பின் வாஷிங்டன் நகரத்தில் பணியாற்றினார்.

தற்பால்விரும்பிகளுக்கான போராட்டத்தை ஆதரிக்கும்போது அவர் சொன்ன மேற்கோள் நமக்கு நல்ல வழிகாட்டியாக இருக்கும்: “நமக்கு முக்கியம்னு படறதுக்காக உயிரைப் பணயம் வைத்து போராடறதுக்கு ஈடா இந்த உலகத்தில் எதுவுமே கிடையாது. லிங்கன் சொன்னது போல் சுடறவன் கிட்ட இருந்து தப்பிச்சுட்டு அவன் முன்னாடி சாதிக்கறது தனி சுகம்!”

அஞ்சலிகள்.

வாழ்க்கைக் குறிப்பு

பராக் ஒபாமா ஏன் ஜெயிக்க வேண்டும்?

நான்கு வருடம் முன்பு ஒபாமாவின் தாரக மந்திரம் ‘மாற்றம்’. இன்றைக்கு மிட் ராம்னியின் மந்திரம் ‘அசல் மாற்றம்’.

சின்ன வயதில் சோறு ஊட்டும்போது அம்மா சொன்ன கதை நினைவுக்கு வருகிறது. பண்ணையார் வீட்டின் செல்லப் பிள்ளையை பாதுகாக்க கீரியை வளர்க்கிறார்கள். அப்பா வயலுக்கு வேலையாகப் போய்விட்டார். அம்மாவோ முற்றத்தில் பிசி. சமயம் பார்த்து நல்ல பாம்பு உள்ளே நுழைகிறது.

பாம்பைக் கண்ட கீரி, அதனுடன் சண்டை போட்டு குழந்தையைக் காப்பாற்றுகிறது. இந்த விஷயத்தை தன் எஜமானர்களுக்கு சொல்வதற்காக வாசலில் காத்திருக்கிறது.

இரத்தம் வழியும் வாயைப் பார்த்தவுடன் ஆத்திரம் கொண்ட தாயார், கீரியின் தலையில் தன் கையில் உள்ள குழவியைப் போட்டுக் கொல்கிறாள். குழந்தைக்கு என்னாச்சோ என்று பதறிக் கொண்டு வீட்டிற்குள் ஓடுகிறாள். அப்பொழுதுதான் உண்மை விளங்குகிறது.

குழந்தை பத்திரமாக தூளியில் உறங்குகிறது. தூளியின் அடியில் பாம்பு செத்துக் கிடக்கிறது. தன் மக்களை பாதுகாத்த பாதுகாவலனை தானே கொன்று விட்டோமே என்று அந்த அன்னை கதறுகிறாள்.

கீரியைப் போல் வாயில்லா ஜீவனாக ஒபாமா அமெரிக்க மக்களை பணக்கார வால் ஸ்ட்ரீட் பாம்புகளிடமிருந்து காக்க திட்டங்கள் இட்டு, சட்டமாக்கி வருகிறார். அதை அறியாமல், அமெரிக்க மக்கள் அவருக்கு எதிராக வாக்களித்து, அதன் பின்னர் வருத்தம் கொள்வாரோ என்னும் பதைபதைப்பு இருக்கத்தான் செய்கிறது.

கடந்த ஆட்சிக் காலத்தில் ஒபாமா என்ன சாதித்தார்?

முதல் கையெழுத்து எப்பொழுதுமே முக்கியமானது. அமெரிக்க ஜனாதிபதி ஆனதும் பராக் ஒபாமா பெண்களுக்கும் சம சம்பளம் கிடைக்க வழிவகுக்கும் திட்டத்தை தன்னுடைய முதல் கையெழுத்தின் மூலம் சட்டமாக்கினார்.

’இவன் திவாலாகிப் போவான். அவள் மஞ்சக் கடுதாசி கொடுப்பாள்’ என்று பின்னணியில் ஏலம் விட்டுக் கொண்டே, முகப்பூச்சில் அவர்களுக்கு கடும் நிதிச்சுமையைக் கொடுத்த பொருளாதார நிறுவனங்களைக் கட்டுக்குள் கொண்டு வரும் கண்காணிப்பு சட்டத்தை அடுத்து நிறைவேற்றினார்.

ஓரினச் சேர்க்கையாளர்கள் திருமணம் புரிந்தால், வேலை போகும்; எந்தவித காப்பீடும் கிடைக்காது போன்ற ஏற்றத்தாழ்வுகளை நீக்குவதற்கான திறப்புகளை இயற்றினார்.

கல்லூரிகளில் படிப்பதற்கான கடன் கிடைப்பதில் இடைத் தரகர்கள் இல்லாமல் ஆக்கினார்.

இளைஞர்களுக்கும் வசதியானோருக்கும் மட்டும் உடல்நல மருத்துவம். முதியவர்களுக்கும் நோய்வாய்ப்பட்டவர்களுக்கும் முதுகு திருப்பல் என்பது போய் அனைவருக்கும் சுகாதாரம், எல்லோருக்கும் காப்பீடு, எவருக்கும் இன்சூரன்ஸ் என்பதை நிஜமாக்கினார்.

சுதந்திர சிந்தனையை எதிர்த்த ஒசாமா பின் லாடனை வீழ்த்தினார். முந்தைய ஆட்சியில் துவங்கிய இராக் போருக்கு முற்றும் போட்டார். முடிவில்லாத ஆப்கானிஸ்தான் சண்டையை எப்படி கைமாற்றி, சுயாட்சிக்கு கொணரலாம் என்பதற்கு வடிவம் கொடுத்தார்.

அராபிய நாடுகளில் கத்தியின்றி, ரத்தமின்றி, சத்தமின்றி மாற்றங்கள் கொண்டு வந்தார். அமெரிக்க படை வந்து இறங்க வில்லை. போர் விமானங்கள் குண்டு மழை பொழிந்து பொதுமக்கள் சாகவில்லை. குடிமக்களே போராடினர். விடுதலை கேட்டனர். சர்வாதிகாரிகள் வீழ்ந்தனர். காந்தி என்ற சாந்த மூர்த்தி கூட நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்.

எகிப்து, லிபியா, டுனிசியா… வீழ்ந்தது மன்னராட்சி. தொடரும் மக்களாட்சி சகாப்தங்கள்.

அமைதிக்கான நோபல் பரிசை சும்மாவா ஒபாமாவிற்கு கொடுத்தார்கள்!

இதெல்லாம் காலாகாலத்திற்கும் நின்று பேசும் சாதனைகள்.

ஆனால், கடந்த இரண்டு ஆண்டு காலமாக நடந்தவைதான் மக்கள் மனதில் ஆழமாக பதிந்து இருக்கிறது. கையாலாகாத, ஒன்றுக்கும் உதவாத தலைவர் என்னும் பிம்பத்தை ‘டீ பார்ட்டி’ ரிபப்ளிகன்களும் செல்வந்த மிட் ராம்னியின் தோழர்களும் அமெரிக்க வாக்காளர் மத்தியில் ஆழமாக நிலைநிறுத்தி இருக்கிறார்கள்.

ஒபாமா முன்னிறுத்தும் எந்த திட்டத்தையும் எதிர்ப்பது என்பது மட்டுமே குடியரசுக் கட்சியின் ’ஓர் அம்ச திட்டம்’.

முக்கிய நகரங்கள் அனைத்தையும் இரயில் பாதை மூலம் இணைக்கும் திட்டமா… முடியாது.

சரி… காரில்தான் செல்வோம் என்கிறீர்கள். அதற்கான எரிவாயு கக்கும் விஷத்தை கரியமில வாயுவைக் குறைத்து, குறைவான பெட்ரோலுக்கு நிறைவான தூரம் செல்லும் அதி-திறன் கார் தயாரிக்கும் திட்டமா… முடியாது.

வேண்டாம்… பள்ளிகளில் ஆசிரியர்களை அதிகரிப்போம். ஒரு வாத்தியாருக்கு இருபது மாணவர்கள் மட்டும் என்று வைத்துக் கொள்வோம். குழந்தைகளுக்கு அறிவியல் கற்பிப்போம் திட்டமா… முடியாது.

வலதுசாரிகளின் செல்லப்பிள்ளையான வரிக்குறைப்பு செய்வோம். குறைந்தபட்ச ஊதியத்தில் வாழ்பவர்களுக்கு வருமான வரியை நீக்குவோம்… முடியாது.

குறைந்த பட்சமாக… சாலைகளை பழுது பார்ப்போம். பாலங்களை சீர்படுத்துவோம்… முடியாது.

எதை எடுத்தாலும் முட்டுக்கட்டை. எந்த ஐடியா சொன்னாலும் ஒத்துழையாமை. இது மட்டுமே மிட் ராம்னி கட்சியின் செயல்பாடு.

இதற்கு நடுவிலும் சொங்கிப் போன அமெரிக்காவை தலை நிமிர வைத்திருக்கிறார் பராக் ஒபாமா. பங்குச் சந்தை குறியீடு முன்னேறுகிறது. வேலை தேடுபவர்கள் எண்ணிக்கை குறைகிறது. புதிதாக வேலை கிடைத்தோர்களின் சதவிகிதம் நாளொரு ஃபேர் அண்ட் லவ்லியும் பொழுதொரு பூஸ்ட்டுமாக வெற்றிக் கொடி கட்டுகிறது.

இவ்வளவு முட்டுக்கட்டை இட்டும் ஒபாமா தேர் ஸ்டெடியாக வீறுநடை போடுகிறது.

இதெல்லாம் ஒஹாயொ வாக்காளருக்கும் ஃபுளோரிடா பெருசுகளுக்கும் புரிந்ததா என்பது நாளைக்கு தெரிந்து விடும்.

’ராமன் ஆண்டாலும் இராவணன் ஆண்டாலும் நமக்கென்ன போச்சு? மிட் ராம்னி வந்தால் என்ன குறை?’

ராம்னிக்கு ஸ்திரமான கொள்கை இல்லை. எங்க ஊர் கவர்னராக இருந்தபோது நிறைவேற்றிய திட்டங்களை இப்பொழுது அவரே எதிர்க்கிறார். கிட்டத்தட்ட அன்னியன் அம்பி போல் நடந்து கொள்கிறார்.

ஒரு சமயம் ரோமியோவாக பெண்களுக்கு ஆதரவு தருகிறார். அடுத்த நிமிடம் அன்னியனாக மாறி, பெண்களை வன்புணர்ந்தால் கூட கருக்கலைப்பு கூடாது என்கிறா. அடுத்த நிமிடம் அம்பியாக மாறி ஜீஸஸ் என்ன சொல்லி இருக்கார்னா என்று கருட புராணம் பாடுகிறார்.

வந்த முதல் நாளே பழைய குருடி கதவைத் திறடி என்று ஒபாமாவின் ‘எல்லோருக்கும் உடல்நலக் காப்பீடு’ திட்டத்தை ரத்து செய்வேன் என வாக்குறுதி தந்திருக்கிறார்.

ஏற்கனவே பதினாறு ட்ரில்லியன் (கடைசி கணக்கின்படி $16,015,769,788,215.80) பட்ஜெட் பற்றாக்குறை. இதன் தலையில் இன்னும் இராணுவ செல்வழிப்பு என்கிறார். மில்லியனர்களுக்கு வருமான வரியை வாரி வழங்குவேன் என்கிறார்.

கூடிய சீக்கிரமே சீனாவும் ஜெர்மனியும் அகில உலகத்தின் முடிசூடா மன்னர்களாக கோலோச்ச வேண்டும் என்று நினைப்பவர்கள் நிச்சயம் ராம்னிக்கு வாக்களிப்பார்கள்.

What I fear is genuinely worthy falling into the abyss; What I hate is ignorantly hopeful pushing them!

Mitt Romney or Barack Obama: 4 More Days or 4 More Years?

அமெரிக்காவின் அடுத்த அதிபர் யார் என்பது நவம்பர் ஆறாம் தேதி தெரிந்து விடும். ஜனாதிபதி ஆனவுடன் முதல் விருந்தை இந்தியாவிற்கு தந்து கௌரவித்த ஒபாமாவா? அல்லது பால்ய வயதிலேயே, இருபதாண்டுகளுக்கு முன்பே அவுட்சோர்சிங் செய்து இந்தியர்களின் கணக்குப்பிள்ளை சூட்டிகையை உலகுக்கு அறிவித்த மிட் ராம்னியா?

மிட் ராம்னியை அறிமுகம் செய்யுமுன் புகழ்பெற்ற மகாபாரதக் கதையை பார்த்து விடலாம்.

பாண்டவர்களில் மூத்தவர் தருமபுத்திரர் வீட்டில் விருந்து. ஏக தடபுடலாக ஆயிரக்கணக்கானோர் விதவிதமான உணவுகளை ருசித்து மகிழ்கிறார்கள். கை கழுவும் இடத்தில் அணில் ஒன்று புரண்டு புரண்டு குளிக்கிறது. முதுகுப்புறம் மட்டும் தங்கமாக ஜொலிக்கிறது. இந்த விநோதத்தை கிருஷ்ணர் சுட்டுகிறார். அணிலை அழைத்து எவ்வாறு அது தங்க நிறம் அடைந்தது என்று விசாரிக்கிறார்.

அது தன் பூர்வ கதை சொல்கிறது. ‘பக்கத்து குக்கிராமத்தில் ஏழை விவசாயி இருக்கிறார். தன் மனைவியுடனும் மகனுடனும் வசிக்கிறார். அன்றாடங்காய்ச்சி. தினசரி உணவை மூன்று பங்காக்கி உண்பார்கள். சாப்புடறப்ப கதவு தட்டற சத்தம். வாசலில் பிச்சை கேட்டு வந்தவனை உள்ளே அழைக்கிறார்கள். தங்கள் கஞ்சியை நான்காகப் பிரித்து ஒரு பகுதியை அவனுக்குக் கொடுத்தார்கள். போதாது என்றான். குடும்பத் தலைவன் தன் பங்கைக் கொடுத்தான். போதாது… இன்னும் வேண்டும் என்கிறான். மனைவியும் மகனும் தங்கள் சோறைக் கொடுக்கும் வரை விடாமல் கேட்டு சாப்பிட்டு விடுகிறான். அவன் கை கழுவிய தண்ணீர் என் மேல் பட்டதால் என் பின்புறம் தங்கமானது’ என்கிறது.

பராக் ஒபாமாவை எதிர்க்கும் மிட் ராம்னிக்கு இந்தக் கதை நிச்சயம் ரொம்ப பிடிக்கும்.

ஏழைகளின் வருவாயில் இருந்து கொஞ்சம் பங்கு போட்டு பணக்கார பிச்சைக்காரர்களுக்கு தர வேண்டும். அதன் மூலம் அவர்கள் கை கழுவி செலவழிப்பார்கள். அதனால் தளர்ந்த அமெரிக்கா முழுக்க தங்கம் மிளிறும் என்கிறார்.

கடந்த நான்காண்டுகளில் ஒபாமாவினால் அமெரிக்காவை பொருளாதாரத்தில் தலை நிமிர வைக்க முடியவில்லை என்பதே நிஜமான நிதர்சனம். படித்தவர்களுக்கு நல்ல வேலை எளிதில் கிட்டுகிறது. ஆனால், சராசரி அமெரிக்கருக்கு, பள்ளிப்படிப்பு முடிக்காதவருக்கு நிதிநிலைமையும் வாய்ப்புகளும் படு மோசம்.

சென்ற ஆட்சிக் காலத்தில் ஜார்ஜ் புஷ் போர் தொடுத்தார். அதனால், ஆவரேஜ் அமெரிக்கர்களுக்கு ஏதோ ஊழியம் கிடைத்தது. அதற்கும் முந்திய பில் கிளிண்டன் காலத்தில் இண்டெர்நெட் ஜாக்பாட் அடித்தது. எல்லோரும் கொழித்தார்கள். ஆனால், ஒபாமாவிற்கு பச்சை சுற்றுச்சூழல், உள்கட்டமைப்பு சீரமைப்பிற்காக கோடானுகோடி வாரியிறைப்பு எதுவுமே கை கொடுக்கவில்லை. வேலையில்லா திண்டாட்டம் பெருமளவில் நீடிக்கிறது.

அமெரிக்கா முன்னேறுவது இருக்கட்டும். இந்தியாவிற்கு யார் வந்தால் நல்லது? தெற்காசியாவில் என்ன விதமான மாற்றங்கள் நிகழும்?

வங்காளம் கற்றுக் கொடுக்கும் இந்த ஊர் பல்கலைக்கழக பேராசிரியரை சந்தித்தபோது சொன்ன விஷயம் தோன்றியது. ‘சண்டை போட்டாத்தான் மதிப்பு. விடுதலைப் புலிகள் இருந்தவரைக்கும் எங்க டிபார்ட்மெண்டுக்கு நல்ல கவனிப்பு. அங்கே இருப்பவர்களை ஆராயணும்னு சொன்னால் போதும். டூர் அடிக்கலாம். தீவுகளில் சுற்றலாம். செம ஜாலியாக இருக்கும். இப்போ, அராபி கத்துக்கோ… தூய உருது பேசு என்று மாறிட்டாங்க’ என்றார்.

இந்தியாவைப் பொறுத்தவரை சமர்த்து நாடு. நாலு நாள் மின்சாரம் இல்லாமல் இருந்தாலும் சமாளிக்கிறார்கள். ஏழைகளுக்கும் நடுத்தர வர்க்கத்திற்கும் இடையே உள்ள வருவாய் ஏற்றத்தாழ்வு அதிரடியாக வளர்ந்தாலும் அழுக்காறு கொண்டு வன்முறை பெருகுவதில்லை. அன்னா அசாரே உதித்தாலும் எகிப்து மாதிரியோ, சிரியா மாதிரியோ ஊதிப் பெரிதாக்க முடியவில்லை. ஷியா, சன்னி, குர்து, சூஃபி என்று இஸ்லாமை பிரித்தாளும் சூழ்ச்சியும் தேறவில்லை. சீனா ஆக்கிரமித்தாலும் விட்டுக் கொடுக்கிறார்கள். ஊர் புகுந்து பாகிஸ்தான் சுட்டுத் தள்ளினாலும் பொறுமை காக்கிறார்கள்.

இந்த மாதிரி தேமேயென்று அமைதி காக்கும் பூமி குறித்து அமெரிக்க அதிபர்கள் கவலை கொள்ள வேண்டாம். ஒன்று பிரச்சினையை உருவாக்கத் தெரிய வேண்டும். அது இஸ்ரேல் வழி. இன்னொன்று பிரச்சினையை வளர்க்கத் தெரிய வேண்டும். இது இரான் வழி. இரண்டிலும் பாரதம் செல்ல மாட்டேன் என்பதனால் இந்தியாவை இன்னொரு ஐரோப்பிய நாடாக, ஆஸ்திரேலியாவாக அமெரிக்கா கருதுகிறது.

ஸ்திரமான நண்பன். நம்பிக்கையான அடியாள். காலாகாலத்திற்கும் சேவகம். தலைமுறை விசுவாசம். சொன்னதெல்லாம் கேட்பவர்.

ஒபாமாவின் ஆட்சிக்காலத்தில் இந்திய நிறுவனங்களின் அமெரிக்க வளர்ச்சியை ஒடுக்கும் முயற்சிகள் எடுக்கப்பட்டது. இந்தியர்களை விசா தில்லுமுல்லு செய்ததாக இன்ஃபோசிஸ் குற்றஞ்சாட்டப்பட்டு அதன் மீது அபராதம் விதித்தார்கள். வெளிநாடுகளில் வேலைக்காரர்கள் வைத்திருந்தார்கள் நிதிச்சுமையை கூட்டினார்கள். இந்த மாதிரி நெருக்கடிகளை கூகிள், மைக்ரோசாஃப்ட் போன்ற தொழில்நுட்ப ஜாம்பவான்கள் எதிர்த்தார்கள்.

இன்னொரு முறை பதவிக்கு வந்தால் ‘அமெரிக்கா அமெரிக்கருக்கே’ என்னும் சுதேசிக் கொள்கையை இன்னும் தீவிரமாக ஒபாமா அமலாக்குவார். மிட் ராம்னி தாராள சிந்தனை கொண்டவர். உலகெங்கும் வேலை வாய்ப்பு பெருகினாலும், அமெரிக்கா சுபிட்சமாகும் என்று நம்புபவர். மேலும், வர்த்தக பின்னணியில் இருந்து வருவதால், இந்த மாதிரி சின்ன விஷயங்களில் ஆர்வம் காட்டாமல், பெரிய பிரச்சினைகளில் கவனம் தருவார்.

சரி… யார் ஜெயிப்பார்கள்?

சென்ற முறை ஒபாமா வென்றதற்கு மிக முக்கிய காரணம், அவரின் பணம் திரட்டும் லாவகம். நின்றால் ஆயிரம் டாலர், பேசினால் லட்சம் டாலர் என்று கறந்து, அதை விளம்பரங்களிலும் வாக்கு சேகரிப்பிலும் செலவழித்து ஜெயித்தார்.

இந்த முறை அவ்ரின் எதிரி மிட் ராம்னியோ கோடானு கோடிக்கு சொந்தக்காரர். தன்னுடைய கைக்காசு, அவருடைய கோடீஸ்வர நண்பர்களின் மறைமுக காணிக்கை மூலமாக பராக் ஒபாமாவை விட பத்து மடங்கு முதல் போட்டு தலைவலியாக போட்டியிடுகிறார்.

எனினும், பணம் மட்டுமே வாக்குப்பெட்டிகளை நிரப்புமா என்ன!

அசோசியேஷன் தேர்தல்

பழம் நழுவி பாலில் விழுந்து நான் பார்த்தது இல்லை. ஆனால், தேர்தலில் நிற்காமலேயே ஜெயிக்கும் வாய்ப்பை இரண்டு ஆண்டுகள் முன்பு பார்த்தேன்.

முள்கிரீடம், அம்பு படுக்கை, பாம்பு புற்று மேல் அரியாசனம் – இப்படி என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். அந்தப் பதவி அப்படிப்பட்ட பதவி.

சனி வக்கிரமாகி குரு நீசமாகி கஷ்டதசையில் அமெரிக்கா வலம் வந்த காலம். கடந்த தடவை பொருளாளராக பதவி வகித்தவர், அவருடைய வீட்டிற்கு செய்த சிசுருஷைகள் கண்டு சுற்றுப்புறத்தாரும் அண்டைவீட்டாரும் பொங்கி எழுந்த காலம். பசும்புல்லின் வளர்ச்சி ஆறரை இன்ச் அளவை தாண்டாமல் இருக்க வேண்டும் என்பதற்காக அறுபது டாலர் அதிகம் தர விரும்பாத காலம்.

நிதிப் பற்றாக்குறை, கூட்டுக் களவாணி ராஜ்ஜியம், கொள்ளையடிக்கும் நிர்வாகம் எல்லாவற்றையும் தனி மனிதனாக தட்டிக் கேட்க புறப்பட்டேன். குலதெய்வங்களான இண்டெர்னெட் போராளி வினவு, சிறுபத்திரிகை தீவிரவாதி செயமோகன், சினிமா தளபதி விஜய் எல்லோரையும் வணங்கி வீராவேசமாக உள்ளே புகுந்தேன்.

சினிமாவை விமர்சிப்பது சுலபம். எடுப்பது கஷ்டம் என்பது போல் வரவு செலவு கணக்கை லகானுக்குள் அடக்குவது பெரிதினும் பெரிய கஷ்டம்.

ஒரு பக்கம் எங்கள் வீட்டில் கூரை ரிப்பேர். வாசலில் பூசணிப்பூ முளைக்கவில்லை. அண்ணந்து உயர்ந்த மரம் எங்கள் தலையில் விழுவதற்கு முன் நீக்கு. சிறார்கள் விளையாட பூங்கா அமை. சூப்பர் ஃபாஸ்டாக ஓட்டுபவர்களை மிதவாதியாக்க வேகத்தடை வை என்று விண்ணப்ப மயம்.

இன்னொரு பக்கம் எதிர் வீட்டு நாய் என்னைக் கடிக்க வருகிறது. பச்சை கேட் மாமி என் வீட்டை எட்டிப் பார்க்கிறாள். அவர்கள் சமையலில் இந்திய மசாலா என்னை குமட்ட வைக்கிறது என்று புகார் மயம்.

‘நீயா நானா’ கோபிநாத்தை அழைத்து வந்து இரு பக்கமும் மோதவிட்டு வேடிக்கை பார்க்கலாம். விசுவை அழைத்து வந்து ‘சம்சாரம் அது மின்சாரம்’ என்று நாடகம் போட வைக்கலாம். குறைந்த பட்சம் மணி ரத்னம் வந்தால் ‘அஞ்சலி’யாவது எடுப்பார்.

எங்களுக்கு எடுபிடியாக வேலை செய்யும் ப்ராபெர்டி மேனேஜரும் லேசுப்பட்டவர் இல்லை. எலெக்ட்ரிசீயன் பல்ப் மாற்றினதற்கு ஐநூறு டாலர். புல் பிடுங்கியதற்கு ஆயிரம் டாலர் என்று செமையாக கணக்கு காட்டிக் கொண்டிருந்தார்.

தட்டிக் கேட்டால், வீரபாண்டிய கட்டபொம்மனாக, ‘எங்களுடன் வயலுக்கு வந்தாயா? நீர் பாய்ச்சி நெடு வயல் நிறையக் கண்டயா? அங்கே கொஞ்சி விளையாடும் லத்தீன் அமெரிக்கர்களுக்கு புரீட்டோ மாவரைத்துப் பணிபுரிந்தாயா?’ என வக்கணையாக பேசினார்.

எனக்கு சின்ன வயதில் இருந்தே ஔவை வாக்கின்படி

சிக்கனமும் கைப்பழக்கம் டூத்பேஸ்ட் பிதுக்கலும் நாப்பழக்கம் எச்சில்கையால் காகம் ஓட்டாத மனப்பழக்கம் – நித்தம் நடக்கும்போது சில்லரைப் பொறுக்கும் பழக்கம் நெஞ்சழுத்தமும் பொறுமையும் கஞ்சம் பிறவிக் குணம்

அவ்வாறே கேட்டதெற்கெல்லாம் இல்லை, முடியாது, இயலாது, இப்பொழுது நேரம் சரியில்லை, அப்புறம் பார்க்கலாம், ஆகட்டும் யோசிக்கலாம் என்று மன்மோகனாமிக்ஸ் கடைபிடித்து மௌனம் சாதித்தேன்.

அப்படியும் ஏதாவது கூடி வரும் போல் தெரிந்தால், ஷரத்து போட்டாச்சா, அந்த வேலை செய்வேன் என்றாரே… அது காண்டிராக்டில் இல்லையே என்று ஏதாவது சாக்குபோக்கு கண்டுபிடித்தேன்.

இப்படியாக ஈராண்டுகள் இனிதே கழிந்தன.

சுத்தமான கை. கறாரான நடவடிக்கை. கண்கட்டி பாம்பான இறுக்கிப்பிடி பட்ஜெட். இம்மியளவும் இடம் கொடுக்காத மேற்பார்வை. எனக்கே மூச்சு முட்டுமளவு மைக்ரோ…அல்ல… நேனோ மேனேஜ்மெண்ட்.

நல்ல வேளை. என் கீழே பணியாளர்கள் யாரும் அலுவலில் வேலை பார்க்கவில்லை. ஒரே வாரத்திலோ, ஒரே நாளிலோ ஓடியே போயிருப்பார்கள்.

ஆனால், இடை விடாத கேள்விகளும், அந்த கேள்விகளுக்கான விடைகளிலும் சில விஷயங்கள் புரிந்தன.

முக்கியமான மூன்றை மட்டும் பட்டியலிடலாம்.

முதலாவதாக, ஆட்சிக்கு வருபவர்களுக்கு ஒரே ஒரு லட்சியம்தான். தங்கள் வீடும், தங்கள் வீட்டின் சுற்றுப் புற பசுமைகளும் சிறப்பாக கவனிக்கப் பட வேண்டும்.

கூடவே காசும் பார்க்க வேண்டும். மாமன், மச்சான், ஒன்று விட்ட சித்தப்பா, தேவாலயத்தில் கூட தொழும் தோழர் என்று சம்பந்தப்பட்டவர்களுக்கு வேலை பிடித்து தரவேண்டும்.

கடைசியாக தெரிந்து கொண்டது: நியாயமாகவும், நிதானமாகவும், துளி நகைச்சுவை உணர்வுடனும் செயல்பட்டால், சங்கடமான வினாக்களையும் இயல்பான பட்டிக்காட்டான் போன்ற அக்கறையுடன் எழுப்பினால், அனைவரையும் இல்லாவிட்டாலும் பெரும்பான்மையினரையாவது தன்மயமாக்கலாம்.

பதவிக்காலம் போன வாரத்தோடு முடிவிற்கு வந்தது. ஆசை என்னை விடவில்லை. மறுபடியும் நிற்கத் தூண்டியது. ஜெயிக்கும் வாய்ப்பு மிகக் குறைவு. நண்பர்களை விட எதிரிகள் அதிகம்.

இருந்தாலும், போட்டியில் கலந்து கொள்ளாமல் விலகினால், ஆடுகளத்திற்கு போகாத சேவலாக கருதப்படுவேன் என்னும் சுய அபிமானம் கலந்த பெருமிதம் வேறு நெய் ஊற்றி வளர்ந்தது.

ஐந்து பேர் குழுவிற்கு எட்டு பேர் போட்டி. எதிர்த்து நின்றவர்கள் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார்கள். எனக்கோ, ‘இல்லை… இல்லை’ என்று சொன்னவர்களிடம் போய் நிற்பதா என்னும் நம்பிக்கையான அச்சம், படுத்துக் கொண்டே ஜெயிப்பேன் என்ற காமராஜரை துணைக்கு அழைத்தது.

அப்பொழுதுதான் ஒபாமாவை நினைத்தால் பெருமையாக இருந்தது. சுற்றிவர அவரை கெக்கலி இடும் ரிபப்ளிகன் காங்கிரஸ். ஒரு காரியத்தை நிறைவேற்ற விடாமல் முட்டுக்கட்டை போடும் குடியரசு கட்சி எம்.பி.க்கள். அப்படி இருந்தும் மீண்டும் வாக்கு கேட்கிறார்.

‘ஒன்றுமே செய்யவில்லை’ என்று சொல்வோரிடம் செய்ததையும் செய்யாமல் விட்ட போர்களையும் விளக்குகிறார். அதற்கு தன்னம்பிக்கையும் வேண்டும். செயலூக்கமும் வேண்டும். போயும் போயும் உள்ளூர் சங்கத் தேர்தலை அமெரிக்க ஜனாதிபதி தேர்தலோடு ஒப்பிடுவது ரொம்பவே அதிகம்தான். எனவே, நான் ஒபாமா போல் திண்ணக்கமாக பிரச்சாரத்திற்கு செல்லவில்லை.

தேர்தல் நாளில் பதற்றமாக இருந்தது. தோற்றவுடன் முகத்தை எவ்வாறு புன்முறுவலுடன் வைத்துக் கொள்ள வேண்டும் என்று பழகினேன். கூட உழைத்த தன்னார்வலர்களுக்கு நன்றியுரையை தயாரித்தேன்.

எதிர்க்கட்சியாக செயல்படுவதற்கு நிஜமாகவே துடிப்புடன் கூடிய ஆர்வம் மிகுந்தது. இனி முழு வேகத்துடன் தட்டிக் கேட்கலாம். கடுமையாக புழுதி பறக்க தொடை தட்டி முழங்கலாம். உள்ளே நடந்த குழாயடித் தகராறுகளையும் தகிடு தத்தங்களையும் வெட்ட வெளிச்சமாக்கலாம். எல்லோரின் சங்கதியும் அம்பலம் ஏறும். என் கை மட்டுமே சுத்தமான கை என்று அன்னா ஹசாரேயாக அலம்பல் செய்யலாம்.

நான் மீண்டும் ஜெயித்தவுடன், ‘என்னை அரசியல்வாதி ஆக்கிட்டீங்களே’ என சொல்லவில்லை. ஆனால், அடுத்த எலெக்சனுக்குள் தனி வளை பார்த்து போய் சேரவேண்டும்.

BJP leader Sukumaran Nambiar dies in Chennai

சுகுமாரன் நம்பியார் காலமானார்

சென்னை, ஜன. 8: பாஜக முக்கியத் தலைவர்களில் ஒருவரான எம்.என். சுகுமாரன் நம்பியார் (64) சென்னையில் ஞாயிற்றுக்கிழமை காலை மாரடைப்பால் காலமானார்.

பழம்பெரும் வில்லன் நடிகர் எம்.என். நம்பியாரின் மகனான இவருக்கு லட்சுமி என்ற மனைவியும், இரண்டு மகன்களும் உள்ளனர்.

சென்னையில் பள்ளிப்படிப்பை முடித்த இவர், அமெரிக்காவின் கலிபோர்னியாவில் பெர்க்லி ஆர்ம்ஸ்ட்ராங் கல்லூரியில் பி.பி.ஏ., எம்.பி.ஏ. பட்டமும், கலிபோர்னியாவில் உள்ள சர்வதேச உறவுகளுக்கான ஜான் ஜோஸ் பல்கலைக்கழகத்தில் எம்.எஸ் பட்டமும் பெற்றவர்.

கராத்தே போன்ற தற்காப்பு கலைகளில் நிபுணரான இவர், இந்திய ராணுவ வீரர்கள் மற்றும் காவல் துறையினருக்கு தற்காப்புப் பயிற்சி அளித்துள்ளார்.

வெற்றிகரமான தொழிலதிபராக செயல்பட்ட அவர் 1980-ல் பாஜகவில் இணைந்தார்.

பரபரப்பான நடிகரின் மகனாக, பெரிய தொழிலதிபராக இருந்தபோதும் சாதாரண தொண்டராக கட்சிப் பணியில் ஈடுபட்டார். தனது உழைப்பால் அத்வானி உள்ளிட்ட மூத்த தலைவர்களின் நன்மதிப்பை பெற்றார். பாஜகவில் அறிஞர் அணித் தலைவர், அகில இந்தியப் பொருளாளர் போன்ற பொறுப்புகளை வகித்த அவர், 2010 முதல் அகில இந்திய செயற்குழு உறுப்பினராக இருந்து வந்தார்.

மத்திய அமைச்சராக இருந்த ரங்கராஜன் குமாரமங்கலம் மரணமடைந்ததைத் தொடர்ந்து 2001-ல் நடைபெற்ற திருச்சி மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டு குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். 2004 மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் வட சென்னை தொகுதியில் போட்டியிட்டு திமுக வேட்பாளரிடம் வெற்றி வாய்ப்பை இழந்தார்.

2004-க்குப் பிறகு கட்சிப் பணியைவிட சமுதாயப் பணியில் அதிக ஆர்வம் காட்டினார்.

சுவாமி தயானந்த சரஸ்வதியால் தொடங்கப்பட்ட தர்ம ரக்ஷண சமிதி என்ற அமைப்பின் பொறுப்பாளராக ஆன்மிக, சேவைப் பணியில் ஈடுபட்டார்.

உலக கலாசார இணக்க மையம் (ஜி.எப்.சி.எச்.) என்ற அமைப்பின் மூலம் கடந்த 3 ஆண்டுகளாக இந்து ஆன்மிக, சேவை கண்காட்சியை சென்னையில் நடத்தினார். சென்னையில் சனிக்கிழமை (ஜன. 7) பாஜக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. அதில் திருச்சியில் ஏப்ரல் 27, 28 தேதிகளில் நடைபெறவுள்ள மாநில மாநாட்டுக் குழுவின் தலைவராக அறிவிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவரது திடீர் மரணம் பாஜக தலைவர்களையும், தொண்டர்களையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய நண்பரான இவர், 1999, 2004-ல் அதிமுக – பாஜக கூட்டணி ஏற்பட முக்கிய காரணமாக இருந்தார்.

திங்கள்கிழமை காலை 10 மணிக்கு பெசன்ட் நகர் மின் மயானத்தில் இறுதிச் சடங்குகள் நடைபெறும். பாஜக தலைவர் நிதின் கட்கரி, வெங்கய்ய நாயுடு, இல. கணேசன், பொன். ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் இறுதிச் சடங்கில் பங்கேற்க உள்ளனர்.

சுகுமாரன் நம்பியாரின் மறைவை முன்னிட்டு தமிழக பாஜக சார்பில் 3 நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று மாநிலத் தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் அறிவித்துள்ளார்.

State of the Union – Obama Speech (2010)

1. Bush has a short one. Sarkozy has a long one. Cher does not use hers. What is it?

2. Is it concession speech? 31 million uninsured; 45,000 deaths annually due to lack of health insurance, according to Harvard study. #SOTU

3. Keeping a poker face & sitting with starry eyes (or dismissive toned) for 90 minutes is no easy job. Kudos to Chief Justices, Joint Chiefs.

4. Obama mentions Dick Cheney with ‘schoolyard taunts’. “Let’s put aside the schoolyard taunts about who is tough.” #SOTU

5. Obama to GOP naysayers: “Just saying no to everything might be good for politics; but that is not leadership” is refreshing. #SOTU

6. Last year’s #SOTU – Health, energy, education – the new new deal; This time all of them were there with boldfaced deficit & debt reduction

7. Republicans stiffness with anything Obama is gently chided with mention of ‘not appreciating the speech even when he talks abt Job creation’

8. No axis of evil; no war on terror declaration; not even Islamic terrorism. boring SOTU speech by president is substancy & principled.